Search This Blog

13.9.15

சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?

சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?

- தந்தை பெரியார்



அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரி கின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க் கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.
உதாரணமாக இவ்வளவு கிளர்ச்சியா வது இங்கு நடத்திருக்கா விட்டால் அதிசய மாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள்.  அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க் கிளர்ச்சியே எங்கள் பிரச்சாரத்திற்கு மொத்த அனுகூலமளித்து வருகின்றது.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காக செய்யப்படும் மரியா தைகளில் முதலாவது அங்குள்ள கோவில் களை, அடைத்துப் போலீஸ் காவல் போடு வதும் நாஸ்திகர்கள் வருகிறார்கள் என்று ஊருக்குள் பிரச்சாரம் செய்து  எங்கள் கூட்டத்தை நடத்த விடக்கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளு வதுமேயாகும்.  இந்தக் காரியங்கள் செய்யப் படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி பொது ஜனங்கள் அப்ப டிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள்  என்பவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும் நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது.  இந்தக் காரணங்களால் எதிர்க்கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர் களின் செய்கைகளின் பயனாய் மலே யாவில் இதுவரை பிரச்சாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌ கரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது.  அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாகா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும், மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம்.  அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்டகாரியம் செய்வார்கள்? என்று கேட்டாராம்.  அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம், அதற்கவ்வதிகாரி சீதை என்றால் என்ன? என்று கேட்டாராம், அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார் களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசுநாதரின் தாயாராகிய மரியம் மாளைச் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள்.  அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வரு பவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்ல வென்று சொல்லுங்கள்.  அதற்கு தைரிய மும் ஆதாரமும் இருந்தால் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி வருகின்ற வர்களின் சுற்றுப்பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களு டையது என்றுச் சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.  ஆகவே, அதுபோலவே இங்கும் எங்கள் பிரச் சாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது  ஆச்சரியமாக இருக்கின்றது.
நிற்க, சகோ தரர்களே, என் வார்த்தைகளையெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு.  ஒருவரு டைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது நியாய மாகாது.  என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அதைத் தடுப்பது என்பது ஒருக்காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததா காது.  நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள். சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனப் பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதா காது.  எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினு டைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங் களில், பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லோருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக்கொடுக்க இசையோம்.  எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட வர்கள் தக்கப் பதிலையும், ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ, எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது.  ஆதாரமற்ற வர்கள் தந்திரத்தில் வாழ்பவர்கள். அமட்ட லிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத்தான் எங்களைப்பற்றிய பயம் ஏற்படக்கூடும். கோபமும் ஆத்திரமும் வரக்கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவைகளும் புரட்டுகளும் என்றைக்கும் இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாய்ந்து விழுந்துதான் தீரும்.
அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளைப்புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள், முரடர்கள், தந்திர சாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது.  அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது.  சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப் பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளி விடமுடியாது.  ஆதலால் தடைப்படுத்த முயற்சிப் பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே, நாங்கள் இங்கு எந்த விதமான மதப்பிரச்சாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைச் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வர வில்லை. அதுபோலே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு.  இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும் மதக் காரர்களுக்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங் களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுப வமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக் கின்றோம்.  இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங்களுக்கு விளங்கவில்லை.  இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை.  உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக் களை முட்டாள்தனமும், முரட்டுப் பலமும் ஆட்சி செய்ய  வேண்டுமா? அல்லது அறிவு நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.
மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக் குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் நம்பித் தானாக வேண்டும் என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப் போட்டு நாசமாக்கி, மனித சமுகம் முழுவதையுமே அடிமைப்படுத்திவிட்டதா லேயே இன்று மனித சமுகம் இவ்வளவு தொல் லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத் திற்கே திண்டாட வேண்டிய நிலைமையேற் பட்டு விட்டது.
சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று ஆகாய வாணி சொன் னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத் துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவது மான காரியங்கள் எப்படி மனிதத் தன்மை யானதும் நியாயமானதுமானவை ஆகும்.
ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால். ஆகாய வாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்ப தெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறி முகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை.  ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லி விட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான். ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள்.
தப்பித்தவறி யாராவது கேட்டு விட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவேயொழிய சமாதான மான திருப்தியான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமுகம் முற்போக்கடைவற்கே இடமில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரைச் சிலர் ஏமாற்றஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களை யும் ஆரம்பித்த இடமே இந்த இடம்தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீட்சிக்க வேண்டு மென்று மேலும் மேலும் வலியுறுத்துகின் றோம்.  இன்று உலகத்திலுள்ள பெரும் பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்குத் தனித்தனியாக பற்பல விதமான கொள்கை களையும், வாசகங்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும், வாசகங் களையும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றை பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட் டார்கள். அதனாலேயே மக்களுக்குள்  பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப் பிராயங்களும் காணப்படுகின்றன. இவ்வ பிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரையொருவர் சந்தே கிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன.  எந்த மார்க்கமாக என்றுப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியது தான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக்  கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமேயாகும்.  இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமுகத்திற்குள் ஒரு வித பொதுவான  ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை.  ஆகையால் தான் இந்த இடத்திலேயே மனிதன் முதன் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.
நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங் களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம் முடைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளுகின்றவர்களானதால்  ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கை களையும், உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லுவ தால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மையென்றும், எந்த அவ தாரப் புருஷர்கள் எந்த தூதர்கள் முதலான வர்கள்  சொன்னது உண்மையாகியிருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீட்சை என்பவையேயாகும்.
மேலும் இவைகளை எல்லாம் ஆண் டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப் படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்து கொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்ப தற்குமே யாகும்.  மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத் தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துக் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப் பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டி ருந்தால் அவைகள் ஒவ்வொரு மனித னுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும் படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்ட வன் தான் சொன்னான் என்று கருதும் படியாகவோ அல்லது குறைந்தளவு விவாத மாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்டவனால் செய்யமுடிய வில்லை? என்று இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையா யிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்று வதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும். அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன் னார் என்று கண்மூடித் தனமாய் நம்புவது அவசியமா? அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்தி ருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.
நிற்க. இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ, ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத் திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச் சியையும், சுதந்திரத்தையும், இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா? என்று கேட் கின்றோம்.  இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்க வொட்டாமல் அழுத்திவைத்து விடுவதா? என்றும் கேட்கின்றோம்.
மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தைத் தாராள மாய் வெளியிலெடுத்துச் சொல்ல இடம ளிக்க வேண்டும்.  தனக்கே விளங்காததை யும், மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாத தையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும் படியோ எதிர்ப்பார்ப்பதும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதும் கண்டிப் பாய் கூடவே கூடாத  காரியமாகும்.  அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப் பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லை யும் அவர்களின் உபதேசங்களின் தொல் லையும் ஒழிந்தாக வேண்டும் .  இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும்.  இது செய் யப்படாத வரை மனிதன் காட்டுமிராண் டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்ப மாட்டான்.
-----------------------01.03.1931 புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 08.03.1931

2 comments:

விஸ்வேஸ்வரன் said...

இந்த உரைகள் தமிழ்ச் சமூகத்தின் அமைப்பை ஆட்டம் காட்டி விட்டது என்பது உண்மை.பெரியாரின் கருத்துக்களும் சிந்தனையும் தமிழ் மக்கள் அறிந்ததே. இன்று காவிகள் முன் போல் அக்கிரகாரத்தில் அமர்ந்து திண்ணை ஆட்சி செய்யவில்லை. அரசராகள் காலத்துக்குப்பின் பல நூறு ஆண்டுகள் ககாத்திருந்து இன்று அவர்களே அரசர், ஆட்சியாளராக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த வரை மநுநீதியே. கும்பிட்டு விழும் அமைச்சர் எம்எல்ஏ என சூத்திர த் தன்மையை ஏற்கும் கூட்டம். இனி பெரியார் சிந்தனையாளர்களின் பரப்புரை விமரிசனம் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப் பட வேண்டும்.
காவிகள் திருக்குறளை புகழ்கிறார்கள். கீதை வடமொழி பள்ளிகளில்,இராமாயணம் மகாபாரதம் இளைஞருக்கு என நடப்பவை சரியானதாகத் தெரியவில்லை. அவசரநிலை அறிவித்து காரியம் சாதிப்பர் என்றும் நம்பலாம். அத்வானி சொல்லி முன்னோ்டம் பார்த்து விட்டனர்

Anonymous said...

http://pamelageller.com/2015/03/india-muslim-files-suit-against-law-banning-child-marriage-offends-islam.html/
Idha kandichu porattam nadatha dairiyam undaa ramasami adivarudigalukku?