Search This Blog

19.1.15

தமிழர் திருநாளா? திராவிடர் திருநாளா?திராவிடன் என்று சொல்லுவதேன்?

பார்ப்பானுக்குச் சூத்திரன் அடிமையாக இருக்கவேண்டும் என்று சொன்னவன் கடவுளா?



திராவிடன் என்று சொல்லுவதேன்?

சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் விழாவில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் எழுச்சியுரை


சென்னை, ஜன.18- பார்ப்பானுக்குச் சூத்திரன் அடிமை யாக இருக்கவேண்டும் என்று சொன்னவன் எல்லாம் கடவுளா? என்று பகுத்தறிவு, இனமான கேள்வியை எழுப்பி னார் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன்.

16.1.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:

என் உரையைத் தொடங்குகிறபொழுதே இது தமிழ்ச் சமுதாயம் என்கிற காரணத்தினால், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி நான் என் உரையைத் தொடங்க விரும்புகின்றேன். இந்த சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, தலைமையேற்று இங்கே கருத்துள்ள உரையாற்றியுள்ள என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களே,
எழுச்சியோடு உரையாற்றி இருக்கின்ற சுப.வீரபாண்டி யன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றியிருக்கின்ற என்னுடைய அன்பிற் குரிய பேராசிரியர் முனைவர் மங்களமுருகேசன் அவர் களே, அறிமுக உரையாற்றி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே 

 எனக்கு நீண்ட காலமாகவே இன்னொரு இனத்தின்மீது காய்ச்சல் உண்டு!

இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய நண்பர்கள் எழுத்தாளர் மதிமாறன் அவர்களே, சூழலியலாளர் யோகநாதன்அவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்ற பெரியோர்களே, தாய் மார்களே, நண்பர்களே, திராவிடர் கழகத்தினுடைய நிர்வாகிகளே, உண்மையாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

நேற்றைய தினம் எனக்கு காய்ச்சல். எனக்கு நீண்ட காலமாகவே இன்னொரு இனத்தின்மீது காய்ச்சல் உண்டு. நேற்றைய தினம் வந்த காய்ச்சல் எனக்கு வந்த காய்ச்சல்.

அந்தக் காய்ச்சல் இன்று விலகுமா? விலகாதா? என்று மதியம் ஒரு மணிவரையில் பார்த்து, காய்ச்சல் விட்டது; ஆளை விடு என்று நான் இந்த விழாவிற்கு வந்திருக்கின்றேன்.

கலி.பூங்குன்றன் அவர்களும், பேராசிரியர் அவர்களும், நீங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொண்டால் போதும், வர முடியாவிட்டாலும்கூட, எங்களுடைய தலைவர் வீரமணி அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு ஆறுதலாக சொல்லியனுப்பினர். அப்படி அவர்கள் எனக்கு சொல்லியனுப்பினாலும்கூட, கடந்த வாரம்  கலைஞரோடு கலந்துகொண்டு நான் பேச ஆரம்பித்தேன்; சொற்கள் வரவில்லை, இருமல்தான் வந்தது. தொடர்ந்து ஒரு அய்ந்து நிமிடம் இருமி விட்டு, கலைஞரிடத்தில், இதற்குமேல் இரும முடியாது என்று விடைபெற்றுக் கொண்டேன். அதன் காரணமாக, இன்றைக்கும் ஏமாற்றம் வருமோ என்ற ஒரு அய்யம் உண்டு. இருந்தாலும், பெரியார்தான் நம்மைப் பேசவே வைத்தவர். பெரியாருடைய உணர்வுதான் இந்த எழுச்சியை நமக்குத் தந்தது. பெரியாரோடு நினைவோடு சேர்ந்து நடக்கின்ற இந்தப் பொங்கல் விழாவில், நம்மு டைய புகைச்சல் எல்லாம் தீரும் என்கிற நம்பிக்கையோடு நான் இங்கே வந்து இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன்.

திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?

பொதுவாக, தமிழருக்கு, தமிழர்கள் நினைவே கூடாது; உங்களுக்கெல்லாம் அந்த நினைவு இருப்பதில்லை; நீங்கள் இருக்கின்ற இடம் அந்த நினைவோடு உள்ள நாற்காலிகள். அங்கே அமர்ந்திருக்கின்றபொழுது அந்த நினைவு இருக்கும். ஆனால், சமுதாயத்தில் தமிழர்கள் என்று சொன்னால், நான் தமிழன் என்கிற நினைவு இருப்பதில்லை. இங்கேகூட நண்பர்கள் எடுத்துக்காட்டுகின்ற பொழுது, தமிழ்த் திருநாளே, திராவிடர் திருநாளா? திராவிடர்கள் என்கிற பெயராலே இது அழைக்கப்படலாமா? என்றெல்லாம் கேட்கின்றார்கள் என்கிற கருத்தைச் சொன்னார்கள். இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னார்கள்.

நான் எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையில் சொல்கிறேன், தமிழர் என்று சொன்னால், தமிழ் மொழிப் பற்று உள்ளவன். திராவிடர் என்று சொன்னால், தமிழ் மொழிப் பற்றோடு சொரணையும் உள்ளவன். மொழிப் பற்று மட்டுமல்ல, இனப் பற்றும் சேர்ந்தவன் திராவிடன். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தியதற்குக் காரணம், உணர்வு வரவேண்டுமானால், நாம் ஆரியர் அல்ல என்கிற உணர்வு நம் மனதில் பதியவேண்டும் என்று சொன்னார்.

இறையன்பு, நம்முடைய கடமையை பல நேரத்தில் மறக்க வைத்துவிடுகிறது
தமிழ் மொழிப் பற்று நீண்ட காலமாக இருக்கிறது. தமிழ் மொழிப் பற்று கம்பருக்கு இருந்தது; சேக்கிழாருக்கு இருந் தது; பாரதிக்கு இருந்தது; பாரதிதாசனுக்கு இருந்தது. தமிழ்ப் பற்று என்பது, இது நம்முடைய தாய்மொழி என்ற உணர் வோடு உள்ள பற்று மட்டுமல்ல, இந்தத் தாய்மொழி தமிழை அழித்தால், தமிழ் உணர்வை அழிக்கலாம் என்று நீண்ட காலமாக ஆரியர்கள் பல்வேறு சூழ்ச்சி செய்தார்கள். அந்த சூழ்ச்சியில் இருந்து நம்மை மீட்பதற்கு எந்த முயற்சியும் நடைபெறவில்லை. உணர்ந்தார்கள் பல தமிழ் அறிஞர்கள்; வடலூர் வள்ளலார் உணர்ந்தார்; ஆனால், ஆரியத்தி லிருந்து நம்மை மீட்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வில்லை. அவரால் முடியவில்லை. அவர் பக்தர்; இறை யன்பு, நம்முடைய கடமையை பல நேரத்தில் மறக்க வைத்துவிடுகிறது. செயலாற்ற முடியாமல் தடுக்கிறது.

வடலூர் வள்ளலார் தந்தை பெரியாருடைய முற் போக்குச் சிந்தனைகளைப் பலவற்றை ஏற்றுக்கொண்டவர் தான். உணர்ந்தவர்தான். இவர் சொல்லி, அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை உணர்ந்தவர்தான். ஆனால், வடலூர் வள்ளலார் இறைப்பற்றின்மீது ஆழ்ந்து போய் விட்ட காரணத்தினால், மனிதநேயப்பற்றுகூட அவருக்கு இருந்தாலும்கூட, மனித உரிமைக்குப் போராடுகின்ற இடத்திற்கு அவர் வரவில்லை.

இந்தியாவிலேயே, இங்கே பேசிய நண்பர் ஒருவர் சொன்னார், நான் நினைக்கிறேன் மதிமாறன் என்று;  டாக்டர் அம்பேத்கர், பெரியார், காந்தியடிகள் ஆகிய மூன்று பேரையும் ஒப்பிட்டுப் பேசினார்.

டாக்டர் அம்பேத்கர் இந்தியா முழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை எண்ணி அரசியல் நடத்தியவர்.

காந்தியடிகள் சுயமரியாதையைப்பற்றி கவலைப்படவில்லை
தந்தை பெரியார் அவர்கள் தமிழர் அனைவரையும் எண்ணி அரசியல் நடத்தியவர்.

தமிழர்களை எண்ணி நடத்துகின்றபொழுது ஏற்படு கின்ற அதே உணர்வு, தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி அகில இந்திய அளவில் எண்ணுகின்றபொழுது,  அதே கண் ணோட்டம் ஏற்படுவதில்லை. உத்தமர் காந்தியடிகள்கூட, அவருக்கு சுயராஜ்ஜியம் அடைவதுதான் அவரது லட்சியம். அதனால், சுயமரியாதையைப்பற்றி அவர் கவலைப்பட வில்லை.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆரியம் - திராவிடம் என்று பிரித்துப் பேசுவதில், அவருக்கு லாபம் இல்லை; அவருடைய கொள்கைக்கு வெற்றியில்லை. அவருடைய கொள்கைக்கு வெற்றி, இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரே இனம்; அந்த இனத்தினுடைய உரிமைக்கு வாதாடவேண்டும்; அதனை நிலைநாட்டவேண்டும். அரசியல் சட்டம் இயற்றுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்த பொழுது, அந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, எஸ்.சி., எஸ்.டி., என்று அழைக்கப்படக்கூடிய மக்களுக்கு உரிமை சாசனமாக அரசமைப்புச் சட்டத்தை இயற்றித் தந்தார்.

அம்பேத்கர் இல்லையென்றால் நாமெல்லாம் ஒடுக்கப்பட்டு இருப்போம்!

டாக்டர் அம்பேத்கர் மட்டும் பிறந்திருக்காவிட்டால், நாமெல்லாம் செத்துப் போயிருப்போம். அதாவது அரசியல் சட்டத்தை அவர் இயற்றவில்லை என்றால், கருத்துக்களே வெளிப்பட முடியாத நிலைமையில், ஒடுக்கப்பட்டு இருப் போம். இன்னும் சொல்லப்போனால், வைதீகக் கலாச் சாரத்திற்கு முடிவு கட்டுவதில், பெரியாரும், அம்பேத்கரும் ஏறத்தாழ ஒரே விதமான கருத்துள்ளவர்கள்.

பெரியார் அவர்கள், அம்பேத்கர் அவர்கள் இறந்த பொழுது, ஒரு பெரிய அறிவாளியை இழந்துவிட்டோம். நான் என்னென்ன கருதினேனோ, அதையெல்லாம் கருதி செய்தவர் அம்பேத்கர். அடித்தட்டு மக்களைப்பற்றி எண் ணுவதில், எனக்கும், அம்பேத்கருக்கும் அவ்வளவு உடன் பாடு; அப்படிப்பட்ட ஒரு பெரிய அறிவாளியை, தத்துவ ஞானியை நாம் இன்றைக்கு இழந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டார்.

பெரியார் மட்டும் வரவில்லை என்றால், ஒருவிதமான அடிமை மனப்பான்மை, ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை எனக்குச் சொந்தமாகி இருக்கும்

உள்ளபடியே அகில இந்திய அளவிலே அப்படிப்பட்ட ஒரு தலைவர் கிடைத்திருக்க முடியாது; தமிழ்நாட்டில் பெரியார் கிடைத்தது எப்படி வியப்போ, தமிழ்நாடு ஆழ்ந்த இறைப்பற்றில் மூழ்கிய ஒரு பகுதி. வைதீகத்திற்கு அடி பணிந்த ஒரு பகுதி. சமஸ்கிருதத்தைப் போற்றி வளர்த்த ஒரு பகுதி; பார்ப்பான் காலில் விழுவதைப் போட்டி போட்டுக் கொண்டு விழுந்த ஒரு பகுதி; சங்கரரை, ராமானுஜரை பாராட்டி பாராட்டி, தவப்புலமை அதே விதமான பக்தி உடையவர்களைகூட ஏற்றுக்கொள்ளாத ஒரு பகுதி. எனவே, அப்படிப்பட்ட அந்த சூழ்நிலையில், நான் இன்றைக்கும்கூட எண்ணிப் பார்க்கிறேன். நாம் மனிதனாக இன்றைக்கு வாழுகிறோம் என்றால், நானும், வீரமணியும், பக்கத்தில் இருக்கின்ற நம்முடைய சுப.வீ. அவர்களும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மனிதர்கள் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றால், அந்த நம்பிக்கை வந்ததே பெரியார் இருந்த காரணத்தினால்தான். பெரியார் மட்டும் வரவில்லை என்றால், நாம் சூத்திரன் இல்லை என்று சொன்னாலும்கூட, ஒருவிதமான அடிமை மனப்பான்மை, ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை எனக்குச் சொந்தமாகி இருக்கும்.
என்னை ஆண்டவன் இப்படி படைத்துவிட்டான் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரனாக, முட்டாளாக, இன்னும் சொல்லப்போனால், அறிவிலியாக நான் ஆகியிருப்பேன். ஆண்டவன் இப்படி என்னைப் படைத்தான் என்பதையே ஒப்புக்கொள்ளாத காரணத்தினால்தான், நான் மனிதனாகி விட்டேன்.

நான்கு வருண ஜாதியை ஆண்டவன் படைத்தான் என்று சொல்கிறார்களே, எவ்வளவு அறிவு இல்லாதவர் களின் கற்பனையாக இருந்தால், அப்படி ஒரு கருத்து வரும்.

பார்ப்பானுக்கு சூத்திரன் அடிமையாகவே இருக்கவேண்டும் என்று சொன்னவன் கடவுளா?

கடவுள் நான்கு ஜாதிகளைப் படைப்பானா? நான்கு ஜாதிகளுக்கு இடையில் வேற்றுமையை வைப்பானா? மனித குலத்தை இப்படி பிரித்து வைப்பவன் பெயர் கடவுளா? அவனை கடவுள் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? இன்னும் சொல்லப்போனால், அதில் பார்ப்பானுக்கு சூத்திரன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று சொன்னவன் கடவுளா? அவனை கடவுள் என்று சொல்கின்றவர்கள் அறிவுள்ளவர்களா? இந்த எண்ணங்களை எல்லாம் நம்மிடத்தில் உண்டாக்கி, அந்த சிந்தனைகளைத் தூண்டியவர் தந்தை பெரியார்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், நான் படிக் கின்றபொழுது, மாணவனாக இருக்கின்றபொழுது, மயிலாடு துறையில், 5, 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கின்ற பொழுது, மகா தானத் தெரு, பட்டமங்கலத் தெரு இந்த இரண்டு தெருக் களிலும் முழுவதும் அக்கிரகார வீடுகள். இடையில், மூன்று, நான்கு சத்திரம். அந்தச் சத்திரம் எல்லாம் பிராமண இளை ஞர்களுக்காக, அவர்கள் வேதம் படிப்பதற்காக உள்ள சத்திரங்கள்.

எந்தத் தமிழ் மன்னன் காலத்திலோ, ராஜராஜனுக்குப் பின்னால், எந்த மன்னன் காலத்திலேயோ ஏற்படுத்தப்பட்ட சத்திரங்கள். ஒரு 40, 50 பேர் நாள்தோறும் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டு விட்டு வேதம் ஓதுவார்கள். அந்தத் தெருவில், வருகிற, போகிற நான்கு பேரில், இரண்டு பேர் எப்பொ ழுதும் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள். வக்கீலோ, டாக்டரோ, ஒரு என்ஜினியரோ, ஒரு தாசில்தாராகவோ இருப்பார்கள்.
வெளியூரில் இருந்து வருகிறவர்கள் எல்லாம், அவர் களைப் பார்க்கின்றபொழுது, சாமி, சாமி என்று காலில் விழுவார்கள். அவன் வெளியூரில் இருந்து அவர்களைப் பார்க்க வரும்பொழுதே, அவர்களுடைய காலில் விழு கிறார்கள். ஏண்டா, சாமி சாமி என்று காலில் விழுகிறீர்கள் என்று கேட்டால்,

பார்ப்பான் நம்மை எவ்வளவு

கேவலமாகக் கூப்பிட்டான்!

அந்த சாமிதாங்க எங்க வக்கீல் என்கிறான். அந்த சாமிதாங்க நம்மூரில் என்ஜினியர் என்கிறான். அந்த சாமிதாங்க நம்மூரில் தாசில்தார். அவர்களைப் பார்க்க வந்தேன், அவர்களுடைய காலில் விழுகிறேன் என்றான்.
அவர்களுடைய நினைப்பே, அய்யரைப் பார்த்தால், சாமியைப் பார்க்கிறவன்; சாமியைப் பார்த்தால், அய்யரைப் பார்க்கிறவன். கடவுளுக்கும், பார்ப்பானுக்கும் வேற்றுமை இல்லாத ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாயிற்று. இல்லையென்றால், தமிழன் தன்னுடைய சொத்துக் களையெல்லாம் பார்ப்பானுக்கு எழுதி வைத்திருப்பானா?

இன்றைக்கு இருக்கின்ற பார்ப்பான்கள் இல்லை; இவர்கள் எல்லாம் ஓட்டலில் இலை எடுக்கின்ற பார்ப்பான். அன்றைக்கு இருந்த பார்ப்பான்கள்பற்றி சொல்கிறேன். அன்றைக்கு இருந்த பார்ப்பான், எவ்வளவு பெரிய வைதீகக் கோட்பாட்டில் உயர்ந்த நிலையில், ஏ, சூத்திரா! என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தான். எவ்வளவு கேவல மாகக் கூப்பிட்டான். எவ்வளவு பெரிய பணக்காரப் பிள்ளை யாக இருந்தாலும், முதலியாராக இருந்தாலும், ஏ கலியாண சுந்தரம், ஏ குஞ்சிதபாதம், ஏ ராமசாமி! என்று கூப்பிடுகின்ற இடத்தில் அவன் இருந்தான். அவனைப் பார்த்து, சாமி, என்னங்க! என்று கேட்கின்ற இடத்தில் நாம் இருந்தோம்.

என்னை மானம் உள்ளவனாக ஆக்கியவர்
தந்தை பெரியார்!

இந்த ஒன்றைப் பார்த்தது போதாதா பெரியாருக்கு. வேறு எதுவும் வேண்டாம்; என்னை மானம் உள்ளவனாக ஆக்கியவர் தந்தை பெரியார். அந்த ஒரு காரணத்திற்காக என்னுடைய காலத்தையெல்லாம் அவருக்காகவே கழிப்பேன். தன்மானம் தந்த தலைவர் பெரியாரை, எதிர்ப்பது என்பது பெருமையல்ல.

தமிழனுக்கு மானம் இல்லை. இன்றைக்குக்கூட, சில பேர் அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று, நண்பர் வீரமணி பேசுகின்றபொழுதும், மற்றவர்கள் பேசுகின்றபொழுதும் இங்கே சொன்னார்கள். அதற்கு என்ன காரணம்? மானத்தை விட்டுவிட்டு, மற்றவைபற்றி பேசுகிறான். தன்மானம் தந்த தலைவர் பெரியாரை, எதிர்ப்பது என்பது பெருமையல்ல. இந்த அடிப்படையை இழந்துவிட்டு, வேறு எதை சாதிக்கப் போகிறோம். நான் இன்னும், 5 ஆண்டு, 6 ஆண்டுகள் உயிரோடு இருக்கலாம்; அப்படி இருக்க முடிய வில்லை என்றாலும், அதைப்பற்றி நான் கவலைப்படு வதில்லை. பெரியார் 95 வயதுவரை வாழ்ந்தார் என்றால், அதனை நான் எட்டிப் பிடிக்கின்ற இடத்தில் இருக்கிறேன்.

ஒவ்வொரு தமிழனும் தன்னைத் தமிழனாக்கிக் கொள்ளவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தான் ஒரு திராவிடன் என்று உணரவேண்டும். ஒவ்வொரு தமிழனும் ஜாதி எனக்கில்லை என்று ஒதுக்கவேண்டும். ஒவ்வொரு தமிழனும் மனவேற்றுமையை மதிக்கவே கூடாது. ஒவ்வொரு தமிழனும் கடவுளைப்பற்றி சொல்லப்பட்ட எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு தமிழனும் இந்த நாட்டில், மேல்தட்டு மக்களாக சில பேரை மனதில் பதிய வைத்துக்கொள்ளக்கூடாது. அடித்தட்டு மக்கள் நம்மவர்கள், நம் உடன்பிறப்பு, ஆதிதிராவிடர் நம்மு டைய உடன் பிறப்பு, ஊரில் இருக்கின்ற வெட்டியான் நம்மு டைய உடன் பிறப்பு என்கிற அந்த உணர்வு நமக்கு வேண்டும்.

பேராசிரியர் நமச்சிவாயனார் அவர்கள் தொடங்கி, முதன்முதலாக, பொங்கல் திருநாள்தான் நம்முடைய திருநாள் என்று கட்டுரை எழுதினார்
எனவே, அதனை அடிப்படையாக வைத்து நீங்கள் சிந்திப்பீர்களேயானால், இந்தப் பொங்கல் விழா ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பாக, பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஏனென்றால், நமச்சிவாயம் என்று பல பேர் இருந்தார்கள்; பேராசிரியர் நமச்சிவாயனார் அவர்கள் தொடங்கி, முதன்முதலாக, பொங்கல் திருநாள்தான் நம் முடைய திருநாள் என்று கட்டுரை எழுதினார். அந்தப் பொங்கல் நாளினை தமிழ்த் திருநாள் என்று நாம் கொண் டாடவேண்டும்; தமிழ்த் திருநாளில் ஒருவரை ஒருவர் வாழ்த்தவேண்டும். மற்ற பண்டிகைகள் எல்லாம் நம்மு டைய சமுதாயத்தில் இடம்பெற்றுவிட்டாலும்கூட, அவை கள் எல்லாம் தமிழோடு, உணர்வோடு கலந்தது அல்ல. தீபாவளியாக இருக்கட்டும்; சரசுவதி பூஜையாக இருக் கட்டும்; வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அக்கிர காரத்தில் உள்ள பிராமணனுடைய கை படாத ஒரு பண்டிகை இந்த நாட்டில் கிடையாது. 60 ஆண்டுகளுக்கு பெயர் ஏன் வைத்தான் தெரியுமா? 60 ஆண்டுகளுக்குப் பெயர் வைத்துவிட்டால், எந்த ஆண்டில் எந்தக் காரியம் நடைபெற்றாலும், அது சாஸ்திரபூர்வமானது என்று அவன் சொல்வான்.

அந்த ஆண்டு பெயர்கள் வடமொழியில் சொல்லி விட்ட காரணத்தினால், கேட்பவர்களின் மனதிற்கு அது ஏதோ சாஸ்திரத்தில் உறுதி செய்யப்பட்டதுபோல தெரியும்.

உழைப்பாளியை மதிக்கின்ற விழா; உழவுக்குப் பெருமை சேர்க்கின்ற விழா நம்முடைய பொங்கல் விழா!

ஆனால், நம்முடைய பொங்கல் விழா என்பது, இயற்கையோடு இயைந்த விழா; உழைப்பாளியை மதிக் கின்ற விழா; உழவுக்குப் பெருமை சேர்க்கின்ற விழா; ஊராருடைய பசி தீர்க்கின்ற விழா; எல்லோரும் மகிழ்கின்ற விழா; ஆணும், பெண்ணும் கூடி கலந்து பல்வேறுவிதமான களியாட்டங்களில் ஈடுபடுகின்ற விழா; கிராமத்து மக்களின் மனதில் ஒரு புதிய பூரிப்பு தோன்றுகின்ற விழா; நம்முடைய விழா இயற்கைக் கதிரவனுடைய ஒளியைப் பதிக்கின்ற விழா. எனவே, இது தமிழர்களுடைய விழா! அவனுடைய சங்கராந்தி என்பது சூரியனுடைய கதைகளைச் சொல்லி, அந்தப் பெயராலே நடைபெறுவது. சூரியனை எவன் சுற்றி வருகிறான், அவன் எந்தத் தேதியில் எங்கே போகிறான் என்பதெல்லாம், ஒருவேளை அது உண்மையாக இருந் தாலும்கூட, அதற்கொன்றும் அர்த்தம் கிடையாதே? அதற்கொன்றும் விளைவுகள் கிடையாதே? வெயில் அதிகம் இருக்கும்; குறையும். அது ஒன்றுதான் அதனுடைய பயன். மழை வரும், வராமல் போகும் அதுதான் இயற்கை யினுடைய பலன். இன்னும் சொல்லப்போனால், நம்முடைய நண்பர் யோகநாதன் அவர்கள், ஏராளமான மரங்களை நடவேண்டும் என்றாரே, அப்படி ஏராளமான மரங்களை நட்டால், கதிரவனால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலை பெறலாம்.

அந்த மரம் நடுவது என்பது ஏதோ ஒரு சாதாரண காரிய மல்ல. நான் சொல்வதைத் தவறாக எண்ணாதீர்கள்; தந்தை பெரியார் ஊட்டிய தன்மான உணர்வும்; மரம் நடுகின்ற விழாவும் ஏறத்தாழ இரண்டும் சம தன்மை உடையது.

நம்முடைய மனதிலே தைரியம் ஏற்படுத்துவது பெரியா ருடைய உணர்வு. மரம் நடுகின்ற விழா, சமுதாயத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையை நிறைவு செய்வது.

வயிற்றுக்கு உணவு, வாழ்விற்குத் தேவையான அடிப்படை இவைகளைக் கொண்டது பொங்கல்!

எனவே, அப்படிப்பட்ட ஒரு சிறந்த பக்குவத்தை நாம் பெறுவதற்கு இந்தப் பொங்கல் விழா ஒரு காரணம்.

பொங்கல் விழாவிலேதான், உழவனும், உழத்தியும் சேர்ந்து விளையாடுவார்கள்; பெண்களும், ஆண்களும்கூட சேர்ந்து விளையாடுவார்கள். எல்லாவற்றையும்விட, ஒவ்வொருவரின் வீட்டிலும் பொங்கல் வைப்பார்கள். அதுவரைக்கும், அந்த ஏழைக் குடிசை வீட்டில் பொங்கலே அவன் பார்த்திருக்கமாட்டான். அன்றைக்குத்தான் கலயம் வாங்குவான்; அன்றைக்குத்தான் அடுப்பு வாங்குவான்; வாங்கமாட்டார்கள். அவர்களே செய்வார்கள். அரிசி இல்லாவிட்டாலும்கூட, கம்பு, கேழ்வரகை வைத்து பொங்கல் வைப்பார்கள்.

ஆனால், அதனுடைய அடிப்படை என்னவென்று கேட்டால், வயிற்றுக்கு உணவு, வாழ்விற்குத் தேவையான அடிப்படை இவைகளைக் கொண்டது பொங்கல். அந்தப் பொங்கல்தான் தமிழ்த் திருநாள் என்று நமச்சிவாயனார் அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அண்ணா அவர்கள் 1945, 1946 ஆம் ஆண்டிலே, கழகத்தின் சார்பாகவே, தமிழ்த் திருநாளைக் கொண்டாடினார்கள். அதற்குப் பின் அதை திராவிடர் திருநாள் என்று அண்ணா சொன்னார்கள். 


தந்தை பெரியார் அவர்களுக்குத் தொடக்கத்திலேயே அது திராவிடர் திருநாள்தான். அந்தத் திராவிடர் திருநாள்தான் நம் எல்லோருக்கும் இன்றைக்கு விழிப்பூட்டுகிறது, எழுச் சியூட்டுகிறது, நம்பிக்கைத் தருகிறது. திராவிடர் சமுதாயம் நம்மை வாழ்விக்கும் என்ற நம்பிக்கையை நான் தெரி வித்து, வாழ்க பொங்கல் என்று வாழ்த்தி, உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

                   -------------------- ”விடுதலை” 18-01-2015

52 comments:

தமிழ் ஓவியா said...

சாமியார்களுக்குத் துணை போகும் மத்திய பிஜேபி அரசு குற்றவாளி சாமியார் பற்றிய திரைப்படத்தை வெளியிட அத்துமீறி அனுமதி

தணிக்கைக் குழுத் தலைவர் உட்பட கூண்டோடு பதவி விலகல்

லாகூர், ஜன.18-_ பஞ்சாபில் மிகவும் சர்ச் சைக்குரிய ராம் ரஹீம் பாபா தானே தயாரித்து எடுத்த திரைப்படமான கடவுளின் தூதுவன் (மெசேன்சர் ஆப் காட்) என்ற படத்திற்கு தணிக் கைத்துறைத் தலைவர் அனுமதியின்றி மத்திய இணை அமைச்சர் ராஜ்ய வர்தன் ராதோட் உத்தர வின் பெயரில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர்.

இதனை அடுத்து அதன் தலைவர் லீலா சாம்சன் தன்னுடைய பத வியை உதறித்தள்ளினார். அவருக்கு ஆதரவாக தணிக்கைத் துறைக்குழு வில் 11 உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர்.

400க்கும் மேற்பட்ட சீடர்களை ஆண்மை நீக்கம் செய்த சாமியார்
பஞ்சாபில் உள்ள தேரா சச்சா சவுதா என்ற பிரிவைச் சேர்ந்த ராம் ரஹீம் பாபா தன்னை சீக் கிய மதகுருவான குரு நானக்கின் மறுபிறவி என்று அறிவித்துக் கொண்டு சட்லஜ் நதிக் கரையில் பெரிய மடம் ஒன்றைக் கட்டி அதில் வசித்து வருகிறார். இவ ருக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீடர் கள் உள்ளனர். இவர் தன்னுடைய சீடர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து அது தற்போது சிபிஅய் வசம் விசார ணையில் உள்ளது. கட வுளை அடைய உணர்ச்சி களை அடக்கவேண்டும் என்று கூறி 400க்கும் மேற்பட்ட ஆண் சீடர் களின் ஆண்மையை அகற்றிவிட்டதாக அவரு டைய சீடர்களுள் ஒரு வரான பரமீத் சிங் டில் லிகாவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சாமியார் தற்போது கடவுளின் தூதர் என்றபடத்தை எடுத்துள்ளார்.

இந்தப்படத்தில் தானே கடவுளின் தூது வனாக மாறி பல்வேறு பிறவிகளில் பிறப்பதா கவும் குருநானக்காகவும் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதனை சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சில நாட் களுக்கு முன்பு இந்தப் படத்திற்கு தணிக்கைத் துறைத் தலைவர் லீசா சாம்சன் அனுமதியளிக்க வில்லை. இந்த நிலையில் ராம்ரஹீமின் தீவிர பக்தரும் ஒலிம்பிக் பந்த யத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோட் தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட தணிக்கை துறையினரிடம் அனுமதி பெறாமலேயே சான்றிதழ் கொடுத்துவிட் டார். இப்படம் தற்போது வெளியாகிவிட்டது. இவ்விவகாரம் குறித்து லீலா சாம்சன் தணிக்கை துறையில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து பதவிவிலகியுள்ளார். இவருக்கு ஆதரவாக தணிக்கைத்துறை குழுவினர் 11 பேரும் பதவி விலகியுள்ளனர்.

சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் பிடியில் தணிக்கைத்துறை

பிகே படம் வெளியா னது முதலே சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் முறையிட் டன. இது போன்ற ஒரு படத்தை அதுவும் இந்து மதத்திற்கு ஆதரவாக உள்ள ஆட்சி நடக்கும் போது எப்படி வெளியிட அனுமதிக்கலாம் என்று கேட்டுள்ளனர். மோகன் பகவத்தும் இது குறித்து மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜ்யவர்தன் ராத்தோட் நேரடியாக தலை யிட்டு இப்படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். தணிக்கைத்துறையில் அரசியல் தலையீடுகள் கூடாது என்று அரசியல மைப்பு சட்டம் கூறியிருந் தும், தற்போது நேரடியாக இணை அமைச்சர் தலை யிட்டு தனது ஆதரவு பாபாவின் படத்தை வெளியிட அனுமதி கொடுத்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


சாமியார் மீது வழக்குகள்

சீக்கிய பிரிவுகளுக்கு இடையே உள்ள பல்வேறு அரசியல் சர்ச்சைகளின் காரணங்களாலும் இந்த விவகாரம் பெரிதாக்கப்பட் டுள்ளதாக கூறப்படும் அதே சமயத்தில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த சாமியார் மீது பாலி யல் குற்றச்சாட்டுகளும் துவங்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது குற்றம் கூறி இந்திய பிரதமர் உள்ளிட்ட பலருக் கும் கடிதம் எழுதிய சத்ர பதி என்பவரும் மேலும் இரண்டு சேவை அமைப் பினர்களும் ரகசியமாக கொலை செய்யப்பட்டனர்
இதனால் கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் அந்த சாமியார் மீது பதியப்பட்டு நீதி விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது.

அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள்

சீக்கிய மதகுருவான குருநானக்கின் சேவையை இழிவு படுத்தும்விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி யதற்கு பஞ்சாபியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புது டில்லி மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது
சீக்கியர்கள் நடத்தும் இந்த போராட்டம் கார ணமாக இப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காவல் துறையினரும் அதிக அளவில் குவிக்கப் பட்டுள்ளார்கள்.

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவால், திரையிட தகுதியில்லாத திரைப்படம் என்று நிராகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இவ் வளவு விரைவாக தீர்ப் பாயம் எவ்வாறு அனுமதி வழங்கியது என்றும் அவர் கள் கேள்வி எழுப்பி னார்கள்.
மேலும் அப்படத்தில் நடித்துள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பற்றிக் குறிப்பிட்டு, ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு சட்டம் துணை போகின்றதா? போன்ற வாசகங்களைக் கொண்ட பலகைகளையும் போராட்டக்காரர்கள் கொண்டிருந்தார்கள்.
எம்எஸ்ஜி என்றழைக் கப்படும் இந்த திரைப் படத்தின் பெயருக்கு பின்னால் "தி மெஸஞ்சர் ஆஃப் காட்" என்கிற பின் தொடரும் இடம் பெற்றுள்ளது.

ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப் பட்டுள்ள இந்தத் திரைப் படம் ஜனவரி 16இல் வெளியாகும் என்று முன்னதாகவே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
மொத்தமாக இந்தத் திரைப்படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற் றுள்ளன, அவை அனைத் திற்கும் பாடல்கள் எழு துவது, பாடுவது, இசை அமைப்பது என அனைத்து பணிகளையும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கே மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு இப்படத் தின் இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளிலும் அவர் இணைந்து பணி யாற்றியுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள இந்த சாமியார், படத்தின் கதைப்படியும் ஆன்மீகத் தலைவராகவே காட்சி யளிப்பார் என்றும் படத் தின் கதைச்சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மூடநம்பிக்கையை படம் ஊக்குவிக்கிறது"

இந்நிலையில் மூடநம் பிக்கையை வளர்க்கும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதால்தான், இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தணிக்கை சான்றிதழ் மேல்முறையீடு ஆணையம், இப்படத்திற்கு வெளியீடு அனுமதி சான் றிதழ் வழங்கியதால் இந்த சர்ச்சை வலுத்துள்ளது.

இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் தலை வர் லீலா சாம்சனும் இந்த விவகாரம் காரணமாக அவரது பதவியை விலகல் செய்த நிலையில், இவரைப் போல் பல்வேறு மாநில திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவர்களும் தொடர்ந்து தங்களது பதவிகளை விலகல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி தலைமையில் உள்ள பிஜேபி அரசு மூடநம்பிக்கைகளைப் பரப்புவதிலும்; சாமியார் களைக் காப்பாற்றுவதிலும் எவ்வளவு வெறி கொண்டு அலைகிறது என்பது இதன்மூலம் வெளியாகி விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/94532.html#ixzz3PEGUnz22

தமிழ் ஓவியா said...

கண்ணொளி (அறிவு) வழங்கும் பெரியார் 1000 பிறைநிலா வளர்கவே

வச்சலா சோமசுந்தரம்

மணி 10 ஆயிடுத்து புறப்படு, போய் காட்டிட்டு வந்திடலாம் என்று கூறிக் கொண்டே, வெளியே சென்றிருந்த என் இணையர் வீடு வந்தார்.

ஆமாம்... எங்கே போகனும்? என்ன திடீர்ன்னு ஏற்பாடு?
அதாம்மா, கண் மருத்துவமனைக்கு போயி, மருத்துவரிடம் அறுவை சிகிச் சைக்கு தேதி முடிவு செய்துகிட்டு வர லாம்! என்று காரணத்தைக் கூறினார்.

இப்ப ஒன்னும் அவசரமில்லை. பிறகு பார்க்கலாம். சமையல் வேலை - மாசக் கடைசி வேறே என்றேன்.
ஒரு கண்ணு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடம் ஆகப் போகுது. அப்பவே மருத்துவர் சொன்னார், அடுத்த கண்ணுக்கும் ஆறு மாசத்துலே அறுவை சிகிச்சை செய்துகிட்டா நல்ல துன்னு.

கண் பார்வை எவ்வளவு முக்கி யம் தெரியுமா? முக்கியமா எவ்வளவு புத்தகங்களை, இதழ்களைப் படிக்க முடி யுது. கண் பார்வை குறையில்லாதிருந் தால்தான், நீ படிக்கிற விடுதலை, உண்மைகளை கஷ்டமில்லாம படிக்க முடியும் என்றார்.

பார்வை உள்ள கண்களை பராமரிப்பு செய்வதுபற்றி பேசிட்டீங்க பார்வையே இல்லாது வாழக் கூடிய ஆண், பெண்கள் வாழ்வதை பார்க் கலையா என்ன? நடைபாதைகளில், ரயில் நிலையங்களில், கடைவீதிகளில் பாக்கிறோமே வெள்ளை குச்சியைத் தட்டி, தட்டி எவருடைய உதவியும் இல் லாமல் செல்வதைப் பார்த்துத்தானே வருகிறோம். ஏன், ஆசிரியராக பேரா சிரியராக, அலுவலர்களாக நல்ல பணி ஆற்றுகிறார்களே. அன்புக்கு உரியவர்கள் தானே? என்றேன்.

தெரியிதில்லே. சரி நாளைக்கு செல் வோம் கேரட் அரை கிலோ வாங்கி வந்துள்ளேன். கண்ணுக்கு நல்லது. சமையலைக் கவனி
கேரட் கட்லெட், ஜூஸ் செய்றேன். அதிருக்கட்டும். விடுதலையிலே பெரியார் 1000 வினா விடை பற்றிய செய்தியை படிச்சிங்களா?

படிச்சிங்களா, பல ஊர்களிலே பரவலாக மாணவர்கள் பங்கு கொண்ட படங்கள் தொலைநோக்கு கொண்ட சிறந்த முயற்சி. இரண்டாண்டுகளா சிறப்பா நடத்தி ஒரு எழுச்சியையும் விழிப்பையும் கல்வி நிலையங்களிலே ஏற்படுத்தி இருப்பதைக் காண பெரு மையா இருக்கு, மூன்றாண்டாகவும் உயர் எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


முயற்சி குழந்தை பருவத்தைத் தாண்டி வருகிறது நான் கேட்டேன், மூன்றாம் ஆண்டு போட்டி நடந்ததைப்பற்றி பாராட்டி வாழ்த்து சொல்வதோடு விட்டு விட் டீர்களே. அதன் ஒரு சிறப்புப் பகுதியைக் குறிப்பிடாது விட்டு விட்டீர்களே?
அப்படியா? இன்னும் முழுமையாக படிக்கவில்லை. கேரட் கட்லெட் செய்வதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, நீ குறிப்பிட்ட மூன்றாவது பெரியார் 1000 வினா விடை சிறப்புபற்றி கூறிவிட்டு போனா நல்ல இருக்கும்.

கரும்பு தின்ன கூலியா? நீங்கள் என் கண்பற்றி கவலைப் பட்டதையும், அதன் பாதுகாப்பப் பற்றி பேசியதை ஒட்டி, ஒரு தொண்டாக, தன்னம்பிக்கை ஊட்டும் பணியாக, ஒரு அறிவு உலகச் சூழலுக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக, இந்த மூன்றாவது பெரியார் 1000 வினா விடை நிகழ்ச்சி அடக்கமாக, அதே நேரத்தில் வெற்றி யுடன் நடத்தியுள்ளார்கள் பெரியார் தொண்டர்கள்.
நன்றாக உள்ளதே. முழுவதும் விரிவாக சொல்லுங்கள் என்று இணையர் ஆர்வத்துடன் கேட்க, நான் படித்த வற்றைக் கூறினேன்.

நீரருவியும், நீரோடையும்

ஒரு பெரிய பல்கலைக் கழகம் -_ பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் வண்ண மலரில் நறுந்தேன் உள்ளதுபோல், அதனுள் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம். இதனுடன் குழலும், யாழுமாக கொஞ்சு மொழி பேசும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய மூன்றாவது பெரியார் 1000 வினா விடை ஏற்பாடு வழக்கமான தடத்துடன், ஒரு புதிய தடத்தினையும் தேர்ந்தெடுத்தது.

அந்த புதிய தடம் ஒரு இருட்டுத் தடம் அந்த இருட்டுத் தடத்தில் (Blind Lane)
ஒளி பாய்ந்தோடவும், பயந்த உள்ளங்கள் வீறு நடைபோடவும் திட்டம் வகுத்தது. அதாவது, பார்வை மாற்றுத் திறனாளி களும், பெரியார் 1000 வினா விடை நிகழ்ச்சியில் பங்கு பெற, செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

எப்படி இந்த சிந்தனை உதயமானது?

ஒரு மலரைக் கண்ட விவசாயி, பல மலர்களை செடியில் காண விரும்புவது இயற்கை. அந்த வகையில் சேலம் பொறி யாளர் செல்வராஜ் அறக்கட்டளை மூலம் கணினி பயிற்சி பெற்ற பார்வை யற்ற மாற்றுத் திறனாளிகள், தன் காலில் நிற்கும் திறமையைக் கண்டு அத் தகையோருக்கு மேலும், தன்னம்பிக்கை, பகுத்தறிவு கைவசம் வர விருப்பம் காட்ட, கவிஞர் கலி. பூங்குன்றன் நீர் பாய்ச்ச, மானமிகு வீ. அன்புராஜ் உரம் இட, இந்தத் திட்டம் உதயமாகியது.

தமிழ் ஓவியா said...

நடைமுறைப்படுத்துவது கடினமானதாயிற்றே!

உண்மைதான். பெரியார் வாழ்க்கை ஓர் உந்து சக்தி அவர் தொண்டர்களுக்கு மலையும் கடுகு போன்றது. செயல் திட்டம் புல்லட் ரயில் வேகத்தில் விரைந்தது. பிரெய்லி புத்தகம், இ-பாட் பயிற்சி, ஒருங்கிணைப்புக் குழுக்கள், பள்ளிகளுடன் தொடர்பு, அவர்களின் ஒத்துழைப்பு, மாணவர்களின் விடை களை பதிவு செய்ய ஸ்கிரைப்ஸ் எனப் படும் பல்கலைக் கழக நல்ல உள்ளங்கள்.

ஒரே நாளில் எல்லா மய்யங்களிலும் தேர்வு நடைபெற்றது. குறித்த நாளில், தேர்வு முடிவு வெளிப்படுத்தி பரிசு வழங்கி, பாராட்டி ஒத்துழைத்தவர் களுக்கு நன்றி கூறுதல் ஆகிய அனைத் தும் செவ்வனே நடந்துள்ளன. அப் பப்பா இமாலய சாதனை பள்ளிகளி டையே, மாணவர்களிடையே வரவேற்பு எப்படி?

பொங்குமாம் கடலென வரவேற்பு. அரசு தனியார் பள்ளிகளே 12 பள்ளிகள் பங்கேற்றன 415, இரு பால் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களை படத்தில் காண்பது கண் கொள்ளாக் காட்சி எளிய தோற்றம், மகிழ்ச்சி முகங்கள், அடக்கமான வெளிப்பாடு. அவர்கள் கூற்றுகள் ஒரு மன உறுதிப் பாட்டையும், ஒரு எழு ஞாயிறு ஒளியைக் காண்பதுபோல (உள்ளத்தால்) உணர்வையும், பெரி யாரின் சிந்தனைத் தாக்கத்தையும் காண முடிகிறது.

இந்த முயற்சியின் பலன் என்ன?

வாழ்க்கையில் கண் இல்லாத கபோதி என்று முத்திரை குத்தப்பட்டு கசப்பைச் சுவைத்துக் கொண்டு வாழும் மாற்றுத் திறனாளிகளின் நெஞ்சில் தன்னம்பிக்கை என்ற ஒரு சொட்டு இனிப்பு நீரைச் சேர்க்கும் ஒரு முயற்சி. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் இவ்விரண்டையும் தமக்குரிய வகையில் பெறும் முயற்சியில், அறிவும் மானமும் உடன் வந்தால் முயற்சி வலுப் பெறும் என்று, இதனை வலியுறுத்திய அறிவாசான் பெரியாரை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது.

சிவ கவி என்ற பழைய திரைப்படத்தில், தியாக ராஜ பாவகதர், ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே, இந்த ஊனக் கண் ஏன்? என்று பாடியது போல், அறிவுக் கண்ணின் அவசியத்தை அறியச் செய்வது தங்களை மதித்து, தங்களுக்கும் போட்டித் தேர்வு, பரிசுகள் என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

29.10.2014 விடுதலை இதழில் உள்ள ஒளிப்படங்களைப் பார்த்தாலே நன்கு தெரியும்.
(அறிவு) ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா என்று வாழ்த்தி ஊக்குவதே பெரியார் 1000 வினா விடை திட்டம். பங்களிப்புதான் முக்கியம். பலனை கணிப்பது இரண்டாம் தரம்.

இந்த செயல் திட்டங்கள்பற்றி இதழ்கள், ஊடகங்களில் வருவ தில்லையே ஏன்?
கண்ணிருந்தும், கண்ணை மூடிக் கொண்டுள்ள குறுகிய, பகை நோக்கு கொண்ட குற்றவாளிகள், தலையில் தேங்காய் உடைப்பதை, மண் சோறு உண்பதை, பாலியல் கொடுமைகள் நடப்பதை, கல்லின் தலையில் பாலைக் கொட்டுவதை, தெருக் கலவரங்களை, கோயில் கொள்ளைகளை, குட முழுக்குகளைப் பற்றி எழுதுவார்கள், படங்கள் போட்டு காட்டுவார்கள்.

ஆனால், பெரியார் திடலின் முக்கிய நிகழ்ச்சிகள் பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்கள், பழகு முகாம்கள் பற்றிய செய்திகள் குறுமதி குருட்டு ஊடகங் களுக்குத் தெரிவதில்லை. இது தந்தை பெரியார் காலத் தொட்டு நடந்து வருவ தான ஒன்றுதான். இருந்தும் தமிழி னத்தைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் பணி கழகத்தின் பணி நல்ல உழைப்பு, உண்மையிலேயே.

அந்த 29.10.2014, விடுதலை தாளை கொண்டுவாம்மா. மாற்றுத் திறனாளி கள் மகிழ்ச்சி முகப்படங்களைப் பார்ப்போம்.

நீங்க அதுக்குள்ள அந்த கேரட்டை கொஞ்சம் சீவி வைக்கிறீங்களா? மணி 11 ஆயிடுத்து -_ சமைக்கணும்.

Read more: http://viduthalai.in/page2/94494.html#ixzz3PEHlHJWN

தமிழ் ஓவியா said...

சுபகாரியங்கள் நடத்திட அழுக்குப் பிடித்த அய்யரை நாங்கள் அழைப்பதில்லை

பெண் வீட்டாரோ ஆன்மீ கத்தில் ஊறிப் போன குடும்பம். எங்கள் குடும்பமும் (மண மகன்) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட குடும்ப மாகத்தான் இருந்தது.

எங்கள் அண்ணன் க. இராமநாதன் அவர்கள் வழிகாட்டுதலால் ஆன்மீகம் வெறும் புரட்டு, மோசடி, கற்பனை என்று அறிந்து கொண்டபின் நாங்கள் நிரந்தர நாத்திகர்களாக மாறினோம்.

இந்த நேரத்தில் என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். எங்கள் வீடு கூரை வீடுதான் என்றார்
எங்களுக்கு பொருத்தமான ஒரு இடம் அமைந்தது. மணமகளின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு, அம்மா எங்கள் வீடு கூரை வீடுதான். நீங்கள் வந்து பாருங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார்.

உடனே நாங்கள் சென்று அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு அய்யா வீடு எப்படி இருந்தால் என்ன, எங்களுக்கு குடும்ப பாரம்பரியம்தான் முக்கியம் என்று கூறி நிச்சயம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தோம். ஆனால் ஒரு கண்டிஷன்.

அய்யர் தலைமை ஏற்று நடத்திட ஏற்க மாட்டோம் என்று கண்டிஷன் போட்டோம். இது என்ன புதுமையாக இருக்கிறதே! எங்கள் வழக்கப்படி அய்யர் தலைமை ஏற்று தானே சுயகாரியங்களை செய்து வருகிறோம் என்றார் பெண்ணின் அப்பா சுபகாரியங்களுக்கு அழுக்கு பிடித்த அய்யரை ஏன் அழைக்க வேண்டும்? என்று நான் கேட்டேன்.

நம்மை கீழ் ஜாதி என்று அவன் பாஷையில் திட்டி விட்டு நம்மிடமே காசு பறிக்கிறான் என்று கூறினேன். அதற்கு அவர் ஆமாங்க நமக்கு தெரியாத மந்திரத்தைக் கூறிவிட்டு ஆயிரம், இரண் டாயிரம் பணம் கேட்கிறான் என்றார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். திருமணமும் அய்யர் இல்லாமல் தான் நடத்து வீர்களா? என்றார். ஆமாம் என்று சொன்னதோடு விடுதலையில் வந்த காஞ்சி சங்கராச்சாரி எழுதிய (தெய்வத்தின் குரல் பாகம் - 2 பக்கம் 874இல்) இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும் என்ற செய்தியை ஜெராக்ஸ் எடுத்து அவரிடம் காண்பித்தேன்.

அதை அவர் படித்துவிட்டு நானும் 30 வருஷமாக சாமி கும்பிடாமல் தான் இருந்தேன் நான் செய்து வந்த தொழிலில் எனக்கு நஷ்டம் ஏற்பட்ட பிறகு தொழிலில் மீண்டும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்று கூறியதோடு அய்யர் நம்மை இவ்வளவு மோசமாக இழிவு படுத்துகிறானா? என்று கூறியதோடு தாங்கள் சுயமரியாதைத் திருமணம் நடத்திட முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்றார்.

எந்த செய்தியாக இருந்தாலும் சொல்வதை ஆதாரத்துடன் எடுத்து கூறினால் அதில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறலாம். இது உறுதி.

- சி. அம்பிகா, நிரந்த நாத்திகர் கரிக்குளம்

Read more: http://viduthalai.in/page3/94498.html#ixzz3PEIHJHTM

தமிழ் ஓவியா said...

எதை நோக்கி செல்கிறது இந்தியா!

ஊழல், ஊழல், ஊழல் - என்று
ஊதி, ஊதி ஊரைச் சுற்றி வந்தார்கள்!
ஊழலை ஓழிப்போம்!
இந்தியாவை உயர்த்துவோம்! - என்று
ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள்!
ஊரை (நாட்டை) ஆள அதிகாரம் வந்தவுடன்
ஊழல் என்று கூறுவதை ஒழித்தார்கள்!

மக்களை, மனிதத்தை மறந்து
மதம் மதம் மதம் என்று
மந்திரிகள் மார்த்தட்டி கூறுகிறார்கள்!
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே
நாட்டின் தேசியவாதி என்று
நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

நாளும் ஒரு மதப் பேச்சு
நாட்டிலும், ஏட்டிலும் மனிதம் போச்சு!
அதன் விளைவு
காந்தியைச் சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில்
கோயில், சிலை அமைத்து வழிபட
இந்து மகாசபா ஏற்பாட்டில்...
ஜனவரி 30ஆம் தேதி திறப்பு விழா!
மனிதப் பற்றை மறக்கடித்து!
மதப் பற்றை வளர்க்கிறார்கள்!

எதை நோக்கிச் செல்கிறது? இந்தியா!
வளர்ச்சி வேண்டும் என்று வாக்களித்த
ஏழை -எளிய மக்கள் - என்றென்றும்
ஏழைகளாக வாழ வழி செய்ய
எல்லாம் தனியார் மயம்!
அன்று

ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய வந்து
நம்மை அடிமையாக்கினார்கள்!
இன்று அந்நிய முதலீடு என்ற பெயரில்
நம் அரசே நம்மை அடிமையாக்குகிறது!
அதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை!
நம் உற்பத்தித் திறனை நாமே இழக்க
வழிவகை செய்யும் கொள்கை!
தாராளமயமாக்கல் உலகமயமாக்கல் என்று
அந்நிய பொருள்களை வாங்கும் கொள்கை!
பிறகு எப்படிப் பெருகும் நாம் நாட்டு உற்பத்தி?

வரிப் பாக்கி செலுத்தாத
அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு,
வாரி வாரிக் கடன் கொடுக்கும்
நம் நாட்டு வங்கிகள்
வசதி இல்லா ஏழை மாணவனுக்கு
கல்விக் கடன் கொடுக்க
வீட்டை அடமானம் கேட்கிறது!

ஏமாற்று நிறுவனங்களிடம்
வரி வசூலிக்க தெரியாத இந்திய அரசோ!
இந்தியாவை அடமானம் வைத்து
உலக வங்கியில் கடன் வாங்குகிறது!
பிறகு எங்கு நாம் முன்னேறுவது?
உலகமே மனித அறிவுக்கும்
அறிவியலுக்கும் முக்கியத்துவம்
கொடுத்து முன்னேறும்! இக்காலத்தில்
நம் நாடும் நாட்டை ஆளும் அரசும்
மதத்திற்கும் மதம் சார்ந்த செயலுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது
பிறகு எப்படி பெருகும் அமைதியும் ஒற்றுமையும்?

உலக அரங்கில் நாம் முன்னேற
அறிவும், கல்வியும், அறிவியலும் தேவையா?
அல்லது
மதமும், மதச்சார்ந்த செயல்களும் தேவையா?
சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்களும் மக்களும்!
இன்று நாம் சிந்திக்க மறுத்தால்!
நாளை நம் பிள்ளைகளுக்கு இல்லாமல் போகும்
அமைதியும் அறிவும் நிறைந்த அழகு வாழ்க்கை!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள் குரல் கொடுங்கள்
மனித அறிவுக்கும் மனித நேயத்துக்கும் எதிராக செயல்படும்
ஆளாக இருந்தாலும் அரசாக இருந்தாலும்
கண்டிப்புடன் கண்டனக் குரல் கொடுங்கள்!
மனிதநேயத்தைக் காப்போம்!
இந்தியாவை மீட்போம்!

- க. பாலன்

Read more: http://viduthalai.in/page3/94499.html#ixzz3PEIOnR8X

தமிழ் ஓவியா said...

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிகின்றதா?

சபரிமலையிலுள்ள பொன்னம்பல மேட்டில் இப்பொழுது மகரஜோதி தெரிகின்றது என்று சொல்வது பொய். பல ஆண்டுகளாக அங்கே மகரஜோதி தெரியவில்லை. மகரஜோதி என்பது அதிசயமான ஒளி அல்ல.

அந்தப் பகுதியில் வாழ்ந்த காட்டுவாசிகள் இரவில் வெளிச்சத்துக்காக ஏற்றிய தீப்பந்தங்களின் ஒளிதான் அது. அதைப் பார்த்த சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகம், பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதற்காக காட்டுவாசிகளை விரட்டிவிட்டு அவர்களே அங்கே தீப் பந்தம் கொளுத்தினார்கள்.

பகுத்தறி வாளர்கள் அங்கே சென்று உண்மையை வெளிக்கொண்டு வர முயன்றதால் அடிதடி நடந்தது. இதற்குப் பிறகு அங்கே மகரஜோதியை ஏற்றுவதில்லை, அதனால் மகரவிளக்கும் தெரிவதில்லை. நான் ஆண்டு தோறும் சபரிமலை சென்று மகரஜோதி தெரிகின்றதா என்று பார்க்கின்றேன். தெரியவே இல்லை.

இப்படிச் சொன்னவர் நாத்திகர் அல்ல. ஏதோ ஓர் ஆற்றல் நம்மை மிஞ்சி இருக்கின்றது என்று நம்பக்கூடிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இவ்வாறு சொன்னார். தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்துவிட்டு, அங்கிருந்து பயணியர் தொடர்வண்டியில் திருச்செந்தூர் செல்லும்பொழுது அவர் கூறியது இது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் வட பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் திருப் பதிக்கும் குருவாயூருக்கும் அடுத்தபடி யாக அதிக வருவாயை ஈட்டும் கோயிலாகும்.

இமயமலையிலுள்ள பத்ரிநாத் - கேதார் நாத்துக்கும் காஷ்மீரில் உள்ள அமர்நாத்துக்கும் சென்றவர்கள், சபரி மலைக்குச் செல்வதை எண்ணி வியப்படைய மாட்டார்கள்.

1920 வரை பொன்னம்பல மேட்டி லுள்ள மகர விளக்கைப் பற்றி எவரும் பேசியதில்லை என்கின்றார் காலஞ் சென்ற பேராசிரியர் ஏ.டி.கோவூர் அவர்கள். 1940 க்குப் பிறகு தான் பொன் னம்பல மேட்டிலுள்ள அந்த ஒளியைப் பற்றிய கதைகள் பரவின. இந்த இடைப் பட்ட காலத்தில்தான் காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் குடியேறியிருக்க வேண்டும்.

சபரிமலைக்கருகில் இதுவரை மனித பாதச்சுவடே படாத பொன்னம்பல மேடு சபரிமலை பொன்னம்பல மேடு என்ற மலையில்தான் அற்புதமான இந்த விளக்கு தானாகவே எரிகின்றது என்று ஒரு கூட்டத்தினர் பரப்பினார் கள்.

வேறு சிலரோ, பக்தர்களைப் பார்க்க அய்யப்பன் தேவலோகத்திலி ருந்து எழுந்தருளும்பொழுது உண்டா கும் ஒளியே அது என்றார்கள். கேர ளத்திலுள்ள பத்திரிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு இதைப்பற்றிய கதைகளை பரபரப்பாக எழுதின. வானொலியும் இந்தப் பணியில் சளைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

1940க்குப் பிறகு பரப்பப்பட்ட மகரவிளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் கேரள பகுத்தறிவாளர் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எஸ்.நாதன் என்பவர் தான்.

சபரிமலைக்கு அருகில் குடியிருந்த தாலும் தன் வேலையின் பொருட்டு அடிக்கடி சபரிமலை அய்யப்பன் கோயி லுக்குச் செல்வதாலும் பொன்னம்பல மேட்டிலுள்ள திவ்விய ஜோதிக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இவரால் அறிய முடிந்தது. 1973 ஜனவரி 14ஆம் நாள் பொன்னம்பல மேட்டில் நடந்த வெடி நிகழ்ச்சியில் எம்.ஆர்.எஸ். நாதனும் கலந்து கொண்டார்.

பொன்னம்பல மேடு எவராலும் செல்ல முடியாத இடம் என்பது உண்மையல்ல. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானகத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கித் திரும்பினால் மேட்டை அடையலாம்.

சபரிமலையிலிருந்து நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராக உள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. ஆரம்ப காலக் கட்டங்களில் மேட்டின் மீது இரவு நேரங்களில் காணப்பட்ட ஒளிகளுக்கு தெய்வீகத் தொடர்புள்ள விளக்கமோ பின் னணியோ எவராலும் கொடுக்கப்பட வில்லை.

மேட்டில் மலைப்பண் டாரங்கள் வாழ்ந்திருந் தார்கள் என்றும் அவர்கள் தமது தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையி லிருந்து பார்க்கும்போது காணப்படு கின்றது என்றும் அக்காலத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

1973 ஜனவரி 13ஆம் நாள் பத்தனம் திட் டையிலிருந்து வாங்கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம்-கக்கி (பம்பை) வண்டியில் பம்பை அணைக்குச் சென்றார் எம்.ஆர். எஸ்.நாதன் அன்று அவருடன் பணி யாற்றிய கேரள மின்சார வாரியத் தோழர்களுடன் அவர் பம்பையில் தங்கினார்.

மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில தோழர்களுடன் பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார். அங்கே மின்சார வாரிய ஊழியர்களையும் வனக்காவலர் களையும் தவிர, கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்களும் மேட்டில் இருந்தனர். அங்கே கம்பங் கட்டுக்கு தீ வைத்தது மகரஜோதி மோசடி வேலை தான் என்பதை நிரூபித்தார் நாதன். வானொலியே மலைத்துவிட்டது அன்று!

இதனால் கொந்தளித்த நிலையில் இருந்த கோயில் நிர்வாகம், அடுத்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினரையும் அழைத்து வந்திருந்தார்கள். அங்கே சென்ற நாதனையும் பிற பகுத்தறி வாளர்களையும் அடித்து உதைத் தார்கள் காவல் துறையினர். இதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் காவல் துறையின் உதவியுடனேயே மகரவிளக்கு ஏற்ற முடிவெடுத்தனர்.

1989 டிசம்பரில் மகர விளக்கு மோசடியைச் சுட்டிக்காட்டி, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சனல் இடமருகின் தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதற்குப் பிறகும் தேவஸ்வம் போர்டு தலைவர் ராமன் பட்டத்திரிப்பாடு, மகரஜோதி இறை அற்புதம்தான் என்றும் பொன்னம்பல மேட்டுக்கு பகுத்தறிவாளர்கள் சென்றால் காவல் துறையினர் அவர்களைத் தடுப்பார்கள் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார். மகரஜோதி மோசடியை நடத்துகின்ற தேவஸ்வம் அதிகாரி களைக் கைது செய்வது அவசியம் என்ற சனல் இடமருகின் அறிக்கை ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது.

இந்த கட்டத்தில் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கைக் கொளுத்து வது தேவஸ்வம் போர்டுதான் என்று கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் அறிவித்தார். மேலும், பகுத்தறிவா ளர்கள் பேரணியாக பொன்னம்பல மேட்டுக்குச் செல்லக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பிறகு பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு ஏற்றப்பட வில்லை என்பதே உண்மை.
வந்தவாசியைச் சேர்ந்த போக்குவரத் துக்கழக ஊழியர் ஒருவர் 1994 இல் கூறியதாவது:- அய்ந்து ஆண்டுகளாக நான் மகரவிளக்கு ஏற்றும் நாளில் சபரிமலைக்குச் செல்கின்றேன். ஒரு நாள் கூட நான் மகர ஜோதியைப் பார்த்ததில்லை.

இதை மக்கள் உணர வேண்டும்.

இங்கே முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், சபரிமலையில்தான் காவல்துறையினரைப் பற்றிய அச்ச மின்றி ஹெராயின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை எளிதாக விற்கவும் வாங்கவும் முடிகின்றதாம். சபரி மலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்ப தற்கான காரணம் இதுதானாம். இது அங்கே சென்று வந்த பக்தர்களே தெரிவித்த தகவல்தான்.

- த.அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...

அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதை

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவற்றை நன்கு அறிந்தவர்கள்தான் பூசை செய்யலாம் என்பதுஆகமவிதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலானோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.

பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, சிலர் அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில்களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள்.

கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பாக சில மந்திரங்கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள்.

அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது

(உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

Read more: http://viduthalai.in/page5/94507.html#ixzz3PEJXzidd

தமிழ் ஓவியா said...

இந்து ஏடே சொல்லுகிறது

வரலாற்றையும் மதவெறியையும் பிரித்துக் காண உதவுவது எது?

தனது கூட்டினைக் கட்டுவதில் ஒரு சிலந்திப் பூச்சி மெற்கொண்ட இடை விடாத தொடர்ந்த முயற்சிகளைக் கவனித்து, அதனால் தூண்டுதலும், ஊக்கமும் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டு அரசன் ராபர்ட் ப்ரூஸ் (Robert the Bruce), தொடர்ந்து தான் ஆறு போர்களில் தோல்வியடைந்த பிறகும், இங்கிலாந்து நாட்டின் மீது மறுபடியும் படை யெடுத்துச் சென்று போரிட்டு, வெற்றி பெற்று, இழந்த தனது நாட்டைத் திரும்பக் கைப்பற்றிய கதையை நமது பள்ளி நாட்களில் நாம் படித்திருக் கிறோம்.

ஆனால், ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோய பெல்சின் (Joseph Goebbels) மிகச்சிறந்த அறிவார்ந்த பிரச்சார உத்தியானாலும், அது ஒரு சில சொற்களை மட்டுமே கொண்டதாக இருந்து, தொடர்ந்து அவை திரும்பத்திரும்பக் கூறப்பட வேண்டும் என்ற கோட்பாட்டினால் தூண்டப் பெற்ற ஒரு சிறு கூட்டம் இதனைப் போன்ற அயராத முயற்சிகளை மேற்கொண்டால் என்ன நடக்கும்?

ராபர்ட் ப்ரூஸ் போன்றோரிட மிருந்தும், கோயபல்ஸ் போன்றோரிட மிருந்தும் எனது அலுவலகத்திற்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், திருத்தங்களை வெளியிடவும், நடை முறையில் மாற்றம் செய்யவும், ஆவணங் களைப் பாதுகாக்கும் ஒரு கருத்துக் கருவூலமாக எங்களது செய்தித்தாளை வைத்திருக்கவும் முந்தையவை உதவு கின்றன.

உண்மைக்கு மாறாக, நம்மைப் பற்றி உயர்வாகக் கூறிக் கொள்வதற்கும், தவறாகப் பறைசாற்றிக் கொள்ளும் தேசியப் பெருமைக்கும் நமது செய் தித்தாள் இடம் அளிக்கவேண்டும் என்று பிந்தையவை எதிர்பார்க்கின்றன.

சோர்வின்றி, தேவையற்ற செய்திகளை ஈ - மெயில் மூலம் எண்ணற்ற மக்களுக்கு அனுப்புவது, கற்றறிந்தவர்களைத் தங்களது மனங்களைத் திறந்து பேச வைக்கும் அவர்கள் எண்ணுகின்றனர். கவலை தரும் இத்தகைய போக்கு இந்தியா மட்டுமல்லாமல், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது.

அந்நாடுகளில் உண்மை களை மறைக்கவும், தீவிரமாக ஆராய்ந் தால் அவற்றின் பொய்மை வெளிப்பட்டு விடக்கூடிய ஒரு தவறான உயிரியல் வரலாற்றை சிறிது சிறிதாக நுழைக்கவும் இத்தகைய தேசியப் பெருமை பயன் படுத்திக் கொள்ளப்படுகிறது. வரலாறு என்பது நம்பத் தகுந்த உண்மையான ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாக இருக்க வேண்டும்.

அத்தகைய ஆதா ரங்கள் இருக்கும் உண்மையான ஆவ ணங்களிலிருந்து குறிப்பிட்ட விவரங் களைத் தேர்ந்து எடுப்பதும், அந்த விவரங்களைத் தொகுத்து அவற்றைக் கதை போல வரிசையாக விவரித்துக் கூறுவதும், நுணுகி ஆராய்வது என்ற சோதனையில் வெற்றி பெறுவதாக நிற்கும்.

கட்டுக்கதைகள், இதிகாச புராணக் கதைகளில் இருந்து வரலாற்றை வேறுபடுத்திக் காட்டவே இந்து நாளிதழ் எப்போதும் பாடுபட்டு வந்திருக்கிறது.

பிரதமர்கள் ஷின்ஸோ அபி (Shinzo Abe) நரேந்திரமோடி, அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் (RecepTayyip Erdogan) ஆகியோரின் ஆதரவாளர்கள், உண்மைகளுக்கும், கருத்து வேறுபாடு களுக்கும், பகுத்தறிவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையைக் மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்காமல் அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான தாக்குதலுக்கு முதலில் பலியாவது உண்மைதான்.

தமிழ் ஓவியா said...


2014 டிசம்பர் 13 இந்து நாளிதழில் வெளியான அட்டாடர்க்கின் மரபுரிமைப் பண்பு தலைகீழாக மாற்றப் படல் (Unturning Ataturk’s legacey) என்ற தலைப்பில் வெளியான கட்டுரை துருக்கியில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு காட்சியை நமக்கு அளிக்கிறது.

எகனாமிஸ்ட் இதழில் அண்மையில் வெளிவந்துள்ள ஷின்ஸோ அபியை வரலாறு துரத்துகிறது (History is haunting Shinzo Abe) என்ற கட்டுரை வலது சாரி அரசியலின் நிர்ப்பந்தத்திற்கு செய்தி யிதழ்கள் பணிந்து போனால் உண்மைக் கும், வரலாற்றுக்கும் என்ன நேரும் என்ற அச்சமூட்டும் நினைவூட்டாக இருக் கிறது.

போர்க்கால விலைமாதர் இல்லங்களுக்கு கொரியப் பெண்களைத் தான் அனுப்பி வைத்ததாகக் கூறிய முன்னாள் ஜப்பான் போர்வீரர் ஒருவரின் சாட்சியம் பொய்யானது என்று ஏற்கப்படாதபோதிலும், இது போன்ற கதைகள் பல வெளிவந்து கொண்டிருப் பதாக ஆஷி ஷிம்புன் Ashi Shimbun) ஏடு கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்று எகனாமிஸ்ட் இதழ் எழுதுகிறது.

ஆறுதல் தரும் இந்த விலைமாதர்களைப் பற்றி தங்கள் இதழில் 1992 முதல் எழுதப்பட்ட பல கட்டுரைகளில் அவர்களைக் குறிப்பிட பாலியல் அடிமைகள் என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக தனது 1 கோடி வாசகர்களிடம் ஆஷ் ஷிம்புன்னின் கடும்போட்டி இதழான யோமுரி ஷிம்புன் (Yomiuri Shimbun) கடந்த வாரத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த வருத்தம் தெரிவித்ததன் மூலம் சரியான உண்மைகளை ஏற்றுக் கொண்டு ஆவணங்கள் சரி செய்யப் பட்டன என்று கருதமுடியாது. ஆளும் வலதுசாரி அரசியல் கட்சியின் கோட்பாட்டை வேறு வழியின்றி அது ஏற்றுக் கொண்டதாகவும், வரலாற்றை மறுக்கும் ஒரு செயலாகவுமே அதனைக் கருதலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு எதிரான வன் முறை பற்றிய அய்க்கிய நாடுகள் அவை யின் சிறப்பு அதிகாரி ராதிகா குமாரசாமி ஆறுதல் அளிக்கும் இத்தகைய பெண்களைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை 1996 இல் அளித் துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ஏகாதிபத்தியம் எவ் வாறு பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் அடிமைத்தனத்தில் பல வந்தமாய் திணித்தது என்பதை அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்தியாவிலும் இது போன்ற தொரு போக்கு தற்போது வளர்ந்து வருவதை நாம் பார்க்கலாம். அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய ஆலமரமாக வளர்ந்து, நல்லறிவு, நல்லாட்சி மற்றும் பல்வேறுபட்ட மத, மொழி, இன மக்கள் இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் உயிரூற்றிணையே வற்றச் செய்துவிடும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்: முன்னொரு காலத்தில் மருத்துவ அறிவியலில் நமது நாடு எத்தகைய சாதனை படைத்துள்ளது என்பதை எண்ணி பெருமைப்பட நம்மால் இயலும். மகாபாரத பாத் திரம் கர்ணனை நாம் அறிவோம். இன்னமும் சற்று ஆழ்ந்து நாம் சிந் தித்துப் பார்த்தால், கர்ணன் தனது தாயின் யோனியில் இருந்து பிறக்க வில்லை என்று மகாபாரதம் தெரிவிப் பதை நாம் உணரலாம்.

அக்காலத்தில் மரபணு அறிவியல் இந்தியாவில் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதனால்தான் கர்ணன் அவனது தாயின் யோனியில் பிறக் காமல் வெளியில் இருந்து பிறந்திருக் கிறான். நாம் வினாயகக் கடவுளை வணங்குகிறோம். ஒரு மனிதனது உடலில் யானைத் தலையைப் பொருத்தி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையைத் தொடங்கிய மருத்துவர் சிலர் அக்கால இந்தி யாவில் இருந்திருக்க வேண்டும்.

பிரதமரின் இந்த பேச்சு பிரச் சினையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி அதைப் பற்றி பல கல்வி யாளர்கள் கேள்வி எழுப்பியது இயல் பானதே. இதைப் பற்றி விமர்சனம் செய்து இந்து நாளிதழ் தலையங்கம் எழுதிய துடன், வரலாற்றாசிரியர் ரொமலா தாபர், பத்திரிகையாளர் கரண்தாபர், இயல்பியலாளர் விக்ரம் சோனி, உயிரியலாளர் பாலசுப்பிரமணியம், சமூக இயலாளர் ஷிவ் விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் விமர் சனக் கட்டுரைகளையும் வெளியிட் டுள்ளது.

ஒரு நியாயமான கண்ணோட்டத்தை நமக்கு அளிப்பவையாக இந்தக் கட்டு ரைகள் இருந்தன. இந்தியாவில் பாரம் பரியமான அறிவார்ந்த நடைமுறைகள் இருந்ததை அவர்களில் ஒருவரும் மறுக்கவில்லை. இந்திய அறிவார்ந்த நடைமுறைபற்றிறோ, மேற்கத்திய அறிவார்ந்த நடைமுறைபற்றியோ எதிர்கருத்து, மாற்றுக் கருத்து கொண் டவர்கள் அல்ல அவர்கள்.

அறிவு நடை முறைகளுடன் கட்டுக்கதைகளை கலப்பதில் உள்ள ஆபத்தைப் பற்றியே அவர்கள் கவலைப்படுகின்றனர். வரலாற்றைப் பற்றியும், மூடநம்பிக்கை மற்றும் மதவெறியில் இருந்து அது எவ்வாறு வேறுபடுத்திக் காட்டப் பட்டுள்ளது என்பது பற்றியும் மட்டுமே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

கடந்த கால நிகழ்வுகள் என்ன என்று தவறாக எடுத்துக் காட்டப்படுவதில் இருந்தும், உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மாற்றி எழுதி நம்பவைப்பதில் இருந்தும் ஒரு புகழ்மிக்க பாரம்பரியப் பெருமையை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிதான் அவர்கள் கவலைப் படுகின்றனர்.

என்றாலும், விரல் விட்டு எண்ணப்பட இயன்ற ஒரு சில வாசகர்கள் ஆணித்தரமான இவர்களது வாதங்களை தேசியப் பெருமை உணர்வற்றவை என்ற நிலைக்குத் தாழ்த்தி விட்டு, மேற்கத்திய அறிவு நடைமுறைகளைப் போற்றித் துதிபாடும் இவர்கள் இந்தியாவின் பெருமை மிகுந்த கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் என்று முத்திரை குத்திவிடுகின்றனர்.

இதுவரை பெரும் பகுதி இந்திய ஊடகங்கள் ஜப்பான் வழியைப் பின் பற்றாமல் தற்காத்து வருகின்றன. ஆனாலும், தங்களது இடைவிடாத முயற்சிகளின் காரணமாக இறுதியில் நிச்சயமாக வரலாறு மாற்றி எழுதப் பட்டுவிடும் என்று கோயபல்ஸ் போரா ளிகள் நம்புகின்றனர்.

பகுத்தறிவுக்கும், நவீன கருத்துகளுக்கும் இந்த நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள இடம் பிற் போக்குத்தனமான உரத்த கூச்சலுக்கு மாற்றி அளிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ப்ரூஸ் போன்ற வாசகர்கள் பலர் நமது நாளிதழுக்கு உள்ளனர்.

நன்றி: தி ஹிந்து 22-.12.-2014

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்.

Read more: http://viduthalai.in/page6/94516.html#ixzz3PEK1u95S

தமிழ் ஓவியா said...

ஆத்மாவா?

அம்மி மிதிக்காமல்
அருந்ததி பார்க்காமல்
அய்யர் இன்றி
தலித் தலைமையில்
திருமணம் செய்த அப்பாவுக்கு
காரியம் செய்ய
ஆரியனை அணுகினேன்

எட்டு முழ வேட்டி
என்று ஆரம்பித்து
நாலுமுழ நீளத்திற்கு
லிஸ்ட் கொடுத்தார்
கேரட், பீன்ஸ்
கத்திரிக்காய் உருளைகிழங்கு
பச்சரிசி பத்து கிலோ
புளி, மிளகாய்
பருப்பு வகைகள்

வாழை இலை ஆறு
ஒரு குடும்பத்திற்கு
ஒரு வாரத்திற்குஆகும்போல
சாமி இதெல்லாம் எதற்கு?
அப்பாவியாய்க் கேட்ட

மகனைப் பார்த்து அய்யர் சொன்னார்
அப்பாவின் ஆத்மா
சாந்தி அடைய வேண்டாமா?
எனக்குள் ஒரு கேள்வி
அப்பாவின் ஆத்மாவா
அய்யரின் ஆத்மாவா?

கலவை: வ. தட்சணாமூர்த்தி சென்னை 51

Read more: http://viduthalai.in/page6/94517.html#ixzz3PEKTwyK0

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூறுகிறார்...

போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/94509.html#ixzz3PEKefHeG

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்: அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், வீடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக் கின்றன.

www.waytosuccess.com
www.padasalai.net
www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com
www.tamilasiriyarthanjavur.blogspot.com
www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறுகின்றன. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

English

www.jeyaenglish.com
www.dhilipteacher.wordpress.com

இத்தளத்தில் ஆங்கிலப் பாடக் குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட், வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக் குறிப்புகள் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page7/94520.html#ixzz3PEKppaO3

தமிழ் ஓவியா said...

மாபெரும் புத்துணர்ச்சி முகாம்

சின்னசம்புகன்

யானைகள் சிறப்பு முகாம் வருகிற ஜனவரி 27 ஆம் நாள் வரை சென்னை வண்டலூரில் நடந்து வருகின்றது. நாகூர்தர்காவிலுள்ள யானை முதல் சிறீரங்கம் யானை வரை மாநிலங்களின் பல்வேறு பகுதி யானைகள் பங்கு கொள்கின்றன. இந்தச்சேதி எப்படியோ கிருஷ்ண கிரி மாவட்டத்துக்காட்டில் திரியும் யானைகளுக்கு எட்டிவிட்டதாம்.

தங்களது வாழ்வாதாரம், மனிதர்கள் காடுகளை ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களை சுரண்டுவதால் பாதிக்கப் பட்டுள்ளதற்கு மாற்று என்னவென நீண்ட காலமாகவே அவை கவலை யுடன் யோசித்து வந்தன.

புல்பூண்டு, தண்ணீர் தேவைகளுக்கு பேயாய் (தப்பு, தப்பு!) நாயாய் (மீண்டும் தப்பு!) காடெல் லாம் அலைந்து மெலிந்து வாடுகின் றோமே, அதற்கு தீர்வுதான் என்ன? என்று எண்ணி எண்ணி, இரை தேடித் தேடி அலைந்து கண்கள் இருண்டு, கால்கள் தேய்ந்து விட்டன.

வாடிய நமது விநாயகப் பெருமக்களுக்கு, முகாம் பற்றிய சேதி மரத்தோடு தின்ற பலாப் பழங்களாய் இனித்தது. ஆனால் நாமும் முகாமில் எப்படி கலந்து கொள்வது? அதற்கு யாரை அணுகுவது என்று காதோரம் மதநீர் ஒழுக மண்டையை மரத்தில் மோதிக்கொண்டன.

அப்போது ஒரு ஒற்றைக் கொம்பு யானைக்கு ஏதோ சொல்லத் தோன் றியது. அதனுடைய மற்றொரு கொம்பு, புதிய பரிமாணம் எழுத யாராவது சாத்விகளுக்கு வழங்கப்பட்டதா, ஒரு வேளை சத்துணவு பற்றாக்குறைவால் ஒரு கொம்புவளரவே இல்லையா, சங்கிலி பறிப்பு சம்பவம் போல ஒற்றைக் கொம்பை யாராவது பறித்துக் சென்று விட்டார்களா, கொம்பு இரண்டுமே வளராத பணக்கார யானையிடம் காசை வாங்கிக்கொண்டு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு எடுத்துக்கொண்டார்களா?

நமது இராணுவத்துக்கு ஆயுதப்பற்றாக் குறையை சமாளிக்க கொம்பு கடனாக உதவப்பட்டதா? நடுவணரசு வருகிற ஆண்டு வரவு செலவு அறிக்கை தயா ரிக்க உதவும் எழுதுகோலாக எடுத்துக் கொண்டார்களா? இந்தக்காரணங்களில் எது உண்மை, எது பொய் என்றே விளங்கவில்லை. உண்மையறிவதற்காக உச்சநீதிமன்றம், சிபிஅய் மூலம் கமுக்க மாக சில ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருப்பதாக கமலம் தொலைக் காட்சி தகவல் உள்ளதாம். கொம்பு புராணம் ஒரு புறம் கிடக்கட்டும்.

ஒற்றைக் கொம்பன் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். மலைச் சாலையோரங்களில் இரைதேடும்போது அரசாங்க ஜீப் பழுதாகி நின்றதைப் பார்த்தது. அதிலிருந்து இறங்கிய இருவர் பேசிக்கொண்டிருந்த சேதி காதில் கேட்டது. யானையின் காது 7,8 கிலோ மீட்டர் தூரத்தில் எழும் ஓசை யைக் கூட கேட்கும் திறன் வாய்ந்தது என்பதை டிஸ்கவரி சானல் காட்டி யுள்ளதே! ஒருவர் கையில் செய்தித்தாள் வைத்துக்கொண்டு படித்தார்.

சென் னையில் சிறப்பு நல்வாழ்வு முகாம் யானைகளுக்கு கொண்டாட்டம். துவக்க விழாவில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு சிறப்பு பயண வசதி, உணவு வசதி, தங்கும் வசதி, இலவச டாஸ்மாக் வசதி செய்ய அதிகாரிகள் தீவிரம்.

யானைகளுக்கு கொண்டாட்டம் என்ற வரி என்னை நின்று யோசிக்க வைத்தது. நாமும் முகாமில் கலந்து கொள்ள ஏதாவது வழியுண்டா என்று எண்ணினேன்.

தமிழ் ஓவியா said...

ஆ! நமது சொந்தக்காரர் நினைவுக்கு வந்துவிட்டார்! பரமசிவன் செய்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையால் உருவாகி, நமது பண்டைய மருத்துவச் சிறப்புக்கு சான்றாக பிரதமரால் போற்றப்படும் போதகப்பிரியர்தான். நமக்கு அருகிலுள்ள தர்மபுரி மாவட் டத்து மத்தூரில் கோவில் கொண்டி ருக்கிறார்.

வல்லபை எனும் அரக்கியின் பெண் உறுப்பு வழியாக தும்பிக்கையை விட்டு கர்ப்ப பையையே உறிஞ்சி லாப்ரோஸ்கோப் முறையில் எடுத்து மருத்துவ தொழில் நுணுக்க வல்லுநர் அதே கோலத்தில் திகழ்கிற வல்லப கணபதிதான் அவர்.

அண்டை வீட்டா ரான அவரைத்தான் நாட வேண்டு மென்ற நினைப்புடன் தூங்கிவிட்டேன். என்ன ஆச்சரியம்! அன்றிரவே கஜமுகன் என்கனவில் தோன்றினாரே! நமது புதிய முதல்வரிடமும் சொல்லிவிட்டாராம்!

சென்னை துறைமுகம் வழியாக இறக் குமதியாகி வரும் கருவிகளை ஏற்றிக் கொண்டு ஓசூர், பெங்களூரு சென்று காலியாக திரும்பும் கொள்கல வண்டி களை நமது காட்டில் நிறுத்தி நம்மை ஏற்றிச்செல்லும் திட்டம் உள்ளதாம். அதன்படி நாமெல்லோரும் சென்னைக்கு செல்லும் வழி பிறந்துவிட்டது.

இனியென்ன! எல்லோருக்கும் சென்னை நகர வாசம், அம்மா உணவகம் மூலம் சிறந்த உணவு, நல்ல ஓய்வு, மருத்துவ சோதனை என்று எத்தனை வசதிகள்! சொல்லி மாளாது போங்கள்! ஆதி மூலத்தின் ஆசியுடன் புறப்பட்டுவிட்டோம். வண்டலூர் முகாமுக்குள் நுழைந்ததும் ஒரு இனிய தகவல். மும்பையில் உள்ள கணபதி சிலைகளுக்கு ரூ. 30 கோடி அளவு காப் பீடு செய்திருந்தார்களாம்.

கல், மண் சிலைகளுக்கே இவ்வளவு காப்பீடு எனில், நமக்கும் காப்பீடு செய்யலாமல் லவா? மருத்துவ குழுக்காப்பீட்டு திட்டம் வேண்டுமென தீச்சட்டி / பால்காவடி / மொட்டை / முளைப் பாரி / பொங்கல் என்று வேண்டுதல் செய்வோம். இதையெல்லாம் தொலைக் காட்சியில் பார்க்கக்கூடிய நமது மக்களின் முதல்வர், கோரிக்கை நிறை வேற்றுவோர் நம்பிக்கை வீண்போகாது.

நம்பிக்கையுடன் எல்லோரும் பிளிறி கூட்டாகக் குரல் எழுப்பி பாராட் டுவோம். முகாமை கணபதி பூஜையுடன் துவக்கி, நமக்கு கரும்பு, அன்னாசிபழம், ஆப்பிள், சாத்துக்குடி, பாசிப்பயறு சத்துமாவு, கொள்ளுச்சாதம் என விதவிதமான புதியவகை உணவுகள் வழங்க ஏற்பாடு செய்த மக்களின் முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம். இந்த 7-ஆவது ஆண்டு முகாமில் காட்டு யானைகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பை தொடர்ந்து வருகிற ஆண்டுகளுக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உலகில் வேறு எங்கும் விலங்கு களுக்கு தனியாக முகாம் நடத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நமது மக்களின் முதல்வர் தோட்டத்துக்கும் ஒரு நடை சென்று வரலாம். சிறீரங்கத்தி லிருந்து வந்த யானை அங்குள்ள கோவிலிலும் வல்லப கணபதி சிலை உள்ளதாகச் சொன்னது.

அதோடு அம்மா அவர்களது ஆசி பெறப்போகும் போது, நமது காடுகள் (மொத்த பரப்பில் 14% அளவே உள்ளவை) வறண்டு அழிக்கப்பட்டுப் போகும் நிலையில் நிரந்தர முகாம்கள் தேவை என்ற வேண்டுகோளை வைத்து விட எல்லா கஜமுகங்களும் ஆமோதித்தனவாம்.


யானைகள் சிறப்பு முகாம் வருகிற ஜனவரி 27 ஆம் நாள் வரை சென்னை வண்டலூரில் நடந்து வருகின்றது. நாகூர்தர்காவிலுள்ள யானை முதல் சிறீரங்கம் யானை வரை மாநிலங்களின் பல்வேறு பகுதி யானைகள் பங்கு கொள்கின்றன.

இந்தச்சேதி எப்படியோ கிருஷ்ண கிரி மாவட்டத்துக்காட்டில் திரியும் யானைகளுக்கு எட்டிவிட்டதாம். தங்களது வாழ்வாதாரம், மனிதர்கள் காடுகளை ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களை சுரண்டுவதால் பாதிக்கப் பட்டுள்ளதற்கு மாற்று என்னவென நீண்ட காலமாகவே அவை கவலை யுடன் யோசித்து வந்தன.

புல்பூண்டு, தண்ணீர் தேவைகளுக்கு பேயாய் (தப்பு, தப்பு!) நாயாய் (மீண்டும் தப்பு!) காடெல் லாம் அலைந்து மெலிந்து வாடுகின் றோமே, அதற்கு தீர்வுதான் என்ன? என்று எண்ணி எண்ணி, இரை தேடித் தேடி அலைந்து கண்கள் இருண்டு, கால்கள் தேய்ந்து விட்டன.

வாடிய நமது விநாயகப் பெருமக்களுக்கு, முகாம் பற்றிய சேதி மரத்தோடு தின்ற பலாப் பழங்களாய் இனித்தது. ஆனால் நாமும் முகாமில் எப்படி கலந்து கொள்வது? அதற்கு யாரை அணுகுவது என்று காதோரம் மதநீர் ஒழுக மண்டையை மரத்தில் மோதிக்கொண்டன.

தமிழ் ஓவியா said...


அப்போது ஒரு ஒற்றைக் கொம்பு யானைக்கு ஏதோ சொல்லத் தோன் றியது. அதனுடைய மற்றொரு கொம்பு, புதிய பரிமாணம் எழுத யாராவது சாத்விகளுக்கு வழங்கப்பட்டதா, ஒரு வேளை சத்துணவு பற்றாக்குறைவால் ஒரு கொம்புவளரவே இல்லையா, சங்கிலி பறிப்பு சம்பவம் போல ஒற்றைக் கொம்பை யாராவது பறித்துக் சென்று விட்டார்களா, கொம்பு இரண்டுமே வளராத பணக்கார யானையிடம் காசை வாங்கிக்கொண்டு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு எடுத்துக்கொண்டார்களா?

நமது இராணுவத்துக்கு ஆயுதப்பற்றாக் குறையை சமாளிக்க கொம்பு கடனாக உதவப்பட்டதா? நடுவணரசு வருகிற ஆண்டு வரவு செலவு அறிக்கை தயா ரிக்க உதவும் எழுதுகோலாக எடுத்துக் கொண்டார்களா? இந்தக்காரணங்களில் எது உண்மை, எது பொய் என்றே விளங்கவில்லை. உண்மையறிவதற்காக உச்சநீதிமன்றம், சிபிஅய் மூலம் கமுக்க மாக சில ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருப்பதாக கமலம் தொலைக் காட்சி தகவல் உள்ளதாம். கொம்பு புராணம் ஒரு புறம் கிடக்கட்டும்.

தமிழ் ஓவியா said...


ஒற்றைக் கொம்பன் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். மலைச் சாலையோரங்களில் இரைதேடும்போது அரசாங்க ஜீப் பழுதாகி நின்றதைப் பார்த்தது. அதிலிருந்து இறங்கிய இருவர் பேசிக்கொண்டிருந்த சேதி காதில் கேட்டது. யானையின் காது 7,8 கிலோ மீட்டர் தூரத்தில் எழும் ஓசை யைக் கூட கேட்கும் திறன் வாய்ந்தது என்பதை டிஸ்கவரி சானல் காட்டி யுள்ளதே!

ஒருவர் கையில் செய்தித்தாள் வைத்துக்கொண்டு படித்தார். சென் னையில் சிறப்பு நல்வாழ்வு முகாம் யானைகளுக்கு கொண்டாட்டம். துவக்க விழாவில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு சிறப்பு பயண வசதி, உணவு வசதி, தங்கும் வசதி, இலவச டாஸ்மாக் வசதி செய்ய அதிகாரிகள் தீவிரம்.

யானைகளுக்கு கொண்டாட்டம் என்ற வரி என்னை நின்று யோசிக்க வைத்தது. நாமும் முகாமில் கலந்து கொள்ள ஏதாவது வழியுண்டா என்று எண்ணினேன்.

ஆ! நமது சொந்தக்காரர் நினைவுக்கு வந்துவிட்டார்! பரமசிவன் செய்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையால் உருவாகி, நமது பண்டைய மருத்துவச் சிறப்புக்கு சான்றாக பிரதமரால் போற்றப்படும் போதகப்பிரியர்தான். நமக்கு அருகிலுள்ள தர்மபுரி மாவட் டத்து மத்தூரில் கோவில் கொண்டி ருக்கிறார்.

வல்லபை எனும் அரக்கியின் பெண் உறுப்பு வழியாக தும்பிக்கையை விட்டு கர்ப்ப பையையே உறிஞ்சி லாப்ரோஸ்கோப் முறையில் எடுத்து மருத்துவ தொழில் நுணுக்க வல்லுநர் அதே கோலத்தில் திகழ்கிற வல்லப கணபதிதான் அவர். அண்டை வீட்டா ரான அவரைத்தான் நாட வேண்டு மென்ற நினைப்புடன் தூங்கிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்! அன்றிரவே கஜமுகன் என்கனவில் தோன்றினாரே! நமது புதிய முதல்வரிடமும் சொல்லிவிட்டாராம்! சென்னை துறைமுகம் வழியாக இறக் குமதியாகி வரும் கருவிகளை ஏற்றிக் கொண்டு ஓசூர், பெங்களூரு சென்று காலியாக திரும்பும் கொள்கல வண்டி களை நமது காட்டில் நிறுத்தி நம்மை ஏற்றிச்செல்லும் திட்டம் உள்ளதாம். அதன்படி நாமெல்லோரும் சென்னைக்கு செல்லும் வழி பிறந்துவிட்டது.

இனியென்ன! எல்லோருக்கும் சென்னை நகர வாசம், அம்மா உணவகம் மூலம் சிறந்த உணவு, நல்ல ஓய்வு, மருத்துவ சோதனை என்று எத்தனை வசதிகள்! சொல்லி மாளாது போங்கள்! ஆதி மூலத்தின் ஆசியுடன் புறப்பட்டுவிட்டோம்.

வண்டலூர் முகாமுக்குள் நுழைந்ததும் ஒரு இனிய தகவல். மும்பையில் உள்ள கணபதி சிலைகளுக்கு ரூ. 30 கோடி அளவு காப் பீடு செய்திருந்தார்களாம். கல், மண் சிலைகளுக்கே இவ்வளவு காப்பீடு எனில், நமக்கும் காப்பீடு செய்யலாமல் லவா? மருத்துவ குழுக்காப்பீட்டு திட்டம் வேண்டுமென தீச்சட்டி / பால்காவடி / மொட்டை / முளைப் பாரி / பொங்கல் என்று வேண்டுதல் செய்வோம்.

இதையெல்லாம் தொலைக் காட்சியில் பார்க்கக்கூடிய நமது மக்களின் முதல்வர், கோரிக்கை நிறை வேற்றுவோர் நம்பிக்கை வீண்போகாது.

நம்பிக்கையுடன் எல்லோரும் பிளிறி கூட்டாகக் குரல் எழுப்பி பாராட் டுவோம். முகாமை கணபதி பூஜையுடன் துவக்கி, நமக்கு கரும்பு, அன்னாசிபழம், ஆப்பிள், சாத்துக்குடி, பாசிப்பயறு சத்துமாவு, கொள்ளுச்சாதம் என விதவிதமான புதியவகை உணவுகள் வழங்க ஏற்பாடு செய்த மக்களின் முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்.

இந்த 7-ஆவது ஆண்டு முகாமில் காட்டு யானைகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பை தொடர்ந்து வருகிற ஆண்டுகளுக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உலகில் வேறு எங்கும் விலங்கு களுக்கு தனியாக முகாம் நடத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நமது மக்களின் முதல்வர் தோட்டத்துக்கும் ஒரு நடை சென்று வரலாம். சிறீரங்கத்தி லிருந்து வந்த யானை அங்குள்ள கோவிலிலும் வல்லப கணபதி சிலை உள்ளதாகச் சொன்னது.

அதோடு அம்மா அவர்களது ஆசி பெறப்போகும் போது, நமது காடுகள் (மொத்த பரப்பில் 14% அளவே உள்ளவை) வறண்டு அழிக்கப்பட்டுப் போகும் நிலையில் நிரந்தர முகாம்கள் தேவை என்ற வேண்டுகோளை வைத்து விட எல்லா கஜமுகங்களும் ஆமோதித்தனவாம்.

Read more: http://viduthalai.in/page7/94519.html#ixzz3PELbcFXI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இ.சேவை

தங்கரதம் இழுக்க அன்னதானம் வழங்க நேர்த்திக்கடன் கழிக்க இ.சேவை மூலம் முன் கூட்டியே பதிவு செய்யும் முறையை இந்து அற நிலையத் துறை செய்துள் ளதாம். பக்கா பிசினஸ் இன்றைய ஆன்மிகம் என்பதற்கு வேறு என்ன தேவை?

Read more: http://viduthalai.in/e-paper/94574.html#ixzz3PGegLinR

தமிழ் ஓவியா said...

இந்தியாவை இந்து நாடாக மாற்றியே தீருவோம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கக்கும் இந்துத்துவா நஞ்சு!

சாகர், ஜன 19-_ மத்தியப்பிரதேசம், சாகர் என்ற ஊரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழா ஒன்றில் பேசிய மோகன் பகவத் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று மீண்டும் தன்னு டைய நச்சுப் பேச்சைக் கொட்டி வைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாஜக ஆட் சிக்கு வரும் போதெல் லாம் தன்னுடைய செயல் பாடுகளை அவ்வப்பொ ழுது காட்டிக்கொண்டு இருக்கும். தற்போது பெரும்பான்மை பலத் துடன் பாஜக ஆட்சிக்கு வந்த காரணத்தால் தன் னுடைய குரலை அதி காரத் திமிரோடு மிகவும் உயர்த்தி உளறிக்கொண்டு இருக்கிறது.

சாகரில் நடந்த கூட்டம் ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது: நமது நாடு தற்போதும் அந்நியர்களின் பிடியில் உள்ளது, நாம் உண்மை யான சுதந்திரத்தை இன் றும் அடையவில்லை. அந் நிய மதத்தினர் தங்களு டைய ஆதிக்கத்தை இன் றும் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும், இஸ்ரேல் எந்த ஒரு நிலையிலும் அந்நிய மதத்தவரை தங் களது நாட்டின் குடிமக னாக ஏற்றுக் கொள்வ தில்லை, அங்கு ஒரே மதம், அந்த மதத்தவர்தான் அந்த நாட்டின் வளர்ச் சியை நிர்ணயிக்கின்றனர். இஸ்ரேல் ஒரே மதத்தவர் நாடாக இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரிகளை விரட்டி விடுகின்றனர்.

அதே போல் நாமும் இந்த நாட்டை, இந்து நாடாக மாற்றுவோம், நம்மைச்சுற்றி பல எதிரி நாடுகள் உள்ளன. இந்தியா இந்து நாடாக மாறும் போது, இந்தியா விற்கு முழுபலம் வந்து விடும் பிறகு நாமும் இஸ் ரேலைப் போன்று அந்நிய நாடுகளை எளிதில் வென்று விடலாம், அகண்ட பார தம் அமைக்க இந்து நாட் டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அரசியல் கார ணங்களுக்காக யாரும் இந்துத்துவா செயல்களை நிறுத்தவேண்டாம். மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்த அரசு தற்போது உள்ளது போன்றே அமைதி காக்க வேண்டும். எங்கள் பணி இந்தியாவை இந்து நாடாக மாற்றும் வரை தீவிரமாக தொடரும் என்று மோகன்பவத் நஞ்சைக் கக்கினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94571.html#ixzz3PGesNyEh

தமிழ் ஓவியா said...

திராவிடர்கள்தான்

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/94576.html#ixzz3PGfZO5D4

தமிழ் ஓவியா said...

அருகதையற்றவர்கள்


பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.

(விடுதலை, 7.7.1965)

Read more: http://viduthalai.in/page1/94508.html#ixzz3PGgaOF00

தமிழ் ஓவியா said...

யோகப் புரட்டு


மூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்க மிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத்தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.

ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய்விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங்களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார்.

இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணு வதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றன. ஆனால் அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளு வதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதை யென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இதுபோன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 03.04.1932

Read more: http://viduthalai.in/page1/94480.html#ixzz3PGhgkE00

தமிழ் ஓவியா said...

இனப்படுகொலையாளனுக்கு ஜனநாயகத் தீர்ப்பு முதல் படியே!


இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார்.

அவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச அபயகுணவர்த்தனாவும் அமோகமாக வெற்றிபெற்று விடுவீர்கள் என உறுதி வழங்க, திருப்பதி வெங்கியையும் தரிசித்துவிட்டு, தேர்தல் களத்திற்குத் தயாரானார் இராஜபக்சே. ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்தின் ஆட்டம் காரணமாக வெறுப்பிலிருந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, மகிந்த ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சரான மைத்ரி பால சிறீசேனாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிபராக்கி யிருக்கின்றனர். இதில் தமிழர்களின் வாக்குகள் தான் மைத்ரி பாலவுக்கு வெற்றியை உறுதி செய்திருக் கின்றன. தமிழர்கள் விசயத்தில் மைத்ரி பால தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட மாட்டார் என்றாலும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு மக்கள் வழங்கியுள்ள தண்டனை இது. ஆனால், இது முடிவு அல்ல.

அயல்நாடுகளுக்குத் தப்பிச் செல்கிற முகாந்திரம் ராஜபக்சே குடும்பத்திடம் தெரிகிறது. அதைத் தடுத்து, உரிய பன்னாட்டு விசாரணக்கு உட்படுத்தி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இதை மைத்ரி பால நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும், உரிய அழுத்தம் தந்து அய்.நா மற்றும் உலக நாடுகள் பன்னாட்டு விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்த சு.சாமி, ஊடகங்கள் உள்ளிட்ட கைக்கூலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்வார்கள். என்ன, தனது ஆதரவு பெற்றவரும், தன்னைப் போலவே இனப்படுகொலை, உருட்டல்-மிரட்டல், அதிகாரப் போக்கு, அலங்கார பாவனை என்று அலைந்த ராஜபக்சே தோற்றதில் மோடிக்குத் தான் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும்!

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர்.

- அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர்

விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும்.

இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது.

- இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில்

நமது நாட்டில் சட்டங்களுக்கும் நலத் திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக_பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

- நீதிபதி டி. முருகேசன், மனித உரிமை ஆணைய உறுப்பினர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்-களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அய்.நா. அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

சமூகத்தில் உள்ள அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

- நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திட்டக் கமிசனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும்.

- தருண் கோகாய், அசாம் மாநில முதல் அமைச்சர்.

தற்போது முன்னேறி வருகின்ற இந்தக் காலம் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங்-களையும் தாண்டி மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனுபவமாக மாணவர்கள் கருத வேண்டும்.

- சி.சைலேந்திர பாபு, ஏடிஜிபி தமிழக கடலோரக் காவல்படை

தமிழ் ஓவியா said...

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே
திரைப்படம் விரைவில்

ஜனவரி 30 வெளியீடாம்

நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:

நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.

இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.

இதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.

உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

குறுஞ்செய்தி


பிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள்.

860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்து 1971ஆம் ஆண்டில் வெளியிடப்-பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது.

சத்ய யுகம் 1728000ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள். மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படிச் சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி-விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?! -

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா

கோட்சேவுக்கு சிலை

பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார்.

இது, நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற் குள்ளாகிக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையைத் திறக்க முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம்.

இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்குச் சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக்கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.

நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்குச் சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது.

விரைவில் நாடெங்கும் கோட்சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில்தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில்தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார்.

அவருக்குப் புகலிடமும், திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்-தான். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தர-விடப்பட்டு, இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம்.

காந்தியைக் கொலைசெய்வதற்கு முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களை முதலில் மறுத்த பா.ஜ.க. இப்போது மெல்ல மெல்ல கோட்சே ஒரு தேசபக்தன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் இயக்கத் தலைவருக்கு பாரத ரத்னா கொடுத்த அரசு வேறு எப்படியிருக்கும்?

தமிழ்நாட்டில் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் வேகமாக சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஈரோட்டில் அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய சுபாஷ் சுவாமிநாதன் யார் தெரியுமா? இதோ நக்கீரன் (2015, ஜன. 03_06) இதழ் சொல்கிறது.
யார் இவர்? எதற்காக இந்தக் கொடிய கோரிக்கை? விசாரணையில் இறங்கினோம்.

100 நாளில் கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்று திருச்சியில் பல நூறு மக்களிடம் வசூல் செய்து கோடீஸ்வரரான ரவிச்சந்திரனின் பார்ட்னராக இருந்தவர்தான் இந்த சுபாஷ் சுவாமிநாதன். பணமோசடி, முறைகேடுகள் என பல புகார்கள் இவர்மீது உள்ளன. அவற்றிலிருந்து தப்பிப்பதற் காகவே அகில பாரத இந்து மகா சபா கட்சி என்றொரு லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்து அதன் இளைஞர் அணி தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.

எனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பஜ்ரங்தள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளன என்று பலரிடமும் தெரிவித் திருக்கிறார் இந்த சுபாஷ்.
அயோக்கியத்தனத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக காவிதானே இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

-கி.தளபதிராஜ்

சனாதனப் பற்றாளரே
மாளவியா!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவைத் தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.



இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களைத் தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம்.

அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டுத் திரும்பியவர் என்பதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

1929இல் "சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்" என்று பேசிய மாளவியாவை எதிர்த்து "கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?" என்று கேட்க, அதற்கு "சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று நழுவியவர் மாளவியா.

"உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களைச் சேர்த்துக் கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு, "நீங்கள் புலையர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பீர்களா?" என ஆத்திரம் பொங்கக் கேட்டார் மாளவியா.

கூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் "நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை" என்று சொல்ல, மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடிஅரசு எழுதியது.

தொடர்ந்து ஜாதியமைப்பை ஆதரித்துப் பேசிவந்த மாளவியாவைக் கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடிஅரசு பத்திரிகை. "இந்து ஜாதிய அமைப்பில், எல்லா ஜாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.

மற்றொருவன் சமைத்ததைப் பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்கச் சாப்பிடுவது நரகம் சித்திக்கக் கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்'களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்"என்று குறிப்பிட்டிருந்தது.

தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனியத்தைக் காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனியத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

பம்பாய் கல்பதேவியில், 1932ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி-யொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவற்றைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்-பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும்.

"ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதைப் படித்துவிட்டுச் சொந்தப் புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டை-களுமே ஆகும்" என்று மாளவியாவின் பேச்சிற்கு குடிஅரசு பதிலடி கொடுத்தது. அப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக் கூட்டம் பாரத ரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழில் திருமணத் திட்டம் உண்டா?

கேட்டல்: சரி, பெரியார் தமிழில் திருமணம் பற்றிய திட்டம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாரே?

கிளத்தல்: திருமண முறையில் கோடிக்-கணக்கான குப்பைகள், மூடச் செய்கைகள், முட்டாள்-தனமான செலவுகள், நடைமுறைகள், மானக்கேடான செயல்கள் சேர்ந்துள்ளன; இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி ஒதுக்கச் சொல்லுகிறவர் பெரியார் ஒருவர்தாம்! இவர் பேசுகின்ற முறையில் திருமணம் பற்றித் தமிழில் ஒரே இடமாக எங்கே விளக்கப்பட்டிருக்கின்றது.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (14.6.1960)

தமிழ் ஓவியா said...

தை தை தை என்றே பாடுவோம்!


பொங்கலோ பொங்கலுன்னு
பொங்கனும் மானுடம்
பொல்லாப்பு பொய்களெல்லாம்
பொசுங்கனும் மனிதரிடம்
எரியும் அடுப்பிலே
ஏழ்மை கருகட்டும்
கரும்பின் இனிப்பிலே
கசப்புகள் கழியட்டும்
தோரணத் தொங்கலில்
தோழமை மிளிரட்டும்
அழகுக் கோலங்களில்
அறிவு ஒளிரட்டும்
கபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊரு
கதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு

கழனியிலே கதிர்மணிகள்
கவிதைகளாய் வெளிப்படும்
விவசாயியின் வியர்வைத் துளிகள்
விதைகளாய்த் துளிர்விடும்
உழுபவனின் விரல் அசைவில்
உழலும் நரிகள் வழிவிடும்
உழைப்பவனின் கைகளை
உலகம் வணங்கி வழிபடும்
இயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழா
இதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா

மாட்டு வண்டி ஓட்டத்தில்
மாவிலையும் குதித்தாடும்
சலங்கை ஒலி ஓசையில்
சகலமும் கூத்தாடும்
பறைகளின் கூட்டிசையில்
பனை மரமும் அசைந்தாடும்
குழந்தைகளின் கூக்குரலில்
குருவிகளும் இசைந்தாடும்
மனிதத்தை முன்னிறுத்தும் மகத்தான திருவிழா
மண்ணுக்கு மரியாதை அளித்திடும் பெருவிழா

மடிப்புக் களையா வேட்டிகள்
மங்கையரை நோக்கிடும்
துடிப்புக் கொண்ட தாவணிகள்
துள்ளலாய்த் தாக்கிடும்
இளையோரின் பானைகளில்
இளங்காதல் வழிந்திடும்
இணையதள காலத்தில்
இயற்கையும் மகிழ்ந்திடும்
தை தை தை என்றே பாடுவோம்
தைத் திங்கள் நாளிதைக் கொண்டாடுவோம்

- மணிமாறன் மகிழினி

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர்கள் படுகொலை

பிரச்சினை நிறைந்த இடங்கள், உள்நாட்டுப் போர் நடைபெறும் ஆபத்தான இடங்கள் என துணிச்சலுடன் சென்று செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை உள்ளது. 1993ஆம் ஆண்டி-லிருந்து இதுவரை 1056 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004ஆம் ஆண்டிற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் படுகொலையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கில் 166, சிரியாவில் 79, பிலிப்பைன்சில் 75, பாகிஸ்தானில் 56, சோமாலியாவில் 56, இந்தியாவில் 32 பேர் என்ற எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாம் இடத்திலிருக்கும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10, ஆந்திராவில் 7 பேர் கொலை செய்யப்-பட்டுள்ளனர். கொல்லப்படும் பத்திரிகையாள-களில் மூன்றில் இரண்டு பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அல்லது போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் இரு பிரிவினர் இடையிலான மோதல் போன்ற நிலைகளில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது உயிரிழக்-கின்றனர். இந்தியாவில் 32 பேர் என இருப்பினும், இன்னும் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்-பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

புரட்சிப் பொங்கல்

பழைமைவாதப்
பஞ்சாங்கப்
படிப்பு வேண்டாம்!

மதவாத
மண்சரிவில்
மடிய வேண்டாம்!

ஜாதியெனும்
சாக்கடையில்
வீழ வேண்டாம்!

மூடமதிக்
குட்டையிலே
மூழ்க வேண்டாம்!

பெண்ணடிமைப்
பெருஞ்சேற்றில்
புதைய வேண்டாம்!

ஆரியத்தின்
கலாச்சார
வாடை வேண்டாம்!

பெரியாரை
ஒரு நாளும்
மறக்க வேண்டாம்!

பொங்கட்டும்
புரட்சிப்
பொங்கல்!

தமிழ் ஓவியா said...

பொங்கல் கவிதை

- கலைஞர்

மானத்திற்கு மறுபிறப்பு

ஞாயிறு போற்றுதும்;
ஞாயிறு போற்றுதும்!
சிலம்பொலி கேட்குது;
சிந்தையில் இனிக்குது!
ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;
ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;
ஞாயிறு போற்றினர்!
ஞாயிறு போற்றினர்!
ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்!
பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்!
ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்!
ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்!
மாவிலை தோரணம் மஞ்சள் வாழை
கோவிலின் முரசம் கோலம் கண்டனர்!
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்
பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்
புரிந்து வாழ்ந்தனர்!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றி மூத்தகுடி எனினும்
காடு கொன்று நாடாக்கக்
குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்!
வில் தோன்றும், தோள்களிலே - அது
வீரம் காட்டும்.
நெல் தோன்றும், வயல்களிலே - அது
வேளாண் திறத்தைக் காட்டும்.
சொல் தோன்றும் புதிது புதிதாக - அது
மொழியின் வளத்தைக் காட்டும்.
எழுத்து, சொல், இரண்டேயன்றி
பழுத்த நல் தொல்காப்பியன் - தமிழர்தம்
செழிப்பு மிகு வாழ்வுக்கும்
தொகுத்தளித்தான் இலக்கண நூல்!
கொய்யாக் கனித் தமிழால் - குறள்
நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்!
பெய்யா மழை பெய்தது போல் மகிழ்ச்சி கொள்வோம் - அவன்
பொய்யாமொழிக் கவி கேட்டு!

***
பல் முளைத்திடா மழலையருடன் பருவக் கிள்ளைகளுடன்
பண்பார் பிள்ளைகளுடன் பொங்கலோ பொங்கலெனப்
பொங்கும் மகிழ்வுடன் ஆடிப்பாடிடும் அழகுத் திருநாள்!
அன்புத் திருநாள்! அமுதத் திருநாள்! ஆம்; அன்றொரு நாள்!
இந்தப் பூமியில் ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை
என்றல்லவா வீரத்திற்கு இலக்கணம் தீட்டப் பட்டிருந்தது!
இன்றோ; இந்தத் தமிழ் நிலத்தில் வீரம், விலை கேட்கும் பொருளாகவும் - தீரம்,
திக்கற்ற குழந்தை போலவுமன்றோ ஆகிவிட்ட அவலம் காண்கிறோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலமாய் இருக்கலாம்; அதற்காக; நம்மை, நமது
பண்பாட்டை இகழ்வாரைத் தாங்கும் நிலைப்பாடு இருக்கலாமா?
கொதித்தெழு; பிறரை வதைத்தெழ! என்று கூறமாட்டேன் - நம்மையே நாம்
பலியாக்கிக் கொள்ள நேரிடினும் பரவாயில்லை; நமது பழம் பெருமைக்கு ஊறு
நேரிடுகிறது எனக் காணும்போது, நமது வரலாறு மாய்க்கப்படுகிறது
என்கிறபோது, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்காமல் அதற்கென
அமையும் களத்தில் உயிரைச் சாவில் நட்டு உரிமைகளை வாழ வைப்போம்
எனும் வீரம் கொள்வோம் என்றே இப்பொங்கல் நாளில் சூளுரையேற்க
அழைக்கிறேன்!

மறு பிறப்பு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!
ஆனால்; தமிழினத்தின் மானத்திற்கு - வீரத்திற்கு - மறுபிறப்பு வேண்டுமென
மன்றாடுகிறேன்!
யாரிடம்?
தமிழன்; தமிழனிடம்தான் மன்றாடுகிறேன்!
என் கோரிக்கை நிறைவேறிட;
இந்தப் பொங்கல் இனிதே பொங்குக!
நூல்: கலைஞரின் கவிதை மழை

பொங்கல் விழா கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதை (14.01.1975).

தமிழ் ஓவியா said...

போதை... கீதை...

சரக்கு போதையில் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கிருஷ்ண பகவானே கீதையில் சொல்கிறார் கேளுங்கள்.

த்ரைவித்யா மாம் ஸோமாபா: பூத பாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர் கதிம் ப்ரார் தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ர லோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகான் சுவர்க்க உலகங்களை நாடி, வேதங்களைப் பயின்று 'ஸோம ரச'த்தை அருந்துபவர்களும் என்னையே மறைமுகமாக வழிபடுகின்றனர்.
அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பங்களைச் சுகிக்கிறார்கள்.

-பகவத்கீதைஅத்யாயம்9.பதம்20

பேச்சு வழக்கில், ''போதை கீதை ஏத்திக்கப் போற.... ஒழுங்கா வந்து சேர்'' என்பார்கள். ஆமாம், போதை, கீதை ரெண்டும் வேண்டாம்.

- க.அருள்மொழி, குடியாத்தம்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விரிவடையச் செய்த பெரியாரின் எழுத்துகள்

என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார்? பெரியார்தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள்.இயல்பாகவே மகிழ்ச்சிகரமான மனப்போக்கு உள்ளவன் நான். பெரியாரின் எழுத்துகள் எனது மகிழ்ச்சியை இன்னும் விரிவடையச் செய்தன.

அநாவசிய மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்? நான் எந்த ஓட்டலில் தங்கினாலும் 13ஆம் எண் அறையா என்று பயப்படுவதில்லை. 8ஆம் தேதி படப்பிடிப்பா என்று பதறுவதில்லை. இதெல்லாம் பெரியாரின் எழுத்துகள் எனக்குச் செய்த பேருதவிகள்.

- நடிகர் சத்யராஜ்

தமிழ் ஓவியா said...

முழுமையான திருவிழா


தை! தை! தை திருவிழா
தமிழர்களின் பெருவிழா
பொங்கல் எனும் ஒருவிழா - நாம்
போற்றிப் புகழும் திருவிழா


குடும்பமாக ஒன்று சேர்ந்து
குதூகலிக்கும் ஒருவிழா
குழந்தைகளும் மகிழ்வுடனே
கொண்டாடும் திருவிழா (தை)

இயற்கை தன்னைப் போற்றுகின்ற
இனிமையான ஒருவிழா
இருளை நீக்கி ஒளிவழங்கிடும்
சூரியனின் திருவிழா

உழவருக்கு நன்றிசொல்லி
உழைப்பைப் போற்றும் ஒருவிழா
உழைப்பில் வந்த அரிசி பொங்கி
குலவை கொட்டும் திருவிழா

இதயம் கனிந்த வாழ்த்துச் சொல்லும்
இன்பமான ஒருவிழா
இனிக்கும் பொங்கல் கரும்பு தின்னும்
சுவையான திருவிழா (தை)

தமிழர்களின் பண்பாட்டைப்
பறைசாற்றும் ஒரு விழா
தமிழரெல்லாம் கொண்டாடும்
பகுத்தறிவுத் திருவிழா

ஜாதிமத பேதமின்றி
சகலருக்கும் ஒருவிழா
மூடத்தனம் ஏதுமில்லா
முழுமையான திருவிழா (தை)



- மு.கலைவாணன்

தமிழ் ஓவியா said...

புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை


பத்தியம் இருப்பவர்கள் உண்ணக்கூடாத கீரை என்று அகத்திக் கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்தை அதிகமாக கொண்டது.

கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தி கீரையை துவையல் செய்யும்போது புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புதன்மை விலகும். அகத்திக்கீரை- கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன.

இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கி யாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும். கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, தேநீர், இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, காய்ச்சல், தாகம், கை கால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் ஆகியவை தீரும்.

குழம்பு வைக்கும்போது, தாளிக்கும்போது கறிவேப்பி லைக்குப் பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்று புண் அகலும். மலேசி யாவை தாயகமாக கொண்ட அகத்தி இந்தியாவில் ஈரப்பசை அதிகமுள்ள நிலங்களிலும், களிமண் நிலத்திலும் செழித்து வளரும்.

நான்கு வகைகள் கொண்ட அகத்தியில் வெள்ளை பூ பூக்கும் அகத்தியே மனிதன் உண்ண தகுந்தது. மற்ற வகைகள் அபூர்வம் என்றாலும், அவை கால்நடை களுக்கே உணவாகப் பயன்படுகின்றது. புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால் அதனை களையும் சக்தி அகத்திக்கு உண்டு.

நீராகாரம் பருகும் பழக்கமுடையவர்கள் அகத்தி கீரை சமையலாகும் நாட்களில் கீரை, ரசம், நீராகாரம் மூன்றையும் கலந்து பருகுவர். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல், நீரடைப்பு தீர்வதுடன் உடலின் நச்சு நீர்கள் முறிவடைகின்றன. எனினும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ணவல்லது அகத்தி.

இலைச்சாறும் நல்லெண்ணெய்யும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் குறைந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/94608.html#ixzz3PK5t2Jgi

தமிழ் ஓவியா said...

ஏலக்காயில் மருத்துவ குணம் ஏராளம்

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர் களுக்கும்கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட் டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

ஏலக்காயை தேநீர், பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே, காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவையும், பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பேறும் உண்டாக்கும்.

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காயும், இலவங்கப் பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

செரிமானமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ் செரிச்சலும், வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காயை மெல்லுவது நல்லது.

இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து குடிக்கச் செரிமான மின்மை. பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/94608.html#ixzz3PK60KQDT

தமிழ் ஓவியா said...

ஆரோக்கியம் தரும் மூலிகைத் தண்ணீர்


வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சினை, வயிற்றுவலி, குடல் இரைச்சல், போன்ற பிரச் சினைகள் தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்தால் பிரச்சினைகள் தீரும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் உடல்சூடு போன்றவை தணியும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்த மல்லி ஆகியவற்றை தட்டிப்போட்டு போதுமான அளவு சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் நாவல் பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சர்க்கரை குறையும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால் பெருங்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊற வைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வு பிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிக தாகம் அடங்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிச்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிச்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.

ஒருமுறை தயாரித்த நீரை அதிகபட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயன்படுத்தலாம் அல்லது மண்பானை நீரையும் பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/94607.html#ixzz3PK6EcZSF

தமிழ் ஓவியா said...

உடலின் செயல்பாடுகளை சிதைக்கும் தைராய்டு கோளாறு


இந்தியாவில் 4.2 கோடி மக்கள் தைராய்டு கோளாறி னால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது. தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும். இதன் முக்கிய வேலை தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும்.

இந்த ஹார்மோன்கள் உடல் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்கு உதவுகிறது. உடல் வெப்பநிலையை மேம்படுத்து கிறது. உடல் உறுப்புகளுக்கு அவற்றின் செயல்பாட்டில் துணை புரிகிறது. மொத்தத்தில் உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது.

உடலில் ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை பாதிக்கின்றன. தைராய்டு சுரப்பியின் அழற்சி உள்ளிட்ட சில அம்சங்கள் தைராய்டு கோளாறுகளுக்கு காரணமாகின்றன. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஏற்கெனவே தைராய்டு பாதித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை பாதிக்கும் மருந்துகள் ஆகியவையும் தைராய்டு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை (ஹைபோ தைராய்டிஸம்) ஏற்பட்டிருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் (ஹைபர் தைராய் டிஸம்) ஏற்பட்டிருக்கலாம்.

ஹைபோ தைராய்டிஸத்தின் அறிகுறிகள், மனச்சோர்வு, விவரிக்க முடியாத எடை கூடுதல், களைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம், அதிக கொலஸ்ட்ரால், ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை அல்லது கருத்தரித்தலில் சிக்கல். கால்களில் வீக்கம் ஆகியவை.

ஹைபர் தைராய்டிஸத்தின் அறிகுறிகள், அதிகப்படியாக மலம் கழித்தல், எடை இழப்பு, நடுக்கம், தொடர்ந்து தொண்டை வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், விரைவான இதயத்துடிப்பு, வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பத உள்ளங்கை, தூங்குவதில் சிரமம் ஆகியவை.

இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தா லோசிக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும். பெரும்பாலான தைராய்டு கோளாறுகளை மருந்துகள் கொண்டு எளிதில் கட்டுப் படுத்தலாம். உணவுத் திட்டம் தைராய்டு நோயை பாதிப்பதில்லை.

கோதுமை, அரிசி, சோளம், ஆப்பிள் ஆகிய தானியங்கள், ஆரஞ்சு, திராட்சை ஆகிய பழங்கள், கீரை வகைகள், மீன், ஆலிவ் எண்ணெய், தாவர எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான உணவுகளாகும். இது ஒட்டுமொத்த நலனுக்கு நன்கு உதவும்.

இவற்றை சரியாக உண்ணவேண்டும் மற்றும் உடற்பயிற்சி மேற் கொள்ளவேண்டும். இத்தகைய ஆரோக்கிய பராமரிப்புகள் தைராய்டு கோளாறுகளை சரி செய்யும் மருந்துகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/94609.html#ixzz3PK6Nr71P

தமிழ் ஓவியா said...

நான் தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவேயில்லை என்றும் பேசுவது தவறு, உண்மைக்கு புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935 ம் ஆண்டில், நான் அப்போது பி.ஏ. ஹானர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன். பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும் நானும் முதலில் சந்தித்தோம். அவரிடம் எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது.

அவரது சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்குப் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து “என்ன செய்கிறாய்” என்று கேட்டார். ‘படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன்’ என்றேன். ‘உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?’ என்றார். “இல்லை. உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை, பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம்” என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகி விட்டேன். பொது வாழ்வில் அன்றிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான் அவரது குடும்பத்தாருக்கு! இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை எனக்கும் அவருக்கும் ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 வருடங்கள் அவரோடு பழகினேன். 14 வருடங்களாகப் பொதுவாழ்வில் இருக்கின்றேன்.

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர் தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததும் கிடையாது, செய்யவும் மனம் வந்ததில்லை. வராது. அதே காரணத்தினால்தான், இன்றுகூட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கூடத் தலைவரை ஏற்படுத்த வில்லை; அவசியம் என்று கருதவில்லை. இதய பூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது நாங்களே, அல்லது நானே அமரவோ விரும்பவில்லை ! "

- திமுக தொடக்க விழாவில் அண்ணா .

தமிழ் ஓவியா said...

பாடுபடுவான்

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

Read more: http://viduthalai.in/page-2/94634.html#ixzz3PPprWpim

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

விடுதலைப் பத்திரிகையில் தங்களின் சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் படித்தேன். சாமியார்களின் அலங்கோல வாழ்க் கையை திருச்சிக் கூட்டத்தில் எவ்வளவு தெளிவாக பேசியதை படித்தபொழுது இப்படிப்பட்டவர்களை நம்பி நாட்டின் தலைவர்கள் முதல் மக்கள் வரை அவர் களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்ற நிலை மாறி புதிய சிந்தனை வளரவேண்டும்.

விடுதலைப் பத்திரிகையின் ஒவ் வொரு அசைவு மனித குலத்தை சிந்திக்க வைக்கும் பொங்கல் மலரில் கவிஞர் கலி.பூங்குன் றனின் கவிதை எவ்வளவு உணர்ச்சி பொங்க வடித்துள்ளார்கள்!

பொங்கல் அன்று காலை எழுந்து விடுதலை பத்திரிகையை வரி விடாமல் படித்தேன். செங்குட்டுவனின் கட்டுரையில் காரல் மார்க்சின், திராவிடர்களை அடுத்தவர் ஆண்டதுதான் தமிழர் வரலாறு என்பதை அழகாக சித்தரித்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டுரையும் அனைவரும் படித்து மக்களிடம் கூற வேண்டிய கருத்துக்கள் விஞ்ஞான உலகம் எவ்வளவு மாறினாலும் பிராமண ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்னும் பல்லக்கு சுமக்கும் நிலை. சாதாரண மக்கள் சிந்திக் கின்றார்களா? இன்னும் அவனை ஓர் கடவுளாக ஏற்றுக் கொள்ளும் நிலை மாறவில்லை.

உலகில் முதல் அரசியல் சாணக்கியனைப் பற்றிய கட்டுரையை ஒவ்வொரு மாண வனும் படித்தால் இன்றைய மோடி நிலைமை புரியும்.

விடுதலையின் ஒவ்வொரு கட்டுரையை யும் படிக்கப் படிக்க எவ்வளவு உண்மைகள் தெரிகின்றன. ஒவ்வொரு இளைஞர்கள் பொதுமக்களும் படிக்க வேண்டிய இதழ்.

எவ்வளவு காலம் மூட நம்பிக்கையில் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. படித்த வேலை பார்க்கும் மனிதர்கள் கோவிலைக் கண்டவுடன் மண்டையில் குட்டிக் கொள் கின்ற நிலை.

மாறுகின்ற வரை மனிதர்களை சிந்திக்க வைக்கும் முயற்சி தொடர வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பை உறுதியாகச் செய்வேன். தைப்பொங்கலில் எல்லோரும் சபதமேற்று பணியைத் தொடர வேண்டும். - தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல். (75 வயதுள்ள நாளும் கொள்கை பரப்பும் பொது உடைமை - உணர்வாளர் சிந்தனை இது!)

Read more: http://viduthalai.in/page-2/94654.html#ixzz3PPqP7bit

தமிழ் ஓவியா said...

உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்! புலம்புகிறார் மகிந்தா ராஜபக்சே


என்னை தமிழனோ, முஸ்லீமோ அழிக்க வில்லை. நீங்கள்தான் என்னுடைய அரசியல் வாழ்வை நாசப் படுத்தினீர்கள் என்று கோத்தபாயவிடமும், தன் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே.

தேர்தலில் தோல்வி யடைந்த பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற மகிந்தா அங்கு தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு அவரது வீட்டில் கூடி யிருந்த அவரது உறவினர் கள் அனைவரையும் திட் டித் தீர்த்துவிட்டார்.

இது குறித்து இலங்கை உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி யில், எனது 45 ஆண்டு அர சியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும் சகோதரா களாலும் அழிந்துவிட்டது என அனைவரையும் திட்டி தீர்த்தாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/94657.html#ixzz3PPqrYBsC

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் - திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!

மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி, ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.108 கோடி - வருவாய்.

செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!

இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர் தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்? அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!

பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்

2) கடவுள் (கல்) முதலாளிகள்

3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.1.2015

தமிழ் ஓவியா said...

ஜாதி-மத வெறிகளை எதிர்த்தும்,
மனிதநேயம், சமூகநீதியை வலியுறுத்தியும்
2000 வட்டார மாநாடுகள்
திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


திருவாரூர், ஜன.21- ஜாதி, மதவெறி களை எதிர்த்தும், மனிதநேயம், சமூக நீதியை வலியுறுத்தியும் 2000 வட்டார மாநாடுகள் தமிழகம் முழுவதும் திரா விடர் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரு கின்றன என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (21.1.2015) திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: திராவிடர் கழக மாநாட்டின் நோக்கம்...?

தமிழர் தலைவர்: ஜாதி வெறி, மத வெறிகளை எதிர்த்தும், மனித நேயம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 2000 வட்டார மாநாடுகளை நடத்த திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (22.1.2015) வரை 14 மாநாடுகள் நடைபெறுகின்றன. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அதனுடைய சங் பரி வாரங்களும் புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சி செய்கின்றன. அதுகுறித்து மக் களிடத்தில் எச்சரிக்கை உணர்வை ஏற் படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்க மாகும். புதிய பலம் ஏற்பட்டதுபோல அவர்கள் நினைக்கிறார்கள்.

அது இல்லை என்பதை நாம் காட்டுவோம்

செய்தியாளர்: மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து...?

தமிழர் தலைவர்: டில்லியில் சிபிஅய் இயக்குநரை வழக்கு சம்பந்தப் பட்டவர்கள் யார் யார் சந்தித்தார்கள் என்பது பிரச்சினையானது. உச்சநீதிமன் றத்திலும் இது கடுமையாக விமரிசிக்கப் பட்டது. இது மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு தெரியாததா?

செய்தியாளர்: இலங்கையின் புதிய ஆட்சி குறித்து...?

தமிழர் தலைவர்: ஒரு மாற்றம் தெரி கிறது. 13 ஆவது சட்டத் திருத்தம் நிறை வேற்றப்படும் என்பதும், மாகாணங் களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப் படும் என்கிற மாநில சுயாட்சி அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இந்த வெள்ளிக்கீற்று கள் அகலமாக வேண்டும். ராஜபக்சே குடும்பம் செய்த அநியாயங்கள், கொடு மைகள்குறித்து விசாரணை ஆரம்ப மாவது வரவேற்கத்தகுந்தது.

செய்தியாளர்: மீத்தேன் திட்டம் வரவேற்கத்தகுந்தது என்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்: மூன்றாண்டு களுக்கு முன்பாகவே மதுக்கூர் திராவிடர் கழக மாநாட்டில் மீத்தேன் குறித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட் டில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துக் கிளம்பியுள்ள இந்த காலகட்டத்தில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது சரியானதுதானா? நாட்டு மக்கள் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியாளர்: சிறீரங்கம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?

தமிழர் தலைவர்: சிறீரங்கம் தேர்தல் ஆதரவுகுறித்து விரைவில் அறிக்கை வெளிவரும்.

செய்தியாளர் சந்திப்பின்போது திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/94680.html#ixzz3PVinkqc4

தமிழ் ஓவியா said...

தமிழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு; 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி


கொழும்பு, ஜன.21_ தமி ழர் பகுதிக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க 13- ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

கடந்த 1987- ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா_- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெய வர்த்தனேவும் கையெழுத் திட்டனர்.

அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட் டத்தில் 13- ஆவது திருத் தம் மேற்கொள்ளப்பட் டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதி காரப் பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், 13 ஆ-வது சட்டத் திருத் தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இது வரை அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை.

ஆனால், 13- ஆவது சட் டத் திருத்தத்தை எழுத் திலும், செயலிலும் அமல் படுத்துமாறு இலங்கையை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 8- ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜ பக்சே தோல்வி அடைந் தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவி ஏற்றார்.

அய்க்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக நாடாளுமன் றம் கூடியது. நாடாளு மன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம்பற்றி விளக்கிக் கூறினார்.

அப்போது அவர், 13- ஆவது சட்டத் திருத் தத்தை அமல்படுத்தப்
போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-

வெவ்வேறு கொள்கை களும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சி கள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர் வாதிகார குடும்ப ஆட் சிக்கு முடிவு கட்ட நாங் கள் ஒன்று சேர்ந்தோம்.

எல்லா அரசியல் கட்சி களிடம் இருந்தும் நாங் கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர் சனங்களையும் வரவேற்கி றோம். தேசிய பிரச்சினை களுக்குத் தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச் சினைகளை இந்த நாடா ளுமன்ற பதவிக்காலத் துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.

மாகாணங்களுக்கு அதி காரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13- ஆவது அரசியல் சட்ட திருத் தத்தை அமல்படுத்து வோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப் படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக் கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

ஜனநாயக சீர்திருத்தங் களை அறிமுகப்படுத்து வதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும் பகுதியாக இருக்கும். ராஜ பக்சே, நாடாளுமன்றத் தின் அதிகாரத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக் கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18 ஆ-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய் வோம். இதன்மூலம், அதி பர் பதவிக்கான அதிகாரங் கள் கட்டுப்படுத்தப்படும். நாடாளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் அதி காரங்கள் அளிக்கப்படும். நாடாளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட அமைச் சரவையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர நாடாளு மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19 ஆ-வது அரசியல் சட்ட திருத் தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப் பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதி காரத்தைக் குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவு மறைவற்ற நிர் வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப் படும்.

ராஜபக்சே ஆட்சி யால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனா வையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக் சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு ரணில் விக் ரமசிங்கே பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94676.html#ixzz3PVjCYDC5

தமிழ் ஓவியா said...

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?


கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.

இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன. மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள். கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

மேலான ஆட்சி



தந்திரத்தாலும், வஞ்சகத்தாலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. _ (குடிஅரசு, 3.11.1929)