Search This Blog

3.10.14

பெரியார் கூறிய இல்லறம் - தொண்டறம்!

ஆடி மாதம் என்றால் அதுமட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?

ஆடி மாதம் என்றால் அதுமட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?
அவதாரங்கள் பிறந்த நவமியும், அஷ்டமியும் கெட்ட நாட்களா?
இளந்திரையன் - உஷா திருமண விழாவில் தமிழர் தலைவரின் ஆணித்தரமான வினாக்கள்


விருத்தாசலம், அக். 1- ஆடி மாதம் என்றால் அது மட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?, அவதாரங்கள் பிறந்த நவமியும், அஷ்டமியும் கெட்ட நாட்களா? என்ற கேள் வியை எழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
16.8.2014 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற இளந்திரையன்- உஷா ஆகியோருடைய மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

நம்முடைய திராவிடர் மாணவர் கழகத்தினுடைய இணைச் செயலாளரான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய செயல்வீரர் இளந்திரையன் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிகள் என்பது நமது அனைவருடைய குடும்ப விழா என்கிற பெருமிதத்தோடு, மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம்.
இது ஒரு புரட்சிகரமான திருமணமாகும். எல்லாவகை யிலும்; அவர் இப்படி முடிவெடுத்த நேரத்தில், இன்றைய தேதிதான் அறிவுக்கரசு அவர்கள் வேண்டுமென்று கேட்டார்கள், இளந்திரையனுக்காக இன்றைக்குத்தான் ஆடி மாதத்தின் கடைசி நாள் என்று சொல்லி, திரு மணத்தை ஆடி மாதத்திலேயே நடத்தவேண்டும் என்பதற் காக அவர்கள் என்னிடத்தில் இந்தத் தேதியைக் கேட்டார் கள். அவருடைய மணவிழா என்று சொன்னால், அது நம் அனைவருடைய குடும்ப விழா என்கிற உணர்வோடு, நான் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டேன்.

நேற்று முன்தினம் மும்பையில் இருந்து அவசர அவசரமாக வந்து, இன்றைக்கு இங்கு வந்துள்ளேன். இன்று மாலை தஞ்சையில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனவே, இவர்கள் முதலில் இந்தத் திருமணத்தை மாலை யில் வைக்கலாம் என்று சொன்னார்கள். இன்றைக்குச் சனிக்கிழமை, பொதுவாகவே மண்டபம் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. நம்மைத் தவிர யாருமே திரு மணத்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை காலையில் திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்லி ஒப்புக்கொண்டேன். இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களுக்கும், வயதானவர்களுக்கும், பொதுவானவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.
உங்களையெல்லாம் சந்திக்கக்கூடியது மகிழ்ச்சி
பொதுவாகவே, மற்றவர்கள் எல்லாம் ஒரு காலத்தில், அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ராகுகாலம் வந்து விடும், அதற்குள்ளே தாலி கட்டவேண்டும்; அதற்குள்ளே திருமணத்தை முடித்துவிட வேண்டும்; ராகுகாலம் வருகிறது, ராகுகாலம் வருகிறது என்று ஏதோ கவர்னர், பிரசிடெண்ட் வந்து போவதைப்போல, அதிசயமாக சொல்வார்கள். ஏதோ, புலி, சிங்கம், கரடி வந்தால், பயப்படுகின்ற மாதிரி, மிகப்பெரிய அளவில் ராகுகாலத்தை சொன்ன காலம் உண்டு. ஆனால், இப்பொழுது, ராகுகாலம் போய்விடக்கூடாது; அதற்குள்ளே நீங்கள் வந்துவிட வேண்டும் என்று எங்களை நெருக்கி, நாங்கள் வந்துவிட் டோம், வழக்கம்போல மிகவும் சீக்கரமாக. 9.30 மணிக்கு இங்கே வந்துவிட்டோம். அறிவுக்கரசு அவர்களிடம் நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை, 9.30 மணிக்கு நீங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

ஆனால்,  தொடங்குவதற்கு முன்பே நான் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். திண்டிவனத்தில் தோழர் தாஸ் அவர்களோடு இங்கே வந்து உங்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.

நம்முடைய இளந்திரையன் அவர்கள் நமது மாணவர் இயக்கத்தில், அமைதியாக, ஆழமாக தொண்டாற்றக்கூடிய ஒரு நல்ல இளைஞர். விருத்தாசலத்தில், ஆரம்பத்தில் 1945 ஆம் ஆண்டு வாக்கில் திராவிடர் மாணவர் கழகம் மிகவும் வலிமையாக இருந்தது. அங்கே பழமலை என்ற ஒரு நண்பர், பேராசிரியர் பழமலை அல்ல; அந்தப் பழமலை வேறு; பழைய தோழர்களுக்கு நன்றாக நினைவிருக்கும். தோழர் முனுசாமி அவர்கள், தாஸ் சைக்கிள் மார்ட் வைத்திருந்த அந்தக் காலகட்டத்தை நான் சொல்கிறேன்.
அப்பொழுதும் மாணவர் கழகம் சார்பாகத்தான் விருத்தாசலம் வானொலித் திடலில் தான் அந்தக் காலத்தில் கூட்டம் போடுவார்கள். ஆகவே, இப்பொழுது நான் வரும்பொழுதுகூட சொல்லிக்கொண்டு வந்தேன். 1944 ஆம் ஆண்டு, இந்த ஊருக்கு முதல் முறையாக ஆசிரியர் திராவிடமணி அவர்களோடு வந்திருந்தேன். தோழர் சி.முனுசாமி அவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த வட்டாரத்திலிருந்த மிகத் தீவிரமான ஒரு இயக்கத் தோழர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்; திட்டக் குடி ஒரு நல்ல பலமான பகுதி, அந்தக் காலத்தில். அது போன்றே பென்னாடம் நல்ல பலமான பகுதி. விருத்தா சலத்தில், பொன்னரசு என்பவர், அவருடைய இயற்பெயர் தங்கராசு; பொன்னரசு என்று பெயர் மாற்றிக் கொண்டார். இப்படி பல தோழர்கள் இருந்தார்கள். அந்தக் காலகட்டத் தில், வயதானவர்கள் இருந்தாலும், செயல்படக் கூடிய அத்தனை பேரும், திராவிட மாணவர் கழகத்தைச் சார்ந்தவ ராகத்தான் இருந்து கூட்டத்தைப் போடுவார்கள்.  1944 ஆம் ஆண்டு வாக்கில் மின்சாரம் வந்ததாக எனக்கு நினை வில்லை. சேலம் போகவேண்டுமானால், இங்கே வந்து தங்கி விட்டுத்தான் செல்லவேண்டும். சேலம் மாநாட்டிற்குக்கூட அப்படித்தான் கடலூரிலிருந்து இங்கே வந்து தங்கிவிட்டு, முன்புகூட நான் உரையாற்றும்பொழுது சொல்லியிருக் கிறேன். தாஸ் அவர்களின் வீடு டவுனில் இருக்கும். அங்கிருந்து ஜங்சனுக்கு வரவேண்டும் என்றால், குதிரை வண்டியில் வரவேண்டும் அல்லது நடந்துதான் வரவேண் டும். நடு இரவில் சேலம் போகவேண்டுமானாலும் சரி, சேலத்திலிருந்து வந்து கடலூருக்குச் செல்லவேண்டுமானா லும் சரி அதுதான் அன்றைய நிலை. இந்தப் பகுதியில் அற்புதமான திராவிடர் மாணவர் கழகமாக இருந்தது. இடையில் அதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.

மாணவர் கழகம் அமைப்பு மிகவும் செல்வாக்காக உருவாகிக் கொண்டிருந்தது
ஆனால், இளந்திரையன் போன்ற நண்பர்கள், நம் முடைய சந்திரசேகரன் மற்ற தோழர்கள், எல்லோரும் நன் றாகப் பழகி, ஏராளமான தோழர்கள் இங்கு உருவானார்கள். குறிப்பாக, விருத்தாசலம் அரசினர் கலைக் கல்லூரி வந்த வுடன், ராசவேல் போன்றவர்கள், தீவிரமாக மாணவர் கழகத்தை இங்கு அமைத்தார்கள். மாணவர் கழகத்தின் சார்பாக, நம்முடைய தோழர்கள் பலர் கல்லூரியில் பேசவேண்டும் என்று அழைத்தார்கள். அப்பொழுதும் மாணவர் கழகம் என்ற அமைப்பு மிகவும் செல்வாக்காக உருவாகிக் கொண்டிருந்தது. பிறகு இன்றைக்கு நல்ல இளைஞர்கள், ஆற்றல் வாய்ந்த தோழர்கள் அத்துணை பேரும் தீவிரமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள், தோழர் இளந்திரையன் அவர்கள் அமைதியாக, அடக்கமாக, ஆழமாக நல்ல பணியைச் செய்யக்கூடிய எடுத்துக்காட்டான ஒரு தோழர்.

திராவிட இயக்கத்தவர்களில் பெரும்பாலோர் எல்லோருமே கொள்கையாளர்கள்
மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்பதில், தந்தை பெரியார். அவர்கள்தான் வழிகாட்டினார்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்தத் துணிச்சல் வந் திருக்குமா என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, திராவிடர் கழகத்தவர் என்று சொன்னால், திராவிட இயக்கத்தவர்களில் எல் லோருமே கொள்கையாளர்கள். அரசியலுக்குச் சென்றவர் கள் வேண்டுமானால், சில நேரங்களில், இந்தக் கொள் கைக்கு கொஞ்சம் மாறுபட்ட நிலையில், வெறும் அரசியல் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், அடித்தளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடுத்துக்கொண்டாலும்கூட, ஆதிநாளில் இருந்து பகுத்தறி வாளர்களாகத்தான் இயக்கத்தில் அடிப்படையில் இருப்பார் கள், அடிப்படைக் கொள்கையோடு. அந்த மாதிரி வரும் பொழுது, நாள் என்ன? நட்சத்திரம் என்ன? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
அண்ணா அவர்கள் ராகுகாலம் என்கிற நேரத்தில்தான் நாமினேசன் போட்டார். முதலமைச்சராகவும் ஆனார். அதுதான் மிக முக்கியம்.  எதற்காக இதனைச் சொல்கிறேன் என்று சொன்னால், மூட நம்பிக்கையைச் சொல்லி, நம் மூளைக்கு விலங்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்கின்ற நேரத் தில், புது யுகத்தினுடைய முன்னோக்குள்ள தொலைநோக் காளர்; பின்னாளில் வரக்கூடிய செய்திகளை, முன்னாளில் சொல்லக்கூடியவர்.
உலக அமைப்பாக இருக்கக்கூடிய யுனெஸ்கோ அதனைத் தெளிவாக எடுத்துச்சொல்லி, தென்கிழக்கு ஆசியாவினுடைய சாக்ரட்டீஸ் என்று வருணித்து, சமூக சீர்திருத்த இயக்கத்தினுடைய தந்தை அவர் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த மூன்று செய்திகளையும் சொல்லிவிட்டு, நான்காவதாக அவருக்குக் கொடுத்த அந்த விருதில், அய்யா அவர்களைப்பற்றி யுனெஸ்கோ எழுதியது,

அதாவது மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகளுக்கெல்லாம் பெரியார் கடும்


எதிரி என்று சொன்னார்கள்.

அந்த எதிர்ப்பினுடைய அறுவடைதான், நம்முடைய இளந்திரையன் போன்றவர்கள் இன்றைக்கு நடத்திக் கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான கொள்கைப் பிரச்சார விழாவான, கொள்கைக்கு வெற்றி விழா எடுக்கக்கூடிய விழாவாக அமைந்திருக்கக்கூடிய இந்தத் திருமண விழா என்று சொன்னால், மகிழ்ச்சியோடு பாராட்டவேண்டியதுதான்.


பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா?

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். சில பேர் புரியாமல், விடுதலையைப் படிக்காமல், சொல்வார்கள். பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறது என்றவுடன், பெரியார் காலத்தில் இருந்ததுபோல், இப்பொழுது இல்லீங்க என்று. அவர்கள் விடுதலை நாளிதழையும் படிப்பதில்லை, செய்திகளையும் தெரிந்துகொள்வதில்லை. பெரியார் காலத்தைவிட இப்பொழுது பெரியது என்று சொல்வது, நாங்கள் பெருமை கொண்டாடுவதற்காக அல்ல. பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேட்டார்கள், இருக்கும் என்பது மட்டுமல்ல, தீவிரமாக இயங்குகிறது என்பதை இதுபோன்ற மணவிழாக்கள் காட்டிக் கொண்டிருக்கும்.
இந்த ஆடி மாதம் என்று சொன்னால், ஆடியில் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். இதனுடைய விளைவு, இந்த மாதத்தில் எந்தத் திருமண நிகழ்வுகளையும் செய்யமாட்டார்கள். மண்டபங்கள் எல்லாம் காலியாகவே இருக்கும். அதிலும் சனிக்கிழமை என்றால், அந்த நாளில் திருமணங்களை நடத்தமாட்டார் கள். மூடநம்பிக்கைகளில் இது ஒரு மூடநம்பிக்கை.

செவ்வாய்க் கிழமையில்தான் விண்கலத்தை அனுப்பினர்

செவ்வாயே வெறும் வாய் என்று சொல்லிக் கொண் டிருந்தார்கள். இன்றைக்குச் செவ்வாய்க் கோளுக்கே விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள். அது செவ்வாய்க் கோளினை சென்றடையும். செவ்வாய்க் கிழமையன்றுதான் அந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனால், இங்கேயுள்ள நம்மாள்கள் செவ்வாய் தோஷம் என்று சொல்லி, 40 வயதான பெண்களுக்கு இன்னும் திருமணம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு விரக்திய டைந்துள்ளார்கள். மூட நம்பிக்கையினால் லாபமா? நட்டமா? என்று கேட்டால், முழுக்க எவ்வளவு பெரிய கேடு என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வதற்காக இந்த மணவிழா; இது வெறும் மணவிழா அல்ல; ஒரு பெரிய மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி. நாங்கள் சுயமரியாதைக்காரர் கள் என்று சொன்னால், எதைப் பேசுகிறோமோ, அதைத் தான் செய்வோம்; எதைச் செய்கிறோமோ அதைத்தான் பேசுவோம் என்பதற்கு இதுதான் தெளிவான அடையாளம், எடுத்துக்காட்டாகும்.


இந்த ஆண்டு பாருங்கள், ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய நிகழ்வுகள், ஆடி மாதம் கடைசி நாளான 31 ஆம் தேதியும் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏனென்றால், ஆடி மாதத்தில்தான் தேதி வேண்டும் என்று தோழர்கள் கேட்கிறார்கள்.
பெரியார் இயக்கம் சக்தி வாய்ந்ததாக பெரியாருக்குப் பின் இயங்குகிறதா இல்லையா?
இந்த ஆடி மாதத்தில், கடலூரில் நம்முடைய இளம் வழுதி அவர்களுடைய பெயரத்தி, புகழேந்தி அவர்களு டைய இல்லத் திருமணம்; மணமகன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பின்லாந்தில் பணியாற்றுகிறார். மணமகளும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றக்கூடியவர். இருவருக்கும் மணவிழாவினை நடத்தி வைத்தோம்.
அதேபோல், திருமகள் இறையனார் இல்லத் திருமணம்; பெங்களூர்காரர்களுடைய திருமணம்; பவள விழாக்கள் நிகழ்வுகள் இதுபோல், இந்த மாதத்தில் மட்டும் நான் நடத்தி வைத்த நிகழ்ச்சிகள், மகிழ்ச்சியான வைதீக மொழியில் சொல்வதென்றால், சுபகாரியம்; நாங்கள் ஒன்றும் சுபகாரியம், சுபதினம் என்ற வார்த்தைகளை நம்புவதில்லை. இந்த மாதத்தில் மட்டும் பத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக் கின்றன என்று சொன்னால், மணவிழாக்கள் உள்பட நிகழ்வுகளை நானே நடத்தி வைத்திருக்கிறேன் என்று சொன்னால், பெரியார் இயக்கம் வெற்றி பெற்றதா இல்லையா? பெரியார் இயக்கம் சக்தி வாய்ந்ததாக பெரியாருக்குப் பின் இயங்குகிறதா இல்லையா?

விஞ்ஞானத்திற்கு எதிரான செய்திகளை, விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்புகிறார்கள்


தொலைக்காட்சிகள், விஞ்ஞானத்திற்கு எதிரான செய்திகளை, விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்புகிறார் கள். மற்ற நாடுகளில், விஞ்ஞானம் வந்தது என்றால், அஞ்ஞானம் போகும்; மெய்ஞானம் வரும் என்று இருந்தது. இங்கே இருக்கின்ற ஞானமும் போய்விடும், தொலைக் காட்சிகளைப் பார்த்தால். எனவே, கூடுமானவரையில், தொலைக்காட்சிகளைப் பார்க்காமல் இருந்தால், ஆயுளும் விருத்தியாகும், அறிவும் விருத்தியாகும் அதுதான் மிக முக்கியம்  இருக்கின்ற அறிவைப் பறித்துக் கொள்கிறான். அறிவை நமக்குக் கொடுக்கின்ற மாதிரியான நிகழ்ச்சிகள் கிடையாது. இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், முதலாவ தாக மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப் பாகும். ராகு காலத் திருமணம் என்பதால்.

புராணக் கதையில், ராமனுக்கும், சீதைக்கும் திருமணத் திற்கு தேதி பார்த்தது, சாதாரண புரோகிதர் அல்ல; புரோகிதர்களிலேயே பெரிய புரோகிதர் வசிஷ்டர்; அவர் சாதாரணமானவர் அல்ல. வசிஷ்டர் வாயால் என்று சொல் வார்கள். அந்த வசிஷ்டர் நாள் பார்த்துக் கொடுத்ததுதான் ராமன் - சீதை திருமண நாள். ராமாயணக் கதைப்படி. அந்தத் திருமணம் என்னாயிற்று? 14 ஆண்டுகள் காட்டுக்குப் போனார்கள்; கதைப்படிதான்.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றுவ தற்காக அண்ணா அவர்கள், சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசுகிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன் சொன்னார், அந்தக் காலத்தில், ராமனுக்கும், சீதைக்கும் என்று ஆரம்பித்தார். பெரியாருடைய சுயமரியாதைத் திருமணத் திட்டம் மிகவும் அற்புதமானது

முதலமைச்சர் அண்ணா அவர்கள்,  எதிர்க்கட்சிக்காரர் கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அனுமதிப்பார். ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலும் இருந்தார்கள்.

எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் கருத்திருமன்; கலியுகக் கம்பர் என்று அவருக்குப் பெயர். எதற்கெடுத்தாலும், கம்ப ராமாயணத்தில் இருந்துதான் அவர் மேற்கோள் காட்டி பேசுவார். அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தால், முதலமைச்சர் உட்காருவார்; முதலமைச்சர் எழுந்தால், எதிர்க்கட்சித் தலைவர் உட்காருவார்.

கருத்திருமன் எழுந்து, ராமாயணத்திலேயே அந்தக் காலத்தில் ராமனுக்கும், சீதைக்கும் நடந்த திருமணம் என்று ஆரம்பித்து, ஏதோ சொல்ல வந்தார்.
உடனே முதலமைச்சர் அண்ணா குறுக்கிட்டு, ராமனை யும், சீதையையும் தயவு செய்து கூட்டிக்கொண்டு வராதீர் கள்; சுயமரியாதைத் திருமண சட்டத்தை யாரும் எதிர்க்க வில்லை. மிகவும் மகிழ்ச்சியாக நாம் அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாம். பெரியாருடைய அந்தத் திருமணத் திட்டம் மிகவும் அற்புதமானது என்று நாம் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம். இந்த நேரத்தில், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சேர்ந்து, பிறகும் பிரிந்த அந்த ஜோடியைப்பற்றி இப்பொழுது ஞாபகப்படுத் தாதீர்கள் என்று அண்ணா அவர்கள் மிகவும் வேடிக்கை யாக சொன்னார். அந்த நிகழ்வு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

விடாப்பிடியாக கருத்திருமன் அவர்கள், என்ன பெரிய சீர்திருத்தம் செய்திருக்கிறீர்கள், சுயமரியாதைத் திருமணத் தில் என்று கேட்டார். இதனால், பெரிய ஆபத்து ஒன்று இருக்கிறது என்று சொன்னார். என்ன ஆபத்து என்று விளக்கி சொல்கிறார்; புரோகிதர் களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் வரும் என்று சொன்னார்.

உடனே முதலமைச்சர் அண்ணா அவர்கள் எழுந்தார்; அன்றைய தினம் நானே விடுதலை நாளிதழுக்காக செய்தி சேகரிக்க சட்டமன்றத்திற்குச் சென்று, பத்திரிகையாளர் களுக்காக ஒதுக்கப்பட்ட அந்தப் பகுதியில் அமர்ந்திருந் தேன்; அண்ணாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், நான் பார்த்துவிட்டு, தந்தை பெரியாரிடம் என்ன நடந்தது என்று சொல்வேன் என்பதால் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் அந்த நாளாகும்.

புரோகிதத் திருமணத்தை தடை செய்கின்ற மசோதா அல்ல!

எழுந்த முதலமைச்சர் அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே, நான் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இது புரோகிதர் இல்லாத திருமணத்திற்கு, புரோகிதர் வராமல் நடத்திக் கொள்ளும் திருமணத்திற்கு சட்டம் வடிவம் கொடுக்கக் கூடிய மசோதா நாம் இப்போது நிறைவேற்றக்கூடிய மசோதா - சட்டமாகப் போகிறது. புரோகிதத் திருமணத்தைத் தடை செய்கின்ற மசோதா அல்ல. புரோகிதத் திருமணம் செய்துகொள்கிறவர்கள், இரண்டு, மூன்று புரோகிதர்களை வைத்துக்கூட திருமணம் செய்து கொள்வதில் எங்களுக் கொன்றும் ஆட்சேபணையில்லை என்று சொன்னார்.

கருத்திருமன் விடவில்லை, மறுபடியும் எழுந்து, என்னென்னவோ பெரிய சீர்திருத்தம் என்று சொல்கிறீர் கள்; என்னுடய திருமணத்தை அந்தக் காலத்தில், புரோகி தரை வைத்துத்தான் நடத்தினேன்; மந்திரத்தை நீட்டிக் கொண்டிருந்தார்; நான் உடனே சீக்கிரம் முடியுங்கள் என்று சொன்னேன். அந்தப் புரோகிதர் அய்ந்து நிமிடத்திலேயே மந்திரத்தை முடித்துக்கொண்டார். நீங்கள்தான் சீர்திருத்தம் செய்வீர்களா? நான் என்னுடைய திருமணத்தில் சீர் திருத்தம் செய்யவில்லையா? என்று கேட்டார்.

அதற்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் மறுபடியும் எழுந்தார், சிரித்துக்கொண்டே சொன்னார், நண்பர் கருத் திருமன் அவர்கள் சொன்னார், அவருடைய திருமணம் வெகு சீக்கிரத்தில் நடந்ததென்று. அது சுயமரியாதைத் திருமணமும் அல்ல; சீர்திருத்தத் திருமணமும் அல்ல; தேசியத் திருமணமும் அல்ல; அது அவசரத் திருமணம் என்று சொல்லி முடித்தார்.

அவ்வளவு மகிழ்ச்சியாக, அப்படி நிறைவேற்றப்பட்ட அந்த திருமணச் சட்டத்தினுடைய அடிப்படை என்ன என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எந்தச் சடங்கும், சம்பிரதாயமும் இல்லாமல் இந்தத் திருமணம் நடைபெறுகிறது. மணமக்கள் இளந்திரையன் - உஷா மகிழ்ச்சியாக இங்கே அமர்ந்திருக்கிறார்கள். தேவையற்ற சடங்குகள் இல்லை. சுயமரியாதை என்றால், விளக்கெண் ணெய் குடிப்பதுபோல, வேப்பெண்ணெய் குடிப்பதுபோல, பெரிய சங்கடத்தை உண்டாக்குபவை அல்ல; தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்னுங்கேட்டால், இந்த மணவிழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால், இளந்திரையன் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத்தில் முக்கிய பொறுப்பாளர் ஆவார். புரட்சிகரமான ஒரு திருமணத்தை இந்த ஆடி மாதத்தில் நடத்திக்காட்டி, ராகுகாலத்தில், அதுவும் சனிக் கிழமையில், தாலி இல்லாமல் நடத்திக் காட்டி, மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால், இது ஒரு கொள்கைக்கு விளக்கம் சொல்வதுபோல்.

சில பேர் சொல்வார்கள், இவர்கள் எல்லாம் பேசுவார் கள், அவர்கள் விஷயம் என்றால்  செய்யமாட்டார்கள் என்று சொல்லி, செய்ய முடியாதவர்கள் சொல்வார்கள். அவர்கள் பேசவும் மாட்டார்கள், பேசுவதற்குத் துணிவும் கிடையாது. செய்கிறவர்களைப் பார்த்து, செய்து முடித்து விட்டால், இதெல்லாம் என்னங்க, இது மாதிரி செய்தால், இது ஒரு திருமணா? என்று சொல்வார்கள். ஆகவே, நம்முடைய மக்களுடைய மனப்பான்மையைப் பற்றி நாங்கள் கவலைப்படாதவர்கள்.

அந்த வகையில்தான், இந்த மணவிழா ஒரு எடுத்துக் காட்டான, சிறப்பான மணவிழா.

இன்னொரு விஷயத்தை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும் தோழர்களே! எங்கேயாவது பார்ப்பனர் கள் இதனைக் கடைபிடிக்கிறார்களா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்கள் ஆடி மாதத்தில் திருமணம் செய்கிறார்கள்; மார்கழி மாதத்தில் திருமணம் செய்கிறார்கள். ஏனென்றால், அது எங்களுக்கு ஒத்து வரும் என்று சொல்கிறார்கள். ஆடி மாதத்தில், மண்டபங்கள் காலியாக இருக்கும்; பொருள்கள் எல்லாம் விலை குறைவாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் இருக்காது; ஆகவே, அந்த மாதங்களில் அவன் திருமணத்தை வைத்துக்கொள்வான். நம்மாள்களை அந்த மாதங்களில் திருமணங்கள் செய்யக்கூடாது என்று சொல்வான். எல்லாவற்றிலும் அது மாதிரி செய்திருக்கிறார்கள். 

                                                                                           ----------------- தொடரும் 1-10-2014

Read more: http://viduthalai.in/page-4/88518.html#ixzz3Etvoa5CP
 ****************************************************************************************************
பெரியார் கூறிய இல்லறம் - தொண்டறமாகும் 
 
பெரியார் கூறிய இல்லறம் - தொண்டறமாகும்
இளந்திரையன் - உஷா திருமண விழாவில் தமிழர் தலைவர்
விருத்தாசலம், அக். 2- பெரியார் கூறிய இல்லறம் - தொண்டறமாகும் என்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

16.8.2014 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற இளந்திரையன்- உஷா ஆகியோருடைய மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரை நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நெய்க்குத் தீட்டுக் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் தொட்டால் தீட்டு என்று சொல்கிறார்கள்; அவன் கொடுக்கும் நோட்டை எவனாவது தீட்டு என்று சொல்கிறானா? உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு, நான் கொடுக்கும் நோட்டால் உங்களுக்குத் தீட்டாகிவிடும் என்று சொல்லி, நான் போகிறேன் என்று சொன்னால், அவர்கள் விட்டு விடுவார்களா? அந்த நோட்டை தண்ணீர் தெளித்து எடுப்பதில்லை அவர்கள்.


இவையெல்லாம் விதிவிலக்கு, விதிவிலக்கு என்று சொல்கிறார்கள். நம் மக்கள் சிந்திப்பதில்லை. சிந்தியுங்கள்! அதனால்தான், மூட நம்பிக்கைகளின் கடும் எதிரி தந்தை பெரியார் என்று யுனெஸ்கோ வரையில் அது பரவியதால், உலக அளவில் பெரியாருடைய சிந்தனைகள் ஒப்புக்கொள் ளப்பட்டதற்கு அடையாளம்தான் அந்த மாபெரும் விருதாகும். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

இன்றைய இளைஞர்கள், பெரியாரைப் பார்க்காத இளைஞர்கள்

ஒரு அற்புதமான ஒரு நல்ல கொள்கை வெற்றியாகும். இத்தனைக்கும் பெரியாருக்குப் பிறகு ஏற்பட்ட தலை முறைகள். இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் இளந்திரையன் போன்று இருக்கக்கூடியவர்கள். பல இளைஞர்கள், பெரியாரைப் பார்க்காத இளைஞர்கள். அதுதான் மிக முக்கியமாகும். அவர்களுடைய வயதைக் கணக்கிட்டுப் பார்த்தால், 40 வயதிற்குட்பட்டு இருப்பவர்களானால், பெரியாரைப் பார்த்திருக்கின்ற வாய்ப்பே கிடையாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு இந்த இயக்கம் எவ்வளவு செம்மாந்து நடை நடக்கிறது. எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் அய்யா காலத்திலேயே சட்டபூர்வமாக ஆயிற்று.

பெரியார் காலத்திலேயே அவர் கண் எதிரிலேயே    பார்த்தார், மகிழ்ந்தார். அய்யா 95 ஆண்டுகாலம் வாழ்ந்த தற்கு முக்கிய காரணங்கள் என்று சொன்னால், அதில் முதல் காரணம், அன்னை மணியம்மையார் அவர்களுடைய பாதுகாப்பு. இரண்டாவது காரணம், பெரியாரே பிறந்த நாள் வாழ்த்துகளில் எழுதியிருக்கிறார், என்னுடைய காலத்தி லேயே என்னுடைய கொள்கை வெற்றியை நானே பார்த்து அனுபவிக்கிறேன்; அதுவும் சட்டங்களை நிறைவேற்றியது யார்? என்னுடைய தொண்டர்கள்; என்னுடைய தோழர்கள், என்னுடைய சீடர்கள் ஆட்சி அமைத்து, அவர்களே அந்த ஆட்சி பெரியாருக்கே காணிக்கை என்று சொல்லியிருக் கிறார்கள்.


தயவு செய்து நடுநிலையில் நின்று யோசித்துப் பாருங்கள்; உலக வரலாற்றில் எந்த ஒரு நாட்டிலாவது, எந்த ஒரு புரட்சிகரமான ஒரு சிந்தனையுள்ள ஒரு தலைவரு டைய இயக்கம், அதிலேயிருந்து வந்த சீடர்கள், அவர்களே அரசாங்கத்தை அமைத்து, அந்தத் தலை வருக்கே அதனை காணிக்கை ஆக்கினார்கள் என்றால், காரல் மார்க்சுக்குக் கிடைக்காத வாய்ப்பு தந்தை பெரியாருக்குக் கிட்டியது என்பதைத்தான் இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


திராவிடர் இயக்கத்தை அழிக்க
யாராலும் முடியாது!

இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல; இது ஆயிரங்காலத்துப் பயிர். இதை அழிக்க யாராலும் முடியாது. சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று. திராவிடத்தால் யாரும் வீழ்ந்ததாக வரலாறு கிடையாது. திராவிடத்தால் எழுந்ததுதான் மிக முக்கியமான வரலாறாகும். சில நேரங்களில் அரசியல் கட்சிகள் வீழ்ந்தன என்று சொன்னால், அதற்குத் பலகீனங் கள் உண்டு. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அது பொருந் தும். நம் வாக்காளப் பெருமக்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் அரசுகள் அமையும். தி கவர்ன்மெண்ட், தி டிசர்வ் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும். அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க நல்ல இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் நாற்றங்கால்கள் மாதிரி. எங்களுடைய நாற்றங்காலில் இருந்துதான் பயிர்கள் பல நிலங்களுக்குச் சென்றிருக்கின்றன. இந்த மேடையில் இருக்கின்றவர்களுக்குப் பார்த்தாலே தெரியும். எங்கள் நாற்றங்காலில் இருந்து சென்ற பயிர்கள்தான் இவை எல்லாம்.

அப்படிப்பட்ட அளவிற்கு மிகப்பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், இது மிக அற்புதமான இயக்கமாகும். ஒரு தலைவர், அவருடைய கொள்கையின் வெற்றியை அவருடைய காலத்தில் பார்த்தார். அவருடைய தொண்டர்கள், அவருக்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்துகின்ற நேரத்தில், இந்த இயக்கம் மேலும், வலிவும், பொலிவும் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்த மணவிழாவே எடுத்துக்காட்டு.


நூறு ஆண்டுகளுக்கு முன்பு எல்லாவற்றையும்விட இன்னொரு சிறப்பு என்ன வென்றால், இவ்வளவு பெரிய மாறுதல், அரசியல் கட்சிகளில் சாதனைகள் செய்வது என்பதை கணக்குப் போட்டு சொல்லலாம்; இத்தனை பாலங்கள் கட்டினோம்; இத்தனை மருத்துவமனைகள் கட்டினோம்; இத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டினோம் என்று சொல்லலாம். ஒரு சமூகப் புரட்சி இயக்கம் இருக்கிறது பாருங்கள், அதில் இதுபோன்ற கணக்குகளை சொல்ல முடியாது. எத்தனை பேரை மாற்றியுள்ளோம் என்ற எண்ணம், அதைவிட மிகத் தெளிவாக வருகிறது பாருங்கள், இதுதான் அந்தக் கணக்கு.

QUALITY,QUANTITY,  என்று சொல்வார்கள். அதுபோல, QUANTITY ANALYSIS மூடநம்பிக்கை இருந்த இடத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் இருந்திருக்கும். இதுவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாதத்தில் திருமணம் செய்துவிட முடியுமா? இதுமாதிரி ஒரு புரட்சிகரமான திருமணத்தை, இளந்திரையன் நடத்திக் கொள்கின்ற மாதிரி ஒரு புரட்சிகரமான திருமணத்தை நடத்திவிட முடியுமா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். சிந்தனை, தெளிவு, இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை நீங்கள் ஊமை களாக்காதீர்கள், ஆமைகளாக்காதீர்கள், செயலற்றவர்களாக ஆக்காதீர்கள். பெரியார் எவ்வளவு பெரிய மனிதநேயக் காரர் என்பதற்கு, இதைவிட ஒரு நல்ல எடுத்துக்காட்டு வேறு என்ன? மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது எல் லோருக்கும் பொதுவானது. பெரியாருடைய பகுத்தறிவு தத்துவம்!

ஆடி மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆடி மாதத்தில் அது செய்யக்கூடாது; இது செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால்,  இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் விளம்பரம் செய் திருக்கிறார்கள்; ஆடி மாதத்தின் கடைசி நாள்; ஆடித் தள்ளுபடி நாடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்று விளம் பரம் செய்திருக்கிறார்கள். ஆடி மாதத்தைக் கண்டு ஓடு கிறவர்கள், துணிக் கடைக்கு ஓடலாமா? நகைக் கடை களுக்கு ஓடலாமா? நகைக்கடைக்குச் செல்லும்பொழுது ஆடித் தள்ளுபடியில் வாங்குகிறார்கள். திருமணத்திற்கே பல பேர் ஆடி மாதத்தில்தான் நகைகளை வாங்கி வைக் கிறார்கள். ஏனென்றால், அந்த மாதத்தில்தான் தள்ளுபடி கிடைக்கும் என்று. ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல் வார்கள்.

விவசாயத்திற்கு ஆடி மாதம்தான் மிக முக்கிய மாகும். கண்ணதாசன் அவர்கள் பாட்டெழுதி வைத்திருக் கிறார்; மாதங்களில் அவர் மார்கழி; மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று பாட்டெழுதி வைத்திருக் கிறார்கள். அப்புறம் ஏன் மார்கழி மாதம் பீடை மாதம் என்று சொல்கிறார்கள். எனவே, இதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பாருங்கள். இந்த முரண்பாடுகளைக் களைவ தற்குப் பெயர்தான் பெரியாருடைய பகுத்தறிவு தத்துவம்; சுயமரியாதை இயக்கம். ஆகவே இந்தக் கொள்கையி னுடைய வெற்றி மலர்களாகத்தான் இளந்திரையன் - உஷா ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் உலகளாவிய இயக்கமாக இருக்கிறது.

பெரியாருடைய கொள்கை ஜெர்மனியில்....

தந்தை பெரியார் அவர்கள் ஜெர்மனிக்குச் சென்றார், 1932 ஆம் ஆண்டு வாக்கில், ஆனால், அதற்குப் பிறகு பெரியாருடைய கொள்கை ஜெர்மனியில் வெற்றி பெற்று, சுயமரியாதைத் திருமணமாக, 2014 ஆம் ஆண்டு நடைபெறுகிறது என்று சொன்னால், பெரியார் வெற்றி பெற்றிருக்கிறாரா? தோற்று இருக்கிறாரா? பெரியார் கொள்கை வெற்றி பெற்றிருக்கிறதா? அல்லது வேறு விதமாகப் போயிருக்கிறதா! எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை; ஏனென்றால், நாங்கள் வியாபாரிகள் அல்ல. விளம்பரத்திற்காக வியாபாரம் செய்வார்கள். நாங்கள் வியாபாரம் செய்யவில்லை, அதனால் எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. பூக்கடைக்கு எப்பொழுதும் விளம்பரம் தேவைப்படாது என்கிற பழமொழி உண்டு. ஆகவே, அந்த அடிப்படையில் மிகத் தெளிவாக இந்தக் கொள்கை வெற்றியைக் கொண்டாடக் கூடிய நிகழ்ச்சி யாகத்தான் இந்த மணவிழா இருக்கிறது. இதற்காகத்தான் நான், ஏற்கெனவே கொடுத்திருந்த தேதியையும் மாற்றியிருக்கிறோம்.

மணமக்களுக்கு ஒன்றும் அறிவுரை தேவையில்லை. அவர்கள் கறுப்புடை அணிந்து மிகத் தெளிவான கொள் கையுடன் இருக்கிறார்கள். மணமக்கள் அதிலும் எடுத்துக் காட்டான மணமக்களாகத்தான் இங்கே திகழ்ந்துகொண்டி ருக்கிறார்கள்.

பெரியார் கூறிய இல்லறம் - தொண்டறம்!

எனவே, இது நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறக்கூடிய ஒரு அற்புதமான, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய திருமணம் இளந்திரையன் - உஷா ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா என்பதை எடுத்துச்சொல்லி, நீங்கள் சிறப்பாக, அடுத்து வரக்கூடிய வர்களுடைய அறிவுரைகள், விளக்கவுரைகள், மூட நம்பிக்கை ஒழிப்பு உரைகளையும் கேட்கவேண்டும் என்று சொல்லி, மணமகன் இளந்திரையன் நன்கு தெளிவானவர். தந்தை பெரியார் வழியில் இருக்கக்கூடியவர். பெரியார் இயக்கம் என்று சொன்னால், அது வெறும் கடவுள் மறுப்பை மட்டும் சொல்லக்கூடிய இயக்கமல்ல; பெரியார் இயக்கம் என்றால், ஒரு வாழ்வியல் இயக்கம். சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்று சொல்லக்கூடியது. அந்த சுகவாழ்வு எப்படிப்பட்டது என்று சொன்னால், அந்தச் சுகவாழ்வுக்கு எது அடித்தளம் என்று சொன்னால், எளிமை, சிக்கனம், ஒருவருக்கொருவர் தன்முனைப்பு பாராட்டாமல் வாழ்வது மிக முக்கியம். ஆகவே, இந்த மணமக்கள் அறிவார்ந்த மணமக்களாக இருக்கவேண்டும். உங்கள் பெற்றோர் களிடம், உங்கள் குடும்பத்தவர்களிடம் நீங்கள் பாசம் காட்டுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய இடத்திற்குச் சென்றாலும், யார் யார் உங்களுக்கு உதவினார்களோ வாழ்க்கையில், அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். அதற்கு அப்பாற்பட்டு, நீங்கள் யாருக்கெல்லாம் உதவவேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். உதவி செய்வதில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, மனநிறைவு இருக்கிறதே, அது வேறு எதிலும் கிடையாது. அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், தொண்டறம் என்று சொன்னார்கள்.

மற்றவர்கள் குறை சொல்வதற்கு இடந்தரக்கூடாது!

சம உரிமை என்று வரும்பொழுது பார்த்தீர்களே யானால், அது ஒரு வழிப் பாதையல்ல. ஆணாக இருந் தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்து சிறப்பாக வாழுங்கள். இதனை தெளிவாக நீங்கள் உணர்ந்து, சிக்கனமாக வாழ்ந்து, சிறப்போடு இந்தத் திருமண முறையில், ஆடி மாதத்தில் திருமணம் செய்துகொண்டீர்கள், சனிக்கிழமையில் திருமணம் செய்துகொண்டீர்கள், புரட்சிகரமான திருமண த்திற்கு முடிவெடுத்தீர்கள்; நல்ல முடிவுகள் இவை யெல்லாம் என்று சொல்கின்ற நேரத்தில், உங்களை மற்றவர்கள் குறை சொல்வதற்கு, கண்களை அகலமாக விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; அதற்கு நீங்கள் இடந்தரக்கூடாது; மற்ற சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகொள்ளக் கூடியவர்கள், அவர்கள் மிகத் தெளிவான அளவிற்கு, இருக்கிறார்களோ, அதேபோல, அதைவிட மிகப்பெரிய அளவில் நீங்கள் இருக்கவேண்டும்; பொறுப்போடு இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் திகழவேண்டும். அது இந்தக் குடும்பத்திற்குப் பெருமை; உங்களுக்குப் பெருமை; இந்தக் கொள்கைக்குப் பெருமை; இந்த இயக்கத்திற்குப் பெருமை என்று சொல்லி,

பெரியாருக்கும் - அண்ணாவிற்கும் வீர வணக்கம்!

இந்த மணமுறையினைப் புகுத்தியவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்; இந்த மண முறைக்கு தெளிவான அளவில் வாய்ப்பை ஏற்படுத்தி, சட்டம் வடிவம் கொடுத்த பெருமை, திராவிட முன்னேற்றக் கழக அரசை, தந்தை பெரியாருக்கே காணிக்கையாக்கிய பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அந்த நினைவு, ஆக, பெரியாரையும், அண்ணாவினுடைய நினைவையும் நாங்கள் நினைத்துப் பாராட்டி, அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.

நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                                               ---------------------------”விடுதலை” 2-10-2014

70 comments:

தமிழ் ஓவியா said...

இன்று காமராசர் நினைவு நாள் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த வீரர்


- முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், தி.க.

இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தபோது, பைத்தியக் காரத் திட்டம் என்று தமது கருத்தினை வெளிப்படுத்தியவர் காமராசர். இந்தத் திட்டத்தை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை என சூளுரைத்தவர் காமராசர். சங்கரரும், இராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடுவதற்கு முன்பு மற்றவர்களிடம் கலந்து கொண்டா வெளி யிட்டார்கள்? என விதண்டாவாதம் பேசி தாம் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை நியாயப்படுத்தி இராஜகோ பாலாச்சாரியாரை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே துணிந்து குரல்கொடுக்க உந்து சக்தியாக திகழ்ந் தவர் காமராசர்.

தந்தை பெரியாரின் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு செயல்பாட்டால் குல்லூகப் பட்டரின் கொடிய கல்வி முறை ஒழிந்தது என்பது வரலாறு. அரை நேரம் படிப்பு, அரைநேரம் அவரவர் குலத்தொழில் என்ற பார்ப்பனரல்லாதோர் கழுத்தில் விழுந்த கத்தி அகற்றப்பட்டது. அதுமட் டுமல்ல முதலமைச்சர் இராஜகோபாலாச் சாரி அமர்ந்திருந்த இடத்தில் காமராசரை அமர வைத்தார். தந்தை பெரியார் என்பது நிதர்சனமானது. ஆம்! இராஜகோபாலாச் சாரியாரின் தனி மனித தேவையற்ற பிடிவாதம் வரலாற்றையே திசை திருப்பி விட்டது. முதல்வர் பொறுப்பிலிருந்து இராஜகோபாலாச்சாரி அகன்றார். மக்கள் தலைவர் காமராசர் அப்பொறுப்பில் அமர்ந்தார். காரணமானவர் பெரியார்!

குடியாத்தம் இடைத்தேர்தலில் நின்றார் - வென்றார் என் பெருமைக் குரியவரானார் பெருந்தலைவர் காமராசர். கருஞ்சட்டைப் படையினரின் தேர்தல் பணி காமராசருக்குப் பெருவெற்றியை ஈட்டித்தந்தது, தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல மைச்சராக கோலோச்சினார் காமராசர்! தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியை அவரது ஆட்சியில் கண்டது.

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித்திட்டம் ஒழிக்கப்பட்டது. அவரால் மூடப்பெற்ற பள்ளிக்கூடங்கள் மூவாயிரம் என்றால்... திறக்கப்பெற்ற கல்விச்சாலைகளோ பல்லாயிரம்! கல்வி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தமிழ் ஓவியா said...

இராஜகோபாலாச்சாரியார் முதல மைச்சராக இருந்தபேது அவனவன் அப்பன்தொழிலைச் செய்து கொள்ள வேண்டும். மீதி நேரம் ஆடு, மாடு மேய்க்கவும், கக்கூஸ் சுத்தம் செய்யவும் போ என்று வர்ணாசிரமக்கல்வித் திட் டத்தைப் புகுத்தினார். மூவாயிரம் பள்ளிக் கூடங்களை மூடினார். ஆயிரம் உயர் நிலைப்பள்ளிகளைத் திறக்கும் திட்டத் தையும் ரத்து செய்து இனிமேல் புதிதாக உயர்நிலைப் பள்ளிக்கூடங்களைத் திறக் கவே வேண்டாம் என்று உததரவும் போட்டார். ஆனால் காமராசர் முதல்வராக வந்ததும் இராஜகோபாலாச்சாரியாரின் வர்ணாசிரமக் கல்வித்திட்டத்தை ரத்து செய்தார். மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்து ஏராளமான தமிழ்ப் பிள்ளைகள் புதிதாகப் பள்ளியில் சேர்ந்து படிக்க வழிசெய்தார். அதைப் பதி னொன்றாம் வகுப்பு வரை விஸ்தரிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார் என்று தந்தை பெரியாரின் நெஞ் சார்ந்த பாராட்டு தலையும் பெற்றார காம ராசர்.

கல்விப்புரட்சி

ஆச்சாரியாரால் மூடிய பள்ளிகள் திறக்கப்பட்ட துடன் 14000 புதிய பள்ளி களைத் திறந்தார்.

1600 தொடக்கப்பள்ளிகள் என்ற நிலையை மாற்றி 30000 ஆக வளர்த்த துடன் படிப்போர் எண்ணிக்கையை 48 லட்சமாய் உயர்த்தினார் 16 லட்சம் பேர் களுக்கும் பகல் உணவு கிடைத்திடவும் வகை செய்தார்.

650 உயர்நிலைப் பள்ளிகள் என்ற நிலையை 2200 உயர்நிலைப்பள்ளிகளாக உயரச் செய்தார். 3.86 லட்சம் என்ற மாணவர் எண்ணிக்கையை 33 லட்சமாக ஆக்கினார்.இலவசக்கல்வி, இலவச மதிய உணவு என்பதையும் தாண்டி சீருடைத் திட் டத்தையும் செயல் படுத்தினார்.

பள்ளிச் சீரமைப்பு இயக்கம் மூலம் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தி பல கோடி ரூபாய் கல்வி உபகரணங்கள், பள்ளித் தேவைப் பொருட்கள் பொது மக்களிடம் இருந்து பெற்று மாணவர் நலன் நாடினார். 133 மாநாடுகள் நடத்தப் பட்டு ஆறரை கோடி ரூபாய் தொகை யாகவும், கல்வி சாதனங்களாகவும் திரட்டினார்.


தமிழ் ஓவியா said...

அந்தக் காலச் சூழலில் எழுத்தறி வின்மையைப் போக்கிடவும், குழந்தை களின் பசியைப் போக்கிடவும் காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம் ஒரு புரட்சி இயக்கம் என்றே பேசப் பட்டது. அரசுக் கலைக்கல்லூரிகளின் எண் ணிக்கை பெருகியது உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் உருவாக்கப் பட்டன. பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக்கல்வி என்பது அப்போது பெரும் சாதனை

நாம் பெறாத கல்வியை...

கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும், திறமையும், வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்! அவர்கள் சிறந்த மனிதர்களாக வாழ்வார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக்கூடம் இல்லாதபோது எப்படி எழுத்தறிவைப் பெறமுடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கும் வகை செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெறவேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும். காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக்காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர் களின் வயிறு காய்ந்து இருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்?

இந்த நாட்டில் ஏழைகள் மலிந் திருப்பது எல்லாருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும்.

அன்னதானம் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை புதியதல்ல, இதுவரை நம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவளித் தோம். இப்போது பள்ளிக்கூடத்திற்கு வரும் பிள்ளைகளுக்கு - ஏழைப் பிள்ளைகளுக்கு உணவளிக்கச் சொல் கிறோம். இவ்விதம் செய்தால் அவர் களின் உயிர்காத்த புண்ணியம் கிடைக் கும் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் புண்ணியமும் வந்து சேரும். இதை உணர்ந்துதான் இப்பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி அண்டை அயலார்கூட தாங்களாகவே முன்வந்து பகலுணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முன் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட் டுவதுடன் வாழ்த்தவும் செய்கிறேன். எல்லாருடைய கண்களைத் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப்போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத் திற்குப் பிச்சையெடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் - உள்ளத்தை உருக்கிடும், உலுக்கிடும் கல்வி வள்ளல் காமராசரின் இந்த பேச்சு அவரின் கல்விச் சாதனைக்கு மக்களின் பேராதரவைப் பெற்றுத் தந்தது. கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது. கல்வியில்லா வீடு இருண்ட வீடு என்றார் புரட்சிக்கவிஞர். அதற்கு விடை கொடுத்து வெளிச்சத்தை தந்தார் காமராசர்.

தமிழ் ஓவியா said...

காமராசரைப் போற்றிய பெரியார் மொழிகள்

காமராசர் பதவிக்கு வந்த பின்னர் பல அணைக்கட்டுகளைக் கட்டியுள்ளார். மேலும் பல குளங்கள், ஏரிகள், வாய்க் கால்களை ஏற்படுத்தி அதன் காரணமாக 6.5 லட்சம் ஏக்கர் பொட்டல்காடுகளை நஞ்சை நிலமாக மாற்றி விளைச்சலை அதிகப்படுத்தி உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உள்ளார். தமிழ் மக்களுக்கு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் இந்தியாவிலேயே முன்னி லையில் இருப்பது காமராசர் ஆட்சி நடத்தும் தமிழ்நாடுதான்.

இந்தியா பூராவிலும் இருபதினாயிரம் கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதில் 11500 மின்வசதிபெற்ற கிராமங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன

கல்வித்துறையில் நாம் காமராசரால் பெற்ற நன்மைகள் கணக்கிலடங்காதவை. இன்று முப்பதினாயிரம் பள்ளிக் கூடங் கள்உள்ளன. ஏழைப் பிள் ளைகளுக்குப் பதினொன்றாம் வகுப்புவரை இலவசக் கல்வி, ஒரு வேளை சோறுபோட்டு துணியும் கொடுத்துப் பிள்ளை களைப் படிக்க வைக்கிறார்.

காமராசர் முதலமைச்சாரக வந்த பின்னர்தான் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் பாதிப்பேர் தமிழர்கள் உள்ளனர். இது எந்தக் காலத்திலும் இல்லாத முன்னேற்ற மாகும். உயர்நீதி மன்றம் தோன்றிய நாளிலிருந்து ஓமந் தூரார் காலம் வரை ஒரு தமிழன் கூட நீதிபதியாக இருந்ததில்லை. காமராசர் முதல் அமைச்சராக ஆன பின்னர் நிலமை தலைகீழாக மாறிவிட்டதே!

இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்ப வர்களில் பாதிப்பேர் தமிழர்களாக இருக்கிறார்களே! அரசாங்கத்தில் பல துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் தமிழர்களே அதிகமாக உள்ளனரே! அய்.ஜி ஒரு தமிழர், ஆணையர் ஒரு தமிழர், கல்வி இலாகா இயக்குநர் ஒரு தமிழர் இவ்வாறு 20 - 25 துறை தலைமைப் பொறுப்பில் எல்லாம் தமிழர்களே உள்ளனர்.

இப்படி எந்தக்காலத்தில் நடந்தது? நீதிக்கட்சி இந்த நாட்டை ஆண்ட போதுகூட கிடையாதே! இப்படி தலைமை உத்தியோகத்தில் தமிழர்களாக இருப்ப தினால், அந்த அந்த துறைகளில் வேலை செய்யும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக் கின்றனர். உத்தியோக உயர்வு முதலிய வற்றுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

காமராசர் இவ்விதம் கல்வித்துறையில் நன்மைகள் செய்து வருகின்றார் என்றால், அதில் நம் வீட்டுப்பிள்ளை குட்டிகள் தானே படித்து பயன் பெறுகிறார்கள்! நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பேர்களாக உள்ள நம் சமுதாயத்தின் பிள்ளை குட்டிகள்தானே அதனால் முன்னுக்கு வருகிறார்கள். உத்தியோகத் துறையில் செய்து வரும்படியான நன்மைகள் எல்லாம் தமிழர் சமுதாயத்தின் நன் மையைக் கருதித்தானே!

(இன்று காமராசர் நினைவு நாள் (1975)

Read more: http://viduthalai.in/page-2/88582.html#ixzz3F2iPSe3h

தமிழ் ஓவியா said...

பயன்படவேண்டும்

சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும். - (விடுதலை, 2.7.1962)

Read more: http://viduthalai.in/page-2/88577.html#ixzz3F2ipuo9E

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள் (1)



சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!

சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,

என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)

பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!

மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.

இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.

அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.

இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!

நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.

இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.

தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.

அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.

அதுபற்றி நாளை எழு துகிறேன்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/88581.html#ixzz3F2j1uwWX

தமிழ் ஓவியா said...

தமிழக புதிய முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அவசர அவசியக் கடமை

தமிழக புதிய முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு

சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அவசர அவசியக் கடமை

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை


பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாமீதான சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட - தண்டனைத் தீர்ப்பின் காரணமாக தமிழகத்தில் சில நாள்களாக சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விகுறியாகி வருவதையும், இந் நிலையில் பொது அமைதி குலையாமல் பொது சொத்துக்களை நாசப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புதிய முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும் என்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதல் அமைச்சரின் முக்கிய கவனத்திற்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெங்களூரு நீதிமன்ற வழக்கில் அத் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் தண்டனை காரணமாக, தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன; அதன் அரசியல் விளைவாக, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கள்கூடி, திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவர்களது தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு மனதாகத் தேர்வு செய்தனர். கடந்த திங்கள் அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்று, அரசு என்பது ஜனநாயகத்தில் ஒரு தொடர் நிகழ்வு என்பதை நிலை நாட்டியுள்ளனர்!

பெங்களூரு தீர்ப்பு அக்கட்சியினரிடையே பெருத்த வருத்தத்தையும், துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பது இயற்கையே!

என்றாலும் தமிழகத்தில் ஆட்சியை நடத்திடும் மகத்தான பொறுப்பும், கடமையும், புதிய அமைச்சரவைக்கு உண்டு. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களது ஜாமீன் முதலிய நடவடிக்கைகள் சட்டப்படி நீதிமன்றங்கள் மூலமாக (Due Process of Law)
நடைபெற வேண்டும் என்பதே சட்டப்படி உள்ள யதார்த்தம்.


தமிழ் ஓவியா said...

ஆத்திரம், ஆவேசம் ஒரு போதும் துணை புரியாது

ஆத்திரம், ஆவேசம், இதற்கு ஒரு போதும் துணை புரியாது; மாறாக தேவையற்ற நீதிமன்ற சிக்கல்களை உருவாக்கும். நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க ஒரு பெரிய சட்ட நிபுணர், வழக்குரைஞர்கள் குழுவே செயல் பட்டு வருகின்றனர்; இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைமை என்பது கடந்த சில நாள்களாகவே கேள்விக் குறியாகி வருவதை பொது நலம், பொது அமைதிக் கண்ணோட்டத்தில் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.

மத்திய அரசும் அதன் உள்துறையும் இதனைக் கூர்ந்து கவனித்து வருவதும், மத்திய அமைச்சர்கள் இங்கே வந்து இதுபற்றி எச்சரிக்கைகளை விடுத்துள்ளதும் இங்கு அலட்சியப்படுத்தக் கூடாதவை ஆகும்!

எனவே, எக்காரணத்தைக் கொண்டும் பொது அமைதி குலையாமல், பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசின், குறிப்பாக புதிய முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும்!

அதிமுக என்ற கட்சியை அவர்கள் எப்படி வேண்டு மானாலும் நடத்தலாம். அது அவர்கள் உரிமை ஆனால் தமிழக ஆட்சி என்பது, பொது மக்கள் அவதியுற்று கண்ணீர் சிந்தும் வண்ணம், மக்களின் இயல்பு வாழ்க்கையை இடையூறு செய்யும் வகையில் அக்கட்சியினர் நடந்து, சட்டத்தைக் கையில் எடுக்கும் நிலை நீடித்தால் இவர்களே கொள்ளிக் கட்டையை எடுத்துத் தம் தலையைச் சொறிந்து கொண்ட கேலிக் கூத்தாகி விடும் என்பதை உணர்ந்து, நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.

அரசின் முக்கிய பிரச்சினைகளில் அக்கறை காட்ட வேண்டும்

ஜெயலலிதா அம்மையாரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவது அவர்களின் முன்னுரிமையாக இருப்பது எதிர்பார்க்கப்படும் நிகழ்வுதான். அதைவிட முக்கியம் ஆட்சி முன்னுரிமை. சட்டப்படி பிரமாணம் எடுத்தவர்கள் ஆட்சியை - சட்டம் ஒழுங்கு - அன்றாட நிர்வாகம் இவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசின் முக்கிய பிரச்சினைகளில் அதிக அக்கறை காட்டி தம் கடமைகளைச் செய்தல் ஆகும்!

மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது; ஏற்கெனவே தொழில் வளத்தில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது தமிழகம் - அகில இந்திய அளவில், இந்தப் புதிய நிலை - மேலும் சிக்கலாக்கும்.

மின் கட்டண உயர்வு என்பதும் மற்றொரு குடைச்சல் பிரச்சினை. கூலிப்படைகளால் அன்றாட கொலைகள், கொள்ளைகள் சர்வ சாதாரண நிகழ்வுகளாக உள்ளன!

அண்டை மாநிலப் பிரச்சினைகள் முல்லைப் பெரியாறு, காவிரி நீர்ப் பங்கீடு, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, மனித உரிமை மீறல்கள் பற்றி இராஜபக்சே ஆட்சியின் கொடு மையான கோணல் போக்கு, தமிழக மீனவர் பிரச்சினை, பறிக்கப்பட்ட படகுகளைத் திருப்பித் தர

மறுக்கும் பிடி வாதப் போக்கு இத்தியாதி! இத்தியாதி!

எனவே, கடந்த இரண்டு நாட்களாக செயல்படத் துவங்கியுள்ள தமிழகத்தின் புதிய முதல் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சில ஊடகங்களில், ஏடுகளில் காவல்துறை தத்தம் விருப்பம்போல நடப்பதாக, பல எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது, அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் தலைவர்கள், ஏடுகள்மீது வழக்குப் போடுவர் என்றும் செய்திகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

வீண் வம்புகளை தாங்களே சென்று விலைக்கு வாங்குவது தேவையற்றது. நல்ல அணுகுமுறையும் ஆகாது.

இப்போது தேவை ஆளுமை! ஆளுமை! குரோத, விரோத மனப்பான்மைக்கு இடமின்றி அனைவருக்குமான ஆட்சியாக கிடைத்த புதிய வாய்ப்பை அவர்பற்றிக் கொண்டு, நடத்திச் செல்வதுதான் சிறந்த விவேகமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.10.2014

Read more: http://viduthalai.in/e-paper/88561.html#ixzz3F2jWLYdx

தமிழ் ஓவியா said...

நவகண்டம்


தி தமிழ் இந்து ஏட்டில் (21.9.2014, பக்கம் 11) விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு என்ற தலைப் பில் ஒரு தகவல்:

வரலாற்று ஆய்வாள ரும், எழுத்தாளருமான இரா.முருக வேள் எழுதியிருக் கும் மிளிர்கல் வரலாற்று நாவலில் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து உயிர்த் தியாகம் செய்பவர் களைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம்: 200 ஆண்டு களுக்கு முன்புவரை தமிழ் சமூகத்தில் சுயபலிகள் இருந் தன. மன்னர் உடல்நலம் பெறு வதற்கு, போரில் வெற்றி பெறு வதற்கு மற்றும் ஊர்ப் பொது நன்மைக்கு இது போன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி, மரத்திலோ, ஒரு கம்பத் திலோ இணைத்து கட்டி விடுவார் கள். பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த குழந்தை களும், பெண்களுமே பலி யிடப்பட்டனர் என்றார் என்று தமிழ் இந்து ஏட் டில் செய்தி வெளிவந்துள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து கொள்வதற்கு அரிகண்டம் என்று பெயர். நவகண்டம்/அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனை வரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடை வாளும், மார்பில் கவசமும் தரித்து, போர் வீரன்போல் போர்க் கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்குப் பூஜை முடித்து பின்பு, தனது இடது கையி னால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட் டிக் கொண்டு இறப்பார்களாம்.

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள்!

1. வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படு கிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக் கையில் நவகண்டம் கொடுக் கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அர சனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவ கண்டம் கொடுக்கப்பட்டது.

3.நோயினால் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல், வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண் டம் கொடுத்துக் கொள்வது.

4.குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்குள்ளாகும் போது, அவ்வாறு சாகாமல் அரசின் அனுமதியுடன் நவ கண்டம் கொடுத்துக்கொண்டு வீர சொர்க்கம் அடைவது.

5.ஒருவன் போர்க் காயத் தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்கவேண்டிய கடமை கள் ஏதும் இருக்குமாயின், தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக் கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

6.ஒருவன் மிகப்பெரிய அவமானத்தை பெற்ற பின், அதற்குமேல் வாழ விரும் பாமல், சாக விரும்புகிறான். ஆனால், கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத் துக் கொள்வது.

பிற்காலத்தில் கோவில் கட்டுவதற்கு, தடைப்பட்ட தேரோட்டத்தை நடத்துவது உள்பட்ட காரணங்களுக்காக வும் மேல்ஜாதிக்காரர்களால் கீழ்ஜாதிக்காரர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் நவகண்டம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தப்பட்டார்கள்; இதில், கீழ்ஜாதிப் பெண்களும், குழந் தைகளும் கூட விதிவிலக்கு இல்லையாம்.

என்ன கொடுமையடா இது! கொடூரமான மூட நம் பிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அதற்குக்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கா ரர்கள்தான் கிடைத்தார்களா?
நவகண்டம்/அரிகண்டம் என்ற சொற்களைப் பார்க்கும் பொழுது, இவை தமிழ்ச் சொற் கள் அல்ல. இது அயல்வழி ஆரிய ஆதிக்கத் திணிப் பாகவே தோன்றுகிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88140.html#ixzz3F2jxtcOc

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உல்டாவா?

கோவில்= கோ+இறை வன். இல் - இல்லம்; அதா வது இறைவன் தங்கும் இடம் என்று பொருள். ஆலயம் என்ற சொல் லுக்கு ஆன்மா லயிக்கும் இடம் என்று பொருள். கடவுள் என்றாலும் இதே பொருள் உண்டு. கட என் றால் கடந்தவர் என்று அர்த் தம். உள் என்றால் உள்ளம் என்று பொருள். கடவுள் என்பவர் உள்ளத்தையும் கடந்தவர் என்று பொருளா கும் என்கிறது ஓர் ஆன் மிக இதழ் (19.8.2014).

உள்ளத்தையும் கடந்த வர் கடவுள் என்றால், உள்ளமே கோவில்; அதில் உறைபவன்தான் இறை வன் என்று சொல்லுவ தெல்லாம் உல்டா தானா?

Read more: http://viduthalai.in/page1/88146.html#ixzz3F2kA4Ueg

தமிழ் ஓவியா said...

மூன்று பேய்கள் - அய்ந்து நோய்கள்!


நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று. அவை 1. கடவுள், மதம், சாஸ்திரம் 2.ஜாதி 3.ஜனநாயகம்.

நம்மை அரித்துவரும் நோய்கள் அய்ந்து. அவை 1. பார்ப்பான் 2.பத்திரிகை 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5. சினிமா

Read more: http://viduthalai.in/page1/88147.html#ixzz3F2kL1XYy

தமிழ் ஓவியா said...

திரிபுரா முதல்வரும் எச்சரிக்கிறார்!


மதச்சார்பற்ற இந்தியாவை ஹிந்து மக்கள் தேசமாக்க முயற்சிக்கிறது - மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. என்று நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார். இவர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர் (மார்க்சிஸ்டு) என்பதால் இப்படிக் கூறுகிறார் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது.

பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக்கொண்டு கடந்த 16 ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் கூட இந்த நான்கு மாதங்களில் இதே கருத்துக்கு வந்துள்ளன என்பதும் கண்கூடு!

பிரதமர் நரேந்திர மோடியே ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர் என்பதும் தெரிந்த ஒன்றே! ஆர்.எஸ்.எஸ். தலைமை கிழித்த கோட்டைத் தாண்ட முடியாது; கொஞ்சம் அய்யப்பாடு ஏற்பட்டால்கூட பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவார் மோடி.

மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சியில் இருந்தபோது ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் அய்க்கியமானாலும், ஆர்.எஸ்.எஸ். பிடி யிலிருந்து விலக முடியாது - அதன் தொடர்பை அறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி, ஜனதா அமைச்சர வையிலிருந்து வெளியேறியவர்கள் ஆயிற்றே! ஜனதாவிலும் உறுப்பினர், ஆர்.எஸ்.எஸிலும் உறுப்பினர் என்கிற இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மதுலிமாயி போன்றவர்களும், ஜனதா தலைவர் களும் அறுதியிட்டுக் கூறிய நிலையில், அமைச்சர் பதவிகளைவிட ஆர்.எஸ்.எஸ்.தான் முக்கியம் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டவர்கள் ஆயிற்றே!

இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டால்தான் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யின் சிண்டு ஆர்.எஸ். எஸின் சர்சங்க் சலாக்கின் (தலைவரின்) கையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

சித்தாந்தத்தை வகுப்பது ஆர்.எஸ்.எஸ். என்பதால், அதன் கை மேலோங்கி நிற்கிறது. அந்த முறையில் இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினாலும், அதற்குமேல் எவரும் வாய் திறக்க முடியாத நிலை!
நரேந்திர மோடியைப் பொறுத்தவரை தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொன்னவர்தானே! இவற்றை யெல்லாம் கவனமாகக் கணக்கில் கொண்டால் திரிபுரா முதலமைச்சர் கூறுவதன் உண்மையின் அருமை புரியும்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மதவாதம் மதம் பிடித்த யானையாக தறிகெட்டு ஆட்டம் போடுகிறது. உத்தரப்பிரதேசத்தை மதக்கலவரப் பூமியாக மாற்றிவிட்டது.

இப்பொழுது லவ்ஜிகாத் என்ற ஒன்றை ஆர்.எஸ். எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கிளப்பி விட்டு இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது. இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, மத மாற்றம் செய்வதாகப் புரளியைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்விளைவை ஏற்படுத்தி, பி.ஜே.பி.யை மண்ணைக் கவ்வச் செய்த பிறகும் புத்திக் கொள்முதல் பெற்றதாகத் தெரியவில்லை.

சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவிற்கு வந்தார் அல்லவா - அப்பொழுதும் ஒரு கூத்து பி.ஜே.பி. ஆட்சியால் அரங்கேற்றப்பட்டது; அது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சீன அதிபர் வந்தபோது அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் விடுதியில் (ஓட்டல்) பணியாற்றி வந்த வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சீன அதிபர் தங்கி இருந்த நாளில் வேலைக்கு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் பணியாற்றியவர்கள் இந்து தோற்றத்துடன் சீன அதிபரை வரவேற்றனராம். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாம்.

இதுகுறித்து அசாம் முதலமைச்சர் தருண் கோகய் கடுமையாக தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த உத்தரவு வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்ப தாகும். எங்களை நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா? அல்லது இந்தியாவின் குடிமக்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? இது எந்த வகையில் சரி? என்ற அர்த்தமுள்ள வினாவை சுயமரியாதையுடன் எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வர, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது நிலைமை? நான்கு மாதங்களுக் குள்ளேயே இப்படி தலைவிரி கோலமாக இந்துத்துவா ஆட்சியாக ஆட்டம் போடுகிறது என்றால், இன்னும் சொச்சகாலம் எப்படிக் கழியும் என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது.

மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமைப் பலத்தால்தான் இந்த ஆபத்தை முறியடிக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page1/88148.html#ixzz3F2kULiK3

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அம்பிகை

அம்பிகையாகிய அன்னையை நவராத்திரி காலத்தில் தியானிப்பதால் வழிபடுவதால் சகல பாவங்களும் நிவர்த்தி யாகும், சிறப்பும் மேன் மையும் ஏற்படும் என்பது அய்தீகமாம்.
கடந்த வருடம் இதே நவராத்திரியில் அம்பி கையை வழிபட்டவர் களுக்கு என்னென்ன பாவங்கள் நீங்கின? என் னென்ன மேன்மைகள் சிறப்புகள் வரவுகள் அமைந்தன என்று எந்தப் பக்தராலாவது கணக்குப் போட்டுச் சொல்ல முடி யுமா? நேரமும், பொரு ளும் பூஜைக்காக செல வழிக்கப்பட்டதைத் தவிர கண்ட பலன் என்னவாம்?

Read more: http://viduthalai.in/page1/88108.html#ixzz3F2ktvWO5

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/88110.html#ixzz3F2l6Oep9

தமிழ் ஓவியா said...

மங்கள்யானும், பிரார்த்தனையும்


(Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தால் பிஎச்எல்வி என்ற ஏவுகலம் (PSLV) மூலம் சிறீஹரிக்கோட்டாவிலிருந்து நவம்பர் 5, 2013 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.

5 ஆய்வுக் கருவிகளுடன் 15 கிலோ எடை கொண்ட ஆய்வுக்கலத்தைத் தயாரிக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 450 கோடிகள் செலவு செய்துள்ளார்கள். இத்திட்டம் வெற்றி பெற்றால் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெறும்.

செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய்கோளில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள். விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப்படுத்துவது வானவெளி குறித்த ஆய்விற்காக செவ்வாய்க் கோள் சுற்று வட்டப்பாதையில் இக்கலத்தை அமைப்பது, செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது. செவ்வாய்க்கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது. செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வதாகும்.

செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் 15 கிலோ எடையுள்ள 5 துணை கருவிகள் உள்ளடக்கியுள்ளது. லைமன் ஆல்ஃபா ஒளிமானி (Lyman Alpha Photometer).

செவ்வாய்க்கான மீத்தேன் உணரி (Mars Methane Sensor) போன்ற காற்று மண்டல ஆய்வுக் கருவிகள் இதில் உள்ளன.

1350 கிலோ எடையுள்ள மங்கள்யான், தற்போது செவ்வாய் வட்டப்பாதையை அடைந்து விட்டது. இந்த வட்டப் பாதையில் ஆறுமாத காலமே இது செவ்வாய் கோளைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக அந்தக் கோளை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும் சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவ னங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப் படும் 5 உபகரணங்களும் இந்தியாவுடையாதாகவே இருக்கும்.

தமிழ் ஓவியா said...

மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு சக்தி உதவியது. பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால், நீள் வட்டப் பாதையில் அதை செலுத்தினர். பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இவ்விதம் (பூமி உள்பட) ஒரு கோளின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் என்று பெயர். கடந்த காலங்களில், பயனீர் வாயேஜர் விண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த உத்தியைப் பயன்படுத்தியது.

செவ்வாய்க்கோளை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள், வங்கக் கடலில் மய்யம் கொண்டுள்ள ஹெலன் புயலை நிழற்படம் எடுத்து அனுப்பியுள்ளது. மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்ட பாதையில் செல்வதைக் கண்காணித்து நான்கு முறை நிர்ணயித்த பாதையை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதன்படி,

1. முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதைத் திருப்பம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்த பாதையில் விண்கலத்தைத் திருப்பினர்.

2. இரண்டாவது பாதைத் திருப்பம் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால், மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்வதால் அத்திருப்பம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

3. மூன்றாவது பாதைத் திருப்பம் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தியதி திட்டமிடப்பட்டது. அதன்படி மங்கள்யானின் இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்த பாதையில் திருப்பி விடப்ட்டது.

4. கடைசி பாதைப் திருப்பம் இரண்டு கட்டமாக ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இறுதி பாதைத் திருப்பம் நேற்று (செப்டம்பர் 22 - 2014) வெற்றிகரமாக திருப்பிவிடப்பட்டு செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.

இவ்வளவு விஞ்ஞான நுட்பம் நிறைந்த ஒரு திட்டம் இது. முழுக்க முழுக்க அறிவியல் திறன் மிக்கது.

இவ்வளவுக்குப் பிறகு மங்கள்யான் வெற்றிக்காக கேரளத்தில் சிறப்புப் பூஜை நடத்துகிறார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது! கேரளாவில் பழவங்கரடி விநாயகர் கோயிலில்நாளை நடக்கும் பூஜையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உட்படப் பலரும் கலந்து கொள்கிறார்களாம்.

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்புவதற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதன் மாதிரி வடிவை வைத்து பூஜை செய்யப்படுவது குறித்து பாரத ரத்னா விஞ்ஞானி சி.என். ராவ் வன்மையாக கண்டித்ததுண்டு (பெங்களூருவில் செய்தியாளர்களிடம் - 23.11.2013).

விஞ்ஞான வளர்ச்சிக்கு மரியாதை வந்து விட்டால் இந்துத்துவாவுக்கு வீழ்ச்சி வந்துவிடும் என்பது ஒன்று; இந்துச் சகதியில் குளித்தவர்கள் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் படித்துத் தேர்ந்தாலும் அதனைப் பிழைப்புக்கான ஒன்றாகக் கருதும் நிலைதான் என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. விஞ்ஞானிகளின் இத்தகு போக்கு வளர்ந்து வரும் இளைஞர்களின் சிந்தனைப் போக்கில் கழிசடையைச் சேர்த்து விடும் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்கிறதே - இங்கே மங்கள்யான் விஞ்ஞானிகளே இத்தகைய அழுக்கு மூட்டைகளாக உள்ளார்களே - முதலில் இவர்களுக்குத்தான் பகுத்தறிவுப்பால் ஊட்டப்பட வேண்டும்.

விஞ்ஞானம் படிப்பது என்பது வேறு - விஞ்ஞான மனப்பான்மை வேறு என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

Read more: http://viduthalai.in/page1/88111.html#ixzz3F2lEdOU8

தமிழ் ஓவியா said...

பதில் கூறட்டுமே!

செண்பகக் காட்டிலும் (தினைப்புனத்து) பரண்மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளி யின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளை யும், வளையல்களை அணிந்த புதுமூங்கில் அனைய தோள் களையும், சந்திரனை ஒத்த (குளிர்ந்த) ஒளி வீசும் முக மென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை அணிந்த மலையன்ன இரண்டு கொங்கைகளையும் இனிமை இன்பம் தருவதான பண் இந்தளம்( நாத நாமக்கிரியை) போன்ற அமிருத மொழிகளையும், பற்களையும், அழகு வாய்ந்த தம்பலப்பூச்சி (இந்திரகோபம்) போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும், இந்தர சாபம் (இந்திரவில் - வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு குழைகளைத் தூக் குகின்ற காதணியும், இந்த்ர நீலம் (நீலோற்பவ மலர்) போன்ற கண்களையும் மடலின் கண் எழுதி மகிழ்ந்த பெருமாளே வள்ளியின் பல அங்கங்களை வரைவது சிரமமல்ல. ஆனால் எழுதுவ தற்கு அரிதான வள்ளியின், இந்தளாம்ருத வசனத்தை யும் எழுதினார் என்கிறார் அருணகிரிநாதர். இது முருகன் திறத்தைக் காட்டு கிறது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர் என் கிறார் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளை. முருகன் வள்ளியின் உரு வத்தை சித்திரம் தீட்டி யதைப் போல திருப்புகழ் வெள்ளி விழா மலரின் (திருப்புகழ் வைபவம்) அட் டையில் ஓர் அற்புதமான ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

திருப்புகழ் வெள்ளி விழா மலர் இணையதளம்

கடவுளைக் கற்பித்தவர் கள் எப்படியெல்லாம் தங்கள் கை வண்ணங்களைக் காட் டுகிறார்கள். முருகக் கடவுள் ஓவியராம். வள்ளியின் அங் கங்களை எல்லாம் அப் படியே தீட்டினாராம்.

முருகனாகட்டும், சிவனா கட்டும், விநாயகனாகட்டும், பார்வதியாகட்டும், லட்சுமி யாகட்டும், சரஸ்வதியாகட் டும், விஷ்ணுவாகட்டும், பிரம் மாவாகட்டும், ராமனாகட் டும், கிருஷ்ணனாகட்டும் இவர்களையெல்லாம் நேரில் பார்த்தவர்கள் யார்? படம் பிடித்தவர்கள் யார்?

மணிவர்மா என்ற ஓவி யரும் கொண்டையராஜ் போன்ற ஓவியரும் இல்லா விட்டால் இந்தக் கடவுள் களின் உருவங்கள் யாருக்குத் தெரியும்?

உண்மையிலேயே இந்தக் கடவுள்களைப் படைத்த பிரம்மாக்கள் இந்த ஓவியர்கள் தாம்.

பிரபல சிற்பியான கணபதி ஸ்தபதி அவர்கள் கல்கி இதழுக்கு ஒரு முறை பேட்டி அளித்தார்!

ஒரு கடவுள் சிலையை வடிக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ருபமா ஒரு கல்லில் அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்பட றீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பதான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்க தானே! எங்கக்கிட்ட அப்படி என்னதான் விந்தை இருக் குன்னு தெரிஞ்சுக்க வேண் டாமா? (கல்கி 11.6.2006)

இப்படி சொல்லியிருப்ப வர் சாதாரணமானவர் அல்லர்! எத்தனையோ கடவுள் சிலைகளை உரு வாக்கிக் கொடுத்த மிகப் பெரிய சிற்பி!

டாண்டாண் என்று கேள்வி கேட்கிறாரே!

கல்லைக் கடவுள் என்று கும் பிடும் பக்த சிரோன்மணி களும், தினமணிகளும் பதில் கூறட்டுமே பார்க்கலாம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88067.html#ixzz3F2m4Tz8Y

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நவராத்திரி

நவராத்திரியில் சந்தனக் காப்பு செய்து பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால் திரு மணமாகாத பெண்க ளுக்கு திருமண யோகம் கிட்டுமாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் இருந்தால் திருமண யோகம் கிட்டாதா? இதன் மூலம் ஆண்கள் நவராத் திரியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிகிறது.

Read more: http://viduthalai.in/page1/88075.html#ixzz3F2mCBFVq

தமிழ் ஓவியா said...

சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page1/88056.html#ixzz3F2mRHbih

தமிழ் ஓவியா said...

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.

உடல் வெப்பக் கடுப்பு அகல...

பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு...

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும் வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க

அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page1/88076.html#ixzz3F2n0G9jw

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குண மாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை வாதம் மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம் ஆகிய வற்றைப் போக்கும்.

சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட செரிமான மின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும். ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும். ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்ற வற்றையும் கட்டுப்படுத்துகிறது.

Read more: http://viduthalai.in/page1/88077.html#ixzz3F2nBuAtH

தமிழ் ஓவியா said...

அட, அண்டப்புளுகு தினமலரே!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?

வெளியிட்டது - ஆனால், விஷமமாக!

இதோ தினமலர்....

நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.

பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:

கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!

தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?

இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;

என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?

கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?

தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/88079.html#ixzz3F2nQsAnV

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் - போர்க் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும் கறுப்பு உடை அணிவீர்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் - போர்க் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும் கறுப்பு உடை அணிவீர்!

செப்.25: தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்!

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, செப்.22- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வும், போர்க் குற்றவாளியான ராஜபக்சே அய்.நா. பொதுப்பேரவையில் உரையாற்றுவதைக் கண்டித்தும், தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி கறுப்பு உடை அணிவீர் என்று செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வருகின்ற 25 ஆம் தேதி கறுப்பு நாள் என்று சொல்லியிருக் கின்றாரே, அதுபற்றி உங்கள் கருத்தென்ன?

டெசோவினுடைய தீர்மானப்படி ஏற்கெனவே அய்.நா. உருவாக்கிய மனித உரிமை ஆணையம், போர்க்குற்றவாளியான ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முயற்சிகள் எடுத்தது; மனித உரிமை ஆணையத்தினுடைய விசாரணைக் குழு இலங்கைக்குள்ளே கூட அனுமதிக்கப்படவில்லை என்ற ஒரு நிலையிலும், விசாரணைக் குழுவை அனுமதிக்க மாட்டோம், நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று வெளிப்படையாக, ஒரு போர்க்குற்றவாளி என்று அய்.நா.வினால் அறிவிக்கப்பட்ட ஒருவர், மீண்டும் வருகிற 25 ஆம் தேதி அழைக்கப்பட்டு, ராஜபக்சேவோ, அவரைச் சார்ந்த இலங்கை அரசோ அங்கே உரையாற்றுவது இருக்கிறதே - மனித உரிமைகளையே மதிப்பதல்லாமல், மிதிப்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை. இதனை டெசோ அமைப்பு கலைஞர் அவர்களின் தலைமையில் சுட்டிக் காட்டியது.


தமிழ் ஓவியா said...

அதன் பிறகு தீர்மானம் போட்டு இதனைத் தடுக்கவேண்டும் என்ற அளவில், இந்திய அரசு என்பது, எவ்வளவுதான் தொப்புட்கொடி உறவுள்ள தமிழர்களைக் கொண்டதாக இருந்தாலும், அவர்களுக்கும், இலங்கை அரசின் சிந்தனைக்கும் மாறுபாடாகத் தெரியவில்லை. இன்னுங்கேட்டால், சென்ற அரசாங்கத்தைவிட, இன்னும் தீவிரமாக ராஜபக்சேவை ஆதரிக்கின்ற ஒரு நிலையைத் தான், பிரதமர் மோடி அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

உதாரணமாக, இங்கே இருக்கின்ற சுப்பிரமணிய சாமிகளும் மற்றவர்களும் அங்கே செல்வது மட்டுமல்லா மல், இப்போதுகூட, பா.ஜ.க.வின் சார்பில் அங்கே சென்று கலந்துகொள்ளக்கூடிய அளவிற்கு இருக்கின்றன. இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், தமிழர்களின் குரலை அவர்கள் மதிப்ப தற்குத் தயாராக இல்லை என்ற நிலையில், நம்முடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக, வருகின்ற 25 ஆம் தேதி உணர்ச்சியுள்ள தமிழர்கள், நியாயம் கேட்கும் தமிழர்கள், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கின்ற தமிழர்கள், மனிதநேய சிந்தனையுள்ளவர்கள் அத்துணைப் பேரும், தங்களுடைய எதிர்ப்பை, தங்களுடைய கண்டனத்தை அறவழியில் தெரிவிப்பதற்காக கறுப்புக் கொடிகளை தங்களுடைய இல்லங்களில் ஏற்றவேண்டும் என்பதை முழுமையாக வரவேற்பதோடு, அதனைச் செயல்படுத்தவேண்டும். அதுபோலவே, கறுப்புடை அணிந்து தங்களுடைய துன்பத்தை, துயரத்தை, ஈழத் தமிழர்களுடைய ஆதரவை காட்டவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் உங்கள் மூலமாக.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து தமிழ்நாட்டில் நிச்சயமாக இந்த உணர்வுகள் புறக்கணிக்கப்படாமல், மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் களையவேண்டும். மீனவர்கள் பிரச்சினை அப்படியே இருக்கிறது; அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட 69 படகுகள் திருப்பித் தரப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

அதோடு ஒவ்வொரு நாளும் மீனவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எந்த வகையில் பார்த்தாலும், ஈழத் தமிழர்களுக் கானாலும் சரி, இங்குள்ள மீனவர்களானாலும் சரி, இலங்கை அரசு மிகப்பெரிய கொடுங்கோன்மை அரசாக நடந்து கொள்கிறது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அரசாக, இந்திய அரசு இருப்பது வேதனைக்குரியது, கண்டனத் திற்குரியது!

எனவே, இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற நாள்தான், வருகிற 25 ஆம் தேதி கறுப்பு நாள் ஆகும்.

சகாயம் போன்ற அதிகாரிகள் தேவை!

தமிழகக் கனிம வளம் - குவாரிகளில் நடைபெற்ற ஊழல்களை விசாரணை செய்யும் அதிகாரியான சகாயம் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று போராட்டம் நடை பெறுவதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எல்லோருமே அதனை செய்யவேண்டும். ஏனென்று சொன்னால், சகாயம் போன்ற அதிகாரிகள் அபூர்வமாக இருக்கக்கூடிய அதிகாரிகள். அவரைப் பொறுத்தவரை உயிருக்குத் துணிந்து, தன்னுடைய நேர்மையை எப்பொழுதுமே வலியுறுத்தக் கூடிய அதிகாரியாக இருக்கிறார். இன்றைய காலகட்டத்தில், அவரைப்போல, ஒரு பத்து அதிகாரிகள் இருந்தால், இந்த நாட்டிலே இருக்கக் கூடிய ஊழல், லஞ்சம் இவைகளெல்லாம் தடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நிச்சயமாக, யார் யாருக்கோ பாதுகாப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றபொழுது, சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது என்பது அரசின் இன்றியமையாத கடமை. நீதித்துறையும் அதனை வலியுறத்தவேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு?

அண்மையில், ஒரே நாளில் அய்ந்து கொலை நடைபெற்றுள்ளது; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ள தற்கு(?) ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டாகும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88068.html#ixzz3F2ngEFSw

தமிழ் ஓவியா said...

பண்பாட்டு ஆதிக்க அரசியலை ஒன்றுபட்டு முறியடிப்போம் சென்னை பெருந்திரள் முழக்கப் போராட்டத்தில் தலைவர்கள் உறுதி

சென்னை, செப்.21- சமஸ்கிருத வாரம், குரு உத்ஸவ் ஆகிய அறிவிப்புகளும் இந்தித்திணிப்பு நடவடிக்கை களும் பண்பாட்டு- அரசியல் ஆதிக்கத்திற்கான குறியீடுகளே என்று சென்னை பெருந்திரள் முழக்கப் போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கச் செய்வதற் கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது.

மத்திய பாஜக அரசு நாட்டின் பன்முக அடையாளங் களை அழித்தொழிக்கவும், ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக ஒற்றை மொழி ஆளுமை யைத் திணிக்கவும் திட்டமிட்ட நடவடிக்கை களை எடுத்துவருகிறது. அதையொட்டி மத்திய பள்ளிக்கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ஆணையிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியும் சென்னையில் பெருந்திரள் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

ஒற்றை மொழித் திணிப்பு முயற்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் பிறந்த நாளாகிய செப்.17 (புதன்) அன்று, இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தியது.

போராட் டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் பேச்சுகளின் முக்கிய பகுதிகள் வருமாறு:

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி

ஒன்று சேரவேண்டியவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதற்காக மோடி அரசுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் அவர்கள் எந்த அளவிற்கு இப்படிப்பட்ட மோசமான நடவடிக்கைகளை எடுக்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த ஒற்றுமை வலுப்பெறும். ஆட்சியின் வேகம் தணி வதற்கு முன்பாக செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்துத்துவா அஜெண்டா செயல்படுத்தப் படுகிறது.

இது வெறும் மொழிப்போராட்டம் அல்ல; பண்பாட்டுப் போராட்டம்.இந்த ஆட்சி தனது முதல் நூறு நாட்களில், கத்திரிக்காய் விலை ஆகியவைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக சமஸ்கிருதம், `ஹிந்தி திணிப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறது.

இப்போது நடந்திருப்பது பனிப்பாறையின் ஒரு நுனிப்பகுதிதான் பாறையையே உடைக்கவேண்டிய கடமை நமக்குஇருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படி நடக்கிறது. ஒரு பக்கத்தில் `ஹிந்தி மொழியைத் திணிக்கிற போது அதில் பெரும்பாலோர் பேசும் மொழி என்று காரணம் சொல்கிறார்கள் மிகமிகச் சிறிய அளவில் பேசப்படும் சமஸ்கிருதத்திற்கு சிறப்பு வாரம் கொண் டாடுவது ஏன்? மக்களின் பண்பாட்டு உரிமையில் கை வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

இந்திய அரசியலில் ஒரு வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டி ருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி சரியாக மதிப்பிட்டி ருக்கிறது. கடந்த நூறு நாட்களில் அனைத்துத் துறைகளிலும் இந்துத்துவா திணிப்பு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக அப்பட்டமான ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் நியமிக்கப்படுகிறார்.


தமிழ் ஓவியா said...

அவர் கல்வியை இந்திமயமாக்க வேண்டும் என்றும், சிறு வயதி லேயே பதியவைக்க வேண்டுமென்றும் பேசுகிறார்.இந்து அரசு என்று சொல்கிறநாள் வரவேண்டும்என்று அத்வானி முன்பு அறிவித்தார் அந்த பாதையில்தான் மோடிஅரசு செல்கிறது. விமானத்தைக் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் என்பதற்கு மாறாக புராண காலத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டு விட்டது என்ற அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் புறம்பான பாடங்கள் புகுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழி ஆக்கவேண்டும் என்ற திருத்தத்தை சட்ட மன்றத்தில் என்.சங்கரய்யா கொண்டுவர, முதலமைச்சர் அண்ணா அதை ஏற்று தீர்மானத்தில் திருத்தம் செய்தார். ஆனால் இன்றைய ஜெயலலிதா அரசோ ஆங்கிலத்தை பயிற்று மொழியாக திணிக்கிறது. ஆட்சிக்கு வந்தவர் களுக்கு தமிழ் உதவியது. தமிழுக்கு இவர்கள் உதவியாக இல்லை.மத்திய ஆட்சியாளர்களின் கலாச்சார ஆதிக்க அரசியலை எதிர்க்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக துணைநிற்கும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்

மோடி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்று சொன்னோமோ அதையெல்லாம் கூச்சமின்றி செய்துகொண்டிருக்கிறார். அரசமைப்புச் சாசனத்தின்படி அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய ஆட்சிக்கு வருகிறவர்கள் மக்கள் உணர்வுகளை அவமதிக்கிற வகையிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.கடந்த காலத்தில் கோவில்களிலிருந்து தமிழ் வெளியேற்றப்பட்டது.

சிறுதெய்வங்களின் கோவில் களிலும். கிராமக் கோவில்களிலும்தான் தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. இன்றும் சமஸ்கிருத எதிர்ப்பும் இந்துத்துவ எதிர்ப்பும் ஒன்றுபட்டு ஒலிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக வெற்றிபெற முடியவில்லை என்றாலும் அதே கருத்தி யலைக் கொண்ட ஜெயலலிதாவால் வெற்றிபெற முடிகிறது.

பேராசிரியர் அருணன்:

சமஸ்கிருதத் திணிப்புடன் பிராமணியத் திணிப்பு நடக்கிறதோ என்று கவலையுடன் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அனைத்து மொழிகளைப் பேசும் மக்களின் வரிப்பணத்தில், சமஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடச் சொல்வது மொழிச் சமத்துவத்துக்கு ஆபத்து. முதலமைச்சர் கடிதத்திற்கு நாளது தேதி வரையில் பிரதமர் பதிலளிக்கவில்லை. முதலமைச்சரும் கேட்கவில்லை.

சமஸ்கிருதத்தில் இலக்கியம் இருந்தாலும், பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்தும் அதர்ம சாத்திரங்கள்தான் நிறைந்திருக்கின்றன. வர்ணாஸ்ரம ஆக்கிரமிப்பு வரு கிறதோ என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. மோடி இந்தியர்கள் அனைவருக்கும் பிரதமரா அல்லது சமஸ் கிருதம் அறிந்தவர்களுக்கும் இந்தி பேசுகிறவர்களுக்கும் மட்டும் பிரதமரா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

பத்திரிகையாளர் ஞாநி

தமிழ் ஓவியா said...

செம்மொழி தமிழ் மையம் உள்ளிட்ட தமிழ் நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் புத்துயிர்ப்பு பெறச் செய்வதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும். பிரதமர் மோடி தனது தாய்மொழியைக் கூட தியாகம் செய்கிறவராக இருக்கிறார்! அய்.நா. சபையில் தன் தாய்மொழி குஜராத்தியில் பேச முடிவு செய்திருந்தால் பாராட்டலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் கட்டளைப்படி இந்தியில்தான் பேச முடிவு செய்கிறார்.

பேராசிரியர் அ. மார்க்ஸ்

கடந்த காலங்களில் இப்படி சமஸ்கிருத மேலாதிக்கத் திற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக் கின்றன. இன்று வட மாநிலங்களிலும் இந்தத் திணிப்பு களுக்கு எதிராகக் குரல் எழுந்துவருகிறது. ஒன்றுபட்டு எதிர்ப்பதன் மூலம் இப்படிப்பட்ட பண்பாட்டு ஆக்கிரமிப்பு களைத் தடுக்க முடியும்.

தலைமை தாங்கிய தமுஎகச தலைவர் ச. தமிழ்ச்செல்வன்

இந்தப் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக எடுத்துச் செல்லப்படும். இது சமஸ்கிருத மொழியை எதிர்க்கிற போராட்டம் அல்ல. அதைத் திணிக்கிற முயற்சியையும், அதன் மூலம் இந்துத்துவம் திணிக்கப்படுவதையும்தான் எதிர்க்கிறோம்.

பொதுச்செயலாளர்சு. வெங்கடேசன்

சமஸ்கிருத வாரம் என்று மட்டும் சொல்லியிருந்தால் அந்த வாரம் என்பதோடு போயிருக்கும். ஆனால் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று வரலாற்றுக்குப் புறம்பாகச் சொன்னதுதான் அவர்களது உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இப்படிச் சொன்னதால்தான் அக்காலத்தில் வள்ளலார், அப்படியானால் தமிழ்தான் தந்தைமொழி என்று சொல்ல வேண்டியதாயிற்று.

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சுமொழியாக இருந்ததில்லை என்று பல ஆய்வாளர் களும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாதமே தேவை யில்லாத மொழி தமிழ். அது அன்றும் இன்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை மொழியாக இருக்கிறது. செம்மொழி தமிழ் வாரம் கொண்டாடுவதற்கான உறுதி மிக்க நடவடிக் கைககளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் உறுதியோடு நடவடிக்கை எடுக்க வைக்கிற வலிமையோடு அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

நன்றி: தீக்கதிர், 18.9.2014

Read more: http://viduthalai.in/page1/88035.html#ixzz3F2oGywEQ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அழகே அழகு!

கடவுள்களில் வித்தி யாசமாக யானை முகம் உடையவர் விநாயகர். இவருக்கு சுகமன் என்று பெயர் உண்டு. இதற்கு நல்ல முகத்தை உடை யவர் என்று பொருளாம் - ஆன்மிக இதழ் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

சிரிக்காதீர்! ஆன்மிகத்தில் எதுவுமே அனர்த்தம் தான் விநாயகன் அழகன் என்றால் பக்தர்கள் வீட் டில் விநாயகர் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவார்களா?

Read more: http://viduthalai.in/page1/87975.html#ixzz3F2pFrk00

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...


மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page1/87986.html#ixzz3F2pZmmcy

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.

Read more: http://viduthalai.in/page1/87993.html#ixzz3F2psDiNy

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2q6Gi57

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

Read more: http://viduthalai.in/page1/87994.html#ixzz3F2qHsH4K

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ் வில் ஒருவன் பெற்றி

ருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படு கிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான் றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/87995.html#ixzz3F2qZHm6Q

தமிழ் ஓவியா said...

பிஜேபிக்கு மக்கள் கற்பித்த பாடம்

மோடி என்றால் வளர்ச்சி என்ற பலூனை ஊதி ஊதி வானத்தில் பறக்க விட்டனர். ஊடகங்களும் இதற்கு ஒத்தூதின. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் விளம்பர யுக்திகளுக்காகச் செலவழிக்கப்பட்டன. விளம்பரத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

காங்கிரஸ் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்து விட்டதே, ஒரு மாற்றம்தான் வரட்டுமே என்று 18 வயது புதிய வாக்காளர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அதன் விளைவுதான் மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியாகும். நூறு நாட்கள் கடந்த நிலையிலும் வளர்ச்சிக்கான அறிகுறியே தென்பட வில்லை கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைதான் - பொருளாதார அணுகுமுறைதான் இந்த ஆட்சியிலும் என்று கடைக்கோடி பாமரனும் பேசும் நிலை உருவானது.

விலைவாசிகள் விண்ணைமுட்டும் நிலை. பெட் ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை கூட கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப் பட்ட படி தனியார் நிறுவனங்களே முடிவு செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கைக்கு முன்பே ரயில் கட்டணம் கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது.

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட் முதலாளிகளின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு உலா வரும் ஆட்சிதான் மோடி தலைமையிலானது என்பது அம்பலமாகி விட்டது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தும், ஆதித்தியநாத் யோகி போன்ற பிஜேபி பிரமுகர்களும் வாய்க்கு வந்தவாறு உளற ஆரம்பித்தனர்.

சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டு விடுகின்றது, ஒரு பகுதியில் 10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் இருந்தால் அங்கு சிறிய அளவில் வன்முறை ஏற்படுகிறது; 20 முதல் 35 சதவீதம் வரை இருந்தால் வன்முறை பெரிய அளவில் அதிகரிக்கிறது. சிறுபான்மையினர் 35 சதவீதத்துக்குமேல் ஓரிடத்தில் இருந்தால் அங்கு முஸ்லீம் அல்லாதவர்கள் இருக்கவே முடியவில்லை.

சிறுபான்மையினர் குறித்து நடப்பு நிகழ்வைத்தான், நான் கூறுகிறேன் என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் கொஞ்சமும் கூச்சமின்றி, தயக்கமின்றி தொலைக்காட்சியில் பேசுகிறார் என்றால், இந்த நாட்டில் சிறுபான்மையினர் குறித்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் பகைமை நெருப்பை மூட்டும் அதி ஆபத்தான செயல் அல்லவா?

படித்த பெண்களால் ஆபத்து - குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்து என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பொதுக்கூட்டத்திலேயே பேசுகிறார்.

அமெரிக்காவில் வாழும் மக்கள் அமெரிக்கர் என்று கூறுவதுபோல, இந்தியாவில் வாழும் மக்கள் அனை வரும் இந்துக்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்.

இந்த ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பகவத் தால் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். எனவே ஆர்.எஸ்.எஸின் எல்லா உத்தரவுகளுக்கும் மோடி தலைமையிலான ஆட்சி கட்டுப்பட்டே தீர வேண்டும் என்ற நிலைமை.

ஆக பொருளாதார வளர்ச்சியும் இல்லை; விலைவாசிகளும் குறைந்த பாடில்லை; இன்னொரு பக்கத்தில் மக்களை மதவாதத்தின் பெயரால் பிளவுபடுத்தி, மக்களிடையே மோதலை, கலவரத்தை உண்டு பண்ணும் வேலையில் மத்திய அரசே ஈடுபடுகிறது என்பதைத் தெற்றென உணர்ந்த நிலையில்தான், இந்த நூறு நாட்களுக்குள் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தலிலும் பிஜேபி செமத்த அடி வாங்கியிருக்கிறது.

25 ஜூலை உத்தர்காண்ட் மாநிலத்தில் நடந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் இரண்டு தொகுதிகள் பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது. 26 ஆகஸ்ட் இடைத் தேர்தலில் - பிகார் - ஆர்.ஜே.டி- 3, காங்கிரஸ்- 2, அய்.ஜ.தளம்-1 பாஜக 4 இடங்களில் வென்றது.

மபி - பாஜக-2; காங்கிரஸ்-1; பஞ்சாப் - காங்கிரஸ்-1, அகாலிதள்-1, கர்நாடகம் - காங்கிரஸ்-2, பாஜக-1.

16 செப்டம்பர் இடைத்தேர்தலில், உத்தரப்பிரதேசம் - சமாஜ்வாடி-8, பாஜக-3, ராஜஸ்தான் - காங்கிரஸ்-3, பாஜக-1, குஜராத் - காங்கிரஸ்-3, பாஜக-6, மேற்கு வங்கத்தில் - திரிணாமுல் காங்கிரஸ்-1, பாஜக-1

மேற்கண்ட தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?

வெற்றி பெற்ற இடங்களை பிஜேபி இழந்து விட்டது. பிஜேபி ஆளும் மாநிலங்களில்கூட தோல்வியைச் சுமந்துள்ளது. மோடி அலை வீசுவது உண்மையென் றால் என்ன நடந்திருக்க வேண்டும்? அதிக இடங் களையல்லவா வெற்றியாக ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று கூறும் சொல வடை யல்லவா நினைவிற்கு வருகிறது.

இந்தத் தோல்வி பிஜேபிக்கு மட்டுமல்ல; இந்த பிஜேபி ஆட்சி வந்தால் நல்லது நடக்கும் என்று நற்சான்று பத்திரம் வழங்கிய கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் நிலையோ பரிதாப எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டன.

அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! இனி மேலாவது புத்தி தெளிந்து, பிஜேபி என்ற மதவாத கட்சியை வீழ்த்த பிராயச்சித்தமாக உரியது செய்ய முனைய வேண்டும். இல்லையெனில் பிஜேபி ஆட்சியால், சங்பரிவார்களால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு வரும் துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் இந்த முட்டுக்கொடுத்த கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டி வரும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/87936.html#ixzz3F2rWy8EZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

செவ்வாய்க் கிழமைக் குத் தனிச் சிறப்பு உண்டு. செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தி திதியும் சேர்ந்தால் அது சாபங் களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும் என்கிறது ஓர் இதழ்.

இது உண்மையானால் செவ்வாயில் கல்யாணம் முதலிய நல்ல காரியங் களைச் செய்யத் தயங்கு வது ஏனோ?

Read more: http://viduthalai.in/e-paper/88627.html#ixzz3F8MpBPwO

தமிழ் ஓவியா said...

பெண்கள் உடை:
சர்ச்சையில் சிக்கிய யேசுதாஸ்!

திருவனந்தபுரம், அக்.3- பெண்கள் ஜீன்ஸ் அணி வது குறித்து பிரபல பாடகர் யேசுதாஸ் தெரி வித்த கருத்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள் ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசா ரத்திற்கு எதிரானது என்றார். பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொந் தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் யேசுதாஸ் கூறி யுள்ளார். எளிமை மற்றும் உயர் பண்புகளை கொண்ட இந்தியாவின் கலாசாரம், ஜீன்ஸ் அணி வதன் மூலம் சீர்கெடுவ தாகவும் யேசுதாஸ் தெரி வித்தார். யேசுதாஸின் இந்த கருத்துகளுக்கு கேரள மகிளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதனை கண் டித்து திருவனந்தபுரத்தில் பேரணியும் நடைபெற்றது. யேசுதாஸின் கருத்துகள் ஏற்கதக்கதல்ல என்றும், பெண்களின் சுதந்திரத் திற்கு எதிரான என்றும் மகிளா காங்கிரஸ் தலை வர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார். அனைத்து இந்தியர்களாலும் மதிக்கப் படும் ஒரு பாடகர் பெண் களின் உடை குறித்து இவ்வாறு கருத்து கூறுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/88626.html#ixzz3F8N7BBpT

தமிழ் ஓவியா said...

எதிர்க்காமல்...

மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது. - (விடுதலை, 5.11.1967)

Read more: http://viduthalai.in/page-2/88653.html#ixzz3F8Nbhksx

தமிழ் ஓவியா said...

ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108 யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

- (குடிஅரசு, 27.8.1949

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8OwmSlJ

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!

எழுத்துரு அளவு தீண்டாமை என்பது சமயம் சம்பந் தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத் தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்.

- டாக்டர் கலேல்கர், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன் பக்கம் 123

Read more: http://viduthalai.in/page-7/88642.html#ixzz3F8PCY7BM

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

************

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PLvmz9

தமிழ் ஓவியா said...

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!

பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய

தாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/88643.html#ixzz3F8PUJ6dO

தமிழ் ஓவியா said...

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88644.html#ixzz3F8PcNbv1

தமிழ் ஓவியா said...

என்றும் தொடரும்... எம் இனிய பயணம்!


இன்று நமக்கெல்லாம் விழிதிறந்த வித்தகர் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாள் பெருநாள் - திராவிடத்தின் திருவிழா!

அறியாமை இருளில் கிடந்து அவலத்தில் உழன்ற நமக்கு, அறிவொளி பாய்ச்சிய அறிவு ஆசானாம் நம் பகுத்தறிவுப் பகலவன் இந்தப் பாருக்குக் கிடைத்த நாள்! செப்டம்பர் 17.

பிறவி இழிவைச் சுமந்து, காலங்காலமாய்
தற்குறித்தனத்தைத் தம் உடைமை எனக் கருதி,
சிந்திக்கத் தெரியாத
அடிமைகளாய் வாழ்ந்த கோடானுகோடி மக்களுக்கு
அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு
சுயமரியாதைச் சூடுகாட்டி நம்மைத் தட்டி எழுப்பிய
ஏந்தலின் பிறந்த நாள் என்ற அறிவுத்திருநாள்!

அவருக்கு விழா என்பது நமது விடுதலையின்
விடிவெள்ளியின் வெளிச்சம் நம்முள்
பாய்ந்த நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள்!

நம் மக்கள் பயன்பெற்று நாம் நிமிர்ந்த நாள்!

சமத்துவம் அறியா மக்களுக்கு அதை அடைய
சரித்திரப் போராட்டங்களை நடத்தி சரி நிகர்
வாழ்வைப் பெற்ற நம் அருட்கொடை வள்ளலின்
பிறந்த நாள்!

பண்பாட்டுப் படையெடுப்பால் வீழ்த்திட்ட
ஆரியத்தை எதிர்த்து, அறப்போர்க் களத்தில்
நம்மை நிறுத்தி போராடச் செய்த
நம் அய்யாவின் பிறந்த நாள் இன்று!

அவர்கள் உருவத்தால் இன்று நம்மோடு இல்லை.
ஆனால், உணர்வால், தத்துவத்தால், இலட்சியமாய்
நம் இரத்தத்தின் அணுக்களாகி இரண்டறக்
கலந்துவிட்டார்!

பெரியார் தத்துவங்கள் நமது குருதி ஓட்டம்
என்றும் நமது கழகம் என்ற கலத்திற்கு
கலங்கரை வெளிச்சமும் அவருடைய வழி
முறைகளே!

அவர் போட்டுத் தந்த பாதை நமக்குத்
தடம்புரளாப் பாதை,
அவர் வகுத்துத் தந்த கோட்பாடுகளும்
கொள்கைகளும் நம் உயிர் மூச்சு!
அவர் காண விரும்பிய, ஜாதியற்ற சமூகம், நமது இலக்கு!
மூட நம்பிக்கைகள் ஒழிந்த பகுத்தறிவு வாழ்க்கை முறை - சுயமரியாதை வாழ்வு -
அனைத்துலகத்தின் உடைமையாய் மாறிட
அலுப்பின்றி உழைத்து,
அகிலத்தை ஏற்கச் செய்வதே நம் இலக்கும்
இலக்கு நோக்கிய பயணமும்!
எத்தனை இடர்கள், இமயமான
எதிர்ப்புகள், உடனிருந்தே கிளம்பும் துரோகங்கள்
- இவைகளையெல்லாம் எதிர்கொண்டும்
எமது பயணம் இலக்கினை அடையும்
இனிய பயணமாகத் தொடரும்
என்ற சூளுரை ஏற்கும் நாளே இந்நாள்!

வேடிக்கைத் திருவிழா அல்ல
வினை முடிக்க விண்கலமாய்ப் புறப்படும்
ஆயத்த நாள் இன்று!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பும்,
சமூகநீதி களத்தின் தொடர் அறப் போர்களும்
பெண்களை நோக்கிய வன்கொடுமைகளுக்கு
வகையான முடிவுகளை ஏற்படுத்தும்
விழிப்புணர்வுக் கடமையும்
எம்மை அய்யா தந்த
அறிவுச் சுடருடன் அயராப் பணி
யாளர்களாக விரைவுபடுத்தும்
சோர்வறியா சுயமரியாதைப்
படையாய் களத்தை நோக்கிய
பயணத்தின் மற்றொரு மைல் கல்லே -
136 ஆம் பெரியார் ஆண்டின் தொடக்கம்!

தொடங்கிய பயணம் தொய்வின்றித் தொடரும்!

வெற்றி நமதே!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
17.9.2014

Read more: http://viduthalai.in/page1/87881.html#ixzz3F8QQXgS6

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்

அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்

தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்

சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

Read more: http://viduthalai.in/page1/87892.html#ixzz3F8RxMiuq

தமிழ் ஓவியா said...

நாம் யார்?


சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பித்து என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத் திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கை யையும் உடையவராய் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

- தந்தை பெரியார், குடிஅரசு: 3.5.1931

Read more: http://viduthalai.in/page1/87897.html#ixzz3F8S6F6QC

தமிழ் ஓவியா said...

எவர் பெரியார்...? அவர் வாழ்க...!


குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
தமிழன் முதலில் உலகினுக் களித்த
அமிழ்துநேர் தத்துவம் ஆன எண்ணூல்
அமிழ்ந்தது! வடவரின் அறிவுக் கொவ்வாப்
பொய்ம்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
அகத்தியன் தொல்காப் பியன்முத லானவர்
தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்
மறைந்தன! வடவர் தீயொழக்க நூற்கள்
நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில் தீது செய்யற்க செய்யில் வருந்துக
ஏதும் இனியும் செய்யற்க வெனும்
விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செலாம்
கழுவாய் எனுமொரு வழுவே நிறைந்தது.
நல்குதல் வேள்வி என்பது நலியக் -
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக் கொருத்தி எனும் அகம் ஒழிய
ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
குச்சிக் காரிக்குக் கோயிலும் கட்டி
மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
உயர்ந்தவன் நான்என் றுரைத்தான் பார்ப்பான்
அயர்ந்தவன் நான்என் றுரைத்தான் தமிழன்
இப்படி ஒருநிலை காணுகின் றோமே
இப்படி எங்குண் டிந்த உலகில்?
இறந்த காலத் தொடக்கத் திருந்து
சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?
இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும்இவ்
அருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியார் எவர்? - நம் பெரியார் வாழ்கவே!

- பாரதிதாசன் (8.6.1958, 6)

Read more: http://viduthalai.in/page1/87913.html#ixzz3F8SJVTQA

தமிழ் ஓவியா said...

தாய்மையையும் விஞ்சி


தாய்மையையும் விஞ்சிய தகைமையாய்,
தலைமைப் பண்பின் இலக்கணமாய்,
மன்பதைக்கு கலங்கரையாய்,
மனித நேய பேரொளியாய்,
தன்மானச் சுடரொளியாய்,
தகத்தகாய சூரியனாய்,
சூத்திரர்கள் காவலராய்,
சுரந்து நிற்கும் சிந்தை ஊற்றாய்,
பகுத்தறிவு கருவறையாய்,
பகைவருக்கு நெருப்பறையாய்,
உணர்வெழுப்பும் ஓங்காரமாய்,
ஓய்வறியா உயிர்நதியாய்,
சாதி ஒழிப்பின் அடையாளமாய்,
சமத்துவத்தின் ஆர்ப்பரிப்பாய்,
பெறற்கரிய பெட்டகமாய்,
பெண்ணுரிமை போராளியாய்,
வெண்தாடி வேங்கையாய்,
வீறு கொண்ட எரி மலையாய்,
வாழ்ந்திட்ட வைக்கம் வீரர், தந்தை பெரியார்,
தந்தையின் தடத்திலே தமிழர் தலைவர்!
தமிழர் தலைவர் கரம் கோர்ப்போம்!
தந்தை பெரியார் புகழ் சேர்ப்போம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி (தி.க.மாநில பொதுச்செயலாளர்)

Read more: http://viduthalai.in/page1/87915.html#ixzz3F8UWSSjO

தமிழ் ஓவியா said...

எதிர்வினை புரிந்த குரல் கவிஞர் கண்ணிமை


வினையாற்றிய வல்லாளர்களால்
ஊர்ப்பெயர் வரைபடத்தில் பதிந்ததுண்டு
பெரியாரால் இசை குவித்தது
நீரோடை என்னும் ஈரோடு
இவரை நெருப்பாக்கியது
இக்கந்தக நிலம்
கல்வி கேள்விகளாலும் கண்களாலும்
அச்சம் கண்டறியாத
எஃகின் வார்ப்படம்
இவரது கூர் நகங்கள்
கீறிக் கிழித்தது பழம்பஞ்சாங்கம்
பூவாங்கிக் கொடாதே
ஓர்... புத்தகம் வாங்கிக் கொடு
என்ற புதிய பொருள் மொழி
நால்வருணம் என்ற சொல்
மீளவும் முளைவிடாதவாறு
அடக்கம் செய்தவர்
கேள்விகளால் புலர்ந்த கிழக்கு
தனித்துச் சுட்டப்படும் தடம்
பகுத்தறிவுப் பாசறை
சுற்றிச் சுழன்ற கடற்சூறை
திருவிடத்தின் அகண்ட திரை
பகுத்தறிவுப் படைவீடு
அறிவு முகந்து புகட்டிய
காலக் கணியன்
மடமை இருள் அப்பிக் கிடந்த
உச்சிப் பகல்
கூனிக் குறுகிய மனிதன்
விடுதலை அறியாப் பாமரன்
கற்றலின் சீர் மறந்து
அடிமை வயப்பட்ட ஏழ்மை
படைத்தவன் எழுதிய விதி பசி
என வாழ்ந்த ஊமை
இன்னவாறான இருப்பின் பொதிகளை
அறுத்துக் கூறிட்ட அறக் கூற்றுவன்
வான்வெளியில் உயர நிற்கும்
ஒற்றைக் கோள்
உயர்வு நவிற்சி இல்லாத எளிய உரு.
இறைவீடு எல்லோர்க்கும் பொது என்று
வைக்கம் நுழைந்த
வரலாற்றுத் தோற்றுவாய்
திரியும் தீக்குச்சியும் வைத்து
வல்லினங்களை உரசி எறிந்தவர்
எரிபொருள் வெடிபொருள் நிரப்பும்
ஆரியப் படை கடந்த
கொங்குச் சோழன்
கருஞ்சட்டை அணி வரிசைகளால்
இருளின் அடர்த்தி அமிழ்த்துச்
சுவடின்றிச் செய்த சூரிய விளக்கு
தந்தை பெரியார் கடந்து ஒலிக்கும் என்றும்
எதிர்வினை புரிந்த குரல்!

Read more: http://viduthalai.in/page1/87880.html#ixzz3F8V1QN8z

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி எப்படி?


இந்தி திணிப்பு என்பதில் காங்கிரஸ் ஆட்சிகூட இலை மறை காய் மறையாக இருந்து வந்துள்ளது. இந்தி யாவிலேயே தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் மட்டுமே கலாச்சார ஆதிக்க எதிர்ப்பில் முன்னணி எரி மலையாக என்றும் எழுந்து நிற்கக் கூடியது!

இந்தி என்பது ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பின் ஒரு கூர்முனையாகும்; இந்தியில் இலக்கியம் என்று மெச்சத் தகுந்ததாக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சும் நூல் துளசிதாசரின் இராமாயணமாகும்.

துளசிதாசரின் இராமா யணம் என்ன கூறுகிறது? இதோ இராமன் பேசுகிறான்:

பிராமணர்களை வெறுப் போர் என்னால் விரும்பப்பட மாட்டார்கள். பிராமணர் களின் செல்வாக்கிற்குட்பட்டு இருக்கின்ற பிர்மாவும், சிவனும், பிற கடவுளரும் பிராம்மணர்களை விசுவாசத் துடன் வழிபடுகின்றனர்.

பிராமணன் ஒருவன் சாபம் கொடுத்தாலும், கொலை செய்தாலும், கொடிய சொற் களைப் பேசினாலும்கூட அந்தப் பிராமணன் வழிபடத் தக்கவன்.

இந்தவுலகில் ஒருவன் செய்யத்தக்க நற்செயல் ஒன்றே ஒன்றுதான். அந்த நற்செயல் என்பது பிரா மணர்கள், ரிஷிகள் முனிவர் களின் பாதங்களை வணங்கு வதுதான். அவ்வாறு செய் தால் கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று இராமன் கூறுவதாக துளசி தாசரின் இராமாயணம் கூறுகிறது.

இதனைத்தான் இந்தி யைப் படிப்பதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகி றோம் என்று சுட்டிக் காட்டினார் தந்தை பெரியார்.

1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தையும், மனு தர்ம சாஸ்திரத்தையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எனவே இந்தி மொழி என்றாலும், அதன் தாயான சமஸ்கிருதம் என்றாலும் அவை பரப்புவதெல்லாம் வருணாசிரம நோய்களைத் தான், பார்ப்பன ஆதிபத்தி யத்தைத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்துத்துவாவை வலியுறுத்தும், இந்து ராம ராஜ்யத்தை உண்டாக்குவ தாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சிப் பீடம் ஏறிய பி.ஜே.பி. ஆட்சி இந்தியை, சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் ஆச்சரியப்படுவ தற்கு என்ன இருக்கிறது?

அய்.நா.விலேயே பிரதமர் நரேந்திரமோடி இந்தியில் பிளந்து கட்டப் போகிறார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீட்டி முழங்குகிறார். வாஜ்பேயி கூட அய்.நா.வில் இந்தியில் தான் பேசினார் என்றெல் லாம் கூடக் கூறியுள்ளார்.

இதுபற்றிய ஒரு தகவல் குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் வாஜ்பேயி குறித்து அறிஞர் அண்ணா சொன்ன தகவல் அது.

ஜன சங்கத்தைச் சேர்ந்த வாஜ்பேயி என்னும் உறுப் பினர் ஆங்கிலத்தில் நன் றாகப் பேசக் கூடியவர் அவர் மாநிலங்களவையில் பேசும் போதெல்லாம் இந்தியி லேயே பேசுகிறார். அவரிடம் நான் நண்பர் என்ற முறை யில் கேட்டேன்.

நீங்கள் பேசுவதையெல்லாம் நாங் கள் புரிந்து கொள்ள வேண் டாமா? ஆங்கிலத்தில் பேசக் கூடாதா? என்று. அதற்கு அவர் நான் வெளியில் வந் ததும் உங்களுக்கு ஆங்கிலத் தில் விளக்கிச் சொல்லு கிறேன். உள்ளே இந்தியில் தான் பேசுவேன் என்றார்.

இங்குள்ளவர்களுக்கு இது இந்தி வெறியாகப்பட வில்லை. போலீஸ் ஸ்டே ஷனை காவல்நிலையம் என்று சொன்னால் தமிழ் வெறியாகப்படுகிறது என்றார் அண்ணா.(சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியப் பேரவை 1963-64-இல் வெளியிட்ட சிறப்பு மலரில்).

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/87835.html#ixzz3F8YulAcS

தமிழ் ஓவியா said...

வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page1/87831.html#ixzz3F8ZNEGbk

தமிழ் ஓவியா said...

வேட்பாளரை கடவுள் கைவிட்டதால், சென்னை உயர்நீதி மன்றத்தில் சரண்!


"ஜனநாயகம் என்பது காலிகள் நாயகம்" என்ற தந்தை பெரியாரின் பொன் மொழியை மெய்ப்பிக்கும் வகையிலும், 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற கதைப்பை பொய்ப்பிக்கும் வகையிலும் ஒரு நிகழ்வு மதுரையில் நடைபெற்றுள்ளதை நமது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான்.

விவரம் வருமாறு:- மதுரை மாநகராட்சி தேர்தலில் 85-ஆவது வட்டத்திற்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வைச் சேர்ந்த அரிகரசுதன் விண்ணப்பித் திருந்தார். விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மதுரையில் உள்ள "இம்மையில் நன்மை தருவார்" கோவி லில் பயபக்தியுடன் "சாமி" கும்பிட்டு விட்டு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பித்தார். ஆனால் நடந்ததோ பயங்கரமான

அதிர்ச்சி! அவர் வேட்பாளர் மனு வைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் அ.தி.மு.க. வேட்பாளர் லதா போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் உதவி தேர்தல் அதிகாரி அறிவித்து அதற்கான சான்றிதழையும் அளித்து விட்டார்.. "தான், மனுவைத் திரும்பப் பெற்றதைப்போல, போலி மனுவைத் தயாரித்து, அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாகவும் . எனவே தனக்கு நீதி வழங்க வேண்டு மெனக் கேட்டும் "சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உதவித் தேர்தல் அதிகாரி கதவைப் பூட்டி விட்டு ஆணையாளர் அறையில் ஒளிந்து கொண்டதாகவும் தனது மனுவில் குறிப் பிட்டுள்ளார். நீதியரசர் திரு டி.எஸ். சிவஞானம் வழக்கை விசாரித்து வருகிறார்.

ஜனநாயகம் எப்படிக் கேலிக் கூத்தாகிறது என்பதை, தந்தை பெரியார் அவர்கள் காலிகள் நாயகம் என்று உரைத்தது, இப்பொது மக்களுக்கு உறைக்கும்!

அது சரி! வழக்குத் தொடர்ந்தவர், "இம்மையில் நன்மை தருவார்" கடவுள் தன்னை ஏமாற்றியதையும் மனுவில் குறிப்பிட்டு அவர் மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தால் வரவேற்கலாம்! . கட வுளையும், நம்பிக்கையையும் மட்டுமே பேசும் பா.ஜ.க.வும் கடவுளைக் கைகழுவி, விட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டது நல்லதொரு திருப்பமே!

- தி.ப.பெரியாரடியான்,
தூத்துக்குடி

Read more: http://viduthalai.in/page1/87829.html#ixzz3F8ZVYAYu

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/87803.html#ixzz3F8Zx7LBT

தமிழ் ஓவியா said...

பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/87810.html#ixzz3F8aXpbjg

தமிழ் ஓவியா said...

திருவையாறு கல்லூரி


சமஸ்கிருதம்பற்றிய சர்ச்சை ஆங்காங்கே நடத்து கொண்டு தானிருக் கிறது. இவ்வளவுக்கும் சமஸ்கிருதம் செத்த மொழி யாகவே ஆகி விட்டது; இந்தியாவில் 0.01 சதவீதம் மட்டுமே பேசுவதாகப் புள்ளி விவரம் பேசுகிறது.

கல்யாணம், கருமாதி, அர்ச்சனை என்கிற சடங் குகளில் நெட்டுருப் போட்டு ஒப்புவிப்பவர்களும் இதில் அடங்குவர்.

இது செத்த மொழியாக ஆனதற்கே காரணம் - அது தேவப் பாஷை என் றும் பெரும்பான்மையான மக்களான சூத்திரர்கள் அதனைப் படிக்கக் கூடாது என்றும், சாஸ்திர ரீதியா கவே தடை செய்ததாலுமே அம்மொழி சவக் குழிக்குத் தள்ளப்பட்டது. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய வர்கள் பார்ப்பனர்களே!

ஆனாலும் சமஸ்கிரு தத்தை இன்னும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தான் செய்கிறார்கள்; கோவில் குட முழுக்கை தமிழில் நடத்தினால், தோஷம் வந்து விட்ட தாகக் கதறுகிறார்கள்.

கரூர் அருகில் திருமுத் தீசுவரர் கோவிலில் தமி ழில் குடமுழுக்கு செய்யப் பட்டது என்பதற்காக, பார்ப்பன அர்ச்சகர்கள் கோவிலை பல நாட்கள் இழுத்து மூடி தீட்டுக் கழிப் புச் சடங்குகளைச் செய் தனர். காஞ்சி ஜெயேந்தி ரரும் அதற்குத் தூபம் போட்டார்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சி எத்தகையது என் பதற்கு இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போது மானது.

திருவையாறில் அரசர் கல்லூரி ஒன்று உள்ளது. அக்கல்லூரி 1937ஆம் ஆண்டு வரை சமஸ் கிருதக் கல்லூரியாகவே நடந்து வந்தது; அதற்குச் சொல்லப்பட்ட காரணம் விசித்திரமானது; அந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று நிலமும், பணமும் கொடுத்து அரசர் உயில் எழுதியுள்ளார் என்று கூறப் பட்டது.

தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலி யாரும் இதன்மீது சில முயற்சிகளை மேற்கொண் டனர். அரசன் எழுதி வைத் ததாகக் கூறப்பட்ட உயிலை எடுத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளிடம் சென்றனர். (இவர் தான் தந்தை பெரியார் தொடங் கிய குடிஅரசு இதழையும் தொடங்கி வைத்தவர்).

உயிலைத் துருவித் துருவி படித்த ஞானியார் அடிகள், சமஸ்கிருதம் மட் டும்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் உயிலில் எழுதப்படவில்லை என் பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்களே. அதற் குப் பிறகுதான் ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அம்பலப்பட்டது.

அந்தக் கால கட்டத்தில் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர். அவர் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, அவர் தலையிட்டு, அரசு வரை கொண்டு சென்று, அதன்பின் தமிழும் சொல்லிக் கொடுக்க வழி செய்யப்பட்டது.

இந்த வரலாறு எத் தனைப் பேருக்குத் தெரி யும்? வஞ்சகமும், சூழ்ச்சி யும், புரட்டும் பார்ப்பனர் களுக்கு மட்டுமே வாய்த்த அரும் பெரும் அவலக் குணங்கள் என்பது புரிகிறதா?

- மயிலாடன்


Read more: http://viduthalai.in/page1/87743.html#ixzz3F8bEybBS

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்க!


கழிவறைக்குச் சென்று திரும்புகிறோம். கைப்பிடியைப் பிடித்து இழுத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ செல்கிறோம். கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைப்பிடியில் ஒட்டிக் கொள்ளும். கதவைத் திறக்கும் இன்னொருவர் கைகளில் கிருமிகள் பயணத்தைத் தொடரும். அதிகம் பேர் வேலை செய்யும் அலுவலகங்களில், யார், எந்த அளவுக்குக் கையைச் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கழிவறை என்றில்லை. பேருந்தின் நாம் இறுகப் பற்றும் இடங்களில் உள்ள கிருமிகள் வீடு வரை, அலுவலகம் வரை வந்து விடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க இப்போது கதவுகளில் பொருத்த ஒரு புதுவிதமான கைப்பிடி Pull Clean என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கைப்பிடியின் உள் பகுதியில் கிருமியை அழிக்கும் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும்போது கைப்பிடியின் கீழ்ப்பகுதியை அழுத்தினால் கைப்பிடியின் உள்ளிருந்து அந்த கிருமியை அழிக்கும் பொருள் கைகளுக்கு வரும். அதை இரு உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் போதுமானது. கிருமிகள் அழிந்துவிடும்.
(தினமணி கதிர் 28.9.2014)

Read more: http://viduthalai.in/page5/88674.html#ixzz3FAl5ZfbG

தமிழ் ஓவியா said...

திராட்சை


எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்ட மின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.

பொதுவாக சரியாகப் பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர் கள் கருப்பு திராட்சை எனப்படும்
பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதகக் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த தீர்வாகும்.

மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சைச் சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டி ருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். திராட்சைச் சாற்றை தினமும் அருந்தினால் இந்தத் தொல்லைகள் நீங்கும்.


Read more: http://viduthalai.in/page5/88675.html#ixzz3FAlS5E1w

தமிழ் ஓவியா said...

ஆனந்த லீலை

ஆண்டுக்கு ஆண்டு ஆண்டவனுக்கு
திருமணம் செய்திடும் பக்தனே! உன்
அருமை மகளுக்கு திருமணத்தை
நீயும் செய்ய நினைத்தாயா?
தேங்காய் உடைக்கும்
ஸ்டாண்டுகளாய் - இளைஞர்கள்
தலைகள் ஆகிப்போச்சு
மூளை என்பது மென்மையான
ஜெல்லி பாகம் அல்லவா?
மூளை கலங்கிப் போகாதா?
முயற்சியின் செயல்களே
வெற்றி பெறும்
உன்னை நீயே நம்பாமல்
எல்லாம் அவன் செயல்
என்கின்றாய்.
உன் செயல் இன்றி
ஒரு செயலும் இல்லை - என்பதை
உணர்ந்திடுவாய்.. அறிந்திடுவாய்...
பெரியார் சொன்ன கருத்துக்களை
சிந்தித்து நீயும் ஏற்றுக் கொண்டால்
விரயச் செலவைத் தவிர்த்திடலாமே!
வாழ்வில் வளமை பெற்றிடலாமா!
கடவுளே துணை என்பதெல்லாம்
கையா லாகாதவனுக்கே என்றிடுவோம்
கடின உழைப்பு ஒன்று மட்டுமே
ஆனந்த அலையை கொடுத்திடுமே
சாமியார்கள் பின்னே சென்றிட்டால்
ஆனந்த லீலைகள் பிறந்திடுமே
பரபரப்பாய் செய்திகளும்
செய்தித்தாளில் வந்திடுமே
அறிக! அறிக!! அறிந்திடுக!!!

- சு. ஆறுமுகம், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page6/88677.html#ixzz3FAm2I3wC

தமிழ் ஓவியா said...

கேட்பவன் கேணையன் என்றால்...

அபிராமி பட்டர் என்பவருடைய ஊர் திருக்கடவூர். இவர் தேவி வழி பாட்டில் சிறந்தவர்.

ஒரு முறை தஞ்சை சரபோஜி மன்னனர் ஆலயம் வந்தபோது, அதைக் கவனிக்காமல் அபிராமி பட்டர் மட்டும் தேவியை மனதில் இருத்தி தியானம் செய்துகொண்டிருந்தார். மகாராஜா அவரிடம் இன்று திதி என்ன என்று கேட்டார். அதற்கு அபிராமி பட்டர் பவுர்ணமி திதி என்று கூறி விட்டார்.

ஆனால், அன்றைய தினம் அமா வாசை திதியாகும். இதனால் கோப மடைந்த மகாராசா அதை நிரூபிக்க முடியுமா, என்று கேட்டார். அம்மா வாசையை பவுர்ணமி என்று கூறியதை வாதிக்கும் பொருட்டு, அபிராமி பட்டரும் முடியும் என்றார்.

பிறகு உமாதேவியைப் பிரார்த்தித்துக் கீழே வெட்டி குழியிலே நெருப்பு எரிய விட்டு மேலே தூக்கிய நூறுவடம் கொண்ட உறிஒன்றிலே ஏறினார். அபிராமி அருளவில்லை என்றால் இந்த நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்றார்.

இவ்வாறு கூறி அபிராமி அம்மைமீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கினார். அவ்வாறு பாடுகையில் ஒரு பாடல் முடிவில் ஒரு வடமாக உறியின் ஒவ்வொரு வடத்தையும் அறுத்தார்.

பாடல் முடிய தேவியும் வெளிப் பட்டாள். அவள் தன்னுடைய காது தோடுகளுள் ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீசினாள். அந்த தோடு நிலவாக மாறி பவுணர்மி போல காட்சி அளித்தது. இதனால் தேவியின் அருளைப் பாராட்டி மற்ற பாடல் களையும் பாடி முடித்தார் அபிராமி பட்டர்.
இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை பாராயணம் செய்பவர் களுக்கு பக்தியும் சித்தியும் கைவரப் பெறும் என்பது உறுதி.

கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்ல மாட்டானா?

இவ்வளவு அபத்தமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவற்றை விற்றுப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page7/88679.html#ixzz3FAmEKezG

தமிழ் ஓவியா said...

பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை


பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)
ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FAmcWf9C

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சூரியகிரகம்

சூரியகிரகம் அதன் அண்ட சக்தி நமது வாழ் வில் நற்பலன்களையும், கெடுபலன்களையும் ஏற் படுத்துகின்றன. இப்படி ஒரு விளம்பரம் தின மணியில்.

ஒரே ஒரு கேள்வி. சூரி யன் கிரகமே இல்லையே. அது நட்சத்திரம் ஆயிற்றே - அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க சூரி யனைக் கிரகப் பட்டியலில் சேர்க்கும் அறியாமையை எண்ணினால் சிரிப்புதான் வருகிறது

Read more: http://viduthalai.in/e-paper/88700.html#ixzz3FE8EkML8

தமிழ் ஓவியா said...

இராமன் காக்கவில்லையே! இராவணனைவதம் செய்யச் சென்ற 33 பக்தர்கள் பாட்னாவில் பலி!

பாட்னா, அக்.4: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் நேற்று நடந்த தசரா விழாவில், கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் பலி யாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டா டப்பட்டது. 10ம் நாளான நேற்று ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி வடமாநிலங் களில் நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் தசரா விழா நேற்று மாலை கொண்டாடப் பட்டது. இதைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர். இதனால் காந்தி மைதா னத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த விழாவை காண முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியும் வந்திருந்தார்.

தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 60 அடி உயர பத்து தலை ராவணனின் உருவ பொம்மை, அம்பு எய்தி தீ வைத்து கொளுத்தப்பட் டது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங் கினர்.

மைதானத்தை ஒட்டி யுள்ள குறுகலான தெரு வழியாக மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண் டிருந்தது. மைதானத்தில் இருந்த ஒரு வழியாக மட்டுமே மக்கள் வெளி யேற அனுமதிக்கப்பட் டனர். அப்போது திடீ ரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால், மக்கள் போட்டி போட் டுக் கொண்டு மைதா னத்தை விட்டு வெளி யேறினர்.

இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் அலறினர். பலர் மயங்கி கீழே விழுந் தனர். மைதானத்தில் இருந்து வெளியேறும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலர் கூட்டத்தில் மிதி பட்டனர். மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தவர் கள் உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந் தனர். மொத்தம் 33 பேர் பலியானதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/88698.html#ixzz3FE8QdxxD

தமிழ் ஓவியா said...

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்

தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்

1. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மீறக் கூடாது என இந்திரா சகானி (1992) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சில அசாதாரண மான சூழ்நிலைகளில், இந்த விதியில் சில விலக்குகள் அளித்திடுவது அவசி யமாகிறது என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பில் கூறியுள்ளது.

3. 1992 இந்திரா சகானி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், இட ஒதுக்கீடு கூடாது என பாலாஜி வழக் கில் கூறப்பட்டது நீதிபதியின் கருத்து மட்டும்தான்; (obiter dicta) தீர்ப்பு அல்ல என கூறியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

4. 1992 இந்திரா சகானி வழக் கின் ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்புரையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்; நிறை வேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வது, முழுவதும் ஓர் அரசின் வரம்புக்குட்பட்டது; இந்த விஷயங் களில் நீதித்துறை நுழைவதும், மறுஆய்வு செய்வதும் சாதாரணமாக நீதித்துறையின் அதிகாரத்திற்குள் வருவது இல்லை எனக் கூறியுள்ளார்.

5. இதற்குப்பிறகு, 77-வது அரச மைப்பு சட்டத்தின் திருத்தமாக கொண்டுவரப்பட்டு 16(4) பிரிவில் அ பிரிவு சேர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடருவதற்கான திருத் தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. மேலும் பல திருத்தங்களும் செய்யப்பட்டன.

இந்த திருத்தங்கள் தொடர்பான வழக்கில் ( நாகராஜ் வழக்கு 19.10.2006), உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்து, மேலும், இந்த திருத்தத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும்போது, நான்கு விச யங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இட ஒதுக்கீடு பிரிவினரின் எண்ணிக்கை அளவு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, போதுமான பிரதிநிதித்துவம் இல் லாமல் இருப்பது, இவற்றுடன், இந்த இடஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப் படகூடாது அதற்கான புள்ளிவிவர அளவினை அரசு தெரிந்துகொண்டு செய்திட வேண்டும் என கூறியுள்ளது.

(the Constitution Bench held that the State is not bound to make reservation for Scheduled Castes and Scheduled Tribes candidates in matters of promotion but if it wished, it could collect quantifiable data touching backward ness of the applicants and inadequacy of representation of that class in public employment for the purpose of compliance with Article 335 of the Constitution.)

தமிழ் ஓவியா said...

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ் நாட்டில், தற்போது உள்ள 69 விழுக்காடு தரப்படுவதற்கான நியா யத்தை, மத்திய அரசின் புள்ளியியல் துறை நடத்திய மாதிரி ஆய்வு அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களை தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு தெரி வித்து, அவர்கள் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும். 6. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் மக்கள் தொகையினை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இடைப் பட்ட நேரத்தில், மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வேயின் (National Sample Survey) 62-ஆவது சுற்று சர்வே (2004-_05) அறிக்கை மத்திய அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், தமிழ் நாட்டில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், மலைவாழ் மக்கள், 73.5, 22.16 மற்றும் 1 விழுக் காடாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத் தையும், அரசு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

7. மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களுக்கு 69 விழுக்காடு தான் தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பிரிவு 16(4)-படி, போதிய அளவு இட ஒதுக்கீடு என்கிற அளவுகோலில் இது வழங்கப்பட்டுள் ளது நியாயமானதுதான்.

தமிழ் நாட்டில் நீதிக்கட்சி காலத்தி லிருந்து நடைமுறையில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடும், 1994-ல் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட் டமும், இந்தியாவிற்கே ஓர் வழி காட் டியாக இருக்கிறது. ஆகவே, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, 69 விழுக்காடு சட்டத்தினை பாதுகாத் திட அனைத்து முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று எதிர் பார்க்கிறோம்.

- கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/88706.html#ixzz3FE987Qz9

தமிழ் ஓவியா said...

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்பந்தமாய் திருவாங்கூர் அய்க்கோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்கும் உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட, பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்யலாம்? வம்புச்சண்டைக்குப் போகாமல் இருக்கலாமே ஒழிய, வலியவரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்குப் பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAgy72V

தமிழ் ஓவியா said...

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோ பாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டே ஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ் பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார். பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டி ருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண் டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமை யாவையும் கண்டு மரியாதை செய்தார். அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் -01.02.1931



Read more: http://viduthalai.in/page-3/88692.html#ixzz3FEAo1HZM

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புபற்றி தாங்கள் எதுவுமே கூற வில்லையே?

கலைஞர்: இந்தத் தீர்ப்புபற்றி நான் கூறுவதை விட இந்த வார ஆனந்த விகடன் தீர்ப்பு தரும் பாடம் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங் கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அது வருமாறு:- இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெய லலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல் என்ற பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வர லாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப் பால் பதவி பறிக்கப்பட்டுள்ள முதல மைச்சர் ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம் பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளி வாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழ மொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்! சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெய லலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை.காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம்தான் இது! ஆனந்த விகடன் மட்டுமல்ல; டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் 2.10.2014 அன்று எழுதிய தலையங்கத்தில், தண்டனை நியாய மற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல் முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறை கள் நிரம்ப இருக்கின்றன. சட்டத்தின் முடிவு களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று கட்சியின் தொண்டர்களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் விளக்கமாக எழுதியுள்ளது. கேள்வி: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

கலைஞர்: உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம் பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் மீதான வழக்கு களை உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அண்மைக் காலத் திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத் திற்கு உச்சநீதிமன்றம்தான் மாற்றியது. ஜெய லலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003 ஆம் ஆண் டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் பேரா சிரியர் விடுத்த வேண்டுகோளின்படி, உச்சநீதி மன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கருநாடக மாநிலத்திற்கு மாற்றியது. இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளேடே வெளியிட்டுள்ளது.

(முரசொலி, 4.10.2014)

Read more: http://viduthalai.in/page-3/88725.html#ixzz3FEBNGgpR