Search This Blog

20.9.18

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள், தமிழர்களே! 'துக்ளக்'கைக் "கவனியுங்கள்!"


விஷமம் - பூணூல்தனம் - இவற்றைச் சன்னமாக நுழைப் பது எப்படி என்பதைத் 'துக்ளக்'கில் தான் பாடம் கற்க வேண்டும். குறிப்பாக அதன் கேள்வி - பதில் பகுதிகளில் அக்ரகாரத்தின் ஊத்தை நாற்றத்தின் மீது வாசனைத் திரவி யங்கள் பூசப்பட்டு இருப்பதை அறிய முடியும். எடுத்துக்காட் டாக இவ்வார (26.9.2018) 'துக்ளக்'கை எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: காலில் விழ வேண்டாம், பேனர் வைக்க வேண்டாம் - என்று தன் கட்சியினருக்கு அறிவுரை கூறும் மு.க. ஸ்டாலின், பொது மக்களின் போக்குவரத்திற்கு இடை யூறாக ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த வேண்டாம் என்று சொல்வதில்லையே, ஏன்?
பதில்: பந்த், மறியல், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு இடையூறு செய்தால்தானே, கட்சி இருப்பது அவர்களுக்கு நினைவு வரும்.
கேள்வியே  தன் முரண்பாடு கொண்டது  - காலில் விழு வதையும், பேனர் வைப்பதையும் கிண்டல் செய்து வந்த வர்கள், அவற்றைத் தவிர்க்குமாறு ஒரு கட்சியின் தலைவர் சொல்லும்போது யோக்கியமான புத்தியிருந்தால் அதனை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். அதோடு கொண்டு போய் பொதுக் கூட்டம் போடுவது, ஊர்வலம் நடத்துவதை இணைப்பது சற்றும் பொருந்துமா?
பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் பொதுவாக நம் நாட்டில் அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! சமூகநீதிக் காகவும் பகுத்தறிவுக்காகவும், மொழி உரிமைக்காகவும் இவற்றை நடத்தினால், அவாள் வீட்டில் இடி விழுந்ததாகத் தானே இருக்கும். அதனால்தான் இப்படி இடக்கு முடக்காக எழுதுவது.
சரி... விநாயகர் ஊர்வலம் நடத்திக் கலவரம் செய் கிறார்களே, தேரோட்டம் நடத்தி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டு இருக்கிறார்களே, பிரமோத்ஸவம் என்று சொல்லி எத்தனை நாள்கள் அல்லோல கல்லோலம் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் மூச்சு விடச் சொல்லுங்கள் பார்க்கலாம். மயிலாப்பூரில், அறுபத்து மூவர் விழா என்று எத்தனை நாள் 'கழுதைக் கூத்து' நடக்கிறது.... போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொஞ்சமா நஞ்சமா? எழுதுமா  'துக்ளக்'?
அரசுக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் அத்துமீறிக் கோயில் கட்டி பொது மக்களின் நடைபாதைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளதே - ஒரே ஒரு வரி இதுகுறித்து எல்லாம் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம் - எழுத மாட்டார்கள் - மூச்சுவிட மாட்டார்கள் - ஏன் - அந்தக் குழவிக் கல்லுதான் அவாளின் மூலச் சொத்து - என்ன புரிகிறதோ!
இன்னொரு கேள்வி பதில்
கேள்வி: 'தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் காலில் விழுவதைத் தவிர்த்து, சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்' - என்று தி.மு.க. தலைமை வலியுறுத்தியுள்ளது குறித்து?
பதில்: சால்வைகளை இஸ்திரி போட்டு புதிய விலைக்கே விற்று விடலாம். புதிய புத்தகங்களைக்கூட பழைய புத்தக விலைக்குத்தான் விற்க முடியும். இருந்தும் ஏன் சால்வையை புத்தகமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.
இது ஒரு பதிலாம் - சால்வைகளைத் தவிர்த்துப் புத்தகங் களை வழங்குங்கள் என்பது அறிவார்ந்த செயல் என்பதுகூட  இந்த அம்பிப் பையன்களுக்குத் தெரியாதா? அந்த சால் வைகள் எதற்குப் பயன்படும்? புத்தகங்கள் வாசிப்பு ஆர்வத் தையும், கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். அது கூட அவாளுக்குக் குமட்டலாக இருக்கும்.
காரணம் இந்த நூல்கள் எல்லாம் பெரும்பாலும் நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் ஆயுதங்களாக இருக்குமே அதனால் தான்! இதுவே இராமாயணமாகவும், மகாபாரதமாகவும், புராணக் குப்பைகளாகவும் இருந்தால் அப்படி எழுது வார்களா?
கல்யாண வீட்டுக்கும், கருமாதிகளுக்கும் செல்லும் புரோகிதப் பார்ப்பனர்கள் பச்சையான காய்கறிகளையும், பொருட்களையும் அடித்துக் கொண்டு வருகிறார்களே அவைகூட மளிகைக் கடைகளில் விற்பதற்காகவா?
சீன யுத்தம் நடந்த போது இந்திய தரப்பில் செத்த இராணுவ வீரர்கள் எத்தனைப் பேர் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கேட்டார். பொதுவாக யுத்த காலங்களில் இதுபோல செய்திகளை எந்த நாடும் வெளியிடுவது கிடையாது - அது நாட்டு மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்தி விடும் என்பதால்!
இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி வரை வகித்த ஆச்சாரியாருக்கு இது கூடத் தெரியாத பூஜ்ஜியமா? அப்பொழுதுதான் தந்தை பெரியார் நறுக்கென்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
ஏன் ஆச்சாரியார் கேட்கிறார் தெரியுமா? செத்தவர்களின் விவரங்கள் தெரிந்தால் அந்த வீடுகளுக்ªல்லாம் கருமாந்திரக் காரியங்களைச் செய்ய அவாள் ஆத்துப் புரோகிதர்களுக்குச் 'சான்ஸ்' கிடைக்கும் அல்லவா என்று கூறினாரே, அது மாதிரி பதில்கள் தான் இந்தச் சிண்டுகளுக்கு உரைக்கும்.
கேள்வி: தமிழகம் எங்கே இருக்கிறது?
பதில்மெரினாவில் இரண்டு நினைவிடங்களுக்கு நடுவில் நின்று கொண்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறது தமிழகம் - இது ஒரு பதில்.
கேட்ட கேள்வி என்ன? அதற்குச் சொல்லப்படும் பதில் என்ன?
பார்ப்பனர்களின் நினைப்பெல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களை அவர்களின் தலைவர்களைப் பற்றிதான்.
சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் இருக்கிறதாம். அதைப் பொறுக்க முடியவில்லை இந்த உஞ்சி விருத்திக் கும்பலுக்கு.
அண்ணாவும், கலைஞரும் மறைந்து மண்ணுக்குள் போனாலும் இந்த மடி சஞ்சிக் கூட்டத்தை அன்றாடம் உலுக்கிக் கொண்டே இருக்கிறார்களே.
இந்தத் தலைவர்களும், இவர்களுக்கெல்லாம் தலைவரான பெரியாரும் செய்த வேலைகளால் அல்லவா - உச்சிக் குடுமியோடு வெளியில் நடமாட முடியவில்லை - பூணூல் மேனியோடு பயணம் செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் இப்படியெல்லாம் சென்றால் 'வாங்க சாமி' என்று கும்பிட்டு ஒதுங்கிச் சென்ற கூட்டம், இன்று கேலி செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற ஆத்திரம் அவாளை இப்படியெல்லாம் 'அர்ச்சனை' செய்ய வைக்கிறது.
கேள்வி: 'மெரினா கடற்கரையில் கூட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி?
பதில்: மெரினா கடற்கரையில் அமைதி வேண்டும் என்பதற்காகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. ஆனால், ஏன் நீதிமன்றம் அங்கு மயான அமைதி வேண்டும் என்று நினைக்கிறது என்று தெரியவில்லை.
- இப்படியொரு பதில்.
"மயான அமைதி" இந்த வார்த்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று புரிகிறதா?
அண்ணா, கலைஞர் உடல்கள் அங்கே புதைக்கப் பட்டுள்ளதால் அது மயானமாம் - அதாவது இடுகாடாம். அதற்கு கலைஞரை அங்கே அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டதாம் - அந்த ஆத்திரத்தைத் தீர்த் துக் கொள்ளத்தான் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம்!
கோடானு கோடி மக்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய  தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கி அவர்களைச் சீண்டுவது நல்லதா?
இதே இடத்தில் பார்ப்பனப் பிரமுகர்களை அடக்கம் செய்திருந்தால் இப்படி எழுதுவார்களா? ஏன் ஜெயலலிதாவை இதே கடற்கரையில் அடக்கம் செய்தபோது 'துக்ளக்' இப்படி எழுதியதா?


பார்ப்பனர் அல்லாத மக்களே, தொண்டர்களே, இந்தப் பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

   -----------------------மின்சாரம்  அவர்கள் 20-09-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை 

0 comments: