Search This Blog

23.4.13

புத்தகர் - பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

இன்று (ஏப்ரல் 23ஆம் நாள்) உலகப் புத்தக நாள்! நல்ல புத்தகங்கள் அறிவு நீர்வீழ்ச்சிகளாகும். அறியாமை இருளில் சிக்கியுள்ள மனித குலத்தை அறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று மனிதர்களின் சிறப்பு அம்சமான ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைச் சாணை தீட்டி முனை மழுங்காமல், எப்போதும் கூர்மையுடன் வைத்திருக்க உதவும் சாணை தீட்டும் அருமையான கருவிகளாகும்.

எழுத்துக்களைக் கண்டு அறிவதற்கு முன்பு இப்படி ஒரு வசதி இல்லை.
கருத்துக்களை வாய்மொழி மூலம் கூறித்தான் அக்கால அறிஞர்களும், மதம் பரப்பி தமது பிரச்சாரங்களைச் சீடர்கள் மூலம் செய்தனர்!

இதனால் குருவின் மொழிகளும் அறிவுரைகளும்கூட விடப்பட்டவை களாகவும், மாற்றப்பட்டவைகளாகவும், திரித்துச் சொல்லப்பட்டவைகளாகவும் ஆகிய ஆபத்து உருவாகி, அவர்களது அறிவுரைகள், அனுபவ விளக்கங்கள் எல்லாம் இதைக் கொண்டு சென்று பரப்பினார்கள். விருப்பு, வெறுப்பு,  நினைவாற்றல் இன்மை மக்களிடம் இவற்றை எடுத்துச் சென்றால் ஏற்பார்களோ என்ற பயம் கலந்த தயக்கம் - அதன் காரணமாக பின்வாங்கிய நிலையும் உண்டு.  இதனால் புத்தரின் பகுத்தறிவு நெறிகூட தனி துவக்க அடையாளத்தை இழந்தது. பல பிரிவுகள் உருவாகி, கடவுள் இல்லை  என்று புத்தர் சொன்ன அந்த மார்க்கத்திலேயே அவரே கடவுளாக்கப் பட்டு, மகாவிஷ்ணுவின் 9ஆவது அவதாரமாகவும் ஆக்கப்பட்ட நிலைகூட ஏற்பட்டது!

ஆனால் அச்சு இயந்திரத்தை ஜெர்மெனியில் கூட்டன்பர்க் என்பவர் கண்டுபிடித்தபின், அச்சுக்கலை மூலம் புத்தகங்கள் வாய்மொழி மற்றும் ஓலைச் சுவடிகள் கட்டத்தைத் தாண்டி, அச்சு மூலம் பல நூறு படிவங்கள் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு அவைகளை அளிக்கும் தொழில் நுட்பம்(Technology) மூலம் பல கட்ட வளர்ச்சி களை அடைந்து விட்டது தற்போதைய நவீன உலகில்.

மின்னஞ்சல்போலவே மின் புத்தகங்கள் ’ E-Books கூட இப்போது ஏராளம் வந்து விட்டன! எழுத்துப் புரட்சி, இணையப்புரட்சி என்றெல்லாம் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டுள்ளதே!

மக்களிடையே கல்வி அறிவைப் பரப்ப அரும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, Revolt, உண்மை போன்ற ஏடுகளை துவக்கி நடத்தினார். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே 1925-லேயே - அதாவது இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அவர் வார ஏட்டினைத் துவக்கி கருத்துப் புரட்சி, அறிவுப் புரட்சியைச்  செய்தார்.
அவரையும் காமராசர் போன்ற  தலைவர்களையும் படிக்காதவர்கள் என்ற பட்டியலில் வைத்துக் குறிப்பிடுகிறார்கள்.

கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்க வில்லை என்பதாலே அவர்களைப் படிக்காதவர்கள் என்று கூறி, படிப்பு என்பதற்கு குறுகிய ஒரு பொருளைத் தருவதுதான் இந்நாட்டவர் வழக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் படித்த நூல்களும் சுய சிந்தனை - ஆராய்ச்சி இவைகளை அவர்கள் பயன்படுத்தியதும் பலரும் அறியாத அதிசயங்கள்!
தந்தை பெரியார் அவர்கள் பன்திறன் ஆற்றல் - பலரும் அறியாதவைகளாகும்.
அவர் எழுத்தாளர்; கருத்தாளர்; பேச்சாளர் சுயசிந்தனைப் பட்டறையின் வார்ப்புகளை வரலாற்றினை உருவாக்கிய பத்திரிக்கையாளர்; அச்சு எழுத்து - கோர்ப்பு - கம்போசிங்களை பற்றிய கடல் அனுபவம் உள்ளவர். எத்தனை எம் (M)  என்று கூறுவது Galley Proof - என்ற மெய்ப்பை அவர் அறிக்கையில் அவரே 95 வயது வரை திருத்தும் பணியைச் சிறிதும் சோம்பல் இன்றிச் செய்தவர்; அச்சுக்கோர்க்கும் பகுதி மேலாளரை (Foreman)  அழைத்து - இதில் ஓவர் Over எழுத்து எழுதியுள்ள திருத்தங்களைச் சரி பார்த்து போட்டு, பிறகு என்னிடம் காட்டுங்கள் என்று கூறுவார்கள். எத்தனை பாயிண்ட் எழுத்துக்களை - தலைப்புக்குப் போட வேண்டும்? கூறுவார் அய்யா அவர்கள்!

பதிப்பகங்கள் நடத்தி - மலிவு விலையில் மக்களுக்குச் சேர்ப்பதை தனது வாழ்நாள் தொண்டாகச் செய்து வந்தவர் அந்த வைக்கம் வீரர்! எந்தப் புத்தகத்தை தந்தை பெரியாரிடம் கொடுத்தாலும் அதனை வாங்கியவுடன் கடைசிப் பக்கத்தைத் தான் முதலில் பார்ப்பார். முன்பக்கம் திருப்புவார் - விலை எவ்வளவு போடப்பட்டுள்ளது என்பதை யும் பார்த்து, எத்தனை பாரம் (புத்தக அளவு 16 பக்கம்) (குடிசஅ) என்று மனக் கணக்குப் போட்டுப் பார்த்து, விலையை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன இவ்வளவு விலையா? இதென்ன கொள்ளையாக உள்ளதே என்று கூறி வேதனைப்படுவார்கள்!

புத்தகத்தின் பைண்டு பற்றிக் கூடக் கவலையுடன் பார்ப்பார். பின் (Pin) அடிப்பது பிடிக்காது; நூல் போட்டு தைத்து, பாரங்களை (Forms)இணைக்கக் கூறுவார்கள் - இப்படி நூல் வெளியீட்டில் பரந்த அனுபவம் மிக்க பதிப்பாளராக இருப்பார்.
தான் பேசிய கூட்டங்களில் முதலில் கொள்கைப் புத்தகங்களை அறிமுகப் படுத்தி, அதில் அன்று தள்ளுபடி சலுகை விலை உண்டு என்று அறிவிப் பார்கள்;  வியாபாரத்திற்கு அல்ல ; மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்! பேசுவதற்கு முன்பு இயக்க வெளியீடுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி, அதில் அடங்கியுள்ள கருத்துக்களையும், தகவல்களையும் விரிவாக எடுத்துக்கூறி, அதன் பிறகே தன் சொற்பொழிவைத் தொடங்குவார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கவும், படிக்கவுமான ஆர்வத்தை வளரச் செய்தார் அய்யா!

கூட்டம் முடிந்து வேனில் ஏறிய வுடன் முதற்கேள்வி - எவ்வளவு புத்தகம் விற்றது? என்று கேட்பார்கள்; அது வருவாய்க்கல்ல; சொன்னவுடன், பரவாயில்லையே நமது புத்தகங்கள் எவ்வளவு பேர்களிடம் சென்றுள்ளது! என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள்!

அது மட்டுமா? அவர்களே ஏராள மான நூல்களைப் படித்தவர்; மற்றவர் களையும் படிக்க வைக்க ஊக்கப் படுத்திய உலகத் தலைவர் ஆயிற்றே! அது பற்றி நாளை எழுதுவோம்!

                                                ------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல்சிந்தனைகள் - “விடுதலை” 23-4-2013

44 comments:

தமிழ் ஓவியா said...


விகடன் கச்சேரி

இந்த வார ஆனந்தவிகடன் (24.4.2013) தலையங்கமும், அதனைத் தொடர்ந்து கூட்டணி பவன் எனும் அரசியல் சிறப்புக் கட்டுரையும் அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மையும், முதலாளித்துவ மனப் பான்மை கொண்டவர்களின் சிந்தனையும், எந்தத் திசையில் பயணிக்கின்றன என்பதற் கான கண்ணாடியாகும்.

மதச் சார்பற்றச் சிந்தனை கொண்ட ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்திய தேசத்தை வழி நடத்தக் கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயம் அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பா ளருக்குப் போதும் என்ற பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம் என்கிறது. ஆனந்தவிகடன் தலையங்கம்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மதச் சார்பின்மை என்னும் பிரச்சினை ஏதோ காங்கிரஸ் சம்பந்தப்பட்டது போலவும் மற்ற வர்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பது போலவும் எழுதுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா!

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசை விட பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான அய்க்கிய ஜனதா தளம் அதன் சார்பில் பிகாரில் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார்தான் மதச் சார்பின்மை என்னும் குரலை வெண்கல நாதமாக ஒலிக்கிறார்.

அந்த ஒற்றைத் தகுதி மட்டும் போதுமா என்று ஆனந்தவிகடன் எழுப்பும் வினாவில் மோடி என்னும் மிக மோசமான இந்துத்துவா வெறியரின் நச்சுக் காற்றுக் குடிகொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப் பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை - பிஜேபியின் கதா நாயகரான வாஜ்பேயியே அதிரச் செய்துவிட்டதே! இனி எந்த முகத்துடன் வெளி நாட்டுக்குச் செல் லுவேன்? என்று அவரைப் புலம்ப வைத்ததே!

ஆனந்த விகடன் மிகச் சாமர்த்தியமாக கூறும் அந்த ஒற்றைத் தகுதி என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) முக்கியமே!

காங்கிரஸின் சாதனைகளைப்பற்றி விகடன் குறை கூறியுள்ளது. காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கம் இல்லை.

அதே நேரத் தில் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன பெரிய வேறுபாடு? வெளியுற வுக் கொள்கைதான் ஆகட்டும் என்ன வித்தியாசம்?

பி.ஜே,பி.யின் மதச் சார்பு தன்மைக்கு நேரிடையாக வக்காலத்து வாங்குவதில் ஜகா வாங்கும் விகடன், சாதனைகள் என்ற ஒன்றைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறது.

தலையங்கத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சிறப்புக் கட்டுரையின் சாராம்சம் அதிமுகமீது குற்றப் பத்திரிகை படிக்காமல், சில குறைகளைச் சொல்லு வதுபோலச் சொல்லி, அதிலிருந்து அது திருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது என்னும் அக்கறையுடன் நயமாக நல்லுரைகள் பரிமாறப் பட்டுள்ளன. துக்ளக் ராமசாமிகள் கடைப்பிடிக்கும் பாணி இது.

ஒரு பக்கத்தில் இந்திய முதலாளிகள் மோடி வர வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்;

இன்னொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகள் பிஜேபியும், அதிமுகவும் அதிகாரபீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு எழுது கிறார்கள்.

இதுதான் நாட்டின் நிலைமை!

வெகு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உலகப் புத்தக நாள்


இன்று உலகப் புத்தக நாள் (1995) இதனையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து சென்னை புத்தகச் சங்க மத்தை இம்மாதம் 18 முதல் 27 முடிய நேர்த்தியாக நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்கை ஏற்படுத்திக் கொண்டு இயக்க நூல்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது என்றாலும் இயக் கமே இத்தகைய சங்கமத்தை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். சென்னை பெரியார் திடலில் அமைக்கப் பட்டுள்ள 68 அரங்குகளின் நேர்த்தியையும், எழிலையும் மனந்திறந்து பாராட்டுகின் றனர். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் வைத்துள்ளனர். தொடரும் என்றும் கழகத் தலைவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

வெறும் நூல்கள் விற்பனை அரங்கு மட்டுமல்ல; மாலை நேரத்தில் சிந்தனை அரங்கம் என்பது பல புதிய அறிமுகங்களின் அணி வகுப்பாக அமைந்து வருகை யாளர்களின் ஆர்வத்தை வாரி அணைத்துக் கொள் கிறது. கவினுறு கலை நிகழ்ச் சிகள் கூத்தாடுகின்றன. பொம்மலாட்டம் வீதி நாடகம், கதை சொல்லுதல், மேஜிக் காட்சிகள் என்று ஒவ்வொன் றும் கட்டம் கட்டிப் போட வேண்டிய கற்கண்டு விருந்து! காணாதார் கண்கள் இருந்து என்ன பயன்? கேட்காதார் காது களாலும் யாது பலன்? என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பகுத்தறிவு இயக் கத்தை உருவாக்கியதோடு அல்லாமல், நூல் வெளி யீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டுக் கருத்துப் பிரச்சாரம் செய்த திலும் தந்தை பெரியார்தான் முன்னோடி!

இன்று அது மேலும் வளர்ந்து நூற்றுக்கணக் கான வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அறிவுப் பசியைத் தூண்டி விருந்தும் படைக்கிறது.

வணிக நோக்கில் அல்ல- கருத்துப் பிரச்சாரமே அதன் இலக்கு. இன்றுகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் அளவுக்கு வேறு யாராலும் மலிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவ தில்லை. காரணம் கருத்துப் பிரச்சார லாபமே அதன் குறிக்கோள்!

குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எனும் இயக்க ஆர்வலர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தா சேரும் வரை ராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரை களை நிறுத்தி வைப்பது நல்லது என்று ஆலோசனை சொன்ன நேரத்தில் நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும், நான் என் கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா? என்று பளிச் சென்று பதில் சொன் னாரே! (விடுதலை 17.5.1959).
உலகப் புத்தக நாளில் இந்தச் சிந்தனை முக்கியம் அல்லவா!

- மயிலாடன் 23-4-2013

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் அரிய தகவல்


நீங்கள் என்ன கோத்திரம்? - விவேகானந்தர் கேள்வி

தன்மானம் காக்கும் தென்னாட்டுத் திராவிடர் கோத்திரம்! - மனோன்மணியம் சுந்தரனார் பதிலடி

சென்னை புத்தகச் சங்கமத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் அரிய தகவல்

சென்னை புத்தகச் சங்கமத்தில் நேற்றைய (22.4.2013) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினருக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன், ரவி அய்.பி.எஸ்., சாத்தூர் இலட்சுமணப் பெருமாள் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

சென்னை, ஏப்.23- விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் சுவாமி விவேகானந்தரை அம்பலப்படுத்தும் ஒரு தகவலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் சென்னை பெரியார் திடலில் நேற்று (22.4.2013) நடைபெற்ற சென்னை புத்தகச் சங்கமம் சிந்தனை அரங்கில் வெளிப்படுத்தினார். மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டார். அக் கேள்வியை விவேகானந் தரிடம் சற்றும் எதிர் பாராத மனோன் மணி யம் சுந்தரனார் நான் தன்மானம் காக்கும் தென்னாட்டுத் திரா விடர் கோத்திரம் என்று பதில் அளித்தார். இந்த சுவையான அரிய தகவலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் நேற்று வெளிப்படுத்தினார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் சிலருக்கு ஆதரவாகவும், சிலருக்கு எதிராகவும் இருக்கிறார் என்று தவ றாகச் சொல்கிறார்கள். அவர் யாருக்கும் எதிரி கிடையாது. எல்லோ ரையும் மனிதனாகப் பார்த்தார். எல்லோ ருக்கும் வாய்ப்பு வேண் டுமென்று போராடி னார் என்று சென்னை புத்தக சங்கமத்தில், ரவி அய்.பி.எஸ். உரையாற் றினார்.

பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவ னமும் சூக்ஷகூ ஐனேயை இணைந்து மிக வெற்றி கரமாக நடத்திவரும், சென்னை புத்தகச் சங்க மம் நான்காம் நாள் நிகழ்ச்சிகள், கடந்த மூன்று நாட்களை விட சிறப்பாக நடந்தேறியது. பதிப்பகங்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பரிசும் வழங்க முன் வந்த வண்ணம் இருந்தன.

கதை கதையாம் காரணமாம்...

மாலை நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சரியாகத் தொடங்கின. முதலில், சாத்தூரைச் சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் கதை சொல்லல் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக் கத்தில் ஆரவாரமில் லாமல் தொடங்கினார். அதாவது, கதை கேட் பதன் மூலம் வந்த பண்பாடு, அனுபவம் ஆற்றல் அளவிட முடியாது - என்று கதை சொல்லத் தொடங் கினார். பிறகு, பிற்காலத் தில் எது கல்வின்னு ஆயிப்போச்சுன்னா, வேதம் படிச்சாத்தான் கல்வியின்னுட்டான் என்று தொடர்ந்தார். பார்வையாளர்கள் சற்று நிமிர்ந்து அமர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து பாஞ்சாலி சபதத்தில் ஒரு தவறான புரிதல் இருக்கிறது என்று கூறிவிட்டு, தங்களை தோத்துட்ட பிறகு, பாஞ்சாலியையும் சொக் கட்டான் ஆடித் தோத் துட்டான். அவர்கள் வென்றவர்களுக்கு அடி மைகள் ஆகிவிட்டனர். அடிமைகள் மேலாடை அணியக் கூடாது. ஆகவே, ஆண்கள் அய்வர் மேலாடையை களைந் தனர். பாஞ்சாலியையும் மேலாடையை களைய முயன்றனர். அவ்வளவு தானே தவிர, பாஞ் சாலியை அவமானப் படுத்த வேண்டி அல்ல - என்று அந்த தவறான புரிதலையும் தெளிவு படுத்தினார்.

வெடிச் சிரிப்புத் தொடங்கியது

தொடர்ந்து கதை சொல்லல் சுறுசுறுப்பை அடைந்தது. கும்ப கோணத்து பார்ப்பான், குளிக்க வந்து விழுந்த தகவலை, தமிழனிடம் கூறி உதவிக்கு ஆள் அழைத்து வரும்படி சொன்னதாக சொன் னார். அதாவது, திரு லோகத் தாத்தாச்சாரி, திருநின்ற நாராயணப் பெருமாளைச் சேவிக்க திருக்கோயில் வந்து, திருத்துழாய் விழுங்கி யவராக, திருக்குளத்தில் விழுந்து, இரு கைகள் ஹீனமடைந்தது - என்று சொல்லி வரும் படி கூறியதாகவும், தொடர்ந்து அவரே, எங்கே நான் சொன் னதைத் திரும்பிச் சொல் பார்ப்போம் - என்று கேட்டதாகவும், தமிழன், சொல்ல வராமல், அதான் இப்ப நீங்க சொன்னதை அப்படியே சொல்லிடறேன்னு சொல்லியிருக்கார். அதற்கு, கீழே விழுந்த அந்த பார்ப்பனர் விடா மல், அதத்தான் திருப் பிச் சொல்லு - என்று மீண்டும் கேட்டிருக் கிறார். தமிழனோ, மறு படியும் சொல்லுங்கள் என்று கேட்டிருக் கிறான். அவரும் சளைக் காமல், திருலோகத்... என்று தொடங்கி முன்பு கூறியதை அப்படியே சொல்லியிருக்கிறார். மீண்டும் அதே கேள்வி... அதே பதில், பார்ப்பனர் திரும்பத் திரும்ப வலி யுறுத்த, தமிழன் வெறுத் துப் போய், அதான் கும்பகோணத்துப் பார்ப்பான் குட்டையில் விழுந்துட்டான்னு சொல்லிடறேன் போதுமா? என்று சொன்னதாக, சொன்ன தும் வெடிச் சிரிப்பு எழுந்து அடங்கியது.

அசராமல் அசத்திய சாத்தூரார்

தொடர்ந்து அவர், மேற்கண்ட கதையை சொல்லிவிட்டு, இப்படி எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக் கும் அறிவு படைத்தவன் தமிழன், விளங்கா மலேயே இருக்க வைப் பவன் பார்ப்பனன் என்று அந்தக் கதைக்கு ஒரு முத்தாய்ப்புக் கொடுத்ததும், வெடித் துச் சிரித்த அரங்கினர், வியந்து கையொலி எழுப்பினர். அத்தோடு விடவில்லை சாத்தூரார். அதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒடுக்கப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவராக சொல்லப்பட்ட, கணி யன் பூங்குன்றன் சொன்ன, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற காலம் கடந்து வெல் லுகின்ற சொற்றொடர் அய்க்கிய நாடுகளின் அவையில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது



தமிழ் ஓவியா said...

////////////கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந்தான்!

ஒரு நாள் உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் (குடந்தை நிலக்கிழார்) விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லி அனுப்புகிறார். திருக்குடந்தை திரு.திருலோக தாதாச்சாரி, திருத்தங்கல் திரு.நின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்க, திருக்கோவிலுக்கு வந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக் கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத்துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் படிப் பாசிகள் வழுக்கி, திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீனமடைந்தார்னு போய் சொல்லிடு... இரண்டுமுறை கேட்டுக் கேட்டுப் பார்த்த பணியாளிடம் எப்படிச் சொல்வாய்? சொல் என்றார் அந்த நிலக்கிழார்.

சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்... என்று சொன்ன பணியாள், சொல்லிக் காட்டினான் பின்வருமாறு:

கும்பகோணத்துப் பார்ப்பான் குட்டையில விழுந்தான்னு சொல்லிடுறேன் சாமி!
கதை சொல்லும் நிகழ்ச்சியில் சாத்தூர் இலட்சுமணப் பெருமாள்

- (சென்னை புத்தகச் சங்கமம் - 22.4.2013)



என்று கூறியதும் அரங்கினர் தன்னையறியாமல் நிமிர்ந்து அமர்ந்தனர். இப்படி சரவெடிகளைத் தொடர்ந்த சாத்தூரார், தந்தை பெரியார் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத் தைச் சுட்டிக் காட்டினார். பெரியாரின் பண்பையும் தொட்டுக் காட்டத் தவறவில்லை. அதாவது, சாத்தூரில் நடக்கவிருந்த ஒரு தேர்த் திருவிழாவின்போது எப்படியோ கவனிக்காமல் தந்தை பெரியாரின் சுற்றுப் பயண கூட்டம் ஒன்றும் சாத்தூரில் ஏற்பாடு ஆகியிருந்திருக்கிறது என்றும், தேர்த்திருவிழாவுக்கு முதல் நாளில்தான் இது தெரிந்து, காவல்துறையினர், திருவிழாக்காரர் களிடம் பேச முடியாது என்று அவர்களே முடிவு செய்து கொண்டு, தந்தை பெரியாரிடத்திலே வந்தார்கள் என்றும், இதைக் கேட்டத் தந்தை பெரியார் அவர்களிடத்திலே, தேர்த் திருவிழான்னா என்ன செய்யப் போறீங்க என்று கேட்டதும், கடவுளை தேர்ல வச்சு ஊர் முழுக்க சுற்றுவாங்க என்று பதில் கூறினாராம். மீண்டும் பெரியார், கடவுள் எவ்வளவு பெரிசு என்று கேட் டதற்கு முக்கால் முழம்தான் என்று சொல்லியிருக் கிறார்கள். ஏங்க, கடவுள் சைசு என்ன, அதப் போயி இவ்வளவு பெரிய தேர்ல வச்சு ஊர்வலம் வரணுமா? ஏன்? ஒரு மஞ்சள் பையில் சுத்தி, சைக்கிள்ல வச்சு சுத்தினா வர மாட்டேன்னு சொல்லிடுவாரா? என்று கேட்டதாக சொன்னதும் சிரிப்பு அலை அலையாக எழுந்தது. அத்தோடு விட்டாரா சாத்தூரார், அப்படிச் சொன்ன தந்தை பெரியார், அவர்களுக்காக விட்டுக் கொடுத்து, தனது கூட்டத்தை அடுத்த நாள் வைத்துக் கொண்டார் என்றதும் கைதட்டலும் அலையலையாக எழுந்தது.

புத்தக கொடைஞர் அறிவிப்புக்கு பெருகுகிறது ஆதரவு

ராமலிங்க புரத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் (வலதுபுறம் இருப்பவர்), சென்னை புத்தகச் சங்கமம் கொடுத்திருந்த புத்தகக் கொடைஞர் அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு, தம்மிடமிருந்த 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தனது மகிழுந்து மூலம் கொண்டு வந்து புத்தகக் கொடைஞர் அலுவலகத்தில் கொடுத்து மகிழ்ந்தார். இவர் அய்ஓபி வங்கியில் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .


தமிழ் ஓவியா said...


நான் அய்.பி.எஸ். ஆனதற்குக் காரணம் தந்தை பெரியார்

இப்படி, பல்வேறு கருத்துகளைக் குட்டிக் குட்டி கதைகளாக தனக்கே உரிய பாணியில் சொல்லி வந்த சாத்தூரார் நேரமின்மை காரணமாக முடித்துக் கொண்ட பிறகு, நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பு செய்திருந்த ரவி அய்.பி.எஸ். உரையாற்றினார். அவர் தனது தலைமை உரையில், தன்னுடைய தொடக்கப் பள்ளியே பெரியார் பாசறையாக இருந்தது என்றும், எனது தந்தை, பெரியாரின் தொண்டராக இருந்தார், இருந்து வருகிறார் என்றும், தனது பள்ளிப் பருவத்தி லேயே சுவரில், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பை எழுதியிருக்கிறேன் என்றும், தன் வாழ்க்கையின் செழுமையான பக்கங்களை புரட்டிக் காட்டினார்.

மேலும் அவர், தந்தை பெரியார் பற்றிய தொன்று தொட்டு வரும் தவறான புரிதலை, பெரியார் யாருக் கும் எதிரி கிடையாது. அவர் யாருக்கும் ஆதரவாக இருந்ததும் கிடையாது. மனிதர்களை மனிதநேயத்தின் அடிப்படையில், அனைவரும் ஒன்று என்றும், அனைத்து வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பாடுபட்டார். அப்படிப்பட்ட வரை சிலருக்கு மட்டும் எதிரி போன்றும், வெறும் கட வுள் மறுப்பாளர் என்றும் கூறுவது தவறு என்றும் தெளிவுபடுத் தினார்.

அறிவை யாரும் திருட முடியாது

மனிதனிடமிருக்கும் எந்த ஒன்றும் திருடப்படக் கூடியதுதான் என்று தொடர்ந்த அவர், ஆனால், அறிவை மட்டும் ஒரு நாளும் திருடிவிட முடியாது. காரணம், தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந் தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு - என்று திருக்குறளை துணைக்கழைத்து தனது கருத்துக்கு வலு சேர்த்துக் கொண்டார். மேலும், தனக்கு பெரியாரின் களஞ் சியங்களை இரண்டு ஆண்டு களுக்கு முன்பே தோழர் சென்னியப்பன் கொடுத் ததை நினைவு கூர்ந்தார். அந்தப் புத்தகங்களை படிக்கும்போது, பெரியாரே பேசுவது போல உள்ளது. இந்த உணர்வு படித்தால் தான் வரும் என்று கூறிவிட்டு, முத்தாய்ப்பாக நான் அய்.பி.எஸ். ஆகி யிருக்கிறேன் என்றார் அதற்கு காரணம் தந்தை பெரி யார் என்று மனம் திறந்து உண்மையை வெளி யிட்டார். இறுதியாக, ஆகவே, இந்த சென்னை புத்தக சங்கமம் வெல்க! தமிழ் சமுதாயம் மீண்டும் வீறு கொண்டு எழுவதற்கு இது முதல் அடியாக இருக் கட்டும் என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்து கொண்டார்.

முன்னதாக, பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கருத்தரங்கை செவி மடுத்துக் கொண்டிருந்த தமிழர் தலைவர், சாத்தூர் லட்சுமணப் பெருமாள், மு. ரவி அய்.பி.எஸ். கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசும், இயக்க நூல்களும் அளித்து சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் வெறும் கருத்தாளர் மட்டுமல்ல

ரவி அய்.பி.எஸ். அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, எதைப் படிப்பது - என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவர் தமதுரையில், பெயருக்கேற்றபடியே உரையை ஈரோட்டிலிருந்தே தொடங்கினார்.

தந்தை பெரியார் வெறும் கருத்தாளர் மட்டு மல்ல. செயல் பாட்டாளர் என்று குறிப்பிட்டுவிட்டு, உலகின் எந்த சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத வாய்ப்பு தந்தை பெரியாருக்கு உண்டு என்றார் அழுத்தம் திருத்தமாக. மேலும் அவர் இப்படிப் பட்ட அறிவு விழாவை ஏற்படுத்துவது என்பது எதைக் காட்டுகிறது என்றால் என்று கேள்வி கேட்டு, அந்த சமூகம் வளர்ந்து வருவதை, முன்னேறி வருவதைக் காட்டுகிறது என்று பதில் கூறினார். இது தொடர்பாக தனது உள்ளம் கவர்ந்த கவிஞர் நெரூடா பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றை நினைவு கூர்ந்தார். கவிஞர் நெரூடா புற்று நோயாலோ, நஞ்சு செலுத்தப்பட்ட தாலோ இறந்து விடுகிறார். அவரது மரணம் மர்மத்துக் குரியதாக இருக்கிறது. அப்படி அவர் மரணத் தறுவாயில் இருக்கும்போது, நான் இறந்த பிறகும் எனது கண்களை மூடிவிடாதீர்கள், ஏனென்றால் அப்போதும் நான் ஏதேனும் படிக்க வேண்டியதி ருக்கும் என்று கூறியதாக குறிப்பிட்டு விட்டு, படிக்க வேண்டியதின் அவசியத்தை ஆழமாக சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

சுந்தரனாரும் - விவேகானந்தரும்

1853-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் விவே கானந்தர் 9-நாள் பேசியதாகவும், அதை மனோன் மணியம் சுந்தரனார் கேட்டு மகிழ்ந்ததாகவும் கூறிவிட்டு, அதன் பிறகு ஒரு நாள் விவேகானந்தர் சுந்தரனாரின் வீட்டுக்கே சென்று கேட்கக் கூடாத ஒரு கேள்வியை கேட்டதாகக் கூறினார். அந்த கேள்வி, நீங்கள் என்ன கோத்திரம் என்பது தான். அதற்கு சுந்தரனார் சொன்ன பதில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதாவது , நீங்கள் என்ன கோத்திரம் என்று கேட்டதற்கு, நான் தன்மானம் காக்கும் தென்னாட்டு திராவிடர் கோத்திரம் என்று அந்தக் கவிஞர் சொன்னதாக ஈரோட்டுக் கவிஞர் சொன்னார்.

தனது சிறப்புரையினூடே, தற்போது எழுந்துள்ள திராவிடர் சர்ச்சைக்குறித்து நினைவு வந்த போது மேற்கண்ட மனோன்மணியம் சுந்தரனார் கூறிய வரலாற்றுக் குறிப்பைக் கூறினார். அதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில், ரவிந்தரநாத் தாகூரையும் நினைவு கூர்ந்தார். தாகூர் நோபல் பரிசு பெற்ற பிறகு, இந்தியாவில் திராவிடர்களும், இந்துக்களும், முகம தியர்களும் வாழ்ந்து கொண்டு இருக் கிறார்கள், என்று குறிப்பிட்டு , இதன் எதிரொலிதான் இந்திய தேசிய கீதத்தில் வரும், திராவிடர் உத்கல வங்கா - என்பது என்று பதில் கூறிவிட்டு. தலைப்பிற்கு வந்தார்.

அச்சிட்டவை அத்தனையும் மெச்சத்தகுந்தவை அல்ல

நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் என்று கூறிவிட்டு தொடர்ந்து, கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆக முடியாது, பைத்தியம் தான் ஆக முடியும் என்று கருத்துச் செறிவுகளுக்கிடையே நகைச்சுவை யையும் கலந்தார். மேலும் அவர் திருவள்ளுவரை எடுத்துக் காட்டி, கற்க... கசடற.... கற்பவை ...... என்பதற்கு விளக்கம் சொல்லிவிட்டு அறிஞர் அண்ணா இந்த குறளுக்கு அளித்திருந்த விளக்கத்தையும் சேர்த்து சொன்னர். தொடர்ந்து பேசிய கவிஞர் ளுடிகவறயசந யனறயசந ரஅய நெபே ளை டிறாநசந என்று கூறிவிட்டு தொழில் நுட்பம் தேவைதான். ஆனாலும் நாம் நமது மரபுகளை மறந்து விடக் கூடாது. அதற்கு புத்தகங்களை படிப்பது முக்கியம் என்ற வலியுறுத்தினார்.

குறும் விவாதமும் - குடும்ப விவாதமும்

சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று சொல்ல வரும்போது, வீடுகளில் கட்டாயம் புத்தகங்களை படித்து குடும்பத்தினருடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் வரும். அதுமட்டுமல்ல. புத்தகங்களை வாங்கு வதற்கும் தனி அறிவு வேண்டும். சந்தைப்படுத்தப் படுவது நல்ல புத்தகமாகி விடாது. இப்பொழுது உலகில் இருப்பது இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் விற்பவர், மற்றொருவர் வாங்கு பவர். ஆகவே ஒன்று நீங்கள் விற்பனையாளராக இருக்க வேண்டும் அல்லது வாங்குபவராக இருக்க வேண்டும். பன்னாட்டு முதலாளிகளின் சந்தையில் நாம் வாங்குவோர்தான். ஆகவே நமக்கு மேட்டிமைத்தனம் வேண்டியதில்லை. நல்ல புத்தகங்களைப்படித்து மறுமலர்ச்சியினை உருவாக்க வாருங்கள் என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார். மேற்கண்ட கருத்தரங்கத்தை பிரின்சு என் னாரசு பெரியார் ஒருங்கிணைப்பு செய்து சிறப்பித்தார்.

பரிசு மழை தொடர்கிறது

விழாவின் ஆலோசகர் புகழேந்தி, வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் நேற்று சிறப்பு பரிசாளராக தெளிவு செய்யப்பட்ட, வலங்கை மானைச் சேர்ந்த விசயகுமாருக்கு மு.இரவி அய்.பி.எஸ். பரிசு வழங்கி சிறப்பித்தார், தொடர்ந்து நேற்று அறிவிக்கப் பட்ட முதற்பரிசை கற்பக விநாயகத்தின் சார்பாக செவ்வியன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, வரலட்சுமி இரண்டாவது பரிசையும், பாலசுப்பிர மணியம், பி.அருள், புவனேஸ்வரன் ஆகியோரும் அடுத்தடுத்த பரிசுகளைப் பெற்றனர்.

இன்றைய சிறப்பு பரிசாளரை ஈரோடு தமிழன்பன், வே.தொல்காப்பியர் என்பவரைத் தெரிவு செய்தார். அதைத் தொடர்ந்து டி.விஜயசாரதி, சிவகாசியைச் சேர்ந்த எம்.கணேஷ்குமார், எஸ்.கலைச்செல்வி ஆகியோரும் உயிர்மை பதிப்பகம் சார்பாக ஏ.சாலமன், சிட்லபாக்கம் முத்து ஆகியோர் உயிர்மை இதழுக்கான ஓராண்டு சந்தாவை பரிசாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மிகுந்த மனநிறைவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கோ.கருணாநிதி, திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தில்ரோமி யோ, பெரியார் நூலக வாசகர் வட்டம் பொருளாளர் மனோகரன், இறைவி, வெற்றிசெல்வி, புத்தக நிலைய மேலாளர் நடராஜன், பட்டுக்கோட்டை சதாசிவம், பெரியார் சாக்ரட்டீஸ், காரைக்குடி பிராட்லா மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


புத்தகச் சிந்தனை
int

உலகில் நொடி ஒன்றுக்கு 16121 நூல்கள் வாங்கப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது தமிழில்தான். நூல்: தம்பிரான் வணக்கம்

தமிழ் ஓவியா said...


அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவ னுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


உலக நாதியற்றவன் தமிழன் தானா? கலைஞர் வேதனை

சென்னை, ஏப்.23- ஈழத்தமிழர்கள் எப்படி எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர்; உலகில் நாதியற்றவன் தமிழன் தானா? என்ற வேதனை வினைவை எழுப்பினார் தி.மு.க. தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று (23.4.2013) எழுதியிருப் பதாவது:

இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு ராணுவத்தி னரிடம் பிடிபடுகிறார்கள். அப்படி பிடிபட்டு துபாயில் இறக்கி விடப்பட்ட 45 பேரில், 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப அய்.நா. உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவரான ரமணன் ஜூனியர் விகடன் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு :-

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஈழ அகதிகள் 102 பேர் ஆஸ்திரேலியா செல்வதற் காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிந்தலக்கரை வந்தோம். அங்குள்ள காளி கோயிலில் கூடினோம். அந்தக் கூட்டத்தில் நானும், என் மகளும், என் மனைவியும் இருந் தோம். முதலிலேயே படகில் ஏறிய நாங்கள் 45 பேர் போலீசில் சிக்காமல் ஆஸ்திரேலியா நோக்கிக் கிளம்பினோம். நானும் என் மனைவியும் படகில் வந்துவிட்டோம். என் குழந்தை பின்னால் வந்த குழுவினருடன் வருவதாக இருந்த நிலையில், குழந்தை காவலரிடம் சிக்கிக் கொண்டது. நானும், என் மனைவியும் இப்போது துபாயில் இருக்க, என் குழந்தை திருச்சியில் இருக்கிறது.

அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சிந்தலக் கரையிலிருந்து கிளம்பிய படகு சர்வதேசக் கடல் எல்லையில் சென்று கொண்டிருந்தபோது, படகில் ஓட்டை விழுந்து விட்டது. படகில் இருந்த தண்ணீரை இறைத்து சோர்ந்துபோன நாங்கள் சேட்டிலைட் போன் மூலம் ஆஸ்திரேலிய நேவிக்குத் தகவல் கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் சரக்குக் கப்பல் வந்து எங்களைக் காப்பாற்றியது. எங்கும் இருட்டு. மொழியும் தெரியவில்லை.

நாங்கள் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் படுவதாக நம்பினோம். ஆனால் எங்களைத் துபாயில் இருக்கும் ஜபர் அலி என்ற துறை முகத்தில் இறங்கச் சொன்னார்கள். சில தொண்டு நிறுவனங்களும் வந்தது. அவர்களிடம் நாங்கள் தஞ்சம் தேடி ஆஸ்தி ரேலியாவுக்குப் புறப்பட்டோம், எங்களை இங்கே கொண்டு வந்துவிட்டனர். இறங்க மறுத்தனர்

இலங்கையிடம் எங்களை ஒப்படைக்க மாட் டோம் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கப்பலை விட்டு இறங்க மறுத்தோம். துபாய் அரசு உங்களை இலங்கைக்கு அனுப்பாது என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததன் பேரில் இறங்கினோம். ஆனால், இப்போது அய்.நா. எங்களைக் கை விட்டு விட்டது. எங்களில் 19 பேரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவினை அய்.நா. எடுத்துவிட்டது.

இந்தக் குழுவில் இடம் பெற்ற ஹரினி என்று அழைக்கப்படும் லோகினி ரதி மோகன் கூறியிருப்பதாவது :-

தமிழ் ஓவியா said...

புலிகளின் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினேன். 2009இல் நாங்கள் தப்பித்து தமிழகத்துக்கு வந்தோம். எங் களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதி வழங்கப் பட்டதன்பேரிலேயே நாங்கள் தரை இறங்கினோம். ஆனால் இப்போது, அகதிகளுக்கான அய்.நா. அமைப்பு எங்களை இலங்கைக்குப் போகச் சொல்கிறது. எங்களை சுதந்திரமாக ஊடகங்களிடம் பேசவோ, வெளி உலகுடன் தொடர்பு கொள்ளவோ அனுமதிக் காமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் இசைப் பிரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும். தவிர, என் கணவர் ஒரு நாட்டில், என் பெற்றோர், தங்கைகள் ஒரு நாட்டில் என திசைக் கொருவராய் சிதறிக் கிடக்கிறோம். எங்காவது ஒரு நாட்டுக்குத் தப்பி அங்கிருந்து சிதறிக் கிடக்கும் எங்கள் குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும். நாங்களும் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தான் கடல் கடக்கிறோம். எந்த நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என நினைக்கிறோமோ, அந்த நாட்டுக்குப் போய் சேர்ப்பதற்காகவா எங்களை நடுக்கடலில் இருந்து காப்பாற்றினார்கள்?

தமிழ் ஓவியா said...

இவ்வாறு தங்கள் இதயத் துயரை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். துபாயில் கரை சேர்க்கப் பட்ட 45 பேரில் மிக முக்கியமாக புலிகளின் ராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையனின் மனைவியும், குழந்தைகளும், வேறு சில போராளி களும் இருந்துள்ளனர். இவர்களில் எட்டு பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது. ஏற்கனவே ஏழு பேரை கொழும்புவுக்குத் திருப்பி அனுப்பி விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வர வில்லை. அவர்களை துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கும் வந்துள்ளன.

நாதியற்ற தமிழன்

நாதியற்ற தமிழன் உலகின் பல பாகங்களில் எப்படியெல்லாம் அவதிப்படுகிறான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேடிப்போகத் தேவை யில்லை. அவர்கள் தமிழர்கள், ஈழத் தமிழர்கள். அவர்களுக்காக உதவிட நமக்குத் தான் முதல் கடமை உள்ளது. நமக்கென்று ஒரு நாடு இருக் கின்றது. அவர்கள் இந்த 19 பேருடைய துயரினைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த 19 பேரும் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை. வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தஞ்சம் அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர் கள் வாழ்வில் விளக்கேற்ற இந்திய அரசு உதவிட வேண்டாமா? இலங்கை சிங்களப் பேரினவாத அரசைப் பற்றிய வேறு சில தகவல்களும் செய்தித் தாள்களில் தொடர்ந்து வந்தவண்ணம் இருக் கின்றன. கடந்த வாரமே பிரிட்டன் அரசு இலங்கை யில் மனித உரிமை மீறல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அறிக்கை வெளியிட் டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளி யுறவுத் துறை 2012ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது என பல்வேறு கொடுமை களைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடு கின்றனர். முக்கியமாக சமூக ஆர்வலர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாக உள்ளது. இவர்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் திடீ ரென மாயமாகி விடுகின்றனர். சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலை வருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் பகுதியில் பயமுறுத்தல், வழிப்பறி மற்றும் ஊழல் செயல்களை ஊக்குவித்து வருகிறார் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


டெசோ மாநாட்டில்

இந்தக் கருத்துகளை மனதிலே கொண்டு தான் 12-8-2012 அன்று சென்னை மாநகரில் டெசோ சார்பில் நாம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றிய தீர் மானத்தில், தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். பலர் சித்திர வதை முகாம்களில் சொல்லொணாத வேதனைக் கும், துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்ப் பெண்கள், இராணுவப் படையினரால் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல கொடுமை களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழ்க் குழந் தைகள் துப்பாக்கிகளைப் பார்த்துக்கொண்டு, இரா ணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன் முறையால் பாதிக்கப்பட்டு, முடிவில்லாத அச்சத் துடன் வாழ்கின்றனர் என்று சுட்டிக் காட்டி யிருக்கிறோம். இத்தகைய மனித உரிமை மீறல் களையும், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும் விசாரிப்பதற்காக சுதந்திர மான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச அள விலான விசாரணைக் கமிஷன் அமைத்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி, வருணா ஆகிய மூன்று கப்பல்கள் தான் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஒருவர் இலங்கைக் கடற்படையினரில் 80 சதவிகிதம் பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக் கிறது என்றே கூறியிருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லாம் நம்முடைய வேதனையை நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இலங்கை ராணுவத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களா னாலும் அவர்களுக்கு இந்தியாவில் எந்தப் பகுதி யிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாமும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தும் கூட, இன்னமும் அத்தகைய பயிற்சிகள் தொடர்வது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. மத்திய அரசின் இத்தகைய செயலை தமிழகத்தின் சார்பில் கண்டிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இதற்கிடையே இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வந்துள்ள செய்தியின்படி, காமன்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடை பெற்றுள்ளது. அந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனை வரும் ஒருமனதாக அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக்குழுவின் கூட்டம் 26-4-2013 அன்று லண்டன் மாநகரத்திலே நடைபெறவுள்ளது; அந்தக் கூட்டத்தில் முக்கியமாக இலங்கைப் பிரச்சினை பற்றி பரிசீலனை செய்து காமன் வெல்த் அமைப் பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல் லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள், இலங்கையின் தலைமை நீதிபதி திருமதி ஷிரானி பண்டாரநாயகே இலங்கை அதிபரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது

25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படு கொலையை நடத்தி, தமிழ் ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் நியாய மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலை மையை இக்கழகச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 6-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பது குறித்து 26-4-2013 அன்று இலண் டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறேன்.

அன்றையதினம் நாம் வலியுறுத்திய அந்தக் கோரிக்கையைத்தான் இன்றையதினம் காமன் வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகளும் எதிரொலித்திருக்கிறார்கள். எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் ஆதரிக்க வேண்டுமென்றும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தத்தைத் தரவேண்டுமென்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள, மு.க.
(முரசொலி, 23.4.2013)

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமத்தில் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்


போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்....

சென்னை, ஏப்.23- சென்னை புத்தகச் சங்கமத்தின் தொடர்விழாவில் ஒன்றான பொழுதுபோக்கு விளை யாட்டுகளுடன் அறிவுத்திறனை மேம்படுத்துவதற் கான பயிற்சிகள் நேற்று (22.4.2013) தொடங்கியது.

முதல் நாள் பயிற்சியாக கற்பனைத்திறன் வளர்க்கும் கதை எழுதும் பயிற்சி தொடங்கியது.


திரைப்படக் கல்லூரியின் பேராசிரியரும், திரைப்பட நடிகருமான ரவிராஜ் அவர்கள், கதை சொல்லுதல் பயிற்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

இந்த நிகழ்வின் முக்கிய விருந்தினராக பிரபல திரைக்கதை மற்றும் தொலைக்காட்சி தொடர் கதாசிரியர் ரவிராஜ் கலந்துகொண்டார். சிறிய கதைத் தொடர்களை தன்னுடைய சில கற்பனைக் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு கதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டினார். பயிற்சிக்கு வருகை தந்து கலந்து கொண்ட குழந்தைகளில் பலர் முதல் முதலாக கதை எழுதுப வர்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் பல நகரங்களில் பள்ளிக்கூடங் களுடன் கலந்து புதிய வகை கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்திய பிரபலமான துளிர் அமைப்பு குழந்தைகளுக்கான இந்த அருமையான பயிலரங்க நிகழ்ச்சியை நடத்தியது. ஒவ்வோர் குழந்தைக்கும் அவர்களுக்கு விருப்ப மான கதாபாத்திரங்களைக் கொடுத்து கதை எழுத ஆரம்பிக்க தளிர் நடைபோடும் வயதிலேயே கதாசிரியர்களாக மாற்றிவிட்டார். ஆர்வத்துடன் கதை எழுத ஆரம்பித்த குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களின் கற்பனைகளை காகிதங் களில் ஓடவிட்டார்கள்.

இதுவரை பள்ளிப்பாடங்களை தவிர வேறதை யும் எழுதாத எழுதபிடிக்காத குழந்தைகள் கதை எழுதுவதை கண்ட பெற்றோர்கள் தாங்கள் காண் பதை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் இருந்ததை அவர்கள் முகம் காட்டிக்கொடுத்தது. குழந்தைகளுக்கான போட்டிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.

ஒன்று 6 வயது முதல் 11 வயதுள்ள குழந்தைகள்; இரண்டு 12 வயது முதல் 16 வயதுள்ள சிறுவர்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.


6 வயது முதல் 11 வயது பிரிவில் வெற்றி பெற்ற அ.க.செவ்வியனுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

இப்போட்டியில் 6 வயது முதல் 11 வயதுள்ளோர் போட்டியில் முதல் பரிசை அ.க.செவ்வியனும், இரண்டாம் பரிசை சிவானிசிறீயும் வென்றனர்.

12 வயது முதல் 16 வயதுள்ளோர் போட்டியில் முதல் பரிசை தொண்டறமும், இரண்டாம் பரிசை அய்ஸ்வர்யாவும், ஆறுதல் பரிசாக மூன்று பேர் களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

12 வயது முதல் 16 வயது பிரிவில் வெற்றி பெற்ற தொண்டறத்திற்கு கோப்பை வழங்கப்பட்டது.

இறுதியில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. துளிர் அமைப்பைச் சேர்ந்த சரவணன், இந்தப் பயிலரங்கம் பற்றி கூறும்போது, குழந்தைகள் புதிய செய்தியை அறிய எப் போதும் ஆவலாக இருப்பார்கள் அந்த புதிய வைகள் குழந்தைகளின் அறிவை வளர்ப்பதாகவும் அதே நேரத்தில் கல்வி பயிலும் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக அமைய வேண்டும், இந்த நோக்கத் தில் துவங்கியது தான் இந்த துளிர் இதன் மூலம் பல பள்ளிக்கூட குழந்தைகள் கல்வியில் அதிக ஆர்வம் கொண்டு பயில்வதை அனுபவரீதியாக கண்டுள் ளோம் என்றார்.

இப்பயிலரங்கில் 62 குழந்தைகள் கலந்துகொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கு இனிப்புகளும் பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான முதல் நாள் பயிலரங்கத்தின் போது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஊடகத்துறையைச் சேர்ந்தவர் களும், தன்னார்வ தொண்டர்களும் துளிர் அமைப்பு பயிர்ச்சியாளர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வழிகாட்டினர். நிகழ்ச்சியை துளிர் அமைப்பின் நிருவாக இயக்குநர் செண்பகம் சரவணன், இயக்குநர் ரஞ்சனி பாலா ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.

அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?

போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?

பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?

மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!

இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!

போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.

ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!

சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?

அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!

இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?

கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!

தமிழ் ஓவியா said...


விலங்கு வழிபாடு


விலங்குகளைக் காப்பதற்கான மத நோக்கங்கள்:-

பல விலங்குகள் மதசம்பந்தமான நோக்கங்களுக் காகவும் பாதுகாக்கப் படுகின்றன. சிறப்பாக எகிப்தில் மதத் தினரால் பாதுகாக்கப்பட்ட விலங் குகள் மிகப் பலவாக இருந்தன. கிட்ட தட்ட நூறு விலங்கினங்கள் அங்கே தெய்வமாக வழிபடப்பட்டன. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய அடைய, எகிப்திலும், பிறநாடு களிலும் மத சம்பந்தமான தடைகள் வலிவிழந் தன. ஒரு காலத்தில் எகிப்தில் முதலை வழிபாடு இருந்தது.

பயங்கர ஊருண்ணியான முதலைகள் நைல் ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்கின்றன என்று எண்ணி மனிதர்கள் அவற்றை வணங்கி வந்தார்கள். ஆனால் இந்தப் பேராற்றின் மேற்பகுதிகளில் வெண்பனி மளமளவென்று உருகுவதே நைல் நதியின் வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்பது தெரிந்ததும் முதலையை கடவுளாக வழிபடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள்.

எகிப்தில் அப்பிஸ் என்னும் எருது இருந்தது. அது கடவுளாகப் போற்றிப் பேணப்பட்டது. அது தெய்வம் என்று பூசாரிகள் சொன்னார்கள். எகிப்தை வென்று அடிமைப்படுத்திய பாரசீக மன்னன் கட்பீஸ் இது தெய்வம் அல்ல, மாட்டிறைச்சி என்று ஒரு முறை கூவி, கட்டாரியால் அந்த எருதைக் குத்தி னான். அவனுடைய மெய்க்காவ லர்கள் அப்பிஸின் பூசாரிகள் மக்களை ஏமாற்றியதற்காக மிலாறுகளால் நய்யப்புடைத்தார்கள். அந்தநாள் முதல், அதாவது கி.மு. 525ஆம் ஆண்டு முதல் இந்த எருது வழிபாடு நின்று விட்டது.

இவ்வாறு விஞ்ஞானத்தின் செல்வாக்கினால் எகிப்தில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் விலங்குப் பாதுகாப்புக்கான மதநோக்கங்கள் படிப்படியாக வழக் கொழிந்து போயின. அந்த நிகழ் முறை நம் காலத்திலும் தொடர்கிறது.

விலங்கியல் (பக்கம் 392 -393) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ வெளியீடு
தொகுப்பு: மதி, செங்கோட்டை

தமிழ் ஓவியா said...


கிருபானந்தவாரியார் ஒப்பம்


தேக்கி வைக்கப் பட்டுள்ள மின்சாரத்தை செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியைக் கடத்து வது செப்பினால் முடியும் என உணர்ந்து, இறை வன் உருவங்களைச் செப்பினால் சிலை வடித் தார்கள்.

- கிருபானந்தவாரியார்
சொற்பொழிவிலிருந்து அ.சம்பத்
ஆதாரம்: தாய் வார இதழ், 28.8.83

இவை உண்மையென்றால் கல்லால் வடிக்கப் பட்டுள்ள கடவுளர் சிலைகள் (சர்வ சக்தி படைத்த) அருள் ஒளியைக் கடத்துவதில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் அவற்றை வணங்குகிறார்கள்?

தகவல்: ஆர்.வி.குப்புசாமி, இரங்கம்புதூர்

தமிழ் ஓவியா said...


கொள்ளைக்காரன் திருமங்கை ஆழ்வார்


நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலிநாடர் களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரை குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்.

(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியிட்டுள்ள தஞ்சை வாணன் கோவை - பக்கம் 7 - வரிகள் 26-30)

பார்ப்பனீய மதத் தலைவர்களுள் ஒருவர் பிறமதத்தைச் சார்ந்த - புத்தமதத்தைச் சார்ந்த - இடத்திலிருந்து கொள்ளையடித்த செய்தியையும், பிறமதங்களை அழிப்பதற்கு கையாண்ட முறையையும் இச்செய்தி தெரிவிக்கிறது. இவரைக் குற்றங் கூறுநர் இலர் என்று கூறப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.

தகவல்: சு.ஆறுமுகம், வேலூர்-6 (வ.ஆ)

தமிழ் ஓவியா said...


கடவுள் காப்பாற்ற மாட்டார்!


சோமநாதபுரத்தில் இருந்த மிகப் பெரிய கோயிலில் பல நூற்றாண்டு களாகப் பக்தர்களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத் தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்களாம். ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகமது கோயிலை இடித்து பாழாக்கி னான், பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்றும் நம்பியிருந்த 50 ஆயிரம் பேர் அவனால் கொல்லப்பட்டனர்.

(நேரு எழுதிய உலக வரலாறு)

தமிழ் ஓவியா said...


இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம்.

இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


அன்று ஆச்சாரியார் சொன்னார்


நம் நாட்டில் மற்றவர்கள் சண்டை யைக் காட்டிலும் பக்தர்கள் சண் டையே அதிகம். என் தெய்வம் பெரி தா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டை தான் அதிகம்.

சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் சி.ஆர். - 15.4.1953

தமிழ் ஓவியா said...


செல்வா


தந்தை செல்வா என்றால் அது ஈழத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் செல்வ நாயகம் அவர்களைத் தான் குறிக்கும். அவரின் மறைவு நாள் இந்நாள் (1977).

தொண்டு செய்யும் தூய வர்களும், சாதனை செய்யும் செம்மல்களும் மறைவதில்லை - பொருத்தமான சந்தர்ப் பங்களில் எல்லாம் மக்கள் மனதில் மலர்ச்சியுற்று மணம் வீசுவர். அந்த வகையில் சீலமிக்க செல்வா அவர்கள் அடிக்கடி நினைக்கப்படும் நிலாவொளியே! அகிம்சை யில் அவர் காந்தியாருக்கு சளைத்தவரல்லர். ஈழத் தமி ழர்களின் சுயமரியாதையுடன் கூடிய சுய நிர்ணயத் தன் மைக்காக அறவழிக் கொடி களை இலங்கை வீதிகளிலே ஏந்திச் சென்றவர் தான்.

1949 டிசம்பர் 18இல் கொழும்பில் நடைபெற்ற தமிழரசு கழக மாநாட்டின் தலைமை உரையில் செல்வா சிந்திய கருத்தென்ன?

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழியினங்களி டையே ஏற்படும் முரண் பாடுகள் போருக்குக் காரண மாக இருந்தன. இப்போர் களில் வல்லரசுகள்கூட இழுக்கப்பட்டுள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்ப தற்கு இரு வழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியினத்திற் கும் அரசுரிமை உடைய தனித்தனி நாடுகளை அமைக்க பரந்த நிலப் பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி. ஒவ்வொரு மொழியினத் திற்கும் தன்னாட்சி மாநிலங் களை அமைத்து மத்தியில் கூட்டாட்சி அரசை உடைய ஒரு நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி.

நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம்; தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம். இரண்டு மாநிலங் களுக்கும் பொதுவான மத்திய அரசு இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு; சிறிய தான தமிழ்ப் பேசும் தேசிய இனம் அழிந்து போகாமலும் பெரியதான சிங்களத் தேசிய இனத்தால் விழுங்கப்படா மலும் இருப்பதற்குரிய மிகக் குறைந்த ஏற்பாடு இதுதான் என்று செல்வா 64 ஆண்டு களுக்குமுன் சொன்ன ஒவ் வொரு சொல்லும் செஞ் சொல் அல்லவா?

இன்றைக்குக்கூட அரசி யல் தீர்வு என்று சொல்லப் படுவது இதனைத் தழுவியது தானே!

சுயாட்சி மாநிலம் என்ற கோரிக்கை தனி நாடு என்று மாற்றப்படுவதற்கு யார் காரணம்? சிங்களவர்களும், அவர்களின் ஆணவ மிக்க பாசிச ஆட்சியும்தானே?

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து இல்லை; பவுத்தம் சார்ந்த சிங்களர் ஒருவர்தான் அதிபராக வர முடியும் என்ப தில் ஆரம்பித்து ஒவ்வொன் றிலும் தமிழர்களை அழிக்கும் நச்சுக் குப்பிகளை அடுக்கிக் கொண்டே போனதாலும், உரிமைக்காகக் குரல் கொடுத்த தமிழீழ மக்களை அரசு துணை கொண்டு வேட்டையாடியதாலும், தன்மானமிக்க தமிழினத்தின் பெண்களை மாமிசப் பிண்ட மாகக் கருதிக் கடித்துக் குதறியதாலும்தானே இளை ஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக் குத் தள்ளப்பட்டார்கள்.

செல்வா நினைவு நாளில் அவரை நினைப்போம்! அவர் நினைப்பிற்கு வடிவம் கொடுப் போம், வாழ்க செல்வா!

கூடுதல் தகவல்: (Tail-Piece) பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் வரலாறு (திராவிடர் கழக வெளியீடு) நூலைப் படியுங்கள். - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


வளருமா?

செய்தி: அட்சய திரிதியையில் எந்தப் பொருளை வாங்கினாலும் அது பல மடங்காகப் பெருகும்.

சிந்தனை: அப்படியா? ஒரு மொடா குடிகாரன் பாட்டில்களை அன்று வாங்கினால்...?

தமிழ் ஓவியா said...


தானாக வீழ்ந்துவிடும்



பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தீண்டாமை

செய்தி: அரசியலில் தீண் டாமை அதிகரித்து வருகிறது.
- குஜராத் முதல்வர் நரேந்திரமோடி

சிந்தனை: தீண்டாமை க்ஷேமகரமானது எனும் இந்துத் துவாவின் தத்துப் புத்திரர்கள் தீண்டாமைப்பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


2012 தேர்தலில் பாடம் கற்கவில்லையா மாயாவதி?


கான்ஷிராம் அவர்களால் தொடங்கப்பட்டது பகுஜன் சமாஜ் கட்சி. பகுஜன் என்றால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்பவர்கள்தான் - இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (பகுஜன்). இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பது தான் அதன் அடிப்படையாகும்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இது இந்திய அரசியலுக்கே ஒட்டு மொத்தமாகத் தேவைப்படக் கூடிய ஜனநாயகக் கோட்பாடாகும்.

கான்ஷிராம் அவர்கள் அந்த அடிப்படையிலேயே தேர்தல் களத்தைச் சந்தித்து, வெற்றி பெற்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதி அவர்களின் கரத்தில் ஆட்சியையும் கொண்டு வந்து சேர்த்தார்.

அந்தக் கோட்பாட்டுத் தளத்தில் உறுதியாக நின்று, லக்னோவிலிருந்து அந்தச் சுழல் விளக்கை உயர்த்திப் பிடித்திருந்தால் மூன்றாவது அணி இங்கு முளைக்கவில்லையே என்ற ஏக்கத்துக்கு நல்ல மருந்தும் கிடைத்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் மதவாத இந்துத்துவா கட்சியான பிஜேபி கூட காணாமல் போயிருக்கும்.

அவசரப்பட்ட காரணத்தாலும், அடிப்படையைத் தொலைத்த தன்மையாலும், உத்திரப்பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களை பிடித்துத் தம் வலையில் போட்டால் எளிதாக உத்தரப்பிரதேச அதிகார நாற்காலி நகர்ந்து தன் பக்கம் வந்து சேரும் என்று கணக்குப் போட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற மதிப்பு மிக்க பொறுப்பை பார்ப்பனரான சதிஸ் சந்திர மிஸ்ரா என்பவருக்குத் தாரை வார்த்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பார்ப்பனர்களுக்குத் தூக்கிக் கொடுத்தார் அதில் 51 இடங்களில் வெற்றி பெற்றனர். முக்கிய துறைகளில் எல்லாம் அமைச்சர்களாக அவர்களை நியமித்தார்.

2009 மக்களவைத் தேர்தலிலும் பார்ப்பனர்களுக்கு 20 இடங்கள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர் களுக்கோ 17 இடங்களை அளித்தார். எங்கே கிளம்பி, எங்கே பயணிக்கிறார் என்பதை எண்ணினால் வெட்கமும், வேதனையும் இரட்டிப்புத் தாக்குதலைத் தொடுக்கின்றன.

இதே சூத்திரம் (Formula) 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் கை கொடுக்கவில்லையே! கண்ணிய மாகக் கருத்தூன்றி கணித்தாரா மாயாவதி?

2007இல் ஆட்சியைக் கொடுத்த உ.பி. மக்கள் 2012இல் ஏன் பறித்தனர் என்று சிந்திப்பதுதானே - சிறப்பானது சீலமானது.

206 இடங்களைப் பெற்றவர் இப்பொழுது வெறும் 80-க்குள் முடங்கிக் கிடப்பது ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

2014இல் நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாயாவதி. 36 இடங்களில் 18 இடங்கள் பார்ப்பனர் களுக்காம்.

பதவி என்று வந்து விட்டால் பத்தும் பறக்கும் என்பது இதுதானோ! கான்ஷிராம் இதற்காகத்தானா இந்த மாயாவதியை முன்னிறுத்தினார்?

பகுஜன் சமாஜ் எனும் கான்ஷிராம் குரலை மாற்றி, திரிபு செய்து சர்வஜன் என்று புதுப்பெயர் சூட்டிக் கொண்டார்.

பார்ப்பனர்களையும், சத்திரியர்களையும், உயர் ஜாதியினரையும் செருப்பால் அடியுங்கள் என்று சொல்லும் அளவுக்குத் தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவி என்று காட்டிக் கொண்டவர் - இன்றைக்குப் பார்ப்பனர்களின் கைப்பாவை ஆகி விட்டாரே!

பார்ப்பனீயம்தான் எவ்வளவு வலிமை உடையது தந்திரமானது;

செருப்பாலடிப்பேன் என்று சொன்ன மாயாவதியையே தடம் புரளச் செய்யும் அளவுக்குச் சாமர்த்தியம் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது கொள்கைக்காக மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அண்ணல் அம்பேத்கர் எங்கே?

பதவிக்காக அடிப்படைக் கொள்கைகளை ஆழப் புதைத்து அதன்மேல் நின்று பதவிக்காகப் பரிதாபப்பட்டு நிற்கும் - அவலம் எங்கே?

நாமே விமர்சனம் செய்யும் - அளவுக்கு மாயாவதி ஆகிவிட்டாரே! என்ன செய்ய!

மாயாவதி தவறான உதாரணம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களும் உணர்ந்திடத் தவறக் கூடாது எச்சரிக்கை!
25-4-2013

தமிழ் ஓவியா said...


பிரச்சாரக் கதைகள்


திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மானமற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

தமிழ் ஓவியா said...


வெள்ளுடைவேந்தர்


நவம்பர் புரட்சி என்று பொது வுடைமை உலகம் போற்றிப் புகழும்; பார்ப்பன அல்லாதா ருக்கும் ஒரு நவம்பர் புரட்சி உண்டு. அதுதான் நவம்பர் 20 (1916) அந்த நாளில்தான் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் ஒர் உணர்வு பிறந்து வடிவமும் மலர்ந்துள்ளது.

வழக்குரைஞர் டி. எத்தி ராஜூலு முதலியார் இல்லத்தில் சென்னை வேப்பேரியில் பார்ப் பனர் அல்லாத பெரு மக்கள் பலரும் கூடி இதனைப் பெற் றெடுத்தார்கள்.

திவான் பகதூர் பிட்டி தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) திவான்பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிபிள்ளை, ராவ் பகதூர் ஜி. நாராயணசாமி செட்டி, இராவ் பகதூர் ஓ. தணி காசலம் செட்டி, இராவ்பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிபிள்ளை, வேங்கட்ட ரெட்டி நாயுடு, இராவ்பகதூர் ஏ.பி. பாத்ரோ, டி. எதிராஜு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஜே.என். இராமநாதன், கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமதுதம்பி மரைக் காயர், திருமதி அலமேலு மங்கைத் தாயாரம்மாள், ஆற் காடு இராமசாமி முதலியார், திவான்பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜூலு நாயுடு, மதுரை வக்கீல் எல்.கே. துளசி ராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார் (வகுப்புரிமைத்தந்தை) மூப்பில் நாடார் ஆக 26 பெரு மக்கள் முதன் முதலாகக் கூடிப் பார்ப் பனர் அல்லாதார் உரிமைக்கான கால்கோள் கொடியை உயர்த் தினர்.

அப்பெரு மக்களுக்கு இந்நாளில் நமது அகங் கனிந்த வணக்கத்தையும், மனம் நெகிழ்ந்த நன்றி உணர்ச்சி மலர்களையும் சூட்டுவோம்!

அன்று அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசியல் கட்சிதான் தென்னிந்திய நலவு ரிமைச் சங்கம் ஆகும். (South Indian Liberal Federation).

அவ்வமைப்பின் செயலாள ரான பிட்டி தியாகராஜ செட்டியார் கையொப்பமிட்டு வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (20.12.1916) (20.12.1916) (Non Brahmin Manifesto) திராவிடர் இனத் தின் உரிமைச் சாசனமாகும் (Magnacarta).

அதன் விழுமிய நோக் கங்கள் காலப் பெட்டகமாகும்.

1) தென்னிந்தியாவில் பார்ப் பனர் அல்லாத அனைத்து மக்களின் கல்வி, சமுதாய, பொருளாதார அரசியல் தார்மீக ஆக்கப் பூர்வ மேம்பாட்டிற்குப் பாடுபடுவது.

2) பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாத்தல், மேம் படுத்துதல் ஆகிய நோக்கங் களுடன் பொதுப் பிரச்சினை களை விவாதித்துத் தென் னிந்திய மக்களின் கருத்து களையும், நலன்களையும் உள் ளது உள்ளபடியே அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது.

3) பொதுப் பிரச்சனைகள் குறித்து ஆரோக்கியமான ஜனநாயகக் கருத்துக்களை பொதுக் கூட்டங்கள் மூலமும், பிரசுரங்கள் விநியோகப்பதன் மூலமும். இதர வழிகளாலும் பரப்பி, அதன் மூலம் பொது மக்களின் கருத்தை உருவாக்கு வதும், வகைப்படுத்துவதுமாகும்.

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் உயர்வுக்கு ஒரு துவக்கத்தைக் கொடுத்த முறை யில் பிட்டி தியாகராயரைக் குறியீடாகக் கொண்டு அப்பெரு மக்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக!

அதற்கான விதை விதைத்த வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இந்நாள் (1852).

- மயிலாடன் 27-4-2013

தமிழ் ஓவியா said...


சர்.பிட்டி தியாகராயரின் மக்கள் தொண்டு

- டாக்டர் கவிஞர் மகாபாண்டியன் பி.எச்.டி.

(மாநில தலைவர், சர்.பிட்டி தியாராயர் பேரவை)

அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு துறை களில் தமிழகம் கண்ட பல்வேறு அறிஞர்களுள் தலையாய அரசியல் ஞானியாக - தென்னாடு கண்ட திராவிடச் சூரியனாகத் திகழ்ந்தவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் ஆவார்கள். சென்னை கொருக்குப் பேட்டையில் 27.4.1852இல் தெலுகு தேவாங்க சமூகத்தில் பிட்டி என்ற வீட்டுப் பெயர் கொண்ட குடும்பத் தில் பிறந்தார். மிகப்பெரும் செல்வந்தராய் பிறந்த சர்.பிட்டி தியாகராயர் தன் குலத்திலேயே 1876இல் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

அக்காலத்தில் குதிரைகள் பூட் டிய சாரட் வண்டியில் பயணம் செய்தவர். சென்னைக்கு மோட் டார் வாகனம் வந்ததும், அதை வாங்கிப் பயன்படுத்தியவர். அவர் தம் வாழ்நாளில் மக்களுக் காக வாரி வழங்கிய தொகை தற்காலத்து கோடி பல கோடிக்குச் சமமாகும்.

சென்னை மாநகராட்சி உறுப் பினராக அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார், 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப் படி மாநகராட்சிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர் தான். சென்னை நகர மன்றத் தலைவராக 1919 முதல் 1923 வரை இருந்து மகத்தான பணிகள் செய்தார். இவர்காலத்தில் ட்ராம் (Tram) வட சென்னையின் பல பகுதி களுக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து பாதைகள் போடப்பட் டன.

தென்னிந்திய வர்த்தக சபையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகி வர்த்தக வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார்.

வெள்ளுடைவேந்தர்

1921 ஜனவரி 12ஆம் நாள் (12.1.1921) சென்னை மாகாணத்து முதலாவது சட்டசபைத் துவக்க விழாவிற்கு கன்னாட் பிரபு சென்னை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னை நக ராட்சி தீர்மானித்தது. அக்காலத் தில் பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கிய தலைவர்களை வரவேற்க தலைப் பாகையும், நீண்ட கறுப்பு அங்கி யும் வெள்ளை முழுக்கால்சட்டை யும் அணிந்திருக்க வேண்டுமெனற் சம்பிரதாயம் இருந்தது. வெண் ணிற ஆடையைத் தவிர வேறு எந்த வண்ண ஆடைகளையும் அணிய மறுத்த சர்.பிட்டி. தியாகராயரை ஆளுநர் வெலிங்டன் பிரவு, வெண் ணிற ஆடையணிந்தே வந்து வரவேற் கும்படி கேட்டுக்கொண்டார். வெள் ளையரின் தாசன் தானல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் வெள்ளுடை வேந்தர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் வள்ளலார்

வள்ளலாரைப் போன்று வெள்ளு டையையே அணிந்தார். நமது தலைவர் 5.10.1923இல் மருதூரில் பிறந்த வள்ளலார் சென்னை ஏழுகிணறுப் பகுதியில் சுமார் 35 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். வள்ளற் பெருமான் 25 வயது வாலிபராக இருந்தபோது அதே வட சென்னைப் பகுதியில் சர்.பிட்டி.தியாகராயர் 27.4.1852இல் பிறந்ததாலேயே, 1876ஆம் ஆண்டு ஏற்பட்ட தாது ஆண்டு பஞ்ச காலத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கள் பகுதியைச் சார்ந்த ஊர்மக்களுக்குப் பசி நீங்க உணவு கொடுத்து உதவியது சர்.பிட்டி.தியாகராயர் குடும்பம். (வள்ளலார் வடலூரில் தருமசாலை ஏற்படுத்தி மக்களுக்கு உணவு வழங்கினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது) இலவச மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் தன் சொந்த செலவில் செய்தார். சர்.தியாகராயர் வடலூரில் பாடசாலை, பத்திரிகை முதலியவை துவக்கி முதன் முதலில் திருக்குறளுக்கு வகுப்பு எடுத்தவர் வள்ளலார். தியாகராயரும் 3.12.1892இல் இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். தன் சொந்த செலவில் ஏற்படுத்தியதோடு, திராவிடன், ஆந்திர பிரகாசிக ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிக்கைள் துவக்கி அதற்காக தானே ஒரு லட்ச ரூபாயை அக்காலத்திலேயே செல விட்டார். இது தற்போது சர்.பிட்டி. தியாகராயர் கல்லூரியாக உயர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மீனவ குடும்பம்சார் எளிய பிள்ளைகளுக்குக் கல்வியறிவு ஊட்டி வருகிறது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராக வும், தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார். கண்பார்வையற்றோர் பள்ளி, பிச்சைகாரார் இல்லம், இலவச மருத் துவ வசதி ஆகியன ஏற்படுத்தினார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்த் தாரும் எவரும்
ஒருமையுள ராதல் வேண்டும் - வள்ளலார்.

இதனை உணர்வில் கொண்ட தியாகராயரின் நீதிக்கட்சி ஆட்சி, பஞ்சமர், பறையர் எனக் கூறாது, ஆதி திராவிடர் என்றே அழைக்கப் பட வேண்டும் என சட்டமன்றத்தில் சட்டமே இயற்றியது. வட சென்னை யில் இந்துப் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. மேலும் ஆந்திர பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக நம் தலைவரே காரணமா வார். இதே போன்று அஞ்சுமான் இ-முஃபித்-இ-அல்லா-இ இசுலாம் எனும் இசுலாமியக் கல்விக் கழகத்தின் உறுப்பினராக இருந்து இசுலாமியர் தம் கல்வி வளர்ச்சிக் காகவும் பாடுபட்டார். இதனாலேயே, டாக்டர் டி.எம்.நாயர் தமது ஸ்பர்டாங் சாலை பேருரையில் என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி.தியாகராய செட்டி யார் வள்ளலார் அவர்களே என விளித்து நன்றி கூறினார் போலும்!

தமிழ் ஓவியா said...


மது விலக்கு

மதுவருந்தும் பழக்கத்தால் நம் நாட்டு மக்கள் குறிப்பாக விவசாயி கள், நெசவாளர்கள், தொழிலாளர் கள் ஆகியோரின் குடும்பங்கள் அடையும் இன்னல்களைக் கண்ட தியாகராயர் மது ஒழிப்பிற்கு அருந் தொண்டாற்றினார். காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை ஆதரித் தார். 1922ஆம் ஆண்டு இவரது தலை மையில் கூடிய நகரமன்றக் கூட்டத் தில், நகரமன்றத்திற்குச் சொந்தமான மரங்களைக் எடுப்பதற்கு குத்தகைக்கு விடுவதில்லை என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டு செயல்படுத்தப்பட் டது.
சட்டமன்றத்திலும் மக்கள் மது அருந்துவதால் கிடைக்கும் கலால் வரியைச் சுட்டிக்காட்டி மதுவின் அடர்த்தியை படிப்படியாகக் குறைத்து வந்தால் மக்களின் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. மக்கள் தாங்களாகவே மதுப் பழக்கத் தினின்றும் விடுபடுவர் என்றார். இதன் காரணமாக, தியாகராயர் மறைந்த நாளாம் 28.4.1925 அன்று சென்னை உலகப் பற்றாளர் கழகம் (Cosmopolitan Club) இனிமேல் கழகத்தில் மது வகைகள் பயன்படுத் துவதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

தியாகச் செம்மல்

1916 நவம்பர் 20ஆம் நாளன்று வேப்பேரி எத்திராசுலு முதலியார் இல்லத்தில் பார்பனரல்லாத கூட்டம் கூடியது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதயமானது. இதன் கொள்கைகளை வெளியிட 1917 பிப்ரவரி 26இல் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடும், 1917 சூன் திங்களில் திராவிடன் என்ற தமிழ் நாளேடும், ஆந்திர பிரகாசிக என்ற தெலுகு நாளேடும் துவக்கப்பட்டன. நீதி (Justice) என்ற புகழ் பெற்ற ஏட்டின் பெயரே பிற்காலத்தில் நீதிக்கட்சி என்ற பெயர் பெறக் காரணமாயிற்று. இக்கட்சி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலும், 1923இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர் தலிலும் வென்றது. இக்கட்சியின் தலைவரான தியாகராயரை அன் றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு அமைச்சரவை அமைக்க அழைத் தார். இரு முறையும் தாம் முதல் அமைச்சர் ஆகாமல் தவிர்த்தார். முதலில் திவான் பகதூர் ஏ.சுப்ப ராயலு ரெட்டியாரையும், இரண் டாம் முறையாக பனகல் அசைரை யும் முதல்வராக்கி மகிழ்ந்தார். நமது தியாகராயராம் தியாகச் செம்மல்.

தற்காலத்தில் மேனாள் மேயர் திரு.ஸ்டாலின் அவர்கள் தியாகராய நகரில் பனகல் பார்க் எதிரில் தியாகராயர் கலையரங்கம் கட்டி நன்றி பாராட்டினர். மேனாள் முதல் வர் கலைஞர் அவர்கள் வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக் டர் நடேசனார் ஆகிய நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவர் களுக்கு மத்திய அரசின் சார்பாக கவுரவ அஞ்சல்வில்லைகள் வெளி யிட்டுப் போற்றியமை இன்று நினைவு கூரத்தக்கது. விரைவில் மணிமண் டபம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஓர் ஆன்மிகவாதியின் பலே மோசடி!



கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.

இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.

யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.

இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.

நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.

இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.

பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!

சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?

சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?

பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.

எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?

இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.

பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?

மோசடிக்குத் துணை போகிறதா?

சிந்திப்பீர்! 27-4-2013

தமிழ் ஓவியா said...

மறக்க முடியுமா?

1985 இதே நாளில் தான் (27.4.1985) வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த நாள் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றித் திரும்பிய நேரத்தில் வடசென் னையில் ஆர்.எஸ்.எஸ். கூலிகள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது கொலை முயற்சி தாக்குதலை மேற்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

மடிசார் மாமி!

மடிசார் மாமி என்று ஒரு திரைப்படம் தயாரிக் கப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும்; பார்ப்பனப் பெண்களின் உடையைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று தமிழ் நாடு பார்ப்பனர் சங்கம் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஏன் அய்யர் ஆத்து மாமிகள் எல்லாம் இப்பொ ழுது மடிசார் கட்டுவ தில்லையோ! சுடிதார் போட ஆரம்பித்து விட் டனரோ!
இன்னொன்று: மடிசார் கட்டுவது கேவலம் என்று பார்ப்பனர்களே நினைக்க ஆரம்பித்து விட்டனரோ!

தமிழ் ஓவியா said...


சபர்மதி, ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.

இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.

அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.

இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.

இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.

அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.

பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;

இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


இந்து மகாசபை


இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான் முடியும் என்பது ஒரு பழமொழி.

அப்பழமொழிக் கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அது போலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.

அவை களின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணா சிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.இதை மகாத்மா எப்படியா வது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவு டன், நமது பிராமணர்கள் புதுதந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் இந்து மகா சபை. அது இந்துக் களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோ டல்லாமல் இந்து முஸ்ஸீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்குச் செய்த சூழ்ச்சியாகும்.

தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ள வரை தேசம் உருப்படப் போவ தில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.

- குடிஅரசு துணைத் தலையங்கம் 09.05.1926

தமிழ் ஓவியா said...


காந்தியின் மகிமை


இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை

சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?

மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?

சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.

மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?

சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?

மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?

சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!

- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926

தமிழ் ஓவியா said...

செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்


- மின்சாரம்

பார்ப்பனர்கள் சந்திர மண்டலத் திற்குச் சென்றாலும் அவாளின் கலாச்சாரத்தைக் கால்கோள் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாரதியார் சங்கம் என்று கூறிப் பிள்ளையார் சுழி போடுவார்கள். அதன் மூடு திரையில் அவாள் சமாச்சாரங்கள் ஜாம் ஜாமென்று சலங்கை கட்டி ஆடத் தொடங்கி விடும்.

அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனர்களால் அமெரிக்காவின் செனட் சபையில் ரிக்வேதம் உபநிஷத், பகவத் கீதையிலிருந்து சில பாடல்களைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜன்சேட் என்னும் சமஸ்கிருதப் பண்டிதரும் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).

அமெரிக்காவில் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துளசி கப்பார்ட் என்ற இந்து மதப் பார்ப்பனப் பெண் நாடாளுமன்றத்தில் கீதையின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.

(பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள் -_ கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

ஒரு கால கட்டத்தில் ருசியாவிலும் இந்தக் கேடு கெட்டத்தனம் வாலை நுழைத்து, அதை ஒரு வழியாக்கி விட்டது.

இப்பொழுது என்னடா என்றால் அமெரிக்காவில் திருவையாறாம்! திருவையாறில் தொடங்கிய வியாதி இப்பொழுது அமெரிக்காவிலும் குடி யேறி விட்டது. தியாகராஜர் ஆரா தனை விழாவுக்குக் கொடியேற்றி விட்டார்கள். மார்ச்சு 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை பிர்மாண்டமாம்! சூத்திர ஏடான குமுதம் (24.4.2013 பக்கம் 102-_104) குதூகலிக்கிறது. சென்னையி லிருந்து நூறு கலைஞர்கள் இதற்காகப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். (அமெரிக்காவுக்கு நூறு பேர் செல்லுவது என்றால் இதற்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்)

தமிழ் ஓவியா said...

சுதா ரகுநாதன், திருச்சூர் ராமச் சந்திரன், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், கே. காயத்ரி எல்லாம் அவாள் பட்டியல்தான்.

தவில், நாதஸ்வரம் என்று தவிடு பொடிதான், 500 அமெரிக்கா வாழ் குழந்தைகள் தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஓகோவாம்!

36 வருடங்களுக்கு முன்பே சாதா ரணமாகத் தொடங்கியது இப்பொழுது இந்த அளவுக்கு உச்சத்திலாம்!

இதில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதர் நிருபமாராவ். இவரும் அவாள் ஆத்துப் பெண்தான்.

இந்தியாவின் வெளி நாட்டுச் செய லாளராக இருந்து அவர் பங்குக்கு இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னாலான கைங்கரியத்தைச் செய்தவர்! இல்லாவிட்டால் பதவி ஓய்வுக்குப் பிறகு தனியே அழைத்து அம்மை யாரைக் கவனித்து, உபசரித்து அனுப் புவாரா இலங்கை அதிபர் ராஜபக்சே?

வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்சிகளும் உண்டு - அதற்கும் அவாள் ஆத்துப் பெண்கள்தான் ஏற்றுமதி.

எங்கே போனாலும் தமிழ்க் குரல்தான், நம்ம சங்கீதம்தான், நம்ம பேச்சுத்தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வே துளியும் உண்டாகவில்லை.

அமெரிக்காவிலிருந்து செய்தி படங்கள் யோகா! (ஆகா எப்படி!) _ குமுதம் இவ்வாறு கூறுகிறது.

இதெல்லாம் உண்மைதானா? எங்கே போனாலும் தமிழ்க் குரல்தானா? நம்ம சங்கீதம் தானா?

இங்கே திருவையாற்றில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையிலேயே தமிழ் கிடையாது; - ஆம், மருந்துக்கும் தமிழ் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அங்கு எங்கு பார்த்தாலும் தமிழ் என்பது யாரை ஏமாற்ற? பெயருக்குத் தமிழ் என்ற நாமகர்ணம் அவ்வளவுதான்; பாடல்கள் எல்லாம் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள்தாம்.

திருவையாறு தியாகராஜர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி வினாயகனே! என்ற தமிழ்ப் பாடலை (இவ்வளவுக்கும் அது பக்திப் பரவசப் பாடல்தான்!) பாடியதற்காக சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்த பிறகு தானே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார் திருவாய்த் திறந்து தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார்.

அதனைக் கண்டித்து தீட்டா யிடுத்து! என்று தலைப்பிட்டு குடி அரசில் அப்பொழுதே (9.2.1945 பக்கம் 7) கட்டுரை தீட்டியவர்தான் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை விழாவில், முதல் அமைச் சராகக் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் (21.12.1989) செம்மங்குடி சீனி வாசய்யர், அக்கிரகாரத்து அம்மணி யாகவே ஆகிவிட்ட எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோரை அருகில் அமர வைத்தே நினை வூட்டினாரே (இவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது) உள்ளபடியே தமிழிசைமீது தீராத காதல் அமெரிக்கா வாழ் இந்தத் தமிழர்களுக்கு(?) இருந்திருக்குமேயா னால் இந்தத் தியாகராஜருக்கு முன்னோடியான _- காலத்தால் முந்தியவர்களுமான மும்மணிகளான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_-1600), அருணாசலக் கவிராயர் (1711-_1779) தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோருக்கு அல்லவா அமெரிக்காவில் விழா எடுத்திருப்பார்கள்!

பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத் துக்களை நம் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ!

இந்த நேரத்தில் இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உண்மையான தமிழிசை மும்மணிகளாகிய சீர்காழி முத்துத் தாண் டவர். அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரி முத்தாபிள்ளை ஆகியோரைச் சிறப்பாக நினைவு கூரும் வண்ணம் சீர்காழியிலேயே மணி மண்டபம் ஒன்றை ரூ.1.51 கோடி செலவில் கடந்த தி.மு.க. ஆட்சியிலே மானமிகு மாண்புமிகு முதல் அமைச் சர் கலைஞர் அவர்கள் உருவாக்கி, நிறைவு பெறும் கால கட்டத்தில் ஆட்சி போயிற்று. அக்கிரகார ஆட்சி அதனைத் திறப்பு விழா செய்யுமா என்பது கேள்விக் குறிதான்!

தமிழ் ஓவியா said...


தன்னைப் பற்றி பெரியார்


பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் (நெ.து. சுந்தரவடிவேலு) நூலில் 10ஆம் பக்கத்தில் இருப்பது:

எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்!

நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்?

நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பார்த்தனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்?

ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம்.

இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது?

விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கின்றோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கி விட்டோம்.

உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.

- என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன.

சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்து கொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர் அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர்.

இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப் புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாகக் குறிக்கலாம்.

கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொது நலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர் என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர்.

இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

தன்னுடைய கைப்பணத்தைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார்.

படித்த இளைஞரில் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர்.

- க. பழனிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


Pan Card என்பது...

Pan (பேன்) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number)
என்பது இந்திய வருமான வரி சட்டம் 1961இன் கீழ் வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டதாகும். இந்திய வரித்துறையின்கீழ் உள்ள Central Board for Direct Taxes (CBDT)-ன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இது தேசிய அடையாள எண்ணிற்கு சமமாக கருதப்படுகிறது. இதனை சிறந்த அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

வங்கிகளில் கணக்கு தொடங்குதல், வரி விதிக்கப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு Pan எண் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பது மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவையே. . Pan கார்டின் பிரதான நோக்கமாகும். தனித்த, தேசிய அளவிலான நிரந்தர ஒன்றாகும். குடியிருக்கும் முகவரி மாற்றத் தின் போதும் பாதிக்கப்படாத ஒன்றாகும். அதாவது மாநில அளவில் இருப்பிடத்தை மாற்றுபவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. . Pan ன் வடிவம் AAAAA9999A என்ற முறையில் அமையும்.

முதல் 5-ம் எழுத்துக்களாகவும், அடுத்த 4ம் எண்களாகவும் அடுத்துள்ள கடைசி ஒன்று எழுத்திலும் காணப்படும். ஒவ்வொரு உறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது.

C - Company P - Person H - HUF(Hindu Undivided Family) A - Association of Persons (AOP) F - Firm T - AOP (Trust) B - Body of Individuals (BOI) L - Local Authority J - Artificial Juridicial Person G - Government

Pan இன் 5ஆவது உள்ள உறுப்பு முதல் உறுப்பாக அமையும். நான்காவது எழுத்து தனி நபரின் பெயர் அதாவது Personal Pan Card எனில் P அல்லது நிறுவனத்தின் பெயர் Company/HUF/Film/AOP/BOI/Local Authority/Artifical Jurdical Person//Govt. இவற்றை பொறுத்து ‘’C, H, F, A,T, B,L, J, G” எனவும் அமையும். தற்போது வெளிவரும் களின் புகைப்படத்தின் வலது புறம் Pan Card வெளியிடப் படும். நாள் DOI-Date of Issue குறிப்பிடப்படுகிறது. Know your PAN என்ற மத்திய அரசின் புதிய ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பழைய மற்றும் புதிய பேன் எண்ணைப்பற்றி அறிந்து கொள்ளலாம். இதற்காக https://incometaxindiaefilling.gov.in/portal/know pan.do என்ற இணையதளத்தை பார்க்கலாம். வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஒவ்வொருவரும் Pan கார்டு வைத்துக் கொள்வது அவசியம். ஆடிட்டர்கள் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.