Search This Blog

14.1.15

பக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம்!

பொதுமக்களின் பக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம்!
திருச்சியில் நடைபெற்ற சாமியார்கள் ஜாக்கிரதை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ஆற்றிய உரை


திருச்சி, ஜன. 10- பொதுமக்களின் பக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
30.11.2014 அன்று சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப் பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு: லால்குடி பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழிப்புணர்வு கூட்டம் சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில், ஒரு எச்சரிக்கை விடுக்கக்கூடிய, ஒரு சமுதாயத்தை, உறங்கிக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தை, அறியாமையில் ஆழ்ந்து புதைந்து கிடக்கின்ற சமுதாயத்தைத் தட்டி எழுப்பி, அவர்களுக்கு அறிவுறுத்தல் செய்யவேண்டும் என்ற உணர்வோடு, நம்முடைய கடமையாற்றவேண்டும்.

கடமையாற்றுவதிலிருந்து யாருக்காகவும்  நாம் பின்னால் போகக்கூடாது என்பதற்காக, குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இன்றையக் கூட்டம் சாமியார்களைப்பற்றி விழிப் புணர்வை உருவாக்குகின்ற கூட்டம். இதை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றோம். அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய நூல்கள், உரைகள், எழுத்துகள் இவைகளையெல்லாம் பெரியார் களஞ்சியங் களாக, அன்னை மணியம்மையார் அவர்களுடைய கட்டளைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, அய்யாவிற்குப் பிறகு வரிசைப்படுத்தப்பட்டு, கால வரிசைப்படி, நாம் வெளியிட்டிருக்கிறோம்.


பெரியார் களஞ்சியங்கள் தொகுதிகளாக வெளிவந்துள்ளன


அந்தப் பெரியார் களஞ்சியங்கள் என்பதில், முதலில் கடவுள், மதம், பெண்ணுரிமை, பகுத்தறிவு என்று இப்படி வரிசைப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான தொகுதிகள் வெளிவந்துவிட்டன. உங்களில் பலர் அறிவார்கள். அவை இப்பொழுது கிடைக்கவும் செய்கின்றன.


தந்தை பெரியார் அவர்களுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பு, மற்ற முன்னோடிகள், மதவாதிகள் அல்லது மத நிறு வனங்கள், வரலாற்றில் நம்முடைய நாட்டில் குறிப்பிடத் தகுந்த சிறந்த பகுத்தறிவாளர்களில் முன்னோடியாக திகழப் பட்டிருக்கின்ற முன்னோடிகள், குறிப்பாக, தலைசிறந்த பகுத்தறிவாளரான புத்தர் போன்றவர்கள், இவர்களெல்லாம் பேசியதைக் கூட, ஆவணப்படுத்தக் கூடிய அளவிற்கு, அந்தக் காலகட்டத்தில், தெளிவான, மறுக்க இயலாத ஆதாரங்களாக எதுவும் இல்லை. செவி வழிச் செய்திகள்; அதைப் பல ஆண்டுகளுக்குப் பின்பு தொகுத்தவை  இப்படி இருக்கின்ற காரணத்தினால்தான், எந்தக் கொள்கை களை முன்னிறுத்தி, புத்தம் என்ற அறிவு மார்க்கம் தொடங் கப்பட்டதோ, அந்தக் கொள்கைகளுக்கு விரோதமாக, புத்தரையே அவர்கள் கடவுளாக்கி விட்டார்கள். இதுதான் ஆரியத்திற்கு இருக்கின்ற ஒரு தனிச் சிறப்பு. ஆரியம் முதலில் எதிர்த்துப் பார்க்கும். எதிர்த்து அழிக்கமுடிய வில்லையானால், அணைத்து அழித்துவிடும். இதை தந்தை பெரியாரோ, பெரியார் தொண்டர்களாக இருக்கின்ற எங்களைப் போன்றோர் மட்டும் சொல்லவில்லை.


நாங்கள் சாதாரணமானவர்கள். ஆனால், மிகப்பெரிய அறிவு ஜீவிகள் என்று கருதி, இன்றைக்கும் ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றவரைப் பொறுத்துப் பார்த்தால், அதிலே குறிப்பாக சொல்லவேண்டுமானால், மிகத் தெளிவான ஒன்றைக் குறிப்பிடவேண்டும். அண்மையில், னுநளபைபே க்ஷரனனாய என்ற ஒரு நூலை அமெரிக்கப் பேராசிரியர் எழுதியுள்ளார். அவர் பெயர் ஜோஷி. வட நாட்டிலிருந்து சென்று அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகம் மற்றும் வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றி, ஆய்வு செய்தவர்.


Descerning Buddha


அவரை நோக்கி, மிகத் தெளிவான ஒரு வேண்டு கோளை வைத்து, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினுடைய ஆய்வாளர்கள், அவரை உரையாற்றி, எழுதுமாறு கேட்டிருக்கிறார்கள். அதை ஒரு நூலாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.


Descerning Buddha  என்பதுதான் அந்த நூலினுடைய தலைப்பு. ஆங்கிலம் தெரிந்த நண்பர்களுக்கு மிகத் தெளி வாகத் தெரியும். Descerning என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்றால், கூர்ந்து நோக்குதல் என்று அர்த்தம்.


கூர்ந்து நோக்கி அறிதல், சரியாகப் புரிதல் என்று அதற்குப் பொருள். ஏனென்றால், புத்தரை எல்லோரும் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் புரிந்திருக் கிறார்களா என்பதுதான் மிக முக்கியமானது.
அந்த வகையில், சரியாகப் புரிதலை அவர்கள் உண்டாக் கக் கூடிய வகையில், அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை, அந்த ஆய்வுத் தலைவர் கேட்டிருக்கிறார் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்.
அதற்காக அவர் ஆய்வு செய்த நேரத்தில், அவர் சொல்லியிருக்கிறார், புத்தர் கடவுள் மறுப்பாளர்; புத்தர் ஆத்மா மறுப்பாளர். அவர் தலைசிறந்த பகுத்தறிவுவாதி. ஆனால், இவையெல்லாவற்றையும் மாற்றிவிட்டு, அந்த புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். மகாவிஷ்ணுவி னுடைய ஒன்பதாவது அவதாரம் என்று, மிகப்பெரிய தத்துவ ஞானியாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களே அந்த வேலையே செய்திருக்கிறார்களே. விவேகானந்தர் அதற்கு மிக அழகான சாமர்த்தியமான, ஒளியூட்டக் கூடிய ஒன்றை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
விவேகானந்தர் சொன்னார், ராதாகிருஷ்ணன் சொன்னார் என்ற உடன், நம் நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள் எல்லாம் டக்கென்று கீழே விழுந்து  விடுகிறார்கள். சாமியாரைப் பார்த்தவுடன் பெரும்பாலானோர் டக்கென்று காலில் விழுந்து விடுகிறார்கள் பாருங்கள், அதுபோல.

மூன்று முறைகளைக் கையாளுவார்கள்!


அவர் அந்த புத்தகத்தில் ஒரு கருத்தை எழுதியுள்ளார். ஒரு தத்துவத்தை அழிக்கவேண்டுமானால், எதிரிகள் கையாளுகிற மிக லாவகமான தந்திரம் என்னவென்று சொன்னால், அதிலும் ஆரியம் - இந்தத் திறமை அவர் களுக்குத்தான் உச்சகட்டம். அது என்னவென்று சொன்னால், மூன்று முறைகளைக் கையாளுவார்கள். மூன்று வழிமுறைகளை ஆயுதங்களாக வைத்திருக் கிறார்கள். இதனை தந்தை பெரியார் அவர்கள் நமக்கு முன்பே இதனை சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். நம்மை எச்சரிக்கை செய்துவிட்டார். அதனால்தான் நாம் இன்றைக்கும் விழிப்பாக இருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டு இருப்பது முக்கியமல்ல,  மற்றவர்களையும் தூங்க விடாமல், ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்று எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறோம். எழுப்பிக்கொண்டே இருக் கின்ற பணியை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், நம்மாள் குறட்டை விட்டு தூங்குகிறான்; அல்லது தூங்குகிற மாதிரி நடிக்கிறான். தூங்குகிறவனை எழுப்பி விடலாம்; தூங்குவது போல் நடிப்பவனை அவ்வளவு சுலபத்தில் எழுப்ப முடியாது.  யாருக்காகவும் காற்று வீசுவது இல்லை!


அதைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை. யாருக் காகவும் காற்று வீசுவது இல்லை. மூச்சிருக்கின்றவன் இழுத்தால், அவன் வாழுகிறான். இல்லாதவன் மாள்கிறான் என்பதுதான் மிக முக்கியம். வாழ்கிறார்களா? மாள் கிறார்களா? என்கிற கவலையில்லாமல், காற்று தன் பணியை செய்துகொண்டிருக்கிறது. அதேபோல், ஒளி தன்னுடைய பணியை செய்துகொண்டிருக்கிறது.


யாரும், காற்றுக்கு நன்றி சொல்லி, அழைத்து, இவ்வளவு தூரம் நீங்கள் வந்து எங்களுக்கு மூச்சைக் கொடுத்திருக் கிறீர்களே, அதற்காக உங்களுக்கு நன்றி என்று காற்றுக்கு கூட்டம் போட்டதில்லை, புத்தகம் போட்டதில்லை. ஆனாலும், காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அதனை அலட்சியமாக கவனிக்க மறுத்துவிடு கிறார்கள் என்பதினாலோ என்னவோ, அது சூறாவளியாக வீசுகிறது. காற்று சூறாவளியாக மாறும்போதுதான் பல பேர் அதனை கவனிக்கிறார்கள்.


அமெரிக்கப் பேராசிரியர்  ஜோஷி அவர்கள் எழுதி யுள்ள புத்தகத்தில் மூன்று தத்துவங்களை சொல்கிறேன்.


புத்த மதத்தை எப்படி கவிழ்த்தார்கள்? எப்படி புத்தரையே கடவுளாக்கினார்கள்? எதிர்த்துப் பார்த்து பலன் இல்லை என்றவுடன்,
Appreciate முதலில் பாராட்டுவது; நம்மாட்களுக்குப் புகழ்ந்து பேசினவுடன், ஒன்றும் புரிவதில்லை. வீரமணி பிரமாதமாகப் பேசினார் என்றவுடன், வீரமணி பிளாட். ஆகிவிடுகின்றார்.


இன்றைக்கு அந்த முறைகள் எல்லாம் வந்துகொண் டிருக்கின்றன. திருவள்ளுவர் தினம் வரைக்கும் வந்துவிட்டாயிற்று. இப்பொழுது நாம் செய்யவேண்டிய எச்சரிக்கை சாமியார்கள் ஜாக்கிரதை மட்டுமல்ல, சாமியார்கள் ரூபத்தில் இருக்கின்ற காவிகள் ஜாக்கிரதை என்கிற பெயரிலும் சேர்த்து செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதுதான் மிகமிக முக்கியமானதாகும்.


இந்த இடத்தில்தான் பெரியார் அவர்கள் நமக்கு எச் சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். நமக்கு நல்ல அறிவா சானாக அய்யா அவர்கள் திகழ்ந்ததனுடைய விளைவாக கருப்புச் சட்டைகள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்.


இரண்டாவதாக, Accept   அதை ஏற்றுக் கொள்வது போன்று காட்டுவது.
மூன்றாவதாக, இதையெல்லாம் நீண்ட நாள்களுக்கு முன்பாகவே, நம் மதத்தில், மத குருமார்கள் எல்லாம், மதத்திற்கு வழிகாட்டியவர்கள் எல்லாம் சொல்லி விட்டார்கள். இதுவரை நமக்குத் தெரியாமல் இருந்தது.

பிரிட்டிஷ்காரன் மறைத்துவிட்டான், இப்பொழுது நாங்கள் எல்லாம்தான் அதனை வெளியே கொண்டு வந்திருக் கிறோம் என்று சொல்லி, அதனை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அதனோடு இணைத்துவிடுவதுதான்.
Assimilate ஒன்றுமில்லாமல் ஆக்குவது.


அந்தப் பணியைச் செய்கின்ற வகையில்தான், சாமியார் கள் என்கிற பெயரால் இந்த நாட்டில்  ஏராளமான சாமியார் கள் என்கிற பெயரால், மூட நம்பிக்கைகள் வந்திருக்கிறது. சென்ற முறை மூட நம்பிக்கைகளைப் பற்றி பேசிய கூட்டத்தில், இன்றைக்குப் போலவே, நிறைய தோழர்கள் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கூட நான் ஒன்றைச் சொன்னேன்.


இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

எல்லா இடங்களிலும் பகுத்தறிவாளர்களாகிய நாம் நினைவூட்டுகிறோம். இந்திய அரசியல் சட்டத்தில் வேறு எந்த அரசியல் சட்டத்தில் இடம்பெறாத அடிப்படைக் கடமைகள் என்கிற பகுதியில், It shall be the duty of every citizens of India
To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform
ஒவ்வொரு குடிமகனுடைய கடமை என்னவென்றால், விஞ்ஞான மனப்பான்மையை தாராளமாக வலியுறுத்த வேண்டும். அது நமக்கு மட்டுமல்ல, மற்ற மக்களுக் கெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.  ஏன்? எதற்கு? என்று கேட்கக்கூடிய அந்த சிந்தனை.
கேள்வி கேட்டதினால்தான், இந்த ஒலிபெருக்கி, கேள்வி கேட்டதினால்தான், இந்த மின்சார விளக்கு, கேள்வி கேட்டதினால்தான், இந்த உடை, கேள்வி கேட்ட தினால்தான், நாம் பறந்து செல்கின்ற ஆகாய விமானம், கேள்வி கேட்டதினால்தான் ராக்கெட், கேள்வி கேட்ட தினால்தான் விண்வெளிதளம்.
ஆகவே, ஏன்? எதற்கு? என்று சொன்னதினுடைய வாய்ப்பாகும்.
ஆகவே, அது இருந்தும் நம் நாட்டில், இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறது. ஊடகங்களோ, நம் நாட்டில் இருக்கக்கூடிய செய்தி அமைப்புகளோ, அரசாங் கமோ அதனை முன்னாலே நின்று செய்வதில்லை. அர சாங்கமே மூட நம்பிக்கைகளைப் பரப்பக்கூடிய அளவிற்கு, பல செய்திகளை உருவாக்கக்கூடிய நிலைகள் இருக் கின்றன. எனவேதான், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


சாமியார்கள் ஜாக்கிரதை என்கிற தலைப்புகளில் நாம் ஏற்கெனவே அறிக்கைகள் விட்டிருக்கிறோம்; பல இடங் களில் பேசியிருக்கிறோம்.
பிரேமானந்தா வழக்கு நடைபெற்றபோது, தமுக்கடி செய்து நாங்கள் மிகப்பெரிய அளவிற்குப் பிரச்சாரத்தை செய்வோம் என்று சொன்னோம்.


நாம் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு நல்ல விளைவு இருக்கிறது


இறுதித் தீர்ப்பு சரியாக இருக்கவேண்டும்; இல்லை யென்றால், நீதிமன்றத்தின்முன் தண்டோரா போடுவேன் என்று நானே சொன்னேன். அதைகூட அந்த நீதிபதி சொல்லியிருக்கிறார், அய்யா நான் ஒழுங்காக தீர்ப்புச் சொல்லவில்லை என்றால், நிறைய பேர் நீதிமன்றத்திற்கு முன் தண்டோராவோடு வந்துவிடுவார்கள் போலிருக் கிறதே என்று. பரவாயில்லை, நாம் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு நல்ல விளைவு இருக்கிறது என்ற எனக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது.


என்னதான் பழைய செய்திகளாக இருந்தாலும், புதிய செய்திகளாக இருந்தாலும், நிறைய தகவல்களைத் திரட்ட வேண்டும் என்பது பெரியார் தொண்டர்களாக நமக்கு நிறைய உண்டு. எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. வெறும் அவதூறு போல பேசுவது நமது வழமையல்ல.
3000 சாமியார்கள் கதை நம் நாட்டில் இருக்கிறது!


இப்பொழுது இந்தக் கூட்டத்தில் பேசுவதில் என்ன சிக்கல் என்றால், பேசுவதில் சிக்கல் இல்லை. ஒரு மணிநேரத்தில் இத்தனை சாமியார்களைப்பற்றி எப்படி சொல்வது என்பதில்தான் சிக்கல். ஆகவே, அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது, ஏராளமாக. நியாயமாகப் பார்த்தால், பழைய பாரதப் பிரசங்கி 18 நாள் படிக்கின்றார். ஆனால், அவர் திரும்பத் திரும்ப அதனையே சொல்கிறார். அவருக்கும், நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாம் 18 நாள் அல்ல; 22 நாள் அல்ல; 30 நாள்கள் பேசக்கூடிய அளவிற்கு 300 சாமியார்கள் அல்ல; 3000 சாமியார்கள் கதை நம் நாட்டில் இருக்கிறது. அவ்வளவு மோசடிகள் இருக்கின்றன.


தவத்திரு அடிகளார் அவர்கள் ஒன்றை, அடிக்கடி சொல்வதுண்டு,  தமிழன் விழுவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அதில் என்ன கவலை எனக்கு என்றால், நேற்று விழுந்த இடத்தில் இன்றைக்கும் தமிழன் விழுவது தான் எனக்கு கவலையாக இருக்கிறது என்று.


நாள்தோறும் செய்திகள் சாமியார்களைப்பற்றி வெளி வருகிறது. ஊடகங்களில் செய்தி எப்படி வருகிறது; ராம்பாலை பற்றி சொன்னார்கள்.


டைம்ஸ் நவ் என்கிற ஆங்கிலத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் காட்டினார்கள்; அந்த சாமியாரை கைது செய்ததும், அந்த ஆசிரமத்திலுள்ள ஒவ்வொரு அறையாகக் காட்டினார்கள். ஒவ்வொரு அறையைப் பார்த்ததும், ஆன்மிகத்தை எப்படி பரப்புகிறார்கள் என்று தெரிகிறது; பெண்கள் எங்கெங்கே போகிறார்களோ, அங்கெல்லாம் கேமிராவை வைத்திருக்கிறார்கள்; கழிப் பறையிலும் கேமிராவை வைத்திருக்கிறார்கள். ஆன்மி கத்தைப் பரப்புவதில் மிகவும் நவீன யுக்தியாகும் இது.


பொதுமக்களுடைய மறதிதான்; மோசடிப் பேர்வழிகளின் மூலதனமாகும்


அதுமட்டுமல்ல, கருவைக் கலைப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும்; கரு உருவாகாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும். இதற்கென்று தனித்தனியாக ஒரு மருத்துவத் துறை போன்று துறைகளை வைத்திருக் கிறார்கள். இதற்கெல்லாம் வழிகாட்டியவர், பிரேமானந்தா.
ஏற்கெனவே, பிரேமானந்தாவைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், மக்களுக்கு மறந்த செய்திகள் பல உண்டு. ஏனென்றால், பொதுமக்களுடைய மறதியும், பக்தியும்தான் மோசடிப் பேர்வழிகளின் மூலதனமாகும்.


ஆகவே, அதைப்பற்றி சொல்லவேண்டுமானால், ஏராள மான செய்திகள் உள்ளன. நான் இங்கே ஓரளவிற்குத்தான் இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல முடியும். ஆகவே, இங்கே புத்தகங்கள் இருக்கின்றன; அந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
புட்டபர்த்தி சாயிபாபா, இவர்கள் எல்லாம் சூப்பர் லீடர்கள்; வல்லரசு போன்றவர்கள்; சாமியார்களிலேயே வல்லரசு போன்றவர்கள். புட்டபர்த்தி சாய்பாபாவை வணங்கிக் கொண்டிருக்கின்ற நீதிபதிகள் உண்டு; அமைச்சர்கள் உண்டு; ஆட்சியாளர்கள் உண்டு. குடியரசுத் தலைவருக்குப் படம் வைக்காத இடத்தில்கூட, புட்டபர்த்தி சாயிபாபாவிற்குப் படம் உண்டு.


அந்த ஆசிரமத்தில், பல்லாயிரக்கணக்கான கோடிகளை அங்கே எடுத்ததும், சுரங்கம்போல் இருந்ததுபற்றி உங் களுக்குத் தெரியும்.


பகவான் சாயிபாபா என்று சொன்னார்கள்; பகவானை ஒருவன் கொலை செய்ய முயற்சித்து, அந்த முயற்சி யிலிருந்து பகவான் தப்பித்தார். உலகத்திலேயே பகவானை கொலை செய்கின்றவன் நம் நாட்டில்தான் இருக்கிறார்கள்; கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கின்ற பகவான்களும் நம் நாட்டில்தான் இருக்கிறார்கள்.


இவருக்கு முன்பாகப் பார்த்தீர்களேயானால், ரமணரிஷி என்பவர். அவர் திருவண்ணாமலையில் மிகப்பெரிய அளவிற்கு ஒரு ஆசிரமம்.
தந்தை பெரியாருக்கு, அவருடைய சொந்தச் சொத்து; அவரிடம் கொடுத்த சொத்து. அவையெல்லாவற்றையுமே தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு விட்டுவிட்டுச் சென்றார்கள். அதனால்தான் இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்; அதனால்தான் இன்றைக்கு பெரியார் கல்வி நிறுவனங்கள்; அதனால்தான் இன்றைக்கு பெரியார் மருத்துவமனைகள் மற்ற மற்றவை உள்ளன.


ரமண மகரிஷியின் மர்மங்கள்


ஆனால், ரமணரிஷி என்ன செய்தார்? மக்களிடம் இருந்து பெற்றவையை வைத்து, ஆசிரமம் அமைத்து, பிறகு எல்லாவற்றையும், கடைசியில் தன்னுடைய தம்பியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.
ரமணரிஷியின் தொண்டர் பெருமாள்சாமி என்பவர், நீண்ட நாள்களுக்கு முன்பு ரமண மகரிஷியின் மர்மங்கள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் எழுதினார் 1938 ஆம் ஆண்டு அந்த புத்தகத்தை தமிழில் பல பேர் மொழி பெயர்த்திருக்கிறார்கள். வழக்கும் போட்டார்.  மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக.


சந்நியாசியாக உள்ள நீங்கள் எப்படி உயில் எழுத முடிந்தது என்று குறுக்கு விசாரணை செய்தவர் கேட்டார்.


நான் சந்நியாசியே இல்லை. நான் சந்நியாசமே வாங்கவில்லையே!


வெங்கட்ட ரமண அய்யரான அவர்; பிறகு வெங்கட்ட என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, பிறகு அய்யர் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, ரமண ரிஷியாகி, பிறகு பகவான் ரமண ரிஷி ஆனார். ஏதோ பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்குவதுபோல.


இந்த பகவான் ரமணரிஷி என்ன சொன்னார் தெரியுமா? நான் சந்நியாசியே இல்லை. நான் சந்நியாசமே வாங்க வில்லையே. அப்படி வாங்கியிருந்தால்தானே நான் உயில் எழுத முடியாது என்று சொன்னார்.
ரமண மகரிஷி ஆன்மிகத்திற்குப் பாலம் அமைத்துக் கொடுத்தவர் என்று சொல்லி, இந்திரா காந்தி முதற் கொண்டு, அழைத்து வந்து அங்கே அமர வைத்தார்கள்.


ஆசிரமம் என்றால், ஒரு வித்தை வைத்திருக்கிறார்கள்; அங்கே இரண்டு வெளிநாட்டுக்காரர்களைக் கொண்டு வந்து அமர்த்தி விடுவார்கள். நான் ஒருமுறை பெரியார் அவர்களிடம்  என்னய்யா, அமெரிக்காவிலே இப்படி நடக்கிறது என்று வியப்படைந்து நான் கேட்ட நேரத்தில்,

முட்டாள்தனம் உலகத்திற்கே சொந்தம்


உடனே அய்யா பெரியார் அவர்கள் சொன்னார், முட்டாள்தனம் என்ன உனக்கே சொந்தமா? உலகத்திற்கே சொந்தம். ஏன் அமெரிக்காவில் முட்டாள் இருக்கமாட் டானா? எல்லா நாட்டிலும் முட்டாள் இருப்பானய்யா என்று.
ஆக, அந்த அடிப்படையில், ரமண மகரிஷியின் மர்மங்கள்; எல்லாவற்றையும்விட, இப்பொழுது நடமாடும் தெய்வம். நேற்றுகூட தஞ்சாவூரில் பெரிதாக விளம்பரம் செய்திருந்தார்கள். இன்றைக்குக் காலையில்கூட நாளிதழ் களில் செய்திகளைப் படித்தேன்.


புத்தருடைய சின்னங்களை இந்துக் கோவில்களாக மாற்றிவிட்டனர்!

ஜெகத்குரு சங்கராச்சாரி சாமிகள்;  கும்பகோண மடமாக நீண்ட காலமாக இருந்து, திடீரென்று 2000 ஆம் ஆண்டு வரலாறு என்று உள்ளே புகுந்து, இடைச்செருகி, எப்படி கீதையை மகாபாரதத்தில் இடைச்செருகலாக சேர்த்தானோ, அதுபோல், இதனை உள்ளே நுழைத்து, கும்பகோணம் மடம், காஞ்சிபுர மடமாக மிகப்பெரிய அளவிற்கு வந்து, ஆதி சங்கரருக்கே தெரியாத மடம் அல்ல; ஆதிசங்கரர் ஸ்தா பித்த மடங்கள் என்பது, நான்கு திசைகளில் நான்கு மடங்கள்.


தென்னாட்டில் சிருங்கேரி மடம் மட்டும்தான்; வடக்கே பத்ரிநாத்; துவார பீடம் மேற்கே; அதேபோல், கிழக்கே பூரி மடம்; அவ்வளவும் புத்தருடைய சின்னங்கள்; அவை அத்தனையையும் முழுக்கமுழுக்க என்ன செய்து விட்டார்கள்; இந்துக் கோவில்கள் என்று மாற்றிவிட்டார்கள். ஆக, அப்படிப்பட்ட அந்த வரலாற்றை மாற்றியதுபோல, கும்பகோண மடம், காஞ்சி மடமாகிவிட்டது. அதிலே சங்க ராச்சாரியார் பல்வேறு திருப்பணிகளை செய்துவிட்டார்.


அவருடைய திருப்பணிகளைப்பற்றியெல்லாம் அனு ராதா ரமணன் போன்றவர்கள் நிறைய சாட்சிகளைச் சொல்லிவிட்டார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் செய்த அற்புதமான ஆன்மிகத் திருப்பணிகள் எந்த வகையான ஆன்மிகம்? என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இந்த இரண்டு புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் உள்ளது. அதற்கடுத்தது, சங்கராச்சாரியார்மீது கொலை வழக்கு? அந்த வழக்கிலிருந்து இப்பொழுது அவர் தப்பித்து விட்டார், இந்த ஆட்சி வந்தவுடன். மேல்முறையீட்டை செய்ய முடியாதவாறு. எத்தனை வழக்குகள் வந்தாலும் அவர்கள் தப்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு வாய்ப்பு கள், வசதிகள், அதில் ஒரு பெரிய நெட்வொர்க்கே உள்ளது.
அதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். 89 பிறழ் சாட்சியங்கள்; அதற்கடுத்து, நீதிபதிகளிடமே பேசினார் என்ற குற்றச்சாட்டு. இவையெல்லாம் இருந்தும், கொன்றவர் யார் என்று இதுவரை வெளிவரவில்லை.
                          ------------10-01-2015-- தொடரும்

 **********************************************************************************


21ஆம் நூற்றாண்டின் சாமியார்கள் யார்?
லேட்டஸ்ட் டெக்னிக் அய்டெக் சாமியார்கள்
சாமியார்கள் ஜாக்கிரதை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அம்பலப்படுத்தினார்
சாமியார்கள் ஜாக்கிரதை


திருச்சி, ஜன. 11- லேட்டஸ்ட் டெக்னிக், அய்டெக் சாமியார்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் சாமியார்கள் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
30.11.2014 அன்று சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப் பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அவாள் கொலை செய்தால்; சிகை சேதம் மட்டுமே!

சாமியார் புரட்டு என்று இப்பொழுதுள்ள ஊடகங்களில் கூட, இவாள்பற்றி அவாள் எழுத மாட்டார்கள் என்பதுதான் மிக முக்கியம். இவாள் எல்லாம், மகாசுவாமி; மகா சுவாமி பக்கத்திலிருக்கின்ற அடுத்த சாமிகள். ஆகவேதான், மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

கொலைக்குற்றம், கொலையே செய்துவிட்டார் என்று நிரூபித்தாலும்கூட, சிகைச் தேம்; உச்சிக்குடுமியில் இருக் கின்ற இரண்டு முடியைக் கத்திரித்துவிட்டால் போயிற்று!
சூத்திரர்களோ, மற்றவர்களோ கொலை செய்தால் மரண தண்டனை என்பதுதான் மனுதர்மத்தின் நீதி.

இப்பொழுது சாமியார் வேடம் எதற்குப் பயன்படுகிறது என்றால், நம் நாட்டிலுள்ள ராணுவ ரகசியங்களை வெளி நாட்டிற்குக் காட்டிக் கொடுப்பது, விற்பது போன்ற நிலை யில் உள்ளது.

காவியாக இருந்தால், சட்டம் மவுனமாகிவிடும்; ஊமையாகிவிடும்!

இதைவிட ஒரு படி முன்னேறி, இந்தக் காவிக் கூட்டம் ஊடுருவி, சங்பரிவார் மூலமாக, மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தார்கள். ராணுவத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வெடிமருந்தை அந்தக் குண்டு வெடிப்பில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ராணுவத்தி லிருந்து ஒய்வு பெற்ற ஒருவர், பா.ஜ.க.வில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து, அவர் மற்ற சாமியாரிணிகளை உற்பத்தி செய்து, அந்த சாமியார்கள் எந்த அளவிற்கு வந் தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டு மானால், வன்முறையின் மறுபிறவிகளே சங்பரிவார் கும்பல் என்ற தலைப்பில் உள்ள நூலை, அதில், ஆதாரபூர்வமாக பல்வேறு ஏடுகளில் வந்த செய்திகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறோம்; எதுவும் எங்கள் சொந்தக் கருத்தல்ல. இப் பொழுதுதான் அந்த சாமியாரிணி நீண்ட காலமாக சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கிறார். அந்த வழக்கை விசாரித்த டி.ஜி.பி. காணாமல் போகிறார்; கொலை செய்யப்படுகிறார். யார் செய்தார்கள் அந்தக் கொலையை என்பது, சங்கரராமன் கொலை போன்று ஆகிவிட்டது.

அந்த கொலை வழக்கை விசாரித்து, அதில் தனக்கு ஏற்பட்ட சங்கடம் பற்றி அய்.பி.எஸ். நண்பர் பெரியார் திட லில் அந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதை புத்தகமாகவும் எழுதியுள்ளார். அது தமிழிலும் வெளி வந்துள்ளது.

எனவேதான், நம் நாட்டில் நீதி ஒரு சார்பாக இருக்கிறதே தவிர, அது அனைவருக்கும்  உரியது; ஒரே தன்மையானது என்று சொல்வதில்லை. காவியாக இருந்தால், சட்டம் மவுன மாகிவிடும்; ஊமையாகிவிடும் என்கிற நிலை இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், 2008, பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தின்மூலம், சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கிறார்கள். பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபேந்திர சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராது அவை வெடித்து, உடல் சிதறிப் போனார்கள்.

இதற்காக நம் நாட்டில் அவர்களையெல்லாம் தியாகிகள் பட்டியலில் வந்து, மத்திய அரசாங்கத்தின் சார்பில் நினைவு நாள் கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை. தேசத்திற்காக உயிரை விட்டவர்கள் என்று சொல்லி அவர்கள் உயிர் விட்ட நாளைக் கொண்டாடினார்கள் என்றாலும் அதிசய மில்லை.

ஏனென்றால், காந்தியாரைக் கொன்ற வழக்கில், பல முறை மன்னிப்பு கேட்டவர் வீரசவர்க்கார்; இவர் பெயர் வீர சவர்க்கார். வீரத்தையே கேலி செய்வதுபோல. இந்துத் துவா என்ற சொல்லை உருவாக்கிய வீ.டி.சவர்க்கார் இருக் கிறாரே, அவர் போலவே, இங்கு மிகப்பெரிய தொடர் குண்டு வெடிப்புக்கும், வன்முறைக்கும் திட்டம் தீட்டியிருந்தது யார் என்றால்,
கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என்.சிங் செய்தியா ளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

குண்டு தயாரிக்கும் இடத்தில் ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை. வரைபடங்களும், நாட்குறிப்புகளும், தாக்கப்படவேண்டிய முஸ்லிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன. மகாராஷ்டிரத்தில் நந்திக் என்ற இடத்தில், இதுபோன்ற குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, வெடித்துச் சிதறியதால், பஜ்ரங் தீவிரவாதிகளான நரேஷ் ராஜ் மற்றும் இமான் ஷிபான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.

பெண் சாமியார் பிரக்தியா சிங் பாரதி தாக்கூர்
4.5.2006 ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், மாலேகா னில், சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப் பெற்றது.

29.9.2008 ஆம் ஆண்டு ஆறு இஸ்லாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்து வந்து, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது, புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி, பொருத்தப் பட்டு, இருந்த அந்த வெடிகுண்டு ஆர்டிஎக்ஸ் மற்றும் அமோனிய நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது. புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்தியா சிங் பாரதி தாக்கூர் (வயது 38) இதன் பின்னணியில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

ராணுவத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிமருந்துப் பொருள்கள் எல்லாம் எப்படி வெளியில் வந்தன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டு மானால், இங்கே நூல்கள் இருக்கின்றன; அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோன்று, புட்டபர்த்தி சாய்பாபாபற்றி நீண்ட நாள்களுக்கு முன்பு நான் உரையாற்றியதை, திராவிடர் கழகம் வெளியிட்ட ஒரு புத்தகம். இந்தப் புத்தகம் 1994 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது. மறுபதிப்பு 2005 ஆம் ஆண்டு. மிகச் சிறிய நூல்தான். இதனை வாங்கிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் அவதார மன்னர்கள் எப்படி இருக்கிறார்கள்?
அண்மையில் 99 வயது வரையில் வாழ்ந்து மறைந்த சிறந்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங் அவர்கள், மிகத் தெளிவாகவே சொன்னார், இந்தியா முழுக்க ஆராய்ந்து பார்த்தால், 400, 500 பேர்களுக்குமேல் காவிகள் என்கிற பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.  கடவுள் அவதாரங் களைவிட அதிகமானது இது. இந்தியாவில் அவதார மன் னர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை  இல்லஸ்ட்ரேட் டட் வீக்லியில் ஆசிரியராக இருந்தபொழுது, நூலாக வெளியிட்டிருக்கிறார்.

அண்மையில்கூட இந்து ஏட்டில் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறது. எந்த அளவிற்கு சாமியார்களுடைய பிரச்சினை வெளிவந்திருக்கிறது என்று சொல்கிற நேரத்தில், பணிக்குச் செல்லவேண்டும் என்றால், பட்டம் வாங்கவேண்டும் என்கிறார்கள்; மருத்துவராக வேண்டும் என்றால், மருத்துவக் கல்லூரியில் படிக்கவேண்டும்; வழக் குரைஞராக ஆகவேண்டும் என்றால், சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கவேண்டும். பொறியாளராக வேண்டும் என்றால், பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்க வேண்டும். ஆனால், சாமியாராக வேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்? ஒன்றும் செய்யவேண்டாம், சட்டையில் சாயத்தை ஏற்றவேண்டும்; அல்லது காவி வண்ணத்தில் சட்டை போடவேண்டும். வசதி வாய்ப்பு களுக்கு ஏற்றவாறு சட்டை வடிவங்களை அமைத்துக் கொள்கிறார்கள்.


கோவணத்தையும் கழற்றிவிட்டால், சக்தி வாய்ந்த சாமியார்களாம் நம் நாட்டில்

இவ்வளவு  சிரமப்படுவதில்லை வடக்கில் உள்ள சாமி யார்கள்; சட்டையையும், வேட்டியையும் கழற்றிவிடு கிறார்கள், ரமணரிஷி போல. வெறும் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அதையும் கழற்றிவிட்டால், இன்னும் சக்தி வாய்ந்த சாமியார்களாம் நம் நாட்டில்.
நம்முடைய அறிவு என்னாயிற்று? அதனை எண்ணிப் பார்க்கவேண்டாமா? வெட்கப்படவேண்டாமா? இத்தனை கோடி மக்கள் உள்ள நாட்டில், மனிதவளம் எதைப் பொறுத்தது? அறிவைப் பொறுத்தது அல்லவா! பகுத்தறி வினுடைய வளர்ச்சியைப் பொறுத்ததல்லவா! முன்னேற் றத்தைப் பொறுத்ததல்லவா!
ஒரு பக்கத்தில் செவ்வாய்க்கோளிற்கு விண்கலத்தை அனுப்பி, நாம் சாதனை செய்துவிட்டோம் என்கிறோம். நம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தி ருக்கிறது என்று நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், இந்தத் துறையில் எப்படிப்பட்ட அளவில் இருக்கிறார்கள் என்று சொன்னால்,
Indias God Man Syndrome
என்னுடைய கையில் இருப்பது மூன்று நாள்களுக்கு முன்பு வந்த இந்து நாளிதழ்; பல்கலைக் கழகத்தில் உள்ள ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார்.
Indias God Man Syndrome  என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.
சாமியார்கள் கடவுளுக்குச் சமமாக, நடமாடும் அவதாரங்கள்; நடமாடும் கடவுள்கள் என்று நினைப்பது, காலில் விழுவது, காணிக்கை செலுத்துவது, சாதாரணமா கவே அவர்கள் உட்காரும்பொழுது, உயரே அமருவது; சங்கராச்சாரியாரை, சுப்பிரமணிய சாமி போன்ற அரசியல் தரகர் பார்க்கும்பொழுது, பக்கத்தில் நாற்காலி போட்டு அமரலாம்; ஆனால், நம்முடைய மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன் கீழே அமர்கிறார்.

ஏனென்றால், சூத்திரனுக்கு ஒரு நீதி
தண்டச் சோறுண்ணும்
பார்ப்புக்கு வேறொரு நீதி
சாஸ்திரம் சொல்லிடுமாயின்
அது சாஸ்திரமல்ல,
சதியென்று கண்டோம்


என்று பார்ப்பனப் பாரதியே பாடினார். அதுதான் மிக முக்கியமானது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்து நாளிதழில்,

Indias God Man Syndrome; Syndrome  என்ற வார்த்தை ஒரு நோயின் அறிகுறி மாதிரி, அது ஒரு பழக்கம்; மனோவியாதி போல. சாமியாரைப் பார்த்தால், உடனே காலில் எப்படி விழுகிறான்? சாமியாரைப் பார்த்து காலில் விழுந்தான்; அடுத்து அதிகாரத்தில் இருப்பவனைப் பார்த்து காலில் விழுந்தான். அதிகாரத்தில் இல்லாத நம்மைப் போன்றவர்களின் காலிலும் விழுகிறான். காலில் விழுவது என்பது ஒரு வியாதிபோலவே ஆகிவிட்டது.  பொத் பொத்தென்று காலில் விழுந்து விடுகிறான்.

நம் தமிழ்நாட்டில் காலில் விழுவது எப்படி என்று பேசினால், அதற்காக சிறப்புக் கூட்டம் ஒன்றை போடலாம். விதவிதமாக காலில் விழுகிறான். விழுகின்ற யுக்தியையே இவர்கள்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். காலில் விழுவதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.

யார் மீதும் கோபமோ, ஆத்திரமோ, கேலி செய்ய வேண்டும் என்ற குரூர புத்தியோ எங்களுக்கு அல்ல. இந்த நாட்டில் மனிதனுக்கு இருக்கின்ற தனி அடையாளமே சுயமரியாதை; மானவாழ்வு.
பெரியார் இரண்டே வரியில் சொல்வார்,

திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி

மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக இந்த சமு தாயத்தை அமைக்கவேண்டும் என்று சொன்னாரே, அதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை

இந்து நாளிதழில் வெளிவந்த அந்தக் கட்டுரையை எழுதியுள்ள கல்லூரிப் பேராசிரியர், ஒரு ஆய்வாளர்.

But most important of all, it is the way democracy and secularism is practised in India. People everywhere are prone to mystics, but what makes our godmen seem so powerful is that our politicians use them as baits to catch votes. It never really quite works that way because the godmen’s followers are thinking cures, bank balance and success, not democracy. From Bhindranwale to Ramdev to Nithyananda to Asaram and now Rampal, not a single baba ever succeeded in converting their clients into vote banks.
Still, politicians persist in this tack and cover their backs by sloganeering democracy and secularism. Winning elections by playing the godman card seems perfectly acceptable to them because they see their voters as dumb, driven, religious cattle. Sadly for the babas, though, they just have a few good years at the top. Very soon, the godman has to be dispensed with: it is either because of the genie out of the bottle syn drome, or because a new power centre has emerged.


It eventually, therefore, distils down to politics. Babas catering to gullible folks would hardly be a social nuisance if politicians did not meddle in this magician-client relationship. Indira Gandhi’s choice of Bhindranwale is the best illustration of how a petty soothsayer can become a monster and cause enormous public damage. If Bhindranwale had been left alone in his “dera” he would probably be living today and so would thousands of innocent Sikhs who were caught in the crossfire.
இதன் தமிழாக்கம்:
ஆனால், எல்லாவற்றையும்விட முக்கியமானது என்ன வென்றால், இந்தியாவில் ஜனநாயகமும், மதசார்பின்மை யும் பின்பற்றும்முறைதான். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மதநம்பிக்கையால் தலைவணங்குகின்றனர். ஆனால், நம்முடைய சாமியார்கள் சக்தி உள்ளவர்கள் போல் காணப்படுவதால், நம்முடைய அரசியல்வாதிகள் அவர்களைப் பூச்சாண்டிகளாகக் காட்டி வாக்குகளைப் பெறுகின்றனர். இது உண்மையில் எப்போதுமே அடங்கா மல் இருந்துவருகின்றன. சாமியார்களின் சீடர்களாக இருப்பவர்கள் தாங்கள் குணமடைவதாக கருதுகிறார்கள். வங்கிகளில் பணம் மற்றும் வெற்றிபெறுவதில் கவனம் கொள்கிறார்களே ஒழிய ஜனநாயகம்குறித்து யாரும் எண்ணுவதில்லை.


பிந்தரன் வாலே, ராம்பால், நித்யானந்தா, ஆசாராம் வரை  ஒரே ஒரு பாபா (சாமியார்) அல்ல, யாருமே அவர் களின் வாடிக்கையாளர்களை வாக்குவங்கிகளாக மாற்று வதில் எப்போதுமே வெற்றி பெற்றவர்கள் அல்லர்.
இன்னமும், ஜனநாயகம், மதசார்பின்மை என்று முழக்க மிட்டு அரசியல்வாதிகள் தந்திரங்களைக் கையாள்வதும், அவர்களின் மறுபக்கத்தை மறைப்பதுமாகவே உள்ளனர். சாமியார்களைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றியை ஈட்டுவதைக் காணும்போது, அவர்களை உண்மையானவர்களாக கருதும் வாக்காளர் களை மதத்தின்பெயரால் ஊமைகளாக, கால்நடைகளைப் போல் கருதுகின்றனர்.

சாமியார்களுக்கு மோசமாக உள்ளது என்னவென்றால், சாமியார்களில் சில ஆண்டுகள் அவர்களுக்கு சாதகமான ஆண்டுகளாக திடீரென உச்சத்துக்கு செல்கிறார்கள். அவர்கள்மீதுள்ள பக்திப் போதை, புதிய ஆட்சி மத்தியில் ஏற்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் உடனடியாகவே அவர்களைப்பற்றி பரவிவிடுகிறது. அரசியலில் தரம் தாழ்ந்து, மக்கள்மீது ஆதிக்கம் ஏற் பட்டுவிடுவதால், சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுவிடு கிறது. சாமியார்கள்-வாடிக்கையாளர்கள்  இருவருக்குள்ள உறவுகளில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வது கிடையாது. இந்திரா காந்தியின் தேர்வான பிந்தரன்வாலேவுக்கு நெருக்கமாக அவர் இருந்ததை சிறந்த உதாரணமாகக் கூறலாம். சாதாரணமாக ஜோதிடராக இருந்த ஒருவர் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு உருவகம் பெற்று, அதிகப்படியாக பொதுவாழ்வில் சீர்குலைவு ஏற்பட்டது.


பிந்தரன்வாலேவை கண்டுகொள்ளாமல் கூடாரத்தில் தனியாக விடப்பட்டு, அவர் இன்றும் இருந்திருந்தால், அப்பாவி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருப்பார்கள்.
சாமியார்களுக்கு செல்வாக்கு எதனால் வந்தது? மோசடி செய்தாலும் அவன் தப்பித்துக் கொள்கிறான். அப்படியே சிறைக்குச் சென்றாலும், வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வதுபோல, சிறைச்சாலைக்குச் சென்று வருகிறான். சிறைக்குச் சென்றாலும், அவனுக்கென்று தனியாக அவ்வளவு வசதிகள் செய்து தருகிறார்கள். ஏனென்றால், சிறையில் உள்ள அதிகாரிகளும், இவர்கள் காலில் விழுந்து விடுகிறார்கள்.


அய்யர் சிறைச்சாலையில் இருந்தாலும் அவன் சாமி!
நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களும், நாங்களும் மிசாவில் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது, ஒரு அய்யர் மோசடிக் குற்றத்திற்காக சிறைச்சாலைக்கு வந்திருந்தார். அவருக்கு சிறைச்சாலையில், சீட்டு எழுதுகின்ற வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். கடுங்காவல் தண்டனை பெற்ற வருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காக.
சிறைச்சாலையில், வைப்பராக இருக்கக்கூடிய ஆள் என்ன செய்வார் தெரியுமா? எங்களைப் பார்க்கும்பொழுது ஒன்றும் சொல்லமாட்டான்; ஆனால், அந்த அய்யரைப் பார்த்தால் மட்டும், சாமி எப்பொழுது ஆஸ்பத்திரிக்கு வரு கிறீர்கள் என்று கேட்பார். சிறைச்சாலையில் குற்றம் செய்துவிட்டு வந்தாலும், அவர்கள் சாமிதான், நம் நாட்டில். இதுதான் மூளையில் போட்ட விலங்காகும்.
நம் தமிழ்நாட்டிலே சுவீஸ் வங்கி மாதிரி பயன்படுத்தப் பட்ட ஒரு மடம் உண்டு. பெரிய பணக்காரர்கள், தங்களிடத் தில் பணம் வைத்திருந்தால், வருமான வரித்துறையினர் ரெய்டு வருவார்கள் என்பதால், அந்த மடத்தில் கொடுத்து வைப்பார்கள். அந்த மடத்தில், அவாள் என்ன சொல் கிறார்களோ, இவாள்கள் கேட்பார்கள் என்பதுதான் மிக முக்கியம். இப்படியெல்லாம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக் கின்றன. இன்னும் செய்திகள் ஏராளம் உண்டு நண்பர்களே! 21 ஆம் நூற்றாண்டு சாமியார்கள்; லேட்டஸ்ட் டெக்னிக், அய்டெக் சாமியார்கள்
இப்பொழுது அண்மையில் வந்திருக்கின்ற புது திரைப் படம் போல, 19 ஆம் நூற்றாண்டு சாமியார்; 20 ஆம் நூற்றாண்டு சாமியார்; இப்பொழுது 21 ஆம் நூற்றாண்டு சாமியார். லேட்டஸ்ட் டெக்னிக், அய்டெக் சாமியார் இப்பொழுது உள்ளவர்கள்.

அந்த சாமியார் எப்படி வருவார்? ஏர்கண்டிஷன் அறையில் இருப்பார்; முற்றும் துறந்த முனிவர் அல்ல;  எதைத் துறந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அதுதான் மிக முக்கியம். இப்பொழுதுள்ளவர்கள் அய்டெக் சாமியார் கள். ஏழு, எட்டு செல்போன்கள் வைத்திருப்பார்கள்.

அரியானா ராம்பால் சாமியாரைப்பற்றி சொல்கிறேன். நான் சொல்கிற ஆதாரங்கள் முழுவதும் பார்ப்பன ஏடுகளி லிருந்து நான் எடுத்துச் சொல்கிறேன். விடுதலையிலேயோ, முரசொலியிலேயோ அல்லது பகுத்தறிவு கருத்துள்ள நூல் களிலோ வெளிவந்த செய்திகளை நான் சொல்லவில்லை.

என் கையில் இருப்பது இந்த மாதம் 20 ஆம் தேதி வெளிவந்த தினமலர் நாளிதழ். இதுவரையில் நம் நாட்டில் நவக்கிரகங்களைத்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நவக்கிரக சாமியார்கள். நான் இங்கே உரையாற்றுவதை சுருக்கமாக துண்டறிக் கையாகப் போட்டு நம்முடைய இளைஞர்கள் வீட்டுக்கு வீடு சென்று கொடுக்கவேண்டும். எச்சரிக்கையாக இருங் கள் என்று சொல்லவேண்டும்.

என்ன சொன்னாலும், மக்கள் ஏமாறுவார்கள் அது வேறு விஷயம்.
ஒரு விளம்பரம் வெளியிடுகிறார்கள்; ஒன்று வாங் கினால், மூன்று இலாபம் என்று சொல்கிறார்கள்.


எப்படிக் கொடுப்பார்கள் என்று யோசிப்பதில்லை.

1000 ரூபாய் கொடுத்தீர்கள் என்றால், நாங்கள் 2000 ரூபாயாகத் திருப்பிக் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

2000 ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கின்ற சக்தியிருந் தால், அவன் ஏன் இந்தத் தொழில் செய்ய வருகிறான்; வீட்டிற்குள்ளேயே இருந்து பல மடங்காகப் பணத்தைப் பெருக்கிக் கொள்ளமாட்டானா?

                          ---------------------------------- தொடரும்  11-01-2015
Read more: http://viduthalai.in/e-paper/94322.html#ixzz3Obc65MYn

***********************************************************************************
மனிதர்கள் என்பதற்கு அடையாளமே ஆறாவது அறிவுதானே!

மனிதர்கள் என்பதற்கு அடையாளமே ஆறாவது அறிவுதானே!

சாமியார்கள் ஜாக்கிரதை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

திருச்சி, ஜன. 12- மனிதர்கள் என்பதற்கு அடையாளமே ஆறாவது அறிவுதானே! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


30.11.2014 அன்று சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப் பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: பசியா வரம் தருகிறேன் தாயே! பழைய சோறு இருந்தால் போடு!


மிக அழகாகப் பெரியார் அவர்கள் சொல்வார்:
பசியா வரம் தருகிறேன் தாயே! என்றார் ஒருவர்
அப்படியா! நான் என்ன செய்யவேண்டும் என்று அந்த வீட்டிலிலுள்ள பெண் கேட்டார்.

பழைய சோறு இருந்தால் போடு என்றார் அவர்.

அந்த அம்மாவும் இருந்த பழைய சோற்றை போட்டு விட்டார்.

அந்த அம்மாவினுடைய வீட்டுக்காரர் மிகவும் பசி யோடு வந்தார் சாப்பிடுவதற்காக.

அந்த அம்மா அவரிடம் சொல்கிறார்; சோறு இல்லீங்க; அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; ஒரு சாமியார் வந்தார்; அவரிடம் நான் வரம் வாங்கி விட்டேன். பசி எடுக்காது என்றார். அதற்காக நம்மிடம் இருந்த பழைய சோற்றை அவருக்குக் கொடுத்தேன் என்றார்.


உடனே அந்த அம்மாவினுடைய கணவர் கேட்டார், அட முட்டாளே, நீ சிந்திக்கவேண்டாமா? பசியா வரம் தருகின்ற சக்தி இருந்தால், அவனுக்கு ஏன் பசி எடுக்கப் போகிறது? அவனுக்குப் பசியாக இருந்ததினால் தானே உன்னிடம் பழைய சோற்றை கேட்டிருக்கிறான் என்று.


தந்தை பெரியார் அவர்கள்  இந்தக் கதையை சொல்லி யாரும் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று சொல்வார்.


தினமலர் சென்னை பதிப்பு, 20.11.2014. (இரண்டாம்  பக்கம்) அதில் வந்த செய்தியைப்  படிக்கிறேன் கேளுங்கள்.

சட்டத்திற்கு சவால் விடும் சாமியார்கள்!

அரியானாவில் ஹிசார் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பாலை, கொலை வழக்கில் கைது செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது. தன்னை கைது செய்ய ஆசிரமத்திற்கு வந்த போலீசாரைத் தடுத்து, தன் ஆதரவாளர்கள்மூலம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி, சட்டத்துக்கு சவால் விட்டுள்ளார்
சாமியார் ராம்பால்.
அவரைப் போலவே, மேலும் ஒன்பது சாமியார்கள் அடாவடியாக செயல்படுகின்றனர்.

ராகவேஷ்வர மகரிஷி ஸ்வாமி

பெங்களூரு அருகே உள்ள ராமச்சந்திரா மடத்தைச் சேர்ந்தவர் (வயது 47). பாடகியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெங்களூரு சி.அய்.டி. போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அதுல் மகராஜ்

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள லவசா பகுதியைச் சேர்ந்த, இந்த சாமியார் மீது 17 வயது இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசாராம் பாபு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில், 16 வயது பெண்ணை சூறையாடியதாக, இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள், கொல்லப்பட்ட வழக்கிலும் இவர் பெயர் இருக்கிறது.

சிவமூர்த்தி திவிவேதி

உ.பி., மாநிலம் சித்ர கூடத்தைச் சேர்ந்த இவர், பாலியல் தொழில் நடத்தி, கடந்த 10 ஆண்டுகளில் 60 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்தியானந்தா

பிரபல நடிகை ஒருவருடன் படுக்கையறையில் உல்லாச மாக இருந்ததாக, இவர்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தியது.

குர்மீத் ராம் ரஹீம் சிங்

பஞ்சாப் மாநிலம் தேரா சச்சா சவுதா என்ற பிரிவினரின் தலைவராக கருதப்படும் இவர்மீது மனைவியை பாலியல் கொடுமைப்படுத்திய புகார் இருக்கிறது. 2008 இல், மும்பையில், இவரின் பாதுகாவலர்கள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

மச்சேந்திர கிரி

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மச்சேந்திர கிரி. தன் ஆசிரமத்தில், 24 வயது பெண்ணை, அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.

பாபா ராம்தேவ்

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் டில்லி உண்ணாவிரதத்தின்போது, போலீசாரிடம் இருந்து தப்ப, சல்வார் கமீஸ் உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்மீது நில அபகரிப்பு வழக்கு இருக்கிறது.

ராமஸ்வாமி தேவிஸ்ரீ குருஜி

பெங்களூரைச் சேர்ந்த இந்த சாமியார்மீது செக்ஸ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகள் பார்ப்பன ஏட்டிலேயே சொல் லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்றால், நாம் போடும் கூச்சல்கள், நாம் போடும் கூட்டங்கள் வீண்போவதில்லை. நாம் விதைப்பதெல்லாம் முளைத்துக் கிளம்புகின்றன. பெரியார் இறுதி வெற்றியை பெறுவார். பகுத்தறிவாளர் களுக்குத் தோல்வி கிடையாது. வேண்டுமென்றால், நாங்கள் பெறக்கூடிய நிரந்தர வெற்றிகளுக்கு கொஞ்சம் காலதாமதமாகலாம், அவ்வளவுதான்.


கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிறோம்; கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிறோம் என்று சொல்கிறார்களே, நீ இல்லாத இடத்தில் தேடுகிறீர்களே, கருப்புப் பணத்தை எடுக்கவேண்டும் என்றால், மிகவும் சுலபமாயிற்றே. வெளிநாட்டுக் கருப்புப் பணம் வருவதை பிறகு பார்க்கலாம். உள்நாட்டுக் கருப்புப் பணத்தை எடுக்கவேண்டுமானால், எங்கெங்கே மடம் இருக்கிறதோ, எங்கெங்கே சாமியார்கள் மடம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று சோதனை செய்தால், கருப்புப் பணம் என்ன; நிறைய பணம் சாதாரண மாகக் கிடைக்குமே? அதற்குத் துணிச்சல் உண்டா? அதுதானே மிக முக்கியம்.
திருப்பதிக்குச் சென்று பார்க்கட்டுமே! உண்டியலில் யார் யார் பணம் போட்டார்கள் என்று. பணம் போடுபவர்கள் எல்லாம் கணக்கு எழுதி, எப்படி பணம் வந்தது என்ற விவரத்தை எழுதிதான் உண்டியலில் போடவேண்டும் என்றால், இவ்வளவு வருமானம் வருமா? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆத்மா எங்கே இருக்கிறது?

ஆன்மிகம் என்பதே பித்தலாட்டம். ஆத்மா என்பதே இல்லாத ஒன்று. ஆத்மாவை நம் சமய அறிஞர்கள் என்றெல்லாம் சேர்ந்து, ஆத்மா என்றே வைத்திருக்கலாம், வடமொழி சொல், நமக்குச் சம்பந்தமில்லாதது. அதைப் போய் தமிழ்ப் படுத்தி, ஆன்மா என்றாக்கி, ஆன்மாவிலி ருந்து பிறகு ஆன்மீகம் என்றாக்கி, இவர் பெரிய ஆன் மீகவாதி என்று சொல்லி, அது என்ன ஆன்மீகவாதி; இல்லாததை இருப்பதாக பொய் சொல்பவர் என்று அர்த்தம்.
பெரியார் கேட்டார், உயிர் இருக்கிறது, உடல் இருக்கிறது, அதற்குமேல் ஆத்மா எங்கே இருக்கிறது என்று.

ஆத்மா என்பது அழியாதது; கூடு விட்டு கூடு பாய்வது என்றார்கள்.
கூடு விட்டு கூடு பாய்வது என்றால், முதலில் எவ்வளவு ஜனத்தொகை இருந்தார்களோ, அவ்வளவுதானே இருந்தாக வேண்டும். இப்பொழுது எப்படி ஜனத்தொகை இவ்வளவு கூடியிருக்கிறது என்று பெரியார் கேட்டார்; இதுவரையில் யாரும் பதில் சொல்லவில்லை.

ஆத்மா என்பது பச்சைப் பொய். எதற்காக அதனைக் கண்டுபிடித்தார்கள் என்றால், ஜாதியை நிலை நிறுத்துவ தற்கு, ஜாதி தருமத்தை நிலை நாட்டுவதற்கு அவன் உண் டாக்கின ஒரு தத்துவம், ஆத்மாவே தவிர, வேறொன்றும் கிடையாது.


வெறும் செக்ஸ் சாமியார் மட்டுமல்ல; வெறும் பாலியல் குற்றவாளிகளாக மட்டுமல்ல, கருக்கலைப்பு கரு அழிப்பு, பெண்களைக் கொலை செய்வது, அதைப் பார்த்தவர்களை வெட்டுவது; பெண்கள் கழிப்பறைக்கு செல்வதை கேமிரா வில் படம் பிடிப்பது இவையெல்லாவற்றையும் சொல்வதற் குக்கூட அருவருப்பாக இருக்கிறது.

மனிதர்களுக்கு அடையாளமே ஆறாவது அறிவுதானே!

இவன் வந்து மோட்சத்திற்கு டிக்கெட் கொடுப்பவன். இவன் ஆன்மிகப் பாதையில் கதவைத் திறந்து வைத்து, நம்மையெல்லாம் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்பவன் என்றால், படித்தவனுக்கு அறிவு இருக்க வேண்டாமா? அரசியல்வாதிகள் அவர்களின் பின்னால் செல்கிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்வது என்பதைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?

இந்த நாடு அறிவுள்ள ஒரு நாடாக இருந்தால், மனிதர் கள் வாழக்கூடிய நாடு; மனிதர்களுக்கு அடையாளம் என்ன? மனிதர்களுக்கு அடையாளமே ஆறாவது அறிவு தானே! அந்த அடிப்படையில், சாமியார்களைப்பற்றி பேச வேண்டுமானால், வண்டி வண்டியாக செய்திகள் உள்ளன. அய்யா நந்தலாலா போன்றவர்கள் இதுபோன்ற செய்தி களை எடுத்துக்கொள்ளவேண்டும் கொஞ்ச நாள்களுக்கு. முற்போக்கு அமைப்பினர், ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும். இதுபோன்ற மூட நம் பிக்கை ஒழிப்பைத் தவிர, வேறொன்றும் சமுதாய திருப் பணி இருக்கமுடியாது. இது பொதுப்பணியாகும்.

நம் தாய்மார்கள் ஏமாந்துபோகிறார்கள்; ஜோசியக்காரர் களிடமும், மந்திரவாதிகளிடமும் ஏமாறுகிறார்கள்.


இந்தக் கூட்டம் சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில்; இன்னொரு ஜாக்கிரதை மந்திரவாதிகளிடம் ஜாக்கிரதை; தினம் தினம் ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்று எத்தனை முறை சொல்லவேண்டியிருக்கிறது. கடைசியாக, அரசியல்வாதிகள் ஜாக்கிரதை என்று சொல்லக்கூடிய சூழ்நிலை வந்துவிடும்.
ராம்பால் என்று சொல்லக்கூடிய அந்த சாமியாரைப் பற்றி சொல்லும்நேரத்தில், இந்து நாளிதழில் கார்ட்டூன்கள் போடப்பட்டிருக்கின்றன. அதனை நம்முடைய மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழிலும் வெளியிட்டிருக்கிறோம்.

காகபட்டர் வேடத்தில் அண்ணா!

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் நடித்த அண்ணா அவர்கள் காகபட்டராக வருவார். அந்தப் பாத்திரத் தில் மிக முக்கியமான அற்புதமான பணியைச் செய்வார். ஒரே ஒரு வசனம்மூலமாக, இரண்டு இனம் - ஆரியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? என்பதை எடுத்துக்காட்டுவார்.

புலித்தோல் போட்டுக் கொண்டு காகப்பட்டர் உட் கார்ந்திருப்பார். சீடன் கங்குபட்டர், என்ன குருஜி இது முடியுமா? சிவாஜி என்னமோ சொல்லிவிட்டுப் போறாரே, அது முடியுமா? என்று கேட்பார்.

டேய் மண்டு! நான் உட்கார்ந்திருக்கிறேனே இது என்ன தெரியுமா? என்று கேட்பார்.

ம், தெரியுமே, புலித்தோல் என்பார் சீடர்.

ஏண்டா, புலித்தோல் மேல் உட்கார்ந்திருக் கிறேன் என்பது தெரியும். இந்தப் புலியை அடிச்சவனுக்கும், நமக்கும் சம்பந்தம் உண்டா? அதை எண்ணிப் பார்த்தாயா? இதுதாண்டா நம்மளோட சாமர்த்தியம் என்று வல்லவ னுக்குப் புல்லும் ஆயுதம் என்று தர்ப்பப் புல்லை ஆட்டிக் காட்டுவார்.

இன்றைக்கு இவ்வளவு கொடுமைகள் நடந்திருப்ப தினால்தான், சட்டம் பாய்ந்திருக்கிறதே தவிர, அவர் தண்டனையில் இருந்து தப்பிவிடுவார். அப்படியே மீறி சிறைச்சாலைக்குச் சென்றாலும், அதிகாரிகளை, அதிகாரம் செய்துகொண்டிருப்பார்.


22.11.2014  The Hindu news


A Haryana Police spokesperson said seizure included three .32 bore revolvers, 19 air guns, two double-barrel 12 bore guns, two 315 bore rifles, 103 live cartridges and a chilli grenade.
The team also found acid syringes, sticks, 20 pairs of black dresses and two tanks containing 800 litres of diesel. A pregnancy test strip was found in the room adjacent to Rampal’s ashram. The police also found petrol bombs, packets of chilli powder, a catapult, two empty cartridges of 12 bore and a large number of mattresses.
Meanwhile, Rampal spent a sleepless night in the police lock-up at the Civil Lines police station in Hisar.
Police sources said he was given a durrie and blanket. He refused dinner and only had tea in the morning.
Along with Rampal, nine of his associates have also been remanded in police custody by a local court to help in the investigations. The police are trying to establish if there was any truth in Rampal’s claim before the High Court that he too was held hostage in the ashram.
Cameras in toilets
The ashram was fully evacuated on Thursday. An unconscious woman was found locked in a bathroom. The spokesman said the search operations would continue for a few more days.
The police team has divided the 12-acre ashram into six parts for the purpose of carrying out searches. They are also trying to find out if there are some underground bunkers in the campus.
Sources in the police said Rampal’s own residential unit, which had air-conditioned bathrooms, modular kitchens and a swimming pool, was still being screened.
The police have found cameras in some of the women’s toilets and are trying to establish if footage from these was being viewed in Rampal’s private chambers.

ஏராளமான துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங் கள்; பயங்கரவாதி எங்கே இருக்கிறான்? தீவிரவாதம் எங்கே இருக்கிறது? இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தோம், தடை செய்தோம் என்று பெருமை யடித்துக் கொள்கிறீர்களே, அகதிகளாக வந்திருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களை இன்னமும் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறீர்களே? ஆனால், இப்படிப்பட்ட சாமியார்கள் ஒரு போட்டி அரசாங்கத்தை, ஒரு தனி ராஜ்ஜியத்தை, காவி ராஜ்ஜியத்தை நடத்துகிறார்களே, அவர்கள் எல்லாம் இருக்கவேண்டிய இடம் எது? அவர்களுக்காகவே ஒரு தனி சிறைச்சாலை வேண்டும். மற்ற சிறைச்சாலைகளில் போட்டால், சாமியார்கள் எல்லோரையும் கெடுத்துவிடுவார்கள். ஆகவேதான், சாமியார்களை கவனிக்கவேண்டும் என்பதற்காக ஒரு தனிப் பிரிவு வரவேண்டாமா? தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதற் கென்று க்யூ பிராஞ்ச் உள்ளதுபோல; தீவிரவாதிகளின் தொழிற்சாலையான, தீவிரவாதிகளை உற்சாகம் செய்யக் கூடிய சாமியார்களைக் கவனிக்க ஒரு தனி பிரிவு வேண்டும். இவர்கள் சமுதாய விரோதிகள், தேச விரோதிகள், மனித நேய விரோதிகள் இவை அத்தனையும் சேர்ந்ததுதான் இவர்கள்.


நமக்கும், எருமைமாட்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?


சாமியார்களின் கையில் மாட்டிக்கொண்ட அறிவியல் என்ன பாடுபடுகிறது என்பதைப் பாருங்கள். சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் என்பதைவிட, தவறான முறையில் பயன்படுத்துவோருக்கு அந்தக் காவிகள் பாதுகாப்பில்லையா? ஆன்மிகம் போர்வையாக அமைய வில்லையா? பக்தி போதையாக அமையவில்லையா? நண்பர்களே நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். இதற்கப் புறமும் சாமியார்களை நம்புவது, இதற்கப்புறமும் மதத்தை நம்புவது, இதற்கப்புறமும் கடவுளை நம்புவது என்றால், நமக் கும், எருமைமாட்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நம்மூர் கடவுள்களிடம் பார்த்தீர்களேயானால்,  சூலா யுதம், கதை என்று பழைய ஆயுதங்களைத்தான் வைத் திருப்பார்கள். ஆனால், நம்மூர் நவீன சாமியார்கள், கடவுள் அவதாரங்கள் எதை வைத்திருப்பார்கள் என்று சொன்னால், நவீன ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் வைத்திருக் கிறார்கள்.


எனவேதான், மணிக்கணக்கில் சாமியார்களைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


அறிவுக்கரசு எழுதிய புத்தகத்தில்...

இங்கே பேசிய நம் செயலவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்கள் நித்தியானந்தாவைப்பற்றி சொன்னார். அவர்தான் அதிகாரியாக இருக்கும்பொழுது, ஜப்தி செய்துகொண்டு வந்தார். இவர் மட்டும் அதிகாரியாக இல்லை என்றால், மற்ற அதிகாரிகள் சாமியார் கிட்டே செல்வதற்குக் கூட யோசிப் பார்கள். ஜப்தி செய்த பிறகுதான், அபராதத்தையே வசூல் செய்ய முடிந்தது. அதைப்பற்றிய விவரங்களை அவரு டைய 75 ஆண்டுவிழா, பவழ விழாவையொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்; அதில் அந்த விவரங்களை யெல்லாம் எழுதியிருக்கிறார்.


எதற்காக இதனை சொல்கிறோம்? ஏன் இதனை சொல் கிறோம்? நாங்கள் ஏற்கெனவே எச்சரிக்கையாக இருக்கக் கூடியவர்கள். எங்களுக்காக அல்ல இது; மற்றவர்களுக்காக. அதிலும் குறிப்பாக, நம்முடைய நாட்டில், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறது அல்லது பாலியல் கொடு மைக்கு ஆளாகிறார்கள் என்றால், அந்தப் பாலியல் கொடு மைக்கு ஆளாவதைத் தடுக்கவேண்டும் என்று நினைத் தால், வெறும் இளைஞர்களை மாத்திரம் நீங்கள் குறி வைக் காதீர்கள்; யார் தவறு செய்தாலும், தவறு தவறுதான்.
தண்டனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுதான் பகுத்தறிவுவாதியினுடைய அணுகுமுறை. அதில் சுய மரியாதைக்காரர்களாகிய நாங்கள் யாரும் சமரசம் செய்துகொள்ளவில்லை.


யாரும் மறுக்க முடியாது என்பதற்கு ஆதாரங்கள்தான் இவை!

ஆனால், இன்றைக்குத் தீவிரவாதம் எங்கே இருக்கிறது? கருப்புப் பணம் எங்கே பதுக்கப்பட்டிருக்கிறது? கற்பழிப்பு கள் என்று சொல்லக்கூடிய பலவந்தப் புணர்ச்சிகள், பாலியல் வன்கொடுமைகள் எங்கே தலைவிரித்தாடு கின்றன? என்று சொன்னால், இவை அத்தனையும் சாமியார் மடங்களில், காவிக் கூட்டத்திற்குள்ளே இருக் கிறது என் பதை யாரும் மறுக்க முடியாது என்பதற்கு ஆதா ரங்கள்தான் இவை எல்லாம்.


ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும், இந்த உரை ஒலிநாடாவாகவும், புத்தகமாகவும் வரும். இவை எல்லாம் பதிவு செய்யப்படவேண்டும். இந்த உரையில் சில பகுதி களை எடுத்து, துண்டறிக்கையாக அச்சடித்து, மற்றவர் களிடமும், வீடு தவறாமலும் அதனைக் கொடுக்கவும்; நம்முடைய இளைஞர்கள் அதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி; ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றி! மழை வரும், மழை வரும் என்று நினைத்துக்கொண்டிருந்தாம், மிகவும் வசதியாக, இந்த சாமியார்கள் விஷயம் நன்றாகப் பரவட்டும் என்று இயற்கைகூட நன்றாக ஒத்துழைத்திருக்கிறது என்பதை சொல்லி, உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி, விடை பெறுகிறேன் வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வீழ்க மூடநம்பிக்கை!!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

                               ---------------------------”விடுதலை”12-01-2015
Read more: http://viduthalai.in/page-4/94325.html#ixzz3OcNtHqWr

4 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கடவுள்

கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்றையும் காணோமே - ஏன்? உயிரோடு இருக் கிறார்களா? செத்துப் போய் விட்டார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/94434.html#ixzz3OnUKTz57

தமிழ் ஓவியா said...

அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?


முருகன் கோயிலுக்கு அழைக்கிறார்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இப்படி அதிகார பூர்வமாக சுற்றறிக்கை விடுவது சட்டப் படி சரிதானா? மதச் சார்பற்ற அரசா? இந்து மதச் சார்பு அரசா?

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்து மதக் காரர்கள் மட்டும்தான் பணி யாற்றுகிறார்களா? ஒருக்கால் இந்து மதக்காரர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதுகிறார்களா?

இதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் மேலாண் இயக்குநரும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் கூண்டில் ஏறிப் பதில் சொல்ல வேண்டாமா?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக வந்ததும் அரசு அலு வலகங்களில் உள்ள கட வுளர் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார் பின்மையைக் காப்பாற்றினார்.

அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?

அண்ணாவுக்கு நாமம் என்று முதல் அமைச்சர் உட்படச் சொல்லுவதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது - அதாவது அண்ணாவின் கொள்கைக்கு நாமம்! புரிகிறது! புரிகிறது!!

அ.இ.அ.தி.மு.க. அரசில் பணியாற்றும் மற்ற மதக்காரர்களின் நிலை என்ன? வேறு மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் மத சம்பந்தமான விழாவில் பங்கேற்க இப்படி சுற்றறிக்கை வெளியிட்டால் ஏற்றுக் கொள்வார்களா?

அரசுப் பணியாளர்கள் மத்தியில் வேண்டாத விகற்பத்தை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே ஏற்படுத்தலாமா?

எல்லா வகையிலும் ஆட்சி சீர் கெட்டுப் போய் விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/94437.html#ixzz3OnUZclvM

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn