Search This Blog

4.1.15

பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்

பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - தந்தை பெரியார்
பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு  - தந்தை பெரியார்
தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது. எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.


தங்களது தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்விகளை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!


தேர்தல் நடக்கிற அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும் ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான் ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின்றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.

மாணவர்களுக்குச் சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது. வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால் அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.


இக்காரியங்களைக் காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான் கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.


தற்போது சில மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும் மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை மூடியது.


நாளைக்குக் காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.


ஜனசங்கம் முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும், ஒரு சில நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப் பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.


1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள். மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக் காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம் கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும் அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார். மக்களிடையே ஆதரவு பெருகியது.


அவர் போய் இவர்கள் ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக்கவே முடியாத பதவி உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று வருகின்றன.


நம் இளைஞர்கள் எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில் மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க்கிறார். அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது.

என்னைப் பொறுத்த வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!


இன்றைக்கு முன்னேற்றக் கழகத்திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற  உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல்  வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


மாணவர்களை நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.


இன்று நம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.


உத்தியோகங்களால் நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு ஒழிகிறதே!

இது நம் நாடு- நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம் தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும். அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.


--------------------------------22-11-1970 அன்று காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -"விடுதலை", 6.1.1971.

28 comments:

தமிழ் ஓவியா said...

ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!! சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!

ஆந்திரா மாநிலம் - குண்டூரில் சமூகநீதி விழா

குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு!

ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!

சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!

ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!

குண்டூர், ஜன.4_ ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதிப் பெரு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்.

சமூக நீதிப் பெரு விழா வில் குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களையும் உள்ளடக்கி அனைத்துத் தரப்பினரையும் ஈடு படுத்தி, தொடர்ந்து 10 நாள் சமூக நீதிப் பிரச் சாரப் பயணம் மேற் கொள்ளப்படும் என பிரகடனப்படுத்தி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில், ஆந்திர பிர தேச பிற்படுத்தப்பட்ட வகுப்பின் சங்சேம சங்கத்தின் சார்பாக சமூக நீதிப் பெருவிழா நடை பெற்றது. 3.1.2015 அன்று குண்டூரின் மய்யப் பகுதி யில் அமைந்துள்ள சிறீ வெங்கடேசுவர விஞ் ஞான மந்திர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆந்திர பிரதேச பிற்படுத் தப்பட்ட வகுப்பின சங் சேம சங்கத்தின் மாநிலத் தலைவராக தெரிந்தெடுக் கப்பட்டுள்ள கேசன சங்கர் ராவ் பாராட்டப்பட்டார். சமூக நீதி ஆர்வலர்கள், தலைவர்கள் பலர் பெரும் திரளாக விழாவில் பங் கேற்றுச் சிறப்பித்தனர். சமூக நீதிப் பெருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சமூக நீதியின் அடுத்த கட்ட விழிப் புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக் கிட ஆந்திர மாநிலத்தின் அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கி தொடர் பிரச்சாரப் பய ணம் மேற்கொள்ளப்படும் என எழுச்சிமிகு அறிவிப் பினைத் தெரிவித்தார்.

சமூகநீதிப் பெரு விழா விற்கு ஆந்திர மாநில மசூலிப்பட்டிணத் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப் பினர் கொனகல்ல நாரா யணராவ் தலைமை வகித் தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின சங்சேம சங் கத்தின் தேசியத் தலை வரும், தெலங்கானா சட் டமன்ற உறுப்பினருமான ஆர். கிருஷ்ணய்யா முன் னிலை வகித்தார். விழா வில் தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா, ஆந்திர மாநில பிற்படுத்தப்பட் டோர் மேம்பாடு மற்றும் கலால்துறை அமைச்சர் கே. ரவீந்திரா, தெலங் கானா மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவாஜி, சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசகவுடு, ஜில்லா பரிசத் தலைவர் சேக் ஜானிமுன், தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் டி. சுமன் மற்றும் அனைத்துத் தரப்பு சமூக நீதித் தலைவர்கள், அமைப்பு அடிப்படையிலான ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சமூக நீதித் தலைவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சமூகநீதி விழா தொடங்குவதற்கு முன்ன தாக குண்டூரில் அமைந் துள்ள சமூகநீதிக்குப் பாடுபட்ட தலைவர் களான ஜோதிபா புலே, அண்ணல் அம்பேத்கர் பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரின் சிலை களுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தமிழர் தலைவருடன் சமூகநீதித் தலைவர் கேசன சங்கர்ராவ், ஆந்திர மாநில சமூகநீதி அமைப் பினர் வழக்குரைஞர் ராம கோட்டீஸ்வரராவ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் மற்றும் பலர் திரளாகச் சென்றனர்.

சமூகநீதித் தலைவர் களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், மாலை 4 மணியளவில் சமூகநீதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் சமூகநீதி அமைப் பினர் மற்றும் ஆர்வ லர்கள் கலந்து கொண் டனர். ஊர்வலம், விழா அரங்கினை சென்ற டைந்து, பின்னர் சமூக நீதிப் பெரு விழா தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. சமூக நீதி விழாவில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை

சமூகநீதி விழாவில் திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப் பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...


மக்கள் நாயகம் என்பது, மக்கள் தொகையில் பெரும்பான்மையினரை, அவர்களது நியாயமான தேவைகளை, உரிமைகளை பெற்றுத் தருகின்ற வகையில் அரசாட்சி அமைந்திட வேண்டும். ஆனால், இந்த மண்ணில் நிலவி வந்த, ஆதிக்கம் செலுத்திவரும் சிறுபான்மையினரின் நலனைப் பேணுகின்ற வகையில், பெரும்பான்மையினரின் நலனை தடைப்படுத்துகின்ற வகையில், மட்டுப்படுத்துகின்ற வகையில் ஆட்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஏகபோக சமூக ஆதிக்கவாதிகளால் (social monopolies) பெரும்பான்மையினர் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். இனியும் இந்த ஆதிக்கவாதிகளின் அதிகார ஆட்சி நடைபெறாது. ஒடுக்கப்பட்ட மக்களில் - பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர், மத அடிப் படையிலான சிறுபான்மையினர் எனும் பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு தோன்றியுள்ளது. அத்தகைய விழிப்புணர்வின் வெளிப்பாடுதான். இந்த சமூகநீதி விழாவில் பெருந் திரளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கேற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம்கேட்பது சலுகை அல்ல; உரிமை --_ சமத்துவ உரிமையினைதான் கேட்கிறோம். (We are not demanding charity but parity)

ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்கும் சமத்துவம் பெறுவதற்கான இடஒதுக்கீடு என்பது மனிதனை வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு என ஆதிக்கவாதிகள் விளக்கம் அளிக்கின்றனர். இடஒதுக்கீடு என்பதை தொடங்கியதே இத்தகைய ஆதிக்கவாதிகள்தான். ஒரு குலத்துக்கு ஒரு நீதி, ஒரு தொழில் என்று மனு காலம் முதல் கொண்டு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருபவர்கள்தான் வீணான விளக்கமளிக்கும் ஆதிக்கவாதிகள். அன்று முதல் ஆதிக்கவாதிகள் வலியுறுத்தி வரும் இடஒதுக்கீடு மனிதரை பிரிவுபடுத்தி பார்ப்பது. இன்று அடக்கப்பட்ட மக்கள் தங்களுக்காகக் கோரும் இடஒதுக்கீடு, பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தினரை இணைத்துப் பார்ப்பது; சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டிச் செல்வது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சி வலைகளை அடையாளம் கண்டு அவைகளை அறுத்து எறிந்து தமக்கு உள்ள உரிமைகளைப் பெற வேண்டும். போரிட்டுதான் பெறவேண்டும். ஆயுதப் போர் அல்ல; அறிவாயுதம் தாங்கி அமைதியான போர்; கருத்து அடிப்படையிலான போர் தொடங்கப்பட வேண்டும். இத்தகைய உணர்வுகளுக்கு உந்துதலுக்கு இத்தகைய சமூக நீதிப் பாராட்டு விழா அச்சாரமாக அமைந்திடல் வேண்டும்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களில், சமத்துவம் பெறுவதற்கான கொள்கைகளை, அவர் களுடைய வழிகாட்டுதலை ஒடுக்கப்பட்ட மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதித்தலை வர்களான ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரது சிலைகளுக்கு விழா தொடங்குவதற்கு முன்னர் மாலை அணிவித்து மரியாதை செய்த வேளையில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடும் தேவை மற்றும் அவருடைய பகுத்தறிவு கொள்கையினைப் போற்றுதல் பற்றிய உரையாடல் நடைபெற்றது. மிகவும் மகிழ்வுடன் இந்த சமூகநீதி விழாவினர் குணடூரில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திட முன் வந்தனர். அதற்கான முயற்சிகள் உடனே தொடங்கப்பட உறுதி அளித் துள்ளனர். (குண்டூரில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியாரின் சிலை ஆந்திர மாநிலத்தில் நிறுவப்படும் இரண்டாவது சிலையாகும். முதல் சிலை விசாகப் பட்டினத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது)

தமிழ் ஓவியா said...

சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு (அன்று ஆந்திரப்பகுதியினை உள்ளடக்கிய சென்னை மாகாண காலம்தொட்டு) ஒரு சிறப்பான வரலாறு உண்டு. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீட்டிற்கு தனியாக ஒரு சட்டத்தினை இயற்றி 69 விழுக்காடு மொத்த இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

பெரும்பான்மை மக்களின் உண்மையான, நியாயமான பிரதிநிதித்துவம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைத்திட, உரிய அளவில் இட ஒதுக்கீடு அளவு அந்தந்த மாநிலங்களில் சட்டத்தின் மூலம் நிலை நிறுத்தப்படவேண்டும். நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக்குகின்ற வகையில் ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி பற்றிய தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல், மதம் கடந்த அடையாளங்களைத் தாண்டியதாக தொடர் பிரச்சாரம் அமைந்திட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அந்த சமூக நீதிப் பிரச்சாரப் பயணம் அமையும். ஆட்சியாளர்கள் கவனத்தை கவருகின்ற வகையிலும் அந்த பிரச்சாரப் பயணம் அமையும். பெரியார் இயக்கம் ஆந்திராவில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும் இணைத்து, கலந்துபேசி சமூக நீதிப் பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்திடும். விரைவிலேயே சமூகநீதிப் பிரச்சாரப் பயண கால அட்டவணை வெளியிடப்படும்.

தமிழ் ஓவியா said...

இந்த சமூக நீதி விழாவில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஈசுவரய்யா பங்கேற்று சிறப்பித்துள்ளார். ஆணையத்தின் செயல்பாட்டிற்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் சமூகநீதிக்கான அமைப்பினரின் குரல் எழுப்ப வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முழுமையான நீதி நிர்வாக அதிகாரம் கொண்டதாக திருத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் முழுமையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கிடைக்கின்ற வகையில் சமூக நீதி அமைப்புகள் கோரிக்கை விடுத்தல் வேண்டும். ஒருங்கிணைந்த செயல்பாட்டால்தான் அத்தகைய கூடுதல் அதிகாரங்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கிடைக்கும்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும், சமூகநீதி விழாவின் நாயகர் ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின தலைவர் கேசன சங்கரராவ் பாராட்டுதலுக்கு உரிய செயல் வீரர். அவருடைய தலைமையில் சமூக நீதிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் ஆந்திர மாநிலத்தில் துவக்கப்பட வேண்டும். அத்தகைய உரிமை மீட்பு, போராட்டங் களுக்கு, செயல்பாடுகளுக்குப் பெரியார் இயக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கும் எனக்கூறி சமூக நீதி விழாவின் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

திரையுலக முன்னணி நடிகர்

சமூகநீதி விழாவில் பங்கேற்ற திரைப்பட நடிகர் டி.சுமன் குறிப்பிட்டதாவது:-

இந்த சமூகநீதி விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரையுலக மேடையாகட்டும், இதர மேடைகளாகட்டும், நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதை அடையாளப் படுத்திக் கொள்வதில் உரிமை கலந்த பெருமை கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி ஆக்கம் பெறுகின்ற வகையில் என்னால் ஆனவரை செய்திட அணியமாக இருக்கிறேன்.

இன்று நான் ஆந்திர திரைஉலகில் பிரபலமாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது படித்தது தமிழ்நாட்டில்தான். 33 ஆண்டு காலம் தமிழகத்தில்தான் இருந்தேன். தமிழ் திரையுலகம்தான் எனக்கு திரை உலக வாழ்வினை அளித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் இயக்கத்தினைப் பற்றி நன்றாக அறிவேன். அதன் தலைவர் அய்யா வீரமணி அவர் களிடம் நேரடி பழக்கம் இல்லாவிடினும், அவரை நான் நன்றாகவே அறிவேன்.

தமிழ்நாட்டின் மக்களிடம் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது தந்தை பெரியாரது இயக்கம்தான். அந்த இயக்கத்தின் துணையோடு ஆந்திர மாநிலத்தில் சமூகநீதிப் பயணத்தில் பெரும் வெற்றி பெற இயலும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனது செயல்பாடும் சமூகநீதித் தளத்தில் கூடுதலாகவே இருக்கும். எனது ரசிகர்களையும் இந்த சமூக நீதிப் பயணத்தில் பங்கேற்க வைத்திட முழு முயற்சி எடுப்பேன் என்பதை இந்த சமூகநீதி விழாவில் உறுதியளிக்கிறேன்.

குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைந்திடுவதற்கு ஆதரவு

அய்யா வீரமணி அவர்கள் குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைப்பது குறித்துப் பேசினார். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் சிலையினை குண்டூரில் அமைத்திடும் பணியில் எனது நிதி பங்களிப்பு உண்டு. அதற்கான முயற்சிகளில் என்னையும் ஈடுபடுத்தி விரைவில் தந்தை பெரியாரின் சிலை நிறுவப் பாடுபடுவேன் என்பதை இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திரையுலக வாழ்வோடு, சமூக நீதிப் பயணத் திற்கான பங்கும் சேர்ந்தே இருக்கும். நமது உரிமைகளை வென்றெடுப்போம்.

இவ்வாறு திரைப்பட நடிகர் சுமன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

குண்டூரில் நடைபெற்ற சமூகநீதி விழா, ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவித மாறுதலுக்கான வித்தாக அமைந்தது. எழுச்சியுடன் பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்பினர் கலந்து கொண்டது. ஒருங்கிணைந்த சமூகநீதி செயல்பாட்டுக்கான துவக்கமாகவே அமைந்துவிட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த சமூகநீதிப் பிரச்சாரம் பயணம் சமூக நீதி விழாவினரிடம் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதி பாராட்டு விழா சமூக நீதி விடியலுக்கான அச்சாரமாகவே அமைந்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/93903.html#ixzz3Nr1q6jJQ

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக் சர்ஜரி முதன் முதலில் செய்யப்பட்டது எப்பொழுது?


வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாகப் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்காகவே வரலாற்று ஆய்வுக் கவுன்சில் குட்டு வைத்துள்ளது.வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற் பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டில்லி, ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்திலுள்ள வால்டர் என்பவருக்கு தான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி 1917ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதற்கு முன்பு எவருக்கும் செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/93953.html#ixzz3O0Ea81ms

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சர்வமும் சக்திமயம்

துர்க்கை சர்வ சக்தி மயமாக இருக்கின்றாள். சிவனிடம் சிவையாகவும், நாராயணரிடம் லட்சுமி யாகவும், பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும், கிருஷ் ணரிடம் ராதையாகவும், சந்திரனிடம் ரோகினியா கவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமனிடம் ரதியாகவும், வருணனிடம் வருணாளி னியாகவும், வாயுவிடம் அவர் சக்தியாகவும், அக்னியிடம் ஸ்வாஹா வாகவும், குபேரனிடம் அவன் சக்தியாகவும், யமனிடம் சுசீலாவாகவும், நிருருதியாகவும் கோட வீயாகவும், ஈசானனிடம் சசிகலையாகவும், மனு விடம் சதரூபையாகவும், கர்தமரிடம் தேவகதி யாகவும், வசிஷ்டரிடம் லோபாமுத்ரையாகவும், கௌதமரிடம் அகலி கையாகவும், எல்லாவற் றிற்கும் ஆதாரபூதமான பூமியாகவும், பல சிறந்த நதிகளாகவும், இந்த துர்க் கையே விளங்குகின்றாள்.

இப்படி எழுதுகிறது ஓர் ஆன்மிக இதழ். துர்க்கை - இதுவரை சிவனின் மனைவியாகத் தான் பக்தர்கள் நினைத் துக் கொண்டு இருந்தனர். இந்த ஆன்மிக இதழ் சொல்லுவதைப் பார்த் தால் எல்லா முக்கியக் கட வுளுக்கும் மனைவியாக அல்லவா இருக்கிறாள்?

Read more: http://viduthalai.in/e-paper/93952.html#ixzz3O0Eq4xQn

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி


லக்னோ, ஜன.5- கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்து நடை பெற்றது.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக் கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்ப வர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலை யில் இந்த கோயி லுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்ட தாக செய்திகள் வெளி யாகின.

இதற்கிடையே, கோட் சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப் பிரதேச மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவ காரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக் களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகா பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப்பிர தேசம் மாநில நவ் நிர் மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட் சேவுக்கு கோயில் கட்டு வதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார். கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11ஆ-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவல கத்தின் முன்னர் தொண் டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், பட்டினிப் போராட்டம் மேற்கொள் ளவும் முடிவு செய்துள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

பின்னர், டில்லியில் உள்ள பிரதமரின் அலு வலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப் போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவ காரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக் கும்படி பிரதமரை கேட் டுக் கொள்ளப் போவ தாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93950.html#ixzz3O0ExWtjn

தமிழ் ஓவியா said...

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை

வாடத் தொடங்கிய தாமரை சத்தீஸ்கர் தேர்தலில் பிஜேபி படுதோல்வி!

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை


ரெய்ப்பூர், ஜன.5- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் பாஜக தோல் வியைச் சந்தித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வென்ற பெருவாரி யான இடங்களில் பா.ஜ.க. வினர் வைப்புத்தொகை கூட பெற முடியவில்லை. மோடி அலையை நம்பி களமிறங்கியவர்களை மக்கள் அலை தோற் கடித்துவிட்டது.

முக்கியமாக சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் யாவிட்டாலும் விதிகளை மீறி மத்திய அரசு மின் சாரம் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான திட்டங் களை அறிவித்தது இதன் மூலம் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியது. 2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 154 இடங்களில் 139 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதர இடங் களில் சுயேட்சைகள் வென்றனர்.

இந்த்த் தேர்தலில் பாஜகவின் தோல்விமுகம் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது தேர்தல் முடிவுகளில் மொத்த முள்ள 154 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க. 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க.விற்கு மிகவும் சொற்ப வாக்கு களே கிடைத்துள்ளன.

மாநகரத்தின் மேயரான திருநங்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாநகர மேயராக சுயேட்சையாக போட்டி யிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றார். மது என்ற திருநங்கை தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீரை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த மது தேர்தல் வெற்றி பற்றிக் கூறுகை யில் மேயர் தேர்தலில் கோடிகளைக் கொட்டி பல்வேறு வகையில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய் தனர். என்னிடம் தினசரி வரும் வருமானம் மாத் திரமே தேர்தலுக்கான செலவுகளை எனது நண்பர்களும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு தொழிலதிபரும் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.

8 ஆம் வகுப்பு வரை மாத்திரம் படித்த மது தன்னைப் போன்ற பல்வேறு கைவிடப்பட்ட திருநங்கைகளுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நடத்தி வரு கிறார்.

மேலும் அவர் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளையும் தத்து எடுத்து அவர்களையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93945.html#ixzz3O0F6B8Sx

தமிழ் ஓவியா said...

பச்சைப் பார்ப்பனத்தனம்
பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அரியானா மாநில அரசு முடிவாம்

சண்டிகார், ஜன.5_ ஹரியானா மாநில பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம். பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பகவத் கீதையைப் பரிசாக அளித்து வருகிறார். சமீ பத்தில் மத்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தி ருந்தார். இது நாடு முழு வதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப் பிட்ட மதம் ஒன்றைச் சேர்ந்த நூல் ஒன்றை எப்படி தேசிய நூலாக அறிவிக்க முடியும் என சர்ச்சை வெடித்தது. அதற் குப் பதில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டது.

இந்நிலையில், அரியா னாவிலுள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முதல் 12ஆ-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையைப் பள்ளிகளில் பாடமாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல் லிக் கொடுக்கிறது. மனஅ ழுத்தத்தை போக்கும் வழி களை கற்றுக் கொடுக் கிறது. கீதையை வயதான வர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/93948.html#ixzz3O0FFHFbY

தமிழ் ஓவியா said...


ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள்!

நாம் இன்று பெற்றுள்ள உணவு, உடை, பேச்சு ஏன் மூச்சு சுதந்திரம் எவ்வளவு பெரியது என்பது நம் முன்னோர்கள் எதிர்கொண்ட அநீதிகளில் இருந்து புரிய வருகிறது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டி ருந்தன. ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் பிரிக்கப்பட்டு, சிலர் மேல்மக்கள் என்றும் சிலர் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர் களுக்கு தான் மேற்கூறிய அடிப்படைத் தேவைகள் மறுப்பு. ஜாதி, மதம் என்பது தந்திரமாக கடவுளின் பெயரால் அடி களிட்டு பார்ப்பனர் வீட்டிற்கு போடப்பட்ட கதவுகள். இவை அவர்கள் அதிகார செல்வம் களவு போகாமல் காப்பதற்கு அழகாக உதவுகிறது. பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டும் ஜாதியும், மதமும் முழுமையாக ஒழிந்து போகாததன் காரணம், அவை கடவுளின் பெயரால் சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் ஏற்படுத்திய பயமே ஆகும் அவை சட்டங்களோ, நீதியோ அல்ல. இந்த சாதியையும், மதத்தையும் நீதியாக்கு வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல.

அவற்றுள் முதலில் கூறபடுவது பிறப்பு! அதாவது பிரம்மன் தலையில் இருந்து பிராமணனும்,தோளில் இருந்து சத்ரியனும், தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்பது. கடவுளே புனிதமுடையவர் என்று கூறும் போது அவர் கால் மட்டும் எப்படி தலையி லிருந்து தாழ்வான தாகிவிடும்? அப்படியே யென்றால் பிராமணன் மந்திரம் ஓதி போடும் பூக்கள் அனைத்தும் தலையிலே தானே விழ வேண்டும், ஏன் காலில் விழுகிறது. கடவுளே இருந்தாலும், என் பெயரால் இத்தனை வேறுபாடுகளா? என்று ரத்தக்கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாக சரித்திரம் இல்லை. மனு என் பவன் பிராமணரின் நீதிபதி மற்றும் வக்கீல். இருபதவியையும் அவனே வகிக்கிறான். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை வகுத்து அவரே வாதாடுகிறார்.

அவர் வகுத்திருக்கும் நீதிகள் அனைத்தும் பிரா மணர் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் எளிதில் வழி வகுக்கிறது. இதில் உயர்நீதி (?) என்னவென்றால் பிராமணர்கள் கொலையே செய்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களை விட மிகமிக குறைவு தான். (தலையை மொட்டை அடித்தால் போதும்) பிராமணர்கள் இவ்வாறே தன் சொகுசு வீட்டிற்கு புகுவிழா, இல்லை இல்லை 'பிரவேசம்' செய்துள்ளனர். அந்த வீட்டின் கதவை உள் பூட்டிட்டு சாவியையும் விழுங்கிவிட்டனர். இப்போது கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை. வாருங்கள் இளைஞர்களே! கதவை உடைத் தால் மட்டும் போதுமா? இந்த வருணாசிரம கட்டடத்தையே தூள் தூளாக்க வேண்டும். இளைஞர்களாலேயே அது முடியும்.

ஆசிரியர் கடந்த 27, 28, 29.-12.-2014 ஆகிய மூன்று நாட்களில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சிப்பட்டறையில் பெற்ற பயிற்சி யின் விளைவாக எனக்குள் எழுந்த சிந் தனையை தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

(நான், க. அருள்மொழி - அனிதாதாரணி இணையரின் மகள். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி)

- அ.ஓவியா, குடியாத்தம் -632602

Read more: http://viduthalai.in/page-2/93958.html#ixzz3O0GBwCyt

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணும்... உண்மையும்...


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் (வயிற்றுப் புண்) வரும் என்று சொல்வார்கள்; வயிற்றுப்புண் பெரும்பாலும் சரியான நேரத் திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர் களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப் போய் நாற்றம் எடுக்கும்.

சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் நஞ்சாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப் பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும் போதுதான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது.

உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டு கின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல் படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும்போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.

நாள்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு நஞ்சாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி நஞ்சாக மாறுகிறதோ.... அப்படி நஞ்சாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது. செரிமானம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, செரிமானத்திற்கு அங்கு ஒன்றுமே இல்லாதபோது அல்சர் வராது.

சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஆண்டுக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் தொடு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!

Read more: http://viduthalai.in/page-7/93986.html#ixzz3O0I3DndL

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.

குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/93984.html#ixzz3O0IBhbHU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பலவீனம்

பலமின்மையே துயரத் திற்கான ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால், நாம் கெட்ட வர்களாகிறோம். நம்மிடம் பொய்யும், திருட் டும், கொலையும், வேறு பாவச் செயல்களும் இருப் பதற்கு நமது பலவீனமே காரணம். நாம் துன்பமடைவதும், இறப்பதும் அந்த பலவீனத் தால் தான். நம்மை பல வீனர்களாக்க ஒன்றும் இல்லாத போது, மரணமும் இல்லை. துயரமும் இல்லை.
- விவேகானந்தர்

நம் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணம் கர்மபலன் என்ற இந்து மதக் கோட்பாட்டை இதன் மூலம் விவேகானந்தர் தகர்த்தெறிகிறார் அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/94008.html#ixzz3O3lOm6Zr

தமிழ் ஓவியா said...




நீதிமன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடையில் போடும் பார்ப்பனர்கள்

சிறீரங்கம் கோவிலில் பார்ப்பன அர்ச்சகர்களை சுமந்து செல்லுவதா?

அன்று தமிழர் தலைவர் கொடுத்த குரலை மீண்டும் புதுப்பிப்போம்!

திருச்சி, ஜன.6 சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் அர்ச்சகர்களை மனிதர்களே சுமக்கும் பிரம்மரதம் நிகழ்ச்சியை எதிர்த்து சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் எச்சரித்தார் (8.11.2010) அதனால் அது கைவிடப் பட்டது.

உயர்நீதிமன்றத்திலும் பார்பபனர் முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இவ்வாண்டு அந்தப் பிரம்மரதத்தைப் புதுப் பிக்கும் வேலையில் பார்ப் பனர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள்.

அப்படி நடந்தால் அது நீதிமன்ற அவமதிப் பாகும். இந்து அறநிலையத் துறை பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். திராவிடர் கழகத் தலைவர் அன்று எச்சரித்ததை மீண்டும் திராவிடர் கழகம் புதுப் பிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. பிரம்ம ரதம்

சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையாண் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலி லிருந்து அவர்களது வீடு வரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரதமரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக் கின்றனர்.

ஒரு காலத்தில் பார்ப் பனர்கள் வேதம் ஓதி விட்டு தனது சொந்த பல்லக்கில் வீடு வரையில் சென்று வந்தனர். அண் மைக் காலமாக இதனை அறநிலையத்துறை சார் பில் (கோவில் நிருவாகம்) பிரம்ம ரத மரியாதை வழங்கப்பட்டு வந்தது. இந்த மரியாதையை கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்களில் ஒரு பிரிவான வைணவர் கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடந்து வந்த மனிதனை மனிதன் (பார்ப்பனர்களை) சுமக்கும் அவலத்தை கண் டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணை யர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

வழக்கு

இதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரம்ம ரத முறைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனா லும் பார்ப்பனர்கள் இதனை நடத்திவிட வேண்டு மென்று முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அதிமுக ஆட்சி ஜெயலலிதா முதல்வ ரான பிறகு மீண்டும் இந்த பிரம்ம ரதமுறையை கொண்டும் வரும் முயற் சியில் பார்ப்பனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்போதைய அற நிலையத்துறை ஆணையர் தனபால் திருச்சிக்கு வருகை தந்த போது, சராசர சுந்தரரேசன் பட்டர், திருவேங்கட பட்டர், பக்கிரி நாராயண பட்டர் ஆகியோர் ஆணை யரை சந்தித்து பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

2013 ஜன. 2, 3 தேதிகளில் இந்த பிரம்ம ரதமுறை எப்படியாவது நடத்திட வேண்டுமென்று முடிவு செய்து 2012 டிச.14 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையை பார்ப் பனர்கள் அணுகினர். ஆனால் நீதிமன்றம் அவர் களை கடுமையாக எச் சரித்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான விசாரணை 2013 ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைத்தது. அதனால் 2013 இல் பிரம்மரத முறையை நடத்த முடியா மல் போனது. ஆனாலும் பிரம்ம ரத முறையை எப்படியாவது நடத்திவிட வேண்டுமென்று அன்று முதல் பார்ப்பனர்கள் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

திராவிடர் கழகம்

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

மீண்டும் பிரம்ம ரதம்

இந்நிலையில் தி-.மு.க ஆட்சியில் கருணாநிதி பிராமண துவேஷம் செய்துவிட்டார். அம்மா ஆட்சியிலாவது அந்த துவேஷத்தை போக்கி இந்த பிரம்ம ரதமுறையை நடத்திவிட வேண்டும் என ஆலோசனை கூட் டம் நடத்தப்பட்டு தற் போது சொர்க்க வாசல் திறப்புக்கு பின்னர், பிரம்ம ரதமுறை நடத்திட தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்ப்பனர்கள் செல் லும் பல்லக்கை தூக்க சீமான் தாங்கி என்று அழைக்கப்படும் அரை யர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால், வெளியிலி ருந்து பல்லக்கை தூக்கும் நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் பேரம் பேசி ஆள் களை ஏற்பாடு செய் திருக்கிறார்களாம்.

பரபரப்பு

சிறீரங்கத்தில் பல்வேறு இந்து மதவெறி அமைப்பு களின் துணையோடுவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11 ஆம் தேதி) பிரம்ம ரத முறையை நடத்திட பார்ப்ப னர்கள் திட்ட மிட்டு இருப்பதால் சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனால் சிறீரங்கத்தில் பரபரப் பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/94007.html#ixzz3O3lXt1pw

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணப்புகழ் ராம்தேவ்க்கு பத்மபூசன் விருதாம்!

கோட்சேக்கு எப்பொழுது கொடுக்கப் போகிறார்களாம்!

புதுடில்லி, ஜன.6 ராம்தேவ் பாபாவிற்கு பத்மபூசன் விருதுவழங்க மோடி தலைமையினால் ஆன மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ கொள்கைகளை மூன்னி றுத்தி ஆட்சி செய்து வருகிறது, இந்துத்துவக் கொள்கைகளை நடை முறைப்படுத்துவது, கோட்சேவிற்கு சிலை, சமஸ்கிருத மொழி பள் ளிப்பாடங்களில் தினிப் பது மற்றும் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் முதல் மொழியாக்குவது போன்ற மக்கள் விரோத செயல் களில் முனைப்பு காட்டி வந்தது.

இதன் தொடர்ச் சியாக இந்து மகாசபை நிறுவனர் ராம் மோகன் மாளவியாவிற்கும் அடல்பிகாரிவாஜ்பேயிற்கும் பாரத ரத்னா கொடுக்க முடிவு செய்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. ஆட்சிக்கு வந் தது முதலே யார் யாருக்கு விருதுகள் வழங்க வேண் டும் என்று முக்கிய தலைமையிடமிருந்து விருதுவழங்கும் குழுவிற்கு பெயர்கள் அடங்கிய பட் டியல் வந்துவிட்டதாம். இந்த பட்டியலில் சானியா நெய்வால் பெயர் இல்லை.

பதமபூசன் பட்டியலில் முதலிடம் ராம்தேவ் பாபாவிற்கும் இரண்டா மிடம் லால் கிருஷ்ண அத்வானி பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரி கிறது. ஜனவரி 26-ஆம் தேதிக்கு முன்பாகவே விருதுவழங்குவதற்கான பெயர்கள் அறிவிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/e-paper/94013.html#ixzz3O3m4oo7T

தமிழ் ஓவியா said...

பிரதமர் மோடியின் ஜனநாயகம்?

ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்தால் தான் அரசு நன்றாக செயல்படும் இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று கோலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளி வரும் பத்திரிகையான புடாரியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: ஊடகங்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களுள் ஒன்று இந்த ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தூரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். ஊடகங்கள் இன்றி அரசும் சரிவர இயங்க முடியாது, மக்களும் நிலவரங்களை அறிந்துகொள்ளமுடியாது. ஊடகங்களின் மிகமுக்கிய பணி என்னவென்றால் அரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமை யாக விமர்சனம் செய்யவேண்டும் என்று பேசினார். மோடியின் பேச்சும் செயலும் தாமரை இலைத்தண் ணீர் போல் உள்ளது இதில் இருந்து தெரியவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முழுமையாக ஊடகங்களை விலைக்கு வாங்கினார். மோடியின் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களை அனைத்து இந்தி மற்றும் ஆங்கில அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. தன்னுடைய பெயர் பத்திரிகையில் எப்போ தும் முதலிடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே தெரிந்த வரலாறுகளைக்கூட தவறாகப் பேசி பத்திரிகை யில் இடம் பிடித்தார்.

பி.ஜே.பி. - மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையா ளர்கள் இருந்தால், அத்தகையவர்களை அடையாளம் கண்டு செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியேற்றியும் உள்ளார். பண பலத்தின் மூலமும் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் வாயிலாகவும் மக்களி டையே பெரும் பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு இதுவரை எந்த ஒரு இந்திய ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரம் ஒருமுறை ஊடகங்கள் என்னைச் சந்தித்து நிறைகுறைகளை முன்வைக்கலாம் என்று வெற்றுப் பேச்சு பேசிய மோடி அதன் பிறகு ஊடகங்களை தனது அலுவலகவாசலுக்கு கூட வரவிடவில்லை.

அதே நேரத்தில் தனக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் ஊடகங்களை தனது கைக்குள் போட்டுக் கொண்டார். இந்தியாவின் பெரிய ஊடகக்குழுமங் களை அம்பானி மற்றும் பாஜக ஆதரவு தொழி லதிபர்கள் விலைக்கு வாங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக நியூஸ் நெட்வெர்க் என்ற குழுமத்தின் கீழ் 6 செய்தி அலைவரிசையில் வரு கின்றன, இந்தக் குழுமத்தை கடந்த ஜூன் மாதம் அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதே போல் இண்டியா டுடே நெட்வொர்கின் பங்குகளை பா.ஜ.க. ஆதரவு தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். அதே போன்று வியாபார நோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பாகவே செயல்படுவது வழக்கம், ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடிக்கு தானாகவே விலைபோகும் ஊடகங்களை கைவசம் வைத்துக்கொள்வதென்பது பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளாக மகாராட்டிரத்தில் வெளிவரும் புடாரி நாளிதழ் நடுநிலைப்பத்திரிகை என்று பெயர்பெற்றது. மராட்டியத் தேர்தலின் போது நடுநிலையாக நின்று தனது பணியைச்செய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக முழுக்க முழுக்க பாஜக அரசியல் ஏடாகவே மாறிவிட்டது. இப்படி ஆரம்பம் முதலே ஊடகத்தை வளைத்து, தனக்கு சாதமான செய்திகளை மாத்திரம் இடம் பெறச் செய்த மோடி மேடையேறும் போதுமட்டும் ஊடக தர்மம் பேசுகிறார்.

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வை யாளர் கிறிஸ்தோ ஹேன்ஸ் குஜராத் இனப் படுகொலை களுக்குப் பிறகு குஜராத்துக்கு வர விரும்பினார்.

உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதுபோல அப் போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாசாங்கு செய்தார். கடைசி நேரத்தில் என்ன செய்தார் தெரியுமா? குஜராத்துக்கு அவர் வரக் கூடாது என்று கூறி விட்டார்.

இந்த நிலையை ஓர் அறிக்கை மூலமாக அய்க்கிய நாடுகள் மன்றத்தில் சிறப்புப் பார்வையாளர் அம்பலப் படுத்தினாரா இல்லையா?

முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இவர்களின் உரிமைகள் எப்பொழுதும் ஆபத்தில்தான் இருக்கின்றன என்று சொன்னாரே அய்.நா. பார்வையாளர். (Source Statement of U.N.
Social Reporter - dt: 31.3.2012 MGM)

இந்த நிலையில் உள்ளவர்தான் ஊடகவியலாளர்கள் தம் ஆட்சியில் காணும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுமாறு ஜனநாயகவாதியாக தோற்றம் காட்டுகிறார். அடடே! இவரைப் போன்ற பல வேட மாமனிதரைக் காண்பது அரிதினும் அரிதே!

Read more: http://viduthalai.in/page-2/94003.html#ixzz3O3mHHAPv

தமிழ் ஓவியா said...

தொண்டு

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page-2/94002.html#ixzz3O3mPvvtw

தமிழ் ஓவியா said...

இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!

அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.

பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.

லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.

அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.

அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!

15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!

மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.

தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!

முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்

(இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)

இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.

இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:

கலீல் ஜிப்ரான் (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -

இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.

இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

(கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/94005.html#ixzz3O3mY6T00

தமிழ் ஓவியா said...

கோட்சேவை புனிதப்படுத்துகிறார் மோடி: ராஜேஷ் எம்.பி. குற்றச்சாட்டு


பாலா (கேரளா), ஜன. 6_- மகாத்மா காந்தியாரை ஓரங்கட்டிவிட்டு கோட் சேவை மகத்துவப்படுத்த முயல்கின்ற நரேந்திர மோடி, நாட்டில் மத வெறியை வளர்த்து இந்து நாட்டை நிறுவ முயல் கிறார் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி. ராஜேஷ் (நாடாளுமன்ற உறுப்பினர்) குற்றம் சாட் டினார். இது இந்தியாவை மதவாத நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் ராஜேஷ் கூறினார்.

மதவெறிக்கும், ஊழ லுக்கும் எதிராக போராட் டம்தான் ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து வாலிபர் சங்கம் பாலா என்ற இடத்தில் நடத்திய இளைஞர் சங்கம நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து ராஜேஷ் பேசினார்.நல்ல காலம் பிறக்கப் போகிறது என்ற பிரமையை உரு வாக்கி அதிகாரத்தில் அமர்ந்தமோடி, கர்வாபஸி போன்ற மத வகுப்புவாத நட வடிக்கைகளின் மறை வில் நாட்டின் செல்வங் களை கார்ப்பரேட் முதலா ளிகளின் காலடியில் சமர்ப் பிக்கின்ற கொள்கைகளைத் தான் அமல் படுத்துகிறார்.

மதச்சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற நிலை மையை உருவாக்கி மக்கள் மனதில் பிளவு விதை களைத் தூவுகிறது பா.ஜ.க. அரசு. தேசிய அளவில் கிறிஸ்துமஸ் தினத்தை உழைப்பு தினமாக்கிய மத்திய அரசு பக்ரீத் விடு முறையையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

கல்வி - கலாச்சா ரத் துறை களில் மூட நம் பிக்கைகளுக்கும் அறிவிய லுக்கும் புறம்பான நிலை பாடுகளுக்கும் அங்கீகாரம் அளித்து நாட்டின் வர லாற்றை, நாட்டின் முகத் தோற்றத்தை தலைகீழாக மாற்ற முயல்கிறார்கள். மதச்சார்பற்ற இந்தியா வின் தேசியப் பதாகை ஏந்திய ஆடம்பரக் காரில் பயணம் செய்கிற கோட்சே மனம் படைத்த பிரதமர், அம்பானி - அதானிக ளுக்கு சேவை செய்யும் பணியில்தான் தீவிரமாக உள்ளார்.

நாட்டில் பட்டினி, விலை உயர்வு போன்றவற் றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி ஆட்சி, அதானி வெளி நாட் டில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் ஆரம்பிக்க எஸ் பிஅய் வங்கியிலிருந்து ரூ.6200 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோல் விலைக் கட்டுப் பாட்டை நீக்க மன்மோகன்சிங் அரசு 6 ஆண்டுகள் காத்திருந்தது என்றால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் டீசல் மீதான விலைக் காட்டுப்பாட்டை நீக்கியது. பெரும் ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.

மருந்துகளின் விலை யைத் தீர்மானிக்கும் உரி மையை மருந்துக் கம் பெனிகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதன் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவை மோடி அரசு பெரு மளவு அதிகரித்துள்ளது.

ஆதாரை எதிர்த்த பாஜக அரசுஅதிகாரத் திற்கு வந்தபின் ஆதாரை கட்டாயமாக்கி விட்டது. 12 ஆக இருந்த சமையல் வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைக்க முடிவு செய்துள் ளது.

பல பத்தாண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த பிஎப், இஎஸ்அய் சலுகைகளை ரத்து செய்வதற்கும், தொழி லாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி வேலை நீக்கம் செய்வதற்குமான சட்டத்தை அமல்படுத்துவ தும் பா.ஜ.க. அரசின் புத் தாண்டுப் பரிசாகும் என் றும் ராஜேஷ் கூறினார்

Read more: http://viduthalai.in/page-8/94037.html#ixzz3O3qC1HkA

தமிழ் ஓவியா said...

தடுமாற்றம் இருக்காது!

செய்தி: கூட்டணியிலி ருந்து பா.ம.க. வெளியேறி னாலும், பா.ஜ.க.வுக்குப் பாதிப்பு இல்லை.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிற காவது பா.ம.க. நிறுவனருக்கு முடிவு செய்வதில் தடு மாற்றம் அனேகமாக இருக் காது என்று நம்பலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/94053.html#ixzz3O9A3uM2n

தமிழ் ஓவியா said...

எப்படியாவது இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெறவேண்டுமாம்: சொல்கிறார், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார்


லக்னோ, ஜன.7_ பாஜக நாடாளுமன்ற உறுப் பினரும் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்த வருமான சாக்ஷி என்ற சாமியார் இந்துப் பெண் கள் ஒவ்வொருவரும் எப் படியாவது 4 குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு கோமாளித் தனமான உளறலைக் கொட்டியுள்ளார்

உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக சாமியார் எம்பி சாக்ஷி தனது உரையில் கூறியதாவது: தற்போது மதமாற்றம் குறித்து பல்வேறு எதிர்க் கட்சிகள் பேசி வருகிறது. இது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திரும்ப வரு கிற நிகழ்ச்சிதான். மத மாற்றம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குத் செல்லு வதைத்தான் குறிப்பிட வேண்டும். மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் அதைச் சட்டமாக்கவும் பாஜக தயாராக உள்ளது.

நாதுராம் கோட்சே விற்கு சிலைவைப்பது பற்றி நான் தற்போது ஒன்றும் கூறமுடியாது.

இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. இங்கு அனை வரும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் என்று கூறமுடியாது. பலருக்கு பல்வேறு சிந்தனைகள் இங்கே கடவுளை பன்றி வடிவிலும் வழிபடும் வழக்கம் உள்ளது. கழு தையையும் பூஜை செய்யும் மக்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளை பாம் பிற்குள்ளே பார்த்தாள், அவரவர்களுடைய எண் ணம் ஆகவே கோட் சேவை சிலர் புனிதராக பார்க்கின்றனர், அவ்வள வுதான் என்றார். மேலும் அவர் கூறிய தாவது, இதுவரை இருந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர் நமக்கு இரு வர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண் ணிக்கையை குறைத்து விட்டனர். இனிமேல் மக்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு இந் துக்களும் நான்கு அல்லது அதற்குமேல் குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அப் போதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்து தர் மமும் காக்கப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/94054.html#ixzz3O9AKmeUy

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி வறுவல்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (சி.பி.எம்.) 6.1.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு - செங்கற்பட்டில் நடை பெறும் சுயமரியாதை மாநாட் டில் மாட்டுக்கறி வறுவல் சிறப்பு விற்பனை மய்யத் தைத் தொடங்குகிறது - வரவேற்கத்தக்கதே!

இன்றைக்கு 40 ஆண்டு களுக்கு முன்பே திராவிடர் கழகம் இத்தகு மாட்டுக்கறி விருந்தை ஓர் இயக்கமா கவே நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/94052.html#ixzz3O9AWgwTh

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சுயமரியாதை வரலாற்றுப் புத்தகத்தில் ஓர் அரிய பாடம்

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மை யார் அவர்களின் மரணம், ஓர் இயற் கையின் விதியாகும். பகுத்தறிவாளர்கள் தாம் வாழுகின்ற காலத்தை, தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர். அந்த வகையிலே அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வீட்டிற்கும், நாட் டிற்கும் பயனுள்ளதாக அமைந்திருப்பதே மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக் கும் உரியதாகும்.

நான், அம்மா அவர்களின் மரண சாசனத்தை ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் படித்துப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வரியும், வைர வரிகளாகும். பிறருக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

தன்னுடைய பெற்றோர்கள், அன்பான அரவணைப்போடு, பகுத்தறிவுப் பாலூட்டி சுயமரியாதைக் கருத்துக்களோடு ஊறிப் பிறந்ததை, நினைவூட்டி தன் பெற்றோர் களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் அன்பான தலைமை, நல்ல தலைவர், நல்ல கொள்கை, சமுதாய சீர்திருத்தப்பணி, தந்தை பெரியாரே, மண மகனைத் தேர்வு செய்து, தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன் என்று தன்னுடைய நன்றி யுணர்வை வெளிப்படுத்தி பெரியாருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமக்களின் சராசரி வயதான அறுபதைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக் கிறேன் என்பதே மகிழ்ச்சிக்குரியது தானே? என்ற வினாவை வயது 76 இல் எழுப்பி, 81 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தார்கள்.

மனித நேயப் பண்பாளர் டார்பிடோ, ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்த காவிய வாழ்க்கை வாழ்ந்தோ மென்று தன் இணையரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திடும் அரிய தலைவர் நாட் டுக்குக் கிடைத்திருப்பதையெண்ணி, இறும் பூதெய்துகிறேன் என்று ஆசிரியர் அய்யா வீரமணியாரைப் பெருமைப்படுத்தியிருக் கிறார்.

பெரியார் தந்த துணிவோடு, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, சமுதாயப் பணியில் மன நிறைவோடு, மரணத்தையும் மகிழ்வோடு தழுவிக் கொண்ட மனோரஞ்சிதம் அம் மாவை எண்ணியெண்ணி என் உள்ளம் நெகிழ்கிறது.

தன்னுடைய இறப்பிற்குப் பின்னாலும், தன்னுடைய உடல் மறைவதற்குள் ஏதாவது நன்மை செய்திட முடியாதா? என்று எண் ணியிருப்பார்கள் போலிருக்கிறது, என்ன விநோதம்! எனக்கு மாலைக்குப் பதில் விடுதலை சந்தா தாருங்கள் என்று கேட்ட தலைவரைப்போல என் உடலுக்கு மாலை போட வேண்டாம். அதற்குப் பதில் என் உட லருகில் உண்டியல் வைத்து நிதி தாருங்கள் என்று சொன்ன அந்த தொண்டரின் மனப் பாங்கை நான் என்னவென்று சொல்வேன்!

தலைவரைப் போலவே தொண்டர், தொண்டரைப் போலவே தலைவர். தொண்டன் நினைப்பதையே தலைவர் நினைக்கிறார். தலைவர் நினைப்பதையே தொண்டனும் நினைக்கிறார். உலகத்திலே இப்படியொரு விந்தையான இயக்கம் எங்காவது உண்டா? சாவுக்கு வருகின்ற மாலையைக்கூட வீணாக்க மனமின்றி, வாழ்வோருக்குப் பயன்படும் வித்தையினை கற்றுத் தந்த வித்தகர் யாரோ? அவர்தான் தந்தை பெரியாரோ! அம்மா நெஞ்சினில் நிறைந் தாரோ! அம்மாவின் எண்ணம் நிறை வேறியது. நாகம்மையார் இல்லத்துக்கு மாலைக்குப்பதில் கிடைத்த நன்கொடை கள் ரூ. 25,021/-

ஒருவர் இறந்துவிட்டால், சமுதாய நடப்பிலே, பெரிய காரியம் ஆகிவிட்டது என்று சிலர் சொல்லுவார்கள். கெட்ட காரியம் ஆகிவிட்டது என்றும் சிலர் சொல்லுவார்கள். அம்மாவின் மரணத் திலும், ஒரு நல்ல காரியம் பார்த்தீர்களா? இது தான் பகுத்தறிவு. இது தான் தன்னல மறுப்பு. இது தான் சுயமரியாதை இயக்கம் பார்த்தீர்களா? தோழர்களே!

அடிக்க அடிக்க பந்து எகிறுவது போல யார் தடுத்தாலும் அலைகள் அடிப்பதைப் போல எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையும் தாண்டி ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகின்றதென்றால், மனோரஞ்சிதம் அம்மா போன்ற இயக்கக் கண்மணிகள், இல்லை வீரப்பெண்மணி கள் இருப்பதனாலன்றோ!

சட்ட எரிப்புப் போராட்டத்திலே, சிறைக்கஞ்சா அந்த வீரப்பெண்மணியை, மரணம் தன் சிறையிலே அடைத்துக் கொண்டது. எனினும் அவர் புகழை, யாராலும் சிறையிட முடியாது. ஆம், அம்மா அவர்கள் ஓர் காவியமாக நினைவு ஓவியமாக, சுயமரியாதை இயக்க சரித் தித்தில் மறக்கவொண்ணா ஓர் நீங்கா இடம் பெற்று விட்டார். ஆம் அம்மா ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் புகழ், வாழ்க! வாழ்க! வாழ்கவே!

வீர வணக்கம்! நன்றி!

- கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மேட்டூர் மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/94062.html#ixzz3O9B3v0r9

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தந்திரம்



எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகுக் குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோவில் கட்டுகின்றார்களா?
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/94058.html#ixzz3O9BEiyvH

தமிழ் ஓவியா said...

ராம்தேவுக்குப் பத்மபூஷண் விருதாம்!

ராம்தேவ் என்ற சாமியாருக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு பத்ம பூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளதாம். இதன்மூலம் இத்தகு விருதுகள் எத்தகைய கேவலத்தின் உச்சியைத் தொட்டுள்ளன என்பது தெளி வாகிறது. ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இதுபோன்ற விருதுகளை ஏன் புறக்கணித்தனர் என்பது இப்பொழுது தான் புரிகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குக்கூட இத்தகைய விருதுகள் அளிக்கப்படலாம் என்று தோன்றுகிறது.

யாரிந்த ராம்தேவ்?

தனது யோகா மருத்துவ முறைகளால் எவ்வித நோயையும் குணப்படுத்த முடியும் என்று வாய்ச்சவடால் விட்ட இவரை, 2006 ஆம் ஆண்டில் என்.டி.டி..வி.யில் மடக்கியவர் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிர்பீர்கோஷ். அவர் ராம்தேவிடம் வைத்த சவால் என்ன தெரியுமா?
தான் அனுப்பும் ஒரு நோயாளியையும், டில்லியைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலையரையும் நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றாமல் முற்றிலும் ராம்தேவ் நம்பும் யோகா மருத்துவ முறைகளைக் கையாண்டு குணப்படுத்த முடியுமா? என்பதுதான் அந்தச் சவால். ஆனால், அதனை எதிர்கொள்ளாமல் நழுவியவர்தான் இந்தப் பேர்வழி!

ராம்தேவ் தயாரித்த ஆயுர் வேத மருந்துகளில் கலப் படங்கள் இருப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தது. சென்னை, அய்தராபாத், கொல்கத்தா முதலிய ஆய்வகங்களில் அந்த மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் கலக்கப் பட்டதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. எந்த ஒரு மருந்துப் பொருளிலும் அதன் உள்ளடக்கப் பொருள்கள் இன்னின்னவை என்று பொறிக்கப்பட்டிருக்கும். அது கட்டாயமும்கூட; ஆனால், இந்த ராம்தேவ் தயாரித்து விற்கப்பட்ட மருந்துகளில் அத்தகு விவரங்கள் கிடையாது.

காங்கிரசின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங் இந்த யோகா குரு என்றழைக்கப்பட்ட ராம்தேவ் பற்றி பல பிரச்சினைகளை எழுப்பியதுண்டு. பல கோடி சொத்துகள் எப்படி அவருக்கு வந்தன? அவற்றிற்கு முறையாக வருமான வரி செலுத்தப்பட்டதா? ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் இந்த ராம்தேவுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது எந்த அடிப்படையில்? என்பது போன்ற கேள்விகள் அவை!

1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா தொலைக்காட்சியில் யோகா கற்றுத்தரத் தொடங்கியதுமுதல் பிரபலமானார். (தொலைக் காட்சியல்லவா!). பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் அரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்தார். ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழக மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை எனப் பெரும் ஆலை முதலாளியாக உருவெடுத்தார்.

200 நிறுவனங்களுக்குச் சொந்தக்கார பெருமுதலாளியாக உருவெடுத்தார்.

யோகா சொல்லிக் கொடுத்த அந்த ஆஸ்தா தொலைக்காட்சியையே விலைக்கு வாங்கினார் என்றால், அவரின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் தெரிந்து கொள்ளலாமே (ஒரு சாமியாருக்குத் தேவையானவையா இவை என்று யாரும் கேட்கவேண்டாம்!)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் ஒழிப்பு உத்தமராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். (இவரின் பின்னணியில் பி.ஜே.பி,. சங் பரிவார் இருந்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்).

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவேண்டும் என்றும், அதற்காக பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக மிரட்டினார். அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து, சமாதானம் செய்தார்கள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம்!

ராம்லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். ஊடகங்கள் ஊது குழல்களாக மாறின. ராம்லீலா மைதானம் முழுவதுமே பிரம்மாண்டமாக அலங்காரப் பந்தல் போடப்பட்டது மட்டு மல்ல; முழுமையாக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டது. இதற்காக, 18 கோடி ரூபாய் வசூல் கொள்ளை! இன்னொரு பக்கத்தில். ஆர்.எஸ்.எசுடன் கைகோத்து பட்டினிப் போராட்ட நாடகத்தைத் தொடங்கினார் (ஊழல் ஒழிப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. அதில் ஒரு புரவலர் இந்த பாபா ராம்தேவ்).

பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறை ராம்லீலா மைதானத்தில் நுழைந்தபோது, இந்த வீராதி வீரர் ராம்தேவ் என்ன செய்தார் தெரியுமா? சுடிதார் போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தார் என்பது எவ்வளவுக் கேவலம்!

இத்தகு ஒரு நாலாந்தர மனிதனுக்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி பத்மபூஷண் விருது அளிக்க முடிவு செய்துள்ளது என்றால், இந்த ஆட்சியின் யோக்கியதாம்சம் என்ன என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படியொரு கேடு கெட்ட ஆட்சியா? வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/94059.html#ixzz3O9BP0G52

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் பயிற்சிப்பட்டறை வரலாற்று நிகழ்வாகியது: தமிழர் தலைவர் பெருமிதம்

தருமபுரி ஜன. 7_ தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்று முடிந்த 3 நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை வரலாற்று நிகழ்வாகியது என தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.

காலை முதல் நிகழ்ச்சியாக தஞ்சை யோகிராசர் அவர்களின் யோகப்பயிற்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையில் கடவுள் மறுப்பு என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்னும் தலைப்பின் கீழ் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி அளித்தார்.

மூடநம்பிக்கைகள் ஒரு மோசடியே என்னும் தலைப்பில் மருத்துவர் கவுதமன் அவர்களும் புராண இதிகாச புரட்டுகள் என்னும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களும், தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் என்னும் தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தார். அந்த உரையே சிறப் புரையாக இருந்தது. மதிய உணவு இடைவெளிக்குப் பின் இளங்கோ தலைமையிலான அன்பு கலைச்குழுவின் சார்பில் நாடகம் மற்றும் பாடல் இசைக்கப்பட்டன.

சிறப்பித்தல்

மூன்று நாள் நிகழ்வில் பங்குபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் தமிழர் தலைவர், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதற் செல்வி, செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பேராசிரியர் காளிமுத்து, மருத்துவர் கவுதமன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், யோகா மாஸ்டர் யோகராஜா, ஈரோடு மண்டலச் செயலாளர் சண்முகம், வேலூர் மாவட்டத் தலைவர் சடகோபன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில துணைச்செயலாளர் சிவக்குமார், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் மற்றும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.

பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைவரும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட துணை புரிந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகளுக்கு கழக துணைத்தலைவர் சிறப்பு செய்தார்.

அத்துடன் பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைந்திட பொருள் உதவி, மண்டப உதவி, ஒலி, ஒளி, அமைப்பு, உணவு ஏற்பாடு செய்திட்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். பயிற்சிப் பட்டறையின் மூன்று நாளும் பயிற்சி பெற்றவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் பி.கே.ராமமூர்த்தி குடும்பத்தின் சார்பில் மருத்துவர் கவுதமன் அவர்கள் சிறப்பான முறையில் விருந்தளித்தார் என்பது குறிப்பிடதக்கது. அவருக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

பயிற்சிப் பட்டறையில் தருமபுரி, சேலம், கிருட்டிணகிரி, வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, பழனி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பயிற்சியில் கலந்து கொண்டனர் என்பது சிறப்புக்குரியது.

Read more: http://viduthalai.in/e-paper/94067.html#ixzz3O9Be5JTH

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு!

கருநாடகா, ஜன. 7_ இதுகுறித்து கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

இந்தியாவிலேயே முதன் மாநிலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளும் வழிகாட்டி மாநிலமாக கருநாடக மாநிலத்தை கணக்கெ டுப்பு பணியை மேற்கொள் வதற்கு முதலமைச்சர் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் பாராட்டி, வரவேற்கிறது.

1931ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் எந்த ஒரு சாதிவாரி கணக்கும் துல்லியமாகப் பராமரிக் கப்படாமல் 12 அய்ந் தாண்டு திட்டங்கள் நிறை வேற்றியும் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல குவாக சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால்தான் தந்தை பெரியார் சுதந்திரம் பெற் றோம் சுகவாழ்வு பெற் றோமா? எனக் கேட்டார். அதற்கான விடையும், தேவையும் பூர்த்தி செய் யப்படாமலே உள்ளன.

சாதிவாரிக் கணக் கெடுப்பு பணி செய்து, நாட்டில் எந்தெந்த வகுப் பினர் எவ்வளவு பேர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முழு புள்ளி விவரங்கள் அரசிடமில்லை. அதனால் மக்களின் வளர்ச் சிக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

இதனைக் கருத் தில் கொண்ட கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா அவர்கள் ஏப்ரல் திங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முன்வந்த மைக்கு வெகுஜன மக்க ளின் சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

மேலும் அரசுப் பணியா ளர்கள் எந்தவித சுணக்க மும் காட்டாமல் பொறுப் புடனும், விடுபடாமல் துல்லியமாக கணக் கெடுப்பு செய்து, இந்தியா விற்கே முன்னோடியாக விளங்கிட ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/94101.html#ixzz3O9COkCKJ