Search This Blog

24.4.13

புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -2

 
தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் - பல்வகைப்பட்ட நூல்களை.
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் - வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் - பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் - இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு - அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!

1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான பெண் ஏன் அடிமை ஆனாள்? பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் உரைத் தொகுப்பு நூலான தத்துவ விளக்கம் - இராமாயண பாத்திரங்கள் - இராமாயண குறிப்புகள், கடவுள், மதம் பற்றிய பல்வேறு ஆய்வுகள் ஒருபுறம். பெண் ஏன் அடிமையானாள்? மறுபுறம்!

இன்னொருபுறம் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களான அமெரிக்க இங்கர்சால், கருத்துரைத் தொகுப்புகள், பெர்ட்ராண்ட் ரசல், லெனின் கருத்துகள், லெனினும் மதமும் பெர்னாட்ஷாவின் உபதேசம், இன்னும் பலப்பல; அக்காலத் தில் அந்த ஆங்கில நூல்களை அனுமதி பெற்று தமிழில் மொழி பெயர்த்து மலிவு விலைக்கு, நாலணா, எட்டணா (அதா வது கால் ரூபாய், அரை ரூபாய்) விலை யில் வெளியிட்டுப் பரப்பினார்கள் என்பது எவராலும் நினைக்க முடியாதது அல்லவா?

தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் என்பது மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு தேவையான ஒன்று!

பல்வேறு தமிழ் மொழி அறிஞர்கள், பன்மொழிப் புலவர்கள் செய்யாததை - பெரியார் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகத்திற்கே செல்லாத படிப்பற்றவர் என்று கூறப்பட்ட தந்தை பெரியார் கொணர்ந்த எழுத்துப் புரட்சிதான் - இன்றைய கணினி புரட்சி யுகத்தில் மிகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக் கியமாக உதவக் கூடியதாகி உள்ளதே!

247 எழுத்துகளைச் சுருக்கி, தமிழை, ஆங்கிலம்போல் 26 எழுத்துகளாகக் குறுக்க இயலாவிட்டாலும், 32, 34-க்குள் நிறுத்தினால் தமிழ்மொழி எளிதில் உலகம் முழுவதும் பரவிடுமே என்று காட்டியதோடு, அதை, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது, தனது விடுதலை நாளேட்டில் குடிஅரசு ஏட்டில் 1935 முதலே பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலை நாளேட்டிற்கு லை என்பது - முந்தைய  ல என்ற யானைக் கொம்பு போன்று போடாமல், லை என்று எழுதலாம். கை என்பதுபோல என்று காட்டி, இதனால் எழுத்துகள் எண் ணிக்கை குறையும்; எளிதில் எழுதிப் படிக்க ஏதுவாகும் என்றார்.

புலவர்கள், பண்டிதர்கள் இதை எதிர்த் தார்கள்; ஆகா! பழைமையை மாற்றினால் மொழி - இலக்கணம் என்னாவது என்றார்கள்.
அப்படியா ஓலைச் சுவடியையா இப்போது நாம் பயன்படுத்துகின்றோம்? அச்சிட்ட காகிதத்தைத்தானே தேடுகி றோம் என்றார் பெரியார்!
அறிவு, வளர்ச்சியை நோக்கித்தான் செல்லவேண்டுமே தவிர, பழைமை என்பதற்காக தீவட்டியையும், அகல் விளக்கையும் இன்று பயன்படுத்திட முடியுமா? என்று பொறிதட்டக் கேள்வி போட்டு சிந்திக்க வைத்தார்கள்.
அவர் நடத்திய ஏடுகளில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் இடம்பெறுவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.

விளைவு, பெரியாரே வெற்றி கண்டார்! 1977 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக வந்தபொழுது, பெரியார் நூற் றாண்டு விழாவை அரசு ஓராண்டு முழு வதும் கொண்டாடிய விழாவாக அமைத்த போது, (அரசாணை 449 நாள்:19.10.1978) இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஆணையாகவே வெளியிட்டார்.

இதன் காரணமாக, சிங்கப்பூர் நாட் டின் அரசு, இந்தத் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தை ஏற்றுப் பின்பற்றி வருகிறது.

அதனையொட்டியே மலேசிய அரசும் இந்தத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வெற்றியோடு பின்பற்றி வருகிறது!

படிக்காத பெரியார் செய்த இந்தப் புரட்சிக்கே அவருக்கு நோபல் பரிசு போன்ற ஒன்றை வழங்கியிருக்க வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்கள் எந்தச் செயலையும் அதன் வேர்மூலம் என்ன வென்றே ஆய்வு செய்து மற்றவர்க ளோடு விவாதம் செய்வார்கள்.
கைவல்ய சாமியார் என்று அழைக் கப்பட்ட (உண்மைப் பெயர் பொன்னு சாமி) சுயசிந்தனையும், சீரிய ஆய்வாளருமான கைவல்யம் அவர்களை குடிஅரசு தனது படை வீர எழுத்துத் தளபதிகளில் முக்கியமாக வைத்தி ருந்தாரே!
சிந்தனைச் சிற்பி, ம.சிங்காரவேல ரின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள், அறிவியல் மனப்பான்மையைப் பரப்பு தல், மூட நம்பிக்கைகளைச் சாடுதல் பற்றிய கட்டுரைகளைப் பதிப்பித்த தோடு, அவற்றைச் சிறு வெளியீடு களாக வெளியிட்டுப் பரப்பி, புத்தகங் களை அறிவாயுதங்களாக ஆக்கி மகிழ்ந்த பகுத்தறிவுப் பாசறை பதிப் பாளர் புத்தகராக திகழ்ந்தார்களே!

இந்த வெளிச்சத்தை மறைத்துத் தான் இன்னும் பெரியார் அவர்களை சிலர் குறுகிய சிமிழுக்குள் அடைத்து மகிழ்கின்றனர்!

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

---------------------- கி.வீரமணி- அவர்கள்  எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பகுதி-”விடுதலை” 24-4-2013



45 comments:

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமம் 6 ஆம் நாள்! நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன


ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் கடைசிவரை அய்யாவிடம் புடம்போட்ட தங்கமாக ஒளிர்ந்தவர்- ஒளிர்கிறவர்!

டாக்டர் மா.நன்னன் மனந்திறந்து பாராட்டு


சென்னை, ஏப்.24- தந்தை பெரியார் அவர்களிடம் தொடக்கத்தில் நானிருந்தேன்; தாக்குப் பிடிக்க முடியவில்லை; கடைசிவரை தாக்குப் பிடித்துப் புடம் போட்ட தங்கமாக ஒளிர்ந்தவர் - ஒளிர்கிறவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் என்றார் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் டாக்டர் மா.நன்னன்.

உலக புத்தக நாளை முன்னிட்டு, சென்னை புத்தகச் சங்கமத்தில் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன், நக்கீரன் கோபால், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவும் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில், சென்னை பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி கடந்த 18.4.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 19 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

நேற்று (23.4.2013) உலக புத்தக நாளை முன்னிட்டு 15 விழுக்காடு கழிவு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, காலையிலிருந்தே மக்கள் அலை அலையாக, குடும் பம் குடும்பமாக வந்தவண்ணம் இருந்தனர். வரு கின்ற மக்களுக்கு எந்தவித சிரமம் ஏற்படாத வண் ணம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

கிரடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றைப் பயன் படுத்துவதற்கான வாய்ப்புகளும் மூன்று இடங்களில் செய்யப்பட்டிருந்தன.

திராவிடர் இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, பழ.நெடுமாறன் போன்ற முக்கிய பிரமுகர்களும், வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்களுமாக ஆர்வத் துடன் சென்னை புத்தகச் சங்கமத்தில் சங்கமித்தனர்.

மக்கள் வசதிக்காக சிற்றுண்டிச் சாலை, உணவகம் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கடல் பூதம் நாடகம்

கருத்தரங்கிற்கு முன், வேலு சரவணனின் கடல் பூதம் நாடகம் நடைபெற்றது. இது குழந்தைகளுக் கானது என்று சொல்லப்பட்டாலும், பெரியவர் களையும் கவரக் கூடியதாக இருந்தது. இதன் முக்கிய சிறப்பு பார்வையாளர்கள் அனைவரும் நடிகர்களாக மாற்றப்படுவதுதான். இதனால் நாடகம் தொடங்கி இறுதிவரையிலும் சுறுசுறுப்பாக நடந்து முடிந்தது.

நாடகத்தின் கரு, மீனவர் ஒருவர், மீன் பிடிக்கச் செல்லாமல் படிக்கப் போகிறேன் என்று ஆசைப் படு வதும், அவரின் தாயே அது கூடாது என்று தடுப்பது மான உரையாடல்கள் மற்றும் கடல் பூதம் ஒன்றை கற்பனையில் காட்டி - அது செய்வதாக கற்பிக்கப் பட்ட அனைத்தையும் செய்யச் சொல்லி செய்ய முடி யாமல் தவிப்பதை நகைச்சுவையாக சொல்லியிருப் பதுமாகும். இந்த நிகழ்ச்சியில், தமிழர் தலைவர், நக்கீரன் கோபால், ஸ்டாலின் குண சேகரன், பேரா சிரியர் மா.நன்னன், கவிஞர் கலி.பூங் குன்றன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


நேற்றைய நிகழ்ச்சியில் (23.4.2013) வேலு சரவணனின் குதூகலமூட்டும் குழந்தைகள் நாடகம் நடைபெற்றது.

உலகப்புத்தக நாளை முன்னிட்டு, நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வானொலியில் தந்தை பெரியார், ஆரியர் ஆட்சி, ஒற்றைப்பத்தி (கலி.பூங்குன்றன்) ஆகிய மூன்று புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட முறையே பெரியார் பெருந் தொண்டர் எம்.சோமசுந்தரம், மேனாள் நூலக ஆணையத்தலைவர் கயல் தினகரன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் திருமகள் இறையன் ஆகியோரும் தமிழர் தலைவரின் அரசியல் பயணம் என்ற புத்தகத்தை பேராசிரியர் மா.நன்னன் வெளியிட வழக்குரைஞர் அமர்சிங்கும் பெற்றுக்கொண்டனர். அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களான பேரா.மா.நன்னன், நக்கீரன் கோபால், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தும், இயக்க புத்தகங்கள், நினைவுப் பரிசு அளித்தும் சிறப்பித்தார்.

தொடங்கிற்று கருத்தரங்கம்

முன்னதாக கருத்தரங்கத்திற்கு வருகை தந்திருந் தவர்கள் அனைவரையும் ஆதாம் சாக்ரடீஸ் வரவேற் றார். அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற காவல்துறை இணை ஆணையாளர் ராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு நக்கீரன் இதழின் ஆசிரியர் தலைமையேற்றார். இதழாளர் கோவி லெனின் நிகழ்ச்சிக்கு இணைப்புரை வழங்கினார்.

நூலகங்கள் மீது இடி விழுந்தது

நக்கீரன் கோபால் தமது தலைமை உரையில், முதலில் காக்கா தலையில் பனம்பழமா? என்று, மதிப்பு மிக்க இந்த அரங்கத்தில், தான் தலைமையேற்பதா என்று தனது அடக்கத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் பதிப்பகங் கள் நல்ல நிலையில் செயல்பட்டன. பதிப்பித்த புத்தகங்கள் விற்பனை ஆயின என்பதற்காகச் சொல்ல வில்லை. பஞ்சாயத்துராஜ் முறையில் ஒவ்வொரு தலைப்பிலும் 12,000 பிரதிகள் பெறப்பட்டு, கிராம நூலகங்களுக்கெல்லாம் புத்தகங்கள் சென்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நூலகங்கள் மீது இடி விழுந்துவிட்டது. புத்தகங்கள் தேங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்த சென்னை புத்தகச் சங்கமம் சிறப்பானது. இதற்கான ஏற்பாட்டாளர்கள் அனை வருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

புத்தகங்களின் அருமை தெரியாத அரசு

மேலும் அவர் பதிப்பகத்திற்கு பப்பாசி - என்று ஒரு அமைப்பு உண்டு. இந்த அரசு வந்தவுடனேயே பஞ்சாயத்து ராஜ் மூலம் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தினார்கள். நாங்கள் பப்பாசி நிர்வாகிகளிடம் சென்று இதை கேட்கக் கூடாதா என்றால் அச்சப் படுகிறார்கள் என்று உள்ள நிலைமையை கூறிவிட்டு ஆனால் புத்தகங்கள் பெறப்பட்டது என்று ஆச் சரியத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து அதற்கு ச.சா... சி.சீ... செ.சோ... என்று அரிச்சுவடி படிப்பதைப் போல, தான் குறிப்பிட கூடிய நபரை குறிப்பால் உணர்த்தி, அந்த நபரின் பின்னால் இருக்கும் ஒருவர் 20 விழுக்காடு கேட்டதாகவும், நக்கீரன் சுயமரியாதையோடு மறுத்து விட்டதாகவும் கூறி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இந்த சென்னை புத்தகச் சங்கமம் மிகவும் சிறப்பானது. இதற்காக மீண்டுமொரு முறை நன்றி என்று கூறி தமதுரையை நிறைவு செய்து கொண்டார்.

திட்டமிடலும் செய்நேர்த்தியும்

அவரைத் தொடர்ந்து ஸ்டாலின் குணசேகரன் வீட்டுக்கொரு நூலகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தான் இதுபோன்ற புத்தக கண்காட்சியை ஈரோட்டில் நடத்தியதாகவும் ஆனால், முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சென்னை புத்தகச் சங்கமத்தின் நேர்த்தியைக் கண்டால் ஒவ்வொரு அங்குலமும் திட்டமிட்டிருந்தது தெரி கிறது. ஆகவே அந்த அர்ப்பணிப்புக்கு வாழ்த்து தெரி விக்கிறேன் என்று தொடக்கத்திலேயே பார்வை யாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.

நூலகம் இல்லாத ஊர்களில் குடியிருக்காதீர்கள்

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து பேசிய அவர் 2004 ஆம் ஆண்டில் இந்த இல்லம் தோறும் நூலகம் என்ற கருத்தோடு பிரச்சாரம் செய்ததாகக் குறிப்பிட்டார். அத்தோடு மும்முழக்கங்களில் ஒன்றாக நூலகம் இல்லாத ஊர்களில் குடியிருக்காதீர்கள் என்று முழங்கியதையும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா விடுதலை அடைந்தது தாமஸ் பெய்ன் என்ற ஆசிரியர் எழுதிய 47 பக்கம் உள்ள புத்தகத்தால்தான் என்ற தகவலைச் சொல்லி அந்த புத்தகத்தின் பெயர் “Common Sense” தமிழில் பகுத்தறிவு என்னும் இந்த புத்த கத்தின் ஆசிரியர் அமெரிக்கர் கூட அல்ல. இங்கிலாந் துக்காரர் என்றும் அந்த புத்தகத்தின் மய்யக்கருத்து முடியாட்சிக் கெதிரான குடியாட்சி என்று கூறிவிட்டு, அந்த புத்தகம் அமெரிக்காவில் கருத்துப் பேச்சுவார்த்தை உருவாக்கி விட்டது. காரணம் அது அறிவை அடிப்படையாக வைத்தது. சிந்தனையை அடிப்படையாக வைத்தது. என்று அந்த புத்தகம் ஏற்படுத்திய விளைவுகளையும் விவரித்தார். இப்படி வரிசையாக உலக அளவிலான புத்தகங்களை குறிப் பிட்டு புத்தகங்களின் வீச்சை தெளிவுப்படுத்தினார்.

Why I am an Atheist

தொடர்ந்து உலக அளவில் புத்தகங்களின் தாக் கத்தை குறிப்பிட்டுக் கொண்டே வந்தவர் இந்தியா விற்கு வந்தார். பகத்சிங் எழுதிய Why I am an Atheist என்ற புத்தகத்தை பற்றி குறிப்பிடும் போது அந்தப் புத்தகம் இந்திய அளவில் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்டது, தமிழில் தான் என்று குறிப் பிட்டதும் கைதட்டல் அள்ளியது. தொடர்ந்து அவர் அப்படி வெளியிட்டவர் தந்தை பெரியார்தான் என்று அழுத்தமாக கூறியதும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து அதன் தாக்கத்தையும் கூறி னார். மேலும் பேசிய அவர் கலிலியோ போன்ற அறிஞர்கள் கண்டுபிடித்த கோட்பாட்டை சொல்லு வதும் புத்தகங்கள்தான். 300 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி அவருக்கு துயரங்கள் அளித்தவர்களின் வழித் தோன்றல்கள் மன்னிப்பு கேட்டதைச் சொல்லுவதும் புத்தகங்கள் தான். ஆகவே இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு நூலகத்தை உருவாக்குங்கள் என்று முழங்கிவிட்டு அமர்ந்தார்.

தமிழ் ஓவியா said...

நன்னன் சொல்லின் மன்னன்

அவரைத் தொடர்ந்து எழுத்தும் பேச்சும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் பேரா.மா.நன்னன். அவர் பேசுகையில் புஸ்தகம் என்பது வட சொல், ஆகவே இங்குள்ள தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்த ஸ் என்ற எழுத்தை எடுத்துவிட்டு த் என்ற சொல்லைப் பயன்படுத்தி புத்தகம் என்ற சொல்லாக மாற்றுகின்றனராம் என்று தமிழறிஞர்களை ஒரு பிடி பிடித்தார், தொடர்ந்து நான் இப்படிப் பார்கிறேன் என்று விளக்க முற்பட்டு, புதுமை + அகம் = புத்தகம். அகத்தை தூய்மை செய் வது புத்தகம் மற்றவையெல்லாம் புற்றகம். அதாவது அகத்தினுள் புற்றை வளர்ப்பது என்று புத்தகம் - புற்றகம் சொல்லாராய்ச்சியில் இறங்கினார்.

மேலும் அவர் பேசுகையில் G.D. நாயுடுவின் நினைவு ஏற்பட்டு G.D.. நாயுடு கொளுத்த வேண்டியவை என்ற ஒரு நூல் நிலையமே வைத்திருந்தார் என்ற தகவலை புற்றகத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் G.D. நாயுடுவை நினைவு கூர்ந்து மீண்டும் தலைப்பிற்கு வந்தார்.

மனிதன் தான் மாறுகிறான்

நெடுநெல் வாடையில் சிலந்தி கூடு கட்டியதாக பாடல் இருக்கிறது. இன்றும் சிலந்திகள் கூடுதான் கட்டுகின்றன. மற்ற உயிரினங்கள் அதே பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன்தான் மாறிக் கொண்டே வருகின்றான் என்று கூறிவிட்டு, அதற்கு, ரிலே ரேஸ் - என்ற விளையாட்டுடன் சேர்த்து, எங்க தாத்தா விட்ட இடத்தை எங்கப்பா தொடர்ந்தார். சிறிது முன்னேறினார். எங்க அப்பா விட்ட இடத்தை நான் தொடர்கிறேன். எனக்குப் பிறகு, எனது மகன் - மகள்கள் தொடர்வார்கள் என்று உவமை உவமேயத்தை சொல்லாமல் சொன்னார். தொடர்ந்து பேசிய அவர், அறிவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புத்தகம்தான் என்றார்.

தமிழ் ஓவியா said...

திருக்குறளுக்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை

உலக அளவில் சேக்ஸ்பியரைப் பற்றி, மில்டனைப் பற்றி, பைரனைய் பற்றி பேசுகிறோமோ? அந்தளவுக்கு திருக்குறளை அறிந்திருக்கிறோமா? என்று அடுக்கடுக் கான கேள்விகள் கேட்டு, வேறு எந்த இலக்கியத் தையும்விட திருக்குறள் பெருமை மிக்கது. அதற்கு ஈடு இணை வேறெதுவுமில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தலைப்புக்குள் வந்தார். எழுத்து பிந்தையதுதான். ஆனால் அதன் பலன் விஞ்சியது என்று தொடர்ந்த அவர், பேச்சுதான் முற்றியது. பேச்சு என்பது எழுத்துக்கு உதவக் கூடியது. பேச்சு எழுத்துக்கு பயன்படக்கூடியது. சிந்தனை பலன் தரக்கூடியது. இந்த மூன்றும் சேர்ந்துதான் மனிதனின் திறமையின் வெளிப்பாடு என்று கூறிவிட்டு, முத்தாய்ப்பாக, அப்படி பேச்சு, எழுத்து இரண்டிலும் புரட்சியை விதைத்தது திராவிடர் இயக்கங்களே என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.

புடம் போட்ட தங்கம் தமிழர் தலைவர்

திராவிடர் இயக்கங்கள் பற்றிய பேச்சு வந்தவுடனே பேச்சும் எழுத்தும் - தலைப்பிலிருந்து விலகி, தந்தை பெரியாருடனான தன் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். தான், சிறுவயதில் அய்யாவுடனேயே சென்று விட வேண்டும் என்று எண்ணி வந்ததாகவும் அய்யாவிடம் இரண்டு மூன்று முறை தப்பு செய்து சங்கடப்பட்டதையும், பிறகு தான் வந்து விட்டதையும் நினைவு கூர்ந்து விட்டு, சட்டென்று திரும்பி மேடை யில் அமர்ந்திருந்த தமிழர் தலைவரை சுட்டிக்காட்டி இவர் ஒருவர்தான் அய்யாவின் அச்சு அசலாக இருந்து வந்திருக்கிறார். அய்யாவால் புடம் போட்ட தங்கமாக ஒளிர்ந்தவர் என்று கூறியதும், அரங்கத்தினர் மெய் சிலிர்த்தபடியே அவர்கூறியதை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக கையொலி செய்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், ஆகவே உண்மை யிலேயே எதிரிகள் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைக் கண்டு கவலைப்படுகின்றனர். தமிழர் தலைவர் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அவரிடம் இன் றும் பெற வேண்டியது நமக்கு ஏராளம் இருக்கிறது. அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டியது கடமையாகும் என்று கூறி தமது சிறப்புரையை நிறைவு செய்தார். பரிசு மழை தொடர்கிறது

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து நேற்று (23.4.2013) தேர்வான தொல்காப்பியன் சிறப்பு பரிசாக மைக்ரோ மேக்ஸ் திறன் கைப்பேசியைப் பெற்றார். தொடர்ந்து ஆ.நிர்மலா, பி.கார்த்திகேயன், கணேஷ்குமார், கலைச்செல்வி, சந்திரமவுலி ஆகியோர் முறையே ரூ.1000, ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.200 மதிப்புள்ள புத்தகங்களை பரிசாக பெற்றனர்.

அதைத் தொடர்ந்து 23ஆம் தேதியின் குலுக்கல் நடைபெற்றது. சிறப்பு பரிசினை பேரா. மா. நன்னன் தெரிவு செய்தார். பரிசு பெற்றதாக சென்னையை சேர்ந்த செந்தில்குமாரின் பெயர் அறிவிக்கப்பட்டது. நக்கீரன் கோபால் அவர்கள் செந்தில்குமாரை முதல் பரிசுக்காராக தெரிவு செய்து கொடுத்தார். தொடர்ந்து சென்னை சூளையைச் சேர்ந்த ஆர்.எஸ்.சிறீதர், இரண்டாம் பரிசுக்கு தேர்வானார். அதைத் தொ டர்ந்து ஜி.பார்த்தசாரதி, கே.சதீஸ்குமார் ஆகியோர் முறையே ரூ.500, ரூ.400 மதிப்புள்ள புத்தகங்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தலா ரூ.300 மதிப்புள்ள புத்தகங்கள் பெற்றவரான கவுசிக் அலி, அடைக்கலம் ஆகியோர் உயிர்மை பதிப்பகத்தின் ஆண்டு சந்தாக்களை பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பிரின்சு என்னாரெசு பெரியார் ஒழுங்கு செய்து கொடுத்தார்.

இறுதியில் ஓரியண்ட் ஃபேன் - மண்டல மேலாளர் ராய் மோகன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். உலக புத்தக நாளையொட்டி, புத்தகச் சங்கமம் இரவு 9.15 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படியே இயங்கியது. மக்களும்ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சிகள் முழுவதையும் வலைக் காட்சி தோழர்கள் நேரலை செய்தனர்.

நிகழ்ச்சியில் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், சென்னை மண்டலத் தலைவர் ஞானசேகரன், வெற்றிச்செல்வி, பட்டுக்கோட்டை சதாசிவம், புலவர் வெற்றியழகன், கோ.கருணாநிதி, இறைவி, கருணாகரன், கலையரசன், அருணகிரி, சென்னியப்பன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒளிவண்ணன், ஆலோசகர் புகழேந்தி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குவிகிறது புத்தகங்கள் புத்தகக் கொடைஞர்களால் சென்னை புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் நாளில் கவுரா பதிப்பகத்தின் உரிமையாளர் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழர் தலைவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.

சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில், விடுப்பட் டிருக்கும் புத்தக கொடைஞர் அறிவிப்பையொட்டி எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்கள், புத்தகங்களை கொடையாக அளிக்க முன் வந்திருக்கின்றனர். நேற்று (23.4.2013) சவுரா பதிப்பகத்தின் உரிமையாளர் மானமிகு இராஜசேகரன் ரூ.19,250 மதிப்புள்ள புத்தகங்களை தமிழர் தலைவர் முன்னிலையில் கொடையளித்தார். அதே போல நர்மதா பதிப்பகம் சார்பில் ரூ.23,000 மதிப்புள்ள புத்தகங்களை பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளிக்கு நன்கொடையாக அளித்து மகிழ்ந்தார்.

சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரராகவன் - வசந்தா இணையர்கள் இருவரும் நேரில் வந்து, புத்தகங்களை கொடையளித்திருக்கிறார்கள். இவர்கள், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்களின் வாசகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த புருசோத்தமன் 160-க்கும் மேற்பட்ட புத்தகங்களை புத்தக வங்கிக்கு அளித்திருக்கிறார். இவர் இந்த அறிவிப்பை தினகரனில் பார்த்ததாக கூறினார். மேலும் பலர் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.

அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?

போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?

பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?

மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!

இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!

போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.

ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!

சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?

அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!

இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?

கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!

தமிழ் ஓவியா said...


புத்தக வங்கித் திட்டம்


கவுரா பதிப்பகத்தின் உரிமையாளர் ராஜசேகரன் அவர்கள் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் புத்தக வங்கித் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.உடன் தமிழர் தலைவர் கி.வீரமணி, நக்கீரன் கோபால், ஸ்டாலின் குணசேகரன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன் ஆகியோர் உள்ளனர் (சென்னை புத்தகச் சங்கமம், 23.4.2013).

உலக புத்தக நாளையொட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், நேஷனல் புக் டிரஸ்ட்டும் இணைந்து சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 18 - 27) நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பாராட்டரங்கம், கருத்தரங்கம், குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசுப்போட்டிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் புத்தக வங்கித் திட்டம் என்ற புதுமையான திட்டம் ஒன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாங்கிப் பயன் படுத்திய புத்தகங்களை, கிராமப்புற நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கிட இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்கொடை வழங்கும் அன்பர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் சிறப்புக் கழிவு கூப்பன்கள், சான்றி தழ்கள் வழங்கிட தனி அரங்கமும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பல்துறை சார்ந்த 70 பதிப்பகங்கள் அரங்கம் அமைத்துள்ள, சிறப்பான சென்னை புத்தகச் சங்கமத்தைப் பார்வையிடும் அனைவருக் கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. அரங்கில் வாங்கும் புத்தகங்களுக்கு 10ரூ சிறப்புக் கழிவும் வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்த ஒரே வழி புத்தக வாசிப்பு ஒன்றே! சமூக அக்கறை உள்ளோர்களே நீங்களும் இதைப்போல் தாங்கள் பயன்படுத்திய நூல்களை கொடுத்து புத்தகக் கொடைஞர் ஆகுங்கள்! சமுதாயம் மேன்மையுற உறுதுணையாக இருங்கள்!

சென்னைப் புத்தகச் சங்கத்திலும் நூல்கள் குவிந்து வருகின்றன.

மேலும் கீழ்க்கண்ட இடங்களில் நூல்களை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - தொடர்புக்கு: 9443592167

மதுரை:

தமிழக எண்ணெய்ப் பலகாரக் கடை, திருப்பரங்குன்றம், மெயின்ரோடு, மதுரை - தொடர்புக்கு: 0452-4377877

திருநெல்வேலி: பெரியார் கணினி ஆய்வகம், திலக் நகர், திருநெல்வேலி - தொடர்புக்கு: திரு.ஆறுமுகம் - 9171796729

கோயம்புத்தூர்:

கல்வியகம், 30, திருவேங்கடம் தெரு, வடகோவை - தொடர்புக்கு: 9894365302

(பீளமேடு விஜயராகவன் அவர்கள் 17 நூல்களை அளித்து சிறப்பான தொடக்கத்தைத் தந்துள்ளார் - நன்றி).

புதுச்சேரி:

அருணா கிளினிக்கல் லேப், 175, லால்பகதூர் சாஸ்திரி தெரு (ரோஸ்மா திருமண நிலையத்துக்கும் சின்னக் கடைக்கும் இடையில் உள்ளது).

தொடர்புக்கு:

திரு சிவ.வீரமணி - 9894091011, திரு.வி.அழகரசர் - 9894099998, 0413-2228244

தமிழ் ஓவியா said...


விலங்கு வழிபாடு


விலங்குகளைக் காப்பதற்கான மத நோக்கங்கள்:-

பல விலங்குகள் மதசம்பந்தமான நோக்கங்களுக் காகவும் பாதுகாக்கப் படுகின்றன. சிறப்பாக எகிப்தில் மதத் தினரால் பாதுகாக்கப்பட்ட விலங் குகள் மிகப் பலவாக இருந்தன. கிட்ட தட்ட நூறு விலங்கினங்கள் அங்கே தெய்வமாக வழிபடப்பட்டன. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய அடைய, எகிப்திலும், பிறநாடு களிலும் மத சம்பந்தமான தடைகள் வலிவிழந் தன. ஒரு காலத்தில் எகிப்தில் முதலை வழிபாடு இருந்தது.

பயங்கர ஊருண்ணியான முதலைகள் நைல் ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்கின்றன என்று எண்ணி மனிதர்கள் அவற்றை வணங்கி வந்தார்கள். ஆனால் இந்தப் பேராற்றின் மேற்பகுதிகளில் வெண்பனி மளமளவென்று உருகுவதே நைல் நதியின் வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்பது தெரிந்ததும் முதலையை கடவுளாக வழிபடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள்.

எகிப்தில் அப்பிஸ் என்னும் எருது இருந்தது. அது கடவுளாகப் போற்றிப் பேணப்பட்டது. அது தெய்வம் என்று பூசாரிகள் சொன்னார்கள். எகிப்தை வென்று அடிமைப்படுத்திய பாரசீக மன்னன் கட்பீஸ் இது தெய்வம் அல்ல, மாட்டிறைச்சி என்று ஒரு முறை கூவி, கட்டாரியால் அந்த எருதைக் குத்தி னான். அவனுடைய மெய்க்காவ லர்கள் அப்பிஸின் பூசாரிகள் மக்களை ஏமாற்றியதற்காக மிலாறுகளால் நய்யப்புடைத்தார்கள். அந்தநாள் முதல், அதாவது கி.மு. 525ஆம் ஆண்டு முதல் இந்த எருது வழிபாடு நின்று விட்டது.

இவ்வாறு விஞ்ஞானத்தின் செல்வாக்கினால் எகிப்தில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் விலங்குப் பாதுகாப்புக்கான மதநோக்கங்கள் படிப்படியாக வழக் கொழிந்து போயின. அந்த நிகழ் முறை நம் காலத்திலும் தொடர்கிறது.

விலங்கியல் (பக்கம் 392 -393) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ வெளியீடு
தொகுப்பு: மதி, செங்கோட்டை

தமிழ் ஓவியா said...


கிருபானந்தவாரியார் ஒப்பம்


தேக்கி வைக்கப் பட்டுள்ள மின்சாரத்தை செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியைக் கடத்து வது செப்பினால் முடியும் என உணர்ந்து, இறை வன் உருவங்களைச் செப்பினால் சிலை வடித் தார்கள்.

- கிருபானந்தவாரியார்
சொற்பொழிவிலிருந்து அ.சம்பத்
ஆதாரம்: தாய் வார இதழ், 28.8.83

இவை உண்மையென்றால் கல்லால் வடிக்கப் பட்டுள்ள கடவுளர் சிலைகள் (சர்வ சக்தி படைத்த) அருள் ஒளியைக் கடத்துவதில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் அவற்றை வணங்குகிறார்கள்?

தகவல்: ஆர்.வி.குப்புசாமி, இரங்கம்புதூர்

தமிழ் ஓவியா said...


கொள்ளைக்காரன் திருமங்கை ஆழ்வார்


நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலிநாடர் களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரை குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்.

(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியிட்டுள்ள தஞ்சை வாணன் கோவை - பக்கம் 7 - வரிகள் 26-30)

பார்ப்பனீய மதத் தலைவர்களுள் ஒருவர் பிறமதத்தைச் சார்ந்த - புத்தமதத்தைச் சார்ந்த - இடத்திலிருந்து கொள்ளையடித்த செய்தியையும், பிறமதங்களை அழிப்பதற்கு கையாண்ட முறையையும் இச்செய்தி தெரிவிக்கிறது. இவரைக் குற்றங் கூறுநர் இலர் என்று கூறப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.

தகவல்: சு.ஆறுமுகம், வேலூர்-6 (வ.ஆ)

தமிழ் ஓவியா said...


கடவுள் காப்பாற்ற மாட்டார்!


சோமநாதபுரத்தில் இருந்த மிகப் பெரிய கோயிலில் பல நூற்றாண்டு களாகப் பக்தர்களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத் தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்களாம். ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகமது கோயிலை இடித்து பாழாக்கி னான், பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்றும் நம்பியிருந்த 50 ஆயிரம் பேர் அவனால் கொல்லப்பட்டனர்.

(நேரு எழுதிய உலக வரலாறு)

தமிழ் ஓவியா said...


இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம்.

இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


அன்று ஆச்சாரியார் சொன்னார்


நம் நாட்டில் மற்றவர்கள் சண்டை யைக் காட்டிலும் பக்தர்கள் சண் டையே அதிகம். என் தெய்வம் பெரி தா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டை தான் அதிகம்.

சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் சி.ஆர். - 15.4.1953

தமிழ் ஓவியா said...


செல்வா


தந்தை செல்வா என்றால் அது ஈழத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் செல்வ நாயகம் அவர்களைத் தான் குறிக்கும். அவரின் மறைவு நாள் இந்நாள் (1977).

தொண்டு செய்யும் தூய வர்களும், சாதனை செய்யும் செம்மல்களும் மறைவதில்லை - பொருத்தமான சந்தர்ப் பங்களில் எல்லாம் மக்கள் மனதில் மலர்ச்சியுற்று மணம் வீசுவர். அந்த வகையில் சீலமிக்க செல்வா அவர்கள் அடிக்கடி நினைக்கப்படும் நிலாவொளியே! அகிம்சை யில் அவர் காந்தியாருக்கு சளைத்தவரல்லர். ஈழத் தமி ழர்களின் சுயமரியாதையுடன் கூடிய சுய நிர்ணயத் தன் மைக்காக அறவழிக் கொடி களை இலங்கை வீதிகளிலே ஏந்திச் சென்றவர் தான்.

1949 டிசம்பர் 18இல் கொழும்பில் நடைபெற்ற தமிழரசு கழக மாநாட்டின் தலைமை உரையில் செல்வா சிந்திய கருத்தென்ன?

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழியினங்களி டையே ஏற்படும் முரண் பாடுகள் போருக்குக் காரண மாக இருந்தன. இப்போர் களில் வல்லரசுகள்கூட இழுக்கப்பட்டுள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்ப தற்கு இரு வழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியினத்திற் கும் அரசுரிமை உடைய தனித்தனி நாடுகளை அமைக்க பரந்த நிலப் பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி. ஒவ்வொரு மொழியினத் திற்கும் தன்னாட்சி மாநிலங் களை அமைத்து மத்தியில் கூட்டாட்சி அரசை உடைய ஒரு நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி.

நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம்; தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம். இரண்டு மாநிலங் களுக்கும் பொதுவான மத்திய அரசு இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு; சிறிய தான தமிழ்ப் பேசும் தேசிய இனம் அழிந்து போகாமலும் பெரியதான சிங்களத் தேசிய இனத்தால் விழுங்கப்படா மலும் இருப்பதற்குரிய மிகக் குறைந்த ஏற்பாடு இதுதான் என்று செல்வா 64 ஆண்டு களுக்குமுன் சொன்ன ஒவ் வொரு சொல்லும் செஞ் சொல் அல்லவா?

இன்றைக்குக்கூட அரசி யல் தீர்வு என்று சொல்லப் படுவது இதனைத் தழுவியது தானே!

சுயாட்சி மாநிலம் என்ற கோரிக்கை தனி நாடு என்று மாற்றப்படுவதற்கு யார் காரணம்? சிங்களவர்களும், அவர்களின் ஆணவ மிக்க பாசிச ஆட்சியும்தானே?

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து இல்லை; பவுத்தம் சார்ந்த சிங்களர் ஒருவர்தான் அதிபராக வர முடியும் என்ப தில் ஆரம்பித்து ஒவ்வொன் றிலும் தமிழர்களை அழிக்கும் நச்சுக் குப்பிகளை அடுக்கிக் கொண்டே போனதாலும், உரிமைக்காகக் குரல் கொடுத்த தமிழீழ மக்களை அரசு துணை கொண்டு வேட்டையாடியதாலும், தன்மானமிக்க தமிழினத்தின் பெண்களை மாமிசப் பிண்ட மாகக் கருதிக் கடித்துக் குதறியதாலும்தானே இளை ஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக் குத் தள்ளப்பட்டார்கள்.

செல்வா நினைவு நாளில் அவரை நினைப்போம்! அவர் நினைப்பிற்கு வடிவம் கொடுப் போம், வாழ்க செல்வா!

கூடுதல் தகவல்: (Tail-Piece) பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் வரலாறு (திராவிடர் கழக வெளியீடு) நூலைப் படியுங்கள். - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


வளருமா?

செய்தி: அட்சய திரிதியையில் எந்தப் பொருளை வாங்கினாலும் அது பல மடங்காகப் பெருகும்.

சிந்தனை: அப்படியா? ஒரு மொடா குடிகாரன் பாட்டில்களை அன்று வாங்கினால்...?

தமிழ் ஓவியா said...


தானாக வீழ்ந்துவிடும்



பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தீண்டாமை

செய்தி: அரசியலில் தீண் டாமை அதிகரித்து வருகிறது.
- குஜராத் முதல்வர் நரேந்திரமோடி

சிந்தனை: தீண்டாமை க்ஷேமகரமானது எனும் இந்துத் துவாவின் தத்துப் புத்திரர்கள் தீண்டாமைப்பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


2012 தேர்தலில் பாடம் கற்கவில்லையா மாயாவதி?


கான்ஷிராம் அவர்களால் தொடங்கப்பட்டது பகுஜன் சமாஜ் கட்சி. பகுஜன் என்றால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்பவர்கள்தான் - இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (பகுஜன்). இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பது தான் அதன் அடிப்படையாகும்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இது இந்திய அரசியலுக்கே ஒட்டு மொத்தமாகத் தேவைப்படக் கூடிய ஜனநாயகக் கோட்பாடாகும்.

கான்ஷிராம் அவர்கள் அந்த அடிப்படையிலேயே தேர்தல் களத்தைச் சந்தித்து, வெற்றி பெற்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதி அவர்களின் கரத்தில் ஆட்சியையும் கொண்டு வந்து சேர்த்தார்.

அந்தக் கோட்பாட்டுத் தளத்தில் உறுதியாக நின்று, லக்னோவிலிருந்து அந்தச் சுழல் விளக்கை உயர்த்திப் பிடித்திருந்தால் மூன்றாவது அணி இங்கு முளைக்கவில்லையே என்ற ஏக்கத்துக்கு நல்ல மருந்தும் கிடைத்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் மதவாத இந்துத்துவா கட்சியான பிஜேபி கூட காணாமல் போயிருக்கும்.

அவசரப்பட்ட காரணத்தாலும், அடிப்படையைத் தொலைத்த தன்மையாலும், உத்திரப்பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களை பிடித்துத் தம் வலையில் போட்டால் எளிதாக உத்தரப்பிரதேச அதிகார நாற்காலி நகர்ந்து தன் பக்கம் வந்து சேரும் என்று கணக்குப் போட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற மதிப்பு மிக்க பொறுப்பை பார்ப்பனரான சதிஸ் சந்திர மிஸ்ரா என்பவருக்குத் தாரை வார்த்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பார்ப்பனர்களுக்குத் தூக்கிக் கொடுத்தார் அதில் 51 இடங்களில் வெற்றி பெற்றனர். முக்கிய துறைகளில் எல்லாம் அமைச்சர்களாக அவர்களை நியமித்தார்.

2009 மக்களவைத் தேர்தலிலும் பார்ப்பனர்களுக்கு 20 இடங்கள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர் களுக்கோ 17 இடங்களை அளித்தார். எங்கே கிளம்பி, எங்கே பயணிக்கிறார் என்பதை எண்ணினால் வெட்கமும், வேதனையும் இரட்டிப்புத் தாக்குதலைத் தொடுக்கின்றன.

இதே சூத்திரம் (Formula) 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் கை கொடுக்கவில்லையே! கண்ணிய மாகக் கருத்தூன்றி கணித்தாரா மாயாவதி?

2007இல் ஆட்சியைக் கொடுத்த உ.பி. மக்கள் 2012இல் ஏன் பறித்தனர் என்று சிந்திப்பதுதானே - சிறப்பானது சீலமானது.

206 இடங்களைப் பெற்றவர் இப்பொழுது வெறும் 80-க்குள் முடங்கிக் கிடப்பது ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

2014இல் நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாயாவதி. 36 இடங்களில் 18 இடங்கள் பார்ப்பனர் களுக்காம்.

பதவி என்று வந்து விட்டால் பத்தும் பறக்கும் என்பது இதுதானோ! கான்ஷிராம் இதற்காகத்தானா இந்த மாயாவதியை முன்னிறுத்தினார்?

பகுஜன் சமாஜ் எனும் கான்ஷிராம் குரலை மாற்றி, திரிபு செய்து சர்வஜன் என்று புதுப்பெயர் சூட்டிக் கொண்டார்.

பார்ப்பனர்களையும், சத்திரியர்களையும், உயர் ஜாதியினரையும் செருப்பால் அடியுங்கள் என்று சொல்லும் அளவுக்குத் தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவி என்று காட்டிக் கொண்டவர் - இன்றைக்குப் பார்ப்பனர்களின் கைப்பாவை ஆகி விட்டாரே!

பார்ப்பனீயம்தான் எவ்வளவு வலிமை உடையது தந்திரமானது;

செருப்பாலடிப்பேன் என்று சொன்ன மாயாவதியையே தடம் புரளச் செய்யும் அளவுக்குச் சாமர்த்தியம் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது கொள்கைக்காக மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அண்ணல் அம்பேத்கர் எங்கே?

பதவிக்காக அடிப்படைக் கொள்கைகளை ஆழப் புதைத்து அதன்மேல் நின்று பதவிக்காகப் பரிதாபப்பட்டு நிற்கும் - அவலம் எங்கே?

நாமே விமர்சனம் செய்யும் - அளவுக்கு மாயாவதி ஆகிவிட்டாரே! என்ன செய்ய!

மாயாவதி தவறான உதாரணம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களும் உணர்ந்திடத் தவறக் கூடாது எச்சரிக்கை!
25-4-2013

தமிழ் ஓவியா said...


பிரச்சாரக் கதைகள்


திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மானமற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

தமிழ் ஓவியா said...


வெள்ளுடைவேந்தர்


நவம்பர் புரட்சி என்று பொது வுடைமை உலகம் போற்றிப் புகழும்; பார்ப்பன அல்லாதா ருக்கும் ஒரு நவம்பர் புரட்சி உண்டு. அதுதான் நவம்பர் 20 (1916) அந்த நாளில்தான் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் ஒர் உணர்வு பிறந்து வடிவமும் மலர்ந்துள்ளது.

வழக்குரைஞர் டி. எத்தி ராஜூலு முதலியார் இல்லத்தில் சென்னை வேப்பேரியில் பார்ப் பனர் அல்லாத பெரு மக்கள் பலரும் கூடி இதனைப் பெற் றெடுத்தார்கள்.

திவான் பகதூர் பிட்டி தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) திவான்பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிபிள்ளை, ராவ் பகதூர் ஜி. நாராயணசாமி செட்டி, இராவ் பகதூர் ஓ. தணி காசலம் செட்டி, இராவ்பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிபிள்ளை, வேங்கட்ட ரெட்டி நாயுடு, இராவ்பகதூர் ஏ.பி. பாத்ரோ, டி. எதிராஜு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஜே.என். இராமநாதன், கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமதுதம்பி மரைக் காயர், திருமதி அலமேலு மங்கைத் தாயாரம்மாள், ஆற் காடு இராமசாமி முதலியார், திவான்பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜூலு நாயுடு, மதுரை வக்கீல் எல்.கே. துளசி ராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார் (வகுப்புரிமைத்தந்தை) மூப்பில் நாடார் ஆக 26 பெரு மக்கள் முதன் முதலாகக் கூடிப் பார்ப் பனர் அல்லாதார் உரிமைக்கான கால்கோள் கொடியை உயர்த் தினர்.

அப்பெரு மக்களுக்கு இந்நாளில் நமது அகங் கனிந்த வணக்கத்தையும், மனம் நெகிழ்ந்த நன்றி உணர்ச்சி மலர்களையும் சூட்டுவோம்!

அன்று அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசியல் கட்சிதான் தென்னிந்திய நலவு ரிமைச் சங்கம் ஆகும். (South Indian Liberal Federation).

அவ்வமைப்பின் செயலாள ரான பிட்டி தியாகராஜ செட்டியார் கையொப்பமிட்டு வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (20.12.1916) (20.12.1916) (Non Brahmin Manifesto) திராவிடர் இனத் தின் உரிமைச் சாசனமாகும் (Magnacarta).

அதன் விழுமிய நோக் கங்கள் காலப் பெட்டகமாகும்.

1) தென்னிந்தியாவில் பார்ப் பனர் அல்லாத அனைத்து மக்களின் கல்வி, சமுதாய, பொருளாதார அரசியல் தார்மீக ஆக்கப் பூர்வ மேம்பாட்டிற்குப் பாடுபடுவது.

2) பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாத்தல், மேம் படுத்துதல் ஆகிய நோக்கங் களுடன் பொதுப் பிரச்சினை களை விவாதித்துத் தென் னிந்திய மக்களின் கருத்து களையும், நலன்களையும் உள் ளது உள்ளபடியே அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது.

3) பொதுப் பிரச்சனைகள் குறித்து ஆரோக்கியமான ஜனநாயகக் கருத்துக்களை பொதுக் கூட்டங்கள் மூலமும், பிரசுரங்கள் விநியோகப்பதன் மூலமும். இதர வழிகளாலும் பரப்பி, அதன் மூலம் பொது மக்களின் கருத்தை உருவாக்கு வதும், வகைப்படுத்துவதுமாகும்.

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் உயர்வுக்கு ஒரு துவக்கத்தைக் கொடுத்த முறை யில் பிட்டி தியாகராயரைக் குறியீடாகக் கொண்டு அப்பெரு மக்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக!

அதற்கான விதை விதைத்த வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இந்நாள் (1852).

- மயிலாடன் 27-4-2013

தமிழ் ஓவியா said...

சர்.பிட்டி தியாகராயரின் மக்கள் தொண்டு

- டாக்டர் கவிஞர் மகாபாண்டியன் பி.எச்.டி.

(மாநில தலைவர், சர்.பிட்டி தியாராயர் பேரவை)

அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு துறை களில் தமிழகம் கண்ட பல்வேறு அறிஞர்களுள் தலையாய அரசியல் ஞானியாக - தென்னாடு கண்ட திராவிடச் சூரியனாகத் திகழ்ந்தவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் ஆவார்கள். சென்னை கொருக்குப் பேட்டையில் 27.4.1852இல் தெலுகு தேவாங்க சமூகத்தில் பிட்டி என்ற வீட்டுப் பெயர் கொண்ட குடும்பத் தில் பிறந்தார். மிகப்பெரும் செல்வந்தராய் பிறந்த சர்.பிட்டி தியாகராயர் தன் குலத்திலேயே 1876இல் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

அக்காலத்தில் குதிரைகள் பூட் டிய சாரட் வண்டியில் பயணம் செய்தவர். சென்னைக்கு மோட் டார் வாகனம் வந்ததும், அதை வாங்கிப் பயன்படுத்தியவர். அவர் தம் வாழ்நாளில் மக்களுக் காக வாரி வழங்கிய தொகை தற்காலத்து கோடி பல கோடிக்குச் சமமாகும்.

சென்னை மாநகராட்சி உறுப் பினராக அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார், 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப் படி மாநகராட்சிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர் தான். சென்னை நகர மன்றத் தலைவராக 1919 முதல் 1923 வரை இருந்து மகத்தான பணிகள் செய்தார். இவர்காலத்தில் ட்ராம் (Tram) வட சென்னையின் பல பகுதி களுக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து பாதைகள் போடப்பட் டன.

தென்னிந்திய வர்த்தக சபையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகி வர்த்தக வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார்.

வெள்ளுடைவேந்தர்

1921 ஜனவரி 12ஆம் நாள் (12.1.1921) சென்னை மாகாணத்து முதலாவது சட்டசபைத் துவக்க விழாவிற்கு கன்னாட் பிரபு சென்னை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னை நக ராட்சி தீர்மானித்தது. அக்காலத் தில் பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கிய தலைவர்களை வரவேற்க தலைப் பாகையும், நீண்ட கறுப்பு அங்கி யும் வெள்ளை முழுக்கால்சட்டை யும் அணிந்திருக்க வேண்டுமெனற் சம்பிரதாயம் இருந்தது. வெண் ணிற ஆடையைத் தவிர வேறு எந்த வண்ண ஆடைகளையும் அணிய மறுத்த சர்.பிட்டி. தியாகராயரை ஆளுநர் வெலிங்டன் பிரவு, வெண் ணிற ஆடையணிந்தே வந்து வரவேற் கும்படி கேட்டுக்கொண்டார். வெள் ளையரின் தாசன் தானல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் வெள்ளுடை வேந்தர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் வள்ளலார்

வள்ளலாரைப் போன்று வெள்ளு டையையே அணிந்தார். நமது தலைவர் 5.10.1923இல் மருதூரில் பிறந்த வள்ளலார் சென்னை ஏழுகிணறுப் பகுதியில் சுமார் 35 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். வள்ளற் பெருமான் 25 வயது வாலிபராக இருந்தபோது அதே வட சென்னைப் பகுதியில் சர்.பிட்டி.தியாகராயர் 27.4.1852இல் பிறந்ததாலேயே, 1876ஆம் ஆண்டு ஏற்பட்ட தாது ஆண்டு பஞ்ச காலத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கள் பகுதியைச் சார்ந்த ஊர்மக்களுக்குப் பசி நீங்க உணவு கொடுத்து உதவியது சர்.பிட்டி.தியாகராயர் குடும்பம். (வள்ளலார் வடலூரில் தருமசாலை ஏற்படுத்தி மக்களுக்கு உணவு வழங்கினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது) இலவச மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் தன் சொந்த செலவில் செய்தார். சர்.தியாகராயர் வடலூரில் பாடசாலை, பத்திரிகை முதலியவை துவக்கி முதன் முதலில் திருக்குறளுக்கு வகுப்பு எடுத்தவர் வள்ளலார். தியாகராயரும் 3.12.1892இல் இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். தன் சொந்த செலவில் ஏற்படுத்தியதோடு, திராவிடன், ஆந்திர பிரகாசிக ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிக்கைள் துவக்கி அதற்காக தானே ஒரு லட்ச ரூபாயை அக்காலத்திலேயே செல விட்டார். இது தற்போது சர்.பிட்டி. தியாகராயர் கல்லூரியாக உயர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மீனவ குடும்பம்சார் எளிய பிள்ளைகளுக்குக் கல்வியறிவு ஊட்டி வருகிறது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராக வும், தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார். கண்பார்வையற்றோர் பள்ளி, பிச்சைகாரார் இல்லம், இலவச மருத் துவ வசதி ஆகியன ஏற்படுத்தினார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்த் தாரும் எவரும்
ஒருமையுள ராதல் வேண்டும் - வள்ளலார்.

இதனை உணர்வில் கொண்ட தியாகராயரின் நீதிக்கட்சி ஆட்சி, பஞ்சமர், பறையர் எனக் கூறாது, ஆதி திராவிடர் என்றே அழைக்கப் பட வேண்டும் என சட்டமன்றத்தில் சட்டமே இயற்றியது. வட சென்னை யில் இந்துப் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. மேலும் ஆந்திர பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக நம் தலைவரே காரணமா வார். இதே போன்று அஞ்சுமான் இ-முஃபித்-இ-அல்லா-இ இசுலாம் எனும் இசுலாமியக் கல்விக் கழகத்தின் உறுப்பினராக இருந்து இசுலாமியர் தம் கல்வி வளர்ச்சிக் காகவும் பாடுபட்டார். இதனாலேயே, டாக்டர் டி.எம்.நாயர் தமது ஸ்பர்டாங் சாலை பேருரையில் என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி.தியாகராய செட்டி யார் வள்ளலார் அவர்களே என விளித்து நன்றி கூறினார் போலும்!

தமிழ் ஓவியா said...

மது விலக்கு

மதுவருந்தும் பழக்கத்தால் நம் நாட்டு மக்கள் குறிப்பாக விவசாயி கள், நெசவாளர்கள், தொழிலாளர் கள் ஆகியோரின் குடும்பங்கள் அடையும் இன்னல்களைக் கண்ட தியாகராயர் மது ஒழிப்பிற்கு அருந் தொண்டாற்றினார். காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை ஆதரித் தார். 1922ஆம் ஆண்டு இவரது தலை மையில் கூடிய நகரமன்றக் கூட்டத் தில், நகரமன்றத்திற்குச் சொந்தமான மரங்களைக் எடுப்பதற்கு குத்தகைக்கு விடுவதில்லை என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டு செயல்படுத்தப்பட் டது.
சட்டமன்றத்திலும் மக்கள் மது அருந்துவதால் கிடைக்கும் கலால் வரியைச் சுட்டிக்காட்டி மதுவின் அடர்த்தியை படிப்படியாகக் குறைத்து வந்தால் மக்களின் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. மக்கள் தாங்களாகவே மதுப் பழக்கத் தினின்றும் விடுபடுவர் என்றார். இதன் காரணமாக, தியாகராயர் மறைந்த நாளாம் 28.4.1925 அன்று சென்னை உலகப் பற்றாளர் கழகம் (Cosmopolitan Club) இனிமேல் கழகத்தில் மது வகைகள் பயன்படுத் துவதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

தியாகச் செம்மல்

1916 நவம்பர் 20ஆம் நாளன்று வேப்பேரி எத்திராசுலு முதலியார் இல்லத்தில் பார்பனரல்லாத கூட்டம் கூடியது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதயமானது. இதன் கொள்கைகளை வெளியிட 1917 பிப்ரவரி 26இல் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடும், 1917 சூன் திங்களில் திராவிடன் என்ற தமிழ் நாளேடும், ஆந்திர பிரகாசிக என்ற தெலுகு நாளேடும் துவக்கப்பட்டன. நீதி (Justice) என்ற புகழ் பெற்ற ஏட்டின் பெயரே பிற்காலத்தில் நீதிக்கட்சி என்ற பெயர் பெறக் காரணமாயிற்று. இக்கட்சி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலும், 1923இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர் தலிலும் வென்றது. இக்கட்சியின் தலைவரான தியாகராயரை அன் றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு அமைச்சரவை அமைக்க அழைத் தார். இரு முறையும் தாம் முதல் அமைச்சர் ஆகாமல் தவிர்த்தார். முதலில் திவான் பகதூர் ஏ.சுப்ப ராயலு ரெட்டியாரையும், இரண் டாம் முறையாக பனகல் அசைரை யும் முதல்வராக்கி மகிழ்ந்தார். நமது தியாகராயராம் தியாகச் செம்மல்.

தற்காலத்தில் மேனாள் மேயர் திரு.ஸ்டாலின் அவர்கள் தியாகராய நகரில் பனகல் பார்க் எதிரில் தியாகராயர் கலையரங்கம் கட்டி நன்றி பாராட்டினர். மேனாள் முதல் வர் கலைஞர் அவர்கள் வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக் டர் நடேசனார் ஆகிய நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவர் களுக்கு மத்திய அரசின் சார்பாக கவுரவ அஞ்சல்வில்லைகள் வெளி யிட்டுப் போற்றியமை இன்று நினைவு கூரத்தக்கது. விரைவில் மணிமண் டபம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஓர் ஆன்மிகவாதியின் பலே மோசடி!


கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.

இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.

யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.

இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.

நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.

இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.

பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!

சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?

சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?

பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.

எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?

இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.

பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?

மோசடிக்குத் துணை போகிறதா?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...

மறக்க முடியுமா?

1985 இதே நாளில் தான் (27.4.1985) வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த நாள் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றித் திரும்பிய நேரத்தில் வடசென் னையில் ஆர்.எஸ்.எஸ். கூலிகள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது கொலை முயற்சி தாக்குதலை மேற்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

மடிசார் மாமி!

மடிசார் மாமி என்று ஒரு திரைப்படம் தயாரிக் கப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும்; பார்ப்பனப் பெண்களின் உடையைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று தமிழ் நாடு பார்ப்பனர் சங்கம் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஏன் அய்யர் ஆத்து மாமிகள் எல்லாம் இப்பொ ழுது மடிசார் கட்டுவ தில்லையோ! சுடிதார் போட ஆரம்பித்து விட் டனரோ!
இன்னொன்று: மடிசார் கட்டுவது கேவலம் என்று பார்ப்பனர்களே நினைக்க ஆரம்பித்து விட்டனரோ!

தமிழ் ஓவியா said...


சபர்மதி, ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.

இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.

அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.

இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.

இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.

அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.

பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;

இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


இந்து மகாசபை


இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான் முடியும் என்பது ஒரு பழமொழி.

அப்பழமொழிக் கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அது போலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.

அவை களின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணா சிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.இதை மகாத்மா எப்படியா வது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவு டன், நமது பிராமணர்கள் புதுதந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் இந்து மகா சபை. அது இந்துக் களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோ டல்லாமல் இந்து முஸ்ஸீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்குச் செய்த சூழ்ச்சியாகும்.

தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ள வரை தேசம் உருப்படப் போவ தில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.

- குடிஅரசு துணைத் தலையங்கம் 09.05.1926

தமிழ் ஓவியா said...


காந்தியின் மகிமை


இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை

சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?

மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?

சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.

மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?

சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?

மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?

சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!

- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்

புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29. (1891) இந்நாளில் ஈழத் தமிழர் நிலை குறித்து அப்பொழுதே நேரு பிரதமராக இருந்த போதே நிலைமை என்ன?

இதோ புரட்சிக் கவிஞர் பாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்

இலங்கை அரசினால் எய்தும் இன்னலை

ஆதரித்தது நேருவின் ஆட்சி

மலையகத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்

நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி!

அங்குள்ள தமிழர்கள் தொல்லை அடைந்திடில்

ஆம் ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி

ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி!

என்று பாடினாரே புரட்சிக் கவிஞர்! இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையில் நீதிக் கட்சி அக்கறை காட்டியுள்ளது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாறு. இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது (விடுதலை 11.8.1939 பக்கம் 3)

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த இயக்கத்துக்குள்ள தொடர்பையும் அக்கறையையும் விமர்சிக்க யாருக்கும் யோக்கியதை போதாது.

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்

புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29. (1891) இந்நாளில் ஈழத் தமிழர் நிலை குறித்து அப்பொழுதே நேரு பிரதமராக இருந்த போதே நிலைமை என்ன?

இதோ புரட்சிக் கவிஞர் பாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்

இலங்கை அரசினால் எய்தும் இன்னலை

ஆதரித்தது நேருவின் ஆட்சி

மலையகத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்

நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி!

அங்குள்ள தமிழர்கள் தொல்லை அடைந்திடில்

ஆம் ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி

ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி!

என்று பாடினாரே புரட்சிக் கவிஞர்! இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையில் நீதிக் கட்சி அக்கறை காட்டியுள்ளது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாறு. இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது (விடுதலை 11.8.1939 பக்கம் 3)

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த இயக்கத்துக்குள்ள தொடர்பையும் அக்கறையையும் விமர்சிக்க யாருக்கும் யோக்கியதை போதாது.

தமிழ் ஓவியா said...

செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்


- மின்சாரம்

பார்ப்பனர்கள் சந்திர மண்டலத் திற்குச் சென்றாலும் அவாளின் கலாச்சாரத்தைக் கால்கோள் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாரதியார் சங்கம் என்று கூறிப் பிள்ளையார் சுழி போடுவார்கள். அதன் மூடு திரையில் அவாள் சமாச்சாரங்கள் ஜாம் ஜாமென்று சலங்கை கட்டி ஆடத் தொடங்கி விடும்.

அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனர்களால் அமெரிக்காவின் செனட் சபையில் ரிக்வேதம் உபநிஷத், பகவத் கீதையிலிருந்து சில பாடல்களைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜன்சேட் என்னும் சமஸ்கிருதப் பண்டிதரும் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).

அமெரிக்காவில் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துளசி கப்பார்ட் என்ற இந்து மதப் பார்ப்பனப் பெண் நாடாளுமன்றத்தில் கீதையின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.

(பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள் -_ கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

ஒரு கால கட்டத்தில் ருசியாவிலும் இந்தக் கேடு கெட்டத்தனம் வாலை நுழைத்து, அதை ஒரு வழியாக்கி விட்டது.

இப்பொழுது என்னடா என்றால் அமெரிக்காவில் திருவையாறாம்! திருவையாறில் தொடங்கிய வியாதி இப்பொழுது அமெரிக்காவிலும் குடி யேறி விட்டது. தியாகராஜர் ஆரா தனை விழாவுக்குக் கொடியேற்றி விட்டார்கள். மார்ச்சு 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை பிர்மாண்டமாம்! சூத்திர ஏடான குமுதம் (24.4.2013 பக்கம் 102-_104) குதூகலிக்கிறது. சென்னையி லிருந்து நூறு கலைஞர்கள் இதற்காகப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். (அமெரிக்காவுக்கு நூறு பேர் செல்லுவது என்றால் இதற்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்)

சுதா ரகுநாதன், திருச்சூர் ராமச் சந்திரன், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், கே. காயத்ரி எல்லாம் அவாள் பட்டியல்தான்.

தவில், நாதஸ்வரம் என்று தவிடு பொடிதான், 500 அமெரிக்கா வாழ் குழந்தைகள் தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஓகோவாம்!

36 வருடங்களுக்கு முன்பே சாதா ரணமாகத் தொடங்கியது இப்பொழுது இந்த அளவுக்கு உச்சத்திலாம்!

இதில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதர் நிருபமாராவ். இவரும் அவாள் ஆத்துப் பெண்தான்.

இந்தியாவின் வெளி நாட்டுச் செய லாளராக இருந்து அவர் பங்குக்கு இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னாலான கைங்கரியத்தைச் செய்தவர்! இல்லாவிட்டால் பதவி ஓய்வுக்குப் பிறகு தனியே அழைத்து அம்மை யாரைக் கவனித்து, உபசரித்து அனுப் புவாரா இலங்கை அதிபர் ராஜபக்சே?

வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்சிகளும் உண்டு - அதற்கும் அவாள் ஆத்துப் பெண்கள்தான் ஏற்றுமதி.

தமிழ் ஓவியா said...


எங்கே போனாலும் தமிழ்க் குரல்தான், நம்ம சங்கீதம்தான், நம்ம பேச்சுத்தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வே துளியும் உண்டாகவில்லை.

அமெரிக்காவிலிருந்து செய்தி படங்கள் யோகா! (ஆகா எப்படி!) _ குமுதம் இவ்வாறு கூறுகிறது.

இதெல்லாம் உண்மைதானா? எங்கே போனாலும் தமிழ்க் குரல்தானா? நம்ம சங்கீதம் தானா?

இங்கே திருவையாற்றில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையிலேயே தமிழ் கிடையாது; - ஆம், மருந்துக்கும் தமிழ் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அங்கு எங்கு பார்த்தாலும் தமிழ் என்பது யாரை ஏமாற்ற? பெயருக்குத் தமிழ் என்ற நாமகர்ணம் அவ்வளவுதான்; பாடல்கள் எல்லாம் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள்தாம்.

திருவையாறு தியாகராஜர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி வினாயகனே! என்ற தமிழ்ப் பாடலை (இவ்வளவுக்கும் அது பக்திப் பரவசப் பாடல்தான்!) பாடியதற்காக சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்த பிறகு தானே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார் திருவாய்த் திறந்து தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார்.

அதனைக் கண்டித்து தீட்டா யிடுத்து! என்று தலைப்பிட்டு குடி அரசில் அப்பொழுதே (9.2.1945 பக்கம் 7) கட்டுரை தீட்டியவர்தான் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை விழாவில், முதல் அமைச் சராகக் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் (21.12.1989) செம்மங்குடி சீனி வாசய்யர், அக்கிரகாரத்து அம்மணி யாகவே ஆகிவிட்ட எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோரை அருகில் அமர வைத்தே நினை வூட்டினாரே (இவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது) உள்ளபடியே தமிழிசைமீது தீராத காதல் அமெரிக்கா வாழ் இந்தத் தமிழர்களுக்கு(?) இருந்திருக்குமேயா னால் இந்தத் தியாகராஜருக்கு முன்னோடியான _- காலத்தால் முந்தியவர்களுமான மும்மணிகளான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_-1600), அருணாசலக் கவிராயர் (1711-_1779) தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோருக்கு அல்லவா அமெரிக்காவில் விழா எடுத்திருப்பார்கள்!

பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத் துக்களை நம் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ!

இந்த நேரத்தில் இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உண்மையான தமிழிசை மும்மணிகளாகிய சீர்காழி முத்துத் தாண் டவர். அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரி முத்தாபிள்ளை ஆகியோரைச் சிறப்பாக நினைவு கூரும் வண்ணம் சீர்காழியிலேயே மணி மண்டபம் ஒன்றை ரூ.1.51 கோடி செலவில் கடந்த தி.மு.க. ஆட்சியிலே மானமிகு மாண்புமிகு முதல் அமைச் சர் கலைஞர் அவர்கள் உருவாக்கி, நிறைவு பெறும் கால கட்டத்தில் ஆட்சி போயிற்று. அக்கிரகார ஆட்சி அதனைத் திறப்பு விழா செய்யுமா என்பது கேள்விக் குறிதான்!

தமிழ் ஓவியா said...


தன்னைப் பற்றி பெரியார்


பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் (நெ.து. சுந்தரவடிவேலு) நூலில் 10ஆம் பக்கத்தில் இருப்பது:

எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்!

நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்?

நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பார்த்தனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்?

ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம்.

இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது?

விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கின்றோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கி விட்டோம்.

உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.

- என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன.

சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்து கொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர் அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர்.

இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப் புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாகக் குறிக்கலாம்.

கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொது நலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர் என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர்.

இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

தன்னுடைய கைப்பணத்தைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார்.

படித்த இளைஞரில் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர்.

- க. பழனிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


Pan Card என்பது...

Pan (பேன்) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number)
என்பது இந்திய வருமான வரி சட்டம் 1961இன் கீழ் வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டதாகும். இந்திய வரித்துறையின்கீழ் உள்ள Central Board for Direct Taxes (CBDT)-ன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இது தேசிய அடையாள எண்ணிற்கு சமமாக கருதப்படுகிறது. இதனை சிறந்த அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

வங்கிகளில் கணக்கு தொடங்குதல், வரி விதிக்கப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு Pan எண் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பது மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவையே. . Pan கார்டின் பிரதான நோக்கமாகும். தனித்த, தேசிய அளவிலான நிரந்தர ஒன்றாகும். குடியிருக்கும் முகவரி மாற்றத் தின் போதும் பாதிக்கப்படாத ஒன்றாகும். அதாவது மாநில அளவில் இருப்பிடத்தை மாற்றுபவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. . Pan ன் வடிவம் AAAAA9999A என்ற முறையில் அமையும்.

முதல் 5-ம் எழுத்துக்களாகவும், அடுத்த 4ம் எண்களாகவும் அடுத்துள்ள கடைசி ஒன்று எழுத்திலும் காணப்படும். ஒவ்வொரு உறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது.

C - Company P - Person H - HUF(Hindu Undivided Family) A - Association of Persons (AOP) F - Firm T - AOP (Trust) B - Body of Individuals (BOI) L - Local Authority J - Artificial Juridicial Person G - Government

Pan இன் 5ஆவது உள்ள உறுப்பு முதல் உறுப்பாக அமையும். நான்காவது எழுத்து தனி நபரின் பெயர் அதாவது Personal Pan Card எனில் P அல்லது நிறுவனத்தின் பெயர் Company/HUF/Film/AOP/BOI/Local Authority/Artifical Jurdical Person//Govt. இவற்றை பொறுத்து ‘’C, H, F, A,T, B,L, J, G” எனவும் அமையும். தற்போது வெளிவரும் களின் புகைப்படத்தின் வலது புறம் Pan Card வெளியிடப் படும். நாள் DOI-Date of Issue குறிப்பிடப்படுகிறது. Know your PAN என்ற மத்திய அரசின் புதிய ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பழைய மற்றும் புதிய பேன் எண்ணைப்பற்றி அறிந்து கொள்ளலாம். இதற்காக https://incometaxindiaefilling.gov.in/portal/know pan.do என்ற இணையதளத்தை பார்க்கலாம். வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஒவ்வொருவரும் Pan கார்டு வைத்துக் கொள்வது அவசியம். ஆடிட்டர்கள் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

தமிழ் ஓவியா said...


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?

இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும் தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.

தந்தை பெரியாரின் கோட்பாடு

ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள்!

வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.

இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.

இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.

ஏணிப்படி ஜாதிமுறை

வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது! என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?

ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.

தமிழ் ஓவியா said...


இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?

இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?

தலைவர்கள் என்றால் யார்?

தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?

பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?

அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா? ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.

தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.

முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!

ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!

இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
28.4.2013

தமிழ் ஓவியா said...


சமாதி


புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசாயி மஹோத் சவம் எனும் தலைப்பில் தினமலர் (25.4.2013 பக்கம் 3) ஆறு பத்தி தலைப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது.

சத்யசாயிபாபாவின் இரண்டாம் ஆண்டு மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சத்ய சாயி மகாசமாதி அமைந்துள்ள, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை மற்றும் மஹோத்சவம் சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்கள் நடை பெற்ற விழாவில் ஏராளமான பண்டிதர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு பாபாவின் அருளாசி பெற்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பாபா செத்துப் போனாலும் அவரின் சமாதி ஆசீர்வாதம் செய்கிறதாம். அவர் ஆசீர்வாதத்துக்கு அவ்வளவு சக்தியிருந்தால் சாய்பாபா ஏன் ஒரு மாத காலம் நோய்த் துன்பத்தில் படாத பாடுபட்டார்? (அதன்மீது நமக்கு அனுதாபம் உண்டு!)

எவ்வளவுத் தீவிரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன! மிகப் பெரிய மருத்துவ நிபுணர்கள் எல்லாம் மண் டையைக் கசக்கியும் (கோடிக் கணக்கில் செலவு செய்தும்) நவீன மருத்துவ வசதிகளைக் கையாண்டும் கடைசியில் பயனில்லையே!

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்க வில்லை என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்லு வார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. சாயிபாபா குளியல் அறை யில் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் நடமாடினார். புட்டபர்த்தியில் அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓடிப் போய் அறையைத் தாழிட் டுக் கொண்டதால் உயிர் தப்பினார். இவை எல்லாம் நம் சொந்த சரக்குகள் அல்ல! அப் பொழுதே ஏடுகளில் சாங்கோ பாங்கமாக வெளி வந்தவை தான். பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் நேரிடையாகவே சாயிபாபாவைச் சந்தித்து சாயி பாபாவின் மாயா ஜாலத்தை அவருக்கு எதிரிலேயே செய்து காட்டி அசத்தவில்லையா? (பி.சி. சர்க்கார் பேட்டி (இம்பிரிஸ்ட் ஜூன் 1983).

இவற்றிற்கு மேலும் சாயி பாபாவிடம் மனிதனுக்கு மேலாக தெய்வ சக்தி ததும்பி வழிந்தது என்று சொல்ல வருவார்களே யானால் சொல்லுகிறவர்கள் அசல் ஏமாற்றுக்காரர்கள், அவற்றை நம்புபவர்கள் அசல் ஏமாளிகள் - மடையர்கள் என்ப தல்லாமல் வேறு என்னவாம்?

பாபா மறைந்த நிலையில் அங்கு சமாதி கட்டி அதற்கு அற்புதங்களை உண்டாக்கி மறுபடியும் பக்தி வியாபாரம் கிளம்பி விடும் என்று புட்ட பர்த்திக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகப் படை எழுதியது. (உண்மை 15.1.2011) அதுதான் இப்பொழுது நடக்கிறது.

சமாதி என்று சொன்ன வுடன் நேரில் பார்த்துச் சொன்ன தந்தை பெரியாரின் ருசிய நாடகக் கதைதான் நினைவிற்கு வருகிறது.

பாதிரியார் ஒருவர் தன் மகனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று வெளி யூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கழுதை நடக்க முடியாமல் இடையில் செத்து விட்டது. மகன் என்ன செய் தான்? அந்தக் கழுதையை அதே இடத்தில் புதைத்துவிட்டு மகான் அடக்கமாகி விட்டார் என்று கிளப்பி விட்டான். பக்தர் கள் பணத்தைக் குவித்தனர். பெரிய பணக்காரன் ஆகி விட்டான். இதைக் கேள்வியுற்ற தந்தை பாதிரியார் அங்கு வரு கிறார். மகன் நடந்ததைச் சொன்னான்.

மகன் அப்பாவைப் பார்த்துக் கேட்டான் நீங்கள் பணம் சம் பாதித்தது எப்படி? அப்பா பாதிரி யார் சொன்னார் புன்னகையோடு செத்துப் போன குட்டிக் கழுதையின் அம்மாதான் என் றாரே பார்க்கலாம் சமாதியின் லட்சணம் இது தான்!

- மயிலாடன் 28-4-2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்லதல்ல! கலைஞர் பேட்டி


சென்னை, ஏப். 28 - தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதன் காரணமாக துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்ல அறிகுறியல்ல என்று தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (27.4.2013) செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது தெரிவித்தார்.

கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- மரக்காணத்தில் நேற்றைய தினம் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? கலைஞர் :- அதைப்பற்றித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ் நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனை யிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன்வர வேண்டும். கட்சித் தலைவர்களும் தங்கள் கடமை யை மறவாமல் பிரச்சினையை அக்கறையோடு அலசி, அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

செய்தியாளர் :- மாமல்லபுரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று கூறி யிருக்கிறார். ஜாதிகளை யெல்லாம் அடையாளப் படுத்திப் பேசியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் எனக்கும்.

செய்தியாளர் :- நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.அய். விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.அய். இயக்குநரே உச்ச நீதிமன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- தமிழகச் சட்ட சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை யெல்லாம் வெளி யேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்க வில்லையே?

கலைஞர் :- உங்கள் முடிவுக்கே விட்டு விடு கிறேன். -இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர்மானம்


சென்னை, ஏப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (27.4.2013) சென்னை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவுக்கு வாகனங்களில் வந்த பாமகவினர் புதுவையை அடுத்து வழிநெடுகிலும் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஜாதி கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனை வதை அனுமதிக்கக் கூடாது.

உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.

உற்சாகம் பொங்க வாரீர்!

நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).

உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!

சங்கடமில்லை - சபலமில்லை!

நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.

சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,

இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!

குக்கல்கள் குரைக்கட்டும்!

குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!

அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!

எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க, இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!

95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்

குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!

காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!

வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!

இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!

அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!

உலகம் வியக்க வேண்டும்!!

இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!

ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!

கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!

வாருங்கள், தோழர்களே வாருங்கள்!

அன்போடு அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா

தொண்டன் தோழன்



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை, 29.4.2013

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.

குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.

இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே - அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.

இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவுப் பெரிய கொடுமை! சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 29-4-2013

தமிழ் ஓவியா said...


இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!


- மின்சாரம் -

உனக்குமா ஓர் இயக்கம்? அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
- உனக்குமா ஓர் இயக்கம்?
என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த பொன்னாள் இந்நாள் (1891).

இனக்குறையை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாம் திராவிடர் கழகம் நாட்டில் இருக்கையில், ஏன் உனக்கு இன்னொரு கட்சி என்ற வினாவை எழுப்பியுள்ளார் நம் புரட்சிக் கவிஞர்.

உண்மைதானே, இந்த இனத்துக் குள்ள குறை என்ன? இன்றும் சாஸ் திரப்படியும், சட்டப்படியும் நாம் சூத்திரர் கள்தானே - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் தானே!

இதனைச் சுட்டிக்காட்டி எம்மின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தித் தன்மானத் தீயை மூட்டும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எது?

இந்த இழிவை நீக்க இராமாயணத் தில் தீப்பரவட்டும் என்று எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனை எரித்த தீரர்கள் கொண்ட கோட்டம் திராவிடர் கழகம்தானே!
ஜாதியைப் பாதுகாக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை பட்டப் பகலில் பகிரங்கமாக எரித்து, அதன் சாம்பலைப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆற்றல் - சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு காலத் தண்டனை என்று இதற்காகவே சட்டம் கொண்டு வந்தபோதும்கூட அச்சம் இல்லை - அச்சம் இல்லை என்று கூறி பத்தாயிரக் கணக்கில் சட்டத்தை எரித்து மூன் றாண்டுகள் வரை கடும் தண்டனை யைச் சிரித்த முகத்தோடு ஏற்றுச் சிறைக் கோட்டம் ஏகிய இலட்சிய வீரர்களை கொண்ட இவ்வியக்கம் அல்லாமல் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர். எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நம் இனத்திற்கு? ஜாதித் தீயை மூட்டும் பிற்போக்குச் சக்திகள் தலை தூக்கப் பார்க்கின்றன! சவால்களைச் சந்திக்க வேண்டியது நாம்தானே!

30 கல் தொலைவில் உள்ள நமது ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறனரே!

தமிழின மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டு இருக்கிறதே!

அந்த இயக்கத்தின் இளைஞர் சேனை ராஜபாளையத்தில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது வரும் மே 4ஆம் நாள்.

சமூகநீதித் துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் - இன்னும் இருக்கிறது.

நூற்றண்டுக்கு மேலாக நமது கனவிலே இருந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் - கைக்கு எட்டி வந்த நேரத்திலே அதனைத் தட்டிப் பறிக்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

காவிரி நீர்ப்பிரச்சினையிலும் இன்னும் நாம் கையேந்தும் நிலைதான்!

முல்லைப் பெரியாறு பிரச்சினை யிலும் மூக்கு அறுந்துதான் தொங்கு கிறது!

நமது ஒகேனக்கல் பகுதிக்கே வந்து கருநாடகத்துக்காரன் கலாட்டா செய்கிறான்.

ஆந்திரக்காரனோ பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி, உன்னால் ஆனதைப் பார் என்கிறான்.

தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்கு முழு உரிமை கிடையாது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது.

இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு தான் என்ன? வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டை மீட்டெடுப்பது யார் பொறுப்பு?

பண்பாட்டுத் தளத்தில் படை நடத்துவோர் யார்?

புரட்சிக்கவிஞர் இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் குயிலில் (3.3.1959) குரல் கொடுத்தாரே - அடையாளம் காட்டினாரே அந்த இயக்கமான திராவிடர் கழகத்தின். தலையில்தானே தமிழர் பிரச்சினைகள் விடிந்திருக்கின்றன.

நம்முன் னிற்கும் இந்தக் கடமை களை ஒரு கணம் நினைத்துப் பார்த் தால், ராஜபாளையத்தில் நமது கழகம் நடத்தும் இளைஞரணி மாநில மாநாட் டின் அருமை என்னவென்று புரியும்.

வெறும் பொழுது போக்கு மாநாடல்ல - கேளிக்கைகளுக்கு இடமில்லை.

இலட்சிய முழக்கம் இருக்கும், ஈடேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வெடிக்கும்.

இளைஞர்களின் அணிவகுப்பு மிக முக்கியமானது. சமூக காப்பணியின் வேழ நடை வீர உணர்வைத் தூண்டக் கூடியது. இயக்க வரலாற்றிலும் ஒரு பொன் னேடு - புகழேடு

- புறப்படு தோழா புறப்படு!
போர்ப்பாட்டுப் பாடுவோம்
புறப்படு தோழா புறப்படு!
தனிமனிதனாக அல்ல
குடும்பம் குடும்பமாகப் புறப்படுக! புறப்படுக!!

பெரியார் இயக்கத்தின் மாட்சியை அது கையில் எடுத்துக் கொண்டிருக் கும் மீட்சியின் பட்டியலைக் காணப் போகிறோம்!

வா தோழா வா! தொல்லுலகுக் குள்ளே அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்.

வல்லவன் உன்னை வெல்ல நினைப் பவன் தூள் தூள் தூள்! என்று புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்.

ராஜபாளையம் - புது ராஜபாட் டையைக் கொடுக்கப் போகிறது புறப்படு! புறப்படு!

krishna said...

தமிழை காட்டு மிராண்டி மொழி என்றும், திருக்குறளை மலம் என்றும் கூறியது. லக்ஷக்கணக்கான மக்கள் விடுதலைக்காக இன்உயிரை தியாகம் செய்து போராடிய பொழுது இந்தியாவிற்கு சுதந்திதரம் கொடுக்க கூடாது என்று தந்திரம் செய்தது. அது உறுதியான பின் தமிழ் நாடு மட்டும் பிரிட்டிஷ் காலனியாக இருக்க வேண்டும் என்று சிறியார் பிரிட்டிஷ் சர்க்காருக்கு கடிதம் எழுதியது. பஞ்சமன் வீட்டு பெண்கள் எல்லாம் ரவிக்கை சேலை கட்ட ஆரம்பித்ததால் தான் துணி விலை ஏறுகிறது என்று பேசியது போன்ற சிறியாரது மற்ற சாதனைகளையும் கீற மணி எழுதினால் நன்றாக இருக்கும் தமிழ் ஓவியா.