Search This Blog

13.5.14

இந்தியா அடிமைப்பட காரணம்? - பெரியார்

இந்தியா அடிமைப்பட காரணம்?

கேள்வி: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக் குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
பதில் : நமது மதமும் ஜாதியும்.
கேள்வி : நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளா யிருக்கிறோம். ஆனால்,  பாடுபட்டுச் சம் பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?
பதில் : மதமும் ஜாதியும்.
கேள்வி: நமது பணக்காரக் குடும் பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?
பதில் : வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்ப ராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?
கேள்வி : எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
பதில் : வெளியார்க்கு தெரியும்படி யாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.
கேள்வி : கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
கேள்வி : மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
கேள்வி : உண்மையான கற்பு எது?
பதில்: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.
கேள்வி : போலிக் கற்பு என்றால் எது?
பதில்: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத் திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத் திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாத போது இணங்கி இருப்பதே போலிக் கற்பு.
கேள்வி : மதம் என்றால் என்ன?
பதில்: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.
கேள்வி: தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப் படுகின்றது?
பதில்: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
கேள்வி : பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
பதில்: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந் திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.
கேள்வி : மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.
கேள்வி : பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய  வேண்டும்?
பதில்: தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.
கேள்வி : பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)
கேள்வி : எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?
பதில்: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக் கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.
கேள்வி : பெரிய மூடன் யார்?
பதில்: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.
கேள்வி : ஒழுக்கம் என்பது என்ன?
பதில் : ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.
கேள்வி : சமயக் கட்டுப்பாடு - ஜாதிக் கட்டுப்பாடு என்றால் என்ன?
பதில்: மனிதனைத் தன் மனச் சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத் துவதுதான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.
கேள்வி : உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
பதில்: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப்படுகிறது.
கேள்வி : ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
பதில்: தடி எடுத்தவன் தண்டல்கார னென்பது தான் ஜனநாயக ஆட்சி.
கேள்வி : நம் நாட்டில் ஜனசங்கிகை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம்  செய் தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கிகை பெருகும்.

கேள்வி : நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?
பதில் : நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னி லையில் சிறந்து நிற்க வேண்டுமானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.
கேள்வி : இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?
பதில் : இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.
கேள்வி : கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர் கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
பதில்: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கை களும்  இருந்த போதிலும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமு மாகும்.
கேள்வி ; பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?
பதில்: மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப்பனர்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.
கேள்வி : ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்குபோய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?
பதில்: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுப வரும் பயப்பட வேண்டிய தில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.
கேள்வி : பார்ப்பனர்களில் ஒரு வகை யாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக் கின்றது.
பதில்: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.
கேள்வி : பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய் விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?
பதில் : கடவுள் இருக்கிறார், போதாக் குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப் படுத்திக்கொள்ள வேண்டி யதுதான்.
கேள்வி : கடவுள் ஏன் காண முடியாத வராயிருக்கிறார்?
பதில் : அவர் பண்ணும் அக்கிரமத் திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.
கேள்வி : கடவுள் செய்த அக்கிரமம் என்ன?
பதில் : ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?
------------------ சித்திர புத்திரன் - குடிஅரசு - கேள்வி பதில் - 15.01.1949

20 comments:

தமிழ் ஓவியா said...

முதுமையும் முன்னெச்சரிக்கை முறைகளும்!


சில ஆண்டுகளுக்குமுன் படித்த ஒரு நல வாழ்வு அறிவுரை நூலி லிருந்து ஒரு அருமையான அனுபவ மொழி எனக்குக் கிடைத்தது!

“Life extension without health and vigour can be an external punishment” நல்ல உடல் ஆரோக்கியமும், உடல் வன்மையும் இல்லாத ஆயுள் நீடிப்பைவிட சிறந்த வகையில் கிடைக் கும் தண்டனை வேறு கிடையாது என்பதே அதன் தமிழாக்கம்.

தந்தை பெரியார் அவர்களை, அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று, மேடைகளில் பலர் மிகுந்த நல்லெண்ணத்தோடும், பற்றுதலாலும் அவர்களது தொண்டு சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டும் என்ற அவா காரணமாகவும், வாழ்த்துத் தெரிவித்த பின்னர் அவர்களது விருப்பத்திற்கு நன்றி தெரிவித்து தந்தையவர்கள் பதில் உரை ஆற்றும்போது,

உங்களுக்கென்ன நீங்கள் எளிதில் 100 வயதிருக்க வேண்டும், பல்லாண்டு இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விட்டுப் போய் விடுகிறீர்கள்; வாழ்ந்து பார்க்கும் எங்களுக்கல்லவா அதில் உள்ள கஷ்ட, நஷ்டம், துன்பம் - தொல்லை என்பது புரியும்! என்று கூறுவார்கள்.

காரணம் முதுமையில், உள்ளம் எவ்வளவு உற்சாகத்துடன் உழைக்க விரும்பினாலும், உடல் உறுப்புக்கள் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பெரியாரைவிட குறைந்த வயது வாழ்ந்தவர் - என்ற போதிலும், படுக்கையில் பல திங்களைக் கழித்த நிலையில், பார்வை பழுதாகி விட்ட தால் பக்கத்தில் உதவும் நண்பர்களை அமர்த்திக் கொண்டு, படுக்கைப் பிதற் றல் - முதுமை உளறல் என்ற சிறந்த கவிதை ஆக்க அறிவுரை எழுத்தோவி யங்களையும் தரத் தவறவில்லை.

ஆனால், 95 ஆண்டு காலம் வாழ்ந்த தந்தை பெரியாரும், இறப்பதற்கு 5 நாள் முன்பு கூட, சென்னை தியாகராயர் நகரில் தமது மரண சாசன உரையை, தனது சிங்கக் குரலில் கர்ஜிக்கவே செய்தார்!

அன்னை மணியம்மையார் என்ற செவிலித் தாயாகி அய்யாவைப் பாதுகாத்தார்; அய்யா அவர்களும் கடைசி வரை பேசினார்; எழுதினார்; சுற்றுப் பயணம் செய்தார். அவர்தம் சிந்தனைச் சிறகுகள் பரந்து விரிந்த பகுத்தறிவு வானத்தில் அவர் பறக்க உதவிக் கொண்டே இருந்தன!

தமிழ் ஓவியா said...

முதுமை வந்தால் - அது இன்றைய அறிவியல்படி (நாளை ஒரு வேளை இதுவும் மாறலாம்) பல்வேறு நோய்கள் - உடல் உபாதைகள் ஏற்படலாம். அதுபற்றி இன்று தமிழ் இந்து நாளேட்டில் மனதுக்கு இல்லை வயது என்ற பொதுத் தலைப்பில் இன்று முதுமையியல் (Expert of Geriatrics) டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் எழுதியுள்ள பயனுள்ள குறிப்பு முதியவர்களும், முதியவர்களைக் கவலையோடு பேணி பாதுகாக்க எண்ணும் உற்றவர்களும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பொதுவாக முதுமையை பல நோய்களின் மேய்ச்சல் காடு என்பார்கள். சில நோய்கள் அறிகுறி இல்லாமல், மறைந்து காணப்படும். ஆனால், நோய்களால் ஏற்படும் தொல்லைகள் அதிகம் இருக்கும். உடல் பரிசோதனை யில்தான், பிரச்சினை என்னவென்று தெரியவரும். அதனால், முதியவர்கள் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மறைந்திருக்கும் நோய்களை ஆரம் பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

மது அருந்துபவர்கள் திடீரென்று மதுவை நிறுத்தக்கூடாது; அப்படிச் செய்தால் நடுக்கம் அதிகரிக்க வாய்ப் புள்ளது. இயல்பாக முதுமையில் வரும் நடுக்கத்தால் எவ்விதமான பாதிப்பும் இல்லை. நடுக்கத்தைப் போக்க மருந்து, மாத்திரைகள் உள்ளன. அதே சமயம், நரம்பு சார்ந்த நோய்களால் ஏற்படும் உதறுவாதம் என்கிற பார்கின்சன்ஸ் நடுக்கத்திற்கு கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும்.

இது ஏற்பட்டால் முதலில் கையில் நடுக்கம் ஆரம்பிக்கும். வேலை செய்யும்போது, தூங்கும்போது நடுக்கம் இருக்காது. நாளடைவில் உடல் தசைகள் இறுகி மரக்கட்டைபோல ஆகிவிடும். பொறுமையாக நடப்பார்கள். சட்டை யைக்கூட போட முடியாது. பேச்சு சரியாக வராது; சாப்பிட முடியாது; ஆனால், மனநிலை நன்றாக இருக்கும். இவர்களது அனைத்து வேலை களுக்கும் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும்; ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

எனவே, முதுமையில் உடல் நடுக்கம் வந்த உடனே மருத்துவரிடம் சென்று அது இயல்பான நடுக்கமா அல்லது உதறுவாதம் நடுக்கமா என்று ஆலோசியுங்கள். நடுக்கத்தைப் போக்க மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளன. நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தலாம். முதியவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை உடற் பரி சோதனையை தகுந்த ஆய்வுக் கூடத்திற்கு சென்று தவறாது செய்து, அதன்பின் உரிய மருத்துவ ஆலோ சனை பெற்று, அதற்கேற்ப அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

சிலர் எடுத்த எடுப்பில் மிகப் பெரிய சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் செல்லும் பழக்க முடையவர்களா கிறார்கள்; இது விரும்பத்தக்கதல்ல.

வழக்கமான உங்கள் குடும்ப ஆலோசகர் மருத்துவ (Family Consultant Doctor)ரையே அணுகி அவர் சொன்ன பிறகே எந்த நிபுணரிடமும் செல்லுங்கள். அதுவே மிகவும் பாது காப்பானது!

முதுமையை வெல்ல முடியாவிட் டாலும் நல்லபடியாக ஆக்கிக் கொள்ள முயற்சியுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/80190.html#ixzz31e6khy00

தமிழ் ஓவியா said...


பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே! - தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை


பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும், அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே - எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014

Read more: http://viduthalai.in/page-8/80149.html#ixzz31e8udRp7

தமிழ் ஓவியா said...


அரசு கோப்புகள் கன்னடமொழியில் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவேன் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, மே 13- அரசு கோப்பு களில் கன்னட மொழியில் எழுதாமல், ஆங்கிலத்தில் குறிப்பெழுதினால் கையெழுத்து போடமாட்டேன் என்று கருநாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கன்னட வளர்ச்சி ஆணையம் கன்னட மொழி பயன்பாடு பற்றி அறிக்கை தயாரித்து இந்த அறிக்கை கருநாடகா மாநில முதலமைச்சர் சித் தராமையாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு, ஆட்சி மொழி பற்றி பொது மக்களும், அதிகாரிகளும் கொண் டுள்ள எண்ணம் முதல்வர் சித்தராமை யாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆங்கிலம்

கன்னட மொழிக்கு ஆட்சி நிர் வாகத்தில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். எனவே அர சாங்க கோப்புகளில் கன்னட மொழி பயன்படுத்தப்படாவிட்டால் அந்த கோப்புகளை பார்வையிட்டாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட லாம் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதுபற்றி கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கன்னடியர்கள் அல்லாத அதிகாரி கள் அனைவரும் கன்னட மொழி யைக் கற்க வேண்டும் என்றும் கடித தொடர்புகள் கன்னட மொழியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்றும் நான் கூறியுள்ளேன்.

தமிழர்கள்

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த சில கோப்புகள் என்னிடம் வந்தன. நான் அதிகாரிகளை அழைத்து, கோப்புகள் கன்னட மொழியில் இல்லாவிட்டால் நான் அவற்றை திருப்பி அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்தேன். 1980 ஆம் ஆண்டுகளில் கன்னட காவலு சமிதி தொடங்கப்பட்டது. அப்போது முதல், நிர்வாகத்தில் கன் னட மொழியை பயன்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 300-க் கும் மேற்பட்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கு தங்கள் மொழியின் மீது ஒரு பற்றுதல் உள்ளது. நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி னால் அவர்கள் தமிழில் பதிலளிக் கிறார்கள். ஆனால் இங்கு பெங்களூருவில் நிலைமை அப்படியில்லை. நமது மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் நாம் கன்னட மொழி உணர்வை உரு வாக்க வேண்டியது அவசியமாகும். - இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/80163.html#ixzz31e9C9rIS

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானதே! கேரளாவை சேர்ந்த முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் பேட்டி
t

திருவனந்தபுரம், மே 12-முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண் டும் என்ற உச்சநீதிமன் றத்தின் உத்தரவு பாராட்டத் தக்கது என்று கேரளாவைச் சேர்ந்த முன் னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூறினார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.வி. ஆனந்த் தலைமையில் இரு மாநில நீதிபதிகளைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு வில் தமிழகம் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சும ணனும், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமசும் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த வாரம் உச்சநீதி மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் முல்லைப் பெரி யாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. அணை விவகாரத்தில் நீதி பதி கே.டி.தாமஸ் கேரளா வுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி இடுக்கியில் அவரது உருவபொம்மை யும் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி கே.டி.தாமஸ் கோட்டயத் தில் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: உச்சநீதிமன்றத் தின் 11 நீதிபதிகளும், 7 நீர்ப் பாசனத்துறை தலைமை பொறியாளர்களும், இந்தி யாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர்களும் சேர்ந்து முல்லைப் பெரி யாறு அணையை பரிசோதித் ததில் அந்த அணை பலமாக இருப்பது தெரியவந்தது. அதனால் தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் மட்டக் குழு

2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் தான் இப்போதைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோச னைப்படி தான் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. நான் உட்பட 3 உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைசிறந்த பொறியாளர்களும் அந்தக் குழுவில் இடம் பெற்றி ருந்தோம்.

இந்தியாவில் எந்த அணையிலும் நடத்தாத வகையில் முல்லைப் பெரி யாறு அணையில் பரிசோ தனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அணை பலமாக இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. அணை கட்டிய பின்னர் இதுவரை 116 முறை அணைப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அணையில் ஒரு சல்லிக்கல்லுக்கு கூட அந்த நில அதிர்வுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த அறிக்கை கேர ளாவுக்கும் அளிக்கப்பட் டது. 7 தலைமை பொறி யாளர்கள் தான் அணையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு அரசின் வழக்கு

1979ஆம் ஆண்டு மோர்வி அணை உடைந்த பின்னர்தான் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அணையை பலப்படுத்தும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் டன.

இவ்வாறு பலப் படுத்திய பின்னர் தான் அணையின் உயரத்தை 155 அடியாக உயர்த்தக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கேரளா தமிழ்நாட்டின் கோரிகையை நிராகரித்தது. இந்த வழக்கில் தான் கடந்த 2006ஆம் ஆண்டு நீர்மட் டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

ஆனால் கேரளா வேறு ஆய்வு எதுவும் நடத்தாம லேயே சட்டசபையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது. 2 மாநிலங் களுக்கு இடையே பிரச் சினை ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றம்தான் தீர்ப் பளிக்க வேண்டும். அவ் வாறு விதிக்கப்பட்ட தீர்ப் புக்கு எதிராக ஒரு மாநிலம் தன்னிச்சையாக சட்டத்தை நிறைவேற்றினால் அது இந்தியாவின் இறையாண் மையை பாதிக்கும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை பலமாக உள் ளது உறுதி செய்யப்பட்டுள் ளது. கேரளாவுக்கு இனியும் அணையின் பலம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந் தால் அதை தீர்ப்பதற்காகத் தான் மூவர் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்தக் குழுவில் கேரளா தனது கருத்துக்களை தெரிவிக்க லாம். அனைத்து தரப்பு ஆய்வுகளையும் பரிசீலித்து அளிக்கப்பட்டுள்ள உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை நான் மனதார பாராட் டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80089.html#ixzz31eAERgtw

தமிழ் ஓவியா said...


மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி


முக நூலில் சரவணப்பெருமாள் தெரிவித்துள்ள செய்தி:

வைகோ அவர்களே உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் - பாஜக வுடன் கூட்டணி வைக்கும் முன்பே - உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஆர்.எஸ்.எஸ்.யில் அய்க்கியமாகி - ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டு இருக்கின்றனர் !

உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடி மேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் - ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.

சீலக்கம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவர். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர் களுக்கு - பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAS2enb

தமிழ் ஓவியா said...

இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா??

இலங்கை எம்.பி. கேட்கிறார்?

இலங்கையில் கடந்த கால வரலாறு தற்போது மீண்டும் திரும்புகிறது. சுற்றி வளைப்பு, கொலை, கற்பழிப்பு என்று மீண்டும் வரும் நிலையில் ஈழத் தமிழர்கள் எங்கே போவது?

- சீனித்தம்பியோகேஸ்வரன் இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAaDeGe

தமிழ் ஓவியா said...

மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். செயல் படுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதிக்கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. அன்றைய தினம் மாலை டில்லி வந்த நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டில்லியில் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் நாக்பூரில் உள்ளது. அங் கிருந்து தான் பாஜக தலைவர்கள் இயக்கப் படுகிறார்கள். பாஜக பிரதமர் வேட்பாளருக்கு 56 அங்குல மார்பு மட்டுமே உள்ளது.

அவரை இயக்குவது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தான். 2004, 2009 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்தது. அதே போல் இப்போதும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். என்றார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAfkNup

தமிழ் ஓவியா said...


மே 12: உலகச் செவிலியர் தினம்


பொது மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலகச் செவிலியர் தினமாக (International Nurses Day) ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினம் கொண்டாட காரணமாக இருந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் லண்டன் நகரில் 1820-ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய வாழ்க் கையைத் துவக்கினார்

அப்போது ருஷ்யா கிரிமியப்போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் காயமுற்று கவனிப்பார் இன்றி இருப் பதைக் கேள்விப்பட்டு போர் நடக்கும் பகுதிக்குச் சென்று காயமுற்ற வீரர்களுக் காக முழுநேர சேவையில் இறங்கினார். காயங்களுக்கு மருந்திடுதல், உடை மாற்றுதல், இருக்கைகளை சரி செய்தல் ஆறுதலான சொற்களைக்கூறுதல் என்று நோயாளிகளுடனேயே முழு நேரத் தையும் செலவிட ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று தொண்டாற்ற தொண்டு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கும் பயிற்சியளித்தார். போர் முடிவுற்ற பிறகு தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பியதும், பிரிட்டன் அரசு இவரின் சேவையைப் பாராட்டி கவுரப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்தின் மகாராணிக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்ற பெண்ணாக மாறினார். அரசும் பல சமூக நிறுவனங்களும் பெருமளவில் பொன்னும் பொருளும் வழங்கினர்.

இவற்றை வைத்துக்கொண்டு தரமான செவிலியர் பயிற்சிப்பள்ளி ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த செவிலியர் பயிற்சிப் பள்ளி இன்று உலகப்புகழ் பெற்ற பிளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

சர்வதேச செவிலியர் கழகம் நைட்டிங் கேல் அம்மையாரின் சேவையை உலகமே போற்றும் வகையில் 1974-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான மே 12 -ஆம் தேதியை சர்வதேச செவி லியர் தினமாக அறிவித்தது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page1/80094.html#ixzz31eArVYzP

தமிழ் ஓவியா said...


நாத்திகராக வேண்டும்

மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.

(விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page1/80093.html#ixzz31eB8dHHH

தமிழ் ஓவியா said...

பழகு முகாம் நிறைவு விழா! அறிவியல்படி, நம்மைவிட நம் பேரப் பிள்ளைகள் அறிவாளிகள்!


பழகு முகாமின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் அரிய விளக்கம்!

தஞ்சை, மே 12- பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தில் நடைபெற்ற பழகு முகாமின் நிறைவு விழாவில், பெரியார் பிஞ்சுகளின் ஆற்றலை அறிவியல்படி ஒப்பிட்டு தமிழர் தலைவர் பாராட்டி சிறப்பித்தார்.

நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற நிறைவு விழா!

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இரண்டும் இணைந்து நடத்திய ஆறு நாட்கள் (5.5.2014 - 10.5.2014) பழகுமுகாம் இனிதே முடிவுற்று, நிறைவு விழா பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சிக்மண்ட் ஃபிராய்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமெரிக்காவிலுள்ள டல்லஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் இலக்குவன் தமிழ் வருகை தந்திருந்தார் மற்றும் பல்கலைக் கழகத் தின் துணை வேந்தர் நல். இராமச்சந்திரன், இணை துணை வேந்தர் பேரா. தவமணி, பதிவாளர் கோவிந்த ராஜு, பி.எஸ். சுப்பிரமணியன், சிவ. வீரமணி, பொதுச் செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகளின் மாநில பொறுப்பாளர் வீரவன்னியரசு, பேரா. பர்வீன், பேரா. அதிரடி அன்பழகன், இதழாளர் கோவி. லெனின், பிஞ்சுகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

துணைத் தலைவர் கவிஞர் விதைத்த விதைகள்

நிறைவு விழாவிற்கு முன்னதாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அய்ந்து நாட்களில் பக்குவமடைந்திருந்த பிஞ்சுகளின் மனதில், வீரியமான விதைகளை விதைத்தார். தீபாவளி, சரஸ்வதி பூஜை, பள்ளியில் தமிழ் பாடத்திலும், அறிவியல் பாடத்திலும் இருக்கும் தலைகீழ் முரண்பாடுகள், கடவுளர் கதைகள் ஆகியவற்றின் யோக்கியதையை தோலுரித்து தொங்கவிட்டார்.

அதேசமயம் பொங்கலின் சிறப்பையும், உலகெல்லாம் கொண்டாடும் Harvest Festival பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. இவையெல்லாம் இடையிடையே பிஞ்சுகளுக்கு மிகவும் பிடித்த விடுகதை கேட்டு விடையளிக்கும் உத்தியை பயன் படுத்தியும், இவற்றினூடே பகுத்தறிவு விதைகளையும் விதைத்துக் கொண்டே இருந்தார். இந்த விதைப்பு, சொர்ணா அரங்கநாதன் விடுதியில், பிஞ்சுகள் தீச்சட்டியை ஏந்தி, அதைப்பற்றிய விளக்கங்களை கற்று, தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே? என்று புத்தறிவு பெற்ற பிறகு நடைபெற்றதாகும்.

அசராமல் அசத்திய பெரியார் பிஞ்சுகள்

நிறைவு விழாவின் தொடக்கத்தில், பிஞ்சுகள் தாங்கள் கற்றவற்றை மேடையேறி செய்துகாட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். முதலில், புரட்சிக்கவிஞரின் நூலைப்படி பாடலை நான்கு பிஞ்சுகள் பாடி அசத்தினர். அதைத் தொடர்ந்து, ரசிக்க வைக்கும் பின்னணி இசை யுடன் பத்து பிஞ்சுகள் ஏரோபிக்ஸ் பயிற்சியை செய்து காட்டி கைதட்டலை அள்ளினர். பிறகு, 12 பிஞ்சுகள் கராத்தே கலையை மயிர்க்கூச்செறியும் வகையில் நிகழ்த்திக் காட்டினர்.

அதைத்தொடர்ந்து, சிலம்பம், யோகா, திலீபனின் தட்டு தட்டு கை தட்டு, தத்துவத் தந்தை நம் பெரியார் பாட்டு என்று அரங்கை கட்டிப் போட்டனர் பிஞ்சுகள்.

பழகு முகாமின் சாதனை!

நிறைவு விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய பேரா.பர்வீன், சில புள்ளி விவரக் குறிப்புகளை குறிப்பிட்டார். பழகுமுகாமில், திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பிஞ்சுகள் 103, மற்றவர்கள் 106 என்றும், வந்தபோது 46 பிஞ்சுகள் கைகளில் கயிறு கட்டியிருந்தனர் என்றும் அவர்களில் இப்போது 34 பேர் கழற்றிவிட்டனர் என்றும் கூறியபோது, அரங்கம் அதிர்ந் தது கைத்தட்டலால், மற்றவர்களும் (12 பேர்) வீட்டிற்குச் சென்ற பிறகு, கழற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தெரி வித்து தனது வரவேற்புரையை முடித்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

துணைத் தலைவரின் வேண்டுகோள்!

யாருடைய வயதாவது குறையவேண்டுமென்று கருதினால், இங்கு வந்தால் போதும் என்று தொடங்கிய கழக துணைத் தலைவர் கவிஞர், இந்த ஆறு நாட்களில் சில நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம்; அதைப் பெற்றோர்கள் வீட்டிலும் தொடரச் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் வைத்து முடித்துக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பெற்றோர்கள் சார்பில், திருப் பூரைச் சேர்ந்த அமுதா, வீரவன்னியரசு, எழிலரசன் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

பெரியார் பிஞ்சு பேஸ் புக்!

கவிஞரைத் தொடர்ந்து உரையாற்ற வந்த சிறப்பு அழைப்பாளர் இலக்குவன் தமிழ், தனது பிஞ்சு வயதில் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக நிகழ்ந்த ஒரு செய்தியை பெரியார் பிஞ்சுகளிடம் பகிர்ந்து கொண்டார். அந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இதோ இங்கே இருக்கும் தமிழர் தலைவர்தான்.

அவருடைய உரைதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுவிட்டு, உங்களைப் பார்த்த பிறகு, எனக்கும் பழகுமுகாமில் கலந்து கொள்ள வேண் டும் என்று தோன்றுகிறது என்று கலகலப்பூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இங்கே என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று பிஞ்சுகளைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். அனைவரும் வியக்கும் வண்ணம், சுயமாக சிந்திக்க கற்றுக்கொண்டோம் என்று பதில் தந்தனர். முத்தாய்ப்பாக, பெரியார் பிஞ்சு face book -ஒன்றை உருவாக்கி உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள, உங்கள் நட்பைத் தொடர செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவரின் ஒரு வேண்டு கோளை வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...

அவரைத் தொடர்ந்து பேச வந்த துணைவேந்தர், பிஞ்சுகளைப் பார்த்து இன்னும் இரண்டு மணி நேரத்தில பெரியார் பிஞ்சு face book - தொடங்கப்படும் என்று சொல்லி பிஞ்சுகளின் கைத்தட்டலால் அரங்கை அதிர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் என்பது மக்கள் பல்கலைக் கழகம். இதற்கு சாட்சி இந்த பழகுமுகாம் என்று கூறி அமர்ந்தார்.

கயிறு கட்டமாட்டோம்! கயிறு திரிக்க மாட்டோம்!
துணைவேந்தரைத் தொடர்ந்து, வேந்தரின் நிறைவுரை தொடங்கியது. அவர் தனது உரையில், பேராசிரியர் பர்வீன் கயிறு கட்டியர்களின் புள்ளி விவரக் குறிப்பையும், முன்னதாக, பேராசிரியர் குமரன் முதல்நாள் மாலையில், பிஞ்சுகளிடம் கயிறு, நக அழுக்கு ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்துச் சென்றும், நிறைவு விழாவில் அவற்றை அனைவர் மத்தியிலும் எடுத்துக் காட்டி அவற்றின் தீமையை விளக்கியும் பேசியதை நினைவு கூர்ந்து, பிஞ்களைப் பார்த்து, சில முன்னோட் டமான செய்திகளைக் கூறிவிட்டு, கயிறு கட்டமாட் டோம், கயிறு திரிக்க மாட்டோம் என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், மிகவும் நெகிழ்ந்த மனதுடன் மகிழ்ச்சி பொங்க சில கருத்துகளை பிஞ்சுகளுடன் பகிர்ந்து கொண்டார். அதாவது, எங்க வயதுக்கு நீங்க வரலாம். ஆனால், உங்க வயதுக்கு எங்களால் வர இயலாது. இருந்தும், உணர்வு பூர்வமாக வரமுடியும் என்று கூறி குழந்தைகளை பார்த்ததும் தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டதை சொல்லாமல் சொல்லி அனைவரையும் நெகிழ வைத்தார்.

தயவு செய்து ஒப்பிடாதீர்கள்!

மேலும் அவர் பேசுகையில், எல்லா குழந்தைகளும் சிறந்தவர்கள்தான். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஆகவே, அவர்களை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடாதீர்கள் என்று குறிப்பிட்டதும் பார்க்க வேண்டுமே பிஞ்சுகளின் ஆரவாரமான கைதட்டல்களை. அவர்களின் உள்ளத்தை தமிழர் தலைவர் அப்படியே படம்பிடித்துக் காட்டிவிட்டதை உணர்த்தியது அந்த ஆரவாரம். அந்த உணர்வை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பேசும் போதுதான், பெற்றோருக்கு ஒரு அரிய தகவலைச் சொன்னார். அதாவது, அறிவியல்படி நம் பிள்ளைகள் நம்மை விட 15 ஆண்டு மூத்த அறிவாளிகள்.

பேரப்பிள்ளைகளோ 30 வயது அறிவால் முந்தியவர்கள். ஆகவே, இதை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறிவிட்டு, இந்த நுட்பமான விசயத்தில் கட்டுப் பாடும் தேவை. அந்தக் கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை தமிழர் தலைவர். அதாவது குழந்தைகள் மீதான கட்டுப்பாடு என்பது Traffic Signal போல இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு, ஆண்டுக்காண்டு, பெற்றோருக்கும் ஒரு பழகுமுகாம் நடத்தப்பட வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதைக் கேட்டு, அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு, இந்தப் போட்டி உலகத்தை நான் புறக்கணித்து விட முடியாது. ஆகவே, பிஞ்சுகளும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் fast food, pepsi, cola ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கண்ணீருடன் கலைந்தனர் பெரியார் பிஞ்சுகள்

அதைத் தொடர்ந்து, உடற்பயிற்சி ஆசிரியர் ஹேமலதா நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து சான்றிதழ்களையும், பரிசுகளையும் பெற்ற பிஞ்சுகள் குழு குழுவாக தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக் கொண்டனர். மதிய உணவுக்குப் பிறகு குழந்தைகள் பெற்றோர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர். அதன் பிறகு, அவரவர்களின் தொடர்பு எண்களைப் பெற்றுக் கொண்டு, கண்ணீருடன் கலைந்து சென்றனர் பெரியார் பிஞ்சுகள்.

Read more: http://viduthalai.in/page1/80120.html#ixzz31eBrdV5h

தமிழ் ஓவியா said...


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்

அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனி மருத்துவர்கள்.
சரி, கான்டாக்ட் லென்ஸ் எப்படி ரத்த அழுத்தத்தை அளக்கிறது?

2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் சென்சிமெட் எனும் ஒரு மைக்ரோ சென்சாரை கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை அளந்து சொன்னார்கள். இந்தக் கருவியின் பெயர் டிரைகர் ஃபிஸ்'. கண்ணில் அளக்கப்படும் அய்ஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்றப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப் பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொண்டே இருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால் குளுக்கோமா நோய் வந்து கண்ணைக் குருடாக்கிவிடும்.

ஆகவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த அளவை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு டிரைகர்ஃபிஸ் கருவி பயன்படுகிறது. இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்தத்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தைக் கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர்மனி மருத்துவர்கள் ஸ்டோட் மியாஸ்டர் மற்றும் ஜோனஸ் ஜோஸ்ட். இதற்கு கோல்டு மேன் கான்டாக்ட் லென்ஸ்' என்று பெயர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் 'சென்சிமெட்' சென்சாருடன் ஆன் டெனா, கெப்பாசிட்டர், கன்ட்ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை அளக்க முடியும் என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரிசோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த 'கூகுள் கான்டாக்ட் லென்ஸ்' இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும்.



Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCEkgn7

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய: தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

உடல் எடை குறைய: சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக் கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப் பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவ துடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த: இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCNmtxN

தமிழ் ஓவியா said...



தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் கேரட்

கேரட்டில் உள்ள ஏ' வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு களை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானமாகும். எலும்புகள் உறுதியாகும்.

முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக வோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCVNkc1

தமிழ் ஓவியா said...


குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


வேர்களுக்கு பழுது ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர் சித்தார்த்தன்

குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


தஞ்சை, மே 12- தஞ்சை மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் கனல் கவிஞர் துரை.சித்தார்த்தன் எழுதி தோன்றும் வெளிச்சத்தின் விழுதுகள் என்றும் உன்னோடு ஆகிய கவிதை குறுந் தகடுகள் வெளியீட்டு விழா 10.5.2014 அன்று மாலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. உரத்தநாடு மாணவி ஜெயசிறீ வரவேற்பு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் உரையாற்றினார் குறுந்தகடுகளை அறிமுகம் செய்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி உரத்தநாடு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.காந்தி, தஞ்சை நகர் மன்ற முன்னால் உறுப்பினர் இரா.ஜெயபால் வெற்றித் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் இரா.செழி யன், முத்தமிழ் முற்றம் நிறுவனர் ந.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் முனைவர் சி.செந்தமிழ்குமார், பேராசிரியர் திலீப்குமார், மண்டலத்தலைவர் வெ.ஜெய ராமன். மாநில ப.க பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத்தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், அமெரிக்கா டெக்ஸ்சஸ் பல்கலைக் கழக பேராசிரியர் பெரியார் பண்ணாட்டு மய்ய தலைவர் இலக்குவன் தமிழ், தஞ்சை பாரதி கல்வி குழுமச்செய லாளர் புனிதா கணேசன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துச் செய்தியை கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் படித்தார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறுந்தகடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கவிஞர் துரை.சித்தார்த்தன் மிகவும் துடிப்பும் உணர்ச் சியும் மிகுந்தவர் அவரின் படைப்பில் வெளிவந்துள்ள கவிதை குறுந்தகடுகளை இன்று பார்த்து மகிழ்ந்தேன். அவர் தோன்றி கவிதை பாடும் விதத்தை படக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அவர் ஒரு நெருப்பு கவிஞர், அவரோடு ஈடுகொடுத்து வாழ்க்கை நடத்தும் அவரது துணைவியார் மகேஸ்வரியைத்தான் அதிகம் பாராட்ட வேண்டும் இந்த ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத் தாலும் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் இருந்தபொழுது அவரது இல்லம் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தேன். தற்பொழுது நல்ல உடல் நலம் பெற்று இந்த குறுந்தகடுகள் வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். இந்த அளவிற்கு அவரை பாதுகாத்து உயர்த்தியுள்ள அவரது துணைவியார். மகேஸ்வரியைத்தான் பாராட்ட வேண் டும்.

கவிஞர் சித்தார்த்தன் அவர்கள் என்றும் உன்னோடு என்ற குறுந்தகடில் அவர் பல துறைகளை காதல், வீரம், கடமை என பல இருந்தாலும் கடைசியில் என்றும் உன்னோடு என்று, என்னுடன் எப்பொழும் இருப்பார் என்று உணர்த்தியுள்ளார். நமக்கெல்லாம் தலைவர் பெரியார் ஒருவர் தான். பெரியாருக்கு தொண்டர் சித் தார்த்தன் நாம் எப்பொழுதும் பெரியாரோடு இருப் போம். வெளிச்சத்தின் விழுதுகள் குறுந்தகடில் பெரிதும் என்னைப்பற்றி எழுதியுள்ளார் ஒரு மனிதனுக்கு பெரிய தண்டனை பாராட்டை கேட்டுக்கொண்டு இருப்பது தான். கவிஞர் துரை சித்தார்த்தன் வேருக்குப் பழுது ஏற்படுத்த, வேரையே சாய்க்க நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர். அவர் நல்ல உடல் நலத் துடன் வாழ்ந்து சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும் என மேலும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80101.html#ixzz31eCufnln

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு

புதுடில்லி, மே 14- ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தவரை மூன் றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்து இந்தியக் குடிமக்களுக்குரிய, அரச மைப்பு வழங்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப் பட வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற் படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள் ளிட்ட அனைத்து உரிமை களும் இதர பிற்படுத்தப் பட்டோருக்குரிய ஒதுக் கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் சார்பில் கூறப்படுவதா வது: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மத்திய அரசுக்கு மூன்றாம் பாலி னத்தவரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலுக் குள் சேர்த்துக்கொள்ள தீர் மானம் நிறைவேற்றி உள் ளோம்.

பிறப்பில் எந்த வகுப்பினராக இருந்தா லும் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக் குள் கொண்டு வரப்படு வார்கள். அனைத்து மூன் றாம் பாலினத்தவர்களும் இதர பிற்படுத்தப்பட் டோர் பெறும் அனைத்து உரிமை களையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவை அமைச்சரவை கூடி எடுக்கும். மூன்றாம் பாலினத் தவர் தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டிய லில் உள்ளபடி 23,019பேர் மற்றவர்கள் பட்டிய லில் பதிவாகி உள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் எந்த ஒரு வகுப்பையும் இணைப் பதற்கான ஆலோச னையை அரசுக்கு ஆணை யம் வழங்கிவருகிறது. அதனால், மத்திய சமூக நீதி மற்றும் நிர்வாகத் துறையின்கீழ் செயல் படும் ஆணையத்துக்கு துறைரீதியாக உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட் டுதலின்படி ஆணையத் தின் பரிந்துரையைக் கோரி கடிதத்தை அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமைகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஹிஜ் ராக்கள், யூனுச்சுகள், கோத் திகள், அரவாணிகள், ஜோகப் பாக்கள், சிவசக்திகள் என்று பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டு வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்குரிய உரி மைகளைப் பெறுவார்கள் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80212.html#ixzz31kKvtU8c

தமிழ் ஓவியா said...


நரகம் ஒரு சூழ்ச்சி


நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

- (விடுதலை, 29.2.1948)

Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d

தமிழ் ஓவியா said...


பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

- குடந்தை கருணா

கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?

பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?

அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.

இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!

ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj