Search This Blog

30.7.14

பெரியாரின் தாக்கம் பெரியவாளிடம்!

 
தந்தை பெரியாரின் கொள்கையும், பிரச்சார மும் பாமர மக்கள் மத்தி யில் மட்டுமல்ல; படித்தவர் கள் மத்தியிலும் அம்பாகத் தாக்கியிருக்கிறது. ஏன்? 

முற்றும் துறந்த முனிபுங்க வர்களையும், காவி தரித்த கனவான்களையும்கூடக் கச்சிதமாகவே தாக்கி களைப்பாறி இருக்கிறது.


மடத்துக்குள்ளிருந்த என்னை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்திய வர் தந்தை பெரியார் என்று மனம் நிரம்பக் கூறியவர் மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள்.


மறைந்த காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியாரையே தாக்கி இருக்கிறது என்று சொன்னால், சுலபத்தில் யாரும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.

உண்மை என்னவென் றால் மேனாவில் (பல்லக் கில்) முன்னால் நான்கு பேர் களும், பின்னால் நான்கு பேர்களும் தோளில் சுமந்து அதில் பவனி வந்த அந்தச் சங்கராச்சாரியார், அதனை விலக்கி விட்டு, காலால் நடந்து செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தி யவர் தந்தை பெரியார்.


சக்தி விகடன் பொறுப் பாசிரியராக இருந்த ரவி பிர காஷ் இதோ எழுதுகிறார் படியுங்கள்! படியுங்கள்!!


பெரியவாள் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) ஒருமுறை மேனாவில் சென்று கொண்டிருந்த போது, வழியில் மேடைப் போட்டு பெரியார் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர் கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல, சொகுசாக உட் கார்ந்து கொண்டு போகி றாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனி தன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என் றால் எல்லா சுகங்களையும் துறக்கவேண்டும்; இப்படி அடுத்தவர் தோளில் உட் கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்று முழங்கிக் கொண்டி ருப்பது பெரியவாளின் காதுகளில் விழுந்தது. அவ் வளவுதான், மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லிவிட்டு, இறங்கி விட்டார் பெரியவர்.


அவர் ஏதோ சொல்றார், சொல்லிவிட்டுப் போறார், அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ!


உங்களைச் சுமந்து கொண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம் என்று மடத்தைச் சேர்ந்த வர்கள் பெரியவாளிடம் கெஞ்சியிருக்கிறார்கள். இல்லை, அவர் சொல்றது தான் சரி. சுகத்தைத் துறக் காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போக ணும்னாலும் நடந்துதான் போகப் போகிறேன் என்று தீர்மானமான முடிவெ டுத்து விட்டார்.


கடைசி வரையிலும் அவர் அந்த முடிவிலிருந்து மாற வில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந் தன. இது வெளிவந்த இதழ்  சக்தி விகடன் - எழுதியவர் அதன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் - அதற்குச் சாட்சியமாகக் கூறப்பட்டவர் 40 ஆண்டு காலம் சங் கராச்சாரியாரிடம் சேவை செய்த இலட்சுமி நாராய ணன் என்பவர் - மாங்காட் டில் இருக்கக்கூடியவர்.

பெரியவாளிடமும்கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியாரன்றோ!      

----------------------- - மயிலாடன்   அவர்கள் 30-07-2014 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து

ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட அழைப்புக் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங் கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப் பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

சு.சாமி வகையறாக்கள்

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவி லேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டி யளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன.

தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது. வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நட வடிக்கை எடுத்து வந்தது.

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தி யாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டில்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம். தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங் கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கை யில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார் என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று வெளிவந்த ஒரு தகவல்:


தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 18 முதல் 20 முடிய மூன்று நாள்கள் இலங்கை யில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற் பார்களாம்!

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் இலங்கைக்கு அதன் நட்பு நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காகவாம். அய்.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, அது விசாரணையைத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இந்தக் கருத்தரங்கம் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இராணுவ அதிகாரிகள் குழுவோடு பி.ஜே.பி. சார்பில் சுப்பிரமணியசாமி, தலைமையில் ஒரு குழுவும் செல்லு கிறதாம். (தொடக்கமுதல் ஈழப் பிரச்சினையில் எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியராக இவர் நடந்துகொண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!)

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி யில்லை என்று பி.ஜே.பி. அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

காங்கிரஸ் பரவாயில்லை!

நிலைமைகளைப் பார்க்கும்பொழுது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி பல மடங்கு மேலானது என்று நினைக்கக் கூடிய வகையில், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தங்கக் காப்பு அணிவித்து - மிச்ச சொச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்திட ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறோம் என்று ராஜபக்சேவிடம் மனு போடும் ஒரு நிலையை பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதோ என்று கருத ஏராள இடம் இருக்கிறது.

இந்தப் பி.ஜே.பி.தான் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும்; மோடி வந்தால் ஈழப் பிரச்சினையில் முழு வெற்றி தமிழர்களுக்குக் கிடைக்கும் என்று பீரங்கி முழக்கம் செய்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல விழி பிதுங்கிய நிலையில், விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

தவறு செய்த அந்தத் தோழர்கள், வெட்கத்தை மறந்து விட்டு, வீதிக்கு வந்து போராட முன்வரவேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களும் கட்சிக் கோடுகளைத் தாண்டி ஒன்று பட்டு எழுந்தால்தான் இன்றைய பி.ஜே.பி. முரட்டுக் காளையை அடக்க முடியும்!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!

என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை

30.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84944.html#ixzz390YZuqy1

தமிழ் ஓவியா said...


குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!



எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு, ஜாதி வேலையைவிட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கிய கடமையாகும்..

_ (விடுதலை, 9.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/84950.html#ixzz390Zgm34Y

தமிழ் ஓவியா said...

கோசாலைக்கு 500 கோடி ரூபாயா?



கோசாலைக்காக 500 கோடி ரூபாயை மத்திய பி.ஜே.பி. அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் அறிக்கை யிலே பசு பாதுகாப்புப்பற்றிக் கூறப்பட்டு இருந்தது. இந்துத்துவாவின் முக்கியமான கோட்பாட்டில் கோமாதாவுக்கு முக்கிய இடம் உண்டு அல்லவா!

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.

காளை மாட்டைக் கொல்லலாம்; உண்ணலாம்; அதேநேரத்தில் பசுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?

உணவுப் பிரச்சினை என்பது தனி மனிதன் பழக்க வழக்கம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

உலக முழுவதும் அனுமதிக்கப்பட்டது மாட்டுக்கறி! இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் அதிக மக்களால் உணவுக்குப் பயன்படுத்தப்படுவது மாட்டுக் கறியே! உலகில் மலிவான சத்துணவு இதுவே!

இன்னொரு கேள்வியும் உண்டு. இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையில், பசுவைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ளார்களே - அவர்களின் முன்னோர்கள் ஆரியர்கள் - பார்ப்பனர்கள் பசு மாமிசம் உண்ணாத வர்களா? எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அலை அலையாக அள்ளிக் கொட்ட முடியுமே!

இவர்களின் முக்கிய இதிகாசமான மகாபாரதத்தி லேயே இதற்கு ஆதாரம் உண்டே!
துரோணபருவமும் (67-1-2) சாந்தி பருவமும் (27-28) என்ன கூறுகின்றன?

அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருக்கின்றனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன.

பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப் பனர்கள் வந்ததால் சமாளிக்க முடியாமல் போய் விட்டதால், அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருப்பதால், தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாக மகாபாரதம் கூறுகிறதே!

ஸ்மிருதிகளுள் மிக முக்கியமாகப் பார்ப்பனர்கள் மதிக்கும் மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை யாவும் பிரஜாபதியால் (உற்பத்திக் கடவுள்) ஜீவன்களுக்கு உணவுக்காகப் படைக்கப்பட்டவையேயாகும்; அவரது கட்டளைக்குட்பட்டதாகும். நடமாடுவனவும், நடமாட் டமல்லாது அசைவற்றிருப்பனவுமான எல்லாமுமே ஜீவப் பிராணிகளுக்கு உணவானவையே!
ஒருவன் ஒரு மிருகத்தை உண்ணும்போது அது தனக்குரிய உணவாகக் கருதுவானாகில் அவன் பாவம் செய்தவன் ஆகான். சில பிராணிகள் உண்பனவாக வும், மற்றவை அவற்றுக்கு உணவாகவும் இருப்பதே படைப்பின் தன்மை என்கிறது மனுதர்மம்.

பிதுர்க்களுக்கு (இறந்துபோன முன்னோர்களுக்கு) சிரார்த்தம் செய்து, பிண்டம் போடுவதற்கான பொருள்களின் தார தம்மிய அம்சங்களைப்பற்றி மனுதர்மம் என்ன கூறுகிறது தெரியுமா?

காலஞ்சென்ற பிதுர்க்கள் ஓராண்டுவரை பசு மாமிசம், பால் இவற்றைக் கொண்டு அல்லது பாற் பொங்கலைக் கொண்டு திருப்தி அடைகின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளதே!

கோமாதா கோமாதா என்று கூக்குரலிடுகிறார்களே, இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் தெய்வாம்சமாக நடமாடும்(?) பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன? பசுவைக் கோமாதாவாகப் பூஜிக்காத வெளி நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு என்ன?

அமெரிக்கா 77.26 கிலோ, கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தெ.ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.18 கிலோ, பிரிட்டன் 52.50 கிலோ, பிரான்சு 52.16 கிலோ, சுவீடன் 49.69 கிலோ, இத்தாலி 49.40 கிலோ, இஸ்ரேல் 44.46 கிலோ; பசு ஒன்று நாள் ஒன்றுக்குக் கொடுக்கிறது; இந்தியப் பசு சராசரியாக கொடுக்கும் பாலின் அளவோ வெறும் 2.29 கிலோதான்.

இந்த இந்துத்துவாவாதிகள் கொண்டாடும் கோமா தாவின் தகுதி இவ்வளவுதான்.

தமிழ் ஓவியா said...

இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பொலி காளைகளைக் கொண்டு வந்து, அவற்றின்மூலம் இந்தியக் கோமாதாவின் வயிற்றில் கருத்தரிக்கச் செய்து, அதன்மூலம் அதிக பால் கிடைக்கச் செய்ய சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது.

நம் கோமாதாவை மிலேச்ச நாட்டுக் காளைகள் சினையாக்குவதுபற்றி என்ன கருத்து இவர்களுக்கு?

பயன்பாடு என்று எடுத்துக்கொண்டால்கூட, பசுவை விட எருமை அதிக பால் கொடுக்கிறது. இந்து மதத்தவர் களின் கண்களில் எருமை மட்டம் - பசு உசத்தியோ!

விவசாய நிலங்கள் அருகிவரும் காலகட்டத்தில் மாமிச உணவு என்பதுதான் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்க முடியும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

பார்ப்பனர்கள் சைவம் பேசியதெல்லாம் கவுதமப் புத்தர் பார்ப்பனர்களின் யாகக் கலாச்சாரத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த பிறகே - மாற்றத் திற்கு ஆளானார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

கோஸவம் - பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம்,

அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொன்று நடத்தும் யாகம்! ஏன், மனிதர்களைக் கொன்று கூட யாகம் நடத்தியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர் கள் - அந்த யாகத்தின் பெயர்; புருஷ யஜ்ஞ என்பதாகும்.

இத்தகையவர்கள்தான் கோமாதாக்களைக் காப் பாற்றப் போகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page-2/84951.html#ixzz390ZvahkD

தமிழ் ஓவியா said...


இந்நாள் -30.7.1955


இந்நாள் -30.7.1955

ஆகஸ்ட் கிளர்ச்சி பற்றி பெரியார் அறிக்கை

ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய யூனியன் கொடி கொளுத்தப்படும் என்கின்ற திராவிட கழக தீர்மானம் சம்பந்தமாக சென்னை அரசாங்க முதல் மந்திரி காமராஜர் அவர்களது அறிக்கையைப் பார்த்தேன்.

அவ்வறிக்கையானது நான் விரும்பியபடி மத்திய அரசாங்கத்திற்கு ஆகவும், சென்னை அரசாங்கத்திற்கு ஆகவும் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள் தரும்படியாகவிடப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணருகிறேன். ஆகவே நான், எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமுல் நடத்துவத்தில் அரசாங்கத்தாரால் இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாக மக்கள் தெளிவாகக் கருதும்படி நடந்து கொள்ளுமோ, அல்லது இவ்வளவு நாள் நடந்து கொண்ட மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும் செய்கைக்கும்) சம்பந்தமில்லாத மாதிரி நடந்து கொள்ளுமோ என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதால் முதல்மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்ப கொடி கொளுத்துவதை தற்காலிக மாகவே ஒத்திவைத்து திராவிட கழத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொதுமக்களையும் ஆகஸ்டு 1ஆம் தேதியன்றைக்கு கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

மற்றபடி அவ்வறிக்கையில் கொடி கொளுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய படுத்தி இருப்பதுபற்றி நானோ பொதுமக்களோ எவ்வித ஆச்சரியமும் படத் தேவையில்லை. மக்கள் அரசாங் கத்தினுடைய கொடியைக் கொளுத்தினால் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கு மென்று எந்தப் பயித்தி யக்காரனும் நினைத்துக் கொண்டிருந்திருக்க மாட்டான். அடக்கு முறையினுடையவும் தண்டனையினுடையவும் கடைசி எல்லையை எதிர் பார்த்துத்தான் திராவிட கழகம் கொடி கொளுத்த தீர் மானம் செய்திருக்கிறது. இதை உலகறியவும் செய்திருக் கிறது. ஆதலால் அந்த சொற்களுக்காக அறிவாளி களுக்கு நான் ஏதும் சமாதானம் சொல்லத் தேவை இல்லை.

என்னுடைய இந்த கொடி கொளுத்தும் தீர்மானத் திற்கு எதிர்ப்பாக வீணர்கள் செய்த ஆர்ப்பாட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல் செயலில் இறங்கமுன் வந்து மடிகட்டிப் பெயர் கொடுத்த மொழிப்பற்றும் ஆண்மையும் மானமும் துணிவும் கொண்ட பதினாயிரக் கணக்கான வீரசிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும் உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டு கொடிகொளுத்தும்படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க சிரம் வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

வீண் பொய் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும் மனமாறப்பாராட்டுவதுடன் உறுதி மொழிக்கேற்ப நடந்து கொள்ளுமென்றே நம்புகிறேன்.

- ஈ.வெ.ரா

Read more: http://viduthalai.in/page-3/84962.html#ixzz390alsNZ3

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி! மராட்டிய முதல்வர் சாடுகிறார்


மும்பை, ஜூலை 31_ முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி யாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாய கத்துக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறிய தாவது:

மோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். குஜராத் மாநி லத்தில் மோடி சர்வாதி கார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர் வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத் தின்போதே பல விவகா ரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்க வில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளா தாரம், சமூகப் பிரச் சினைகள் பற்றியோ ஆர். எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370ஆ-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.

மோடி அரசு என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய் வது போல் தன்னை சிறப் பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியா தையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மக்கள் பெற் றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/85012.html#ixzz396Jqp7It

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பார்வையில் சமஸ்கிருதம்


சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.

(- மறைமலை அடிகள், தமிழர் மதம் நூலில் - பக்கம் 24)

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தரே சமஸ்கிருதம் பற்றி இவ் வாறு கூறியுள்ளார்! ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Read more: http://viduthalai.in/e-paper/85011.html#ixzz396JypgpJ

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிரசவம்

இன்று ஆடிப்பூரம் விழாவாம் - அம்பாளுக்கு வளைகாப்பாம்!

ஒரு கேள்வி: வளைகாப்பு நடந்தால் பிரசவம் (டெலிவரி எப்பொழுது என்ற கேள்வி எழாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/85016.html#ixzz396K7wdXG

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/85017.html#ixzz396KJzJwU

தமிழ் ஓவியா said...


80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்

தமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும், பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

தீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.

இது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்!

மாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும்! தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.

- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை

Read more: http://viduthalai.in/page-2/85021.html#ixzz396KSOrNj

தமிழ் ஓவியா said...





செய்குதம்பிப் பாவலர்
தோற்றம்: 31.7.1874- மறைவு: 13.2.1950

மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.

அக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர்.

அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/85027.html#ixzz396KxwwE6

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு


ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றிய பேசுவார் கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட் டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.

1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!

திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளி களில் இந்தியைக் கொண்டு வரப் போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).

6,7,8 ஆம் வகுப்பு களில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக் கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.

அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப் பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.

ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப் பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ் சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம் அம் மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.

படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக் கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.

கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலை யில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.

இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலை யங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத் திக் காட்டினார்.

அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறி வித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85062.html#ixzz39CAIBBMu

தமிழ் ஓவியா said...

சமூகநீதியின் சாதனை!

சென்னை, ஆக.1- கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAaT1ic

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆண்டாள்

ஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.

ஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை! கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/85070.html#ixzz39CAyXH00

தமிழ் ஓவியா said...


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது? உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது?

உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி

சென்னை, ஆக.1- சாலைகளில் மத விழாக் கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமா னங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைகளை ஆக்கிரமிப் பதனால் எண்ணிலடங் காத வகையில் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தர விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப் பட்டுள்ளது.

பொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராள மான சாலைகள், தெருக் கள் மதரீதியான செயல் களின் பேரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக் கின்றி அஞ்சத்தக்க வகை யில் செயல்படுகின்றன.

அண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாய கர் சிலைகள் அமைக்கப் படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல் துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடை பாதைகளுக்கும் உரிமை யாளர்கள் அல்ல. அலுவல கரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண் மூடித்தனமான செயல் களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில் களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தாக அமைகின்றன. மற்ற வர்களும் பக்தி உள்ளவர் களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்ப தில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.

மனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப் படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின்மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வாக அளிக்கப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/85063.html#ixzz39CBG5K3R

தமிழ் ஓவியா said...


இவர்கள் யார்? யார்? மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன?



டில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குறிப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.

மேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.

காங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/85069.html#ixzz39CBevJBi

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/85072.html#ixzz39CBwPfwe

தமிழ் ஓவியா said...


கோரத் தீக்குத் தண்டனை!


பத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.

இதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே!

பள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.
சத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.

பள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.

இதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்?

அந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம்! (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).

ஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்?

பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.

ஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன்? ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.

பாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.

இதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து!

கடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

இதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா?

என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்?

அதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது? மறுபரி சீலனை செய்க!

Read more: http://viduthalai.in/page-2/85073.html#ixzz39CC52fTZ

தமிழ் ஓவியா said...


உண்மையான உடைமை (சொத்து) எது?

மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது, பணத்தைத் தான் செல்வம் என்று குறுபொருள் கொள்கின்றனரே தவிர, அதைவிட விரிவானது - அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்!

வள்ளுவர் கருத்து எதில் அடங்கியுள்ளது என்று பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, சிந்திக்கின்ற நேரத்தில், அவரது குறளில் உடைமை என்பவைகளை, மனிதர்க்கு இருக்க வேண்டிய பல பண்பு நலன்களையே (அழியாத செல்வம் - உடைமை என்று கூறுகிறார்!

1. அடக்கம் உடைமை
2. அருள் உடைமை
3. அறிவு உடைமை
4. அன்பு உடைமை
5. ஆள்வினை உடைமை
6. ஊக்கம் உடைமை 7. ஒழுக்கம் உடைமை
8. நாண் உடைமை
9. பண்பு உடைமை
10. பொறை உடைமை

குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள உடைமைகள் மேலே காட்டப்பட்டுள்ளவை.

ஒரு இலட்சிய மனிதன் - சிறந்த மனிதனின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும்; அப்படி இருந் தால் அவனை வெல்லுதல் யார்க்கும் அரிதினும் அரிதாகும்!

மனிதர்களில் எவ்வளவு உயரச் சென்றாலும் - பட்டம், பதவி, புகழ், பணம், பெருமை போன்ற நிலைகளில் - அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கத்தினை அணியாய்க் கொண்டால் அவர்களின் வாழ்வு என்றும் சிறந்த வாழ்வாகும்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது ஊரறிந்த ஒரு எளிய பழமொழியல்லவா? மனித அறிவுக்குத் தரும் முன்னுரிமை யைவிட அடக்கத்திற்கே வள்ளுவர் முதல் இடம் - முன்னுரிமையைத் தந்துள்ளார் என்பது மனிதர்கள் அறிவால் அளக்கப்படுவதைவிட, அதில் சிறந் தோங்கி அவர்கள் இருந்தபோதிலும் அத்தகையவர்களை அடக்கத்தால் அளக்க வேண்டுமென்று ஒரு அருமை யான வாழ்வியல் நியதியையும் கூறுகிறார்!

சொத்துக்கள் சேர்க்க மாளாது அலைந்து திரிபவர் எவராயினும், அவர் உய்ய, அவர்தம் வாழ்வு உயர சேர்க்க வேண்டிய பெரும் சொத்துகள் மேற்காட் டிய பத்து உடைமைகளே என்பதைப் புரிந்து; அவைகளைச் சேர்த்து, காத்து, பயன் பெற்று உயர்தலே ஒப்பற்ற பெரு வாழ்வு ஆகும்!
அடக்கத்தின் பெருமை, அடங்க அடங்கவே உயரும். எளிமையும், அடக் கமும் எவரிடம் ஏராளம் உள்ளதோ, அவரை வெல்லல் யார்க்கும் அரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் 124)

தன் நல்லொழுக்க நிலையிலி ருந்து மாறுபடாமல், அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய உயர்ந்த தோற்றப் பொலிவு, தன்மை அடிப் படையில் மலையின் உச்சியைக் காட்டிலும் மிகவும் பெரியதாகக் கருதப்படும்

குடும்பம், நிறுவனம், இயக்கம், கல்வி அமைப்புகள், ஆட்சி இவை களில் பெரும் பொறுப்பில் இருப்பவர் களில் பலர் - இதனைக் கடைப் பிடிக்கத் தவறுவதாலேயே - அதாவது அடக்கமின்மை, ஆடம்பரம், அதி காரப் போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நம் கண் எதிரிலேயே காண்கிறோமே!, இல்லையா? எனவே அடக்கத்தை, பிரியா உடைமையாகக் கொண்டு வாழுங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/85075.html#ixzz39CCFDkoJ

தமிழ் ஓவியா said...


இந்நாள்


ஆகஸ்டு 1ஆம் தேதி 1956

இராமன் படத்தை கொளுத்த ஆணையிட்ட நாள்

இராமன் கடவுள் அல்ல, இராமாயணக் கதையின் பாத்திரமான இராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியனல்ல எனக்கருதுபவர்கள் யாரும் நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையைக் கருதுபவர்கள் யாரும் இராமன் படத்தை கொளுத்தலாம். இந்த உரிமையை மக்களுக்கு உணர்த்துவ தற்காகத்தான் ஆகஸ்டு 1ஆம் தேதி இராமன் படம் கொளுத்தும் கிளர்ச்சி நாளாகக் கொண் டாட தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொள் ளப்பட்டார்கள்.

அரசாங்கமும் நல்ல வாய்ப்பாக மக்கள் உரிமையில் பிரவேசிக்காமல் இராமன் படம் கொளுத்துவதன் மூலம் குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படக்கூடாது என்று கருதி பொதுக்கூட்டத்தில் கொளுத்தக்கூடாது என்று கருதி, பொதுக்கூட்டத்திற்கும் அது சம்பந்தமான ஊர்வலத்திற்கும் தடை விதித்தது. என்றாலும் உரிமையுள்ள காரியம் நடைபெற்றால் கலவரம் உண்டாகும் என்று கருதினால், அதற்கு அரசாங்கம் பாதுக்காப்பு செய்ய வேண்டுமே ஒழிய காரியத்தைத் தடை செய்ய அல்ல என்பது என் கருத்து தெரிவித்து ஆணையிட்டு வெற்றி பெற்ற நாள்! இந்த நாள்!!

Read more: http://viduthalai.in/page-3/85079.html#ixzz39CE17oE5

தமிழ் ஓவியா said...


நகைப்பிற்கு இடமான நவராத்திரி


செப்டம்பர் அல்லது அக்டோபர் தமிழ் மாதங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்ற புரட்டாசி பெயரிலேயே ஒரு புரட்டு- என்று சொல்லப்படுகின்ற காலத்து மகாளய அமாவாசை என்ற இரவில் நிலா இல்லாத நாளில் அவாள் மொழிப்படி திதியில் மூதேவிகள் - அதாவது துர்கா, சரசுவதி மற்றும் இலட்சுமி ஆகிய இம் மூதேவிகளும் கொலு இருக்கின்றனராம்.

கொலுவிருப்பது ஏனோ?

மகிடாசுரன் என்பவனைக் கொல்ல அனைத்து தேவர்களாலும் ஆகவில்லையாம். மகிடாசுரனுக்கு எருமைத் தலையாம். இவனை ஏன் கொல்ல வேண்டுமென்றால் இவன் தேவர்களுக்கு கொடுமை இழைத்து வந்தனராம். எனவே அவனை தொலைத்துக் கட்ட தேவர்களால் கையாலாகாது போகவே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய அனைத்து தேவர்களும் மேற்கண்ட இவர்களது மூதேவியரையும் தூண்டி ஏவி விட்டனராம்.

எனவே இவர்கள் அந்த மகிடாசூரனைக் கொல்ல கொலு விருந்தனராம். எல்லாருக்கும் எல்லா வரங்களும் தரும் தேவர்களுக்கு இது கையால் ஆகாமல் போனதேனோ? இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ? அது எப்படியோ இருக்கட்டும்.]

அசுரர் யார்?

முதலில் அசுரர் யாரெனப் பார்ப்போம். திராவிடர் அல்லது தமிழர்தான் அவர்களால் - தேவர்களால் அதாவது ஆரியர்களால் அதாவது பார்ப்பனர்களால் அசுரர் என்றும் இராட்சசர் என்றும் இன்னும் பல பெயர்களாலும் இழிவாக எண்ணி அழைக்கப்பட்டனர்.

இது வரலாற்று ஆதாரமுடையது. ஆரியர்களால் விரும்பி அருந்தி வரப்பட்ட சுராபானம் என்ற மதுவை மறுத்தவர்களே அசுரர் என அழைக்கப்பட்டனர். சுராபானம் என்ற பானத்தை அருந்தியவர்களே சுரர் அதாவது தேவர் - ஆரியர் - பார்ப்பனர்.

மகிடாசுரன் என்ற திராவிட மன்னனுக்கும் ஆரிய மன்னர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டங் களுக்காகவே இந் நவராத்திரி இருக்க வேண்டும். தேவிகளை அதிலும் பெண்களை விட்டே இவர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளனர். தங்கள் போர் வெற்றிக்காக இம் மூதேவிகளும் இரவுகளில் ஒன்பது இரவுகளில் கொலு விருந்தனரென்றால் பகலில் என்ன செய்தனர்; பகலெல்லாம் படுத்து தூங்கினரோ?

ஆரியர்கள் குருக்கள்களாகவும் மற்றும் பல வழிகளிலும் கூட்டிக் கொடுத்தும், மன்னர்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுத்தும், அடிமைப் படுத்தியும் பணிய வைத்தும், மன்னர் தம் ஆணைகளாலும் குடி மக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தும் எல்லோரையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம்ப வைத்துள்ளனர்.

இந்த மூதேவிகளுக்கும் ஒன்பது இரவுகள் என்றால் மைசூர் மன்னருக்கு ஒரு இரவு சேர்த்து தசரா! இவர் கடைசிநாளில் யானைமேல் அம் பாரியில் படைகள் புடை சூழ எங்கோ ஓர் மூலையில் அம்பு எய்கிறாராம். இன்னும் மற்ற மன்னர்கள் எப்படியோ?

ஆலயங்கள் பலவற்றில் உலா மூர்த்தி சிலையெடுப்புகள். ஊர் கடைசியிலோ எங்கோ ஓர் மூலையில் அம்பு சேர் வைகள் என்ற பெயரால் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் இன்னொரு அசுரனும் வன்னி யாசுரன் என்ற பெயரால் குட்டி போடப்பட்டு விடு கிறான். வன்னிமரம் என்ற ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றோ அல்லது அதன் தழைக் கொத்தோ சிறிது கொண்டு வந்து கட்டி வைக்கப்பட்டு சாமியின் பிரதிநிதி குருக்கள் ஒருவர் அம்பு எய்கிறார். மனிதன் இறந்தால் மீண்டும் வருவதில்லை; ஆனால் இந்த அசுரன்கள் ஆண்டுக்காண்டு சாமிகளுக்கு எதிரிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர்.

மற்ற தனி வேடிக்கைகள்

மற்றும் இப்புரட்டாசியில் சனி பிடித்தல், காலையில் நாராயணமூர்த்தி என பக்தி பிச்சையெடுத்தல்கள், திருப்பதி போன்ற மலைகளுக்குச் செல்லல், கரூரில் உள்ள தாந்தோணி மலைக்கு பக்தர் படையெடுப்பு! ஏற்ற பேருந்து வசதி இல்லாத காலத்தில் டிக்கெட் இல்லாத வரும் பக்தகோடிகளால் இரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தச் சனிக்கிழமைகளில் மட்டும் நட்டம் ஏற்படும்.

கேட் கதவுகள் எல்லாவற்றையும் முழுதும் திறந்து விட்டு கரூர் இரயில் நிலைய அலுவலர் பக்த கோடிக் கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் இப்பொழுது எப்படியோ? நாமக்கல்லுக்கருகில் உள்ள நைனாமலைப் படிகள் நெட்டுக்குத்தானவை. தவறி விழுந்தால் வை குண்டம் நிச்சயம்.

படி வாசல்களுக்கு நெடுக டியூப் லைட்டுகள், பந்த நெருப்பெடுத்து பாரெல்லாம் ஒளி காட்டும் பெருமாள் குடி கொண்டுள்ள நைனாமலைப் படிக்கட்டுகளுக்கு டியூப் லைட்டுகள் ஏன்? இன்னும் நவராத்திரி நகைப்பிற் கிடமானவை என்னென்னவோ?

பா.வீ.சாது

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFUMjGb

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFdeHHc

தமிழ் ஓவியா said...


ஆரியர் - திராவிடர்


சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.

********************

பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?

இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.

இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.

- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFnPudE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன் மொழிகள்

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

*********************

கழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

*********************

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.

ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.

இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFyc6ei