Search This Blog

13.3.15

ஜாதி, மதக் கலவர நோய்களுக்கு தேவையான மாமருந்து தந்தை பெரியார் கொள்கைகளே!

புதிய தலைமுறைமீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது 18ஆம் தேதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பேன்
ஜாதி, மதக் கலவர நோய்களுக்கு தேவையான மாமருந்து தந்தை பெரியார் கொள்கைகளே!
திருச்செந்தூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி

திருச்செந்தூர் மார்ச் 13- நாட்டில் தலைதூக்கும் ஜாதி, மதக் கலவரங்கள், கொலைகள் என்ற நோய்களுக்கு சரியான தேவையான மாமருந்து தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளே - திராவிடர் கழகத்தின் கொள்கைகளே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


திருச்செந்தூரில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (12.3.2015) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திருச்செந்தூரில் நடைபெறும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்றைக்கு வந்திருக்கின்ற நேரத்தில், எத்தனை மாறுதல்கள் நாட்டில் நடைபெற்றி ருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது, மிகப்பெரிய அளவிற்கு இந்த நாடு மதவாதத்தையும், ஜாதி வெறியையும் நோக்கிப் போய்க் கொண்டிருப்பது வருந்தத்தக்கது; மிகவும் கண்டிக்கத்தக்கது.


புதிய தலைமுறை அலுவலகம்மீது தாக்குதல்

புதிய தலைமுறை ஒரு ஊடகம். அந்த ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சி தாலிபற்றி நடத்தி, இரு கருத்துள்ளவர்களையும் அழைத்து நடத்தக்கூடிய நிகழ்ச்சியாகும். அவர்கள் வழமைபோல் இந்த நிகழ்ச்சியையும் செய்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.


அந்த நிலையில், அந்த ஊடக அலுவலகத்தையும், ஒளிப்பதிவாளரையும் சில நாள்களுக்கு முன்பு தாக்கியது குறித்து வன்மையான கண்டனத்தை எல்லோரும் தெரிவித்தனர்.


அதற்குப் பிறகு இன்று (12.3.2015) காலை விடியற்காலை 3 மணியளவில் அந்த அலுவலகத்தில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று, டிபன்பாக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்து அச்சுறுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி, தமிழகத்தில் குண்டு கலாச்சாரம் பரவுகிறது என்று நினைக் கின்ற நேரத்தில், வேதனையாகவும் இருக்கிறது; சங்கடமாகவும் இருக்கிறது.


ஜாதி, மதக் கலவரங்கள்  - கொலைகள்!

அதுபோலவே, இங்கே ஜாதிக் கலவரங்கள், கொலைகள், கவுரவக் கொலைகள் என்ற பெயரால் கொலைகள் நடைபெறுவது போன்றவைகளும், இதனால் அதிகமான அளவிற்கு, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.


இந்த நேரத்தில், பெரியாருடைய கருத்துகள், சமுதாய சிந்தனைகள், ஜாதி ஒழிப்பு, மதவெறி எதிர்ப்பு என்பது போன்றது மாமருந்தாக இப்பொழுது தேவைப்படுகின்றன. எப்படி பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து தேவையோ, அதேபோல மற்ற மற்ற காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் தேவையோ, அதுபோல இந்த ஜாதிக் காய்ச்சலுக்கும், மதவாத காய்ச்சலுக்கும் மாற்று மருந்து திராவிடர் இயக்கத்தினுடைய, தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகள்தான் என்பதை நிறுவுவதற்காகத்தான் இன்றைக்கு திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு என்பது இங்கே கூட்டப்பட்டிருக்கிறது.


இந்த சூழ்நிலையில்,  தெளிவாக நம்முடைய தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கக்கூடிய இந்த நாட்டை, அமளிக்காடாக ஆக்குவதற்கு ஒருபோதும் நாம் இடம் தரக்கூடாது; நம்முடைய சகோதரர்கள் அவர்கள் எந்த மதமானாலும், எந்த ஜாதியானாலும் கைகோர்த்துக் கொண் டிருக்கக்கூடிய அளவிற்கு, திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ளவர்களாக ஆக்குவதற்கு பெரியார் அவர்கள் 95 வயதிலும் பாடுபட்டார்கள்.


அப்படிப்பட்ட இந்த மண்ணில், அதுவும் தென்கோடி முனையில், இப்படி அடிக்கடி கலவரங்கள், தாக்குதல்கள், கொலை வெறி நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகத் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.


சட்டம் ஒழுங்கு இப்படி சீர்குலைவதை அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, தீர்வுகளை, தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதன்மூலமாக, ஒரு அமைதியான வாழ்க்கையை, நம்முடைய உழைக் கின்ற வர்க்கத்து மக்களாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் அனைவரும் கைகோர்த்து கொண்டிருக் கக்கூடிய அந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டும். திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டினுடைய நோக்கம் அதுதான். அதற்காகத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.


பிரதமர் மோடியின் இலங்கை பயணம்பற்றி...?

செய்தியாளர்: பிரதமர் மோடி இலங்கைக்குச் சென்றிருக்கிறாரே, அதனால் ஏற்படும் பலன் என்ன?

தமிழர் தலைவர்: எந்தவிதப் பலனும் ஏற்படுவதாக நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஏதோ அவர் இலங்கைக்குச் செல்வதையொட்டி, இலங்கையில் சிறை யில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 82 மீனவ சமுதாய சகோதரர்களை விடுதலை செய்கிறோம்; நல்லெண்ணத் தின் அடிப்படையில் என்று சொல்கிறார்கள். அதிலும் அவர்களுடைய படகுகளையும் சேர்த்துக் கொடுத்தார்களா? என்பது கேள்விக்குரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

அடிப்படையில், இதுவரையில் அங்குள்ள தமிழர்களுக்கும் சரி எந்த விடியலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, மீனவர்களை சுட்டுக் கொன்றால் தவறில்லை என்று ஒரு பிரதமராக இருப்பவரே, தன்னுடைய வரம்பு மீறி பேசக்கூடிய அளவிற்கு, அங்கே அமைந்த புதிய ஆட்சி, பழைய ஆட்சிக்கு இது ஒன்றும் பெரிய அளவிற்கு வித்தியாசமானது அல்ல என்று காட்டக் கூடிய அளவில் இருக்கும்பொழுது, இந்தச் சூழ்நிலையில் அங்கு செல்லக்கூடிய நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், இதற்கெல்லாம் எப்படித் தீர்வு காணப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இன்றைக்குத் தமிழகத் தில் மட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமி ழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இன்றைக்குக் கேள்விக் குறியாக இருக்கிறது.

 

ஒரு நல்ல தீர்வை இதுவரையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து 9 மாதமாகிறது.
சென்ற ஆட்சிதான் இதற்கான தீர்வு காணவில்லை என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தவர்கள், அடுத்த நாளே நாங்கள் எல்லாம் ஏதோ மந்திரக் கோலை வைத்து தீர்த்துவிடுவோம் என்று சொன்னார்கள்; இன்றைக்கு நிலைமைகள் இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர வேறொன்று மில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள தமிழர்களை சந்திக்கிறார் மோடி என்றால், முதலில் அங்கே இருக்கின்ற ராணுவத் தினரை விலக்கிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
மீள்குடியேற்றம் என்ற பெயரால், சிங்களவர்கள் தமிழர்களுடைய குடி யேற்றப் பகுதிகளுக்குச் சென்றதையெல் லாம் மாற்றி,  அங்குள்ள தமிழர்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்.


ஏனென்றால், அங்கே புதிய ஆட்சி யோடு நட்புறவு பாராட்டுவது என்பதை விட, தொப்புள்கொடி உறவுள்ள தமிழர் களுடைய நல்லெண்ணத்தைப் பெற வேண்டும். அந்த நல்லெண்ணத்தின் காரணமாக, ஒத்துழைப்பின் காரணமாகத் தான் இலங்கையில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டிருக்கிறது.


அதைவிட இன்னொரு வேதனை யான, திடுக்கிடக்கூடிய அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி, மாலை ஏடுகளில் வந்திருக்கக் கூடிய செய்தி என்னவென் றால், மோடி அவர்கள், ராஜபக்சேவையும் சந்திக்கவிருக்கிறார் என்று வந்திருக்கிறது. அதுதான், குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் சேர்த்துப் பறித்த கதைபோல இருக்கிறது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு  தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே?

செய்தியாளர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே?
தமிழர் தலைவர்: தீர்ப்பு தேதி குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ சாமிகளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ யாகங்களை செய்து கொண்டிருக் கிறார்கள். எத்தனையோ கும்பாபிஷேங் களையும், குடமுழுக்குகளையும், பாலாபி ஷேகங்களையும் செய்து கொண்டிருக் கின்றார்கள். எத்தனை சாமிகள் என்ன வரம் கொடுக்கின்றன என்பதைவிட, குமாரசாமி என்ன தீர்ப்பு கொடுக்கிறார் என்பதுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய செய்தியாகும்.


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், இந்து முன்னணியினர் தைரியமாக செயல்படுகின்றனரே!

செய்தியாளர்: பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், இந்து முன்னணி யினர் மதவெறித்தனத்தை மிகவும் தைரியமாக செயல்படுத்துகின்றனர்; அதுபற்றி உங்கள் கருத்து?


தமிழர் தலைவர்: அதற்காகத்தான் நாங்கள் அதனைக் கண்டிக்கும் விதமாக, தேர்தல் வருவதற்கு முன்பே, மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற செயல்கள் நடைபெறும் என்று சொன் னோம். அன்றைக்கு அலட்சியமாக, ஏதோ பெரிய வளர்ச்சி வந்துவிடும்; வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்து விடும்; புதிய பொருளாதார மாற்றங்கள் வந்துவிடும் என்று நினைத்து, தவறாக பா.ஜ.க.விற்கு வாக்களித்தனர். இன்றைக்கு அது எவ்வளவு பெரிய தவறான முடிவு, தீர்ப்பு என்பதை அவர்களே உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு, வெகு விரைவில் இந்து முன்னணியினர் இந்த மக்களுக்கு உணர்த்துகிறார்கள். ஆகவே, இன்னும் அவர்கள் மேலே செல்லச் செல்ல அவர்களின் உண்மை நிலை புரியும். மக்கள் தாங்கள் செய்த தவறை, மீண்டும் செய்யாமல் இருக்க, இதுபோன்ற ஒரு வாய்ப்பை அவர்களே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குத்தான் அது அடையாளம்.


ஊடகங்கள் தாக்கப்படுவதுபற்றி...


செய்தியாளர்கள்: தொடர்ந்து ஊடகங்கள் தாக்கப்படுகின்றனவே?


தமிழர் தலைவர்: கருத்தைக் கருத்தாலே சந்திக்கவேண்டுமே தவிர, ஊடகங்கள் எல்லா கருத்தையும் சொல்லக்கூடியவை. அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்களல்ல; ஒரு கருத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. அந்தக் கருத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகுதான், இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறு கின்றன. தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. தமிழக அரசு அதற்கு ஏதோ ஒத்துழைப்பதுபோன்ற ஒரு புறத்தோற்றத்தை உருவாக்கினால், அது அவர்களுக்கும் கேடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு எழுத்தாளர்கள் தாக்கப்பட் டிருக்கிறார்கள்; ஊடகங்கள் இரண்டு முறை தாக்கப்பட்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் படாதபாடுபட்டுக் கொண்டிருக் கின்றது. அப்படியானால், சட்டம் ஒழுங்கு நிலைமை என்னவென்ற கேள்வி தானே எழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.


எனவே, இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்.


வருகின்ற 18 ஆம் தேதியன்று இடதுசாரி தோழர்களும், முற்போக்காளர் களும் சென்னையில் ஒரு கண்டனக் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறேன் என்று செய்தி யாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

                            --------------------------”விடுதலை” 13-03-2015

33 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான் திருப்பதி?

திருப்பதி ஏழுமலை யான் என்றால் இந்தியா விலேயே பெரிய கல்லு முதலாளி அவர்தான். எத் தனை வேளை விருந்து படைத்தால் தான் என்ன பயன்? அவரா தின்று கொழுக்கப் போகிறார்? அவரை வைத்து அரை டன் அரை டன் கன பாடிகள் வைத்ததுதான் சட்டம்.

புனித நகரம் என்று பினாத்துகிறார்களே - அந்தத் திருப்பதியின் யோக்கியாம்சம் தான் என்ன?

இதோ சரக்கு 1

புனித நகரமாக கருதப் படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற் பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயி ரத்து 188 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற் றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி; அங்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது. சிறீகாளஹஸ்தியில் 2013ஆம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ஆம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது. (தினகரன் 26.2.2015)

இதோ சரக்கு 11

திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டர், பஞ்சாங்கத்தை எனது உறவினர் வீட்டில் ரெகுலராக வாங்குவார்கள். அதே போல், அவர்கள் வாங்கி யிருந்த பானு ஆண் டிற்கான பஞ்சாங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் 130ஆம் பக்கத்தில் மனை வாங்க - விற்க - வாகனம் வாங்க - விற்க - பயணம் செய்ய என பல நல்ல காரி யங்களுக்கு உகந்த நாள்கள் கச்சிதமாகக் குறிப்பிடப்பட் டுள்ளன. ஆனால் அந்தப் பக்கத்தின் கடைசியில் அச்சா கியிருந்த விஷயம்தான் அதிர்ச்சியைத் தந்தது. அதாவது மதுபானம் அருந்த உகந்த நாள்கள் என்ற தலைப்பில் சில நல்ல நாள்களும் தெரிவிக்கப்பட் டுள்ளன. மதிப்பிற்குரிய திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில், நமது பண்பாட்டுக்குப் பொருத்தமற்ற இப்படிப்பட்ட செய்தியை வெளியிடப்பட்டி ருப்பது மிகுந்த வருத்தத்தை யும், வேதனையையும் அளித் தது. இந்தத் தவறைத் திருத்த தேவஸ்தான நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் அடுத்த வருட புதிய பஞ்சாங்கத்தில் இது போன்ற நல்ல விஷயங்கள் இடம் பெறாமல் கவனிக்க வேண்டும். ஏ மண்டி, பாக சூஸ்துரா?

-எஸ். வத்சலா, கெங்காபுரம்

(குமுதம் ரிப்போர்ட்டர் 6.7.2003 பக்.21)

இதோ சரக்கு 111

திருப்பதியில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 268 பேருக்கு எச். அய்.வி. கிருமி தொற்றியிருப் பது தெரிய வந்துள்ளது - ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதன் திருப்பதியில் செய்தி யாளர்களிடம் கூறினார்.
(தினத்தந்தி 21.6.2008 பக்.17)

புனித நகரத்தின் யோக் கியதைக்கான சரக்குகள், அத்தாட்சிகள் போதுமா? திருப்பதி ஏழுமலையான் ஊரில் ஒழுக்கத்திற்கோ கோவிந்தா! பண்பாட்டுக்கோ பட்டை நாமம்! - மயிலாடன்

குறிப்பு: கோயில்கள் விபச்சார விடுதிகள்!

- காந்தி மகான்

Read more: http://viduthalai.in/e-paper/97846.html#ixzz3UMisEQgI

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாதாம்!

அனைவரும் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!


நாக்பூர், மார்ச் 14_ இந்தியாவில் சிறுபான் மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர். எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத் தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட் டம் மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங் கியது. நாடு முழுவதும் இருந்து 1,600க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் இந்துக் களே இந்தியாவில் சிறு பான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாச்சார அடிப் படையிலும், தேசிய ரீதி யிலும், டி.என்.ஏ. அடிப் படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மை யினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக் கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாச்சார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமான வர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோச மானதாக இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட் டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

எச்சரிக்கை

இந்தியாவில் நாள் தோறும் 5000 குழந் தைகள் புகையி லைக்கு அடிமையா கின்றனராம்.

பெற் றோர்களே, ஆசிரியர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

Read more: http://viduthalai.in/e-paper/97847.html#ixzz3UMjpdrFG

தமிழ் ஓவியா said...

முதுமையே, போ போ! முதிர்ச்சியே வா, வா! (4)


(நேற்றும் இன்றும் வந்த கட்டுரைக் கருத்துக்கள் திருமதி கரோலின் ஹான்சன் என்பவரின் கட்டுரை ஒன்றினையொட்டி இணைத்து நமது கருத்துக்கள் எழுதப்படுபவை ஆகும்)

நவீன மருத்துவத்துறையின் கண்டு பிடிப்புகள் நமது ஆயுள் நீடிப்பி னையும், ஆரோக்கியமான நலவாழ்வு வாழ உதவிடும் வகையிலும் பல மருத்துவ மின்னணுவியல் - டிஜிட்டல் யுகத்தில் வெளிவந்து விட்டன!

நமது உடலின் இதயத் துடிப்பு சீராக இல்லாமல், வேறு வகையாக இருப்பின் அதனைக் காட்டிட ஒரு வகையான (Chips) சிப்ஸ் ஒன்றினை காலில் அணியும் ஷூக்களிலோ, அல்லது நெஞ்சுப் பட்டையாக அணியும் டையின் ஒரு கிளிப் போலவே இணைத்து விட்டால், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் (Blood Pressure) முதலியவற்றைக் காட்டி, நமது மருத் துவரின் கணினிக்கு இது தகவல் கொடுத்து விடுமாம்! அவரும் உடனே விரைவார்; அல்லது நாம் அவரிடம் விரைவோம்!

இப்போது அதைவிட ஒருபடி மேலே சென்ற ஒரு செய்தி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சார்பில் Tim அவர்கள் Apple Watch விரைவில் சந்தைக்கு வருகிறது.

அதுவே ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை களை மணி பார்த்து கடியாரத்தில் தெரிந்து கொள்வதுபோல் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதிகள் - மருத்துவத்தில் தொழில் நுட்பம் Technology புகுந்ததி னால் ஏற்பட்ட மகத்தான மாறுதல்கள் ஆகும்!

இவைகள் நமது ஆயுளை நீட்டு கின்றன!

4. திட்டமிட்ட அடுத்த கட்ட வாழ்க் கைக்கு நிதி, நேரம், மகிழ்ச்சி, குடும்பத்த வருடன் செலவழிக்க முன்பு தவறிய மைக்கு இப்போது ஈடுகட்டல், பொது அமைப்புகளில் உறுப்பினர் பொதுத் தொண்டராக (Public Volunteer) பணி புரியும் திட்டம் போன்ற பல நிலைகளைத் திட்டமிட்டு வாழ்ந்தால், நாம் நிச்சயம் 100 வயதை எளிதில் எட்டலாம்! அது வித்தையோ விரோதமோ அல்ல!

1950இல் உலக வரலாறு நூறாண்டு கண்ட பெரு மக்கள் 2300 (Centenarians) கொண்டிருந்தது!

இன்று (2015இல்) 40,000 பேர் (நாற்பதாயிரம்) பேர்கள் நூறாண்டு கண்ட பெரு மக்கள் எண்ணிக்கை.

2050 இது ஒரு 10 லட்சத்தைத் தாண்டும் (இன்னும் 35 ஆண்டு கால வளர்ச்சியில் மருத்துவம் எங்கோ போய் நிற்கும் எட்டிப் பிடிக்க முடியாத வளர்ச்சியை நோக்கி!)
எனவே, முதுமை வந்து விட்டதே என்று அலுத்து சலித்துக் கொள்ளாதீர்கள்!

முதிர்ச்சியைப் பெறுகிறோம் என்று துள்ளிக் குதியுங்கள்!

5. சமூக நோய்களிலேயே மிக மோசமான ஒரு நோய் எது என்றால் இந்த ரிட்டயர்மெண்ட் நோய் தான் என்கிறார் கரோலினா ஹென்ஸ்மென்.

ஓய்வு பெறுவதைக் கண்டு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்?

சாவைக் கண்டே பகுத்தறிவு உள்ள வர்கள் அஞ்சுவதில்லை. அத்தகையவர் களில் சிலர்கூட இந்த ஓய்வு காலம் - பதவியிலிருந்து விடுபடும் காலம் கண்டு ஏனோ அஞ்சி அஞ்சிச் சாக வேண்டும்?

திட்டமிட்டால், அது நமது சுதந்தரம் மீண்டும் நமக்கு கிடைத்த நாள் என்று பெருமித உணர்வுடன் கூடிய மகிழ்ச்சிப் பெருக்கத்தைப் பெற்று கூத்தாட வேண்டாமா?

மில்டன் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்பு
Paradise Lost (இழந்த சொர்க்கம்)

Paradise Regained (மீண்ட சொர்க்கம்) சொர்க்கம் இருக்கிறதா, இல்லையா, அது வேறு பிரச்சினை அது வெறும் நம்பிக்கையைப் பொறுத்தது.

அது ஒரு உதாரணத்திற்கு அதைச் சுட்டுகிறேன்; அது மாதிரி, இழந்த சுதந்திரம், மீண்ட சுதந்திரம் என்று ஓய்வு பெறுவோர் எண்ணி மகிழ வேண்டும்.

- சரியான பார்வையோடு பார்த்தால் இந்த ரிட்டயர்மெண்ட் மனோபாவம், பலரை லாயக்கற்ற, ஒதுக்கப்பட்ட குப்பை, கூளம், அருதப்பழசு போன்று தேவையின்றி - ஆக்கி விடுவதால் தான் இந்நிலை - இதைத் தவிர்க்க மேலே (4)ல் சொன்னபடி, பொது சேவை செய்ய திட்டமிடுங்கள் புது உற்சாகம் பிறக்கும்!

6) நமது முதுமையின் அடை யாளமாக முன்னே சுட்டிக் காட்டிய படி, முடியில் சாயம் அடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், உருவத்தைக் கூட எவ்வளவு பார்க்க சுறுசுறுப்பும், தோற்றப் பொலிவும் கூட்ட முடி யுமோ அவ்வளவு செய்யலாம் (அதற்காக ஒப்பனை நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செல வழிக்க வேண்டும் என்று தவறாக எண்ணி விடாதீர்!

நீண்ட நாளாக தள்ளிப் போட்ட உடல் ரிப்பேர்களை சரி செய்தல், உடல் அறுவை சிகிச்சைகள் அல்லது சில இளமை ததும்பும் திட்டங்களை செய்தல், எல்லாவற்றையும் விட இளையர்களிடம் அதிகம் வாஞ்சை யோடு பழகி, அவர்களது அனுபவங் களையும் கேட்டுச் சுவைத்த, முது மையைக் கீழே தள்ளுதல் எல்லாம் முக்கியம்தான் - இவற்றால் முதுமை போகும்! முதிர்ச்சி தானே வரும்.

(நிறைவு)



Read more: http://viduthalai.in/page-2/97842.html#ixzz3UMkkSDDO

தமிழ் ஓவியா said...

உண்மைத் தோழர் மறைந்தார்

சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-02-1933ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக்கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தோழர் ராமசந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை என்று ஒரு உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப் படுத்தினார்.

மற்றும் அவரது திருநெல்வேலி சு.ம. மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ஆம் வருடத்தில்) வருங்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப்பிட்ட சமயத்தில், உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்.

உலகம் எல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு கொள்கை ஏற்படும். உலகம் எல்லாம் ஒரு அய்க்கிய ஆட்சி நாடாகும். உலகத்திலுள்ள சொத்துக்கள் பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமாகும். வேலை செய்யாத சோம்பேறிகள் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள். குற்றங்கள் குறைந்து விடும் நோய்கள் அகன்றுவிடும்.

மனிதன் ஆயுள் இரட்டித்துவிடும். மக்கள் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமைகள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டவ மாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கர்ஜித்ததுடன், தீண்டாமை என்பது மதக்கொள் கையைச் சேர்ந்தது என்பது முழுப்புரட் டென்றும் அது முழுதும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப்படையைக் கொண்டது என்றும் பேசி இருக்கிறார்.

இந்த தத்தவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சு.ம. இயக்கம் வேலை செய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் ராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும்மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் சவுகரியமும் இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்து வந்த உண்மை சுயமரியாதை வீரரேயாவர்.

இவரது வயது 48, அதாவது 1884ல் பிறந்தவர் இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்ந்தமைக்கு யார் வருந்தாமல் இருக்க முடியும்? இவருக்கு 4 ஆண் மக்களும், 3 பெண்மக்களும் உண்டு. இவரது வாழ்க்கைத் துணைவியார் ராமனாதபுரம் ஜில்லா போர்டு அங்கத்த வராகவும் சிவகங்ககை தாலூகா போர்டு அங்கத்த வராகவும் தகுந்த கல்வி ஞானமுள்ளவராகவும் இருக்கின்றார்கள்.

எனவே இவ்வம்மையார் இயற்கையை மதித்து, துணைவரின் பிரிவை சடுதியில் மறந்து அவரது சுயமரியாதை இயக்கத்தில் அவரது கொள்கைகளையே கொண்டு உலக விடுதலைக்கும் உலக இன்பத்துக்கும் உழைக்க முன்வருவார்கள் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.03.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmUIol1

தமிழ் ஓவியா said...

தீபாவளி முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர் களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனு கூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை?

மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றன.

இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக்கோருகிறோம்.

குடிஅரசு - செய்தி - 15.10.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmduRtL

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள்

குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளராகிய தோழர் ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் சென்ற ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் ஆஸ்பத்திரி யில் டாக்டர் போலார்ட் அவர்களால் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது சமயம் சற்று சவுக்கியமாகவிருக்கிறது விரைவில் குணமடைந்து விடலாமென டாக்டர் கூறுகிறார். தோழர் நாகம்மாள் அவர்களைப் பார்ப்பதற்கு தோழர்கள் ஆர். கே. ஷண்முகம் பி. ஏ. பி. எல். எம். எல். ஏ., சி. எஸ். இரத்தன சபாபதி எம். எல். சி. வி. எஸ். செங்கோட்டையா, முருகேச முதலியார், ஈரோடு முனிசிபால் சேர்மன் கே. ஏ. ஷேக்தாவுது சாயபு முதலிய ஆயிரக்கணக்கான பேர்கள் வந்து போனார்கள். இரண்டு மூன்று நாளாய் யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை.

மாயவரத்திலிருந்து தோழர்கள் சி. நடராஜன் எஸ். சம்மந்தம், இரத்தினம், டி. சின்னையா, எஸ்.வி. லிங்கம் ஆகியவர்களும், சேலம் நடேசன், பாலுசாமி, அம்புலு, பவானிசிங், ஆகியவர்களும், திருச்செங்கோடு வரதராஜலு, ஜலாண்டாபுரம் அர்த்தனாரி, சிவலிங்கம், திருச்சி எஸ். நீலாவதி ராமசுப்பிரமணியம் ஆகியவர்களும், பாபநாசம் சாமி. சிதம்பரனார் சிவகாமி அவர்களும்,

சென்னை எஸ். குருசாமி - குஞ்சிதம் ஆகியவர்களும், தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களும் மற்றும் பலரும் வந்திருக் கிறார்கள். தமிழ் நாடு ஆசிரியர் தோழர் வரதராஜலு, தோழர்கள் எம். சிங்காரவேலு, தூத்துக்குடி பெரியசாமி, முதலியவர்களிடமிருந்து தந்தியும் அநேகர்களிடமிருந்து கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் ஜனங் களை தாராளமாய் விடுவதில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.05.1933

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmoGOPl

தமிழ் ஓவியா said...

வான நூல்களை எடுத்துக் கொண் டால் மதச் சம்பந்தமானது. புராணச் சம்பந்தமான புளுகுகள், ஆபாசங்கள், அவையும் 100-க்குத் 90 வடவன் கொண்டு வந்து ஜோசியன் பிழைக்கப் புகுத்தினதுடன் காரியத்திற்கு, அனுபவத்திற்குப் பயன்படாத குப்பைக் கூளங்களைத் தவிரத் தெரிந்து கொள்ளவேண்டிய, வளர்ச்சிக்குப் பயன்படக் கூடிய சரக்கு அதில் என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmuIVUy

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பஞ்சாங்கம்

கேள்வி: பல்லி தலையில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்கிறார்களே, உண்மையா?

பதில்: மிக உயரத்தில் இருந்து விழுந்தால் பல்லி வேண்டுமானால் மரணம் அடையலாம் - இப்படி சொல்லியிருப்பவர் காழியூர் நாராயணன் என்ற ஜோதிடர் (கல்கி 15.3.2015)

பரவாயில்லையே - ஜோதிடர்கள்கூட பகுத் தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களே கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!

Read more: http://viduthalai.in/e-paper/97910.html#ixzz3USIPHQyz

தமிழ் ஓவியா said...

காந்தியார் சிலை

செய்தி: பிரிட்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார் சிலை திறக்கப்பட்டது. இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்றுப் பாராட்டிப் பேசினார். சிந்தனை: பக்கத்தில் நாதுராம் கோட்சே சிலை வைப்பது பற்றி பிரிட்டன் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தாரா அருண்ஜெட்லி என்பதுபற்றி தகவல் ஏதும் இல்லை

Read more: http://viduthalai.in/e-paper/97908.html#ixzz3USIc4XgM

தமிழ் ஓவியா said...

சு.சாமியின் திமிர்ப் பேச்சு!


மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டடங்களாம்!

கவுஹாத்தி, மார்ச் 15_ மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டடங்கள் தான். அந்த கட்டடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும். என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.

சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97907.html#ixzz3USIizK8r

தமிழ் ஓவியா said...

தமிழக அரசின் அழைப்பை ஏற்று சர்வதேச முதலீட்டாளர்கள் வரத் தயங்குவது - ஏன்?
அரசியல் குறுக்கீடும், நன்கொடை வசூலும்தான் காரணமாம்!

சென்னை, மார்ச் 15_ தமிழக அரசின் அழைப்பை ஏற்று பன்னாட்டு முதலீட் டாளர்கள் வருவதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் குறுக் கீடும், நன்கொடை வசூ லும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச முதலீட்டா ளர் மாநாட்டிற்கு, பங் களிப்பு நாடாக ('பார்ட் னர் நேஷன்') இருக்க, தமிழக அரசு விடுத்த அழைப்பை, பல நாடுகள் புறக்கணித்துள்ளன. தமிழ கத்தில், அன்னிய முத லீட்டை ஈர்க்க, 'குளோபல் இன்வெஸ்டர் மீட்' என்ற பெயரில், சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. சென்னை _ நந்தம்பாக் கம் வர்த்தக மய்யத்தில், மே, 23, 24 தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட, அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு, தமிழக அதி காரிகள் குழுவினர் சென்று, சென்னை மாநாட் டில் பங்கேற்கும்படி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், சென்னை, சர்வதேச மாநாடு குறித்து, முதலீட்டாளர்களின் சந்தேகத்தை தெளிவு படுத்த, சென்னை _ எழும் பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மான, 'டிட்கோ' அலுவ லகத்தில், 'ஜிம் - செல்' என்ற தனிப்பிரிவு துவங் கப்பட்டுள்ளது. தொழில் துறை இணைச்செயலர் விஜய் பிங்ளே தலைமை யில் செயல்படும், தனிப் பிரிவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமான, 'டிக், டிட்கோ, சிப்காட், டி.என்.பி.எல்.,' என, 10 அரசு நிறுவன ஊழியர்கள் உறுப்பினர் களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அரசுகள், சர்வதேச முத லீட்டாளர் மாநாடு நடத்தும் போது, பல நாடுகளுக்கு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்) இருக்குமாறு அழைப்பு விடுப்பது வழக் கம். பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') என்பது, முதலீட்டாளர் மாநாடு நடக்கும் போது, ஒரு நாட்டின் அரசு பிரதிநிதி, தன் தலைமை யில், 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து வருவார்.

குஜ ராத் அரசின், 'வைபரன்ட் குஜராத்' என்ற முதலீட் டாளர் மாநாட்டிற்கு, எட்டு நாடுகள், 'பங்களிப்பு நாடாக (பார்ட்னர் நேஷன்') இருந்தன. அதன்படி, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தைவான், மலேசியா, சிங்கப்பூர், பின்லாந்து, ஸ்பெயின், சீனா, கனடா என, 12 நாடுகளுக்கு, தமிழக அரசு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்கும்படி, அழைப்பு விடுத்தது. இதில், ஜப்பான், பிரான்ஸ் என, இரண்டு நாடுகள் மட்டுமே, தமிழக அரசின், அழைப்பிற்கு இசைந்துள் ளன. மற்ற நாடுகள், தங்கள் முடிவை இது வரை தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச மாநாடு ஏற் பாடு குறித்து, முதலீட்டா ளரிடம் ஆலோசனை பெறுவதற்காக, கடந்த மாதம், சென்னையில், முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் முன்னோட்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில், எதிர்பார்த்த அள விற்கு, முதலீட்டாளர்கள் பங்கேற்காதது, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது தற்போது, பல நாடுகள், பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்க இசைவு தெரிவிக் காமல், காலம் தாழ்த்தி வருகின்றன. தமிழகத் தின், தற்போதைய அரசி யல் சூழ்நிலை குறித்து, உலக நாடுகள், தெளிவாக தெரிந்து வைத்துள்ளதே இதற்குக் காரணம் என, தெரிகிறது. தமிழக அதி காரிகள், இம்மாத இறு தியில், அமெரிக்கா, ஜெர் மனி; ஏப்ரல் முதல் வாரம், சீனா, தைவான் நாடு களுக்கு சென்று, முதலீட் டாளர்களைச் சந்திக்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, முதலீட் டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், மற்ற மாநி லங்களை விட தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், அர சியல் குறுக்கீடு, செயற் கையான நில விலை உயர்வு, நன்கொடை வசூல் ஆகிய காரணங்களால், தொழில் துவங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு, தீர்வு காணாமல், மாநாடு நடத்தினால், மட்டும் முதலீடுகள் குவியப் போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை விளம்பரப்படுத்த, ஆங்கி லம் உள்ளிட்ட, ஆறு மொழிகளில், தனி இணைய தளம் துவங்கப் பட இருக்கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/97906.html#ixzz3USIs39Qg

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பதாக படம்

மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு


புதுடில்லி, மார்ச்.15_ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநிலங் களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மத்திய அரசு விசாரணை மேற் கொள்வதாக உறுதியளித் துள்ளது. சங் பரிவாரங் களின் நிலைப்பாடு அது அல்ல என்றும் ஆளும் பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத் அவை கூடியதும் ஆர் கனைசர் ஏட்டில் வெளி யாகி உள்ள படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி யாகவே வெளியிட்டுள் ளது குறித்து பிரச்சி னையை எழுப்பினார்.
குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்தியா வின் மகுடமாக உள்ளது ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும். இதற் காக எண் ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, வெளி நாட்டு இதழ்களில் பாகிஸ்தா னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி என வரை படத்தில் வெளியிட்டால் அதற்காக பாஜக, ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் போராட்டங்கள் நடத்து கின்றன. ஆனால், ஆர் கனைசரில் வெளியிட்ட தன்மூலமாக அதை அங்கீ கரித்து விட்டனவா என் பதை அறிய விரும்புவதாக குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகவே உள்ளன. ஆர்கனைசரில் வெளியான தகவல் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினார்.

அமைச்சர் இரவிசங்கர் அளித்த பதிலில் திருப்தி கொள்ளாத காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி தொடர்ச்சியாக வலியுறுத் திய வண்ணம் இருந்தனர். ஆர்கனைசர் ஏட்டில் எழுதியவர்மீது நடவ டிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ் .சதுர்வேதி கேட்டார்.

துணை அவைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறும்போது, அமைச்சர் அய்யத்துக்கு இடமில்லா மல் பதிலில் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும். இதை யாரும் மாற்றிவிட முடியாது என்றார்.

இதனிடையே ஆர் கனைசர் ஏடு தன்னுடைய இணைய பதிப்பில் பதி வான வரைபடத்தை மாற்றிவிட்டது. மார்ச் 15 தேதியிட்ட அச்சுப் பிரதியில் முறைகேடான வரைபடமே இடம் பெற்றுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஆர்கனைசர் ஏட்டின் ஆசிரியராக உள்ள சிறீ பிரஃபல்ல கேட்கார் கூறும்போது, எதேச் சையாக நடந்தது என் றாலும் ஏற்கமுடியாத தவறுதான். எது எப்படி இருந்தாலும், ஆர்கனை சரில் இடம் பெற்றது ஏற்கமுடியாத தாகும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, சார்க் இணையத் தில் பங்ளாபீடியா இணை யத்தின் வாயிலாக அந்த வரைபடம் எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த இதழில் திருத்தம் வெளியிடப் படும் என்று கூறினார்.
_இந்துஸ்தான் டைம்ஸ், 13.3.2015

Read more: http://viduthalai.in/page-2/97918.html#ixzz3USJSmtTT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு மொத்து!
மதச் சுதந்திரத்தில் வழுக்கிடும் இந்தியா அமெரிக்க செனட்டர் சாடல்

வாஷிங்டன், மார்ச்15 பொதுத் தேர்தல் நடை பெற்றுமுடிந்து கடந்த ஓராண்டாகவே மதச்சுதந் திரத்தில் இந்தியா வழுக் கிடும் நிலை ஏற்பட்டுள் ளது என்று அமெரிக்க செனட்டர் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வருகைதந்த போதுகூட அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப் படையாகவே இது குறித்துக் கூறினார். இது போன்ற முக்கியப் பிரச் சினைகளையொட்டியே வெளியுறவுக்கொள்கை அமைகிறது. வாஷிங்டனை மய்ய மாகக்கொண்டு இயங்கக் கூடிய கிறித்தவ பழமை வாதக் குழுவின் குடும்ப ஆய்வுக்குழுவின் தலை வராக உள்ளவரும், அமெ ரிக்க செனட்டருமாகிய டோனி பெர்க்கின்ஸ் செனட்டின் துணைக்குழு வில் பேசும்போது, இந் தியா குறித்துக் குறிப் பிட்டு சொல்லும்போது:- அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நாடு மதச் சுதந்திரத்திலிருந்து வழுக்கி உள்ளது. ஆகவே, கிறித்தவர் என்று மட்டு மன்றி அந் நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையராக உள்ளவர்கள்மீதான செயல்கள்குறித்து அந் நாட்டை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும் போது, பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்திற்கே வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை அளிக்கப் படும். வெளியுறவுத் துறை யில் பணியாற்றும அலுவ லர்களிடம் இதற்கே முன் னுரிமை அளிக்க வேண் டும் என்பதையே பயிற்சி கொடுத்துவருகிறோம் என்றார்.

செனட்டர் ஸ்டீவ் டான்ஸ் என்பவர் செனட் டர் பெர்க்கின்சிடம் கேட்கும்போது, உங்கள் பார்வையில் தற்போ துள்ள (இந்திய) அரசு நிர் வாகம் மதச்சுதந்திரத்தில் தெளிவாக உள்ளதா? என்று கேட்டார்.

பெர்கின்ஸ் கூறும் போது, நான் அலுவலர் களிடம் பேசும்போது மதச்சுதந்திரம் என்கிற கருத்தில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெளி யுறவுக் கொள்கையில் முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டி உள்ளது. உண்மையைக் கூற வேண் டுமானால், இப்போது தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, செனட்டர் ஸ்டீவ் கேள் விக்கு பதில் அளிப்பதில் நான் இல்லை என்றேகூற வேண்டியுள்ளது. அந்த நாட்டில்(இந்தியாவில்) அரசால் மதச் சுதந்திரத் துக்கு முன்னுரிமை வழங் கப்படவில்லை என்று பதில் அளித்தார்.

முடிவாக, மதரீதியில் துன்புறுத்தல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இதுகுறித்து ஆய்வு செய் துள்ளவர்களின் கருத்துப் படி, மதச்சுதந்திரம் உயர் வானதாக இல்லை. தொடர்ச்சியாகவே மதரீதி யிலான துன்புறுத்தல்கள் உள்ளன. மதத்தைக் கட்டாயப்படுத்துவது எதிர்காலத்தில் நன்றாக இருக்காது என்றார்.

புதுடில்லி சிறீக் கோட் டையில் கடந்த ஜனவரி யில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சைச் சுட்டிக் காட்டி ராபி டேவிட் நாதன் சபர்ஸ் டெயின் பேசி னார். அமெரிக்க நாட் டின் பன்னாட்டளவில் மதச்சுதந்திரத்துக்கான தூதராக சபர்ஸ்டெயின் உள்ளார். அவர்கூறும் போது, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மான பங்கு வகிப்பது மதச்சுதந்திரமாகும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறும் போது, மதச் சுதந்திரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்களில் சட்டரீதியாக மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதாக வெளிப்படையாகவே அமைந்துள்ளதாகவே நான் எணணுகிறேன்.

காலைப் பிரார்த் தனைக் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயப் படுத்தப்படுகிறது. தொடக்கநிலையில் தான் செயல்படுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, அதன் படியே செயல்படு கிறேன் என்றார். ஆனால், உண்மைநிலை என்ன? அரசின் அனைத்து துறை களிலும் மதச்சுதந்திரம் குறித்த திட்டம் என்ன? முக்கியத்துவம் வாய்ந்த செயல் திட்டமாக அல் லவா இருக்க வேண்டும்? என்று வாதிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல செயல்கள் நடந்துவிடு கின்றன. உண்மையல் நான் எண்ணுவது என்ன வென்றால், சட்டத்தில் உள்ளபடி, அரசு நிர்வா கம் மற்றும் அரசுத்துறை செயலாளர் மற்றும் தலைவர் ஆழமாக கவனம் செலுத்தவேண்டிய பிரச் சினையாக மதச்சுதந்திரம் உள்ளது என்று சபர்ஸ் டெயின் கூறினார்.

மத்திய அரசின் மதச் சுதந்திரம் குறித்து அமெ ரிக்க செனட்டர்கள் விவா திக்கும் அளவில் பாஜக அரசின் மதவாதச் செயல் பாடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/97917.html#ixzz3USJjAOnf

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு
இந்து முன்னணியே கேட்கும் கேள்விகள்

26.1.2015 அன்று வைத்தியநாத சுவாமி ஆலய குடமுழுக்கு நடை பெற்றது. குடமுழுக்குக்கு பொருளுதவி பண உதவி செய்த ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம ஆன்மீகவாதிகள் அளித்த தொகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு முறையாக ரசீது கொடுக்கப்பட்டதா?

செயல் அலுவலரால் ஏற் படுத்தப்பட்ட திருப்பணி குழு எத் தனை? எந்த கட்சி தலைமை வகித் தனர்? அவர்கள் வசூல் செய்த தொகைக்கு கணக்கு உண்டா?

எந்தெந்த உபயதாரர்கள், ஒப்பந் ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப் பட்டது? யார் யார் எந்தெந்த வேலையை செய்தனர்?
எந்தெந்த வேலையை யார் யார் தனியாக செய்து முடித்தனர் என்ற விபரம்.

வைத்தியநாத சுவாமி நில குத்தகை தாரர்களிடம் ஏக்கருக்கு ரூ.15,000/- வசூல் செய்யப்பட்டது. எவ்வளவு வசூல் செய்யப்பட்டது. யாருக்கும் ரசீது கொடுக்காதது ஏன்?

எத்தனை கோடி வசூல் செய்யப்பட் டது? எத்தனை கோடி இருப்பு உள்ளது?

அர்ச்சனை சீட்டு ரூ.2 கொடுத்தால் தான் அர்ச்சனை செய்வேன் என்று கூறும்போது, லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது கொடுக் காதது ஏன்?

பல தரப்பு மக்களிடம் கட்டாய வசூல் செய்த நீங்கள் ஒருவருக்குகூட ரசீது கொடுக்காதது ஏன்? கொள்ளை யர்களின் கூடாரமாக வைத்தியநாத சுவாமி ஆலயம் போவதற்கு காரணம் இந்து அறநிலைய துறையா? அரசியல் வாதிகளா? திருப்பணிக் குழுவா?
கணக்கு காட்டுவதற்கு துணிவு உண்டா?

திருக்குளத்தைப் பற்றியும் தேரடியைப் பற்றியும் ஊர் முக்கியஸ் தர்கள், அரசியல்வாதிகள்அக்கறை கொள்ளாதது ஏன்?
யாக சாலையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.7,000/- கொடுத்தால்தான் அனுமதி என்று கூறினீர்கள் எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எவ்வளவு செலவு? எவ்வளவு இருப்பு?

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வைத்து கோவிலில் உட்கார்ந்து பொது வசூல் என்று வசூலித்தனர். எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எந்த வங்கியில் யார் பேருக்கு போடப்பட்டது? அந்த வங்கி இருப்பு செயல் அலுவலர் உடையதா? இந்து அறநிலைய துறை யுடையதா? அரசியல்வாதியுடையதா? திருப்பணிக் குழுவுடையதா?

கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள தேக்கு மரம், தென்னை மரம், நாவல் மரம், வேப்ப மரம், அத்தி மரம், இலவ மரம், வாகை மரங்களை வெட்டியதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற்றீர்களா? எந்த தேதியில் ஏலம் விடப்பட்டது? யாருக்கு ஏலம் விடப்பட்டது? யார் ஏலம் கூறினர்?

பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
செலவு கணக்கை கூறவில்லை என்றால் மண்டல பூஜை அன்று இந்து முன்னணி சார்பாக அனைத்து கட்சி மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி 18.03.2015 புதன்கிழமை அன்று காலை 8 மணியளவில் அடையாள உண்ணவிரதம் நடைபெறும்.

நன்கொடையாக தங்கம், வெள்ளி வழங்கியவர்கள் விவரங்களை உடனே வெளியிட வேண்டும்.
2005 தகவல் அறியும் உரிமை சட் டத்தின்கீழ் நன்கொடை வழங்கிய வர்கள் மற்றும் பொது மக்கள் தகவல் பெற உரிமை உண்டு.

சர்வே எண் 122, 123 தேரடி தனியார் நபரிடம் பட்டா கொடுத்தது, சன்மானம் பெற்றுக் கொண்ட அறநிலையத்துறைக்கும், வருவாய் துறைக்கும் கூட்டுக் கொள்ளை நடந்தது எப்படி?

தகவல்: திட்டக்குடி அறிவு

Read more: http://viduthalai.in/page3/97856.html#ixzz3USMJrOcO

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.

வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.

ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.

சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.

சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.

படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம் எனவே படியுங்கள்!

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page5/97861.html#ixzz3USNEE8D7

தமிழ் ஓவியா said...

என்று மறந்தோம்?

அறுபதைத் தொடுமுன்
அறுந்து விட்ட பம்பரம்
இளமைத் தென்றல் தேனை
எட்டி உதைத்த புத்தகம்

சுயமரியாதை ஏணியில் ஏறி
சூரியனிடம் வந்து சேர்ந்த நட்சத்திரம்
அந்தச் சூரிய வெப்பத்தில்
சுடப்பட்ட வைரக் கல்!

பெரும் பொறுப்பு மலையை
பொறுப்போடு சுமந்த தோள்!

ஏழை விட்டுப் பிள்ளைகளை
தோள் தொட்டியில் தாலாட்டிய அன்னை
எளிமை என்ற அணிகலனை

இயல்பாய்ப் பெற்ற வசீகரம்
அமைதியான தோற்றம் - அதற்குள்
அடங்கியிருக்கும் புலியின் சீற்றம்!

போராட்டப் பெருங் குணம்
போர்ப்பாட்டின் புதுமணம்!

நெருக்கடிக்கு நெருக்கடி
கொடுக்கும் கொள்கைச் சவுக்கடி
ஆழமான சிந்தனைக் கடல்
அதில் மூழ்கியிருக்கும் முழு உடல்!

தலைவரைக் காத்திடவே
தன்னலம் துறந்துள்ள தற்கொலை!

எங்கள் அன்னையே ஈடில்லா
மணியம்மையே!

என்று மறந்தோம்
உங்களை நினைப்பதற்கு?

- கவிஞர் கலி. பூங்குன்றன்
(மார்ச்சு 16 - அன்னை மணியம்மையார் நினைவு நாள் (1978).


Read more: http://viduthalai.in/page5/97862.html#ixzz3USNQd1po

தமிழ் ஓவியா said...

மார்ச்சு 8 மகளிர் நாள் சிந்தனை நினைவாக
ஹிட்லரும், சங்கராச்சாரியாரும், மடாதிபதிகளும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது ஏன்?

ஆரிய கலாச்சாரத்தை நிலை நாட்டும் வெறி கொண் டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தின் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை கிந்தர், கூஹே, கிர்ஹே (குழந்தைகள், சமையல், சர்ச்) ஆகியவற் றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கி னான். அதாவது, படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும்.

படி தாண்டிவிட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் -_ மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜ கத்தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.

ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன் னது. ஒருவிசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லி யிருக்கிறார்.

பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால் தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?) வேலைக் குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக் கின்றனர். நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்.

காஞ்சி மடத்தில் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசுநிலம் என்று சுவாமிகள் சொன்னார். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிரூபிப்பார் சாமியார்?

ஆண் களில் எத்தனை சதவீதம் ஒழுக்கமான வர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம ஸ்மிரு திகளை ஆதாரமாக்கிக் கொள்கிறாரா? சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்தபோது ஆசிரியருக்கு வக்காலத்து பேசினவர்தானே?

ஸ்மிரு திகளில் பெண்களை அடிமைப்படுத்தும் படியான, கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி நல்ல அறிஞர் களைக் கொண்டு முற்போக்குச் சிந் தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், இந்த வேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடாது என்றும் சொன்னார்.

தெரி யாமல் தான் கேட்கிறேன், இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைந்திருக் கின்றன? ஆணுக்குச் சற்றும் இளைப் பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம் என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப் பெண்ணை வரவேற் றானே 50 ஆண்டுகளுக்கு முன், பாரதி என்ற கவிஞன் அவனைப்பற்றி சங்கர மடத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற வார்த்தை களின் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது. முற்போக்குச் சிந்தனைகள் இவர் களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு, கலாச்சாரம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தையைக் குழப்புகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை உணராமல் சக்தி வாய்ந்த சாதனமான தொலைக் காட்சி வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே நமது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது.

பணத் தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக் கூத்தாக இருக்கிறது.
சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில், சமூகவியலில் டியூஷன். அது கிடைக்கும் வரை வாயை மூடிக் கொண்டு இருக்கட்டும்.

பெண் பாவம் பொல்லாதது.
- வாஸந்தி
நன்றி: இந்தியா டுடே

Read more: http://viduthalai.in/page7/97864.html#ixzz3USNngJrj

தமிழ் ஓவியா said...

வளர்கிறார்கள் கோடீசுவரர்கள்

போர்ப்ஸ் பத்திரிகையின் தர வரிசைப்படி அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 56 ஆக இருந்தது; இந்த ஆண்டு 90 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

சீனா மற்றும் ஜெர்மனி முறையே 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன.போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வின் படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 90 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 29,400 கோடி டாலராகும். சென்ற ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 19,150 கோடி டாலராகவும் இருந்தது.உலக அளவில் மொத்தம் 1,826 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 6.4 லட்சம் கோடி டாலரிலிருந்து 7.05 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 536 கோடீஸ்வரர்கள் உள்ளனர். சீனாவில் 213 கோடீஸ்வரர்களும், ஜெர்மனியில் 103 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பிரிக் நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 213 கோடீஸ்வரர்கள் மற்றும் 56,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 90 கோடீஸ்வரர்கள் மற்றும் 29,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் (54 பேர்-18,100 கோடி டாலர் மற்றும் ரஷ்யா (88 பேர்- 33,700 கோடி டாலர்) ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

ரஷ்யாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 111 லிருந்து 88 ஆக குறைந்துள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் 2 இந்தியப் பெண்கள் இடம் பெற்றிருந் தனர்.

உலக அளவில் 100 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page7/97865.html#ixzz3USNw2KT1

தமிழ் ஓவியா said...

குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

பழைமைவாய்ந்த தேவாலயம் இடிக்கப்பட்டு சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலை குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

ஹிஸ்ஸார் (அரியானா) மார்ச் 16_ அரியானா மாநி லத்தில் புதுப்பிக்கப் பட்டு வந்த தேவால யத்தை இடித்து சிலுவை இருந்த இடத்தில் அனு மான் சிலை நிறுவப்பட் டது. அந்த தேவாலயத் தின் தலைமை போதகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையா ளம் தெரியாத சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது -_ பஜ்ரங் தள் (குரங்குப்படை).

2014-ஆண்டு அக் டோபர் மாதம் முதல் டில்லி, ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களிலும் மங்களூரூ, வடோதரா, போபால் போன்ற நகரங் களில் உள்ள கிறிஸ்த வர்களின் மதவழிபாட் டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளி ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. இந்தப்பள்ளி மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த பள்ளி யாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரி யானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் நகருக்கு அருகில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலையும், ராமர் படமும், தேவால யத்தின் கோபுரத்தில் காவிக்கொடியும் பறக்க விடப்பட்டது. இன்னோரு கரசேவையா?

இது குறித்து கோவிலின் தலைமை போதகர் சுபாஷ் சந்த் என்பவர் கூறியதாவது, சுமார் 60 ஆண்டு பழைமையான இந்தத் தேவாலயம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதை சரிசெய்து புதுப்பிக்கும் பணியை கடந்த சில நாட்களாக நாங்கள் மேற்கொண்டு வந்தோம். நாங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் போதே பங்ரங் தள் அமைப்பினர், இப் பகுதியில் இந்துக் கோவிலைத் தவிர்த்து எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நாங்கள் அதை உடைத் தெறிவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந் தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். ஒரு சிலர் மாத்திரமே தேவாலயத் தில் இருந்தனர். அப் போது திடீரென 60க்கும் மேற்பட்டோர், தேவால யத்தில் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்ற ஊகிக்கும் முன்பே கண் ணாடிகளை உடைத்தனர். தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவப் படங்கள் அனைத்தையும் உடைத் தனர். பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த ராமர் படங்களை ஆங் காங்கே வைத்தனர். பிறகு சிலுவை இருந்த முக்கிய பீடம் அமைந்த பகுதியை தகர்த்துவிட்டு அங்கு அனுமார் சிலையை வைத்துவிட்டு அங்குள்ள வர்களிடம் இனிமேல் இது இந்துக்கோவில் இனிமேல் இந்த இடத் தில் கிறிஸ்தவ வழிபாட் டுத்தலம் இருந்தால் வழிபடுபவர்கள் அனை வரும் அதற்கான தக்க விலைதரவேண்டி இருக் கும் என்று மிரட்டி விட்டுச் சென்று விட் டனர்.

14 பேர்மீது வழக்கு

போதகரின் புகாரை அடுத்து அடையாளம் தெரியாத 14-பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அரியானா வில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரியானாவில் கிறிஸ்த வர்கள் வாழும் பகுதி களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரி யானா முதல்வர் எந்தவித கருத்தும் கூற மறுத்து விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97979.html#ixzz3UYdTodIW

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/97982.html#ixzz3UYe7iRJP

தமிழ் ஓவியா said...

தேர்வு காலம் என்பதால் கோயில் கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 7.60 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் கொண்டு வந்து வானத்தில் பறக்க விட்டு பூ தூவும் நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. (அவ்வாறு 48 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றால் ஊருக்கு ஆகாதாம்) அதன்படி நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சல தினங்களில் நிகழ்ச் சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் கூறுகையில் மண்டலாபிஷேகத்திற்கு கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டது உண்மைதான். கொத்த மங்கலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முழுத்தேர்ச்சி பெறுவதோடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறப்பு பெற்று வருகின்றன.

அதற்காக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கினாலே பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியரின் வீடுகளில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தினரே முன்னின்று உதவிகளை செய்வதுபோன்ற பல்வேறு வகைகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கும் அதிக தேர்ச்சி பெறுவதற்கும் மாணவ - மாணவியரும் அவர்கள்தம் ஆசிரியர்களும் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு கிராமத்தில் உள்ளவர்கள் தேர்வுக்கு முன்னும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் ஏராளமாக வழங்கி வருகிறார்கள். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூபாய் 50-ஆயிரமும் அதற்குக் குறைவாகப் பெறும் மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டைப் போலவே எனது சார்பில் அவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்க உள்ளேன். இன்னும் பலரும் பரிசுகள் வழங்கக் காத் திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதியி லிருந்து பிளஸ்டூ பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளது. இதில் இரண்டு பள்ளிகளிலும் சுமார் 400 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒலி பெருக்கிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதறும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை பொதுத்தேர்வு முடியும் வரை நடத்துவதில்லை என கிரா மத்தினரே முடிவெடுத்துள்ளனர் என்றார்.
கிராமத்தினரின் முற்போக்கான இத்தகைய முடிவினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page-2/97987.html#ixzz3UYeIEcl7

தமிழ் ஓவியா said...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எலுமிச்சை

தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ஆம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன.

எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப் படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை முகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.

எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்தி லிருந்து விடுபடலாம்.

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page-7/98004.html#ixzz3UYfVUXLo

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.

வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgFNVNK

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தைக் காக்க:

* உடல் பருமன் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை,

இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgLsaYG

தமிழ் ஓவியா said...

பருமனை குறைக்குமா கிரீன் டீ

பல தரப்பினரும் கொண் டாடும் கிரீன் டீ உண்மையில் உடலுக்கு நன்மை செய் கிறதா? அதை எவ்வாறு அருந்த வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகலாம்? என்பது குறித்து உணவியல் நிபுணர் அபிநயாராவ் கூறியிருப்பதாவது:- கமீலியா சினஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.

முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடல்நலம் குறித்த அக் கறையும், கிரீன் டீக்கு பெரிய அளவில் செய்யப்படும் விளம் பரங்களும்தான் முக்கிய காரணம். கிரீன் டீ ஆன்டி ஆக்சிடென்ட் ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும்.

இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு.

இதனால்தான் எடை அதிக முள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்து கிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கலாம்.உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால், சமச்சீர் உணவு அவசியம்.

வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக் கூடியவை. கிரீன் டீயை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 விநாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது.

சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை டீடாக்ஸ் செய்து நச்சுகளைவெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது. இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து குடிக்கலாம்.

இது நச்சுகளை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி.லி. வரை மட்டுமே.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிகமாக கஃபைன் உடலில் சேர்ந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு தூக்கம் வருவதைக் கெடுக்கும். மனநலம் சார்ந்த பல பிரச்சினைகளைஉருவாக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/98006.html#ixzz3UYgTWXeI

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.



அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.

அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.

உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.

மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.

கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.

அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.

அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.

உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.

பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,

இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.

அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.

- திருமகள் இறையன்

தமிழ் ஓவியா said...

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்

நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.

- பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.

மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.

- சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.

மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.

- செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.

.............

சொல்றாங்க

பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.

- அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்

சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே... அதைப் பெருமையா சொல்றீங்களா?

சொல்றாங்க

அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.

அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.

சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!

தமிழ் ஓவியா said...

பெரிய கருந்துளை

விண்வெளியின் ஒரு பகுதியே கருந்துளை ஆகும். மிகவும் அடர்த்தி வாய்ந்த இதனுள் ஒளிகூட செல்ல முடியாது. தனக்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கருந்துளைக்கு உண்டு.

இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை யாக உள்ளன. இந்த ஒளிக்கதிர்கள் குவாசார் என அழைக்கப்படுகின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த, பூமியைவிட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் உள்ளது. சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்து எஸ்டிஎஸ்எஸ்ஜெ0100 + 2802 என பெயர் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சிலி நாடும் இந்தக் கருந்துளை இருப்பதை உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை-களி-லேயே மிகவும் பெரியதாகவும் ஒளிக்கதிர்கள் அதிக வெளிச்சம் கொண்ட-தாகவும் இருப்பது என்ற பெருமையினை இந்தக் கருந்துளை பெற்றுள்ளது.

கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்-களுள் ஒருவரான பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூ சுபிங், பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டு-பிடித்துள்ளோம்.

இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தயிர் ஷோரை தேஷிய உணவாக...

பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.
வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும்.

மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால் ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும்.

முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும்.

ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும்.

- முகநூலில் யுவான் சுவாங்

தமிழ் ஓவியா said...

முகநூலில் கிளிமூக்கு அரக்கன்


கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.



வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.



மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.

உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காவி"யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.

- முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்கணம்

இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.

இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.

(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.

இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.

இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.

இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.

இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)

நேயம்

இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.

நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.

மீன்

இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.

குயில் 28. 6. 1958