Search This Blog

27.4.14

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு! - பேராசிரியர் மா.நன்னன்

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!

திராவிடர் கழகம் இல்லை யென்றால் வரலாற்றையே மாற்றியிருப்பார்கள்

இயக்கத்திற்கு வீரமணி அவர்கள் கிடைத்தது மிகப் பெரிய பேறு - வாய்ப்பு!
புத்தக வெளியீட்டு விழாவில் புலவர் மா.நன்னன் அவர்களின் ஆய்வுரை

சென்னை, ஏப். 25- தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வளம், திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் சிறப்பு, அன்னை மணியம்மையாரின் பேருள்ளம் தமிழர் தலைவர் கி.வீரமணி இயக்கத்திற்குக் கிடைத்தபேறு இவற்றையெல்லாம் தொகுத்து ஓர் ஆய்வுரை போல பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் வழங்கினார்.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அன்பார்ந்த தலைவர் அவர்களே, தமிழர் தலைவர், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களே, பூ.பழனியப்பன் அவர்களின் நூல்களை வெளியிட்ட மருத்துவர் ராஜசேகரன் அவர்களே, வழக்குரைஞர் அருள் மொழி அவர்களே, டாக்டர் பழனியப்பன் அவர்களுடைய குடும்பத்தினைச் சேர்ந்த நண்பர்களே, தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவன்
இந்த நிகழ்ச்சியில், படத்திறப்பு என்ற ஒரு நிகழ்ச்சி என்பது - மற்ற படத்திறப்பு நிகழ்ச்சிகளைவிட தனித்தன்மை வாய்ந்ததாக எனக்குத் தெரிகிறது. ஒரு சுயமரியாதைக் குடும்பம் - மூன்றாவது தலைமுறையினர் இவர்கள் - பூவராகன் - கணேசன் - சோலையப்பன் - பழனியப்பன் - அதற்கடுத்து இவர்கள் எல்லாம் தொடர்ந்து வருகிறார்கள். நான் இவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவன்.
பூவராகன் அவர்கள் பதிவாளராக சிதம்பரத்தில் பணி யாற்றியது முதல் நான் அவர்களை அறிவேன். திரு.கணேசன் அவர்களும், திரு.சோலையப்பன் அவர்களும், நான் புலவர் வகுப்புப் படித்தபொழுது,  அவர்கள் அங்கே படித்தவர்கள். கொஞ்சம் பேர்தான் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதனால் நான் அவர்களுடன் நெருக்க மாகவே பழகியிருக்கிறேன்.
ஒரு சுயமரியாதைக் குடும்பத்தில், ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றபொழுது, எப்படிப்பட்ட மன உறுதியோடு இருக்கவேண்டும் என்பதற்கு, இந்தத் திருமகன் சேரலாதன் அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
அவர்கள் உரையாற்றியபொழுது, நான் ஒரு நிலையில் இல்லை. அன்றைக்கும் அங்கே நான் சென்றிருந்தேன். அய்யா காலத்தில் போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
திராவிடர் கழகம் எப்படி உறுதியாக, எத்தனையோ சூழ்நிலைகளுக்கிடையில் நின்று வளர்ந்துகொண்டு, வாழ்ந்துகொண்டு செம்மையாக இருக்கிறதோ, அதுபோல் அந்தக் குடும்பமும் இருக்கிறது.
சுயமரியாதைக் குடும்பங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் குடும்பம் இருக்கிறது.
இவையெல்லாம் அய்யா காலத்தில் போடப்பட்ட நட்ட நடவு - பயிர்!
அமெரிக்காவில் இருந்து விதை நெல் வாங்கிப் போடுகின்ற பயிர் அல்ல!
நல்ல பொறுக்குமணி விதைகளைக் கொண்டு  பயிரிடு வதைப்போல - பயிரிட்ட குடும்பம் அது.
அந்தக் குடும்பத்தை முழுமையாக நாமெல்லாம் - நான் அந்த உறுதியை ஏற்றேன்.
நான் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நினைத்து முயற்சி செய்பவன்தான் என்றாலும்கூட, அந்தக் குடும்பத்தை நான் மதித்துப் பாராட்டுகிறேன்.
டாக்டர் பழனியப்பன் அவர்கள் மருத்துவராக இங்கே அவர் பணியாற்றியபொழுது சென்றேன்; பிறகு அவர்கள் வீட்டுத் திருமணத்தை நடத்தி வைக்கச் சென்றேனே தவிர, அந்தக் காலத்தில் இவரோடு எனக்குப் பழக்கமில்லை.
டோக்கியோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு...
டோக்கியோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு (International Seminar - Tokkiyo)உலக மாநாட்டிற்கு அவர் தலைவராகச் சென்று, பிறகு இதே திடலுக்கு வந்து அவர் உரையாற்றினார். நானும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந் தேன். அவர் உரையாற்றும்பொழுது, நாங்கள் டோக்கி யோவிற்குச் சென்றுவிட்டு வந்ததுபோன்ற உணர்வு எங்களுக்கு அன்றைக்கு வந்தது.
அதில் ஒரு செய்தியைச் சொல்கிறேன்:
அந்த ஊர் கழிப்பறையை நீங்கள் என்ன பாடுபட்டாலும் அசிங்கப்படுத்த முடியாது என்றார்.

டோக்கியோவிலுள்ள ஒரு சுரங்கப் பாதைக்குச் செல்லும் வழி மறந்துவிட்டதால், எந்தப் பாதையில் செல்வது என்று தெரியாமல் இருந்தாராம்;  தவறான பாதையில் சென்றால், அது வேறு எங்கோ கொண்டு போய்விடுமாம்; இவர் வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த ஒரு ஜப்பான்காரர், அவர் கைகளில் வைத்திருந்த மூட்டைகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு, இவர் செல்லவேண்டிய இடத் திற்கு இவரைக் கொண்டு போய் விட்டாராம். ஜப்பான்காரர் களுடைய மனப்பான்மையை அவ்வளவு அழகாக அந்தக் கூட்டத்தில் அருமையாக விவரித்தார்.
பொறுக்குமணிகள் போல, அந்த நாட்டினுடைய பண்பாட்டை, அறிவு நுட்பத்தை, உழைப்பை அந்தக் கூட்டத்தில் எடுத்தியம்பினார்.
அவரிடம் மருத்துவத்திற்காக இரண்டு, மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே மிக அருமையாக இருக்கிறது!
திராவிடர் கழகக் குடும்பத்தில், பெரியாரியல் குடும்பத் தில், சுயமரியாதைக் குடும்பத்தில் பட்டொளிவீசி நெடுங் காலமாக வாழையடி வாழையாக வாழவேண்டும் அந்தக் குடும்பம் என்று நான் வாழ்த்துகிறேன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவினைப்பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பே மிக அருமையாக இருக்கிறது. அதற்கு முன், முன்னுரைக்கு முன்பாக ஒன்றைச் சொல்லிவிடவேண்டும் என்று நினைக் கிறேன்.
ஆசிரியர் அவர்களே, நீங்கள் தொடங்கியிருக்கின்ற இந்தப் பணி, மற்ற பணிகளையெல்லாம்விட இன்றியமை யாத பணி என்று நான் கருதுகிறேன்.
இந்த நாடு, நாசக்காரர்கள் வாழுகின்ற நாடு; எல்லா வற்றையும் பிரித்து நைத்து விடுவார்கள்; ஒரு வழக்கு நடக்கிறது என்றால், அதுவும் முக்கியமான வழக்கின் தீர்ப்பு என்றால், அந்தத் தீர்ப்பை அப்படியே மறைத்துவிடுகின்ற ஊடகம் இங்கே மட்டும்தான் இருக்கிறது; வேறு எங்கும் இருக்காது. இவர்களுக்கு மட்டுமல்ல, பாட்டன், முப் பாட்டன், நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த இவர்களுடைய பரம்பரையினரின் குணமே அதுதான்.
பாண்டவர்கள் செய்தது தவறு
ராமாயணத்தைப்பற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு நூலை எழுதியிருக்கிறார் -
முதலில் கட்டுரைதான் எழுதினார் - பிறகு அது நூலாக வந்தது.
தசரதன் குறையும் - கைகேயியின் நிறையும்! தசரதன் செய்தது அயோக்கியத்தனம்; கைகேயி செய்ததுதான் சரி என்று சொல்கிறார். அதை விளக்கி நான் இங்கே உரையாற்ற முடியாது.
அதேபோல, பாரதத்தில், திருதராஷ்டிரர், அவருடைய மகன் துரியோதனன் ஆகியோர் செய்ததுதான் சரி; பாண்ட வர்கள் செய்தது தவறு என்று சொல்லியிருக்கிறார். அது நூலாக வரவில்லை. அது ஒரு அருமையான கட்டுரையாகும்.
அது மிராசுதாரர் வீட்டுக் குடும்பம் அல்ல; நான்கு பிள்ளை இருந்தால், நால்வரும் பங்கு போட்டு பிரித்துக் கொள்வதற்கு; அது அரச குடும்பம், யார் ஆட்சியில் இருக்கிறாரோ, அவருடைய மகன்களில் மூத்தவர்தான் பட்டத்திற்கு வரவேண்டும். அதன்படி, பாண்டு ஒரு நோயாளி; திருதராஷ்டிரன்தான் ஆண்டான். அவனுக்குப் பிறகு, அவனுடைய மகன் துரியோதனுக்குத்தானே பட்டம் கட்டவேண்டும். அதை ஒரு காப்பியமாக எழுதிக் கொண்டு வந்தார்.
சேரன் செங்குட்டுவன் - சிலப்பதிகாரம் - ஒரு குப்பை  குப்பையிலே இவ்வளவு செய்திருக்கிறவன் - இதை விடுவானா?
மாவீரன் - ஆரியர்களை எதிர்த்தவர்; கரிகாலற் சோழர்கூட புலிக்கொடியை இமயமலையில் நிறுவினார் என்று சொல்கிறார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதியதைத் தான் நான் இங்கே உரையாற்றுகிறேன், துறவியாகிய இளங்கோவடிகளின் மனதை மாற்றி, யாகம் செய்து, நாசமாகப் போவதுபோல் சிலப்பதிகாரத்தை முடித்து விட்டார்கள்.
எப்படிப்பட்ட காவியத்தை இப்படி முடித்துவிட்டார் கள். வள்ளலார் ஜோதியில் கலந்துவிட்டார் என்ற சொன்னார்கள் - கொன்றுவிட்டு!
நந்தனார் அந்தக் காலத்தில் முதல் ஆளாகப் புரட்சியை செய்தவர். இப்படித்தான் நண்பர்களே, எல்லாவற்றையும் திரித்துவிட்டார்கள்.

திருக்குறளா - பார்ப்பான் எழுதியது என்கிறார்கள்.
தொல்காப்பியமா - அறிவுள்ளவன் எவனாவது எதையா வது செய்திருந்தால், அவன் பார்ப்பானாகத்தான் இருக்க வேண்டும். அல்லது பார்ப்பானுக்கோ, பார்ப்பனத்திக்கோ பிறந்திருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். மாற்ற வேண்டும் அவ்வளவையும்!
திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றை மாற்றியிருப்பார்கள்
திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால், பெரியாருக்குப் பிறகு அந்த இயக்கம் - திராவிடர் கழகம் தளர்ந்து போயிருந்தால், சோர்ந்து போயிருந்தால், வர லாற்றை மாற்றியிருப்பார்கள்.
வள்ளலாருக்கு நேர்ந்த கதி - பெரியாருக்கு ஏன் நேரவில்லை?
நந்தனாருக்கு நேர்ந்த கதி ஏன் திராவிடர் கழகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படவில்லை? அதுதான் திராவிடர் கழகத்தின் தனிப்பெரும் சிறப்பு!
ஒரு பயலாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை; இப்ப வும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான். நம்முடைய எதிரி என்றைக்கும் இருக்கக்கூடிய எதிரி. அவர்களை ஒழிக்க முடியவில்லை, இதுவரையில்.
எமர்ஜென்சி காலத்தில் இரண்டு பேர் வந்தார்கள் - தவே, ஆரிய சுப்பிரமணியன் என்பவர்கள். இரண்டே வருடத்தில் அத்தனையையும் மாற்றினார்கள். நடக்குமா?
தேர்தல் ஆணையம் ஆகட்டும்; மற்றவை ஆகட்டும் - அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கிருந்தெல் லாம் நமக்குக் கெடுதலைத்தான் செய்துகொண்டிருக் கிறார்கள்.
நாம் விழிப்போடு இருக்கவேண்டும்!
ஆகவே, இந்த இயக்கத்தையே மாற்றி, இயக்கத்தி னுடைய நோக்கம் போன்றவைகளை மாற்றி, கொண்டு போய் கவிழ்த்திருப்பார்கள்; அல்லது கவிழ்ப்பார்கள். இது வரையில் கவிழ்க்கவில்லை; நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் நான் சொல்கிறேன், இந்த வரலாற்று நூல் வரிசை - அந்தப் பணியை தடுத்து நிறுத்துகிறது.
குடியரசுப் பதிப்பகம் இருக்கிறது, அது தொடர்பான ஏடுகள் எல்லாம் இருக்கின்றன என்றாலும்கூட, இப்படி ஒரு வரலாற்று முறையில், அதனோடு இரண்டறக் கலந்தவர் எழுதுகிறார் - யாரோ ஒருத்தர் எழுதவில்லை.
திராவிடர் கழகமாகவே, பெரியாரியலாகவே பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்கள் - அந்தப் பணியை - அய்யா சொல்வதுபோல, எத்தனையோ பணிகள் - அதற்கிடையில் இதனையும் தம் தலைமீது போட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் படித்துப் பார்த்தேன். டாக்டர் இராசசேகரன் அய்யாகூட, எப்படி அய்யா ஆசிரியர் இப்படி எழுதுகிறார் என்று கேட்டார்.
நமக்கு இதுதான் முக்கியம் என்றில்லாமல், நம் ஆசிரியர் அய்யா அவர்கள், தேர்தல் சுற்றுப் பயணம் - இவரே தேர்தலில் நிற்பதுபோன்று - அந்தச் சுற்றுப் பயணத்தின் நடுவில் ஒரு நாள் தான் இடைவெளி இருக்கிறது. எங்காவது மூச்சுவிடு வதற்கு இடம் வைத்திருக்கிறாரா என்று பார்த்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளையாவது விடுகிறாரா? அதுவும் இல்லை. அப்படிப்பட்டவராக அவர்கள் விளங்குகிறார்கள். அவர்கள்தான் இந்த நூலினை எழுதியிருக்கிறார்கள்.
காந்தி சென்ற பாதைதான் இருக்கிறதே தவிர,  வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை
அதனால்தான் நான் சொன்னேன் என் இனிய தோழர் களே, இந்த நூல் வரிசையில், சரியான காலத்தில், சரியானவ ரால், சரியான நோக்கத்தோடு உருவாக்கப்படுகிறது. இது தேவையான, சரியான, இன்றியமையாத விளைவை இந்த நாட்டிலே விளைவிக்கும் என்ற அளவில் அதை நான் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நூல் அமைப்பைப் பற்றியெல்லாம்கூட சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், உள்ளே போகவேண்டும் என்கிற ஆர்வத்தினால் அதனைப்பற்றி நான் அதிகமாக சொல்லவில்லை. இந்த நூலின் தலைப்பைத்தான் நான்  சொல்லத் தொடங்கினேன், அய்யாவின் அடிச்சுவட்டில்...

இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு நினைவு வந்தது; ஒரு காலத்தில் காந்தியினுடைய படத்தைப் போட்டு ரயில்வே நிலையத்தில் எல்லாம் வைத்திருப்பார்கள். அதற்கு மேலே “he showed as the way” என்று எழுதி வைத்திருப்பார்கள்.  அவர் நடந்து போவதுபோல, மைல்கல் எல்லாம் வளைந்து வளைந்து அந்தப் பாதையை வரைந்திருப்பார் அந்த ஓவியர் தன்னுடைய திறமையெல்லாவற்றையும் காட்டியிருப்பார். அதில் காந்தி சென்ற பாதைதான் இருக்கிறதே தவிர,  வேறு யாரும் பின்னால் சென்றதாக இல்லை. அவர் தெரிந்து விட்டாரோ, தெரியாமல் விட்டாரோ தெரியவில்லை. அது ஏனென்றால், அந்தப் பாதையில் செல்ல முடியாது. இப்படி வளைந்து வளைந்து போனால், எந்தக் காலத்தில் போய்ச் சேருவது? நேரான பாதையாக இல்லை; மணல் பாதையாக இருக்கிறது; அப்பாதை பயணத்திற்குத் தக்கதாக இல்லை என்று நினைத்து, இந்தியப் பெருநாட்டினுடைய மக்கள் எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.
எல்லோருமே வழிவிட்டார்களே ஒழிய, அந்தப் பாதையில் சென்றவர்கள் யாரும் இல்லை. அந்த நினைவுதான் எனக்கு வந்தது. இன்றைக்கும் காந்தி நெறி என்று எங்கே இருக்கிறது? அவருடைய காலத்திலேயே இல்லையே! ஆனால், நம் அய்யா பெரியாருடைய நெறி இருக்கிறதே - உங்களுக்கு இந்த அரசை காணிக்கையாக்குகிறேன் என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அரசியலே தேவையில்லை என்று சொன்னவருக்கு, ஒரு அரசை காணிக்கையாக்குகிறேன் என்று சொல்கின்ற நிலை.
                           ---------------------”விடுதலை” 25-04-2014

புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை


தமிழர் தலைவருக்கு மகிழ்ச்சியை, நிம்மதியை, ஊக்கத்தை, உண்டாக்க வேண்டும்
சிறிய கவலையோ, பதற்றமோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை
புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் மா.நன்னனின் ஆய்வுரை

சென்னை, ஏப். 26- தலைவருக்கு மகிழ்ச்சியை, நிம்ம தியை ஊக்கத்தை உண்டாக்க வேண்டும். சிறிய கவ லையோ, பதற்றமோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண் டியது நமது கடமை என்றார் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்
.
28.3.2014 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் அவர்கள் உரையாற்றினார். அவரது நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

இயற்கையை யாராவது அழிக்க முடியுமா?

இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மையை நான் சொல்லிவிடுகிறேன். பெரியாருடைய இயக்கம் உண்டாக்கப் பட்டது, உருவாக்கப்பட்டது என்பதுபோல சொல்லக்கூடிய இயக்கமன்று. பெரியார் என்ன திட்டம் போட்டு தன்னைச் சேர்ந்த நான்கு பேரை அழைத்துப் பேசி, சுயமரியாதைக் கட்சி ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதாக எனக்குத் தோன்ற வில்லை. திடீரென்று அவர் பேச ஆரம்பித்துவிட்டார்; எழுத ஆரம்பித்துவிட்டார், இயல்பாக - இயற்கையாக - ஒரு நோக்கத்திற்காக என்றெல்லாம்கூட இந்த இயக்கம் உருவாக வில்லை. இந்த இயக்கத்தை உருவாக்கியது பெரியார் என்றால், இடையிலிருந்து, செடியோ, கொடியோ, நாற்றோ முளைத்து வருவதுபோல, அவரிடத்திலிருந்து அது வெளிப்படுகிறது. வெறும் தரையாக இருக்கிறது; மழை பெய்தவுடன் அங்கிருந்து ஒரு மரக்கன்று முளைக்கிறது  அதுபோல; சூரியன் எப்படி உண்டாயிற்று என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்; இந்த நில உருண்டை எப்படி உருவாயிற்று என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதுபோல உண்டான இயக்கம்தான் திராவிடர் இயக்கம் - திராவிடர் கழகம் - சுயமரியாதை இயக்கம் எல்லாம். ஆகவே, இது அழியாது. இயற்கையை யாராவது அழிக்க முடியுமா? அதற்குமேல் நான் போக விரும்பவில்லை. இயற்கையாக முகிழ்த்த ஒரு இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் பாரதிதாசன் அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தில், பாரதியாரைப்பற்றி ஒரு கவியரங்கத்தில் பாடினார். அங்கே இந்த இயல்பு இருக்கிறது என்று எனக்கு நினைவிற்கு வருகிறது. சரியான நேரத்தில், சரியானவனை இயற்கை தானே தோற்றுவிக்கும் என்ற பொருள்பட பாவேந்தர் அவர்கள் அக்கவியரங்கத்தில் பாடியிருக்கிறார். அப்படித்தான் பாரதி புலவன் வந்தான் என்று சொல்கிறார். இயற்கையாக முகிழ்த்த (தோன்றிய என்ற சொல் சரியில்லை) ஒரு இயக்கம்தான் - அது பெரியார் மூலமாக - மழை பெய்தவுடன் முளை விடுகின்ற செடி, கொடிகளைப்போல, சரியான முறையில் வெளிவந்தது.

நாம் எல்லாம் தோற்றுப் போனாலும்கூட, எவனாவது ஒருவன் வந்து கையில் எடுப்பான். அப்படித் தோற்றுப் போகும்படியாக,  விட்டுவிட்டுப் போகும்டியாக இந்த அமைப்பு இல்லை. ஆகையால், இந்த நெறி இயல்பாக, தானே தோன்றியது.

இந்த நூலாசிரியர் வீரமணி அவர்களைப் பற்றி ஒரே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இவர் இந்த இயக்கத்திலிருந்தே தோன்றி, இந்த இயக்கத்திலேயே வளர்ந்தவர். இவருக்கென்று தனியே ஒன்றும் கிடையாது. அவருடைய நினைப்பெல்லாம் - நான் ஒவ்வொரு சமயமும் அவர் உரையாற்றும்பொழுது நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன். உங்களைப்போல அதிகமாக அவர்களிடத்தில் நான் நெருங்கிப் பழக முடிய வில்லையே தவிர, ஓரளவுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப் பைப் பார்த்து சொல்கிறபொழுது, பெரியாரியல் என்பது எப்படி ஒரு இயக்கமாக ஆகி, அந்த இயக்கத்திற்குள்ளே சேர்ந்து, அதுவும் வளர்கிறது, இயக்கமும் வளர்கிறது!

சிறுவனாக இருக்கும்பொழுது கூட்டத்தில் உரையாற்றுவார்; உரையாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார்

நான் இங்கே முன்பு உரையாற்றும்பொழுது சொன்ன ஒரு செய்தியை சொல்கிறேன்: ஆசிரியர் அவர்கள் சிறுவனாக இருக்கும்பொழுது கூட்டத்தில் உரையாற்றுவார். உரை யாற்றி முடிந்தவுடன் தூங்கிவிடுவார், கூட்டம் முடிவதற்குள். யாராவது ஒருவர் தூக்கிக்கொண்டுதான் போவார்கள்.
அந்தக் காலகட்டத்தில் மாணவப் பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். நான் அறிந்த வரையில், இந்த இயக்கத்திற்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு, பேறு ஆசிரியர் அவர்கள் - தமிழர் தலைவர் அவர்கள்.
கைதட்டுகின்ற நீங்களும், இந்தச் செய்தியை விடுதலை யில் படிக்கின்ற மற்ற ஊர் தோழர்களும், ஆசிரியர் அவர் களுக்கு எவ்வளவு நிம்மதியை, மகிழ்ச்சியை, ஊக்கத்தை உண்டாக்க முடியுமோ அவ்வளவையும் செய்யவேண்டும் என்று நான் இந்த மேடையில் இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன். சின்ன கவலையோ, பதற்றமோகூட வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. அப்படிப்பட்ட ஒருவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். இந்த இயக்கம் இப்படிப்பட்டது என்று சொன்னேன். இந்த நூலை எழுதியிருக்கின்ற ஆசிரியர் அவர்கள் இப்படிப்பட்டவர் என்று சொன்னேன்.
யார் போனால் என்ன?
நான் பார்த்துக்கொண்டு வருகிற வரையில், வீழ்ச்சி, தளர்ச்சி, தேக்கம் இவையெல்லாம் ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.
இந்த இயக்கத்திலிருந்து அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிரித்துக் கொண்டு சென்றதற்கே, எதுவும் ஆகவில்லை. அப்புறம் யார் போனால் என்ன?

இங்கிருந்து பிரிந்து சென்றவர்கள் நடத்திய கூட்டத்தில் என்ன பேசினார்கள்? நாம் தான் திராவிடர் கழகம்; அந்தக் கட்டடத்தைப் பூட்டி சீல் வைக்கவேண்டும்; இதுதான் திராவிடர் கழகம், அது இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் உண்டு.

பெரியார் செத்துவிட்டார்; இப்பொழுது இருக்கிறவர் வெங்கட நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கர்தான்; அவரைப் பற்றி இங்கே எவரும் பேசாதீங்க என்று சொல்லப்பட்ட துண்டு. நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.

அன்னையாரைப் பற்றியது அன்னையார் காலத்தில் தொடங்குகிறது
நம் வக்கீல் வேதாச்சலம், குத்தூசி குருசாமி அய்யா அவர்கள் எல்லாம் தொடக்கவிழா நடத்தினார்கள் அல்லவா, கோகலே ஹாலில். இப்பொழுதுகூட யாரோ சிலர் கூட்டத்தைக் கூட்டினார்கள், அதிலேயும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தனையையும் பார்த்த நான் சொல் கிறேன்,

இவர்களுக்கெல்லாம், இந்த மாதிரி ஏதோ சில்லூண் டித்தனமாக சில காரியங்களைச் செய்கின்ற அளவிற்குத்தான் அறிவும், திறமையும் இருக்குமே தவிர, அண்ணா ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் வேறு எந்த சிறப்புத் தகுதியும், உருப்படியாகச் செய்யக்கூடிய யோக்கியதையும் யாருக்கும் கிடையாது. அப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இதனுடைய வீழ்ச்சி இல்லை என்று சொன்னேன்; வீழ்ச்சி வேறு; தளர்ச்சி வேறு. இது இரண்டும் அல்லாமல் வேறு ஒன்று உண்டு. அதுதான் தேக்கம். தேக்க நிலைக்குக்கூட அவர்கள் விடு வதில்லை. நீங்கள் அவர்களுடைய திட்டங்கள், போராட் டங்கள், நடைமுறைகள் மற்ற இயக்க நடவடிக்கை களைப்பற்றி தனியே ஒரு பட்டியல் போட்டு, எப்படி அவர் கள் கொண்டுபோகிறார்கள் என்று நோக்குவீர்களேயானால், நான் சொன்ன இந்த முடிவிற்கு நீங்களும் வர முடியும். அப்படிப்பட்ட ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்த அய்யாவின் அடிச்சுவட்டில் என்கிற நூலின் நான்காம் பாகம், அன்னையாரைப்பற்றியது. அன்னையார் காலத்தில் தொடங்குகிறது.

பெரியார் - அண்ணா நினைவகம்

ஈரோட்டிலுள்ள அய்யாவின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு சின்ன பகுதி உண்டு. குடியரசு அலுவலகத்திலிருந்து சாப்பாட்டுக்கு அங்கேதான் செல்லவேண்டும். அங்கேதான் அண்ணா அவர்கள் குடியிருந்திருக்கிறார். அந்த வீட்டை பெரியார் நினைவகமாக ஆக்கவேண்டும் என்று அரசு சொல்லி, அந்த இடத்திற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள்; அதனை அரசு கொடுத்துவிடும் என்று ஆசிரியரிடத்தில் முதல்வர் கலைஞர் சொல்கிறார்கள். அம்மா அவர்கள் உடனே, பணம் ஒன்றும் வேண்டாம்; நன்கொடை யாக இந்த இடத்தினை அரசாங்கத்திற்குக் கொடுத்துவிடு கிறோம் என்று சொன்னார்கள். பெயர் வைக்கிறபொழுது அம்மா சொன்னார்கள், அண்ணா பெயரும் அதில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். பெரியார் - அண்ணா நினைவகம். இந்த ஒரு மனப்பான்மை போதும், அம்மா அவர்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு.

ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல்...

மாற்றுக் கட்சிக்காரர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள்? இதில் எப்படி அண்ணாதுரை பெயர் வரலாம்? பெரியார் பெயரில்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார் கள்.

கொஞ்சம்கூட மாற்று இல்லாமல், ஒளிக்காமல், மறைக்காமல், திரிக்காமல், விடுபடாமல் ஆசிரியர் அய்யா அவர்கள் அதனைத் தொகுத்து இந்த நூலில் கொடுத்திருக் கிறார்.

அம்மாவினுடைய அந்தப் பேருள்ளம்போல, அதனை எழுதும்பொழுது, இவருடைய உள்ளமும் அமைந்திருக்கக் காண்கிறேன். திராவிடப் பாரம்பரியம் நண்பர்களே, எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது பார்த்தீர்களா?

எல்லாம் ஒரே உள்ளம்!

ஒரு அரசாங்கத்தையே பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்ன அந்த அண்ணாவினுடைய உள்ளம்.

நீங்கள் எனக்கு செய்கிற சொல்கிற பிறந்த நாள் வாழ்த்து, தி.மு.க.வினரை வாழ வைக்கிறது என்று கழகத்தினருக்கு உத்தரவு போட்ட அய்யாவினுடைய உள்ளம்,

அண்ணாவினுடைய பெயரும் இதில் இருக்கவேண்டும் என்று சொன்ன அம்மாவினுடைய உள்ளம்; இதை விடுபடாமல், சரியாக, தக்கவாறு, அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய உள்ளம் எல்லாம் ஒரே உள்ளம்.

இவர்களுக்குள் சண்டை வருவதும்; கூடிக்கொள்வதும் ஒரு வியத்தகு உண்மை. மற்ற இடத்தில் பகை பகையாகவே இருக்கும்.

தன் சொந்தக் கட்சியில் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்புக் கொடுக்காததால், அந்தக் கட்சியை எதிர்த்தவர்களின் வரலாறு நிறைய உண்டு. இந்த வரலாறு வேறு எங்கேயும் கிடையாது. இதுதான், நம் இயக்கத்தினுடைய நாடித்துடிப்பு - உயிர் மூச்சு - ரத்த நாளங்களுக்குள்ளே இருக்கின்ற உயிர்த்தன்மை இதுதான். அப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்ச்சியை இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அதைத்தான் நான் சொன்னேன்; ஒரு நூல் எழுத வேண்டும்; அப்படியே ஒன்றைக்கூட மாற்றாமல் - மாற்ற வேண்டிய தேவையும் இல்லை. என்ன நடைபெற்றதோ அப்படியே அதனை எழுதவேண்டும். இந்த முரண் அல்லது இந்தப் பகை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது.

அந்த வெளிச்சம் - பகுத்தறிவு வெளிச்சம்!

தாய் - தன் மக்கள் செய்கின்ற தீங்குகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மறந்துவிட்டு, அந்தக் குழந்தையோடு உறவாடுவதுபோல, அதேபோல, இங்கே உரையாற்றிய அருள்மொழி அவர்கள் நன்றாக உரையாற்றினார்கள். என்னை நயம் சொல்லச் சொன்னீர்களேயானால், அவர்களை விட நான் நன்றாகச் சொல்வேன். ஏனென்றால், நம் கையில் பெரிய டார்ச் லைட் இருக்கிறது; இது போகாத இடத்திற் கெல்லாம் போகும்; அந்த வெளிச்சம் - பகுத்தறிவு வெளிச்சம். அருமையாக எடுத்துக்காட்ட முடியும் என்னால். நான் அதைப்பற்றி சொல்வதும் உண்டுதான் சில இடங்களில்.

ஆழ்வார்களைப்பற்றியும், நாயன்மார்களைப்பற்றியும் பாடமாகக் கொடுத்தார் ஒரு முதல்வர், என்னைப் பழிவாங்குவதற்காகவே. இவன் எதாவது சொல்வான், மாணவர்களிடத்தில் எதிர்ப்பு வரும்; இவனை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நினைத்துத் திட்டம் போட்டு கொடுத்தார். நான் வகுப்பு எடுத்து முடித்தவுடன், நான்கு மாணவர்களாவது அழுதுவிடும் அளவிற்கு வந்துவிடு வார்கள்.

நீ என்ன பார்ப்பானா? என்றார்கள்!

பக்தி இயக்கத்தில் காணப்படுகின்ற சில உண்மைகள், நம் இயக்கத்தில் எவ்வளவு சாதாரணமாக  இருந்திருக் கின்றன என்பதை அது எடுத்துக்காட்டும்.
எனக்கு இன்றைக்குப் பேச பேச, அதைக் கண்டு நானே வியக்கின்றேன். இந்த இயல்தான், குடும்பம், குடும்பம் என்று சொல்கிறோமோ அது எவ்வளவு சரியானது. திராவிடர் கழகக் குடும்பம் என்று விருந்து நடத்துகின்றோம். நான் சைவம்; புலால் சாப்பிடுவது இல்லை.  திராவிடர் கழகத்தில் இருந்துகொண்டு, புலால் சாப்பிடமாட்டேன் என்கிறாயே, நீ என்ன பார்ப்பானா? என்றார்கள். இங்கே ஒருமுறை கோரா அவர்களுடன் மாட்டுக்கறியைச் சாப்பிட்டேன்.
இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை மறந்துவிடாதீர்கள்!

நான் உங்களைப்போல இந்த இயக்கத்திற்காக கஷ்ட நஷ்டம் பட்டவன் அல்ல; போராட்டத்திற்குச் சென்றவன் இல்லை. ஒரே ஒருமுறை ஆசிரியர் தயவில், இந்தி எழுத்தை அழிப்பதற்காகச் சென்றேன். விருந்தாளிபோல கொண்டு சென்றார்கள்; ஆடாமல், அசையாமல் சிறைக்குச் சென்றேன். அப்படி சிறையில் இருக்கும்பொழுது ஒரு நாள் ராத்திரி நான் சிறை அதிகாரியிடம், ஏம்ப்பா, சாப்பாடு வருமா? இல்லை யென்றால் படுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டேன். உடனே ஆசிரியர் அவர்கள், இது சிறைச்சாலை; நாம் கைதி, அதனை மறந்துவிடாதீர்கள். இப்படி ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது. அது ஒன்றுதான் நான் செய்த தியாகம். மற்ற எதிலும் நான் ஈடுபட்டது கிடையாது. ஆனால், எனக்கே இவ்வளவு உணர்வு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் யாரும் அப்பழுக்கு சொல்ல முடியாது. என்னுடைய தந்தையார் அவர்கள் இறந்தபொழுது, சடங்கு எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேன். என்னுடைய சகோதரர்கள் எல்லாம், தம்பி அப்படி சொல்கிறான்; அப்புறம் என்ன என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய அம்மா, மாமியார், என்னுடைய மகன் இறந்தபொழுதெல்லாம்கூட சடங்கு ஏதுமின்றிதான் இறுதி மரியாதையை செய்தேன். மின்சார சுடுகாட்டில்தான் எரியூட்டினோம். இதுபோன்ற நிகழ்வுகளில் ஒழுங்காக இருப்பேன். மற்றபடி கஷ்ட நஷ்டங்களை ஏற்கின்ற அளவிற்கு நான் இந்த இயக்கத்திற்கு ஏதும் செய்யவில்லை. அதனை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால், அது ஒரு சுயநலம் என்று வைத்துக் கொள் ளலாம். நாம் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வுதான். அதற்கு வேறு காரணம் கிடையாது.

அம்மாவினுடைய வீர செயல்கள்!

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் எல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், உளுந்து போல உருண்டு கொண்டே இருப்பார். அதுபோல் எத்தனையோ பேர்! நான் என் சொந்த வாழ்க்கையை அதிகம் பார்த்துக் கொண்டாலும் எஞ்சிய நேரங்களில் என்னால் ஆன பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். எத்தனையோ மாணவர் களை நான் உருவாக்கியிருக்கிறேன்.

ராவண லீலாவைப்பற்றிச் சொல்லி நான் என் உரையை முடிக்கிறேன். அம்மாவினுடைய வீர மறச் செயல்கள்; துணிச்சல். நான் அன்றைக்குத் திடலில் இருந்தேன். ராவண லீலா நடைபெற்ற அன்றைக்குத் திடலில் நான் இருந்தேன். பரண் மேல் வைத்திருந்தார்கள் அந்த பொம்மைகளை யெல்லாம். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் தேடினார்கள். நான் அப்பொழுது அரசுப் பணியாளன். அந்த நிகழ்வுகளையெல்லாம் இந்த நூலில் அருமையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

நம் கொள்கை என்னவென்று தெளிவாக தெரியவேண்டும்

கட்டாயமாக நம்முடைய இயக்கத் தோழர்கள் முக்கியமாக இந்த வரிசையைப் படிக்கவேண்டும். பல பேர் சொல்லலாம், நான் கருப்புச் சட்டைதான் போடுகிறேன்; பெரியார் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன் என்று சொல்லலாம். அதெல்லாம் போதாது. எங்கேயாவது நம் முடைய எதிரிகள் கையில் சிக்கிக் கொண்டீர்களேயானால், அந்தப் பயல்கள் சில முரட்டுத்தனமான, முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்பார்கள். அப்பொழுது நாம் அதிலிருந்து மீளவேண்டுமானால், நமக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால்தான் இதுபோன்ற நூல்களைப் படிக்கவேண்டும். நம் கொள்கை என்னவென்று தெளிவாகத் தெரியவேண்டும்.
ஆனாலும் போய்விடுவான்; ஆகாது என்றாலும் போய் விடுவான் சில பேர் நம் இயக்கத்திலிருந்து சென்றிருப் பார்கள்.  தியாகம் எல்லாம் செய்திருப்பார்கள். திடீரென்று விபூதி பூசிக்கொண்டு, கோவிந்தா கோஷம் போட்டுக் கொண்டு செல்வார்கள்.

அய்யாவிடம் ஒரு கேள்வியை, ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள்:

அய்யா, எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்று அய்யா கேட்டார்.

சில பேர் நம் இயக்கத்திலிருந்து சென்றுவிடுகிறார்களே, நமக்குப் பிடிக்காத கொள்கைகளுக்குச் சென்று விடுகிறார் களே, அது எதனால் அய்யா என்று ஆசிரியர் கேட்டார்.

அய்யா அவர்கள் பதில் சொல்கிறார், ஒன்னு, இங்கே இருக்கும்பொழுது வேசம் போட்டிருப்பான்; நம் கொள்கை இருக்காது. ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருப்பான். ஆனவுடன் போய்விடுவான்; ஆகாது என்று தெரிஞ்சாலும் போய்விடுவான் என்று சொன்னாராம்.

இன்னொரு நிகழ்வை சொல்கிறேன்:

ஒருமுறை அய்யாவிடம், அய்யா டெபுடி கலெக்டர் வந்தாரே, அவர் சொன்னது ஆயிற்றா என்று கேட்டார்களாம்.

அய்யா உடனே,
அந்த ஆள் வந்தாரா? என்று கேட்டாராம்.

இல்லை என்று பதில் சொன்னார்களாம்.

உடனே அய்யா அவர்கள், அப்போ ஆயிருக்கும்; இல்லை என்றால் வந்திருப்பான் என்று சொன்னாராம்.

முதல் சொன்ன கேள்விக்கு வருகிறேன்,

அவன் நம் கொள்கை உடையவன்போல நடித்தானே தவிர, உண்மை இல்லை என்றார் அய்யா.

இல்லை, இல்லை அய்யா, அதெல்லாம் உண்மைதான். அவன் நெருப்பிலே போட்டெடுத்தவன் என்று சொன்னார்.

அப்படியானால், இப்பொழுது அவன் அங்கே வேசம் போட்டுக்கொண்டிருக்கிறான். அவனுக்கு பக்தியாவது, மண்ணாங்கட்டியாவது என்று அய்யா அவர்கள் சொன்னார்.

இந்த இரண்டு கூற்றுகளும் நம்முடைய மனதிலே நன்றாக இருக்கவேண்டியவை.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒரு கட்டத்தில் எனக்கு வலை பின்னினார்கள். அது சாதாரணமானதல்ல; நான் பேசுகின்ற கூட்டத்திற்கெல்லாம் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அய்யா நீங்கள் அங்கே பேசினீர்களே, இங்கே பேசினீர்களே, மிக அருமை; யாராலும் அப்படிப் பேச முடியாது என்று சொல்லி, வாழைப்பழத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு செல்வார்கள்.
குரங்குப் பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான் பிடிப்பார்கள்
எனக்கு சந்தேகம்; பாப்பான் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வருகிறான் என்றால் எதற்காக? ஒன்று அதில் விஷம் வைத்து நம்மைக் கொல்லவேண்டும்; இல்லையென்றால், அதனைக் காட்டி நம்மைக் கூண்டில் அடைக்கவேண்டும். குரங்கு பிடிப்பவர்கள் வாழைப்பழத்தை வைத்துத்தான் பிடிப்பார்கள்.

ஒருமுறை ராமகோபாலனையும், என்னையும் மோத விட்டார்கள்; பேசினோம். கலாட்டாவெல்லாம் நடை பெற்றது. பிறகு என் வீட்டிற்கு வந்தார்கள், நீங்கள் ஏன் பஸ்சில் போகிறீர்கள்? நாங்கள் ஒரு வீட்டை வாங்கித் தருகிறோம்; கார் ஒன்றை வாங்கித் தருகிறோம் என்றார்கள்.

நான் கேட்டேன், பஸ்சில் செல்கிறவர்கள் எல்லாம் கீழ்த்தரமானவர்கள் என்று முடிவு செய்திருக்கிறீர்களா என்று.

இல்லை இல்லை, உங்கள் விலை மதிப்பில்லாத காலம் வீணாகப் போகிறதே, கார் இருந்தால் நீங்கள் பத்து காரியங் களை முடிப்பீர்கள் அல்லவா என்று சொன்னார்கள்.

அவர்கள் ஒருமுறை குருதிக்கொடை முகாம் ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காக அழைக்க வந்தார்கள்.

நான் சொன்னேன், நான் யார் என்று தெரியாமல் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொன்னேன்.

இல்லை, இல்லை உங்களைப்பற்றி எங்களுக்கு நன்றா கத் தெரியும். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பேசியிருக் கிறீர்கள் என்று சொன்னார்கள்.
நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு ஒத்து வராது!

நாங்கள் எந்தப் பகுதியில் விழா நடத்தினாலும், அந்தப் பகுதியில் செல்வாக்குள்ளவர்கள் யார் என்று பார்த்தோம்; சைதாப்பேட்டையில் உங்களைத்தான் எல்லோரும் சொல் கிறார்கள் என்று.
அவர்கள் சொன்னது பச்சைப் பொய். விஜிபி இருக்கிறார்; நடிகர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், என்னைத்தான் எல்லோரும் சொன்னார்கள் என்று சொன்னார்கள்.

பிறகு என்னால் மறுக்கமுடியாமல், நான் சொன்னேன் நான் அந்த நிகழ்விற்கு வரவேண்டும் என்றால், நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு ஒத்து வராது என்று சொன்னேன்.


என்ன ஒத்து வராது என்று கேட்டார்கள்.

நீங்கள் சாமி கும்பிடுவீர்கள்; குத்துவிளக்கு ஏற்றுவீர்கள் என்று சொன்னேன்.
உடனே அவர்கள், ரிப்பன் கட் செய்வதற்கு உங்களுக்கு ஆட்சேபனை இல்லை அல்லவா என்று சொன்னார்கள்.

அதுமட்டும்தான் இருக்கும்; வேறு எதுவும் நாங்கள் செய்யவில்லை. சாமி படமே இருக்காது; தேங்காய் மற்றவை எதுவும் இருக்காது என்று சொன்னவுடன், என்னால் மறுக்க முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் அவ்வளவு கார்கள் கிடையாது

என்னை அழைத்துச் செல்வதற்கு கார் ஒன்று வந்தது; காருக்கு முன்பு இரண்டு பேர்; காருக்குப் பின்பு இரண்டு பேர் என்று மோட்டார் சைக்கிள்களில் பைலட் வருகிறார்கள்.

அந்த நிகழ்விற்குச் சென்றேன். ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் கார்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன. நான் சொல்வது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு. அப்பொழுதெல்லாம் அவ்வளவு கார்கள் கிடை யாது; இப்பொழுதுதான் கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிதல்ல.
நான் சென்றதும், என்னை வரவேற்றனர். ஒரு சடங்கு மின்றி நிகழ்வு ஆரம்பித்தது.

வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் நான் என்னவெல்லாம் சொல்வேனோ, அதையெல்லாம் அவரே சொன்னார். நான் அதற்கு மேலே சொன்னேன். கடைசியில், வாலண்டரி ஹெல்த் சென்டர் வைத்திருப்பவர் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியருடைய பேச்சை நான் இன்னும் இரண்டுமுறை கேட்டேன் என்றால், நான் நாத்திகனாகவே மாறிவிடுவேன் என்று பேசினார்.
இப்பொழுதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறு கின்றன. அதற்கு என்ன காரணம் என்றால், நான் கொஞ்சம் பக்குவமாக, கொஞ்சம் இணக்கமாக உரையாற்றுவதால், ஓகோ, இவன் நம்முடைய ஆள், இவனை இழுத்துவிடலாம் என்று அவன் நினைப்பதால்தான், இப்பொழுதுதான் திட்ட ஆரம்பித்திருக்கிறேன்.

இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும்

ஆகவே, நண்பர்களே, திராவிடர் கழகம் இந்த நாட்டிலே என்றைக்கும் இருக்கும்; இருக்கவேண்டிய  ஒரு அமைப்பு. அதற்கு இத்தகைய பணி - இந்த நூலாசிரியர் அவர்கள் எத்தனையோ நூல்களை எழுதியிருக்கிறார்கள். இந்த நூலுக்குத் தலைமையிடம் கொடுக்கவேண்டும். அப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். இந்த நூலினை வெளியிடுகின்ற பெரும்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன். நான் எதற்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நீங்கள் சொல்கின்ற வேலையைச் செய்யக்கூடியவன். அதனால், அந்த மன நிறைவோடு என்னுடைய உரையை முடித்துக் கொள் கிறேன்.

- இவ்வாறு பெரியார் பேருரையாளர் முனைவர் மா.நன்னன் அவர்கள் உரையாற்றினார்.

திராவிடர் இயக்கத்தில் இணக்கம் - பிணக்கம்
என்கிற நூல் வெளிவரவேண்டும்


அன்னையார் வரவைப்பற்றி, அண்ணாவும், கலைஞரும், மற்றவர்களும் பேசியவை, எழுதியவை - அவர்களே பிறகு அன்னையாரைப்பற்றிப் பேசியவை, எழுதியவை, பாராட்டியது என்றெல்லாம் உண்டு. இங்கே நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திராவிடர் இயக்கத்தில் இணக்கம் - பிணக்கம் என்கிற நூல் வெளிவரவேண்டும். இங்கே உள்ள இணக்கத்திற்கும், பிணக்கத்திற்கும்; மற்றவர்களுடைய இணக்குப் பிணக்குகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. - புலவர் மா.நன்னன்
 
                          ---------------------------------”விடுதலை” 26-4-2014

47 comments:

தமிழ் ஓவியா said...


புதிய கடவுள் புல்லட் மோட்டார் பைக்கிற்குக் கோவில்!


முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், முதற்கொண்டு, எலி, மூஞ்சுறு, நாய் (பைரவன்), பன்றி (வராக அவ தாரம் மகாவிஷ்ணு), கழுதை மூதேவி வாகனம் எல்லாம் தொழுவதற்குரிய அல்லது சகுன சாங்கியங்களுக்குரிய கடவுள்கள் நம் நாட்டில்!

இதெல்லாம் இல்லாமல் ஆங்காங்கே, சனீஸ் வர பகவானுக்கு, திருமணம் செய்து வைக்க அருள்பாலிக்கும் திருமணேஸ்வரர், சொறி, சிரங்கு, படை போக்க தனிக்கடவுள், வைத்தீஸ் வரன் என்ற ஹெல்த் டிபார்ட்மெண்ட் கடவுள் மாதிரி, டஜன், குரோஸ், மில்லியன் கணக்கில் உள்ள கடவுள்கள் போதாது என்று, ராஜஸ்தானில் புல்லட் மோட்டார் சைக்கிளும் புதிய அவதாரம் எடுத்து, புல்லட் மோட்டார் சாமியாகி, ஏகப்பட்ட வசூலைக் குவிக்கிறதாம் வடநாட்டில்!

இதோ அந்த செய்தி:

19.4.2014 தினமலர் நாளேட்டில் வந்துள்ளபடி (பக்கம் 6, புதுச்சேரி பதிப்பு):

ராஜஸ்தானில், ஜோத்பூர் நகரில், பழைய, புல்லட் மோட்டார் பைக்கை, கடவுளாக வழி படும் விசித்திர நடைமுறை பின்பற்றப்படு கிறது. இந்த பைக்கிற்காக, அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

பயபக்தியுடன் வழிபட்டு...

பா.ஜ.க.வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத் தின், ஜோத்பூர் நகரில், ஓம் பன்னாஸ் புல்லட் மந்திர் என்ற கோவில் மிகவும் பிரபலம். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்தக் கோவில் வழியாகச் சென்றால், உதறல் எடுத்துவிடும். இருசக்கர வாகனத்தில் செல்லும், ஒவ்வொரு வரும், கண்டிப்பாக, இந்தக் கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தி, அங்கிருக்கும் புல்லட் கடவுளை, பயபக்தியுடன் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

அப்படி, பைக்கை நிறுத்தாவிட்டால், போகும் வழியில், விபத்தைச் சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை, இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது. பூனம் என்ற பெண்தான், இந்தக் கோவிலின் பூசாரி யாக உள்ளார். விசித்திர நம்பிக்கை குறித்து அவர் கூறியதாவது:

இது, ரொம்ப சுவாரசியமான சம்பவம்! 25 ஆண்டுகளுக்குமுன்பு, இந்த வழியாக, ஓம் சிங் ரத்தோர் என்பவர், புல்லட் பைக்கில் சென்ற போது, விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவர் ஓட்டிச் சென்ற பைக்கை, போலீஸ் ஸ்டேச னுக்கு எடுத்துச் சென்றனர். அடுத்த நாள், அந்த பைக், விபத்து நடந்த இடத்தில் கிடந்தது.

இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த போலீசார், மீண்டும் அந்த பைக்கை போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த நாளும் அந்த பைக், விபத்து நடந்த இடத்திலேயே கிடந்தது. இது, அந்தப் பகுதி மக்களிடையே பீதியையும், ஆச்சரியத் தையும் ஏற்படுத்தியது.

இதனால், விபத்து நடந்த இடத்திலேயே, அந்த புல்லட் பைக்கை வைத்து, வழிபடத் துவங்கினர்.

நாளடைவில், அந்த பைக்கிற்காக கோவி லும் கட்டப்பட்டது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் இருந்து தப்பிப்ப தற்காக, இங்கு வண்டியை நிறுத்தி வழிபாடு நடத்துகின்றனர். புல்லட் கடவுளுக்கு, மது பானங்களைப் படைத்து வழிபடும் சடங்கும் பின்பற்றப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசு வார்; நல்லவேளை வெள்ளைக்காரன் வந்து, இந்த மைல்கல், பர்லாங் கல் (அப்போது கிலோ மீட்டர் அமுலுக்கு வராத காலம் என்பதால்) இவைகளை நட்டதோடு, வெள்ளையடித்து, எண்களையும் போட்டான்; இல்லையேல், ஒவ்வொரு கல்லுக்குப் பக்கத்திலும் ஒரு பார்ப்பான் நின்று, இது மைலீஸ் வரர் கும்பிடுங்கோ!, இது பர்லாங்கீஸ்வரர், கும்பிடுங்கோ! என்று உங்கள் காசைப் பிடுங்கி இருப்பார்களே! என்று பலத்த சிரிப்பு - கைத்தட்டலுக்கிடையே கூறுவார்கள்!

அது வெகுவாக மாறி, மக்களுக்கு அறிவு வருவதற்குப் பதிலாக, இப்படி புதிது புதிதாக புல்லட் சாமிகள் புறப்பட்டு விட்டனவே!

இனி, வீடியோ சாமி, செல்சாமி, கம்யூட்டர் - அய்பேடு சாமி - அய்யப்பனுக்குத் தம்பி சாமி போல் வந்தாலும் ஆச்சரியமில்லை!

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பாரு இவ்வளவு மடத்தனத்தில்

எங்கள் பூமி ஞான(சூன்ய)பூமி!

என்றே பாடு! பாடு!!


- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/79310.html#ixzz302SRlAmp

தமிழ் ஓவியா said...


பெருமாள் போய் பெத்த பெருமாளா?


பெருமாள் என்ற பெயர் நன்றாக இல்லை என்று சொல்லி, பெத்த பெருமாள் என்று பெயர் வைத்துக் கொண்டதைப்போல - நரேந்திர மோடியின் சொத்துக் கணக்கு வதேரா தொகுதிக்கும், வாரணாசிக்கும் இடையில் ரூ.14.31 லட்சம் வேறுபட்டது ஏன் என்ற கேள்விக்கு, பி.ஜே.பி. புதிய கதையை ஜோடித்துள்ளது.

மோடியின் வங்கிக் கணக்கிற்குக் கட்சியிலிருந்து மாற்றப்பட்ட தொகையால் இது நடந்தது என்று கூறப்படுகிறது.

கட்சியிலிருந்து எப்படி இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்? அப்படி மாற்றப்பட்டதற் கான ஆதாரம் என்ன என்பது போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/79306.html#ixzz302Sktloq

தமிழ் ஓவியா said...


நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே. - (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/79325.html#ixzz302SzSwh7

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட கொடுமை!

மாண்டியா, ஏப்.26- கருநாடகா மாண்டியா மாவட்டத்தில் மானவள்ளி வட்டத்தை அடுத்த கண்ணஹள்ளிப் பகுதியில் இளம்பெண் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் அவர் உறவினரால் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டார். மைசூரை அடுத்த மெட்டஹள்ளி பைரவேசுவரா நகரைச் சேர்ந்த முருகேஷ்-மங்கலம்மா ஆகியோரின் மகள் ஷில்பா(19). கடந்த ஜனவரியில் இவர் சொந்த ஊரான நேலம கண்ணஹள்ளியைச் சேர்ந்த அபிஜித் என்பவரைத் திரு மணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த புதனன்று அபிஜித்தின் உற வினர்களான பட்டுசாமி-பிரமிளா இணையர் இருவரும் ஷில்பாவை ஒரு விழாவுக்கு அழைத்துள்ளனர். வியாழ னன்று முதுகுத்தூரில் ஒரு விழாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஷில் பாவை தனியாக அழைத்துச்சென்று கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ய முயற்சித்தனர். ஷில்பா தப்பிக்க முயன்ற போது, பெட்ரோலை அவர்மீது ஊற்றித் தீவைத்துள்ளனர். ஷில்பாவின் கதறல் கேட்டு கிராமத்தினர் திரண்டு வந்த போது, அவ்விணையர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

கடுமையான தீக்காயங் களுடன் ஷில்பாவை மீட்டு மாளவள்ளி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்கு மாண்டியாவில் உள்ள விம்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். வியா ழக்கிழமை பிற்பகலில் சிகிச்சை பல னின்றி மருத்துவமனையிலேயே ஷில்பா இறந்துவிட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் பூஷன் போரோஸ் இதுகுறித்து கூறும் போது, தப்பி ஓடிய இருவரில் பிரமிளா வைக் கைது செய்துள்ளதாகவும், தலை மறைவாகி உள்ள பட்டுசாமியைத் தேடி வருவதாகவும் கூறினார். மேலும், ஷில் பாவின் கணவனான அபிஜித் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண் டுள்ளதாகவும் கூறினார்.

ஷில்பாவின் தாய் மங்கலம்மா மாளவள்ளி காவல்நிலையத்தில் அளித் துள்ள புகாரில்,
அவர் மகள் ஷில்பாவை அவளின் கணவனின் உறவினர்கள் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, என் கணவர் தமிழ்நாட்டில் பிழைப்புக்கு சென்றுள்ளார். என் மகளின் இறுதி மரி யாதையை நடத்தக்கூட பணம் இல் லாமல் அரசிடம் கேட்டுள்ளோம்.

சமூக நல நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன. மாண்டியாவின் பொறுப்பு வட்டாட்சியரும், மத்தூர் வட்டாட்சியருமாகிய மஞ்சே கவுடா அப்பெண்ணின் தாயார் மனு கொடுத்த பிறகுதான் அதுபற்றி முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.

மாநில அரசு மாநில மகளிர் ஆணை யத்துக்கு தாமாகவே இதுகுறித்து புகாரைப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மாநில அமைச்சர் உமாசிறீ பெங் களூருவில் கூறும்போது, கலாச்சாரத் துறை சார்பில் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் உறுதி யாக செய்து குற்றவாளிகளை சட்டத் தின்முன் நிறுத்துவோம் என்றார்

Read more: http://viduthalai.in/page-2/79328.html#ixzz302T7sLH3

தமிழ் ஓவியா said...


மோடி அலை: கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சாரம்: புத்ததேவ் பட்டாச்சார்யா


கொல்கத்தா, ஏப். 26- மோடி அலை வீசுகிறது என் பது இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களின் பிரச்சாரம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒரு வரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

இது பற்றி செய்தியாளர் களிடம் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியதாவது: மோடி அலை என்று எதுவும் இல் லை. மோடி அலை என்று கூறப்படும் விஷயம் இந்தி யாவின் மிகப்பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களின் பிரச் சாரம்.

கார்ப்பரேட் நிறுவனங் களின் முதலாளிகளால், ஒரு விஷயத்தை உருவாக்கவும், ஒரு விஷயத்தைக் கெடுக் கவும் முடிகின்றது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த கார்ப்பரேட் நிறுவ னங்கள் பெரிய மீடியாக் களுக்கு பெரும் தொகை கொடுத்து, மோடி பிரச்சாரம் செய்யச் செய்கின்றன.

கடந்த சில மாதங்களாக வே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகின்றேன். எந்த மாவட்டத்திலும் மோடி அலை என்று எதுவும் தெரிய வில்லை. சில மீடியாக்கள் மோடி அலை வீசுவதாக செய்திகள் வெளியிடுகின் றன. நாடு முழுவதும் பல் வேறு பகுதிகளில் தேர்தல் நடக்கும்போது, மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை தொலைக் காட்சிகள் காட்டுகின்றன. இதுவும் ஒருவகையான பிரச்சாரம்தான். இது மக்கள் மத்தியில் தாக்கத்தை எற் படுத்தும். இது குறித்து தேர்தல் ஆணையத்தைன் கவனத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டாலும், அந்த விஷ யம் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்கள் எதிர் காலத்தில் நடக்காது என்று நம்புகிறேன்.

இது தவிர பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குஜ ராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தை மட்டுமே பேசு கிறது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங் களின் வளர்ச்சித் திட்டம் இருப்பினும், இந்த மோ அலை மூலமாக மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக வுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அப்படி ஒன்று நடக்காது. இந்த மா நிலத்தில் உள்ள மக்கள், தனிப் பட்ட சமூகத்திற்கு அப்பாற் பட்ட வகையில் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு இந்த மாநில மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/79313.html#ixzz302VpL12C

தமிழ் ஓவியா said...


பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா


செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும், பொதுஜனங்கள் கவனித்திருக்கலாம்.

அத்தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரியமில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம்.

ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமலுக்கு கொண்டுவர பரோடா அர சாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29.03.1929ஆம் தேதி இந்து சுதேசமித்திரன் சுயராஜ்யா ஜஸ்டிஸ் முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த, இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்டபோது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதைக் கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு பிரிவுக்கும் சாஸ்திர ஆதாரங்களை காட்டியிருக் கின்றார்களாம். இனி இதைக் கேள்விப்படும் தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பெண்களை காப்பாற்ற பரோடா சமதானத்திற்கு ஓடுவார்களா? அல்லது இங்கேயே மூலையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் பெருமையை பேசிக் கொண்டு வயிறு வளர்ப்பார்களா? என்பது பொறுமையுடன் எதிர்பார்க்க வேண்டிய விஷயமாகும்.

பெண்களின் சுதந்திரத்திற்கு முதலாவது அவர்களுக்குக் கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை அளிப்பதே முக்கியமானதாகும்! இது விஷயமாய் நமது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இம்முறை சில பாகங்களில் நடைபெறுவதையும் ஜெர்மனி பார்லிமெண்டில் ஒரு மசோதா கொண்டுவந்திருப்பதையும், ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி,

ஸ்காண்டிநேவியா, செக்கோஸ்ல வாக்கியா, ஹாலண்டு, நியூசிலாந்து, ரஷ்யா, டென்மார்க், கானடா முதலிய தேசங்களிலும் கல்யாண ரத்துக்கனுகூலமாக உள்ள சட்டங்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டி பரோடா சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருப்பதையும் பார்த்துவிட்டோம். இனியும் நமது தமிழ் நாட்டிலும் பழந்தமிழ் மக்களில் ஏறக்குறைய அநேக வகுப்புகளில் இவ்வழக்கம் இன்றும் இருந்து வருவதையும் நடைபெற்று வருவதையும் பார்க்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.03.1929

Read more: http://viduthalai.in/page-7/79299.html#ixzz302WCaF9s

தமிழ் ஓவியா said...

மாளவியாவின் பித்தலாட்டம்

திரு.பண்டிதர் மதன் மோகன் மாளவியா சென்னை மாகாணத்திற்குள் கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி ஜனங்களை ஏமாற்றி வந்ததும் அந்தப் புரட்டுகளைப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் மித்திரனிலும் திராவிடனிலும் பார்த்திருக்கலாம்.

அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு கடைசியாக சென்னையில் 22ஆம் தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்ட மொன்றில் சிக்கி தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோயிலுக்குள் பிரவேசிப்பதற்குச் சாஸ்திரத்தில் இடமில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவி யாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத் தனத்திற்கு ஒரு உதாரணமாகும்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 26-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79299.html#ixzz302WM8Btd

தமிழ் ஓவியா said...

வரதராஜூலுவின் விஷமப் பிரச்சாரம்

தமிழ்நாடு பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சல் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வே.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டு விட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத்தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு, அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார்.

திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும், முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும், நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும், தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இதனால் தமிழ்நாடு பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரியையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகிவிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ் தானக் கமிட்டியார் அத்தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திரு. ஈ.வெ.ராமசாமியார், கமிட்டி வைஸ் பிரசிடெண்ட் தானத்தையும், மெம்பர் தானத்தையும் ராஜினாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தைச் சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ, அமலில் கொண்டுவரும் வேலையில் இறங்குபவரே ஒழிய உடம்புக்குச் சவுகரியமில்லை என்று சாக்குச் சொல்லிக் கொண்டு புறமுதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதைத் திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dqEl2E

தமிழ் ஓவியா said...


நாஸ்திகத்திற்கு முதல் வெற்றி


நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும் பல கூலிகளை விட்டு விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்தில் தேர்தல் பிரச்சாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்கும் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும்.

இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன் பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரிட்சை நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் தானம், அதாவது சுதேசமித்திரன் இந்து ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் தானம் காலாவதி ஆனதும் அந்த தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டு விட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா, சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர் களாயிருந்தும் ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும், அவரது சகபாடிகளும், திரு.புர்ரா. அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம்,

சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப்பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரச்சாரம் செய்தும் கடைசியாய் திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்ப ரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே, திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள்.

இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது, கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர் களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண் டிருக்கவும்,

அதாவது ஐஸ்டிஸ் கட்சியின் ஜீவநாடி என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, செனட் தொகுதி யில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல் லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் நாஸ்திகத்திற்கு, (அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத் திற்கு) முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப்பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 07-04-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302e2e2rr

தமிழ் ஓவியா said...

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!

முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர் பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம்.

மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன் பெண்கள் உபாத்தியாயர்களாவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனை முறைப் பாடசாலை களையும் ஏற்பாடு செய்யவேண்டுமாய் விழைகின்றோம்.

குடிஅரசு -துணைத் தலையங்கம்- 12-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302eGOswP

தமிழ் ஓவியா said...


அறம் அநீதிக்கு எதிராக இருக்க வேண்டும் சென்னை புத்தகச் சங்கமத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்


சென்னை புத்தகச் சங்கமத்தில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து நூல்கள் வழங்கினார் (25.4.2014).

சென்னை, ஏப். 26- சென்னை இராயப்பேட்டை ஒய்.எம் .சி.ஏ. மைதான வளாகத்தில் வெகு நேர்த்தியாக அமைக் கப்பட்ட சென்னை புத்தகச் சங்கமத்தில் நாட்டின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகைப்பட்ட பதிப்பகத்தார் தங்கள் நூல் களை பார்வையாளர்கள் தேர்வு செய்திட எளிதாக காட் சிப்படுத்தி வைத்திருந்தனர்.

தினத்தந்தி, தினகரன், நக்கீ ரன், விகடன், வைகறை வெளிச்சம், புதிய வாழ்வியல் இதழ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களைச் சார்ந்த பதிப் பகங்களின் வெளியீடுகள், டில்லியிலிருந்து முன்ஷிராம் பதிப்பகத்திலிருந்து முனை வர் பட்டம், ஆய்வாளர்கள், பட்டமேற்படிப்பு படிப்ப வர்களுக்கு என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன.

உலகப்போர்கள் குறித்த படக்காட்சிகளுடன் கூடிய புத்தகங்கள், உலக வரலாற்று நூல், அறிவியல் செயல்முறை விளக்க நூல்கள், மூலதனம், பொதுவுடைமை தத்துவ நூல்கள், ரிக், யஜுர், சாம, அதர்வண வேத நூல்கள், கிறித்துவ கிடியான் பைபிள் கள், குர்-ஆன் தமிழாக்க நூல் கள், சிறுவர்களுக்கான அறிவு வளர்ச்சி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட பதிப் பகங்களின் நூல்களின் திரட் டாக சென்னை புத்தகச் சங்க மம் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

பார்வையா ளர்கள், வாசகர்கள் ஏராளமா னவர்கள் திரண்டு பார்வை யிட்ட வண்ணம் இருந்தனர். குறிப்பிட்ட சில நூல்களை வாங்குவதற்காக வந்தவர் களும், பல்வேறு பதிப்பகங் களின் வெளியீடுகளைக் கண்டு எதை வாங்குவது, எதை விடுப்பது என்று முடிவு செய்யாமல் திண்டாடினர் என்றே கூறலாம். அந்த வகை யில் சென்னை புத்தகச் சங்க மம் அனைத்து தரப்பு பதிப் பகத்தினருக்கும் வாசலாக இருந்தது.

தமிழ் ஓவியா said...


வாசகர்களை கவர்ந்திழுப்பதில் பதிப்பகத் தாரிடையே ஆரோக்கிய மான போட்டி நிலவியதைக் கண்கூடாக காண முடிந்தது. பத்து நாட்களா என்று நினைத் ததுபோய் பத்தே நாட்கள் தானா? என்று கேட்கும் நிலை பதிப்பகத்தாரிடையே யும், பார்வையாளர்கள் மற் றும் வாசகரிடையேயும் ஏற் பட்டுள்ளது.

மாலைநேர இன்னிசை யாக சுக பாவலன் குழுவினர் வழங்கிய வயலின் இசை நிகழ்ச்சி அரங்குகளில் பார்வை யிட்டுக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

அரங்குகளில் புத்தகங்க ளைப் பார்வையிட்ட வண் ணமும், மேடையின் அருகி லும் திரண்டிருந்தவர்கள் இசை அமுதைப் பருகினர். புரட்சிகர எழுத்தாளர் என்று கலைஞரின் பாராட்டு பெற்ற எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் மனம்திறந்த உரை யாக, குடும்ப உறுப்பினர்க ளிடம் இயல்பாக பேசுவது போல் உரை ஆற்றினார்.

அவர் பேசும்போது, உண்மையி லேயே சென்னைப் புத்தகச் சங்கமம் எதிர்பாராத, இக்கட் டான நேரத்தில் நடைபெற்று வருகிறது. எல்லோருடைய கவனமும் வேறு திசையில் இருக்கும்போது, இரண்டு, மூன்று மாதங்களில் திட்ட மிட்டு நடத்துவது மிகப்பெரிய சாதனை. கண்காட்சியை நடத் துவதில் உள்ள சிரமங்கள் தெரியும். சமூகத்திற்கு கல்வி அளிக்கும் பணியாக சென்னை புத்தகச் சங்கமம் உள்ளது.

சென்னை புத்தகச் சங்கமத்தில் இன்னிசை இளவல் சுக.பாவலன் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. (25.4.2014)

தினமும் உரைகள், இப்படிப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து, மக்கள் குறைவாக இருந்தால் ஆழ்ந்த வருத்தம் ஏற்படுகிறது. வெறுமனே புத்தகங்கள் விற்பனைக்கு என்று பார்க்காமல், கருத்துக் கள், புத்தகங்கள் சமூகத்து டன் தொடர்பை ஏற்படுத்து பவை என்று பார்க்க வேண் டும்.

வாக்குப்பதிவு விழுக் காட்டில் தென் சென்னையில் மிகக்குறைவாக உள்ளதாக செய்திகளில் பார்த்தேன். அதி கம் படித்தவர்கள் இருக்கும் பகுதியில் குறைவான விழுக் காடு என்றால், படித்தவர்கள் மத்தியில் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.

மயிலை பகுதியில் கேட்டால் சர்வாதிகாரம்தான் வேண்டும் என்று படித்தவர் கள் எண்ணுகிறார்கள். ஜன நாயக அமைப்பால் பயன் இல்லை என்று எண்ணுகிறார் கள். நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும்தான் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள்.

படித்த வர்களிடையே தலைகீழ் மாற் றமாக உள்ளது. தமிழ்நாட் டில் மட்டுமன்றி இந்த நிலை இந்தியா முழுவதும் உள்ளது. யார் பிரதமராக வேண்டும் என்று கேட்டால் 65 விழுக் காட்டினர் பதில் கூறுகிறார் கள். ஜனநாயக அமைப்பு மூலம்தானே அமைய முடி யும்? ஜனநாயகம் மூலம் யார் வரவேண்டும் என்றும் கருத்து கூறுகிறார்கள்.

வயலின் இசை நிகழ்ச்சி வழங்கிய சுக.பாவலன் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பயனாடைகள் அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (25.4.2014).

தமிழ் ஓவியா said...


சர்வாதிகார மும் வேண்டும் என்கிறார் கள். ஜனநாயகமும், சர்வா திகாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்பது பலருக்கும் தெரியாது. அதிக இளைஞர்கள் வாக் களிப்பதாக செய்திகள் கூறு கின்றன. இளைஞர்கள் வாக் களிப்பதற்கு தயாராகி விட் டார்களா? எல்லாவித பிற் போக்குத்தனத்தையும், சமூக விரோத கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பவர்களாக இருக் கிறார்கள்.

அவர்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் தொடர்பு இல்லை. பெற்றோர் களும் பணம் சம்பாதிக்கும் ஏடிஎம் எந்திரங்களாகத்தான் பிள்ளைகளை மாற்றுகிறார் கள். கல்லூரி மாணவரிடையே அரசியல், சமூக இயக்கங்க ளுடன் தொடர்பு கிடையாது.

இங்கு தலைப்பு ஆயிரம் பூக் கள் மலரட்டும் என்பதாகும். ஊடக சுதந்திரம் நினைப் பதை எழுத வாய்ப்பு இருப் பதாக நினைக்கிறோம். மேலி ருந்து கீழாக ஊடகங்கள் மூலம் கருத்துகள் வருகின்றன. என்னுடைய 14 வயதில் முதல் எழுத்து முயற்சியாக நான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்காக சுவரொட்டி, கை யெழுத்து இயக்கமாக எழுதி வந்துள்ளேன். வாக்களிப் பதை மறுப்பவர்கள், புத்தகக் காட்சிக்கு வருவதில்லை.

அவர்களுக்கு என்று எங்கோ, யாரோ சிந்திக்கிறார்கள். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். தனிநபர் மற்றும் வழிபாட்டு அரசியல் முறையில் அப் படியே ஏற்றுக்கொள்கிறார் கள். உண்மை என்ன என்று கேள்வி கேட்பதே கிடை யாது. ஒருமுறைகூட கேள்வி கேட்டதில்லை. எத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந் தெடுப்பார்கள் என்கிற கவலை அளிக்கின்றது. இளை ஞர்கள் மத்தியில் சுய சிந்தனை, சுயபரிசோதனை வேண்டும்.

மருமகளை அடிமைப்படுத்தும் மாமி யார்போல் ஊடகங்களால் அடிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். மனிதனாகத் தான் இருக்கிறோமா? எல் லோரிடமும் சகஜமாக இருக் கக் கற்றுக்கொண்டோம். எல்லாவற்றையும் மன்னிக் கிறோம். பத்து ஆண்டு களுக்கு முன் ஒருவன் செய்த படுகொலைகளை, அய்ந்து ஆண்டுகளுக்குமுன் என்ன நடந்தது என்பதை எண்ணுவ தில்லை. இணக்கமாகி விடு வதால் புதிய குற்றத்துக்கு உடந்தையாக ஆகி விடு கிறோம்.

வரலாற்றில் குற்றங் களுக்கு அங்கீகாரம் அளித் தோம் என்று இருக்கும். ஒரே நபரிடம் முற்போக்கு கருத் தும், பிற்போக்கு கருத்தும் நிலவுகிறது. தமிழ்த் தேசியம் பேசுபவர் வீட்டில் பெண் ணடிமைத்தனம் இருக்கும் இதுபோன்ற முரண்பாடு களின் மூட்டைகளாக இருக் கிறோம்.

நன்மை, தீமை இரண்டையுமே நம்மில் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள் கிறோம். அறம் என்பது அநீதிக்கு எதிராக இருக்க வேண்டும். அரசியல்ரீதியாக சீர்குலைவு ஏற்பட்டுவிடு கிறது. ரத்தக்கரையுடன் இருப் பவரிடையே முன்னேற்றம், வளர்ச்சி என்று பேசிக் கொண்டு இருக்கும் அவலம் உள்ளது. எளிய மக்களை அழித்து வல்லரசு என்று பேசுவது யாருக்காக? அரசி யலை மதம்போல் ஆக்கி விட்டு பலிகள் கொடுக்க தயாராகி விட்டோம்.

சவால் களை சந்திக்க அறம் சிறி தேனும் இருக்க வேண்டும். ஊடகக் கருத்தியல் பரவ லாக்கல் என்பது வேட்டை யாடப்படும் நிழலைப் போன்றது. யாரிடம் பணம் அதிக மாக இருக்கிறதோ, அவர் மூலம் ஊடகங்கள் இயக் கப்படுகின்றன. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்கிற இந்த நேரத்தில் புழுக்கமான சூழ்நிலையில் சவால்களை எதிர்நோக்கி உள்ளோம் - இவ்வாறு மனுஷ்யபுத்திரன் பேசினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை புத்தகச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்கள் வீ.அன்புராஜ், ஊடகத் துறைப் பொறுப்பாளர் பிரின்சு என் னாரெசு பெரியார் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/79333.html#ixzz302eSeEsA

தமிழ் ஓவியா said...

தேர்தலில் பெண்கள் எங்கே?


- கவிஞர் கலி. பூங்குன்றன்

1996ஆம் ஆண்டு முதல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சினை நிலுவையில் நிற்கிறது - அந்தப் பிரச்சினை பல பிரதமர்களை விழுங்கி ஏப்பமிட்டு விட்டது.

அந்த அணையாத நெருப்பு. நடந்து கொண்டுள்ள 16ஆவது மக்களவைத் தேர்தலிலும்கூட சுட்டுத் தீக்காயங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத் திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பதுதான் அந்தப் பிரச்சினை!

கொள்கையளவில் ஒப்புக் கொள் வதாகக் கூறும் கட்சிகள்கூட நடை முறைக்கு வரும் பொழுது நழுவி விடு கின்றன.

எல்லா அரசியல் கட்சிகளுமே ஆண் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண் டவைதானே!
நூறு இடங்களுக்கு 33 பெண்கள் என்றால் நமது தொகுதி என்னாவது என்று அவரவர்களும் தனது நிழலிலேயே ஒளிந்து கொள்ளும் சுயநல வெறியால் உந்தப்படுகின்றனர். இந்த நிலையில் பெண்ணுரிமைக்கு முன்னுரிமை என்று மனதார எப்படி அவர்கள் செயல்படுவார்கள் என்று எதிர் பார்க்க முடியும்?

ஏற்கனவே அரசியலில் இருக்கும் பெண்களாவது உ.ரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களா? தனக்கு மற்ற பெண்கள் போட்டிக்கு வராமல் இருக்கிற வரை இலாபம் என்கிற வார்த்தக மனப் பான்மைதான் நிலவுகிறது.

டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்முறைக்கு ஆளாக் கப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மக்களவையில் அதிகாரப் பூர்வ எதிர்க் கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் (பிஜேபி) வெளிப்படுத்திய சொல்லாடல் அவரை அங்குலம் அங்குலமாகக் குத்திக் குதிங்கால் எலும்பை முறிக்கவில்லையா?

நடைப் பிணம் என்பதுதான் சுஷ்மா பயன்படுத்திய அந்த நாராசச் சொல்!

பிஜேபியைப் பொறுத்தவரை அதன் இந்துத்துவா சிந்தனை என்பது உடன் பிறந்தே கொல்லும் பொல்லா நோயாகும்.

பெண்களை ஒரு திடப் பொருளாக மட்டுமே கருதுவதுதான் இந்துத்துவா மனப்பான்மையாகும்.

நரேந்திரமோடி முன்னின்று நடத்திய குஜராத் மதக் கலவரத்தில் இஸ்லாமிய பெண்களையெல்லாம் சங்பரிவார்க் கும்பல் எப்படியெல்லாம் கொத்திக் குதறியது? கருவுற்ற பெண்கள் என்று கூடப் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய அநாகரிகக் கும்பலாயிற்றே!

1998 செப்டம்பர் 25இல் மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுலா கிராமத்தில் என்ன நடைபெற்றது? கிறித்துவர்கள் நடத்தும் அந்த மருத்துவமனையை நள்ளிரவில் கதவு தட்டி, திறக்கச் செய்து, அங்கு பணியாற்றும் நான்கு கன்னிகா ஸ்திரிகளைத் துடிக்கத் துடிக்க, கதறக் கதற வன்புணர்வு செய்து கசக்கித் தூக்கி எறிந்தனரே!

அந்தக் கொடிய செயல் குறித்து பி.ஜே.பி.யைச் சேர்ந்த மக்களவை முன் னாள் உறுப்பினர் பைகுந்தலால் சர்மா (எம்.பி. சர்மா) திருவாய் மலர்ந்த திருவாச கம் என்ன தெரியுமா?

தேச விரோத சக்திகளுக்கு எதி ரான தேசப்பற்று மிக்க இந்து இளை ஞர்களின் கோபம் என்று கூறினாரே!

அதைவிட்டுத் தள்ளுவோம்! ஆர். எஸ்.எஸின் தீப்பொறிப் பேச்சாளர் ஒருவர் இருக்கிறார் - அவர்தான் சாத்வி ரிதம்பரா; அவர் மேடைகளில் சிந்தும் தேன் குழலி என்ன தெரியுமா?

இந்து ஆண்களே, பெண்களைக் கர்ப்பிணியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும் - இவர் ஒரு பெண் சந்நியாசியாம்!

பெண்களை இந்தக் கண்ணோட்டத்தில் அணுகும் பிஜேபி பெண்களின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

இந்த 16ஆம் மக்களவைத் தேர்தலில் பிஜேபி இந்தியா முழுமையும் நிறுத்தியி ருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 409 அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 35 பேர்கள்தான்.

385 வேட்பாளர்களை நிறுத்திய ஆம் ஆத்மி கட்சியால் நிறுத்தப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 57 பேர். காங் கிரசின் 413 வேட்பாளர்களில் பெண்கள் வெறும் 53 பேர்களே. பகுஜன் சமாஜ் கட்சியிஜ் 338 வேட்பாளர்களில் 54 பெண் கள் சமாஜ்வாடி 7 இடங்களையும் இந் தியாவில் இடதுசாரிகள் 12 இடங்களையும் அஇஅ திமுக - 4 திமுக- 2 இடங் களையும் பெண் களுக்கு அளித்துள்ளன. தமிழ் நாட்டில் பிஜேபிமட்டுமல்ல; அதோடு கூட்டு வைத்துள்ள தே.மு.தி.க.; ம.தி.மு.க.; பா.ம.க. - இந்தக் கட்சிகள் ஒரு பெண் ணைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. (சிதம் பரத்தில் பா.ம.க. வேட்பாளர் பெண் என்பது - முதன்மை வேட்பாளர் வேட்பு மனு வில்தவறு நேரிட்டதால் பதிலிவேட் பாளராக நிறுத்தப்பட்டவர் அதிகாரப் பூர்வ வேட்பாளர் ஆனார்)

சட்ட ரீதியாக 33 சதவீதம் இடம் அளிக்கப்பட்டு இருக்குமேயானால் கண்டிப்பாக இந்த எண்ணிக்கையைவிட பெண்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும்.

உலகளவில் நாடாளுமன்றங்களில் பெண்கள் எண்ணிக்கை என்பது இந்தியா வில் மிகவும் சரிந்துள்ளது. பாகிஸ்தான்கூட இதில் இந்தியாவைவிட முன்னேறியுள்ளது என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இந்த லட்சணத்தில் இங்கே இந்துத்துவாவை உருவாக்கப் போகிறோம் என்று கூறி ஒரு கட்சி (பிஜேபி) புறப்பட்டு இருக்கிறது. பெண்கள் பாவயோனியிற் பிறந்தவர்கள் என்று கூறும் கீதைதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அரசியலமைப்புச் சட்ட மாக இருக்கப் போகிறது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்!

எல்லா வகையான பிற்போக்குத் தனங்களுக்கும் ஒட்டு மொத்த குத்தகை தாரர் தான் பிஜேபி சங்பரிவார் என்பதை நினைவில் செதுக்கி வைத்துக் கொள் ளுங்கள்!

Read more: http://viduthalai.in/page-1/79265.html#ixzz302epSYuG

தமிழ் ஓவியா said...


சிறுமை பல செய்து சீரழிப்போர் வேண்டாம் ஆட்சிக்கு


- மா.பால்ராசேந்திரம்

அன்று ஜனசங்கம். பார்ப்பனர்களின் கூட்டுச்சங்கம். கொட்டமடிப்பது வெட்ட வெளிச்சமானது. அநியாயங்கள் அம்பலம் ஏறி அசிங்கப்படும் முன் அமைப்பை மாற்றிட முனைந்தனர். முனைப்பில் முளைத்தது தான் முளைத்த தல்ல முகமூடி போடப்பட்டு ஊருக்குக் காட்டப்பட்டது தான் பாரதீய ஜனதாக் கட்சி. புதிய மொந்தையில் பழைய கள்.
இவ்வேளையில் அகில இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இராமாயணத் தொடர் இவர்களை நிலைநிறுத்த ஏதுவானது. எனினும், 1984 நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே பெற்றனர். அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தான் ராமஜென்மபூமியைக் கையிலெடுத்தனர். ஏற்கெனவே இராமாயணத் தொடரில் மயங்கிக்கிடந்த மக்களைப்பக்திப்போதையில் மூழ்கடித்து அரசியல் நடத்த முயன்றனர்.

மதத்தின் பெயரால் 1900 ஆம் ஆண்டுகளில் மெக்ஸிகோவில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். கி.பி. 1134 இல் இரண்டாம் குலோத்துங்கன். சிவபக்தன், சிதம்பரம் வைணவர்களைத் தண்டித் தான். சித்திரக்கூடத்தை அழித்தான். திருமாலின் சிலையைக் கடலில் எறிந் தான். தில்லையம்பலத்தின் முற்றத்தை இடம் பெருகச்செய்தான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தன் பாண்டிய நாட்டில் குன்றுகள் தோறும் குடியிருந்த ஞானாசிரியர்களாம் சமணர்களையெல் லாம் கழுவேற்றியும், நெருப்பிலிட்டும் கொன்று குவித்தான். அதே மதவெறித் தனத்தைத்தான் செயல்படுத்தி அரசியல் நடத்திட பிஜேபி இன்றும் அதிகாரத்தைக் கேட்டு வருகிறது.


தமிழ் ஓவியா said...

இந்தியாவில் கோவில் கட்டப் பல் வேறு இடங்கள் இருந்தபோதிலும் உடனடி யாக மக்கள் கொந்தளிப்பை உருவாக்கி, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் இடமென அயோத்தி பாபர் மசூதியைத் தேர்ந்தெடுத் தனர். அதற்குள்தான் ராமன் பிறந்தான் எனக்கடிந்து ஊளையிட்டு மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்தியர் ஒற்றுமைக்கே உலை வைத்தனர்.

இந்துமதம் ஜீவகாருண்யம் உள்ளது. இசுலாம் மதம் வன்முறையானது என்று திட்டமிட்ட பிரச்சாரம் செய்தனர். முஸ் லிம்கள் இந்துக்களை மத மாற்றம் செய்து இசுலாமியராக்கித் தங்கள் தொகை களைப் பெருக்கிக் கொள்கின்றனர் என்ற பித்தலாட்டப் பிரச்சாரம் செய்தனர், செய் கின்றனர். இந்துத்துவாத் தத்துவத்தில் நாட்டைக் கபளீகரம் செய்பவர்கள் பார்ப்பனர்களே. 2 விழுக்காட்டினர் 80 விழுக்காட்டினர் பங்கினை அநியாயமாக அனுபவித்து வருகிறார்கள் என்பதைப் பிற இந்துக்கள் என்றுதான் தெரிந்து விழிப்படைவார்களோ?

விருத்தாசலத்தில் கன்னியாஸ்திரி களைப் பெண் வேடமிட்டு வேனில் ஏற்றிச் சென்று கற்பழித்த கொடுமையா ளர்கள் பிஜேபியினர். அவர்களே இன்று நரேந்திர மோடியென்ற நீரோவை ஏசு வால் அனுப்பி வைக்கப்பட்ட ரட்சகர் என்கின்றனர். என்னே! அநியாயம்.

ஒரியாவில் இந்தியத் தொழுநோயாளி களுக்குத் தாய்மையுடன் பணிபுரிந்து வந்த ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவர் தம் இளஞ்சிறார்களையும் தூக்கத்தில் முற்றிலும் எரித்துக் கொன்றவர்கள் ஆர். எஸ்.எஸ்.காரர்கள் தாம். இஃது உண்மையேயென மதன்லால் குரானாவே ஒப்புக்கொண்டார் அன்று.

இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துவாக ஏற்றுக்கொள்கிறதா? இல்லை. தலித் என்றே ஒதுக்கி வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். விட்டுள்ள ரகசிய சுற்றறிக்கையில், பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டோர்க்கும் சத்துணவு இல்லாமல் செய்ய வேண்டும். அவர்கள் அருந்தும் கள், சாராயத்தில் நச்சுப் பொருட்களைக் கலக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே. இத்தகைய நச்சுக் கருத்துடையோரை ஆட்சியில் ஏற்றி வைத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை என்னவாகுமெனச் சிந்திக்க வேண்டாமா?

பிற்படுத்தப்பட்டோர்க்கான மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்திடக் கூடாது என்பதற்காக வி.பி.சிங் அவர்களின் ஆட்சியையே கவிழ்த்தவர்கள். நேரிடை யாக எதிர்த்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களைப் பகையாகக் கருதக்கூடுமென்று தான் ரதயாத்திரையை ஓடவிட்டார் அத்வானி. இன்றோ அவர் ஓடுகிறார் ஓட்டுக்காக அங்குமிங்கும். இதுதான் பார்ப்பானின் ஆர்.எஸ்.எஸ். நடை முறைக்கு வந்த 27 விழுக்காடு நடுவணரசுப் பணியை ஒழித்திட மாணவர் போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள். மண்டல் குழு அறிக்கையை அமுல் படுத்தியதன் மூலம் மக்களை ஜாதிவாரியாகப் பிரதமர் வி.பி.சிங் பிளவு படுத்தி விட்டார் என்று கூறியவர் அன் றைய துணைப்பிரதமர் அத்வானி இப் படிப்பட்ட குறுகிய எண்ணங்கொண் டோரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றலாமா? கூடாது.

27 அய்த்தடுக்க முடியவில்லையென் றதும் தான், தனியார்த்துறைகளாக அரசுப் பொதுத்துறைகளையெல்லாம் மாற்றி, இடஒதுக்கீட்டையே ஒழித்திட எத்தனித் துச் செயல்பட்டு வருபவர்கள். அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக இருந் ததை 60 ஆக உயர்த்திப் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்பினை ஒழித்திட வழி கோலிச் சென்றவர்கள். இவர்கள் மீள வந் தால் கிடைக்கின்ற ஒருசில பதவிகளும், ஆரியப்பார்ப்பன, உயர்ஜாதியினரின் வயிற்றுக்குள் சென்று செரிமானமாகிடும்.

வாஜ்பாய் பிரதமராயிருந்த 23.10.2002 இல் தான் கப்பல்துறை இணையமைச்சர் திருநாவுக்கரசர் நீரி நிறுவனத்தின் பரிந்துரையான ஆடம்ஸ் பிரிட்ஜ் எனும் ஆதம் பாலத்தை வெட்டிச் செல்லும் வழித்தடம்தான் சுற்றுச்சூழல், உயிர்சார் இயற்கைவளம் மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறப்பானதென்று முடிவு செய்து அறிவித்தார். ஆனால் இன்றோ அதே பா.ஜ.க வினால்தான் அந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரூ. 900 கோடிப் பணம் வீணாகிக்கடலில் கரைந் துள்ளது பாவிகளால்.

விவேகானந்தர் சொன்னார், மேல் ஜாதியினருக்குத் தனித்த சிறப்புரிமை கொண்டாடும் காலம் மலையேறி விட் டது. இந்திய மண்ணில் எக்காலத்தும் வந்துவிடாமல் செய்த பெருமை பிரிட் டீஷ் ஆட்சியால் கிடைத்த வரப்பிரசா தமே என்றார். இதனை இன்று உணர் கிறார்களா இந்துத்துவவாதிகள்?

Read more: http://viduthalai.in/page2/79266.html#ixzz302f8j1zu

தமிழ் ஓவியா said...


புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்றுநோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

உயிர்க்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தைத் தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பகப் புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி இரத்த அணுக்களைச் சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது. இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதைத் தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.

இவர்களின் பல ஆண்டுக் கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித இரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித நானோ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதி சயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாகக் குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Read more: http://viduthalai.in/page2/79267.html#ixzz302fIyZoP

தமிழ் ஓவியா said...


மூடப்பக்திக்கு அளவேயில்லையா?


மத்தியப் பிரதேசம் மொரனா மாவட் டத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தை ஒருவர் தன் நாக்கையறுத்துக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியுள்ளார். கடவுளுக்கு நாக்கைக் காணிக்கையாக்கினால் எல்லா நோய்களும் தீரும் என்று யாரோ சொன்னார்களாம். அதை நம்பிய பக்தை இந்த விபரீதத்தைச் செய் துள்ளார்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதைவிட
வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை!

Read more: http://viduthalai.in/page3/79271.html#ixzz302fhEZnt

தமிழ் ஓவியா said...


திருடர்கள் கைகளில் கடவுள்கள்


கடவுளின் சிலைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதுபற்றித் தான் பேசுகிறார்களே தவிர - அந்தக் கடவுள் சிலைகளுக்குச் சக்தியிருப்பதாகக் கதையளந்தார்களே - அது என்னாயிற்று? என்று யாரும் பேசுவதில்லை சிந்திப்பதில்லை - கடவுளா அது வெறும் பொம்மை என்பது விளங்கவில்லையா?



அரியலூர் மாவட்டம் சிறீபுரந்தான் பெரிய ஏரிக்கரை கோவிலில் திருடப்பட்ட வெண்கல சாமி சிலைகள் பின்னர் சிலை கடத்தல் கும்பலால் ரகசியமாக வெளி நாடுகளுக்குக் கடத்தப்பட்டு கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டன.

இந்த கோவிலில் திருடப்பட்ட, தீப்பிளம்பின் பின்னணியில் நடனமாடும் சுமார் 1 மீட்டர் அகலம் கொண்ட நட ராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் உள்ளது.


தமிழ் ஓவியா said...

சிறீபுரந்தான் கோவிலில் இருந்து சிலைகள் திருடப்பட்ட விதம் குறித்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் கிடைத்தன.
1970களில் இருந்தே சர்வதேச அளவில் சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள சுபாஷ் கபூருக்கு இந்தியாவில் மட்டும் இன்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, கம்போடியா, துபாய் என பல்வேறு நாடுகளிலும் புரோக்கர்கள் உள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு முறை சென்னை வந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த சுபாஷ் கபூர், பழங்கால சிலைகள் விற் பனை செய்யும் சஞ்சீவி அசோகன் என்ப வரை சந்தித்து தனக்கு 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்திய பழங்கால சிலைகள் வேண்டும் என்று கூறினார். அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறிய அசோகன், சுபாஷ் கபூரிடம் இருந்து முன்பணமாக ஒரு தொகையை பெற்றுக்கொண்டார். பின்னர் அதற்கான காரியத்தில் இறங்கிய அசோகன், தொல்பொருள் ஆய்வுத் துறையின் புத்தகங்கள், வரைபடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, அரியலூர் மாவட்டம் சிறீபுரந்தான் கோவிலில் பாதுகாப்பற்ற நிலையில் பழங்கால சாமி சிலைகள் இருப்பதைக் கண்டு அறிந்தார். அந்த கோவில் பூட்டப்பட்டு பூஜை எதுவும் நடைபெறாமல் இருப்பதை தெரிந்து கொண்ட அவர், அங்குள்ள சிலை களைத் திருடத் தீர்மானித்தார். இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த பழங்கால கலைப்பொருள் வியாபாரி ஒருவரை அணு கினார். அந்த நபர் 2 திருடர்களை அசோ கனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழ் ஓவியா said...

அதன்பிறகு, அசோகன் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த இரு திருடர் களும் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் நள்ளிரவில் சிறீபுரந்தான் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 8 சாமி சிலைகளில் நடராஜர் உள்ளிட்ட 3 சாமி சிலைகளைத் திருடிச்சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டது தெரியாமல் இருக்க அதை லேசாக ஒட்டி வைத்து, கதவைச் சாத்தி விட்டு சென்று விட்டனர். இதனால் கோவிலில் இருந்த சிலைகள் திருடு போனது உள்ளூர்க்காரர்களுக்கு தெரி யாது. மறுநாள் அந்த சிலைகள் அசோகன் கைக்கு வந்து சேர்ந்தன. சிலைகளை திருடிக்கொடுத்ததற்காக அவர்களுக்கு அவர் ரூ.2 லட்சம் கொடுத்தார். அந்த சிலைகளை மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பினால் சிக்கிக்கொள்வோம் என்று கருதிய அசோகன், அந்த சிலைகளைப் போன்ற தோற்றம் கொண்ட மேலும் 3 புதிய சிலைகளை விலை கொடுத்து வாங்கினார். புராதன சிலைகளை புதிய சிலைகளுடன் கலந்து, 6 புதிய சிலைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி அதற்கான ஏற்றுமதி சான்றிதழை பெற்றார். பின்னர் அந்த 6 சிலைகளையும் சென்னை துறைமுகத்தில் இருந்து 25.11.2006ஆம்தேதி கப்பல் மூலம் ஹாங்காங், லண்டன் வழியாக அமெரிக் காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள சுபாஷ் கபூரின் பழங்கால சிலைகள் விற் பனை மய்யத்துக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் 4 மாதங்கள் கழித்து இதே பாணியில் சிறீபுரந்தான் கோவிலில் இருந்த மீதம் உள்ள சாமி சிலைகள் திருடப்பட்டு அசோகன் கைக்கு வந்து சேர்ந்தன. அந்த சிலைகளையும் முன்பு போலவே மோசடி சான்றிதழ் மூலம் நியூயார்க் நகருக்கு அனுப்பி வைத்தார்.

கோவிலில் இருந்த சாமி சிலைகள் திருடு போனது 2 ஆண்டுகளுக்கு பிறகு 2008ஆம் ஆண்டில் தான் உள்ளூர்க்காரர் களுக்கும், அறநிலையத்துறை அதிகாரி களுக்கும் தெரியவந்தது. அதுவும் கோவி லுக்கு புதிதாக கதவு போட வந்தபோது தான் தெரிந்தது.

இதற்கிடையே, சிலைகளைத் திருடிக் கொடுத்ததற்காக, அசோகனுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கிடைத் தது. இந்த தொகை நியூயார்க் நகரில் உள்ள சுபாஷ் கபூரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டது.

தனது கைக்கு வந்த சிலைகளில் நடராஜர் சிலையை 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்துக்கு சுபாஷ் கபூர் விற்றார். 1968 முதல் 1971 வரை டெல்லியில் சூடான் நாட்டு தூதரக அதிகாரியாக இருந்த ஒருவர், அங்குள்ள கலைப்பொருட்கள் கூட்டத்தில் அந்த நடராஜர் சிலையை வாங்கியதாகவும், பணிக்காலம் முடிந்து டெல்லியில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் அந்த சிலையை தன்னுடன் கொண்டு சென்றதாகவும், அவர் இறந்த பிறகு அவரது மனைவி சிலையை 2004ஆம் ஆண்டில் தன்னிடம் விற்றதாகவும் அப் போது ஆஸ்திரேலிய தேசிய கலைக் கூடத்திடம் சுபாஷ் கபூர் கூறினார். இத னால் அந்த சிலை தனது, பழங்கால சிலை கள் விற்பனை மய்யத்துக்கு சொந்தமா னது என்று கூறி அதற்கான ஆவணங் களையும் காட்டி, உத்தரவாதமும் கொடுத்து சிலையை அவர் விற்பனை செய்தார். ரூ.50 லட்சம் டாலர் (சுமார் ரூ.30 கோடி) கொடுத்து அந்த சிலையை ஆஸ் திரேலிய தேசிய கலைக்கூடம் வாங்கியது.

சிலைகள் திருடு போனது பற்றிய தகவல் வெளியான 6 நாட்களில் சிலை திருடர்கள் இருவரையும் சென்னையில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பின்னர் அசோகன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சுபாஷ் கபூருக்கு வலை விரிக்கப்பட்டது. சர்வதேச காவல ரின் உதவியுடன் 2011ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் சென்னை கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்ட பின்னரே, போலி ஆவணங்கள் மூலம் அவர் அந்த சிலையை தங்களுக்கு விற் பனை செய்தது ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்துக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக் கிறது.

- நன்றி: தினத்தந்தி 20.4.2014

Read more: http://viduthalai.in/page4/79272.html#ixzz302fyAs7C

தமிழ் ஓவியா said...


3500 ஆண்டுகள் பழமையான வானிலை அறிக்கை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வெட்டு 18ஆவது பரோ வம்சத்தை சேர்ந்த அமோஸ் வாழ்ந்த காலத்தை சேர்ந்தது. ஆறு அடி உயரம் கொண்ட சுண்ணாம்புக் கல்வெட்டு 'டெம்பஸ்ட் ஸ்டெலா' என்று அழைக்கப்படும் அதில் மழை, கருமேகம் உள்ளிட்ட மாறுபட்ட காலநிலை அமைப்புகள் பற்றி 40 வரிகள் அடங்கிய குறிப்பு காணப்படுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல்துறை பேராசியர்கள் ராபர்ட் ரிட்னர் மற்றும் நாடின் மோயல்லர் ஆகியோர் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் எகிப்தின் தெரா பகுதியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ப் போவதாக, அந்த கல்வெட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு குறிப்புகளில் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். அதுவே இன்றைய மெடிடீரியனின் கடலில் சான்ரொனி தீவாக காட்சியளிப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த கல்வெட்டில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களை வைத்து அதன் காலவரிசை முறையை கணக்கிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page4/79273.html#ixzz302g9BGWH

தமிழ் ஓவியா said...


திருந்தாத திரை உலகத்தினர்


தமிழ் மீது பற்றுக்கொண்ட அறிஞர் களும், தமிழார்வலர்களும், செய்யாத, செய்யத்தவறிய செயலை தமிழுக்காக தந்தை பெரியார் அவர்கள் செய்தார்கள். அதுதான் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்.

தமிழைக்கற்பவர்களும், எழுதுபவர் களும் விரும்பக்கூடிய வகையில் எளிமை யாக தமிழை கொண்டு போய்ச்சேர்க்கும் முயற்சியில் இறங்கி தமிழில் உள்ள எழுத்துகளின் உருவைச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக என்பதை லை ஆக வும் ச் என்பதை னை ஆகவும் க் என் பதை ணா வாகவும் மாற்றியமைத்தார். இது போன்ற தமிழில் உள்ள பல எழுத் துகளைச் சீரமைத்து எளிமையாக்கினார். அதோடு நின்றுவிடாமல் தான் நடத்திய அனைத்துப்பத்திரிகைகளிலும் அதனை நடைமுறைக்கு கொண்டுவந்து இன்று வரை ஏறத்தாழ 80 ஆண்டுகளாக அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் மறைவிற்கு பிறகு 1978 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை அன்றைய தமிழக அரசு கொண்டாடிய நேரத்தில் அய்யா வுடைய இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமான நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதன் விளைவு பிற்காலத்தில் மாணவர்கள் தமிழைக் கடினமில்லாமல் எழுத முடிந்தது. பின்பு கணினியிலும் தமிழை எளிதாக கொண்டு வர முடிந்தது. இப்போது சமூக வலை தளங்கள் மூலமாக உலகெங்கும் தமிழ் தங்கு தடையின்றிச் செல்கிறது.

இவ்வளவும் தமிழை வெறுத்தவர், தமிழர் அல்லாதவர், திராவிடம் என்ற பெயரால் தமிழ் உணர்வை மழுங்கச் செய்தவர் என்று போலி தமிழ் தேசிய வாதிகளால் கோபத்தோடு அர்ச்சிக்கபடும் அறிவுலக ஆசான் அய்யா பெரியாரால் ஏற்பட்ட மாற்றம் அல்லவா!

இது பற்றி எல்லாம் எதுவும் தெரி யாமல், அறியாமல் தங்கள் பிழைப்பு நடந்தால் போதும், தான் சுகமாக இருந் தால் போதும் என்று எண்ணும் திருந்தாத கேடுகெட்ட ஜென்மங்களாகத் திரியும், தாங்கள் ஏதோ மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு வேறுபட்டு செய்கிறோம் என்று தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக்கொண்டு புகழ்தேடி அலை யும், தமிழ்திரைப்படத்துறையைச் சேர்ந்த வர்கள் (இதில் சில பேர் விதிவிலக்கு) தமிழ் மொழியிலேயே பயன்படுத்தாத பழைய எழுத்துருக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இப்போது வெளிவந்துள்ள, வெளி வரப்போகின்ற திரைப்படங்களான தெனாலிராமன் என்று எழுதவேண்டிய திரைப்படங்களின் பெயர்களை தெச்லி ராமன், கனவுத் தொழிற்சார்ஹ் என்று தாங்கள் இயக்கும் படங்களுக்கு பழைய எழுத்துருக்களை பயன்படுத்தி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரியாதா இந்த எழுத்துரு வழக்கத்தில் இல்லை என்று? தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் இது அசல் திமிர் தானே 35 ஆண்டுகளுக்கு முன்னால் பயன் பாட்டில் இருந்த ரூபாய்த் தாள்களையோ நாணயங்களையோ இப்போது பயன் படுத்த முடியுமா? இவர்கள் இயக்கும் படங்களுக்கு ஊதியமாக அந்த ரூபாய் தாள்களை கொடுத்தால் ஏற்பார்களா? அவை இப்போது செல்லாது. பயன் பாட்டிலும் கிடையாது என்று சொல் வார்கள் அல்லவா! அதுபோல் தானே எழுத்துரு மாற்றங்களும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

நம்மைப்பிடித்திருக்கும் 5 நோய்களில் திரைப்படமும் ஒன்று என்று பகுத்தறிவு தந்தை அன்று கூறியது இப்போதும் பொருந்தித்தான் வருகிறது.

இனிமேலாவது இது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபடாமல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். வீணாக மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று உரிமையுடன் எச்சரிக்கின்றோம்.

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page5/79274.html#ixzz302gS5Gnk

தமிழ் ஓவியா said...


பூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் நாசா மய்யம் சக்தி வாய்ந்த தொலைநோக்கியுடன் கூடிய கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் ஆய்வு செய்து புது கோள்கள் மற்றும் நட்சத் திரங்களை நிழற்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போன்று நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் திரவ நிலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு பூமியை போன்ற தட்பவெப்பம் நிலவுகிறது.

இதனால் இந்தக் கோள் பூமியை போன்று வாழ தகுதி உடையதாக கருதப்படுகிறது. இந்த கோளும் பூமி அளவு உள்ளது. எனவே, இக்கோள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page5/79276.html#ixzz302gbJRnc

தமிழ் ஓவியா said...



மதம் படுத்தும் பாடு

12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு என்கிற பெயரால் வாடிகனில் வழக்கத்துக்கு மாறாக நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் முத்த மிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர், அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணி யாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் அடிப்படை யில் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான வியாழனை புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறதாம்.

வாடிகனில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சியில் போப் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார். அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அப்போது போப் ஆண்ட வர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என்று கூறினார். மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மய்யத்துக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் ஆவர். அவர்களில் நான்கு பெண்கள், ஹமீது (75) என்ற முஸ்லீம் பெரியவரும் அடக்கம். இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ் தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.

வழக்கமாக 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார். ஆனால், புதிய போப்பாக பதவியேற் றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மய்யத்துக்குச் சென்றுள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/79275.html#ixzz302gmKikq

தமிழ் ஓவியா said...


என்னே பொருத்தம்...?


என்னே பொருத்தம்...?

அய்யர் வீட்டில்
அய்யங் காரும்...
அய்யங்கார் வீட்டில்
அய்யரும்..
குடியிருக்க
மாட்டாங்களாம்...!
குடிக்குள் குடியாக!
இஃதே போகப் போக
கொள்வனை, கொடுப்பனவும்
இருவருமே
இனத்தில் ஆரியம்!
இந்த மதம்
இந்து மதம்??


குறும்பா!

மொய் யெழுதும்போது
மெய் யெழுது!
பொய்யெழுதாதே
இரு நூற்றை
ஒரு நூறு என்று...!
தபால் வோட்டுகளாம்
கவர் பாளங்களை...
களவாடாதே!

***

இது....
சுதந்தரக் காற்றை
சுவாசிக்க முடியாது
சுதந்தர நாடு!
குடியிருப்புக்கு
இலாயக்கில்லா
குடியரசு நாடு!!

- கோ. கலியபெருமாள்,
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page5/79277.html#ixzz302gvNMfF

தமிழ் ஓவியா said...


வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

விடுதலை 5.4.2014 சென்னை சனிக்கிழமை ஞாயிறு மலர் படித்தேன்.

ஆகா என்ன அருமை! தி.மு.க. கூட்டணியைச் சமூக ரீதியான கொள்கை இருப்பதால் ஆதரி.

சிறுபான்மை மக்களுக்காக ஆதரவு கொடு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மறுபடியும் வேண்டுமா? வாக்களி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகணுமா? வெற்றி அடையச் செய். பக்தி மடத்தில் பாழடைந்த பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது பாரீர்!

பிரம்மகத்தி கடவுள் நம்பிக்கை இல்லாதவரைப் பிடிக்கப் பயமோ? வரகுணபாண்டியனைப் பிடித்த பிரம்மகத்தி நீங்கிட, அவன் பார்ப்பானுக்கு உணவளிக்க வேண்டும். அரச மரத்தை வலம் வா. இப்படிப் பல.

விமோசனம் இல்லை. பிரம்மகத்தி இஸ்ட்ராங்கோ? அதனால் இன்னும் இதைச் செய். மதுரை சோமசுந்தரப் பெருமானை ஒவ்வொரு நாளும் 1008 முறை வலம் வா. பின் சரியாயிற்று.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் சுயமரியாதையுடன்,

- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/79279.html#ixzz302hG1TtU

தமிழ் ஓவியா said...


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!


பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்!
புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும்

புத்தகர் விருது வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை

புத்தகர் விருது பெற்ற பெருமக்கள் : சென்னை புத்தகச் சங்கமத்தில் தமிழர் தலைவர் அவர்கள் புத்தகர் விருதை பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோருக்கு வழங்கி பாராட்டி சிறப்பித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மேலாளர் த.க. நடராசன், விழிகள் பதிப்பகம் தி வேணுகோபால் உள்ளனர் (இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 26.4.2014).


சென்னை, ஏப்.27- பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம். புத்தகம் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கை மாறும் என்று சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருதுகளை புத்தகச் செம்மல்களுக்கு தமிழர் தலைவர் வழங்கி சிறப்பித்து பாராட்டுரை வழங்கினார்.

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் உலகப் புத்தக நாள் பெரு விழா சென்னை இராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

நேற்று (26.4.2014) மாலை 6.30 மணியளவில் நடந்த இப்பெரு விழாவில் முதன்மை நிகழ்வாக நினைவில் வாழும் கலைமாமணி முத்துக்கூத்தன் அவர்களின் மகன் கலைவாணன் ஏற்பாடு செய்திருந்த கலை அறப்பேரவை தென்றல் குழந்தைகள் மன்றம் வழங்கிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூர் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற இக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ வைத்து சிந்திக்கவும் வைத்தது.

புத்தகர் விருது வழங்கி சிறப்பிப்பு

இதைத் தொடர்ந்து புத்தகர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் விழாவிற்குத் தலைமை யேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் புத்தகர் விருது பெரும் மக்களான பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் குறிப்புகள் மேடையில் வாசிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி. வீரமணி அவர்கள், அப்பெரும் மக்களுக்கு பயனாடை அணிவித்து புத்தகர் விருது வழங்கி சிறப்பித்து பேசுகையில்:-

புத்தகர் விருது பெறும் பெருமக்களான பொள்ளாச்சி நசன், பழங்காசு ப. சீனிவாசன், தி.மா. சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் ஆகியோரின் தன் விளக்க குறிப்புகளை கேட்டு அறிந்தவுடன் வியந்து போனேன். கைமாறு கருதாத அவர்கள் செய்த தொண்டானது புத்தக வாசிப்பிற்காக அவர்கள் மேற்கொண்ட பணிகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் இவர்களை அழைத்து சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். புத்தகம் வாசிப்பது அறிவை வளர்க்கும் செயலாகும் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் புத்தகங்களைக் கொடுப்பது அறிவைப் பரப்பும் தொண்டறச் செயலாகும்.

பூஜையறையல்ல முக்கியம்!

வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறைதான் முக்கியம்! அங்கிருக்கும் புத்தகங்களைப் படித்தால் அறிவு பெருகும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றம் காணலாம். இங்கு புத்தகர் விருது பெரும் பெரு மக்கள் புத்தகத் தொண்டர்களாக விளங்குகிறார்கள் அவர்களை பாராட்டி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் தமிழர் தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/79374.html#ixzz308IVOKJ4

தமிழ் ஓவியா said...


குறுஞ் செய்திகள்


தமிழ்நாட்டில் ஆண் களைவிட பெண்களே அதிகமாக வாக்களித் துள்ளனர். ஆண்கள் சதவிகிதம் 73.49, பெண் கள் சதவிகிதம் 73.85.

தமிழ்நாட்டில் 1967 தேர்தலுக்கு அடுத்து 2014இல் நடைபெற்ற தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம். 1967- 76.09 2014இல் 73.67 சதவிகிதம்.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுக சாமி அவர்கள் இன்று ஓய்வு பெறுவதால் நீதி பதிகளின் எண்ணிக்கை - 44 ஆகக் குறைந்தது (மொத்த நீதிபதிகள் 60).

மே 16ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்கு எண் ணிக்கை நடைபெறும். முதல் சுற்று முடிவு காலை 9 மணிக்கே தெரிய வரும்.

ஆரோக்கியம் என் பது மனித உரிமை; அந்த வுரிமையைப் பாதுகாப் பதில் இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிபதி கே.என். பாஷா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு மே இறுதியில் நடைபெறும்.

காஞ்சீபுரம் மாவட் டத்தில் செங்கற்பட்டு, திருப்போரூர், திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் காடுகளில் உள்ள வன விலங்குகள் வறட்சியின் காரணமாகத் தண்ணீர் குடிக்க காடுகளைவிட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க 20 தண்ணீர்த் தொட்டிகளைத்திறக்க வனத்துறை ஏற்பாடு செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிக பட்சமாக சனியன்று வெப்பநிலை - திருச்சியில் 107.24 டிகிரி.

பி.ஜே.பி. நயவஞ்சக மதவாதக் கட்சி. அதனைப் புறக்கணிப்பீர்! -அகிலேஷ்யாதவ் உ.பி. முதல் அமைச்சர்.

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த்வரதராசன் பலியா னார் என்பது சோகச் செய்தியாகும்.

இரயில் வழித்தடங் களில் அதிக தொலைவு மின்மயமாக்கும் பணியில் சென்னை இரயில்வே மின்மயமாக்கல் திட்ட அலுவலகத்திற்கு சிறந்த விருது அளிக்கப்படுகிறது.

போதுமான பராம ரிப்பு இன்றி நாய் ஒன்று இறந்ததால் சிங்கப்பூர் நீதிமன்றம் நாயின் உரிமை யாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் ஆயிரம் ஆண்டு பழமையான கிராமத் தினை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது.

புரியுதா?

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முதல் அமைச் சருமான செல்வி ஜெ. ஜெய லலிதா தேர்தல் பிரச்சாரத் தின் கடைசி நாளான ஏப்ரல் 22ஆம் தேதியன்று பிரச் சாரம் செய்யாமல் முதல் நாளே முடித்துக் கொண்ட தற்குக் காரணம் 22ஆம் தேதி அஷ்டமி திதியாம்! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/e-paper/79384.html#ixzz308JeRrHD

தமிழ் ஓவியா said...


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில்
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?

பெங்களூர், ஏப்.27-பெங்களூரில் பிரபல சாமியா ராக வலம் வரும் தேவிசிறீ குருஜி என்பவர் பெண் பக்தர் களிடம் நெருக்கமாக இருந்த கேமரா காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

பெங்களூர் எச்.எஸ். ஆர்.லே அவுட் பகுதியில் திவ்யாசிறீ ஜோதிட ஆலயம் என்ற பெயரில் மடம் நடத்தி வருபவர் ராமசாமி தேவிசிறீ குருஜி, பலரின் ஜாதகங்களை கணித்து கொடுத்து பல அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாகி பிரபலமானார். இவரைத் தேடி குடும்ப பிரச்சினை, திருமண தடை, குழந்தையின்மைக்குத் தீர்வு, வியாபார வளர்ச்சி உள்பட பல குறைகளுக்குத் தீர்வு தேடி மக்கள் கூட்டம் அலைமோதியதாம். குறிப்பாக, பெண்கள் இவர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஜோதிடம் பார்த்துச் செல்வார்களாம்!

தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தன்னை தேடி வந்த பெண் பக்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. குடும்ப பிரச் சினைக்காக ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவ ருக்கு தனது அலுவலகத்தில் வேலை போட்டு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், அவர் கர்ப்பம் அடைந்தபின் மூலிகை மருந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்தாக வும் புகார் வந்துள்ளது. இந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பானதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், பொதுமக்கள் சுவாமியின் திவ்யாசிறீ ஜோதிட ஆலயத்தை நேற்று சூறையாடினர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அவரது படத்தைக் கிழித்தனர். கன்னட அமைப்பினர் அங்கு கூடி அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தேவிசிறீ மீது எழுந்துள்ள புகார் தொடர் பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/79368.html#ixzz308Js3Bje

தமிழ் ஓவியா said...


மேற்குவங்கத்தைவிட குஜராத் பின்தங்கியே இருக்கிறது


புதுடில்லி, ஏப். 27- சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி தொழில்உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களையும்விட மேற்கு வங்கமே முதலாவதாக உள்ளது என்பதும், இதில்குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேற்படி தேசிய மாதிரி சர்வேயின்படி தெரியவரும் உண்மைகள் வருமாறு:

2004ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector)நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் மேற்குவங்கத்தில் முந்தைய இடது முன்னணிஆட்சி புரிந்த சமயத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் நாடுமுழுவதும் 58.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற் சாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், 24 லட்சம் வேலைவாய்ப்புகள் மேற்குவங்கத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பாஜக ஆளும் குஜராத்தில் இதே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது 14.9 லட்சம் வேலைவாய்ப்புகள்தான். மேற்குவங்கத்தில் சிங்கூரில் டாட்டாவின் நானோ தொழிற்சாலை அமைக்கப்படுவதைப் பலவிதங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டுதடுத்து நிறுத்திய பின்னரும்கூட தொழில் வளர்ச்சியில் மேற்குவங்க இடது முன்னணிஅரசு சாதனை படைத்திருப்பதையே தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு 2007-2008இல்கட்டவிழ்த்துவிட்ட, தொழில்வளர்ச்சிக்கு எதிரான துஷ்பிரச்சாரத்தையும் மீறி, மேற்கு வங்கஇடது முன்னணி அரசு 12 சதவீதம் தொழில் வளர்ச்சியை அடைந்திருந்தது என்று அப்போது மேற்கு வங்க மாநில நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா கூறுகிறார்.சமீபத்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் உற்பத்தித்துறையில், வேலை வாய்ப்புகளில் நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம் என்றும் குஜராத் மாடல் என்றும் நரேந்திரமோடி சரடு விட்டுக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில், தேசியமாதிரி சர்வே இந்த ஆய் வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஆட்சியிலிருந்த கடைசி ஆண்டான 2010-2011ஆம் ஆண்டில் கூட சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருந்தோம் என்று அசிம் தாஸ் குப்தா கூறினார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணிக்குக் கிடைத்த வெற்றி, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தொழில்மய முன்னேற்றத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுவிரிவான முறையில் மக்களால் அறியப்பட்டது, என்றுஇடதுமுன்னணி தலைவர்களில் ஒருவர் கூறினார். சிறிய அளவிலான உற்பத்திப் பிரிவுகள் அதிக அளவில் இருப்பது மேற்கு வங்கத்தில்தான் என்றும் அசிம் தாஸ் குப்தா கூறினார். 1991-க்கும் 2011-க்கும் இடையேயான ஆண்டுகளில், தோழர் ஜோதிபாசு தலைமையின்கீழ் நாங்கள் எங்கள் தொழில் கொள்கையைத் திருத்தி அமைத்தபோது, புதிதாக 2,531 பெரிய மற்றும் நடுத்தர உற்பத்திப்பிரிவுகளை அமைத்தோம் என்றும் அசிம்தாஸ் குப்தா கூறினார்.

1960-களுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் மயம் மிகவும் சிறப்பாக இருந்தது 2004-2011ஆம்ஆண்டுகளில்தான் என்றும்,சிங்கூரில் திரிணாமுல் காங்கிரசும் மாவோயிஸ்ட்டுகளும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முன்னர் அக்கால கட்டத்தில் 1,872 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். நன்றி: தீக்கதிர் (26.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/79360.html#ixzz308KGO6ID

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கியது நீதிக்கட்சியே



சுமார் 200 ஆண்டுகளுக்குமுன்பு நமது நாடு ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டு இருந் தது அப்போது நம் மக்களுக்கு கல்வி வழங்கச் செய்தார்கள் அப்போது பார்ப் பன ஜாதி மேலாதிக்கம் இருந்தது அவர் கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஜென்ம விரோதிகளாகவே இருந்தனர். 1821, 1855, ஆகிய ஆண்டுகளில் கல்வி வழங்க உத்தரவிட்டனர். ஆனால் பல்கலைக் கழக மேலாண்மைக் கழக உறுப்பினர் பதவிகளை விலக இதற்காக எதிர்ப்புத் தெரிவித்தும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு கல்வி வழங்கக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

1923ஆம் வருடம் வரை சுமார் 100 ஆண்டுகள் தடுத்துவிட்டார்கள்.

சுமார் 102 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் கல்வி பெற மிகவும் தொல்லைப் பட்டார்கள் தங்கும் வசதி உணவு வசதி முறையாகக் கிடைக்கவில்லை. சென்னை யில் டாக்டர் சி. நடேசனார் அவர்கள் நிறைந்த மனதுடன் வெளியூரில் இருந்து வந்து படிக்கும் நம் மாணவர்களுக்கு பெரிதும் முயன்று சென்னை அக்பர் சாயபு தெருவில் பங்களா போன்ற பெரிய வீடு வாடகைக்குப் பிடித்து பல பெரிய மனிதர்கள் நன்கொடை உதவியுடனும் படிக்கும் வசதியை தொடர்ந்து செய்தார்.

10.11.1912இல் சென்னையில் 500 மாணவர்கள் உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடர் சங்கம் அமைத்தார் டாக்டர் சி. நடேசனார் அவருக்கு உதவியாக டாக்டர் டி.எம். நாயர் சர்.பி. தியாகராயர் போன்ற பல வள்ளல்கள் பெரும் வணிகர்கள் லட்சக்கணக்கில் உதவினார்கள்.

20.11.1916இல் தென் இந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கினார் சர்.பி. தியாகராயர்.

17.12.1916இல் நீதிக்கட்சி பிராமணரல் லாதார் அறிக்கை வெளியிட்டார். அது பற்றி பல மாநடுகள் நடத்தினார். நாடெங் கும் ஆதரவு பெருகும் சுமார் 4 ஆண்டு களில் நீதிக்கட்சிக்கு ஆதரவு பெருகியது.

17.12.1920இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சென்னை நீதிக்கட்சி வெற்றி பெற்றது கடலூர் சுப்பராயர் பெரியார் அவர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்து பிரதமர் பதவியில் சர்.பி. தியாக ராயர் நியமித்தார்.

12.01.1921 சென்னை சட்டசபை நீதிக் கட்சி மந்திரி சபை கூடியது. இந்தியாவி லேயே முதல் முதல் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கும் சட்டம் நிறை வேறியது.

இடஒதுக்கீடு பதவி உயர்விலும் வழங்க சட்டம் நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர் சூழ்ச்சியால் 7 ஆண்டுகள் கவர்னரிடம் சொல்லி நிறுத்தி வைக்கப் பட் டது. பின்பு 744 13.9.1928இல் சர் முத் தைய்யா முதலியார் பெரு முயற்சியில் இடஒதுக்கீடு சட்டம் வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் அடுத்து வந்த பிரதமர் பனகல் அரசர் பல நல்ல சட்டங்களை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அதிலே ஒன்று தாழ்த்தப்பட்டோருக்கு கட்டாயமாக பள்ளியில் சேர்த்து கல்வி வழங்கும் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் மிகவும் பெரு முயற்சியுடன் அரசாணை எண் 376 9.3.1923இல் சுமார் 100 ஆண்டு களுக்குப்பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது வரலாற்றில் சிறப்புடையது.

28.7.1929 அன்று சென்னை சட்ட சபையின் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நீதிக்கட்சி மந்திரி சபையில் கே.வி. சாமி அவர்கள் உறுப்பினர் கேள்வி பள்ளி கள் 1921 முதல் 1928 வரை இந்த அரசு புதிதாகத் தொடங்கிய பள்ளிகள் எத்தனை 19095 என்று கூறப்பட்டுள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில்லாதிருந்தால் நமக்கு படிப்பேது? அ. இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/79281.html#ixzz30B0Pi0iC

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில் பெண் வேட்பாளர் இடம் பெறாதது ஏன்?


கேள்வி: எந்தத் தேர்தலுக்கும் இல்லாத வித்தியாசம் இந்தத் தேர்தலில் என்ன? - கு. வைஜெயந்தி, குன்னூர்

பதில்: (1) அகில இந்திய அளவில் பச்சையான வகையில் மதவெறிப் பேச்சு.
2) மாநில வகையில், ஆளுங் கட்சியால் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு நடந்தது.

கேள்வி : மின்வெட்டுக்குக் காரணம் சதி என்கிறாரே முதல் அமைச்சர்? - மு.வே. ராசன், கே.கே. நகர் சென்னை

பதில்: சதி என்றால் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவருடையதுதானே! சொல்லி பல நாள்கள் ஆகி விட்டதே! இதுவரை கண்டுபிடிக்காதது - ஏன்?

கேள்வி: வளர்ச்சி என்ற பெயரால் இந்துத்துவாவை அரங்கேற்றுவதுதான் பிஜேபியின் திட்டமா? - ம. சுரேஷ்குமார்,

பதில்: ஆமென்! ஆம் என்க!!

கேள்வி: கும்பகர்ணன் சதா தூங்கிக்கொண்டே இருப்பான் என்பதெல்லாம் அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? - வா. மணிமாறன், வேடந்தாங்கல்

பதில்: தமிழர்களை - திராவிடர்களை இழிவுபடுத்த இப்படியெல்லாம் புராண, இதிகாசப் பாத்திரங்கள் பலவற்றிலும் செய்துள்ளார்கள்!

கேள்வி: வாசகர்களைக் குழப்புகிறேன் என்று சொல்லி திருவாளர் சோ ராமசாமி தலையங்கத்தில் குறிப்பிடுகிறாரே?

பதில்: குழப்பத்தின் மறுபெயர் தான் நண்பர் சோ என்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்!

கேள்வி: அய்.நா. விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளதுபற்றி... - க. தமிழழகன், திட்டச்சேரி

பதில்: அய்.நா.வின் மூலம் அமெரிக்கா போனற நாடுகள் உலக நாடுகளில் இனப்படுகொலையை எதிர்த்து பொருளாதாரத் தடையை உருவாக்கிட முன் வர வேண்டும்; உலக நாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு சுண்டைக்காய் இலங்கை, சீனா, பாகிஸ்தானை நம்பியே வாழ்ந்துவிட முடியாது என்பதை உணர்த்த சர்வதேச நாடுகளும் அய்.நா.வும் உலகறியச் செய்ய வேண்டும்!

கேள்வி : தாங்கள் தேர்தல் பரப்புரையில் சொன்ன கி டீம் ஙி டீம் எல்லோர் வாயிலும் புகுந்து புறப்பட்டு வந்தது தங்களுக்குத் தெரியுமா? - அ.கோ. முகிலன், அடையாறு சென்னை-20

பதில்: மிக்க நன்றி; இரண்டும் இரண்டும் நான்கு என்பது யார் கூட்டினாலும் ஒரே விடை தானே! அதுபோலத்தான்!

கேள்வி : மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லாதபோது மதச்சார்பற்ற தன்மை என்று வருகிறபோது காங்கிரஸ்தானே அகில இந்திய ரீதியில் தலைமை தாங்க முடியும்? - அ. முபாரக், நீடூர்

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: பி.ஜே.பி. தலைமையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெண்களை வேட்பாளராக நிறுத்தவில்லையே? (சிதம்பரம் தொகுதி ஒரு விபத்து) - சீனு. வளர்மதி, திண்டிவனம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை அமுலாக்க முனைந்துள்ளது என்பதே உண்மை!

கேள்வி: மின்சாரம், குடிநீர் என்பவை அரசியல் பிரச்சினையாக்கப்படுவது சரியா? - வி. முரளி, சென்னை-40

பதில்: அரசியல் என்பது மக்களின் தேவை அத்தனையையும் உள்ளடக்கியது தானே! இவை இரண்டும் முக்கிய வாழ்வாதாரம் அல்லவா?

Read more: http://viduthalai.in/page8/79283.html#ixzz30B0flqFH

தமிழ் ஓவியா said...


உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு


கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, உச்சநீதிமன்றத் தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொது மக்கள், மாண வர்கள் படிப்பதற்கு வசதிக் காக, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை. முடி வெடுத்துள்ளது.

புதிய தீர்ப்புகள்: சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் கீழ், தமிழகம் முழுவ தும், ஏழு, அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை, சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல், கீழ் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் என, அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நீதிமன்றங்களில், காணொலி காட்சி வசதி வந் துள்ள நிலையில், கல்லூரி களிலும், பல வசதிகளை ஏற்படுத்த, சட்ட பல்கலை. நிர்வாகம் முடிவெடுத்துள் ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் வணங்காமுடி கூறிய தாவது: தமிழகம் முழுவ தும், 10 ஆயிரம் மாணவர்கள், சட்டக் கல்லூரி, சட்ட பல்கலை.யில் இளங்கலை, முது கலை, முனைவர் படிப்புகளில் சேர்ந் துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது. பல்கலை. யில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வப் போது, உச்சநீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.

இதை, சட்டக் கல்லூரி மாணவர்களும் பார்க்க, காணொலி காட்சி வசதி செய்யப் பட உள்ளது. இது தவிர, இணைய தள, டிவி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படு கிறது.திருச்சி, சிறீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த் தப்படும். சட் டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப் படும். பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப் பதை, தமிழில் மொழி பெயர்த்து, பல் கலை. இணையதளத்தில் வெளியிடப் படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக் காக, 27 மிக முக்கிய சட்ட நூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன.

கீழ் நீதிமன்ற நீதிபதி களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு களின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. முதல் கட்டமாக, 2,000 ஆம் ஆண்டுக்கு பின் அளிக் கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்பு களில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங் கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க் கப்படுகின்றன. மீதமுள்ளவை, மூன்றாண் டுகளுக்குள், தமிழில் மொழி பெயர்க்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page8/79284.html#ixzz30B12smfF

தமிழ் ஓவியா said...


இன்று தியாகராயர் நினைவு நாள்!

- முனைவர் மகா பாண்டியன்

நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர். இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரிவாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்றுவித்தார்.

தன்னலம் கருதாது பிறர் நலம் பேணு கின்ற தியாக உணர்வோடு சமுதாயத்தில் மாற்றங்கள் உருவாக்கப் பாடுபடுகின்ற பெரியோர்களுள் தலை சிறந்தவர் நம் சர்.பிட்டி.தியாகராயர் அவர்கள்.

நீர் உயர வரப்புயரும்; வரப்புயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோன் உயரும். ஆக நீர்தான் உலகுக்கு இன்றியமையாதது. அதுபோல சமுதாயப் பயிர் செழித்து வளரத் தன்னை நீராக்கிக் கொண்டு சமநிலைச் சமுதா யத்தை வளர்க் கப் பாடுபட்டவர்கள் இந்த திராவிடத் திருநாட்டில் ஏராளமானவர் கள்; அவர்கட் கெல்லாம் முதன்மையர் நமது சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள்.

வள்ளலார் வடசென்னையில் வாழ்ந் தார். வள்ளலாருக்கு 25 வயது இருக் கும்போது அப்பகுதியில் பிறந்ததா லென்னவோ, தியாகராயர் வாரி வாரி வழங்கும் தியாகரானார்கள். அவர் வட சென்னையில் வடபகுதியான கொருக்குப் பேட்டையில் 27.4.1852 அன்று தோன் றினார்.

தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் திருவள்ளுவர். அக்குறளுக் கொப்ப கடையெழு வள்ளல்களும் ஒன்று கூடி ஓர் உரு ஆனதுபோல் தோன்றியவர் நம் தியாகராயர். பிட்டி என்னும் பெயருடைய தேவாங்க குலச்செம்மலான இவர் சமநிலைச் சமுதாயம் படைக்கப் பிறந்தார்.

ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும்
ஒருமை யுளராதல் வேண்டும்

என்னும் வள்ளலாரின் வாக்குக்கேற்ப 20.11.1916 இல் சென்னை வேப்பேரி வழக்கறிஞர் திரு.டி.எத்திராஜூலு முதலி யார் என்பவர் இல்லத்தில் நீதிக்கட்சி உதய மானது.

இதன் முப்பெரும் தலைவர்கள் டாக்டர் நடேச முதலியார், டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோராவர். கல்வியைப் பெறுவதிலும், அரசுப் பணி களில் தொழில் பெறுவதிலும் சாதிக் கொடுமை அக்காலத்தில் தலை விரித் தாடியது. இக்கொடுமைகள் ஒழிய திரா விட மக்களிடையே பகுத்தறிவை யும் சுயமரியாதையையும் வளர்க்கும் பணியை நீதிக்கட்சி செய்தது. இப் பணியைத் திறம்படச் செய்வதற்காக

1) ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளிதழும்

2) திராவிடன் என்ற தமிழ் நாளிதழும்

3) ஆந்திர பிரகாசிகா என்ற தெலுங்கு நாளிதழும் வெளியிடப்பட்டன. இவை திராவிடர்களின் கல்வி, அரசியல், சமு தாயம், பொருளாதார முன்னேற்றத் திற்கும், வளர்ச்சிக்கும், பாடுபடுவதைத் தன் கடமையெனக் கருதி இந்த இதழ்கள் செயலாற்றி வந்தன. தற்போது தகர்க்கப் பட்ட நிலையில் உள்ள மேலாதிக்க நிலைக்குக் காரணம் இவையே.

மேலும் நமது தியாகராயர் சென்னை மாநகரவைக்கு 1882 முதல் 1925 ஆம் ஆண்டு வரை சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக, தலைவராக இருந்து தொண்டாற்றியவர்.

இக்காலத்தில் மெட்ரோ டிரெயின் போல் அக்காலத்தில் டிராம் வண்டி மின் ஆற்றலில் சாலையில் செல்லும் ஊர்தி இருந்தது. இதனை பல்வேறு பகுதி களுக்கு விரிவாக்கம் செய்தார். 1912 இல் தான் சென்னை நகருக்கு மின் விளக்கு வசதி வந்தது. அதைப் பெரிதும் விரி வாக்கம் செய்தார். பல மாநகரவை மகப்பேறு இல்லங்களைத் தோற்று வித்தார். கூவம் ஆற்றில் நன்னீர் வருட முழுவதும் ஓடிடக் கனவு கண்டார். இனி அது நிறைவேற வேண்டும் நீதிக் கட்சியின் தலைவரான சர்.பிட்டி தியாகராயர் 17.12.1920 மற்றும் 13.11.1923 என இரு முறை அமைச்சரவை முதல்வர் பொறுப்பு. கிட்டிய போதும் மறுத் துரைத்தார் பதவி ஏற்றாரில்லை. பதவியை ஏற்காத பண்பாளர்.

அன்றைய கவர்னர் வெலிங்டன் பிரபு பெரும் வியப்பில் ஆழ்ந்தார். பெயருக் கேற்ப தியாக சீலரானார் நம் தியாகராயர்.

பெரியோர் தம் பாராட்டுரைகள்

1) தந்தை பெரியார் அவர்கள்: சென்னை நகர பரிபாலன சபையில் 40 ஆண்டுகள் அருந்தொண்டாற்றிய தியாக ராயர் யாவரா லும் மறக்கற்பாலரல்லர். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச் சங்கம் கண்டு அதில் முதல் முதலாக விசைத்தறி உபயோகிக்க முயற்சி செய்தவர்.

2) திரு.வி.கலியாண சுந்தரம் அவர்கள் (திரு.வி.க) தியாகத்திற்கு ராஜா - தியாக ராய செட்டியார்

3) திரு.நெ.து.சுந்தர வடிவேல் அவர்கள்: ஒப்பற்ற தமிழருக்கு நன்றி செலுத்துகிறேன். தியாராயர் இல்லை என்றால் நாங்கள் இல்லை. திரு.வி.க வின் எதிரி ஆவார். திரு.வி.க.வை ஆங்கில அரசு நாடு கடத்தத் திட்டமிட்டபோது அதை எதிர்த்தவர். என அனைவராலும் பாராட்டப்பட்ட நம் தியாகராயரின் நினைவு நாளான இன்று (28.4.2014) அவரை நினைவு கூர்ந்து அவர் வழி நடப்போமாக.

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQOjkCU

தமிழ் ஓவியா said...



கல்கிகளின் வக்காலத்து!

கேள்வி: மோடியைச் செங்கோட்டைக்கு அனுப் பினால் பெற்ற சுதந்திரம் வீணாகி விடும் என்கிறாரே தா. பாண்டியன்?

பதில்: சுதந்திரம் பறி போய் விடும் என்பதெல்லாம் தேவையற்ற பயம். இந்திய மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் அபரிதமானது. அவ்வளவு சீக்கிரத்தில் நம் சுதந்திர வேட்கையும், உணர்வும் மழுங்கி விடாது. பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்தாலும் எந்தவிதமான அதீத நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அதற்கு அரசியல் சாசனம் இடம் தராது; மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காகச் சொல்லப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி மிரட்டலாம். வாக்காளர்களை அல்ல! - கல்கி. 27.4.2014

பி.ஜே.பி.யைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தோழர் தா. பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து சரியானதே என்பது விளங்கும். மோடி முதல் அமைச்சராக இருந்த போது தானே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்டார்கள். முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தமேயில்லாது அது நடந்துவிட்டது என்றால், இதை விட மோடியின் நிர்வாகப் பலகீனத்துக்கு வேறு சான்று தேவையேயில்லை!

மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள் - ஏமாந்துவிட மாட்டார்கள் என்கிறது கல்கி, குஜ்ராத் கலவரத்துக்குப் பிறகு மோடி இருமுறை ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களின் விழிப்புணர்ச்சியாலா?

பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் தலைமையில் தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது!

கடப்பாறையைக் கொண்டு இடித்தபோது இது சட்ட விரோதம், நியாய விரோதம் என்று அந்தப் பெரும் தலைவர்களுக்குத் தெரியாதா?

சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவதாகச் சொல் லுகிறார்களே - இது என்ன கிச்சுக் கிச்சு விளையாட்டா?

கல்கிகளின் கபடம் நமக்குப் புரிகிறது! அனேகமாக ஒவ்வொரு பார்ப்பனரும் (சிறப்புப் புலனாய்வு காவல் துறை அதிகாரி இராகவன் உட்பட) மோடி தலைமையில் இங்கு ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு முறை கல்கி அறிவித்திருக்கிறது -அவ்வளவுதான்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30EQvZ0Eq

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு?

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சேலம் வழியே மைசூர் செல்லும் விரைவு இரயில் வண்டியில் இரவு ஒரு மணி அளவில் (சனியன்று நடைபெற்று இருக்கிற கொள்ளை அதிர்ச்சியையூட்டுகிறது.

பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பெண்களுக்கே இந்தக் கதியா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓர் இரயிலுக்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காம்; இது ஏதோ சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, நடை முறையில் பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லையே!
சாலையில் பயணம் செய்தாலும் சரி, இரயிலில் பயணம் செய்தாலும் சரி பாதுகாப்பு குடி மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு இல்லை - இல்லை என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை!

இதற்கிடையே இன்னொரு செய்தி - சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இலஞ்சம் வாங்கினால் குண்டு வைப்போம் என்று இராயபுரம், ஆர்.கே. நகர், மயிலாப்பூர், இராயப்பேட்டை காவல் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம்.

இலஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக உள்ள காவல்துறைக்கே குண்டு வைப்போம் என்ற மிரட்டல் கடிதம் என்றால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காவல் நிலையங்களில் இலஞ்சம் வாங்கப் படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் - காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டதா என்பது இன்னொரு பக்கம்! போகிற போக்கை பார்த்தால் தற்காப்பு இல்லா விட்டால் நடமாட முடியாது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERCaUW1

தமிழ் ஓவியா said...

கூலி வேலை செய்கிறார் பாரத ரத்னா டெண்டுல்கர் - நம்புங்கள்!

நாட்டில் ஊழல்கள் கலர் கலராக நடக்க ஆரம்பித்து விட்டன. கோவாவில் பிஜேபி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.150. உள்ளூர்க் கட்சிக்காரர்கள் இதில் உள் குத்து வேலையில் ஈடுபட்டுகின்றனர். 150 ரூபாயைக் கொடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்ததாக கையொப்பம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளி வருவதுண்டு.

ஆனால், பிஜேபி ஆளும் கோவாவில் நடந்துள்ளது கற்பனைக்கும் எட்டாத படுநாசமாக அல்லவா இருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலி வாங்கும் தொழிலாளிகள் யார் யார் தெரியுமா?

இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி ஆளும் நடிகர் அமிர்தாபச்சன், பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. டெண்டுல்கரின் மனைவி உள்ளிட்டோராம்.

நாடு எந்த யோக்கியதையில், தராதரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிஜேபி ஆட்சியின் இலட்சணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERMekOx

தமிழ் ஓவியா said...


கழகத்தின் பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!


தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டன; அடுத்து...

பெரியார் உலகம் பணிகள், கழகத்தின்

பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!

தமிழர் தலைவர் அறிக்கை


மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தேர்தலில் நமது கடமையை நிறைவேற்றி யுள்ளோம்; வெற்றி - தோல்விகள் பற்றி கவலை யில்லை; அடுத்து நமது கழகப் பணிகள் வேகமாக நடைபெறட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் கழகக் குடும்பத்தவர்களே, பொறுப்பாளர்களே,

கடந்த ஒரு திங்களுக்கு மேல் தேர்தல் பரப்புரை -பணிகளில் நாம் ஈடுபட்டோம் மும்முரமாக.

காரணம் நமக்கு அரசியல் ஆர்வம் அல்ல; மாறாக நம் கொள்கை, லட்சியங்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை அச்சுறுத்தும் அபாயங்களும் விளைவிக்கக் கூடிய சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது; அதன் மூலம் பழைய மனுதர்மமும், பாசீசமும், நாட்டையும், சமுதாயத்தையும் நாசமாக்கி விடக்கூடாது என்ற பொறுப்பணர்வு, கவலை காரணமாகவே.

தேர்தல் முடிந்தது - நமது பணிகள் தொடரட்டும்!

பற்பல நேரங்களில் தேர்தல் சூதாட்டமாகவே நடைபெறுவதால், முடிவுகள் எப்படியிருந்தாலும், வெற்றி வந்தாலும் துள்ளிக் குதிக்கப் போவதில்லை; எப்போதும் வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள் உண்டு

தோல்விகள் என்றும் அனாதைதான்

என்ற ஆங்கில முதுமொழியை மாற்றுகிறவர்கள் நாம்! தோல்வி வந்தாலும் துவண்டு போய் மூலையில் முடங்கி விடப் போவதில்லை; நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் முன்பு ஒரு முறை எழுதியது போல, தோல்வியைக்கூட, நம் கொள்கை வெற்றிக்குத் திருப்பி விடுவது எப்படி என்ற வித்தையும் விவேகமும் நமக்கு உண்டு. எனவே நமது வழக்கமான பிரச்சாரப்பணி, ஆக்கப்பணி, குறிப்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் திரட்டும் பணி, சமூகநீதிக்கான அடுத்த கட்ட - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு உட்பட பல் முனைப் பணிகள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அய்யாவின் ஆணையை நடைமுறைக்குக் கொணரவிருக்கும் தடைகளை உடைத்தெறியும் பணி, போன்றவைகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய உடனடியாகத் துவக்கி விடுங்கள்.

களப்பணி பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்!

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாம்கள், இளைஞர்கள் - மாணவர்களுக்கான பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரத் திட்டம், இளைஞர் அணி - கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறைப் பணிகள் இவைகளை மேலும் வேகமாக முடுக்கி, முழு மூச்சுடன் செயல்பட வைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உதவாதினி ஒரு தாமதம்!

தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைப்பாளர்களாக மேற்பார்வையிட்டு, தலை மைக்கு உடனடியாக அறிக்கை வழங்கிட வேண்டுகிறோம்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/79421.html#ixzz30ERVdoFs

தமிழ் ஓவியா said...


லாலுவின் நறுக்குப் பேட்டி பீகாரில் பிஜேபி களத்தில் இல்லை


மக்களவைத் தேர்தலில் உங்களுடைய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இங்கே போட்டி எங்கே இருக்கிறது? பொதுக்கூட்ட மைதானங்களில் என்னு டைய பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தின் முழு அளவையும் தொலைக் காட் சிகள் காட்டுவதே இல்லை. நரேந்திர மோடி சளைத்து விட்டார் என்றே நினைக்கி றேன். அவருடைய கூட்டங் களுக்கு மக்கள் இப்போது வருவதே இல்லை கூட்டம் குறைந்துகொண்டே வரு கிறது. அவருடைய கூட்டத் துக்குப் போகிறவர்கள் கூட ஒரு கலவரக்காரர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்க்கத்தான் போகின் றனர்.

உங்களுடைய முக்கிய அரசியல் எதிராளி யார் - மோடியா, நிதீஷ்குமாரா?

அட... இங்கே போட் டியே இல்லை என்கிறேன். ஒருதரப்புதான் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அந்தத் தரப்பு நாங்கள் தான். பிஹாரில் உள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் செல்லுங்கள், மக்கள் என்னோடு இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

முதல் இரண்டு சுற்று வாக்குப் பதிவு எப்படி இருந்தது?

பாட்னாவில் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக பாஜக நினைக்கிறது. அவர்களு டைய கனவெல்லாம் பலூன் போலக் காற்றில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது. அது பட்டென்று வெடித்தது தான் உண்மை, அவர்க ளுக்கு உறைக்கும். களத்தில் என்ன நடக்கிறது என்று செய்தி ஊடகங்களுக்கு எதுவும் தெரியாது. நான் மட் டும்தான் இந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவன். பேச்சைக் கேட்க மக்கள் வராதபோது கூட்டங்களை நடத்தி என்ன பயன்? பிஹாரில் இதுதான் நிலைமை மற்ற மாநிலங் களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.

மீண்டும் முஸ்லிம் - யாதவ் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் ஈர்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

முஸ்லிம்கள், யாதவர் கள் மட்டுமல்ல, மகா தலித் துகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முற்பட்ட வகுப்பினர் கூடப் பெரும் எண்ணிக்கையில் வந்து என்னை ஆதரிக்கின்றனர், முற்பட்ட வகுப்பில் முற் போக்கானவர்கள் பலர், இருக்கின்றனர். அவர்கள் மோடி பித்துப்பிடித்து அலையவில்லை.

இந்தத் தேர்தலில் பிரச்சினை கள் என்ன? அடுத்துவரும் சுற்றுகளிலும் இப்படியேதான் இருக்குமா?

பாஜக ஏற்கெனவே நம் பிக்கையை இழந்துவிட் டது. கிரிராஜ் சிங்கும் நிதின் கட்காரியும் விரக்தி காரண மாக வசைபாடத் தொடங்கி விட்டனர். மோடியைச் சகித் துக் கொள்ள முடியாதவர் கள் பாகிஸ்தானுக்குப் போங் கள் என்கிறார் கிரிராஜ் சிங். பிஹாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின் கட்காரி. என்ன அரசியல் சிந்தனை இது? அவர்கள் தான் பாசிஸ்ட்டுகள், மத வாதிகள், இதைத் தெரிந்தே தான் சொல்கிறார்கள்; கடும் ஆட்சேபனைகள் வந்த பிறகு சொன்னதைத் திரும் பப் பெறுகின்றனர். இது தான் மோடியின் வேலைத் திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டுவிட்டது.

காங்கிரசுடனான கூட்டணி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?

மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அவசியம். இந்தக்கூட்டு நாட்டைக் காப்பதற்காக, அதன் மதச் சார்பற்ற அடித்தளத்தைக் காப்பதற்காக நாங்கள் திறந்த மனதுடன் செயல் படுகிறோம்.

1990-இல் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத் தினீர்கள்; உங்களு டைய

அடுத்த லட்சியம் மோடியின் முயற்சியை...

விரட்டிவிட்டேன். ஒரே உதைதான், மோடி எங்கி ருந்து வந்தாரோ அங்கேயே ஓடிவிட்டார். ஆம் அவர் கதை முடிந்தது. இது மதச் சார்பற்ற நாடு. வகுப்புவாத சக்திகள் இங்கு வெற்றி பெறவே முடியாது. பெருந் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இளைஞர்கள்தான் பாழாய்ப் போவார்கள்.

யார் அடுத்த பிரதம அமைச்சராக வருவார்கள்? அடுத்த பிரதமரை நீங்கள் தான் தீர்மானிப்பீர்களா? தேர்தலுக்குப் பிறகு அர சியல் கட்சிகளிடையே புதிய அணி சேர்க்கை ஏற்படுமா?

இது எதுவும் என்னுடைய செயல் திட்டத்தில் இப்போ தைக்கு இல்லை. நான் இப் போது போர்க்களத்தில் இருக் கிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/79437.html#ixzz30ERnau9u

தமிழ் ஓவியா said...



மன அழுத்தத்தை போக்க சில யோசனைகள்...

இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதிக்கு அடுத்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ் நிலையையும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப் படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகிறது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும், மற்றொன்று நமது வாழ்க்கையில் நிகழும் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலைப்பளு, அதிக சிரமத்தை சுமத்தல், குழப்பம், சுற்றுச் சூழல் மாசடைதல், எதிர்மறை சிந்தனைகள் நடைமுறை மாற்றங்கள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

இதுதவிர, பிறப்பு (பெண் குழந்தை, குறைபாடுடைய குழந்தை), இறப்பு, திருமணங்கள், விவாகரத்து, தொழில் பாதிப்பு, எதிலும் போட்டி சூழல், பதவிஇழத்தல், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, கடன் தொல்லை, தீராத நோய், வறுமை, தேர்வு பயம், போக்குவரத்து நெரிசல், கோபம், உறவு விரிசல், விரும்பத்தகாத மாற்றங்கள் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு அதிகாலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

கடைசி நேரம் வரை தள்ளிப் போடாமல் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அனைத்துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும். சில தோல்விகள் ஏற்படும்போது, அத்தோடு எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்காமல் அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள். தவறாக நடந்த விஷயத்தை பற்றியே எந்நேரமும் சிந்திக்காமல் நல்ல விஷயங்களை நினைத்து மகிழுங்கள். உடல் மற்றும் உள்ளத்திற்கு போதுமான ஓய்வை அளியுங்கள். எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். கருத்து ஒற்றுமையுடைய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். நன்றாக அயர்ந்து தூங்குங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ESlgzxr

தமிழ் ஓவியா said...

உடற்பயிற்சி மூலம்
எடையை குறைக்க முடியுமா?




எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏற்கெனவே மூட்டுவலி இருப்பதால் நடைப் பயிற்சி செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. சின்னச் சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

இதுகுறித்து பொது மருத்துவர் சுந்தர்ராமன் கூறியதாவது:- முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100அய்க் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம். நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை தானாகவே குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ET4binV

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக்கில் உணவு கொடுக்கலாமா?

பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத் தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது... வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால், அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETCNTjU

தமிழ் ஓவியா said...

சிறுநீரக கற்களை கரைக்கும் அத்தி பழம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத் தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்திப் பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறு வடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரதச் சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்புச் சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்திபழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப் படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, செரிமானத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப் புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETOZkis

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொய்யா



கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மா நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்: மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழ லாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை செரிமானத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற் படுத்துகின்றன. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய் யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க் கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETcoFqr

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடானால் காஷ்மீர் இணைந்திருக்காது பரூக் அப்துல்லா போர்க்கோலம்!



சிறீநகர், ஏப்.28-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக நேற்று சிறீ நகருக்கு வந்தார்.

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதைப்போன்ற தாகுதல்களுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட் டேன். இதைப்போல் இன் னும் ஆயிரம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி னாலும் பயந்து பின்வாங்கி ஓட மாட்டேன் என்று ஆவேசமாக கூறிய பரூக் அப்துல்லா இந்த கூட்டத் தில் பேசியதாவது:-

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப் பாற்றி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல் லும்படி கடவுளை வேண் டிக் கொள்ளுங்கள். இந்தியா மதச்சார்பாகி விட முடி யாது. அது மதச்சார்பான நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் நீடித்து இருக்காது. காஷ்மீர் மக்கள் மதவா தத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.


மோடிக்கு ஓட்டு போடாத வர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று அவர்கள் (பா.ஜ.க.) சொல் கிறார்கள். ஆனால், மோடிக்கு ஓட்டு போடுபவர்கள் கட லில் மூழ்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79407.html#ixzz30ETsFmMd