tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2625820742490106225..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேசுபவர்கள் தெளிவு பெற வேண்டும்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22375024593164049672014-04-08T06:42:59.051+05:302014-04-08T06:42:59.051+05:30.ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்து....ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்துவாவின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது<br /><br />புதுடில்லி, ஏப்.7- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (7.4.2014) டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை ஹிந் துத்துவாவின் மறு பதிப்பாக வெளிவந் துள்ளது.<br /><br />முதல்கட்டத் தேர்தல் இன்று (7.4.2014) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தங் களின் தேர்தல் அறிக்கை இன்று தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களில் தங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதினாலேயே தந்திர மாக இன்று வெளியிடப்படுகிறது.<br /><br />ஏனென்றால், அவர்களின் தேர்தல் அறிக் கையில் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை அவர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள்மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வுள்ளது.<br /><br />தேர்தல் அறிக்கையில் சில...<br /><br />பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் வெளி யாகியுள்ள முக்கிய செய்திகள் சில...<br /><br />காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்பு சலுகைகள் நீக்கப்படும்.<br /><br />இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் சென்று அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் பெற்று அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.<br /><br />பொது சிவில் சட்டம் கொண்டுவர நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.<br /><br />வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி களையப்படும்.<br /><br />முஸ்லிம்களின் மதரசாக்களின் (மதபோத னைக் கூடங்கள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, மாற்றியமைக்கப்படும்.<br /><br />நவீன பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். தற்பொழு துள்ள மருத்துவமனைகளிலும் நவீன மாற்றம் கொண்டு வருவோம்.<br /><br />ராமர் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று. இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு மட்டுமல்ல; கோடிக் கணக்கான இந்திய மக்களின் உள்ளார்த்தமான எதிர்பார்ப்பு; அரசியல் அமைப்பைச் சரி செய்து ராமர் கோவில் கட்டுவோம்!<br /><br />கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தொழில் அனைத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.<br /><br />சேது சமுத்திரத் திட்டம்<br /><br />ராம் சேது நம் தொன்மையான கலாச்சார மாகும். தோரியம் அதிக அளவில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.<br /><br />சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் எந்த முடிவு எடுப்பதானாலும், இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.<br /><br />மேலும் பல அறிவிப்புகள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78311.html#ixzz2yFkRS8Tf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17053477467504849852014-04-08T06:42:08.185+05:302014-04-08T06:42:08.185+05:30
உங்கள் வீட்டில் நாள்தோறும் ஒரு கீரை
எழுத்துரு அளவ...<br />உங்கள் வீட்டில் நாள்தோறும் ஒரு கீரை<br />எழுத்துரு அளவு Larger Font Smaller Font<br /><br />நாள்தோறும் ஒரு கீரை சமைத்து, உங்கள் வீட்டில் ஆரோக்கியத்தை நிரந்தரமாகச் செய்யுங்களேன்!<br /><br />சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், கீரை மசியல் நன்கு குழைவாக இருக்கும். கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். கீரையை வேக வைக்கும்போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.<br /><br />வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம்போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.<br /><br />வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கசூரிமேத்தி என்றும் சொல்வார்கள். கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்கவேண்டும்.<br /><br />முருங்கைக்கீரை<br /><br />பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும்.<br /><br />முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.<br /><br />முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்சினை தீரும்.<br /><br />வாத நோய்களைக் குணப்படுத்தும் பீச் பழம்<br /><br />பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிக்குப் பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்ற வையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களைச் சார்ந்தவையே.<br /><br />பீச் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் தோல் சுருக்கங்கள் நீங்குவதோடு தோல் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவுடனும் இருக்கும். பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவைச் சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுபடுத்தும்.<br /><br />பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள் கிறது. கீல்வாதம், ரூமட்டிக் நோயால் அவதிப்படு கின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.<br /><br />பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்சுடியது.<br /><br />பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கருவுற்ற பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.<br /><br />மேலும் சிறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78309.html#ixzz2yFkEEyqE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48258679440195720962014-04-08T06:41:31.624+05:302014-04-08T06:41:31.624+05:30
சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...
குழந்த...<br />சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...<br /><br />குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?<br /><br />அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.<br /><br />பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.<br /><br />சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல் அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.<br /><br />அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.<br />மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை<br /><br />கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.<br /><br />ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.<br /><br />தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.<br />வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை<br /><br />பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.<br /><br />அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.<br /><br />வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.<br /><br />அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.<br /><br />அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.<br /><br />வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.<br /><br />வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78308.html#ixzz2yFk4dEIt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68479684779374196472014-04-08T06:38:52.231+05:302014-04-08T06:38:52.231+05:30
என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?
- குடந்தை கருணா
தமிழ்ந...<br />என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?<br /><br />- குடந்தை கருணா<br /><br />தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.<br /><br />தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.<br /><br />திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.<br /><br />அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.<br />அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.<br /><br />கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?<br /><br />தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.<br /><br />தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.<br /><br />பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21061050039040959262014-04-08T06:38:19.911+05:302014-04-08T06:38:19.911+05:30
இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறத...<br />இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறது<br /><br /><br />இங்கிலாந்து டெய்லிமெயில் என்ற செய்தி நிறுவனம் சேகரித்த தகவலின் படி அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை தொடர்பில் விசா ரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக் குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.<br /><br />அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழு வினை நியமிக்க உள்ளார்.<br /><br />காணொலி சாதனங்கள் வாயிலாக வடக்கில் உள்ள மக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.<br /><br />2002-ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.<br /><br />இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள் ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.<br /><br />மன்னார் பேராயர் ஜோசப் உள்ளிட்ட 60 பேர் இலங்கை அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நெருக்கடி<br /><br />இதனிடையே சாட்சியாளர்களுக்கு அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக வடகிழக்கு மாவட்டத்திலிருந்து தகவல்கள் வருகிறது, முக்கியமாக சில பிரமுகர்களின் அலை பேசி ஒட்டுகேட்பது, வெளிநாட்டிலிருந்து அவர்களை காணவருபவர்களை தடுத்து வைப்பது, சர்வதேச அரங்கிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசும் இராணுவமும் மேற்கொண்டு வருகிறது. போர் விசாரணைக் ஆணைக் குழு வினர் படையினரையும் அரசியல்வாதி களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப் படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட் டுள்ளது.<br /><br />இலங்கையின் சூழ்ச்சி ஆரம்பம்<br /><br />விசாரணைக்குழு வருவதை தடுக்க முடியாத பட்சத்தில் சர்வதேச நிலைகளில் ராஜதந்திர நடவடிக்கை எடுக்க புதிய தந்திரங்களை இலங்கை கையாள ஆரம்பித்து விட்டது, இதனில் முதல் படியாக வெளியுறவுத்துறையில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு சர்வதேச அமைப்புகளுடன் நல்லிணக்க மாக உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் பன்னாடுகளில் இலங்கைக்காக பணியாற்றும் தூதர்களும் அடங்குவர் இதன்படி இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதராக நியமிக் கப்படவுள்ளார். முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனிக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.<br /><br />சரத் கோங்காங்கே தென்னாபிரிக்கா வுக்கான உயர் அதிகாரியாகவும் சுதர்சனன் செனவிரட்ன இந்தியாவுக்கான உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள் ளனர். இவர்கள் அனைவரும் பன்னாடு களில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் பாதகமாக அமை யாதவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் உதவி யையும் எதிர் நிலை நாடுகளை மடக்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசா வழங்குவதா வேண்டாமா?<br />போர்க் குற்ற விசாரணைக் குழுவில் யார் யார் அமைந்துள்ளனர் என்று தெரிந்த பிறகு அவர்களின் பின்புலங் களை ஆய்வு செய்து அவர்களுக்கு விசா வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்யும் எண்ணம் இலங்கை வெளியுறவுத்துறையிடம் உள்ளது, இது குறித்து சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சமர சிங்கே கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நியமல் பெரேரா கூறியதாவது மனித உரிமைகள் குழு இலங்கை வருவது தொடர்பான எந்த ஒரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை, ஆகையால் அதுகுறித்து இப்போது கூற ஒன்று மில்லை, விசாரணைக் குழுக்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று அரசுடன் கலந்தா லோசித்து தான் முடிவு செய்வோம். பன்னாட்டு விசாரணைக்குழு விவகா ரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் பணிந்து போகமாட்டோம் எங்களுக்கு நாட்டு நலன் தான் முக்கியமே தவிர உலக நாடுகளின் அழுத்தம் முக்கியமல்ல என்று பதிலளித்தார்.<br /><br />- சரவணா இராஜேந்திரன்<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78319.html#ixzz2yFjGkadX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26111151738579359152014-04-08T06:37:21.770+05:302014-04-08T06:37:21.770+05:30
74 சதவீத கார்ப்பரேட்காரர்களின் பின்னணியில் மோடி!
...<br />74 சதவீத கார்ப்பரேட்காரர்களின் பின்னணியில் மோடி!<br /><br />மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அது நாட்டிற்கு ஆபத்தாகும். கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு (மார்க்கெட்டிங்) கையாளும் உத்தியைப் போன்று தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன<br /><br />- என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கோழிக்கோட்டில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.<br /><br />சொல்லுகிறாவர் காங்கிரஸ்காரராக இருக்கலாம்; ஆனால் அவரால் சொல்லப்பட்ட தகவல் மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மை.<br /><br />எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணக்கீட்டுப் (சர்வே) படி 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம்.<br /><br />ஏழை - எளிய மக்களைப்பற்றி மோடிக்குக் கவலையில்லை. பெரும் பணக்காரர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கட்சியாகும் அது.<br /><br />பகுச்சராஜி பகுதியில் பணத் திமிங்கலங்களுக்கு நிலத்தைத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழை எளிய மக்களிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதே! அதற்காக மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கம் வெடித்துக் கிளம்பவில்லையா?<br /><br />நானோ கார் உற்பத்திக்காக என்று சொல்லி டாட்டா நிறுவனத்துக்கு மோடி தூக்கிக் கொடுத்த நிலம் எவ்வளவு தெரியுமா? 1100 ஏக்கர்; அதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரம்; ஆனால் சதுர மீட்டர் ரூ.900 என்ற அளவில் தாரை வார்க்கப்பட்டது அதன் காரணமாக குஜராத் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.33 ஆயிரம் கோடி.<br /><br />0.1 சதவிகித வட்டிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடனைத் திருப்பிக் கட்டலாம். விற்பனை வரியில்லை. தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகைகள்!<br /><br />ஆன்லைனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் பணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் குஜராத் முதல் அமைச்சர் மோடி. டாட்டாவுக்கு ஒரு குறுஞ்செய்தி (ஷிவிஷி) அனுப்பி 2900 கோடி ரூபாயாக முதலீடுத் திட்டத்துக்கு ரூ.9570 கோடி ரூபாய் கடன்அளிக்கப்பட்டது. வெங்காய விவசாயிகளிடம் 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளார்.<br /><br />ஒரு கொடுமை என்ன தெரியுமா? அதானி கும்பலுக்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 5.47 கோடி சதுர மீட்டர் நிலம் கொடுக்கப்பட்டது (2005-2007கால கட்டத்தில்) 2011 டிசம்பர் வரை இந்த நிலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவு 98.60 லட்சம் சதுர மீட்டர்; மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன செய்தது?<br /><br />கொள்ளை அடிப்பதுதானே பண முதலைகளின் நோக்கம்? சதுர மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 32 காசுக்கு மோடி அரசிடமிருந்து பெற்ற நிலத்தை மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.733 என்ற விலையில் விற்றுக் கொள்ளை இலாபத்தைக் குவித்தனர்.<br /><br />அதானி துறைமுகம் கட்டப்படுவதற்காக அளிக்கப்பட்ட அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பெரும்பாலும் மீனவர்கள் குறுசிறு விவசாயிகளும்தான். தடை செய்யப்பட்டு இருந்த நிறுவனத்திடமிருந்து கால்நடைத் தீவனத்தை 5 கிலோவிற்கு ரூ.240 வீதம் வாங்கியது அரசு; ஆனால் அதன் சந்தை மதிப்பு என்னதெரியுமா? 5 கிலோ விலை ரூ.120 முதல் 140 வரை தான்; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின் கழகத் திட்டம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தவித ஏலமும் இல்லாமல் தாரை வார்த்ததால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.20 ஆயிரம் கோடி!<br /><br />விரிக்கின் வளர்ந்து கொண்டே போகும். இந்த நிலையில்தான் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.<br /><br />மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார் என்பதும் கருத்தூன்றத்தக்கதாகும்.<br /><br />இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். குஜராத் மாநிலத்தில் சட்டப்படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும் பொழுது 85 சதவீத தொழிலாளர் பணியாளர்கள் உள்ளூரிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிகளுக்கு இதிலும் விதி விலக்கு அளித்த புண்ணியவான் தான் நரேந்திர மோடி!<br /><br />பெரும் முதலாளிகளை மோடி ஊக்குவித்ததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மூடப் பட்ட சிறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்; வேலை இழந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர்.<br /><br />இவற்றின் காரணமாகத்தான் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மோடி ஆளும் குஜராத் இந்தியாவில் 12ஆவது இடத்தில் இருக்கிறது; கூறுவது நாம் அல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையிலான நிபுணர் குழு! பொய்ப் பிரச்சாரத்தால் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்து நாசப்படுத்தி விடலாம் என்று ஒரு கூட்டம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது.<br /><br />வாக்காளர்களே, உஷார்! உஷார்!!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78318.html#ixzz2yFj141YK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40674186708051152542014-04-08T06:34:03.759+05:302014-04-08T06:34:03.759+05:30
பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்ப...<br />பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.<br />தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?<br /><br />தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.<br /><br />பூனைக் குட்டி வெளியில் வந்தது!<br /><br />ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.<br /><br />பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.<br /><br />ஒரு வகையில் நல்லதே!<br /><br />ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!<br /><br />திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.<br /><br />இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!<br />கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!<br /><br />வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!<br /><br />நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!<br /><br />கி.வீரமணி<br />தலைவர்<br />திராவிடர் கழகம்<br /><br /><br />முகாம்: ஈரோடு<br /><br />7.4.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82685354484979630242014-04-08T06:33:58.591+05:302014-04-08T06:33:58.591+05:30
பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கைய...<br />பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி<br /><br /><br />பூனைக்குட்டி வெளியில் வந்தது!<br /><br />ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்<br /><br />காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!<br /><br />பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது<br /><br />ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை<br /><br />மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.<br /><br />மூன்று முக்கிய பிரச்சினைகள்<br /><br />1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.<br /><br />2. யூனிபார்ம் சிவில் கோட்.<br /><br />3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.<br /><br />சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்<br /><br />பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.<br /><br />சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.<br /><br />தேவை புதிய சிந்தனை - பார்வை<br /><br />இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.<br /><br />1992 டிசம்பர் 2002 பிப்ரவரி<br /><br />1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36394430299551691342014-04-07T05:32:45.299+05:302014-04-07T05:32:45.299+05:30
தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவே...<br />தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தாரீர்! கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேண்டுகோள்<br /><br /><br />கோவை, ஏப்.6- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கட்டளைகளை நிறைவேற்றிட அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டார்.<br /><br />இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த கோவைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் பேசிய தாவது:-<br /><br />இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்பு களைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடு பட்டார்கள் என்றால், அவர் களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத்தான் அவர்கள் பாடுபட் டார்கள், பணியாற்றினார்கள்.<br /><br />நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பு எனக்கு முன்னால் பேசிய தம்பி ஒருவர், 91 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதி என்று குறிப்பிட்டார். எனக்கு 91 வயது என்பதை வெளியிலே சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. அதிலும் என்னு டைய துணைவியாரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னுடைய வயது 91 என்பதை உரக்கச் சொல்வதிலே கொஞ்சம் கூச்சம்தான்.<br /><br />ஆனால், 91 வயதில், தள்ளாடும் பருவத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்). என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்) என்னுடைய சுயமரியாதை உணர்வுக்கு தள்ளாட்டம் ஏற்படக் கூடாது (பலத்த கைதட்டல்) என்பதிலே நான் தந்தை பெரியார் வழியிலே, அண்ணா வழியில் சிந்தித்து அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்).<br /><br />திராவிட முன்னேற்றக் கழகம் நான் தொடக்கத் திலே குறிப்பிட்டதைப்போல, ஒரு இன எழுச்சி இயக்கம். நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளைய அண்ணன் பேராசிரியர் அன் பழகனார் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தி லெல்லாம், இந்த இயக்கம் தொடங்கியது அதிகாரங் களைப் பெற அல்ல.<br /><br />இந்த இயக்கம் தொடங்கியது தமிழர்களைக் காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற பல கருவூலங்களை அகழ்ந்து எடுப்பதற்காகத்தான் இந்த இயக்கம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல நீங்களும் கேட்டிருக் கிறீர்கள். நானும் கேட் டிருக்கிறேன்.<br /><br />அந்த உரையை ஏடுகளிலே படித்தும் இருக் கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இன்றைக்கு உங் களை யெல்லாம் நான் நாடியிருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் வளர்க்க வேண்டும், தேர்தலிலே நான்கு பேரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியா வினுடைய பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.<br /><br />தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும், தமிழன் என்றால் அவன் யாரையும் தலை தாழ்த்த மாட்டான், அவனும் தலை தாழ மாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கம் அன்றுதொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது, பணியாற்றி வருகிறது.<br /><br />அப்படிப்பட்ட அந்த இயக்கத்திற்கு தலைவராக கிடைத்த - தளபதியாகவும் விளங்கிய நம்முடைய அருமை அண்ணா, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைந்த பிறகும் அவர் ஏற்றி வைத்த அந்தச் சுடர் விளக்கு அணை யாமல் காப்பாற்றுகின்ற அந்தப் பெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்றால், என்னை மாத்திரம் நம்பி அல்ல, என் உயிரினும் மேலான உடன்பிறப் புக்களே (பலத்த கைதட்டல்) உங்களையெல்லாம் நம்பித்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.<br /><br />அப்படிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஒரு கட்டம். இந்த மக்களுக்கான ஒரு ஆட்சியை நல்லாட்சியை தர வேண்டிய ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில் எந்த சிரமங்களும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் பணியாற்றுகின்ற இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற அந்த வல்லமையை பெரியார் வழங்கினார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காத்தார்,<br /><br />இன்றைக்கு பெரு வெள்ளமாகத் திரண்டிருக்கின்ற நீங்கள் எனக்கு அரவணைப்பாக இருந்து என்னோடு சேர்ந்து இந்த இயக்கத்தைக் காக்க முன் வருகிறீர்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/78266.html#ixzz2y9cFwmfV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84444744176949935842014-04-07T05:30:54.250+05:302014-04-07T05:30:54.250+05:30
மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதா...<br />மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்<br /><br /><br />யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)<br /><br />பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.<br /><br />ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.<br /><br />இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.<br /><br />இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.<br /><br />எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.<br /><br />மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.<br /><br />எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.<br /><br />- பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61832459318940444292014-04-07T05:29:32.081+05:302014-04-07T05:29:32.081+05:30
தேர்தல் துணுக்குகள்
வேட்பு மனு
தமிழ்நாட்டில் 3...<br />தேர்தல் துணுக்குகள்<br /><br /><br />வேட்பு மனு<br /><br />தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு வேட்பு மனு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1318.<br /><br />தடை<br /><br />மக்களவைத் தேர்தலில் முதல் வாக்கெடுப்பு நாளை தொடங்கி 9 கட்டமாக மே 12ஆம் தேதி முடிவடை கிறது. நாளை திரிபுராவில் தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.<br /><br />மீறல்கள்<br /><br />சென்னையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் 55064.<br /><br />தண்டனை<br /><br />வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கப் பட்டால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.<br /><br />ரஜினியிடம் கெஞ்சல்<br /><br />சரியான நேரத்தில் சரியான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.<br /><br />பரிதாபம்: தங்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்க முடியாதவர்கள் சினிமாக்காரர்களிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்களின் பரிதாப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.<br /><br />வைகோ கிண்டல்!<br /><br />அரிஸ்டாடிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதா வாகத்தான் இருக்க முடியும் என்று வைகோ கிண்டல் அடித்துள்ளார். தென் சென்னை பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: அரிஸ்டாட்டிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதாதான்! ஏனென்றால் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைய ஓட்ட ளியுங்கள் எனப் பேசி வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்களோ ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.<br /><br />40 தொகுதிகளை வைத்துக் கொண்டு எப்படி பிரதமராக முடியும்? ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கடைசி வரை காக்க வைத்து கழுத்தறுத்தவர் என்று வைகோ பேசியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78278.html#ixzz2y9bSBj5E<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45555668170441806902014-04-07T05:28:46.164+05:302014-04-07T05:28:46.164+05:30எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!
தமிழக பிஜேபி துணை...எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!<br /><br />தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86997917796041986772014-04-07T05:26:43.573+05:302014-04-07T05:26:43.573+05:30
ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு
ச...<br />ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு<br /><br /><br />சன் டி.வி., செய்தியாளர் விழுப்புரத்தில் கைது<br /><br />29.6.2001இல் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களைக் கைது செய்துவேப்பேரி காவல் நிலையத்தில் அடைப்பு.<br /><br />12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதா கிருட்டிணன் சாலை விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு பத்திரிகை யாளர்களை கண்மூடித் தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து புகைப்படக்காரர் மூர்த்தி, தினமணி புகைப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. புகைப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்பட்டன.<br /><br />ஜெவுக்கு எதிராக எழுதியதற்காக இந்து பதிப்பாசிரியர் சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகியோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.<br /><br />இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளி யிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.<br /><br />சந்தன வீரப்பன் சம்பந்தமான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக்கழித்துக் கொடுமைப்படுத் தினார்கள்.<br /><br />இந்து ஏட்டின்மீது 17 வழக்குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.<br /><br />நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.<br /><br />130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத் திரிகையாளர்கள்மீது தொடரப்பட்டன.<br /><br />இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகை களில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டப்பட்டிருக் கிறது. காரணம், இரத்தம் தண்ணீரை விட கெட்டி யானது கடந்த மாதம் காஞ்சீபுரத்திலே, செய்தியாளர், தொலைக்காட்சியினர் தாக்கப்பட்டது (19.3.2014) ஜனநாயகத்தின் நான்காவது தூணே ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளானது.<br /><br />இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? சிந்திப்பீர்!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78274.html#ixzz2y9akTw32<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82512034840180240512014-04-06T07:39:02.604+05:302014-04-06T07:39:02.604+05:30
சுயமரியாதை ஆத்திச்சூடி
அறிவிற் சிறந்தது பகுத்...<br />சுயமரியாதை ஆத்திச்சூடி<br /><br /><br /><br />அறிவிற் சிறந்தது பகுத்தறிவாகும்<br />ஆன்மீகம் என்பது அறியாமையின் குழந்தை<br />இளஞ்சிறார் ஏற்றமடைய பெரியார் பிஞ்சு<br />ஈகை என்பது இல்லார்க்குக் கொடுப்பது<br />உண்மை படித்தறிவது உயர்வுக்கு வழி<br />ஊசி மிளகாய் பார்ப்பானுக்கு படுகாரம்<br />எல்லோரும் கற்பது பார்ப்பானுக்குப் வயிற்றெரிச்சல்<br />ஏர் உழுவது பாவத் தொழிலாம் பார்ப்பானுக்கு<br />அய்யாவின் வாழ்வியல் சிந்தனை அருமருந்தாகும்<br />ஒற்றுமையைக் குலைப்பது மதவெறியாகும்<br />ஓங்கி ஒலிக்கட்டும் சாதி மறுப்புக் குரல்!<br /><br />- இரா. இராசாராம், பெங்களூரு -43<br /><br />Read more: http://viduthalai.in/page7/78169.html#ixzz2y4HXZwZm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70386342648892098472014-04-06T07:38:04.582+05:302014-04-06T07:38:04.582+05:30
இராமன் கோயில் மக்கள் மனமாற்றம்!
ஆர்.எஸ்.எஸ் பத்...<br />இராமன் கோயில் மக்கள் மனமாற்றம்!<br /><br /><br />ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பஞ்சன்யத்தில் ராமர்கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டிருந்தது, இதில் பெரும்பான்மை யானோர் ராமன் கோவில் விவகாரத்திற்கு கருத்து தெரிவிக்கவில்லை.<br /><br />இதன் மூலம் ராமன் கோவில் பிரச் சினையால் அரசியல் லாபம் காண முடியாது, ராமன் கோவில் விவகாரம் முன்பு ஆட்சியைக்கைப்பற்றும் ஒரு துருப்பு சீட்டாக இருந்தது, ஆனால் தற்போது அது செல்லாக்காசாகிவிட்டது, என தாமதமாக புரிந்துகொண்டது. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கணிப்பை தொடர்ந்து பிரபல இந்தி ஊடகமான தைனிக் பாஸ்கரும் இராமன் கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத் துக்கணிப்பு நடத்தியது.<br /><br />இதில் ராமன் கோவில் எங்களுக்குத் தேவையில்லை என்றே 70 விழுக்காடு மக்கள் பதிலளித்து இருந்தனர். உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, பிகார் போன்ற மாநிலங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில் 40விழுக்காடு மக்கள் ராமன் கோவில் விவகாரம் முடிந்து போன ஒன்று என பதிலளித்தனர். மேலும் தேர்தல் சமயங்களில் பாஜக வும் அதன் தாய் அமைப்பான இந்துத்துவா குழுக்களும் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து பெரும்பான்மை இந்துக் களின் ஓட்டுக்களை பெறுவதற்கு இது வரை பயன்படுத்தினர், இனி அவர்களின் ராமன்கோவில் நாடகம் செல்லாது என்றனர்.<br /><br />30 விழுக்காடு மக்கள் மதம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ள வில்லை, நாடு இருக்கும் நிலையில், மதப்பிரச்சினைகள் என்பது ஓட்டுவாங்க ஒரு சாதனமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது, கோவில் கட்டுவதால் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை குறைந்துவிடுமா, அல்லது தொழில் வளர்ச்சி பெற்றுவிடுமா? இன்றைய சூழலில், உலக நாடுகளுடன் போட்டி போட ஏற்றுமதித் தொழிலை ஊக்கப்படுத்தும் அளவில் ஏதாவது முக்கியத் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் அதை விட்டுவிட்டு ஆட்சியில் அமர மாத்திரம் இராமன் கோவில் இந்து முஸ்லீம் பிரச்சினைகளை கிளப்பி ஆட்சியில் அமர்ந்த பிறகு அடுத்த தேர்தல் வரை நாட்டு நலனை மறந்து நாடாளு மன்றத்தில் சண்டையிடுகின்றனர் என்று பதிலளித்தனர். பாரதீய ஜனதா கட்சி தற்போது தேர்தல் அறிக்கை தயார் செய்துகொண்டு இருக்கிறது, தனது தேர்தல் அறிக்கையில் இராமன் கோவில் விவகாரம் முக்கிய பங்குவகிக்கும் என்று தேர்தல் பணிக்குழு தலைவர் மனோகர் ஜோஷி சில நாட் களுக்கு முன்பு பதிலளித்திருந்தார். தற் போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிந்த நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.<br />லாபம் வேண்டுமென்றால் இராமன் வேண்டும், நட்டம் ஏற்படும் போது நட்டாற்றில் வீசுவதுதானே காவிகளின் வேலை?<br />- சரவணா இராசேந்திரன்<br /><br />Read more: http://viduthalai.in/page7/78167.html#ixzz2y4HJWH6D<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6735709261508408982014-04-06T07:36:36.507+05:302014-04-06T07:36:36.507+05:30
இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்
இந்தியாவில் ...<br />இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்<br /><br />இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.<br /><br />அந்த ஆய்வில் இந்தியாவில் பெண் களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது.<br /><br />பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்த மாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 19 நிமிடங்கள் மட்டுமே தினமும் வீட்டு வேலை செய்கிறார்களாம்.<br /><br />அதுவும் வீட்டில் அவர்கள் தொடர் புடைய வேலைகளுக்குத்தான் அந்த 19 நிமிடங்களை செலவிடுகிறார்களாம். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண்களில் 90 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.<br /><br />வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் ஆண்களும், பெண்களுக்கு உதவும் வகையில் எந்த வேலையும் செய்து கொடுப்பது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆண்கள் தினமும் 11 மணி நேரத்தை தங்கள் வேலை மற்றும் தங்கள் பொழுது போக்குக்கே செலவிடுகிறார்களாம்.<br /><br />50 சதவீத ஆண்களுக்கு தூங்குவது, சாப்பிடுவது, அரட்டையடிப்பது, மது குடிப்பது போன்ற வகைகளில் தினசரி நேரம் கழிந்து விடுகிறதாம். இந்தியாவில் ஆண்கள் இப்படி இருப்பது சமூக கலாச் சாரமாக ஆழமாக வேருன்றி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.<br /><br />ஆண்கள் இப்படி சுய நலத்துடன் இருக்கும் நிலையில் பெண்கள்தான் பொறுப்புடன் குடும்ப சுமையை சுமப்ப தாக தெரிய வந்துள்ளது. சமையல், துணி துவைப்பது, வீட்டை ஒழுங்குப்படுத்து வதை பெண்கள் மட்டுமே செய்வதாக கருத்து கணிப்பு சொல்கிறது.<br /><br />இத்தனை வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை கவனிப்பதும் பெண்கள் வேலையாக உள்ளது. நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் கூறப்பட் டுள்ளது.<br /><br />ஜப்பானில் ஆண்கள் தினமும் 24 நிமிடமும், கொரியாவில் 21 நிமிடமும், சீனாவில் 48 நிமிடமும் வீட்டு வேலை செய்கிறார்கள்.<br /><br />உலகிலேயே ஆண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்வது ஸ்லோவேனியா நாட்டில்தான். அந்நாட்டு ஆண்கள் தினமும் 114 நிமிடம் வீட்டு வேலை செய்கிறார்கள்.<br /><br />டென்மார்க், எஸ்தோனியா நாட்டு ஆண்களும் பெண்களுக்கு உதவும் வகை யில் வீட்டு வேலைகள் செய்து கொடுக் கிறார்களாம். மற்ற நாடுகளில் பெரும் பாலும் வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டியதுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page8/78171.html#ixzz2y4Gwo39O<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43442509066596808032014-04-06T07:33:12.895+05:302014-04-06T07:33:12.895+05:307. விலை உயர்வைக் குறைக்க நட வடிக்கை எடுக்கப்படுமா...7. விலை உயர்வைக் குறைக்க நட வடிக்கை எடுக்கப்படுமா?<br /><br />தற்போதுள்ள மத்திய அரசு, பெட் ரோல் டீசல், சமையல் வாயு உருளை ஆகியவற்றின் விலையை பன்மடங்கு உயர்த்தியது. பாஜக மய்ய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் விலைவாசியை 1999ல் இருந்த நிலைமைக்கு கொண்டு வருமா? மேலும் சமீபத்தில் டில்லியில் முதல்வராய் இருந்த கெஜ்ரிவால் மின்சாரக் கட்டணம் குடி தண்ணீர் கட்டணம் ஆகிய வற்றை குறைத்தார். மேலும் பெட் ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்திற்குக் காரணமாய் இருந்த தனியார் நிறுவனங்கள்மீது உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது போன்ற நடவடிக்கைகளை பாஜக எடுக்குமா?<br /><br />8. தமிழகத்திற்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கப் படுமா?<br /><br />9. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்துப் பாஜக வின் நிலைப்பாடு என்ன?<br /><br />அன்னிய நாடு மற்றும் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அயல் நாட்டினர் சிலரை கட்டாயமாகப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதைப் போன்று மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை நிறைவேற்றும் எல்லா தனியார் நிறுவனங்களும் இட ஒதுக்கீடு முறையை கடைப்பிடிக்க வேண் டும் என வற்புறுத்தலாம். இவ்வாறு செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கலாம். மேலும் நிதி வழங்குவதை நிறுத்தி வைக்கலாம். அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?<br /><br />10. ஊழலை எதிர்க்கும் ஆம்ஆத்மி கட்சியை ஆதரிக்காமல் பாஜக எதிர்ப்பது ஏன்? ஏதேனும் உள் நோக்கம் உள்ளதா?<br /><br />முடிவுரை: பாஜகவிலும் பதவிக்கான சண்டைகள் நடக்கும் என்பதனை இக் கட்டுரை மூலம் அறியலாம். இந்தக் கருத் தினை புதிய மற்றும் இளைய தலை முறைக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/78165.html#ixzz2y4FtCXlcதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21240567249550816192014-04-06T07:33:08.154+05:302014-04-06T07:33:08.154+05:305. கச்சத் தீவுப் பிரச்சினையில் அகில இந்திய பாஜகவி...5. கச்சத் தீவுப் பிரச்சினையில் அகில இந்திய பாஜகவின் நிலைப் பாடு என்ன?<br /><br />தற்போதுதமிழ்நாடு அரசு கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றி உள்ளது. மேலும் திமுகவினர் கச்சத்தீவு இலங் கைக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட் டதை செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் காங் கிரஸ் ஆளும் மத்திய அரசு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்ற நிலைப்பாட் டில் உள்ளது. மேலும் கச்சத்தீவுப் பிரச் சினயை வெறும் மீனவர் பிரச்சினையாகக் கருதுகின்றது. காங்கிரஸ் நிலைப்பாட் டிற்கு எதிராக பா.ஜ.க. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமா?<br /><br />6. சேது சமுத்திர திட்டம் குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன?<br /><br />சேது சமுத்திரக் கால்வாய் அமைப்ப தற்கான நேர்பாட்டு வழியை 1999ல் அமைந்த பாஜக ஜஅரசு தேர்வு செய்தது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசு தோழமைக் கட்சியான திமுகவின் வேண்டுகோளை ஏற்று திட்டத்தைத் துவக்கியது. ஆனால் இந்தத் திட்டம் தற்போது உச்சநீதிமன்றத் தால் தடை ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதில் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவினர் இராமர் பாலத் தில் உள்ள மணல் திட்டுகளை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள் ளனர். இராமாயணத்தில் நளன் என்னும் வானரம் கட்டியதாகச் சொல்லப்படும் மிதக்கும் கற்களால் கட்டப்பட்ட இராமர் பாலம் தற்போது இல்லை; மிதக்கும் பாறைகளும் காணப்படவில்லை. தற் போது உள்ள மணல் திட்டுக்களை தேசிய சின்னமாகக் கருதுமா அல்லது இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்குமா? பாஜகவின் நிலைப்பாடு என்ன?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84863829251563649772014-04-06T07:32:58.150+05:302014-04-06T07:32:58.150+05:303. புது தில்லியில் மூத்த தலைவர்கள் போட்டியிடத் தயங...3. புது தில்லியில் மூத்த தலைவர்கள் போட்டியிடத் தயங்குவதேன்? தோல்வி பயமா?<br /><br />4. தமிழ் ஈழம் பற்றி அகில இந்திய பாஜகவின் நிலைப் பாடு என்ன?<br /><br />தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில கட்சிகள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றன. தற்வோது தமிழ் நாட்டில் மாநிலக் கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைத்திருக்கும் பாஜக தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றதா அல்லது ராஜீவ் காந்தி 1987 இல் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 13ஆவது அரசி யல் சட்ட திருத்தத்தை வலியுறுத்துமா? இலங்கை யுடன் ராஜீவ் காந்தி செய்து கொண்ட விவரங்கள் கீழே தரப்பட் டுள்ளது.<br />தமிழ் ஈழம் கோரிய போராளிகளுக்கும் அப்போதைய இலங்கை அரசுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப் போராளி களின் சம்மதம்இல்லாமலேயே ஒரு தலைப்பட்சமாக, இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை 1987ல் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கினார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் 1987இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதன் நோக்கம் போராளிகளிடமிருந்து ஆயுதங் களைப் பறித்து சரணடைய செய்வது ஆகும். இதற்கு இந்திய அரசால் நிர்ணயிக் கப்பட்ட காலக்கெடு 48 மணி நேரம் ஆகும். ஆனால் இந்தியப் படை ஜூலை 1987 முதல் மார்ச் 1990 வரை சுமார் 33 மாதங்கள் ராணுவ நடடிக்கைகள் தொடர்ந் தும் ஒப்பந்தபடிமா காண சபை உருவாக் கப்படவில்லை மற்றும் மாகாண சபைக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும் இந்திய ராணுவத்தை சார்ந்த முப்படையினர் சுமார் ஒரு லட்சம் வீரர்களை இந்தியா அனுப்பியது (ஆதாரம் வீக்கி பீடியா) இந்த ராணுவ நடவடிக்கை யின் போது பல யுத்த தந்திரங்கள் செயல் படுத்தப்பட்டன. அவை ஆபரேஷன் பூமாலை, ஆபரேசன் பவன், ஆபரேசன் விராட், ஆபரேசன் திருசூல் மற்றும் ஆபரேசன் செக்மேட் ஆகும். இவ்வாறு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளால் உயிர்ச்சேத மும் பொருள் சேதமும் காலவிரயமும் ஏற்பட்டதே ஒழிய தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை. ராஜீவ்காந்திக்குப் பின்னர் வந்த பாஜக அரசோ அல்லது காங்கிரஸ் அரசோ இந்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை. இந்த உடன்படிக்கையைப் பற்றி பாஜகவின் தற்போதைய நிலை என்ன? தற்போது அதிபர் இராஜபக்சே அமைதிப் படையினரால் ஏற்பட்ட உயிர் சேதத்தை விசாரிக்க விசாரணை கோருகிறார் என தகவல். இவ்வாறு 1987இல் மற்றும் 2009இல் என்று தமிழர்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கொல் லப்படுவதை பாஜக தடுக்குமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31225121851397105442014-04-06T07:32:43.327+05:302014-04-06T07:32:43.327+05:30
பாஜகவிற்கு 10 கேள்விகள்
- பொறியாளர் ப.கோவிந்தரா...<br />பாஜகவிற்கு 10 கேள்விகள்<br /><br /><br />- பொறியாளர் ப.கோவிந்தராசன்<br /><br />முன்னுரை: 2014 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 206 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் 116 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று ஊடகங்கள் பல கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு ஊட கங்கள் சொல்லும் ஒரே காரணம், தற்போது பாஜக வின் பிரதமர் வேட்பாளர் திருவாளர் மோடி அலை வீசுகின்றது. இந்த மோடி அலை என்றைக்கு ஆரம்பித்தது? ஏன் முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு அலை வீச வில்லை? ஏன் இரண்டாவது பெரிய தேசிய கட்சியான பாஜகவிற்கு அலை அடிக்கவில்லை? இராமர் கோவிலை இதுவரை கட்டாத பாஜவிற்கு எப்படி அலைவீசும்? மோடிக்கு மட்டும் அலை வீசக்காரணம், மோடியை தேர்வு செய்த ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகளும் நாட்டின் பொருளா தாரத்தை ஆட்டிப்படைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்துவரும் தவறானப் பிரச்சாரமே ஆகும். அப்படி என்ன மோடி சாதித்துவிட்டார்? சென்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தைல் உள்ள 26 இடங்களில் 15 எம்பிக்களே வெற்றி பெறமுடிந்தது. அதே சமயத்தில் கர்நாடாகாவில் 28 இடங்களில் 19 எம்பிகள் வெற்றிப் பெற்றனர். 19 எம்பிகளை கொண்ட பாஜக சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில் வெற்றிப் பெறவில்லை. முதல்வராய் இருந்த எடியூரப்பா ஊழல் வழக்கில் பதவியை இழந்தார் எனவே மதவாத கட்சியான பாஜகவில் ஒரு தனி மனிதனுக்கு அலை வீசும் வாய்ப்பே இல்லை. மேலும் காங்கிரசில் தான் இதுவரை நேரு குடும்பத்தைச் சார்ந்த தனிமனிதர்களை புகழ்வது வழக்கம். நேரு குடும்பத்தைக் கண்டிக்கும் பாஜக மோடியைப் புகழ லாமா?<br />இந்நிலையில் இரண்டாவது பெரிய தேசியக் கட்சியான பாஜகவிற்கு (மோடி யின் தலைமை நிரந்தரம் இல்லை) 10 கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.<br /><br />1. அத்வானி போன்ற தலைவர்களை புறக்கணிப்பதைக் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் ஏன் தரவில்லை?<br /><br />இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது சர்வாதிகார ஆட்சி நடக்கும் இரும்புத்திரை நாடு அல்ல. இங்கு ஊடகங்களுக்கு கருத்துச் சொல்ல சுதந்திரம் உள்ளது. மேலும் தகவல் அறியும் சட்டம் நடை முறையில் உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் நேரு குடும்பத்தின் கைப்பாவையாக விளங்குகிறார் என்று குற்றம் சாட்டிய பாஜக தற்போது அத்வானி அதிகாரம் படைத்தவரா அல்லது திரை மறைவு சக்திகளின் கைப்பாவையா என்பதை விளக்க வேண்டும். தற்போது முன் நிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாள ருக்கு அத்வானிக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படுமா?<br /><br />2. கட்சியின் மூத்த தலைவர்களை களை எடுப்பதற்கு தோல்விபயம் தான் காரணமா?<br /><br />காங்கிரசுக்குத் தோல்விபயம், வந்து விட்டது என்று கூறிவரும் பாஜக தன்னுடைய கட்சியில் உள்ள மூத்தத் தலைவர்களை தொகுதி மாறி போட்டியிடச் செய்வது ஏன்?<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65348065240167712632014-04-06T07:31:39.907+05:302014-04-06T07:31:39.907+05:30பெங்களூர் மல் லேஸ்வரம் குண்டு வெடிப்பில், தமிழக இஸ...பெங்களூர் மல் லேஸ்வரம் குண்டு வெடிப்பில், தமிழக இஸ்லாமிய இளை ஞர்கள் கைது செய்யப்பட்டதும் இதே யுஏபிஏ சட்டத்தின் மூலமாகத் தான். அப்துல் நாசர் மதானி, கர்நாடக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் எந்த வித விசாரணையுமின்றி, குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டு கொண்டி ருப்பதற்கு காரணமும் யுஏபிஏ தான். கர்நாடக நீதிமன்றம், யுஏபிஏ அடிப் படையாகக் கொண்டே மதானிக்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்து வருகி றது. அதே நேரம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப் பளிக்கப்பட்ட சஞ்சய் தத்தோ மூன்றாம் முறையாக பிணையில் வெளிவந்து படங் களில் நடித்து வருகின்றார். ஒருபுறம் ஒன்பது ஆண்டுகளாகியும் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படாமல் பிணை மறுக்கப்படும் மதானி , மறுபுறம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் தொடர்ந்து பிணை வழங்கப்படும் சஞ்சய் தத். இப்படி தான் இங்கே நீதி (!) இருக் கின்றது.<br /><br />மக்கள் விரோத அரசுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் "பயங்கரவாத, தேசவிரோத, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான" நடவ டிக்கைகளாக அடையாளப்படுத்துதலே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் நோக்கமாக இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கிலும், காஷ்மீரிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தின் மூலம் இந்திய இராணுவம் அம்மக்களை தெருநாய்களைப் போல சுட்டுக் கொல்வதையும், பெண்களை பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்குவதை யும் பொழுதுபோக்காகச் செய்து வருகிறது. அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பதினோரு ஆண்டுகளாக உணவை மறுத்து போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா. மக்களின் சமூக, பொருளியல், வாழ் வாதார பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வைக் காணாமல், அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் தீர்வு காண எத்த னிக்கும் ஆளும் அரசுகளை போராடித் தான் பணிய வைக்க வேண்டும். தடா, பொடா, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வடைந் திருக்கும் நாம், யுஏபிஏ போன்ற சட்டங் களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டி யதும் அவசியமாகிறது. இத்தகைய அடக்குமுறை சட்டங்களை முறியடிக்க, தொடர் பரப்புரைகளும், கருத்தரங்கு களும் அதையொட்டிய மக்கள் போராட் டங்களையும் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.<br /><br />- அ.மு.செய்யது, சேவ் தமிழ்சு இயக்கம்<br /><br />Read more: http://viduthalai.in/page4/78164.html#ixzz2y4FPydAZதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83364142685821329132014-04-06T07:31:35.055+05:302014-04-06T07:31:35.055+05:30கைது செய்த காவல்துறை இவர்களி டம் கேட்ட கேள்வி, &qu...கைது செய்த காவல்துறை இவர்களி டம் கேட்ட கேள்வி, "அம்பேத்கரியவாதி கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னுமொரு 1857 ஐ உருவாக்கப் பார்க்கிறீர்களா? " . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, இன்னொரு அம் பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா? என்று அடித்தது காவல்துறை. இந்துத் துவத்தின் கொடிய கரங்கள் அரச இயந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிறு பான்மையினரும், தலித், பழங்குடி மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டி யவர்கள். இதே போல சந்திராப்பூர் என்ற ஊரில் மாணவர்களுக்கு பகத் சிங், ஜோதிபா பூலேவைப் பற்றி பாடம் எடுத்ததற்காக பத்து மாணவர்கள் கைது செய்யப்பட் டார்கள். கைது செய்யப்பட்டதற்கான காரணம் பக்த் சிங் பற்றி பாடம் எடுப்பதன் மூலம் இவர்கள் நக்சல்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றார்கள் என்றது காவல்துறை, அதாவது பகத்சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதத்தை (அன்றைய சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்) பயன்படுத்தினார், பகத்சிங்கை படித்து அவரது கொள் கைகளில் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டால் அவர்களும் ஆயுதம் தாங்கிய புரட்சியை நோக்கி செல்வார்கள் என்கிறது காவல்துறை. இப்படியாகத் தான் பகத் சிங்கும் இந்தியாவில் தடை செய்யப்பட் டிருக்கிறார். சமூகப்போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டதும் இதே யு.ஏ.பி.ஏ சட்டத்தின் வாயிலாகத் தான்.<br /><br />பினாயக் சென் ஒரு மாவோயிசுட்டு ஆதரவாளர் என்பதற்கு காவல்துறை பினாயக் சென் வீட்டில் இருந்து கைப் பற்றிய(!) கார்ல் மார்க்சு எழுதிய மூலதனம் நூலை நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டியது. இதுபோன்ற ஆதாராங்களை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசத் துரோகி எனக் கூறி ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10334769839207314752014-04-06T07:31:24.957+05:302014-04-06T07:31:24.957+05:30* குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கர வாத இயக்கத்தின் உற...* குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கர வாத இயக்கத்தின் உறுப்பினரா, இல் லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல் லாததால், அவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்/இருக்கலாம் என்று குற்றம் சாட்டி, யாரை வேண்டுமா னாலும் காவல்துறை கைது செய்யலாம்.<br /><br />இந்திய அரசியலைப்புச் சட்டம் வகுத் துள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியின ருமே கைது செய்யப்படுகின்றனர். 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு நூற்றுக்கணக்கான கைது சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூரில் 'தீக்சா' என்னுமிடத்தில் தான் அம்பேத்கர், லட்சக்கணக்கான தலித்துகளோடு புத்த மதத்தைத் தழுவினார். இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் தலித் மக்கள், வருடம் முழுமையும் திக்சாவிற்கு பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில், திக்சாவிற்கு செல்லத் திட்டமிட்டு, மஹாராஷ்டிரா விரைவு ரயிலில் ஏறிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். காரணம் பெரிதாக ஒன்று மில்லை. அந்நால்வரில் ஒருவரான அனில் மமானே ஒரு தலித் எழுத்தாளர். அவரிட மிருந்தது கயர்லாஞ்சி பற்றி அவரே எழு திய ஒரு புத்தகம் இருந்தது, அதை மக்களிடம் பரப் புரை செய்து வந்த அவரது மாணவரான தின்கர் கைது செய் யப்பட்ட இரண் டாம் நபர்., இதில் வேடிக்கை என்ன வென்றால் கைது செய்யப்பட்ட மற்ற இருவரும், இவர் களுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள், அவர்கள் செய்த ஒரே குற்றம் அந்த பெட்டியில் பயணம் செய்தது. இவர்களெல்லாம் நக்சல் இயக்கங்களுக்கு உதவி செய்பவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71426861833845862502014-04-06T07:30:58.435+05:302014-04-06T07:30:58.435+05:30* பயங்கரவாத சம்பவங்கள் நடை பெற்ற இடத்தில், குற்றம்...* பயங்கரவாத சம்பவங்கள் நடை பெற்ற இடத்தில், குற்றம் சாட்டப்பட்ட வரின் கைரேகையோ அல்லது வேறு ஏதேனும் தடயங்களோ இருந்தாலும் கூட, அவரை குற்றவாளி என காவல்துறை கருதி, கைது செய்ய முடியும். மேலும் தான் நிர பராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.<br /><br />* ஒரு புலனாய்வுக்கு தொடர்புடையது எனக்கருதி காவல்துறை விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண் டும். இல்லையேல் இச்சட்டப்படி, தகவல் தர மறுப்பவரை கைது செய்ய முடியும். * தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவரைக் கைது செய்ய காவல் துறைக்கு எல்லையற்ற அதிகாரம் வழங் குகிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51892186600116337122014-04-06T07:30:48.428+05:302014-04-06T07:30:48.428+05:30பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்...<br />பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்!<br /><br /><br />அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல் களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். "நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட் இப்படி தான் இங்கு காவல்துறை செயல் படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் தெகல்கா இணையதளத்திற்கு வழங்கிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.<br /><br />UAPA என்றழைக்கப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Un lawful Activitiess Prevention Act, 1967) கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி அன்று, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மக்களவையில், விரிவான விவாதங்களை அனுமதிக்காமல், 3- ஆவது முறையாக திருத்தியுள்ளது மத்திய அரசு. சட்டம் இயற்றப்பட்டது 1967இல் தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் மட்டுமே, மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசின் சட்டப்பூர்வ பயங்கரவாத சாதனை. இச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டமாகும். முதல் திருத்தம், 2004 ஆம் ஆண்டு. தடா, பொடா ஆகிய கருப்புச் சட்டங்களில் இருந்த கொடும் பிரிவுகள், யு.ஏ.பி.ஏ - வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன, பிறகு தடா, பொடா சட்டங்கள் நீக்கப்பட்டது அரசின் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது நாட்டில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-ஆவது முறையாக இச் சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறினால், 2004இல் தேர்தலில் வெற்றி பெற, "பொடாவை ரத்து செய் வோம்" என வாக்குறுதியளித்த காங்கிரசு கட்சி, ஆட்சியமைத்தவுடன், பொடாவை ரத்து செய்து, யு.ஏ.பி.ஏ என்ற பெயரில் மீண் டும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது.<br /><br />கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association), போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் மறுக்கப் படுவது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக ஒருவர் முணுமுணுத்தாலே காவல்துறை அவர்களை கைது செய்யலாம் என்கிற அளவுக்கு மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவது, அரச பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியாகும். உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு என்று நாம் பெருமிதம் கொள்வோம். யுஏபிஏ சட்ட விதிகள்:<br /><br />* 'பொடா' சட்டத்தைப் போலவே, இச் சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப் பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில் வைத்து கொடுமைப்படுத்த முடியும்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com