Search This Blog

12.6.15

 தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி-பெரியார்

(பெரியார் 1958 இல் பேசிய பேச்சு 2015 இலும் பொருத்தமாக இருக்கிறதை படிக்கும் தோழர்கள் உணர்வார்கள். பெரியாரின் தொலைநோக்கை இதன் மூலம் நன்கு உணரலாம்.படியுங்கள்! பரப்புங்கள்!!--தமிழ் ஓவியா)


 தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
 




நம் முதல் தொண்டு ஜாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் ஜாதிக்காரன் ஆட்சியும் வெளிநாட்டுக்காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும். அல்லது அயோக்கியனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லுகிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜனநாயக ஆட்சி? இது ஒரு ஜாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் ஜாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான். 

  
இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம்தான்.
  
இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.
  
முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை மாத்திரம் கொல்லக்கூடாது என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகாணங்களில் சட்டம் செய்து வைத்திருக்கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்ய சைனா போன்ற நாடுகளில் சுமார் 100-கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது. அதைக் கொல்வது தவறு கிடையாது. ஆட்டிறைச்சியைவிட விலை மிகக் குறைவு. மாட்டிறச்சி ஏழைகள் சுலபமாக வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை அறுத்தால் தண்டனை என்றால் இது வருணாசிரம முறைப்படி நடக்கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?

  

அடுத்தப்படி "பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்?" என்று கேட்கிறார்கள் சில மடையர்கள். 100-க்கு 97-பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3- பேர்தானே இருக்கின்றான்? அந்த 3- பேருக்காவது சட்டம் ஆட்சி என்று வைத்துக் கொண்டானே ஏன் என்று எவனாவது கேட்கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்களும் 50-பேர் இங்கிருந்தால் அதில் 26-பேர் சொல்லுகிறபடி மற்ற 24- பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10-பேர் இருந்தால் 6-உறுப்பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர் வருவார். இங்கே நாம் 100-க்கு 97-பேர் இருக்கின்றோம். 100-க்கு 3-பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97-பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன்னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிர நாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந்தால் இது விளங்கிவிடும். 

அதாவது



ஒன்று : பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப்பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறான்.



இரண்டு : பார்ப்பான் ஆட்சித் தலைவனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப்பந்தியாக கீழே இருக்க வேண்டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும். 

 
பிராமணன் சூத்திரனைச் சோற்றக்குத் திண்டாடும்படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன் வேண்டும் என்பது மனதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன் என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான் வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங்களேன். வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக்கூடாது என்பதற்காகவே. சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித்துத்தான் நமக்கு வரி. 

   
ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக்கூடாது; சூத்திரன் வயிராறக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத்திருக்கிறான். இதுதான் மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும், ஆதாரங்களும், அடிப்படையும் ஆகும். இதனால்தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000- பேருக்குத் தண்டனை. பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். 
  

இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகிவிட்டது? திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5,6-பேருந்துகளைக் கொளுத்தினார்கள். 12-பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்கவில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1-வருடம், 2-வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங்கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்யவில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடுதாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! அதற்கு மாத்திரம் ஏன் 2-வருடம், 3-வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந்ததா? அதில் ஜாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே!

 
"நேற்றுதான் இந்த இராமனையும், பிள்ளையாரையும் எரித்தோம். வீதிக்கு வீதி போட்டு உடைத்தோம். யாரும் கேட்கவில்லையே ஏன்? ஜாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2-வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப்பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97-பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3-பேராக உள்ளவர்களிடத்திலிருந்து தான் பிரசிடெண்ட் பார்ப்பார பிரசிடெண்டு - என்றால் என்ன அர்த்தம்?"


இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப் போடுகிறவர்களில் 100-க்கு 95-பேர் முட்டாள். பாக்கி 3-பேர் அயோக்கியன். 2-பேர் பார்ப்பான்! அவன் செலவு செய்கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக்கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறி வைத்து எலியைப் பிடிக்கிறார்களோ அதபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ண முடியாது. கீழ்சாதிக்காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமூதாய இழிவு ஒழிய ஜனநாயகம் மூலம் செய்ய முடியாது. சட்டசபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்? 

  

சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம் தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம் முடியம். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறு வழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.

  
பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண்டிலே ஒன்று பார்த்துக் கொள்கிறான் என்றுதான் அர்த்தம். நீங்கள் பத்திரிக்கையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலைகளில் 
100-க்கு 75-கூட கொலை செய்கிறவனும் தன்னை மாய்த்துக் கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு மாற்றிக் கொள்ள வேண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

  
ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கினார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!

  
ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார் காந்தியார் சொன்னார் "என் பிணம் கடலில் மிதந்த பிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு" என்று. பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கையின் தத்துவமே அப்படித்தான் வரிசையாகப்போகும். முடியவில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8- மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று? 
  

இப்போ இங்கே பார்ப்பார நாயகம் சாதிநாயகம் மதநாயகம் அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவதற்கு முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிபடுத்தி ஒழுங்குமுறை கைக்கொள்ள வேண்டும்.


ஜாதி, மதம் இவையெல்லாம் ஒழிந்தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். ஜாதிக்கு முதல் முட்டு கடவுள், இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எதற்கும் தீர்ந்தது; மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம் இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால் அதுதானே சாய்ந்துவிடும்! பொத்தென்று விழுந்துவிடும். அது சாய்த்தால் நாம் உருப்படியாக ஆகிவிடுவோம்.

----------------------------14-11-1958 அன்று மணச் சல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”- 27-11-1958

45 comments:

தமிழ் ஓவியா said...

பார்த்தசாரதி


சென்னைத் திருவல்லிக் கேணி என்றால் பார்த்தசாரதி கோயிலைத்தான் சொல்லு வார்கள். பார்த்தசாரதியாகிய கிருஷ்ணன் இந்தக் கோயி லில் மீசை முறுக்கோடு செதுக்கி வைக்கப்பட்டுள் ளான். இவருக்கு மீசைப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது பகல் பத்து ஆறாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில் லாமல் தரிசிக்கலாமாம்! (ஓட்டு மீசையோ!)

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணம் போல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் இருக்காதா? 108 திவ்ய தேசங்களில் இது 61ஆவது திவ்யதேசமாம். திருமாலின் பக்தனான சுமதி ராஜன் என்னும் மன்னனுக்கு பெருமாளை குருக்ஷேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக தரிசிக்க ஆசை யாம்; தன் ஆசையை பெரு மாளிடம் தெரிவித்தாராம். பெருமாளும் இங்கு தேரோட் டியாக காட்சி அளித்தாராம்  திருவல்லிக்கேணி பார்த்த சாரதியின் தலபுராணம் இது தான்.

சரி, இதுபோன்றவை எல்லாம் கடந்த காலத்தில் அதாவது இறந்த காலத்தில் நடந்ததாகத் தானே எழுதித் தள்ளியுள்ளார்கள். இப்பொ ழுதெல்லாம் ஏன் நடப்ப தில்லை? பார்த்தசாரதிக்கு சுமதி ராஜன் போன்ற பக் தர்கள் இப்பொழுதெல்லாம் கிடைக்கவில்லையா? ஏன் ஜீயராவது பெருமாளை வேண்டி அவரின்லீலை களைக் கொஞ்சம் நிகழ் காலத்தில் செய்து காட்டச் சொல்ல வேண்டியதுதானே?

இந்தப் பார்த்தசாரதிக்கும், திராவிட இயக்கத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று சொன்னால் சிலருடைய புருவங்கள் ஏறி இறங்கும் - ஆச்சரியம் செங்குத்தாக எழுந்தும் நிற்கும்.

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் சம காலத்தில் பணியாற்றினர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள தெப்பக்குளம் அசுத்த மாகி நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் மக்கள் நலம் கருதி குளத்தை மூடி ஆங்கோர் பூங்காவை நிறு வலாம் என்ற யோச னையைத் தெரிவித்தார் டாக்டர் டி.எம். நாயர். அவ்வளவுதான் பக்திப் பழ மான வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயருக்கு மீசை துடித்தது.

நாயரின் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்தார் தியாகராயர். இதே பார்த்த சாரதி கோயில் தெப்பக் குளத்தை மய்யமாக வைத்து இன்னொரு சண்டை இரு வருக்கும்.

அந்தத் திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்றார் தியாக ராயர் (1908) டாக்டர் நாயர் எழுந்து அப்படியானால் மற்ற கோயில் குளங்களுக்கும் அதே மாதிரி நகராட்சி செலவிலேயே தண்ணீர் விட வேண்டும். மேலும் இக்குளம் பொதுக் குளம் அல்ல, கோயிலுக்குச் சொந்தமானது. நல்லளவு வருமானம் வரும் கோயில், அதற்கு ஏன் சலுகை என்று ஒரு போடு போட்டார் டாக்டர் நாயர்.

டாக்டர் நாயர் லண் டனில் மறைந்தபோது இந்தக் கோயிலில் தேங்காய் உடைத் துக் குதியாட்டம் போட்டனர் பார்ப்பனர்கள்.

இந்த வைணவக் கோயில்கள்பற்றி ஒரு முக்கிய தகவல் உண்டு.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தமிழக அரசுக்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில்  108 வைணவக் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 கோயில்களில் மட்டும் ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் உள்ளனராம்.

அந்தப்பட்டியலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும் ஒன்றா?

- மயிலாடன்

இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகமாம்.

தமிழ் ஓவியா said...

அறிவுரை யாருக்கோ?

மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம்.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இதைத்தான் மற்றவர்களும் சொல்லுகிறார்கள்;  யோகாவை (இந்து) மதத் தோடு தொடர்புபடுத்த வேண்டாம் - சூரிய நமஸ் காரம் வேண்டாம், ஓம் வேண்டாம் என்றுதான் மற்ற வர்களும் சொல்லுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போர்

அமைதியான வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்டக் கூடியவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, போரை நடத்தச் சொல்லி தனது உறவினர்களையும், கொல்லு கொல்லு என்று ஆணையிடும் பார்த்த சாரதிகள் (கடவுள் கிருஷ் ணன்) உள்ள இந்து மதத்தின் ஆன்மிக லட் சணம் இதுதானா

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியத்திற்கு முன்னோட்டமா?
இராமாயணத்தைப்பற்றி அருங்காட்சியகமாம்!

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சொல்லுகிறார்




புதுடில்லி, ஜுன் 12_ இராமாயணா சர்க்குயூட் என்கிற பெயரில்  இராமா யணத்தைப் பரப்புவதற் காக பல சுற்றுகள் வாயிலாக பல்வேறு செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இராமாயணத் தில் கூறப்பட்டவைகளைக் கொண்டு  அயோத்தியா வில் இராமன் அருங் காட்சியகம் அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ள தாக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச் சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இராமன் அருங்காட்சியகத்தில் அரசியல்ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருப்ப தால்,  பிரச்சினைக்குரிய இடமாக உள்ள (பாப்ரி மஸ்ஜித்) பகுதிகுறித்த தகவல் எதுவும் இடம் பெறாது.

இதுவரை இல்லாத அளவில் அருங்காட்சிய கம் மாபெரும் அளவில் அமைத்திட திட்டமிடப் பட்டு வருகிறது. இராமா யண இராமனின் மகிமை களை சித்தரிப்பவையாக அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பிரச் சினைக்குரிய இடம் (பாப்ரி மஸ்ஜித்)குறித்து எந்த வகையிலும் குறிப் பிடாதவாறு அமைக்கப் படுகிறது.

இந்த அருங்காட்சிய கத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படுவதுடன் எவ்வளவு நிதி இருக்கிறதோ அந்த அளவுக்கு செய்யப்படும். அடுத்த ஆண்டில் இதைச் செய்துவிடுவோம்.

விரிவான திட்டத்தின் அறிக்கையுடன் விரைவில் இந்த பணியைத் தொடங்க உள்ளோம். டில்லியில் உள்ள சுவாமிநாராய ணன் அக்ஷார்தாம் கோயிலை மாதிரியாகக் கொண்டு அருங்காட்சியம் அமைத்திடத் திட்டமிடப் பட்டுள்ளது.

ஒளி, ஒலி அமைப்பு களுடன் காட்சிகள், படகு சவாரி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்கள்  மற்றும் தெய்வத் தன்மையுடன் தொடர் புள்ள தொல்பொருள் துறையின் பொருள்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.

தமிழ் ஓவியா said...

அரசு சார்பில் திட்டங்கள்

அயோத்தியாவை மாபெரும் கலாச்சாரத் தின் மய்யமாக உருவாக்கு வதற்கு அயோத்தியா மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் அரசு சார்பில் வளர்ச்சித் திட் டங்கள் செயல்படுத்தப் படும். உத்தரப்பிர தேசத்தில் தேர்தல் நடை பெற உள்ள சூழலில்   2017ஆம் ஆண்டில் அருங் காட்சியகப் பணிகள் நிறைவடையலாம். சுற்று லாவைத்தான் நாங்கள் வளர்க்கிறோம். அங்கு இராமன் கோயில் அமைக் கப் போகிறோம் என்று நாங்கள் கூறவில்லை.
ஏற்கெனவே அரசு சார்பில் ஒன்றுடன் ஒன்று தொடர்சங்கிலியாக பணியாற்றும்வகையில் அய்ந்து சுற்றுகள் செய லாக்கம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் வெவ் வேறான சுற்றுகள்குறித்து அறிவிக்கப்படும். அயோத் தியாவின் மய்யமான ஏதோ ஒரு பகுதியிலும், சித்திரக்கூட் பகுதியிலும் இராமாயணா சுற்று முதலில் தொடங்கப்படு கிறது. பஸ்தியில் உள்ள மகோடா பகுதிக்கும் கண்டிப்பாக செல்வோம். இராமன் தொடர்புடைய உன்னாவ் பகுதியில் ஜானகி குண்ட் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகளை செய்வதே எங்கள் திட்டமாகும்.
திட்டத்தின் ஒரு பகு தியாக, அரசே நடத்தக் கூடிய கலாச்சார செயல் பாடுகளாக இராமன் மற்றும் இராமாயணத்தை மய்யப்படுத்தி வெளிநாடு களிலும், இந்திய விழாக் களிலும் போக்குவரத்து வணிகப்பகுதிகள் உள் ளிட்ட பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

பிரசாத் திட்டம்

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சார்பில்  புனித யாத்திரை புத்துணர்வு மற்றும் ஆன்மீகம் பெருக்குதல் இயக்கத் திட்டம் (பிர சாத்) (Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive-PRASAD) எனும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட் டங்களுக்கான முன்வரை வுகளை அனுப்புமாறு ஏற்கெனவே உத்தரப்பிர தேச மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மகேஷ் சர்மாவை அமைச் சராகக் கொண்டுள்ள கலாச்சாரத்துறையிடம் அருங்காட்சியகத்துக்கான பணிகள் மற்றும் இரா மன் மற்றும இராமாய ணத்துடன் தொடர்பு டைய கலாச்சாரங்களை செயல்படுத்தவும் கோரப் பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கான செயலாளர் லலித் பவார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநில அரசிடம் பிரசாத் திட்டத்தின்கீழ் திட்டமுன்வரைவுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இத் திட்டம் மாநில அரசுகள் செய்ய வேண்டியத் திட்ட மாகும். ஆகவே, இதே போன்று மற்ற மாநிலங் களிடமும் இதுகுறித்து பேசு வோம் என்று கூறினார்.
இந்திராகாந்தி தேசிய கலை மய்யத்தின் (Indira Gandhi National Centre for Arts)
சார்பில் பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்றுவருகின்றன. கடந்த ஆண்டில் இராம்லீலா குறித்த ஆய்வுகளைக் கோரி இருந்தது.

இந்திய தொல் பொருள் துறையின் தலை வராக உள்ள ராகேஷ் திவாரி கூறுகையில் இரா மாயணா சுற்றுகுறித்த விவாதங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளது. அதன் செயல்பாடுகளில் சுற்றுலாத்துறை க்கு இயன்ற அனைத்து உதவி களையும் தொல்பொருள் துறை செய்யும். இந்த சுற்றுகளின் வளர்ச்சிக்கு எங்களை அரசு என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்வதற்கு நாங் கள் ஆயத்தமாக இருக் கிறோம். இராமாயணத்து டன் தொடர்பு கொண் டுள்ள நாட்டுப்புற கலை ஞர்கள் மற்றும் கலாச் சாரம் தொடர்பில் உள்ள அனைவரையும் ஒருங் கிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

 

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...

துக்ளக் பார்வையில் அய்.அய்.டி. விவகாரம்


இந்த வார துக்ளக் இதழில் (17.6.2015) அய்.அய்.டி. விவகாரம் எனும் தலைப்பில் தலையங்கமே தீட்டப்பட் டுள்ளது. அனேகமாகப் பார்ப்பனர்கள் அனைவரும் சுருதி பேதமில்லாமல் ஒரே ராகத்தில் வாசிக்கிறார்கள்.

(1) எடுத்த எடுப்பிலேயே என்ன எழுதுகிறது? அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் மனது வைத்தால் போதும் - ஒரு சாதாரண விஷயத்தைக்கூட மிகப் பெரிய பிரச்சினை ஆக்கி விடலாம் என்பது நம் நாட்டு ஜனநாயக வழி முறை ஆகி விட்டது. இப்படி சமீபத்தில் பெரிதாக்கப்பட்ட விவகாரம்; அய்.அய்.டி. மாணவர் அமைப்பு ஒன்றுக்கு, அக்கல்லூரி அளித்த அங்கீகாரம் ரத்தான சமாச்சாரம் என்று தலையங்கத்தின் தொடக்கப் பகுதி கூறுகிறது.

எது சாதாரண பிரச்சினை? சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் வியாசர், துர்வாசர், விவேகானந்தர் பெயர் களிலும், இராமாயணம், அரே கிருஷ்ணா, அரே ராமா என்ற பெயரில் எல்லாம் அமைப்புகள் தங்கு தடையின்றி நடைபெற அய்.அய்.டி. நிருவாகம் அனுமதிக்கும் பொழுது அம்பேத்கர் - பெரியார் பெயரால் உள்ள வாசகர் வட்டம் மட்டும் செயல்படக் கூடாது; அதன் அங்கீகாரம் ரத்து என்று சொல்லும் பொழுது அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் தலையிடத்தானே செய்யும் - அதில் என்ன தவறு இருக்க முடியும்?

துக்ளக் பார்வையில் இது சாதாரண பிரச்சினையாம். ஆம், அப்படி அவர்கள் நினைப்பில் கொழுப்பு இருப்ப தால்தான் இது  அசாதாரண பிரச்சினையாகி விட்டது.

சமூக நீதிக்கு எதிராகவும், பெண்களின் அடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சியைத் தாலி அறுப்புப் போராட்டம் என்றும் திசை திருப்பிய பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்ட போதெல்லாம் துக்ளக் ஆசிரியரின் எழுதுகோல் வேலை நிறுத்தம் செய்து விடும்.

2) எதிர்க்கப்படுவது பா.ஜ.க. அரசு என்பதாலும், அம்பேத்கர் - பெரியார் போன்ற பெயர்கள் சம்பந்தப்பட்டி ருப்பதாலும் இதை அரசியல் கட்சிகள் நல்ல வாய்ப்பாகக் கருதியதாலும் இது ஒரு தேசியப் பிரச்சினை ஆகி விட்டது. இதுவே இந்த அமைப்பின் பெயர் ஹெட்கேவர் - தீனதயாள் உபாத்யாயா மாணவர் வட்டம் என்று இருந் திருந்தால் ஒரு அரசியல் கட்சிகூட மூச்சு விட்டிருக்காது. அவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மதச் சார்பு தீட்டு வந்துவிடும் என்று பயந்து நடுங்கி அரசியல்வாதிகள் மவுனம் சாதித்து இருப்பார்கள் என்று எழுதுகிறது துக்ளக்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்  - பெரியார் விஷயங்களில் கை வைத்தால் அது மக்கள் பிரச்சினையாகி விடும் - தேசியப் பிரச் சினையாகி விடும் என்று காலந்தாழ்ந்தாவது சோ வட்டாரம் தெரிந்து கொண்டது வரை மகிழ்ச்சியே!

அந்த அமைப்பின் பெயர் ஹெட்கேவர், தீனதயாள் உபாத்யாயா மாணவர் வட்டம் என்று இருந்திருந்தால் ஒரு அரசியல் கட்சிகூட மூச்சு விட்டிருக்காது - என்ற துக்ளக் எழுதுகிறதே - அதையே திருப்பிப் போட்டுப் பார்ப்போம்! துக்ளக் சொல்லுகிற இந்தப் பெயர்களில் அமைப்பு இருந்தால் அய்.அய்.டி. நிருவாகம் நடவடிக்கை எடுத்திருக்குமா என்ற எதிர் கேள்வியை எடுத்து வைக்க விரும்புகிறோம்.

வசிஷ்டர் துர்வாசர் விவேகானந்தர் பெயரால் வாசிப்பு வட்டங்கள் ஆங்கே நடந்து கொண்டுதானே இருக்கின்றன.

ஹெட்கேவர் - தீனதயாள் உபாத்யாயா பெயரில் வாசிப்பு வட்டம் இல்லை என்றாலும் அவர்களின் கருத் துகள் வேறு பெயர்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

3. மூன்றாவது அம்பேத்கரும் பெரியாரும் குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் கருத்து மாறுபட்டு இருந்தனர் என்றும் அப்படி இருக்கும்பொழுது அந்த இருவர் பெயராலும் வாசகர் வட்டம் அமைப்பு சரிதானா என்ற கேள்விமுன் வைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கே உரித்தான இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த இடத்தில் கவனிக்கத் தவறி விடக் கூடாது.

ஜீயர்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும்கூடத்தான் கருத்து வேறுபாடு உள்ளது - அதற்காக சர்ச்சைகள் செய்கிறார்களா இவர்கள்?

இந்த இரு தலைவர்களும் குறிப்பிட்ட பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்; ஆனால் சமூக நீதிப் பிரச்சினையிலும், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதியை, வருணாசிரமத்தை கட்டிக் காக்கும் இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலேயும் இருவரும் ஒரே கருத்தினைத்தான் கொண்டிருந்தனர் என்பதை மறுக்க முடியுமா?

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, பவுத்த மார்க்கத்தைத் தழுவியபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளை துக்ளக் தினமணி வட்டா ரங்கள் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். அப் பொழுது தெரியும் தந்தை பெரியார் - அண்ணல் அம் பேத்கர் ஆகியோரின் அடிப்படை நோக்கம் என்ன என்பது. வைக்கத்தில் தந்தை பெரியார் தீண்டாமையை எதிர்த்துப் போராடினார் என்றால் அதன் தாக்கத்தின் அடிப்படையில் மகத் என்ற இடத்தில் பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இறங்கச் செய்யும் போராட்டத்தை அம்பேத்கர் நடத்தினாரே!

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனு தர்மத்தை அம்பேத்கர் கொளுத்தினார் என்றால் அதே போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டே! அம்பேத்கர் கீதையை ஒரு முட்டாளின் உளறல் என்றார் என்றால் அதே கருத்துதானே தந்தை பெரியாருக்கும், அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகத்துக்கும்.  (கீதையின் மறுபக்கம் என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர் எழுதி வெளியிட்டுள்ளாரே - ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதே -இது வரை ஒரே ஒரு வரியாவது அதற்கு மறுப்பு வெளி வந்ததுண்டா?)

என்னதான் பார்ப்பனர் கூட்டம் இந்தத் தலைவர்களிடையே பிரித்தாளும் தந்திர உபாயத்தைப் பயன்படுத்தி னாலும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை அறிந்தோர், அதன் முனையை மழுங்கச் செய்து கூர்மையாகச் செயல்படுகிறார்கள் - இது ஆபத்துக்கு அறிகுறி என்று ஆதிக்க வர்ணக் கூட்டமான ஆரியம் நடு நடுங்குகிறது என்பது தான் உண்மை.

4) கிண்டி அய்.அய்.டி. வளாகத்துக்குள் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  27 சதவீதம் கொண்டு வந்ததற்கான அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் உருவப் பொம்மையை அய். அய்.டி. உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்கள், பார்ப்பனப் பேராசிரியர்களின் ஆசியோடு கொளுத்திய போது இந்தத் துக்ளக் கூட்டம் கண்டித்தது உண்டா?

டில்லியில் எய்ம்ஸ் வளாகத்துக்குள் 17 நாட்கள் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை பேராசிரியர்களும், மருத்துவர்களும், மாணவர்களும் சட்ட விரோதமாக போராட்டம் நடத்தினார்களே - இந்த அக்கிரகாரக் கூட்டமும் அவர்கள் ஏடுகளும் மவுன சாமியார்களாக இருந்தது ஏன்? அவர்கள் போராட்டத்துக்கு விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டியது ஏன்? அதுதான் மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது!

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் வாக்குகளேபி.ஜே.பி.யின் குறி!

- மஞ்சை வசந்தன்


இந்துத்வா ஆட்கள் திடீரென அம்பேத்கரை தூக்கிப்பிடித்துத் துதிபாடத் தொடங்கியுள்ளனர். அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடங்கி அய்.அய்.,டி.க்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டவேண்டும் என்பது வரை அம்பேத்கர் மீது அவர்களுக்கு பற்று, பக்தி நிலைக்குப்போனதுபோல் பேசவும், புகழவும் தொடங்கியுள்ளனர்.

அம்பேத்கர் இவர்களுக்கு நேர் எதிரான கொள்கை உடையவர். இவர்கள் எதைக்காக்க வேண்டும், வளர்க்க வேண்டும், நிலை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அதை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றவர் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், இந்து முன்னணி பி.ஜே.பி. என்று இந்துத்வா அமைப்புகளுக்கு இந்து மதத்தை வளர்க்க வேண்டும், திணிக்க வேண் டும், இந்துத்வா ஆட்சியை கொண்டு வர வேண்டும், இந்து ராஷ்ட்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற வேகமும் வெறியும் இரத்தத்தில் ஊறிப்போன உணர்வு. அதற்காக கலவரம், பித்த லாட்டம், மோசடி, கீழறுப்பு, கொலை, வன்முறை, திரிபு, வதந்தி, வஞ்சகம், கபடம் என்று எத்தனையுண்டோ அத்தனையும் செய்யக்கூடியவர்கள், செய்து வருபவர்கள்! ஆனால் அம் பேத்கர் இந்துமதத்தை ஒழிக்க வேண் டும், இந்துமத வேத ஸ்மிருதிகளை ஒதுக்க வேண்டும். இந்துமதத்தை விட்டு தாழ்த்தப்பட்டோர் வெளியேற வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறுகிறார்.

இந்துமதத்தின் அடிப்படையே பிரித்து வைப்பது தான். இது சந்தேகத் திற்கு இடமில்லாத உண்மை, பொது வாக் கூறினால், இந்துமதமும் சமூக ஒற்றுமையும் ஒன்றுடன் ஒன்று சேரவே முடியாது. இந்துமதம் பிரிவினையை அதாவது சமூகரீதியான ஒற்றுமையின் மையை நம்புகிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகப் பிரிவினையை அதுவே உருவாக்குகிறது.

இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் அவர்கள் இந்துமதத் தைத் தூக்கியெறிய வேண்டும். இந்துக்களின் ஒற்றுமைக்கு எதிரான தடை இந்து மதந்தான். சமூக ஒற்று மைக்கான உணர்வை இந்துமதம் ஏற்படுத்தவே முடியாது.

(காங்கிரஸூம், காந்தியும் தீண்டத்தகா தாருக்குச் செய்தது என்ன? - பக்கம் 175)

நான் இந்துவாகப் பிறந்ததிருந்தாலும் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதி யேற்கிறேன். இந்து மதத்தில் இருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது. ஏற்றத்தாழ்வு என்ற கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டது. இந்துமதம் ஆதிக்கச் சாதிகளுக்கு வேண்டுமானால் அது சாதகமாக (வசதியாக) இருக்கலம்.

ஒரு பார்ப்பனக் குழந்தை பிறந்தால் அது எந்த நீதிமன்றத்தின் நீதிபதியாகலாம் என்று குறிவைக்கிறது. ஆனால் ஒரு துப்புரவு பணியாளர் குழந்தை எங்கே துடப்பக்கட்டை கிடைக்கும் என்று ஏங்கு கிறது. இவை இந்துமத சாதியமைப்புகளின் விளைவேயாகும். இப்படிப்பட்ட அமைப்பு முறையில் நாம் எத்தகைய முன்னேற்றத் தைக் காண முடியும்? (15.10.1956 இல் நாகபுரியில் அம்பேத்கர் உரை)

இந்த உரையாற்றிய கூட்டத்தில்தான் 10 லட்சம் மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தார்.

இப்படிப்பட்ட இந்துமத வெறுப்பாள ரான அம்பேத்கரை இந்துத்வாவாதிகள் தூக்கிப்பிடித்துப் புகழக் காரணம், அவர் மீதுள்ள மதிப்பால், கொள்கைப்பிடிப்பால் அல்ல, அம்பேத்கர் பற்றுக்கொண்ட அவரது இனமக்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உள்ளனர். அவர்களைக் கவர இந்த மோசடி நாடகத்தை அவர்கள் நடத்துகிறார்கள் அவ்வளவே!

தலித்துகள் இந்துக்களா?

இந்துமதத் தத்துவப்படி தலித்துகள் இந்துக்கள் அல்லவே. இந்துமதம் இந்துக் களாக பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்குப்பிரிவுகளைத் தானே சொல்கிறது. தலித்துக்கள் இந்து மதப்பிரிவிலே வரவில்லையே! அவர்கள் பஞ்சமர்கள், தீண்டத்தகாதவர்கள், இந்துக் களோடு சேர்ந்து வாழத்தகாதவர்கள், ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாழ வேண்டியவர்கள் என்றுதானே இந்துமதம் சொல்கிறது. அப்படியிருக்க தாழ்த்தப் பட்டவர்கள் (தலித்துகள்) எப்படி இந்துக்கள் ஆவர்?

தமிழ் ஓவியா said...

இந்துமதத்தின் அடித்தட்டு மக்கள் சூத்திரர்கள் என்கிறது இந்துமதம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தில் யார் என்பதே இல்லை. அவர்கள் கடவுளின் எந்த உறுப்பிலிருந்து பிறந்த வர்கள் என்பதும் சொல்லவில்லை. இந்து மதத்தில் அவர்களுக்குத் தொடர்பிருந் தால் மற்றவர்களுக்குச் சொன்னது போல் இவர்களுக்கும் சொல்ல வேண்டு மல்லவா?

ஆக ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் புறம்பான, ஒதுக்கப்பட்ட மக்களே தாழ்த்தப்பட்டவர்கள். அதுமட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்துகளாலும் தீண்டத் தகாதவர்கள். இந்துக்களுக்கு அடிமை வேலை செய்யும் இழி மக்கள் என்பது தானே இந்து மதத்தின் நிலைப்பாடு. அப்படியிருக்க தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி இந்துக்கள் ஆவர்?

ஆனால் இந்துத்வா வாதிகள் தாழ்த் தப்பட்டோர் வேறு மதத்திற்குச் சென்று விட்டால் தாங்கள் சிறுபான்மையாகி விடுவோம் என்ற அச்சத்தில் தாழ்த்தப் பட்டவர்களை இழுத்துப்பிடித்து இணைத் துக் கொள்கின்றனர். அவர்களை கறி வேப்பிலையாகக் கையாளுகின்றனர்.

அதே நோக்கத்தில் தான் தற்போது, தாழ்த்தப்பட்டோரைக் கவர அவர்களின் வாக்குகளைப் பெற அம்பேத்காரைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அம்பேத்கா ரைப் பற்றி சங்கராச்சாரி உள்ளிட்ட இந்துமதத்தவர்கள் எப்படிக் கேவலப்படுத் தினர், இழிவுப்படுத்தினர் தெரியுமா? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

புதிய இந்துச்சட்டம் என்ற பெயரில் அம்பேத்கர் ஒரு ஸ்மிருதியை எழுதியி ருக்கிறார். அதைச் செய்யும் உரிமை அம்பேத்கருக்குக் கிடையாது. பால் எவ்வளவு தான் புனிதமானது என்றாலும் சாக்கடை வழியாக வந்தால் அதை யாரும் ஏற்பது இல்லை. தீண்டத்தகாத வராகிய அம்பேத்கர் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவதும் அப்படித்தான்.

(ஆதாரம்: நவ்பாரத் 12.01.1950) ஆக, அம்பேத்கார் தீண்டத்தகாதவர் என்பதால் அவர் சாக்கடைக்குச் சமமான வர் என்றார் சங்கேஸ்வர் பீடத்தின் சங்கராச்சாரி. சாக்கடைக்கு சமமான சங்கராச்சாரி சாஸ்திரங்களை தொட உரிமையில்லை என்கிறார்.

இதுமட்டுமல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், வாஜ்பாய் தலைமையில் 1999 -2004ல் தொழில் அமைச்சராய் இருந்தவருமான அருண் ஷோரி, டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி(Worshipping Flase Goods) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதற்கு தாழ்த்தப் பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்துத்வா சக்திகள் எந்த அளவிற்கு அம்பேத்கர் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

1952இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் பம்பாய் நாடாளு மன்றத் தொகுதியில் (ரிசர்வ்) அம் பேத்கர் போட்டியிட்டார். அப்போது இந்துத்வா அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பாகக் கடும் பரப்புரையில் ஈடுபட்டு அவரை தோற்கடித்தனர்.

இப்படிப்பட்ட இந்துத்வா பேர் வழிகள் இன்றைக்கு அம்பேத்கரை வானளாவப் புகழ்வதும் அவர் இந்து கலாச்சாரத்தை நேசித்தவர் என்று அயோக்கியத்தனமாய் கருத்துப்பரப்பு வதும் செய்வதோடு அய்.அய்.டி.க்கு அம்பேத்கர் பேர் வைக்க வேண்டும். அம்பேத்கருக்கு விழா கொண்டாட வேண்டும் என்று நாடகமாடுகின்றனர்.

இவையெல்லாம் எதற்கு? இரண்டு காரணங்களுக்காகத்தான்!

1) இந்து மதத்தை விட்டு தாழ்த்தப் பட்டோர் சென்றுவிடக் கூடாது. சென்றால் இதுமதம் காணாமல் போய் விடும். ஆரிய ஆதிக்கம் உதிர்ந்து விடும்.

2) இந்தியா வெங்கும் தாழ்த்தப் பட்டோர் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களின் வாக்குரிமைகளைப் பெற வேண்டும். ஆரியத்தின் வழக்கம் இது தானே. எதிர்ப்பது எதிர்க்க முடிய வில்லையென்றால் அவர்களையும் அய்க்கியப்படுத்தி அழிப்பது. இப்படித் தானே புத்தத்தை அழித்தனர். இப் போது தாழ்த்தப்பட்டோரை அழிக்க, ஒடுக்க, வீழ்த்த அணைத்து அழிக்கும் யுக்தியைக் கையாளுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத் தோழர் களே! எச்சரிக்கையாய் இருக்க வேண் டிய நேரம் இது. வஞ்சக வலையில் வீழாது விழிப்போடிருந்து அம்பேத்கர், பெரியார் வழியில் நின்று மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும். ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103139.html#ixzz3cs33neuh

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் நீதி விசாரணை தேவை! கனல் கக்கிய கருத்தரங்கம்


சென்னை அய்.அய்.டி.யில் கடந்த ஒரு வருடமாக 70-க்கு மேற்பட்ட மாண வர்கள் கொண்டு மக்களைப் பாதிக்கக் கூடிய பொருளாதார பண்பாட்டு விஷயங் களை விவாதிக்கக்கூடிய அமைப்பாக இயங்கிவந்த அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை திடீரென்று அய்.அய்.டி. நிர்வாகம் தடை செய்ததைக் கண்டித்து ஜூன் 5-ஆம் தேதி சென்னை சி.அய்.டி.காலனியில் உள்ள கவிக்கோ அரங்கில சர்நிகர் அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது.

அம்பேத்கர், பெரியார் கருத்துகளை யும் சிந்தனைகளையும் நேரடியாக எதிர்கொள்ளமுடியாத அய்.அய்.டி. நிர்வாகம் இப்படி மறைமுகமான தாக் குதல்களில் ஈடுபட்டு ஒடுக்கப் பார்க்கிறது என்று பத்திரிகையாளர் குமரேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த...

அய்.அய்.டி.நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்தினால், நம்மை எல்லாம் குண்டர் சட்டத்தில் அடைக்கச்சொல்கிறார் பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக குண்டுபோட்டவர்களை என்ன செய்யச் சொல்கிறார் எனக் கேட்டார் சரிநிகர் ஒருங்கிணைப்பாளர் ச.தமிழ்ச் செல்வன். இதன்பின் கருத்தாளர்கள் பேசத் தொடங்கினர்.

ஞாநி: காந்தியம், பெரியாரியம், அம் பேத்கரியம், மார்க்சியம் கொள்கைகளை இந்துத்துவா சக்திகள் தடுக்கப்பார்ப்பதன் வெளிப்பாடுதான் அய்.அய்.டியில் அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட் டத்தை தடை செய்தது. எந்திரத்தனமான வாழ்க்கைக்குப் போகாமல் எழுச்சியோடு போராட வேண்டிய தருணம் இது.

இந்திரா பார்த்தசாரதி: மிகவும் அவமானகரமாக இருக்கிறது. டில்லி அரசுக்கும் தமிழக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. மத்திய அரசின் செயலை கண்டு கொள்ளாமல் அமைதி காக்கிறது மாநில அரசு. குஜராத்தில் இருந்த மோடியைவிட இப்போது இருக் கும் மோடி பார்ப்பதற்கு காந்தியைப் போல் தெரிகிறார். அதை நினைத்தால் தான் மிகவும் பயமாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மனுஷ்யபுத்திரன்: பெரியார் தான் பிரச்சினை என்கிறார்கள். அப்படியென் றால் அம்பேத்கர் பிரச்சினையில்லையா? இந்துத்துவா அரசியலுக்கு எதிராக அம் பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் அளித்திருக்கிறார்களா? பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது இந்துத்வா சக்தி.

அருள்மொழி: மாணவர்கள் மத்தியில் - குறிப்பாக அய்.அய்.டி.போன்ற மய்யங்களிலும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை விதைக்கவும் போராட்டக் களத்தை எப்படி உருவாக்குவது எனவும் இருவித கவலை, தயக்கம், தடை இருந்து வந்தது. ஆனால் அதை எல்லாம் உடைத்தெறிந்த அய்.அய்.டிக்கு நன்றி.

அ.மார்க்ஸ்: ஆர்.எஸ்.எஸ். இயக் கங்கள் தங்களது கருத்து யுத்தத்தை பல்வேறு வடிவங்களில் நடத்தி வரு கின்றன. அதில் ஒன்று தான் பல்வேறு பெயர்களில் வலைதளங்களை உரு வாக்கி செயல்படுவது. அதில் குறிப்பாக அய்.அய்.டி.யில் கலைப்பாடங்கள் தேவை யில்லை என்ற கருத்தை பரப்பி வரு கிறார்கள். காரணம், அதில் ஆரியன் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பல்வேறு உண்மைகள் இருக்கின்றன.

ஓவியா: அய்.அய்.டியில் 212 பேராசிரி யர்களில், 209 பேர் முற்பட்ட சமூகத்தினர், ஓ.பி.சி - 0, தலித்து - 3, எஸ்.டி. - 0, அடுத்து 91 இணை பேராசிரியர்களில் 88 பேர் முற்பட்ட சமூகத்தினர், தலித் - 3 அவ் வளவுதான். 177 உதவி பேராசிரியர்களில் முற்பட்ட சமூகத்தினர் - 165, ஓ.பி.சி - 7, தலித் - 4, எஸ்.டி. - 1 மேலும் மாணவிகள் மிகக்குறைவு. இதுதான் அய்.அய்.டியில் இருக்கும் நிலைமை இதுவரை 20 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பது குறித்தெல்லாம் நீதிவிசா ரணை செய்து வெளிக்கொண்டுவர வேண்டும்.

க.ரவிக்குமார்: இந்த விஷயத்தில் இந்துத்துவ சக்திகள் பெரியாரை விமர்சித்து விட்டு அம்பேத்கரை பெரிய அளவில் விமர்சிக்காமல் இருப்பதற்கு காரணம் பீகார் தேர்தல் வரப்போகிறது. தலித் ஓட்டு முக்கியம் என்றும் தலித்துகளை தன்வயப் படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஏமாறுகிறவர்கள் அல்ல தலித்துகள்.

ஜி.ராமகிருஷ்ணன்: சென்னை அய்.அய்.டியில் அம்பேத்கர் - பெரியார் வட்டத்தை தடை செய்திருப்பதன் மூலம் அய்.அய்.டியிலும், அம்பேத்கர் வாசிப்பு வட்டம், கல்கத்தா, மும்பையில் அம் பேத்கர் - பெரியார் - ஜேதிபாபுலே வாசிப்பு வட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் - பெரியார் - சிங்காரவேலர் வாசிப்பு வட்டம் என இந்தியா முழுக்க தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜாதி - மத வெறியை மட்டுமல்ல உழைப்பாளிகளின் நிலத்தை பிடுங்குவது குறித்த மாணவர்களின் விமர்சனம்தான் மத்திய அரசின் கண்ணை உறுத்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த தொடர் தாக்குதல்களுக்கு மக்கள் மத்தியில் கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்து ஒன்றுபட்டு போராட வேண்டும்.

அய்.அய்.டியில் ஆதிக்க சக்திகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இடைவிடாமல் சமூக நீதிக்காக போராடி வென்ற பேரா சிரியை வசந்தா கந்தசாமி இக்கருத் தரங் கில் பங்கேற்றுப் பேசிய அனைவருக் கும் சிறப்பு செய்தார்.

- மனோ

நன்றி: நக்கீரன் (ஜூன் 10-12)



Read more: http://www.viduthalai.in/e-paper/103142.html#ixzz3cs3FN2DM

தமிழ் ஓவியா said...

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு திராவிடர் கழகம் ஆதரவு

மத்திய மதவாத பி.ஜேபி. அரசுக்கு அ.தி.மு.க. ஆட்சி துணை போய்க் கொண்டிருக்கிறது

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேட்டி



தஞ்சை, ஜூன் 13- சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களுக்கு திராவிடர் கழகம் ஆதரவு தரும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

தஞ்சையில் இன்று (13.6.2015) காலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்திலும் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதை அறிவித்தார்.

நடைபெற இருக்கும் சென்னை இராதா கிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தல் என்பது திணிக்கப்பட்ட இடைத் தேர்தலாகும். இடைத் தேர்தல் என்பதைவிட கடைத் தேர்தல் என்று சொல்ல வேண்டும்.

அதாவது கடையில் சென்று பொருள்களை வாங்குவது போல வாக்குகள் வாங்கும் தேர்தல் என்று பொருள்.

மற்ற கட்சிகள் இந்த இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இடதுசாரிகள் முன் வந்திருப்பதை திராவிடர் கழகம் வரவேற்கிறது; ஆதரிக்கிறது. மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சினைகளில் இடதுசாரிகள் நம்மோடு நெருக்கமாக இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சி. மகேந்திரன் அவர்களை ஆதரிப்பது என்பதை அறிவிக்கிறோம்.

மத்தியில் ஆளும் மதவாத பி.ஜே.பி. ஆட்சி, மதவாத கொள்கைகளை தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. மாறாக பல்வேறு பிரச்சினைகளிலும் மத்திய மதவாத பி.ஜே.பி. அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது.

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கட்சிகள் சி. மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்

இந்த நிலையில் நமது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும். இந்த நேரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளும் தங்களின் முடிவினை மறுபரிசீலனை செய்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சி. மகேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கொள்ளுவதோ, தள்ளுவதோ மற்றவர்களின் உரிமை ஆனால், இதனை சொல்வது எங்களின் கடமை! உரிமை!

இவ்வாறு திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103197.html#ixzz3cwPq43jH

தமிழ் ஓவியா said...

மணவை முஸ்தபா அவர்களுக்கு வாழ்த்து!



மணவையார் அமெரிக்கா வந்து தமிழ்ச்சங்கப் பேரவையிலும் மற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழின் பெருமையை நிலை நாட்டினார். தமிழுக்காகத் தனக்கு கிடைத்த வேலையை உதறி தமிழால் முன்னேறி உலகம் போற்ற அய்க்கிய நாட்டுப் பணியை ஆற்றிய மேன்மையை அறிவோம்.

இங்கு எங்கள் பலர் இல்லங்களிலே அவர் தங்கியிருந்தமை எங்கட்கெல்லாம் பெருமை. பேச்சுத் திறனை இழந்தாலும் மூச்சு தமிழுக்கே என்று வாழும் பெருந்தகையே உமை வாழ்த்த வார்த்தைகள் பல நீர் எழுதிய பல அறிவியல் களஞ்சியங்களிலே உண்டு ஆனாலும் அதற்கும் மேலும் ஒரு வார்த்தை அறிவியல் வள்ளுவன். வாழிய நீவிர்! - சோம.இளங்கோவன்
FeTNA, Past President, Periyar International USA

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் அம்பேத்கர்- பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் தொடக்கவிழா


சென்னை, ஜூன் 12_ சென்னை அய்.அய்.டி. மாண வர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. அதனால், நாடுதழுவிய அளவில் பெருமளவில் எதிர்ப்புகள் வெடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் மட்டுமன்றி மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாஜகவின் மத்திய அரசையே நிலைகுலையச் செய்தது. காரணம் அய்.அய்.டியில் விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், மும்பை, டில்லி, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங் களிலும் மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், நாடுமுழுவதும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டங்கள் மிகுந்த எழுச்சியை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவந்தன. வேறு வழியின்றி ஆளும் பாஜகவின் அரசு தன் கையாலாகாத தனத்தை மறைத்துக்கொண்டு, இந்துத்துவாவின் வாலை சுருட்டிக்கொண்டு, தடைக்கான காரணமாக ஒப்புக்கு சப்பான காரணங்களைச் சொல்லியது. அய்.அய்.டி.நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகள் 18.4.2015 அன்று உத்தரவானது என்றும், ஆனால், அதற்கு முன்பே 14.4.2015 அன்று சென்னை அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதால், அந்த உத்தரவின்மூலம் அவ்வமைப்புக்கு விதிக்கப்பட்டத் தடையை விலக்கிக்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் பெயரில் அமைப்பு அய்.அய்.டி. நிறு வனத்துக்குள் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும், சென்னை அய்.அய்.டி மாண வர்களின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் இந் துத்துவா செயல்திட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்ததுதான் முதன்மையான காரணமாகும்.

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களின் பெயரில் அமைப்பு இருக்கக்கூடாது என்கிற பாசிச பாஜகவின் எதேச்சாதிகாரத்துக்கு சாட்டைஅடி கொடுக்கும்வகையில் மேலும் மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் நேற்று (11.6.2015) அன்று ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேட் அரங்கில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் தொடங்கப்பட்டது. வழக்குரைஞர் வை.இளங்கோவன் வரவேற்றார்.

அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட தொடக்க விழாவில் உயர்நீதிமன்றத்தின் வழக் குரைஞர்களால் அரங்குநிறைந்தது. மூத்த வழக்குரை ஞர்கள், இளம் வழக்குரைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் அமைப்பில் இணைந்து ஒடுக்கப்பட்ட வர்களின் குரல்வளையை எவரும் நெரித்துவிட முடியாது என்று அறிவிக்கும்வகையில் இருபால் வழக்குரைஞர் களும் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். தொடக்க உரையில் அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரி யார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட அமைப்பை தோற்றுவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர்களை பெரிதும் வாழ்த்திப் பாராட்டினார். மேலும், இவ்வமைப்பு போல் பல்வேறு இடங்களிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் தம்முடைய விருப்பத்தையும் தெரிவித்தார் வழக்குரைஞர் துரை.அருண் நன்றி கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், வழக்குரைஞர் சமூக பேரவை தலைவர் கே.பாலு, வழக்குரைஞர்கள் நளினி, ஆ.வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், சென்னியப்பன், அருள்மொழி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

ஹோசிமின் கூறுகிறார்
பழம் பெருமைப் பேசாதே!

கம்யூனிஸ்டுகள் எளிமையாகவும், பணிவாகவும் எத்தகைய கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு மற்றவர்களுக்கு முன்னதாக உழைப்பைப் பற்றி சிந்திப்பவர்களாகவும், மகிழ்ச்சியோடு இருப்பதை மற்றவர்களுக்குப் பின்னர் எண்ணுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரட்சியாளர்கள் பழம் பெருமை பேசுவது கூடாது

- பீப்பிள் டெமாக்கிரசி

தமிழ் ஓவியா said...

பெண்மைச் சமத்துவம் பேணல் நன்றே!
-----வா.மு.சேதுராமன்



பெண்ணடிமைச் சின்னம்தான் தாலி என்றால்
பீடுடையார் அதை மறுத்துச் சொல்வா ராமோ?
கண்ணுடையான் சிவபெருமான் தன்னில் பாதி
கற்பகத்தாய் உமையாளை வைத்துப் போற்றும்
மண்ணுடையார் பெண்கட்கு மட்டும் தாலி
மாட்டைப்போல் மூக்கணாங்கயிறுமாட்டி
நுண்ணறிவில் இடர்ப்பாட்டால் தாலி கட்ட
நுவன்றிட்டால் வருங்காலம் ஏற்ப துண்டோ

புண்ணியமும் பாவமும்அத் தாலி இல்லை
பொற்கொடியர் கற்புநெறி ஐயம் கொண்டு
கண்ணியமில் தாலியினை மாட்டி விட்டுக்
காரிகையர் அடிமையாக ஞாலம் தன்னில்
வண்ணஎழில் ஓவியத்தைச் சிதைத்த லைப்போல்
வன்கொடுமை செய்பவர்கள், மாதர் தம்மை
எண்ணில்லா இடும்பைக்கே ஆளாக் கும்அவ்
இயற்கைக்கு முரணா ம்அத் தாலி அன்றோ?

தொல்காப்பி யர்காலத் தின்முன் தாலி
துணைவியர்க்கோ அடையாள மாக இல்லை
பல்விதத்தும் பொய்புரட்டுச் சூழ வாழும்
பாங்குக்குத் தக்கவழிக் கரணம் கண்டார்
எல்லையிலாத தம்வீரம் காதல் ஆக
இவையிரண்டு மேதமிழர் வாழ்வுக் கேதான்
நல்லிரு வெல் கண்களாகப் போற்றிக் காத்தல்
நாடுகாதல் வாழ்விலாண்பெண் சமமே கண்டார்

அடலேற்று வீரமகன் செறிந்த காட்டுள்
அதி எதிர்க்கும் வேங்கை கள்வென்று கொண்ட
இடம்தந்த பொருள் களபல் செயல்கள் ஆண்மை
ஏற்றதிரு அடையாள மாக காதல்
மடலவிழ்பூங் கோதைக்குப் பரிசு தந்தான்
மாவேற்றோ டேசண்டை போட அஞ்சும்
தடந்தோள்கள் இல்லானை மங்கை நல்லாள்
தான்விரும்பாள் என்றெல்லாம் பாக்கள் உண்டே!

வீரத்திற் கொருகாலம் மதிப்பு பின்னாள்
வேண்டறிவு விவேகத்தின் மதிப்பே விஞ்சி
நேர்காதல் ஆண்பெண்கள் சமம்என் னும்நல்
நிலைவந்த காலத்தில் பெண்கள் ஆண்கள்
சேரத்தான் முறைவரைய றைகள் என்னும்
திருப்பூட்டின் வழக்கங்கள் அரங்கே றிற்றே
பாரம் பெண் மக்களுக்கே ஆண் களுக்கே
பதில்சுமை என்? பகுத்தறிவு கேட்கும் கேள்வி!

எம்மதத்தும் இந்துமதம் போன்ற பெண்மைக்கு
இரங்காத கொடியநிலை இல்லை! அந்த
அம்மதங்கள் தாலியைஓர் பொருட்டாய் எண்ணா!
அமெரிக்கா ஐரோப்பா நாட்டுப் பெண்கள்
தெம்பாக ஆண்கள் போல் தாலி இன்றி
தேவைஒருவ னுக் கொருத்தி யாக வாழும்
செம்மைதேர்நெறிவாழ்வு நடத்தல் கண்டோம்!
தேவைதாலி கற்புகாக்கும் என்ற  பொய்யே!

மாதருக்குத் தாலியென்றால் ஆண்களுக்கென்?
மறுமலர்ச்சிக் காலத்தில் மானம் கற்பு
தோதிருபா லவர்க்குமொன்றே தேவை மாற்றம்
திகழ்காலம் தாலியினை அகற்றல் பெண்மை
காதல்நெறிக் கற்புநெறிச் சமத்துவத்தைக்
காட்டுகின்ற விழிப்புணர்ச்சி தேவை! தேவை!
ஈதறத்தை செயல்முனைந்த தி.க. வாழ்க!
எம்தமிழர் வீரமணி வாழ்க மாதோ!

நன்றி: தமிழ்ப் பணி மே 2015

தமிழ் ஓவியா said...

உயிரைக் காக்கும் தலைக்கவசம்


இரு சக்கர வாகன ஒட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் (Helmet) அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்படி ஆணை பிறப்பிப்பது ஒன்றும் புதியதல்ல. இதற்குமுன் இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அது ஏட்டளவில் இருந்ததே தவிர, நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இது போன்ற சட்டங்கள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்பதை வாகன ஒட்டிகள் முதலில் உணர வேண்டும், ஏதோ அரசு தேவையில்லாமல் இது போன்ற ஆணைகளைப் பிறப்பிப்பதாகக் கருதக் கூடாது.

மருந்து சாப்பிடுவது நோய் தீர்வதற்காகத்தானே தவிர, டாக்டர் வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற் காகவா மருந்து சாப்பிடுகிறோம்?

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு என். கிருபாகரன் வரும் ஜூலை முதல் தேதி முதல் இரு சக்கர வாகன ஒட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திட வேண்டும் என்ற தீர்ப்பே கொடுத்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.

வாகனங்கள் பெருக்கம் வாயு வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடைபாதைகளும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில்களும், கடைகளும் அவற்றை நிரப்பி விடுகின்றன.  நடைப் பயணிகள் பாடு திண்டாட்டம் தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2006-2007இல் இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து  3 ஆயிரத்து 426 ஆகும். 2013-2014ஆம் ஆண்டிலே இது ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக வளர்ந்து விட்டது.

அதுவும் இளைஞர்கள் கைகளில் சிக்கிய இந்த இரு சக்கர வாகனங்கள் போகும் வேகம் பார்ப்பவர்களுக்குப் பெரும் திகிலைத்தான் ஏற்படுத்துகிறது. போதும் போதாதற்கு டாஸ்மாக் என்னும் அதி வேக ஊக்க மருந்தும் சேர்ந்து விட்டால் கேட்கவும் வேண்டுமோ!

தலைக்கவசம் அணியாத காரணத்தால் 2005ஆம் ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 1670; 2014ஆம் ஆண்டிலோ 6419 என்று பல மடங்கு உயிரைக் குடித்து விட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிர் இப்படி போதிய பாதுகாப்பு நடவடிக்கையின்மையால் பரிதாபமாக மலிவாக இழக்கப்படுவதை நினைத்தால் பெரும் வேதனை.

தொலைக்காட்சிகள் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் சத்தம் போட்டுப் பேசுகின்றன. இது போன்ற விழிப்புணர்வுக்காக சில நொடிகளை ஒதுக்கக்கூடாதா? எல்லாவற்றிலும் காசு பண்ணுவதுதான் ஊடகங்களின் ஓய்வறியாத குறிக்கோளா? சமூகப் பொறுப்பு என்பது அவர்களுக்குக் கிடையவே கிடையாதே - பாடத் திட்டத்திலும் பாலகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும்.

எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் இது போன்ற அவசியமான கருத்துக்களை மக்கள் மத்தியில் நயம்படக் கொண்டு சேர்க்க வேண்டாமா!

ஒரு இளைஞன் சாலை விபத்தில் பலியாகிறான் என்றால், அவனோடு அந்தப் பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல; அவனை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதே நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தலைக்கவசம் அணியுங்கள்; அதன் மூலம் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதை மாற்றி தலை தப்புவது - தலைக்கவசத்தின் புண்ணியம் என்ற புதுப் பொருளை உண்டாக்குங்கள்!

தமிழ் ஓவியா said...

தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுபோடுங்கள் எனக் கூறுகிறார்கள்.

இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்ததையும், யோக்கியதாம் சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.

காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படி யிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள்.

தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்குமேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டு மென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்திய மூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக்  கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம்

மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி  ஆற்றிய உரை.)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

தமிழ் ஓவியா said...

மார்க்கட்டு நிலவரம் - சித்திரபுத்திரன்


தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்
செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமுகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமுகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமுகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுகள்
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளை யாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப் பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட் சகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் -  மார்க்கண்டன், அனுமார், விபீஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ் சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டி ருக்கிறார்கள்!

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திர மல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை, ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர்.சண்முகமும்

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங் களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன. இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்ப னரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப் படுகின்றோம். என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க் கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம். பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?



சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-  சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்



(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947

தமிழ் ஓவியா said...

மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்


தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை - காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான - அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரியவில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!

அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?

2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் - இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?

மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப்பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம்  புனை சுருட்டுதானா?

வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்க்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு.
1992இல் மதுரா நகரில் 86 வயதான முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித்தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியிலிருந்து வெளிவந்த நேச்சர் (ழிணீக்ஷீமீ) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்றை எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

3) அரசு என்பது மதச் சார்பற்றது - அது எந்த மதச் சடங்கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

மழை பொழிவதற்கு இந்து மதத்தின்படி பூஜை நடத்த சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த சுற்றி அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51கி(லீ) என்ற பிரிவு என்ன கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h),  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது - மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது என்பது வெளிப்படை; இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970




உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “

Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)

இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.

அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!

குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.

தமிழ் ஓவியா said...

செய்யக் கூடாதவை!




பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!

கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

நீண்ட நேரம் பல் தேய்க்கக் கூடாது

பிரஷ் கொண்டு பல் தேய்க்கும்போது அதிக நேரம் தேய்க்கக் கூடாது. அதிக பற்பசையும் உபயோகிக்கக் கூடாது. பட்டாணிக்கடலை அளவிற்குப் பற்பசை எடுத்துக் கொண்டு, பற்களில் கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேலும், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழும் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூன்று முறை மென்மையாய்த் தேய்த்தால் போதும் ஓரிரு நிமிடங்களில் தேய்த்து, முடித்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வாயைத் தூய்மை செய்ய வேண்டும்.

கருவேலன், வேம்பு, ஆல மரவிழுது இவற்றைக் கொண்டு பல் துலக்குவது பல்லுக்கு நன்மை பயக்கும். கிடைக்கின்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே நலம்.

காலை எழுந்தவுடனும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்குவது நலம்.

விரலால் பல் துலக்கக் கூடாது

விரலால் பல் துலக்கினால் பல்லிடுக்கில் உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வராது தங்கி, பற்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும். எனவே, மேற்சொன்ன குச்சிகள் அல்லது பிரஷ் கொண்டு துலக்குவதே நன்று. விரலால் துலக்கக் கூடாது.

அதிக குளிர்ச்சியோ, அதிக சூடோ பற்களில் படக் கூடாது

அதிக குளிர்ச்சியான அய்ஸ்கிரீம், அய்ஸ், குளிர்பானம், மிகச் சூடான வெந்நீர், பால், காபி போன்றவற்றைச் சாப்பிடுதல் கூடாது. அவை பற்களுக்கும் நல்லதல்ல; உடலுக்கும் நல்லதல்ல.

செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் தேய்க்கக் கூடாது

செங்கல்லைத் தூளாக்கி அல்லது சாம்பலைப் பொடித்துப் பற்களில் விரலால் தேய்ப்பர். இவை ஈறுகளைத் தேய்த்துப் பற்களையும் கெடுக்கும். பற்களின் மேலுள்ள பளபளப்பைத் தேய்த்து அழித்துவிடும். ஈறுகள் தேய்ந்து பற்கள் வலுவிழந்து போகும். எனவே, செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் துலக்கக் கூடாது.

இயற்கையாய் ஏற்படும் பல்வலிக்குப் பனிக்கட்டியை வைக்கக் கூடாது

பல்லில் அடிபட்டு வலியிருந்தால் பனிக்கட்டி வைக்கலாம்.

உப்பு கலந்த நீரை (ஒரு டம்ளர் நீரில் ஒரு டிஸ்பூன் உப்பு கலந்து) வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும். ஈறுகளிலுள்ள கிருமிகளும் அழியும். இதைத் தினமும் செய்தால் பல்வலி வரவே வராது.

கடும் வெய்யிலில் சென்று வந்தவுடன் குளிர்பானம் அருந்தக் கூடாது

பொதுவாகச் செயற்கைக் குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. காரணம், அதில் கலக்கப்படும் எப்பொருளும் உடலுக்கு நன்மை செய்வன அல்ல. மாறாகக் கேடு பயப்பன.

கடும் வெய்யிலில் செல்லும்போது நம் உடலும் நரம்புகளும் சூடேறியிருக்கும். சூடான பொருளில் திடீரென குளிர்ந்த நீர்பட்டால் உடனே அது நொறுங்கும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீர் ஊற்றினால் அது நொறுங்கிவிடும். அப்படித்தான் நம் உடல் நரம்புகளும் சூடேறி இருக்கும்போது அச்சூடு தணிவதற்குள் குளிர்ந்த பானம் குடிப்பதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் நமது நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.

அதேபோல் உடல் சூடாகியுள்ள நிலையில் குளிர்ந்த நீர் குடிக்கவும் கூடாது. உடற்சூடு தணிந்த நிலையிலேதான் குடிக்க வேண்டும். அய்ஸ் கலந்த நீர் எவ்வகையிலும் நல்லதல்ல. குளிர்ந்த நீர் வேண்டுமானால், மண்பானையில் வைத்துக் குடிக்க வேண்டும். குளிர்ந்த மண்பானை நீரைக்கூட வெய்யிலிருந்து வந்தவுடன், உடல்சூடு தணிவதற்குள் குடிக்கக் கூடாது.

மண்பானை நீரில் வெல்லம் கலந்து பருகுவது உடல்நலத்திற்கு உகந்தது. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை ஏழுமுறை அலசி, சோற்றுக்கற்றாழையில் தேன் கலந்து சாப்பிடுவதும், வெந்தயத்தை ஊற வைத்து உண்பதும், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகள் சாப்பிடுவதும் உடல்சூடு தணிக்கும். வளமை தரும்.

தமிழ் ஓவியா said...

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!




இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.

ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.

இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-

1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.

3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.

5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.

ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 




மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

ஜூன் 16-30 தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!
தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!


சோழநாட்டு எல்லை

கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.

சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!

வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.

பாண்டிநாட்டு எல்லை

வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.

பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.

கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.

சேரநாட்டு எல்லை

வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.

வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!

தொண்டைநாட்டு எல்லை

மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.

மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.

வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.

தமிழ் ஓவியா said...

கல்லூரி முதல்வரானார் திருநங்கை!




நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள விவேகாநந்தர் நூற்றாண்டு நினைவுக் கல்லூரியில் வங்கமொழி ஆசிரியராகப் பணியாற்றிய மானபி பந்தோ பாத்தியாயா என்ற இவர் ஜூன் மாதம் (2015) 9ஆம் தேதி முதல் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தற்போது கிடைத்துள்ள இந்த உயர்வு சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடையல்ல என்பதை இது உறுதிசெய்கிறது என்றார்.

தமிழ் ஓவியா said...

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்

ஆந்திராவில் - 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள்
அசாமில் - 39 ஊர்கள்
பீகாரில் - 53 ஊர்கள்
குஜராத்தில் - 5 ஊர்கள்
கோவாவில் - 5 ஊர்கள்
அரியானாவில் - 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள்
கர்நாடகாவில் - 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள்
மேகாலயாவில் - 5 ஊர்கள்
மணிப்பூரில் - 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் - 60 ஊர்கள்

தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.

நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.

இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.

தமிழ் ஓவியா said...

சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!



நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.

ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் - ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)

குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 




மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : புறம்போக்கு




இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல.

இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட அனுபவமிக்க, கைதேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.

தூக்கிலிடும் அனுபவத்தை தன் தந்தையின் மூலமாக பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக்கொள்கிறார். தூக்கிலிட அல்ல, தூக்கில் தொங்க வேண்டியவரைக் காப்பாற்ற.   கதாபாத்திரங்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்துள்ளார் இயக்குநர். தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வசித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவிற்கும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயரை ஆர்யாவிற்கும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையையும், அவர்களின் கடுமையான தண்டனையையும் அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் சிறைத்துறை அதிகாரி ஷாமுக்கும் வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருவதையும், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும் இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. நம் புத்தியை குத்திக் கிளறுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. எடுத்துக் கொடுத்தால் உள்ளூர் போலீஸ் கைது செய்கிறது  என்று நாயகன் பேசும்போது காட்சியோடு ஒன்றிப்போன பார்வையாளர்களுக்கு அரசின் மீதான கோபம் கைத்தட்டலாக வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட வசனங்கள் வாயிலாக பொதுவுடைமை என்றால் என்ன? மார்க்சியம் என்றால் என்ன? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்? யார் மக்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கியுள்ளார்.

நடிகர் ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய புரட்சிகர அரசியலை எடுத்துக் காட்டுகிறது.

நீ கொஞ்ச நாள்ல சாகப்போற தூக்கு தண்டனைக் கைதி என்ன எழுதப்போற? என்று சிறை அதிகாரி ஷாமின் கேள்விக்கு எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் போறோம், சாகுறதுக்கு முன்னாடி என்ன செய்யுறோம் என்பதுதான் முக்கியம் என்ற பாலுவாகிய ஆர்யாவின் பதில் இறப்பதற்கு முன் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சாக்ரடீஸை நினைவுப்படுத்துகிறது.

வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான திரைப்படமாக காட்டாமல், ஏன்? எதற்கு? எதனால்? என்பதற்கான காரண காரியங்களுடன் விளக்கமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

இன்றைய குடி தமிழகத்தின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில், குடும்பம் அழியுது ஆனால் அரசு நடக்குது என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து அசத்தி இருக்கிறார்.

பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவளையும் நல்லவளாக மாற்றிடலாமே என்ற தாயின் வசனங்கள் தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநரையும், அதை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மொத்தத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, பாலைவனத்தில் ஒரு சோலை? பொதுவுடைமை ஒளிச்சிந்தும் புரட்சி வெடி!

- அமுதரசன்

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.

.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.

எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.

வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.

(குயில், 15-07-1958)

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’




ஆசிரியர்:      பேராசிரியர் அ.அய்யாசாமி     வெளியீடு :          அன்னை முத்தமிழ்ப்            பதிப்பகம்,      10 (ணி55), மூன்றாம்        குறுக்குத் தெரு,     திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72

அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அணிந்துரை அளித்து அனைவரும் படித்து, பரப்ப வேண்டு என்கிறார் என்றால் அந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை எளிதில் உணரலாம்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒரே நோக்கத்திற்கான இரு பிரிவுகள் என்பது அதன் பொருள். அதை மிகச் சரியாக அய்யாவும் அண்ணாவும் உறுதி செய்தனர். அதன் பின் கலைஞரும், அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் நிலைநாட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிக்கு மட்டுமே ஆரியம் அலறுகிறது என்பதே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.

அண்ணா கண்ட _ கொண்ட ஒரே தலைவர் பெரியார். பெரியாரின் வழிசென்று அரிய சாதனைகள் புரிந்தவர் அண்ணா. அண்ணாவிடம் பெட்டிச் சாவியை ஒப்படைத்தவர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு,மத ஒழிப்பின் மூலமே முடியும் என்ற அய்யாவின் முடிவை அண்ணா ஏற்றார். அரசியல் ஈடுபாட்டில் அய்யாவிடம் அண்ணா வேறுபட்டார். விளைவு தி.மு.க.

திராவிட அமைப்புகள் பிரிந்து பிரிந்து வளர்ந்தன. அதன் பயன் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லை, பெரியார் என்ற வழிகாட்டலை சொல்லாமல் அரசியல் இல்லை என்றானது. இதுதான் ஆரியத்தைக் கலக்குகிறது.

அண்ணா அரசியலில் சாதித்தார். அய்யாவின் எண்ணத்தைச் சட்டமாக்கினார். எதிரியின் தோளில் ஏறி எட்ட வேண்டியதை எட்டிய கெட்டிக்காரர் அண்ணா. அவரை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது கொள்கை வெளிச்சத்தில். இதுபோன்ற நூல்கள் ஏராளமாய் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். இது ஒரு தொடக்கப் பாடநூல். இதன் வழி பல்கலைக்கழகம் வரைப் பயிலலாம்.

தமிழ் ஓவியா said...

காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு பெயரால் விருதுகள்


 




சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான ஆர்.பி.அமுதன் அவர்கள் முதல் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் தங்கர்பச்சான் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் பங்கேற்று பெரியார் சாக்ரடீசு குறித்து நினைவுரையாற்றினார். இதழாளர்கள் கோவி.லெனின், மை.பா.நாராயணன் ஆகியோர் தங்களுக்கு பெரியார் சாக்ரடீசுக்கும் இடையிலான நட்பையும், அவர் தம் பணியையும் எடுத்துரைத்தனர்.

இதேபோல், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் சார்பில் 24.05.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில், செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பணியாற்றிவரும் அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கு அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

பெரியாரியலைப் பரப்பும் பணியிலும், அதை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் பணியிலும் தன் வாழ்க்கையைச் செலவிட்டு, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை உருவாக்கி, இளம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து நெறிப்படுத்திய பெரியார் சாக்ரடீசின் பெயரால், அதே பணியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் சாலப்பொருத்தம். பெரியார் சாக்ரடீசு மறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம் என்ற வரி செயல்வடிவம் பெற இப்பணிகள் தான் அடிகோலும்.

தமிழ் ஓவியா said...

குரங்குக்கு நோட்டீஸ்!

திங்கள், 15 ஜூன் 2015
 

மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் மாவட்டத்தில் உள்ள  பஜாரியா என்ற இடத்தில் உள்ள அனுமார் கோவில் சமீபத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. பெரிதாகக் கட்டப் பட்ட போது அரசு நிலத் திலும் ஆக்ரமித்து மண்டபம் ஒன்றும், சிறிய ராமர் கோவி லும் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள வணிக அமைப்பினர் மாநகராட்சியில் முறையிட் டனர். மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் குவாலியர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வணிக அமைப்பின் கோரிக் கையை ஏற்று, அரசு நிலத் தில் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அந்தக் கோவில் நிர்வாகி வைபவ் சுக்லா என்பவருக்கு நோட் டீஸ் அனுப்பியது. அதற்குப் பதிலளித்த பூசாரி இந்தக் கோயிலை அனுமார் மற்றும் அவரது வானரங்கள்தான் (குரங்குகள்) நிர்வகிக்கின்றன.

அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கான உரிமையா ளர்கள், நான் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் சாதா ரண தொண்டன். ஆகவே எனக்கு இந்தக் கோவில் அத்துமீறி கட்டப்பட்ட ராமர் கோவில் மற்றும் மண்ட பத்தை இடிக்க உரிமை யில்லை என்று கூறி விட்டார்.

இதனை அடுத்து மாநக ராட்சி நிர்வாகம் குரங்கு பெயரிலும், ராமர் கோவிலில் சிலையாக உள்ள, ராமர் பெயரிலும் நோட்டீஸ் அனுப் பியுள்ளது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:

பெறுநர்:
மிஸ்டர் அனுமான் ஜி

நீங்கள் வார்ட் எண் 29 பஜாரியா பகுதியில் புதிய மண்டபமும், ராமர் கோவி லும் உங்கள் ஆணைப்படி கட்டப்பட்டள்ளன. முக்கிய மான சுற்றுலாத்தலமான இப்பகுதி மத்திய அரசின் புராதன துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பகுதியை ஆக்ரமித்து  கோவில் கட்டப்பட்டுள்ளது. இது மாநகராட்சி சட்டம் 1961, 187,223 பிரிவின்படி சட்ட விரோதச் செயலாகும்.

ஏற்கெனவே 17.7.2014 ஆம் தேதி அன்று உங்களது கோவில் பூசாரிக்கு சட்ட விரோதமாக கட்டடம் கோவில் கட்டக் கூடாது என்று அறிவுறுத்திக் கடிதம் எழுதியுள்ளோம். அதையும் மீறி மண்டபம் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரச் சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால்  இந்தக் கடிதம் கண்ட ஒரு வாரத்திற்குள் நீங்கள் விதி முறை மீறி கட்டிய கட்ட டத்தை இடிக்க வேண்டும். அப்படி இடிக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகை மற்றும் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

(என்று இதில் எழுதியுள் ளோம்) இப்படிக்கு நிர்வாக அதிகாரி மாநகராட்சி பிண்ட்.

சபாஷ்! மாநகராட்சி நிருவாகம் அனுப்பிய நோட் டீசுக்கு அனுமானாகிய குரங்கு சாமி பதில் அனுப் புமா? அப்படி அனுப்பா விட்டால் சாமியாவது - கீமியாவது எல்லாம் வெறுங் கல்லு என்ற பகுத்தறிவுவாதி களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா?

பதில் இல்லாத நிலையில் ஒரு தலைப்பட்சமாக (ணிஜ்ஜீணீக்ஷீமீ) தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே? அப்பொழுது மட்டும் இந்தப் பக்தர்கள் முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு வார்கள். ஆம் மனிதர் என் பது உண்மை - கடவுள் என்பது பொய் என்று ஆகி விட்டதா இல்லையா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

ஏழுமலையான்

செய்தி: திருப்பதி கோவி லுக்கு மேலே விமானம் பறந்தால் ஆகம விதிப்படி கேடு விளையும்.
- திருப்பதி கோயில் அர்ச்சகர்

சிந்தனை: எத்தனையோ ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு மேலே விமா னங்கள் எல்லாம் பறந்து கொண்டுதான் உள்ளன. அப்பொழுதெல்லாம் ஏற் படாத கேடு திடீரென்று குதிக்கிறதோ


அது என்ன திருப்பதி ஏழுமலையின் ஸ்பெஷல் மற்ற மற்ற கோவில்களுக்கு மேலே பறக்கலாமோ!

தமிழ் ஓவியா said...

சிந்திக்க முடிந்தது

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசிய முமில்லை என்று சொன் னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...

கிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளாம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்



மதுரா, ஜூன் 15_ -பாகிஸ்தான், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அனைவரும் இந்து நாட்டில் வாழ்பவர் களே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை யில்லை.இந்தியா என்பது இந்துநாடு என்ற நம்பிக் கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல் கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என் றும் சிலர் உருவ வழி பாட்டில் நம்பிக்கையற்ற வர்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்தி யாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண் டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.

இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டி ருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்து தான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன் னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ் தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம்  பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையோ, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாற வில்லை என்று நான் கூறுகிறேன்.  சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி


சென்னை, ஜூன் 15_ இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு) மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதர வோடு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் சிபி அய் வேட்பாளர் சி.மகேந் திரனுக்கு ஆதரவு அளிப்ப தென திராவிடர் கழக மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதுடன் திராவி டர் கழக தலைவர் கி.வீர மணிக்கு சிபிஅய் தமிழ் நாடு மாநிலக்குழு சார் பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனதா தளம் (எஸ்) ஆதரவு

இதற்கிடையே சி. மகேந்திரனுக்கு மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆத ரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பி.முக மது இஸ்மாயில் தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. துணைத் தலை வர் எம்.சொக்கலிங்கம், மாநிலப் பொதுச் செயலா ளர்கள் கே.ஜான்குமார், கரு. பவனாச்சாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட் டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் இடது சாரி இயக்கங்களின் வேட் பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து களப்பணி ஆற் றுவது எனத் தீர்மானிக் கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சீரான உடல் நலத்துக்கு தூதுவளை



சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு  நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு  தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும்.

அய்ந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில்  முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை  வளர வாய்ப்பு உள்ளது.

தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை  அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு  பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி  சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை  வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய்  குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில்  சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து  வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு  சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை  குணமாகும்.

தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட  காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு  இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.

தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை  எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி  வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை போக்கும் முட்டை



மனிதர் களை தாக்கும் முக்கிய நோய் களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2  நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்தநோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம்  குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரி  சமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதயநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.  அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன் மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

உடல் எடையைக் குறைக்க வழி?

நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 மி .லி அளவில் கிடைக்கும்.

3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 மி .லி) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 மி .லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.