Search This Blog

7.2.13

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார்



இஸ்லாம் மத ஒழுக்கம்

1. மதுபானம் கூடாது.

2. சூதாடுதல் கூடாது.

3. விபசாரம் கூடாது.

4. வட்டி வாங்குதல் கூடாது.

5. போர் செய்தல் கூடாது.


இந்து மத ஒழுக்கம்

1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்)

2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்)

3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)

4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்)

5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்)

மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே.

கடவுள்

இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு.

இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு.

கடவுள் சாயல்

இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை ஆண்டவன் அவன் இவன் என்று சொல்லுகிறது.

உலக சிருஷ்டி

இந்து மதம் கடவுளால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது.

இஸ்லாம் மதமும் உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றே கூறுகிறது.

பாவ புண்ணியக் கணக்கு

இந்து மதத்தில் மனிதனுடைய செய்கையை குறித்து வைத்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். சித்திரபுத்திரன் எழுதி வைப்பார்.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைகளைக் குறித்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். இரண்டு தூதர்கள் எழுதி வைப்பார்கள்.

சொர்க்க நரகம்

இந்து மதத்தில் மனிதனுடைய பாவத்துக்கு நரகமும் புண்ணியத்துக்கு சொர்க்கமும் உண்டு.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைக்கு பாவத்துக்கு நரகம், புண்ணியத்துக்கு சுவர்க்கமும் உண்டு.

ஏழு நரகம்

இந்துக்களுக்கு 7 நரகம் உண்டு.

இஸ்லாம்களுக்கு 7 நரகம் உண்டு.

தூதர் பிசாசு

இந்துக்களுக்கு தேவ தூதர்களும் பிசாசும் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் தேவ தூதர்களும் பிசாசுகளும் உண்டு.

நான்கு வேதம்

இந்துக்கள் வேதங்களுக்கு ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு பெயர்கள்.

இஸ்லாம் வேதத்துக்கு தைரத்து, ஜபூரு, இஞ்சிலு, குர்ஆன் என நான்கு பெயர்கள்.

அவதார புருஷர்

இந்துக்களுக்கு அவதார புருஷர்கள் தெய்வாம்ச புருஷர்கள் ஆகிய லக்ஷக்கணக்கான ஆழ்வார்கள், நாயன்மார்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் லக்ஷக்கணக்கான தேவதூதர்கள், நபி மார்கள் ஆகியவர்கள் உண்டு.

புண்ணிய ஸ்தலங்கள்

இந்துக்கு புண்ணிய ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் புண்ணிய ஸ்தலமுண்டு.

பண்டிகை

இந்துக்களுக்கும் பண்டிகை விரதாதிகள் உண்டு.

முஸ்லீம் மார்க்கத்துக்கும் பண்டிகை விரதங்கள் உண்டு.

தொழுகை

இந்துக்களுக்கும் தொழுகை, பிரார்த்தனை இவற்றிற்கு முறைகள், கணக்குகள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொழுகை பிரார்த்தனை கணக்குகள் முறைகள் உண்டு.

தான தர்மம்

இந்துக்களுக்கும் தான தர்மங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் தான தர்மங்கள் உண்டு.

விசேஷ நாள்

இந்துக்களுக்கு விசேஷ நாள், ஓய்வு நாள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் விசேஷ நாள் ஓய்வு நாள் உண்டு.

மற்றவர்கள் மட்டமானவர்கள்

இந்துக்கள், இந்து அல்லாதவர்களை மிலேச்சர்கள் என்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை காபர்கள் என்கிறார்கள்.

உள் பிரிவு

இந்து மதத்திலும் உள் பிரிவுகள் உண்டு.

இஸ்லாம் மதத்தில் உள் பிரிவினர்கள் உண்டு.

யுத்தம்

இந்து மதத்தில் மத யுத்தம் நடந்திருக்கிறது.

இஸ்லாம் மதத்திலும் மத யுத்தம் நடந்திருக்கிறது.

சடங்கு

இந்து மதத்திலும் சடங்குகளும் மந்திரங்களும் உண்டு.

இஸ்லாம் மதத்திலும் சடங்குகள் மந்திரங்கள் உண்டு.

செத்தவர் சரீரம்

இந்து மதத்திலும் செத்தவர்களுக்கு சரீரம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கும்.

இஸ்லாம் மதத்திலும் செத்தவர்கள் எழுப்பப்பட்டு விசாரணை நடக்கும்.

சமாதுக்கு கிரிகை

இந்து மதத்திலும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

சமாது வணக்கம்

இந்துக்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

புனித ஸ்தலங்கள்

இந்துக்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்கு (அடக்கமானதற்கு) ஆக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்காக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

மேல்கண்ட அனேக விஷயங்களில் கிறிஸ்தவ மதமும் இதை அனுசரித்தேதான் இருக்கின்றது.

ஆகவே பொதுவாக மதம் என்றால் கடவுள், நல்வினை, தீவினை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இறந்த பிறகு இவைகளை அனுபவித்தல் சடங்கு மந்திரங்கள் என்பவை இல்லாமல் எந்த மதமும் இருக்க முடிவதில்லை.

ஒருமனிதன் கடவுள் என்பதை ஒப்புக்கொண்டு சொர்க்க நரகம், நல்வினை, தீவினை, பாவம் புண்ணியம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளா விட்டால் நாஸ்திகனாய் விடுகிறான்.

நல்வினை தீவினை என்பவைகளோ மதத்துக்கு ஒரு விதமாய் இருக்கிறது. இந்துவுக்கு கள் குடிப்பது பாவமல்ல. முஸ்லீம்களுக்கு கள் குடிப்பது பாவம். முஸ்லீமுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமல்ல. இந்துவுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமாகும்.

இதுபோல் இன்னும் அனேக விஷயம் உண்டு. ஆதலால் மதம் என்பது எல்லோருக்கும் ஒன்று போலவே இருந்தாலும் மத சம்பிரதாயம் வேறு வேறாய் இருந்து வருகிறது.

மத சம்பிரதாயங்களைப் பார்க்கும் போது சொர்க்க நரக விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் என்றும், நல்வினை தீவினை என்பதும், பாவ புண்ணியம் என்பதும் எல்லா மதத்திலும் கட்டுப்பாடுகள் என்றும், ஆனால் அந்த அந்த மதக்காரர்களின் காலதேசத்துக்கு தக்கபடி சௌகரியத்துக்கு தக்கபடி ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டவைகள் என்றும் விளங்கும்.

------------------------தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 03.05.1936

14 comments:

தமிழ் ஓவியா said...

தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு இந்துஸ்தான் டைம்ஸ் தரும் திடுக்கிடும் தகவல்கள்


புதுடில்லி, பிப்.7- பாகிஸ்தானின் தாலிபான் தலைவ ருடன் அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்தித்தது குறித்து திடுக்கிடும் தகவல் களை இந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தி யுள்ளது.

பா.ஜக. தலைவர் அத்வானி ஃபசூல் அர் ரகுமான் என்ற பாகிஸ்தான் தலைவரை 2005ஆம் ஆண்டில் சந்தித்துள்ளார். ரகுமான், தாலிபான் ஆதரவாளர் என்று சொல்லப்படுபவர். ஏன் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. , தலைவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும்? பல நேரங்களில் இந்திய கிரிக்கெட் போட்டிகளையே பல தடவை பொறுத்துக் கொள்ளாதவர்கள் அவர்கள்.

அந்த சந்திப்பில் எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்பதை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தெரிவிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டன
- தேசிய புலனாய்வுக் கழகம்

ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் வலதுசாரி தீவிரவாதி களின், பயங்கரவாதச் செயல்களைப்பற்றி சதித் திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவ தாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கத்தின் நாக்பூர் அலுவல கத்தில் இந்த்ரேஷ்குமார் என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர். வலதுசாரி தீவிரவாத மூளை எனப்படும் சுனில் ஜோஷி என்பவரை 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

வெடிமருந்து வாங்க ரூ.50 ஆயிரம் பணம்

சுனில்ஜோஷி, மேலும், சம்ஜிவாதா வழக்கில் சாட்சியாகவும் ஆஜ்மீர் ஷரீப் வழக்கில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்டவருமான பாரத் பாய் என்பவருடன் அசி மானந்த் என்பவரும் நாக்பூர் சென்று இந்த ஜோஷியை சந்தித்துள்ளனர். அவர், அவர்களுக்கு வெடி மருந்து மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000 கொடுத்ததாக சம்ஜுவாதா (Samthauta) குற்றப் பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.

வலதுசாரி தீவிரவாத வழக்குகள் எதிலும், இந்த் ரேஷ் பங்கு பெற்றதாகக் குற்றம் சாட்டப்படவில்லையானாலும் அவரது பங்களிப்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த்ரேஷ் சார்பாக வழக்கறிஞர் மீனாட்சி லேகி, இவையெல்லாம் பொய்த் தகவல்கள்; சிமி இயக்கத் தலைவர் சைதர் நகோரி மீது நடத்தப்பட்ட மன இயல் ஆய்வு உட்பட பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட சம்ஜுவாதா குண்டுவெடிப்பு பற்றிய அரசின் ரகசிய ஆவணங்கள் ஆரிஃப் காஸ்மானி என்ற லஸ்கர் என்ற பொருளுதவி செய்ததானது பற்றியதும் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானமும் பற்றிய 3500 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

சந்தித்தது உண்மையே!

புலனாய்வாளர்கள் பாரத் பாயிடம் பேசியபோது, அவர், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், இந்த்ரேசையும், சுனில் ஜோஷியையும் சந்தித்ததை ஒப்புக் கொண் டுள்ளார்.

இந்த்ரேஷ் மனேஜீக்கு, சுனில் ஜோஷி ரூ.50,000 கொடுத்தார். அவர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். எதற்காக அவர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு மனேஜ், ஒரு முக்கிய மான காரியத்துக்காகக் கொடுத்ததாக சொன்னார். அவர்களது தொடர்பு பற்றிய மேலும் இரு நிகழ்வுகள் உள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் 1999ஆம் ஆண்டில் டங்கர்கான் என்ற இடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், சுனில் ஜோஷியும் அவரது மற்ற 2 சகாக்களும் சேர்ந்து வெடிப் பொருள்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். சுனில் ஜோஷி கொல்லப்பட்டார்

ஆஜ்மீர் சபரி குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மிஜோரம் என்ற இடத்தில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகத்தில் பல சந்திப்புகள் நடந்துள்ளன.

2007, டிசம்பர் 29ஆம் தேதி சுனில்ஜோஷி அவரது சகாக்களாலேயே மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.

இருந்தாலும், ஷீட்டல் கெலாட் என்ற ஒரு சாட்சி புலன் ஆய்வாளர்களிடம் ஜோஷியின் கொலைக்குப் பிறகு, தேவாசில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து, இரண்டு பைகளில் துப்பாக்கிகள், இரும்புத் துண்டங்கள், மின் ஒயர்கள் முதலியன வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சி தப்பித்து ஓடியவன், அங்கிருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மற்ற பையானது நர்மதை ஆற்றில் வீசப்பட்டது.

எந்த அளவிலும் எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. புலனாய்வு களை நம்பாதீர்கள் எங்களுக்கு நீதி அமைப்பில் முழு நம்பிக்கை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் சொல்லியுள்ளார்.

அத்வானி சந்திப்பின் மர்மம் என்ன?

2005-இல் நிகழ்ந்த, பாகிஸ்தான் தலைவர் ஃபசூல் ரகுமான் எல்.கே. அத்வானி இடையே நடந்த சந்திப்பினைப் பற்றிய விளக்கங்கள் வேண்டுமென்று NCP அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்வானியுடன்கூட மற்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பெருந் தலைகள் தாலிபான் ஆதரவாளர் ரகுமானு டனான சந்திப்பில் பங்கு கொண்டுள்ளனர். டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், என்ன கருத்துப் பரிமாற்றம் நடந்தது? அந்த மாதிரி தலைவர்களுடன் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது? என்று NCP தொடர்பாளர் நவாப் மாலிக் கேட்டுள்ளார்.

- (தகவல்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் புதுடில்லி 25.1.2013)

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா? திருச்சியில் கலைஞர் பேட்டி


திருச்சி, பிப்.7- திருச் சியில் இன்று மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட் டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று காலை மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சி சென்றார். ரெயில் நிலைய வரவேற்புக்கு பின் சங்கம் ஓட்டலில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். அதன் விவரம வருமாறு:-

கேள்வி:இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு இனியா வது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறி யுள்ளீர்கள். இதை முன்பே கூறியிருக்கலாம் அல்லவா?

பதில்: இலங்கை தமிழர் பிரச்சினையில் நான் மட்டும் அல்ல. இலங்கை தமிழர் மீது அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் இலங்கை அரசின் தவறை இந்தியா கண்டிக்க வேண் டும் என்று பலமுறை எடுத்துக்கூறி உள்ளனர்.

கேள்வி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இந்த பிரச் சினை குறித்து கூறும் போது, மத்திய அரசு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியே வர வேண்டும் என்று கூறி உள்ளாரே?

பதில்: நாங்கள் வெளியே வந்தால் அவர் கள் உள்ளே செல்ல தயாராக இருக்கிறார் கள்.

கேள்வி: ராஜபக்சே இந்தியா வருகையை எதிர்த்து அனைத்து கட் சிகளும் போராட்டம் அறிவித்து உள்ளது குறித்து?

பதில்: தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழகத்து தமிழர்களும், இந்திய நாடும் சிங்கள அரசின் போக்குக்கு விட்டுவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்து ராஜபக்சேவும், மத்திய அரசும் திருந்தி கொள்ள வேண்டும்.

கேள்வி: அகில இந்திய காங்கிரசுக்கு ராகுல்காந்தியை துணைத்தலைவராக நியமித்ததற்கு நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லையே? ஸ்டாலின் டெல்லி சென்றபோது அவரை சந்திக்க முடியவில் லையே?

பதில்: ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கி.வீரமணி, தொல் திருமாவளவன், சுப.வீ பாண்டியன் ஆகி யோர் டெசோ தீர் மானம் குறித்து டெல்லி சென்று அங்கு வெளி நாட்டு தூதுவர்களை சந்திக்கத்தான் சென்றார்கள். ஆனால் பல பத்திரிகைகள் அபாரமாக கற்பனை செய்து இந்த பிரச்சினையை திசை திருப்பி விட முயற்சித்தார்கள். அவ்வளவுதான்.

கேள்வி: காவிரி டெல்டா பிரச்சினையில் தேசிய பேரிடர் நதிநீர் ஆணையத்திடம் இருந்து ரூ.1,000 கோடி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கேட்கிறார் களே? நீங்கள் இதை வலியுறுத்துவீர்களா? மத்திய அரசு சரியாக செயல் படவில்லை என் றும் கருத்து நிலவு கிறதே?

பதில்: இதுகுறித்து எங்கள் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகிறார் கள். வெளியில் இருந்து நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட தி.மு.க. தடையாக உள் ளது என்று சட்டசபை யில் அமைச்சர்கள் குற்றம்சாட்டி உள்ள னரே?

பதில்:தமிழ்நாட்டில் அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நான் கவனிப்பதில்லை. அதுபற்றி இப்போது கருத்து கூற விரும்ப வில்லை. அப்படியே கருத்து கூறினாலும் அதனை கேட்டு தங் களை திருத்திக்கொள்ள இந்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.


தமிழ் ஓவியா said...

கேள்வி: கர்நாடகப் பிரச்சினையில் இங்கே அனைத்துக் கட்சியின ரிடமும் ஒருமித்த கருத்து இல்லையா?

பதில்: இங்கு ஆல் பார்ட்டி, ஆள் இல்லாத பார்ட்டி என்பது எல் லாம் இல்லை. இங்கே எல்லாமே நான்தான் என்ற ஆட்சி நடக்கிறது.

பதில்: இப்போது மாற்றி, மாற்றி பேசும் ஆட் சிதானே நடக்கிறதே. கேள்வி: சட்டசபை யில் குட்டிக் கதைகளை பேசி நேரத்தை வீண் செய்கிறார்களே? மூத்த உறுப்பினர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? பதில்: குட்டிக் கதைகள் உங்களுக்கு விகாரமாய் பட்டால் நான் என்ன செய்வது? கேள்வி:கவர்னர் உரையில் மத்திய அரசை தாக்குவது போன்ற வரிகளை கவர்னர் வாசித்து உள்ளாரே? பதில்:அதுபற்றி நீங்கள் கவர்னரிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி: எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டு வருகிறதே? பதில்: இந்த அரசுக்குப் பொய் வழக்கு போடுவது வழக்கமானதுதான். கேள்வி: செப்டம்பர் மாதம் நாடாளு மன்றத்திற்கு தேர்தல் வருவதாக கூறப்படுகிறதே. தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளதா? தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க.வின் யூகம் என்ன? பதில்: தேர்தல் முன்கூட்டியே வரும் என்று நாங்கள் யூகத்திலும் இல்லை. வியூகத்திலும் இல்லை. தி.மு.க.வைப்பொறுத்தவரை இதுகுறித்து முடிவு செய்ய பொதுக்குழு, செயற்குழு உள்ளது. கேள்வி: சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இணக்கமாக செல்லவிரும்புவது போல தெரிகிறதே? பதில்: இது உங்களுக்கு பொறுக்கவில்லையா? கேள்வி: உங்களை விஜயகாந்த் சந்தித்தாரா? பதில்:சந்திக்கவில்லை. கேள்வி: சில்லறை வணிக விஷயத்தில் அன்னிய முதலீட்டில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி ஆதரிப்பதுபோல் உள்ளதே? பல களங்களைக் கண்ட தி.மு.க.விற்கு ஏன் இந்த பயம், கலக்கம்? பதில்:களங்களைக் காண கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாதத்தை கழகம் விரும்பாததால் இந்த நிலையினை எடுத்துள்ளோம். கேள்வி: 1999-ல் உங்கள் தாயார் நினைவிடத்திற்கு அருகில் உள்ள இடத்தை பட்டா போட் டதாக செய்திகள் வந்துள்ளதே? பதில்:அது செய்தியா? வதந்தியா? குற்றச் சாட்டா? கேள்வி:ராமஜெயம் கொலை வழக்கு சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளார்களே?
பதில்: வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றி நட வடிக்கை எடுக்கவேண்டும். கேள்வி:இப்போது கொலைகள் அதிகம் நடக்கிறதே? தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எவ்வாறு உள்ளது. பதில்:கடந்த 19 மாத அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 896 கொலைகள் நடந்துள்ளன. சட்டம்- ஒழுங்கு இந்த நிலையில்தான் உள்ளது.

தமிழ் ஓவியா said...


கேள்வி: மத்திய மந்திரி அழகிரி மீது ஆயிரம் கோடி ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: முதலில் அவர் பெங்களூர் வழக்கை முடித்துக் கொள்ளட்டும். - இவ்வாறு கலைஞர் கூறினார்.

கேள்வி:மின்வெட்டு பிரச்சினை குறித்து முதலில் ஜுன் மாதம் தீரும் என்றனர். இப் போது இந்த வருடத் திற்குள் தீரும் என்று மாற்றி, மாற்றி பேசு கிறார்களே?

பதில்: இப்போது மாற்றி, மாற்றி பேசும் ஆட் சிதானே நடக்கிறதே. கேள்வி: சட்டசபை யில் குட்டிக் கதைகளை பேசி நேரத்தை வீண் செய்கிறார்களே? மூத்த உறுப்பினர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன?

தமிழ் ஓவியா said...

பதில்: குட்டிக் கதைகள் உங்களுக்கு விகாரமாய் பட்டால் நான் என்ன செய்வது?

கேள்வி:கவர்னர் உரையில் மத்திய அரசை தாக்குவது போன்ற வரிகளை கவர்னர் வாசித்து உள்ளாரே?

பதில்:அதுபற்றி நீங்கள் கவர்னரிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி: எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டு வருகிறதே?

பதில்: இந்த அரசுக்குப் பொய் வழக்கு போடுவது வழக்கமானதுதான்.

கேள்வி: செப்டம்பர் மாதம் நாடாளு மன்றத்திற்கு தேர்தல் வருவதாக கூறப்படுகிறதே. தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளதா? தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க.வின் யூகம் என்ன?

பதில்: தேர்தல் முன்கூட்டியே வரும் என்று நாங்கள் யூகத்திலும் இல்லை. வியூகத்திலும் இல்லை. தி.மு.க.வைப்பொறுத்தவரை இதுகுறித்து முடிவு செய்ய பொதுக்குழு, செயற்குழு உள்ளது.

கேள்வி: சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இணக்கமாக செல்லவிரும்புவது போல தெரிகிறதே?

பதில்: இது உங்களுக்கு பொறுக்கவில்லையா?

கேள்வி: உங்களை விஜயகாந்த் சந்தித்தாரா?

பதில்:சந்திக்கவில்லை.

கேள்வி: சில்லறை வணிக விஷயத்தில் அன்னிய முதலீட்டில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி ஆதரிப்பதுபோல் உள்ளதே? பல களங்களைக் கண்ட தி.மு.க.விற்கு ஏன் இந்த பயம், கலக்கம்?

பதில்:களங்களைக் காண கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாதத்தை கழகம் விரும்பாததால் இந்த நிலையினை எடுத்துள்ளோம்.

கேள்வி: 1999-ல் உங்கள் தாயார் நினைவிடத்திற்கு அருகில் உள்ள இடத்தை பட்டா போட் டதாக செய்திகள் வந்துள்ளதே? பதில்:அது செய்தியா? வதந்தியா? குற்றச் சாட்டா? கேள்வி:ராமஜெயம் கொலை வழக்கு சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளார்களே?

பதில்: வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றி நட வடிக்கை எடுக்கவேண்டும்.

கேள்வி:இப்போது கொலைகள் அதிகம் நடக்கிறதே? தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எவ்வாறு உள்ளது.

பதில்:கடந்த 19 மாத அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 896 கொலைகள் நடந்துள்ளன. சட்டம்- ஒழுங்கு இந்த நிலையில்தான் உள்ளது.

கேள்வி: மத்திய மந்திரி அழகிரி மீது ஆயிரம் கோடி ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: முதலில் அவர் பெங்களூர் வழக்கை முடித்துக் கொள்ளட்டும். - இவ்வாறு கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இதற்கு மேல் என்ன வேண்டும்?


இலங்கையின் 65ஆவது சுதந்திர தின விழாவில் உ ரையாற்றிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தான் யார் என்பதை மற்றொரு முறை மனம் திறந்து உலக மக்களுக்குத் தெரிவித்து விட்டார்.

சிறுபான்மையினராக வாழும் தமிழர் களுக்கு வடக்குப் பகுதியில் எந்தவிதமான அரசியல் தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட மாட்டாது! என்று கறாராகக் கூறி விட்டார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடத்தியபோது 13ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு அளிக்க இருப்பதாக உறுதியளித்தது என்னாயிற்று? என்று இந்திய அரசு கேட்கப் போகிறதா - இல்லையா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

இந்தியாவுக்கு வரும் ஒரு கால கட்டத்தில் இப்படி ஓர் அறிவிப்பை ராஜபக்சே செய்கிறார் என்றால் இந்தியாவை ஒரு சிறு தூசாக நினைக்கிறார் - எடை போடுகிறார் என்று இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டாமா?

120 கோடி மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்து அரசின் மூக்கை ஒரு சுண்டெலித் தீவு சொறிந்து பார்க்க ஆசைப்படுகிறது என்றால் இது இந்தியாவின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால்தானே!

ஏற்கெனவே ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம் பெற்ற வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு என்பது கசக்கி எறியப்பட்டு விட்டது.

இந்தியா எதைப் பார்த்து இலவு காத்த கிளியாக இருக்கிறது?

சீனாவுக்காகவா? சீனாவுடன் நகமும் சதையுமாக இலங்கை ஒன்றுபட்டு வெகு காலம் ஆயிற்றே!

ராஜபக்சே எவ்வளவு நரித்தந்திரம் வாய்ந்த ஆசாமி என்றால் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இந்தியாவையும், சீனாவையும் தன் கையகப்படுத்திக் கொண்டு குளிர் காய்கிறார்.

ஒரு சுண்டெலி நாட்டுக்கு இருக்கும் ராஜ தந்திரம் இந்தியாவுக்கு இல்லாமற் போனது ஏன்?

இந்தியாமுன் உள்ள ஒரே அணுகுமுறை - இலங்கையை எப்படியாவது பலகீனப் படுத்துவது என்பதில் தான் இருக்க முடியும் - இருக்கவும் வேண்டும், இலங்கையின் பலம் பெருகப் பெருக அதனைத் தன்வசம் வைத்துள்ள சீனாவுக்குத் தான் கொண்டாட்டம்!

அய்.நா. மூலம் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிப்பதன் மூலம் தான் இன்றைய சூழலில் இந்தியா தன் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை எட்ட முடியும். சீனா போன்ற கம்யூனிஸ்டு நாடுகள் என்று சொல்லப்படுகிற நாடுகளுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.

சுய நிர்ணய உரிமை என்ற கம்யூனிசக் கோட்பாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக இலங்கை அரசு எழுந்திருக்கிறது.

இனப்படுகொலையாளனுக்கு ஆதரவு காட்டியதன் மூலம் கம்யூனிச சித்தாந்தத் துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்ட சீனா, ருசியா, கியூபா நாடுகள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது அந்தக் கறையைப் போக்கிக் கொள்வது நல்லது; இல்லையெனில் கம்யூனிச சித்தாந்தத்தைப்பற்றி இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்தில் வெகு மக்களுக்கு எதிரான மனித உரிமைக் கோட்பாட்டுக்கு முரணான தத்துவம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும் என்பதில் அய்யமில்லை.

அய்.நா.வும் இழந்த தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஈழப் பிரச்சினையில் அது எடுத்து வைக்கும் நியாயமான அடியைப் பொறுத்தது. இந்தியாவும் விழித்துக் கொண்டு கடந்தகால குற்றங்களுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ளுமா?

எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் ரூ.1545 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்கள்


தமிழகத்தில் ரூ.1545 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்கள் பற்றி ரயில்வே அமைச்சரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு நேரில் வற்புறுத்தல்

சென்னை, பிப்.7- தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு முக்கிய ரயில் திட்டங்களுக்காக வரும் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் ரூ.1545 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், ரயில்வே நிலைக்குழு தலைவருமான டி.ஆர். பாலு ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத் தினார். ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் மற்றும் உயரதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.

1) புதிய ரயில் திட்டங்கள்:

அ) ஆவடி - கூடுவாஞ்சேரி ரயில் பாதை: சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - மதுரை மார்க்கங்களை இணைப்பது சிறீபெரும்புதூர், ஒரகடம் பகுதி தொழில் நிறுவனங்களுக்கு மட்டு மல்லாமல் ராஜீவ்காந்தி நினைவிடத் திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் வருவோருக்கு மிகவும் அவசி யமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, ஆவடியிலிருந்து சிறீபெரும் புதூர் வழியாக இருங்காட்டு கோட் டைக்கு இணைப்புடன் கூடிய கூடுவாஞ் சேரி வரையிலான 60 கிலோ மீட்டர் நீள புதிய ரயில்பாதை அமைக்க டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.

ஆ) அரியலூர் - தஞ்சாவூர் (30 கி.மீ): இந்த பாதை தமிழகத்தின் முதன்மை மற்றும் துணை பாதைகளை இணைக்கும் வகையில் அமையும். இதனால் திருச்சி - தஞ்சாவூர் இடையே சரக்கு/பயணியர் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இ) இருகூர் - போத்தனூர் இரட்டை பாதை (10.77 கி.மீ):
சரக்கு ரயில் போக்குவரத்திற்கு முக் கிய புறவழி பாதையாக இது அமையும்.

ஈ) சேலம் - ஓமலூர் இரட்டை பாதை (11 கி.மீ.): மேட்டூர் அனல் மின் நிலை யத்திற்கான அதி முக்கிய இணைப்பாக இது திகழும்.

உ) மொரப்பூர் - தருமபுரி (30.கி.மீ): இப்பாதை ஓசூர் வழியேயான பெங்களூரு - சேலம் பாதையும், ஜோலார்பேட்டை வழியேயான சென்னை - கோயம்புத்தூர் பாதையும் இந்த புதிய துணை பாதை வாயிலாக இணைக்கப்பட்டு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

2) புதிய பாதை ஆய்வு:

சென்னைக்கான முதன்மை மற்றும் துணை பாதைகளை இணைக்க ஏதுவாக ஜெயங்கொண்டம் வழியாக கும்ப கோணம் - விருத்தாச்சலம் இடையே புதிய பாதை அமைக்க புதிதாக ஆய்வு மேற் கொள்ள டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.

3) பணிமனைகள்:

அ) ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை சென்னை (ICF): இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒருங் கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை விரிவாக்கப் பணி இதுவரை தொடங்க வில்லை.

புதிய ரயில் பெட்டிகள் கிடைக்க ஏது வாக இத்தொழிற்சாலையின் இரண்டா வது பிரிவை அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

ஆண்டுக்கு 2500 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் வகையில் இங்கு உற்பத்தித் திறன் குறைந்தது இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு குறைந்தது ஆயிரம் புதிய ரயில் பெட்டிகள் வழங்க வேண்டும்.

ஆ) பொன்மலை பணிமனை, திருச்சி ராப்பள்ளியில் டேமு (DEMU) ரயில் உற்பத்தி பிரிவு அமைக்கப்பட வேண்டும்: புகழ் வாழ்ந்த பொன்மலை பணிமனை நவீனப்படுத்தப் பட்டு, டேமு, பயணியர் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகளும் தயாரிக்கும் வகையில் அது மாற்றி அமைக்கப்பட வேண்டும். டேமு ரயில் உற்பத்தி பிரிவு அங்கு தொடங்கப்பட வேண்டும். (கிழக்கு ரயில்வேயில் செய்யப்பட்டு இருப்பது போன்றே இங்கும் திறன்வாய்ந்த பணியாளர்களை பயன்படுத்தி இதனை பயணியர்/ சரக்கு ரயில்பெட்டி தொழிற் சாலையாக மாற்ற வேண்டும்).

மத்திய தமிழகத்தில் பயணியர் மின்சார ரயில்கள் போதிய அளவு இல்லாத காரணத்தால் புதிய டேமு எனப்படும் பயணியர் ரயில் சேவையை அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே டேமு ரயில்கள் தயாரிப்பு வசதியை திருச்சி பொன்மலை பணிமனையில் உருவாக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு அமைச்சர் பவன் குமார் பன்சலை கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

4) புதிய ரயில் பெட்டிகள்:

தமிழகத்தில் துரந்தோ, மலைக் கோட்டை, நீலகிரி, சேரன், ஏற்காடு, பாண்டியன் போன்ற முக்கிய விரைவு ரயில்கள் அனைத்துமே மிகவும் பழைய ரயில் பெட்டிகளுடன் இயங்குகின்றன.

தெற்கு ரயில்வேயில் ரயில் பெட்டிகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து புகார்கள் குவிகின்றன.

75 சதவிகிதத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் மிகவும் பழையவை என்றும், அவை மாற்றப்பட வேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை, கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ராய்பரேலி தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து தெற்கு ரயில்வேக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆ) டேமு ரயில் சேவைகள்: பல பகுதிகளில் ஈஎம்யூ டேமு பயணியர் மின்சார ரயில் சேவைகள் தேவைப்படுகின்றன. மினமயமாக்குதல் நிறைவடையாததால் தினந்தோறும் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கீழ்க்காணும் இடங்களில் டேமு சேவைகள் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.

i) தஞ்சாவூர் - நீடாமங்கலம் - திருவாரூர் - நாகூர்.
ii) திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர்.
iii) திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் - மதுரை
எ) தஞ்சாவூர் - கும்பகோணம் -மயிலாடுதுறை.

5 புதிய ரயில் சேவைகள்:

அ) மன்னார்குடியிலிருந்து திருச்சி, ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை (தினசரி)
ஆ) தஞ்சாவூர் - மயிலாடுதுறை - விழுப்புரம் - சென்னை - விரைவு ரயில் (தினசரி)
இ) சென்னை - திருவாரூர் - வேளாங் கண்ணி (தினசரி)
ஈ) காரைக்குடியிலிருந்து - புதுக் கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு துறை, விழுப்புரம் வழியாக சென்னை (பகல் நேர விரைவு ரயில்).

6) சில சிறிய வசதிகள்:

அ) உச்சிப்புளி - சாத்தாமங்கலத்தில் ஆளுடன் கூடிய ரயில்கடவு.
ஆ) திருவொற்றியூர் நடைமேடை நீட்டிப்பு.
இ) தேவகோட்டை ரஸ்தா ரயில் நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட நடைமேடையில் கூரை அமைத்தல்.

7) ரயில் சேவை அதிகரித்தல்:

அ) மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்றுதல்.
ஆ) திருக்குறள் விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல்.

தமிழ் ஓவியா said...


8) நிதி தேவை (ரூ.1545 கோடி):

அ) திருவாரூர் - காரைக்குடி: ரூ.75 கோடி.
ஆ) மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரூ.75 கோடி.
இ) நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - திருக்குவளை - திருத்துறைபூண்டி - ரூ.100 கோடி.
ஈ) தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரூ.50 கோடி.
உ) தஞ்சாவூர் பொன்மலை இரட்டை பாதை: ரூ.100 கோடி.
ஊ) திண்டுக்கல் - விழுப்புரம் இரட்டை பாதை ( ஆர்விஎன்எல்): ரூ.500 கோடி.
எ) செங்கல்பட்டு - விழுப்புரம் இரட்டை பாதைரூ.150 கோடி.
ஏ) சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை (மூன்றாவது பாதை); ரூ.50 கோடி.
*ஐ) திருவள்ளூர் - அரக்கோணம் (RVNL): ரூ.75 கோடி.
ஒ) தாம்பரத்தில் ரயில்வே முனையம் அமைத்தல்: ரூ.50 கோடி.
ஓ) அய்சிஎஃப்-இல் இரண்டாவது பிரிவு அமைத்தல்: ரூ.100 கோடி.
அவ்) ராயபுரத்தை நான்காவது முனை யமாக மேம்படுத்தல்: ரூ.50 கோடி.
அஅ) திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாலை: ரூ.50 கோடி.
அஆ) மதுரை - போடிநாயக்கனூர் ரூ.50 கோடி.
அஇ) ஓமலூர் - மேட்டூர் இரட்டை பாதை: ரூ.70 கோடி.
மொத்தம் ரூ.1545 கோடி.

9) ரயில் பாதைகளை மீட்டல்:

அ) ஈரோடு - பழனி (110 கி.மீ.) ரூ.590 கோடி மதிப்பீட்டுடன் கூடிய இப்புதிய ரயில் பாதை திட்டம் 2011ஆம் ஆண்டி லிருந்து ரயில்வே அமைச்சகத்தால் முடக்கப்பட்டுள் ளது.

இதனை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இது தாமதமானால் செலவு அதிகரிக்கும்.

ஆ) அகஸ்தியம்பள்ளி - கோடியக் கரை: (5கி.மீ) கைவிடப்பட்ட இந்த மீட்டர் கேஜ் பாதை, அகலப்பாதையாக மீண் டெடுக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு கருதி கோடியக்கரையில் வியூக முனையம் நிறுவப்பட வேண்டும். (இலங்கை நிலவ ரத்தை கருதி)

இ) மயிலாடுதுறை - தரங்கம்பாடி (19 கி.மீ): மயிலாடுதுறை - செம்பனார் கோவில் - திருக்கடையூர் - தரங்கம்பாடி மீட்டர்கேஜ் பாதை கைவிடப்பட்டுள்ளது. தரங்கம்பாடியில் சூரியோதயத்தை பார்க் கவும், திருக்கடையூர் மார்க்கண்டேஸ் வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில் களுக்கு புனித பயணம் செல்லப் விரும்பும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அதனை மீட்டெடுத்து சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

10) சென்னை தாம்பரத்தில் மூன்றாவது முனையம் அமைத்தல்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனு மதிக்கப்பட்ட இந்த முனையத்திற்கான பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இதனை போதிய நிதி ஒதுக்கி விரைவுபடுத்த வேண்டும்.

11) ராயபுரத்தை சென்னையின் நான்காவது முனையமாக மாற்றுதல்:

சென்னை ராயபுரம் மிகவும் பழைமை வாய்ந்த ரயில் நிலையமாகும். இதனை பாரம்பரிய ரயில் நிலையமாக மேம்படுத்தி போதிய நிதி ஒதுக்கி சென்னை நகரின் நான் காவது முனையமாக மாற்ற வேண்டும்.

12) மேட்டுப்பாளையம் - நீலகிரி மலை ரயில் நவீனமயம்:

பழம் பெருமை வாய்ந்த மேட்டுப் பாளையம் - நீலகிரி மலை ரயில் (பாரம்பரிய ரயில்) நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம் படுத்தப்பட வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மேற்கண்ட கோரிக் கைகளை இம்மாதம் 26ஆம் தேதி சமர்ப் பிக்கப்பட உள்ள 2013-2014ஆம் ஆண்டுக் கான ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்க பரிசீலித்து ஆவன செய்யுமாறு தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், ரயில்வே நிலைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பெயரால்...


விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.

ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.

அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.

பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?

மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?

ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?

ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்

- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.

பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.

பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;

இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!

இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?

இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?

இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...


அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்!


வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை....

. "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை!

அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார்.

செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு!

- கி.தளபதிராஜ்