Search This Blog

13.3.14

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?



தோழர்களே! இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள்.

அனாவசியமாக சிலர் "சுயமரியாதைத் திருமணமா?" என்றாலே அதிசயப்படுவதும், ஏதோ முழுகி விட்டது போல் வெறுப்படைவதுமா யிருக்கின்றதே தவிர, வேறு என்ன மாறுதல் இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொருப்பில் நடத்துவதற்குப் பலர் அறிய செய்துகொள்ளும் அல்லது செய்யப்படும் காரியமே ஆகும். இதைச் சிலர் அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள். சிலர் அதாவது புதிய முறைக்காரர்கள் ஒப்பந்தம் என்கிறார்கள். சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதி காரியங்களில் லக்ஷியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது கல்யாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அதுபோலவே சடங்கிலும் கல்யாணக்காரருக்கும் சடங்குக்கும் யாதொரு உரிமையுமில்லை. எப்படியென்றால் தம்பதிகளின் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களைப் பெற்றோர்களோ அல்லது இந்தப் பெற்றோர்களுக்கு வேண்டியவர்களோ பார்த்து இன்ன பெண்ணுக்கு இன்ன மாப்பிள்ளை அல்லது இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண் என்று தீர்மானித்து விட்டால் அதைத் தம்பதிகள் மணமக்கள் ஆறக்ஷபிக்க முடியாது. அது மாத்திரமல்ல இன்னொரு அநியாயம் என்னவென்றால், திருமணம் என்பது நடக்கும் நிமிஷம் வரையில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார். பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டார். 100க்கு 99 திருமணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி இருக்கவே மாட்டார்கள்.

அங்க லக்ஷணம், அறிவு லக்ஷணம், யோக்கியதை லக்ஷணம் ஆகிய எதையும் பார்க்காமலும் தெரியாமலும் தான் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் இருவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒன்று கவனிக்கப்படுகின்றதா என்றால் இருவர் பிறந்த நேரம் என்று சொல்லப்படும் "அது சரியான நேரமோ, தப்பான நேரமோ என்பதைப் பற்றி கவலை இல்லாமல்" ஒரு காலத்தைக் குறிப்பில் வைத்து அதன் மூலமாகவே ஒரு பொறுப்பற்ற நபரால் இருவருக்கும் பொருத்தம் உண்டா இல்லையா என்பது முடிவு செய்யப்பட்டு விடும். சில சமயங்களில் பிறந்த காலம், நேரங்கள் கூட கவனிக்கப்படாமல் பெண்ணின் பெயரின் முதலெழுத்தையும் மாப்பிள்ளையின் முதல் எழுத்தையும் ஆதாரமாக வைத்து பொருத்தம் முடிவு செய்யப்பட்டு விடும். மற்றும் சில சமயங்களில் அதுகூட இல்லாமல் கோவிலில் பூ வைத்து கேட்பது மூலமோ, கருடன் பறப்பது மூலமோ, பல்லி கத்துவது மூலமோ, இருவர் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளின் மீது ஈ(பறவை) உட்காருவதன் மூலமோ, அல்லது கோவில்களில் ஏதாவது ஒருவன் சாமியாடி வாக்கு சொல்லுவதன் மூலமோ கல்யாணம் தீர்மானிக்கப் பட்டுவிடும். எவ்வளவு காட்டுமிராண்டித்தன வாழ்வில் நமது மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.

இது போலவே சடங்குகள் விஷயத்திலும் இந்தச் சடங்குகள் எதற்காக என்றாவது இந்த சடங்கின் அர்த்தம் என்ன என்றாவது இச்சடங்குகளுக்கு அவசியமோ, ஆதாரமோ, ஆரம்ப காலமோ, பொருத்தமோ என்னவென்றாவது மணமக்களுக்கோ பெற்றோர்களுக்கோ மற்றும் பந்து மித்திரர்களுக்கோ யாருக்குமே தெரியாது.

ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பது இந்தப்படிக்கல்ல. மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமும், பொருத்தமும், அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரமே ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்.

இவை மாத்திரமல்லாமல் திருமணம் சம்மந்தமாக செலவு மெனக்கேடு வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைகளைப்பற்றி பழைய முறைக் கல்யாணங்களில் லக்ஷியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளை தகுதிக்கு அதிகமாக கடன் வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது. திருமணத்திற்காக 3 நாள் 4 நாள் 5 நாள் சிலர் 7 நாள் கூட மெனக்கெட்டு அயலூர் பந்து மித்திரர்களையும் தருவித்து மெனக்கெடச்செய்து 5 விருந்து 10 விருந்து என்பதாகச் சாப்பாட்டுச் செலவும், பந்தல் மேளம் சங்கீதம் ஊர்வலம் வாணம் என்பதாக வீண் காரியங்களும் குடிகாரர்கள் குடித்த போதையில் தாருமாராய் நடப்பது போல் கல்யாண போதையில் சிக்கி பணங்கள், நேரங்கள், கஷ்டங்கள் ஆகியவைகள் தாருமாராக செலவாக்கப்பட்டு வருகின்றன. 2, 3 நாளைக்கு ஆக சிலர் பார்த்து புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாருமாரான ஆடம்பர சிலவுகள் கல்யாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார்கள் தலையிலோ விழுந்து கல்யாணக் கடன் பார்வைகளால் வெகு நாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் சில குடும்பங்கள் கல்யாணச் செலவாலேயே பாப்பராகி மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கல்யாணம் என்பதின் முக்கியாம்சங்களாகும்.

மற்றும் கல்யாணம் செய்து கொள்ளும் விஷயத்தில் தம்பதிகளை விட மூன்றாவதவர்களுக்கே சகல சுதந்திரமுமிருந்து வருகிறது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்ன இன்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றோர்கள், பந்து மித்திரர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்கவேண்டும்.

சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக் கொள்வது என்பதுடன் முடிவுபெற்று விடுகின்றது.

மற்றும் இவற்றையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் என்வென்றால் கல்யாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்மந்தம் முக்கியமானது லக்ஷியமானது அல்லவென்றும் அதில் ஏதோ ஒரு தெய்வீக சம்மந்தம் இருக்கிறதென்றும் அதுவேதான் திருமணத்தின் லக்ஷியமென்றும் ஆதலால் அப்பெண்ணும், மாப்பிள்ளையும் அத்தெய்வீக சம்மந்தத்துக்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும் அநீதியையும் பெண் பொருத்துக்கொண்டு வாழ்நாள் முழுமையும் மாப்பிள்ளைக்கு பெண் அடிமையாய் பக்தியாய் இருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் அப்படி இல்லை. திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொருத்ததே ஒழிய வேறு எவ்வித தெய்வீகத்துக்கோ அல்லது எவ்வித கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தபட்டதல்ல என்றே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும்.

மேலும் பழயமுறை கல்யாணமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமேற்பட்ட பிறகு தான் ஒருவர் மீது ஒருவர் ஆசைகொள்ளுவதோ காதல் கொள்ளுவதோ ஏற்பட வேண்டுமே ஒழிய அதற்கு (கல்யாணத்துக்கு) முன்னால் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும், "காதலும்" ஏற்படுவது கூடாதென்றும் குற்றமென்றும் அது விபசாரத்துக்கு சமானமானதென்றும் கூறப்படுகின்றது.

சுயமரியாதைக் கல்யாணத்திலோ, கல்யாணத்துக்கு முன்பாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவருக்கொருவர் ஆசையும் "காதலும்" ஏற்பட்டு அதன் பின்னரே கல்யாணம் நடக்க வேண்டும் என்றும், மற்றபடி கல்யாணம் ஆன பிறகு கல்யாணம் ஆய்விட்டதே என்கின்ற காரணத்திற்காக அங்க ஈனராய் இருந்தாலும் வியாதிக்காரறாய் இருந்தாலும், கொடியவறாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஆசையும் காதலும் கொண்டுதான் ஆக வேண்டுமென்றும் சொல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளுவதில்லை.

மற்றும் பழய முறைக் கல்யாணங்கள் ஒருதடவை கல்யாணமாகி விட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுபடியும் பிரியக்கூடாதென்றும் இப்படிக் கூறாவிட்டாலும் ஆணுக்கு பிரித்துவிடவோ பிரிந்துகொள்ளவோ உரிமை உண்டு, பெண்ணுக்குத்தான் உரிமையில்லை என்றும் பெண்ஜாதி செத்துப்போனால் புருஷன் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்ஜாதி உயிருடன் இருக்கும்போதே புருஷன் மாத்திரம் பல பெண்களை கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்கள் மாத்திரம் எந்தக் காரணம் கொண்டும் புருஷன் எவ்வளவு கொடியவனாகவும் மனுஷத்தன்மை அற்றவனாகவும் எவ் விஷயத்துக்கும் பொருத்தமில்லாமல் கொடுமையும் சித்திரவதையும் போன்ற கஷ்டத்தையும் கொடுப்பவனானாலும் புருஷனை விட்டுப் பிரியக் கூடாதென்றும் வேறு கல்யாணம் செய்து கொள்ள கூடாதென்றும் புருஷன் தான் பக்குவமாவதற்கு முன் தனது 5 வது 10வது வயதிலேயே இறந்துபோனாலும் வேறு புருஷனைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் விதவை என்னும் பெயருடன் உலக சுகபோகங்கள் எல்லாவற்றையும் வெறுத்து மக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் வெறுப்புத்தோன்றும் தன்மையில் வாழவேண்டும் என்றும் சொல்லுகின்றது.

சுயமரியாதைக் கல்யாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும் அறியாமையும் கொடுமையும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் இல்லை. வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே "நரகம்" போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது.

பழய முறை கல்யாணப்படி பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை. வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. சுயமரியாதை கல்யாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கின்றது என்பதுடன் இவைகளே கல்யாண ஒப்பந்தத்தின் ஷரத்துக்களாகும். அநேகமாய் கல்யாண தத்துவம் பழயதும் புதியதும் ஒரு மாதிரிதான். எப்படி எனில் இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை.

ஆதலால் இவ்வித திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை. பெண் மக்களில் பலருக்கு இவ்விஷயத்தில் ஏதாவது மன சஞ்சலம் இருந்தாலும் இருக்கலாம். ஆண்களில் படித்தவர்கள் வித்வான்கள் என்று சொல்லப்படுபவர்களிலேயே சில அழுக்குமூட்டைகள் இருந்துகொண்டு விஷம பிரசாரம் செய்துவரும்பொழுது பெண்களில் இது விஷயமாய் அதிருப்த்தி உள்ளவர்கள் இருப்பது அதிசயமல்ல. ஏனெனில் பெண்களை நாம் எப்படி வைத்திருக்கின்றோம். அவர்களில் 100க்கு 99பேருக்கு அடுப்பங்கரையையும், படுக்கைவீட்டையும் மாத்திரமே காட்டி நகை மாட்டுகின்ற (குtச்ணஞீ) ஸ்டேண்டுபோல் நகைகளை மாட்டி இது என் பெண்ஜாதி (அடிமை) இது உன் பெண்ஜாதி என்று கண்காக்ஷி காட்டு கின்றோமே ஒழிய வேறு அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பதை யோசித்துப்பாருங்கள். வேண்டுமானால் கண்ணைமூடிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்காமல் பிள்ளைகளைப் பெறுவார்கள். இதற்கு ஒரு உபாத்தியாயரோ, அறிவோ வேண்டியதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு பிள்ளைகள் பிறந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அடிமைத்தன்மையில் மோகம் உண்டோ அவ்வளவுக்கவ்வளவு நகைகளை மாட்டிக்கொள்ளுவார்கள். தங்களை விகாரமாய் சிங்காரித்துக் கொள்ளுவார்கள். இவைகளையும், இவை போன்றவைகளையும்தான் நாம் அவர்களுக்குத் தாய் தந்தையர்கள் என்கின்ற முறையில் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆகவே இப்படிப்பட்ட பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரீக ஞானமும், கௌரவமும் உள்ள சுற்றத்தார்களுக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும் நிரம்பவும் கர்நாடக முறையில் பட்டிக்காட்டு கிராமவாசப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாயிருந்தது என்பது அவரவர்களுக்கே தெரிந்திருக்கலாம். இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை, சுயமரியாதை இல்லை என்றால் அவற்றிற்கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப்பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும்.

கடைசியாக தோழர்களே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேன். கல்யாணமானவுடன் பெற்றோர்கள் பிள்ளைகளை எதிர்பார்ப்பார்கள். சுற்றத்தார் எத்தனை ஆயிற்றென்று கணக்குக்கூட்டி வருவார்கள். தம்பதிகள் பிள்ளை பெறுவதினால் படும் கஷ்டம் காயலா அசௌகரியம் வாலிபம் பாழாவது அதிக பிள்ளைகள் பெறுவதினால் தரித்திரம், துன்பம், வியாகூலம், விசாரம், மானங்கெட நேருவது, சுயமரியாதை இழந்தாவது வாழ ஆசைப்படுவது ஆகிய காரியங்களைப் பற்றி யெவரும் சிந்திக்க மாட்டார்கள். யாதொரு பொறுப்பும் அறிவும் அற்று இன்று மணமக்களைப் பார்த்து "16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும்" என்று சொல்லுகிறவர்கள் நாளைக்கு ஒரு குழந்தைக்கு அரைச்சங்கு பால் வார்க்கக்கூட சம்மதிக்கமாட்டார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால்கூட பக்கத்து வீட்டில் குடியிருந்துகொண்டு கணக்குக்கூட்டிப் பார்த்து அசூசையும் வெறுப்பும் அடைவார்களே தவிர சிறிது பரிதாபம்கூட காட்டமாட்டார்கள். ஆதலால் மணமக்கள் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சிறிது ஜாக்கிரதையாகவும் அறிவுடமையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

--------------------------08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார் பேட்டையில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில்  தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை.

34 comments:

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் சிறப்பு நிகழ்வு!


நாளை (14.3.2014) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சிறப்பு விருந்தினர் பகுதியில் விடியலே வா! என்ற நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்றத் தேர்தல் 2014, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்வு ஒளிபரப்பாகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/76840.html#ixzz2vtNQWy6b

தமிழ் ஓவியா said...


பிற இதழிலிருந்து....! ஆர்.எஸ்.எஸ். நாடகம் எடுபடாது!


ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்து ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங் அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்றும் தங்களுக்கும் அரசி யலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவ்வப்போது பம்மாத்து செய்யும். ஆனால் ஆர்எஸ்எஸ் வரலாற்றை அறிந்த வர் அறிவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமே பாஜக என்பதை பாஜக வின் ஒவ்வொரு அசைவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினாலேயே தீர்மானிக்கப்படு கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் கனவில் மிதந்து கொண்டிருந்த எல்.கே. அத்வானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை முன் மொழிந்து முடிவாக் கியது ஆர்எஸ்எஸ் தான்.

இதனால் ஆத் திரமடைந்த அத்வானி அக்கட்சியிலி ருந்தே விலக முயன்றார். அவரை அழைத்து கண்டித்து கட்சியில் தொடருமாறு அறி வுறுத்தியதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். பாஜகவில் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடியை தீர்ப்பதும் அந்த அமைப்பே.

இந்த நிலையில் ஏதோ நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம். பிரச்சனைகளை முன்னிறுத்த வேண் டும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் மோகன்பகவத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டினுடைய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மதவெறி. ஒன் றாக வாழும் மக்களிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டு அவர்களை மோத விடும் இழிசெயலை செய்துவரும் அமைப்புகளில் முதலிடம் வகிப்பது ஆர்எஸ்எஸ்தான். இந்த லட்சணத்தில் மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசப் போகிறார்களாம்.

மோடியை ஒரு விற்பனைப் பொருள் போல விளம்பரப்படுத்த பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் நியமிக்கப்பட் டுள்ளன.

இதுதவிர பல்வேறு ஊட கங்களை வாடகைக்கு அமர்த்தி மோடி அலை வீசுகிறது, கரையைக் கடந்து விட்டது என்றெல்லாம் கதைகட்டி விடு கிறார்கள். ஆனால், இந்தக் கதைகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே கூட புளித்துப்போய்விட்டது போலும்.

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு ரகசிய அமைப்பாகவே கட்டமைத்துள்ளது. ஆயுதப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாஜக வின் பிரதான தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். பாஜகவுக்கு அந்தரங்க ஆலோசனை வழங்குவது அவர்களே. ஆனால் தேர்தல் வந்தவுடன், தன்னை ஒரு சுயேச்சையான அமைப்புபோல காட்டிக்கொள்ள முயல் கிறார்கள். இது பலிக்காது.

மிக முக்கிய கடமை

சிறுபான்மை மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிற, கேடுகெட்ட சாதிய வர்ணாசிரம முறையை நிலைப் படுத்த விரும்புகிற, கலவரங்களின் மூலம் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று கருதுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதிதான் பாஜக. நாடு விடுதலை பெற்றவுடன் மக்கள் ஒற்று மைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை படுகொலை செய்ததும் இவர்களது சித்தாந்தமே ஆகும்.

ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி பாஜக ஆட்சி நடத்தினால் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலே நடை முறைப்படுத்தப்படும். பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் ஆர் எஸ்எஸ் அமைப்பை பின்னுக்குத்தள்ளுவது தேசத் தின் இன்றைய மிக முக்கிய கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர் தலையங்கம், 13.3.2014

Read more: http://viduthalai.in/page-2/76845.html#ixzz2vtNhGbdY

தமிழ் ஓவியா said...


வகுப்புவாதம் ஒழியாது


வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை.

(குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/76842.html#ixzz2vtNsdiLA

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (2)

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று - எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

தமிழ் ஓவியா said...


அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.

ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76844.html#ixzz2vtOErLGX

தமிழ் ஓவியா said...


சபாஷ் - தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு


- குடந்தை கருணா

சமூக நீதி, மதசார்பின்மை, கூட் டாட்சி தத்துவம், மொழி நலன் இவை, திராவிடர் இயக்கத்தின் அடித் தள கொள்கை. அதன் அடிப்படை யில் தேர்தல் அறிக்கை உள்ளது.

1. தனியார் துறையில் இட ஒதுக்கீடு

2. முழுமையான ஜாதி வாரி கணக் கெடுப்பு. அதன் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பங்கீட்டை அறிந்து, அதன்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம்.

4. அந்தந்த மாநில அரசே, இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயம் செய்திட அதிகாரம்.

5. சேது சமுத்திரத் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

6. ஈழத் தமிழர் பிரச்சினை

7. சுயமரியாதைத் திருமண சட் டத்தை அகில இந்திய அளவில் நிறைவேற்றிட வேண்டும்.

8. பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு.

9. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு.

10. முதியோருக்குப் பாதுகாப் பான மருத்துவ வசதி.

11.மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு.

12. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

13. தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக திமுக பாடுபடும்.

14. அனைத்து மத்திய அரசின் தேர்வுகளும், தமிழில் எழுதிட ஆணை.

மதச் சார்பற்ற அரசு மத்தியில் அமைந்திட திமுக உறுதி. இந்தியாவை வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உரு வாக்கிட திமுக பாடுபடும்.

Read more: http://viduthalai.in/page-2/76848.html#ixzz2vtP6DI1T

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


என்ன அளவுகோல்?

அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி வழங்கலாம்; ஆனால் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது. நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கினாலும் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்று தமிழகத் தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

கட்சி நிர்வாகிகளா? பொது மக்களா? என்பதற்கு என்ன அளவுகோலை வைத்துள்ளார்களோ தெரிய வில்லை; தண்ணீர்ப் பாட்டில் வாங்கினாலும் அது தேர்தல் கணக்கில் சேருமா? என்று தெரியவில்லை. தண்ணியிலும் பல வகை உண்டே!

மோடியின் கைத்தடி பேசுது

கேள்வி: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் ஞான தேசிகன்?

பதில்: அவர் முன் மொழிந்ததை நான் வழி மொழிகிறேன். - துக்ளக் 19.3.2014,பக்கம் 9

பி.ஜே.பி.யின் மோடி தான் பிரதமராக வர வேண் டும் என்று ஊசி முனையில் தவம் இருக்கும் சோவின் கருத்து இது. ஒருவனைத் தெரிந்து கொள்வதற்கு அவன் நண்பன் யார் என்று காட்டுங்கள் என்பது பொதுவான பழமொழி.

கூட்டுக் கம்பெனி அதிபர்கள்

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவன், கிருஷ்ணகிரி தொழிலதிபர் மஞ்சுநாத், ஒசூர் தொழிலதிபர் அசோக் நாராயணன் ஆகியோர் பி.ஜே.பி.யில் இணைந்தனர். பிஜேபி என்பதே கார்ப்பரேட் கம்பெனி தொழிலதிபர் களின் கூடாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமே! பிஜேபி என்றாலே உயர் ஜாதி - பணக்காரர்களின் கூட்டுக் கம்பெனி லிமிடெட் என்பது இன்னும் புரியவில்லையா?

ஜோஷி புலம்பல்!

உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதி பா.ஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் சொந்த தொகுதியாகும். இங்கு, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்டால், உ.பி மற்றும் அண்டை மாநிலமான பீகாரில் செல்வாக்கு அதிகரிக்கும் என பா.ஜ தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் வார ணாசியில் மீண்டும் போட்டியிடுவதில் பிடிவாதமாக உள்ளார் ஜோஷி. அதை விட்டுக் கொடுக்கும்படி ஜோஷியை பா.ஜ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோபத்தை வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத் தினார் முரளி மனோகர் ஜோஷி. பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பாராட்டு விழா வாரணாசியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜோஷி பேசுகையில், இந்தியாவில் பிறந்தது, பிரயாக் மற்றும் காசி போன்ற இடங்களில் வாழ்ந்தது என் நல்ல வாய்ப்பு. ஆனால் நான் செய்த பாவம் என்னை அரசியலிலும், நாடாளுமன்றத்திலும் இருக்க வைத்து விட்டது.

நாடு முழுவதும் ஒரு அலை வீசுகிறது. அது உங்களுக்கு தெரியுமோ... தெரியாதோ... ஆனால் கடவுள் விஸ்வ நாத்துக்கு எல்லாம் தெரியும் என சிரித்தபடி கூறினார் ஜோஷி. வாரணாசியை விட்டுக் கொடுக்கும் படி பா.ஜ தலைவர்கள் வலியுறுத்துவதால் ஏற்பட்ட மனவேத னையை, முரளி மனோகர் ஜோஷி இசை விழாவில் இப்படி கொட்டித் தீர்த்து விட்டார் என கூறப்படுகிறது. எல்லாம் காசி விசுவநாதர் பார்த்துக் கொள்வார் என்று மூலையில் ஒடுங்கிக் கிடப்பதுதானே யார் தடுத்தது?

புலம்புகிறார் சோ

பா.ஜ.க. உட்கட்சிப் பூசல் ஓயவில்லையோ என்று கருதும்படியாகவே, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தலைமைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள் அமைந் துள்ளன. இவர்களைப் போன்ற முக்கியஸ்தர்கள் தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன விதங்களில் மோடிக்குத் தொல்லைகள் தரப் போகிறார்களோ! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று விட்டால் கட்சிக்குள் யார் யாரிடம் இருந்து, என்னென்ன தொந்தரவுகள் தலைதூக்குமோ? கட்டுப்பாடு சீர்குலைவு அக்கட்சிக்கு நல்லதல்ல.
- துக்ளக் 19.3.2014

சு...மூ...க....ம்!

பா.ஜ.க. கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்கிறது - நடக்கிறது என்று பராக்குப்பாடுகிறார் திருவாளர் இல. கணேசன்! ஆனால் நடப்பது என்ன? ஒரே தொகுதியை பல கூட்டணிக் கட்சிகள் கேட்கும் விசித்திரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பா.ம.க.வின் பிடிவாதத்தால் தொகுதி பங்கீட்டில் இழுபறி என்று தினத்தந்தி கூறுகிறது. நல்ல சு...மூ...க...ம் நல்ல ச...மூ....க....ம்!

இடதுசா....ரி!

மதவாத எதிர்ப்பை இடதுசாரிகள் முன்னெடுத்துப் பேசுகின்றனர். சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத் கென்னடி என்பவர் தலைமையிலான புதிய மார்க்ஸிஸ்டு கட்சி வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரிக்குமாம். மார்க்ஸிசத்தை எந்தப் பள்ளியில் இவர் படித்தார் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/76890.html#ixzz2vzD0pdqZ

தமிழ் ஓவியா said...


செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970

Read more: http://viduthalai.in/page-2/76898.html#ixzz2vzDScqTW

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ்.-இன் இரட்டை வேடம்


- குடந்தை கருணா

மும்பை பிவாண்டி பகுதியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் காந்தியை சுட்டுக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள் கையைத்தான் பிஜேபி ஏற்றுக்கொண் டுள்ளது. சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருந்தவர். ஆனால், இன்று, காந்தியாரையும், சர்தார் படே லையும் பிஜேபி கொண்டாடுவதாக சொல்கிறது என பேசினார்.

உடன், ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறது; சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கும் என சொல்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போது புகழ் பாடுகிறார் மோடி. அவருக்கு மிக உயரமான சிலையை அமைத்திட நாடு முழுவதும் இரும்பு திரட்டுகிறார். மோடியின் இந்த செயலை பாஜக ஆதரிக்கிறது. பல்லாயிரம் கோடியில் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.

காந்தியார் சுடப்பட்ட நிலையில், 1948-இல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல். அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி என்ன கருத்தை தெரிவித்தார்? ஆர்.எஸ்.எஸ்-இன் நடவ டிக்கைகள் அரசுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த விஷத் தன்மையான விளைவினால், காந்தியா ரின் விலை மதிப்பில்லா உயிரை இழந்து நாடு அவதிப்பட காரணமா யிற்று.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். என சர்தார் படேல் கருத்து தெரிவித்தார். பின் அவரது உள்துறை அமைச்சக ஆணையின்படி தான் 5.2.1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

நாட்டில் வெறுப்பும், வன்முறையும் முற்றிலுமாக வேரறுக்க ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என தடை ஆணையில் விளக்கமும் அளிக்கப் பட்டது. காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் விஷ விளைவு என சொன்னவர் சர்தார் படேல்; ஆர்.எஸ். எஸை தடை செய்தவர் சர்தார் படேல். இந்த கருத்தைத் தான் ராகுல் காந்தி தற்போது நினைவு படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி மீது கோபப்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், ராகுல் சொன்ன காரணத்தை உறுதிப்படுத்திய சர்தார் படேல் மீது தான் கோபப்பட வேண்டும்; அவமதிப்பு வழக்கு போட வேண்டும்.

ஆனால், மக்கள் இந்த வரலாற்றையெல்லாம் மறந்தி ருப்பார்கள் என நினைத்து, இன்றைக்கு படேலுக்கு சிலை வைக்க முயல்வ தும், படேல் சொன்ன காரணத்தை நினைவு படுத்திய ராகுல் காந்தி மீது வன்மம் காட்டுவதும், வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை வேடத்தைத் தான் அம்பலப்படுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page-2/76897.html#ixzz2vzDvmu5a

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு இணையதள கல்வி: கூகிள் புதிய திட்டம்

இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கி யுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண் களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார்.

கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங் களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76896.html#ixzz2vzE9vMdQ

தமிழ் ஓவியா said...


மே. ஜெர்மனி கிண்டல் செய்கிறது!


சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் பெரும் பஞ்சம். அப்பொழுது மேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்று இந்தியாவைக் கிண்டல் செய்து எழுதி இருந்தது. பஞ்சமோ பஞ்சம் என்று இந்திய மக்கள் தவிக் கிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் கூட எலியைக் கடவு ளாகக் கருதி, அதற்கு உணவுப் பண்டங்களை வைத்து படைக்கிறார்களே! என்று எழுதி இருந்தது.

கட்டுரையுடன் மட்டும் நிற்கவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எடாவா என்ற இடத்தில் உள்ள எலிச் சாமி கோயிலில் எலிக்குப் படையல் போடுவதை அப்படியே படம் பிடித்தும் போட்டு விட்டது.

இதைக் கண்டதும் நமது நாட்டு வைதீகப் புலிகள் ஓலமிட்டன. மதவாதிகள் மனம் புண்படுவதாக மூக்கால் அழுதன. நாட்டு உறவையே துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கூடக் கூறினர். இந்தியாவின் வெளி விவகார இலாகா மேற்கு ஜெர்மனியில் உள்ள நமது தூதுவர் மூலம் அந்நாட்டு அரசை விளக்கமும் கேட்கச் செய்தது.

ஆனால், அந்தப் பத்திரிகையோ, நாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை; மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிவிட்டது. அதற்கு பிறகு இந்தச் செய்தி உண்மையா என்று கண்டறிய உ.பி மாநிலம் எடாவா மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது. அவரும் அது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றும் கொடுத்தார்.

உயர்ந்த ரக தானியத்திலும், நெய்யிலும் பண்டங்கள் செய்யப்படுவதாக ஜெர்மனி பத்திரிகை கூறுவது தவறு. சாதாரண ரகத் தானியத்தையும், டால்டாவையுமே பயன்படுத்துகிறார்கள். வெள்ளித் தட்டிலே தின்பண்டங்களைப் படைக் கிறார்கள் என்பதும் தவறு; பித்தளைத் தட்டிலேதான் படைக்கிறார்கள்! என்று அந்த அறிக்கையிலே கூறப்பட்டு இருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzEwZJ9u

தமிழ் ஓவியா said...

காட்டுமிராண்டி ஏன்?

நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.

இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.

நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFEP1tJ

தமிழ் ஓவியா said...

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,



பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFSIHVs

தமிழ் ஓவியா said...

ஒரு எடுத்துக்காட்டு!

19.6.1977 தேதிய ஆனந்த விகடனில் 77ஆம் பக்கத்தில், கம்ப்யூட்டரைத் தோற்கடித்த கணித மேதை! என்ற தலைப்பிட்டு இந்தியா டுடே என்ற ஏட்டில் வந்த கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

கணித மேதை சகுந்தலாதேவி அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள உலகிலேயே மிக வேகமாகக் கணக்குப் போடும் கம்ப்யூட்டர் ஒன்றை போட்டியில் தோற்கடித்து, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோயின் என்ற பட்டப் பெயருடன் திரும்பியிருக்கிறார்.

சகுந்தலாதேவி ஏன் தன்னுடைய கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை? நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: கணவனும் மனைவியும் உண்மையிலேயே சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

சாதாரணமாக திருமணமானதற்குக் அடையாளமான அணிகலன்களைக் கூட நான் அணிவதில்லை. இதைப் படித்த பிறகாகிலும் பெண்கள் ஆண்களுக்கு தாம் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, தாலி கட்டிக் கொள்ளும் பழக்கத்தினை வெறுத்து ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.

-கிருஷ்ணவேணி, (தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டவர்) பண்ருட்டி

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFmJckY

தமிழ் ஓவியா said...

நேருவின் எதிரிகள்!

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் இறந்த பிறகு எனக்கு மதச்சடங்குகளுடன் அடக்கம் செய்யக் கூடாது என்று நேரு தனது உயிலில் கூறியிருப்பது தெரிந்ததே. அப்படி இருந்தும் அவர் இறந்த பிறகு மதானுச் சாரங்களுடன் மதச் சடங்குகள் செய்யப்பட்டுத் தான் அவர் எரிக்கப்பட்டார்.

நேருவின் விருப்பத்திற்கு எதிராக இப்படி நடந்ததற்கு இந்திராகாந்தியும், அன்றைய உள்துறை அமைச்சர் நந்தாவும் தான் காரணம் என்று நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த எம்.ஓ. மத்தாய் தெரிவித்துள்ளார்.

நேரு மறைவதற்கு முன்னர் நேருவின் சாவை முறியடித்து அவர் ஆயுள் நீள்வதற்காக 4,25,000 முறை ஆயுள் நீடிப்பு மந்திரங்கள் ஓதப்பட்டதாக நந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நேருவின் தங்கை திருமதி விஜயலட்சுமி பண்டிட் எதிர்ப்பு தெரிவித்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் என்று மத்தாய் தெரிவித்திருக்கிறார்.

தகவல்: நேருவிற்குப் பிறகு இந்தியா என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFwEHoA

தமிழ் ஓவியா said...

மத விபச்சாரம்

ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.

பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzG9rdlR

தமிழ் ஓவியா said...


அதிசயம்! ஆனால் உண்மை!! பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.65,000 அபராதம் விதித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி


பெங்களூரு, மார்ச் 14- உச்சநீதி மன்றத் தின் ஆணைப்படி விரைந்து முடிக்க வேண்டிய பெங்களூருவில் பல ஆண்டு களாக நடைபெற்றுவரும் தமிழக முதல மைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தாமேல் வாய்தா வாங்கி வளர்ந்துள்ள நிலையில், இறுதி விசாரணைக்கு நீதிபதி தேதி குறித் திருந்தார்.

அரசு தரப்பில் அரசு வழக்குரைஞரான பவானிசிங் என்பவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, நீதிமன்ற வழக்கை தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிக் கொண்டு வருவதைக் கண்டு இன்று (14.3.2014) அவரது போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது ஒரு நாள் சம்பளத்தை (ரூ.65,000/-) அபராதமாக விதித்தார்!

இவரைத் தான் தன் வழக்கில் அரசு வழக்குரைஞராக (பப்ளிக் பிராசிகியூட்ட ராக) நீடிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜெய லலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/76933.html#ixzz2vzH0Slyw

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தில் பெண்கள் நிலை?


1. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத்தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

3. இந்த உலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதினால்தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள். - மனு 2-213.

4. பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே. - பாரதம் அனுசான்ய பருவம்

5. பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவை எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. - பாரதம் 43-22.

6. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது - மனு 9-15

7. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவதஸ்கந்தம் 4-14-42

Read more: http://viduthalai.in/page2/76953.html#ixzz2w55Ze23e

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதி களையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங் களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம்.

1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?
நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங் களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்கா விட்டால், கல்யாணத்துக்கு வரச் சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் இவை.

2. From Address மாற்றி மின்னஞ் சல் அனுப்புவது எப்படி?
மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ் சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப ண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இவை.

3. To, Cc, Bcc என்ன வித்தியாசம்?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் அய்டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc – என்ன வித்தியாசம் என்பதாகும்.

4. Gmail ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பா லான பயனர்கள் பயன்படுத்தும் இமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail /ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.

5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?
நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களி டம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படிGmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு ஆகும்.

6. Attach செய்ய முடியாத File-களை Attach செய்வது எப்படி?

நண்பர்களுக்கு ஏதேனும் File -களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவாகும்.

7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர் கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத் திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக் கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு.

இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை கிநீநீமீ செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக் கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் இது.

8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பல வற்றின் அர்த்தம் தெரியாமல் இருப் போம். அதே ஜிமெயில் முழுவ தையும் தமிழில் மாற்ற முடிந்தால்? இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.

9. ஜிமெயிலில் Undo Time Limit - அய் அதிகரிப்பது எப்படி?
ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படு கிறது. அதே போல ஒரு மின்னஞ் சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit – அய் எப்படி அதிகரிப் பது என்ற பதிவுதான் இது.

Read more: http://viduthalai.in/page3/76957.html#ixzz2w55mo3g6

தமிழ் ஓவியா said...


வேதங்களில் திராவிடர் ஒழிப்பு!


(வேத காலத்தில் ஆரிய - திராவிடப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பதற்கு வேதங்களே தக்க சான்றாகும். வேதங்களுக்குக் காலம் இல்லை; கடவுள் அருளியது என்பதெல்லாம் அசல் பார்ப் பனக் கட்டுக் கதைகள் என்பது அதில் வரும் குறிப்புக்களைப் பார்க்கும் எவருக் கும் புரியும். ஆரியர்கள் படையெடுத்து வந்த பிறகு தான் அவை தொகுக்கப்பட்ட ஆரிய நூல்கள் என்பது சிந்திக்கும் எவருக்கும் தெளிவாய்த் தெரியும்.

அவ்வேதங்களில் திராவிட மக்களை, பூர்வீகக் குடிகளை அவர்கள் எவ்வாறு அழித்தனர், ஒழித்தனர் என்பது கீழ்வரும் சுலோகங்கள் மூலம் எளிதில் விளங்கும் என்பதால் அவற்றை இங்கே திரட்டித் தருகிறோம்.

ஓ, உலகம் போற்றும் இந்திரனே, ஸுஷ்வருவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயி ரத்துத் தொண்ணூற்றியொன்பது படை களையும் நீ உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர் களுக்கு உதவி புரிந்தாய்.

(ரிக்வேதம், மண்டலம் 1 மந்திரம் 53, சுலோகம் 9)

ஆரிய அரசன் தாபிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ! இந்திரனே! எமனுலகுக்கு அனுப்பினாய்!

(ரிக் வேதம், மண்டலம் 4, மந்திரம் 30, சுலோகம் 21).

ஓ, தீரனான இந்திரனே, உன் வலை பிரம்மாண்டமானது; ஆயிரக்கணக்கான வர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலு டையது; ஒன்று, பத்து, நூறு,ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் நூற்றுக்கணக்கான, லட்சக்க ணக்கானவர்களைக் கொன்றாயே!

(அதர்வண வேதம், காண்டம் 8, மந்திரம் 8, சுலோகம் 7).

ஓ, இந்திரனே! ஸோமனே! ராட்சசர் களை எரி! எரி!! நசுக்கு! நசுக்கு!! இருண்ட வனாந்திரங்களில் ஒன்று, பத்து, நூறாய்ப் பெருகி வருகிற அந்த அசுரக் கூட்டங் களை அடக்கு! அடக்கு!! சின்னா பின்னப் படுத்து; மடையர்களை அக்கினி ஜ்வாலை யால் சுட்டுப் பொசுக்கு! சித்திரவதை செய்! துண்டு துண்டாக வெட்டு!

(இது ரிக்வேதம் 7ஆவது மண்டலம், 104வது மந்திரம், சுலோகம் 8).

ஓ, இந்திரனே! ஸோமனே அந்த அசுரக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையே உருவானவர்களை அக்கினி குண்டத்தில் வைத்து நீர்ப்பானையில் வேக வைப்பது போல் அவித்துக் கொல்! பிராமண துரோகிகளான அந்தப் பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி ஹிம்சிப்பாயாக!

(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 1).

ஓ இந்திரனே! ஓ, ஸோமனே! வான மண்டலத்திலிருந்து கொடிய ஆயுதங் களைக் கீழே சொரிவீர்களாக; பூமியிலி ருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! பிரதி தினமும் பெருகிவரும் ராட்சசக் கூட்டங் களை எதிர்ப்பதற்காக மலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான அக்கினி யாஸ்திரங்கள் தோன்றும்படி அருள்புரிவீர்களாக!

அசுரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசுக்க! பிற்கால சந்ததிகள் அழிக! பூமி தேவி அசுரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்!

(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 4).

Read more: http://viduthalai.in/page3/76956.html#ixzz2w55xRWCi

தமிழ் ஓவியா said...


டாக்டர் முத்துலட்சுமியை அய்யர் ஆக்கி மகிழும் பார்ப்பன ஏடுகள்

பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்து போராடி அதை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் முத்துலட்சுமி.

அப்போது தேவதாசி முறையை ஆதரித் தும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையா கொண்டு வந்த மசோதாவை எதிர்த்தும் காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி அய்யர்,
மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது.

பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக் கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும். என்றார்.

அப்படியானால், இனி அந்த புனித மான வேலையை உங்கள் சமூகப் பெண் களை வைத்துச் செய்து கொள்ளுங்கள் என்று பணிவோடு பதிலடி கொடுத்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

ஆனால், இன்றைக்கு தினமணி, தினகரன் உட்பட பல பார்ப்பன பத்திரி கைகள், இந்த செய்திகளையும் பெரி யாரின் அரசியலில் அவரின் பங்களிப் பையும் இருட்டடிப்பு செய்து அவரின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அவரை ஒரு பார்ப்பனராக சித்திரிக் கிறார்கள்.

பெரியார் வழியாக அவர் அரசியல் அறிவு பெற்றதினால்தான் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டம், தேவதாசி எதிர்ப்பு மசோதா, தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர் வுப் போராட்டம் முதலியவற்றை சிறப் பாக செய்தார்.

பார்ப்பனர்களோ, டாக்டர் முத்து லட்சுமியின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அழுத்திச் சொல்கிறார்கள்.

ஆனால், டாக்டர் முத்துலட்சுமி திரும ணத்திற்கு முன்பும் பின்பும் தன் பெய ருக்கு பின் அய்யர் என்று போட்டுக் கொள்ளவில்லை. அதை இழிவாக கருதிய அவர்தான், தன் கணவருக்கு பின்னால் இருந்த ரெட்டி என்கிற பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.

ஜாதி படிநிலையில் அய்யர் என்பதே உயர்ந்தது. ரெட்டி ஒரு சூத்திர ஜாதி.

ஆனால், அய்யரை விட ரெட்டியை அவர் உயர்வாக அல்லது மரியாதையாக கருதியதற்கான காரணம் புரிய வேண்டு மானால் அவரின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இசைவேளாளர் சமூகத்தை, தேவதாசி சமூகமாக நடத்திய பார்ப்பனக் கும்பல், இசைவேளாளர் சமூகத்திலிருந்து வந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை பார்ப்பனராக சித்தரிக்கிறது,

இந்த நாட்டுக்காக பாடுபட்ட பார்ப் பன சமூக முற்போக்காளர்கள் வரிசை யில் கணக்கு வைத்துக் கொண்டு பார்ப் பனீயத்தின் சதியை மறைக்க முயற்சிக் கிறது. அவர் தன்னை பார்ப்பனராக உணர்ந்திருந்தால், சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து, உங்கள் சமூகப் பெண்களை வைத்துச் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் பேச வேண்டும்?

அது மட்டுமல்ல அவர் பார்ப்பனராக இருந்திருந்தால், பெண் விடுதலைக் குறித் தும் பெண் கல்வி குறித்தும் தீவிரமாக எழுதிய பாரதி, 1912 ஆண்டே இந்தியா வின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி குறித்து பாராட்டி பக்கம் பக்கமாக எழுதியிருப் பாரா? ஆனால், உலகத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த நம் மஹாகவியோ, உள்ளுர் பெண்ணின் அகில இந்திய சாதனை குறித்து, ஒரே ஒரு வார்த்தைகூட எழுதவில்லை.

- வே.மதிமாறன்

Read more: http://viduthalai.in/page4/76958.html#ixzz2w56DtS1M

தமிழ் ஓவியா said...


மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹாலிவுட் நடிகர் சாட்டை!

ஹாலிவுட் நடிகராகிய கிறிஸ் ஓடவ்ட் மதம் குறித்து கூறும்போது, மதமானது பிறரைத் தாக்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி கொண்டதாகும் என்றார்.

பிரைய்ட்ஸ்மெய்ட்ஸ் படத்தின் நாயகன் கிறிஸ் ஓடவ்ட் அவருடைய நாத் திகக் கண்ணோட்டத்தில் இவ்வாறு கூறு கிறார். ஆனாலும், அவருடைய இளமைக் காலங்களில் குறைந்த சுதந்திரத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார்.

இப்போது மதக்கோட்பாடுகள் மனிதனின் வளர்ச்சியை முடக்குகின்றன. வெள்ளை மாளிகையிலிருந்து அவர் இனத் தைச் சேர்ந்த கிறித்துவ மதவாதிகளைத் திருப்திபடுத்த எல்லைகளைக் கடந்து கிறித்துவத்தின் மீதான செயலைச் செய்வ தாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாமீது குற்றம் சாட்டுகிறார். கிறிஸ் ஓடவ்ட் மதம் சொல்லும் இயற்கைக்கு மேலானதாக சொல்லப்படும் கடவுள் மீதான நம்பிக் கையை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

கிறிஸ் ஓடவ்ட் பிரிட்டிஷ் ஜிக்யூ என்கிற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: என் வாழ்நாளில் மற்ற வர் விருப்பத்தினுள் நுழைவதில்லை என்று இருந்துள்ளேன். மற்றவர் நம்பு கின்ற உரிமையை மதிக்கிறேன். கால ஓட் டத்தில் மதக்கருத்துக்களின் அழுத்தங் களால் சுதந்திர சிந்தனை குறைவதாகக் கருதுகிறேன்.

மதக்கருத்துக்கள் உலகைப் பாழ்படுத்துவதைப் பார்த்துக் கொண்டி ருக்க முடியாது, மற்றவர்களும் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதத்தால் இனவெறி ஏற்படும்போது, திருப்பு முனையாக அது தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.

இயற்கைக்கு மேலான தென்கிற மதக் கருத்துகள் பைத்தியக் காரத்தனமானவை என்று கூற அனுமதிக் கா விட்டால் அனைவரையும் பைத்தியக் காரர்களாக ஆக்குகிறார்கள் என்றுதான் பொருள். மத நம்பிக்கையாளரை, கடவுள் நம்பிக்கை உள்ளவரை அமெரிக்க அதிப ராக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆவி உல கில் மனிதன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆவி உலகிற்கே போகட்டும்! பராக் ஒபாமா கடவுள்மீது நம்பிக்கை உள்ளவ ராக எந்தவகையிலும் நான் கருதவில்லை. இவ்வாறு ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஓடவ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/76959.html#ixzz2w56P2uUM

தமிழ் ஓவியா said...


சொன்னார்கள்

நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந் தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன முள் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை.
- எமிலி போஸ்ட்

மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பா னேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது.
- கார்டினல் நியூமென்

பிரச்சினைகள் என்பது முன்னேற் றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வரா தீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்

ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்

நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி

பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம்.
- டாவெநன்ட்

எப்படிப் படிப்பது என்பதைத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும், தன் னுடைய சக்தியால், தன்னையே பெரிதாக்கிக் கொள்ள, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வழிகளைப் பெருக் கிக் கொள்ள தன்னுடைய வாழ்க் கையை முழுமையானதாக, முக்கியத் துவமும் மகிழ்ச்சியும் உடையதாக ஆக்க முடிபவனாகிறான்.
- ஆல்டுவஸ் ஹக்ஸ்லி

அதிக எச்சரிக்கையுள்ளவன் சிறிய அளவே நிறைவேற்றுவான்.

@@@@@@@@@

வெற்றி என்பது காலந்தவறாமை, திட்ப நுட்பம் என்ற இரண்டு மிக எளி மையான பெற்றோர்களின் குழந்தை.
- லாங்பெல்லோ

கடமை என்ற அடித்தளத்தின் மேல் குடிகொண்டுள்ள ஒரு புன்முறுவல். உலகத்திலேயே மிகவும் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாகும்.
- ஜே.டி. ராக்பெல்லர்

மகிழ்ச்சிக்கு வழி மற்றவர்களை மகிழ்ச்சியுடைய வர்களக்குவது. இறந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம் ஒரு குறைபாடற்ற நல்ல நிகழ்காலத்தை அழிக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page4/76960.html#ixzz2w56XHCz4

தமிழ் ஓவியா said...


சாக்ரட்டீஸின் பொன் மொழிகள்


தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையைப் பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையைப் பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடுவோமா?

ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயற்கையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது

விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களைச் செய்திருக்கிறபோது நாமும் தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடு கிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது.

தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமாக செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இவை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page5/76961.html#ixzz2w56yo66H

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் திரட்டு


சமஸ்கிருதத்துடன் போராட்டமா?

திருவையாற்று அரசர் கல்லூரியில் நீதிக்கட்சித் தலைவர்கள் எவ்வாறு தமிழை மாணவர்களுக்குத் கற்பிக்க ஏற்பாடு செய் தனர் என்பதை த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களின் பணியைப்பற்றி குறிப்பிடுகிறபோது எழுதியிருந்தோம். இதே காலகட்டத்தில் 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியன்று இந்து நாளேடு சமஸ்கிருதத்துடன் போராட்டம் எனத் தலைப்பிட்டு தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக விடுதலை ஏடு சமஸ்கிருதத்துடன் போராட்டம்? எனும் தலைப்பில் ஒரு தலையங்கத்தை வரைந்திருந்தது.

அத்தலையங்கம் வருமாறு:- ஆரியர்களுடைய அரசியல், சமுதாய, மத ஆதிக்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே பெரிதும் பாடுபட்டுவரும் பத்திரிகை களில் இந்துப் பத்திரிகை முதன்மை யானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்பத்திரிகை சென்ற 19.4.1941 சனிக்கிழமையன்று சமஸ்கிருதத்துடன் போராட்டம் என்று ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது.

திருவையாறு அரசர் கல்லூரியிலிருந்து, சாகித்ய சிரோன்மணி வகுப்பை எடுத்து விடும்படி தஞ்சை ஜில்லா போர்டார் தீர்மானித்துவிட்ட செய்தி ஒன்று.

கும்பகோணம் ராஜா பாடசாலையி லிருந்து சாகித்ய வகுப்புகளை நீக்கிவிடு வதாகக் கும்பகோணம் தேவஸ்தானக் கமிட்டியார் தீர்மானித்திருக்கும் செய்தி இரண்டு. ஆகிய இந்த இரண்டு செய்திகளே இந்துவின் நெஞ்சத்தைக் கலக்கி விட்டன.

அதனால் ஆரிய ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்துவிட்டதே என்று அகங்கலங்கி சமஸ்கிருதத்துடன் போராட்டம் என்று தலையங்கம் எழுதத் தொடங்கிவிட்டது.

இதிலிருந்தே அது யாருடைய நன்மைக் காகப் பாடுபடும் பத்திரிகையென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அது இந்த இரண்டு செய்கைகளை எடுத்துக் காட்டிப் புலம்புவதோடு நிற்கவில்லை.

உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கும் போது, தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தாய்மொழிப் பயிற்சியுடையவராக இருக்க வேண்டும் என்று அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் உத்தரவும் வட மொழிப் பயிற்சிக்குத் தடை செய்வதாகக் குறித்திருக்கிறது. இதிலிருந்து தமிழ் மொழியின் மீது அதற்குள்ள வெறுப் பையும், வடமொழிப் பற்றையும் அய்யமறத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன செய்கைகளால் வட மொழிக்கு ஆபத்து வந்துவிட்டதாக அது நினைத்துக் கொண்டு நமது புராதன கலாச்சாரத்துக்குப் புத்துயிர் கொடுத்துப் பாதுகாக்க விரும்புகிற பொது மக்கள் மனம் பெரிதும் கலவரப்பட்டிருக்கிறது என்று இந்து அதில் குறிப்பிடுகிறது.

அது குறிப்பிடும் பொது மக்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே! அவர்களு டைய கலாச்சாரம் புதுப்பிக்கப்படுவதால் யாருக்கு லாபம்? அதனால் திராவிடருக்குப் பாதகமும் ஆரியருக்கே சாதகமும் உண்டாகும் என்பதை யார் மறுக்க முடியும்?

ஆதலால் நாமும் வடமொழியைப் பற்றியும், அதனால் திராவிடருக்கும் ஆரியருக்கும் உண்டாகும் நன்மை தீமைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

சமஸ்கிருத மொழிக்குத் தமிழில் வடமொழி என்று பெயர்.

(திராவிட இயக்கம் நீதிக்கட்சி வரலாறு தொகுதி 2, க.திருநாவுக்கரசு அவர்களின் நூல் - பக்கம்775)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57HpGNa

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு என்பது

பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற வினாவிற்கு ஓரிரு சொற்களில் பொருள் கூறுவது கடினமான செயலேயாகும்.

அச்சொல்லுக்குரிய பொருளாக அகராதிகள் கூறும் பொருள்கள் சில பின்வருமாறு அமைந்துள்ளன.

பகுத்தறிவு எனப்படுவது பொருட் களின் / நிகழ்வுகளின் / கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற் றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வ மான புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப் பொருளை அல்லது உண்மையைக் கண் டறிவதே... என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.

திருவள்ளுவர் அறிவு என்பதற்கு விளக்கம் கூறும் போது,

எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என்றும்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355)
என்றும் அறிவுக்கு விளக்கம் கூறுகிறார்.

அவர் அறிவுக்குக் கூறும் இவ்விளக் கம் பகுத்தறிவுக்கும் பொருந்துவது போலவே உள்ளது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது.

அறிவு என்றாலே பகுத்தறிவு என்று தான் பொருள். அதிகப்படியான அறிவைப் பயன்படுத்துகிற செலுத்துகிற முறையே பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள் என்றதொரு விளக்கமும் காணப்படுகிறது.

நம்மால் நம்ப இயலாதவற்றை மூடநம்பிக்கை எனப் பெயரிட்டு அம்மூட நம்பிக்கைகளைப் புறம் தள்ளுவதே பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தருகிறது இன்னொரு வலைத்தளம்.

பகுத்தறிவு என்பது காரண காரியங் களை மனத்திற்கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்.

உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு என்கிறது கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.

பகுத்தறியும் திறன், நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்வதை அடிப்படை யாகக் கொண்ட முறை என்கிறது மற்றோர் அகராதி.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பகுத்தறிவு சிந்தனைகள் செவ்வியல் படைப்புகளில் (உயர்திரு இரா.தாமோதரன் (அறவேந்தன்) அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு நூலில் 96 ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57QcTdt

தமிழ் ஓவியா said...


தி.மு.க. - அதிமுக தேர்தல் அறிக்கைபற்றிய கருத்தென்ன?


கேள்வி: வேத வகுப்புகளை இன்றும்கூட நடத்திக் கொண்டு இருக்கிறார்களே? - சு. சிவலிங்கம், ஜாபர்கான்பேட்டை, சென்னை

பதில்: பார்ப்பனீயத்தின் வேரைப் பாதுகாப்பதுதானே அவா ளின் முதல் கவலை. அதனால் நடத்திக் கொண்டுள்ளார்கள்!

கேள்வி: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்? - அ. அய்ன்ஸ்டின், போரூர்

பதில்: உண்மையான நீரோட்டம் - தி.மு.க. தேர்தல் அறிக்கை. கானல் நீரோட்டம் - அ.தி.மு.க.வின் அறிக்கை.

கேள்வி : காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்றால் ஏன் கோபம் வருகிறது அவர்களுக்கு? - பா. துக்காராம், அவினாசி

பதில்: உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் பலருக்கு என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?

கேள்வி: பிள்ளையார் என்ற கடவுளை எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
- வி. முருகேசுவரி, வேலூர்

பதில்: எதுவும் கற்பனை என்கிறபோது அதை யார் எப்படியும் பயன்படுத்தலாமே!
சில பிள்ளையார் - திருமணம் ஆகாதவர்; சில பிள்ளையார் - திருமணம் ஆனவர்
இத்தியாதி! இத்தியாதி!

கேள்வி: யாராலும் அழைக்கப்படாத விருந்தாளியாக தமிழ்நாடு காங்கிரஸ் ஆனதுபற்றி... - பி. மதிவாணன், சென்னை-112

பதில்: அவர்கள் குறிப்பாக காங்கிரஸ் மேலிடம் சிந்தித்து, செய்த அல்லது செய்து வரும் தவறுகளுக்குப் பரிகாரம் - கழுவாய் - தேடிட முன் வந்தால் சரி!

கேள்வி: பி.ஜே.பி. தே.மு.தி.க. - பா.ம.க. ம.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டாலும் தேர்தலில் ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன் - தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - துரை. பாண்டியன், அச்சிறுபாக்கம்

பதில்: இயல்புக்கு ஒருவருக்கொருவர் எதிரும் புதிரும் என்பதால் என்னதான் ரிங்க்மாஸ்டர் இருந்தாலும், இயல்பை மாற்றிக் கொள்ள முடியுமா - அத்தகையவர்களால்?

கேள்வி: ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கேட் கும் போது நாமும் நாத்திகர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டால் என்ன? - எஸ். நல்லபெருமாள், வடசேரி

பதில்: நாத்திகர்கள் ஏற்கெனவே தனிமையாக்கப் படுத்தப்பட்டுள்ளதால் தனி இடஒதுக்கீடே தேவையில்லை!

கேள்வி: மோடி பிரதமராக வேண்டும்; இல்லாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற சோவின் கூற்று, எதனைக்காட்டுகிறது? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அவருடைய உள் ஆசை, வெளி ஆசை இரண்டையும் காட்டுகிறது!

கேள்வி: இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி உணவு பொருட்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளாரே? (பழங்கள், காய்கறிகள் மட்டுமே ரூ.13,309 கோடி அளவு பாழாகிறதாம்).

பதில்: அதைவிட அபிஷேகம் கல்லுக்கு என்ற முறையில் பாழாகும் பால், பழங்கள், காய்கறிகள் பற்றியும் சேர்த்தால் பல கோடி (தஞ்சை பெரிய கோயிலிலேயே ஆண்டுதோறும் பாழடிக்கப்படும் கணக்கும் சேர்த்தால்) எவ்வளவோ வரும்!
சட்டப்படி இவை குற்றமாக்கப்படல் வேண்டும்.

கேள்வி: பன்றிமீது வாகனம் மோதி விபத்தானால் தரித்திரம் என்கிறார்களே? வாகனத்தைக்கூட விற்று விடுகிறார்களே - பன்றி என்ன அவ்வளவு மோசமான மிருகமா? - தி. இரமணன், த.பேட்டை, சென்னை-81

பதில்: என்னங்க.. இப்படி கேட்கிறீங்க? அது வராக அவதாரமாயிற்றே! ஸ்ரீமான் ஸ்ரீஜத் மகாவிஷ்ணு அல்லவா பண்ணி ஆக மாறியுள்ளார்?

அதெப்படி கடவுள் அபசகுனமாவார்? (அட அறிவுக் கொழுந்து பக்தர்களே!)

Read more: http://viduthalai.in/page8/76966.html#ixzz2w57w8umD

தமிழ் ஓவியா said...

அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?

தினமலரில் இன்று ஒரு அக்கம் பக்கம் செய்தி: மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி பி.ஜே.பி. சார்பில் நெருங்கிய பிரமுகர்களுக்கு டில்லியில் விருந்தொன்று அளிக்கப்பட்டது. அத்வானியும் அங்கு வந்தார்.

தனக்கென ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்து யாருடனும் பேசாமல் தட்டிலிருந்த இனிப்புகளை சுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரமுகர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானியோ ஜிலேபி சாப்பிட அழைத்தனர்! அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.

அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஜிலேபி டேஸ்ட் நன்றாக இருக்கிறதா எனக் கேளுங்கள் அதற்குப் பதில் சொல்லுகிறேன் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டாம்! (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) என்று கூறியுள்ளார் அத்வானி!

அங்கு ஜிலேபி என்றால் தமிழ்நாட்டில் என்னவென்றால் தன்னிடம் கூட்டுச் சேர வந்துள்ள சில கட்சிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு!).

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 14.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w591z98I

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

(விடுதலை, 10.8.1961

Read more: http://viduthalai.in/page-2/77016.html#ixzz2w59cjV3P

தமிழ் ஓவியா said...


பாஜக மீதான அதிருப்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே


மும்பை, மார்ச்.15- பாஜக மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராட் டிர நவநிர்மாண் அமைப்புடன் உற வாடுவது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமை யாகக் சாடி உள்ளார். பாஜகவின் நம்பகத் தன்மை, கூட்டணி ஒழுங்கு குறித்து மராட்டிய ஏடான சமனாவில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி எழுதி உள்ளார்.

1996இல் பால் தாக்கரே இருந்தபோது பாஜகவிலிருந்து விலகிய சங்கர்சிங் வகேலா குஜராத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவிடம் கோரிய போது பால் தாக்கரே மறுத்தார். குஜராத் தில் மோடியின் ஆட்சி அமைந்ததற்கே பால்தாக்கரே பின்பற்றிய வழிகள்தான் காரணம். அப்போதுபாஜகவுடன் கூட் டணியில் இருந்ததால் வகேலாவுடன் கூட்டணி அமைக்கவில்லை. சிவசேனா வைப் புறக்கணிக்கும் பாஜக தலைவர் கள் இந்த வரலாற்றைப் படிக்க வேண் டும் என்றார் உத்தவ் தாக்கரே.

மேலும் அவர் கூறும்போது, பாஜக மோடியைப் பிரதமராக்க விரும்புகிறது. ஆனால், பாஜக நம்பகத்தன்மைக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. நம்முடைய கொள்கை இந்துத்துவாதான். அதிகாரத்தை நோக் கியதல்ல. அதிகாரப்பசிக்கான போர்வை அல்ல இந்துத்துவா.

இந்துத்துவாவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு இட மில்லை. யார் நம்முடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்முடைய இந்துத் துவப்பயணம் தொடரும். மோடியைப் பிரதமராக்குவதன்முலம் பாஜக மத்தி யில் ஆட்சியைப்பிடிக்க விரும்புகிறது. உங்களை ஒருவர் நம்பும்படியாக நடந்து கொண்டால் தான், அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால்தான் உங்களை மற்றவர்களும் நம்புவார்கள்.

சிவசேனா தன் காலில் நிற்கும் திறனுள்ளது. பாஜக மாற்றுப்பாதையில் நண்பனுக்கு துரோகமிழைத்தால் உன்னால் நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும், துரோகம் விரும்பத்தகாத நிலையை ஏற்படுத்திவிடும். ஊடகங் களில் வந்துள்ள தகவல்படி, பாஜக ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பின்வாசல் வழியே அடுத்த கட்சியுடன் தொடர்பு கொள் வதை புதிய கொள்கையாக வைத்துள் ளது என்று உத்தவ் கூறினார்.

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி காங்கிரசுக்கு வாக்குகள் ஒன்று சேராமலிருப்பதற்காக ராஜ்தாக்கரேவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஆலோசனை வழங் கினார். பாஜகவுடன் உள்ள தொடர் கூட்டணியால் சிவசேனா பல இடங் களில் வளைந்து கொடுத்ததால், சிவசே னாவின் அரசியல் வளர்ச்சி பாதித்தது. இதனால், பாஜகவில் ராஜ்நாத்சிங், மோடி தலைவர்களாக வளர்ந்தனர்.

சுவரில் தானே தலையை மோதிக் கொண்டு காயமடைவதுபோல பாஜக வின் செயல்களால் தானே தோல்வியைத் தழுவுகிறது. பாஜகவின் இறங்குமுகத் திற்கு காரணம் உட்கட்சிப் பூசல்களே யாகும். மோடி, ராஜ்நாத்சிங், ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் தலைவலி தீர தைலத்தை எங்களிடம்தான் கேட் கிறார்கள். ஆனாலும், உட்கட்சிப் பூசல் தொடராது என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.

பாஜக மாநிலக் கட்சிகளிடமிருந்து சிவசேனாவைப் போல் அடையாளங்களைப் பெறுகிறது. இந்துத்துவ அலையில் ரத யாத்திரைக் குப் பின்னும், பிரபலமான வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களிருந்தும் பாஜக தானே ஆட்சியைத் தனித்து அமைக்க முடியவில்லை.

மேலும், உத்தவ் கூறும்போது, 30, 32 கட்சிகளை அரவணைத்து சென்றவர் பிர மோத் மகாஜன். மற்ற மாநிலங்களிலும் பாஜகவுடன் உள்ள கூட்டணிக் கட்சி களிடையே சச்சரவுகள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அரியானாவில் ஓம்பிரகாஷ் சவுதாலா வின் பாரதிய லோக் தளம் கட்சியை பாஜக கூட்டணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து குல்தீப் பிஷோனியிடம் கலக்கவில்லை. அதே போல், ஆந்திராவில் காங்கிரசுக் ஆட்சி யில் மத்திய அமைச்சராக இருந்த என்.டி. ராமாராவின் மகளை கூட்டணிக்குள் சேர்க்கும்போது சந்திரபாபுநாயுடுவின் ஒப்புதலைக் கேட்கவில்லை.

இப்படியான தாக்குதல்களை வெளி யிட்டாலும், உத்தவ் பாஜகவில் உள்ள சில தலைவர்களால் பாஜக கூட்டணியில் புதிதாக சேர்பவர்கள் மூலம் பாஜக கீழே செல்லாமல் உள்ளது எனலாம் என்கிறார். மேலும் உத்தவ் கூறும்போது, ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணிக்குள் வந்ததால் பெரும்பாலான பாஜக தலை வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எடியூரப் பாவின் மீள்வருகையால் அத்வானி மகிழ்ச்சி அடைய வில்லை. ஜெசிகா லால் கொலைவழக்கில் தண்டிக்கப் பட்ட மனு சர்மாவின் தந்தையான வினோத் சர்மாவை கூட்டணியில் இணைத்ததை சுஷ்மா சுவராஜ் விரும் பவில்லை.

இவ்வாறு மராட்டிய சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவை விமரிசித்து தனது ஏடான சமனாவில் தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/77018.html#ixzz2w5AFoIBC

தமிழ் ஓவியா said...


தம்பட்டம் மேயோக்கள் - சித்திரபுத்திரன்

ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப் பனியம் இருக்குவரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும விரையும் விஷ்ணு புராண மும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.

சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர்களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும்.

2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும். கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமுமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும்,

குடிக்கப் பாலில்லாத குழந் தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் தொத்திக் கொண் டும் எலிக் குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலையிலும் பாம்புப்புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாதக் குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும்,

குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேத பாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிலிகள் மிகுந் திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர் களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச்சாரிகளாக விட்டுக் கொண்டிருக்குமட்டும், அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும்,

மனி தனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும் மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்கா விலிருந்தும்,

ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொலபொலவென கலகல வெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும், பண்டிதர்களும் உணர்வ தோடு பார்ப்பனர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும் தேசத் தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.

- குடிஅரசு - கட்டுரை - 09.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76985.html#ixzz2w5CeIPCI

தமிழ் ஓவியா said...


இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள்.

இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.

தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்து வதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.

இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.

நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.

இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/76986.html#ixzz2w5Cnz1zi

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!


தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டு மென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.

அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரி யாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு, எம். கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத் தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரிகின்றது.

தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும்.

பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகல் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர் களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்.

இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது. தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76987.html#ixzz2w5CwnkrO

தமிழ் ஓவியா said...


மோகம் விடயத்தில் மோடிக்குச் சிக்கல்!


காந்திநகர், மார்ச் 15- குஜ ராத்தில் கட்டடப் பொறியியல் வல்லுநரான இளம்பெண் ணைக் கண்காணித்த புகாரில் தற்காலிக பணிநீக்கம் செய் யப்பட்டவர் அய்.பி.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் மீதுஆறு குற்ற வழக்குகள் உள்ளன.

பயனில்லாமல் போனது

சட்டவிரோத செயலான இளம்பெண்ணைக் கண் காணித்த இவ்வழக்கில் குஜ ராத் முதலமைச்சர் மோடி யின் தொடர்பு குறித்து மோடிமீது பிரதீப் சர்மா காந்திநகர் 7ஆம் செக்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ள தாகத் தெரிகிறது. ஆனாலும், பிரதீப் சர்மா காவல்நிலை யத்தில் அளிக்கப்படும் புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறி குஜராத் மாநிலக் காவல் துறைத் தலைவர் பி.சி.தாக்கூர்,

காந்திநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷரத் சிங்கால் ஆகியோரிடம் வழக் குப்பதிவு செய்ய உத்தரவிடு மாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, அவர் குஜராத் உயர்நீதிமன் றத்தில் மோடி மீதான வழக்கைப் பதிவு செய்ய இது குறித்து அவர் வழக் குரைஞர் கூறும்போது, பிரதீப் சர்மாவின் புகார்மீது வழக் குப்பதிவு செய்ய காவல் துறை மறுத்துள்ள தால், அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளது என் றார்.

நவம்பர் 26 இல்

ஓர் அய்.ஏ.எஸ். அலு வலர் மோடியையும், அந்த இளம்பெண்ணை யும் நெருக்கமாக அறிந்த வர் என்பதாலேயே பாஜக அரசால் பாதிப்புக்குள்ளா னார். இளம் பெண் சட்ட விரோதமாகக் கண்காணிக் கப்பட்ட விவகாரம் குறித்து குஜராத் அரசு நவம்பர் 26 இல் இரு நபர் விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி சுக்னாபென் பட் என்பவர் தலைமையில் அமைத்தது. இன்னமும் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-5/76996.html#ixzz2w5DRVjeD