Search This Blog

13.10.14

சோதிடம் என்பது அறிவியலா?மயில்சாமி அண்ணாதுரை

கேள்வி: சோதிடம் என்பது அறிவியலா? வானத்தில் உள்ள கோள் களைச் சோதிடர்கள் தங் களுக்குச் சாதகமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்களுடைய கருத்து என்ன?


பதில்: இந்தக் கேள்விக்கு என்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாவது வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கி றேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதி டம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பாவிற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார். என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக்கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது. நான் எஸ்.எஸ். எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்கு பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத் திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ். எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னுடைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சோதிடமும், வானியலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரி யில்லை என்பது என்னு டைய கருத்து.


மாணவர்களின் கேள் விகளுக்கு அறிவியலாளர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அளித்த பதில்தான் இது. -(வளர்தொழில் அக்டோபர் 2014)


சோதிடம் பற்றி வாய் கிழியப் பேசும் பேர் வழிகள் இதற்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லத் தயாரா?


சோதிடத்தைநம்பி எஸ்.எஸ்.எல்.சி.யோடு கல்விக்கு மூடு விழா நடத் தியிருந்தால், பெருமைப் படத்தக்க ஒரு தமிழர் அறிவியலறிஞர் உலகிற்குக் கிடைத்திருப்பாரா?


இவர் ஏதோ தப்பிப் பிழைத்தார் - சோதிட மூட நம்பிக்கைக்குப் பலியாகித் தங்கள் படிப்பைப் பறி கொடுத்தோர் எத்தனை எத்தனைப் பேர்!


வானவியல் வேறு Astoronomy)   சோதிடம் (Astrology) வேறு என் பதைக் கூடப் புரிந்து கொள் ளாமல், புரிந்து கொண்டும் மக்களின் மூடத்தனத்தை முதலாக்கி கேடு கெட்ட முறையில் பணம் சம்பாதிக் கும் ஊடகக்காரர்களைத் தண்டிக்க வேண்டாமா?


சோதிடத்தின் யோக்கி யதைக்கு ஓர் எடுத்துக் காட்டுப் போதும்.


கிருத்திகை நட்சத்திரத் தில் உள்ள ஏழு நட்சத்திரங் களும், ஏழு முனிவர்களின் மனைவியர்களாம்.


அம்பா, துலா, நிதத்நீ, அப்யந்தி, மேகயந்தி, வர்ஷ யத்தி, சுபனிகாவாம். விஞ் ஞானம் என்ன கூறுகிறது?


கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட ஆயிரம் மடங்கு ஒளி கொண்டது. அதன் குறுக்களவு மட்டும் 90 லட்சம் கி.மீ. என்கிறது. விஞ்ஞானம்  இவற்றை முனிவர்களின் பெண்டாட் டியாக்கிய பார்ப்பனீயப் பேதைமையை என்னென்று புகல்வதோ!


------------- மயிலாடன் அவர்கள் 12-10-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

17 comments:

தமிழ் ஓவியா said...

ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?


- குடந்தை கருணா

கேள்வி: ஸ்லீப்பர் செல்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?

கிளிமூக்கு அரக்கன் பதில்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தமிழகத்தில் வர்ணபேதம், மனுதர்மம், மதம், ஜாதி போன்றவற்றை வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. ஆனால் பெரியார் காலத்தில் அவற்றை எல்லாம் வெளிப்படையாக முன்னெடுத்த ராஜாஜி தமிழகத்தில் அரசியல் செல்வாக்கற்றுப் போனதை நினைவில் கொள்க. ஆக பெரியாருக்குப் பிறகு தமிழக வெகுஜன மக்களை என்ன செய்தும் கூட மனுதர்ம மக்களாக மாற்ற முடியவில்லை. பற்றாக்குறைக்கு வெளிப்படையாக பஜகோவிந்த பெருமைகளைப் பேசினால் அருவருப்பாக வேறு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் பஜகோவிந்தங்கள் வேறு வழியே இல்லாமல் கையில் எடுத்ததுதான் ஸ்லீப்பர் செல் தாக்குதல்.

இந்த ஸ்லீப்பர் செல் பஜகோவிந்தங்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. எந்த கட்சிக்காரராகவும் தங்களை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சேஷாத்ரி, ஷர்மா, ஸ்வாமி, பாண்டே போன்ற கிரந்தப் பெயர்களை தங்கள் பெயருடன் மறக்காமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். பதிப்பகம், பத்திரிக்கை, இணையதளங்கள் நடத்துவார்கள்.

மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆட்சி யாளர்களை தூக்கிப்பிடிப்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஆனால் தங்களை நடுநிலையாளர் களாக வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் பேசுவார்கள். சினிமா பேசுவார்கள். ஷங்கரைப் புகழ்வார்கள்; பாலாவை புகழ்வார்கள் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய அறிஞர் உண்டா என்பார்கள்? சிந்து பைரவிக்கு பின்னர் தான் இளையராஜா இசைக் கலைஞர் ஆனார் என்று புகழ்வார்கள். வட மொழி கிரந்தத்தை வலியுறுத்திக் கொண்டே தமிழ் இலக்கணம் கூட எழுதுவார்கள். திடீரென அறிஞர் அண்ணா சொக்கத்தங்கம் என புகழ்வார்கள். திமுக , திராவிட இயக்கத்தையே குலைத்துவிட்டது என வருந்துவது போல் பேசிவிட்டு ஆர்.எஸ்.எசுக்குக் கொடி பிடிப்பார்கள். காவிப்பண்டாரங்கள் உயிரோடு கொளுத்த விரும்பிய காமராசரை புகழ்வார்கள். இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக கல்வியில் வேண்டும் என்பார்கள், விவரம் புரியாமல் நீங்களும் கைத்தட்டுவீர்கள்.

சாமானியர்களுடன் சாமானியராக இருக்கும் இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், பேச்சு வாக்கில் விபி சிங் என்று சொல்லிப்பாருங்கள். அலறுவார்கள். அலறலை அதிகப்படுத்த உங்களுக்குப் பெரியாரை பிடிக்கும் என்றும் சொல்லுங்கள். சமகாலத்தில் ஜீவா படம் பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள்.

இவ்வகை ஸ்லீப்பர் செல்கள், திமுக- _ அதிமுக என வந்தால் அதிமுகவையும், அதிமுக- _ பாஜக என வந்தால் பாஜகவையும் முழுமூச்சாக ஆதரிப்பார்கள்.

இந்த ஸ்லீப்பர் செல்களின் சிறப்பம்சம் நம் ஆட்களையே நமக்கெதிராக பேச வைத்து நம்மை செல்லரிக்க வைப்பதுதான் . திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறைக்கு அதன் எதிரிகள் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் எதிரிலேயே இருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஸ்லீப்பர் செல்கள் நம்மிடையே கலந்து, நமக்காகவே பேசுவது போல நடித்து, அவர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றவர்கள்.

ஸ்லீப்பர் செல்களை புறந்தள்ளுவதும் சுலபம் தான். பெரியாரின் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு விழிப்பாக இருந்தால் சமூகவியல் உரிமை மீறல் தாக்குதல்களில் இருந்து நான் தப்பித்ததைப் போல நீங்களும் தப்பிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page-2/89163.html#ixzz3Fz45EIkp

தமிழ் ஓவியா said...


நாட்டுக்குத் தேவை இந்துத்துவா கல்வி முறையாம்!

ஆர்ப்பரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

புதுடில்லி, அக்.12-_ இந்துத்துவம் என்பது இந்தியர்களின் உரிமையே! யார் ஏற்றுக் கொண்டா லும், மறுத்தாலும் இந்தி யாவில் உள்ள அனை வரும் இந்துத்துவத்திற்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தான்; உடனடியாக இந்துத்துவா கல்வி முறையைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மோகன் பகவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த இந் துத்துவ என்சைகிளோ பீடியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத் தில் பேசிய மோகன் பகவத் மீண்டும் இந்தியர் கள் இந்துக்கள் என்ற பிரச் சினையைக் கிளப்பியுள்ளார். 10.10.2014 அன்று தனி யார் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய மோகன்பகவத் இந்தியா வில் உள்ள மக்கள் அனை வரும் இந்துத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்,

இது அவர்களின் உரிமை, ஏதோ ஒரு காலத்தில் அந்நிய மதத்தவரின் கொடுமைக்கு ஆட்பட்டு நமது மக்கள் பிற மதங் களை பின்பற்றத் துவங் கினர். இருப்பினும் அவர்கள் இந்துக்களே, இந்துக்கள் என்பதற்கு ஏன் பலர் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். எனத் தெரியவில்லை. இந்துமத வரலாற்றின் வேரை அனைவரும் அறிந்து கொள்ள வேண் டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும். தற் போதுள்ள கல்விமுறை யில் இந்துத்துவத்தின் மதிப்பு காணாமல் போய் விட்டது. இது நம்மை பல நூறு ஆண்டுகளாக ஆண்ட அந்நிய ஆட்சியா ளர்களினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.

இந்துத் துவத்தை வளர்க்க வேண் டுமானால், முதலில் மாணவ மாணவியர்களி டம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இளைய வயதினரிடையே நமது இந்துத்துவத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க இதை விட எளிதான வேறு வழி இருப்பதாகத் தெரிய வில்லை. அந்நிய மதங்கள் கல்வி என்ற போர்வை யில் தான் அவர்களது மதத்தை நமது நாட்டில் பரப்பியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது பாடத் திட்டத் தில் நமது இதிகாசங்கள், மற்றும் மகாபுருஷர்களின் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கற்பதன் மூலம் எதிர் காலத் தலைமுறைகள் சிறந்த முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள், நமது அரசு இந்துத்துவக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.

இந்துத்துவக் கல்வி முறையை உலக நாடுகள் பல மறைமுகமாக நடை முறைப்படுத்தி வரு கின்றன. ஆனால் அக் கல்வி முறை தோன்றிய நமது நாட்டில் அது அழியும் நிலையில் உள் ளது. இருப்பினும் தற் போது பாரம்பரிய கல்வி அமைப்புகள் ஒரு சில அந்தக் கல்வி முறையை இன்றளவும் காப்பாற்றி வருகின்றன.

விரைவில் நாடுமுழுவதும் அக்கல்வி முறை நடைமுறைப்படுத் தப்படும் என்று மோகன் பகவத் கூறினார். மேலும், இந்துத்துவம் குறித்த உலகப் பார்வை யில் இதுவரை எழுதி வரும் பொய்யான கருத் துக்களை மறுத்து புதிய பதிப்புகளை இந்துத்துவ என்சைக்ளோ பீடியா விரைவில் கொண்டுவர முன் வர வேண்டும், இதன் மூலம் மீண்டும் இந்துத்துவம் புத்து ணர்ச்சி பெறும் என்றும் கூறினார். இக்கூட்டத்தில் பரமார்த்த நிகிகேதன் ஆசிரமத் தலைவர் சித் தானந்த சரஸ்வதி, மற்றும் பல் வேறு மடக் கல்வி நிறுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89167.html#ixzz3Fz4KWOXW

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு


கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!

Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q

தமிழ் ஓவியா said...

" பெரியார்ஒரு கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்லோகம்

பூஜை நேரத்தில் மட்டுமல்ல; வீட்டில் சமைக்கும்போதுகூட ஸ்லோகங்களைச் சொல் லிக் கொண்டே வேலை செய்யலாமாம் - இதனால் பலன் கிடைக்குமாம்.

அது சரி, பிள்ளைகள் பாடம் படிக்கும் பொழுது எப்படி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? சமைக்கும் போது ஸ்லோகம் சொல் லிக் கொண்டிருந்தால் கவனம் தப்பி உப்பும், காரமும் அதிகமாகி மருத் துவமனையில் சேர வேண்டியதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/89212.html#ixzz3G4tccVQM

தமிழ் ஓவியா said...

அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவனுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/89191.html#ixzz3G4uUPAcE

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக் கூடாது.

அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள் ளுங்கள்.

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்குச் சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89193.html#ixzz3G4vCG9cI

தமிழ் ஓவியா said...

அனைத்து வயதினரையும் தாக்கும் மறதி நோய்


என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.. மறந் துட்டேன்... மன்னிச்சுக்கோ.. இன்னிக்கு உன்னோட பிறந்தநாள் இல்ல... மறந்தே போயிட்டேன்... ஆமா... இங்கே எதுக்கு வந்தோம்?

இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு... ஆனா, யாருன்னு தெரியலையே..! எப்போதாவது மறதி வருவது இயல்பானதுதான். ஆனால், அடிக்கடி இதுபோல் எதை யாவது மறந்துவிட்டு அவஸ்தைப்படுகிறீர்களா? இது மறதி நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம். வயதானால் மறதி வரத்தானே செய்யும்? என்கிறீர்களா?

இது வயதானவர்கள் சமாச்சாரம் அல்ல..! இருபது வயதில் இருக்கும் இளம் பருவத்தினருக்கும் உள்ள பிரச்சினை. 20 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில் தான் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நேரத்தில் ஒருவர் தெளிவான சிந்தனையோடும் நடவடிக்கைகளோடும் இருந்தாக வேண்டும். மறதி நோய் ஏற்பட்டால், இரண்டு திறன்களும் பாதிக்கப்பட்டு தான் போய் சேர விரும்புகிற இடத்தை ஒருவரால் அடைய முடியாமல் போகலாம். மறதியினால் நிறைய இழப்பீடு வருவதை தவிர்க்கவேமுடியாது என்று எச்சரிக்கை செய்கிறார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சிறீனிவாசன்.

சின்ன வயதிலேயே எதனால் மறதி வருகிறது? மறதி ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பது உட்பட மேலும் பல சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் அவர்.

எல்லாமே தலைமைச் செயலகம்தான்...மறதி ஏன் வருகிறது என்பதற்கு முன்னால் மறதி என்றால் என்ன வென்று அறிவியல்பூர்வமாகக் கொஞ்சம் பார்ப்போம். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது என எல்லாவற்றையும் பதிய வைத்துக் கொள்வது நமக்குத் தலைமைச் செயலகமாக இருக்கும் மூளையில்தான்.

அடுக்கடுக்காக மூளையில் பதிவாகும் இந்த கோப்புகளை நமக்குத் தேவைப்பட்டபோது எடுக்க முடியாவிட்டால் அதைத்தான் மறதி என்கிறோம். இதற்குக் காரணம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் செயல்களில் ஏற்படும் பாதிப்புதான்.

மறதியில் மூன்று வகை

இளைஞர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு அம்னீசியா என்று பெயர். இந்த அம்னீசியாவில் மூன்று வகைகள் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறிந் திருக்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப் படுவது முதல் வகையில்தான். இந்த பாதிப்பு ஏற் பட்டால் இளைஞர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும்.

சம்பவங் களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது. பழைய நிகழ்வுகள் நினைவிருக்காது. பெயர்களில் குழப்பம் இருக்கும். போன பாதையில் திரும்பி வருவதற்குக் கூட சிரமப்படுவார்கள். கடைகளில் சில்லறை வாங்க மறப்பது முதல் செல்பேசியை வைத்துவிட்டுத் தேடுவது வரை பல அன்றாடப் பிரச்சினைகள் அடங்கிய மறதி இது.

மனதில் இருப்பதை வெளியில் சொல்லத் தடுமாறுவார்கள். இரண்டாவது வகை Retrograde Amnesia. இது விபத்துகளால் ஏற்படும் மறதி நோய். சினிமாக்களில் பார்த்திருப்போம், தலையில் அடிபட்டவுடன் பழைய நிகழ்ச்சிகளை மறந்துவிடுவார்கள். மூன்றாவது வகை Transient Global Amnesia. கொஞ்சம் வினோதமானது.

இயல்பாக ஒருவருடன் பார்த்து, பேசி, பழகுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே தான் பேசிக் கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாது.

பேசியதும் நினைவிருக்காது.இது தவிர சமீபத்தில் டிஜிட்டல் டிமென்ஷியா என்ற மறதி நோயும் இளைஞர்களிடம் பரவி வருகிறது. தேவைக்கதிகமாக அலைபேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று மின்னணு சாதனங் களைப் பயன்படுத்துவதால் வரும் மறதி நோய் இது.

இந்தப் பயன்பாடுகளைக் குறைத்தாலே டிஜிட்டல் டிமென்ஷியாவுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். இந்தக் காரணங்கள் தவிர மரபியல் காரணங்களாலும் மனநலக் கோளாறுகளாலும் சிலருக்கு மறதி நோய் வரலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

மறதி நோய் பொதுவாக 20 வயது முதல் 90 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வயதானவர்களுக்கு வருகிற மறதிநோய்களை அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விடும்.

அதனால்,கண்டுபிடிப்பது சுலபம். ஆனால், இயல்பான நடவடிக்கைகளோடு இருக்கும் இளைஞர்களின் மறதிநோயை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தங்களைத் தாங்களாகவே உன்னிப்பாகக் கவனித்தாலோ அல்லது அருகில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டினால் ஒழிய இதைக் கண்டறிவது கொஞ்சம் சிரமம்.

மறதி நோய் இருப்பதாக சந்தேகப்பட்டால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது மனநல நரம்பியல் சிகிச்சை நிபுணரிடமோ சென்று ஆலோசனை செய்து கொள்ளலாம்.

அவர்கள் சில பரிசோதனைகளை செய்து மறதி நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். மறதி நோயைக் கண்டுபிடித்த பிறகு, நரம்பியல் சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89192.html#ixzz3G4vMrZH7

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குணம் நிறைந்த முருங்கைக் கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக் குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணி லடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். இனிமேல் தவற விடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/89186.html#ixzz3G4vW1H7c

தமிழ் ஓவியா said...

அயோத்திபற்றி ஜெயேந்திர சரசுவதி முசுலிம் மதகுருவுடன் பேச்சுவார்த்தையாம்!


லக்னோ, அக்.13- அயோத்திப் பிரச்சினை குறித்து முசு லிம் மத குருவுடன் ஜெயேந்திர சரசுவதி சந்தித்துப் பேசி யுள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி 11.10.2014 சனிக்கிழமை அன்று அகில இந்திய முசுலிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செய லாளர் காலித் ரஷீத் ஃபிராங்கி மஹாலி என்பவரை சந் தித்துள்ளார்.

சந்திப்பின்போது அயோத்திப் பிரச்சினை யான ராமஜென்ம பூமி மற்றும் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பேயி வேண்டுகோளின்படி முசுலிம் அமைப்பினருடன் ஜெயேந்திர சரசுவதியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட வேண்டும்

மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினையாக இருப்பதால் இரண்டு மதத்தவரிடையே பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெயேந்திர சரசுவதி கூறி யுள்ளார்.

மஹாலி கூறும்போது, ஜெயேந்திர சரசுவதி புதிதாக பேசவேண்டும் என்று கேட்டு தொடங்கி உள்ளார். மேலும், அமைதியான முறையில் பிரச்சினையின்மீது சுமுகத்தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறினார். முதலில் இந்து, முசுலிம்களிடையே நம்பகத்தன்மையை உரிய அளவில் ஏற்படுத்தவேண்டிய தேவை உள்ளது என்று கூறும் மஹாலி, ஜெயேந்திர சரசுவதியிடம் கூறும்போது, தயவு செய்து வெளிப்படையாக மக்களிடம் பேசுங்கள்.

லவ் ஜிகாத், பசுவைக் கொல்வது, மதரசா என்றெல்லாம் பலவாறாக தவறானவைகளை பிரச்சாரம் செய்து வரு வதால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. நீங்கள் உயர்ந்த அளவில் மதிக்கப்படும் மதச் சின்னமாக இருக் கிறீர்கள், உங்கள் வார்த்தைகளை மக்கள் கேட்பார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று ஜெயேந்திர சரசுவதியிடம், மஹாலி கூறி உள்ளார்.

ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தனி அறையில் இரண்டுபேரும் மொழி பெயர்ப்பாளர்களின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஜெயேந்திரசரசுவதி, மஹாலியிடம், தாம் இசுலாம்மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். மஹாலியின் உரையாடல்களை உருது கவிஞர் அல்லாமா இக்பால், கடவுள் ராமன்குறித்து புகழ்ந்து கூறும்போது, இந்துக்களின் இமாம் என்று கூறியுள்ளார். ராமச்சந்திரன் ஜியை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். பிற மதங்களையும், மதக்குருக்களையும், மதக்கடவுள்களையும் மதிக்கும்படி இசுலாம் கூறியுள்ளது என்றார்.

அயோத்திப் பிரச்சினையில் 30.9.2010 அன்று கூறப் பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரு தரப்பிலும் ஏற்க வில்லை. சட்ட நடைமுறைகளையும் இருதரப்பினரும் ஏற்கவில்லை. சட்டப்படியான தீர்வு அதிக காலம் எடுக்கும் மற்றும் இரு தரப்புத் தலைவர்களும் நீதிமன்றத்துக்கு வெளியே தேவையான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கருதினார்கள்.

முசுலிம் (AIMPLB) தலைவர் மவ்லானா ராபெ ஹசன் நட்வியை 2002ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஜெயேந்திர சரசுவதி சந்தித்துள்ளார். அப்போது பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்ட அனுமதிக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் இருக்கும் நிலை மாறாமல் இருக்கவேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பும் இந்துக்கள் மற்றும் முசுலிம்களால் மதிக்கப்படவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தை ஓராண்டாக தொடர்ந்தது. ஆனால், ஜெயேந்திர சரசுவதியின் திட்டத்தை ஏற்க முடியாது என்று ஜெயேந்திர சரசுவதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

1500 சதுர மீட்டர் பரப்பளவுகொண்டுள்ள அயோத்தியா நிலப்பகுதியை மூன்று பாகங்களாகப் பிரிக்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்புக் கூறியது.

Read more: http://viduthalai.in/page-8/89213.html#ixzz3G4vfvIFK

தமிழ் ஓவியா said...

உண்மையைக் கக்கினார் சோ

கேள்வி: கொள்கையை விளக்கும் நோட்டீஸ் கொடுத்து வாக்குக் கேட்ட காலம் மாறி, ரூபாய் நோட்டைக் கொடுத்து ஓட்டுக் கேட்கும் காலம் வந்து விட்டதே?

பதில்: கடவுள் முன் வேண்டுகோள் வைக்கிற பக்தன் கூட ரூபாய் நோட்டு வைக்கிறான். தன்னு டைய வேண்டுதல் அப்போது ஆண்டவனிடம் சரியாக விளக்கப்படும் என்று நம்புகிறான். வேண்டுகோளுக்கே விளக்கம் தருகிற ரூபாய் நோட்டு, கொள்கைக்கு விளக்கம் தராதா, என்ன?

(துக்ளக், 15.10.2014 பக்கம் 9

என்னதான் இந்துத்துவா பேசினாலும், கடவுள், மதம், பக்தி என்று வாய் நீளம் காட்டினாலும் கடைசியில் பகுத்தறிவாளர் கருத்துப் பக்கம்தான் வந்தாக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், வேண்டுதல், வேண்டாமை இலான் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் தாசில்தாரிடம் கையொப்பம் வாங்க கீழே உள்ள வரை காணிக்கை கொடுத்துக் கவனிக்க வேண்டும் என்பது போலத்தான். கடவுள் கடாட்சம் பெறவும் கவனிக்க வேண்டியவர்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் எல்லாம் - பேரம்தான்! கடவுளே நான் உனக்கு இதைத் தருகிறேன் - நீ எனக்கு நான் கொடுக்கும் பட்டியலை நிறைவேற்றிக் கொடு என்பதெல்லாம் சர்வ சாதாரணம் தானே!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

என்று அவ்வையார் பாடுவதைக் கூட எடுத்துக் கொள்ளலாமே!

நான் உனக்கு நான்கு அயிட்டங்களைத் தருகிறேன். நீ எனக்கு மூன்று அயிட்டங்களைத் தருவியாம் என்பது வியாபாரம், பேரம்தானே!

ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதும், கடவுளுக்கு நோட்டு (காணிக்கை) கொடுப்பதும் ஒன்றே என்று காலங்கடந்தாவது ஒப்புக் கொண்ட சோ வகையறாக் களின் அறிவு நாணயத்தை வரவேற்கிறோம். இது தொடரட்டும்.

Read more: http://viduthalai.in/page-3/89274.html#ixzz3G7vRff9w

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 14: உலகத் தர நாள்


ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி நடைபெறும் நிலையில் நிலையில் தரக்கட்டுப்பாடு பற்றிய பொதுத்திட்டத்தை வரையறை செய்வது முக்கியமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக அய்.எஸ்.ஓ என்ற அமைப்பு 1974-ஆம் ஆண்டு ஜெனி வாவில் துவங்கப்பட்டது.

அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய தர நிர்ண யங்களைப் பொருள்களுக்கு ஏற்படுத்தி உலக நாடு களிடையே தடையின்றி வர்த்தகம் வளர வழி செய்வதே முக்கிய குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பில் வளர்ந்த நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தன. படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினராகி இருக்கின்றன. 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உலகத் தர நிர்ணய நிறுவனத் துக்கு ஒத்துழைப்பைத் தந்து தரக்கட்டுப்பாட்டை, விதிகளுக்கு உட்பட்டு கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.

அய்.எஸ்.அய். தர முத்திரையிடப்பட்ட பொருள் களை வாங்குவதால் நுகர்வோருக்கு என்ன பயன்?

கலப்படப் பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களால் ஏற்படும் விபத்துகள், ஆபத்து களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் என்பதால் விற்பனை அதிகமாகவும், விரைவாகவும் இருக்கிறது. இதனால், அதிக உற்பத்தி, குறைந்த விலை சாத்தியமாகிறது.

மத்திய அரசு நுகர்வோர் நலன் கருதி, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களையும், விபத்து ஏற்படுத்தும் பொருள்களையும் கட்டாய அய்.எஸ்.அய். தர முத்திரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தரக்கட்டுப்பாடு மூலம் கிடைக்கும் நற்பயன்களை நுகர்வோர் உணர்வது இல்லை. நுகர்வோர்களிடம் தர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், உற்பத்தி யாளர்களிடையே தரம் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தை உண்டாக்கவும் உலகத் தர தினத்தில் கருத்தரங்கள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய தலைமைச் செயலகம் டில்லியிலும், கிளைஅலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சண்டிகார், சென்னை போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

அக்மார்க் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட நம்நாடு உணவுப்பொருட்களில் தனித்துவம் கொண்ட முத்திரையை அய்.எஸ்.ஓ.வின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தி வருகிறது. தரம் மற்றும் தூய்மைக்கு அடையாளமாக அக்மார்க் அடையாளம் இருக்கிறது. பொதுமக்களாகிய நாம், தரக்கட்டுப்பாட்டில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். முன்பு கூறியது போல் கலப்படம் என்பது முழு சமூகத்தையே பாதிக்கும் ஒன்றாகும்.

லாபம் மற்றும் பேராசை காரணமாக கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைச் செய்யும் நபர்களைப் பற்றி தெரிந்தால் உடனே மாநகராட்சி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கவேண்டும்.

அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து அக்டோபர் 14 அன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் இந்தியாவில் தனியார் நடத்தும் சில கல்வி நிறுவ னங்கள் மட்டும் விளம்பரத்திற்காக இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலத்தில் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாமும் பெற்று மற்றவர்களுக்கும் இவ்விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/89250.html#ixzz3G7vo1REf

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page-2/89238.html#ixzz3G7wJPqt5

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை


முஸ்லிம் பெண்கள் கல்விக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனத்தை எதிர்த்துத் துணிவாகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கும், குழந்தைகள் நல உரிமை என்னும் கண்ணோட்டத்தில் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதை ஓர் இயக்கமாக நடத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பற்றிய திசையில் இந்நிகழ்ச்சி ஓர் உரத்த சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது - எழுப்பிடவும் வேண்டும். இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. (ஜூன் 1) இதையொட்டி, மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழி லாளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரகண்டில் 17.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம், ராஜஸ்தானில் 4 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பை சேர்ந்த தாமஸ் சாண்டி கூறும்போது, 14 வயதுக்கு உட்பட்டவர்களை, வீடுகளி லும் ஓட்டல்களிலும் வேலைக்கு வைக்கத் தடை உள்ளது. இருந்த போதிலும் ஏராளமான குழந்தைகள் ஓட்டல்களிலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற் சாலைகளிலும் வேலைக்கு விடப்படுகின்றனர் என்றார்.

"உலகிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 40 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இதில் தலைநகர் தில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதுடன் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள்" என குழந்தைகள் தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "51 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் படிக்க வேண்டிய அய்ந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். இந்த ஆய்வில் நாற்பத்தேழு சதவிகித முதலாளிகள் சட்டத்தை அறிந்திருப்பதாகவும் ஆனாலும் அது அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதிலிருந்து தடுப்பதில்லை" எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. குழந்தைத் தொழி லாளர்களை மீட்கும் நோக்குடன் செயல்படும் இந்த அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இதை வெளி யிட்டது. இந்த ஆய்வறிக்கை மூலம் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அதாவது எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தேனீர்க் கடைகள், உணவகங்கள் அல்லது சிறிய கடைகளில் பணிபுரிவ தாகவும், விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற இடங்களில் பணி நெறிமுறைகள் குறைபாடுகள் முழுவதுமாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டு களுக்குள் அடிப்படைக் கல்வியை அளிப்பது என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. இந்தச் சட்ட திட்டம் மட்டும் சரியாகச் செயல்படுத்தப்பட்டு இருக் குமானால், இந்தக் குழந்தைத் தொழிலாளர்ப் பிரச்சினை என்ற கேள்வியே எழுந்திருக்காது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச் சினையில்கூட வருணாசிரம தர்மத்தின் ஆணி வேர் ஆழமாக ஊடுருவியுள்ளதை யார்தான் மறுக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

எந்தப் பகுதி மக்களிடத்தில் கல்வி வளர்ச்சி யில்லையோ அந்தப் பகுதியிலிருந்துதான் இந்த குழந்தைத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிறார்கள்.

சமூக நீதி முழுமையான அளவு கிடைக்கும் ஒரு சூழலில்தான், கால கட்டத்தில்தான் இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்னும் கொடுமைக்கு முடிவு ஏற்பட முடியும்.

இன்னொரு வகையில் இது ஒரு மனித உரிமை மீறலும்கூட! குழந்தைகள் நல உரிமைகளுக்காகப் பாடுபட்டு நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
இது ஒன்றும் சாதாரணப் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; வெறும் சட்டப் பிரச்சினையும் அல்ல. பல்வேறு விதமான சமூகப் பிரச்சினையின் கலவையாகும். சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான பிரச்சினை - என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் உலகக் குழந்தைகள் நாளை ஒரு சடங்காக அனுசரிப்பதால் உருப்படியான விளைவுகள் ஏற்படப் போவதில்லை.

உயர் ஜாதி, உயர் பணக்கார வீட்டில் பிறந்தாலும் சரி, கீழ் ஜாதி என்று கீழே தள்ளப்பட்ட குடும்பங்களில், வறுமைக் கோட்டுக்கும்கீழ் கிடந்துழலும் குடும்பங் களில் பிறந்தாலும் சரி, குழந்தை குழந்தைதான்! குறிப்பிட்ட குடும்பங்களில் பிறந்து விட்டதால் அவர்களின் தலையெழுத்து அப்படித்தான் என்று நினைக்கும் மனப்பான்மைக்குக் கல்லறை எழுப்பப்பட வேண்டும். குழந்தைகள் நலனுக்குப் பாடுபட்டவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனை எங்கும் பாய்ந்து பரவட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/89239.html#ixzz3G7wUeSeV

தமிழ் ஓவியா said...

‪‎பார்ப்பனர்_குறித்து‬
‪‎தந்தை_பெரியார்_அவர்களின்_கூற்று‬ :
" ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும் ; ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டு தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே. ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய் டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியதுபோலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டு பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட, ஆரிய சாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் சாதிகளாக அடிமைகளாக மிதித்து நடத்துகிறார்கள்.
(குடியரசு 8-5-1949)
‪அண்ணல்_அம்பேத்கர்_அவர்களின்_கூற்று‬ :
" தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பானிய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்தள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போலத்தான் தோன்றுவார்கள். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். "
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?, பக்கம் 215)

T.K. Ramasubramanian Iyer said...

சர் சி.வி. இராமன் தமிழரா? பார்ப்பனர் இல்லையா? வேணும்னா தமிழர் வேண்டாம்னா பார்ப்பனர்.. நல்லாதான் brain wash பண்ணி வெச்சுருக்கான் உங்களயெல்லாம் அந்த தாடிக்காரன்