Search This Blog

25.10.14

நாங்கள் பெரியார் இல்லை; பெரியாரின் தொண்டர்கள்!


நாங்கள் பெரியார் இல்லை; பெரியாரின் தொண்டர்கள்!

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, அக்.24- நாங்கள் பெரியார் இல்லை. பெரியாரின் தொண்டர்கள். ஆகவே, பெரியார் தந்த புத்தி எங்களுக்கு இருக்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

3.10.2014 அன்று நாகையில் நடைபெற்ற தந்தை பெரி யாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த் தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன் னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா? இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வளவு தூரம் போகவேண்டாம்; டாஸ்மாக் இல்லாத ஊர் உண்டா நம் நாட்டில். பெரிய தொழிற்சாலையே அது தானே இப்பொழுது! நம்பர் ஒன் வருமானமே அதுதானே! அந்த டாஸ்மாக்கில் உள்ள பாருக்குச் செல்கிறார்கள். அங்கே படித்தவர்கள், படிக்காதவர்கள் உயர்ஜாதிக்காரன், உயர் வர்க்கத்துக்காரன் எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து குடிக்கின்ற சூழ்நிலையில், பெரிய அளவிற்கு என்ன சங் கடம் என்றால், அங்கே கிளாசில் ஊற்றிக் குடிக்கிறார்கள்.

இன்னும் சில ஊர்களில், சில கிராமங்களில் உள்ள தேநீர்க் கடைகளில் ஒரு பொதுத் தொகுதி; இன்னொன்று ரிசர்வ் தொகுதி. இரண்டு கிளாஸ் வைத்திருக்கிறார்கள்; ஒன்று ஆதிதிராவிடர்களுக்கு; இன்னொன்று மீதி திராவிடர்களுக்கு. என்னய்யா, அக்கிரமம்!  21 ஆம் நூற்றாண்டு நடைபெற்று வருகிறது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் எதற்கு இரட்டை குவளை முறை.

பிரச்சாரம் செய்து, வெற்றி பெற முடியாததை, சாராயம் சாதித்துவிட்டது!
சரி, தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை வைத்திருக்கிறார்களே, டாஸ்மாக் பாரில் உட்கார்ந்து குடிக்கிறார்களே, அங்கே இரண்டு கிளாஸ் முறை இருக்கிறதா? ஜாதிக்கு ஒரு கிளாஸ் இருக்கிறதா? அங்கே மட்டும் ஒரே கிளாஸ்; அதிலே மட்டும் எல்லோரும் சமரசமாக இருக்கிறார்களே, அப்பொழுது ஜாதி எங்கே போயிற்று? தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும் நீங்கள்.

நாங்கள் அய்ந்து ஆண்டுகள் பிரச்சாரம் செய்து,  வெற்றி பெற முடியாததை, சாராயம் சாதித்துவிட்டது இந்த நாட்டில். அதை நினைத்தால் வெட்கக்கேடாக இருக்கிறது.

ஆகவேதான் இந்த நாட்டில் ஜாதி, தீண்டாமை என்கிற பெயரில், இன்னமும் பழைமை, காட்டுமிராண்டித்தனத் திற்கு இடமிருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

அதை நன்றாகப் புரிந்துகொண்டு, இந்த அய்யா வினுடைய பிறந்த நாள் பெருவிழா என்று சொல்லும் பொழுது, பெரியார் பிறந்த நாளில், எல்லாக் கட்சியினரும் உறுதியெடுக்கவேண்டும்.

இனிமேல், இந்த ஜாதி, அது, இதுவென்று சொல்ல வேண்டாம். மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள்; படித்தவர்கள், படிக்காதவர்களைப் படிக்க வைக்க வேண்டும். வாய்ப்பில்லாதவர்களை மேலே கொண்டுவர வேண்டும். அதுதான் மிக முக்கியம். எல்லோருக்கும் எல் லாமும், இதுதான் தத்துவம். அனைவருக்கும் அனைத்தும், அதுதான் தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தைத் தொடங்கியபொழுதே இதனைத்தான் எடுத்துச் சொன்னார்.
எனவே, இந்தச் சூழ்நிலைகளை மிகத் தெளிவாக நினைத்துப் பார்க்கவேண்டும். இவற்றை ஆழமாக எண் ணிப் பார்க்கவேண்டும். இதை ஒவ்வொருவரும் தெளி வாகச் சிந்தித்து இந்த அடிப்படையை மறந்துவிடக் கூடாது.
அடுத்தபடியாக இன்னொரு செய்தியை இந்தச் சூழ்நிலையில், திராவிடர் கழகம் முன்வைக்க விரும்புகிறது.

எங்களுக்கு எந்தவித பாராட்டும், பெருமிதமும் தேவையில்லை!
என்ன திராவிடர் கழகம் முன்வைக்கிறது என்றால், இந்தக் கருத்து, பல தோழர்களுக்கு கட்சி உணர்ச்சியோடு பார்க்கக் கூடியவர்களுக்கு, அரசியல் சிந்தனையோடு பார்க்கக் கூடியவர்களுக்கு, நான் சொல்லப் போகும் கருத்து, இவர் என்ன இந்தப் பக்கம் பேசுகிறார்; இவர் என்ன அந்தப் பக்கம் பேசுகிறார்; இந்தப் பக்கம் சாய்கிறார் என்று சொல் வார்கள்.  எந்தப் பக்கமும் சாய்கிற பழக்கம் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் ஒரே இடத்தில்தான் இருப்போம்; எங்களைச் சுற்றி சுற்றித்தான் அரசியல் வந்துகொண்டு இருக்குமே தவிர, நாங்கள் ஒன்றும் ஒரு பக்கமாக சாய்ப வர்கள் கிடையாது. எங்களுக்கு எதுவும் தேவையில்லை. எங்களுக்கு எந்தவித பாராட்டும், பெருமிதமும் தேவை யில்லை.

ஆனால், இந்த சமுதாயம், தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது. அதுதான் மிக முக்கியம்.

இப்போது ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக இது வரையில் அகில இந்திய கட்சிகள் என்பது, தேசியம் பேசக் கூடியவர்கள் யாரும் பதவிக்கு வர முடியவில்லை. எப்படி யாவது ஆட்சியில் இருப்பவர்களை கீழே தள்ளவேண்டும்; அதுதான் மிக முக்கியம். அதை எதைச் செய்தாவது தள்ளவேண்டும் அதுதான் மிக முக்கியம். எதை எதையோ சொல்லிப் பார்த்தார்கள், அவர்களால் அது முடியவில்லை.

எங்களுக்கு சொல்லுவதற்கு உரிமை உண்டு!

இப்பொழுது கடைசியாக, யாரும் சுலபமாக ஏமாறக் கூடிய ஒரு செய்தி. அது என்னவென்று சொன்னால், ஊழல்! அதுதான் மிக முக்கியம்.
ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவுடன், நம்மாள்களும் ஆமாங்க, ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஊழல்களை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல; தவறு செய்தால் ஊழலை ஒழிக்கவேண்டும்; ஊழல் இருக்கக் கூடாது; நேர்மையான ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், நண்பர்களே, நடுநிலையில் இருந்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்தக் கருத்துகளை ஏற்கவேண்டும் என்பது அவசியமில்லை. தள்ளலாம், கொள்ளலாம். ஆனால், நீங்கள் தள்ளுவதற்கு உரிமை உண்டு என்கிற காரணத் தினாலேதான், சொல்லுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்கிற உணர்வோடு உங்கள் முன்னாலே இதனை நான் வைக்க விரும்புகிறேன்.
எங்களுக்கு அடுத்த தலைமுறை கண்ணோட்டம்தான்!

அரசியலில் இந்தக் கட்சி ஊழல் செய்தது; இந்தக் கட்சி ஊழலில் மாட்டிக் கொண்டது; அடுத்த கட்சி ஊழலில் சிக்கப் போகிறது. ஆகவே, இந்த இரண்டு கட்சியையும் ஒழித்துவிட்டு நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.  அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கை மணியை அடிக்கக் கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. இதனைப் பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையோடு சொல்கிறோம்.
மற்றவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வரவில்லை. எல்லோருக்கும் அரசியல் பார்வை; எல்லோருக்கும் தேர்தல் கண்ணோட்டம்; எங்களுக்கு அடுத்தத் தேர்தல் கண்ணோட்டம் அல்ல நண்பர்களே, எங்களுக்கு அடுத்த தலைமுறை கண்ணோட்டம்; மானமுள்ள தலைமுறை; உரிமையுள்ள தலைமுறை; அந்தத் தெளிவான தலை முறை; பகுத்தறிவு உள்ள ஒரு தலைமுறை; அந்தத் தலை முறை வரவேண்டும் என்கிற உணர்வோடு சொல்கிறோம்.

இந்தக் கட்சி ஊழல் செய்தார் என்று இவரை ஒழித்துவிடுவோம்; அந்தக் கட்சி ஊழல் செய்தார் என்று அவரை ஒழித்துவிடுவோம். பிறகு நாம் வந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால், அப்புறம் ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்! அதிலே ரொம்பத் தெளிவாக இருக்கலாம். அதுதான் மிக முக்கியம்.
சமஸ்கிருத வாரம் என்ன - சமஸ்கிருதமே நாட்டின் மொழியாக வரக்கூடிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தி மொழியா - உடனே கதவை அகலமாகத் திறந்துவிடலாம்.

தமிழ்நாடு தாய்த்திருநாடு - தமிழ்நாடு என்று வர வேண்டிய அவசியம் கிடையாது. மும்மொழி அல்ல; நான்கு மொழி. இந்தி, சமஸ்கிருதம் ஆகிய எல்லாவற் றையும் படிக்கவேண்டும் என்கிற அளவிற்கு இன்றைக்கு ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு முன்னுரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை எப்பேர்ப்பட்டவர்களாலும் ஒழிக்க முடியுமா? என்றால், முடியாது!
அதற்குப் பல சூழ்நிலைகளை - இன்றைக்கு உருவாகி இருக்கிற சூழலைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா ஊழல்களும் ஒரே மாதிரியா? நிச்சயம் கிடையாது.

ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வரவேண்டிய நிலை வேறு!
இரண்டு சாராரும் கவனிக்கவேண்டும்; இரண்டு கட்சி நண்பர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் தாய்க் கழகம் மட்டுமல்ல, பொதுநிலையில் இருக்கின்றவர்கள் என்கிற உரிமையை எடுத்துக்கொண்டு,  இந்தக் கசப்பான, வேதனையான உண்மையை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.
நடக்காததை, நடந்த மாதிரி பிரச்சாரம் செய்தார்கள் என்றால், அதையும் நம்மாள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது பதில் சொல்லட்டும் இந்தக் கேள்விக்கு!

இன்றைய ஜனநாயகத்தில் இன்றைய தேர்தல் முறை இருக்கின்ற வரையில், இந்த ஊழலை எப்பேர்ப்பட்டவர் களாலும் ஒழிக்க முடியுமா? என்றால், முடியாது!


என்ன காரணம் என்று சொன்னால், தெளிவாக வேட் பாளர்கள், அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, அவருக்கு 75 லட்சம் ரூபாய் என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள் என்றால், முன்பைவிட செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்; ஒழுக்கமான அரசியல்வாதியாக இருந்தால்; ஜனநாயகம் திருந்தி இருக்கிறது என்றால், முன்பு எவ்வளவு உச்சவரம்பு வைத் தார்களோ, அதைவிட குறைவாக வைக்கலாமே! முன்பை விட அதிகமான ரூபாயை வரையறையாக வைத்தால், அதற்கு என்ன காரணம்.
சரி, அந்த வரையறைக்குள்தான் வேட்பாளர்கள் கணக்குக் கொடுக்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும்! உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக் கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே!

ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது?

அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, இது ஒரு பொது உண்மை. ஒரு விஞ்ஞானியினுடைய பார்வை; நான் சுயமரியாதைக்காரன், ஒரு சமுதாய விஞ்ஞானி. எனவே, அந்தப் பார்வையில் பார்த்து உங்களிடம் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். கேளுங்கள், சிந்தி யுங்கள்!  முடிவுக்கு வாருங்கள் என்றுகூட சொல்ல மாட்டோம்.


சாதாரண பஞ்சாயத்து உறுப்பினரிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர் வரையில் லட்சக்கணக்கான ரூபாயி லிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப் படுகின்றன.


பிறகு என்ன ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம். ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா?


ஆரியம் திட்டமிடுகிறது!

எனவே, இவ்வளவும் கணக்கில் வருகிறதா, இல்லையா? நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வாக்கை விற்கக்கூடிய வாக்காளர்கள்; பொய் சொல்லி செலவை அதிகமாகச் செய்யக்கூடிய வேட்பாளர்கள்; இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு ஜனநாயகம், அதுமட்டுமல்ல, கட்சிக்கு தாராளமாக பணம் கொடுக்கலாம். அது கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தகவலறியும் சட்டத்தில்கூட, அந்தத் தகவல்களை யெல்லாம் கேட்கக்கூடாது.

இவ்வளவையும் வைத்துக்கொண்டு, அப்புறம் என்ன ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது - யாரை ஏமாற்ற! முதலில் இந்த நடைமுறை மாறினால்தானே, ஊழலை ஒழிக்க முடியும்.

இவர் ஊழல் செய்தார் என்று, இவரை ஒழி! அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க! அடுத்தது நாங்க! இந்தியைக் கொண்டு வருவதற்கு, சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கு, தேசியம் பேசிக்கொண்டு மிகவும் சவுகரியமாக வருவோம் என்று சொல்லி இந்த நாட்டில் சுப் பிரமணிய சாமிகள் என்கிற உருவம் மட்டுமல்ல, ஆரியம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்குத் தயாராகிறார்கள்.
இப்பொழுது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் அடுத்ததாக வந்துவிடுவோம். மக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
அவர் வந்து இவரை நீக்கிவிடுவார்; அவருக்கு மிகவும் சந்தோஷம். அடுத்தது இவருடைய முறை. அதுதான் மிக முக்கியம்.

மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு
என்ன தேவை?


அடுத்தது என்னாகும்? இந்த சிந்தனையை நாம் நன்றாக நினைத்து, நாங்கள் ஒருபோதும் மீண்டும் சுக்ரீவன் களாவோ, வாலிகளாகவோ மாறுவதற்குத் தயாராக இல்லை. மாறாக, இரண்டு பேருமே உணர்ந்துகொள்ளவேண்டிய அவசியம் வரும்.

இன்றைக்கு அரசாங்கம் மாறியது; மோடி அரசாங்கம் வந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நடந்ததோ வேறு என்ன மாறுதல் வந்தது? காங்கிரசு அரசாங்கத்தில் அன்றைக்கு என்ன மாறுதல்? இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன தேவை? படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலைச் செய்ய முடியும். படகுகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்; நாள்தோறும் ஒரு நாடகம் நடைபெறுகிறது.

மீனவர்களுக்கு வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கவேண்டுமா? முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாகிவிட்டது. சரி, இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கம், ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா இல்லையா? முன்பு இருந்த அரசாங்கத்தைவிட ஒருபடி மேலே போயிருக்கிறார்களா, இல்லையா?

சொத்து எனக்கு வருமா? என் அண்ணனுக்கு வருமா?
ஈழப் பிரச்சினை, வெளிநாட்டு உறவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை; மொழியில் இரு மொழிக் கொள்கை; அண்ணா உருவாக்கினாரே, அந்த இருமொழிக் கொள்கை, இந்த அரசு இருக்கின்ற வரையில்தானே இருக்கும். அவர்கள் வந்துவிட்டால் என்னாகும்? சமஸ்கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே! வணக்கம் சொன்னால்,  அபராதம் போடுவார்கள். நமஸ்காரம் என்றுதானே சொல்லவேண்டும்.

இப்பொழுதே, காலில் விழுகின்ற கலாச்சாரம் வட நாட்டில் இருந்து வந்து விட்டதே! கயிறு கட்டுகின்ற கலாச்சாரம் வந்துவிட்டதே!

இது ஒரு தொலைநோக்கோடு பார்க்கவேண்டிய பிரச்சினை. இதை சாதாரணமாகப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியாது. உணர்ச்சிவயப்பட்டு சிந்தித்தாலும் தெரியாது. இது அறிவு வயப்பட்டு சிந்திக்கவேண்டிய மிக ஆழமான ஒரு செய்தி.

அய்யங்கார் வழக்குரைஞர் வேடிக்கை ஒருமுறை சொன்னார் என்ற கதையுண்டு.

அண்ணா - தம்பி இரண்டு பேருக்கும் சொத்தைப் பிரிக்கின்ற வழக்கில், வழக்குரைஞரிடம் இந்த சொத்து எனக்கு வருமா? என் அண்ணனுக்கு வருமா? என்று தம்பி கேட்டார்.


உடனே அந்த கெட்டிக்கார வழக்குரைஞர் சொன்னார்; உங்க இரண்டு பேருக்குமே வராது; எனக்குத்தான் வரும். இரண்டு பேரும் சண்டை போட்டு என்கிட்டதான் வரு வீங்க! முழுச் சொத்தும் என்னைப் போன்ற வழக்குரை ஞர்களிடம்தான் வரும் என்று சொன்னார்.


இது வேடிக்கையான கதையல்ல.

அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும்

இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கக்கூடிய சூழல் என்னவென்று சொன்னால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் நிலை இதுதான். இதனை உங்களுக்குத் தெளிவாக நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

திராவிடர் கழகத்தினுடைய கண்ணோட்டத்தில் இவரை எதிர்க்கிறோம்! அவரை ஆதரிக்கிறோம் என்ப தல்ல, ஊழலை நியாயப்படுத்துகிறோம் என்பதல்ல. ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்ட னையை பெற்றுத் தீரவேண்டும். அதேநேரத்தில், அதிலிருந்து மாறவேண்டும்; அது இல்லை, தவறு என்று சொன்னால், அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும், அதுதான் மிக முக்கியம்.
சட்டப்படி அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. அந்த வழிமுறைகளைக் கையாளவேண்டுமே தவிர, பொது மக்களுக்கோ அல்லது பொதுச்சொத்துக்கோ, பொது அமை திக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமையும், கடமையும் இருக்கிறது.

நாங்கள் பெரியார் இல்லை;
பெரியாரின் தொண்டர்கள்!
ஆகவேதான் இதனைத் தெளிவாகச் சொல்கிறோம்.

பெரியாருடைய காலத்திலேயே அய்யா அவர்கள் சுட்டிக்காட்டினார். நாங்கள் பெரியார் இல்லை. பெரியாரின் தொண்டர்கள். பெரியார் தந்த புத்தி எங்களுக்கு இருக்கிறது. ஆகவே, அதை வைத்து சமுதாயத்திற்கு சொல்கிறோம்,

இன்றைய காலகட்டத்திலே, தயவுசெய்து வெறும் அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். லட்சிய பார்வையோடு, கொள்கை பார்வையோடு, சமுதாயம் இன்றைக்குப் பெற் றிருக்கின்ற எழுச்சியெல்லாம் நாளைக்குத் தலைகுப்புற கவிழ்ந்துவிடக்கூடாது என்பதை எண்ணிப் பாருங்கள்.


இன்றைக்கு அதிகாரமெல்லாம் டில்லியில் குவித்து வைத்துக்கொண்டு, ஒரு ஆட்சி அங்கே மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது என்று சொல்கின்ற நேரத்தில், இங்கு நமக்கு இதுவரையில் இருந்த வாய்ப்புகளை யெல்லாம் அடியோடு மாற்றிவிடுவதற்கு, இதுதான் சரியான நேரம் என்று சொல்லி, அங்கே மிகப்பெரிய அளவிற்கு நினைத்தார்கள்.


தொலைநோக்கோடு, கவலையோடு சொல்கிறோம்; மகிழ்ச்சியோடு அல்ல!
நான் சென்னையில்கூட உரையாற்றும்பொழுது சொன்னேன், ஒரு பாட்டு உண்டு;

கடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு,
குடல் வற்றி செத்ததாம்
என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோல், வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அதற்கு ஏமாறமாட்டார்கள்.

நீங்கள் அந்த ஆசையிலேயே குடல் வற்றி சாகவேண் டியதுதான்; ஆளை சாக வேண்டும் என்று சொல்ல வில்லை. இந்த முயற்சிகள் வெற்றி பெறாது என்று சொல்கிறோம்.


எனவே, இந்த இயக்கம் அதனை செய்யும். காரணம், கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன்.

நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் கைதட்டுகிறீர்களா? கல் எடுத்துப் போடுகிறீர்களா? என்பதைப்பற்றி எங் களுக்குக் கவலையில்லை. ஆனால், இன்றைக்கு நாங்கள் சொல்வது, நாளைக்கு நடைபெறும் என்று சொல்லகூடிய அளவிற்கு, தொலைநோக்கோடு, கவலையோடு சொல்கிறோம். மகிழ்ச்சியோடு அல்ல. அல்லது ஒரு சார்பு நிலை என்று எடுத்துக்கொண்டு சொல்லவில்லை.

பெரியார் இந்த இயக்கத்தை வெற்றி பெற வைத்ததே, ஆயுதம் தூக்கியல்ல!
இதனை நன்றாகப் புரிந்துகொண்டு, நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தோழர்கள் சிந்திக்கவேண்டும்.

வெறும் உணர்ச்சியைக் கொட்டக்கூடிய, வேண்டிய நேரமல்ல; அறிவைப் பயன்படுத்தவேண்டியது மிக முக்கியம். பெரியார் இந்த இயக்கத்தை வெற்றி பெற வைத்ததே, ஆயுதம் தூக்கியல்ல; ஆயுதத்தைத் தூக்கு என்று சொல்லியிருந்தால், இது எப்பொழுதோ தோற்றுப் போயிருக்கும். மாறாக, அறிவாயுத்ததைத் தூக்கு என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்; அதன் காரணமாகத்தான் இன்றைக்கும் இங்கே அமைதி நிலவுகிறது; அறிவுப் புரட்சியினால் மிகப்பெரிய வெற்றி யைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்லி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

உற்சாகத்தோடு இந்தப் பணியை செய்கின்ற தோழர் களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                   ---------------------"விடுதலை”  24-10-2014
Read more: http://viduthalai.in/page-4/89866.html#ixzz3H3usNBgp

21 comments:

தமிழ் ஓவியா said...


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீண்டாமை:

திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், அக்.25_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாடம் நடைபெறும் தீண்டாமையை எதிர்த் துப் போராட்டம் நடத் தப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலினுள் மணவாள மாமுனி சன் னதி உள்ளது. இந்த சன்ன தியினுள் பார்ப்பனர்கள் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்து வருகின் றனர். பார்ப்பனர் அல் லாதவர்களுக்கு இந்த சன் னதியினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப் பனர்களுக்கு தனி வழி. பார்ப்பனல்லாதார்க்கும், பொதுமக்களுக்கும் தனி வழி ஒதுக்கியுள்ளனர். பார்ப்பனரல்லாதவர்கள் வெளியே அமர்ந்து தான் பாடல் பாடி வழிபட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்தத் தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து பார்ப்பனல்லாத மாதவ ராமானுஜதாசர் கடந்த 2008 -ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் அடைந்துள் ளார். உயர்நீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் உள்ளே சென்று பாடல் பாடி வழிபடலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு எண்:...25845/2008 , இந்து அறநிலைய துறை ஆணை நகல் எண்கள்:35/2003 தேதி: 23.12.2003 மற்றும் 168/2009 தேதி: 17.8.2009. இத்தீர்ப்பு மற்றும் ஆணை நகலைக் காண் பித்த பின்னரும்கூட பார்ப்பனர்கள், பார்ப்பன ரல்லாத மாதவ ராமானுஜ தாசர் உள்ளிட்டவர்களுக் குத் தொடர்ந்து வழி பாட்டு உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கின்றனர்.

ராமானுஜ தாசர் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் களுடன் தொடர்ந்து இதற்கான களப் பணி களில் ஈடுபட்டு வந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் காஞ்சி மாவட்ட ஜனநாயக அமைப்புகளைத் தொடர்பு கொள்கின்ற னர். திராவிடர் கழகத்தி னரும், விடுதலைச்சிறுத் தைகள் கட்சியினரும் களத்தில் இணைகின்ற னர்.

கடந்த 15.10.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலை யத் துறை அலுவலரைச் சந்தித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும், 19.10.2014 முதல் 28.10.2014 நடைபெறவுள்ள உற்சவத்தை ஜாதி பாகு பாடின்றி நடத்திடக் கோரியும் மனு கொடுத்த னர்.

மீறுவோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினைக் கட்டாயம் முழுமையாக கடைப்பிடித்திடவேண்டும். இல்லையென்றால் மீறு வோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர் வாகத்திற்குக் கடிதம் கொடுக்கின்றது.

இருப்பினும் ஆதிக்க ஜாதித் திமிர்ப்பிடித்த பார்ப்பன பூசாரிகள், பார்ப்பனரல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் 21.10.2014 அன்று மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் மற் றும் போராட்டக் குழுவி னரும் கோவிலுனுள்ளே மணவாள மாமுனிவர் சன்னதி உள்ளே சென்ற னர்.

பார்ப்பனர்கள், மாதவ ராமானுஜ தாசர் மற்றும் செந்தில்நாதனையும் வழி மறித்து, ஆபாச வார்த் தைகளால் மிரட்டினார் கள்.

தடையை மீறி உள்ளே சென்ற பார்ப்பனரல்லாத மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் உள் ளிட்டவர்கள் பார்ப்பனர் களைவிட சிறப்பாகவே நாலாயிர திவ்யப் பிரபந் தம் பாடலைப் பாடி வழி பட்டனர்.

பார்ப்பனர்கள், காவல் துறையினரை அழைத்து வந்தனர். போராட்டக் குழுவினரும் உயர்நீதி மன்ற தீர்ப்பானையைக் காண்பித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். காவல் துறை உதவியுடன் மாதவ ராமானுஜ தாசர் உள் ளிட்ட பார்ப்பனர் அல் லாதவர் அனைவரையும் சன்னதியை விட்டு வெளி யேற்றினார்கள்.

அடுத்தகட்ட நடவ டிக்கைபற்றி ஒத்த கருத்து கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மக்கள் போராட் டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

பங்கேற்றோர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திராவிடர் கழகத் தோழர் கள் இளையவேல், வேலா யுதம், சக்திவேல், அர் ஜூன், ரவிந்திரன், அருண் குமார், தங்கராஜ், கோபி நாத், கோவிந்தராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பாசறை செல்வராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் லாரன்சு மற்றும் பல தோழர்கள்
விடுதலை செய்தியாளர் இரா.சக்திவேல், காஞ்சிபுரம்.

Read more: http://viduthalai.in/e-paper/89973.html#ixzz3HD52auYN

தமிழ் ஓவியா said...

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும்.
_ (குடிஅரசு, 17.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/89978.html#ixzz3HD5Y8F95

தமிழ் ஓவியா said...

தீபாவளி பரிசோ! தீபாவளியால் காற்று மாசு: அகமதாபாத் முதலிடம்; சென்னை இரண்டாமிடம்


சென்னை, அக்.25- முடிந்து போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாள்கள் காற்றில் கலந்திருக்கும். அவ் வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டிய லில் அகமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 ஆவது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவு களை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.

நைட்ரஜன் டை ஆக்சைடு: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முன், அக்.,15 ஆம் தேதியும், தீபாவளி யான, 22 ஆம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்துப் பகுதி களிலும், அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள், 15 ஆம் தேதி ஆய்வில், 37 மைக்ரோ கிராமாக இருந்தது, 22 ஆம் தேதி ஆய்வில், 297 ஆக உயர்ந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு, 12-லிருந்து, 32 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு, 13-லிருந்து 20 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்துள்ளது.

சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30-லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47-லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகபட்சமாக 503 மைக்ரோ கிராமாக வும், சென்னையில் 393 மைக்ரோ கிரா மாகவும், இருந்தது.

இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மய்ய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாள்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாள்கள் கலந்து தான் இருக்கும். தற் போதைய காற்று மாசு எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/89982.html#ixzz3HD5jxw6q

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சர்களில் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது!


மத்திய அமைச்சர்களில் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்தல் கண் காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சர்கள் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் சொத்துமதிப்புதான் சட்டென்று அதி கரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தன்னிடம் ரூ.9.88 கோடி சொத் துக்கள் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.10.46 கோடி அதி கரித்து ரூ.20.35 கோடியாகவிட்டது.

கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.2.98 கோடியும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் சொத்து மதிப்பு ரூ.1.01 கோடியும் அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்களில் பலர் கோடீஸ்வரர்கள். அதில் ரூ.114.03 கோடி சொத்துடன் அருண்ஜேட்லி தான் பணக்கார அமைச்சர் ஆவார்

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/89983.html#ixzz3HD5uEVqV

தமிழ் ஓவியா said...

அக்.25: தகவல் அறியும் உரிமை சட்ட நாள்

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங் களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப் பட்டு, அக்.12ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப் போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/89989.html#ixzz3HD6AS8Ob

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரி

அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டில்லி, அக்.25 புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி.அகர்வாலா உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திர மைதானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின்மூலம் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டதாவது:

18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சி ஜெயலலிதா பிணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நார்மன் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி அது தொடர்பான உண்மைத் தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது என்பது பொருத்தமற்றதும், இழிவு படுத்தவதும் ஆகும். 18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா பிணை கோருவதில் ஃபாலி நாரிமனின் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது மாண்பமை உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதால், மாண்பமை உச்சநீதிமன்றம் இதில் தொடர்புடைய பதிவு மற்றும் ஒளிபரப்பிய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக வழக்குரைஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலிமையாக வாதிட்டாலும், நீதிமன்ற நடவடிக் கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது உள்பட நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. ஆகவே, இதில் தொடர்புள்ள அனைத்திலும் மிகுந்த கவலையுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பைக் கண்டித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

-இவ்வாறு அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி. அகர்வாலா உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/89994.html#ixzz3HD6jMlJP

தமிழ் ஓவியா said...

பிரச்சார போதனாமுறை - பள்ளிக்கூடம்

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்குப் பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம்.

அந்தப்படி அவ்வப்போது தனித் தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்றுப் போனார்கள் என்றாலும், ஒரு முறையாக வைத்து அப்போதனா முறை பயிற்சி செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது இந்த ஜூன் 15ஆம் தேதியில் இருந்து முறையாகவே பள்ளிக்கூடப் பயிற்சி முறையில் ஒரு பயிற்சிசாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20,25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக்கூடும். ஆதலால் வர இஷ்டம் உள்ளவர்கள் தயவுசெய்து 8ஆம் தேதிக்குள் இவ்விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப்படுகிறார்கள்.

விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவில் உள்ள, சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்.

குடிஅரசு - செய்திக் குறிப்பு - 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89913.html#ixzz3HD7A2g11

தமிழ் ஓவியா said...

பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம்


இப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப்படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள். இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக் குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது. பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர் களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.

ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன் செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்?

நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப்படுவது அல்லாமல் அந்தச் சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது. படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோல வேதான் சமூக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது.

இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை.

யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.

ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப்புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89922.html#ixzz3HD7K2oo3

தமிழ் ஓவியா said...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் திராவிடன், இந்தியா என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும்.

எப்படி இருந்த போதிலும் இவை இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு, வக்காலத்து பேசும் வகையில் நமக்கு மத எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக் கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர் பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

ஏனெனில், நாமோ பல மதங்களையும் பல சமய பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், சமுகக் கொள்கைகளையும், அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை உயர்வு தாழ்வு வித்தியாசத்தையும் தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு தொலைத்தாகவேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்த முண்டாக்குவதே மதம் என்றும் அல்லது கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை உணரச் செய்வதே மதம் என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையும் சமயக் கொள்கையையும் கண்டித்து. அவைகள் முட்டாள் தனம் என்பதற்காக நிருபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதனால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின் றோம்.

அதுபோலவே சில சமுகத்தாரும் சில சமயத் தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமுகமே மேலான தென்று வஞ்சித்துஆதிக்கம் பெற்று அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்த அரசியல் என்றும் தேசியம் என்றும் காந்தியம் என்றும் சத்தியாக்கிரகம் என்றும் பல சூழ்ச்சித் துறைகளை உண்டாக்கி அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும் அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடன், சில சமுகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளைக் கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் தேசிய ஒற்றுமை கெடுவது மாத்திரமல்லாமல் தேசிய உணர்ச்சி கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவை தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று அதாவது திராவிடன் தனது முதல் இதழில் சமயத்துவேஷம், சமுகத்துவேஷம், மதத்துவேஷம், முதலியன இல்லாமல் காக்கும் என்று தன்னை விளம்பரப் படுத்தி கொண்டிருக்கின்றது.

இரண்டு. இந்தியா தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளைக் கிளப்பி தேசிய ஒற்றுமைக்கு இடர்செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சைகட்டி நின்று கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்தியா திராவிடனை விட ஒருபடி முன்னேறி இருக்கின்ற தென்றே சொல்லுவோம்.

எனவே குடிஅரசுக்கு, சுய மரியாதை இயக்கத்திற்கு முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும். மற்றபடி காங்கிரசுக்கும் சமயத் திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமுகங் களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும் என்னும் கருத்தின் மீது அப்பத்திரி கைகளையும் ஆதரித்து, அதன் உள் எண்ண மனப்பான் மையை உணர்ந்து கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோ திடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்ப னரல்லாதவர்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாக வும் இருந்தவர்களாவார்கள். ஆதலால், அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டு விடுகின்றோம்.

விலாசம்:

திராவிடன்
14, மவுண்ட் ரோடு, சென்னை
இந்தியா
11, ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு,
மவுண்ட்ரோடு, சென்னை.

குடிஅரசு - கட்டுரை - 10.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89921.html#ixzz3HD7VK2kl

தமிழ் ஓவியா said...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...
நான் பெத்த மகனே நில்லு
நான் பட்ட வேதனை கேளு...
முலைவரி கொடுக்கச்சொன்னார்கள்
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள்
இடுப்பொடிய உழைத்தோம் ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள்
அழுதுகொண்டே அனுப்பினோம் ...
"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள்
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள்
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள்
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...
வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள்
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்...
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..
காரிருளில் வெள்ளி முளைத்தது போல
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...
சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான்
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...
அடடா இனி பயமில்லை - என்
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை
என்றே மகிழ்ந்திருந்தோமடா...
அட சூழ்ச்சியறியாத் தெண்டமே
நான் பெத்த சதைப் பிண்டமே
அந்த தாடிக் கெழவன - நீ
எப்படிடா மறந்த முண்டமே
அப்போ ஓடிப்போன பாப்பான்
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...
வாழ ஆரம்பிச்சதும் வயிறு எரியறான்
பைக்குல போனா பதறுறான்
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான்
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு அடிக்கறான்
உன்னோட ஆத்தா கொடுத்த முலை வரியை
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...?
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?
பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம்
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...
கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக
குடிசைய எரிச்சுட்டு போகும்போது
கல்லு மாறி சொரணையில்லாம இருக்கியேடா ...
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?
அட மானங்கெட்டவனே
இனியாவது பெரியாரைப் படி
இனி எவனாவது அடிச்சான்னா
அப்பவே திருப்பி அடி ....

- தோழர் சம்சுதீன் கீரா

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD95lSrI

தமிழ் ஓவியா said...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்!


விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்ட விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடி விபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டா மல் அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும்.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக திகழ் கின்றன. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இயங்கும் ஆலைகளினால் அடிக்கடி வெடிவிபத்து, தொழிலா ளர்கள் உயிர்பலி, படுகாயம் ஏற்படு கிறது. விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படாததும், தொழிலாளர் களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.பட்டாசிற்கு தேவையான மூலப்பொருளான கருந் திரி தயாரிப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாகவே சட்டவிரோதமாக நடக்கிறது.

ஆலைகளில் விபத்திற்குப்பின் அடுத்த ஒரு சிலநாட்களுக்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளின் நட வடிக்கை கடுமையாக இருக்கும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அடங்கிவிடும். தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் இந்த ஆலைகளில் விறுவிறுப்பான பட்டாசு உற்பத்தி நடந்துவருகிறது. இதில் விபத்தை தவிர்க்க விதிமுறை களை முறையாக பின்பற்றுமாறு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். விபத்தின்றி பட்டாசு தயாரிப்பதற்கான போதுமான விழிப்புணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு, நடவடிக்கையை கடு மையாக்கினால்தான் விபத்து, உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டாசு விபத் துக்களில் கடந்த 15 ஆண்டுகளில் 218 விபத்துக்கள் நடந்துள்ளன. 353 பேர் பலி யாகி உள்ளனர். 262 பேர் காயமடைந் துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விதி முறை மீறல், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி யளிக்கப்படுகிறது ,என்றார்.

Read more: http://viduthalai.in/page4/89919.html#ixzz3HD9UnjMS

தமிழ் ஓவியா said...

நிலத்தடி நீரை சேமிப்போம்


இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.

பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.

அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page4/89920.html#ixzz3HD9d1GEI

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா


நமது இலட்சியம் அரசியல் வேட் டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதா தையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப் பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

- பேரறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page4/89924.html#ixzz3HD9kfIlM

தமிழ் ஓவியா said...

ஜெவை காப்பாற்றாத யாகங்களும் பூஜைகளும்!


கடந்த காலங்களில் ஜெயலலிதா வின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் அவராலும் அவரது தோழியாலும் நடத்தப்பட்ட ஹோமங்கள் 9217

யாகங்கள் 6424 என்றும் அவர்களோடு, அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கோவில்களில் செய்த அபிசேகங்கள் 27,019 அர்ச்சனைகள் 43,672 என்றும் 86,332 மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிகின்றன. அவர் பெங் களூருவில் உள்ளே இருந்த காலங் களில் இங்கே இருப்பவர்கள் கிடைத்த ஓய்வில் இந்தக் கணக்கு போட்டார் களோ என்னவோ!

இந்த 86,332 வேண்டுதல்களில் இவர்களின் தொண்டர்களும் அமைச் சர்களும் மண்சோறு சாப்பிட்டதும் அங்கப் பிரதட்சணமும் சேரவில்லை யாம். இத்தனையும் செய்த பிறகுதான் இவருக்கு தண்டனையும், தண்டமும், பதவிப் பறிப்பும் கிடைத்துள்ளது என்பதையும் பிணை கிடைப்பதுகூட தாமதமாகியது என்பதையும் சிந்தித் தால் பெரியார் பெரும் படையின் கடவுள் மறுப்பு எவ்வளவு தீர்க்கமானது என்பது புரியும்.

ஒவ்வொரு பரிகாரமும் பார்ப்பனர் களின் வருமானத்துக்குரியது என்பதால் இந்த 86,332 வேண்டுதல்களால் பயன் (தட்சணை) பெற்ற பார்ப்பனர்களின் எண்ணிக்கை 78,642 என்கின்றனர். இவைகளை சிந்திந்தால் பகுத்தறிவு வந்து விடுமே என்றுதான் இன்னும் கொங்கணேஸ்வரர் கோயில் யாகம், பால்குடம், அங்கப் பிரதட்சணம் என ஊருக்கு ஊர் அசத்துகின்றனர். வக்கீல் களாக, டாக்டர்களாக, முனைவர்களாக பேராசிரியர்களாக உள்ள அமைச் சர்களும் நிர்வாகிகளும் தங்கள் தொண்டர்களுக்கு அறிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயுள்ளனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான்,தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேரறிஞர் அண்ணா 70 ஆண்டுகட்கு முன்பே ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றாரோ!

- தி. சோமசுந்தரத் தேவர், தஞ்சை வட்டம்

Read more: http://viduthalai.in/page5/89925.html#ixzz3HD9zqg2D

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க்குச் செல்லும் 13 வயது சிறுமி!

அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ் வாய்க் கிரகத்துக்குச் செல்லவிருக்கிறார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன் (13) என்ற அச்சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

சிறுமி அலிசாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கெனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் தெரி வித்துள்ளது. அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளைப் படிப்பதோடு, நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்து கொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் முயற்சி குறித்து அலிசா கூறுகையில், இந்தப் பயணத்தின் மூலம் நான் மற்றவர்களிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/89926.html#ixzz3HDA81vFA

தமிழ் ஓவியா said...

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான உணவுகள்


கொழுப்புப் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண் ணுதல், கொழுப்பின் அடர்த்தியைக் குறைக் கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல் களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செயல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க் கைகளை நீக்க உதவுகிறது. பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்கும் உண வாக விளங்குகிறது.

ஒட்ஸ் உணவு மெதுவாக, செரிமான மாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப் பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக, செரிமானமாவதால், தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும். க்ரீன் டீ எனப்படும் பச்சைத் தேயிலை யில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்ப தோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

Read more: http://viduthalai.in/page5/89930.html#ixzz3HDAQ54kX

தமிழ் ஓவியா said...

’விடுதலை’யின் கேள்விக்குப் பதில்

விடுதலை, 4.10.2014 இதழின் தலையங்கத்தில், மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? என்ற கேள்வியை, பெரியார் தொண்டர்களாகிய விடுதலை வாசகர்களுக்கு ஒரு கேள்வியாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு என் பதில்: ஆம்! இராவணலீலா மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதே. ஏனைய விடுதலை வாசகர் களும் பதில் கூறட்டும்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தித்து கருத்தை கேட்டு முடிவெடுக்கட்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் 466)

செய்ய வேண்டியதற்கான நல்ல பல காரணங்களை தலையங்கத்திலேயே காணமுடிகிறது. திராவிட இனத்தை இழிவுபடுத்தும் செயலைத் தடுத்து காக்கத் தவறினால் கெடுதிதானே விளையும்?

எச்சரித்துக்கொண்டுதானே இருக்கிறார்

தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிக்கைகள்மூலம் உடனுக்குடன் ஆசிரியர் அவர்கள் எச்சரித்துக் கொண்டுதானே இருக் கிறார். தொடர் வண்டியில் உள்ள அபாயச் சங்கிலியை இழுக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான நிலை உருப் பெற்று வருகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தூண்டில் போட்டு பார்க்கிறார்கள். நட்சத்திர மீன் (STAR FISH) ஏன் இன்னும் மேலாக (SUPER STAR FISH) கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால்வகைப் படைகள் என, இந்துத்துவா, சமஸ்கிருதம், கீதை, இந்தி திணிப்பு, ஊடக ஆக்கிரமிப்புப் படைகளென, இன அழிப்பு வேலையில் இறங்கியுள்ளன.

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை பள்ளி மாணவர்கள் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று இன்றைய பிரதமர் கேட்டுக்கொண்டுள் ளார். நேரு ஒரு நாத்திகர் என்பதையும், இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று கூறியதையும் மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். இந்திமொழித் திணிப்பை ஏற்காதவர் நேரு என்பதையும் மாணவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாமா? பிரதமர் மோடி அவர்கள் இதனை செய்வார் என்று நம்பலாமா?

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையாலும், இனமானக்காப்பு உந்துதலாலும், இன்று ஓரளவு, தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று பாட்டிசைக்க முடிகிறது. இல்லையென்றால் பார்ப்பன இனம் திராவிட இனத்தை கபளீகரம் செய்திருக்கும். தற்போது சாதகமான காற்று வீசுவதால், இந்துத்துவா படகில் ஆரியம் ஆவேசமாக துடுப்பை சுழற்றுகிறது. இதற்கு அணை கட்ட நம் கழக இளைஞர்கள் தோள் உயர்த்த வேண்டிய காலம் இது அவசரமும் கூட.

திராவிடர் கழகம், இனம், மானம், மொழி, உரிமை காக்க அறப்போராட்டங்களை நடத்தியது புதிய செய்தியல்ல. போராட்டப் புனலில் நீந்தியே வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம்.

மண் பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட் டம்.

இந்திய வரைபடம் எரிப்புப் போராட்டம்.

கம்பராமாயண எதிர்ப்புக் கூட்டங்கள் இன்னும் பலப்பல.

எனவே இராவணலீலா மீண்டும் மற்றவர்கள் நியாயம் உணரும் வரை நடத்தவே வேண்டும்.

இந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. காவல்துறை யினர், தொண்டர்களை கைது செய்யும் வேளையில், இராணுவப்பள்ளியில் பணியாற்றிய என்னை, பணிக் கட்டுப்பாட்டைக் கருதி நிர்வாகி சம்பந்தம் அய்யா அவர் கள், மாடியில் இருந்த வீட்டில் இரவு தங்க வைத்ததையும், மறு நாள் உடுமலைப்பேட்டை திரும்பியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. இனிமேல் நடக்க இருக்கும் இராவண லீலாவில் கலந்து கொள்வதில் எனக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

- மு.வி.சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page-2/90019.html#ixzz3HGU6aK7P

தமிழ் ஓவியா said...

தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா.வின் பயணத்தின் தாக்கம் என்னும் தலைப்பில் டாக்டர் கி.வீரமணி உரையாற்றுகிறார்


சிங்கப்பூரில் இயங்கிவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பயணத்தின் தாக்கம் என்கிற தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை ஆற்றுகிறார்.

சிங்கப்பூர் 119620, எண் 29, ஹெங் மியூய்கெங் டெர்ரஸ், பி-பிளாக், 9ஆவது மாடி (09-06), அய்எஸ் ஏ எஸ் போர்ட் அறை 28.10.2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிமுதல் 4.30 மணி முடிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

நிகழ்விடத்துக்கான வரைபடத்துக்கு http://bit.ly/isasmap இணையத்திலும், கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கு http://k-veeramani.eventbrite.sg என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார்கள். கருத்தரங்கில் வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். jordanang@nus.edu.sg என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/90027.html#ixzz3HGVQhzHQ

தமிழ் ஓவியா said...

இந்தி ஒலிபரப்பு இல்லை பின்வாங்கியது வானொலி


கழகத் தலைவர் அறிக்கைக்குக் கைமேல் பலன்
இந்தி ஒலிபரப்பு இல்லை
பின்வாங்கியது வானொலி

சென்னை, அக்.27- வானொலியில் இந்தித் திணிப்பு கிடையாது, அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்று பின்வாங்கியது வானொலி.

இதுகுறித்து சென்னை வானொலி உதவி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும், நம்முடைய தேசத்தின் பெருமைமிக்க பண்பாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கையிலும் அகில இந்திய வானொலி எப்போதுமே முன்னின்று செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மூன்று உள்ளூர் வானொலி நிலையங்கள் உள்பட நாடு முழுவதிலும் 86 உள்ளூர் வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு கட்டமைப்பு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறு கின்றன. இந்த முயற்சிகளின் போது ஒலிபரப்பில் ஏற்படும் இடைவெளியை விட்டு நிரப்பவும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் இடம் பெறச் செய்யவும் அகில இந்திய வானொலி சேவை புரிந்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில், வேறு ஒரு மொழி நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி திணிக்காது.

அகில இந்திய வானொலி நம்முடைய பாரம் பரியத்தை பாதுகாப்பதிலும், மாநில மொழியை வளர்ப்பதிலும் என்றும் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தெரிவித்த கருத்துக்கு, அகில இந்திய வானொலி நிலையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Read more: http://viduthalai.in/headline/90074-2014-10-27-10-01-04.html#ixzz3HLMeKinw

தமிழ் ஓவியா said...

நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்பவர்மீதான நடவடிக்கை என்ன?

காந்தியாரைப் படுகொலை செய்ததற்குப் பதிலாக பண்டித ஜவகர்லால் நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரள ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் (17.10.2014) பி.ஜே.பி. பிரமுகர் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதியுள் ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்.

இதன்மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? காந்தியார் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அதேவேளையில், அவரைவிட நேருவைக் கொன்றிருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

தங்களுக்கு விரோதமான கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டவர்களைக் கொல்லுவது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதும் இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தியார் கடவுள் நம்பிக்கையற்றவரல்ல, மத மறுப்பாளரும் அல்ல; இவற்றில் எவரையும்விட அதிகமான நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டவர்! அதேநேரத்தில், இந்து - முசுலிம் பிரச்சினையில் சிறுபான்மை மக்கள் பக்கம், நியாயத்தின் பக்கம் நின்றவர்.

எனவே, மதவெறிக் கண்கொண்டு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்றனர்.

அப்பொழுது ஆஙகிலேய அரசு சொன்னது, எங்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட காந்தியாரை நாங்கள் காப்பாற்றிக் கொடுத்தோம் - பாதுகாத்துக் கொடுத்தோம்; உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்களே, படுகொலை செய்துவிட்டீர்களே? என்று அவர்கள் எழுப்பிய அந்த வினாவுக்கு, இதுவரை உலக நாடுகளுக்கு இந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், அன்று தலைகுனிந்த இந்தியா இன்றுவரை தலைநிமிர முடியாமல் வெட்கத்தால் நாணிக்கோணித்தான் நிற்கிறது.

அதற்குப் பின்னால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்தம் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலோடு பல்லாயிரக்கணக் கானோர் ஒன்றுகூடி ஒரு பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

உலகமே கைகொட்டி ஏளனமாகச் சிரித்தது. இதன்மூலம் இரண்டாவது தடவையாகவும் இந்தியா மேலும் தலையை தொங்கப் போடும் அநாகரிக நிலையை அடைந்தது.

உலகம் இகழ்ந்த நிலைக்குப் பிறகாவது - அறிவு பெற்றனரா? நல்ல புத்தி ஏற்பட்டதா? நேருவைக் கொலை செய்திருக்கவேண்டும் என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்களே - அதுவும் நேருவின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடுவது குறித்த சிந்தனைகள் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில், இப்படியொரு ஆபாசப் புத்தியை, அநாகரிக மூர்க்கக் குணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது - வெட்கக்கேட்டின் எல்லையாகும்.

காந்தியாரைவிட நேருமீது பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் இருப்பதற்கு முக்கிய காரணம், தன்னை ஒரு சனாதனவாதியாகக் காட்டிக் கொள்ளாததோடு, பல நேரங்களில் அவற்றைச் சாடவும், விமர்சிக்கவும் தயங்காதவர் நேரு. அந்தக் கோபம் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இந்துத்துவா கூட்டத்தை விட்டு அகலவில்லை என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் எழுதப்பட்ட கட்டுரை வெளிப் படுத்துகிறது.

கேசரி என்ற ஏடு - ஒரு காலகட்டத்தில் பாலகங்காதரர் என்ற இந்துத்துவா வெறிபிடித்த ஒரு தலைவரால் நடத்தப்பட்ட, ஆரிய நஞ்சை, வர்ணாசிரம தர்மத்தைக் கக்கிய ஏடாகும்; இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநிலத்தில் இந்துத்துவா வெறியைச் சாகும்வரை விசிறி விட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர் திலகர் ஆவார்.

பிளேக் நோய் அம்மாநிலத்தில் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாய் சாவின் மடியில் விழுந்த அந்த நேரத்தில், வெள்ளை அரசாங்கம் பிளேக் நோய்க்குக் காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட முனைந்தது. அப்பொழுது இந்தத் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

எலி என்பது நமது இந்து மதக் கடவுளான விநாயகர் வாகனம் - வெள்ளைக்கார மிலேச்சர்!

நமது மதக் கலாச்சாரத்தில் தலையை நுழைக்கிறார்கள் என்ற வெறியை இந்துக்களிடத்தில் கிளப்பியவர். அந்த வெறியின் காரணமாக வெள்ளைக்கார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த திலகரும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதும் உண்டு.

அந்தக் கேசரி பெயரைக் கொண்ட ஏடு இப்பொழுது கேரளாவில் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப்பட்டு வருகிறது. அதில்தான் காந்தியாருக்குப் பதிலாக நேரு படுகொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

இந்தப் பத்திரிகை மீதோ, கட்டுரையை எழுதியவர் மீதோ கேரள அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவுக்கும் கேரளாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே!

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பவேண்டும். சட்டப்படி கட்டுரையை எழுதிய குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கவும் வுற்புறுத்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/90078.html#ixzz3HLMwdbgf

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி...

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
_ (குடிஅரசு, 4.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/90077.html#ixzz3HLN5LbBY