Search This Blog

17.5.14

பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள்! கூறுவதும் ஒரு பார்ப்பனரே!


பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள்! கூறுவதும் ஒரு பார்ப்பனரே!
கலாச்சாரத்தை என்றுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்!!

தி இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது

“The Big paradox” எனும் தலைப்பில் டி.எம்.கிருஷ்ணா என்பவர் தி இந்து ஆங்கில ஏட்டில் (10.5.2014) எழு தியுள்ள கட்டுரையில் பார்ப் பனர்கள் தங்கள் கலாச் சாரத்தில் பழக்க வழக்கங் களில் அதி தீவிரப்பற்றாளர் கள்; பார்ப்பனர் அல்லா தாரை வித்தியாசமாகவே பார்க்கக் கூடியவர்கள் என்றெல்லாம் விரிவாக எழுதியுள்ளார். நரேந்திர மோடியை பார்ப்பனராக அறிவிப்பதாக சு.சாமி கூறி யது சரியானதல்ல, ஆகக் கூடியதல்ல என்பது குறித் தும் கட்டுரை விவரிக்கிறது.

பார்ப்பனர்களுக்கு என்ற ஒரு அடையாளம் உள்ளது. எடுத்துக்காட்டாக அவர்களுக்குப் பெரும் பான்மை மக்கள் விரும்பும் இசையில் விருப்பமிருக் காது, ஒரு சிலர் மாத்திரமே விரும்பும் கர்னாடக இசை யில் அதீத ஈடுபாடு கொண் டிருப்பார்கள். ஒரு நிறு வனத்தை எடுத்துக் கொண் டால் அங்கு உச்ச அதிகாரங் களைக் கொண்டவர்களாக பார்ப்பனர்கள் இருப்பார் கள். அதே போல் முக்கிய மான அனைத்துத்துறை களிலும் பார்ப்பனர்கள் கட்டாயம் இருப்பார்கள். யாரை நியமிக்கவேண்டும் என்பதை பார்ப்பனர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

பார்ப்பனர்கள் உணவும் சமூகத்தில் உயர்ந்த வகை உணவாக கருதப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கொள்கை உண்டு அதில் வேறு எந்த நபரும் சமூகத்தாரும் நுழைய முடியாது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் ஆண் பெண் இருவருமே பார்ப்பனீய கொள்கையில் அதிதீவிர பற்றுள்ளவர்கள். அது அவர்களின் பழக்க வழக்கங்களிலோ, விழாக் களிலோ, கலாச்சாரங் களிலோ எள்ளளவும் மாற மாட்டார்கள். வேத காலத் தில் இருந்து வந்த கலாச் சாரம் மிகவும் சிறந்த கலாச் சாரம் என்று அதைப் பாது காக்கும் நோக்கில் அவர் களின் ஒவ்வொரு செயலும் இருக்கும். பார்ப்பன கலாச் சாரத்தை அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்வதையே தங்களின் தலையாய கடமையாக செய்வார்கள். அதே நேரத் தில் எவ்வளவு நெருக்க மான நண்பர்களாக இருந் தாலும் தங்களில் கலாச் சாரத்திற்குள் விடாமல் அவர்களை தனி ஆளாக நிற்கவைத்துவிடுவார்கள். உதாரணத்திற்குப் பார்ப் பன நன்பர்களின் வீட்டிற்கு நாம் செல்லலாம் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் நாம் பார்ப்பனர் அல்லாதவர் என்று அறிந்ததும் அவர் களின் செயல்களில் பெரி தும் மாற்றம் தெரியவரும்.

எடுத்துக்காட்டாக வீட்டில் உள்ளவர்களுக் கும் நம்முடன் வந்திருந்த பார்ப்பனர்களுக்கும்  தம்ள ரில் தண்ணீர் தருவார்கள், பார்ப்பனர்கள் அல்லாத நமக்குத் வேறு குவளை யிலோ அல்லது கண்ணாடி பாத்திரத்திலோ தருவார் கள். நாம் வெளியே போகும் வரை அந்த தம்ளரை எடுக்க மாட்டார்கள். முக்கியமாக பெண்களை தங்களது சமையலறைக்குள் அவ் வளவு சாமானியத்தில் அனுமதிப்பதில்லை.

இப்போது முரண்பாட் டிற்கு வருவோம்

சுப்பிரமணிய சாமி கூறி யது போல்  பிற பிற்படுத் தப்பட்ட நபரை பார்ப் பனராக எப்படி மாற் றுவது? வேதகாலத்தில் இருந்து தாங்கள் காப்பாற்றி வரும் மரபை உடைத்து பிறிதொருவரை பார்ப் பனர்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்த மனநிலைக்கு எப்படி மாறுவார்கள்?  நரேந்திர மோடி தொடர்பில் இந்த பாகுபாடு மேலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அரசியலில் ஊடகங்களின் மூலம் பிரபலப்படுத்தப் பட்ட ஒரு நபரை பல நூற்றாண்டுகளாக பாரம் பரியத்துடன் கட்டுக்கோப் பாக காத்துவரும் வருணா சிரமப்  படியின் முதல் இடத்தில் ஒருவரை அதி லும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த ஒரு வரை கொண்டுவருவதும் வெறும் விளம்பரத்தளவில் நின்றுவிடும்.

பார்ப்பனீயம்  என்பது எந்த விதத்திலும் தங்களு டைய பழக்க வழக்கங் களை விட்டுக்கொடுக்காத ஒன்று. பார்ப்பனர்கள்: தங்களின் பார்ப்பனீயக் கொள்கையில் சிறிதும் பிசகாமல் நடப்பவர்கள். அதே நேரத்தில் விழிப் புடன் இருந்து தங்களின் பார்ப்பனீயக் குடையில் எந்த ஒரு சிறு ஓட்டையும் விழாமல் பார்த்துக் கொள் பவர்கள். கொள்கை ரீதி யாகவே பார்ப்பனர்கள் எந்த ஒரு இடத்திலும் பிறரை தங்களுடன் அய்க்கியமா வதை கடுமையாக எதிர்ப் பார்கள், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் அவர்களின் எதிர்ப்புத் தன்மை வீரியத்துடன் இருக்கும்

பார்ப்பனர்களுக்கு என்று ஒரு தனித்துவமிக்க சட்டதிட்டங்கள் அவர் களாகவே உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். இதில் எந்த இடத்திலும் மோடிக்கென்று வளைந்து கொடுக்க அவர்களின் சட்ட திட்டம் ஒப்புக்கொள்ளாது. பாரதீய ஜனதாவில் பல பார்ப்பனத் தலைவர்கள் மோடியின் அதிகாரம் கட் சியில் பரவுவதைத் தடுத்தே வந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் மோடியை முன்னிறுத்தக் காரணம் பார்ப்பனரல்லாத ஒரு முகத்தை முன்னிறுத் தும் போது அதிக எண் ணிக்கையில் மக்களின் வாக்கை கவரமுடியும் என்ற ஒரே நோக்கம் தான். மற்றபடி நரேந்திரமோடி என்னும் ஒரு பிற்படுத்தப் பட்ட வகுப்பைச்சேர்ந்த ஒருவரை முக்கியத்துவப் படுத்துவதில் வேறு எந்த காரணமும் இல்லை.
இந்தியாவில் நடுத்தர குடும்பத்துப் பார்ப்பனர் கள் எந்த விதத்திலும் அர சியல் தொடர்பானவை களில் தலையிடுவது கிடை யாது. மேலும் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள இவர்களினால் அரசி யலில் பெரிதும் மாற்றத் தைக் கொண்டுவர இயலாது.  இவர்களின் ஆதரவு பார்ப்பன தலைமைக்குத் தான் கட்டாயம் செல்லும், இவர்கள் எந்த ஒரு வகை யிலும் நரேந்திர மோடியை பிற்படுத்தப்பட்ட ஒருவ ராகத்தான் வகைப்படுத்து வார்கள். எந்தக்காலத்திலும் பார்ப்பனர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தென் இந்தியரான சுப்பி ரமணிய சாமி சொல்வதில் ஒரு உண்மை புலப்படும். 

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிறம் பெரிய இடம் வகிக்கிறது, தென்னிந்தியர்கள் வெண் மையாக உள்ளவர்களை பார்ப்பனர்களாக பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள், அதே நேரத்தில் குணநலத்தி லும் பார்ப்பன சாயல் இருக்கும் என்று நினைப்ப வர்கள்.  மோடி இந்திய அளவில் தனித்தன்மை கொண்ட அர சியல்வாதியாக திகழ்கிறார்.  மக்களை காவி நிறத்தில் பின்னால் நின்று ஏமாற்றும் தந்திரத்தை அவர் முந்தைய கால குஜராத் ஆட்சியின் போது கற்றுக்கொண்டார்.

முக்கியமாக பெரும் பான்மை இந்துக்களின் பாதுகாவலனாகவும் முக் கியமான எதிர்மதத்தவர் களின் (முஸ்லீம்) எதிரியாக வும் தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் தயங்க வில்லை. அதே நேரத்தில்  நாட்டு வளர்ச்சிக்கு முக் கியத்துவம் தருவதுபோல வும் ஊடகங்கள் மூலம் தன்னை காட்டிக்கொண்டு இருக்கிறார்.  இந்துத்துவா அமைப்புகளின் பின்னால் இருக்கும் பார்ப்பனர்கள் சமூகத்தில் ஒத்துவராத முரண்படான இதுபோன்ற வெத்துவேட்டு அறிக்கை களை விட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.
-

யார் இந்த டி.எம்.கிருஷ்ணா?
டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில்  பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து  எழுதிய  A Southern Music: The Karnatik Story   என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயிரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக்கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச்சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
----------------------------------------------------------------------------------------------------------------------------
                            --------------------------"விடுதலை” 16-5-2014

36 comments:

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!

கோவில் விழாவில் தகராறு இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

காரைக்குடியில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகரா றில் 2 இளைஞர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி பர்மா காலனி அழகப்பா நகரில் பெரிச்சியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவில் உரி யடிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதே பகுதியை சேர்ந்த சங்குப்பாண்டி என்பவர் உரிஅடித்தாராம்

அப்போது அவரை பாரி நகரைச் சேர்ந்த விஜயக்குமார் (வயது 24), வெங்கடேஷ் (26) ஆகி யோர் விசில் அடித்துகேலி செய்தனராம். இதில் ஆத் திரம் அடைந்த சங்குப் பாண்டி தனது நண்பர்கள் துரைப் பாண்டி, மணி கண்டன், காளி தாஸ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், வெங்க டேஷ் ஆகியோரைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த இரு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சங்குப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ் ஆகி யோரை கைது செய்தார். துரைப் பாண்டி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார். கோவில் வழிபாடு தொடர்பாக மோதல்!

தம்மம்பட்டியை அடுத்த மேல்வாஞ்சாரை கிராமத்தில் ராமர் கோவில், பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நடுவஞ்சாலை, பழமரத் தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது கோவில் பூசாரி கோவிலின் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களி டையே வாக்குவாதம் ஏற் பட்டது. இந்த நிலையில் நடுவஞ்சாரை, பழமரத் தூர் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த சிலருக்கும், மேல் வாஞ்சாரை கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை யொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதில் சின்னக்குழந்தை, கோவிந்தன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக தம் மம் பட்டி காவல்துறை யினர் 3 கிராமங்களையும் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vlyKuPo

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் பயங்கர மோதல்!

பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.

எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.

இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6

தமிழ் ஓவியா said...

அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc

தமிழ் ஓவியா said...

வலைத்தளம், தொலைக்காட்சிகளின் விபரீதம்


சென்னை போன்ற பெருநகரங்களில் 8 முதல் 13 வயதுக்குள் பட்ட சிறுவர்களில் 75 சதவீதம் பேர் முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களின் வாடிக் கையாளர்களாக உள்ளது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பெற்றோரின் போதிய கண்காணிப்பு இல்லாத பட் சத்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு களின் சங்கம், சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த 8 முதல் 13 வயதுக்குள் பட்ட சிறுவர்களின் 4,200 பெற்றோரிடம் சமூக வலைத் தளங்களின் பயன்பாடு குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது.

அதில் 75 சதவீதம் பெற்றோர், தங்கள் பிள்ளை களுக்கு முகநூலில் கணக்கு உள்ளது தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளனர். சமூக வலைத் தளங்களில் கணக்கு தொடங்க தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் உதவியதாக 82 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள் ளனர்.

தங்கள் பிள்ளைகள், பள்ளி தொடர்பான செயல் பாடுகள், பிறருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு தான் சமூக வலைத் தளங்களை பயன்படுத்து கின்றனர் என நம்புவதாக 78 சதவீதம் பெற்றோர் கூறி யுள்ளனர். தாய், தந்தை இரு வரும் பணிக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தான் சமூக வலைத் தளங்களுக்கு அடிமையாக உள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வயதின் காரணமாக, சமூக வலைத்தளங்களில் நடைபெறும் ஆன்-லைன் உரையாடல் போன்றவற் றால் ஈர்க்கப்படும் சிறுவர் கள், பாலியல் தொடர்பான தவறான வழிகளில் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக் கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சின மிக முக்கியமானது பெற்றோர்கள், ஆட்சியாளர்கள், ஊடகக்காரர்கள், சிந்தனையாளர்கள், சமூக அமைப்புகள் மிகவும் கவலை எடுத்துக் கொண்டு, இதில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

வலைத்தளங்கள் மட்டுமல்ல; சின்னத்திரைகளும், பெரிய திரைகளும், தொலைக்காட்சி விளம்பரங்களும்கூட தீமைகளை விளைவிக்கும் தீவிரத்துடன் தான் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினை ஏதோஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் நிலவுவதாகவும் கூட நினைக்க முடியாது உலகம் தழுவிய பிரச்சினையாக எழுந்து நிற்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேர்ன்போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான்ராபின்சன் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தொலைக்காட்சிகள் முடிவு செய்கின்றன என்கிறார்.

இந்த ஆய்வாளர் சோதனை ஒன்றை மேற்கொண்டார். இரண்டு பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்தார். மாணவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்தார். முதல் பிரிவில் 105 மாணவ - மாணவிகள் - இவர்கள் தொலைக் காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்படாதவர்கள்; இன்னொரு பிரிவில் 120 இரு பால் மாணவர்கள்; இவர்கள் தங்கள் விருப்பப்படி தொலைக்காட்சிகளைப் பார்க்கலாம். இதற்காக அளிக்கப்பட்ட கால அளவு ஆறு மாதங்கள்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இரு அணியினர்களின் செயல் பாடுகளைக் கணித்தார்.

தொலைக்காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப் படாதவர்கள் நடவடிக்கைகளில் இயல்பான போக்குகள், நாகரிகமான நடவடிக்கைகள் தென்பட்டன.

தொலைக்காட்சியே கெதி எனக் கிடந்தவர்களோ பிறரைத் துன்புறுத்துவது, கேலி செய்வது, திட்டுவது, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்ததை அவர் வெளியிட்டார். எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருட காலத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக ஆய்வு செய்தும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியில் இடம் பெறும் ஆபாச காட்சிகள், வன்முறைகள் தான் இப்படியென்றால் இடையிடையே இடம் பெறும் விளம்பரங்கள் அவற்றைவிட மோச மானவை.

எடுத்துக்காட்டுக்கு ஒரு விளம்பரம்; தன் பெற்றோரிடம் ஒரு வீட்டைக் காட்டி; ஒரு இளம்பெண் (டின்ஏஜ்) அப்பா நான் இந்த வீட்டுப் பையனையே கல்யாணம் செய்துக்கப் போறேன். அவுங்க வீட்டுல பேசுங்க என்பார். பெற்றோர்களும் அவ்வாறே சென்று பேசுகிறார்கள்; வீட்டுக்காரரோ அசோக் என்று தன் பையனைக் கூப்பிடுகிறார்கள். அவனுக்கோ 14 வயது; பெண்ணின் வயதோ 18 ஆகி விட்டது. வெட்கத்துடன் பார்த்து நான் காத்துக்கிட்டு இருக்கேன் என்பார். சற்றுத் தள்ளி அய்ஸ்கிரீம் சாப்பிட்டபடி அந்தப் பையன் பிரமாதம் என்பான். ஒரு வீட்டில் பூசப்பட்ட பெயின்ட் பற்றிய விளம்பரம்தான் இது.

ஏதோ விளம்பரம் விட்டுத் தள்ளுங்கள் என்று கூறிட முடியாது. டில்லியில் உத்தம் நகரைச் சேர்ந்தவர் அந்தப் பெண், வயது 22. அந்தப் பெண்ணைத் திடீரென்று காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இன்னொரு சேதி; பக்கத்துத் தெருவில் 14 வயது மாணவனைக் காணவில்லை. இரண்டு வழக்குக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறை சிந்தித்தது.

இந்த இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். என்ன அதிர்ச்சி என்றால் அந்தப் பெண் ஆறு மாதக் கர்ப்பிணி! சின்ன திரையில் வந்த விளம்பரம் இந்த விபத்துக்கு வித்திட்டது.

இந்தப் போக்குக்கு என்னதான் பரிகாரம்? தொலைக் காட்சியையே இல்லாது ஆக்குவதா?வலைதளத்தையே ஒழித்துக் கட்டுவதா? இது நடக்கக் கூடியது அல்ல.

குறிப்பிட்ட வயதில் கல்விக் கூடங்களில் பாலியல் தொடர்பான கல்வியை ஊட்டுவது ஒரு சிறந்த வழியாகத் தோன்றுகிறது; மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் இந்தக் கருத்தினை வெகு காலமாகச் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள்.

பரீட்சார்த்தமாக முயற்சி செய்து பார்த்தால் தான் என்ன?

Read more: http://viduthalai.in/page-2/80350.html#ixzz31vmbOYEW

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!


விடுதலை செய்தி எதிரொலி:

நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:

விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.

இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.

தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.

முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!


விடுதலை செய்தி எதிரொலி:

நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:

விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.

இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.

தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.

முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1

தமிழ் ஓவியா said...

குஜராத்தின் அடுத்த முதல்வராகிறார் ஆனந்திபென் பட்டேல்!

அகமதாபாத், மே 16- பாஜக மத்தியில் ஆட்சி அமைப் பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதையடுத்து மோடிக்கு பதில் குஜராத் முதல்வராக செயல்பட மூத்த அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப் பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மோடி வகித்து வரும் குஜராத் முதல்வர் பதவி மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேலுக்கு அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை ஆனந்திபென் பட்டேல் பெறுகிறார்.

Read more: http://viduthalai.in/page-8/80373.html#ixzz31vnx0UXX

தமிழ் ஓவியா said...


நேர்மையான அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வது கெட்டவாய்ப்பானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து


மதுரை, மே 16- நேர்மையாக செயல்படும் அதிகாரி களை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வது கெட்டவாய்ப்பானது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனச்சரக அதிகாரியாக பணி யாற்றி வந்தவர் ஜெபஸ். இவர் மீது சில புகார்கள் வந்துள்ளதாக கூறி அவரை பணி இடைநீக்கம் செய்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்கு நர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜெபஸ், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜெபஸ், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டியவர்களை தடுத்து நடவடிக்கை எடுத்ததற்காக தன்னை பழிவாங்கும் வகையில் அதிகாரிகள் தன் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய அரசு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அரசு வழக்குரைஞர் ஆவணங்களை தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் படித்து பார்த்தனர்.

அப்போது தான், ஜெபஸ் விவகாரத்தில் அதிகாரி கள் பல்வேறு குளறுபடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது. நியாயமான முறையில் நடந்து கொண்ட ஜெபசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து ஜெபஸ் மீதான பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

நேர்மையான அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வது கெட்டவாய்ப்பானது. நேர்மை யாக செயல்படும் அதிகாரிகளை உயர் அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும். மராட்டிய மாநிலத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சாராய கடைக்காரர் மீது அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை, சாராய கடை நடத்தியவர் அந்த மாநில அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மாநில அர சுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சம்பந்தப் பட்ட அதிகாரியின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கில் மனுதாரரை பழிவாங்க பணி யிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு 2 வாரத்துக்குள் மீண்டும் பணி வழங்க வேண்டும். - இவ்வாறு உத்தர வில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/80373.html#ixzz31vnzjzzU

தமிழ் ஓவியா said...

பேய்க்கு திருமணம்!

பேய்க்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டால் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில் இங்கு இதுவும் நடக்கும் - இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கும்.

ஜாம் நகரில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரதா என்ற 16 வயது பெண்ணுக்கும் வாகனர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜகதீஸ் சந்திரா சோலங்கி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணம் நடக்கும் முன்னரே மணமகள் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டு விட்டது. இத்துடன் கதை முடிந்து விட வில்லை. இனி மேல்தான் ஆரம்பமாகிறது.

இறந்து போன சாரதாவின் ஆத்மா சாந்தியடைய வில்லை. அவள் பேயாக அலைந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் குடும்பத்தினர் நம்பினார்கள்.

அவளுடைய தாயையும், சகோதரனையும் அவளுடைய பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாகவும் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பையனையே திருமணம் செய்துக் கொள்ள விரும்பு வதாகவும் தாயார், சகோதரன் மூலம் அந்த பேய் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தப் பேயைக் கண்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பீதியடைந்தார்கள்.

பேயை வீட்டை விட்டு விரட்டுவதற்கு திட்டமிட்டனர். பேய்க்கு திருமணம் நடத்தி வைத்தால் பேய் கணவனுடன் வீட்டை விட்டு ஓடிவிடும் என்று கருதி பேய் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு சாரதாவின் சிலை செய்யப்பட்டு மண வறையில் சாரதாவின் சிலை அமர்த்தப்பட்டது. மணமகள் வேண்டுமா? எங்கு போவது? உடனே ஒரு கடவுளின் சிலை மணமகனாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள் வேறு யாரும் அல்ல. எல்லாம் வல்ல கோபிகா கிருஷ்ணன்தான். கிருஷ்ணனின் தோழர்களான மற்ற பொம்மைகளும் அலங்காரம் செய்யப்பட்டு மணவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்கள் மந்திரம் ஓதி சாரதா - கிருஷ்ணன் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.

தடபுடலான விருந்தும் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏற்கெனவே சாரதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த ஜகதீஸ் சந்திர சோலங்கியும் வந்திருந்தார் - தன் மனைவியுடன்.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voq0olX

தமிழ் ஓவியா said...


ஏழு மொழிகள்


1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்

7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vozv6Uj

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.



அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு



Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpEPqnP

தமிழ் ஓவியா said...


தேர்தல் முடிவுகள் குறித்து


தேர்தல் முடிவுகள் குறித்து தமிழர் தலைவர்
கலைஞர் அறிக்கை, பேராசிரியர், மு.க. ஸ்டாலின், முதல் அமைச்சரின் பேட்டிகள்!

சென்னை, மே 17- தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு :

மிகப்பெரிய அதிர்ச்சித் தோல் வியை நமக்குத் தந்த இந்த தேர்தல் முடிவுகள் நமது தேர்தல் ஜனநாயகத் தில் புதியதல்ல; வழமையானதுதான்.

இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும், கட்சி - ஆட்சி தலைமையேற்போருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட!இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால், அதனை என்றும் வரவேற்போம்!இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

கலைஞர் அறிக்கை

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன் னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. வெற்றி கண்டு வெறி கொள்வது மில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் க. அன்பழகன்

எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. தோல்விக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை என்றார் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்.

தளபதி மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். தேர்தல் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். தி.மு.க. மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்றார் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

முதலமைச்சர் பேட்டி

கேள்வி: மத்திய அமைச்சரவையில் இடம் பெறு வீர்களா?

முதல்வர்: அப்படிஒரு சூழ்நிலை இல்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

முதல்வர்: தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

- முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா
அளித்த பேட்டி 16.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/80424.html#ixzz321X8sfsB

தமிழ் ஓவியா said...


கோயில் திருவிழா கூத்துகள்!


சென்னிமலை கோவில் தேர் விபத்து சென்னிமலையில் கோவில் தேர் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட் டது. இதில் ஓட்டுநர் கிளீனர் உயிர் தப்பினர்.

சென்னை துறைமுகத் தில் இருந்து ஒரு டாரஸ் லாரி 2 கண்டெய்னர்களில் கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் நோக்கி சென்று கொண்டு இருந்தது லாரியை நாகை மேலத்தெருவை சேர்ந்த முருகவேல் (வயது 25) என்பவர் ஓட்டிச்சென்றார். கிளீனராக பாண்டியராஜன் என்பவர் இருந்தார்.

இந்த லாரி நேற்று மதியம் ஈரோடு மாவட் டம், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே ஒரு கார் வந்தது. இதனால் லாரி ஓட்டுநர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் எதிர்பாராத வித மாக லாரியில் இருந்த 2 கண்டெய்னர்களும் சரிந்த தால் கோவில் தேர் மீது ஒரு பக்கமாக லாரி கவிழ்ந்தது. இதில் தேர் மீது மூடி வைத்து இருந்த தகர பலகை சேதம் அடைந்தது. லாரியில் இருந்த கொப் பரை தேங்காய்கள் கீழே சிதறின.

அப்போது முருகவே லும், பாண்டியராஜனும் லாரியில் இருந்து கீழே குதித்தார்கள். இதில் பாண்டியராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த இடம் மக்கள் எப்போதும் நட மாட்டம் அதிகமாக காணப் படும். ஆனால் நேற்று அந்த வழியாக பொது மக்கள் யாரும் செல்லாத தால் உயிர்ச்சேதம் இல்லை.

விபத்து நடந்த இடத் துக்கு மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த கொப்பரை தேங்காய்கள் அதில் ஏற்றப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டன. கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னிமலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி ஊர்வலம் : தாக்குதல் 15 பேர் கைது கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் முன் ஆட்டம் போட்டபடி வந் ததை கண்டித்ததால் ஆத் திரம் அடைந்த கும்பல் ஆயுதங்களுடன் தெரு வுக்குள் புகுந்து தாக்குத லில் ஈடுபட்டது. இந்த மோதல் தொடர்பாக 15 பேரை காவலர் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி இரவு அம்மன் வீதி உலா நடந் தது. அப்போது களத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில், காமராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சாமி வீதி உலா வுக்கு முன்பாக நடனமாடி யபடி வந்தனர்.

அவர்கள் ஒரு தெரு வுக்குள் அவ்வாறு ஆடிய படி வந்தபோது அங்கு இருந்தவர்கள் 3 பேரிடமும் சாமி ஊர்வலம் முன் நடனமாடக்கூடாது எனக் கூறி அவர்களை கண்டித்து அனுப்பினர். ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அது குறித்து கூறினர். பின்னர் அவர்கள் 25-க்கும் மேற்பட்டோரு டன் கல், உருட்டுக்கட்டை, கத்தி, கொம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களைக் கண் டித்தவர்கள் இருந்த தெரு வுக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் சாமி ஊர்வலம் முன் நடனமாடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள் யார்? என்று கேட் டவாறு அந்த தெருவில் இருந்தவர்களை ஆயுதங்க ளால் கடுமையாகத் தாக் கினர். பலர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித் தனர்.

கும்பல் தாக்கியதில் அந்த தெருவில் இருந்த மணிகண்டன் (வயது 29), சுப்பிரமணி (39), ஜெகன் (37), சின்னப்பையன் (45), விஜயன் (35) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.

தங்களைத் தாக்கிய கும்பல் மீது காவேரிப் பாக் கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித் தார். அதன்பேரில் 15 பேரை காவல் ஆய்வாளர் பழனி கைது செய்தார். இதில் 10 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின் றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80430.html#ixzz321XgI4se

தமிழ் ஓவியா said...


தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜினாமா


திரு.ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 04.07.1929ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா/நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்கு களுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகின்றேன்.

நிற்க, மேற்படி 4ஆம் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவ தானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும்,

மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோத மானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறிவிடும் பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்தில் இருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜினாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை.

எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு செய்து எனது ராஜினாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் வகித்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் - குடிஅரசு - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YfN3o9

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YnhbCH

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்: திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Yx1VLc

தமிழ் ஓவியா said...

சென்னைக் காங்கிரஸ் கமிட்டி

இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங்களி லெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதாரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது.

அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம் அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைக் கன்னாபின்னா என்று வையச் சொன்னாராம்.

கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள் வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Z4xZQo

தமிழ் ஓவியா said...

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படா தென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார்.

அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும் படியான புதிய கையந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார்.

இது பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZKZxyn

தமிழ் ஓவியா said...


வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் ஆபத்தான கோவில் விரிவாக்கம்!


மக்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக உள்ள சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் குறுகலான தெருவில், நாள்தோறும் விபத்துக்களும், மக்கள் நெரிசலும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் இடமாகும். ஆசியாவிலேயே உள்ள பெரிய தொகுதியான வில்லிவாக் கத்தில் உள்ள பேருந்து நிலையம் மிக மிக சிறியதான ஒன்றே ஆகும். இந்த லட்சணத்தில் இருக்கின்ற கோவிலை, பொது மக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு செய்யும் விதத்தில் இப்படி ஒரு கோவில் விரிவாக்கம் தேவையா என்று அனைவரும் வருத்தம் அடைகின்றனர். தேவையே இல்லாத இப்படிப்பட்ட இந்து மத கோவில்களின் விரிவாக்கங்களால் எங்களைப் போன்ற இந்துக்கள்தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர்.

ஒரு காலத்தில் 2 அடிக்கு 2 அடியாக இருந்த கோவில், இன்று 10 அடிக்கு 60 அடி கோவிலாக வளர்ந்துள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்துக் கழகமும், மாநகராட்சியும் கண்களை மூடிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஏனென்றால் இந்து மதத்தின் பெயரால் நாம் எதையும் தடை இன்றி செய்யலாம் என்பதே இக் கோவில்களின் நிருவாகிகள் செய்வது அன்றாட வழக்கமாகி விட்டது. சென்னையிலேயே மக்கள் நெருக்கம் அதிகமுள்ள வில்லிவாக்கத்தில் பெரியது, சிறியது என்று எங்கு நோக்கினாலும் கோவில்கள் மயமாக உள்ளது. வில்லிவாக்கத்தில் 100-க்கு மேல் கோவில்கள் உள்ளன. எதற்காக இப்படி பொது வழிகளை அடைத்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்? எங்கு நாம் தடுக்கி விழுந்தாலும் அங்கு ஒரு கோவில் இருக்கின்றது.

வில்லிவாக்கத்தில் மட்டும் ஏராளமான பூங்காக்கள் எல்லாம் இன்று கோவில்களாக மாறி உள்ளன. எதற்காக இப்படி தேவை இல்லாமல் பொதுமக்களுக்கு நிரந்தரமான இடையூறு? கனவில் சாமி வந்து எனது கோவிலை பெரிதாக மாற்று என்று சொன்னார்களா? ஒருவேளை சொன்னாலும் சொல்வார்கள். இப்படிப்பட்ட கோவில்களின் நிருவாகிகள் எளிதாக கல்லா கட்ட முடிவதால், வில்லிவாக்கத்தில் எங்கு நோக்கினும் இதே கதையாக உள்ளது. இப்படிப்பட்ட பொதுச் சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். வில்லிவாக்கத்தில், தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான சாலைகள் இல்லை. கொசு தொந்தரவு சொல்லவே வேண்டாம். இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இப்படிப்பட்ட கோவில்களால் பொது மக்களுக்குத் தான் தொந்தரவு. இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே அடியாக மூடி விட்டு, கோவிலாக மாற்றிவிட்டாலும், இந்தக் கோவில் நிருவாகிகள் பேராசை முடிவுக்கு வராது என்று இந்தத் தெருவில் உள்ளவர்கள் கூறி வருந்துகிறார்கள். எங்கள் வீட்டு ஆண்களிடம் இதைச் சொன்னால், உங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று சொல்லி எங்களை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனவே பெரியார் இயக்கம் இங்கு ஒரு பொதுக் கூட்டம் மூலம் உடனே நிறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எனவே, மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டே ஆர்டர் மூலம் இந்த விரிவாக்கத்தை உடனே நிறுத்தி, பேருந்து நிலையத்தை அழிவிலிருந்து காப்பாற் றுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்..

உங்கள் சகோதரிகள்.

Read more: http://viduthalai.in/page2/80466.html#ixzz321ZxcTdu

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் கங்கை ஆறு - குறிப்புகள்



இந்தியாவின் நீளமான ஆறு 2,525 கி.மீ. உத்தர் காண்ட் - 450கி.மீ., உத்தரப்பிரதேசம்- 1000கி.மீ., பிகார் - 450 கி.மீ. ,ஜார்கண்ட்-40கி.மீ., மேற்கு வங்கம்-520 கி.மீ., பிகார், உத்தரப்பிரதேச எல்லைப்பகுதி-110கி.மீ.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவ்முக் (கங்கோத்ரி பனிக்கட்டிஆறு) பகுதியிலிருந்து உருவாகிறது.

இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு கங்கை ஆற்றுத்திட்டம் பலனளிக்கிறது

ஆற்றோட்டப்பகுதியின் பரப்பளவு: 8,61,404 சதுரகி.மீ.

ஆண்டுக்கு கடலில் கலக்கும் நீரின் அளவு: 4,93,400 மில்லியன் கனமீட்டர்
கிளை நதிகள், துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா, கோம்தி, காகரா, கண்டாக், தாமோதர், கோசி, கலி, சம்பல், சிந்து, பெட்வா, கென், டோன்ஸ், சோனெ, காசியா-

ஹால்டி

ஆற்றங்கரையில் முக்கிய நகரங்கள்: ரிஷிகேஷ், அரித்துவார், ரூர்கி(உத்தர்கண்ட்) பிஜ்னோர், நரோரா,, கன்னோஜ், கான்பூர், அலகாபாத், வாரணாசி, மீர்சாப்பூர் (உத்தரப்பிரதேசம்), பாட்னா, பகல்பூர் (பிகார்) பஹ்ரம்பூர், செராம்பூரெ, ஹவுரா, கோல்கட்டா (மேற்கு வங்காளம்)

கங்கா செயல்திட்டம்: (28ஆண்டுகளில் இரண்டு திட்டங்கள்)

கங்கா செயல்திட்டம்-1

1986 ஜூன் தொடங்கி 2000 மார்ச்சில் முடிந்தது 462.04 கோடி ஒதுக்கீடு 25 மாநகரங்கள், நகரங்கள் உபி-6, பிகார்-4, மேற்கு வங்காளம்-15 உள்ளடக்கியது

கங்கா செயல்திட்டம்-2

1993யிலிருந்து 1996 வரையிலும் பெல கட்டங் களாக தொடக்கம் 2001 ஏப்ரல்-1இல் அமல்படுத்தப் பட்டது 95 மாநகரங்கள், நகரங்கள் முக்கிய கிளை நதிகள் உள்ளடக்கியது

பொருளாதார செலவினங்கள்: தாவரங்களுக் காக கழிவுகள் மேலாண்மை, தண்ணீர் மாசு கண் காணிப்பகங்கள், வெள்ளச்சேதங்களிலிருந்து பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் செலவு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

2008-09 தேசிய ஆறாக அறிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடுதல், செலவிடு தல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள என்ஜிஆர்பிஏ என்கிற அமைப்பு 2009இல் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/80469.html#ixzz321aY5NTV

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களை தீவிரவாதிகள் எனும் சவுதி சட்டம்: நீக்கப்பட அழுத்தம்


அண்மையில் சவுதி அரேபிய அரசு இரு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று நாத்திகர்கள் (கடவுள், மத மறுப்பாளர்கள்) தீவிரவாதிகள் என்றும், மரணதண்டனையை அதிகபட்ச தண்டனையாக அளிக்கலாம் என்றும் அந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்மூலம் நாத்திகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை சவுதி அரசு ஏற்படுத்தி உள்ளது.

நாத்திகத்தைப்பற்றி முழுமையாக அறியாதவர்கள்கூட, அந்த நாட்டிலிருந்து நாத்திக இணையதளத்துக்கு சென்று பார்வையிடுபவர், அதில் தம் கருத்தை பதிவிடுபவர், நாத்திகர்களுடன் தொடர் பில் இருப்பவர் மற்றும் எந்த ஒரு தனி நபருடனோ, எந்த நாத்திக அமைப் புடனோ தொடர்பில் இருப்பவர் என்று இச்சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்று தண்டிக்க ஏதுவா கிறது. சவுதி அரசின் மதரீதியிலான நம்பிக் கையை அலுவலக நடைமுறைகளில் கடைபிடிக்கவில்லை என்றுகூறி எவ்வித ஆதாரங்களும் இல்லாமலே பெரும் பாலானவர்களை குற்றவாளிகளாக்கும் சட்டங்களாக அவை உள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும்.

அரேபிய நாட்டின் அடிப்படைகளை தகர்ப்பததாக, அரேபிய மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சட்டங்கள்மூலம் நீதிக்கு இடமின்றி சிறையில் அடைத்து துன்புறுத்தும் அபாயம் உள்ளது. பத்தில் தொடங்கி ஆயிரம் என்று சவுதி குடிமக்களை துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சவுதி நாத்திகர்கள் வேறு அதிக சகிப்புத்தன்மை உள்ள நாடுகளில் புகலிடம் தேட ஏதுவாகும்.

வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள் ளவர்கள் சவுதியில் பலபேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெற்ற இளைஞர்களாக இருக்கின்றனர். உலகஅளவில் வின்கேல்லப் நிறுவ னத்தின் புள்ளிவிவரப்படி சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் அய்ந்து விழுக்காட்டினர் நாத்திகர்களாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டில் முப்பது மில்லியன் மக்களில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி ஏழு மில்லியன் சவுதி குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சவுதி அரேபியா அரசு மதத்தின்மீதான மரியாதையைக் காத்திட குறிப்பாக இசுலாம் மதத்தை மதிப்புக்குரியதாக்கிட அய்நாவின் மதவிரோதச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக ஆதரித்தது. மேலும், சவுதி அரேபியாவில் அய்நாவின் மனித உரிமை ஆணையத்தை அண்மையில் ஏற்படுத்தியது. அது எதிர்பார்க்கக் கூடிய மதிப்பை அது விரும்பும் மதம் பெற வேண்டுமானால், அதே அளவு மதிப்பையும், பாதுகாப்பை யும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

சவுதி அரசை விரைவாக அந்த சட்டங்களை நீக்க வலியுறுத்துவதோடு அப்பாவிகளின் உயிர்களை அழிவிலிருந்து காக்கவும், அகதிகள் உருவாகாமல் தடுக் கவும் விரைந்து அந்த சட்டங்களை நீக்கிட வேண்டும் என்று மதசார்பற்ற உலகுக் கான சர்வதேச நாத்திக கூட்டமைப்பின் (கிலீமீவீ கிறீறீவீணீஸீநீமீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வேண்டு கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page5/80471.html#ixzz321akHYZa

தமிழ் ஓவியா said...


அணுகுண்டு சோதனைகள்


இந்தியாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுவதற்கு சக்தி நடவடிக்கை (Operation Shakthi) என்று பெயரிடப்பட்டு இரண்டுமுறை சோத னைகள் நடந்துள்ளன. சக்தி நடவடிக்கை (Operation Shakthi) இராஜஸ்தான் மாநி லத்தில் பாலைவனப்பகுதியாகிய போக் ரான் பகுதியில் நடைபெற்றன.

போக்ரான் -2 (Pokhron-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அய்ந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அணுகுண்டு சோதனைகள் 11-5-1998 தேதியிலும், இரண்டுஅணுகுண்டு சோத னைகள் 13-5-1998 வெடிக்கப்பட்டன. இந்த அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத் தடைகளை விதித்தன. மேலும், இந்தியாவைத் தொடர்ந்து 28-5-1998 மற்றும் 30-5-1998 ஆகிய நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்தியா முதன்முதலாக 18-5-1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டு அணு குண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு 11-5-1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்துத்துவ தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று பெயரிட்டது. சக்தி என்ற சமஸ்கிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல் லாகும்(அவர்கள் அப்படித்தானே!). 1998இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும், பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த நாளை நினை வுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப் படுகின்றன.

Read more: http://viduthalai.in/page5/80470.html#ixzz321asSfXb

தமிழ் ஓவியா said...



அதிர்ஷ்ட கற்கள்

கடன் தொல்லையா?
கணவன் மனைவி சண்டையா?
தாம்பத்தியத்தில் சுகம் இல்லையா?
வீடுகள் கட்ட வேண்டுமா?
விளை நிலங்கள் வாங்க வேண்டுமா?
வீதியில் பார்த்த பெண்ணை
ஆசையாய் மணக்க வேண்டுமா?
அத்துணைக்கும் அதிர்ஷ்ட கற்கள் உண்டு.
அபரிதமாய் வேலை செய்யும்
திருமணமாகாத, வேலையில்லா
இளைஞனின் விபரீத கூப்பாடு...

நாளும் புதுமை அறிந்திடுக

தாழ்ந்த நிலைப்படி இது என்று
தலைமை உடலை வளைத்துச் செல்வர்
நிலைப்படி உடைத்தல் - பாவமென்றும்
அய்யன் வைத்த நிலைப்படி - இது
அன்பின் நினைவுச் சின்னம் - இது
என்றே எண்ணி வாழ்ந்திடுவர்
ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லி!!
அறிவுக்கு பொருந்தாச் செயல்கள் செய்வர்
உதட்டை, நாக்கை, உடலுறுப்பை,
கம்பிகளாலே கிழித்துக் கொள்வர்
நெருப்பின் மீதே நடந்து செல்வர்
எல்லாம் இறைவன்
செயல் என்பார்
கிளியின் உத்தரவை
பெற்றே தான்
காரிய மாற்ற புறப்படுவர்
மனிதநேயம் மறந்திடுவர்
மதப் பிடிதனிலே வாழ்ந்திடுவர்
இலவசமாய்
செருப்பு
கிடைத்துவிட்டால்
காலை செருப்பிற்கேற்றாற் போல்
கணப் பொழுதினிலே
வெட்டிக் கொள்வர்
சிந்தனையற்ற செயல்களாலே
உயிரைக் கூட இழந்திடுவார்
சலனம் அடையும் மனிதனைச்
சாந்தப் படுத்திட....
சோதிடம் சொல்வார்
மூன்றாம் பிறவி செயல்களுக்கு
இந்தப் பிறவியில் வகை காண்பார்
அடிமைத் தனத்தை
ஏற்றுக் கொள்வார்
அச்சம் கொண்டே வாழ்ந்திடுவார்
புதுமை அறிந்திட மறந்திடுவார்
புவியில் மருண்டே வாழ்ந்திடுவார்
அறிவு ஆசான் பெரியாரின்
ஆற்றல் நிறைந்த வழிதன்னை
ஆய்ந்தே நீயும் ஏற்றுக் கொள்வாய்

- சு. ஆறுமுகம் M.A., M.Phil., B.Ed., நன்னிலம்

Read more: http://viduthalai.in/page7/80477.html#ixzz321bHuCJv

தமிழ் ஓவியா said...


அன்று காந்தியார் சொன்னது


கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்

காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.
மதமாற்றம்: விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st

தமிழ் ஓவியா said...


இது அல்லவோ மனிதநேயம்!

மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.

ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.

நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.

சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.

மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.

நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

-மும்பை மிர்ரர், 11-5-2014

Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe

தமிழ் ஓவியா said...


வேண்டாம் இந்த மதம்!


மதம் யானைக்குப் பிடிப்பதோடு நிற்கட்டும்; மனிதனுக்கு வேண்டவே வேண்டாம். இதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. அன்றாட நடப்புகளை அறிவார்ந்த முறையில் பார்த்தாலே சிந்தித்தாலே போதுமானது.

இந்தியாவில் 1992இல் அயோத்தியில் என்ன நடந்தது?

2002இல் குஜராத் மாநிலத்தில் என்ன நடந்தது? விறகுக் கட்டைகளை அடுப்பில் போட்டு எரித்தது போல ஒரு குடும்பத்தை (பெஸ்ட் பேக்கரியில்) எரிக்கவில்லையா?

நிறை மாதக் கருவுற்ற பெண்ணின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்து, கருவை வெளியில் எடுத்து நெருப்பில் வீசி எறிந்து வெறியாட்டம் போட வில்லையா!

அன்பையும், அகிம்சையையும் போதித்த கவுதம புத்தரின் மார்க்கத்தை, நெறியை - மதமாக்கி இலங்கையில் ஈழத் தமிழ் மக்களை என்ன பாடுபடுத் தினார்கள்? அந்த ஓயாவெறி அலை இன்னும் ஓய்வெடுத்துக் கொள்ளவில்லையே!

நபிகள் நாயகம் அவர்களால் சீர்திருத்த உணர்வோடு கற்பிக்கப்பட்ட மார்க்கத்தைக்கூட சிலர் கையில் எடுத்துக் கொண்டு ஆடுகிற ஆட்டம் அந்த மார்க்கத்தை மதிப்பவர்கள் பின்பற்றுபவர் மத்தியில்கூட முகச் சுளிப்பை ஏற்படுத்தி வருகிறதே! நைஜீரியாவில் என்ன நடக்கிறது?

போகோ அராம் என்பது ஆங்கில மற்றும் மேற்கத்திய கல்வி முறை இஸ்லாத்திற்கு பாதகம் விளைவிக்கும் மற்றும் பாவச்செயலாகும் என்று கூறி நைஜீரியா மற்றும் அதற்கு அடுத்த நாடுகளில் எல்லைப்புரங்களில் உள்ள பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தும் ஒரு குழுவாகும். இதன் தற்போதைய தலைவன் அபுபக்கர் சேக் என்பவனாவான்

போகோ அராம் என்பதன் பொருளே முற்போக்கு கல்வியே பாவம் விளைவிக்கும் செயல் என்று பொருள்படுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகளில் நைஜீரி யாவும் ஒன்று. இங்கு மதம் தொடர்பான சில குழுக்கள் ஆயுதமேந்தி மதச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று அரசை வலியுறுத்திவருகின்றன.

இந்த அமைப்பில் போகோ அராம் என்ற அமைப்பு கல்வியில் இருந்தே மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசமான சிந்தனையில் இறங்கியுள்ளது. போகோ அராம் குழு எப்போதும் தலைமைப் பதவிக்கு சண்டையிட்டுக்கொண்டு இருக்கும். அதனால் இவர்களிடம் எந்த ஒரு கட்டுப்பாடோ அல்லது சட்டதிட்டங்களோ இல்லாமல், தாங்கள் நினைத்ததை அப்படியே செயல்படுத்தும் மடமைத் தனமான போக்கு காணப்படுகிறது

2007-முதல் ஆயுதம் ஏந்தி போராடிய இந்த அமைப்பு 2009-ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளால் பயங்கரவாத குழு என்று அறிவிக்கப்பட்டது. ஆயுதக்கடத்தல் போதைமருந்து கடத்தல் மூலமாகவும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றைக் கடத்தி விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல் களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2013-ஆம் ஆண்டு வரை இந்த அமைப்பு சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை கொலை செய்துள்ளது.

தற்போது சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளிமாணவிகளை கடத்தியதன் மூலம் உலக நாடுகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மேற்கத்திய கல்வி முறை இஸ்லாமுக்கு ஆகாது என்று கூறி பெண்களைக் கடத்திச் செல்பவர்கள் என்ன சொன்னார்கள்? பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாகச் சொல்லுவது இஸ்லாமிய மார்க்கத்துக்கு உகந்ததுதானா? இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் செல்ல நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்தன.

ஆனால் பாதுகாப்புக் காரணங்களைக் கருதி அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். நைஜீரியா, பெனின், மேகரூர் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பயங்கரவாதிகளுக்கு எதிராகச் செயல்படத் தீர்மானித்துள்ளன. மாற்றம் என்பதே மாறாதது என்பது பால பாடம் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகளும் தண்டனைகளும் உலக அரங்கத்திலே கண்டனத்துக்கு ஆளாகிக் கொண்டு இருந்தன. அடிப்படைவாதிகள் எங்கு இருந்தாலும் காலத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு முன்பாக தோற் றோடிப் போவார்கள்.

மார்க்கத்தின்மீது நல்லெண்ணம் கொண்டவர்கள், சிந்தனையாளர்கள், போதனையாளர்கள் உலகளவில் நல்வழி காட்டக் கடமைப்பட்டுள்ளனர்.

நன்னெறியைக் கடைப்பிடிப்பதில்தான் தீவிரம் இருக்க வேண்டும். வெறியைக் கிளப்புவதில் அல்ல! யாரோ ஒரு சிலர் பிழைபட்ட சிந்தனையோடு நடந்து கொள்ளும் முறை ஒட்டு மொத்தமான அமைப்புக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை அறிவார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/80578.html#ixzz32DGPKRQt

தமிழ் ஓவியா said...


தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!


வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.

எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.

பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.

எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!

எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத் தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!

கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!

தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!

அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.

தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.

இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/80582.html#ixzz32DGhArJh

தமிழ் ஓவியா said...



திருவாய் மலரும் திருவாளர்!

மக்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தேர்லின் போது பணப்பட்டுவா டாவை தடுத்து நிறுத்த முடி யாது என்கிறார் தமிழ் நாட்டின் தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீன்குமார் (மக்கள் வரிப் பணத்தில் வாழும் அதிகாரிகள் மக்கள் மீதே பழி போடும் விசித் திரம்) மக்கள் திருந்த வில்லை என்பதற்காகத் தானே அதிகாரம் ஆட்சி என்பதெல்லாம்?


இவர்கள் படித்தவர்கள்?

சேலம் மக்களவைத் தேர்தலில் அரசுப் பணியா ளர்களின் தபால் வாக்களிப் பில் செல்லாதவை 466.

பி.ஜே.பி.யும் முஸ்லீம்களும்

பி.ஜே.பி. சார்பாக 7 தொகுதிகளில் முஸ்லீம்கள் நிற்க வைக்கப்பட்டும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மூன்று முறை வெற்றி பெற்ற ஷானவாஸ் ஹுசேன் பீகார் மாநிலம் பாகல்பூரில் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் பாமுல்லா தொகுதியில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட குலாம் முகமதுபீர் - ஆறாம் இடத்திற்கும், சிறீநகர் தொகுதியில் முஷ்டாக் அகமது மாலிக் 4ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். மே. வங்கத்தில் தம்லுக் தொகுதியில் பாதுஷா சலாம் நான்காம் இடம் பிடித்தார். லட்சத் தீவிலோ சையது முகம்மது கோயாவுக்கு 5ஆம் இடம்,6 இடங்களில் 3 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் என்பதுகூட வேறு வழியில்லாத காரணமே!



அட பைத்தியசாமிகளே!

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். செய்தி கேள்விபட்டு முதல் அமைச்சர் என். ரெங்கசாமி அப்பா பைத்தியசாமி படத்தை வைத்து - அதற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்தபடி இருந்தாராம். சிறிது நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இவர் வெற்றி பெற்றவுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்று கும்பிடு போட்டாராம். (வாக்குப் பதிவு இயந்திரத் தில் அப்பா பைத்தியசாமி தில்லுமுல்லு செய்திருப்பாரோ!) அட பைத்தியங்களே!

Read more: http://viduthalai.in/e-paper/80575.html#ixzz32DH8GtOi

தமிழ் ஓவியா said...


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.

கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.

காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU

தமிழ் ஓவியா said...


கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கருவுற்றவர்கள் உண்ணும் சில உணவுகளில் கருச் சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கருவுற்றவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மீன்கள்: ஆற்று மீன்களையோ, குளத்து மீன்களையோ அல்லது அய்ஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கருவுற்ற நேரத்தில் அவர்களது உடலில் இருக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப் படுவதால், கருச்சிதைவும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.

பழங்கள்: அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணமாகி விடும்.

காய்கறிகள்: சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவிய பின் சமையலுக்கு பயன்படுத்தலாம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்கக் கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/80559.html#ixzz32DIT735g

தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.



தமிழ் ஓவியா said...


ரசல்


பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970) ஒரு பிரித்தானிய மெய் யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்க வாதி), சமூக சீர்திருத்த வாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் பெரும்பாலும் இங்கி லாந்தில் தன் வாழ்க் கையைக் கழித்தாலும், வேல்சில் மறைந்தார்.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப் பாளர், தடையிலா வணி கத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித் தவர், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காக வும்" 1950 இல், இலக்கியத் திற்கான நோபல் பரிசு கிடைத்தது".

ரசலின் மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரைகள்` என்ற இரு நூல்களில் காணப் படும். நான் ஏன் கிருஸ் துவன் இல்லை என்கிற தலைப்பில் 1927ல் மார்ச் மாதம் ஆறாம் நாளில் பாட்டர்சீ நகர மாளி கையில் தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண் டன் கிளையின்சார்பில் உரை ஆற்றினர், ஓராண்டு கழித்து அது துண்டு வெளியீடாக வந்தது. அதில் கடவுள் நம்பிக்கை யின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையி யல் பற்றியும் பேசுகிறார்.

(தமிழில் மொழிபெயர்த்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டது) நான் மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பி னாலும், கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் முதல் காரணி வாதம் கிழிக்க முடியாத தாக தோன்றியது.

18ஆம் வயதில், கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன், அதில் அவர் தந்தை `என்னை செய்தவர் யார்` என்பதற்கு பதில் இல்லை, ஏனெனில் அது `கடவுளை யார் செய்தனர்` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் என சொல்வதாக படித்தேன். அதிலிருந்து முதல் காரணி வாதத்தை கைவிட்டு, நாத்திகனா னேன்.

(பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36) (இன்று ரசல் பிறப்பு -1872)

- மயிலாடன் -18-5-2014

Read more: http://viduthalai.in/page1/80537.html#ixzz32DJNUH6p

தமிழ் ஓவியா said...


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா? வயல் எஸ்டேட் தொழிலில் சிக்கலா? போர்வெல் அமைக்க வேண்டுமா?

கவலைப்படாதீர்கள். காவல் நிலையம் போகா தீர்கள் - நீதிமன்றம் போகாதீர்கள்! மண்ணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாத சாமியைச் சென்று தரிசியுங்கள் - காரியம் கைக் கூடும்! என்று தினமணி வெள்ளி மணி கூறுகிறது! வெட்கக் கேடு!

சக்தி கொடு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஜேபி சார்பில் போட்டியிட்டார் அருண்ஜெட்லி. அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீக்கியர்களின் 10ஆம் மதக் குருவான குருகோவிந்தசிங் எழுதிய நூலிலி ருந்து ஒரு பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் உள்ளவர் களையும் திருப்பிப் பாடச் சொன்னார். கடவுளே எனக்குச் சக்தி கொடு நல்ல விஷயங்களைச் செய்வதற்குப் பலம் கொடு. எனது எதிரியை எதிர் கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய்!

நியாயமான வெற்றி என் பக்கம் இருக்கட்டும் என்ற வரியில் நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாகவே இருக்கட்டும் என்று மாற்றிப் பாடச் சொன்னார் - பாடினார்கள். ஆனால் முடிவு தேர்தலில் தோற்று விட்டாரே! கடவுள் கதை கந்தையாகி விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/80540.html#ixzz32DJZTyM4

தமிழ் ஓவியா said...


16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே! பி.ஜே.பி.யில் நிறுத்தப்பட்ட 5 முஸ்லிம்களும் தோல்வியே!

புதுடில்லி, மே 18- 16ஆம் மக்களவைத் தேர் தலில் சிறுபான்மை மக் களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத் துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படு கிறது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.

16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக் களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப் பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ் லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர் களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்க ளவையில் இடம் பெற் றிருந்தனர்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழு வதும் 5 முஸ்லிம் வேட்பா ளர்களை மட்டுமே களத் தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லீம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16ஆம் மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசிய வாத காங்கிரஸ் சார்பிலும் ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்களவையில் முஸ் லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலை வர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசி யலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப் பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார் கள் என்றார்.

பெண் உறுப்பினர்கள் உயர்வு

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எண் ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந்தாலும், 16ஆம் மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டதே அதிக பட்ச அளவாக இருந்தது.

தற்போதைய மக்கள வைக்கு பா.ஜ.க. சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப் பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டி யிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.

Read more: http://viduthalai.in/page1/80544.html#ixzz32DK9L8Hw