Search This Blog

20.4.14

ஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்க்காமைக் கொடுமை முதலில் ஒழியட்டும்!-பெரியார்

நாம் செய்யப்போவது?


நாம் செய்யப்போவது என்ன என்பது மிகவும் பொறுப்போடு பொறுமையோடு யோசித்துச் செய்யவேண்டி இருக்கிறது. இன்று நம் நாட்டில்

1. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமும்,
2. படித்தவன், படிக்காதவன் என்ற தன்மையும்,
3. பணக்காரன், ஏழை என்ற நிலைமையும்,
4. முதலாளி அல்லது எஜமான் தொழிலாளி அல்லது கூலி என்கின்ற முறைமையும் இருந்து வருகின்றன.

இதனால் ஏற்படும் குறைபாடு கொடுமை என்பவைகளைத் தவிர உலகில் மக்களுக்கு வேறு தொல்லை இல்லை என்றும், தொல்லைக்கு அடிப்படை இல்லை என்றும் சொல்லலாம். இவற்றுள் முற்கூறிய பெரிய ஜாதி, சின்ன ஜாதி, படித்தவன், தற்குறி (படிக்காதவன்) என்கின்ற கொடுமை அதாவது சகல குறைபாடுகளுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் கேடுகள் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லாம். ஆதலால் இந்த நாட்டில் இப்போது உடனடியாக ஒரு யோக்கியன், ஒரு வீரன், ஒரு "தெய்வீக சக்தி கொண்ட மகான்" என்பவன் செய்ய வேண்டிய வேலை இந்த இரண்டுமேயாகும். இந்த இரண்டிலும் முதன்மையானதாகச் செய்ய வேண்டியது முதலாவதான மேல்ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழிப்பதேயாகும். ஆகவேதான், அந்தக் கருத்தின் மீதே நம் திராவிடர் கழகம் முதலாவதாக இதனையே கருதி இதை முதல் வேலைத் திட்டமாகவும் கைக் கொண்டு இருக்கிறது. எனவே இது விஷயத்தில் காங்கிரஸ் செய்யப்போவதைப் பொருத்தே அதோடு நாம் வைத்துக் கொள்ளும் சம்பந்தம் இருந்துவரும் என்று மேலே சொன்னோம்.

78-வயது ஆனபின்பு இப்போது தான் காந்தியார் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்னும் தன்மையில் "பறச்சேரியில்" போய் குடி இருக்கப் போகிறேன் என்று சொல்லி அங்கு குபேரர்களை விட்டு "குடிசை" கட்டச் சொல்லி இருக்கிறார். இந்தச் சூழ்ச்சியை அறிந்து சேரிக்காரர்கள் காந்தியார் "குடிசை" மீது கற்கள் போட்டு, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்து இருக்கிறார்கள். அங்குக் காந்தியாருக்கே இந்தக் கதியானால் இங்கு இந்தச் சாதாரண காந்தி பூசாரிகளுக்கு நடக்கக்கூடிய காரியம், நடக்க வேண்டிய காரியம் என்ன என்பது யாவரும் அறிந்திருப்பார்கள்.


ஆதலால் காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்கின்ற ஜாதி ஆணவம் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பனவாதியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக்கூடாது.

'இந்து லா'விலும் உள்ள இக்கொடுமைகள் உடனே மாகாண கவர்னர்களுக்கும், மாகாண சர்க்கார்களுக்கும் உள்ள அதிகாரங்களைப் பொருத்தவரை திருத்தப்பட வேண்டும், இவைகளைச் செய்தால் திராவிடர் கழகத்தார் காங்கிரசின் நண்பர்களேயாவார்கள். இந்தக் காரியம் செய்தால் உத்தியோகங்களைப் பற்றிக் கூட கவலை இல்லை. பார்ப்பனர்களே எல்லா உத்தியோகமும் பார்த்தாலும் சம்மதிப்பார்கள். திராவிடர்கள் தங்கள் பெரும் உத்தியோகத்தின் மூலம் இன உணர்ச்சியோடு திராவிடர்களைக் காப்பாற்றும், திராவிடர்களுக்கு உழைக்கும் தகுதி பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தி படிப்பித்தலும்கூட இன்று குற்றமில்லை என்போம். தமிழர்களுக்கு மானம் வந்தபிறகு ஒழிக்கப் பார்த்துக் கொள்ளலாம். இனி சர். ராமசாமிக்கு மேல் சர். ஷண்முகத்திற்கு மேல் யார் தான் எந்த உத்தியோகம்தான் பார்க்க முடியும்? இவர்களால் திராவிடர்கள் வாழ்ந்ததென்ன? திராவிடர்கள் வாழ்வு உயர்ந்ததென்ன? ஒரு சர்.சி.பி., ஒரு கனம் சாஸ்திரி, ஏன் ஒரு ஆர்.வி. கிருஷ்ணய்யர் இவர்களால் பார்ப்பனர் அடைந்ததெவ்வளவு? தமிழர்தானாகட்டும் ஒரு சாமி வேதாசலம், ஒரு மீனாட்சிசுந்தரம், ஒரு மகாமகோகதிரேசன் இவர்கள் தமிழ் படித்த தெவ்வளவு? இவர்களால் திராவிடர் வாழ்ந்ததென்ன? ஆனால் ஒரு மு.ராகவய்யங்கார், ஒரு ரா.ராகவய்யங்கார், ஒரு மகா சாமிநாதய்யர் இவர்களால் பார்ப்பனர் தமிழ் படித்ததன் மூலம் வாழ்ந்த தெவ்வளவு?
ஆகவே, இன்றைய தன்மையில் உத்தியோகமும் தமிழும் தனிப்பட்ட குடும்பத்துக்குக் கம்பெனிக்கு லாபமே தவிர, திராவிடத்திற்கு, திராவிடருக்குப் பயனற்றதாகவே இருக்கிறது. எனவே திராவிடன் மந்திரி ஆக வேண்டுமென்ற கவலையும் இன்று நமக்கு இல்லை. ஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்க்காமைக் கொடுமை முதலில் ஒழியட்டும். இதைக் காங்கிரஸ் செய்தால் நாம் காங்கிரஸ் தொண்டர்கள் என்று சொல்லிப் பெருமை அடைவோம். இல்லாவிட்டால் ஒரு மூச்சு அதுவும் சற்றேறக்குறைய கடைசி மூச்சாகவே பார்த்து விடப்போகிறோம். இதுதான் நாம் செய்யப்போவது.

நம் திராவிட மாணவ, இளைஞர் தோழர்களுக்குச் சொல்லுகிறோம். இதே இறுதிப் போராட்டமாகக் கருதுங்கள். இதில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகளுடனும் நமக்குத் தகராறு இல்லை. அவர்கள் பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்டு இருக்கிறார்கள். கதர் போடுகிறார்கள். காந்திக்கு 'ஜே' சொல்லுகிறார்கள். மூவர்ணக் கொடியின் நிழலில் கீழ் நிற்கிறார்கள். தொலைந்து போகட்டும். அவர்கள் மானத்தின் வலிமை எவ்வளவு என்று கொள்ளுவோம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பவர்கள் கடவுளை, மதத்தை, பார்ப்பானை, சாஸ்திரத்தை, கோயிலை, கோயில் செலவை, பார்ப்பனச் சடங்கை, கோவில், மடப்பொருளை, மடாதிபதிகளைப் பற்றி மறந்தும் பேச மாட்டோம் என்கிறார்கள். இவர்களைத் தான் நாம் "நீங்கள் எப்படி நாணயமான கம்யூனிஸ்டுகளாவீர்கள்?" என்கிறோம். ஆகையால் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார், திராவிடர்கள் ஆகியவர்களை வையாமல் இதன்மூலம் பார்ப்பனர்களுக்குக் காங்கிரசாருக்கு நல்ல பிள்ளையாகப் பார்க்கும் கீழ்மையை உதறித்தள்ளி விட்டு உண்மை கம்யூனிஸ்டுகளாகட்டும். நாமும் கொடி தூக்கி அவர்கள் பின் தொடரத் தயாராய் இருக்கிறோம். இல்லாவிட்டால் அதோடும் போராட முடிவு செய்துள்ளோம்.

இதுதான் இன்று திராவிடர் கழகம் கைக் கொள்ள வேண்டிய கடமை என கருதுகிறோம்.

ஆகவே, நம் போராட்டத்தின் போது காங்கிரசிலும் கம்யூனிஸத்திலும் இருக்கும் திராவிட தோழர்களை ஏமாந்து போய் நாம் ஒருவருக்கொருவர் முட்டிக் கொள்ளும் மூடத்தனத்தில் இறங்கித் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.


----------------------------------------- பெரியார், "குடிஅரசு" தலையங்கம் 06.04.1946

26 comments:

தமிழ் ஓவியா said...


இப்படிக்கு வாசிப்பது தினமலர்! அய்ந்து மணி நேரம் வெயிலில் வாடிய குழந்தைகள்

ஆலந்தூர் கோர்ட் அருகே, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெ. பிரச்சாரம் செய்வதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மாலை 5 மணிக்கு தான் வந்தார். மதியம் ஒரு மணி முதல், வேன்களில் அழைத்து வரப்பட்ட பெண்கள், மேடையருகே கொளுத்தும் வெயிலில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தார்கள்.

வெயிலின் தாக்கத்தால் பாலுக்காகவும், குடி நீருக்காகவும் கைக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. பெண்கள், கேரள செண்டை மேளத்தையும், கொக்கலிக் கட்டை மனிதர்களையும், ஜெ., புகழ், நடனத்தையும் காட்டி குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெறுப்படைந்த குழந்தைகள் வீட்டுக்கு செல்ல அடம் பிடித்தன, இருக்கும் இடத்தில் இருந்து திரும்ப முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வயதானவர்கள், மிகவும் சோர்வடைந்தனர். பிற்பகல் 3 மணி முதல், காவல் துறையினர் கூட்டம் கூட்டமாக, சாலையில் நின்று கொண் டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbCOvmk

தமிழ் ஓவியா said...


அந்தப் பாட்டாளிச் சொந்தங்கள் யார்? பட்டியலிடுங்கள் பார்க்கலாம்


கேள்வி: வன்னியர்கள் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிறீர்கள். அப்புறம் அந்நியர்கள் ஓட்டு எப்படி வன்னியருக்கு விழும்?

பதில்: இது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி படையாச்சியார் இருந்தபோது சொல் லப்பட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வது இல்லை. பாமக என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளிச் சொந்தங்களின் கட்சி. இதில் எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் பொதுச் செய லாளரே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

- பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இது (ஜூனியர் விகடன் 20.4.2014)

இந்தக் கூற்று உண்மையா? இப்பொழுது பா.ம.க சார்பில் எட்டு பேர் நிறுத்தப்பட்டுள்ளார்களே - இதில் சிதம்பரம் ரிசர்வ் தொகுதியைத் தவிர மீதியுள்ள 7 பேர்களில் வன்னியர்களைத் தவிர வேறு யாராவது உண்டா? இதற்கு முன்பும்கூட வன்னியர்களைத் தவிர வேறு எந்த பாட்டாளிச் சொந்தங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளனர்?

பட்டியலிருந்தால் வெளியிடட்டுமே, பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTbkbenS

தமிழ் ஓவியா said...

பால்ய விவாகமாம்

பா.ஜ.க.வுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்பொழுதெல்லாம் வைகோ அவர்கள்தான்.

மோடியின் திருமணம் பிரச்சினையாகி விட்ட நிலையில் அவர் ஓடிவந்து மோடியைக் காப்பாற்றப் பார்க்கிறார் மோடிக்கு நடந்தது பால்ய விவாகமாம். அப்படியா? அது சட்டப்படி குற்றமாயிற்றே - இப்பொழுது யாரை உள்ளே தள்ளலாம்?

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTc3LNQJ

தமிழ் ஓவியா said...


மோடிக்கு மட்டும்தான் ஆதரவு பாஜக.,வுக்கு எதிர்ப்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரே பேட்டி


மும்பை.ஏப்.20- டைம்ஸ் நவ் தனியார்த் தொலைக்காட்சிக்கு மகா ராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அளித்த பேட்டியில் மோடியை மட் டுமே ஆதரிப்பதாகவும், பாஜக, ராஜ்நாத் சிங்கை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் செய்தியாளர் அர்னாப் கோஸ் வாமி பாஜகவையும் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்கையும் எதிர்க்கும் அதேநேரத்தில் மோடியை ஆதரிப்பது ஏன்? என்று தொடர்ச்சியாகக் கேள் விகளை எழுப்பினார்.

அதற் குப் பதிலளித்த ராஜ்தாக்கரே, நான் தெளிவுபடுத்தி உள் ளேன். மோடியை அவரு டைய பணிகளுக்காக ஆதரித்து வருகிறேன். இதனால் நான் பாஜகவை ஆதரிப்பதாகப் பொருளில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணமே எனக்கு இல்லை. நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றுமட்டுமே விரும்புகிறேன் என்று மோடியை ஆதரிப்பதற்கான விளக்கங்களைக் கூறினார்.

ஆனால், செய்தியாளர் கோஸ்வாமி தொடர்ச்சியாக மோடிக்கும், தாக்கரேவுக் கும் இடையே வெளிமாநி லங்களிலிருந்து மும்பையில் பணிபுரிவோர்பற்றிய முரண்பாடுகள் குறித்துக் கேட்டபோது, இந்த விவ காரத்தில் நான் மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குஜராத்தில் வேண்டுமானால் சாதாரண வேலைகளைக்கூட செய்வ தற்கு ஆள் இல்லாமல் இருக் கலாம். ஆகவே, அவர் களுக்கு உத்தரப்பிரதேசத்தி லிருந்தும், பீகாரிலிருந்தும் ஆட்கள் தேவைப்படலாம். ஆனால், வேலை செய்யப் போதுமான ஆள்கள் எங் களிடம் இருக்கிறார்கள்.

பூனாவில் ராஜ்நாத்சிங் பேசும்போது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஆதரவு குறித்து கூறும்போது, பாஜகவுக்கு நாங்கள் கேட் காமல் தாங்களாகவே ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள் ளாரே என்று கேட்டபோது, நான் மோடியைத்தான் ஆதரிக்கிறேன். ராஜ்நாத்தை அல்ல. அவர் சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நவநிர் மாண் தொண்டர் கூறும் போது, ராஜ் தாக்கரே கூறு வதுபோல் மோடியின் செயல்களையொட்டி மோடியை மட்டுமே ஆதரிக் கிறோம். ஆதரவு என்று வரும்போது, மோடி ஆதரவு நிலையைமட்டுமே வாக்கா ளர்களுக்கும் தெளிவாகவே கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே தொடர்ச்சி யான கேள்விகளால் ஆவேச மடைந்த ராஜ்தாக்கரே, இது பேட்டிதானே தவிர, குறுக்கு விசாரணை அல்ல என்று மிரட்டல் தொனியில்கூறி பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014

Read more: http://viduthalai.in/e-paper/78974.html#ixzz2zTcALRZ3

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்த மண்ணில் ஜாதி, மத சண்டைக்கு இடம் இல்லை, நரேந்திரமோடி உணர வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேச்சு


தருமபுரி, ஏப்.20- தரும புரி தொகுதி ஜனநாயக முற் போக்கு கூட்டணி வேட் பாளர் இரா.தாமரைச்செல் வனை (திமுக) ஆதரித்து மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி பாப்பி ரெட்டிப்பட்டி, பெரிய நத்தம், பொம்மிடி, கடத்தூர், தருமபுரி ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டு பேசும்போது:-

தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன்னை போ ராட்டத்தோடு இணைத்துக் கொண்டு போராடி மக்க ளுக்கு தேவையான திட்டங் களை கொண்டு வந்தார். கொண்டுவரக் காரணமாக இருந்தார்.

2000-ஆம் ஆண்டு ஜெய லலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது கோவை வேளாண் மை கல்லூரி மாணவிகள் 3 பேர் கொளுத்தப்பட்டதும், 17 பேர் காயமடைந்ததும் மறந்து இருக்க மாட்டீர்கள். வலி மிகுந்த சம்பவமாக அது இருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூற முடியுமே தவிர. நிதி உதவி செய்யமுடியுமே தவிர அந்த இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது. மக்களைப்பற்றி, மாணவர் களைப்பற்றி, மாணவி களைப் பற்றி கவலைப் படாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வருகிறது.

மக்களைப் பற்றி ஜெய லலிதா சந்திக்காமல் மேலே பறந்து கொண்டிருக்கிறார். மண்ணின் மைந்தரான தலை வர் கலைஞர் 91 வயதிலும் சாலை வழியாக வந்து தினம் தினம், மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடமையைப் பற்றி பேசும் ஜெயலலிதா 3 ஆண்டு களில் எந்தக் கடமையை செய்தார்கள்? பெண்கள் தைரியமாக நடமாடமுடிய வில்லை, பெண்கள் திருடர் களுக்கு பயந்து நகையே போட்டுக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல தமிழகத் தில் பெண்களுக்கெதிராக கொடுமைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் கொலை, கொள் ளை என்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆந்திராவுக்கு ஓடிப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டார்கள் போல் உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திமுக வை தவிர யாரும் உரிமை கோரமுடியாது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்க ளுக்காக வாதாடி, போராடி அந்த திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர் களும், தளபதி ஸ்டாலின் அவர்களும் தான். துளி அளவும் தொடர்பில்லாத வர்கள் இத்திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடு கிறார்கள். இந்த திட்டத்தை முறையாக இந்த ஆட்சி பயன்படுத்தி இருந்தால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டி ருக்காது.

அரசின் பணத்தில் அதிமுக கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை பதித்துள்ளது. அரசு முத்திரை தான் போட வேண்டும். எந்த ஒரு அரசும் இதுபோன்ற செயலில் இறங்கியதாக சரித் திரம் கிடையாது.

கடந்த திமுக ஆட்சியில் 75 ஆயிரம் கோடி முதலீடு தமி ழகத்துக்கு வரப்பெற்றதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. இந்த ஆட்சியில் ஒப்பந்தங் கள் போட்டதோடு சரி எந்த தொழிற்சாலையும் வர வில்லை. 10 லட்சம் பட்ட தாரிகள் வேலையின்றி கிடக் கிறார்கள்.

பாமக.,வை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தருமபுரியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத் திற்கு மத்திய அமைச்சராக இருந்த சிலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் எதையும் செய்யாமல் பேர் வாங்க நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்தின் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் திமுக தான். இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ததும் திமுக அரசு தான் என்பதை மறந்து விட் டார்கள்.

தமிழகத்துக்கு திமுக, அதிமுக எதையும் செய்ய வில்லை என்று மோடி பேசி உள்ளார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்று மையாக சகோதரர்களாக மனிதர்களாக வாழ்கின்றனர். அதை மோடி குஜராத் மாநில மாக மாற்றிட முயற்சி செய் யக் கூடாது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண் அந்த மண்ணில் ஜாதி சண்டைக்கு, மதச் சண்டைக்கு இட மில்லை, என்பதை நரேந்திர மோடி உணர வேண்டும் திராவிட இயக்கம் உருவாக் கிய அரசியல் நம்மைக் கைவிடாது இதை மீறி யாரும் மதத்தின் பெயரைச் சொல்லி ஜாதியின் பெயரைச் சொல்லி தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை காட்டிலும் குஜ ராத் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது என்றார் கனி மொழி.

Read more: http://viduthalai.in/page-7/78984.html#ixzz2zTdxR3Ul

தமிழ் ஓவியா said...


அய்யோ பாவம் அதிமுக ஏடு!


தேர்தல் பயத்தில் ஜன்னிப் பிடித்து உளற ஆரம்பித்து விட்டது அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.

உதய சூரியன் பொத்தானை அழுத்தினால் வீட்டின் விளக்கு எரியும்; நாட்டைப் பிடித்த இருள் அகலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம் (17.4.2014).

பொச பொச என்று எகிறிவிட்டது அந்த ஏட்டுக்கு. விவாதம் செய்யலாம் - வீரமணி அவர்கள் சொல்லுவது இந்தந்த வகையில் தவறு என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறார்கள் - அவர்கள்? சரக்கு அவ் வளவுதான்! பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலைத்தானே அடிப்பார்கள் கையாலாகாதவர்கள்.

வசை மாரி பொழிந்து தள்ளுகிறது ஆனால் அவர்களை அறியாமலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஏற்கெனவே உதவாத உதயசூரிய னுக்கு ஓட்டுப் போட்டதற்கான பலனாக கருணாநிதி ஆட்சி இருட்டையும், திருட் டையும், விதைக்கும், மின் தடையைத் தந்து, தமிழகத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது - என்று குறிப்பிட்டுள்ளது (17.4.2014).

விவாதத்துக்காகவே ஒப்புக் கொள் வோம். கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின் வெட்டுக்கே இருட்டும் திருட்டும் என்றால், அம்மையார் ஆட்சி யில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் எத்தனை மடங்கு இருட்டும், திருட்டும் எகிறிக் குதிக்கும் - (அதுதானே இப்பொழுது நாட்டின் நிலைமை) பட்டப்பகலிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லும் புதிய கலாச் சாரத்தை அல்லவா அண்ணா திமுக ஆட்சி வளர்த்து விட்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல வேண்டும். எதையாவது நமது எம்.ஜி.ஆர். ஏடும் கிறுக்குகிறது; அதற்கு வட்டியும் முதலுமாக விடுதலை கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது. அதற்குமேல் எதையும் எழுத முடியாத அளவுக்கு மூச்சுத் திணறுவது,

இப்படியும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page-8/79000.html#ixzz2zTf0YPZ7

தமிழ் ஓவியா said...


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது

துக்ளக் நிருபர்கள் சில ஆயிரக்கணக்கான மக்களை, சுமார் இருபத்தைந்து தொகுதிகளில் சந்தித்துப் பேசியதிலிருந்து, தி.மு.க. பல தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு கடும் போட்டியைத் தரக்கூடிய அளவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. தி.மு.க.வை வளர விடுவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்ற என் கருத்தை நான் பல முறை துக்ளக்கிலும், ஆண்டு விழாக்களிலும் விளக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிலை தோன்றவில்லை; தி.மு.க. கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கக் கூடிய அளவில் ஆதரவு உள்ள கட்சியாகத் தெரிகிறது. - துக்ளக் (23.4.2014) தலையங்கம்

திமுக அவ்வளவுதான்! கடைசி இடத்திற்கத் தள்ளப் பட்டு விட்டது என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருந்த சோ கூட்டத்தின் சுருதி அடங்கி விட்டது என்பதைத் தான் இது காட்டுகிறது. அவசரப்பட வேண்டாம். இன் னும் இடையில் சில நாட்கள் முடியில்லாத சோ என்ன செய்வார்? சுவரில் முட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

நூறு ரூபாய்க்கு இவ்வளவு தூரம்தான்!

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார் அமைச்சர் சின்னையா. அவருடன் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூ வீலரில் கொடிகளைக் கட்டிக் கொண்டு சென்றனர். பாதி பிரச்சாரத்திலேயே பைக்கு களை நிறுத்தி விட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்கள். காரணம் கேட்டபோது, நூறு ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போட்டுக் கொடுத்தாங்க. அதுக்கு இவ்வளவு தூரம்தான் வர முடியும் என்று சொல்லியிருக் கிறார்கள்.

கடுப்பான சின்னையா, ஆட்களை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகியைக் காய்ச்சி எடுத்திருக்கிறார். பிறகு அனைத்து பைக்குகளுக்கும் தாராள பெட்ரோல் சப்ளை கிடைக்க... பிரச்சாரம் தொடர்ந்தது.

(ஜூனிடர் விகடன் 20.4.2014 பக்கம் 24)

கூலிக்கு மாரடிப்பு என்பது இதுதானோ!

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbBMpg9

தமிழ் ஓவியா said...

எஃப்.அய்.ஆர் பதிவு

பாட்னா, ஏப்.21:-தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்தில் எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விட வேண்டும் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியி ருந்தார். இதை காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத் தில், மதம் மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய நினைக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்குமாறு தண்டனை வழங்க வேண்டும். என்று மிட்டல் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbJxsY2

தமிழ் ஓவியா said...

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


மோடியை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் ஓடுங்கள் என்றார் பிஜேபிக்காரர் ஒருவர்

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்டுங்கள் என்கிறார் வி.எச்.பி. தலைவர் தொகாடியா!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தவெறி என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகும் - எச்சரிக்கை!

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

இந்துக்கள் பகுதிகளில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும் என்று எச்சரித்து, மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ்சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19ஆம் தேதி பேசும்போது.

நரேந்திரமோடியை பிரதமராக விடாமல் தடுப் பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

எஃப்.அய்.ஆர். மட்டும்

பிகாரின் நவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் மோடியின் தீவிர ஆதரவாளராம். 2005 முதல் 2013 வரை பிகார் மாநில அமைச்சராகவும் இருந்தவர்.

இந்த மேடையில் இவருடன் பா.ஜ.க.வின் முந்தைய தலைவரான நிதின் கட்காரியும் (ஆர்.எஸ்.எஸ்.) மேடையில் உடன் இருந்து அவர் முன்னிலையில்தான் இப்படி கிரிராஜ்சிங் பேசியுள்ளார்.

நிதின்கட்காரி இதை ஆட்சேபித்தோ, பிறகு மறுத்தோ பேசவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.

இவர்கள் இருவரின்மீது பிகார் தேர்தல் ஆணையர் இ.பி.கோ. மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எஃப்.அய்.ஆர். போட்டிருக்கிறாரே தவிர, அவர்களைக் கைது செய்யவில்லை இதுவரை!

தமிழ் ஓவியா said...

இரண்டாவதாக, மோடி ஆளும் குஜராத்தில் (இன்று (21.4.2014) காலை வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுச் செய்திப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத அமைப்புக்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசியுள்ளனர். (இவர்களின் தலைவர்கள் எல்லாம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது). கல்லால் அடித்து விரட்டுங்கள்

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் பவந்தர் பகுதியில் முஸ்லீம் வியாபாரிகள் இந்துக்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு முன் பஜ்ரங்தளம் அலுவலகம்! என்று போர்டு மாட்ட வேண்டும்; அந்த வீட்டை நாம் ஆக்கிரமித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு குஜராத்தில் உள்ள சட்டப்படி இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் அசையா சொத்துக்கள் வாங்குவது சட்ட விரோதம் என்ற(Inter Community Sale of Immovable Property) மோடி அரசு சட்டப்படி (Disturbed Areas Act) தவறு என்று வலுக்கட்டாயமாக அதை இந்து அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; 48 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் கற்களை வீசுங்கள், டயரைக் கொளுத்தி எறியுங்கள் - தக்காளியை வீசுங்கள்! வழக்குப்பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி, இரவில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களையே தூக்கில் போடவில்லை; அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் வி.எச்.பி. தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

தலைக்கொழுத்துப் பேசி பச்சையாக குஜராத்தில் வன்முறை வெறியாட்டத்தைத் துவக்கி மீண்டும் 1992 பாபர் மசூதி - 2002 குஜராத் கலவரங்களைப் புதுப்பிக்க அச்சாரப் பாட்டு பாடுகிறார்கள்!

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?

மோடி பதவிக்கு வரவில்லை; இப்போதே இப்படி இவர்கள் ஹிட்லர் மொழியில் பேசுகிறார்கள் என்றால் அதன் விளைவு என்னவாகும்? நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும்!

நரிக்கு நாட்டாண்மை என்றால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்! என்ற நிலை தானே ஏற்படும்?

வாக்காளர்களே சிந்தியுங்கள் - மதச் சார்பற்ற சக்திகள் விழித்தெழ வேண்டிய மிக முக்கியமான நேரம் இது! பி.ஜே.பி.க்குத் துணை போகக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும், சமதர்ம அரசாக சமூக நீதி அரசாக, மத்திய அரசு அமையவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கவும், சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாசிசத்திலிருந்தும், மதவெறிகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற முன் வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



21.4.2014
திருச்சி (முகாம்)

Read more: http://viduthalai.in/e-paper/79026.html#ixzz2zZbQ8OeB

தமிழ் ஓவியா said...


என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன் மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத் தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத் திலும் இருந்து வந்த நிலைமையேயாகும். - (விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/79032.html#ixzz2zZc4qimg

தமிழ் ஓவியா said...


இந்துத்துவாவுக்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி வந்ததும் - சில அலைகள் கிளம்பி விட்டன. மோடி அலை அலை என்று சொல்லி வந்தவர்களை புதிய எதிர்ப்பு அலை கிளம்பி அவர்களைத் துரத்திக் கொண்டுள்ளது.

தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் எங்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் இடம் பெறும் என்று பிஜேபியின் முக்கிய தலைவர்கள் வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத்தும் தெரிவித்து வந்ததும் உண்மை. இது குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை வெளியிட்டும் இருந்தார்.

பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேரும் எண்ணத்துடன் இருந்த தமிழ் நாட்டுக் கட்சிகள் அப்பொழுதாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும் - இந்தக் கட்சி களுக்குக் கொள்கைகள் சித்தாந்தம் என்பது தங் களுக்கு உண்டு என்று நினைத்திருந்தால்,.. அப்பொ ழுதே பிஜேபி உயர் மட்டத் தலைவர்களோடு பேசியிருக்க வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் உங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமாயின் நாங் கள் கூட்டணியில் இடம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கொள்கைகள், கோட்பாடுகள் மீது பிடிப்பு இருந் தால் அல்லவா அந்த மாதிரி சிந்திப்பார்கள்? இதில் வெட்கக்கேடு என்னவென்றால், எந்தவித நிபந்தனை களுமின்றி முதன் முதலில் பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்ள முதல் குரல் கொடுத்தது அடியேன் வைகோதான் என்று மார்தட்டுகிறார் என்றால் இந்தப் பிற்போக்குத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

ஊழல் ஊழல் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஊழலைவிட ஆபத்தானது மதவாதம் ஆயிற்றே! பாலில் தண்ணீர் கலப்பது ஊழல் என்றால் பாலில் நஞ்சு கலப்பது மதவாதம் ஆகும். (அப்படியே பார்த்தாலும் பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமப் புத்திரன் அல்ல - சவப் பெட்டியிலேயேகூட ஊழல் செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டியவர்களே!).

எந்த ஊழல் காரணமாக கருநாடகாவில் பி.எஸ். எடியூரப்பா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டாரே! பி.ஜே.பி. சார்பில் கருநாடகத்தில் போட்டியிடும் சிறீராமுலு யார்? சுரங்கத் தொழில் கொள்ளையில் அவர் பங்கு என்ன என்பது ஊர் சிரிக்கவில்லையா? ஊழல் என்ற பார்வையில் பார்த்தாலும் பி.ஜே.பி. யோடு கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கியிருக்கவே வேண்டும்.

பிஜேபியின் இந்துத்துவா தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சித் தலைவர்களை நோக்கி வினாக்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், மூச்சுத் திணறி, ஏதோ ஒரு பதிலைச் சொல்லித் தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

எங்களிடையே கொள்கை வேறுபாடு உண்டு என்பது உண்மைதான். கொள்கை வேறுபாடு இல்லா விட்டால் ஏன் தனித்தனியே கட்சியாக இயங்குகின் றோம் என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜாலம் செய்து பார்க்கிறார்கள். ஒரு முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தேர்தலில் எதை முக்கியமாக வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்?

நாட்டில் மோடி அலை வீசுகிறது, மோடிதான் பிரதமர்! ஆகவே எங்கள் அணிக்கு வாக்களியுங்கள் என்று தானே வாக்குக் கேட்கிறார்கள்.

மோடிதான் பிரதமர் என்று சொன்னபிறகு மோடி பிரதமர் ஆசனத்தில் உட்கார்ந்தால், அவர்களுடைய தேர்தல் அறிக்கையின்படி ஆட்சி செய்யக் கடமைப் பட்டவர் ஆகி விடவில்லையா?

பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பிறகாவது மோடிதான் பிரதமர் என்கிற பரப்புரையையாவது நிறுத்தினார்களா?

இந்த நிலையில், ஏதோ பிஜேபிதான் மதவாதக் கட்சி என்று நினைக்காமல், அதற்குத் துணை போகும் மதிமுகவும், பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு வகையில் மதவாதக் கட்சிகளே என்ற முடிவுக்குத்தான் வாக்காளர் கள் உணர வேண்டும்.

பி.ஜே.பி.க்கு வாக்களித்தாலும், அதனுடன் கூட் டணி சேர்ந்துள்ள இந்தக் கட்சிகளுக்கு வாக்களித் தாலும் அடிப்படையில் ஒன்றுதான். இந்துத்துவா ஆட்சிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு வாக்களித்ததாகவே பொருள்படும். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் - இதில் சம்பந்தப்பட்டவர்களை ஒருக்காலும், ஒருபோதும் மன்னிக்காது - மன்னிக்கவே மன்னிக்காது.

வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/79033.html#ixzz2zZcD8RkC

தமிழ் ஓவியா said...



மோடிமீது நீதிமன்றங்கள் வைத்த மொத்துகள்!

புதுடில்லி, பிப்.21 (2002)- குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட படுகொலைகளின்போது கொல் லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடையாளம் தெரியாத 28 பேரின் உடல் களை தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ் டா செட்டால்வாட் மீது விசா ரணைக்கு மாநில அரசு ஆணை யிட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அவரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள போலியான வழக்குதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002இல் மதவெறி சக்திகளால் சிறு பான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர் வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட வில்லை எனக்கூறி புதைக்கப் பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்ற வியல் சட்டத்தின் கீழ் அவர் மீது விசா ரணைக்கும் ஆணையிடப் பட்டது. இதை எதிர்த்து ஷெட்டால் வாட் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவின் மீது செவ்வாயன்று (பிப்.21) விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, இது மனுதாரரைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்கு தான் என்று கூறியது. இது போன்ற வழக்குகள் மாநில அரசுக்குப் பெருமை சேர்க்காது, என்றும் நீதிபதிகள் கூறினர். மாநில அரசு இந்த விசாரணையைத் தொடர்வது முறையல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால்வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷ் படித்துப்பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோ சனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக் கறிஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

***

புதுடில்லி ஜூன் 2 (2008)

பிரபல சமூகவியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆசிஷ் நந்தி 2007 குஜராத் தேர்தல் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரியவை எதுவும் இல்லையென்று உச்சநீதிமன்றம் மோடி அரசின் தலையில்குட்டு வைத் துள்ளது.

2007 குஜராத் சட்டமன்றத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரை சமுதாயத்தின் இரு பிரிவு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டது என்றும் இதனால் மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் குஜராத் அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நந்தியின் கட்டுரை குறித்து வி.கே. சக்சேனா என்பவர் தொடுத்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் துணை காவல் நிலையம் நந்தியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆசிஷ் நந்தி உச்சநீதிமன்றம் சென்றார்.

அவர் அப்படி என்ன எழுதி விட்டார் என்று வாரண்ட் பிறப் பித்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் ஜி.எஸ். சாங்கி ஆகிய இருவரும் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதிகள் இல்லை என்று குறிப்பிட் டனர். மகாத்மாகாந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்தவர்களால் விமர்சனங் களை ஏன் தாங்கிக் கொள்ள முடிய வில்லை என்றும் அவர்கள் வினவினர்.

பலவீனமான இலக்கு

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் போன்ற பலவீனமான இலக்குகளைத் தாக்குவதால் நாடு பயன் அடையாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முதலில் ஒட்டு மொத்தமான விமர்சன மாக இருந்தபோதும் பின்னர் குஜராத் மாநில அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். தன் மனதில் பட்டதை கட்டுரையாளர்களால் எழுத முடிய வில்லை என்றால் அந்நிலை நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்றும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

குஜராத் மாநில அதிகாரிகள் ஆசிஷ் நந்தியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நந்திமீது பிறப்பிக்கப் பட்ட சம்மன்களும் தடை செய்யப் பட்டன. அவருக்கு இனிமேல் சம்மன் கள் அனுப்பக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

Read more: http://viduthalai.in/page-2/79036.html#ixzz2zZckEsos

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


கேள்விப்பட்டதுண்டா?

ஓர் ஆட்சியில் 32 உயர் மட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த அந்த 32 காவல்துறை அதிகாரிகளும், ஒரு மாநில முதல் அமைச்சர்மீது குற்றஞ்சாட்டுவதுபற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதுண்டா? ஆம், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான் இந்த நிருவாக லட்சணம்!

கேள்விப்பட்டதுண்டா?

ஒரு மாநில முதல் அமைச்சரை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்த பிறகும்கூட, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் அவர்.



கேள்விப்பட்டதுண்டா?

போலி என்கவுண்டர் தொடர்பான ஒரு வழக்கில் இந்த மாநிலக் காவல் துறையை நம்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் சொன்னதற்குப் பிறகும்கூட இதுகுறித்து அலட்டிக்காமல் ஆட்சிப் பொறுப்பில் ஒட்டிக்கொண்டு இருந்த முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இப்பொழுது நாடு நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி தான் அவர்!



கேள்விப்பட்டதுண்டா?

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டும் தனக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று சொன்ன முதல் அமைச்சரை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?

முதன் முதலாக - குஜராத்தை ஆளும் மோடி என்ற ஒருவரை இப்பொழுது தான் கேள்விப்பட்டுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-2/79031.html#ixzz2zZd5MdYt

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியம் தரும் தர்பூசணி பழம்


கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப் பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத் தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக் ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொழுப்பை குறைக்கும்: கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யின் உதவியுடன் செயல்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

இதய பாதுகாப்பு: தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின்', அர்ஜினை னான' எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.

அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜி னைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர் களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும்.

Read more: http://viduthalai.in/page-7/79040.html#ixzz2zZdtzJLF

தமிழ் ஓவியா said...

கோடையை சமாளிக்க எளிதான வழிமுறைகள்

நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம். நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் உள்ளது.

அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள்.

ஆனால் நிறம் குறைந்தவர் களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக் கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயி லினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும்.

இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது. வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம். வியர் வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும்.

ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம். உடல் அதிக சூடாவதால், கண் எரிச்சல் அதிகமாகும்.

வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79040.html#ixzz2zZe1XmDS

தமிழ் ஓவியா said...


வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்


இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகிய வற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் செரிமானமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து.

இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்தத் துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி செரிமான சக்தியை அதிகமாக்கும். சிறிது வெப்பத்தையும் கொடுக்கும்.

ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeAvsDI

தமிழ் ஓவியா said...

இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்

கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.

கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் சி யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது.

இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது. முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeJENNL

தமிழ் ஓவியா said...



ஆண்மையின் ஆணவமா?

ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!

காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!

முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?

காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?

தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.

திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!

பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...

கருத்துரிமையை நெறிக்கும் சட்டம்

- சு.மதிமன்னன்

பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.

ஆனால்....

பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!

சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.

இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?

இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!

நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.

சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!

சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.

இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!

எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!

சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.

கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?

தமிழ் ஓவியா said...

எது அறிவியல்

நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.

எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.

இதுதான் - இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.

இந்த மாதிரியும் இருக்கலாம் - இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.

ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் - அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?

இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!

அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?

ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?

- - - _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]

தமிழ் ஓவியா said...

மேதைமை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

தமிழ் ஓவியா said...

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்

எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’

அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல

- மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.

இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?

இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

மோடியின் குஜராத் மாடல் எது?
மோடியின் குஜராத் மாடல் எது?




மனுஷ்யபுத்திரன் (தனது முகநூல் பக்கத்தில்)

ஒரு புத்தகம் பற்றி குருட்டுத்தனமான மோடி ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். குஜராத் கலவரங்கள் பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் குற்றமற்றவர் என்று அறிவித்ததன் மூலமாகத்தான் அவர் பிரதமர் வேட்பாளராக கம்பீரமாக வலம் வருகிறார். ஆனால் இந்தப் பரிசுத்தச் சீட்டு எப்படிப் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் முன் வைக்கிறது.

பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய The Fiction of Fact-Finding: Modi & Godhra, a study of the Gujarat 2002 investigations என்ற இந்தப் புத்தகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்த குளறுபடிகளுக்காக வர்மா கமிஷனால் கண்டிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகாரி ஆர்.கே ராகவன் பின்னால் சி.பி.அய் இயக்குனராக வாஜ்பாய் அரசாங்கத்தினால் மறு வாழ்வு அளிக்கப்பட்டார். அவர்தான் மோடிமீதான இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். கலவரம் நடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிலவரம் பற்றி தொடந்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த மோடி குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றி தனக்கு 5 மணிநேரம் கழித்தே தெரியும் என்று புளுகினார். அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த வன்முறையில், மோடியின் பொறுப்பு பற்றி இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. ராகவன் போன்ற அதிகாரிகள் மோடிக்கு வழங்கிய இந்தப் பரிசுத்தச் சான்றிதழின் மூலம் எப்படி நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தார்கள் என்பதைப் பற்றி மனோஜ் மிட்டா ஆழமாக விவரிக்கிறார். மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியைப் பற்றியே ஒப்பாரி வைப்பவர்கள் அவரது குஜராத் மாடல் நீதியைப் பற்றி ஒரு கணம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகம் பற்றி அவுட் லுக் இதழ் வெளியிட்ட அறிமுகம் ஃப்ர்ஸ்போஸ்ட்.

இணைய தளம் வெளியிட்ட மனோஜ் மிட்டாவின் பேட்டி ஆகியவற்றின் இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன்.

http://www.outlookindia.com/article.aspx?289455
http://www.firstpost.com/politics/sit-chiefs-history-made-him-unfit-to-lead-probe-new-book-on-
2002-riots-1458785.html