Search This Blog

19.4.13

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார்

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல்கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த்துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குகளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளாகும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வர வேண்டும். அப்போது இதுவும் தானாக மாறி விடும். என்னைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துக் கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்பத்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன்தானே இதற்கும் உண்டு!

சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறுதலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் கையாண்டு வருகிறார்கள். 40 ஆண்டு காலமாகப் பொதுமக்களிடையேயும் இந் நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. இதுதான் - இந்த முறைதான் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதில்லை. இந்த முறையை 1967-ஆம் வருட மாடல் என்று தான் சொல்லுவேன். இந்த முறை நமது இயக்கத்திற்கோ, கொள்கைக்கோ முடிவான முறையுமல்ல. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

நான் நினைக்கிறபடி நடக்க வேண்டுமானால் திருமணம் என்பதே சட்ட விரோதமான செய்கையாகும். இந்த மாற்றத்திற்குக் காரணமெல்லாம் பழமையை மாற்ற வேண்டுமென்பதோ நமக்கென்று ஒரு முறை வேண்டுமென்பதாலோ அல்ல! இதுவரை பெரும்பாலான மக்களால் நடத்தப்பட்டு வரும் முறையைப் பற்றிய விளக்கம் கிடையாது. சரித்திரம் கிடையாது. நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு சொல்லே கிடையாது. முதலில் நடைபெற்ற இந்திப் போராட்டத்திற்குப் பின்தான் திருமணம் என்ற சொல்லே வந்தது.

அதற்கு முன் கல்யாணம், - விவாகம், - தாரா முகூர்த்தம் -_ கன்னிகாதானம் என்கின்ற வடமொழிச் சொற்கள்தான் வழங்கி வந்தன. தமிழர்களுக்குக் கல்யாணமே கிடையாதா? அவர்கள் குடும்பமாக வாழவில்லையா? என்று கேட்கலாம். இம்முறை எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போமானால் சட்டப்படி _- மதப்படி _- சாஸ்திரப்படி _- சம்பிரதாயப்படி _- ஆஸ்திகர்கள் கருத்துப்படி தனது வாழ்க்கைக்கு ஓர் ஆண், ஒரு  பெண்ணை அடிமை கொள்கிற நாள்தான் திருமணம் என்பதோடு,  பகுத்தறிவு உள்ள மனிதனின் அறிவை நாசமாக்கி மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை அவன் இரத்தத்தில் புகுத்தி, அவனை மடையனாக்கவும், மூன்றாவதாக ஜாதியைக் காப்பாற்றவுமேயாகும்.

அதாவது, பார்ப்பான் பார்ப்பானாகவே சமுதாயத்தில் எந்தவித உழைப்பும் இன்றி வாழவும், பறையன் பறையனாக, சக்கிலி சக்கிலியாக இப்படி அவனவனும் தங்கள் ஜாதிப்படி இருக்க வேண்டும், ஒன்று சேரக் கூடாது என்கின்ற தன்மையில் ஜாதி காப்பாற்றப்படுகிறது. முன்னெல்லாம் சொல்வார்கள், குலத்திலே குரங்கைக் கொள் என்று. குரங்கு போல இருந்தாலும் பரவாயில்லை. அது ஜாதியிலிருந்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அவ்வளவு ஜாதி வெறி இருந்தது.

இவற்றைப் பார்க்கும் போது மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பழைய முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்று, பெண்ணை அடிமையாக்குவது, இரண்டு, மக்களைப் பகுத்தறிவற்ற முட்டாள்களாக்குவது, மூன்றாவதாக, மனிதனை ஒன்று சேர விடாமல் ஜாதி காரணமாகப் பிரித்து நிற்கச் செய்வது ஆகியவைகளேயாகும்.

மணமக்களுக்கு வேண்டியதெல்லாம் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பதினாறும் பெற்று என்று சொல்வது குழந்தைகளைப் பெறுவதற்காகச் சொல்வதல்ல. 16 பேறுகளைப் பெற்று என்று சொல்வதற்காகச் சொல்வதாகும். ஆடம்பர மில்லாமல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத வகையில் வாழ வேண்டும். கூடுமானவரை ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் எப்படி ஒழுக்கம் குறைகிறதோ, அதுபோலத்தான் வரும்படிக்கு  மேல் செலவிட்டாலும் ஒழுக்கம் குறையும். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதையும், சிங்காரித்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் பெண்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்தால், அவர்களே தங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள்.

பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதாகி விட்டதே - கஞ்சி யார் ஊற்றுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம் என்று வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகையில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம். மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழிய, சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யாவிட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கிறதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம். அது பாகிஸ்தானாக இருந்தாலென்ன? ரஷ்யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண்டியதெல்லாம் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மேல்நாட்டு மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதுதான். 

----------------------------------------26.8.1967 அன்று சென்னையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இல்லத் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து..  - விடுதலை 27.8.1967.

16 comments:

தமிழ் ஓவியா said...


உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?


இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக் காவைச் சுற்றிப் பார்க்கப் போனாராம். இறங்கியதுமே அமெரிக்கப் பெண் கேட்ட முதல்கேள்வி, நான் மகாபாரதம் படித்திருக்கிறேன், உங்களுடைய மற்ற கணவர்கள் எங்கே? அங்கேயே விட்டு வந்து விட்டீர்களா? என்பதுதானாம். இப்படி இந்தியாவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ராணி பத்திரிகையாசிரியர் சொன்னதும், அனுராதா ரமணன் எழுந்து... என்னை அப்படி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அய்ந்தாவது நபர் தான் தாலி கட்டிய கணவனென்று... இவ்வாறாக 21.8.1983 நாளிட்ட தாய் இதழில் ஒரு பெட்டிச் செய்தி வந் துள்ளது.

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?

திருமதி அனுராதா ரமணன் கூற்றுப்படி ஒரு பெண்ணானவள் தாலி கட்டிய ஒரு கணவனையும், தாலி கட்டாத நான்கு ஆண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாரா? மகாபாரதத்தைக் காப்பாற்ற போய் தன் மானத்தைப் பறக்க விட்டு விட்டாரே!
(உண்மை, 1.8.1983)

தமிழ் ஓவியா said...


நெய்வேலியும் திருவெறும்பூரும்



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம்.

இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது.

என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.

இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம் பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தமே செய்யும்.

பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம்.

பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம் பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.

பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.

நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன.

1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.

1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில் பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத் தான் (முதலாளிக்குத் தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக பச்சை மையால் கையொப்பமிட மனம் மறுக்கிறது.

நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது. திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா? 19-4-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சாஸ்திரம்

செய்தி: இன்று ராமநவமி. சிந்தனை: ராமன் பிறந்த நவமியும், கிருஷ் ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாளாம் - சொல்லு கிறது சாஸ்திரம்.

கேட்டீர்களா சேதியை?

அட்சய திருதியையில் நகை வாங்கினால் அதிர்ஷ் டம் குவியும், செல்வ தேவதை வந்து குடியிருப் பாள் என்று கிளப்பிவிட் டார்கள் அல்லவா?
இப்பொழுது புதாஷ்டமி யில் வீடு, நிலம் வாங் குங்கள் - விளங்குவீர்கள் என்று கிளப்பி விட்டுள்ளனர்.
முன்னது நகைக்கடைக் காரர்களின் சரடு - பின் னது ரியல் எஸ்டேட்கா ரர்கள் கட்டிவிட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?


மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.

குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.

வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?

இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே... அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

மனைமாட்சியருக்கு விழா!


ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.

அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.

மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!

இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!

தமிழ் ஓவியா said...

மாற்றம்


வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.

பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.

வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.

அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.

கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.

கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.

பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.

அய்யனார்க்கே இந்த நிலைமையா?

இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.

அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.

பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.

_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை; தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகாமையிலே கோடியக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதம் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையைப் பார்த்ததார் என்று சொல்கிறார்கள்.

திரவுபதி மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்லபுரம்; மகாபலுபுரம் என்று தான் சொல் வழக்கு ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்டநகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளைப் பார்த்தால் அங்கே ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும் அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டுப் பார்த்து பாறையையும் தொட்டுப்பார்த்தது அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம்- ஒரு விளக்கம். இவை அத்தனையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக்கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.83 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


எங்கே செல்லுகிறது சமூகம்?


ஒரு மாத விடுமுறை.. தற்காலிக மனைவி.. போகும் போது விவாகரத்து!

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா விலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் பாலியலுக் காக இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம். 17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவி யாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாலியலுக்கான டூரிசம் இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் பாலியல் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற் கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவி களாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.

ஹைதராபாத்தில்தான் அதிகம்

இந்த அக்கிரமச் செயல் ஹைத ராபத்தில்தான் அதிகமாக நடக் கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களைக் குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.

வறுமையைப் பயன்படுத்தி...

குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென் டுளும் கை கோர்த்து செயல்படு கின்றனர்.

அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம் 17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல் யாணத்தை வெளியில் அம்பலப் படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியி லிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.

நான்கு வார மனைவி

கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப் பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.

44 வயது சூடான் பணக்காரர்...

நடந்தது குறித்து காவல்துறையில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன ராம்.

கல்யாணம் செய்து வைத்து...

கமிஷன் அடித்து.. பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாரா பாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்

திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.

ஆப்பிரிக்கர்களே அதிகம்

தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக் கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நட வடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

மதம், பக்தி என்று எவ்வளவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதே - இவை எல்லாம் இதற்குள் அடங்குமோ!

பாரத புண்ணிய பூமியின் 22 காரட் பண்பாடு இது தானோ!

ஓ, அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி தானே பாரதப் பண்பாடு?

தமிழ் ஓவியா said...


தமிழன் தொடுத்த போர்


(தமிழன் தொடுத்த போர் நூலில், 10ஆம் பக்கத்தில் இருப்பது)

சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழி, அதனைத் தாய்மொழியாகக்கொண்ட ஆரியர், அந்த ஆரியர் போற்றி வளர்த்த வேத புராண இதிகாசக்கலை, அந்தக் கலையிற் பிறந்த ஆரிய வருணாசிரம நாகரிகம் - இவற்றின் கூட்டுத் தொகைதான் தமிழன் சீர்கேடு.

இதை எந்தத் தமிழனும் - அவன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி - மறந்து விட முடியாது. ஒரு வேளை சூழ்நிலையின் காரணத்தால் மறுக்க நேர்ந்தாலும் மறுக்க முடியாது. தவறி மறுப்பானாயின் அவன் தமிழனாய் இருக்க முடியாது. எதை வேண்டுமானாலும் தமிழன் பொறுத் துக் கொண்டிருப்பான்.

ஆனால் யாரேனும் தன் உயிர் நாடியை அழிக்கத் தொடங்கினால் - தன் தாய் மொழியை வளமிழக்கச் செய்தால் - தமிழுக்கு ஆபத்துச் சூழ்ந்தால் - அதை மட்டும் அவன் பொறுக்க மாட்டான்.

இது அவனுக்கு வரலாறு புகட்டிய பாடம்.

ஆரிய நாகரிகம் தமிழன் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் முதன்முதல் ஆரியத்தின் நோக்கம் தமிழன் மொழி மீதுதான் பாய்ந்தது.

தமிழன் தன் மொழியை இழந்தால் பிறகு தன் கலையை, வாழ்வை, நாக ரிகத்தை, நாட்டை ஆகிய அத்தனை யையும் இழந்து விடுவான் என்பதை நன்குணர்ந்த அந்த நாள் ஆரியம் எடுத்த எடுப்பில் தமிழ் மொழியை வீழ்த்தத்தான் திட்டமிட்டது,
ஆரியச் சூழ்ச்சியின்

விளைவாகத் திருமுதுகுன்றங்கள்
விருத்தாசலங்களாயின.

மறைக்காடுகள் வேதாரண் யங்களாய் உருவெடுத்தன.

திருக்கழுக்குன்றங்களும் திருவானைக்காக்களும், பஷி தீர்த்தங்களாய் ஜம்பு கேஸ்வரங்களாய் மாற்று வடிவம் அடைந்தன.
நெடுஞ்செழியன் என்றும்

செங்குட்டுவன் என்றும்.

இளமுருகன், இளவழகன், இளஞ் செழியன், இளவெயினி, இராவணன் (இரா. வண்ணன் - கருப்பு நிறத்தான்) என்றும் கண்ணகி காவற் பெண்டு காக்கை பாடினியார் ஒக்கூர் மாசாத் தியார் வெண்ணிக்குயத்தியார் என்றும், கீரன் இளங்கீரன் நச்சினார்க்கினியன் மாறன் பொறையன் ஒரே ருழவன் பிசிராந்தை என்றும், பாசி ஓரி ஆய் அதியமான்

கோச்செங்கணான் கோவூர் கிழான் கரிகாலன் என்றும்,

மாவளவன் மலையமான் மதியழகன் மணிமொழியன் மணக்குடவன் என்றெல்லாம் இனிய அழகிய தூய தண்தமிழ்ப் பெயர் வாய்ந்திருந்த தமிழர்.

ஆரியருடைய மயக்குரையால் ஏமாந்து, அவர்தம் மொழிவழிச் சென்று, அவர் இசைத்ததை இன சத்துத் தம் பெயரைச் சடாசூடி ரரூபன் என்றும்,
சஹஸ்ரநாமம் என்றும்,

ஸ்வயம்பு என்றும்

லஷ்மிகாந்தன் என்றும்

- க.பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


தூக்கமும் சோர்வின்மையும்


சரியான தூக்கமில்லாதவர்கள், சோர்வுடனும், வேலையில் ஆர்வம் இல்லாமலும், அலுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கமுடியும். ஆனால் விஞ்ஞானிகள், சில இரவில் 4 அல்லது 5 மணிநேரமே தூங்குபவர்கள், உடல் நலத்துடனும், சோர்வு இல்லாமலும், எரிச்சல்பட்டு செயல்படாமலும், நம்பிக்கையாளர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் பருமன் இல்லாத மனிதர்களைக் கண்டு ஆய்வு நடத்தினர். இப்படிப்பட்ட மனிதர்கள், தேனீர், காப்பி போன்றவற்றை குடிக்காமலும், ஒரு நாளில் இடை சிறு தூக்கமில்லாமலும், சலைக்காமல் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பதை, அமெரிக்க நாட்டு கலிபோர்னியா விஞ்ஞானிகள், கலிபோர்னியாவிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ளவரிடம் ஆய்வு செய்தனர். டி.என்.ஏ. சோதனையில் இத்தகையவரிடம் அவர்களின் மரபணுவில் சிறுமாற்றம் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இல்லாத வகையில் உள்ளதைக் கண்டனர். இப்படி குறைந்த தூக்கத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர் 100க்கு 1 இருந்து 3 பேராக உள்ளனர். இவர்கள் டி.என்.ஏ. சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மூலம் குறைந்த தூக்கமுள்ளவர்கள் மேலும் சில மணி நேரம் தூங்குவதற்கு, உடல் பாதிப்பு ஏதுமில்லாத மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
- மு.வி. சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...

எங்கே போகிறது பகுஜன்?

15ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 36 பேர்களில் 18 பேர் பார்ப்பனர்களாம்.

கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கியதன் நோக்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான்; இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். அந்த அடிப்படையில்தான் மாயாவதி, உ.பி. முதல்வரும் ஆனார். ஆனால் இப்பொழுது என்னடா என்றால் 50 விழுக்காடு இடங்கள் பார்ப்பனர்களுக்காம்! நாடு எங்கே போகிறது? பதவி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அது இதுதானோ!

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.
(குடிஅரசு, 26.1.1946)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


பாலியல் வன்கொடுமைகள்

அண்மையில் திருமதி சுனிதா அவர்களின் சொற்பொழிவைக் கேட் டேன். நான்கு வயது சிறுமி யைச் சின்னா பின்னப் படுத்திய வன்கலவிக் கொடுமைக்காரன் பற்றிக் கேட்க நேர்ந்தது.

இதே மாதிரி நிகழ்வுகள் தமிழகத் திலும் நடை பெறுவதை அறிந்து துடிக்காத நல்ல நெஞ்சங்களே இல்லை.விடுதலை, உண்மையிலும் இது பற்றிய செய்திகளைப் பார்த்தேன். பல்லாயிரக் கணக்கானோர் வருத்தப் படுவதுடன் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்திருப்பார்கள்.

திராவிடர் கழகம் மக்கள் கழகம். முன்னோடியாகச் சிந்தித்துச் செயல் படும் சமுதாய அமைப்பு. நாம் இந்தக் கொடுமைகளை வேரோடு சாய்க்க பகுத்தறிவுடன் சிந்தித்து, சிந்திக்க வைத்துச் செயல் பட வேண்டும்.

சிறு வயதில் பாலியல் கொ டுமைக்கு ஆனவர்கள் தான் இந்த மாதிரி மனித நேயமற்றக் கொடுமை களைச் செய்பவர்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர். இதில் நெருங்கிய உறவினர்களின் திருட்டுத் தனமான பாலியல் வன்முறைகள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மனக்காயத்தை ஏற்படுத்துவ்தும் அதுவே பிற்காலத்தில் இவர்கள் கொடுமைகள் செய்வதற்கு அடிப்படை என்றும் கருதுகிறார்கள்.

சிறு வயதில் பாதிக்கப்பட்டவர்கள் மனக் கொடுமைகளைப் பேசிக் கொட்ட ஒரு அமைப்பு தேவை.மருத்துவர்கள் என்று இல்லாமல் சமூக நீதி ஆர்வலர்கள் ஆங்காங்கே வாரம் ஒரு முறை சந்திக்கவும் , விரும்பியவர்கள் பெயரைச் சொல்லவும், விரும்பாதவர்கள் பெயரைச் சொல்லாமல் குழப்பத்தை மட்டும் எழுதிக் கொடுத்து அதைப் பற்றி அனைவரும் பேசுவதும் பலன் தரும். மன அமைதிக் குழுக்கள் என்று பொதுவாக இருந்தால் அனைவரும் பங்கேற்க முடியும்.
குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழில் போட்டிகள் வைத்து சிறந்த வற்றை ஒவ்வொரு இதழிலும் போட்டுப் பரிசும் கொடுக்கலாம். திருக்குறள் கதைகள் ,கட்டுரைகள் போட்டிகள் வைத்து ஆங்காங்கே " பெரியார் பிஞ்சு" நிகழ்ச்சிகள் நடத்தினால் பெரியார் பிஞ்சுக்கும் விளம்பரம் கிடைக்கும், செய்திகளும் போய்ச் சேரும்ஆங்கே குழந்தைகள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதையும் சொல்லிக் காட்டலாம்.

இங்கு அமெரிக்காவிலே பல நகரங்களில், தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளிப்பதில் குழந்தைகளின் பங்கேற்பு பெரிதும் வளர்ந்துள்ளது.

இதைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றால் நல்லது. நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் போலத் திருக்குறள் கதை நூல்கள் பல வரவேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் படியான சிறு நூல்கள் நல்ல பலன் தரும். சிறந்த நூல்களுக்குப் பரி சளிப்போம்.

என்னை இந்த அளவிற்குச் சமுதாயப் பணிகளில் ஈடு படத் தூண்டிய பெரியார் அய்யாவின் எழுத்துக்களுக்கும், அயராத உழைப் பால் அனைவரையும், முக்கியமாக என்னுடைய சிந்தனை செயல்பாடு களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும், தங் களையே அர்ப்பணித்துக் களப்பணி செய்யும் கருப்பு மெழுகுவர்த்தி களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெரியார் மகளிர் அணியின் சாதனைகளுக்குத் தலை வணங்கு கின்றேன். கோவை மாநாட்டின் பலன் பலருக்குக் கிடைக்கட்டும்.

- சரோ இளங்கோவன்
அமெரிக்கா

தமிழ் ஓவியா said...


குறள் - தந்தை பெரியார்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும்.

தமிழ் ஓவியா said...

அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.

நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை.

தமிழ் ஓவியா said...

இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926