Search This Blog

1.2.14

ஆரிய நஞ்சு! பம்மாத்துச் செய்யப் பார்க்கிறது பார்ப்பனீயம்!!


கேள்வி: கர்நாடகத்தில், எடியூரப்பாவைச் சேர்த்துக் கொண்ட பா.ஜ.க., தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் தயங்குவது ஏன்?

பதில்: அகில இந்திய அளவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்களைப் பற்றி பா.ஜ.க., விமர்சனம் செய்கிறபோது, அதில் 2ஜி விவகாரம் முக்கிய இடம் பெறும். அப்போது தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி இருந்தால் பா.ஜ.க.விற்குப் பெரிய தர்மசங்கடம் நேரிடுமே? அந்தத் தயக்கத்தின் காரணமாகத்தான் தி.மு.க. கூட்டணியைப் பற்றி பா.ஜ.க. இங்கு நினைத்தும் பார்க்கவில்லை. (துக்ளக் 5.2.2014 பக்கம் 9)

இந்தக் கேள்வியைப் படிக்கும் பொழுது ஒரு பக்கம் விலாநோகச் சிரிப்பு வருகிறது; இன்னொரு பக்கத்தில்  இந்தச் சோவைப் போய் அறிவு ஜீவி என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்களே என்று நினைக்கவும் தோன்றுகிறது.

முதலாவது இந்தக் கேள்வியே தவறு; திமுக பிஜேபியுடன் கூட்டணிக்காக விண்ணப்பம் போடுவது போலவும், பிஜேபி அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது போலவும் ஒரு கடைந்தெடுத்த கற்பனை, கேள்வியிலேயே தொனிக்கிறதே!

தமிழ்நாட்டில் பிஜேபியின் யோக்கியதை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி! நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. ஒரே ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றதுண்டா? அதுதான் போகட்டும். ஒரே ஒரு இடத்திலாவது கட்டிய பணத்தை (னுநயீடிளவை)  யாவது திரும்பப் பெற்றதா? இந்த நிலையில் உள்ள ஒரு கட்சி திமுகவுடன் கூட்டணி சேரத் தயங்குவதாகக் கூறுவது மண்டைக்கனம் என்பதல்லாமல் வேறு என்ன? இன்னொரு வகையில் சொல்லப் போனால் பார்ப்பனீயத்திற்கே உரிய பூணூல்தனமும் இதில் இழையோடுகிறது.

தி.மு.க.வை மட்டம் தட்டி பா.ஜ.க.வைத் தூக்கி நிறுத்துவதன் மூலம் திமுகவைவிட, பிஜேபியை மேல் நிலையில் வைத்து  பார்க்கச் செய்யும் ஒரு அற்பத் தனத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது.

இரண்டாவதாக ஊழலை முன்னிறுத்துகிறது. பிஜேபி என்னமோ பரிசுத்த நெய்யில் பொரிக்கப்பட்ட உத்தமத் தோசை போல பம்மாத்துச் செய்யப் பார்க்கிறது பார்ப்பனீயம்.

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தமானது பா.ஜ.க.; கட்சித் தலைவர் கை நீட்டி வாங்கும் பணத்தை மேசை டிராயரில் போடுவதுவரை டெகல்கா அம்பலப்படுத்தியதை மக்கள் மறந்து விட்டார்களா?

பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரிமீது ஊழல் குற்றச்சாற்றுப் பாயவில்லையா?

சரி, கருநாடகத்தில் எடியூரப்பாவைச் சேர்த்துக் கொண்ட பா.ஜ.க. என்றுதானே கேள்வியே ஆரம்பமாகிறது. அந்த எடியூரப்பா ஊழலிலே பிறந்து ஊழலிலே வளர்ந்து உருண்டு திளைத்த ஊழல் பெருங்கடல் அல்லவா!

கருநாடக பா.ஜ.க., ஆட்சியில், ரெட்டி சகோதரர் களின் கொள்ளை ஊர் சிரிக்கவில்லையா? இந்த நிலையில் யூகத்தின் அடிப்படையில் கற்பனையாகக் கூறப்படும் ஒன்றை (2ஜி) தி.மு.க.மீது ஏற்றிப் பழி போடுவது என்றால், அது என்ன யோக்கியதை?

பிஜேபி கூட்டணி வைத்துக் கொள்வதற்கு அடிப்படை  அணுகுமுறை என்பது ஊழலை மய்யப்படுத்தித்தானா? கேள்வி கேட்பதற்கே பணக்காரர்களிடம் பணம் வாங்கு வதில் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தானே முதலிடம்; மறுக்க முடியுமா? அ.இ.அ.தி.மு.க.வுடன் பிஜேபிக்குக் கூட்டணி என்றால் இதே அணுகுமுறை பா.ஜ.க.வுக்கு இருக்குமா?

பார்ப்பனக் கும்பலின் ஒரே நோக்கம் அரசியலில் திமுக தலை தூக்கக் கூடாது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் அதற்கென்று திராவிட இயக்கப் பார்வை, இனக் கலாச்சாரக் கண்ணோட்டம் துடிப்போடு இருக்கும்.

தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, கோயிலுக்குள் தமிழில் வழிபாடு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, இடஒதுக்கீடு என்கிற கண்ணோட்டமும், செயல்பாடும் முன்னணியில் இருக்கும். இவை அத்தனையுமே பார்ப்பனீயத்தின்மீதும் அதன் ஆதிக்கத்தின்மீதும் விழக் கூடிய இடி என்பது சோ உள்ளிட்ட பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ஊடகங் களுக்கும் மிகவும் துல்லியமாகவே தெரியும். இந்த அதிமுக்கியமான காரணமே தொட்டதற்கெல்லாம் தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்குவதும் கேலி செய்வதும் ஆகும்.

அதே நேரத்தில் அஇஅதிமுக என்ற திராவிட இயக்கப் பெயர் கொண்ட கட்சியின் செயல்பாட்டையோ, அதற்கு நேர்மாறாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல் அமைச்சர் நடந்து கொண்டு வருவதைப் பற்றியோ தவறிக்கூட ஒரே ஒரு வரி விமர்சனம் செய்வார்களா என்றால் அது மட்டும் நடக்கவே நடக்காது!

திராவிட இயக்கப் போர்வையில் நமது கலாச்சார ஊடுருவலும், செயல்பாடும் ஜோராக நடக்கிறது பலே! பலே!! என்று சப்புக் கொட்டிக் கொண்டு மெய்ச் சிலிர்க்கிறது ஆரியம்.

ஆரியத்தின் இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் சோவின் பேனா முனை என்பது ஆரிய நஞ்சைக் கொட்டக் கூடியது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளலாமே!

27 comments:

தமிழ் ஓவியா said...


குடிஅரசு கருவூலத்திலிருந்து திராவிட மாணவர் மாகாண மாநாடு


திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம்.

மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள்சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும்.

இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டி ருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாடு, சேலம் காலேஜ் பிரின்சிபால் அறிஞர் எ. இராமசாமி கவுண்டர் அவர்கள் தலைமையில் நடந்தது என்பதோடு மற்றும் பல ஆசிரியர்களும் வந்து கலந்து கொண்டதானது மாநாட்டுக்கு மிகவும் பெருமையும், உற்சாகமும் ஊக்கமும் அளித்தது.

இரண்டு நாளும் மாநாடு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோர் நம் நாடும் இனமும், இன்று இருக்கும் நிலையில், நாம் நம் வாழ்நாளில் நல்ல நாட்களை பயனற்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழித்து அடிமைத்தனம் கற்றுக் கொண்டு இருப்பது பெரியதொரு நாட்டுத் துரோகமும், இனத் துரோகமுமான செய்கை என்று கருதித் துயருற்ற வண்ணம் காணப்பட்டதானது மிகவும் குறிப்பிட வேண்டிய காரியமாகும்.
அடுத்தாற் போல் அங்கு தாண்டவமாடிய உணர்ச்சி என்னவென்றால் இந்த மாநாடு முடிந்த வுடனே தங்களுக்கு ஏதாவது ஒரு பணி ஆற்றத் தலைவர் அனுமதி அளிக்க மாட்டாரா? என்கின்ற ஆர்வமும் எழுச்சியும் பொங்கி வழிந்ததேயாகும்.
(குடிஅரசு தொகுதி 34 பக்கம் 79)

மத விடுமுறை மதமில்லாத சர்க்காரிலா?

மதமில்லாத சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய யூனியன் சர்க்கார் மத சம்பந்தமான நாட்களுக்காக விடுமுறை விடுவதானது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறபடியால், மத சம்பந்தமான நாட்களுக்கு விடுமுறை விடுவதை நிறுத்த வேண்டுமாய் இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


இராமாயண எதிர்ப்பைத் தீவிரமாகச் செய்!

இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும், மதத்தின் பேரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல விதங்களிலும் தடையேற்படுத் தியதோடு, மூடப் பழக்கங்கள் மக்களிடையே வளருவதற்கு இராமாயணமே காரணமாயிருப்பதனால் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. - (குடிஅரசு தொகுதி 40 131ஆம் பக்கம்)

பகுத்தறிவும், சுயமரியாதையும்!

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளைவிட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம்.

சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம்.

காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத்த் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம்.

ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம்.

புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம்.

அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம்.

அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம்.

அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்குவழி காட்டியனுப்புவோம்.

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமே என்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளா தார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத் துவ சுதந்திரம் வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ, மத துவேஷி என்றோ கூற இயலாது.
குடிஅரசு தொகுதி 39 207ஆம் பக்கத்தில் இருப்பது

புண்ணிய ஸ்தலங்கள்

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு குடிஅரசில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும், அசம்பாவிதமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி,

அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந் திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதை யுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதுதான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கிய தைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு வருகின்றனர்.
தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/74468.html#ixzz2s7XOs1nK

தமிழ் ஓவியா said...


பெரியார்



- கவிஞர் கலிகாலன், ஈரோடு

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தனைநீ! எனினும்
பகுத்தறிவுக் கனல் பரப்பும்
சூரியனாய் உருவெடுக்கத் தவறவில்லை!
உனைக் கண்டு -
சாத்திரம் பேசும் சனாதனப் பூனைகள்
பூணூல் மறைத்தே புதுநூல் படித்தன!

சாதிமதப் பேய்கள் தடுமாறி ஒளிந்தன!
ஒளிவது போதாது வேரடி மண்ணோடும்
அழிவது வேண்டுமென,
அல்லும் பகலும் நீ அயராது உழைத்தாய்!
பகுத்தறிவுத் தேரேறி அஞ்சாமை வாள் சுழற்றி
அரும்பாடு பட்ட அய்யாவே
நின்புகழ் நிலைத்தோங்குக!

சூத்திரன், தாழ்த்தப்பட்டவன்,
தீண்டத்தகாதவன் எனப்பலவும் சுமக்கும்
கழுதைகளாய்க் காரிருளில்
அடிமைப்பட்டுக் கிடந்த எம்
கைவிலங்கு அறுத்தனை நீ!

சனாதனச் சகுனிகளின் பொய்முகம்
கிழித்திட்டு அரியென முழங்கிய
அடலேறே! வெண்தாடி வேந்தனே!
திக்குத் தெரியாது தவித்திட்ட எங்களுக்கு
வழிகாட்ட ஈரோட்டில் வந்துதித்த
பகுத்தறிவுப் பகலவனே!

மனிதநேயமற்ற மனுதர்மக் கதிர்வீச்சால்
ஆண்டுபலவாக அடிமை விலங்கேந்திக்
கூனிக்குறுகி கும்பிட்டே வாழ்ந்திருந்தோம்!
நோய் போக்கும் வழியறியோம்
நொந்து நொந்து வெந்தழிந்தோம்
வந்தனை நீ! எங்கட்கும் புதுவாழ்வு
தந்தனை! எம் தலைநிமிர வைத்திட்டாய்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும்
பெருநீதி நாட்டினாய்!

ஏழையரும் கல்விபெற
வேலை முதல் அனைத்தும்பெற
இடஒதுக்கீட்டால் ஏற்றம் பெறச் செய்திட்டாய்
நீருள்ளளவும் நிலம் நெருப்புள்ளளவும்
வானுள்ளளவும் வளியுள்ளளவும்
பெரியார் எனும் பெயர் உனக்கே,
உனக்கே பொருந்தும் ஒப்பிலான் நீயே!

Read more: http://viduthalai.in/page6/74478.html#ixzz2s7Yi2M69

தமிழ் ஓவியா said...


அ(வி)ஞ்ஞானம்



அஞ்ஞானம்: கார்த்திகை கடைசி வெள்ளி அன்று மக்களின் அமைதியான வாழ்வுக்கு காவல்துறையினரும், பயிர்கள் செழித்து வளர வேண்டும் என வேண்டி பொதுப் பணித் துறையினரும் பால், பன்னீர், புஷ்பகாவடி இரணியலிலிருந்து குமாரகோவிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

விஞ்ஞானம்: விண்வெளி ஆய்வு மய்யத் தில் உள்ள குளிரூட்டும் சாதனம் பழுதடைந்த தால், அங்கு தங்கி ஆய்வு நடத்தி வரும், அமெரிக்கர், ரஷ்யர், ஜப்பான் விண்வெளி வீரர்கள் ஆய்வு மய்யத்திலிருந்து வெளியில் வந்து அந்த சாதனத்தின் பழுதை சரி செய் தார்கள்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page6/74477.html#ixzz2s7Yr4kL3

தமிழ் ஓவியா said...


அய்.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் அவசியம் இந்தியா வலியுறுத்தல்


அய்.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கண்டம் இடம் பெறாதது அய்.நாவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் வரலாற்று அநீதிகளை ஒழிக்க அந்த சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அய்.நா.வில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு நியூயார்க் சென்றுள்ளது. இக்குழுவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுரும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அய்.நா., பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய தோழமை என்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிரினீத் கவுர் பேசினார். அப்போது 75 சதவீத பணிகள் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் அய்.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லாதது இந்த அவையின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மேலும் அவர் பேசியதாவது: உலக மயமாக்கல் நடைமுறையை வலுப்படுத்தவும் பல்வேறு நிலைகளில் ஜனநாயக வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ற பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அய்.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். 2015-இல் அய்.நா பாதுகாப்பு சபையின் 70-ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் 2005-இல் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி பத்து ஆண்டுகளில் எந்தெந்த நாடுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதை காணலாம். இது உலக நாடுகள் தங்களது சாதனைகளை எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். ஆப்பிரிக்காவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அது ஒட்டு மொத்த வளர்ச்சியும், செழிப்பும் அடைய ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடும் வறட்சி, பசி, -பட்டினி ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோதல் போன்றவையே ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாகவும் பிரினீத் கவுர் தெரிவித்தார்.

- சட்டக்கதிர் - ஜனவரி 2014 - பக்கம் 62

Read more: http://viduthalai.in/page6/74480.html#ixzz2s7ZJlzB0

தமிழ் ஓவியா said...


பெரியாரை இழிவுபடுத்தி எச்.ராஜா பேச்சு தமுஎகச கடும் கண்டனம்

மதுரை, ஜன. 31- பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை கருத்து களைத் தமிழகத்தில் வலுவாகப் பரப்பிய தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பாஜக தலைவர் எச். ராஜா பேசியிருப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வன்முறையைத் தூண்டும் அந்தப் பேச்சைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டி இயக்கம், சென்னையில் கண்டனக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமுஎகச மாநிலச்செயற்குழு கூட்டம் ஞாயிறன்று (ஜன. 26) மது ரையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச் செல் வன், பொதுச்செயலாளர் சு. வெங் கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் சமூகநீதி, பண் பாட்டுப் போராளியாக இறுதிமூச்சு வரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்களை பாஜக மாநிலத் துணைத்தலைவர் எச். ராஜா ஒருமையில் பேசுகிற பேச்சு இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்தப் பேச்சில் அவர் பயன் படுத்தியுள்ள சொற்கள் சுயமரி யாதைக் கருத்துகளையும் பகுத் தறிவுச் சிந்தனைகளையும் பரப்பிய அந்த மகத்தான தலைவரை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளன. இந்தப் பேச்சை எச். ராஜா என்ற தனிமனிதரின் கருத்தாக மட்டும் பார்க்க இயலாது. சமூகத்தில் புரை யோடிப்போயிருந்த மூடநம்பிக்கை களை, அறியாமையை, புராணப் புளுகுகளை அம்பலப்படுத்தி அயராது, சமரசம் செய்து கொள் ளாமல் பரப்புரை செய்தவர் பெரி யார். இப்போதும் சாதிவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக, பெண் ணுரிமைக்கு ஆதரவாக முன்னெ டுக்க வேண்டிய கருத்தாயுதங் களைப் பெரியாரிடமிருந்து பெற முடிகிறது.

எந்தத் தருணத்திலும் மதவாத பிற்போக்கு சக்திகளால் நெருங்க முடியாத நெருப்பாக பெரியார் திகழ்வதால் காழ்ப்புணர்வு முன் வைக்கப்படுகிறது. புதிய தலைமுறை இளைஞர்களைத் திசைதிருப்புவது, சங் பரிவார இந்துத்துவா சக்தி களுக்கு வெறியேற்றுவது, கருத் துக்களத்தில் விவாதத்தை முன் வைப்பதற்கு பதிலாக மூர்க்கத்தை மூலதனமாக்கி ஆதாயம் தேடுவது என்று முயல்கிறார்கள். எனவே, எச். ராஜாவின் வன் முறையைத் தூண்டும் பேச்சுக்கு தமுஎகச மாநிலச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியாரை இழிவு படுத்தும் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் உடனடியாக சுவரொட்டி இயக்கம் நடத்த வேண்டும் என்றும், சென் னையில் கண்டனக் கருத்தரங்கம் நடத்துவது என்றும் மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

- (நன்றி: தீக்கதிர் 28.1.2014)

Read more: http://viduthalai.in/e-paper/74493.html#ixzz2s7ZYKusf

தமிழ் ஓவியா said...


கோயில்களில் நடக்கும் கொள்ளைகள்


வைஷ்ணவ தேவி கோவில் காணிக்கையில் 43 கிலோ போலி தங்கம்

ஜம்மு, பிப்.1- வைஷ் ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைகளில், 43 கிலோ தங்கமும், 57 கிலோ வெள்ளியும் போலி யானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 5,300 அடி உயரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில், கடந்த ஆண்டு, ஒரு கோடி பக்தர்கள், தரி சனம் மேற்கொண்டுள்ள னர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலுக்கு, தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கை யாக அளிப்பர். இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு வுக்கு, கோவில் வாரிய நிர்வாக அதிகாரி அளித்த பதிலில் கூறியிருப்பதா வது: கடந்த, அய்ந்தாண் டுகளில், 193 கிலோ தங்கம் மற்றும் 81 ஆயிரம் கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத் துள்ளது. இதில், 43 கிலோ தங்கம், 57 கிலோ வெள்ளி போலியானது என்பது தெரிய வந்துள் ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலி தங்கத்தை, உண்மை யான தங்கம் என, பக் தர்கள் நினைத்து கோவி லில் காணிக்கையாக அளித்தார்களா... என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

பூசாரிகள் குற்றச்சாட்டு சிவகங்கை, பிப்.1- தமிழகத்திலுள்ள இந்து கோயில்கள் உண்டியல் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாயில், ரூ.41 கோடியை மட் டுமே அரசு கணக்கு காட்டுவதாக , கிராமக் கோவில் பூஜாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந் தரம் குற்றம் சாட்டியுள் ளார்.

சமீபத்தில், சென்னை யில் கிராம கோயில்கள் பூஜாரிகள் சங்க நிறு வனர் வேதாந்தம் மீது சில சமூக விரோத கும் பல் தாக்குதல் நடத் தியது. இதனை கண்டித் தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத் தியும், சிவகங்கையில் நேற்று, கிராம கோயில் பூஜாரி சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூஜாரி கள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந்த ரம் பேசியதாவது: தமி ழக இந்துக் கோவில் களில் இருந்து ஆண் டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக் கிறது. ஆனால், அரசு ரூ.41 கோடியை மட் டுமே கணக்கு காட்டு கிறது. இதில், 36 கோடி கோயில் சார்ந்த அதி காரி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு கிறது என்ற புள்ளி விவ ரங்களை நம்ப முடிய வில்லை.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கென நாலரை லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற் போது, சில அரசியல் வாதி மற்றும் அவர் களது பினாமிகளின் கைவசம் உள்ளன. ஏக் கருக்கு ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200க்கான வாடகை ரசீதை மட்டும் செலுத்தி விட்டு, கோடிக்கணக்கில் சம்பா தித்து, அரசை ஏமாற்று கின்றனர். கோயில் நிலங் கள் மீட்கப்பட வேண் டும். கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரு வாய் கிடைக்கும் நிலை யில், கிராமப்புறத்தில் பெரும்பாலான இந்துக் கோயில்களில் ஒரு கால பூஜை, விளக்கு போடுவ தற்கு கூட, வழியின்றி, கிராமக்கோயில் பூஜாரி கள் சொந்த செலவில் பூஜை செய்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/74490.html#ixzz2s7a0mzlY

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட்

ரிவோல்ட் என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை யின் பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.04.1928இல் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு போலீசார் ரிவோல்ட் என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங் களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவ தாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக் கப்பட்டிருக்கின்றது.

ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:- இப்பவும் மேற்படி பிரசில் ரிவோல்ட் என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் குடிஅரசு என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுநஎடிடவ என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலி லானாலும் சரி, முதலாளி இயலிலானா லும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளி லானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற் கைக்கும் அறி வுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல் லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார். இதன்மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரிய வில்லை.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cPz0M5

தமிழ் ஓவியா said...


ஓமாந்தூரார்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓமாந்தூரார் என்ற ஊரின் பெயர், ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களையே குறிக்கும். அவரின் பார்ப்பனர் அல்லா தார் உணர்ச்சியைக் கண்டு அவரை தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனர்கள் கூறிய துண்டு.

சென்னை திருவல்லிக் கேணியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது தந்தை பெரியார் ஒரு தகவலைச் சொன்னார்.

ஈரோடு ராமசாமியா வது நாஸ்திகம் பேசித் தொல்லை கொடுக்கிறான்; ஆனால் ஓமாந்தூர் ராம சாமியோ விபூதி பூசிக் கொண்டே தொல்லை கொடுக்கிறான் என்று பார்ப்பனர்கள் கூறியதை தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் அடையாளப் படுத்தினார்.

சென்னை உயர்நீதிமன் றத்தில் முதன் முதலாகப் பார்ப்பனர் அல்லாத நீதிபதி சோமசுந்தரம் வருவதற்கு முதல் அமைச்சர் ஓமாந் தூரார் பரிந்துரை செய்தார்; பார்ப்பனர் ஒருவரை அந்த இடத்துக்குக் கொண்டு வர பார்ப்பன சக்திகள் அழுத் தம் கொடுத்தன. (ராஜாஜி உட்பட).

பிரதமர் நேரு அவர்கள் முதல்வர் ஓமாந்தூராரைத் தொடர்பு கொண்டு, விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓமாந்தூரார் என்ன செய்தார் தெரியுமா? பிடியுங்கள் என் ராஜி னாமாவை! என்பதுதான் பதிலாக இருந்தது.

வேறு வழியின்றி பிரத மர் நேரு ஓமாந்தூரார் உறு திக்கு இணங்க நேர்ந்தது.

1948இல் ஓமாந்தூரார் காலத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் இந்தித் திணிப்பை முன் வைத்தார் தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார். அந்த சூழலில் தந்தை பெரியார் முதல்வர் ஓமாந்தூராரைச் சந்திக்க நேர்ந்த சமயத்தில் ஓமாந்தூரார் கூறியதை தந்தை பெரியார் வெளியிட் டுள்ளார் (விடுதலை 2.11.1948)

நீங்கள் காங்கிரஸில் இருந்திருந்தால் நீங்கள் அல்லவோ இந்த ஸ்தானத் தில் இருந்திருக்க வேண் டும் என்றார் ஓமாந்தூரார்.

அந்த ஸ்தானத்தில் நான் இருந்தால் இப்பொழுது நான் செய்யும் வேலையைச் செய்ய முடியாதே என்று தந்தை பெரியார் பதில் கூறினார். உண்மைதானே!

சேரன்மாதேவி குரு குலத்தில் படித்த மாணவர் களுள் ஒருவர் ஓமாந்தூரார் மகன். குருகுலத்தில் அங் குப் பார்ப்பனர் அல்லாதார் பாதிக்கப்பட்டதை ஓமாந் தூரார் மகன் மூலம்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது என்பதும் கூடுதல் தகவலாகும். இன்று ஓமாந்தூரார் பிறந்த நாள் (1895).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74573.html#ixzz2sJMInJDT

தமிழ் ஓவியா said...


ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24 ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தைபெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மான மிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74602.html#ixzz2sJMa4tIW

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என பெயர் மாற்றம் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தல்


மதுரை, பிப். 2- சென்னை உயர்நீதி மன்ற என்பதை 'தமிழ் நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்ற வேண்டும். உயர் நீதிமன் றங்களில் தமிழில் வாதிட கட்சி பாகு பாடின்றி தமிழக எம்.பி.,க்கள் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்,'' என மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத் தினார்.

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வழிகாண வேண்டும் என மதுரை வந்த சுதர்சன நாச்சியப்பனிடம், உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். சுதர்சன நாச்சியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மூன்று திராவிட மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கியவர் சோனியா.

இதன்படி, தமிழ் மொழி, செம்மொழியானது. இந்நிலையில் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பட்டினிப் போராட்டமும் இருந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதிட தடை எதுவும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தும்படி, பிரத மரிடம் வலியுறுத்துவேன். சென்னை உயர்நீதி மன்றம் என்பதை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழக உயர்நீதிமன்றங்களில், தமிழில் வாதிடுவதற்கு ஏற்ப, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க் களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/page1/74546.html#ixzz2sJN6vUHg

தமிழ் ஓவியா said...

2 கோவில்களில் உண்டியல் உடைப்பு

மதுராந்தகம், பிப். 2- மதுராந்தகம், மொரப்பாக்கம் நெடுஞ் சாலையில் கருணாகர வளாகத்தில் ரேணுகாம்பாள், விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/74549.html#ixzz2sJNLyDmt

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணா நினைவு நாள்: நாமாவளி பாடிடும் நாளல்ல!


செயற்கரிய செய்த தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (3.2.2014)

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, வைதீகபுரி அகராதியில் உள்ள திதியோ, சிரார்த்தமோ, திவஷமோ அல்ல.

நம் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு நாள்!

அண்ணா இன்று பலருக்குப் படம் மட்டுமே! உண்மையில் அவர் பாடம் ஆக வேண்டும்.

- படமல்ல! இது ஒரு விசித்திர வேடிக்கை, நமக்கு வேதனை!

அண்ணா பெயர் சொன்னால் போதுமா?
அண்ணா என்றால் யார்? எதைச் செய்தவர்?
அண்ணா என்றால் பகுத்தறிவு,
அண்ணா என்றால் சமூகநீதி,

அண்ணா என்றால் அடக்கம், எளிமை, ஆடம்பரமின்மை!
அண்ணா என்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆகியவைகளைப் போற்றிப் பின்பற்றிய பண்பாளர்!

இவைகளை மறந்துவிட்டு அண்ணாவைப் புறந்தள்ளி பூஜை செய்வது போல சடங்கு நிகழ்வு களை நடத்துவது - அண்ணாவைக் கொச்சைப் படுத்தும் கோணல் நடவடிக்கைகளேயாகும். நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று கூறி இறுதி மூச் சடங்கும் வரை பெரியாரைத் துணைக் கொண்ட பெம்மான்!
எனவே அண்ணாநினைவு நாளில் அவர்தம் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, பீடு நடைபோட உறுதி ஏற்று, அவர் காண விரும்பிய பெரியார் உலகத்தைப் படைப்போம்!

அது - வெறும் தேர்தலை மட்டும் பொறுத்ததல்ல,

அடுத்த தலைமுறைகளின் மானவாழ்வைப் பொறுத்த மகத்தான நிலைப்பாடு;

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 3.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74605.html#ixzz2sJO8yrqi

தமிழ் ஓவியா said...


இந்து அற நிலையத் துறையின் வேலை இதுதானா?


அண்ணா நினைவு நாளில் சிறப்பு வழிபாடா?

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று இந்து அறநிலையத் துறையின் சார்பில் 34 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு என்று அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான னுச. நமது எம்.ஜி.ஆர் இதழில் இன்று வெளி யாகியுள்ளது. இதைவிட அறிஞர் அண் ணாவைக் கொச்சைப்படுத்துவது வேறு ஒன்றும் இருக்க முடியுமா?

கோயிலைப்பற்றி, வழிபாடு பிரார்த் தனைபற்றி அண்ணாவின் கருத்தென்ன? இதோ அண்ணா பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!! இராபர்ட் கிளைவ் வந்த காலத்தில் இலட்சக்கணக்கான அபிஷே கங்கள் ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவ் கல்லறையின் மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஜப்பான் சில இடங்களில் தோற் கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? (திராவிட நாடு 5.3.1942) என்றாரே அறிஞர் அண்ணா. அத்தகைய அண்ணாவின் நினைவு நாளுக்காக கோயில்களில் வழிபாடா?

தூத்துக்குடி துறைமுகத் திட்டப் பேச்சு வார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்ட தன் நன்றியாக காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முதல் அமைச்சர் அண் ணாவை மத்திய நீர்ப் பாசன அமைச்சர் வி.கே.ஆர்.பி. ராவ் அழைத்த போது, (19.9.1967) நான் வரவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் ஒருவரை உங்களோடு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன அண்ணா என்னும் பகுத்தறிவுவாதியைக் கொச்சைப்படுத்த லாமா அதிமுக அரசு?

அண்ணாவைக் கொச்சைப்படுத்து வதற்கென்று அண்ணா பெயரில் ஒரு கட்சியா! ஒரு ஆட்சியா!

Read more: http://viduthalai.in/e-paper/74608.html#ixzz2sJOLIVGO

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அண்ணா சொன்னது...

செய்தி: நாங்கள் பா.ஜ.க., கூட்டணியில் இருந்தாலும் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பாக இருப்போம்.
- வைகோ

சிந்தனை: குஷ்டரோகி யின் கையில் இருக்கும் வெண்ணெய்ப்புட்டு என்று அறிஞர் அண்ணா சொன் னதுதான் நினைவிற்கு வருகிறது. அது சரி! பா.ஜ.க., கூட்டணியில் இருந்தாலும்... என்று ஏன் சொல்லுகிறார்... அங்கே தான் அவருக்கே இடிக்கிறதோ!

Read more: http://viduthalai.in/e-paper/74607.html#ixzz2sJOaO1dP

தமிழ் ஓவியா said...


இந்துத்துவம் குறித்து அளித்த தீர்ப்பு: ஏழு நீதிபதிகள் கொண்ட மறு விசாரணை


புதுடில்லி,பிப்.3- இந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த தீர்ப்பு குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க உள் ளது.

பாரதீய ஜனதா கட்சி யின் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிரா வில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார். இது மத உணர்வு களைத் தூண்டும் செயல்.

அதனால், முரளி மனோகர் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி என்.பி.படேல் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா அல்லது இந்துமதம் என்பது ஒன்றுதான். அது மதத் தின் பெயரை குறிப்பது அல்ல. இந்திய துணை கண்டத்தில் வாழும் மக் களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கும் சொல் என்று கூறி, ஜோஷிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதேபோல், மகா ராஷ்டிரா பேரவைக்கு 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ. சார்பில் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். தேர் தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வு களைத் தூண்டும் வகை யில் இந்துத்துவா பற்றி அபிராம்சிங் பேசினார் என்று கூறி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசா ரித்த மும்பை உயர் நீதி மன்றம், அபிராம்சிங் வெற்றி பெற்றது செல் லாது என்று அறிவித் தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அபி ராம்சிங் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்டஅமர்வு, இது அரசியல் சட்டம் சம் பந்தப்பட்ட விவகாரம் என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மனுவை அனுப் பியது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆம்.எம் லோதா, ஏ.கே. பட்நாயக், முக்கோபாத் யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசா ரித்து வருகிறது.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., தலைவர் சுந்தர்லால் பட்வா மீது நாராயண் சிங் என்பவர் தொடர்ந்து வழக்கை விசாரித்த 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு, மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசா ரிக்கப் பரிந்துரைத்துள் ளது.

இந்நிலையில், அபி ராம் சிங் மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த 30 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நடந்தது. அப்போது, சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட் டுள்ளது என்று நீதிபதி களுக்கு தெரிவிக்கப்பட் டது.

இதையடுத்து, இந்த வழக்கையும் அந்த வழக்குடன் சேர்த்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு பரிந்துரைத்தது. அத்துடன், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங் கவும கேட்டு கொண் டது.

இதையடுத்து, 7 நீதி பதிகள் கொண்ட அமர்வை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அனுப்புவார் என்றும், அதன்பின், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதி பதி அமைப்பார் என் றும் உச்சநீதிமன்ற வட் டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-5/74588.html#ixzz2sJQMRBUg

தமிழ் ஓவியா said...


மண் பானை சமையல் நல்லதா?


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தி னால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல் லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக் கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.

இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJQZIRB1

தமிழ் ஓவியா said...

இதயத்திற்கு இதம் தரும் கனிகள்

இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.

இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு

Read more: http://viduthalai.in/page-7/74596.html#ixzz2sJRO3T4S

தமிழ் ஓவியா said...



கேள்வி: ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத்துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?

பதில்: நிறைய விஷயங்கள் இருக்கு. ஒன்னு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சுக் கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க, நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்லனு கேப்பாங்க. உடனே, என் மனசு புண்படும்கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்லனு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது, ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சுச் சிரிச்சுட்டார்னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். இல்ல சார் சிரிச்சிடுங்கனு விடாப் பிடியா நிப்பாங்க. சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால் கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதாவது மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனச்சாட்சியை ரொம்ப உறுத்தும்!

தமிழ் ஓவியா said...

கேள்வி: பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?

பதில்: பெரியார் படத்தில் நடிச்சதுக்குச் சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100_ஆவது நாள் விழாவில், இந்த மோதிரம் பெரியார் தன் 19_ஆவது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்குக் கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லி, கி.வீரமணி அய்யா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சினு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்திலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!

- நன்றி: ஆனந்த விகடன், 15.1.2014

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.



இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

கெடுவான் கேடு நினைப்பான்


கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.



இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

- குடிஅரசு 12.11.1933

தமிழ் ஓவியா said...

டீல் ஓகே யா?


சமூக இணையதளங்களில் இருக்கிற பார்ப்பன நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களில் பல பேர் எங்கள் நெருங்கிய நண்பர்களாகவும், பண்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான், அதற்காக இன்னும் பன்னெடுங்காலம் பேச எஞ்சியிருக்கிற பார்ப்பன எதிர்ப்பு அரசியலை எங்களால் பேசாமல் இருக்க முடியாது.

வேண்டுமானால் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் தீட்சதர்களாகவோ, பூசாரிகளாகவோ உங்கள் உறவினர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களிடம் நீங்களே பேசுங்கள். "இது எல்லாம் அவா கட்டின கோவில், நம்மவா யாரும் பத்துப் பைசாகூட கைக்காசு போடல, அவாளோட மொழில நாம பூஜை பண்றதும் கிடையாது, அவா நிறையப் பேரு ரொம்பக் கோவமா இருக்கா, நம்மவா எல்லாம் இப்போ நன்னா படிச்சு கையில நாலு காசு சேத்திண்டு ஷேமமா இருக்கா, அவா அபச்சாரம் அபச்சாரமா திட்றத நம்ம அம்பிகள் எல்லாம் கூச்சமா பீல் பண்றா, அதுனால நாம அவா கட்டின கோவில்கள்ல இருந்து வெளியே வந்துடலாம், நாமளே சிதம்பரம் என்ன தஞ்சாவூர் என்ன இன்னும் பெரிசா கோவில் கட்டி அதுல சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம்_ன்னு வெவ்வேற மொழிகள்ல அர்ச்சனை பண்ணலாம், பூஜை பண்ணலாம்" என்று முடிவு செய்து ஒரு நல்ல நாள் குறித்து எல்லாக் கோவில்களிலும் இருந்து வெளியேறி விடுங்கள். நீங்களும் கூச்சமா உணர வேண்டியதில்லை, நாங்களும் பொசுக்குப் பொசுக்குனு பாப்பான் பாப்பான்_ன்னு திட்ட வேண்டியதுமில்லை.
டீல் ஓகே யா?

...முகநூலில் அறிவழகன் கைவல்யம்

தமிழ் ஓவியா said...

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம் : ரூ.15,000 கோடி

கட்டடங்கள் : ரூ.1,500 கோடி

நகைகள் : ரூ.30,000 கோடி

நிதி : ரூ.20,000 கோடி

- இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல்!


நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!
தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு
ஆசிரியர்: சு. அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம், சென்னை - 600 041.
செல்பேசி: 94442 65152 / 94442 44017
பக்கங்கள்: 256 விலை: ரூ.160/-

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு _ ஒரு புதிய நோக்கு என இந்த நூலைச் சொல்லலாம். திராவிடர் என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை தொடங்கும் முன் விளக்கும் நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டியலிடுகின்றார். தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில், திருமணம், நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.

வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படித் திருப்பம் அடைந்தது? என்பது குறித்தும் பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (றிக்ஷீவீஸீநீவீஜீறீமீ) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது நடைமுறைகளை, அணுகு முறைகளை, செயல்திட்டங்களை (றிஷீறீவீநீவீமீ) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக- _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர -_ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர- _ அவர் மாறவே இல்லை! என நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக இந்த நூல் அமைந்துள்ளது.

திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து, தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான், இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால -_ மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார். ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை, குழப்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது.

- முனைவர் வா.நேரு

தமிழ் ஓவியா said...

மருத்துவ வசதியற்ற குஜராத்


கலை, நிச்சயம் மனிதனைச் சாந்தப்படுத்தக் கூடியது; சந்தோசமளிக்கக் கூடியது. மறுக்கவில்லை. ஆனால், சினிமாவுக்கு மட்டும் ஏன் நம் நாடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாம் விவாதிக்க எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் காத்துக்கிடக்க, அமீர் கானா, ஷாரூக் கானா, சல்மான் கானா... இந்த மூன்று கான்களில் யார் சிறந்தவர்? என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறோமே... ஏன்? நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்!

குஜராத்தில், புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன; நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இவற்றை மட்டும் வைத்து அளவிட முடியாது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்து போகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும் அது கேரளா, தமிழ்நாடு... ஏன் இமாச்சலப் பிரதேசத்தைவிடவும் பின்தங்கித்தான் இருக்கிறது.

மோடி, பிரதமரானால் சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். அத்தகைய ஒருவர், நாட்டின் பிரதமராக வருவதை நான் ஏற்க மாட்டேன்!

--- அமர்த்தியா சென்,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்
செய்திகளை பகிர்ந்து கொள்ள