Search This Blog

14.3.14

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு பகுத்தறிவுப் பார்வை



நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி திமுக வெளியிட்டுள்ள நூறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை என்பது வரலாற்றுப் பெட்டகம்!

அரசியலில் ஈடுபடும் ஒரு திராவிட இயக்கம் - தன் விழுமிய வேர்களை மறந்து விடாமல், அதன் சித்தாந்தங்கள் - கோட்பாடுகளின் அடிப்படையில் இதைவிடச் சிறப்பாகத் தீட்டப்பட முடியாது என்று கூறும் வகையில், இந்தத் தேர்தல் அறிக்கை செப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது  என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் அறிக்கையின் முன்னுரையே - நூறு அம்சத் திட்டத்தின் முகப்படாமாக - முத்திரையடியாக ஜொலிக்கிறது!

1912இல் டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட மதராஸ் அய்க்கிய லீக் (விணீபீக்ஷீணீ ஹிஸீவீமீபீ லிமீணீரீமீ) தொடங்கி - ஒரு நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றுப் பொன் வரிகளால் நெய்யப்பட்ட ஒரு பொக்கிசமாக இது பளபளக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதுதான் சூரியனுக்கும், கருகிய இலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் எல்லை என்ன என்பது விளங்கும்.

திராவிட இயக்கத்தைப்பற்றியோ அதன் நோக் கத்தைப் பற்றியோ, அது கடந்து வந்த அந்த அரிமா நடைபற்றியோ, அதன் ஒப்பற்ற தலைவர்களின் ஆளுமை குறித்தோ மருந்துக்குக்கூட அ.இ.அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நுண்ணாடியை வைத்துத் தேடினாலும் கிடைக்கப் பெறவில்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! அ.இ.அ.தி. மு.க.வுக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களுக்கும் எந்த வகையிலும் ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என்று தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாகவே இது அமைந்து விட்டதல்லவா!

தேர்தல் அறிக்கை என்பதைக்கூட மறந்து விட்டு, அதில்கூட தி.மு.க. தலைவரை பக்கத்துப் பக்கம் வசைபாடும் போக்கு அக்கட்சியின் தரத்தை விளக்கும் தன்னிலை விளக்கமாகும். அண்ணாவின் படத்தை அட்டையில் போட்டால் போதுமா? அவர் வற்புறுத்திய கண்ணியம் என்பதும் கடைச் சரக்காகி விட்டதே!

அதே நேரத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டுள்ளதை அவசியம் கருதி நாகரிகமாகவே சுட்டிக் காட்டியுள்ள கண்ணியத்தையும், நனி நாகரிகத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது. அப்பொழுதுகூட கட்சியின் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை என்பது அடிக் கோடிட்டுப் படிக்கத் தகுந்ததாகும்.

ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை! ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!
நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்று எதிர்பார்க்கப்படும் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்த சேது சமுத்திரத் திட்டம் இந்தத் தேர்தல் அறிக்கையில் காணாமற் போன மர்மம் என்ன? இப்பொழுது அக்கட்சி எடுத்துள்ள முடி வையாவது அறிவித்திருக்கலாமே! அப்படிச் செய்வது தானே அறிவு நாணயமாகவும் இருக்க முடியும்?

ஏனிந்த இரட்டை வேடம்? குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தொடுத்துள்ள வழக்கு - இந்த தேர்தலில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்புச் சுனாமியை - பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

தி.மு.க.வும் - அதன் தோழமைக் கட்சிகளும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறும் - பிரச்சாரத்தில் அ.தி.மு.க. அரசின் இந்த மன்னிக்கவே முடியாத துரோகத்தைத் தோலுரித்துத் தோரணமாகத் தொங்க விட வேண்டும்.
இந்த எதிர்ப்பை எதிர் கொள்ள இயலாமல் அ.இ.அ.தி.மு.க. அணி திணற வேண்டும்.  சேது சமுத் திரத் திட்டம் என்னால்தான் வந்தது என்று மார்தட்டிக் கொண்ட மறுமலர்ச்சி தி.மு.க.வின் திடீர்ப் பல்டியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மதுரவாயலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (10.3.2014) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிக் கொடுத்து விட்டார்.

ஓர் ஆட்சி என்பது வளர்ச்சிக்கா? தளர்ச்சிக்கா?  வளத்திற்கா? வறட்சிக்கா? என்று எழுப்பிய வினாவும், அதற்காக அவர் எடுத்து வைத்த ஆவண ரீதியான ஆதாரங்களும் நடக்க இருக்கும் தேர்தலில் முக்கிய இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் உலா வரும் உத்தமக் கதாநாயகனாக இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை. தேர்தல் அறிக்கையினைத் தயாரித்த குழுவினர்க்கு நாம் மட்டுமல்ல; அதனைப் படிக்கும் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் வாக்காளரும் பாராட்டுவர் என்பதில் அய்யமில்லை.
வெல்லட்டும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி!

                 ---------------”விடுதலை” தலையங்கம் 12-03-2014
***********************************************************************************
 

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்
2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்
3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று -

எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.
ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

                             ----------------------------------”விடுதலை” தலையங்கம்  13-03-2014
***********************************************************************************


சமூக நீதி என்பது திராவிடர் இயக்கத்தின் அடி நாதம். இந்தியத் துணைக் கண்டத்துக்கே இதனை அறிமுகப்படுத் திய பெருமை தமிழ்நாட்டைச் சாரும் அதிலும் குறிப்பாக திராவிடர் இயக்கத்திற்கே அதன் முழுப் பெருமையும் சேரும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் இந்தச் சமூக நீதிக்காகத் தான் - அதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும் தந்தை பெரியாரே!

திராவிடர் இயக்கம் தொடங்கிக் கொடுத்த இந்தத் திட்டம் இப்பொழுது இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக வளர்ச்சியின் படிக்கட்டு களாகப் பரிணமித்துள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யிலே சமூக நீதிக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டதில் வியப்பில்லை - காரணம் அது நீதிக்கட்சி விதைத்த சமூக நீதி விதையில் விருட்சமாக வளர்ந்த வரலாறு படைத்ததாகும்.

சமூகநீதி என்னும் தலைப்பின்கீழ் அணி அணியாக வைக்கப்பட்டுள்ள கொள்கைகள், கோரிக்கைகள் - திட்டங்கள் எண்ணி எண்ணி மகிழ வேண்டியவை. இதன் வீச்சு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஆட் கொள் ளும் நிலைஏற்பட்டால் அதுவே மிகப் பெரிய புரட்சியாக வடிவெடுக்கும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

1) 50 சதவிகித இடஒதுக்கீடு எனும் வரையறை நீக்கம்.
2) பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) நீக்கம்
3)    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சகல அதிகாரங்களும் அளிக்கப்படுதல்
4) மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி அமைச்சகம்.
5) அந்தந்த மாநிலங்களுக்குரிய இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசமைப்புச் சட்டத்திருத்தம்.
6) அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலு வலகங்கள் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுதல்.
7) மத்திய அரசில் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
8) அரசமைப்புச் சட்டம் பிரிவுகள் 15 மற்றும் 16இல் உறுதி செய்யப்பட்டுள்ள - கொள்கைகளுக்கு மாறாக எவ்வித மாறுதலும் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துதல்.
9)    வேலை வாய்ப்பில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு
10) அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இடஒதுக்கீடு.
11) பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் ஆணையம் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துதல்.
12) தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி.
13) உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோர் நியமனம்.
14) சிறுபான்மையினருக்கும் மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு
15) திரு நங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.
16) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு.

சமூக நீதிப் பார்வையில் இவற்றிற்கு மேல் சிந்திப்ப தற்கோ, திட்டங்களை உருவாக்குவதற்கோ, வேறு எதுவும் இல்லை  என்று கூறும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள சமூக நீதிக்கான தங்கப் பேழை என்றே இதனை மிகுந்த பெருமிதத்தோடு குறிப்பிட்டாக வேண்டும்.

மக்கள் தொகையில்  பெரும் பான்மையின மக்களான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இவர்கள் கைகளில் தானே ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும்! இவர்களுக்குரிய இடங்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிட்டும்படிச் செய்வதுதானே உண்மையான மக்கள் நாயகம்!

இவர்கள் உரிமையற்றுக் கிடப்பதினால் தான், விழிப்புணர்வு இவர்கள் மத்தியில் போதிய அளவில் ஏற்படாத காரணத்தால்தான் எண்ணிக்கையில் சிறுதொகையில் இருக்கக் கூடிய உயர் ஜாதியினர் எல்லாம் தங்களுக்கே என்ற ஆணவத்தில் கொழிக்கின்றனர்.

ஊடகங்களைத் தம் கைவசம் வைத்துக் கொண்டு, அவர்கள் விரும்பும் கருத்துக்களை வெகு மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ள சமூக நீதி சித்தாந்தத் தின் அடிப்படை யிலான திட்டங்கள் இந்த முறையைத் தலை கீழாக மாற்றியமைக்கும் என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க. தேர்தல்அறிக்கையில் சமூகநீதி என்னும் தலைப்பில் தெரிவித்துள்ள பகுதி - 1979இல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்புபைத் திணித்து - 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினாரே - அதனை நினைவூட்டுகிறது.

சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்ப தாகும் என்று கூறப்பட்டுள்ளது அதிமுக தேர்தல் அறிக்கையில்.

இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் அளவுகோலாகும்.
அதற்கு மாறாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது - பார்ப்பனர்கள் சொல்லி வரும் அணுகுமுறையாகும். அந்த வழியைத்தான் இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா பின்பற்றுகிறார் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமே அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்று கருதப்பட வேண்டும்.

பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து எம்.ஜி.ஆர். மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்; ஜெய லலிதா அவர்களும் பொருளாதார அளவுகோலை அறி வித்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளார்.1980இல் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அதே தோல்வியை ஜெய லலிதாவும் சந்திக்கப் போகிறார் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம் காரணம் - இது தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்!

ஒரு பக்கத்தில் சமூகநீதியின் சிகரமாக ஒளிரும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை - இன்னொரு பக்கத்தில் சமூக நீதியின் அடி வேரை வெட்டும் அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை! தமிழர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே புரிந்து கொள்வீர்! புத்தியைத் தெளிய வைக்க வரும் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்பிப்பீர்!!

                       ----------------------------”விடுதலை” தலையங்கம்14-03-2014

34 comments:

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


என்ன அளவுகோல்?

அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி வழங்கலாம்; ஆனால் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது. நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கினாலும் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்று தமிழகத் தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

கட்சி நிர்வாகிகளா? பொது மக்களா? என்பதற்கு என்ன அளவுகோலை வைத்துள்ளார்களோ தெரிய வில்லை; தண்ணீர்ப் பாட்டில் வாங்கினாலும் அது தேர்தல் கணக்கில் சேருமா? என்று தெரியவில்லை. தண்ணியிலும் பல வகை உண்டே!

மோடியின் கைத்தடி பேசுது

கேள்வி: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் ஞான தேசிகன்?

பதில்: அவர் முன் மொழிந்ததை நான் வழி மொழிகிறேன். - துக்ளக் 19.3.2014,பக்கம் 9

பி.ஜே.பி.யின் மோடி தான் பிரதமராக வர வேண் டும் என்று ஊசி முனையில் தவம் இருக்கும் சோவின் கருத்து இது. ஒருவனைத் தெரிந்து கொள்வதற்கு அவன் நண்பன் யார் என்று காட்டுங்கள் என்பது பொதுவான பழமொழி.

கூட்டுக் கம்பெனி அதிபர்கள்

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவன், கிருஷ்ணகிரி தொழிலதிபர் மஞ்சுநாத், ஒசூர் தொழிலதிபர் அசோக் நாராயணன் ஆகியோர் பி.ஜே.பி.யில் இணைந்தனர். பிஜேபி என்பதே கார்ப்பரேட் கம்பெனி தொழிலதிபர் களின் கூடாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமே! பிஜேபி என்றாலே உயர் ஜாதி - பணக்காரர்களின் கூட்டுக் கம்பெனி லிமிடெட் என்பது இன்னும் புரியவில்லையா?

ஜோஷி புலம்பல்!

உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதி பா.ஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் சொந்த தொகுதியாகும். இங்கு, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்டால், உ.பி மற்றும் அண்டை மாநிலமான பீகாரில் செல்வாக்கு அதிகரிக்கும் என பா.ஜ தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் வார ணாசியில் மீண்டும் போட்டியிடுவதில் பிடிவாதமாக உள்ளார் ஜோஷி. அதை விட்டுக் கொடுக்கும்படி ஜோஷியை பா.ஜ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோபத்தை வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத் தினார் முரளி மனோகர் ஜோஷி. பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பாராட்டு விழா வாரணாசியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜோஷி பேசுகையில், இந்தியாவில் பிறந்தது, பிரயாக் மற்றும் காசி போன்ற இடங்களில் வாழ்ந்தது என் நல்ல வாய்ப்பு. ஆனால் நான் செய்த பாவம் என்னை அரசியலிலும், நாடாளுமன்றத்திலும் இருக்க வைத்து விட்டது.

நாடு முழுவதும் ஒரு அலை வீசுகிறது. அது உங்களுக்கு தெரியுமோ... தெரியாதோ... ஆனால் கடவுள் விஸ்வ நாத்துக்கு எல்லாம் தெரியும் என சிரித்தபடி கூறினார் ஜோஷி. வாரணாசியை விட்டுக் கொடுக்கும் படி பா.ஜ தலைவர்கள் வலியுறுத்துவதால் ஏற்பட்ட மனவேத னையை, முரளி மனோகர் ஜோஷி இசை விழாவில் இப்படி கொட்டித் தீர்த்து விட்டார் என கூறப்படுகிறது. எல்லாம் காசி விசுவநாதர் பார்த்துக் கொள்வார் என்று மூலையில் ஒடுங்கிக் கிடப்பதுதானே யார் தடுத்தது?

புலம்புகிறார் சோ

பா.ஜ.க. உட்கட்சிப் பூசல் ஓயவில்லையோ என்று கருதும்படியாகவே, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தலைமைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள் அமைந் துள்ளன. இவர்களைப் போன்ற முக்கியஸ்தர்கள் தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன விதங்களில் மோடிக்குத் தொல்லைகள் தரப் போகிறார்களோ! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று விட்டால் கட்சிக்குள் யார் யாரிடம் இருந்து, என்னென்ன தொந்தரவுகள் தலைதூக்குமோ? கட்டுப்பாடு சீர்குலைவு அக்கட்சிக்கு நல்லதல்ல.
- துக்ளக் 19.3.2014

சு...மூ...க....ம்!

பா.ஜ.க. கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்கிறது - நடக்கிறது என்று பராக்குப்பாடுகிறார் திருவாளர் இல. கணேசன்! ஆனால் நடப்பது என்ன? ஒரே தொகுதியை பல கூட்டணிக் கட்சிகள் கேட்கும் விசித்திரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பா.ம.க.வின் பிடிவாதத்தால் தொகுதி பங்கீட்டில் இழுபறி என்று தினத்தந்தி கூறுகிறது. நல்ல சு...மூ...க...ம் நல்ல ச...மூ....க....ம்!

இடதுசா....ரி!

மதவாத எதிர்ப்பை இடதுசாரிகள் முன்னெடுத்துப் பேசுகின்றனர். சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத் கென்னடி என்பவர் தலைமையிலான புதிய மார்க்ஸிஸ்டு கட்சி வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரிக்குமாம். மார்க்ஸிசத்தை எந்தப் பள்ளியில் இவர் படித்தார் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/76890.html#ixzz2vzD0pdqZ

தமிழ் ஓவியா said...


ஜாதி இந்தியா எப்படி முன்னேறும்?


நான் மோடியைக் கவனிப்பவன், என் தந்தை ஆடுகளைக் கவனித்ததைப்போல! நரேந்திர மோடி, தேசியப் பத்திரிகை களில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்தும், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத் தியும் மிகப்பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றினை அண்மையில் நடத்தினார். அவர் தந்த தலைப்பு முதலில் இந்தியா என்பது. அவருடைய விளம்பரங்கள் மோடியின் குஜராத் (கவனியுங்கள், இந்தியா அல்ல) தான் தொடக்கமாம்! மாற்றங்களை ஏற்படுத்தியதாம்! நிறை வேற்றி முடித்ததாம்!

2004 தேர்தலின்பேதது பா.ஜ.க. இந்தியா ஒளிர்கிறது எனச் சொன்னது. இப்போதோ, குஜராத் மட்டும் ஒளிர் கிறதாம்! முதலில் இந்தியா இயக்கத்தை அடுத்து மோடியின் மற்றுமொரு இயக்கம், சாய்லே சார்ச்சா என்பது தேநீர் விருந்தாம்!

முதலில் இந்தியா என்பதும் தேநீர் விருந்து என்பதும் சுய முரண்பாடுகளைக் கொண்டவை! உலகம் முழுக்கப் பருகப் படும் தேநீரையும் குஜராத்தின் மாற்றத் திற்கான முயற்சிக்கான வரலாற்றையும் இணைத்துப் பார்த்தால் முரண்கள் புரியும். முதலில் இந்தியா எனும் கருத்து, குஜராத் மாநிலத்தைப் போல இந்திய நாடு வளரவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தேநீரை பா.ஜ.க தேர்ந்தெடுத்ததைப் பார்த்தால் அவர்களது பரிதாப நிலை நன்கு விளங்கும். கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாதது! மோடியின் புதிய முயற்சிகள், அதன் விளைவுகள் என்பவற் றிற்கும் தேநீருக்கும் கொஞ்சமும் பொருத்தமே கிடையாதே! ஏன் என்றால் தேநீர் (சாய்) சீனாவில் கண்டறியப்பட்டது. அது இந்துத்வவாதிகளின் எதிரி நாடு!

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷாரால் இந்நாட்டிற்கு வந்தது சாய்! தகவல் களஞ்சியமான விக்கி பீடியா பதிவுகளின்படி தேநீரின் வரலாறு நீண்ட நெடியது, பல்வேறு கலாச்சாரங்களிடையே பரவிப்பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவருவது.

சீனாவின் யுன்னான் பகுதியில் ஷாங் வம்சம் ஆண்ட காலத்தில் (கி.மு. 1500 முதல் 1046 வரை) மருத்துவ குணம் கொண்ட பானமாகத் தோன்றியது. ஹீவா டோ என்பார் எழுதிய மருத்துவ நூலில் இதுபற்றிய தகவல் காணப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு வந்த போர்த்துகல் நாட்டுப் பாதிரியார்களுக்கும், வணிகர்களுக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

17-ஆம் நூற்றாண்டில் தேநீர் குடிப்பது பிரிட்டனில் பிரபலமானது. பிரிட்டிஷார் தான், தேநீர் குடிப்பதையும் பயிரிடுவதை யும் இந்தியாவில் அறிமுகப்படுத்தினார் கள். அதன் மூலம் சீனாவின் ஏகபோகத் திற்கு இடையூறை ஏற்படுத்தினார்கள்.

எனவே தேநீர் உலகம் முழுமைக்கு மானது. பா.ஜ.கட்சியின் கலாச்சாரத் தேசி யம் என்பது பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிரானது! ஆனால் இப்பன்முகக் கலாச்சார வாயிலாகத்தான் தேநீரே இந்தி யாவுக்கு வந்தது! அந்நிய தேநீரை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளும் பா.ஜ.க., அந்நிய மதங்களான இசுலாத்தையோ, கிறித்துவத்தையோ இந்தியாவில் ஏற்றுக் கொள்வதில்லை!


தமிழ் ஓவியா said...

தேநீரைப்போலவே மதங்களும் பல்வேறு கலாச்சாரங்களின் ஊடே பயணித்துதான் மாற்றம் பெற் றுள்ளன. இந்தியாவின் சாய்வாலாக்கள் (தேநீர் விற்பவர்கள்) அந்த மதங்களைச் சேர்ந்தவர்களே!

விக்கிபீடியாவில் இடம் பெறும் அளவுக்கு குஜராத் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை, வளர்க்கவும் இல்லை. இந்தியா (குஜராத்தும் இதில் அடக்கம் தான்) கண்டுபிடித்த ஒன்றே ஒன்று! ஜாதிமுறை மட்டுமே!

சீனா, அய்ரோப்பா, அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மக்களைப் போல புதியவற்றைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுக்குப் பெரும் தடையாக இருப்பதே இந்த ஜாதி அமைப்பு தான்!

தமிழ் ஓவியா said...

ஆர்எஸ்எஸ்ம், சுதேசி ஜாக்ரான் மஞ்ச்சும் தூக்கிப் பிடிக்கும் மோடியின் இயக்கங்கள் எதுவும் பொருளாதார மேம் பாட்டுக்கான எதைப்பற்றியும் குறிப் பிடுவதே கிடையாது.

முதலில் இந்தியா எனப்பேசும் மோடி இந்தியாவில் ஜாதி முறையும் தீண்டத் தகாத மனிதர்களும் இருக்கும்வரை, இத்தகைய கொடும்நோய்களுக்கான தீர்வு முறையைத் தம் உரைகளில் குறிப் பிடாமல் இருக்கும்வரை, வளர்ச்சி என்பதே கானல் நீர்தான்!

நான் சொல்வது தவறு என்றால், மோடியில் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், 12 ஆண்டுகளாக அவர் ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்தில், உல கத்தின் அறிவியல் துறைக்குக் குஜராத் தின் பங்களிப்பு இது என எதையாவது காட்ட முடியுமா?

தமிழ் ஓவியா said...

மோடியின் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் ஒன்றை உணரவேண்டும் குஜராத் சமூகம் மிகவும் மூடநம்பிக்கை யில் உள்ள சமூகம்! மிருகத்தனமான ஜாதி அமைப்பு, தெளிவில்லாத (சைவ) மரக்கறி உணவுப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்ட சமூகம்! இப்பேர்ப்பட்ட மூட, மதவாத, தெளிவற்ற சமூகத்தில் எப்படி அறிவியல் கண்டு பிடிப்புகள் ஏற்பட முடியும்?

ஆக, தேயிலை உற்பத்தி செய்வோ ரும் (பார்ப்பனப்) பண்டிதர்களும் தேநீர் விருந்தில் ஒரு சேரக் கலந்து கொள்ள முடியாத இந்தச் சமூகத்தில் முதலில் இந்தியா எனும் இயக்கம் இந்தக் கேடான சமூகத்தை மட்டுமே காட்ட முடியுமே தவிர, வேறொன்றும் செய்யாது.

திருப்பதி அல்லது வைஷ்ணவதேவி கோயில் அர்ச்சகர்களோ அல்லது இந்துத்வ வாதிகளால் பெருமையாகப் பேசப்படும் சங்கர மடங்களின் தலைவர்களோ மோடி யுடன் அமர்ந்து அவரின் தாயார் தயாரித்து கொடுக்கும் தேநீரை அருந்தினால் நாட்டுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!

தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஆட்டு இடையனான என்னை இந்த தேநீர் விருந்துக்கு அழைத்தால், நான் கூட அவருக்கு ஓட்டுப் போடுவேன், அவர் கொண்டுவரும் பெரிய மாற்றத்திற்காக! இந்தியாவில் வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றமும் சமூக மாறுதலும் சேர்ந்ததுதான் என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணவும், குடிக்கவும் அனு மதிக்காத ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதும் கண்டு பிடிப்பு என்பதும் இந்தியாவில் எப்படி வரும்? எல்லா மனிதர்களும் பிறப் பிலேயே பாகுபாடு கொண்ட சமமாற்ற வர்கள் என்னு கருத்து நிலவும் ஒரு சமுதாயம் இருக்கும் நாடு எப்படி அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேற முடியும்?

ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பின் ஆதார வேர்கள் இந்துமத ஆன்மிக நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள. இந்நிலையில் எந்த இந்தியாவைப் பற்றி மோடி பேசுகிறார்? அது தலித் இந்தி யாவா? பிற்படுத்தப்பட்ட மக்களின் இந்தியாவா? அல்லது பார்ப்பனர்களின் இந்தியாவா? எந்த இந்தியா முதலில்? எந்த இந்தியா இரண்டாவதாக? எந்த இந்தியா மூன்றாவதாக?

பா.ஜ.க பாரத் என்று அழைக்கப் பிரியப்படும் இந்தியாவாக இருந்தாலும், அங்கே பெண்களின் நிலை மிகவும் பயங்கரமானதாயிற்றே! தம் விருப்பத் திற்கேற்ப, ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்ள மறுக்கப்படும் நிலையில் பெண்களை வைத்துக் கொண்டு எந்த நாடு தான் முன்னேற முடியும்?

மோடியும் நானும் ஒரே வயதினர், ஒரே பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள், என்றாலும் தலித் பெண் ஒருத்தி தன் விருப்பத்திற்கேற்ப ஒருவனை மணம் செய்து கொள்ள என் கிராமத்தில் வழியில்லை என்பதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.

அந்த அளவில் எனது சமூக மாற்றத்திற்கான திட்டம் தோற்றுப்போனது. மோடியின் திட்டம் இது பற்றிக் கூறுவது என்ன? அவ ருடைய பெருமைக்குரிய குஜராத் மாநிலத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா? ஓர் இந்துப்பெண்ணும் முசுலிம் இளைஞனும் திருமணம் செய்து பதிவு செய்வதை அவரது குஜராத் மாநிலம் அனுமதிக்கிறதா? விரும்பிய உணவை உண்ணும் உரிமை குஜராத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது?

இடைவிடாமல் முயற்சி செய்து புதுப்பித்து உங்களால் பெருமையாகப் பேசப்படும் சோம்நாத் கோயிலில் அர்ச்சகராக ஒரு தலித் ஜாதி இந்துவோ, பிற்படுத்தப்பட்டவரோ அல்லது ஒரு பெண்ணோ வர முடியுமா? மிஸ்டர் மோடி? மானுடர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான, சமமான ஆன்மீக உரிமை அற்றவர்களாக இருக்கும்வோது, உங்கள் இந்தியா எப்படி மானுடத்தின் மாண்பைப் பெற்ற முதல் நாடாக முடியும்?

உழைப்புக்கு மாண்பும் மரியாதையும் நிலவும் சமூகத்தில் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன எனும் உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா, மோடி அவர்களே!

அர்ச்சகர் வேலை உட்பட அனைத்து வேலைகளுக்கும் ஒவ்வொரு குழந்தை யும் ஒவ்வொரு வயது வந்தோரும் சமவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பின்பற்றும் மதத்தில் அப்பேர்ப் பட்ட நிலை உண்டா?

நம்மிடையே உள்ள பலவீனங்க ளையும், தவறுகளையும் ஒத்துக் கொள் ளும் மனோபாவத்தோடு இந்தியா எல்லாவற்றிலும் முதலிடத்திற்கு வர வேண்டும் என்று நானும் தான் விரும் புகிறேன். நீங்கள் எப்படி

தரவு: டெக்கான் கிரானிக்கிள் 12-3-2014
தமிழில்: சு.அறிவுக்கரசு

Read more: http://viduthalai.in/page-2/76899.html#ixzz2vzDdNuOq

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ்.-இன் இரட்டை வேடம்


- குடந்தை கருணா

மும்பை பிவாண்டி பகுதியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் காந்தியை சுட்டுக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள் கையைத்தான் பிஜேபி ஏற்றுக்கொண் டுள்ளது. சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருந்தவர். ஆனால், இன்று, காந்தியாரையும், சர்தார் படே லையும் பிஜேபி கொண்டாடுவதாக சொல்கிறது என பேசினார்.

உடன், ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறது; சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கும் என சொல்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போது புகழ் பாடுகிறார் மோடி. அவருக்கு மிக உயரமான சிலையை அமைத்திட நாடு முழுவதும் இரும்பு திரட்டுகிறார். மோடியின் இந்த செயலை பாஜக ஆதரிக்கிறது. பல்லாயிரம் கோடியில் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.

காந்தியார் சுடப்பட்ட நிலையில், 1948-இல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல். அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி என்ன கருத்தை தெரிவித்தார்? ஆர்.எஸ்.எஸ்-இன் நடவ டிக்கைகள் அரசுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த விஷத் தன்மையான விளைவினால், காந்தியா ரின் விலை மதிப்பில்லா உயிரை இழந்து நாடு அவதிப்பட காரணமா யிற்று.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். என சர்தார் படேல் கருத்து தெரிவித்தார். பின் அவரது உள்துறை அமைச்சக ஆணையின்படி தான் 5.2.1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

நாட்டில் வெறுப்பும், வன்முறையும் முற்றிலுமாக வேரறுக்க ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என தடை ஆணையில் விளக்கமும் அளிக்கப் பட்டது. காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் விஷ விளைவு என சொன்னவர் சர்தார் படேல்; ஆர்.எஸ். எஸை தடை செய்தவர் சர்தார் படேல். இந்த கருத்தைத் தான் ராகுல் காந்தி தற்போது நினைவு படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி மீது கோபப்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், ராகுல் சொன்ன காரணத்தை உறுதிப்படுத்திய சர்தார் படேல் மீது தான் கோபப்பட வேண்டும்; அவமதிப்பு வழக்கு போட வேண்டும்.

ஆனால், மக்கள் இந்த வரலாற்றையெல்லாம் மறந்தி ருப்பார்கள் என நினைத்து, இன்றைக்கு படேலுக்கு சிலை வைக்க முயல்வ தும், படேல் சொன்ன காரணத்தை நினைவு படுத்திய ராகுல் காந்தி மீது வன்மம் காட்டுவதும், வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை வேடத்தைத் தான் அம்பலப்படுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page-2/76897.html#ixzz2vzDvmu5a

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு இணையதள கல்வி: கூகிள் புதிய திட்டம்

இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கி யுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண் களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார்.

கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங் களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76896.html#ixzz2vzE9vMdQ

தமிழ் ஓவியா said...


மே. ஜெர்மனி கிண்டல் செய்கிறது!


சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் பெரும் பஞ்சம். அப்பொழுது மேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்று இந்தியாவைக் கிண்டல் செய்து எழுதி இருந்தது. பஞ்சமோ பஞ்சம் என்று இந்திய மக்கள் தவிக் கிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் கூட எலியைக் கடவு ளாகக் கருதி, அதற்கு உணவுப் பண்டங்களை வைத்து படைக்கிறார்களே! என்று எழுதி இருந்தது.

கட்டுரையுடன் மட்டும் நிற்கவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எடாவா என்ற இடத்தில் உள்ள எலிச் சாமி கோயிலில் எலிக்குப் படையல் போடுவதை அப்படியே படம் பிடித்தும் போட்டு விட்டது.

இதைக் கண்டதும் நமது நாட்டு வைதீகப் புலிகள் ஓலமிட்டன. மதவாதிகள் மனம் புண்படுவதாக மூக்கால் அழுதன. நாட்டு உறவையே துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கூடக் கூறினர். இந்தியாவின் வெளி விவகார இலாகா மேற்கு ஜெர்மனியில் உள்ள நமது தூதுவர் மூலம் அந்நாட்டு அரசை விளக்கமும் கேட்கச் செய்தது.

ஆனால், அந்தப் பத்திரிகையோ, நாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை; மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிவிட்டது. அதற்கு பிறகு இந்தச் செய்தி உண்மையா என்று கண்டறிய உ.பி மாநிலம் எடாவா மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது. அவரும் அது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றும் கொடுத்தார்.

உயர்ந்த ரக தானியத்திலும், நெய்யிலும் பண்டங்கள் செய்யப்படுவதாக ஜெர்மனி பத்திரிகை கூறுவது தவறு. சாதாரண ரகத் தானியத்தையும், டால்டாவையுமே பயன்படுத்துகிறார்கள். வெள்ளித் தட்டிலே தின்பண்டங்களைப் படைக் கிறார்கள் என்பதும் தவறு; பித்தளைத் தட்டிலேதான் படைக்கிறார்கள்! என்று அந்த அறிக்கையிலே கூறப்பட்டு இருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzEwZJ9u

தமிழ் ஓவியா said...

அந்த இருவர் சந்தித்த போது...

மதம் எப்படி உண்டாயிற்றென்றால், உலகத்தில் முதல் அயோக்கியன் ஒருவன், முதல் முட்டாள் ஒருவனைச் சந்தித்த போது அந்த முட்டாளின் மூலம் அந்த அயோக்கியன் லாபம் பெற்றுப் பிழைக்க இந்த மதப் புரட்டை உண்டாக்கினான். - வால்டையர்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzF5HgUQ

தமிழ் ஓவியா said...

காட்டுமிராண்டி ஏன்?

நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.

இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.

நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFEP1tJ

தமிழ் ஓவியா said...

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,



பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFSIHVs

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு ஏன்?


மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்கிறார்களே, அது ஏன் தெரியுமா? மனிதன் செத்தவுடன், அவன் உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம், செடி, கொடிகளில் ஒளிந்து இருக்குமாம், அது உயிருள்ள மற்ற மனிதர்களையும் தொந்தரவு செய்யுமாம்.

அதற்காகத் தான் இந்தத் தாரை, தப்பட்டை முழக்கங்களாம். சத்தத்தைத் கேட்டு, அந்த ஆன்மா ஓடு ஓடு என்று ஓடிவிடுமாம்! இப்படி ஒரு மூட நம்பிக்கை.

சரி, நமக்கு ஒரு சந்தேகம். பார்ப்பனன் வீட்டில் எழவு விழுந்தால் இத்தகைய சத்தங்கள் இல்லாமல், அடுத்த வீட்டுக்குக் கூட தெரியாமல் தூக்கிக் கொண்டு போகி றார்களே - அவாள் ஆத்மா மட்டும் பக்கத்தில் ஒளிந்து கொண்டு தொந்தரவு செய்யாதா?

செத்தும், நம் மக்கள் செலவு செய்து, கடன்பட்டு அல்லல் பட வேண்டும் என்று எவ்வளவு நயவஞ் சகமாக இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFdZoDZ

தமிழ் ஓவியா said...

நேருவின் எதிரிகள்!

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் இறந்த பிறகு எனக்கு மதச்சடங்குகளுடன் அடக்கம் செய்யக் கூடாது என்று நேரு தனது உயிலில் கூறியிருப்பது தெரிந்ததே. அப்படி இருந்தும் அவர் இறந்த பிறகு மதானுச் சாரங்களுடன் மதச் சடங்குகள் செய்யப்பட்டுத் தான் அவர் எரிக்கப்பட்டார்.

நேருவின் விருப்பத்திற்கு எதிராக இப்படி நடந்ததற்கு இந்திராகாந்தியும், அன்றைய உள்துறை அமைச்சர் நந்தாவும் தான் காரணம் என்று நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த எம்.ஓ. மத்தாய் தெரிவித்துள்ளார்.

நேரு மறைவதற்கு முன்னர் நேருவின் சாவை முறியடித்து அவர் ஆயுள் நீள்வதற்காக 4,25,000 முறை ஆயுள் நீடிப்பு மந்திரங்கள் ஓதப்பட்டதாக நந்தா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நேருவின் தங்கை திருமதி விஜயலட்சுமி பண்டிட் எதிர்ப்பு தெரிவித்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் என்று மத்தாய் தெரிவித்திருக்கிறார்.

தகவல்: நேருவிற்குப் பிறகு இந்தியா என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFwEHoA

தமிழ் ஓவியா said...

மத விபச்சாரம்

ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.

பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzG9rdlR

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சாந்தா இராமமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் குன் னூர் டாக்டர் இரா.கவுதமன் (பெரியார் மருத் துவர் அணி பொறுப்பாளர்) அவர்களின் அன் னையாரும், கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அவர்களின் மாமியா ருமான சுயமரியாதைச் சுடரொளி மானமிகு திருமதி சாந்தா இராமமூர்த்தி அவர்கள் (வயது 82) குன்னூரில் இன்று (14.3.2014) விடியற் காலை 4.30 மணியளவில் டாக்டர் கவுதமன் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பது மிகவும் துன்பத்திற்கும், துயரத்திற்குமுரியது ஆகும்!

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் வழியில் கொள்கை வாழ்வு வாழ்ந்தவர் அம்மா சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

மாநாடுகள், போராட்டங்கள் எல்லாவற் றிலும் கலந்துகொண்டு உயிர் மூச்சடங்கும் நிலையிலும் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து காட்டியவர் மறைந்த கொள்கைப் பற்றாளர் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் என்ற அறக்கட்டளைக்குச் சொந்த மான தருமபுரி பெரியார் மன்றம் - தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் அயரா உழைப்பால் உருவானதாகும். அந்த மன்றத் தின் மேற்பார்வை பொறுப்பாளராக இருந்து, நாணயமாக கணக்குகளைத் தவறாமல் தலைமைக்கு அனுப்பி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அம்மையார் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு கமிட்டி, மாநாடு, இயக்க நிகழ்வுகள் எது நடந்தாலும் குடும்பத்தாரோடு - தனது தளர்ந்த உடல் நிலையிலும் கலந்து கொள்ளத் தவறாதவர்.

அவரை கடைசியாக நேரில் அரூர் திரு மணத்திற்கு 3.2.2014 அன்று சென்ற பொழுது தருமபுரியில் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புப் பெற்ற நிலையில், இப்படி அலைகிறீர்களே உங்கள் உடல்நிலை என்னாகும்? என்று உரிமையுடனும், அன்புடனும் கடிந்து கொண்டவர்.

அவரது அருமைச் செல்வங்கள் மகன் டாக்டர் கவுதமன்-மருமகள் டாக்டர் பிறைநுதல்செல்வி, மகள் மலர்விழி-மருமகன் பழனியப்பன், மகன் டாக்டர் புகழேந்தி-மருமகள் மீனாட்சி, மூத்த மகள் மல்லி, பெயரப் பிள்ளைகள் அனைவரும் அவரை மிகவும் நன்றாகக் கவனித்து உடல்நலம் காக்க கடைசி வரை பாடுபட்டது, ஒரு சிறந்த குடும்பத்தின் கடமை உணர்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கானதோர் எடுத்துக்காட்டாகும்!

அவரது மறைவால் வாடிடும் அவரது குடும்பத்தினர், அவரது சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டு, அவரது சிறந்த கொள்கை வாழ்வுக்கும், தொண்டுக்கும் நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கி றோம்.

சென்னை
14.3.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

குறிப்பு: நாளை (15.3.2014) மதியம் ஒரு மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதி நிகழ்ச்சியில் கழகத் தலைவர் பங் கேற்பார்.

Read more: http://viduthalai.in/page-8/76936.html#ixzz2vzGoeXsg

தமிழ் ஓவியா said...


அதிசயம்! ஆனால் உண்மை!! பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.65,000 அபராதம் விதித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி


பெங்களூரு, மார்ச் 14- உச்சநீதி மன்றத் தின் ஆணைப்படி விரைந்து முடிக்க வேண்டிய பெங்களூருவில் பல ஆண்டு களாக நடைபெற்றுவரும் தமிழக முதல மைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தாமேல் வாய்தா வாங்கி வளர்ந்துள்ள நிலையில், இறுதி விசாரணைக்கு நீதிபதி தேதி குறித் திருந்தார்.

அரசு தரப்பில் அரசு வழக்குரைஞரான பவானிசிங் என்பவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, நீதிமன்ற வழக்கை தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிக் கொண்டு வருவதைக் கண்டு இன்று (14.3.2014) அவரது போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது ஒரு நாள் சம்பளத்தை (ரூ.65,000/-) அபராதமாக விதித்தார்!

இவரைத் தான் தன் வழக்கில் அரசு வழக்குரைஞராக (பப்ளிக் பிராசிகியூட்ட ராக) நீடிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜெய லலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/76933.html#ixzz2vzH0Slyw

தமிழ் ஓவியா said...


சீரிய பகுத்தறிவாளர் சங்கரன்கோயில் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு நமது வீர வணக்கம்!


சங்கரன்கோயில் நகர் மன்றத் தலை வராகவும், பல ஆண்டுகள் பகுத்தறி வாளர் கழகத் தலைவராகவும் தொடர்ந்து தொண்டாற்றிய, எளிமை, கொள்கை உறுதி, தியாகம் - இவை களின் உருவமாக இறுதிவரை திகழ்ந்த திரு.பழனிச்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி, காலதாமதமாகத்தான் நமக்குத் தெரிய வந்தது!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியவர்களிடமும், நம்மிட மும் மிகவும் பாசத்துடன் பழகியவர்; குற்றாலம் கழக இளைஞரணி பெரியாரி யல் பயிற்சி முகாமில் மாணவ இளைஞர் களை அனுப்பி, அவரும் பல ஆண்டு கள் கலந்துகொண்டு, பகுத்தறிவுப் பணியாற்றியவர்.

அவரது அன்பு மகன் திரு.அருண கிரி அவர்கள் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் திரு.வைகோ அவர்களின் உதவி யாளராக, சீரிய எழுத்தாளராக, கருத் தாளராக திகழ்ந்து வருபவர். அவரது அருமை மகள் நமது தஞ்சை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடக் கத்தில் (திருமணத்திற்கு முன்பு) பணி யாற்றியவர்.

பழனிச்சாமி அவர்களின் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

அப்பகுத்தறிவாளருக்கு கழகம் சார்பில் நமது வீர வணக்கம்!


சென்னை
14.3.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/76935.html#ixzz2vzHJVlm5

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தில் பெண்கள் நிலை?


1. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத்தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

3. இந்த உலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதினால்தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள். - மனு 2-213.

4. பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே. - பாரதம் அனுசான்ய பருவம்

5. பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவை எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. - பாரதம் 43-22.

6. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது - மனு 9-15

7. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவதஸ்கந்தம் 4-14-42

Read more: http://viduthalai.in/page2/76953.html#ixzz2w55Ze23e

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதி களையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங் களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம்.

1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?
நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங் களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்கா விட்டால், கல்யாணத்துக்கு வரச் சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் இவை.

2. From Address மாற்றி மின்னஞ் சல் அனுப்புவது எப்படி?
மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ் சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப ண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இவை.

3. To, Cc, Bcc என்ன வித்தியாசம்?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் அய்டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc – என்ன வித்தியாசம் என்பதாகும்.

4. Gmail ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பா லான பயனர்கள் பயன்படுத்தும் இமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail /ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.

5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?
நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களி டம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படிGmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு ஆகும்.

6. Attach செய்ய முடியாத File-களை Attach செய்வது எப்படி?

நண்பர்களுக்கு ஏதேனும் File -களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவாகும்.

7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர் கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத் திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக் கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு.

இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை கிநீநீமீ செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக் கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் இது.

8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பல வற்றின் அர்த்தம் தெரியாமல் இருப் போம். அதே ஜிமெயில் முழுவ தையும் தமிழில் மாற்ற முடிந்தால்? இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.

9. ஜிமெயிலில் Undo Time Limit - அய் அதிகரிப்பது எப்படி?
ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படு கிறது. அதே போல ஒரு மின்னஞ் சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit – அய் எப்படி அதிகரிப் பது என்ற பதிவுதான் இது.

Read more: http://viduthalai.in/page3/76957.html#ixzz2w55mo3g6

தமிழ் ஓவியா said...


மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹாலிவுட் நடிகர் சாட்டை!

ஹாலிவுட் நடிகராகிய கிறிஸ் ஓடவ்ட் மதம் குறித்து கூறும்போது, மதமானது பிறரைத் தாக்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி கொண்டதாகும் என்றார்.

பிரைய்ட்ஸ்மெய்ட்ஸ் படத்தின் நாயகன் கிறிஸ் ஓடவ்ட் அவருடைய நாத் திகக் கண்ணோட்டத்தில் இவ்வாறு கூறு கிறார். ஆனாலும், அவருடைய இளமைக் காலங்களில் குறைந்த சுதந்திரத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார்.

இப்போது மதக்கோட்பாடுகள் மனிதனின் வளர்ச்சியை முடக்குகின்றன. வெள்ளை மாளிகையிலிருந்து அவர் இனத் தைச் சேர்ந்த கிறித்துவ மதவாதிகளைத் திருப்திபடுத்த எல்லைகளைக் கடந்து கிறித்துவத்தின் மீதான செயலைச் செய்வ தாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாமீது குற்றம் சாட்டுகிறார். கிறிஸ் ஓடவ்ட் மதம் சொல்லும் இயற்கைக்கு மேலானதாக சொல்லப்படும் கடவுள் மீதான நம்பிக் கையை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

கிறிஸ் ஓடவ்ட் பிரிட்டிஷ் ஜிக்யூ என்கிற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: என் வாழ்நாளில் மற்ற வர் விருப்பத்தினுள் நுழைவதில்லை என்று இருந்துள்ளேன். மற்றவர் நம்பு கின்ற உரிமையை மதிக்கிறேன். கால ஓட் டத்தில் மதக்கருத்துக்களின் அழுத்தங் களால் சுதந்திர சிந்தனை குறைவதாகக் கருதுகிறேன்.

மதக்கருத்துக்கள் உலகைப் பாழ்படுத்துவதைப் பார்த்துக் கொண்டி ருக்க முடியாது, மற்றவர்களும் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதத்தால் இனவெறி ஏற்படும்போது, திருப்பு முனையாக அது தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.

இயற்கைக்கு மேலான தென்கிற மதக் கருத்துகள் பைத்தியக் காரத்தனமானவை என்று கூற அனுமதிக் கா விட்டால் அனைவரையும் பைத்தியக் காரர்களாக ஆக்குகிறார்கள் என்றுதான் பொருள். மத நம்பிக்கையாளரை, கடவுள் நம்பிக்கை உள்ளவரை அமெரிக்க அதிப ராக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆவி உல கில் மனிதன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆவி உலகிற்கே போகட்டும்! பராக் ஒபாமா கடவுள்மீது நம்பிக்கை உள்ளவ ராக எந்தவகையிலும் நான் கருதவில்லை. இவ்வாறு ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஓடவ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/76959.html#ixzz2w56P2uUM

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு என்பது

பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற வினாவிற்கு ஓரிரு சொற்களில் பொருள் கூறுவது கடினமான செயலேயாகும்.

அச்சொல்லுக்குரிய பொருளாக அகராதிகள் கூறும் பொருள்கள் சில பின்வருமாறு அமைந்துள்ளன.

பகுத்தறிவு எனப்படுவது பொருட் களின் / நிகழ்வுகளின் / கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற் றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வ மான புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப் பொருளை அல்லது உண்மையைக் கண் டறிவதே... என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.

திருவள்ளுவர் அறிவு என்பதற்கு விளக்கம் கூறும் போது,

எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என்றும்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355)
என்றும் அறிவுக்கு விளக்கம் கூறுகிறார்.

அவர் அறிவுக்குக் கூறும் இவ்விளக் கம் பகுத்தறிவுக்கும் பொருந்துவது போலவே உள்ளது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது.

அறிவு என்றாலே பகுத்தறிவு என்று தான் பொருள். அதிகப்படியான அறிவைப் பயன்படுத்துகிற செலுத்துகிற முறையே பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள் என்றதொரு விளக்கமும் காணப்படுகிறது.

நம்மால் நம்ப இயலாதவற்றை மூடநம்பிக்கை எனப் பெயரிட்டு அம்மூட நம்பிக்கைகளைப் புறம் தள்ளுவதே பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தருகிறது இன்னொரு வலைத்தளம்.

பகுத்தறிவு என்பது காரண காரியங் களை மனத்திற்கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்.

உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு என்கிறது கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.

பகுத்தறியும் திறன், நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்வதை அடிப்படை யாகக் கொண்ட முறை என்கிறது மற்றோர் அகராதி.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பகுத்தறிவு சிந்தனைகள் செவ்வியல் படைப்புகளில் (உயர்திரு இரா.தாமோதரன் (அறவேந்தன்) அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு நூலில் 96 ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57QcTdt

தமிழ் ஓவியா said...

இலட்சியப் பெண் வளர்ந்த விதம்

1917 நீதிக்கட்சி அரசியல் பார்ப்பனரை ஒரு பொழுதும் நம்பாதீர்கள் - (சர்)பிட்டி தியாகராயர்

1926 சுயமரியாதை இயக்கம் புரோகி தப் பார்ப்பனரைப் பணியாதீர் - ஈ.வெ. இராமசாமி

1937 இந்தி எதிர்ப்பு இயக்கம் பார்ப் பனர் மொழிகளை (இந்தி, சமஸ்கிருதம்) ஏற்காதீர் - மறைமலை அடிகளார்

1939 நாட்டுப் பிரிவினை இயக்கம் ஆரியர் ஆட்சி, கலை, மொழி, நாகரிகம் எதற்கும் இடம் கொடாதீர் - சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

1944 திராவிடர் கழகம் ஆரியம் (வைதி கம்) ஆபத்து மிக்கது அரசியல், சமூக வியல், பொருளியல், வாழ்வியல் ஆகிய அனைத்திலிருந்தும் அதனை ஒழித்துக் கட்டுங்கள் - பெரியார் ஈ.வெ.இராமசாமி

1949 திராவிட முன்னேற்றக் கழகம் ஆரியமே (வர்ணாஸ்ரம வைதிகம்) பாசிசத்தின் பிறப்பிடம் வளர்ந்து வரும் ஆரிய பாசிச ஆட்சியிலிருந்து விடுபட வாழ்வு பெற திராவிட நாடு திராவிட ருக்கே என்பதை நிலைநாட்டுங்கள்.

- அறிஞர் அண்ணாதுரை (இனமானப் பேராசிரியப் டாக்டர் அன்பழகன் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம், பக்கம் 15)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57djztS

தமிழ் ஓவியா said...

சுப்ரபாதம்

சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக் கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா? இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார்; இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டி ருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா. ஆனால்... நாமோ றீஷீரீவீநீ இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.

இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வா ரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது.

ஆனாலும், சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...

(இந்து மதம் எங்கே போகிறது? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - பக்கம் 243)

தொகுப்பு: க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57kWkrd

தமிழ் ஓவியா said...


தி.மு.க. - அதிமுக தேர்தல் அறிக்கைபற்றிய கருத்தென்ன?


கேள்வி: வேத வகுப்புகளை இன்றும்கூட நடத்திக் கொண்டு இருக்கிறார்களே? - சு. சிவலிங்கம், ஜாபர்கான்பேட்டை, சென்னை

பதில்: பார்ப்பனீயத்தின் வேரைப் பாதுகாப்பதுதானே அவா ளின் முதல் கவலை. அதனால் நடத்திக் கொண்டுள்ளார்கள்!

கேள்வி: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்? - அ. அய்ன்ஸ்டின், போரூர்

பதில்: உண்மையான நீரோட்டம் - தி.மு.க. தேர்தல் அறிக்கை. கானல் நீரோட்டம் - அ.தி.மு.க.வின் அறிக்கை.

கேள்வி : காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்றால் ஏன் கோபம் வருகிறது அவர்களுக்கு? - பா. துக்காராம், அவினாசி

பதில்: உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் பலருக்கு என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?

கேள்வி: பிள்ளையார் என்ற கடவுளை எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
- வி. முருகேசுவரி, வேலூர்

பதில்: எதுவும் கற்பனை என்கிறபோது அதை யார் எப்படியும் பயன்படுத்தலாமே!
சில பிள்ளையார் - திருமணம் ஆகாதவர்; சில பிள்ளையார் - திருமணம் ஆனவர்
இத்தியாதி! இத்தியாதி!

கேள்வி: யாராலும் அழைக்கப்படாத விருந்தாளியாக தமிழ்நாடு காங்கிரஸ் ஆனதுபற்றி... - பி. மதிவாணன், சென்னை-112

பதில்: அவர்கள் குறிப்பாக காங்கிரஸ் மேலிடம் சிந்தித்து, செய்த அல்லது செய்து வரும் தவறுகளுக்குப் பரிகாரம் - கழுவாய் - தேடிட முன் வந்தால் சரி!

கேள்வி: பி.ஜே.பி. தே.மு.தி.க. - பா.ம.க. ம.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டாலும் தேர்தலில் ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன் - தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - துரை. பாண்டியன், அச்சிறுபாக்கம்

பதில்: இயல்புக்கு ஒருவருக்கொருவர் எதிரும் புதிரும் என்பதால் என்னதான் ரிங்க்மாஸ்டர் இருந்தாலும், இயல்பை மாற்றிக் கொள்ள முடியுமா - அத்தகையவர்களால்?

கேள்வி: ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கேட் கும் போது நாமும் நாத்திகர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டால் என்ன? - எஸ். நல்லபெருமாள், வடசேரி

பதில்: நாத்திகர்கள் ஏற்கெனவே தனிமையாக்கப் படுத்தப்பட்டுள்ளதால் தனி இடஒதுக்கீடே தேவையில்லை!

கேள்வி: மோடி பிரதமராக வேண்டும்; இல்லாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற சோவின் கூற்று, எதனைக்காட்டுகிறது? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அவருடைய உள் ஆசை, வெளி ஆசை இரண்டையும் காட்டுகிறது!

கேள்வி: இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி உணவு பொருட்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளாரே? (பழங்கள், காய்கறிகள் மட்டுமே ரூ.13,309 கோடி அளவு பாழாகிறதாம்).

பதில்: அதைவிட அபிஷேகம் கல்லுக்கு என்ற முறையில் பாழாகும் பால், பழங்கள், காய்கறிகள் பற்றியும் சேர்த்தால் பல கோடி (தஞ்சை பெரிய கோயிலிலேயே ஆண்டுதோறும் பாழடிக்கப்படும் கணக்கும் சேர்த்தால்) எவ்வளவோ வரும்!
சட்டப்படி இவை குற்றமாக்கப்படல் வேண்டும்.

கேள்வி: பன்றிமீது வாகனம் மோதி விபத்தானால் தரித்திரம் என்கிறார்களே? வாகனத்தைக்கூட விற்று விடுகிறார்களே - பன்றி என்ன அவ்வளவு மோசமான மிருகமா? - தி. இரமணன், த.பேட்டை, சென்னை-81

பதில்: என்னங்க.. இப்படி கேட்கிறீங்க? அது வராக அவதாரமாயிற்றே! ஸ்ரீமான் ஸ்ரீஜத் மகாவிஷ்ணு அல்லவா பண்ணி ஆக மாறியுள்ளார்?

அதெப்படி கடவுள் அபசகுனமாவார்? (அட அறிவுக் கொழுந்து பக்தர்களே!)

Read more: http://viduthalai.in/page8/76966.html#ixzz2w57w8umD

தமிழ் ஓவியா said...

அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?

தினமலரில் இன்று ஒரு அக்கம் பக்கம் செய்தி: மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி பி.ஜே.பி. சார்பில் நெருங்கிய பிரமுகர்களுக்கு டில்லியில் விருந்தொன்று அளிக்கப்பட்டது. அத்வானியும் அங்கு வந்தார்.

தனக்கென ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்து யாருடனும் பேசாமல் தட்டிலிருந்த இனிப்புகளை சுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரமுகர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானியோ ஜிலேபி சாப்பிட அழைத்தனர்! அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.

அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஜிலேபி டேஸ்ட் நன்றாக இருக்கிறதா எனக் கேளுங்கள் அதற்குப் பதில் சொல்லுகிறேன் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டாம்! (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) என்று கூறியுள்ளார் அத்வானி!

அங்கு ஜிலேபி என்றால் தமிழ்நாட்டில் என்னவென்றால் தன்னிடம் கூட்டுச் சேர வந்துள்ள சில கட்சிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு!).

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 14.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w591z98I

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

(விடுதலை, 10.8.1961

Read more: http://viduthalai.in/page-2/77016.html#ixzz2w59cjV3P

தமிழ் ஓவியா said...


அத்வானிக்கு ஜிலேபி

- குடந்தை கருணா

சமீபத்தில் புது தில்லியில் பாஜக சார்பில், முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்வானி தாமதமாக கலந்து கொண்டாலும், விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்து, அங்கே வைக்கப்பட்ட ஜிலேபியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அரசியல் குறித்த கேள்விகளுக்கு, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரி யாது; ஜிலேபி சுவையாக இருக்கிறதா என்று வேண்டுமானால் கேளுங்கள்; சொல்கிறேன்.

என்னை ஜிலேபி சாப் பிடத்தான் வரச் சொன்னார்கள் என அத்வானி கூறியதாக நேற்றைய செய் தித்தாள் ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. யார் இந்த அத்வானி; சென்ற தேர்தல்களில், வாஜ்பாய் என்பவர் விகாஸ் புருஷர் அதாவது வளர்ச்சி மனிதர் என்றும், அத்வானி என்பவர் லோக் புருஷர் அதாவது இரும்பு மனிதர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

அத்தகைய அத்வானிக்கு, இன்றைய பாஜகவில் தரப்படும் மரியாதை இவ்வளவு தான். கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் சீராமுலுவை மீண்டும் பாஜகவில் சேர்ப்பதற்கு, சுஸ்மா சுவராஜ், தெரி வித்த தனது கடுமையான எதிர்ப்பை யும் மீறி, சீராமுலு பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடமிருந்து வாரணாசி தொகுதியைக் கைப்பற்றி மோடிக்கு தருவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை சுஸ்மா சுவராஜூம், முரளி மனோகர் ஜோஷியும் தெரிவித் துள்ளனர்.

பாஜகவின் அரசியல் நடவடிக் கைகளில் ஆர்.எஸ்.எஸின் தலை யீட்டை அத்வானி விரும்பவில்லை என்கிற நிலையில் தான், அவர், கட்சி யில் முக்கியத்துவம் இழக்கக் காரண மாகி விட்டது. ஜிலேபி ருசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் தற்போதைய கருவியாக செயல்படும் மோடியை எதிர்க்கும் சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஸி, இருவரும், அத் வானியை அடுத்து, ஜிலேபி சாப் பிடும் நிலைக்கு விரைவில் தள்ளப் படலாம்.

Read more: http://viduthalai.in/page-2/77019.html#ixzz2w5A6uVIi

தமிழ் ஓவியா said...


தம்பட்டம் மேயோக்கள் - சித்திரபுத்திரன்

ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப் பனியம் இருக்குவரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும விரையும் விஷ்ணு புராண மும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.

சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர்களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும்.

2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும். கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமுமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும்,

குடிக்கப் பாலில்லாத குழந் தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் தொத்திக் கொண் டும் எலிக் குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலையிலும் பாம்புப்புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாதக் குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும்,

குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேத பாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிலிகள் மிகுந் திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர் களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச்சாரிகளாக விட்டுக் கொண்டிருக்குமட்டும், அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும்,

மனி தனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும் மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்கா விலிருந்தும்,

ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொலபொலவென கலகல வெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும், பண்டிதர்களும் உணர்வ தோடு பார்ப்பனர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும் தேசத் தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.

- குடிஅரசு - கட்டுரை - 09.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76985.html#ixzz2w5CeIPCI

தமிழ் ஓவியா said...


இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள்.

இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.

தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்து வதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.

இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.

நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.

இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/76986.html#ixzz2w5Cnz1zi

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!


தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டு மென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.

அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரி யாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு, எம். கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத் தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரிகின்றது.

தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும்.

பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகல் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர் களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்.

இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது. தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76987.html#ixzz2w5CwnkrO

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங்


ஆன்மீகப் பிரச்சாரம் செய்து வரும் தோழர் சுகிசிவம் கொஞ்சம் வித்தி யாசமானவர். தொலைக் காட்சிகளில் தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பற்றி எல்லாம்கூட எடுத் துக்காட்டி தொலைக் காட்சிகளில் உபந்நியாசம் செய்யக் கூடியவர்.

தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட கடைசி பிறந்த நாள் கவியரங்கில்கூட (17.9.1973) (உவமைக் கவிஞர் சுரதா தலைமையில்) கலந்து கொண்டு தந்தை பெரியார் பற்றிப் பாடியவர் சிவம்.

மார்ச்சு 9 (2014) கல்கி இதழில் கடைசிப் பக்கத் தில் ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார்கள் - சோதிடம் பற்றிய தகவல் அது.

ஒரு சின்ன துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு ஓர் ஆராய்ச்சி யாளரின் அக்கறையுடன் தொலைக்காட்சியை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என் நண்பர் தலைவிரிகோல மாக ஓர் இளம் - பெண் அன்றைய ராசிப் பலன் களைப் பெரிய கவிதை போல இரசித்து, தலை யசைத்து வாசித்துக் கொண்டிருந்தார்.

கடகராசி நேயர்கள் அன்று உடுத்த வேண்டிய ராசியான நிறங் கள், நகர வேண்டிய திசை கள் போகக் கூடாத இடங் கள் பற்றித் தலைவிரிப் பெண்மணி சொன்னதும் புன்னகையுடன் பீரோவி லிருந்து தமக்கு ராசி என்று சொல்லப்பட்ட நிற பேன்ட் சட்டை (சகிக்காத கலர் மேட்ச்) தேடி எடுத்து உடுத் திக் கொண்டார் எந்தநிற உடையென்று நாள்தோறும் அந்த அம்மணி சொல் வதைத் தாம் பின்பற்றுவ தாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

எனக்குப் பயமாய்ப் போய் விட்டது. ஒரு வேளை அன்று ராசியான நிறம் அந்த அம் மணி சொல்லாமல் போய் விட்டால், நண்பர் எவ்வித ஆடையுடன் வெளியில் போவார் என்று எண்ணிக் கலங்கி விட்டேன்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி குஷ்வந்தசிங், ஒரு நிகழ்வு சொன்னார். ஒரு முறை பத்திரிகை அச் சேறும் வரை ஜோதிடப் பலன் வந்து சேரவில்லை என்பதால் பழைய பலன் களைப் பார்த்து தாறு மாறாக அவரே எழுதி அச்சேற்றி விட்டாராம். அந்த வாரம் ஜோதிடப் பகுதிக்கு ஏகப்பட்ட பாராட் டாம். பலன் துல்லியமாக இருந்தது என்று கடிதங்கள் குவிந்தனவாம்!

இந்தத் தகவலை எழுதி யுள்ள சுகிசிவம் இன் னொரு சொந்தத் தகவலை யும் குறிப்பிட்டுள்ளார். என் நண்பனும் நானும் 27.8.1953 அன்று ஒரே நாளில் பிறந்தோம். ஆனால் எங்கள் வாழ்வு பல வகையில் மாறுபட்டது. அவருக்கு ஆண் வாரிசு கள், எனக்கோ பெண் வாரிசுகள். அவர் தாய் முன்னதாக இறந்தார்.

எனக்கோ என் தகப்பனார் முன்னதாகவே மறைந்தார். இவ்வளவுக்கும் எங்கள் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் என்று போட்டு உடைத்து விட் டார் சுகிசிவம்.
சோதிடப் பிரியர்களே சொல்லுவது கருஞ் சட்டைக்காரர்கள் அல்லர் - ஆன்மீகப் பிரச்சாரகர் சுகிசிவம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77051.html#ixzz2wB4f9SAs

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள்:


அன்னையார் பணி வெல்க வெல்கவே!

இன்று (16.3.2014) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்
நினைவு நாள்.

நம்மைப் பொறுத்தவரை நமக்கு இது ஒரு வரலாற்றுக் குறிப்பு
நாள்! அவ்வளவுதான்.

ஏனெனில் அன்னையார்தம் அரும்பணி தொண்டறம் -
தொடர நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணிக்க
உறுதி - சூளுரை எடுக்க வைத்த - நாளாயிற்றே!
உலகிலேயே வசவுகளால், துவளாது,
தொய்வடையாது, தொடர்ந்து என்பணியில்
(எம் அய்யாவைக் காப்பாற்றி வாழ வைக்கும்
கடமையில்) என்றும் ஓயமாட்டேன், ஒதுங்க
மாட்டேன் என்று உறுதி மலைமீது நின்று பிரகடனம்
செய்த எம் அன்னையார் வாழ்ந்த காலம்
59 ஆண்டுகளே!

இதில் 45 ஆண்டுகளுக்குமேல் அய்யா
விடமே அன்னையார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

தனக்கு அறிவுப்பற்று, மனிதப்பற்று தவிர,
வேறு எந்தப் பற்றுமே கிடையாது என்று
முழங்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரையே
பற்றிக் கொண்டு, தனக்குள்ள இளமை, வலிமை
ஆகியவற்றையெல்லாம் துறந்து, தூய
தொண்டறத்தின் உருவமாய் உயர்ந்து
தன்பணியில் தளராது இறுதி மூச்சடங்கும்வரை
கொள்கைகளாக தன்னை எரித்த
ஈடு இணையற்ற எங்கள் அன்னையே
எரிந்து எரிந்து தன்னை அழித்து
ஒளி தந்து, இன்று எரிந்த பின்பும்
மங்காத வெளிச்சமாய், எங்கள் ஒளியாய்,
வழியாய் திகழும் எம்தந்தையின் காவல்
அரணே!

அய்யாவின் இமை மூடியபின், அவர் தந்த
இயக்கத்தைக் காத்துவளர்த்த எங்கள்
அன்னையே
உனது நினைவு நாளில்
- நீங்கள் நடத்திய இராவண லீலா - இராம -
இராவணப் போர் இன்று தேர்தல் களத்தில்
நடைபெறும் கால கட்டத்தில், உங்களின்
உறுதியை நாங்கள் ஏற்று
உங்கள் பயணத்தைத் தொடருகிறோம் அன்னையே!
நீங்கள் தந்த நெஞ்சுரத்தைத் தவிர,
தந்தை அளித்தகொள்கைளைத் தவிர,
வேறு எதையும் ஏற்காது
பணி தொடருவோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77055.html#ixzz2wB5SXEKH

தமிழ் ஓவியா said...


மறைந்த தலைவர்கள் சிலைகளை மறைக்கத் தேவையில்லை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


சென்னை, மார்ச். 16- மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதுகுறித்து கேள்வி எழுப் பப்பட்டது.

அதற்கு பிரவீண்குமார் அளித்த பதிலில், கட்சித் தலைவர்களின் சிலைகளை மட்டுமே மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. மறைந்த தலைவர் களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

செல்பேசி குறுஞ் செய்தி மூலம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள் ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்ப டுத்தியுள்ளது. இந்தப் புதிய வசதியை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அதி காரி (அய்.டி.,) அஜய் யாதவ் வெளியிட்டார். அதன்படி, 94441 23456 என்ற செல் போன் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பலாம்.

செல்பேசி புதிய வசதி: வாக்குக்கு பணம் கொடுத் தால் அதனை பெறக் கூடாது எனவும், அப்படி பணம் கொடுக்க கட்டாயப் படுத்தினால் அதனை புகைப் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதற்காக செல்பேசியில் தனியான வசதி உருவாக்கப்படும். இந்த புதிய வசதி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப் படும் என்று பிரவீண் குமார் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/77052.html#ixzz2wB5gDCNB

தமிழ் ஓவியா said...


நம்மைப் பிடித்த நோய்


- குடந்தை கருணா

மோடியை வேண்டுமென்றே ஊடகங்கள் தாங்கிப்பிடிக்கின்றன என ஊடகங்களின் ஒரு சார்பு நிலையை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் அம்பலப்படுத்தியதற்கு ஆத்திரப்படும் ஊடகங்கள், தமிழ் நாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கிலும் அதே ஒரு சார்பு அணுகுமுறையைத் தானே கையாள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்திற்கு வழக்காடாமல் விடுப்பு எடுப்ப தற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பவானி சிங்கிற்கு அவரது ஒரு நாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு அம்மையாருக்கு வருமானால், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை, வாய்தா வாங்கியே இழுத் தடித்து வரும் நிலையில், தற்போது, இறுதி வாதத் திற்கு வழக்கு வந்துள்ளது.

இந்திய அரசியலில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மேடை தோறும் ஜெயலலிதா பேசி வரும் நிலையில் இந்த வழக்கின் இறுதி வாதத்திற்கு, அரசு வழக்கறிஞர் வராமல் தவிர்ப்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆனால், இந்த செய்தியை நம்மூர் பத்திரிகைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்தன? தினகரன், முரசொலி பத்திரிக்கைகள் தவிர்த்து, மற்ற பத்திரி கைகளான தினத்தந்தி 12-ஆம் பக்கத்திலும், தினமலர் 9-ஆம் பக்கத்திலும், தி இந்து தமிழ், 16-ஆம் பக்கத் திலும், தினமணி 11-ஆம் பக்கத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியா 9-ஆம் பக்கத்திலும், தி இந்து ஆங்கிலம் 4-ஆம் பக்கத்திலும் செய்தியை வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிகல், மாலை முரசு பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிடவில்லை. அதே நேரத்தில், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ராஜ் நாத்சிங்கையும், ரஜினிகாந்தையும் சந்தித்தது, தனிப்பட்ட சந்திப்பு என அவரே சொன்னாலும், அதில் அரசியல் இருக்கிறது;

திமுகவிற்கு பாதிப்பாகுமா? என்றெல்லாம் துப்பு துலக்கி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் இந்த பத்திரிகைகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கில், நமக்குத் தெரிந்து, அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதை ஒரு முக்கியம் வாய்ந்த செய்தியாக கருதாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நம்மைப் பிடித்த நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சொன்னாரே, அது தான் நினைவுக்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/77058.html#ixzz2wB5uqgeZ