Search This Blog

30.10.14

வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசையா?


தமிழக அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வீணாய்ப் போகாமல் இந்தியைக் கற்க வேண்டும் என்று தமிழக இளைஞர்களுக்கு பிஜேபியின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அறிவுரை -  அறவுரை பகன்றுள்ளார்.

பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதலாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க மும்முரமாய் இருந்து வருகிறது.
எப்பொழுதெல்லாம் இந்த வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்புப் புயலையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதல் கண்டனக் கணையை வீசி வருகிறார்; தேவைப்படும் சந்தர்ப்பத்தில் எல்லாம் போராட்ட நடவடிக்கைகளிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வந்திருக்கிறது.


தமிழ்நாட்டின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத மத்திய பிஜேபி அரசு - இந்தியைத் திணிக்க வேண்டும் என்று எங்கள் அரசு விரும்பவில்லை; தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டது என்பது போன்ற உப்புசப்பற்ற சமாதானங்களைச் சொல்லி சமாளித்து வருகிறது.


நான்கு நாட்களுக்கு முன் அகில இந்திய வானொலியில் இந்தி ஒலிபரப்பின் நேரத்தை அதிகரிக்கும் ஆணையை அனுப்பி இருந்தது மத்திய ஒலிபரப்புத்துறை.


திராவிடர் கழகமும் மற்றும் பல அமைப்புகளும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.


மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இந்தி விளம்பர ஒலிபரப்புகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இது கழகத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.


இதற்கிடையே அரசனை விஞ்சிய விசுவாசியாக சென்னை வானொலி உதவி இயக்குநர் முந்திரிக் கொட்டைத்தனமாக அது மாதிரி எல்லாம் எந்த உத்தரவும் இல்லை என்று சொன்னது தான் வேடிக்கை. எந்தவித உத்தரவும் இல்லையென்றால் மத்திய அமைச்சர் அதிகாரிகளை அழைத்து, இந்தி விளம்பர ஒலிபரப்பினை நிறுத்தச் சொல்ல வேண்டிய கேள்வி எங்கிருந்து குதித்ததாம்?


தமிழக பிஜேபி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டில்லியில் மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சரிடம் வானொலியில் இந்தி ஒலிபரப்புத் தொடர்பாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், இன்னொரு முக்கிய பிஜேபி தலைவரான திருவாளர் இல. கணேசன் அவர்களோ இந்திக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார். அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டு இந்தியைப் படிக்காமல் இருக்காதீர்கள் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்தியாளர்கள் மத்தியில் திருச்சியில் இதோபதேசம் செய்துள்ளார்.


தமிழிசை இந்தி கூடாது என்றால் இல. கணேசனார் இந்தி வேண்டும் என்பார் போலும்! அது அக்கட்சிக்குள் நடந்து வரும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் ஒரு பகுதி என்பது பரவலாகப் பேசப்படும் அன்றாட செய்தியாகி விட்டது.


அது அவர்கள் உள்கட்சிப் பிரச்சனை அது எப்படியோ போகட்டும்; ஆர்.எஸ்.எஸ். கொள்கையான சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்ற மனப்பால் குடித்து அவ்வப்போது வாலை ஆட்டினால் அந்த வாலை நறுக்க வாள்கள் தமிழ்நாட்டில் எப்பொழுதுமே உண்டு என்பதை மறக்க வேண்டாம்.


மத்திய காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயன்று - அதன் பலனை 49 ஆண்டு காலமாக அனுபவித்து வருகிறது என்பதை மறந்து விட வேண்டாம்.


மக்கள் மத்தியில் எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தது பிஜேபி என்பதை மறந்துவிடலாமா? விலைவாசியைக் குறைக்கும் வேலையில், வேலை யில்லாத் திண்டாட்டத்தை போக்கும் பணியில், இந்தி யாவின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர,  இது போன்ற ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைத் தூக்கிக் கொண்டு திரிந்தால் வட்டியும் முதலுமாக வீழ்த்தப்படும் பிஜேபி ஆட்சி என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.


காங்கிரஸ் வகுத்த கொள்கைகளைத் தாண்டி, காங்கிரஸ் திட்டங்களுக்கு மாறாக ஆட்சி நடத்த துப்பில்லாத நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டால் எதிர் விளைவுதான் ஏற்படும் என்பது நிச்சயம்!


ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறபடி இந்தியா ஒரே தேசமல்ல - இது ஒரு துணைக் கண்டம்;  பல இனம், பல மொழி, பல பண்பாடுகளைக் கொண்ட துணைக் கண்டமாகும்.


இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டாலும் ஆசை வெட்கமறியாது என்பதற்கொப்ப - இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, ஏதோ ஒரு வகையில் புகுத்தலாம் என்று நினைத்தால் இந்தியா என்பது வரைபடத்தில் மட்டும்தான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்! வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசைப்படக் கூடாது!

இந்துத் தேசியமோ, இந்தித் தேசியமோ அல்ல இந்தியா! பன்மொழி பேசும் பல இனங்களின் கூட்ட மைப்பு என்பதை மறக்க வேண்டாம்! மறுக்க முயன் றாலோ எதிர் விளைவுதான் ஏற்படும்.

                 ---------------------------”விடுதலை” தலையங்கம் 29-10-2014

41 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


1932 இல் காஞ்சி பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி தஞ்சாவூரிலிருந்து காசிக்கு நடந்தே போனாராம். ஆறு மாதம் நடந்தாராம். எவ்வளவோ கேட்டுக் கொண்டும், மறுபடியும் நடந்தே திரும்பினாராம்.

அப்படியென்றால், விமானத்தில் பறந்து திரி யும் ஜெயேந்திர சரஸ்வதி சாஸ்திரத்தை மீறியவர் ஆகவில்லையா!

நடந்து போனவரும் ஜெகத்குரு, விமானத்தில் பறப்பவரும் ஜெகத்குரு தானா?

என்னே, பார்ப்பனப் பற்று!

தமிழ் ஓவியா said...


மதவாதம் - அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!

புதுடில்லி, அக்.29_- மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப் படுவது குறித்தும், மதச் சார்பின்மை அடிப்படை யிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்பவேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற் புறுத்தினார். புதுடில்லியில் நிகில்சக் கரவர்த்தி நினைவு அறக் கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? -இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

முன்பை விட இப் போது ஏராளமான அறி ஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக் கப்படும்போதுகூட அவர் கள் மவுனம் சாதிக்கின் றனர். ஏனெனில் அவர் கள் சர்ச்சையற்ற முறை யில் இயங்க விரும்புகின் றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின் றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர் கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத் தப்பட்டு ஒடுக்கப்பட்ட னர். தற்போது இந்துத் துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத் தனை பேரும் மார்க்சிஸ்ட் டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படு கின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப் பிட்டார்.

பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப் பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக் கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்கவேண்டும் என் றார்.

மவுன சாட்சியாகி விடுகின்றனர்

இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

அதிகாரத்தில் உள்ளவர் கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சி யாகி விடுகின்றனர் என் றார் அவர்.

மதச்சார்பற்ற கோட் பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய் யப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன.

மத மற்றும் அரசியல் தலை யீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சு வதால்தான் சிறு எதிர் வினையைகூட செய்வ தற்கு இவர்கள் தயங்கு கின்றனர் என்று குறிப் பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக் களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படு கிறது. அறிஞர்கள் இத் தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறி வுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட் டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90194.html#ixzz3HaOgZcvR

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


திண்டுக்கல், அக்.29 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குள்ளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் ரம்யா (வயது13). நிலக்கோட் டையில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில் ரம்யாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த உறவுக் காரர் மகனுக்கு ரம்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட் டது. இதையடுத்து இரு வீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிய வந்தது. இதையடுத்து ஆட் சியர் வெங்கடாசலத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமி ரம்யாவுக்கு ஏற்பாடு செய் திருந்த திருமணத்தை தடுத்து நிறுத் தினர். பின்னர் ரம்யாவின் பெற் றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் துன் பங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரம்யாவை தொடர்ந்து படிக்க வைப்பதுடன் உரிய வயது வந்தபின்னரே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.

இதுபோன்று பழனி அருகே கீரனூரிலும் ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்வூரை சேர்ந்த முகமது என்பவர் மகள் மஜிதா பானுவுக்கும் (15). அதே பகுதியை சேர்ந்த முகமது உசேனுக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக் கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று மஜிதாபானுவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அவரின் பெற்றோருக்கும் ஆலோ சனை கூறிய அதிகாரிகள் குழந்தை களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை எழுதி வாங்கினர்.

Read more: http://viduthalai.in/page-2/90179.html#ixzz3HaPSOde6

தமிழ் ஓவியா said...

மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

- (குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/90174.html#ixzz3HaPaSImt

தமிழ் ஓவியா said...

எல்லைகளைத் தாண்டி, தடை பல கடந்து புதிய வரலாறு படைத்தது பெரியார் 1000!

எல்லைகளைத் தாண்டி, தடை பல கடந்து புதிய வரலாறு படைத்தது பெரியார் 1000!

இருபால் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் - ஈடில்லா ஆர்வப் பொன் மழையில் நனைந்தனர்!!



சென்னை, செப்.29- தந்தை பெரியாரின் 136 ஆம் பிறந்த நாளையொட்டி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார்பிஞ்சு மாதஇதழ் ஆகியவை இணைந்து பெரியார் 1000 வினா-விடைத் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்திருக்கிறார்கள். மாணவர் களும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்று எழுதியிருக்கின்றனர்.

பெரியார் 1000, மாணவர்கள் நூறாயிரம்!

கடந்த மாதம் தொடங்கிய பெரியார் 1000 வினா-விடைத் தேர்வு 23.08.2014 அன்று தொடங்கி பல்வேறு கட்டங்களில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களிலும் சேர்த்து நூறா யிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். அவ்வளவுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று எல்லா தரப்பினரிடையேயும் இது மிகுந்த வர வேற்பைப் பெற்றுள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு இன்னும் ஒரு படி மேலே போய் இந்தத்தேர்வு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுடன் பிரெஞ்சு மொழி யிலும் நடத்தப்பட்டுள்ளது. இதையும் தாண்டி உலகெங் கிலும் இருந்து இணையம் மூலமாக இத்தேர்வை www.periyarquizster.com) எழுதுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு படைக்கும் பெரியார் 1000!

ஓர் ஆண்டு தேர்வின் சாதனையை அடுத்த ஆண்டில் நடக்கும் தேர்வு முறியடிக்கும். இது கடந்த மூன்றாண்டாக நாம் பார்த்து வருவதுதான். ஆனால், இந்த ஆண்டு பெரியார் 1000 தேர்வை, இந்த ஆண்டுத்தேர்வே முறியடித்திருக்கிறது. வியப்பாக இருக்கிறதல்லவா? இந்த வியப்பிற்கான வித்து மூன்றாவது ஆண்டுக்கான பெரியார் 1000 தேர்வின் அறிவிப்பு விடுதலையில் வெளிவந்த அன்றே ஊன்றப்பட்டுவிட்டது. அந்த வித்தை ஊன்றியவர் சேலத்தைச் சேர்ந்த ஒருவர்தான். அவர் பெயர் பொறியாளர் செல்வராஜ். இவர் சமீபத்தில்தான் சேலத்தில் திரிவேணி பவுண்டேசன் அறக்கட்டளை என்ற ஒன்றைத் தொடங்கி அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கணினி பயிற்சி கொடுத்துவருகிறார்.

தமிழ் ஓவியா said...

இதில் பயிற்சி பெற்றவர்களில் நான்கு பேர் சேலத்திலுள்ள கே.பி.என். தனியார் பேருந்து அலுவலகத்தில் கணினிப் பிரிவில் பணியிலும் உள்ளனர். விடுதலையைப்பார்த்த உடனேயே, ஏன் இந்த பெரியார் 1000 வினாவிடைப் போட் டியை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தக்கூடாது? என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

மனித இன மேம்பாட்டின் மூலக்கொள்கையல்லவா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது. பொறியாளர் செல்வராஜ் தனது எண்ணத்தை விடுதலையின் நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனை இவரால் என்பதையறிந்த கவிஞரும், இதைப்பற்றி பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழுவின் உறுப்பினர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களிடம் கலந்து பேசியிருக் கிறார். செய்வனத் திருந்தச்செய் என்பதையே இலக்காகக் கொண்டு இயங்கி வரும் அவரும், அதற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுத்துவிட்டார். தடைகள் எதிர் நின்றாலும், பணிகள் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே, ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை உள்ள மாணாக்கர்களுக்கு பெரியார் 1000 புத்தகமும், பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலுள்ள வர்களுக்கு சிந்தனைச்சோலை பெரியார் என்ற புத்தகமும் தயாரிக்கப்பட்டு உரியவர்களுக்கு கொடுக்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் இன்னொரு புத்தகம் தயார் செய்ய முடியுமா? அதுவும் பிரெய்லி முறையில்? என்ற தயக்கம் பலருக்கும் இருந்தது. அதை வெளிப்படை யாகவே அன்புராஜ் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

தமிழ் ஓவியா said...


முயற்சி திருவினையாக்கும் என்ற மொழிக்கேற்ப தயக்கம் தகர்த்தெறியப்பட்டது. முதல் கட்டமாக தமிழ் நாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளில் அரசு, தனியார் இரண்டையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பள்ளிகள் மட்டும் தெரிவு செய்யப்பட்டன. அதில் மொத்தம் 1520 மாணாக்கர்கள் படித்துக் கொண் டிருந்தனர். அதன்பிறகு, தேர்வு நடத்துவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டது; இதற்கான புத்தகம் தயாரிக்கும் வாய்ப்பு கோவையில்தான் இருந்தது. அங்கு சென்று பிரெய்லி முறையிலான புத்தகங்கள் தயாரிக்கப் பட்டன. குறுகிய காலத்தில் அதிக புத்தகங்கள் தயாரிக்க வாய்ப்பில்லாததால், தேவைக்கேற்ப செய்து பெறப்பட்டது.

கருணையல்ல நாங்கள் கேட்பது, சமவாய்ப்பு!

எதிர்பார்த்ததைக் காட்டிலும் பார்வை மாற்றுத் திறனாளி களுக்கான எல்லா பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தனர். விரைவாக மாணவர்கள் படிப்பதற்காக பெரியார் 1000 புத்தகத்தை படிக்கச்சொல்லி அதை அய்பாட் (ipod மூலம் குரலைப் பதிவுசெய்து, அந்தப்பதிவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிவு செய்து கொடுத்து படிக்க வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி லிட்டில் ஃபிளவர் மாற்றுத்திறனாளிகளுக்கான மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் சாந்தகுமாரி அவர்களிடம் கேட்டபோது, இயல்பாகவே எங்கள் மாணவர்கள் திறமைசாலிகள். மற்றவர்களைக் காட்டிலும் நினைவுத்திறன் இவர்களுக்கு கூடுதல். அதுமட்டுமல்ல, பாடல் எழுதி மெட்டமைத்து பாடுவது, பலகுரலில் பேசுவது, நடிப்பது, எழுதுவது என்று ஏராளமான திறமைகள் எங்கள் மாணவர்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. அதை முறைப்படி பயன்படுத்தினால் யாருக்கும் இவர்கள் இளைத்தவர்களல்ல என்றும், எங்கள் மாணவர்கள் கருணையை விரும்புவதில்லை. சம வாய்ப்பையே விரும்புகின்றனர். அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் இவர்களும் மற்றவர்களைப் போல சாதிக்க முடியும் என்றும் பெருமை பொங்கக் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், அப்படி சாதித்து அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று ஆட்சியாளராக வெனோ ஜெசி தேர்வுபெற்றிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

பலர் வங்கித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல்வேறு வங்கிப் பணிகளிலும், இன்னும் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமிதத் தோடு கூறிவிட்டு, எங்கள் மாணவர்களை ஒதுக்காமல் இந்த பெரியார் 1000 வினாவிடைத் தேர்வு மூலம் சமவாய்ப்பு அளித்ததற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள் என்று மனம் நெகிழ்ந்தார்.

வினாவைச் சொல்லி முடிக்கும்முன் விடையைச் சொல்லி அசத்தினர்! 60 மாவட்டங்களில் பலகட்டங்களாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுதிய சாதனையை, குறுகிய கால அவ காசத்தில் நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு சிறியதாக்கிவிட்டது. காரணம், அவ்வளவு எழுச்சி, மலர்ச்சி. தேர்வு எழுதிய மாணாக்கர்களிடமும், ஒருங் கிணைப்பாளர்களிடமும் காணமுடிந்தது. மதுரையிலுள்ள செயின்ட் ஜோசப் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகக் கலந்துகொண்ட சதீஷ்குமார், நான் கலந்து கொண்ட இந்தப்பள்ளியில் 50 மதிப் பெண்களுக்கு ஏறக்குறைய அனைவருமே 40 க்கும் மேல் எடுத்திருக்கிறார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த மாணவர்களிடம் பெரியார் சென்று சேர்ந்திருக்கிறார் என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல, கேள்வியைப் படித்து முடித்த உடனேயே விடையைச் சொல்லி முடித்து விடுகின்றனர். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களுடைய ஆற்றல் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. என்று நெகிழ்ந்து போனார். ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதுமே இதுதான் நிலை. எல்லா ஒருங்கிணைப்பாளர்களின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழகம் மற்றும் புதுவையிலிருக்கும் பள்ளி நிர் வாகங்களிடம் தொடர்பு கொண்டு, அவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் இத்தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருடைய தலைமையில் அதே பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவின் மூலம் இந்தப் பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டன. அந்த வகையில் சென் னையில் மானமிகு ப. சீதாராமன் தலைமையில் பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், சுரேசு ஆகி யோர் முறையே மூன்று பள்ளிகளிலும், திருச்சியில் மானமிகு ப. சுப்பிரமணியன், தஞ்சாவூரில் பேராசிரியர் உ.பர்வீன், திருநெல்வேலியில் வேல்முருகன் தலைமையில் சங்கரும், சேலத்தில் செல்வராஜ் தலைமையில் செல்வ குமாரும், மதுரையில் மானமிகு நேரு தலைமையில் எழில ரசன், சதீஷ்குமாரும் முறையே இரண்டு பள்ளி களிலும், கன்னியாகுமரியில் மானமிகு சங்கரநாராயணன் தலைமை யில் ரகுநாதனும், கிருஷ்ணகிரியில் தியாகராஜன் தலைமை யில் மணிவண்ணனும், புதுச்சேரியில் மானமிகு சிவ.வீர மணியின் தலைமையில் இளங்கோவன், ராஜூ ஆகி யோரின் ஒருங்கிணைப்பிலும் மற்றும் ஏராளமான தன்னார் வத் தொண்டர்களின் ஒத்துழைப்போடும் தேர்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. அய்.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளி, பர்கூர், கிருட்டிணகிரி மாவட்டம், சி.எஸ்.அய். பார்வையற்றோர் பாடசாலை, அய்ரேனிபுரம், கன்னியாகுமரி மாவட்டம், ஆனந்தரெங்கம்பிள்ளை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளி, பிள்ளைச்சாவடி, புதுச்சேரி மாவட்டம், இந்திய பார்வையற்றோர் சங்க மேல்நிலைப் பள்ளி, சுந்தரராஜன் பட்டி, மதுரை மாவட்டம், செயிண்ட் ஜோசப் பார்வையற் றோர் பள்ளி, பரவை, மதுரை மாவட்டம், பார்வையற் றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை, சேலம் மாவட்டம், பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், பார்வையற்றோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர், பார்வையற்றோருக்கான அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சி மாவட்டம், சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி, சென்னை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை, புனிதலூயிஸ் பார்வைத் திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி, அடையாறு, சென்னை என்று மொத்தம் பன்னிரண்டு பள்ளிகளில் 415 பார்வை மாற்றுத்திறனாளிகள் பெரியார் 1000 தேர்வை எழுதியிருக்கின்றனர். தேர்வு முடிந்தபிறகு அனை வருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

சென்னை, சேலம் மற்றும் புதுவை மாநிலத்தைத் தவிர, மற்ற மாவட்டங்களில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு அவரவர்களுக்கு உரிய பரிசுகளும், கூடுதலாக ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்களை எடுத்துச் செல்கின்ற பையும்(Shoulder Bag) வழங்கப்பட்டன. எல்லா பள்ளிகளிலும் தேர்வு எழுதாத மற்ற மாணவர்களுக்கும் சேர்த்தே இனிப்பும், காரமும் வழங்கப்பட்டது.

ஸ்கிரைப்ஸ் (Scribes) முறையில் தேர்வு!

தமிழ் ஓவியா said...

தேர்வு நடைபெற்ற பன்னிரண்டு பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 415 மாணவர்கள் கலந்துகொண்டனர். வினாக் களையும், விடைகளையும் படித்துக்காட்டி, மாணவர்கள் சொல்கின்ற சரியான விடையை குறித்துக் கொள்கின்ற முறையில் (ஸ்கிரைப்ஸ் - Scribes) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் 415 ஒருங்கிணைப்பாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வைப்பற்றி மாணாக்கர்களிடம் கருத்து கேட்ட போது, பரிசு பெற்ற திருச்சி அரசு பார்வை மாற்றுத்திறனாளர் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர். காவியா, பெண் விடுதலை, பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்குச் சொத்துரிமை இவைகளுக்காகக் பாடுபட்ட தந்தை பெரியாரைப்பற்றி தெரிந்து கொண்டேன் என்று கூறினார். இதேபள்ளியைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி, கடவுள், மூடநம்பிக்கைகள், இவைகளுக்கு எதிராக தன் வாழ்நாளெல்லாம் தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் சென்று தனது 95 வயது வரை பிரச்சாரம் செய்தவர் பெரியார் என்பதை இந்தத்தேர்வு மூலம் தெரிந்து கொண் டேன் என்றார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி வான்மதி பலபடி மேலே சென்று, ஏன், எதற்கு, எப்படி என்று எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும் என்று இதன்மூலம் கற்றுக்கொண்டேன். என்று ஒரு போடு போட்டார். மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கப் பள்ளியின் சார்பாக இத்தேர்வில் கலந்துகொண்ட மாணவன் பாண்டியராஜன் இன்னும் ஒரு படி மேலே போய், இந்தத் தேர்வுக்குப் பின்னர் பெரியாரைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரியார், மனிதநேயத் தலைவர் பெரியார், ஜாதியை ஒழிப் பதற்காகக் பாடுபட்டவர் பெரியார், பிராமணர்கள் நம்மைக் கல்வி கற்க அனுமதிக்கவில்லை. இதை யெல்லாம் மாற்றியவர் பெரியார் என்று அடுக்கிக் கொண்டே சென்று இறுதியாக, நாங்களெல்லாம் பெரியாரின் பேரப்பிள்ளைகள், அவரின் வழியைப் பின்பற்றுவோம் என்று சொன்னதும், ஒருங்கிணைப் பாளர்களுக்கு மெய்சிலிர்த்துப் போனது. இதே பள்ளியில் பயிலும் எல். பாண்டிச்செல்வி என்னும் மாணவி, ஜாதியை, மதத்தை வெறுத்தவர் பெரியார். அவரைப்போல நாங்களும் இருப்போம் என்று சூளுரை போலச் சொன்னார். விளைச்சல்களுக்கு உதவிய ஆசிரியர்கள்!

தமிழ் ஓவியா said...

மாணவர்கள் மட்டுமல்ல, இந்தத்தேர்வுக்காக மாண வர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பெரியாரைப் பற்றி அய்யம் திரிபற உணர்ந்து கொண்டு, இவ்வளவு நாளும் இப்படிப்பட்ட ஒருவரைப்பற்றி தெரிந்து கொள் ளாமல் போனோமே என்று வருந்தினர். ஆசிரியர்கள் எல்லோருமே இந்தத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மாணவர்களுக்கு நடத்துங்கள் என்று வேண்டிக் கொண்டனர். சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உயர் நிலைப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் மதினா செல்வராசு, மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது பெரியார் 1000 புத்தகத்தைப் படித்தேன். தந்தை பெரியாரைப் பற்றி பல அரிய தகவல்களைப் படித்தேன். இது எங்களுக்கும் எங்கள் மாணவர் களுக்கும் நிச்சயம் பயன்படும். இதற்காக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டார். மதுரை பசுமலையிலுள்ள தேவசகாயம் மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆசிரியர் வெண்ணிலா, இந்திய பார்வை மாற்றுத்திறனாளர் சங்கம் மேல்நிலைப் பள்ளிக்கு ஒருங்கிணைப்பாளராக சென்றிருந்தார். அவர் இதைப்பற்றி பேசும்போது, என் வாழ்நாளில் இந்தத்தேர்வு நடந்த இந்த ஞாயிற்றுக்கிழமைதான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறி நெகிழ்ந்தார். இதே பள்ளியின் ஆசிரியை ராணிகலைச்செல்வி, இந்த மாணவர்கள் மாபெரும் மனிதரான பெரியாரைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொண்டனர். நான் இந்தப்பணியில் ஒருங் கிணைப்பாளராக பங்குபெற்றதற்காக பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

இதையெல்லாம் தாண்டி இந்த பெரியார் 1000 வினா- விடைத் தேர்வு மாற்றுத்திறனாளர்களைப் பற்றிய ஒரு சரியான புரிதலை நம் அனைவருக்குமே கற்றுத்தந்தது. இதற் காக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு எவ் வளவு நன்றி வேண்டுமானாலும் சொல்லலாம். இதை நாம் சொல்வதைவிட, மதுரைப்பள்ளியில் ஒருங்கிணைப்பாள ராக இருந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தி, இதையெல்லாம் பார்க் கும்போது அறிவும், எண்ணமும் மட்டும் திடமாக இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம் என்று எனக்குத் தோன்று கிறது. என்று புத்தறிவு பெற்றதை, நம்முடன் பகிர்ந்து கொண்டார். எதைச் சொல்வது! எதை விடுவது! என்ற தடுமாற்றம் தான் மேலோங்குகிறது. புதுவையில் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்ட ராஜூ வழக்கமாக எல்லா ஒருங் கிணைப்பாளர்களும் சொல்வதைத் தாண்டி ஒருபடி மேலே போய், இந்தத் தேர்வை எழுதுவதற்கு வாய் பேச இய லாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளும் மிகுந்த ஆவலாக இருக்கின்றனர் என்ற தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டார். பெரியார் எல்லோருக்கும் சொந்தம் தானே? இப்படி எல்லைகளைத் தாண்டி பெரியாரை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்துவதில் இந்த பெரியார் 1000 வினாவிடைத் தேர்வு பெருமை கொள் ளத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் சாத னையை அடுத்த ஆண்டு முறி யடிக்கும் வாய்ப்பு இருப் பதை அனைவருமே உணர்ந் திருக்கின்றனர். பெரியாரை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இந்தப்பணி என்றென்றும் தொடரும்!



தமிழ் ஓவியா said...

இலட்சத்திற்கும் மேற்பட்ட இருபால் சிட்டுகள் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அவர்கள் கருத்துத் தேனினை மாந்தினர்!

இருபால் பிள்ளைகளின் நெஞ்சில் குடியேறி பகலவன் பெரியார் பகுத்தறிவு ஒளியை வாரி இறைத்துக் கொண்டுள்ளார்.

அதன் நேர்த்தியை - நீளப் பரப்பை - ஆழ்ந்த சுரங்கத்தை அளவிட முடியாத நிலையில், ஓர் அங்குலமாகத்தான் இருக்கட்டுமே என்பதுதான் இந்தக் கட்டுரை!

அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான அச்சாரமாக இருக்கும் அல்லவா!

-----------



வயதில் அறிவில், முதியார் வாய்மைப் போருக்கு என்றும் இளையார் என்று புரட்சிக்கவிஞர் பூ மழையால் புகழ் மாலை சூட்டினார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற தொலைநோக்குக் கணினிப் பார்வையில் பாடல் வரி ஒன்றையும் யாத்தார்.

இனிவரும் உலகம் பெரியார் உலகம் - அதனை இளங்குருத்துக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்ற தொலைநோக்கில் தீட்டப்பட்ட திட்டம்தான் பெரியார் 1000!

அது இப்பொழுது பேருரு எடுத்து எல்லாத் திசைகளிலும் தன் இறக்கையைப் பரப்பிவிட்டது!


-----------



பெரியார் 1000 - பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வினா-விடை போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம்

திருச்சி மாவட்டத்தில் ஆர். காவியா முதல் பரிசையும், வி.ஆர்த்தி இரண்டாம் பரிசையும், எம்.வான்மதி, டி.நர்மதா, ஆர்.தனலட்சுமி ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.தனராஜ் முதல் பரிசையும், வெங்கடேஷ் இரண்டாம் பரிசையும், ஏ.ரூபின் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கே.சுடலைமுத்து முதல் பரிசையும், என்.சுரேஷ் இரண்டாம் பரிசையும், எஸ்.நந்தினி, எம்.மாரீஸ்வரி, எம்.மஞ்சம்மா தேவி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சேலம் மாவட்டத்தில்வி.விஜயக்குமார் முதல் பரிசையும், வி.கதிர்வேல், ஜி.உமாமகேசுவரி இரண்டாம் பரிசையும், எஸ்.விக்னேசுவரன், சி.சிறீனிவாசன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

மதுரை மாவட்டத்தில் சுந்தரராஜன்பட்டி தேர்வு மய்யத்தில் எழுதியவர்களில் பி.பாண்டியராஜ் முதல் பரிசையும், டி.கார்த்திக், ஆர்.சத்தியமூர்த்தி இரண்டாம் பரிசையும், என்.விக்னேஷ் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

மதுரை பறவை ஜஸ்டின்நகரில் எழுதியவர்களில் எஸ்.கிருஷ்ணக்குமார் முதல் பரிசு, டி.வரதராஜன், எம்.நிவேதா இரண்டாம் பரிசு, கே.கள்ளிமுத்து மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

புதுச்சேரியில் எஸ்.டேவிட் குமார் முதல் பரிசையும், ஏ.ஆனந்தபாஸ்கர், ஜே.சிவா இரண்டாம் பரிசையும், எஸ்.பிரித்விராஜன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எல்.அஜீத் பாண்டி யன் முதல் பரிசு, எஸ்.பி.மஞ்சு மகேஸ்வரி இரண்டாம் பரிசு, எம்.ஆனந்தஜெபா, ஆர்.அனுஷா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.கார்த்திக் முதல் பரிசையும், ஜி.கோகுல்நாத் இரண்டாம் பரிசையும், ஏ.அருண்குமார் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சென்னை மாவட்டத்தில் அடையாறில் நடைபெற்ற தேர்வில் எஸ்.சக்தி கமலேஷ் முதல் பரிசு, எல்.ரித்துல் ரோசன் இரண்டாம் பரிசு, யு.எஸ்.அரீஷ்பிரபாகர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற தேர் வில் சி.கார்த்திக் முதல் பரிசு, சி.ஜெக னாதன் இரண்டாம் பரிசு, கே.அறிவழகன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தேர்வில் எம்.முனீஷ்வரி முதல் பரிசு, பி.மகாலட்சுமி, பி.எஸ்.அனு ராதா இரண்டாம் பரிசு, ஆர்.தேவி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/90199.html#ixzz3HaQ5n7TM

தமிழ் ஓவியா said...

உணவுக்குழாய் புற்றுநோயை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

சென்னை, அக். 29_ உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் சந்திரமோகன் தெரிவித்தார்.

கனடாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 6 பேர் 14 ஆய்வுக் கட்டு ரைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வுக் கட்டுரை களில் முக்கியமாக பழைய சாதத்துடன் ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உணவுக் குழாய் புற்றுநோய் வருவ தற்கு வாய்ப்புள்ளது என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் மருத்து வர் சந்திரமோகன் கூறிய தாவது:_ என்னுடைய தலைமையில் சென்று தான் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்தோம்.

உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி செய்யும் உணவு களை சாப்பிடக்கூடாது. நெருப்பில் நேரடியாக இறைச்சியை சுட்டு சாப் பிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. அதனை பின்பற்றித்தான் ஆய்வு நடத்தினோம்.

அந்த காலத் தில் பழைய சாதத்துடன் கருவாடு, ஊறுகாய் போன் றவற்றை சாப்பிட்ட மக்கள் 90, 100 வயது வரை வாழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய கார ணம், அவர்களிடம் உடல் உழைப்பு அந்த அளவுக்கு இருந்தது. அதனால் அவர் களுக்கு உடலில் எவ்வித மான பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த காலத்தில் மக்களிடம் உடல் உழைப்பு இல்லை. சரியான உடற்பயிற்சியும் செய்வதில்லை.

கம்ப்யூட் டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பது, சாப் பிடுவது, தூங்குவதுமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. முக் கியமாக உடல் பருமன் நோயால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது. ஆரோக்கியமான உடலுக்கும், வாழ்விற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/90187.html#ixzz3HaR26W5I

தமிழ் ஓவியா said...

இராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ண பரம ஹம்சர் பூசாரியாக இருந்த காளிகோயில் ராணி ராசாமணி என்பவருக்குச் சொந்தமானது. ராணியின் மருமகனான மதுரா னந்தா பிஸ்வாஸ் என்ப வரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர்.

ராணியின் எண்ணற்ற சொத்துகளை நிர்வாக மும் செய்துவந்தார். 1868-ஆம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத் திரையை ஏற்பாடு செய் தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங் குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராம கிருஷ்ணர் அளவுக்கதிக மான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.

அவர் மதுரரிடம், ராணி மாதாவின் அனைத் துச் சொத்துகளுக்கும் நீங் கள்தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒரு வேளைச் சோறும், தலைக் குச் சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய் யுங்கள் என்றார்.

மதுரரோ பகவானே! இந்த யாத்திரைக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக் கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண் டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்து விடும் என்றார்.

மதுரரின் மறுமொ ழியைக் கேட்ட பரமஹம் சர் வேதனையில் கதறி னார்: மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கி றேன். இவர்களுக்குக் கவலைப்பட எவரு மில்லை. நான் இவர் களை விட்டு நீங்குவதாக இல்லை என்றார்.

மதுரர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடை களைக் கல்கத்தாவிலி ருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வார ணாசி நோக்கித் தொடர்ந் தது. இப்படி எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர் மனநலம் சரியில்லாதவர்!

மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட் டவர்! தன் மலத்தையே தின்றார். பிணம் தின்றார் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

(ஆதாரம்: இராமகிருஷ்ணர் வாழ்வும் கொள்கைகளும் தபஸ்யானந்தா)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90228.html#ixzz3Hie4INrN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கந்த சஷ்டி கவசம்

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவும் இந்தக் கால கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தால் பாது காப்பைத் தருமாம்.

அடடே, இவ்வளவு சுலபமாக வழியிருக்கும் போது காவல்துறை ஏன்? நீதிமன்றம் ஏன்? சிறைச் சாலைதான் ஏன்? ஏன்? ஏன்?? பெண்கள் இனி வெளியில் செல்லும் பொழுதெல்லாம் கந்த சஷ்டியைப் படித்துக் கொண்டே போனால் (எதிரில் வாகனம் வந்தா லும்) எந்தச் சிக்கலும் இல்லை - அப்படித்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90236.html#ixzz3HieRLYt1

தமிழ் ஓவியா said...

மூட நம்பிக்கை

மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)

Read more: http://viduthalai.in/e-paper/90221.html#ixzz3Hiew6HHW

தமிழ் ஓவியா said...

மெட்ராஸ் அய் எனப்படும் கண்நோய்


தற்போது நிறைய ஊர் களில் மெட்ராஸ் அய் என் றழைக்கப்படும் கண்நோய் பரவி வருகிறது.

மெட்ராஸ் அய் என்றால் என்ன?

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் அய் எனப்படுகிறது. அடினோ வைரஸ் (Adeno virus - conjunctivitis) என்ற கிருமியே இதற்கு பெரும்பாலும் காரணம்.

பருவநிலை மாறுபாட் டால் வரும் நோய்பரப்பும் இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான நிலையில் மிக வேகமாக பரவக்கூடி யது. இது காற்று மற்றும் நாம் பயன்படுத்தும் பொதுவான பொருட்கள் மூலம் (கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப் பான், காகிதம்) பரவும் நோய் ஆகும். கை குலுக் குவதாலும் இது விரை வாக மற்றவர்களுக்குப் பரவும்.

கருப்புக் கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.

ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்தக் கூடாது கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனைப் படி போடவேண்டும். கண் களை கசக்கக் கூடாது.

தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே மற்றவர் களுக்குப் பரவாமல் இருக்க இருமல் வரும் போது வாயில் துணி வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும், ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும்.

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத் தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த் தால் வராது. ஆனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவானவர்களும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சுக் காற்று மூலம் தொற்று ஏற்படும். மெட்ராஸ் அய் வந்த வர்கள் தங்களது உடை மைகளை ஈரப்பதமில்லாத உலர்ந்த நிலையில் தூய் மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை ஒரே கைக்குட்டையில் மீண்டும் மீண்டும் துடைக் காமல் பேப்பர் நாப்கின் களைப் பயன்படுத்தும் போது மெட்ராஸ் அய் யின் பாதிப்பு விரைவில் குறைந்து விடுகிறது.

மெட்ராஸ் அய் வந்த வர்களுக்கு சிறப்பு உணவு என்று ஒன்றுமில்லை, எரிச்சல் அதிகம் இருந் தால் எரிச்சல் குறைவ தற்கு மருத்துவர்கள் சில நோய் எதிர்ப்பு மருந்து களைக் கொடுப்பார்கள், தூய்மையாக, கவனமுடன் இருந்தால் இரண்டு அல் லது மூன்று நாட்களில் குணமாக வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/e-paper/90267.html#ixzz3HigOtSDt

தமிழ் ஓவியா said...

நாம் சுவாசிக்க நாள்தோறும் 16 கிலோ காற்று!

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சத விகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகி தமும் உள்ளன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

உடலின் மிகப்பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாது காக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும். ர் மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90258.html#ixzz3Hii1RCji

தமிழ் ஓவியா said...

விழுமா விண்கல்?

உண்மையில் பூமியைத் தாக்கக்கூடிய விண்கற்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால், பெருங்கேடு விளைவிக்கக்கூடிய பிரமாண்டமான விண்கற்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

டைனோசர்களை இவ்வுலகை விட்டு நீங்கச் செய்ததைப் போன்ற அசுர விண்கற்கள் 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விழக்கூடும். 100 மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கல், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது காணக் கிடைக்கிறது. ஆனாலும், ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட விண்கற்கள் ஒவ்வொரு நாளுமே பூமியை அடைகின்றன.

அவை மக்கள் நெருக்கம் இல்லாத பகுதிகளிலோ, கடலிலோ விழுவதால், பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. விண்கல் தாக்கி ஒருவர் மரண மடைவது என்பது சாலையைக் கடக்கும்போது ஏற்படும் அபாயத்தை விட குறைவானது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3Hii8Ai3U

தமிழ் ஓவியா said...

முதல்வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம்

முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது.

இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா கலங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.

கணையத்தில் இருக்கும் பீட்டா கலங்கள் இன்சுலினை சுரக்கின்றன. அந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியானது சிலருக்கு அவர்களது கணையத்தில் உள்ள பீட்டா கலங்களை அழித்துவிடுகிறது. இதனால் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காது போய் விடுகிறது. இதனையே டைப் 2 வகை நீரிழிவு என்கிறார்கள்.

பேராசிரியர் டவுக் மெல்ட்டன் தலைமையிலான ஹவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு 23 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த முதலாவது வகை நீரிழிவுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியை ஆரம்பித்தது.

பேராசிரியர் டவுக் அவர்களின் மகனுக்கு இந்த நோய் இருந்ததை அடுத்தே அவர் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகளுக்கும் இந்த நோய் வந்துவிட்டது.

நோயெதிர்ப்புச் சக்தியால் அழிக்கப்பட்ட 15 கோடி பீட்டா கலங்களுக்கு மாற்றீடான கலங்களை, குருத்துக் கல தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தயாரித்தார்.

ஒரு வகை நுட்பமான இரசாயனங்களின் கலவை, கருக்குருத்துக்கலங்களை பீட்டாக் கலங்களாக மாற்றுகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

சோதனை எலிகளில் இந்தக் கலங்களை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இன்சுலினை உற்பத்தி செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அது பல மாதங்களுக்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தியது.

சாத்தியம் என்று நாம் எப்போதும் நினைத்தால், அதனை ஒரு நாள் சாத்தியமாக்கலாம் என்று தனது சோதனை குறித்து மருத்துவர் மெல்ட்டன் கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் இறுதி வெற்றியைக் காண்பதற்கு மருத்துவ ரீதியாக இன்னமும் ஒரு படி முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தாலும், ''இந்தக் கண்டுபிடிப்பை முதலாவது வகை நீரிழிவு நோயை முற்றாக குணமாக்குவதற்கான திசையில் ஒரு படி முன்னேற்றமாக கருதலாமே, ஒழிய இதுதான் இறுதி தீர்வு என்று கருத முடியாது'' என்று இந்தச் சோதனைக்கு நிதி வழங்கிய தொண்டு நிறுவனமான ஜே டி ஆர் எஃப்பின் சாரா ஜோண்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மாற்றீடு செய்யப்படும் கலங்கள் இன்சுலினை சுரப்பதுடன், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் தாக்குதலை தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக அமைய முடியும்.

''ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை குணமாக்கலாம், ஆனால், மருத்துவ ரீதியில் அது முழுமையான வெற்றிய பெற வேண்டுமானால், அந்த மருத்தை பெருமளவில் உற்பத்தி செய்து பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கக் கூடிய நிலை வரவேண்டும்'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் குருத்துக்கல ஆய்வு விஞ்ஞானியான பேராசிரியர் கிறிஸ் மேசன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக இந்தக் கலங்களை உடலினுள் வைத்து பராமரித்து, அவற்றின் மூலம் இன்சுலினை சுரக்கச் செய்வதற்கான வழியையும் கண்டுபிடித்தாகவேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/90257.html#ixzz3HiiEXmq0

தமிழ் ஓவியா said...

இந்துக்களே என்று உரக்கக்கூவும் பார்ப்பனீயத்தைப் பாருங்கள் தமிழர்களே!


பார்ப்பனர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களின் தந்திரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் இந்தச் செய்தி உதவும் என்று கருதுகிறோம். இந்தியாவில் இருக்கும் அனைவரும் (அதாவது இஸ்லாமியர்கள் கிறிஸ்த வர்கள் சீக்கியர்கள் உட்பட) இந்துக்கள் என்று இந்துத்துவாவாதிகள் சொல்லி வருவது மட்டுமல்ல; மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்கள். அவர்கள் சொல்வது சரியா தவறா என்று ஆய்வு செய்வது ஒரு புறம் இருக்க இந்துக்கள் அனைவரும் இந்துக் கள் என்று ஏற்றுக் கொள்ள அவாள் தயாராக இல்லையே. இது தினமலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறதே. அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் தொலைபேசி எண்ணில் எத்தனை முறை தொடர்பு கொண்டும் அவர்களிடம் விளக்கம் ஏதும் பெற முடியவில்லை. பெரும்பாலும் தொலைபேசியை எடுக்கவே இல்லை.

இந்தத் தகவல் தினமலரில் வெளி வந்தது. அதில் சமையல் கலைஞர்கள் ஆண்கள் மட்டும் வேண்டும் என்ற தோடு நிறுத்தியிருந்தால் அடுத்த கட்டத்திற்கு நாம் போக வேண்டிய தில்லை. அதென்ன பிராமணாள் மட்டும் வேலைக்குத் தேவை என்று? அதை வெளியிடவே வெகு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவர் களுக்கு வந்திருக்கிறது.

எந்த ஒரு வேலைக்கு ஆள் எடுப்ப தென்றாலும் பல வகையிலும்தான் எடுப்பார்கள். ஆனால் இதற்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவைப்படுகிறது. அப்படி என்றால் இந்துக்கள் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூவும் கூவல் என்னவாயிற்று? மற்ற எல்லாவற்றுக்கும் இந்துக்களே ஒன்று படுங்கள் என்பார்கள். ஆனால் இதுபோன்ற பணிகளுக்கு இந்துக்கள் வேண்டாம். இந்துக்கள் என்பதற்கு இங்கு வேலையே இல்லை.

தேரிழுக்கும்போது தேரின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு இந்துக்களே ஒன்று சேருங்கள். நான் சாமிக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பணத்தை வசூலித் துக் கொள்கிறேன். வடத்தைப் பிடித்துத் தேரை இழுங்கள் என்று சொல் கிறார்கள். எங்காவது மதம் குறித்த பிரச்சினைகள் வந்தால் அதன் ஆணி வேர் பார்ப்பனியமாக இருக்கிறது. அங்கு தன் பலத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து இந்து இன மக்களையும் ஒன்று சேர்த்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று உரக்கக் குரல் எழுப்புவது. அதாவது நான் படுத்துக் கொள்கிறேன். என் மீது அனைவரும் படுத்துக் கொள்ளுங்கள் நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்று சொல்லி முதல் ஆளாய்ப் படுத்துக் கொண்டு மற்ற வர்களைக் கொண்டு தன்னைப் பாது காத்துக் கொள்வது. சைவ சமையலுக்கு ஆள் வேண்டும் என்றால் அந்தக் குறிப்பை மட்டுமே வெளியிட வேண்டி யதுதானே. எதற்குப் பிராமணாள் என்ற அழுத்தம்?

அது போன்ற எண்ணற்ற செயல் பாடுகளுக்கு எல்லாம் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி விட்டு சமையல் வேலைக்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவை. இங்கு இந் துக்கள் எல்லோரும் வந்து விடக் கூடாது. ஏனென்றால் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். அவர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்பதை அறிவிக்கவே இதுபோல் நடந்து கொள்கிறார்கள். எச்சரிக்கை வேண்டும் தமிழர்களே!

- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை.

Read more: http://viduthalai.in/page8/90355.html#ixzz3HpWkawuQ

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணம் பதுக்கப்படும் 11 நாடுகள்


உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:

ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875. மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371. சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117. லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987. குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.

மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058. அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822. ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300. லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539. சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.

Read more: http://viduthalai.in/page8/90356.html#ixzz3HpWwgwQE

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண வேட்டையில் இதுவரை..


2009, மார்ச்: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 70 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடு மாறு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

2011, ஜூலை: கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

2014, மார்ச்: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

லீச்டென்ஸ்டெய்னில் உள்ள எல்ஜிடி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த இந்தியர்கள் தொடர்பாக ஜெர்மனி அரசு அளித்த ரகசிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, ஏப்ரல்: எல்ஜிடி வங்கியில் கணக்கு வைத்திருந்த 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. இதில், 18 பேர் மீது மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், மீதமுள்ள 8 பேர் சட்டப்படி வங்கிக் கணக்குகளை வைத்துள்ளவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர் பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்,னது உத்தரவை செயல்படுத் தாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக விமர்சித்தது.

2014, மே: மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

2014, அக்டோபர்: கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள பட்டியலை வெளியிட தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரி வித்தது. அதே சமயம், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி பகிரங்கமாக வெளி யிட முடியாது என்று பாஜக அரசு தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணம் மீட்பு தொடர்பாக 2011-ம் ஆண்டு, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. ரகசியம் காக்கப்படும் என்ற உத்தர வாதத்தை தராவிட்டால், கருப்பு பணம் வைத்திருப்போரின் பட்டியலை அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வெளிநாடுகள் முன்வராது என்று மத்திய அரசு கருத்துத் தெரிவித்தது.

2014, அக்டோபர் 27: கருப்பு பணம் வைத்திருப் போர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேரின் பெயர்களை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2014, அக்டோபர் 28: முழுமையான பெயர் பட்டியலை சீலிடப்பட்டுள்ள கவரில் வைத்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, அக்டோபர் 29: கருப்பு பணம் வைத்திருப் பது தொடர்பாக 627 பேர் அடங்கிய பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

Read more: http://viduthalai.in/page7/90353.html#ixzz3HpXF9VJH

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பாளர் விஞ்ஞானி சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 - 1995) ஒரு வானியல் - இயற்பியல் விஞ் ஞானி. ஆங்கிலேயர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ் தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன் - சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.

அவர் லாகூரிலும், பிறகு லக்னோ விலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந் தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர்.சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திர சேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.

சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930 - ஆம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப் புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துக்குப் போனார்.

அவர் தனது 19ஆம் வயதில் ஐன்ஸ் டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன் படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

விண்வெளியில் உள்ள ஒரு நட்சத் திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந் துளைகளாகவோ மாறுகின்றன.

பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் - உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் - வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.

1937 - இல் சந்திரசேகர் அமெரிக்கா வின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 - இல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெ ரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு அமைப்பான நாசா உள் ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினை வாகப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.
நன்றி: தி இந்து (தமிழ்) 20.10.2014

Read more: http://viduthalai.in/page6/90350.html#ixzz3HpXR8RNc

தமிழ் ஓவியா said...

இவர் தான் மகாராட்டிர மாநில முதல் அமைச்சர்! (பிஜேபி)


பாஜக முதல்வரின் குற்றப் பின்னணி மகாராட்டிர முதல் வர் தேவேந்திர கங்காதர்ராவ் பட்னவிஸ்மீது நாக்பூர் மற்றும் இதர நீதிமன்றங்கள், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் குற்றச் சாட்டுப் பதிவுகளும்.

இ.பி.கோ பிரிவு 135, 37,39,40 நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3051/06 வழக்கு எண் 962/06 (2010)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3122/06, வழக்கு எண் 281/06, (2008)
நாக்பூர் நீதி மன்ற குற்ற எண் .5096/09, வழக்கு எண் 1390/06, (2009)
இ.பி.கோ 146, 147, 148, 324(2009)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 10009/03, (2008)
இ.பி.கோ 143, 427 (2005)
இ.பி.கோ 188, 171,,பி 34 (2004)
இ.பி.கோ 143, 147, 34 (2010)
இ.பி.கோ 141, 341 (2011)
இ.பி.கோ 134, 135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 188 (2000) றீ இ.பி.கோ 188 (2008)
இ.பி.கோ 188 (2009)
இ.பி.கோ 135 B.P. Act,,, (2002) றீ இ.பி.கோ 341 /135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 338 (2001) றீ இ.பி.கோ 188, 34 (2011)
இ.பி.கோ 134,135 B.P. Act, 179(1), 21(20), 119, 115, 177 MV Act (2000)

உள்ளிட்ட 22 குற்ற வழக்குகளை மகா ராட்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் எதிர்கொள்கிறார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் குற்ற வழக்குகளும்

மகாராட்டிர மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாக பாஜக 122பேரைக் கொண் டுள்ளது. அதேபோல் குற்ற வழக்குகளிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையாக 74 பேரைக் கொண்டுள்ளது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றவழக்கு களைக் கொண்டுள்ளவர்கள் 60 விழுக்காடாகும்.

அதிக மோசமான குற்றங்கள்

அதிக மோசமான குற்றங்களில் தொடர்புள்ளவர்களாக 53பேர் உள்ளனர். இதில் 43விழுக்காடாக உள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சட்டமன்றத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சிவசேனா கட்சியின் 63 சட்டமன்ற உறுப்பினர்களில் 48பேர் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

இது 76 விழுக்காடாகும். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள வர்களாக 36பேர் உள்ளனர். இது 87 விழுக்காடாகும். மிக மோசமான குற்ற வழக்குகளில் தொடர்புள்ள கட்சிகளிலும் இரண்டவதாக சிவசேனா உள்ளது.

பகுதிவாரியாக குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் விதர்பா பகுதியில் அதிக எண்ணிக்கையில் 58 விழுக்காட்டளவில் உள்ளனர். அதனை யடுத்து கொங்கன் பகுதியில் 57 விழுக் காட்டளவில் உள்ளனர். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கந்தேஷ் பகுதியில் உள்ளனர். இது 48 விழுக்காடாகும்.

மிக மோசமான வழக்குகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

கலவர வழக்குகளில் தொடர்புள்ள வர்கள் - 81 பேர்,

பொது ஊழியர்களிடத் தில் காயங்களை உண்டாக்கி தாக்கிய குற்றங்களில் தொடர்புள்ளவர்கள் - 50 பேர்

ஏமாற்றியவர்கள் பட்டியலில் உள்ள வர்கள் - 31 பேர்

கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகயில் தொடர்புள் ளவர்கள் - 15 பேர்

வழிப்பறி, கொள் ளையில் தொடர்புள்ளவர்கள்- 11 பேர்

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்த வர்கள் - 10 பேர்

கடத்தல் வழக்குளில் தொடர்புள்ளவர்கள் - 8 பேர் றீ பிளாக் மெயில் வழக்கில் தொடர்புள்ளவர்கள் - 6 பேர்

ஊழல் முறைகேடுகளில் - 3 பேர், மேலும் கொலை வழக்கில் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் ஒருவர் ஆக உள்ளனர்.

மேற்கண்டவை 2014ஆம் ஆண்டில் உள்ள தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் குறித்த தகவல்கள்ஆகும்.

- டைம்ஸ் ஆப் இந்தியா, 28.10.2014

Read more: http://viduthalai.in/page6/90352.html#ixzz3HpXkk1MR

தமிழ் ஓவியா said...

கடவுளைக் கற்பித்தவர்கள்


ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்த கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

- பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி, 11.6.2006 கல்கி இதழில், (கடவுளை உண்டாக்கியவர்கள் யார் என்று இப்பொழுது விளங்குகிறதா?)

Read more: http://viduthalai.in/page5/90347.html#ixzz3HpXyDQy5

தமிழ் ஓவியா said...

தேயிலையில் பூச்சிக் கொல்லி!

காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக டானிக்காக தேநீரை நம்பு கிறோம். நிறம், சுவை, திடம், சூடு போன்ற எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, ரசித்துச் சுவைத்துக் குடிக்கிறோம். அந்தத் தேநீரில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தேநீரில் பூச்சிக்கொல்லி எப்படி வரும் என்று நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், சமீபத்திய ஆய்வு இதை உறுதிப் படுத்துகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் சர்வதேச அமைப்பான கிரீன் பீஸ்' சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காகத் தேநீர்த் தூள் விற்கும் 8 நிறுவனங்களின் 49 தயாரிப்புகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டாடா குளோபல் பீவரேஜஸ் லிமிடெட், வாக் பக்ரி டீ, குட்ரிக் டீ, ட்வினிங்க்ஸ், கோல்டன் டிப்ஸ், கோச்சா, கிர்னார் ஆகிய பிரபலத் தயாரிப்புகள் அடக்கம். சுமார் ஓராண்டு காலம் நடந்த இந்த ஆய்வில், நமது நாட்டில் 1989-ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியான டி.டி.டி. (ஞி.ஞி.ஜி.) இருந்தது தெரிய வந்துள்ளது. இது 67 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இது போன்ற வேதிப்பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை.

என்ன வழி?

இதுகுறித்து கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த நேஹா சைகால் கூறுகையில், "தேநீர் நமது தேசத்தின் பெருமை. சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அந்த மதிப்பைக் குறைத்து விடக்கூடாது. தேநீர்த் தூள் தயாரிப்பு நிறுவனங்கள் இயற்கை வேளாண் மைக்குத் திரும்புவதுதான் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி" என்கிறார்.

தொகுப்பு: ந. வினோத்குமார் நன்றி: தி இந்து 23.9.2014

Read more: http://viduthalai.in/page5/90349.html#ixzz3HpY5YBNR

தமிழ் ஓவியா said...

பக்தியின் பெயரால் சீரழிவு!

பாலிமார் டி.வி.யில் 29.10.2014 புதன் காலை 7 மணிக்கு எதிர்பாராமல் பார்த்துத் திடுக்கிட்ட காட்சி.

கோயிலில் யாகக் குண்டக் காட்சி, வேட்டிகள் 2 பூமாலை, பால் ஏரியில்! பைத்தியக்காரர்களா, பக்தியாளரா? சடங்குகள் என்கிற பெயரில் சாமிக்குத் தரும் லஞ்சங்கள் இப்படியே தொடரலாமா?

எங்கெங்கே, என்னென்ன வகைகளில், எத்தனை எத்தனை நேர்த்திக் கடன்கள்?

திருப்பதி மலைமேல் ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளில் 6 டன் மலர்கள் வீணாக்கப்படுவதாக ஒரு செய்தி கேட்டதும் உடலே பதறியது. மனமும் புலம்பியது. இப்படியே நாடெங்கும்....

இந்துக்களின் இந்திய வரலாறு மிக மிகத் தாழ்வானது, கேடானது, அடிமைத்தனமும் அழிவும் மிக்கது. அன்பும், அறமும், வீரமும் திறமையும் மறைக்கப்பட்டன விதி, மதம், பக்தி, யாகம், சடங்கு லஞ்சத்தனப் பரிகாரங்கள், பூஜைகள் என்பன அரங்கேறி, நம்பிக்கையூட்டி நாட்டு மக்களும் நாடுகளும் பகைவர்களால், பல நாட்டுப் பகைவர்களால் அடிமை கொள்ளப்பட்ட நாடு இது. பல நூறு ஆண்டுகள் பல்வேறு வெளிநாட்டினரால் கொள்ளையிடப் பட்ட இந்த நாடு, பஞ்சம் பிழைக்கப்பாடுபடும் பட்டாளி மக்களைப் பல நாடுகளுக்கும் கப்பலேற்றிய நாடு இது.

பார்க்கடிமை செய்த நாடு; இன்றும் பறந்து பறந்து வெளி நாடுகளில் பஞ்சம் பிழைக்க முந்தும் நாடு இது.

இது புனித பூமியா? புண்ணிய பூமியா? வேத பூமியில் வரலாறு மறந்திடலாமா? இங்கே பக்தியின் பெயரால் வீடுகள், வீதிகள் தோறும் கோயில்கள், பூசைகள், வேண்டுதல்கள், விழாக்கள், விதவிதமான - அறிவுக்கு ஒவ்வாத பக்திச் சடங்குகள் தொகுத் துரைக்கவும் முடியாத நிலை.

திங்கள், செவ்வாய்க் கோள்களுக்கு தீவிர ஆய்வு, திரண்ட பெருஞ் செலவு, அளவற்ற அழிவு, உடல் முயற்சி, உழைப்பு, ஊக்கம் எல்லாம் கூடி உருவாக்கிய ஏவுகணையை, ஏழுமலை யானைத் தொடுதலின் ஏவும் - ஏற்றம் பெற்றவர்களை எண்ணியெண்ணி எப்படியெல்லாம் மனம் பதைக்கிறது!

ஐயோ மனிதர்களே, அந்தோ அருந்திருக்களே! படிக்காத பாமரனைப் பார்க்கும்போது அவனே பரவாயில்லை என எண்ண நேருகிறதே! எங்கே ஓட்டை? எப்போது, திருந்துவது? என்றுதான் தெளிவு வரும்? நாள்தோறும் நாடெங்கும் மக்கள் படும்பாடுகள், நடைபெறும் குளறுபடிகள், குற்றங்கள், குழப்பங்கள், சட்டங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்புகள். எல்லாரிடத்தும்தன்னலவெறி, சுரண்டல் சூரத்தனம்! அலுவலர் கடமைகள் எளிதானவையா? எல்லாரும் சட்டம் பேசுகிறார்களே! ஒழுங்கான நடைமுறை ஓரிடத்திலாவது, ஒருவரிடமாவது காண முடிகிறதா? பத்திரிகையைப் படித்தால் பதைக்கிறோம்.

தொலைக்காட்சி செய்திகளிலும் தொல்லைகள்! எங்கெங்கும் சுரண்டல், சூது! எதிர்பார்ப்பு, ஏமாற்றும் பரப்புரைகள், பக்தியுரைகள், பாராட்டுகள், கச்சேரிகள்! எல்லாமே உள்ளன எங்கெங்கும் கொள்ளை, கூச்சல்!

ஆண்டவர்கள், ஆண்டு கொண்டு இருப்பவர்கள் யார் யார்? எப்படிப்பட்டவர்கள்? ஆண்டவன் நிலை என்ன? அவன் செயலென்ன? வேதங்கள், புராணங்கள், ஆகமங்கள் இவற்றின் பயனென்ன? சிந்திக்க சேர்ந்தது சித்ரவதையாகிறதே!
இதற்கு முடிவுதான் என்ன? எங்கே, யாரால்? அச்சிட்டுப் பாருங்கள்: பதில் கிடைக்குமா, பார்க்கலாம்.

- வெள்ளையாம்பட்டு சுந்தரம் (இனியன்) சென்னை - 78

Read more: http://viduthalai.in/page3/90343.html#ixzz3HpYolvQy

தமிழ் ஓவியா said...



தேனிலவுக்கு இந்தியா வந்த இங்கிலாந்து இணையர் தற்கொலை

இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இணையர்கள் டில்லியில் தற்கொலை செய்து கொண் டனர். இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வைக் கண்டு தற் கொலை செய்து கொண்டனர்.

இங்கிலாந்து புதுமண இணையர். பிரிட்டனைச் சேர்ந்த கேபல்ஜேம்ஸ் மற்றும் அலக்ஸ் சான்டரா காஸ்கல் இருவரும் புதுமண இணையர்கள் இவர் கள் தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வருகை தந்தனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த இவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓர் அய்ந்து நட்சத்திர விடுதி யில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களின் தற்கொலை குறித்து அய்ந்து நட்சத்திர விடுதியினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் இருந்த கெபல் ஜேம்ஸின் தந்தை இங்கி லாந்து இதழ் ஒன்றிற்கு பேட்டியளித் துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியுள்ள தாவது:

எனது மகன் கேபல் தன்னுடன் பணிபுரியும் அலக்ஸ்சை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டான். இருவரும் தேனிநிலவு கொண்டாட இந்தியா செல்ல வேண்டும் என்று விரும்பினர். இதனை அடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடு களும் செய்து கொடுத்தேன்.

இந்தி யாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர்கள் எனக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள் வார்கள் அதில் கெபல் இந்தியாவில், தான், பரவலாகப் பார்த்த சமூக ஏற்றத்தாழ்வு குறித்து மனவருத்தத்தை அடிக்கடி குறிப்பிடுவார். நாங்கள் கேள்விப்பட்ட இந்தியா வாக இது இல்லை, இங்கு மனிதர்களி டையே பேதங்கள் அதிகம் காணப்படு கின்றன. இங்கு ஏழைகளுக்கு சரியான மருத்துவம் கொடுப்பதில்லை அதே நேரத்தில் பணக்காரர்களுக்குத் தரமான சிகிச்சைவழங்க பல்வேறு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன, இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை,

பணத்திற்கும் ஜாதியச் சமூகத்திற்கும் மட்டுமே மதிப்பு உள்ளது என்று அடிக்கடி கூறுவார்.

நானும் அவர்களுக்கு அந்த நாட்டில் நிலவும் சமூகச் சிக்கல்கள் குறித்து விளக்கி வந்தேன். அலக்ஸ் சான்டரா காஸ் கல்வும் அவர்களது நண்பர் களிடம் இந்தியாவில் நிலவும் ஏழை -_ பணக்கார வேறுபாடு குறித்து பேசியிருக்கிறார். இருவருமே மிகவும் அதிக இரக்க குணமுள்ளவர்கள். இங்கி லாந்தில் இருக்கும் போது பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவை செய்து வந்தனர்.

அவர்களுக்கு பிறர்படும் துன்பம் வேதனையை அளித்தது. அவர்களின் அதீத இரக்க குணமும் இந்தியாவில் நிலவும் சமூகக் கொடுமை களும் அவர்களை தற்கொலைசெய்ய காரணமாகி விட்டன என்று கூறினார்.

கெபல் தற்கொலை செய்யும் முன்பு தனது டுவீட்டர் வலைதளத்தில் எழுதி ருப்பதாவது : இந்தியா வர விரும்பி னால் இதயத்தை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் இங்கு மனித ஏற்றத் தாழ் வுகள் அதிகம் அதை சகித்துக்கொள்ள நல்ல மனிதர்களால் இயலாது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page3/90344.html#ixzz3HpYwzb4P

தமிழ் ஓவியா said...

மொட்டை போட்டது முன்னாள் முதல்வருக்கா - அண்ணா கொள்கைக்கா?

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டனர் என்பது செய்தி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகிய அமைச்சர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அன்றைய தினமே கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

இதனால் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம், திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், காவடி, அலகு குத்தி நேர்த்திக் கடன், முளைப்பாரி ஊர்வலம், தேர் இழுத்தல், முடி காணிக்கை தேவாலயங்களில் பிரார்த்தனை என பல்வேறு வழிகளில் அ.தி.மு.க.வினர் வேண்டுதலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாடியுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் 21 நாள் சிறையில் இருந்த ஜெயலலிதா கடந்த 18ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். ஆனால் அதன் பிறகும் பல அமைச்சர்கள் தாடியை எடுக்காமல் இருந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி கொண்டாடாமல் திருப்பதி சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.

இதே போல் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அமைச்சர் ஆனந்தன் தாடியை எடுத்துள்ளார். இதே போல் ஒவ்வொரு வரும் கோவில் களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த உள்ளனர்.

வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page2/90342.html#ixzz3HpZKKPXQ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கக்கேடு

கீதையின் 18வது அத்தியாயத்தில் மாமேகம் சரணம் வரஜ என்று சரண ஸ்லோகம் இடம் பெற்றுள்ளது. என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு என்று கண்ணனே சொல்கிறானாம்.

பஞ்சமாபாதகம் செய்தாலும் கண்ணனின் திருவடியைப் பற்றிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்றால் இதைவிட ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் ஏற்பாடு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more: http://viduthalai.in/e-paper/90358.html#ixzz3HpZqA6a5

தமிழ் ஓவியா said...

கூறுவது கல்கி


கேள்வி: கேரளாவில் அரசியல் கொலைகளுக்கு பா.ஜ.க.வினரே காரணம் என ராஜ்நாத் சிங்குக்கு உம்மன்சாண்டி பதில் அளித்துள்ளாரே?

பதில்: கேரளத்தில் பா.ஜ.க.வினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே பல காலமாக இருந்து வந்துள்ள பகை, இப்போது கோர வடிவம் எடுத்து வருகிறது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், அக்கட்சியினர் பலருக்கு அசட்டுத் தைரியம் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தன் தொண்டர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து நெறிப்படுத்துவது அவசியம். ஜனநாயகத்தில் கொள்கை அரசியல்தான் நடத்த வேண்டுமே தவிர, வன்முறை அரசியலுக்கு இடமில்லை என்பதை நாட்டில் எல்லா கட்சிகளுமே உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.

- கல்கி 19.10.2014 பக்.5

Read more: http://viduthalai.in/e-paper/90360.html#ixzz3HpZxJp3K

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு


பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன் படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.
(விடுதலை, 11.9.1953)

Read more: http://viduthalai.in/page-2/90361.html#ixzz3HpaBP3mM

தமிழ் ஓவியா said...

மய்ய மனிதவள அமைச்சரைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்: சில பூனைக்குட்டிகள்!

மய்ய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஒன்று தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கின்றன.

இரண்டு பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும்.

மூன்றாவது வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாகக் கூறப்பட்டுள்வை என்ன என்ன தெரியுமா? ஏற்கனவே பள்ளிகளில் ஒழுக்கம் போதனை --(விஷீக்ஷீணீறீ மிஸீக்ஷீநீவீஷீஸீ) என்ற பெயரில் மதம் சம்பந்தமான இராமாயணம், பாரதம், கீதை என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது நிறுத்தப்பட்டது. அதனை புதுப்பிக்க பார்க்கின்றனர். மூன்றாவது கோரிக்கை ஆபத்தானது ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்படும் உண்மை வரலாற்றைத் திரித்து இந்துத்துவாப் பள்ளியில் மாணவச் செல்வங்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் முயற்சி.

நம்முடைய முதற்கேள்வி இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்ன கல்வியாளர்கள் இர்பான்ஃஹபீபா, தொமிலாதாப்பரா, கே.எம்.பணிக்கரா அல்லது வங்கத்துக் கல்வி அறிஞரா இல்லை. இவர்களுக்குக் கல்விப் பாடத்தைப் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? முழுக்க முழுக்கப் புலிவேடம் போட்ட இந்தப் பூனைக்குட்டிகள் மெல்ல, மெல்ல மியாவ் மியாவ் என இந்துத்துவா குரலை எழுப்புகின்றன. வாலை ஆட்டிப்பார்கின்றன.

இதைக் கல்வியாளர்கள் கண்டிக்கவில்லை என்றால் சிந்து சமவெளிநாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியில் பேரால் திராவிட நாகரிகத்தை மறைக்கப் பார்ப்பார்கள். ஏற்கெனவே பி.என்.ஓக் போன்றவர்கள் தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவார்கள்.

டெல்லிச் சுல்தானியம் மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்று அக்பர் போன்ற சமத்துவ உணர்வுள்ளவர் சாதனைகளை மூடப் பார்பார்கள் இந்த மூடர். எனவே கல்வியாளர்கள் தமிழக அளவிலே மட்டுமல்ல இந்திய அளவிலேயே இம்முயற்சிகனை முறியடிக்க வேண்டும். முன் வந்து கண்டிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிதாகப் பள்ளிப்பாடத்தில் சமயக்கல்வி, ஒழக்கக் கல்விக்கு என்ன தேவை வந்து விட்டது? இன்னும் தமிழ்ப்பாடத்தில் முறையாக தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், இரட்சண்ய யாத்திரீகம், சீறாப்புராணம், சிவகசிந்தாமணி என்று இந்து, புத்த, சமண, கிறித்துவ, இசுலாமியப் பாடல்கள் பாடல் களாகத்தானே இருக்கின்றன. இவை தவிரப் புதுயுகக் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், முடியரசன் கண்ணதாசன் முதலியோர் பாடல்களும் இடம் பெற்றே இருப்பது உண்மை.

அடுத்து, திமுக ஆட்சியில் இன்று சமச்சீர் கல்வி வந்து கல்வியில் ஏற்பட்ட புரட்சி இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். இந்தியா முழுமைக்கும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டியதுதானே.

அடுத்து, தாய்மொழிக் கல்விக்கு இவர்களின் முயற்சி அபாயத்தை விளைத்து விடக்கூடாது. எனென்றால் தாய்மொழிக் கல்வி தமிழ்மொழிக் கல்விதான் மாணவர் உள்ளங்களில் அறிவு விதையை ஆழமாக ஊன்றி உரமிட்டு வளர்க்கும்.

இல்லையென்றால் ராஜீவ்காந்தி காலத்தில் மய்ய அரசு தரமான பள்ளிகள் முதன்மை நிறுவனங்கள் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்த நிலை மீண்டும் தொடரும். ஏனென்றால் எம்மைப் பொறுத்த வரையில் காங்கிரசும், பிஜேபியும் வேறு வேறு அல்ல. கொஞ்சம் இந்துத்துவால் பெருங்காயம் காங்கிரசிடம் குறைவாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...


எனவே செவன்த் சேனல் எனும் தொலைக் காட்சியில் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்தித்தது குறித்து விவாதம் நடந்தது. திராவிடர் வரலாற்று மய்யச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் அவர்களும், பிஜேபி யின் பொறுப்பாளர்களில் ஒருவரான இராகவன் அவர்களும் பங்கேற்றார்.

பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் பிஜேபி அரசு இந்த முயற்சி வாயிலாக இந்துத்துவாவைப் புகுத்த முயற்சிக்கிறது. கி.பி. 2000 இல் பேராசிரியர் அவர்கள் கல்வி அமைச்சராக விளங்கியபோது நடைபெற்ற அகில இந்தியக் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனத்தைப்பாடி எல்லாச் சமயக்கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற மாநாட்டில், சமயச் சார்பிலாநாடு எனும் நாட்டில் தனித்த இந்துச்சமயப் பாடலைப் பாடி இருப்பதைக் கண்டித்துப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்ததையும், அந்த மாநாட்டில் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்வி அமைச்சர் இல்லாத ஒருவரின் கல்விக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற அதை நீக்கும்வரை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனக்காலை பத்துமணி முதல் மதியம் இரண்டு மணி வரையும் வெளிநடப்புச் செய்யக் கடைசியில் முரளி மனோகர் ஜோஷி பணிந்ததையும் எடுத்துக்கூறினார்.

பிஜேபி ராகவன், ஆர்.எஸ்.எஸ் அரசு தான் பிஜேபி அரசு, கல்வி அமைச்சரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சந்தித்தது ஒன்றும் புதிது அல்ல, இதில் இரகசியம் இல்லை. சரசுவதி வந்தனம் பாடியதில் என்ன தவறு?, மெக்காலே கல்விச் சிந்தனை தான் இருந்து வருகிறது. அதை மாற்ற வேண்டும் என்பதோடு ஆரியமாவது, திராவிடமாவது என்றதோடு தமிழ்த்தாய் வணக்கத் தையும் சிலர் வேறு கடவுளை வணங்க மாட்டோம் என்று கூறினார்கள் என்று கூறியதோடு வந்தே மாதரம் பாடியது தவறில்லை என்று பேசினார்.

இப்போது கொஞ்சம் பிஜேபிக் காரார்களுக்குத் துணிவு துளிர்விட்டிருக்கிறது என்பது தான், மீண்டும் இந்துக்குரலை எழுப்புவதன் பின்னணி, பேராசிரியர் மங்களமுருகேசன் தத்துவநிலை ஆதாரத்துடன் எடுத்து வைத்ததும் இராகவன் அவர்கள் வாதம் எடுபடாமல் போயிற்று.

எனவே இன்றைய நாளில் திராவிட இயக்கத்தவர் மட்டும் விழிப்போடு இருப்பதில் பயனில்லை. தமிழகக் கல்வியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அகில இந்தியக் கல்வியாளர்களுடன் தொடர்பு கொண்டு இந்த இந்துத்துவாவாதிகளின் நச்சுப்பிரச் சாரத்தை முறியடிக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்டுவிடும் ஆரிய இனவாதப் போக்கை மீண்டும் மாற்ற நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்.

- பேராசிரியர் மங்கள முருகேசன்

Read more: http://viduthalai.in/page-3/90368.html#ixzz3Hpap8tpy

தமிழ் ஓவியா said...

ஈ.வெ.ரா. காவடிச்சிந்து

- கவிஞர் கி. கோவிந்தராசு -


வணிகத்தொழில் செய்த குடும்பம் - நல்ல
வசதி நிறைந்திட்ட குடும்பம் - அங்கே
விளைந்தார் இராமசாமி
வெங்கடநாயக்கர்
மகனாய் - மதி - முகனாய்
அணிகளும் மணிகளும்பூட்டி - நல்ல
அறிவுள்ள கல்வியும் ஊட்டி - அவரை
அன்னையும் தந்தையும்
அன்புடன் வளர்த்தர் சீர்
ஆட்டி- பாசம்- காட்டி
வேதத்தைக் கற்பிக்க ஒருவர் - வந்து
வீட்டிலே சொல்லியே தருவார் - அன்று
அறியாத வயதிலே
ஆன்மீகம் கற்றுமே
சிறந்தார் - பின்னாள் - மறந்தார்
வாதங்கள் செய்வாரம் உடனே - வேத
வகுப்புகள் முடிந்திடும் முன்னே! - அந்த
இளையவயதிலேயே
ஏன்?எதற்கு?என்ற
தெரிவு - பகுத் - தறிவு!
காசிக்கும் பெரியாரும் சென்றார் - அந்தக்
கங்கையில் அழுக்குகள் கண்டார் - மனித நேயமே இல்லாது
நிகழ்ந்திடும் கொடுமைகள்
உணர்ந்தார் - காவி - துறந்தார்
யோசித்தார் இவையாவும் எதனால்? - முடிவில்
உணர்ந்திட்டார் கடவுள்தான் அதனால் - எனக்
கருதியநாள் முதல்
உறுதியாய் இருந்திட்டார்
பொறுப்பாய் - கடவுள் - மறுப்பாய்!
கீதை படித்தவர்கள் கொஞ்சம் - கள்
போதை அடித்தவர்கள் கொஞ்சம் - என
மேலும் கீழும் என
வேறுபாடுகளைப்
பார்த்தார் - நெஞ்சம் - வேர்த்தார்!
சீதை இராமன் கதை கற்றால் - சமூகம்
சீர்பெற போவதில்லை முற்றாய் - எனப்
பகுத்தறிந்து உண்மை
பார்த்து அறிய ஒரு
பாதை சொன்ன -மேதை!
சாதிப் பெயர் தன்னைச் சொல்லி - கோயில்
சன்னதி நுழையாது தள்ளி - நம்
ஆதிதிராவிடரை
வேதியர் சிலர் ஆங்கே
ஒடுக்க - எழுந்தார்- தடுக்க!
வீதியில் இறங்கிப்போர் செய்தார் - அந்த
விஷமர்கள்மேல் அம்பு எய்தார்- பின்பு
கோவில் பொதுவென்ற
கூற்றால் பகைவென்ற
சூரர் - வைக்கம் - வீரர்!
மூடப்பழக்கத்தினாலே - தமிழன்
மூளை இழந்திருந்தவேளை - பெரியார்
பகுத்தறிவு சொல்லிப்
பாடம்புகட்டினாரே
மெல்ல - அறிவு - வெல்ல!
கூடாஒழுக்கம் கள் குடித்தல் - எனக்
கொள்கை முழக்கங்கள் செய்தார்- பெயரில்
சாதிப் பெயர்சேர்த்தல்
சற்றும் கூடாதென்றே
உரைத்தார் - வேர் - அறுத்தார்!

பெரியோரைத் தலைமையாய்க்
கொண்டு - பெற்ற
பெற்றோரே முதன்மையாய் நின்று - செய்யும்
சடங்கில்லாத் திருமணம்
சுயமரியாதையின்
பிறப்பு - சாதி - மறுப்பு!
மரியாதை மனிதர்க்குத் தேவை - பிறரை
மதிக்கின்ற பண்பதுவும் தேவை - நம்மில்
ஆணுக்குப் பெண்ணிங்கே
அடிமைபோல் இருப்பதும்
நாடா - வெட்கக் - கேடா!
பழுத்துக் கனிந்ததோர் மேனி - தமிழ்
எழுத்துகள் சீர்செய்த ஞானி - பெரியார்
சேமிக்கும் குணத்திலும்
சிக்கனச் செயலிலும்
தேனீ - நமக்கு - ஏணி!
தழும்புகள்தான் பெற்றார் நிறைய - அனைத்தும்
தமிழினம் முன்னேற்றம் அடைய - பெரியார்
ஞானத்தைஉலகமே
நயம் என ரசித்தது
அறிய - புகழ் - விரிய!
கைத்தடி ஊன்றிய சிங்கம் - பெரியார்
பைந்தமிழ் காத்திட்ட தங்கம் - அவர்
அறிவார்ந்த கருத்தினை
ஆர்வத்தோ(டு) அறிந்திடின்
தங்கும் - வாழ்க்கை - பொங்கும்!
வைத்தகால்பின் வாங்காவீரர் - பெரியார்
வாக்குப் பிறழாததீரர் - கொண்ட
கொள்கையில் மாறாத
கோடிக்கு மயங்காத
திண்ணன் - வெள்ளை - வண்ணன்!
தமிழ்நாடு தமிழர்க்கே என்று - பெரியார்
தனியொரு மனிதனாய் நின்று - செய்த
இந்தி எதிர்ப்புப்போர்
இந்தியா முழுவதும்
செல்ல - தமிழ் - வெல்ல!
தமிழர்க்குத் தமிழரேபோட்டி - ஒரு
தமிழனை இன்னொருவன் காட்டி - தந்து
உயர்ந்திடும் நிலை அதுவும்
உலகினில் இதுவரை
ஏனாம் - இனி - வேணாம்!
வேறு
மூடப்பழக்கங்கள் முடைநாறிக் கிடந்த
பேதை தமிழினத்தின்
வேதனைகள் நீக்கவந்த
மேதை அவர்தானே பெரியார் - அவர்
மேன்மை உணராதார் அறியார்!

(26.10.2014 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் பாடப்பட்ட கவிதை)

Read more: http://viduthalai.in/page-5/90387.html#ixzz3HpbTVX8e

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்


சொத்து உரிமை: மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதில் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள் ளவர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாவதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள் ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14 வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம். குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90372.html#ixzz3HpcEf3Qo

தமிழ் ஓவியா said...

புதியமுறை சீர்திருத்த மணம்


சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடை பெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர்களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவ தாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறிகிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீ வைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)
குடிஅரசு சொற்பொழிவு 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/90373.html#ixzz3HpcOTsxT

தமிழ் ஓவியா said...

இந்து மதம்


இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம். இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமை யாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லா தாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக் கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரண மாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்ப னரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90374.html#ixzz3HpcWHW5d