Search This Blog

6.4.14

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேசுபவர்கள் தெளிவு பெற வேண்டும்!

    திருமூலர் யார்?
    ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே எனப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஜாதியை நியாயப்படுத்தியும் அது அழியக் கூடாது, அழிக்கக் கூடாது, அழிக்கும் வகையில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கக் கூடாது என்றெல்லாம் பிதற்றி வருபவர்களும் இருக்கிறார்கள். அடுத்த திங்கள் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதிகளைக் காட்டி வாக்கு சேகரிக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.


    இந்தியாவில் உள்ள ஜாதிகளின் பட்டியலை மய்ய அரசும் மாநில அரசுகளும் தனித்தனியே தயாரித்துப் பேணி வருகிறார்கள். அவரவர்க்குரிய அப்பத்தினைப் பிரித்துத் தருகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் சலுகை என்கிறார்கள் ஆட்சியாளரும் ஆதிக்க ஜாதியினரும்! ஆனால் அது அவர்களின் உரிமை என்பதை அறிந்தே வைத்திருக்கின்றனர் மக்கள்.
    ஜாதிகளைப் பட்டியல் இனம், பழங்குடி இனம், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம், பிற்படுத்தப்பட்ட இனம் என்று பிரித்து வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியில் பல்வேறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களும் மண்டல் ஆணையமும் முயன்று சேகரித்த வகையில் இந்தியாவில் 6,748 ஜாதிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளன. இதன் அடிப்படையில் இந்தியத் தலைமை நீதிமன்றம் தன் தீர்ப்பில் 6 பெரு மதங்களும் 6,000க்கும் மேற்பட்ட ஜாதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

    உள்ளபடியே எத்தனை ஜாதிகள் உள்ளன? இதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தியாவின் 421 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3,000 ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர். 1985 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிய ஆய்வு 1992 மார்ச் 31ஆம் நாளில் முடிவடைந்தது. மொத்தம் 26 ஆயிரத்து 510 நாள்கள் ஆய்வு நடந்தது. ஜாதி பற்றிய தகவல்கள் 24 ஆயிரத்து 951 பேர்களிடமிருந்து பெறப்பட்டன. இவர்களுள் 4 ஆயிரத்து 981 பேர் பெண்கள். இவர்கள் தந்த செய்திகள் / தகவல்கள் / தரவுகள் ஒலிநாடாக்களில் பதிவு செய்து பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இந்தியாவில் 4 ஆயிரத்து 635 ஜாதிகள் உள்ளன. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியது சரியா?

    இந்தியாவின் 28 மாநிலங்களில் பரவிக் கிடக்கும் ஜாதிகள், இரண்டு மாநிலங்களில் மட்டும் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. அவை தமிழ்நாடும் ஆந்திராவும்! இது பெருமையா?

    இவை இரண்டிலும் 350க்கும் மேற்பட்ட ஜாதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 364 ஜாதிகள் உள்ளன. ஒன்றே குலமும் என்ற திருமூலரின் தமிழ்நாட்டுக்கு இது பெருமையளிக்குமா?

    வடநாட்டில் உள்ள மாநிலங்களில் சராசரியாக 150 முதல் 250 வரைதான் ஜாதிகள் இருக்கின்றன. மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அசாம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சராசரியாக 50 முதல் 150 ஜாதிகளே உள்ளன. யாவரும் கேளிர் என்ற தமிழன் வெட்கப்பட வேண்டும்!

    தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 209 ஜாதியினர் தமிழ் பேசுபவர்கள். தெலுகு மொழியை 70 ஜாதியினர் பேசுகின்றனர். 25 ஜாதியினர் கன்னட மொழிக்காரர்கள். மலையாளம் பேசுவோர் 21 ஜாதியினர். படக மொழிக்காரர்கள் 4 ஜாதியினர். மீதிப்பேர் கொங்கணி, துளு பேசும் ஜாதிக்காரர்கள். 15 ஜாதிக்காரர்களின் மொழி உருது. 5 ஜாதியினரின் மொழி குஜராத்தி. மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, சவுராட்டிரா போன்ற பல மொழிக்காரர்கள் 32 ஜாதிக்காரர்களாக உள்ளனர். இப்படிப் பிற மொழிபேசும் 155 ஜாதிக்காரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்!

    தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 299 ஜாதிகள் இந்து மதத்தவர். இந்திய நாட்டளவில் இந்துக்கள் 76.35 விழுக்காடு. தமிழ்நாட்டில் இந்துக்கள் 82.14 விழுக்காடு. கிறித்துவர்கள் 65 ஜாதிகளாகப் பிரிந்திருக்கின்றனர். ஒரே மேய்ப்பன் என கிறித்துவை ஏற்றவர்கள் ஒரே மந்தை என்று ஒன்றாக இல்லை. 65 ஜாதிகளாகப் பிரிந்து மேய்கின்றனர். இது ஆட்டிடையன் (கிறித்து-_மதம்) தவறா? மந்தை ஆடுகளின் முந்தைய மதமான இந்து மதத்தின் தாக்கம் என்பதாலா? ஆயர்கள் விடைகாண வேண்டும்!

    இந்திய அளவில் கிறித்துவர்கள் 7.31 விழுக்காடு. தமிழ்நாட்டில் 17.86 விழுக்காடு. அதேநேரத்தில் இசுலாமியர்கள் 6.32 விழுக்காடு தமிழ்நாட்டில்! இந்தியாவில் 12.60 விழுக்காடு. இந்து முன்னணியினர் கவனத்திற்காக! இசுலாத்தில் 23 ஜாதிகள் உள்ளன.

    ஜாதிகூட நேரத்திற்கு நேரம் மாறுகிறதாம்!  அதிர்ச்சி அடைய வேண்டா! காலையிலும் மாலையிலும் ஒரு ஜாதியாக இருப்பவர்கள் நண்பகல் நேரத்தில் மட்டும் வேறு ஜாதியாக மாறிவிடும் கோலமும் உண்டு! இப்போக்கு பார்ப்பனர்களிடம் உண்டு. திருவாருரில் உள்ள பார்ப்பனர்களிடம் உண்டு. இதற்கும் ஒரு கதைகட்டி வைத்திருக்கிறார்கள்! பார்ப்போமா!

    திருவாரூர்க் கோவிலின் உள்ளே யாகம் நடக்கிறது. ஒரு பறையன் (எனப்படும் ஜாதிக்காரர்) செத்த கன்றுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு யாகம் நடக்கும் இடத்தருகே போனார். பார்த்துவிட்ட பார்ப்பனர் பதறித்துடித்து அவருடைய ஜாதியைச் சொல்லிக் கத்தினர். யாகம் நடக்கும் இடத்தை விட்டுவிட்டு ஓடினர்.

    கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தவருக்கு வந்ததே கோபம்! மூன்றாம் கண்ணில் கோபம் கொப்பளித்தது! ஆம், அவர் பரமசிவன்! நீங்களெல்லாம் பறையனாகப் போகக்கடவது! என்று சாபம் இட்டுவிட்டார். பார்ப்பனர் பதைத்தனர். பரமசிவனைப் பறையர் எனக்கூறி விட்டோமே என்பதற்காக அல்ல! தங்களைப் பறையர்களாக்கி விட்டாரே, உயர்ஜாதி அந்தஸ்து போய்விட்டதே என்று அலறினர். போனால் போகிறது என்று பரமசிவன் பார்ப்பனர்களுக்குத் தற்காலிக சாந்தி அளித்தார். நண்பகலில் முதல் நாழிகை மட்டும் நீங்கள் பறையர்கள், மீதி நேரங்களில் பார்ப்பனர்கள் என்று திருத்தப்பட்ட சாபம் கொடுத்தாராம். அதனால் திருவாரூர்ப் பார்ப்பனர்கள், நண்பகலில் ஒருமுறை குளித்துவிட்டுத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன். (பண்பாட்டு அசைவுகள்)

    திருவாரூர்ப் பார்ப்பனர்கள் இந்தச் சாபத்தால், மத்தியானப் பறையர்கள் என்று அழைக்கப்படுகிறார்களாம்! 1,886 பார்ப்பனப் பிரிவுகளில் இதுவும் ஒன்றா? தாம்பிராஸ் தான் கூறவேண்டும்.

    சடங்குகள் (திவசம்) செய்துவைக்க, மற்றவர் வீடுகளுக்கு வரும் பார்ப்பனர்கள் உயர் ரகமாம். புனித ஊர்களில் (கயை, காசி, ராமேசுவரம் போன்ற) இருந்து கொண்டு ஆறு, குளக்கரைகளில் அதையே செய்பவர்கள் தாழ்ந்தவர்களாம். கல்யாணப் புரோகிதம் செய்பவன் உயர்ந்தவனாகவும் கருமாதிப் புரோகிதம் செய்பவன் தாழ்ந்தவனாகவும் பாகுபாடு உள்ளது. உழக்கிலும் கிழக்கு மேற்கோ?

    சாஸ்வத், காஷ்மீர், வங்காளப் பார்ப்பனர்கள் மீன், இறைச்சி உண்பவர்கள். இவர்கள் எந்த ரகம்? இவர்களைப் பஞ்ச கவுடர் என்று கூறுகிறார்கள்! இறைச்சி உண்ணாதவர்கள் பஞ்ச திராவிடர்களாம்! மது அருந்தி, புகை பிடித்து, வேறு ஜாதிப் பெண்களுடன் வாழ்பவர்கள் என்ன ஜாதி? தாம்பிராஸ் விளக்கினால் விளங்கிக் கொள்ளலாம்!

    மக்களாட்சி முறையும் குடவோலைத் தேர்தல் முறையும் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கியதாகக் கதைக்கிறார்கள். அந்த முறை பார்ப்பனர்க்குத் தானமாக, வரி இல்லாத கிராமமாக, சோழ மன்னர்களால் பிரமதேயமாக வழங்கப்பட்ட ஊர்களில் மட்டும் நடத்தப்பட்டது என்பதைத் தமிழ்த் தேசியர்கள் பேசுவது கிடையாது. இத்தகைய ஊர்களில் இருந்த பார்ப்பனச் சேரிகளில் வசித்த பார்ப்பனக் குடும்புகளில் மட்டும்தான் இம்முறை இருந்தது. பார்ப்பனர் அல்லாதார் கலந்துகொள்ள முடியாத, கலந்து கொள்ளக்கூடாத தேர்தல் இது. தேர்தல் என்ற பொருளில் ஆளக்கூடாத திருஉளச் சீட்டு முறை அல்லது குலுக்கல் சீட்டு முறை மட்டுமே! இதற்குத் தமிழ்த் தேசியர்கள் தக்க விளக்கம் தரட்டும்!
    கோவில்களில் வழிபாட்டுக்குரிய முறைகள் பற்றிக் கூறுவதாகக் குறிப்பிடப்படும் ஆகமம் வடமொழியிலிருந்து தமிழாக்கித் தந்ததே சுந்தரநாதன் எனும் பார்ப்பனர். இவர் ஆக்கித் தந்த நூல் திருமந்திரம். ஆம், இவர்தான் திருமந்திரம் தந்த திருமூலர். சுந்தரநாதன் திருமூலராக ஆகியது ஒரு கதை. மூலன் எனும் சூத்திரனின் உடலில் புகுந்து திருமந்திரத்தை எழுதினார் எனக் கதைகட்டிவிட்டனர். திருவள்ளுவ நாயனார் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்த பாதிப் பார்ப்பனர் என்பது போன்ற புனைகதை. மூலனே எழுதியது என்பதை ஏற்றுக் கொள்ளச் சகிக்காத வைதீகம், இதிலும் பார்ப்பனரைப் புகுத்தி மூலனின் சிறப்பைக் களவாடி விட்டனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் பேசுபவர்கள் இதற்குத் தரும் விளக்கம் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.

    ராஜராஜசோழன் தொட்டு, பல சோழ மன்னர்களும் பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளாக இருந்தனர் என்பது வரலாறு. அதிலும் வடக்கே இருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்கள் சமயத் துறையில் செலுத்திய ஆதிக்கம் தாங்கமுடியாமல் சூத்திரர்கள் தமக்கென மடங்கள் அமைத்து அவர்களின் சமயப் பற்றை வெளிப்படுத்தி வளர்த்து வந்த நிலை அதனைப் பெறாத பார்ப்பனர்கள் அத்தகு மடங்களை எதிர்த்துக் கலகங்கள் செய்துள்ளனர். இதனை குகையிடிக் கலகங்கள் என்று சைவச் சீலர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றவர்களே ஆய்ந்து அறிவித்துள்ளனர். பார்ப்பனரும் தமிழரே எனும் தமிழ்த்தேசியத் திருமேனிகள் குகையிடிக் கலகக்காரப் பார்ப்பனர்களை ஏற்கிறார்களா?

    அந்தக் குகையிடிக் கலகம் இன்றளவும் தொடர்கிறதே! தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிற நிலையை மாற்றிட உருவாக்கிய திட்டம்தான் சேதுக்கால்வாய்த் திட்டம்!

    ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து திட்டம் நடைபெற்று வந்த நிலையில் ஆறு பார்ப்பனர்கள் வழக்குப்போட்டு முடக்கி விட்டனரே!
    (ராமேசுவரம் வக்கீல்) குப்புராம்(இவரைத்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க.வேட்பாளராக சங் பரிவார் நிறுத்தியுள்ளது) (இந்து முன்னணி) ராமகோபாலன், (சோழவந்தான்) சு.சாமி, (வி.எச்.பி.) அசோக் சிங்கால், (ராமன் கோவில் கட்டும் குழு) வேதாந்தி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அந்த ஆறுபேர்கள்! குகையிடிக் கலகக்காரர்கள்! மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பான நீரி(NEERI)க்கு மாற்றான கருத்தை எழுதிக் கொடுத்த பச்சோரி என்பவரும் இதில் இணையும் ஏழாவது பார்ப்பனர். இவர்கள் அத்தனைப் பேரும் 20ஆம் நூற்றாண்டு குகையிடிக் கலகக்காரப் பார்ப்பனர்களாக விளங்குகின்றனர். தமிழ்த் தேசியர்கள் இதுபற்றி வாயைத் திறப்பதே இல்லையே! அவ்வளவு பயம்!

    ஜாதிப் பிரிப்புகள், பார்ப்பனர்க்கு மேலாதிக்க உரிமைகள், அவற்றால் ஏற்பட்ட அட்டூழியங்கள் போன்ற கட்டமைப்புகள் மீது போர் தொடுத்துத் தமிழனை, விடுதலை உணர்வு கொண்ட மானமுள்ள மனிதனாக மீட்டெடுக்கச் சமர் புரிந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே! மூலன் உடலில் சுந்தரநாதன்கள் புகுந்தது போன்றவை தம் காலத்திலும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்காகத்தான் தலைவர் பெரியார் நம்மைத் திராவிடர் என்று அடையாளம் காட்டினார். மானத்தையும் அறிவையும் ஊட்டினார். திருந்தாதவர்கள் திருந்தட்டும்!

    ------------------------------ சு.அறிவுக்கரசு அவர்கள் “உண்மை” ஏப்ரல் 01-15 - 2014 இதழில் எழுதிய கட்டுரை

    56 comments:

    தமிழ் ஓவியா said...

    நம்பிக்கையில்லாத் தீர்மானம்

    தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறை வேற்றப்பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர்.

    ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கி யும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட் டாமல் செய்தவர்.

    முயற்சி செய்தவர்களையும், பொறுப் பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

    அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற் குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

    நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போக வில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கை யில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

    குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

    Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3x6nUdu

    தமிழ் ஓவியா said...

    ஓர் விஞ்ஞானம்

    செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலி யார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், நாமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கி விட்டவர்களின் ஜாபிதாவையும் இனி குடிஅரசுப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர் களும்,

    மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப் படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின் றோம். நிற்க இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெய ரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின் னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டு கின்றோம்.

    குடிஅரசு - அறிவிப்பு - 24-02-1929

    Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3xDeTMs

    தமிழ் ஓவியா said...


    இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்


    மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

    உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாத்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

    கூட்டத்திலிருந்த வர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்தவ மதமோ ஆண்டவனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்ப தனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

    பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார் களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங் களைப் பின் வாங்கிக் கொண்டு தாம் சொன்ன மகாபாதக மான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

    எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண் களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங் களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கு மென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

    குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

    Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xmnlch

    தமிழ் ஓவியா said...

    திரு.சாமி வெளியாக்கப்பட்டார்

    சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி. வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார், பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையாயிருந்த வரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் தலைவர், தலைவர்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.



    ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான், கம்பெனியார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது.

    கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடி பேசியதுதானாம். பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதற்கு ஏதாவது உள் ரகசியம் இருக்கலாம்.

    அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக் கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக்கப்பட்டுவிட்டார்.

    திரு. வரதராஜுலுவும் காங்கிர கமிட்டியில் ராஜினாமா கொடுத்துவிட்டு இந்த 2, 3, நாள்களாகப் பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் ரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னையை விட்டுப்போன பிறகு. திரும்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு மெம்பரானாலும் ஆகலாம்.

    சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசைக் குறை கூறி விட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும் காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா, தாலுகா காங்கிர கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் ரகசியம் விளங்கவில்லை.

    ஒரு சமயம், ஒரு அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை! நம்முடைய பார்ப்பனர் களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

    குடிஅரசு - செய்திக்குறிப்பு - 10-02-1929

    Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xuDMOi

    தமிழ் ஓவியா said...


    அதிமுகவுக்கு 111 போடுங்கள் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று


    அதிமுகவுக்கு 111 போடுங்கள்

    திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று

    ஒட்டன் சத்திரத்தில் கழகத் தலைவர் சூளுரை

    இங்கே ஒட்டன் சத்திரத்தில் முதல் கூட்டத்தை முடித்துவிட்டு, பொள்ளாச்சி தொகுதி கணியூரில் பேச அவசரமாக போக வேண்டியதிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பகுதியைப் பொறுத்த வரையிலே நன்கு விவரம் தெரிந்த மக்கள் உள்ள பகுதி. அதோடு இன்னொரு சிறப்பு என்னவென் றால் ஒட்டன் சத்திரத்திற்கு வந்து உங்களை யெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு தனி உற்சாகம் வந்து விடுகிறது. காரணம் எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும், திமுகவிற்கு எதிராக அடித்த நேரத்தில் கூட நீங்கள் சக்கரபாணி அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். அதுபோல திண்டுக்கல்லிலே யிருந்து மாவட்டச் செயலாளர் அய்.பெரியசாமி அவர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். இவர்கள் எல்லாம் சட்டமன்றத்திற்குள்ளே போய் பேசுவார்கள் என்று தான் நீங்கள் எல்லாம் எதிர்பார்த்திருப்பீர்கள்! அவர்கள் ஏற்கனவே நல்ல அனுபவம் பெற்றவர்கள். நன்றாக பேசு கிறார்கள். எங்கே பேசுகிறார்கள் என்றால் தளபதி ஸ்டாலின் உட்பட வெளியில், செய்தியாளர்கள் எல்லாம் குழுவாக இருப்பார்கள் அங்கே ஒவ் வொரு தொலைக்காட்சியின் ஒலிப்பெருக்கியும் முன்னால் வைக்கப்பட்டிருக்கும்.

    எங்களை போன்றவர்கள் எல்லாம் தொலைக் காட்சியில் அப்பொழுது தான் இவர்கள் பேசு வதை பார்த்துக் கொண்டு இருப்போம்.

    தமிழ் ஓவியா said...


    சட்டமன்றத்திலே அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தால் இந்த ஆட்சியில் பேசக்கூட முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல எதிர்க்கட் சிகள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான்.

    வெளிநடப்பு, வெளிநடப்பு என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவர்கள் எதைக்கேட்டாலும் எந்த கேள்வியை கேட்டாலும் பதில் கிடையாது இவர்களின் ஆட்சியிலே.

    நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் குரலை, இந்த தொகுதி யின் குறைபாடுகளைச் சொல்லி, இந்த தொகு திக்கு ஓர் நல்ல வளத்தை, வாழ்வை, எதிர் காலத்தை ஆக்கப்பூர்வமாக ஏற்படுத்த வேண்டு மென்பதற்காகத்தான், ஜனநாயகத்திலே அப் போது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள் அதுவும் நறுக்குத் தெறித்தாற் போன்று தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள்.

    சட்டமன்றத் தேர்தலிலே பெரிய அளவில் திமுக தோல்வியை சந்தித்தாலும் இந்த திண்டுக் கல், ஒட்டன் சத்திரம் பகுதி அதற்கு முற்றிலும் எதிராக வரலாறு படைத்தது. எனவே இங்கு பேசாமல் போகக்கூடாது குறைபாடு வந்துவிடும் என்று தான் வந்துள்ளோம். இந்தத் தொகுதி வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒரு தொகுதி.

    போனமுறை அந்த அணியின் (அஇஅதிமுக வில்) உள்ளவர்கள், இந்த அணியில் இருக்கிறார் கள்; என்ன காரணம்? மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்தப்பக்கம் சாதனை, எந்தப்பக்கம் வேதனை என்று உணர முடியும். அவர்களுக்கு எவ்வளவு அனுபவம் உண்டு. அதுபோல எடுத்ததற்கெல்லாம் கேள்விகள் கேட்பார்கள் கலைஞர் காலத்தில். எவ்வளவு கடுமையாக அவரை விமர்சனம் செய்தார்கள்? கடுமையான விமர்சனங்களை கூட அவர் பொறுத்துக்கொள்வார்.

    நான்காம் தர அரசு

    ஒரு சின்ன விஷயம், மூன்றாவது முறையாக கலைஞர் முதலமைச்சராய் வரலாறு படைத்த போது எதிர்க்கட்சியிலிருந்து ஹண்டே என்பவர் இது ஒரு மூன்றாம்தர அரசு என்று முதலமைச்ச ராயிருந்த கலைஞருக்கு நேரே பேசினார். இன்றைய சூழலில் யாராவது அதுபோல் பேசி தப்பித்துவிட முடியுமா? நன்றாக நினைத்துப் பாருங்கள். உடனே நம் சட்டமன்ற உறுப்பினர் கள் வேகத்தோடு இதை மறுப்பதற்காக எழுந் திருக்கிறார்கள். முதலமைச்சர் கலைஞர் அமைதி யாக கையை காட்டுகிறார். இது அவரின் அடக் கம். ஆட்சியில் உள்ள முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய அடக்கம். கையை காட்டி விட்டு சொன்னார். மாண்புமிகு உறுப்பினர் ஹண்டே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். என்னு டைய அரசு மூன்றாம் தர அரசு என்று சொன்னீர் கள். மூன்றாம் தர அரசு அல்ல, நான் காம் தர அரசு என்றார். பிராமண சத்திரிய வைசிய சூத்திரர் என்ற வருணாசிரம முறையில் சூத்திரர்களுக் காக நான்காம் தர அரசு ஒடுக்கப்பட்ட மக் களுக்கு, தாழ்த்தப்பட்ட, பஞ்சம மக்களுக் காக பாடுபடக் கூடிய அரசு என்று பதில் சொல்லி அவரை திக்கு முக்காடச் செய்தார்.

    இப்பொழுது ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் அறிவிப்புகள் தான் அதிகம் வருகிறது. அதற்கு பெயர் 110 என்று சொல்கிறார்கள். நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) சட்டசபைக்கு உள்ளே போகாதவர்கள். இவர்கள் எல்லாம் அங்கே போய் நன்றாக விதிகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளவர்கள்.

    110 - 111

    கலைஞர் ஆட்சியில் (காலத்தில்) 108, ஜெய லலிதா ஆட்சியில் 110 ஜெயலலிதா அம்மையார் மக்களுக்கு போடுவதோ 111, மக்களும் அவர்க ளுக்கு விடை 111 கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் சொல்லுவார்கள். அண்ணா நாமம் வாழ்க என்று. இப்போது தான் ஏன் அண்ணா நாமம் வாழ்க என்று சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அண்ணாவுக்கு நாமம், அண்ணா கொள் கைக்கு நாமம், இனிமேல் மக்களும் அஇஅதிமு கவுக்கு போடப் போவதும் நாமம் 111

    தமிழ் ஓவியா said...

    One Ten. One Ten என்று அதுவும் தமிழில் சொல்வது கிடையாது. எம்டன் மாதிரி One Ten என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    ஒரு வழிப்பாதை அதிமுக

    110 இருக்கிறது பாருங்கள் அதற்கு என்ன சிறப்பு என்றால், அவசரத்திற்காக வைத்திருக் கின்ற ஒரு கருவி.

    மிகப்பெரிய தொழிற்சாலை இருக்கிறது என்றால், தீயணைப்பு கருவி மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள். இந்த தீயணைப்பு கருவி மாதிரி, 110அய் பயன்படுத்த வேண்டும். தொழிற் சாலையில் திடீர் தீப்பிடித்தால் இந்தத் கருவியை பயன்படுத்தலாம். அதை ஒன்றாவது இடத்திலும் வைக்க வேண்டுமென்று சட்டப்பூர்வமாக இருக் கிறது. ஆனால் அடுப்பு கொளுத்துவதற்கு பயன் படுத்த முடியுமா? அது மாதிரி இந்த அம்மையார் என்ன செய்தார் தெரியுமா? அவசரத்துக்காக இருக்கிற Pattern (பேட்டன்). அதிலே ஒரே ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு என்றால் இவர்கள் யாரும் எழுந்து கேள்வி கேட்க முடியாது.

    அவர் கருத்துக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். அது One Way Traffic ஒரு வழிபாதை. யாரும் கேள்வி கேட்க முடியாது. அறிவிப்பு கொடுப்பார்கள் அதுதான் அதிமுக அரசு. ஆகவே 110ன் படி இவர்கள் வெளியேற வேண்டும் சட்டமன்றத்தை விட்டு. இல்லையேல் வெளி யேற்றுவார்கள். மற்ற சட்டமன்றங் களில் ஏன்? நாடாளுமன்றத்திலே கூட இப்படி கிடையாதே!

    ஒரே ஒரு தடவை மீராகுமார் (மக்களவைத் தலைவர்) தெலங்கானா பிரச்சினைக்காக வெளியே ஒருவரை அனுப்பியுள்ளார்கள். மற்றபடி நாடா ளுமன்றத்திலே இந்த மாதிரி வெளியேற்றப்படு வதில்லை. சட்டமன்றத்தின் அவைத்தலைவர் பாதி நாற்காலியில் (சீட்டிலே) உட்கார்ந்து இருப் பது போன்று அந்த நாற்காலியில் நாடாளுமன் றத்தில் உட்கார மாட்டார்கள் முழுமையாக நாற்காலியில் உட்காருவார்கள்.

    தமிழ் ஓவியா said...

    அப்படிப்பட்ட நிலையிலே, இங்கே (சட்ட மன்றத்திலே) நாள் கணக்கிலே வாரக்கணக்கிலே உறுப்பினர்களை வெளியே அனுப்புவார்கள். அதுதான் இங்கு ஜனநாயகம்! இங்கே நடப்பது போதாது என்று, நான் நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தை இப்படி நடத்துவேன் என்கிறார் அந்த அம்மையார். இவர்களுக்கு வாக்களிக் கலாமா? சொல்லுங்கள்.

    இந்த அவலம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால், இந்தியா முழுவதும் இதுமாதிரி செய் வேன், வெளியே அனுப்புவேன் என்று அம்மா சொல்கிறார் என்றால் என்ன? பொதுமக்களே! சிந்திக்க வேண்டும் அவருக்கா உங்களின் ஓட்டு?

    ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு மூக்கணாங் கயிறு போடுவது தான் எதிர்க்கட்சி

    அதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம்.

    எந்த உறுப்பினர் கேள்வி கேட்டாலும் அவர் களை உட்காரச் சொல்லக்கூடாது. கேள்வி கேட் கும் உறுப்பினர்களை வெளியே அனுப்பும் முடிவை இந்த அம்மையாருக்கு நாடாளுமன் றத்தில் இந்த தடவையும் தராமல் இருக்க நீங்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை, காந்திராஜன் போன்றோரை அனுப்பினால் தான் அந்த வாய்ப்பு. அவரவர் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் அவர்கள் குரல் கொடுக்கமுடியும்.

    பல பத்திரிகைகள் இன்று கருத்து கணிப்பு நடத்துகிறார்களாம் அது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பு.

    இன்று கருத்து கணிப்பு என்ற பெயராலே, அறையில் இருந்து கொண்டு கருத்து கணிப்பு வெளியிடுகிறார்கள். அவர்கள் ஏலத்தில் எடுக்கப் படுகிறார்கள் பணமுதலைகள் இடமிருந்து கருத்துத் திணிப்புகளை செய்தியாக கொடுக் கிறார்கள். ஆகவே தான் நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். நீங்கள் கருத்து கணிப்பை எல்லாம் நம்ப வேண்டாம். வெற்றிப் பெறப் போவது டாக்டர் கலைஞர் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான்.

    இந்த கூட்டணியில் 4, 5 கட்சிகள் இருக்கிறார் கள் என்று சொல்லலாம்; ஆனால் இது சமூக நல்லிணக்க கூட்டணி. எப்படி வந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். இந்த அம்மா நேராக ஹெலி காப்டரில் வந்து, உடனே எடுத்து படிக்கிறார்கள். கூட்டிக் கொண்டு வந்த கூட்டம் என்று சொல் கிறார்கள். எல்லாவற்றையும் படித்துவிட்டு செய் வீர்களா? என்று மக்களை பார்த்து அம்மையார் கேட்கிறார். அந்த மக்கள் எப்படி வந்தார்கள் என்று தொலைக்காட்சியை பார்க்கிறவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    காங்கிரசில் இருந்து ஏன் திமுக வெளியேறி னார்கள் என்றால், காங்கிரஸ் ஈழத்தமிழர் பிரச் சினையில் அக்கறை காட்டவில்லை. ஒத்துப் போகவில்லை. இன்றளவும் இன்னும் காங்கிரஸ் திருந்தவில்லை. இப்பொழுது கூட ஈழத் தமிழர்கள் பற்றி மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என்பது பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஏன்றால் தமிழ்நாட் டில் அவர்கள் ஒரு இடம் கூட வரமாட்டார்கள்.

    ஆகவே, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. நீங்கள் வருகின்ற 24 ஆம் தேதி வாக்களிக்கும் போது உங்கள் முன்பு உதயசூரியன் சின்னம் இருக்கும். அதை பார்த்து நீங்கள் வாக்களியுங் கள். பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். விளக்கு எரிந்தால் வெளிச்சம் வரும். வெளிச்சம் வந்தால் இருட்டு போகும். இந்தியா முழுவதும் வெளிச்சம் வரும். மறவாதீர் உதயசூரியன் சின் னத்தை என்று கூறி மேலும் பல்வேறு செய்தி களை ஆதாரப்பூர்வமாக எடுத்து சுட்டிக்காட்டி உரையாற்றினார் தமிழர் தலைவர் அவர்கள்.

    Read more: http://viduthalai.in/page-4/78218.html#ixzz2y4BW3SUf

    தமிழ் ஓவியா said...


    4 மாதங்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டது பாபர் மசூதி! கோப்ரா போஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்துகிறது

    டில்லி, ஏப்.5- 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்க வில்லை என்றும், இந்த சதித் திட்டம் குறித்து அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக வைச் சேர்ந்த அத்வானி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல் யாண் சிங் ஆகியேருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது.

    மேலும் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர் களுக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங் பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது. மசூதி இடிப்பில் பங்கேற்ற 23 முக்கிய நபர்களிடம் கோப்ராபோஸ்ட் எடுத்த பேட்டி யில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கோப்ராபோஸ்ட் செய்தியாளர் ஆஷிஷ் என்பவர் ராமஜென்ம பூமி இயக்கம் குறித்து புத்தகம் வெளியிடப் போவதாகவும், அதற்காக விவரம் சேகரிக்க வந்ததாகவும் கூறி இந்த 23 பேரிடம் மறைமுகப் பேட்டி எடுத்துள்ளார்.

    செய்தியாளர் என்று தெரியாமல்

    இவர் செய்தியாளர் என்பது தெரியாமல் இவரிடம் பல தகவல்களைக் கொட்டியுள்ளனர் உமா பாரதி, வினய் கட்டியார், ஆச்சார்யா தர்மேந்திரா, மகந்த் வேதாந்தி ஆகியோர். திடீரென கர சேவகர்கள் கூடிவிட்டதாகவும், இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கும் முன்பே மசூதியை அவர்கள் இடித்துவிட்டதாகவும் தான் நரசிம்மராவும், பாஜகவும், கல்யாண் சிங்கும் கூறி வருகின்றனர். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதிச் செயல் என்றும், இதற்காக பலருக்கும் இடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் இருந்த தலைவர்களே தெரிவித் துள்ளனர்.

    அயோத்தியா, பரிதாபாத், தவுண்ட், லக்னவ், கோரக்பூர், மதுரா, மொராதாபாத், ஜெய்ப்பூர், அவுரங்கா பாத், பைசாபாத், மும்பை, குவாலியர் ஆகிய இடங் களுக்குச் சென்று தனது ரகசிய விசாரணையை நடத்தி இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட். மசூதி இடிப்புத் திட்டம் மிக ரகசியமாக தீட்டப் பட்டதாகவும், பஜ்ரங் தள் அமைப்பு குஜராத்தில் வைத்து 1992ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடிப்புப் பணிக்கென 38 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததாகவும், இந்தப் பயிற்சியை அளித்தது முன்னாள் ராணுவ அதிகாரிகள் தான் என்றும் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில்

    குஜராத் மட்டுமின்றி தமிழ்நாடு, ம.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பிரவீன் தொகாடியா, அசோக் சிங்கால் உள்ளிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட சாதுக்கள் இந்த பயிற்சி வகுப்பு களுக்கு வந்து பயிற்சி பெறுவோர் இடையே பேசியதாக வும் தெரியவந்துள்ளது. உயரமான கட்டடத்தில் ஏறுவது, கயிறுகள், சங்கிலிகளைப் பயன்படுத்தி கட்டடத்தில் தொங்கிய படியே அதை உடைப்பது போன்ற பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. லட்சுமண் சேனா என்ற பெயரில் இந்த 38 பேரும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழ் ஓவியா said...


    ஏ திட்டம் போனால் பி திட்டம்!

    இதற்கிடையே மசூதியை லட்சுமண் சேனாவால் உடைக்க முடியாவிட்டால் பிளான்-பியும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த பிளான்-பி சிவசேனா வின் கையில் தரப்பட்டது. அதன்படி மசூதியை இந்த சேனாவால் உடைக்க முடியாவிட்டால் அதை டைனமைட் வெடிகள் வைத்து உடைக்க சிவ சேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    முதலில் 1990ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த மசூதியை இடிக்க நடந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அப்போது மசூதியை இடிக்க வந்தவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் சிலர் இறந்தனர். ஆனால், இப்படி சிலர் இறந்தால் தான் ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு வலு சேரும் என்று விஎச்பியின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்ததாக கோப்ராபோஸ்ட் வாம்தேவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கரசேவகர் களான கோத்தாரி சகோதரர்கள் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் ஆகியோரை காவல்துறையினர் சுட்டுக் கொல்ல சங் பரிவாரில் இருந்த சில சுயநல ஆசாமிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கோப்ராபோஸ்ட்டிடம் பேசிய உமா பாரதி கூறுகையில், கோத்தாரி சகோதரர்களை வழி நடத்தி மசூதி இடிப்பில் ஈடுபட வைத்த வினய் கட்டியார் காவல்துறை யினர் சுட ஆரம்பித்தவுடன் ஓடிவிட்டார். அவர்களைக் காக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 6ஆம் தேதி காலை மசூதியை எப்படியும் இடித்தே தீருவோம் என்று கரசேவகர்கள் உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டனர். இந்தப் பணியை செய்தது ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் ஆவார். உறுதிமொழி எடுத்த பின்னரே இடிப்புப் பணி துவங்கியது.

    பிரதமரும் உடந்தை

    மசூதியை இடிப்பதில் பிரதமர் நரசிம்மராவ் மிக உதவிகரமாக இருந்ததாக வினய் கத்யார், பி.எல். சர்மா, சந்தோஷ் துபே, சாக்ஷி மகாராஜ், ராம்விலாஸ் வேதாந்தி ஆகியேர் கோப்ராபோஸ்டிடம் தெரிவித்துள்ளனர். அதாவது மசூதி இடிக்கப்பட உள்ளது தெரிந்தும் மத்தியப் படைகளை அனுப்பாமல் வேண்டுமென்றே அமைதி காத்து மறைமுகமாக உதவினார் ராவ். மேலும் மசூதியை 6ஆம் தேதி இடிக்கப் போவதாக அப்போதைய முதல்வர் கல்யாண் சிங்கிடம் 5ஆம் தேதி இரவே மகந்த் வேதாந்தி நேரில் தெரிவித்துவிட்ட தாகவும் இந்தப் பேட்டிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 6ஆம் தேதி காலை கல்யாண் சிங் தனது முதல்வர் பதவியை விட்டு விலகி விட முடிவு செய்ததாகவும், ஆனால் அவரை எச்.வி.சேஷாத்ரி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள் தடுத்துவிட்டதாகவும், மசூதி முழுமையாக இடித்து முடிக்கப்படும் வரை கல்யாண் சிங்கை பாஜக தலைவர்கள் கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும் கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா 4.4.2014

    Read more: http://viduthalai.in/page-3/78232.html#ixzz2y4BymNdu

    தமிழ் ஓவியா said...


    ஜாதிக் கயிறை அறுக்கும் கொள்கைக் கூர்வாள் அணி

    - நீரோடை


    1912-ல் டாக்டர் நடேசன் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. வழி நெடுக எத்தனையோ புயல்களை, இடி, மின்னல்களைச்சந்தித்தாலும் அத் தனையையும் சந்தித்து , எதிர்த்தவர்களின் எண்ணங்களையெல்லாம் தவிடு பொடி யாக்கி வெற்றிக் கொடி நாட்டி வருகின் றது. தாழ்த்தப்பட்டவன் படிக்கலாமா, பிற்படுத்தப்பட்டவன் படிக்கலாமா? , அவர்களுக்குத் தகுதி உணடா? திறமை உண்டா என்று கேட்டவர்கள் எல்லாம் வாயடைத்து நிற்கும் வண்ணம் எந்தத் துறை என்றாலும் உச்சாணிக் கொம்பிலே புகழ் பெறுகின்றவர்களாக தமிழர்கள் நிற்கின்றார்கள். சமூக நீதித் தத்துவம் தமிழகத்திலே, தமிழர்களின் மனதிலே வேர் ஊன்றி நிற்கிறது. 2004-நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி. பெற்ற 40க்கும் -40மான தோல்வி , அதன் மூலம் யார் அடுத்த பிரத மர் வாஜ்பாயா? அதவானியா என்னும் அவர்களின் கனவு கானல் நீராய்ப் போன கட்டம் , தமிழகம் மட்டும் ஏன் தனித்து நிற்கிறது, பக்திமானாக இருக்கும் தமிழன் கூட இன உணர்வு அடிப்படையில் நம்மை வேறுபட்டவனாக, பார்ப்பனர் களின் ஏவல் கூட்டமாகத் தானே பார்க்கின்றார்கள் என்னும் உள்மனதுக் குடைச்சல் அவர்களைக் குடைந்ததன் விளைவாக பல்வேறு கோளாறுகளைத் திட்டமிட்டு நமது பரம்பரை எதிரிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள், அதில் ஒன்றுதான் ஜாதி வெறி உணர்வை மீண்டும் தூண்டுவது , அந்தத் தூண்டிலில் விழுவோரை தம் பக்கம் இழுத்துக் கொள்வது. என்னும் திட்டம்.

    பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாகச்சொன்னார். இந்தச்சாதி முறை அமைப்பு என்பது ஏணிப் படி களால் அமைந்த அமைப்பு. மிக எளிதாக அடுத்தடுத்த படிகளிலே இருக்கும் ஜாதி களுக்குள்ளே கலவரத்தை, வெறுப்பைத் தூண்டும் அமைப்பு.தங்கள் சுய நலத்திற்காகப் பார்ப்பனர்கள் ஏற்படுத்திய அமைப்பு தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ் நாள் தொண்டாக இந்த ஜாதி என்னும் நாகப்பாம்பைத் தன்னு டைய கொள்கைத் தடியால் தாக்கி தாக்கி மக்கள் மனதில் இருந்து அகற்றினார்கள். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய தொடர் பயணத்தால், சொற் பொழிவால், இயக்கச் செயல்பாடுகளால்,, தொடர் போராட்டங்களால் தமிழர்களின் மனதில் இந்த ஜாதி வெறி அண்டாமல் பார்த்துக்கொண்டுள்ளார். . ஆனால் நமது பரம்பரை எதிரிகள் வாக்குக்களை மிக எளிதாகப் பெறுவதற்கு ஜாதி உணர்வைத் தூண்டுவதற்கான வேலையை சில விபீட ணர்களின் துணையோடு ஆரம்பித்து இருக்கின்றார்கள். இப்பொழுது எங்கே அதனை ஆரம்பித்து இருக்கின்றார்கள் என்றால் பள்ளிக்கூடங்களில். பள்ளிக் கூடங்களிலா என ஆச்சரியப்படாதீர்கள், பள்ளிக்கூடங்களில்தான் ஆரம்பித்து இருக்கின்றார்கள் .


    தமிழ் ஓவியா said...

    தமிழ் இந்து' பத்திரிக்கையில் " பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக்கயிறு ' கலாச்சாரம் என்னும் தலைப்பில் ரா.தாமோதரன் என்பவர் எழுதிய கட் டுரை ஒன்று 18.3.2014 அன்று வந்திருந் தது.அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டி ருந்த செய்தியின் சுருக்கம் :

    பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர் களின் பாட நூல்களில் , எழுதும் குறிப் பேட்டில் அவர்களுடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருகின்றார்கள். ஜாதி அமைப்பைச்சேர்ந்த சிலரின் தூண்டுதலால் இது நடைபெறுகின்றது என்று எழுதியிருக்கின்றார். மாணவர்கள் தங்கள் கைகளில் ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை அணிகின்றார்கள். குழுவாக மாணவர்கள் தம் பெயரைக் கைகளில் ரத்தத்தால் எழுதுவது இந்த மூன்றும் இப்போது மாணவர்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது என எழுதிவிட்டு மேலும் இதனைக் கண்டிக்கும் ஆசிரி யர்கள் பணிக்கு உத்தரவாதம் இல்லை. அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அறிவுரையும் கலந்தாலோ சனையும்தான் தரமுடியும். அந்த மாணவர்களின் ஜாதிக் கைப்பட்டையை அறுத்தால், ஆசிரியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். எந்த ஆசிரியர் ஒரு மாண வனின் கைப்பட்டையை அறுக்கிறாரோ, அவர் ஒழுக்கத்தைப் பேணுபவர் ஆகமாட்டார். அவர் அந்த ஜாதிக்கு எதிரானவர். மாற்று ஜாதியைப் பள்ளியில் மறைமுகமாகத் தூண்டுபவர் என்று பார்க்கப்படுகிறது.

    ஏதோ இரண்டு பேர் வந்து ஒரு ஆசிரியர் மீது குற்றம் சொன்னாலே, நமது கல்வித்துறை அதிகாரிகள் கலங்கிப் போய் விடுகின்றார்கள். ஏய், பள்ளிக்கு வரும்போது வேறுபாடு இருக்கக்கூடாது என்றுதானே, தமிழர்களின் இரட்சகர் என்று தந்தை பெரியாரால் அழைக்கப் பட்ட பெருந்தலைவர் காமராசர் சீருடை கொண்டு வந்தார். அந்த சீருடை மாணவர்களின் மனதில் ஏற்றத்தாழ்வை மறைத்து ,ஒற்றுமையை வளர்க்கும் என்பதால்தானே பல ஆண்டுகளாக அரசால் பின்பற்றப்படுகின்றது, இப்பொ ழுது சமூகத்தில் நிலவும் ஜாதி வேற்று மையை நிலை நிறுத்தும்வண்ணம் கைகளில் ஜாதிப்பட்டையை அணிவது என்பதெல்லாம் இருக்கும் வேற்றுமையை அதிகரிக்கும் செயல்கள்தானே, கல்வித் துறை கவனிக்காதா? கவனம் செலுத்தக் கூடாதா?

    தமிழ் ஓவியா said...


    அந்தக் கட்டுரைக்கு இணையத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பின்னோட்டம் பதிவு செய்திருந்தனர். பெரும்பாலானோர் பள்ளிச்சான்றிதழில் ஜாதி போடப்படுவ தால்தான் ஜாதி இன்னும் இருக்கின்றது என்ற வகையில் கருத்துக்களைத் தெரிவித் திருந்தனர். நம்மைப்போன்றவர்களுக்கு அதனைப் படித்தால் சிரிப்புத்தான் வருகின்றது. எதோ கல்யாணத்தில் ஜாதி கேட்காதது போல, வீடு வாடகைக்கு கொடுக்கும்போது ஜாதி கேட்காதது போல, கிராமங்களில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வெறியெல்லாம் அடங்கிவிட்டது போல , இளவரசன்களும் திவ்யாக்களும் திருமணம் செய்து வாழ்வதில் இடையூறு ஏதும் இல்லாதது போல, பள்ளிக்கூடத்து சான்றிதழ்களில்தான் ஜாதி இன்னும் உயிரோடு இருக்கிறது என்பது போல எழுதுகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பள்ளி ஜாதி சான்றிதழ் மூலம் படிப்பு, வேலை வாய்ப்பு பெறுவது பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது. தாங்கள் நேரடியாக வந்து தடுக்காமல், பார்ப்பனர்கள் தங்கள் ஏவலாக இருக்கும் ஒடுக்கப்பட்டவர் களை ஏவிவிட்டு அவர்கள் மூலம் இந்த இட ஒதுக்கீட்டை தடுப்பதற்கு செய்யப் படும் தகிடுதத்தம்தான் இந்த ஜாதிக்கயிறு.

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பன அமைப்புகளின் வேலை தான் இது என்பதற்குக் கீழ் வரும் செய்தியைப் பாருங்கள். ஜனவரி 27, 2014 தினமலர் செய்தித்தாளில் வந்த செய்தி இது. "மாணவர்கள் அணிந்த கயிறு பள்ளி யில் அறுப்பு: கலெக்டர் உத்தரவுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு" என்பது தலைப்பு .ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்கள் கழுத்து, கைகளில் அணிந்த கயிறு அறுக்கப்பட்டது. மாணவ, மாணவியர் நெற்றியில் செந்தூரம், கை மற்றும் கழுத்தில் சுவாமி கயிறு கட்டு வதற்கு மாவட்ட ஆட்சியர் விதித்த தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தனர். ஆட்சியர் மாண வர்கள் நெற்றியில் செந்தூரம் இடுவது குறித்து, ஆட்சேபணை தெரிவிக்க வில்லை. அவர்கள் கையில் விதவிதமான பல நிறங்களில், கயிறு கட்டுவதன் மூலம் சட்டம், ஒழுங்கு மற்றும் மத ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கவே, மாண வர்கள் பள்ளிக்கு கயிறு கட்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தான் உண்மை." மேலே கண்ட தினமலர் செய் தியையும், தமிழ் இந்து பத்திரிகையில் வந்த கட்டுரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் , படிக்கும் உங்களுக்கு பளிச் சென , மாணவர்களின் கைகளில் கயிறு கட்டும், ஜாதி வெறி ஊட்டும் செயல் யார் செயல் என்பது எளிதாகப் புரியும். மத நம்பிக்கை என்னும் அடிப்படையில் ஜாதி வெறியை மாணவர்கள் மத்தியில் சில அமைப்புகள் திட்டமிட்டு தூண்டு கின்றன. அதற்கு மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறை கட்டச்சொல்கின்றார்கள் .

    தமிழ் ஓவியா said...

    தமிழ் இந்துவில் இந்தக் கட்டுரை க்கு பின்னோட்டம் இட்டிருந்த திருச்சி- புது நிலா என்பவர் "ஜாதிக்கயிறு இது ஏற் கனவே நம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.இப்பொழுது கைகளில் வெளிப்படையாக கட்டிக் கொள்கிறார்கள். மறைவாக,அல்லது வெளிப்படையாகவும் மார்பின் குறுக்காக போட்டுக்கொள்வது என்னவாம்?" எனக் கேட்டிருந்தார், மார்பின் குறுக்காக கயிறை போட்டுக் கொண்டு இருப்ப வர்கள் அந்தக் கயிறால் காலம் காலமாக சலுகைகளும் , உழைக்காமல் பலன்களும் அடைந்து கொண்டுள்ளார்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோர் உழைப்பால் கிடைத்த இட ஒதுக்கீடு, சமூக நீதி உரிமை என்பது இன்னும் முழுமையாகக் கிடைக்க வில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழுமையான இட ஒதுக்கீடு பதவி உயர்வில் இல்லை,மத்திய அரசில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது, அவர்களுக்குள் சண்டை மூட்டி விடவேண்டும். சமூக நீதியை குழி தூண்டிப் புதைக்க துடிக்கும் மார்பின் குறுக்காக கயிறு போடும் கூட்டம் மாண வர்கள் மத்தியில் ஜாதிக் கயிறைத் திணித்து, சமூக அநீதியை நிலை நாட்டத் துடிக் கிறது இந்த நிலைமையைப் படம் பிடித்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்

    "ஜாதி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பல பேர்; உங்களுக்குத் தெரியுமே, கொசுவை ஒழிக்கவேண்டும்; கொசுக்கடியால் பரவும் மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கவேண்டும் என்று மருத்துவர்கள், சுகாதார ஆய் வாளர்கள் அதனை ஒழிப்பதற்கு என்ன வழியோ அதனைச் செய்வார்கள்.

    கொசுவர்த்தி விற்பவன் என்ன விரும்புவான்? தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.நிறைய பேர் நம் நாட்டில், அரசியல் கட்சிகள் கொசுவர்த்தி வியாபாரம் செய்கிறார்கள். எவ்வளவுக் கெவ்வளவு கொசு அதிகமாக இருக் கிறதோ - இதைக் கொளுத்தி வையுங்கள்; அதனை வையுங்கள் என்று தொலைக் காட்சி விளம்பரங்கள் இருக்கின்றன.

    எங்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு அதுதான் - அவருக்கு கொசுவர்த்தி வியாபாரம் நன்றாக நடைபெற வேண்டும் என்றால், கொசு நீண்ட காலம் இருக்க வேண்டும்; குறையாமல் இருக்க வேண் டும் எவ்வளவுக்கெவ்வளவு கொசு பரவி இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவருடைய வியாபாரம் நடக்கும்.

    ஆனால், நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், மனிதர்கள் நலத்தோடு இருக்க வேண்டும் என்றால், கொசுவை அழிக்க வேண்டும்; ஜாதியை அழிக்கவேண்டும்; ஜாதியை அழிக்கவேண்டும் என்றால், அதற்கு முட்டுக்கொடுக்கின்ற மதத்தை அழிக்கவேண்டும். தந்தை பெரியார்தான் அறிவியல் ரீதியாக, நோய்நாடி, நோய் முதல்நாடியாக அதனைச் செய்தார்கள்" ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை - விடுதலை 25-3-2014 ஜாதி இருக்க வேண்டும், அதனால் நமக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் கொசு வத்தி வியாபாரிகள் , ஒரு அணி யாக நிற்கின்றார்கள் தமிழகத்து நாடாளு மன்றத் தேர்தலில். நமது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், உயர் நிலை பெற வேண்டும் என நினைக்கும் தமிழர் தலை வர் கி,வீரமணி அவர்கள் மரியாதைக் குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் தலை மையிலே போட்டியிடும் அணிதான் வெற்றி அணி, சமூக நீதிக்கான அணி என்பதனை சுட்டிக் காட்டி, சுழல ஆரம் பித்திருக்கின்றார் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில். ஜாதிக் கயிறை அறுக்கும் கொள்கைக் கூர்வாள் நமது அணியில் தான் இருக்கின்றது. இதுதான் ஜாதிப் பிணியைத் தீர்க்கும் அணி. நமது கூட் டணி வெற்றி விழாவில் பங்கேற்க பணி யாற்றுவீர், சுழன்று சுழன்று பணியாற்று வீர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் சுட்டும் திசையில் பணியாற்றுவீர், வெற்றிக் கனியை கொண்டு வந்து குவிப்பீர் தோழர்களே, தோழியர்களே.

    Read more: http://viduthalai.in/page-2/78213.html#ixzz2y4CA809b

    தமிழ் ஓவியா said...


    இது பெரியார் பிறந்த மண்

    - குடந்தை கருணா

    திராவிடர் கழகத்தலைவர், விடுதலை ஆசிரியர் தொடர்ந்து ஒரு செய்தியை அறிக்கையாகவும், தனது பேச்சின் மூலமாகவும் சொல்லிக் கொண்டே வந்தார்; வருகிறார்.

    பிப்ரவரி 2014-இல் தனது அறிக்கையில், இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்ச மின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது; ஹிந்துத் துவாவை அதிகார பீடத்தில் அமர வைக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்துள்ளனர்.

    இந்தச் சூழ்ச்சியை ஒடுக்கப்பட்ட மக்களும், புரிந்து கொள்ள வேண்டும்; மதவாத எதிர்ப்புச் சக்திகள் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டத்திலும், தனது பேச்சில், மாலேகான் உட்பட பல்வேறு சதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்புகள் மீது, இந்து பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டு இறுகியதிலிருந்து தப்பிக்கவே, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டியுள்ளதாக, ஆசிரியர் வீரமணி கூறினார்.

    தற்போது கோப்ரா போஸ்ட் எனும் இணைய தளம் மேற்கொண்ட வேவு நடவடிக்கையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் எத்தகைய சதியில் திட்டமிட்டு நடத்தி, பாபர் மசூதியை இடித்தன என்பதை தெரிந்து கொண் டால், ஆசிரியரின் கருத்து எத்தகைய முக்கியத்துவமான கருத்து என்பது தெளிவாகும்.

    இந்த நிலையில், புகழ் பெற்ற எழுத்தாளர் குல்திப் நய்யாரைத் தலை வராகவும் என்.டி.பஞ்சோலியைச் செயலராகவும் கொண்டு டில்லியிலி ருந்து இயங்கும் "ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு" 29.3.2014 அன்று புதுடில்லியில் மாநாடு நடத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்பொரேட் பின்புலத்துடன் பிரதமர் வேட்பாள ராக வலம் வரும் மோடி தலைமை யில் இயங்கும் எதேச்சாதிகார சக்திகளை தோற்கடிக்குமாறு இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

    இதே போன்று கருநாடகாவில் எழுத்தாளர்கள் அனந்த நாராயண மூர்த்தி போன்றோர், சமாகலீனா விசாரா வேதிகே என்கிற அமைப்பின் சார்பில், ஆர்.எஸ்.எஸின் முகமூடி மோடி; அவர் வெற்றி பெறுவது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என அறிக்கை விடுத்துள்ளனர்.

    புதுடில்லியில் குல்தீப் நய்யார் போன்றோரும், கருநாடகாவில் எழுத்தாளர்களும் விடுதலை ஆசிரியர் கூறிய கருத்தை ஒற்றி, ஒரே நிலையில் சிந்திக்கின்றனர். பாஜக மோடி ஆர்.எஸ்.எஸ் அபாயத்தை மக்களிடம் கூறி எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகின்றனர்.

    ஆனால், பாஜக சீட்டணியில் உள்ள வைகோ போன்றோர், மோடி பிரதம ரானால் என்ன என்று மக்களைப் பற்றியும், வரும் அபாயத்தையும் பற்றி சற்றும் கவலைப்படாமல் பேசி வரு கின்றனர். இவர்களை தமிழ் மக்கள் நிச்சயம் அலட்சியப்படுத்துவார்கள்.

    ஏனென்றால் இது பெரியார் பிறந்த மண்.

    Read more: http://viduthalai.in/page-2/78216.html#ixzz2y4CTdRIy

    தமிழ் ஓவியா said...


    ஒன்றுமே இல்லை

    பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

    (விடுதலை, 17.10.1954)

    Read more: http://viduthalai.in/page-2/78211.html#ixzz2y4CbSssD

    தமிழ் ஓவியா said...


    பிஜேபியின் பொருளாதாரக் கொள்கை என்பது என்ன

    தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி என்று சொல்லப்படுவது சம்பிரதாயமானது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது? நடைமுறை உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் தேமுதிக தலைமையில் அமைந்த கூட்டணியில் பிஜேபியும் உள்ளது;

    அதுவும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதுதானே உண்மை!

    இந்தக் கட்சிகளின் ஒரே குரல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டு வந்து வைப்பதுதான்.

    அதற்காக இக்கட்சியினரால் சொல்லப்படும் காரணங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.

    பொருளாதாரப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இரு கட்சிகளுமே போட்டிப் போடக் கூடியவைதான். இதன் காரணமாக சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.

    அரசுத் துறைகளைத் தனியார்க்குத் தாரை வார்ப்பதில் காங்கிரசை விஞ்சி நிற்பது பிஜேபியே! இந்தத் தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தைக் கூட நடத்தலாம்.

    பி.ஜே.பி. ஆட்சியில் அரசுத் துறைகளைத் தனியார்க்கு அளிப்பதற்கென்றே ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டது (Ministry of Disinvestment) அதற்கு அருண்ஷோரி அவர்கள் மத்திய அமைச்சராகவே இருந்தார் என்பதை நினைவூட்டுகிறோம்.

    பால்கோ என்ற நிறுவனம் அதன் உபரிநிதி ரூ.4600 கோடி. 2000ஆம் ஆண்டில் அதன் லாபம் ரூ.110 கோடி. சொத்து மதிப்போ ரூ.5000 கோடி. அதனை 551 கோடி ரூபாய்க்கு அடி மாட்டு விலையில் ஸ்டெர்லைட் கம்பெனிக்கு விற்றது வாஜ்பேயி அரசு. பாலக்காட்டில் இன்ஸ்ட்ரூமென்ட்டேசன் என்ற நிறுவனம் அதன் சொத்து மதிப்பு ரூ.175 கோடி; ரூ.19 கோடிக்கு ஃபிஷர் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றதும் வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசே!

    பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில்தான் பெப்சி, நெஸ்லே, கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற் குள் காலடி எடுத்து வைத்து உள் நாட்டில் உற்பத்தி யான குளிர் பானங்களை எல்லாம் காலி செய்தன.

    வருடத்துக்கு ஒரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியில் 347 ஆலைகள் மூடப்பட்டு 6,46,379 பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்! இதுதான் வாஜ்பேயி அரசின் நிகர லாபம்.

    அமெரிக்காவின் டெர்மினேட்டர் விதைகள் (மலட்டு விதைகள்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டதும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான்!

    இந்தியாவில் உள்ள விவசாயிகள் அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை விதை நெல்லாகச் சேகரித்து வைப்பார்கள். இந்த மலட்டு விதை அறிமுகப் படுத்தப்பட ஆரம்பித்து விட்டால், பன்னாட்டு விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்துதான் விதைகளை வாங்கித் தீர வேண்டும் என்ற கட்டாய நிலை. இந்தக் கேடு கெட்டவற்றிற்கெல்லாம் முகூர்த்தக் கால் நட்டது பிஜேபி ஆட்சியே!

    நியூயார்க் பன்னாட்டு பொது விவகாரக் கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் வார்டுமோர் ஹௌஸ் என்பவர் இந்தியாவிற்கு வந்தபோது சொன்னார். (ஏப்ரல் 1999).

    அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் மான் சாண்ட்டோவுக்கும் (மலட்டு விதைக்கு) பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி சந்தேகத்துக்கு உரியது. அதனை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கப் பேராசிரி யரே கூறியும்கூட பிஜேபி அரசு பொருட் படுத்தவில்லையே!

    (இந்த நேரத்தில் இதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நினைவு கூர்வோமாக!)

    1998 ஜூலையில் 1308 பொருள்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை பிஜேபி அரசு முழுமையாக அகற்றியது. இது உள்நாட்டு உற்பத்தியின் முதுகெலும்பை முறித்த அபாயகரமான செயல் பாடாகும்.காப்பீடு, மருந்து உற்பத்தி, ஓட்டல்கள், சுற்றுலா, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்ததும் வாஜ்பேயி தலைமையிலான பிஜேபி ஆட்சியே!

    இந்த நிலையில் நரேந்திரமோடி தலைமையில் பிஜேபி புரட்சியைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் யாரை ஏமாற்றிட? பிஜேபி மட்டுமல்ல - இதற்குத் துணைப் போகும் கட்சிகளும் இந்த மோசடிக்குப் பொறுப்பாகும் என்று எச்சரிக்கிறோம்.

    வாஜ்பேயியின் அளவுக்கு அதிகமான அமெரிக்கச் சார்பைக் கண்டித்தும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது யார் தெரியுமா?

    மதன்லால் குரானா உள்ளிட்ட 7 பேர்களாகும். இந்த ஏழு பேர்களும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் வேடிக்கை!

    மதவாதம் என்றாலும் நாட்டுப் பொருளாதாரம் என்றாலும் எந்த வகையில் பி.ஜே.பி. சிறந்தது - நாட்டு மக்களுக்கு நலன் விளைவிக்கக் கூடியது?

    சிந்திப்பீர்! வாக்காளர்களே, செயல்படுவீர்!!

    Read more: http://viduthalai.in/page-2/78212.html#ixzz2y4Cj1wSx

    தமிழ் ஓவியா said...


    மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!


    உ.பி.க்குச் சென்றால் சமூக நீதி - பீகார் சென்றால் மாட்டிறைச்சி!

    இடத்திற்கேற்ப பல குரலில் பாடும் மோடியிடம் எச்சரிக்கையாக இருப்பீர்!

    மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!

    சமதர்மத்துக்கும், மனுதர்மத்துக்கும் இடையிலான போட்டியே 16ஆவது மக்களவைத் தேர்தல்!

    இடத்திற்க்கு ஏற்பப் பல குரலில் பேசும் - இராகம் பாடும் நரேந்திரமோடியிடம் எச்சரிக்கையாக இருக்கு மாறு வாக்காளர்களைத் தெளிவுபடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி ஒரு பல குரல் மன்னர்! எந்தெந்த மாநிலத்திற்குத் தேர்தல் பரப்புரைக்காகச் செல்கிறாரோ அங்கங்கே அதற்குத் தகுந்த இராகத்தில் தேர்தல் பாட்டுப் பாட அவர் தவறுவதில்லை.

    இடத்துக்கு ஏற்பப் பல குரல்

    உ.பி.க்குச் சென்றவுடன், அங்கே பலமாக வீசும் சமூக நீதிக்காற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கரையேற எண்ணி, மிகப் பிற்படுத்தப்பட்டவனான என்னை பாஜக (உண்மையில், ஆர்.எஸ்.எஸ்.) கட்சி நிறுத்தியிருக்கிறது என்றால், இனி பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோ ருக்குத்தான் வாய்ப்பு என்று பேசி அங்கு 80 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் (OBC, SC & ST) வாக்குகளை இந்த மயக்கப் பிஸ்கட்டுகள் மூலம் பறிக்கத் திட்டமிடுகிறார்.


    தமிழ் ஓவியா said...

    பீகாரில் வேறு குரல்!

    அதற்கடுத்துப் பெரிய மாநிலமான பீகாரில் - பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக உள்ள யாதவர்களின் வாக்குகளை எப்படியாவது அது லாலுபிரசாத்தின் (RJD) ராஷ்டிரிய ஜனதா தள் கட்சிக்குப் போகாமல் தடுக்க,

    யாதவப் பெரு மக்களே! பகவான் கிருஷ்ணன் மதுராபுரி (உ.பி.)யில் பிறந்தாலும், துவாரகப்புரிக்கு (துவாரகை)த்தான் (குஜராத்தில் உள்ளது) வந்து சேர்ந்தார். அங்கிருந்து வந்த என்னை ஆதரியுங்கள்.

    நீங்கள் எல்லாம் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் அப்படிப் பட்ட நீங்கள், மாட்டிறைச்சியையும், தோல் ஏற்றுமதியையும் செய்து, பசுவதை செய்யும் காங்கிரஸின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை ஆதரிக்கலாமா?

    அதன் மூலம் கோமாதாவைக் கொன்று ஏற்றுமதி செய்யும் இவர்களை ஏற்கலாமா?

    உங்களுக்கெல்லாம் ஆடு, மாடுகளைப் பராமரிக்க உதவித் தொகை (Subsidy) தருவதுதானே நியாயம் என்று கூறி, நாக்கில் தேன் தடவ முயற்சிப்பதோடு, அவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். என்ஜினியர், டாக்டர் படிப்பு படிக்காமல் குலத் தொழில்காரர்களாகவே நீடிக்க வைக்கும் மறைமுகத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். (ஒரு வேளை அதிமுக தேர்தல் அறிக்கையைப் படித்திருக்கலாம் மோடி!)

    குஜராத்தில் மட்டும் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யலாமா?

    இந்தியாவில் எருமை மாட்டிறைச்சிமூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி 17 ஆயிரத்து 413 கோடி ரூபாய்.

    பால் பொருள்கள் (Dairy Products) மூலம் கிடைப்பது வெறும் 1,412 கோடி ரூபாய்.

    மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு ஊக்க உதவித் தொகை (Subsidy for Export) தருகிறார்கள் என்கிறாரே, இதுபற்றிய மத்திய அமைச்சர் ஒருவர்! தெளிவான கேள்வியை மோடிக்கு எழுப்பியுள்ளார்.

    நீங்கள் ஆளும் குஜராத்திலும் உங்கள் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறதே; அதை மறுக்க முடியுமா?

    2001-2002 குஜராத்தில் 10,600 டன்னாக இருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி 2010-2011 ஆண்டு 22,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 27 விழுக்காடு ஆகும். குஜராத்தில் மொத்தம் 39 மாட்டிறைச்சிக்கூடங்கள் உள்ளன. இவைகளில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்படுகின்றன. குஜராத்தின் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு ஏற்றுமதி வளர்ச்சி குழுமம் கொடுத்த தகவலின்படி குஜராத்தில் விவசாய மற்றும் ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் மாட்டிறைச்சி மூலம் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக மோடி பேசுவது அசல் ஏமாற்று வேலைதானே! தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பேயி பிரதமராக இருந்த கடைசி ஆண்டாகிய 2003- 2004-இல் 31/2 மெட்ரிக் டன் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி ஆயிற்றே - அதற்குப் பதில் என்ன?

    (பொள்ளாச்சி அருகில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முனைந்த இந்த இறைச்சிப் பதனிடும் தொழிற்சாலை வருவதைத் தடுக்க, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போராட்டம் நடத்தியதே!)

    பரப்புரையல்ல - பசப்புரை!

    மாடுகள் உணவின்றிக் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளபோது, அதற்குப் போதிய புல் போன்ற இயற்கை உணவு (Fodder) அமைக்காத நிலையில், அவைகளால் பொருளாதாரச் சுமை ஏற்படக் கூடாது என்பதால்தானே இறைச்சியாக்கப்படுகிறது! இது பொருளாதார நிபுணர்கள் - தத்துவப்படி பயன்தரக் கூடியதாயிற்றே!

    இப்படி தனக்கொரு நீதி மற்றவர்களை ஏமாற்ற மற்றொரு நீதி என்பதுபோல் பேசுவது பரப்புரை அல்ல பசப்புரை ஆகும். மோடிகளைப் புரிந்து கொள்ள ஆர். எஸ்.எஸ். என்ற ஆரிய மாயையைத் தெரிந்து கொள்ள பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி என்று (அண்ணா கூறியதுபோல) பல குரல் மோடி வித்தைகளைப் புரிந்து கொள்வீர்!
    ஜாதியைக் காக்க, ஹிந்துத்துவாவை ஆட்சியில் அமர்த்த அரும்பாடுபடுகிறது ஆர்.எஸ்.எஸ்.

    தேன் தடவப்பட்ட விஷ உருண்டை

    வாக்காளர்களே, இந்தத் தேன் தடவப்பட்ட விஷ உருண்டையைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை ஒதுக்கிடுவீர் - சிந்திப்பீர்- செயலாற்றுவீர்!

    ஜனநாயக முற்போக்குக் கூட்டணிதான் சமூகநீதி யையும், சம தர்மத்தையும் மக்களுக்கு அளிக்கப் போகும் உண்மையான ஜனநாயகக் கூட்டணி என்பதை மறவாதீர்!

    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்


    5.4.2014
    முகாம்: மதுரை

    Read more: http://viduthalai.in/e-paper/78196.html#ixzz2y4D06NQM

    தமிழ் ஓவியா said...


    நாட்டில் மோடி அலை இல்லை சீதாராம் யெச்சூரி பேட்டி


    கொச்சி, ஏப். 5- நாட் டில் மோடி அலை வீச வில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் பத்திரிகை யாளர் கூட்டத்தில் தெரி வித்தார்.

    மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணா குளத்தில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:

    நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றால், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிட வேண் டியது தானே, ஏன் பாது காப்பான தொகுதியை தேடிச் சென்று 2 தொகுதி களில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜ அல்லாத ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, 3ஆவது அணி அமைக்க இடதுசாரி கடு மையாக பாடுபடும். மூன் றாவது அணி உருவாகி ஆட்சி அமைக்கும் பட்சத் தில் அதில் சேர்வது குறித்து கட்சியின் மத்தியக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்றதைப் போல இப்போதும் இடது சாரிகள் வெல்வார்கள் என் றார் அவர்.

    Read more: http://viduthalai.in/e-paper/78197.html#ixzz2y4D8dxKl

    தமிழ் ஓவியா said...


    இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா? வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்


    இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா?
    வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்

    திராவிடர் கழகத் தலைவர் கருத்து

    மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!

    1) 16ஆவது மக்களவைத் தேர்தலில் வன்முறை தலை தூக்காது ஜனநாயக உரிமைகளைக் காக்கும் வகையில், தேர்தலை நடத்தி முடிப்பது மிக மிக அவசியமாகும்.

    டெல்லியிலேயே வன்முறை

    தலைநகர் டெல்லியில் பரப்புரை செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்தில் தட்சண்புரி என்ற பகுதியில், அவரது வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது, (அங்கே இம்மாதம் 10ஆம் தேதி தேர்தல்) ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்து முகத்தில் குத்து விட்டுள்ளார். டில்லியிலே இப்படி ஒரு நிகழ்வு என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

    கட்சித் தலைவர்களுக்குக்கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பில்லை; தலைவர்களுக்கு, வேட்பாளர் களுக்கு அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும் - போதிய பாதுகாப்புத் தர வேண்டும் என்பது குறைந்தபட்ச தேர்தல் அடிப்படைக் கடமை அல்லவா?

    இதில் தேர்தல் ஆணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழாது, உயிர், உடைமைப் பாதுகாப்புக்கும் அமைதியாக தேர்தல் நடைபெறவதற்கும் வழிவகை செய்தல் தலையாய கடமையாகும்.

    பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடா?

    2) தமிழக தேர்தல் ஆணையர் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தத் தடை என்பது தானேயொழிய, தனித் தனியே வீடுகளுக்கு சென்று ஓட்டுக் கேட்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளதன் மூலம், இது வீட்டில் பணி செய்து, முடித்து, உறங்கி, எழுந்து, அடுத்த நாள் வேலைக்குச் செல்வோர்க்கும், தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்களுக்கும், இது மிகப் பெரிய இடையூறாக அமையக் கூடும்.

    எனவே, உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து இந்த முறையைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

    இரவில் வாக்குச் சேகரிக்கிறார்களா? அல்லது பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை விலை பேசி வாங்கு கிறார்களா என்பது தெரியாமல் ஆங்காங்கே மற்ற எதிர் அணியினர் திரண்டு நின்று அமைதியைக் குலைத்து, வீண் கலவரங்கள் நிகழத்தான் வாய்ப்பு ஏற்படக் கூடும். சந்தேகங்களுக்கும் இடம் அளிக்கும்.

    எனவே, இந்த முறை உடனே கைவிடப்பட்டாக வேண்டும்; இரவில் அமைதியோடு மக்கள் ஒய்வெடுத்தலே நல்லது. பகலில் பணிகள் நடைபெறட்டும்; இன்றேல் வன்முறைகள் நாட்கள் நெருங்க நெருங்க பெருகிடும் அபாயம் ஏற்படும்.

    எனவே, சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் முடியும் வரை போதிய பாதுகாப்புத் தர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு

    ஆளுங் கட்சிக்காக மட்டும்தானா காவல்துறை என்பது போன்ற கேள்வி எழா வண்ணம், வரு முன்னர் காக்கும் வகையில், தேர்தல் ஆணையம் கண்காணிக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் பொது ஒழுக்கம், அமைதி காப்பாற்றப்படக் கூடும்.



    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்

    5.4.2014

    முகாம்: மதுரை

    Read more: http://viduthalai.in/e-paper/78202.html#ixzz2y4DGnpZz

    தமிழ் ஓவியா said...


    இசையும் வசையும்!


    கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டு வழங்கப்பட்டு விட்டது. அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள் ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த அறிக் கைகளைப் படித்துப் பார்த் தாலே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூற வேண்டு மானால் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப் பிட்டதைப் போல திமுக வின் தேர்தல் அறிக்கை இசை அதிமுகவின் தேர்தல் அறிக்கை வசை

    - கலைஞர் அறிக்கையிலிருந்து முரசொலி 5.4.2014

    Read more: http://viduthalai.in/e-paper/78203.html#ixzz2y4DOpOD4

    தமிழ் ஓவியா said...


    ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு கலைஞர் வேண்டுகோள்

    சென்னை, ஏப்.5- ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்ற புது முழக்கத்தை திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்துள்ளார்.

    திமுகவின் உறுப்பினர்கள் வாக்களிப்பது டன், அவர்கள் ஒருவரை வாக்களிக்கச் செய்தால் திமுக எளிதில் வெற்றிபெறும் என்றும் கலை ஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று (4.4.2014) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

    திமுகவில் ஏதாவது சிறு சம்பவம் எங்கே யாவது தோன்றினால் போதும், அதை உடனே பெரிதுபடுத்தி பத்திரிகைகள் வெளியிடுகின்றன. திராவிட இயக்கத்தின் இனம், மொழி போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. திமுகவி னரிடையே இருக்கும் உற்சாகத்தைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இப் படிப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றனர்.

    நம்மை நாமே சரியாகத் தயார்படுத்திக் கொண்டு விட்டால், மற்றவர்களால் திமுகவில் எவ்வாறு பூசலை ஏற்படுத்த முடியும்?

    நீர் இடித்து நீர் விலகாது. ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அடுத்தமுறை அவருக்குப் பரிசீலிக்கப்படும் என்ற நிலைதான் திமுகவில் இருக்கிறது. இதனால் போட்டியிடும் வேட்பா ளருக்கு ஆதரவாகத்தான் அனைவரும் செயல் படுகின்றனர்.

    ஏனென்றால், ஒரு தொகுதியில் போட்டியிடு வது யாரோ ஒரு வேட்பாளர் இல்லை. திமுகதான் போட்டியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    இந்த நேரத்தில் திமுகவின் சட்டதிட்ட குழு உறுப்பினரான சி.இறைவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் திமுகவில் உறுப்பினர் களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். அவர்கள் எல்லாம் மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் தேர்தலில் தவறா மல் வாக்களிப்பதுடன், ஒவ்வொருவரை வாக்களிக்கவும் செய்தால், 1.60 கோடி பேர் திமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய நிலைவரும். இதன்மூலம் மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் என்று கூறியுள்ளார். இறைவன் எழுதி யுள்ள கணக்கு சரியான கணக்காகவே எனக்குத் தோன்றுகிறது.

    எனவே ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை மறவாமல் திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/78189.html#ixzz2y4DoIR2b

    தமிழ் ஓவியா said...


    பக்தி மடம்

    - முனைவர் பேராசிரியர்
    ந.க.மங்களமுருகேசன்


    இன்றைய நாளில் அரசியல் தலைவர், தாம் விரும்பும் திரைப்பட நடிகர் பொருட் டுச் செய்யும் சில அறிவீனமான, மூடத் தனமான, மடமையான நடவடிக்கைகள் குறித்துக் கேள்விப்பட்டுத் தலையிலடித்துக் கொள்கிறோம்.
    எம்.ஜி.ஆர் பொருட்டு ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்டதும், இத்தகு செயல்களில் ஒன்று. இதுபோல் அரசியல் தலைவர் கைது போன்ற வேளைகளில் தன்னைத்தானே எரித்துக்கொண்ட, தீயிட்டுக்கொண்ட அவல நடவடிக்கை குறித்துக் கேள்வியுற்று வேத னைப்பட்டு இருக்கிறோமே, பரவா யில்லையே என்று ஒரு போதும் பாராட் டியது இல்லை.

    அதுபோல் நடிகரின் முழுஉருவ அட்டைப்படத்திற்கு பூமாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்வதையும் பார்த்து இப்படியும் சில பைத்தியங்களா? என்று எள்ளி நகையாடியிருக்கிறோம். அந்த வரிசையில்சில கேணைகள் கோச்சடை யான் திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதிக்கு நடக்கிறார்கள் என்றபோது, அட பைத்தியங்களே என்று சிரித்து மகிழ்ந்திருக்கிறோம்.

    ஆனால் - பக்தியின் பெயரால் பண்டை நாளில் நடைபெற்ற பல பாழடைந்த பழக்க வழக் கங்கள் குறித்து ஏடெடுத்து இலக்கியம் தீட்டி இருப்பதும் கேவலத்திலும் கேவலம் தான். இதில் நாட்டை ஆண்ட மன்னரும் கூட மடத்தனத்திற்கு விலக்கல்ல.

    வரகுண பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் கி.பி. 650 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டை ஆண்ட முதல் பாண்டியப்பேரரசு மன்னன். அவனுக்கு மதுரையை ஆண்ட கோயில் கொண்ட சோமசுந்தரக் கடவுள் எனும் சொக்கேசப் பெருமான் மீது அதீத பக்தி அப்பக்தியையே வாழ்வின் லட்சிய மாகக் கொண்டிருந்தான்.

    சிவன், சந்திரன், ஆத்மா, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய எட்டையும் அஷ்ட மூர்த்திகள் என்பர். இந்த எட்டையும், எட்டிலும் மனம், மொழி மெய்களால் சிவனைக் கண்டு வழிபட்டவனாம் இந்த வரகுணன் என்று வரலாறு கூறுகிறது.

    இவனுடைய வாழ்வில் நடந்ததாகக் கூறப்படுவது. பிரம்மஹத்தி என்பது இது வரை சிவனைப் பிடித்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். இராவணனைக் கொன்ற ராமனைப் பிடித்ததாகக் கூறுவார்கள் கடவுள் நம்பிக்கையில்லாத யாரையும் இதுவரை இந்தப் பிரம்மஹத்தி பிடித்த தில்லை.

    இந்த பிரம்மஹத்தி வரகுணனைப் பிடித்ததாம். எப்படி? ஒரு நாள் வரகுண பாண்டியன் காட்டில் வேட்டைக்குச் சென்றான். வேட்டை முடிந்து குதிரையில் அரண்மனை நோக்கித் திரும்பி வந்த வேளை அந்திவேளை இருள் மெல்லக் கவ்வும் வேளை. பாதையில் வயதான பார்ப்பனர் படுத்து உறங்கினாராம். (அங்கே போய் அதுவும் ஏன் வழியில் படுத்துக் கிடந்தார் என்பது யாருக்கும் தெரியாது) அந்தப் பார்ப்பனர் மீது மிகவேகமாகக் குதிரையைச் செலுத்தி வந்தபோது குதி ரையின் கால் இடறியது. வயோதிகப் பார்ப் பனர் அங்கேயே இறந்து போனார்.

    இது இருளில் நடந்தது ஆகையால் மன்னனுக்கும் நடந்தது எதுவும் தெரியாது.

    தமிழ் ஓவியா said...


    வரகுணன் அரண்மனை திரும்பினான். இறந்த பார்ப்பனர் உடலை உறவினர்கள் அரண்மனை முன்பு கிடத்தினர். அப்போது தான் வரகுணனுக்குத் தன் குதிரை இருளில் கால் இடரிப் பார்ப்பனன் காலமான செய்தி தெரிந்தது. மன்னன் மனம் பதறினான். இறந்தவனின் உறவினருக்குப் பொன்னும் பொருள் தந்து அந்தணனுக்குரிய இறுதிச் சடங்குகள் ஏற்றுச் செய்தான். இறந்தவன் வேறு ஜாதிக்காரன் என்றால் அரசன் கவலைப்பட்டிருக்க மாட்டான். இறந்தவன் பார்ப்பானாயிற்றே. பார்ப்பான் இறந்து போகக் காரணமாகி விட்டேனே என்று மனம் வருந்தினான். அந்நாளில் அப்படி எழுதி வைத்திருந்தனரே.

    ஏனென்றால் பார்ப்பானைக் கொன்றால் பார்ப்பன தோஷம் பிரம்மஹத்தி தோஷம் என்ற பாவம் பிடித்துக்கொள்ளுமாம். எனவே அவ்வாறே பிரம்மஹத்தி எனும் பார்ப்பானைக் கொன்ற பாவம் வர குணனை வந்தடைந்தது. அதனால் அவனி டமிருந்த பொலிவு, முகமலர்ச்சி, மன மகிழ்ச்சி எல்லாம் மறைந்து போயின.

    மன்னவனாயிற்றே, அதற்குப்பரிகாரம் தேட வேண்டாமா? பிரம்மஹத்தி பலவிதத் தொந்தரவுகளுக்கு உட்படுத்துவதாக வீண் கலக்கம் கொண்டான். எப்போதும் கவலை யுடன் இருந்தான்.

    எனவே வேத வேள்விகள் செய்யும் பார்ப்பனர்களிடமே பிரம்மஹத்தி என்னை விட்டு நீங்கிட உரிய பரிகாரம் சொல்லுங்கள் என்று வரகுணன் கேட்க, அவர்களும் அகப்பட்டுக் கொண்டான் அரசன் நம் வலையில் என்று பரிகாரங்களைக் கூறினர். என்ன பரிகாரம், அவை: சான்றோர்களுக்கு உணவளித்தல், அதாவது தண்டச் சோறுண் ணும் பார்ப்பு என்று பாரதி பாடினானே அந்தப் பார்ப்பனர்களுக்கு உணவளித்தல் ஒன்று.

    தமிழ் ஓவியா said...

    மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால், சிவன் ஆகியவர்களின் வடிவமான அரச மரத்தை வலம் வந்து தொடுவது இரண்டு.
    பசுக்களுக்கு அருகம்புல் கொடுத்தல் மூன்றாவது பரிகாரம்.

    வேதமந்திரங்கள் கூறி வேள்விகள் செய்தல் நான்காவது பரிகாரம்.

    புனிதம் நிறைந்தது என்று கூறப்பெறும் பசுவினுடைய மூத்திரம் உள்ளிட்ட பஞ்ச - கவ்யம் எனப்படும் அய்ந்து பொருட்களை உட்கொள்ளுதல் அடுத்தது.

    இது மட்டுமல்லாது பசு தானம், பூ தானம் - யாருக்கு? பார்ப்பனர்களுக்கு இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தனை செய்தும் அந்த பார்ப்பன தோஷம் விலக வில்லையாம்.

    மன்னனுக்கு மேன்மேலும் வேதனை அதிகரித்ததே தவிரக் குறையக்காணோம்.

    பார்த்தார்கள் பார்ப்பனர்கள். வேறு தீர்வு சொல்லுகிறோம் என்று மன்னரே நீங்கள் பத்து நாள்கள் பட்டினி கிடந்து நியமத் துடன் விரதம் இருந்து மதுரை சோமசுந்தரப் பெருமானை ஒவ்வொரு நாளும் ஆயிரத்து எட்டு முறை - ஆம்! ஆயிரத்து எட்டு முறை வலம் வாருங்கள் அவ்வாறு செய்தால் உங்களை விட்டு பிரம்மஹத்தி அகல்வ தற்கு மதுரையில் இறைவன் சோமசுந்தரக் கடவுள் உங்களுக்கு வழி காட்டுவார் என்று சொக்கநாதர் பக்கம் கை காட்டி விட்டார்கள்.
    அவ்வாறே வருந்தி வேண்டி அரசனும் தினமும் 1008 முறை வலம் வந்திருக்கிறான்.

    வழக்கம் போல் அந்நாளில் ஏதாவது விடிவு கிடைத்தது என்றால் அசரீரி ஒலித்தது என்று கூறுவார்கள். அசரீரி ஒலித்தால் சிவபெருமான் குரலே அசரீரியாக ஒலித்த தாம் மன்னா! வலம் வருவதற்கு நீ எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் ஓர் அசுவமேத வேள்வி செய்த பயன் தரும். நீ அத்தகைய ஆலய வலம் செய்தது எம்மை மகிழ்வித்தது. இனி நீ பயம் கொள்ள வேண்டாம். விரை வில் சோழமன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான். அந்தப்போரில் நீ வெற்றி பெறுவாய். சோழ மன்னனை நீ துரத்திச் செல்கையில் திருவிடைமருதூர் வருவாய். அங்கு பிரம்மஹத்தி உன்னை விட்டு நீங்கும்படி செய்வேன் என்று ஒலித்ததாம்.

    அதுபோலவே சோழ மன்னன் படை யெடுக்க அவனைத்துரத்திப் பாண்டியன் ஓடி திருவிடைமருதூர் திருத்தலம் சென்று காவிரியில் நீராடினான். பிறகு திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்குக் கிழக்கு வாசல் வழியே நுழைந்து மகா மண்டபம் சென்றான். அப்போது அது வரையில் வரகுணனைத் துரத்தி வந்த பிரம்மஹத்தி கிழக்குக் கோபுரம் நுழை வாயிலில் நின்று விட்டதாம். பிரம்மஹத்தி மேற்கொண்டு வரகுணனைத் தொடர முடியவில்லையாம்.
    மன்னன் கோயிலுக்குள் போய்க்கும் பிட்டபோது மறுபடியும் அசரீரி ஒலித்த தாம். பிரம்மஹத்தி உன்னை விட்டு நீங்கி விட்டது. அது இப்போது கிழக்குக் கோபுர நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. எனவே நீ கிழக்குக் கோபுரம் வழியாகத் திரும்பிப் போகாதே. மேற்குக் கோபுரம் வழியாகச் செல் என்று ஒலித்ததாம்.

    தமிழ் ஓவியா said...

    இதோடு அரசனின் மூடத்தனம் முடிந்து போய் விடவில்லை. திருவிடைமருதூரி லேயே ஒரு மாளிகை அமைத்துத் தங்கி உயரமான மேற்குக் கோபுரம் கட்டினான். மேலும் அங்குத் திருப்பணிகளும் செய்தான்.

    அரசன் மேற்குக் கோபுரம் கட்டியது, திருப்பணிகளும் செய்தது பக்தியினால் என்பது உண்மை. இதைப் பார்ப்பனர்கள் பிரம்மஹத்தி என்று கதைகட்டி இணைத் துக் கதை உருவாக்கியது தான் அவர்களின் திறமை. அத்தோடு முடிந்து போய்விட வில்லை. பிரம்மஹத்தி கிழக்குக் கோபுர வாயிலில் நின்றது என்றார்கள் அல்லவா? எனவே அங்கே பிரம்மஹத்தி என்று ஒரு சிலை வைத்து அதை வழிபட்டால் மன நோய், பேய் பிசாசுகளின் தொல்லை, துர் தேவதைகளின் தொல்லையிலிருந்து விடு படமுடியும் என்று ஒரு நம்பிக்கையையும் உருவாக்கி வைத்திருப்பதை இன்றும் காணலாம். வரகுணனின் பக்தி மடம் இதோடு நிறைவு பெற்றுவிடவில்லை.

    திருடனுக்கு விடுதலை

    ஒரு நாள் வீரர்கள் திருடன் ஒருவனைக் கைவிலங்கு போட்டு அரசன் முன் கொணர்ந்து நிறுத்தித் தண்டனை அளிக்க வேண்டினார். அரசன் திருடனை ஏறிட் டுப்பார்த்து இருக்கிறான். திருடன் நெற்றி யில் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்திருக்கிறான் பார்த்த வரகுணன் என்ன செய்தான் தெரியுமா? இவன் சிவபக்தன்; நெற்றியில் திருநீறு அணிந்திருக்கிறான். இவன் குற்றம் செய்திருக்க மாட்டான். இவனுடைய கைவிலங்குகளை நீக்குங்கள் என்று சொல்லித் தண்டனை அளிக்காது திருடனை விடுவித்தான்.

    நரிகளுக்குப் போர்வை

    மயிலுக்குப் போர்வை கொடுத்த சங்ககால அரசனையும், முல்லைக்குத் தேரை நிறுத்திய மன்னன் செய்தததையும் கொடை மடம் என்று பேசும் புலவர்கள் இந்த வரகுணன் செய்த செயலைக் கேள்விப் பட்டால் பக்தி மடம் என்று பாடியிருப்பர்.

    தமிழ் ஓவியா said...


    ஒரு வேளை இரவு நேரத்தில் நரிகள் ஊளையிடும் ஓசை கேட்டான், அதைக் கேட்ட அரசன் இந்த நரிகள் சம்போ! என்று சிவபெருமானை விளிக்கின்றன. சிவபெரு மானை அழைக்கும் இந்த நரிகளுக்குப் போர்வை அளியுங்கள் என்று அரசு அலுவலர்களுக்குக் கட்டளையிட்டானாம் இந்தப் பைத்தியக்காரன் வரகுணன்.

    தவளைகளுக்குப் பொற்காசு

    மற்றொரு நாள் வரகுணன் குவளை மலர்கள் பூத்திருந்த ஒரு குளத்திற்குச் சென்றான். அங்குத் தவளைகள் கர, கர, கர, கர என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தத் தவளையின் சப்தம் அவனுக்கு ஹர, ஹர என்று சிவனுடைய நாமம் உச்சரிப் பதாக இருந்ததாம். நல்ல வேளை தவளை களுக்குப் போர்வை போர்த்தச் சொல்ல வில்லை. அவ்வாறு போர்த்தியிருந்தால் தவளைகள் சிவ லோகம் போயிருக்கும்.
    அவன் அலுவலர்களை அழைத்து இந்தத் தவளைகள் அர, அர என்றும் சிவன் பெயர் சொல்கின்றன. ஆதலால் இந்தத் தவளைகள் இருக்கும் இடத்தில் பொற் காசுகள் தூவுங்கள் என்று கட்டளை யிட்டானாம். இதையெல்லாம் தூக்கி அடிக் கும் இன்னுமொரு மடத்தனம் இருக்கிறது.

    எள் திருடியவன்

    சிவபக்தர் ஒருவர் சிவலிங்கத்திற்கு நல்லெண் ணெய் அபிஷேகம் செய்ய வைத்திருந்த எள்ளை எடுத்துச் சாப்பிட்டவனை வரகுணபாண்டியன் முன் கொணர்ந்து தண்டனை அளிக்கக் கேட்டான். அரசன் முன் நிறுத்தப்பட்டவனை சிவகைங்கரியத் திற்குக் காய வைக்கப்பட்டிருந்த எள்ளைத் தின்றது தெரியுமா? என்று கேட்க அவன் ஆம் என்று சொல்ல அரசன் அவனைக் கொல்ல உடைவாளை உருவினா னாம் அப்போது குற்றவாளி அரசனிடம் அரசே! பொறுங்கள்! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். யாருடைய எள்ளையாவது திருடிச்சாப்பிட்டால், மறுபிறவியில் மாடாகப்பிறந்து எள்ளுக்கு உரியவருக்கு உழைக்க வேண்டும். நான் மறு பிறவியில் செக்கு மாடாகப் பிறந்து, சிவத்தொண்டு செய்ய விரும்பு கிறேன். சிவனுக்குக் காய வைத்த எள்ளை எடுத்துத் தின்றேன் என்றான்.

    அதைக்கேட்ட வரகுணன் என்ன செய்தான் தெரியுமா? இவன் மறுபிறப்பில் செக்கு மாடாகப் பிறந்து சிவனுக்குத் தொண்டு செய்ய நினைக்கிறேன் என்கிறான். நானும் மறுபிறவியில் செக்கு மாடாய்ப் பிறந்து சிவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்தான். அதனால் மன்னன் திருடியவனின் வாயைத் திறக்கச்சொல்லி, திருடன் வாயில் எச்சிலுடன் ஒட்டியிருந்த எள்ளை தன் விரலால் எடுத்துச் சாப் பிட்டானாம், எவ்வளவு மூட பக்தி.
    வேப்ப மரத்திற்குப் பொன் விதானம்

    ஒரு நாள் வரகுணபாண்டியன் வேப்ப மரங்கள் இருந்த இடத்தைப் பார்த்தான். மரத்திலிருந்து கீழே விழுந்த வேப்பம் பழங்கள் மண்ணில் பாதி புதைந்து இருந்தன. அதை பார்த்த வரகுணன் இந்த வேப்ப மரங்கள் சிவலிங்கம் தந்திருக்கின்றன. அதனால் இந்த வேப்ப மரங்களுக்குப் பொன்னால் விதானம் அமை யுங்கள் என்று அரசு அலுவலரிடம் கூறினான்.

    இப்படியெல்லாம் செய்த வரகுணன் சிவலோகம் காண விரும்பிச் சிவ லோகத்தில் சிவ பெருமானைக் கண்டான் என்று கதை செல்கிறது. வரகுண பாண்டி யனின் இந்தக் கதைகள் எல்லாம் நம் கப்சா அல்ல. திருவிளையாடல் புராணம் விட்ட கதை, பட்டினத் தாரின் திருவிடைமருதூர் மும் மணிக்கோவை சிந்திய மூடநம்பிக்கைக் கதைகள் தாம்.

    Read more: http://viduthalai.in/page2/78159.html#ixzz2y4ETG22B

    தமிழ் ஓவியா said...


    மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி


    நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது புரிந்து கொண்டேன் இங்கே மக்கள் மிகவும் பயமுள்ளவர் களாக வாழ்கின்றனர், இது எல்லாம் நரேந்திரமோடியால் வந்தது, இந்து மக்களின் நலனிற்காக பாடுபடுவதாக கூறும் நரேந்திரமோடி கூறுகிறார். ஆனால் இங்கு பல இந்துக்கள் வாழ்வா தாரமின்றி இருக்கிறார்கள்.

    தவறு செய்தவர்களை தூக்கிலிடுங்கள், ஆனால் எந்த தவறும் செய்யாத ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் குறித்து மோடி இன்றுவரை பேசுவதே இல்லை, இவர்கள் வழக்குகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அவர்கள் ஏன் சிறையில் வாழ்கிறார்கள். அவர்களின் வழக்கின் நிலை என்ன மோடியின் சிறந்த நண்பரான அருண் ஜெட்லி தலைசிறந்த வழக்கறிஞரும் கூட அவரிடம் கேட்கிறேன். இவர்களின் வழக்கு குறித்து இந்த மாநிலத்தின் முதல்வர் என்றாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா?

    நான் இந்தியா முழுவதும் சென்று பார்த்துவிட்டேன், குஜராத்தைப்போன்று பயத்துடன் வாழும் மக்களை நான் பார்க்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப் பில்லை, கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது குஜராத் தற்போது யீமீணீக்ஷீ றீமீ ணீமீ என்பதற்கு பதிலாக திமீணீக்ஷீ க்ஷீவீளீவீஸீரீ ணீமீ பய மற்ற மாநிலத்திற்கு பதிலாக சாதாரண குடிமகன் பயத்துடன் வாழும் மாநிலமாக மாறிவிட்டது.

    குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று ஊர் ஊருக்கு சென்று கூவிக்கொண்டு இருக் கிறாரே, இது முழுவதும் பொய், நான் சரியான வேலை யின்றி வாழவழியின்றி நிராதரவாக நிற்கும் குஜராத்திகளை ஆயிரக்கணக்கில் நான் காண்பிப்பேன். மோடி விகாஷ் புருஷ் அல்ல, அவர் வினாஷ் புருசர், நான் நரேந்திர மோடியை 1972-லிருந்து அறிவேன் அதனால் தான் நான் அவரை நான் வினாஸ் புருசன் என்று கூறுகிறேன். ஊடகங்கள் அவரது பொய்யை அதிகமாக பரப்பி பலூன் போல் ஊதிப்பெரிதாக்கி விட்டார்கள், அந்தக் காற்றை பிடுங்கி மோடியை பஞ்சராக்கவேண்டியது தான் இனி ஊடகங்கள் வேலையாக இருக்கவேண்டும் என்று அகமதாபாத்தில் (30.9.2013) பேசினார். பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி.

    (Daily Bhaskar - Hindi Daily 1.4.2014).

    Read more: http://viduthalai.in/page3/78162.html#ixzz2y4F1tLoQ

    தமிழ் ஓவியா said...


    இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு


    கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ் வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப் பெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக் கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ் ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ் வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

    Read more: http://viduthalai.in/page3/78163.html#ixzz2y4FBvp9H

    தமிழ் ஓவியா said...


    பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்!


    அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல் களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். "நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட் இப்படி தான் இங்கு காவல்துறை செயல் படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் தெகல்கா இணையதளத்திற்கு வழங்கிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.

    UAPA என்றழைக்கப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Un lawful Activitiess Prevention Act, 1967) கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி அன்று, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மக்களவையில், விரிவான விவாதங்களை அனுமதிக்காமல், 3- ஆவது முறையாக திருத்தியுள்ளது மத்திய அரசு. சட்டம் இயற்றப்பட்டது 1967இல் தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் மட்டுமே, மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசின் சட்டப்பூர்வ பயங்கரவாத சாதனை. இச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டமாகும். முதல் திருத்தம், 2004 ஆம் ஆண்டு. தடா, பொடா ஆகிய கருப்புச் சட்டங்களில் இருந்த கொடும் பிரிவுகள், யு.ஏ.பி.ஏ - வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன, பிறகு தடா, பொடா சட்டங்கள் நீக்கப்பட்டது அரசின் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது நாட்டில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-ஆவது முறையாக இச் சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறினால், 2004இல் தேர்தலில் வெற்றி பெற, "பொடாவை ரத்து செய் வோம்" என வாக்குறுதியளித்த காங்கிரசு கட்சி, ஆட்சியமைத்தவுடன், பொடாவை ரத்து செய்து, யு.ஏ.பி.ஏ என்ற பெயரில் மீண் டும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது.

    கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association), போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் மறுக்கப் படுவது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக ஒருவர் முணுமுணுத்தாலே காவல்துறை அவர்களை கைது செய்யலாம் என்கிற அளவுக்கு மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவது, அரச பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியாகும். உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு என்று நாம் பெருமிதம் கொள்வோம். யுஏபிஏ சட்ட விதிகள்:

    * 'பொடா' சட்டத்தைப் போலவே, இச் சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப் பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில் வைத்து கொடுமைப்படுத்த முடியும்.


    தமிழ் ஓவியா said...

    * பயங்கரவாத சம்பவங்கள் நடை பெற்ற இடத்தில், குற்றம் சாட்டப்பட்ட வரின் கைரேகையோ அல்லது வேறு ஏதேனும் தடயங்களோ இருந்தாலும் கூட, அவரை குற்றவாளி என காவல்துறை கருதி, கைது செய்ய முடியும். மேலும் தான் நிர பராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.

    * ஒரு புலனாய்வுக்கு தொடர்புடையது எனக்கருதி காவல்துறை விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண் டும். இல்லையேல் இச்சட்டப்படி, தகவல் தர மறுப்பவரை கைது செய்ய முடியும். * தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவரைக் கைது செய்ய காவல் துறைக்கு எல்லையற்ற அதிகாரம் வழங் குகிறது.

    தமிழ் ஓவியா said...

    * குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கர வாத இயக்கத்தின் உறுப்பினரா, இல் லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல் லாததால், அவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்/இருக்கலாம் என்று குற்றம் சாட்டி, யாரை வேண்டுமா னாலும் காவல்துறை கைது செய்யலாம்.

    இந்திய அரசியலைப்புச் சட்டம் வகுத் துள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியின ருமே கைது செய்யப்படுகின்றனர். 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு நூற்றுக்கணக்கான கைது சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூரில் 'தீக்சா' என்னுமிடத்தில் தான் அம்பேத்கர், லட்சக்கணக்கான தலித்துகளோடு புத்த மதத்தைத் தழுவினார். இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் தலித் மக்கள், வருடம் முழுமையும் திக்சாவிற்கு பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில், திக்சாவிற்கு செல்லத் திட்டமிட்டு, மஹாராஷ்டிரா விரைவு ரயிலில் ஏறிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். காரணம் பெரிதாக ஒன்று மில்லை. அந்நால்வரில் ஒருவரான அனில் மமானே ஒரு தலித் எழுத்தாளர். அவரிட மிருந்தது கயர்லாஞ்சி பற்றி அவரே எழு திய ஒரு புத்தகம் இருந்தது, அதை மக்களிடம் பரப் புரை செய்து வந்த அவரது மாணவரான தின்கர் கைது செய் யப்பட்ட இரண் டாம் நபர்., இதில் வேடிக்கை என்ன வென்றால் கைது செய்யப்பட்ட மற்ற இருவரும், இவர் களுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள், அவர்கள் செய்த ஒரே குற்றம் அந்த பெட்டியில் பயணம் செய்தது. இவர்களெல்லாம் நக்சல் இயக்கங்களுக்கு உதவி செய்பவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    தமிழ் ஓவியா said...

    கைது செய்த காவல்துறை இவர்களி டம் கேட்ட கேள்வி, "அம்பேத்கரியவாதி கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னுமொரு 1857 ஐ உருவாக்கப் பார்க்கிறீர்களா? " . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, இன்னொரு அம் பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா? என்று அடித்தது காவல்துறை. இந்துத் துவத்தின் கொடிய கரங்கள் அரச இயந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிறு பான்மையினரும், தலித், பழங்குடி மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டி யவர்கள். இதே போல சந்திராப்பூர் என்ற ஊரில் மாணவர்களுக்கு பகத் சிங், ஜோதிபா பூலேவைப் பற்றி பாடம் எடுத்ததற்காக பத்து மாணவர்கள் கைது செய்யப்பட் டார்கள். கைது செய்யப்பட்டதற்கான காரணம் பக்த் சிங் பற்றி பாடம் எடுப்பதன் மூலம் இவர்கள் நக்சல்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றார்கள் என்றது காவல்துறை, அதாவது பகத்சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதத்தை (அன்றைய சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்) பயன்படுத்தினார், பகத்சிங்கை படித்து அவரது கொள் கைகளில் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டால் அவர்களும் ஆயுதம் தாங்கிய புரட்சியை நோக்கி செல்வார்கள் என்கிறது காவல்துறை. இப்படியாகத் தான் பகத் சிங்கும் இந்தியாவில் தடை செய்யப்பட் டிருக்கிறார். சமூகப்போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டதும் இதே யு.ஏ.பி.ஏ சட்டத்தின் வாயிலாகத் தான்.

    பினாயக் சென் ஒரு மாவோயிசுட்டு ஆதரவாளர் என்பதற்கு காவல்துறை பினாயக் சென் வீட்டில் இருந்து கைப் பற்றிய(!) கார்ல் மார்க்சு எழுதிய மூலதனம் நூலை நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டியது. இதுபோன்ற ஆதாராங்களை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசத் துரோகி எனக் கூறி ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

    தமிழ் ஓவியா said...

    பெங்களூர் மல் லேஸ்வரம் குண்டு வெடிப்பில், தமிழக இஸ்லாமிய இளை ஞர்கள் கைது செய்யப்பட்டதும் இதே யுஏபிஏ சட்டத்தின் மூலமாகத் தான். அப்துல் நாசர் மதானி, கர்நாடக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் எந்த வித விசாரணையுமின்றி, குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டு கொண்டி ருப்பதற்கு காரணமும் யுஏபிஏ தான். கர்நாடக நீதிமன்றம், யுஏபிஏ அடிப் படையாகக் கொண்டே மதானிக்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்து வருகி றது. அதே நேரம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப் பளிக்கப்பட்ட சஞ்சய் தத்தோ மூன்றாம் முறையாக பிணையில் வெளிவந்து படங் களில் நடித்து வருகின்றார். ஒருபுறம் ஒன்பது ஆண்டுகளாகியும் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படாமல் பிணை மறுக்கப்படும் மதானி , மறுபுறம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் தொடர்ந்து பிணை வழங்கப்படும் சஞ்சய் தத். இப்படி தான் இங்கே நீதி (!) இருக் கின்றது.

    மக்கள் விரோத அரசுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் "பயங்கரவாத, தேசவிரோத, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான" நடவ டிக்கைகளாக அடையாளப்படுத்துதலே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் நோக்கமாக இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கிலும், காஷ்மீரிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தின் மூலம் இந்திய இராணுவம் அம்மக்களை தெருநாய்களைப் போல சுட்டுக் கொல்வதையும், பெண்களை பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்குவதை யும் பொழுதுபோக்காகச் செய்து வருகிறது. அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பதினோரு ஆண்டுகளாக உணவை மறுத்து போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா. மக்களின் சமூக, பொருளியல், வாழ் வாதார பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வைக் காணாமல், அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் தீர்வு காண எத்த னிக்கும் ஆளும் அரசுகளை போராடித் தான் பணிய வைக்க வேண்டும். தடா, பொடா, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வடைந் திருக்கும் நாம், யுஏபிஏ போன்ற சட்டங் களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டி யதும் அவசியமாகிறது. இத்தகைய அடக்குமுறை சட்டங்களை முறியடிக்க, தொடர் பரப்புரைகளும், கருத்தரங்கு களும் அதையொட்டிய மக்கள் போராட் டங்களையும் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

    - அ.மு.செய்யது, சேவ் தமிழ்சு இயக்கம்

    Read more: http://viduthalai.in/page4/78164.html#ixzz2y4FPydAZ

    தமிழ் ஓவியா said...


    பாஜகவிற்கு 10 கேள்விகள்


    - பொறியாளர் ப.கோவிந்தராசன்

    முன்னுரை: 2014 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 206 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் 116 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று ஊடகங்கள் பல கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு ஊட கங்கள் சொல்லும் ஒரே காரணம், தற்போது பாஜக வின் பிரதமர் வேட்பாளர் திருவாளர் மோடி அலை வீசுகின்றது. இந்த மோடி அலை என்றைக்கு ஆரம்பித்தது? ஏன் முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு அலை வீச வில்லை? ஏன் இரண்டாவது பெரிய தேசிய கட்சியான பாஜகவிற்கு அலை அடிக்கவில்லை? இராமர் கோவிலை இதுவரை கட்டாத பாஜவிற்கு எப்படி அலைவீசும்? மோடிக்கு மட்டும் அலை வீசக்காரணம், மோடியை தேர்வு செய்த ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகளும் நாட்டின் பொருளா தாரத்தை ஆட்டிப்படைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்துவரும் தவறானப் பிரச்சாரமே ஆகும். அப்படி என்ன மோடி சாதித்துவிட்டார்? சென்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தைல் உள்ள 26 இடங்களில் 15 எம்பிக்களே வெற்றி பெறமுடிந்தது. அதே சமயத்தில் கர்நாடாகாவில் 28 இடங்களில் 19 எம்பிகள் வெற்றிப் பெற்றனர். 19 எம்பிகளை கொண்ட பாஜக சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில் வெற்றிப் பெறவில்லை. முதல்வராய் இருந்த எடியூரப்பா ஊழல் வழக்கில் பதவியை இழந்தார் எனவே மதவாத கட்சியான பாஜகவில் ஒரு தனி மனிதனுக்கு அலை வீசும் வாய்ப்பே இல்லை. மேலும் காங்கிரசில் தான் இதுவரை நேரு குடும்பத்தைச் சார்ந்த தனிமனிதர்களை புகழ்வது வழக்கம். நேரு குடும்பத்தைக் கண்டிக்கும் பாஜக மோடியைப் புகழ லாமா?
    இந்நிலையில் இரண்டாவது பெரிய தேசியக் கட்சியான பாஜகவிற்கு (மோடி யின் தலைமை நிரந்தரம் இல்லை) 10 கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

    1. அத்வானி போன்ற தலைவர்களை புறக்கணிப்பதைக் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் ஏன் தரவில்லை?

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது சர்வாதிகார ஆட்சி நடக்கும் இரும்புத்திரை நாடு அல்ல. இங்கு ஊடகங்களுக்கு கருத்துச் சொல்ல சுதந்திரம் உள்ளது. மேலும் தகவல் அறியும் சட்டம் நடை முறையில் உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் நேரு குடும்பத்தின் கைப்பாவையாக விளங்குகிறார் என்று குற்றம் சாட்டிய பாஜக தற்போது அத்வானி அதிகாரம் படைத்தவரா அல்லது திரை மறைவு சக்திகளின் கைப்பாவையா என்பதை விளக்க வேண்டும். தற்போது முன் நிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாள ருக்கு அத்வானிக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படுமா?

    2. கட்சியின் மூத்த தலைவர்களை களை எடுப்பதற்கு தோல்விபயம் தான் காரணமா?

    காங்கிரசுக்குத் தோல்விபயம், வந்து விட்டது என்று கூறிவரும் பாஜக தன்னுடைய கட்சியில் உள்ள மூத்தத் தலைவர்களை தொகுதி மாறி போட்டியிடச் செய்வது ஏன்?


    தமிழ் ஓவியா said...

    3. புது தில்லியில் மூத்த தலைவர்கள் போட்டியிடத் தயங்குவதேன்? தோல்வி பயமா?

    4. தமிழ் ஈழம் பற்றி அகில இந்திய பாஜகவின் நிலைப் பாடு என்ன?

    தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில கட்சிகள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றன. தற்வோது தமிழ் நாட்டில் மாநிலக் கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைத்திருக்கும் பாஜக தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றதா அல்லது ராஜீவ் காந்தி 1987 இல் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 13ஆவது அரசி யல் சட்ட திருத்தத்தை வலியுறுத்துமா? இலங்கை யுடன் ராஜீவ் காந்தி செய்து கொண்ட விவரங்கள் கீழே தரப்பட் டுள்ளது.
    தமிழ் ஈழம் கோரிய போராளிகளுக்கும் அப்போதைய இலங்கை அரசுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப் போராளி களின் சம்மதம்இல்லாமலேயே ஒரு தலைப்பட்சமாக, இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை 1987ல் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கினார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் 1987இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதன் நோக்கம் போராளிகளிடமிருந்து ஆயுதங் களைப் பறித்து சரணடைய செய்வது ஆகும். இதற்கு இந்திய அரசால் நிர்ணயிக் கப்பட்ட காலக்கெடு 48 மணி நேரம் ஆகும். ஆனால் இந்தியப் படை ஜூலை 1987 முதல் மார்ச் 1990 வரை சுமார் 33 மாதங்கள் ராணுவ நடடிக்கைகள் தொடர்ந் தும் ஒப்பந்தபடிமா காண சபை உருவாக் கப்படவில்லை மற்றும் மாகாண சபைக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும் இந்திய ராணுவத்தை சார்ந்த முப்படையினர் சுமார் ஒரு லட்சம் வீரர்களை இந்தியா அனுப்பியது (ஆதாரம் வீக்கி பீடியா) இந்த ராணுவ நடவடிக்கை யின் போது பல யுத்த தந்திரங்கள் செயல் படுத்தப்பட்டன. அவை ஆபரேஷன் பூமாலை, ஆபரேசன் பவன், ஆபரேசன் விராட், ஆபரேசன் திருசூல் மற்றும் ஆபரேசன் செக்மேட் ஆகும். இவ்வாறு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளால் உயிர்ச்சேத மும் பொருள் சேதமும் காலவிரயமும் ஏற்பட்டதே ஒழிய தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை. ராஜீவ்காந்திக்குப் பின்னர் வந்த பாஜக அரசோ அல்லது காங்கிரஸ் அரசோ இந்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை. இந்த உடன்படிக்கையைப் பற்றி பாஜகவின் தற்போதைய நிலை என்ன? தற்போது அதிபர் இராஜபக்சே அமைதிப் படையினரால் ஏற்பட்ட உயிர் சேதத்தை விசாரிக்க விசாரணை கோருகிறார் என தகவல். இவ்வாறு 1987இல் மற்றும் 2009இல் என்று தமிழர்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கொல் லப்படுவதை பாஜக தடுக்குமா?

    தமிழ் ஓவியா said...

    5. கச்சத் தீவுப் பிரச்சினையில் அகில இந்திய பாஜகவின் நிலைப் பாடு என்ன?

    தற்போதுதமிழ்நாடு அரசு கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றி உள்ளது. மேலும் திமுகவினர் கச்சத்தீவு இலங் கைக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட் டதை செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் காங் கிரஸ் ஆளும் மத்திய அரசு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்ற நிலைப்பாட் டில் உள்ளது. மேலும் கச்சத்தீவுப் பிரச் சினயை வெறும் மீனவர் பிரச்சினையாகக் கருதுகின்றது. காங்கிரஸ் நிலைப்பாட் டிற்கு எதிராக பா.ஜ.க. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமா?

    6. சேது சமுத்திர திட்டம் குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன?

    சேது சமுத்திரக் கால்வாய் அமைப்ப தற்கான நேர்பாட்டு வழியை 1999ல் அமைந்த பாஜக ஜஅரசு தேர்வு செய்தது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசு தோழமைக் கட்சியான திமுகவின் வேண்டுகோளை ஏற்று திட்டத்தைத் துவக்கியது. ஆனால் இந்தத் திட்டம் தற்போது உச்சநீதிமன்றத் தால் தடை ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதில் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவினர் இராமர் பாலத் தில் உள்ள மணல் திட்டுகளை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள் ளனர். இராமாயணத்தில் நளன் என்னும் வானரம் கட்டியதாகச் சொல்லப்படும் மிதக்கும் கற்களால் கட்டப்பட்ட இராமர் பாலம் தற்போது இல்லை; மிதக்கும் பாறைகளும் காணப்படவில்லை. தற் போது உள்ள மணல் திட்டுக்களை தேசிய சின்னமாகக் கருதுமா அல்லது இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்குமா? பாஜகவின் நிலைப்பாடு என்ன?

    தமிழ் ஓவியா said...

    7. விலை உயர்வைக் குறைக்க நட வடிக்கை எடுக்கப்படுமா?

    தற்போதுள்ள மத்திய அரசு, பெட் ரோல் டீசல், சமையல் வாயு உருளை ஆகியவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தியது. பாஜக மய்ய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் விலைவாசியை 1999ல் இருந்த நிலைமைக்கு கொண்டு வருமா? மேலும் சமீபத்தில் டில்லியில் முதல்வராய் இருந்த கெஜ்ரிவால் மின்சாரக் கட்டணம் குடி தண்ணீர் கட்டணம் ஆகிய வற்றை குறைத்தார். மேலும் பெட் ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்திற்குக் காரணமாய் இருந்த தனியார் நிறுவனங்கள்மீது உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது போன்ற நடவடிக்கைகளை பாஜக எடுக்குமா?

    8. தமிழகத்திற்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கப் படுமா?

    9. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்துப் பாஜக வின் நிலைப்பாடு என்ன?

    அன்னிய நாடு மற்றும் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அயல் நாட்டினர் சிலரை கட்டாயமாகப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதைப் போன்று மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை நிறைவேற்றும் எல்லா தனியார் நிறுவனங்களும் இட ஒதுக்கீடு முறையை கடைப்பிடிக்க வேண் டும் என வற்புறுத்தலாம். இவ்வாறு செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கலாம். மேலும் நிதி வழங்குவதை நிறுத்தி வைக்கலாம். அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?

    10. ஊழலை எதிர்க்கும் ஆம்ஆத்மி கட்சியை ஆதரிக்காமல் பாஜக எதிர்ப்பது ஏன்? ஏதேனும் உள் நோக்கம் உள்ளதா?

    முடிவுரை: பாஜகவிலும் பதவிக்கான சண்டைகள் நடக்கும் என்பதனை இக் கட்டுரை மூலம் அறியலாம். இந்தக் கருத் தினை புதிய மற்றும் இளைய தலை முறைக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.

    Read more: http://viduthalai.in/page4/78165.html#ixzz2y4FtCXlc

    தமிழ் ஓவியா said...


    இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்

    இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

    அந்த ஆய்வில் இந்தியாவில் பெண் களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது.

    பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்த மாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 19 நிமிடங்கள் மட்டுமே தினமும் வீட்டு வேலை செய்கிறார்களாம்.

    அதுவும் வீட்டில் அவர்கள் தொடர் புடைய வேலைகளுக்குத்தான் அந்த 19 நிமிடங்களை செலவிடுகிறார்களாம். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண்களில் 90 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.

    வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் ஆண்களும், பெண்களுக்கு உதவும் வகையில் எந்த வேலையும் செய்து கொடுப்பது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆண்கள் தினமும் 11 மணி நேரத்தை தங்கள் வேலை மற்றும் தங்கள் பொழுது போக்குக்கே செலவிடுகிறார்களாம்.

    50 சதவீத ஆண்களுக்கு தூங்குவது, சாப்பிடுவது, அரட்டையடிப்பது, மது குடிப்பது போன்ற வகைகளில் தினசரி நேரம் கழிந்து விடுகிறதாம். இந்தியாவில் ஆண்கள் இப்படி இருப்பது சமூக கலாச் சாரமாக ஆழமாக வேருன்றி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    ஆண்கள் இப்படி சுய நலத்துடன் இருக்கும் நிலையில் பெண்கள்தான் பொறுப்புடன் குடும்ப சுமையை சுமப்ப தாக தெரிய வந்துள்ளது. சமையல், துணி துவைப்பது, வீட்டை ஒழுங்குப்படுத்து வதை பெண்கள் மட்டுமே செய்வதாக கருத்து கணிப்பு சொல்கிறது.

    இத்தனை வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை கவனிப்பதும் பெண்கள் வேலையாக உள்ளது. நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் கூறப்பட் டுள்ளது.

    ஜப்பானில் ஆண்கள் தினமும் 24 நிமிடமும், கொரியாவில் 21 நிமிடமும், சீனாவில் 48 நிமிடமும் வீட்டு வேலை செய்கிறார்கள்.

    உலகிலேயே ஆண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்வது ஸ்லோவேனியா நாட்டில்தான். அந்நாட்டு ஆண்கள் தினமும் 114 நிமிடம் வீட்டு வேலை செய்கிறார்கள்.

    டென்மார்க், எஸ்தோனியா நாட்டு ஆண்களும் பெண்களுக்கு உதவும் வகை யில் வீட்டு வேலைகள் செய்து கொடுக் கிறார்களாம். மற்ற நாடுகளில் பெரும் பாலும் வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டியதுள்ளது.

    Read more: http://viduthalai.in/page8/78171.html#ixzz2y4Gwo39O

    தமிழ் ஓவியா said...


    இராமன் கோயில் மக்கள் மனமாற்றம்!


    ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பஞ்சன்யத்தில் ராமர்கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டிருந்தது, இதில் பெரும்பான்மை யானோர் ராமன் கோவில் விவகாரத்திற்கு கருத்து தெரிவிக்கவில்லை.

    இதன் மூலம் ராமன் கோவில் பிரச் சினையால் அரசியல் லாபம் காண முடியாது, ராமன் கோவில் விவகாரம் முன்பு ஆட்சியைக்கைப்பற்றும் ஒரு துருப்பு சீட்டாக இருந்தது, ஆனால் தற்போது அது செல்லாக்காசாகிவிட்டது, என தாமதமாக புரிந்துகொண்டது. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கணிப்பை தொடர்ந்து பிரபல இந்தி ஊடகமான தைனிக் பாஸ்கரும் இராமன் கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத் துக்கணிப்பு நடத்தியது.

    இதில் ராமன் கோவில் எங்களுக்குத் தேவையில்லை என்றே 70 விழுக்காடு மக்கள் பதிலளித்து இருந்தனர். உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, பிகார் போன்ற மாநிலங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில் 40விழுக்காடு மக்கள் ராமன் கோவில் விவகாரம் முடிந்து போன ஒன்று என பதிலளித்தனர். மேலும் தேர்தல் சமயங்களில் பாஜக வும் அதன் தாய் அமைப்பான இந்துத்துவா குழுக்களும் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து பெரும்பான்மை இந்துக் களின் ஓட்டுக்களை பெறுவதற்கு இது வரை பயன்படுத்தினர், இனி அவர்களின் ராமன்கோவில் நாடகம் செல்லாது என்றனர்.

    30 விழுக்காடு மக்கள் மதம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ள வில்லை, நாடு இருக்கும் நிலையில், மதப்பிரச்சினைகள் என்பது ஓட்டுவாங்க ஒரு சாதனமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது, கோவில் கட்டுவதால் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை குறைந்துவிடுமா, அல்லது தொழில் வளர்ச்சி பெற்றுவிடுமா? இன்றைய சூழலில், உலக நாடுகளுடன் போட்டி போட ஏற்றுமதித் தொழிலை ஊக்கப்படுத்தும் அளவில் ஏதாவது முக்கியத் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் அதை விட்டுவிட்டு ஆட்சியில் அமர மாத்திரம் இராமன் கோவில் இந்து முஸ்லீம் பிரச்சினைகளை கிளப்பி ஆட்சியில் அமர்ந்த பிறகு அடுத்த தேர்தல் வரை நாட்டு நலனை மறந்து நாடாளு மன்றத்தில் சண்டையிடுகின்றனர் என்று பதிலளித்தனர். பாரதீய ஜனதா கட்சி தற்போது தேர்தல் அறிக்கை தயார் செய்துகொண்டு இருக்கிறது, தனது தேர்தல் அறிக்கையில் இராமன் கோவில் விவகாரம் முக்கிய பங்குவகிக்கும் என்று தேர்தல் பணிக்குழு தலைவர் மனோகர் ஜோஷி சில நாட் களுக்கு முன்பு பதிலளித்திருந்தார். தற் போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிந்த நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
    லாபம் வேண்டுமென்றால் இராமன் வேண்டும், நட்டம் ஏற்படும் போது நட்டாற்றில் வீசுவதுதானே காவிகளின் வேலை?
    - சரவணா இராசேந்திரன்

    Read more: http://viduthalai.in/page7/78167.html#ixzz2y4HJWH6D

    தமிழ் ஓவியா said...


    சுயமரியாதை ஆத்திச்சூடி



    அறிவிற் சிறந்தது பகுத்தறிவாகும்
    ஆன்மீகம் என்பது அறியாமையின் குழந்தை
    இளஞ்சிறார் ஏற்றமடைய பெரியார் பிஞ்சு
    ஈகை என்பது இல்லார்க்குக் கொடுப்பது
    உண்மை படித்தறிவது உயர்வுக்கு வழி
    ஊசி மிளகாய் பார்ப்பானுக்கு படுகாரம்
    எல்லோரும் கற்பது பார்ப்பானுக்குப் வயிற்றெரிச்சல்
    ஏர் உழுவது பாவத் தொழிலாம் பார்ப்பானுக்கு
    அய்யாவின் வாழ்வியல் சிந்தனை அருமருந்தாகும்
    ஒற்றுமையைக் குலைப்பது மதவெறியாகும்
    ஓங்கி ஒலிக்கட்டும் சாதி மறுப்புக் குரல்!

    - இரா. இராசாராம், பெங்களூரு -43

    Read more: http://viduthalai.in/page7/78169.html#ixzz2y4HXZwZm

    தமிழ் ஓவியா said...


    ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு


    சன் டி.வி., செய்தியாளர் விழுப்புரத்தில் கைது

    29.6.2001இல் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களைக் கைது செய்துவேப்பேரி காவல் நிலையத்தில் அடைப்பு.

    12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதா கிருட்டிணன் சாலை விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு பத்திரிகை யாளர்களை கண்மூடித் தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து புகைப்படக்காரர் மூர்த்தி, தினமணி புகைப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. புகைப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்பட்டன.

    ஜெவுக்கு எதிராக எழுதியதற்காக இந்து பதிப்பாசிரியர் சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகியோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.

    இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளி யிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.

    சந்தன வீரப்பன் சம்பந்தமான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக்கழித்துக் கொடுமைப்படுத் தினார்கள்.

    இந்து ஏட்டின்மீது 17 வழக்குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.

    நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.

    130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத் திரிகையாளர்கள்மீது தொடரப்பட்டன.

    இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகை களில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டப்பட்டிருக் கிறது. காரணம், இரத்தம் தண்ணீரை விட கெட்டி யானது கடந்த மாதம் காஞ்சீபுரத்திலே, செய்தியாளர், தொலைக்காட்சியினர் தாக்கப்பட்டது (19.3.2014) ஜனநாயகத்தின் நான்காவது தூணே ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளானது.

    இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? சிந்திப்பீர்!

    Read more: http://viduthalai.in/e-paper/78274.html#ixzz2y9akTw32

    தமிழ் ஓவியா said...

    எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!

    தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1

    தமிழ் ஓவியா said...


    தேர்தல் துணுக்குகள்


    வேட்பு மனு

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு வேட்பு மனு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1318.

    தடை

    மக்களவைத் தேர்தலில் முதல் வாக்கெடுப்பு நாளை தொடங்கி 9 கட்டமாக மே 12ஆம் தேதி முடிவடை கிறது. நாளை திரிபுராவில் தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    மீறல்கள்

    சென்னையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் 55064.

    தண்டனை

    வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கப் பட்டால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.

    ரஜினியிடம் கெஞ்சல்

    சரியான நேரத்தில் சரியான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

    பரிதாபம்: தங்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்க முடியாதவர்கள் சினிமாக்காரர்களிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்களின் பரிதாப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

    வைகோ கிண்டல்!

    அரிஸ்டாடிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதா வாகத்தான் இருக்க முடியும் என்று வைகோ கிண்டல் அடித்துள்ளார். தென் சென்னை பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: அரிஸ்டாட்டிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதாதான்! ஏனென்றால் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைய ஓட்ட ளியுங்கள் எனப் பேசி வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்களோ ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.

    40 தொகுதிகளை வைத்துக் கொண்டு எப்படி பிரதமராக முடியும்? ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கடைசி வரை காக்க வைத்து கழுத்தறுத்தவர் என்று வைகோ பேசியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/e-paper/78278.html#ixzz2y9bSBj5E

    தமிழ் ஓவியா said...


    மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்


    யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)

    பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

    ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.

    இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

    இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

    மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.

    எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.

    - பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை

    Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup

    தமிழ் ஓவியா said...


    தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தாரீர்! கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேண்டுகோள்


    கோவை, ஏப்.6- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கட்டளைகளை நிறைவேற்றிட அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டார்.

    இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த கோவைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் பேசிய தாவது:-

    இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்பு களைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடு பட்டார்கள் என்றால், அவர் களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத்தான் அவர்கள் பாடுபட் டார்கள், பணியாற்றினார்கள்.

    நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பு எனக்கு முன்னால் பேசிய தம்பி ஒருவர், 91 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதி என்று குறிப்பிட்டார். எனக்கு 91 வயது என்பதை வெளியிலே சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. அதிலும் என்னு டைய துணைவியாரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னுடைய வயது 91 என்பதை உரக்கச் சொல்வதிலே கொஞ்சம் கூச்சம்தான்.

    ஆனால், 91 வயதில், தள்ளாடும் பருவத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்). என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்) என்னுடைய சுயமரியாதை உணர்வுக்கு தள்ளாட்டம் ஏற்படக் கூடாது (பலத்த கைதட்டல்) என்பதிலே நான் தந்தை பெரியார் வழியிலே, அண்ணா வழியில் சிந்தித்து அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்).

    திராவிட முன்னேற்றக் கழகம் நான் தொடக்கத் திலே குறிப்பிட்டதைப்போல, ஒரு இன எழுச்சி இயக்கம். நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளைய அண்ணன் பேராசிரியர் அன் பழகனார் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தி லெல்லாம், இந்த இயக்கம் தொடங்கியது அதிகாரங் களைப் பெற அல்ல.

    இந்த இயக்கம் தொடங்கியது தமிழர்களைக் காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற பல கருவூலங்களை அகழ்ந்து எடுப்பதற்காகத்தான் இந்த இயக்கம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல நீங்களும் கேட்டிருக் கிறீர்கள். நானும் கேட் டிருக்கிறேன்.

    அந்த உரையை ஏடுகளிலே படித்தும் இருக் கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இன்றைக்கு உங் களை யெல்லாம் நான் நாடியிருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் வளர்க்க வேண்டும், தேர்தலிலே நான்கு பேரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியா வினுடைய பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.

    தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும், தமிழன் என்றால் அவன் யாரையும் தலை தாழ்த்த மாட்டான், அவனும் தலை தாழ மாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கம் அன்றுதொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது, பணியாற்றி வருகிறது.

    அப்படிப்பட்ட அந்த இயக்கத்திற்கு தலைவராக கிடைத்த - தளபதியாகவும் விளங்கிய நம்முடைய அருமை அண்ணா, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைந்த பிறகும் அவர் ஏற்றி வைத்த அந்தச் சுடர் விளக்கு அணை யாமல் காப்பாற்றுகின்ற அந்தப் பெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்றால், என்னை மாத்திரம் நம்பி அல்ல, என் உயிரினும் மேலான உடன்பிறப் புக்களே (பலத்த கைதட்டல்) உங்களையெல்லாம் நம்பித்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.

    அப்படிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஒரு கட்டம். இந்த மக்களுக்கான ஒரு ஆட்சியை நல்லாட்சியை தர வேண்டிய ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில் எந்த சிரமங்களும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் பணியாற்றுகின்ற இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற அந்த வல்லமையை பெரியார் வழங்கினார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காத்தார்,

    இன்றைக்கு பெரு வெள்ளமாகத் திரண்டிருக்கின்ற நீங்கள் எனக்கு அரவணைப்பாக இருந்து என்னோடு சேர்ந்து இந்த இயக்கத்தைக் காக்க முன் வருகிறீர்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

    Read more: http://viduthalai.in/page-3/78266.html#ixzz2y9cFwmfV

    தமிழ் ஓவியா said...


    பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி


    பூனைக்குட்டி வெளியில் வந்தது!

    ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்

    காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!

    பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது

    ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை

    மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.

    மூன்று முக்கிய பிரச்சினைகள்

    1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

    2. யூனிபார்ம் சிவில் கோட்.

    3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

    சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்

    பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

    சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    தேவை புதிய சிந்தனை - பார்வை

    இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

    1992 டிசம்பர் 2002 பிப்ரவரி

    1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

    அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!

    இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

    தமிழ் ஓவியா said...


    பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
    தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?

    தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

    பூனைக் குட்டி வெளியில் வந்தது!

    ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.

    பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

    ஒரு வகையில் நல்லதே!

    ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

    திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

    இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
    கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

    வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

    நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்


    முகாம்: ஈரோடு

    7.4.2014

    Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de

    தமிழ் ஓவியா said...


    74 சதவீத கார்ப்பரேட்காரர்களின் பின்னணியில் மோடி!

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அது நாட்டிற்கு ஆபத்தாகும். கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு (மார்க்கெட்டிங்) கையாளும் உத்தியைப் போன்று தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன

    - என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கோழிக்கோட்டில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.

    சொல்லுகிறாவர் காங்கிரஸ்காரராக இருக்கலாம்; ஆனால் அவரால் சொல்லப்பட்ட தகவல் மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மை.

    எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணக்கீட்டுப் (சர்வே) படி 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம்.

    ஏழை - எளிய மக்களைப்பற்றி மோடிக்குக் கவலையில்லை. பெரும் பணக்காரர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கட்சியாகும் அது.

    பகுச்சராஜி பகுதியில் பணத் திமிங்கலங்களுக்கு நிலத்தைத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழை எளிய மக்களிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதே! அதற்காக மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கம் வெடித்துக் கிளம்பவில்லையா?

    நானோ கார் உற்பத்திக்காக என்று சொல்லி டாட்டா நிறுவனத்துக்கு மோடி தூக்கிக் கொடுத்த நிலம் எவ்வளவு தெரியுமா? 1100 ஏக்கர்; அதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரம்; ஆனால் சதுர மீட்டர் ரூ.900 என்ற அளவில் தாரை வார்க்கப்பட்டது அதன் காரணமாக குஜராத் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.33 ஆயிரம் கோடி.

    0.1 சதவிகித வட்டிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடனைத் திருப்பிக் கட்டலாம். விற்பனை வரியில்லை. தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகைகள்!

    ஆன்லைனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் பணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் குஜராத் முதல் அமைச்சர் மோடி. டாட்டாவுக்கு ஒரு குறுஞ்செய்தி (ஷிவிஷி) அனுப்பி 2900 கோடி ரூபாயாக முதலீடுத் திட்டத்துக்கு ரூ.9570 கோடி ரூபாய் கடன்அளிக்கப்பட்டது. வெங்காய விவசாயிகளிடம் 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளார்.

    ஒரு கொடுமை என்ன தெரியுமா? அதானி கும்பலுக்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 5.47 கோடி சதுர மீட்டர் நிலம் கொடுக்கப்பட்டது (2005-2007கால கட்டத்தில்) 2011 டிசம்பர் வரை இந்த நிலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவு 98.60 லட்சம் சதுர மீட்டர்; மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன செய்தது?

    கொள்ளை அடிப்பதுதானே பண முதலைகளின் நோக்கம்? சதுர மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 32 காசுக்கு மோடி அரசிடமிருந்து பெற்ற நிலத்தை மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.733 என்ற விலையில் விற்றுக் கொள்ளை இலாபத்தைக் குவித்தனர்.

    அதானி துறைமுகம் கட்டப்படுவதற்காக அளிக்கப்பட்ட அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பெரும்பாலும் மீனவர்கள் குறுசிறு விவசாயிகளும்தான். தடை செய்யப்பட்டு இருந்த நிறுவனத்திடமிருந்து கால்நடைத் தீவனத்தை 5 கிலோவிற்கு ரூ.240 வீதம் வாங்கியது அரசு; ஆனால் அதன் சந்தை மதிப்பு என்னதெரியுமா? 5 கிலோ விலை ரூ.120 முதல் 140 வரை தான்; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின் கழகத் திட்டம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தவித ஏலமும் இல்லாமல் தாரை வார்த்ததால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.20 ஆயிரம் கோடி!

    விரிக்கின் வளர்ந்து கொண்டே போகும். இந்த நிலையில்தான் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.

    மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார் என்பதும் கருத்தூன்றத்தக்கதாகும்.

    இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். குஜராத் மாநிலத்தில் சட்டப்படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும் பொழுது 85 சதவீத தொழிலாளர் பணியாளர்கள் உள்ளூரிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிகளுக்கு இதிலும் விதி விலக்கு அளித்த புண்ணியவான் தான் நரேந்திர மோடி!

    பெரும் முதலாளிகளை மோடி ஊக்குவித்ததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மூடப் பட்ட சிறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்; வேலை இழந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர்.

    இவற்றின் காரணமாகத்தான் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மோடி ஆளும் குஜராத் இந்தியாவில் 12ஆவது இடத்தில் இருக்கிறது; கூறுவது நாம் அல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையிலான நிபுணர் குழு! பொய்ப் பிரச்சாரத்தால் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்து நாசப்படுத்தி விடலாம் என்று ஒரு கூட்டம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது.

    வாக்காளர்களே, உஷார்! உஷார்!!

    Read more: http://viduthalai.in/page-2/78318.html#ixzz2yFj141YK

    தமிழ் ஓவியா said...


    இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறது


    இங்கிலாந்து டெய்லிமெயில் என்ற செய்தி நிறுவனம் சேகரித்த தகவலின் படி அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை தொடர்பில் விசா ரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக் குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

    அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழு வினை நியமிக்க உள்ளார்.

    காணொலி சாதனங்கள் வாயிலாக வடக்கில் உள்ள மக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.

    2002-ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள் ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

    மன்னார் பேராயர் ஜோசப் உள்ளிட்ட 60 பேர் இலங்கை அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நெருக்கடி

    இதனிடையே சாட்சியாளர்களுக்கு அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக வடகிழக்கு மாவட்டத்திலிருந்து தகவல்கள் வருகிறது, முக்கியமாக சில பிரமுகர்களின் அலை பேசி ஒட்டுகேட்பது, வெளிநாட்டிலிருந்து அவர்களை காணவருபவர்களை தடுத்து வைப்பது, சர்வதேச அரங்கிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசும் இராணுவமும் மேற்கொண்டு வருகிறது. போர் விசாரணைக் ஆணைக் குழு வினர் படையினரையும் அரசியல்வாதி களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப் படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட் டுள்ளது.

    இலங்கையின் சூழ்ச்சி ஆரம்பம்

    விசாரணைக்குழு வருவதை தடுக்க முடியாத பட்சத்தில் சர்வதேச நிலைகளில் ராஜதந்திர நடவடிக்கை எடுக்க புதிய தந்திரங்களை இலங்கை கையாள ஆரம்பித்து விட்டது, இதனில் முதல் படியாக வெளியுறவுத்துறையில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு சர்வதேச அமைப்புகளுடன் நல்லிணக்க மாக உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் பன்னாடுகளில் இலங்கைக்காக பணியாற்றும் தூதர்களும் அடங்குவர் இதன்படி இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதராக நியமிக் கப்படவுள்ளார். முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனிக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

    சரத் கோங்காங்கே தென்னாபிரிக்கா வுக்கான உயர் அதிகாரியாகவும் சுதர்சனன் செனவிரட்ன இந்தியாவுக்கான உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள் ளனர். இவர்கள் அனைவரும் பன்னாடு களில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் பாதகமாக அமை யாதவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் உதவி யையும் எதிர் நிலை நாடுகளை மடக்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசா வழங்குவதா வேண்டாமா?
    போர்க் குற்ற விசாரணைக் குழுவில் யார் யார் அமைந்துள்ளனர் என்று தெரிந்த பிறகு அவர்களின் பின்புலங் களை ஆய்வு செய்து அவர்களுக்கு விசா வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்யும் எண்ணம் இலங்கை வெளியுறவுத்துறையிடம் உள்ளது, இது குறித்து சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சமர சிங்கே கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நியமல் பெரேரா கூறியதாவது மனித உரிமைகள் குழு இலங்கை வருவது தொடர்பான எந்த ஒரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை, ஆகையால் அதுகுறித்து இப்போது கூற ஒன்று மில்லை, விசாரணைக் குழுக்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று அரசுடன் கலந்தா லோசித்து தான் முடிவு செய்வோம். பன்னாட்டு விசாரணைக்குழு விவகா ரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் பணிந்து போகமாட்டோம் எங்களுக்கு நாட்டு நலன் தான் முக்கியமே தவிர உலக நாடுகளின் அழுத்தம் முக்கியமல்ல என்று பதிலளித்தார்.

    - சரவணா இராஜேந்திரன்

    Read more: http://viduthalai.in/page-2/78319.html#ixzz2yFjGkadX

    தமிழ் ஓவியா said...


    என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?

    - குடந்தை கருணா

    தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

    தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.

    திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.

    அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.
    அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.

    கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?

    தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.

    தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.

    பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.

    Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX

    தமிழ் ஓவியா said...


    சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...

    குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?

    அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.

    பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.

    சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல் அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.

    அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.
    மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை

    கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

    ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.

    தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.
    வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை

    பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.

    அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.

    வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.

    அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.

    அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.

    வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.

    வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    Read more: http://viduthalai.in/page-7/78308.html#ixzz2yFk4dEIt

    தமிழ் ஓவியா said...


    உங்கள் வீட்டில் நாள்தோறும் ஒரு கீரை
    எழுத்துரு அளவு Larger Font Smaller Font

    நாள்தோறும் ஒரு கீரை சமைத்து, உங்கள் வீட்டில் ஆரோக்கியத்தை நிரந்தரமாகச் செய்யுங்களேன்!

    சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், கீரை மசியல் நன்கு குழைவாக இருக்கும். கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். கீரையை வேக வைக்கும்போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

    வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம்போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.

    வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கசூரிமேத்தி என்றும் சொல்வார்கள். கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்கவேண்டும்.

    முருங்கைக்கீரை

    பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும்.

    முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.

    முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்சினை தீரும்.

    வாத நோய்களைக் குணப்படுத்தும் பீச் பழம்

    பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிக்குப் பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்ற வையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களைச் சார்ந்தவையே.

    பீச் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் தோல் சுருக்கங்கள் நீங்குவதோடு தோல் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவுடனும் இருக்கும். பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவைச் சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுபடுத்தும்.

    பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள் கிறது. கீல்வாதம், ரூமட்டிக் நோயால் அவதிப்படு கின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.

    பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்சுடியது.

    பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கருவுற்ற பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.

    மேலும் சிறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

    Read more: http://viduthalai.in/page-7/78309.html#ixzz2yFkEEyqE

    தமிழ் ஓவியா said...

    .ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்துவாவின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது

    புதுடில்லி, ஏப்.7- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (7.4.2014) டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை ஹிந் துத்துவாவின் மறு பதிப்பாக வெளிவந் துள்ளது.

    முதல்கட்டத் தேர்தல் இன்று (7.4.2014) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தங் களின் தேர்தல் அறிக்கை இன்று தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களில் தங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதினாலேயே தந்திர மாக இன்று வெளியிடப்படுகிறது.

    ஏனென்றால், அவர்களின் தேர்தல் அறிக் கையில் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை அவர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள்மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வுள்ளது.

    தேர்தல் அறிக்கையில் சில...

    பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் வெளி யாகியுள்ள முக்கிய செய்திகள் சில...

    காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்பு சலுகைகள் நீக்கப்படும்.

    இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் சென்று அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் பெற்று அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொது சிவில் சட்டம் கொண்டுவர நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி களையப்படும்.

    முஸ்லிம்களின் மதரசாக்களின் (மதபோத னைக் கூடங்கள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, மாற்றியமைக்கப்படும்.

    நவீன பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். தற்பொழு துள்ள மருத்துவமனைகளிலும் நவீன மாற்றம் கொண்டு வருவோம்.

    ராமர் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று. இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு மட்டுமல்ல; கோடிக் கணக்கான இந்திய மக்களின் உள்ளார்த்தமான எதிர்பார்ப்பு; அரசியல் அமைப்பைச் சரி செய்து ராமர் கோவில் கட்டுவோம்!

    கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தொழில் அனைத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

    சேது சமுத்திரத் திட்டம்

    ராம் சேது நம் தொன்மையான கலாச்சார மாகும். தோரியம் அதிக அளவில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.

    சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் எந்த முடிவு எடுப்பதானாலும், இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

    மேலும் பல அறிவிப்புகள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

    Read more: http://viduthalai.in/page-8/78311.html#ixzz2yFkRS8Tf