Search This Blog

27.12.14

வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை - தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம்

தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம் (வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை)

    தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம் (வீரமணி-மோகனா திருமணத்தில் புதுமை)

    - தந்தை பெரியார்

    தந்தை பெரியார் அன்னை  மணியம்மையார் ஆகியோருடன் கி.வீரமணி & மோகனா.
    தந்தை பெரியார் அன்னை  மணியம்மையார் ஆகியோருடன் கி.வீரமணி & மோகனா.

    பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே! இன்றைய தினம் மணமக்களாகிய செல்வர்கள் வீரமணி-மோகனா ஆகியோர்களது வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை முன்னிட்டு இங்கே கூடியிருக்கின்றோம்.

    மணமகன் வீரமணி அவர்களை உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் இளம் வயது முதலே நம்முடைய கழகப் பற்று, கொள்கைப் பற்று ஆகியவைகளில் ஈடுபட்டு மிகவும் உழைத்துக் கொண்டு வருபவர்.

    செல்வி மோகனா அவர்களைப் பற்றி விளக்கினால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மோகனா அம்மை நண்பர் சிதம்பரம்- ரெங்கம்மாள் ஆகியோர்களுடைய அருமை மகள்.
    நண்பர் சிதம்பரம்-ரெங்கம்மாள் ஆகியோர் நமது திருச்சி நகரம் தேவதானத்தில் சுமார் 24, 25 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் சிதம்பரம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரிலே பெரிய செல்வந்தர். தன வைசியர் குலம் என்று சொல்லுகின்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
    ரெங்கம்மையார் திருவண்ணாமலை ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலப்பு மணம் என்பதோடு மறுமணம் என்பதையும் சேர்த்து 25 ஆண்டுகளுக்கு முன்பாக மணம் செய்து கொண்டவர்கள்.
    அவர்களுடைய மூத்த மகன் மலேசியாவிலே பெரிய தொழில் செய்து கொண்டிருக்கின்றார். இதிலே வேடிக்கையான ஒரு சங்கதியைச் சொல்லவேண்டுமானால், வேடிக்கைதான் அது மற்றபடி இலட்சியமாகச் சிந்திக்கக் கூடியது அல்ல. இவர்களுடைய இந்தத் திருமணம் 4 குழந்தைகளைப் பெற்று, நல்ல வயதுக்கு வந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு விவகாரத்திலே இந்தத் திருமணம் செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கினார்கள்! அதனாலே அவர்களுக்கு ஒரு பாதகமும் இல்லை. அதை அவர்கள் இலட்சியம் செய்யவும் இல்லை. அது பாட்டுக்கு அது இருந்தது. இது பாட்டுக்கு இது நடந்து கொண்டிருந்தது. சுயமரியாதைத் திருமணம், செல்லாது என்று சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையானது. சுயமரியாதைத் திருமணம் சாஸ்திரப்படியும் நடக்கவில்லை; சட்டப்படியும் நடக்கவில்லை; ஒரு வரைமுறைப்படியும் நடக்கவில்லை; ஆனதினாலே, இது செல்லாது! என்று சொன்னார்கள்.

    திருமணத்தில் என்ன முக்கியமான காரியங்கள் நடக்க வேண்டுமோ, அது நடந்துதான் இருந்தது. திருமணத்தில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கின்றதோ, அதற்கு மாறான விரோதமான காரியங்கள்தான் நடந்திருக்கின்றன.

    இன்ன மாதிரி இருக்க வேண்டும். இன்ன முனிவர் சொல்ல வேண்டும். அந்தச் சுலோகங்-களை எல்லாம் அந்த ஜட்ஜ்மென்ட்டிலே எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த மாதிரியான ஒரு நிலைமை இருந்தாலும் அவர்கள் இன்பத்திலே, செல்வத்திலே, எல்லாவற்றிலுமே மிக்க திருப்திகரமாகவே நடந்து வந்திருக்கின்றார்கள்.

    அவர்களுடைய திருமணம் எப்படி அந்தக் காலத்திலே ஒரு கலப்பு மணமாக நடைபெற்றதோ அதே மாதிரியாகவே தம்முடைய பெண்ணுக்கும் கலப்பு மணமாகவே நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டு அவர்கள் தெரிவித்தார்கள்.
    அவர்களுக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருந்த போதிலும் கூட அன்றைய காலத்திலிருந்தே அவர்களை எனக்குத் தெரியும்.

    காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்தான் வரவேற்புக் கழகத் தலைவர்  ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். பற்றுதல் என்றால் பிடிவாதமான பற்றுதலுடன் அந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். இந்த மாதிரியாகவே கலப்பு மணம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது போலவே அவர்கள் கேட்டார்கள்.
    அப்பொழுது வீரமணி அவர்கள் என் ஞாபகத்திற்கு வந்தார். தனக்கு ஒரு திருமணம் ஆகப்போகின்றது என்று வீரமணி நினைக்கவே இல்லை. அந்த மாதிரி இருக்கும்பொழுது வீரமணி அவர்களிடத்திலே திடீர் என்று இந்த சங்கதியைச் சொன்னேன். வீரமணி திடுக்கென்று கேள்விப்பட்டவுடன் பதில் சொல்லாமல் இருந்தார்.

    நான் சொன்னேன். அய்யா, உங்களுக்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். வசதி உள்ள இடம். அதற்கு வீரமணி பதில் சொன்னார். வசதி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. இப்படியே சொன்னார். அய்யா சொல்லுகிறீர்கள் அம்மா சொல்லுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அய்யா சிதம்பரம் அவர்கள் ஊரில் இல்லை. மலேயாவில் இருக்கின்றார். ரெங்கம்மையார் சொன்னார்கள். நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வார் பரவாயில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாக வீரமணி அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரிந்த உடனே அம்மையார் அவர்கள் அவரது கணவரிடத்திலே இதைத் தெரியப்படுத்தினார்கள். உடனே கப்பலில் ஏறி வந்தார்கள். அவசரமாக முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள்.

    திருமணத்தைக் கூடுமானவரை சுருக்கமாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. என்னுடைய சுபாவம் அப்படி! எந்தக் காரியமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுருக்கமாகத்தான் நடத்த வேண்டும் என்பது என்னுடைய சுபாவம். அந்த முறையில் நடத்த வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. தள்ளமுடியாத நிலையில் கொஞ்சம் நீண்டு விட்டது. எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நல்லபடியாகத் திருப்தியாக முடிந்தது.
    ஒருத்தருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் இன்னொருத்தருக்காவது திருப்தி இருக்கின்றதே என்று சொன்னால் வரவு செலவு சரியாகப் போய்விட்டது என்று அர்த்தம். நாம் ஒரு கமிட்டி போட்டால், மகாநாடு போட்டால் எப்படி நடக்குமோ அப்படித்தான். வேறே ஒன்றும் அதிசயமானது ஒன்றும் இல்லை.
    நம்முடைய கழகத் தோழர்கள் அடிக்கடி சந்திக்க என்ன இருக்கின்றது? வழி வேறு இருக்கின்றதா? ஒன்றும் கிடையாது. தேர்த் திருவிழாவிற்குப் போவதில்லை. மகாநாட்டில் தான் சந்திப்போம்.

    மகாநாடு நடத்த வேண்டும் என்று யாராவது கேட்டால் மகாநாடு நடத்தி, அதிலே என்ன பேசி, அதிலே என்ன தீர்மானம் போடுகிறோமோ, அவைகளைப் பத்தாயிரம் பேர் - இலட்சம் பேர் கூடும்படியான கூட்டங்களில் பேசிக் கொண்டே-யிருக்கின்-றோம். மகாநாடு கூட்டினாலே 4,000, 5,000 பேர் வந்தாலே அதிகம். 10,000 பேர் 20,000 பேர் வரவேண்டுமென்றால் நான்கு வருடம், அய்ந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மகாநாட்டிலே இயக்கக் காரியமாக, இயக்கக்காரர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அதுதான் உண்மையிலேயே முக்கியம். அந்த முறையிலேயே இயக்கத் தோழர்களை எல்லாம் சந்திக்கும்படியான ஒரு வாய்ப்பு. அன்பர்களையும், நமது மரியாதைக்குள்ளவர்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்கிற முறையிலே கொஞ்சம் தாராளமாக இதை நடத்துகின்றோம். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி.

    இந்தத் திருமணத்திலே ஒரு சின்ன புதிய முறையைப் புகுத்தியிருக்கின்றேன். திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் பாராட்டித் தாம்பூலம் கொடுப்பது முறை. தாம்பூலத்திலே வெற்றிலை பாக்கு விலை ஒரு அணாவுக்குக் குறையாது. சின்னத் தேங்காயாக இருந்தாலும் 2 அணா விலை இருக்கும் பழம் கொடுப்பார்கள். இப்பொழுது ஏறக்குறைய பெரிய மனிதர்கள் எல்லாம் மலைப்பழம் கொடுப்பது வசதியாகப் போய்விட்டது. ஆக 2 பழம் எடுத்துக் கொண்டால் ஒன்றரை அணா. அதுவும் எல்லாவற்றையும் சேர்த்துச் செய்தால் நான்கரை அணா ஆகின்றது.

    அதுவும் நண்பர் சிதம்பரம் அவர்கள் செட்டியார் என்கிற முறையிலே செய்வார்களே-யானால் ஒரு வெற்றிலை பாக்கு தாம்பூலத்திற்கு மூன்று ரூபாய் இருக்கும்; இரண்டு ரூபாய்க்குக் குறையாது. ஆப்பிள் இரண்டு, மூன்று போடுவார்கள்.  வெற்றிலை ஒரு வாரத்திற்கு ஆகிறாற்போலப் போடுவார்கள். ஆக இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஆகும். வாங்கிட்டுப் போகிறவர்களும் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.  அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் நாமும் ஏதாவது கொடுத்த மாதிரி இருக்கட்டும். அதுவும் ஏதாவது பயன்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என்கிற முறையிலே ஒரு எண்ணம் தோன்றியது. கழக சம்பந்தமான ஏதாவது ஒரு புத்தகம் அந்த விலைகளுக்குள்ளேயே கணக்குப் பார்த்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் தோன்றியது.

    வீரமணியே சொன்னார். அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்-கிறீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம் என்று சொன்னார்.

    கோவிலுக்குப் போகிறவர்கள் எப்படிச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ அது மாதிரிதான் இது. மற்றபடி திருமணம் சாதாரணமானது தான். பகலிலே ஒன்றும் விருந்தில்லை. திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர்கள், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டார்கள். ராத்திரிக்கு ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணுகிறோம்.

    சிதம்பரம் அவர்களும், ரெங்கம்மாள் அவர்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுமாறு பாடுபட வேண்டும். அவர்கள் பெண்ணைக் கொடுத்ததன் மூலம் நம்முடைய இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
    அதே மாதிரிதான் வீரமணி அவர்களும் நமது இயக்கத்திற்குப் பயன்படும்படியான முறையிலே தொண்டாற்ற வேண்டும். ஒற்றுமையாகத் துணையாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படுகின்றோம்.

    மற்றப்படி இந்த அறிமுகப் பேச்சோடு மணமக்களுக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை எடுத்துச் சொல்லி, அதை நிறைவேற்ற உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை இப்பொழுது நடத்திக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்திப் பல அறிஞர்கள் பேசுவார்கள்.

    நண்பர் உயர்திரு பாரதிதாசன் அவர்கள், சேர்மன் இரத்தினசாமி (பிள்ளை) அவர்கள், உயர்திரு சண்முகநாதன் அவர்கள், சுப்பையா அவர்கள், நரசிம்மன் அவர்கள், முத்துக் கண்ணப்பர் அவர்கள், வெள்ளையன் அவர்கள் இன்னும் பல அறிஞர்கள் பேசுவார்கள். பொறுமையாக இருந்து கேளுங்கள்.

    மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்ச்சியின் அறிகுறியாக மணமகளுடைய உருவம் பொறித்த மோதிரத்தை மணமகள் மணமகனுக்கு அணிவிப்பார். மணமகன் உருவம் பொறித்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார். நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொண்டு மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறுவார்கள்.
    -------------------நூல்: தென்னாட்டுத் திருநாள் -- “உண்மை”  நவம்பர் 1-15 2014

    19 comments:

    தமிழ் ஓவியா said...

    காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாக வாழ முடியாது;மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்கு தகுதியுடையவன் ஆவான்.
    பெரியார்--(26-1-1936"குடி அரசு" பக்கம்6)

    தமிழ் ஓவியா said...

    காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாக வாழ முடியாது;மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்கு தகுதியுடையவன் ஆவான்.
    பெரியார்--(26-1-1936"குடி அரசு" பக்கம்6)

    தமிழ் ஓவியா said...

    " தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

    அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா?

    தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

    ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது.

    கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.

    எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.

    நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்.

    இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

    ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

    நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். "

    - மாநிலங்களைவையில் அண்ணாவின்
    முதல் முழக்கத்திலிருந்து .

    தமிழ் ஓவியா said...

    போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!


    போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

    திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர் களின் சங்கங்கள், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல நியாயமான கோரிக் கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துள்ள நிலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 27.12.2014-இல் கூட, உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, 29.12.2014-இல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. வேலைநிறுத்தத் தில் போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் அணியைச் சார்ந்த பணியாளர்களும் பங்குபெற்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    - சு.அறிவுக்கரசு
    28.12.2014 தொழிலாளர் அணிச் செயலாளர்
    திராவிடர் கழகம்

    Read more: http://viduthalai.in/e-paper/93538.html#ixzz3NCgY4EN7

    தமிழ் ஓவியா said...

    இன்றைய ஆன்மிகம்?

    கிள்ளுக் கீரையா?

    பார்வதி குளிக்கும் பொழுது பிர்மா எட்டிப் பார்த்தான் என்று பிர்மாவின் ஒரு தலையை சிவன் கிள்ளினானாமே - இதுதான் கடவுளின் ஒழுக்கமா? பிர்மா என்ன சிவனுக்குக் கிள்ளுக் கீரையா?

    Read more: http://viduthalai.in/e-paper/93541.html#ixzz3NCgoP6yT

    தமிழ் ஓவியா said...

    சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்


    மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

    இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0

    தமிழ் ஓவியா said...

    ஜி.எஸ்.டி வரி சில விவரங்கள்


    நாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி? பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.

    எதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி maximum retail price என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம். ஆனால், விற்பனை வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுவதால் தமிழகத்தில் வாங்கும் கோல்கேட் பேஸ்டின் விலை ஆந்திராவில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக் கும். இன்னும் புரியுற மாதிரி சொல்றதுன்னா தமிழ் நாட்டைவிட புதுச்சேரியில் உங்கள் அபிமான பொருள் விலை மலிவாகக் கிடைக்கும் காரணம் அதுதான்.

    ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும். சரி இதன் சாதக பாதகங்கள் என்ன?

    ஒரு வாட்ச் வாங்குறீங்கன்னு வச்சுக்குவோம். அந்த வாட்சோட சில பார்ட்ஸை ஒரு கம்பெனி உற்பத்தி செய்து வாட்ச்சை முழுமையாக தயாரிக்கும் நிறுவனத்துக்கு விற்கும். விற்கும்போது அந்த மூலப்பொருளை வரியோடு சேர்த்துதான் விற்கும்.

    வாட்ச்சை முழுமையாகத் தயாரிக்கும் நிறுவனம்

    மொத்த வியாபாரியிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரிசேர்த்து விற்கும். அவர் ரீடைலரிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரி சேர்த்து விற்பார். ரீடைலர் நம்மிடம் விற்கும்போதும் ஒரு விற்பனை வரி சேரும். இப்படி பல மட்டங்களில் பொருளின் உண்மை விலையோடு வரிகள் பல சேர்த்துதான் நம் கையில் கிடைக்கும். ஆனால், ஜிஎஸ்டி வரி என்பது வாடிக்கையாளரிடம் வரும்போது மட்டுமே விதிக்கப் படும். இதனால் பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக நமக்குக் கிடைக்கும்.

    நாடு முழுவதும் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றும் தொல்லை ஒழியும். நிர்வாகச் செலவும் பெருமளவில் இதனால் குறையும். இப்படி நிர்வாகச் செலவும், வரிகள் குறைப்பு இதனால் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் அதிகரிக்கும். எனவே வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் ( ஜிடிபி) 2 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்னும் சொல்றாங்க.

    ஆனால் பிரச்சனை என்னன்னா ஜிஎஸ்டி நுகர் வோர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படுவதால் எந்த மாநிலம் அதிகம் செலவு செய்யுதோ அங்கு தான் அதிக வரி கிடைக்கும். தமிழகம், மகாராஷ் டிரம், குஜராத் போன்ற உற்பத்தி மிகுந்த மாநிலங் களுக்கு வரி அதிகம் கிட்டாது. ஜிஎஸ்டியில் ஒரு பங்கு மத்திய அரசுக்கு இன்னொரு பங்கு மாநிலத் திற்கு. இந்த சிக்கலின் போக்கு எப்படி இருக்கும் என்பது நடைமுறைக்கு வந்த பிறகே தெரியும்.

    ஆனால் எந்த வரிவிகிதமானாலும் கழடுவது என்னவோ நமது டவுசர்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எவரும் எந்தப் பொருளாதார சித்தாந்தமும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை

    முகநூலிலிருந்து...

    தகவல்: கோ. கருணாநிதி

    Read more: http://viduthalai.in/page-2/93542.html#ixzz3NChJRbeQ

    தமிழ் ஓவியா said...

    இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

    இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

    ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் விளக்கம்

    தருமபுரி, டிச.29_ திராவிடர் கழகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாள் வகுப்புகள் டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் முதல் வகுப்புத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்கள் இந்துத்துவா என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

    தமிழர் தலைவர்

    இந்து மதத்தின் அடிப்படைகள், ஜாதியக் கொடுமைகள் போன்றவை குறித்தும், இந்துத்துவா என்பதன் பொருளையும் விளக்கங்களுடனும், ஆதாரத்துடனும் தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேராசிரியர் காளிமுத்து அவர்கள், ஆரியர் _ திராவிடர் _ தமிழர் என்ற தலைப்பில் திராவிடர் இனத்தின் வரலாறு, ஆரியர்கள், திராவிட மொழிகளை சிதைத்தது, பார்ப்பனப் பண்பாடுகளை திராவிட கலாச்சாரத்துடன் கலந்து, திரா விடர்களின் உண்மையான கலாச்சாரங்களை சீரழித்தது போன்ற வரலாற்று உண்மை களை எடுத்துரைத்தார்.

    அவரைத் தொடர்ந்து, மூட நம்பிக்கை கள் ஒரு மோசடியே என்ற தலைப்பில், மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் சாமியாடுதல், பேய், பில்லி, சூனிய மோசடிகள் குறித்து மருத்துவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.

    அவரது உரை புதிய தோழர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தது.

    பகல் உணவிற்கு முன்னர், இறுதி வகுப்பாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் நமது திராவிட கலாச்சாரத்தின்மீது தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். பெயர் வைப்பதில் தொடங்கி, பண்டிகைகள், மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறை என பல்வேறு வகையிலும் பார்ப்பனியம் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சிதைத்து, தனது பண்பாட்டுப் படை யெடுப்பை திராவிட இனத்தின்மீதும், தமிழ் மொழியின்மீது திட்டமிட்டு தொடுத்ததை விரிவாக விளக்கிக் கூறினார்.

    மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதி ஒழிப்புபற்றி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் இயக்க மாவீரர்கள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.

    கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

    விழிப்புணர்வுப் பாடல்கள்

    அடுத்ததாக, தஞ்சை சம்பந்தம் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து அன்பு கலைக் குழுவினரின் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன.

    இறுதியாக பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரியார் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

    Read more: http://viduthalai.in/page-8/93607.html#ixzz3NHxL0RRq

    தமிழ் ஓவியா said...

    நோய்களை தீர்க்கும் கீரைகள்..


    காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:

    ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

    ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

    இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.

    முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.

    இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

    Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP

    தமிழ் ஓவியா said...

    நலம் தரும் நல்லெண்ணெய்

    தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

    Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxhknX9

    தமிழ் ஓவியா said...

    எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

    மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.

    75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

    76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

    77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.

    78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.

    79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

    80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

    81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

    82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

    83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

    தமிழ் ஓவியா said...


    84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

    85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

    86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

    87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

    88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

    89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

    90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

    91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

    92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.

    93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

    94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

    95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

    96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

    Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvo

    தமிழ் ஓவியா said...

    400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரான மனு மத்திய புலனாய்வு குழு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

    சண்டிகர், டிச.29- பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப் பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள் சீடரான சவுகான் என்பவர் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்த தாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுகான் கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத் திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    Read more: http://viduthalai.in/e-paper/93578.html#ixzz3NHyzkXEt

    தமிழ் ஓவியா said...

    இன்றைய ஆன்மிகம்?

    உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.

    அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?

    Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu

    தமிழ் ஓவியா said...

    ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்

    ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்
    குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி

    புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.

    தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.

    வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

    பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6

    தமிழ் ஓவியா said...

    ஒகேனக்கல்லின் முடிவுகள்


    திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

    மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.

    1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.

    அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.

    இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.

    அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?
    காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

    இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!

    இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!


    தமிழ் ஓவியா said...

    கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.

    ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.

    திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.

    அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.

    அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.

    1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.

    அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!

    இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

    எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!

    Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7

    தமிழ் ஓவியா said...

    பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..

    இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.

    1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.
    உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்

    2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.
    உரிமையாளர்: சுனில் அகர்வால்

    3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்
    உரிமையாளர்: மதன் அபோட்

    4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்
    உரிமையாளர்: A.S.பிந்தரா

    முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??

    நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இல

    தமிழ் ஓவியா said...

    ஒரு கதை

    நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.

    பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938