Search This Blog

13.4.14

சீர்திருத்தத்தை எதிர்க்க - பார்ப்பான் தூண்டிவிட்டதே சிப்பாய்க் கலகம்!-பெரியார்




மற்ற ஜீவனுக்கில்லாத அறிவு மனிதனுக்கு இருக்கிறது. அதன் பயன், மற்றவன் சொல்கிறதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்காக அல்ல. மனிதன் தன் அறிவைக் கொண்டு எதையும் சிந்தித்து ஏற்றுக் கொள்வதற்காகவே ஆகும். நம் நாட்டு மக்கள் அந்த அறிவைப் பயன்படுத்தாத காரணத்தினாலேயே நாம் இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையிலேயே இருக்கின்றோம். மற்ற உலக மக்கள் அறிவைப் பயன்படுத்தி, சந்திர மண்டலத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சூத்திரர்களாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம். நம் தாய்மார்கள் சூத்திரச்சிகளாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருந்து கொண்டிருக்கின்றனர். இதனை நிலைநிறுத்துவதற்காகத் தான் காந்தி பாடுபட்டாரே ஒழிய, இந்த இழிவு நீங்க வேண்டும் என்று பாடுபடவில்லை. அதனால் தான் அவர் சிஷ்யமாக இருந்த நான் அவரது கருத்தைப் புரிந்து கொண்டு வெளியேறி, நம் மக்களின் சூத்திரத்தன்மை, இழிவு, சாதிபேதம் இவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தைத் துவக்கித் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

நம் மக்கள் மட்டும் உலகில் வேறெங்கும் இல்லாத தன்மையில், சூத்திரர்களாக, இழிமக்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் வழிபடும் கடவுள், பின்பற்றும் மதம் - சாஸ்திரம் - சம்பிரதாயம் இவையே ஆகும். ஒருவன் எதனால் சூத்திரன் என்றால், கடவுள் படைப்பால், மதக் கோட்பாடு சாஸ்திரத்தில் எழுதி வைத்துள்ளபடி, சாதி அமைப்பின்படி சூத்திரனாக இருக்கின்றான்.

இந்த நாட்டில் புராண, இதிகாச காலம் தொட்டு, நேற்று வரை இருந்த காங்கிரஸ் ஆட்சி வரை, அத்தனையும் சாதியைக் காப்பாற்றும் ஆட்சியேயாகும். கடவுள், மத, சாஸ்திரங்களைக் காப்பாற்றும் மனுதரும ஆட்சியேயாகும். இன்றைக்கு அமைந்திருக்கின்ற இந்தத் தி.மு.கழக ஆட்சி ஒன்று தான் மனித தருமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாகும்.

நம் இழிவுப் போராட்டத்தை மறைக்கத் தான் கடவுளை, மதத்தைக் கொண்டு வந்தான் - ஆட்சியைக் கொண்டு வந்தான். வெள்ளைக்காரன் வந்து இவற்றை எல்லாம் மாற்றி, தன் நாட்டு மக்களைப் போல நம் மக்களையும் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து சீர்த்திருத்தம் செய்ய ஆரம்பித்ததும் பார்ப்பான் இராணுவத்தில் இருந்தவர்களைத் தூண்டிவிட்டு வெள்ளைக்காரனுக்கு எதிராகக் கலகம் செய்யச் சொன்னான். அது தான் சிப்பாய்க் கலகமாகும். அதைத்தான் இன்று காங்கிரஸ்காரன் முதல் சுதந்திரப் போராட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றான்.


இன்றைக்குப் பார்ப்பானுக்கு, என்ன வேலையென்றால் எந்தக் கட்சியிலிருந்தாலும் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பது தான் பார்ப்பானின் வேலையாக இருக்கிறது. காரணம் இந்த ஆட்சி - கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கையுள்ள அரசைக் கொண்டு வர வேண்டும் என்று பாடுபடுகின்றான்.

இதுவரை இருந்த ஆட்சிகள், அரசுகள் என்பவை அனைத்தும் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கையுடைய, அவற்றைப் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்ட ஆட்சியானதால், அவை நம் மக்கள் படிப்பிற்காக எதையும் செய்யவில்லை. நம் மக்களின் மடமையை வளர்க்கத்தக்க வண்ணம் கோயில்களைக் கட்டியிருக்கின்றார்களே தவிர, ஒருவர் கூட நம் மக்களுக்காக என்று பள்ளிக் கூடம் வைக்கவில்லை, பார்ப்பானுக்கு மட்டும் பள்ளிக்கூடம் வைத்து சோறு போட்டு படிப்புச் சொல்லிக் கொடுக்க வசதி செய்தனர். மனுதருமப்படி பார்ப்பான் தான் படிக்க வேண்டும். சூத்திரன் படிக்கக் கூடாது. சூத்திரன் படிக்காமல் பார்த்துக் கொள்வது அரச கடமைகளில் ஒன்றானதால் எந்த அரசனும் பள்ளிக்கூடம் வைக்க முன்வரவில்லை.

இந்தக் காங்கிரசே 1938-இல் பதவிக்கு வந்த போது நம் மக்கள் 100-க்கு 5-பேர்கள் தான் படித்திருந்தார்கள். அப்போது பார்ப்பான் 100-க்கு 100-ம் படித்திருந்தான் என்றாலும், 2000- பள்ளிக்கூடங்களை மூடியது. அடுத்து 1952- இல் பதவிக்கு வந்த போது நம் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் பயனாக 100-க்கு 9-பேர்களே படித்திருந்த போது 6000-பள்ளிக் கூடங்களை மூடி ஜாதித் தொழில் செய்ய வேண்டும் என்று காங்கிரசு ஆட்சி சொன்னது. நாம் தான் இரண்டு முறையும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றோம்.

காங்கிரசை (பார்ப்பானை) ஒழித்து காமராசரைக் கொண்டு வந்ததற்குப் பின் அவருக்கும் நம் உணர்ச்சி இருந்த காரணத்தால் காங்கிரஸ் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்ததோடு, காங்கிரசின் கொள்கைக்கு மாறாகப் பல ஆயிரக்கணக்கான புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்து நம் மக்கள் நிறைய பேர்கள் படிப்பதற்காக இலவசக் கல்வியைக் கொண்டு வந்ததன் பயனாக அவர் ஆட்சிக் காலத்தில் நம் மக்கள் 100-க்கு 40-பேர்கள் படித்தவர்களானார்கள். அவர் காங்கிரஸ் தோற்று தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் காமராசரை விடத் தீவிரமாக இருந்ததால் இன்று 100-க்கு நம் மக்கள் 50- பேர் படித்தவர்களாகும் படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவர்களே இன்னும் 10- ஆண்டுகள் இருந்தால் நம் மக்கள் 100-க்கு 100-பேர்களும் படித்தவர்களாகி விடுவார்கள்.


இன்றைய இந்த தி.மு.கழக ஆட்சியானது தமிழர்களுடைய ஆட்சி பகுத்தறிவுவாதிகள் ஆட்சி. கடவுள், மத, சாஸ்திர புராணங்களை, சாதி அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களின் ஆட்சி. தமிழர்களின் நலத்தை இலட்சியமாகக் கொண்டு அதற்காகத் தொண்டாற்றக் கூடியவர்களின் ஆட்சியாகும். இதுபோன்ற ஆட்சி நமக்குக் கிடைத்தது நம்முடைய நல் வாய்ப்பேயாகும். இது போனால் திரும்ப இது போன்ற ஓர் ஆட்சி அமையுமா என்பது சந்தேகமே. இந்த ஆட்சியின் மூலம் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைந்தால் தான் உண்டு. இதன் மூலம் நம் இழிவை சூத்திரத்தன்மையை நீக்கிக் கொண்டால் தான் உண்டு. இல்லை என்றால் நம் பிள்ளைக்குட்டி தலை முறைக்கு நாம் சூத்திரர்களாக இழி மக்களாக இருக்க வேண்டும் என்பதோடு, அவர்களும் தலைமுறை தலைமுறையாக சூத்திர மக்களாக இருக்க வேண்டியே தீரும். இதை நம் மக்கள் நல்ல வண்ணம் உணர்ந்து இந்த ஆட்சியினைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இழிவை நீக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

---------------------------- 23.06.1969- அன்று பெரம்பலூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 18.07.1969

22 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள், ஊடகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் மோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?


பார்ப்பனர்கள், ஊடகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் மோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? பதவிப் பசிக்காரர்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பார்ப்பன சக்திகள் - ஊடகங்கள் - கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் நரேந்திரமோடி முன்னிறுத்தப்படுவதைப் புரிந்து கொள்ளாமல் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்படும் அபாயங்களை அறிந்து கொள்ளாமல், கேவலம் பதவிக்காக பிஜேபியை ஆதரிக்கலாமா என்ற வினாவை எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் (அண்மையில் தனது 99 வயதில் மறைந்தவர்) 2002-இல் மோடி ஆளும் குஜராத்தில் நடைபெற்ற திட்டமிட்ட இஸ்லாமியச் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்கிய இன அழிப்புப்பற்றி (Pogram) மிகுந்த வேதனையோடு ஒரு சிறு நூலே ‘The End of I: ndia’ என்று எழுதி வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

குஷ்வந்த்சிங் கூறுகிறார்

அதில் மோடி திட்டமிட்டே அந்தக் கலவரங்களின் போது காவல்துறை அதிகாரிகள் குஜராத்தில் இஸ்லாமியர் களுக்கு எதிரான கலவரத்தினை அடக்க முயற்சிக்காமல், கண்டும் காணாதது போல் இருக்கச் சொல்லி சுமார் 2000 பேர்களுக்கு மேல் இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தை கள் கொல்லப்பட்ட கொடுமை!

இனி, மோடி போன்றவர்கள் பதவியில் நீடித்தால் இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது; மாறாக சிதறுண்டு போகும் என்று எச்சரிக்கை விடுத்தார்!

ஆர்.எஸ்.எஸ். தீவிரம்!

இவர் பிரதமர் என்றால் நாடு தாங்குமா? எதிர்காலம் இருண்ட காலமாகத்தான் அமையும். மோடியைக் காட்டி, ஆட்சியைப் பிடித்து தங்களது வழக் குகளை வாபஸ் பெறுமாறு செய்ய வேண்டியது அவசரம் என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ். காவித் தீவிரவாதம் முனைப்புடன் செயல்படத் துவங்கி விட்டது.

அதற்காக ஆங்காங்கே மாநிலங்களில் அலை என்றுகூறி வலை வீசி, சிக்கியவர்களைக் கொண்டு சீட்டணி (கூட்டணி அல்ல) அமைத்து போட்டியிடு கின்றனர்.

பார்ப்பனர் மற்றும் கார்ப்பரேட் சக்திகளின் பின்னணி

பார்ப்பன ஏடுகளும் - ஊடகங்களும் பன்னாட்டு முதலாளித்துவ திமிங்கலங்களான முகேஷ் அம்பானி, டாடா, அடானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வந்து விட்டால் தாங்கள் இந்தியாவையே பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, விலைக்கே வாங்கி விட முடியும் என்ற பேராசையால் உந்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்ட முனைப்புடன் செயலாற்றுகின்றனர்!


தமிழ் ஓவியா said...

முன் நடந்தவை - மதக் கலவரங்களை 1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 கோத்ரா கலவரம் பின் ஏற்பட்ட சிறுபான்மையினர் அழிப்புப்பற்றி அறவே அறியாத 18 வயது நிரம்பியதால் வாக்குரிமை பெற்ற வாக்காளர்களான இளைஞர்களிடம், காங்கிரஸ் அதிருப்தி, ஊழல் என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு, அவர்கள் கையில் உள்ள வாக்கினை வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற மயக்க பிஸ்கட்டுகள் மூலம் ஏமாற்ற, இணையதளம் மற்றும் அய்டெக் (High Tech) தொழில் நுட்பமூலம் ஆவேசமாய் முனைப்புடன் செயல்படுகின்றனர், பணத்தையும் பஞ்ச மில்லாமல் செலவழிக்கின்றனர்!

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பதவிப் பசி தேடிகளும், பார்ப்பன ஊடகவியலாளர்களும், மோடியைத் தூக்கிப் பிடித்து, அவர் ஏதோ ஒரு சர்வரோக நிவாரண சஞ்சீவி போல காட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற முனைப்புடன் உள்ளனர்!

ஆதரவின் உண்மை நிலை என்ன?

மேற்கு வங்க மம்தா பானர்ஜியிடமோ, ஒரிசா நவீன் பட்நாயக் இடமோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, திரிபுரா போன்ற சிறு மாநிலங்களிலோ, காஷ்மீரிலோ வேறு பல தென்னாட்டு மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திராவிலோ (நாயுடுவிடம் தூண்டில்) அவர்களுக்கு அடித்தளமே இல்லை.

தமிழ்நாட்டில் தங்கள் இடத்தை ஆறாகக் குறைத்து நிற்கும் பரிதாபமே! இந்த மாநிலங்களில் எல்லாம் பிஜேபிக்கு எந்தப் பலமும் கிடையாது. எப்படியிருந்தாலும் பத்திரிகை பலம், பணபலம், இன பலம் முதலியவைகளைக் கொண்டு முடிந்த வரை மாய வலைப் பிரச்சாரத்தினை நடத்த முயலுகின்றனர்.

ஆளுக்கொரு வேடம், நாளுக்கொரு பேச்சு- இவை களைக் கைவந்த கலையாக இந்த அணி மேற்கொண்டு, அதிமுகவுடன் ரகசிய ஒப்பந்தமும் பாதுகாப்புடன் செய்து கொண்டுள்ளது; அதன் காரணமாக அம்மையாரின் அனல் கக்கும் பேச்சு, இவர்களை எதிர்க்கும் அந்த பா.ஜ.க. அணி பக்கம் பாய்வதே கிடையாது.

அறிவு ஜீவிகளின் அறிவிப்பு!

மோடி கைகளில் இரத்தக் கறையுடனே வருகிறார் என்கிறார் மம்தா.

அதே போல உ.பி.யின் மாயாவதி, ஒரிசாவின் நவீன் பட் நாயக் பீகாரின் நித்தீஷ்குமார் போன்றவர்கள் மட்டு மல்லாது.

இந்தியாவின் அறிவு ஜீவிகள் 12 பேர்கள் வெளி நாட்டில் - இங்கிலாந்தில் உள்ளவர்கள் - அங்கே மோடி பற்றி எழுதிய பிரபல ஆங்கில நாளேடான கார்டியன் பத்திரிகைக்கு கையொப்பம் இட்டு கூட்டு அறிக்கை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளரான

1. சல்மான் குர்ஷித்,
2. ஹார்வர்டு பேராசிரியர் வோமி பாபா.
3. உலகப் புகழ் வாய்ந்த சிற்பி அனிஷ்கபூர்
4. பிரபல சினிமா இயக்குநர் தீபா மேத்தா போன்றவர்கள் இதில் அடக்கம்!

இந்தியாவின் பன்முகத் தன்மை, பன்மத, பல கலாச்சார, பல மொழிகள், உலவும் நிலைக்கு ஆபத்து வரும் என்று எச்சரித்துள்ளனர்!

பதவிக்காக எதிர் காலத்தையே அடகு வைக்கலாமா?

இதைப்பறறிக் கவலைப்படாமல், மதக் கலவரங்களுக் கும், முழு முதலாளித்துவ கார்ப்பரேட் கலாச்சாரப் புயலுக்கும் கதவு திறக்க, சில பதவிகள், சீட்டுகளுக்காக இப்படி நாட்டின் எதிர்காலத்தையே அடகு வைத்து விடலாமா? என்று கூட்டுச் சேர்ந்த கொள்கைச் சோரவாதிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில்தான் தேர்தல் அறிக்கையே தயாரிக்கப்பட்டதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்ததற்குப் பிறகும் பிஜேபியை ஆதரிப்போம் என்று சொன்னால் அப்படிச் சொல் பவர்களுக்கு வாழ் நாள் முழுவதுமே மன்னிப்புக் கிடைக்குமா? மக்கள் மத்தியில் மிகச் சிறுமையாக தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்ளலாமா?

நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலை உள்ள மனிதநேயர்களே, நீங்கள் சிந்தித்து இவர்களை வர விடாமல் தடுக்க முன் வருக!

எனவேதான், யார் வர வேண்டுமென்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை வலியுறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

மீறி, கொள்ளிக் கட்டையை எடுத்துத் தான் தலையைச் சொறிந்து கொள்வோம் என்றால் அது உங்கள் விருப்பம் நண்பர்களே!

13.4.2014
முகாம்: திருப்பத்தூர்

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/78653.html#ixzz2yof9fCBs

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது ஆர்.எஸ்.எஸின் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்பட்டதுதான் தேர்தல் அறிக்கை அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவர் ஜோஷி ஒப்புதல்


டில்லி, ஏப்13- பாஜக வின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டங்கள் இடம் பெற் றுள்ளன அதன் ஆலோச னைகளும் பெறப்பட்டன என்று டில்லியில் செய் தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி விரிவாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

"எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தா லும், அதற்கு முன், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின், அறிவுரையை கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு வரும், அந்த கட்சியின் தேர் தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளிமனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கலாச்சார அமைப்பு மட்டும் தான். இருப்பினும், தேச பக்தி, பண்பாடு விஷயங் களில் தலைசிறந்து விளங் கும் அமைப்பு அது. அந்த அமைப்பின் தாக்கம் பா.ஜ.க.வில் இருப்பதை பெருமையாகவே கருதுகி றோம். மஸ்தூர் சபா, கிசான் சபா என்று ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பல அமைப்பு களின் கருத்துகளை கேட்டு த்தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டது.

எந்தவொரு விஷயத் தில் இறங்குவதாக இருந் தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம் தான். அந்த அமைப்பின் வழிகாட்டுதலை ஏற்பதா, வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. தேர்தல் அறிக்கை உருவாக்கியதி லும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப் பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நரேந் திர மோடிக்கு வாரணாசி தொகுதியை நான் விட்டுக் கொடுக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. நரேந்திர மோடி எங்கள் கட்சியின் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வர். அப்படிப்பட்ட தலை வருக்கு தொகுதியை தர மறுப்பேனா? அவ்வளவு தூரம் நான் என்ன முட் டாளா? என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78652.html#ixzz2yofa4d2A

தமிழ் ஓவியா said...


வெளிப்படைத் தன்மையும், கபடத் தன்மையும்


- குடந்தை கருணா

மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவாக யார் முன் வந்தாலும் அதற்கு திமுக கை கொடுத்து, கை குலுக்கி வரவேற்கும் என கலைஞர் பொதுக் கூட்டத்தில் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, திமுகவின் தலைவர் கலைஞர் சொன்ன செய்தி, இந்த தேர்தலில், மதசார்பின்மை, சமூக நீதி என்ற இரண்டு கொள்கையையும் முன் வைத்து, திமுகவும் தோழமை கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கொள்கைக்கு ஆதரவாக யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.

பாஜகவை திமுக விமர்சிக்கவில்லை என சிலர் வேண்டுமென்றே கூறிய நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து, கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மதசார்பின்மையைக் குலைக்கும் கொள்கைகளை விமர்சித்து திமுக வெளிப்படையாகப் பேசி வருகிறது.

கம்யூனிஸ்டுகளை எந்த காரணமும் சொல்லாமல் கழற்றி விட்ட நிலையில், மதசார்பின்மை கொள் கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் திமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என கலைஞர் உள்ளிட்ட திமுக அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

திமுகவின் இந்த வேண்டுகோள் வெளிப் படையாக, கொள்கை அடிப்படையில் வெளியிடப் பட்ட வேண்டுகோள். மதசார்பின்மை கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், திமுக மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவினை வலுப் படுத்துவது இயற்கையானது; நியாயமானது.

அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு எப்படி உள்ளது? கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணத்துக் காக விரட்டப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை ஜெயலலிதாவோ, அதிமுகவோ எந்த காரணத்தையும் சொல்லவில்லை; பாஜகவோடு, தேர்தல் முடிந்து கூட்டு வைத்துக்கொள்ள அதிமுக முடிவு செய்துதான் இத்தகைய நிலையை எடுத்துள்ளது என இப்போது கம்யூனிஸ்டுகள் காரணம் சொல்கிறார்கள். இதற்கும் ஜெயலலிதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை;

ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி யைப்பற்றியோ, பாஜக பற்றியோ ஒரு விமர்சனம்கூட இதுவரை சொல்லவில்லை; பாஜக தலைவர்களும், மோடி உட்பட, தமிழ் நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா வையும் அதிமுகவையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை;

எதற்கெடுத்தாலும், கலைஞரைக் கேள்வி கேட் கும் ஊடகங்கள், ஜெயலலிதாவின் இந்த மவுனத் தைப்பற்றி அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை; மாறாக, சோ ராமசாமி மூலமாக கேள்வி பதில் என்கிற முறையில், பாஜக நிற்கும் இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வேட்பா ளர்களை ஆதரிக்காமல், அதிமுகவை ஆதரியுங்கள்.

அதிமுக வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு உதவிகரமாக இருக்கும் என கபடத் தனமாக, சோவை விட்டு இந்த செய்தியை சொல்லி யிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வும், மோடியை முன்னிறுத்தும் பாஜகவும்.

மதசார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்த வெளிப்படையாக, நேர்மையாக ஆதரவு திரட்டும் திமுக அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? அல்லது தங்களோடு கூட்டணி அமைத்துள்ள கட்சி களை காவு கொடுத்து, கள்ள உறவு வைத்துள்ள பாஜக வையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமா?

Read more: http://viduthalai.in/page-2/78650.html#ixzz2yofpSnaV

தமிழ் ஓவியா said...


குடும்ப தர்மத்தையே காப்பாற்றாத மோடி நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? லாலு பிரசாத் கேள்வி


பட்னா ஏப்.13- தன் மனைவியை மறைத்து, குடும்பத் தர்மத்தையே காப்பாற்றத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பாற் றுவார் என்ற வினாவை எழுப்பினார் லாலு பிரசாத். ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சிதலைவர் லாலு பிர சாத் - தலைநகர் பாட்னா வில் தனது கட்சி ஆதர வாளர்களுடன் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட் டம் நடத்தினார்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகை யாளர்கள் பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் திருமணம் விவாதம் குறித்து கேள்வி கேட்டனர். குடும்ப தர்மம் காப் பாற்றுபவர் தான் தேசத்தின் தலைமை ஏற்க தகுதியான வர் என்றார் லாலு. நேற்று மாலை சமூக இணையதளத்தில் மோடி யின் திருமணவிவகாரம் குறித்து பதிலளித்த லாலு பிரசாத், மோடி போன்ற ஒரு முக்கியமான தலைவர் பல முறை அரசு விண்ணப்பங் களில் தனது திருமணத்தை மறைத்துவிட்டார்.

இம் முறை நீதிமன்ற தீர்ப்பின் படி வேறு வழியில்லாமல் தனக்கு திருமணமானதை யும், தனது மனைவி பெய ரையும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப தர்மமும் நாட் டைக்காப்பாற்றும் தர்ம மும் ஒன்றுதான் வீட்டிற் குத் தலைவனாக இருக் கிறவர். குடும்பத்தை சரி வர கவனிக்கவேண்டும்;

தனக்கு குடும்பம் உள் ளதையே மறைத்து இத் தனைக் காலம் வாழ்ந்தவர் எப்படி தேசத்தை காப் பாற்றும் பணியை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/78645.html#ixzz2yofzABkv

தமிழ் ஓவியா said...

பதுங்காமல் பதில் சொல்லட்டும்- பா.ஜ.க. பார்ட்னர்கள்!


1. சிறுபான்மையினர்களுக்கு சலுகைகளை வழங்குவதுபோல பலவற்றைச் சொல்லுகிறது தேர்தல் அறிக்கையில் சொல்லுகிறது பி.ஜே.பி. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை நவீனப் படுத்துவோம் - உருது மொழி மேம்பாட்டை உறுதிப்படுத்து வோம் என்றெல்லாம் கூறத் தெரிந்த பி.ஜே.பி.,க்கு அவர்களுக்குச் சச்சார் குழு பரிந்துரைத்தபடி இட ஒதுக்கீடு அளிப் போம் என்று கூற மனம் இல்லையே ஏன்?

2. சிறுபான்மையினர் கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் புதுப்பிக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது. முஸ்லிம் மக்களின் 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாரம்பரிய கலாச்சார சின்னமான பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக அடித்து, உடைத்து நொறுக்கியவர்கள்தான் சிறுபான்மை மக்களின் பாரம்பரியச் சின்னங்களின் பாது காவலர்களா?

3. உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகரில் நடைபெற்ற மதக்கலவரத்தைக் காரணம் காட்டி, உ.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சமாஜ் வாடி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிய பி.ஜே.பி., குஜராத்தில் 2002 இல் மிகப்பெரிய மதக்கலவரம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்களே - அப் பொழுது ஆட்சியில் இருந்த பி.ஜே.பி.யின் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய் யாதது ஏன்?

4. ராமன் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் - காஷ்மீர் மாநிலத்திற்கான 370 சட்டப் பிரிவை அகற்று வோம் - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள - இவற்றின்மீது அக்கட்சி யுடன் கூட்டணி வைத்துள்ள ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? தேர்தலில் வெற்றி பெற்றால் இவற்றை பி.ஜே.பி. செயல் படுத்தும்போது இந்தக் கூட்டணிக் கட்சிகள் என்ன செய்ய முடியும்?
சிறுபான்மை மக்கள் மத்தியில் மன்னிப்புக் கோருவார்களா? சிறுபான்மை மக்கள் முகத்தில் எந்தக் காலத்திலும் விழிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா? தேர்தல் அறிக் கையில் மதச் சார்பின்மைபற்றியும், (பக்கம் 15) சிறுபான்மையினர் நலன்பற்றியும் (பக்கம் 45) ம.தி.மு.க. குறிப்பிட்டுள்ளதே இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

5. ஈழத் தமிழர் (பக்கம் 11, 20), தமிழக மீனவர்கள் (பக்கம் 21) பற்றியெல்லாம் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முழங்கப்பட்டு இருக்கின் றனவே - இவைபற்றி ஒரே ஒரு வரிகூட பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வில்லையே - இதற்கு என்ன பதில்? இலட்சியத் தின்மீது உறுதி இருந்தால் இதுபற்றி குறைந்த பட்சம் வினா எழுப்பி இருக்கவேண்டாமா? அப்படியென்றால் இலட்சியமாவது - வெங்காய மாவது பதவிதான் எங்கள் பசி என்று பகிரங்க மாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே பொருள்?

தமிழ் ஓவியா said...

6. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்பு ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று சுற்றி வளைத்துத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பி.ஜே.பி., அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங் குவதுபற்றி ஒரே ஒரு வரிகூட இடம்பெறச் செய்யாததற்குக் காரணம் என்ன?

எதைச் சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வாக்குக் கேட்க உத்தேசம்?

சமூகநீதிபற்றி ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் (பக்கம் 14) குறிப்பிடப்பட்டுள்ளதே அதை என்ன குப்பைக் கூடையில் தூக்கிப் போடப் போகிறார்களா?

7. வடகிழக்கு மாகாணங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மற்ற மாநிலங் களைப் போல மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை பகர்கிறதே - இதன் இலக்கு என்ன? பெரும்பாலும் கிறித்தவர்கள் வாழும் பகுதி என்ற கனல் கக்கும் கண்ணோட் டம்தானே இதில் காணக் கிடக்கிறது.

50 சதவிகிதத்தையும் தாண்டி அப்பகுதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே அதில் கை வைப்பதுதானே ஆரிய பி.ஜே.பி. யின் ஆத்திரம்!

முஸ்லிம்கள் மட்டுமல்ல - கிறித்தவர்கள் முகத்திலும் விழிப்பதில்லை என்று கூட்டணிக் கட்சியினர் முடிந்த முடிவுக்கு வந்துவிட்டனரா?

8. பசு பாதுகாப்புக்கென்று தனியாகவே ஒரு துறை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்களே - பி.ஜே.பி.யினுடைய தேர்தல் அறிக்கையில்!

தமிழ் ஓவியா said...

விலங்குகளில் அது என்ன பசுவுக்கு மட்டும் பிரத்தியேகப் பாத்திரம்? இது அப்பட்டமான அவர்களின் ஹிந்துத்துவா குணம்தானே.

இந்தப் பசுப் பாதுகாப்பு என்று சொல்லித் தானே அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பச்சைத் தமிழர் காமராசரை, இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியிலே பட்டப் பகலிலே (7.11.1966) ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், ஜனசங்கம் (இன்றைய பி.ஜே.பி.), பூரி சங்கராச்சாரிகள், நிர்வாண சாமியார்கள் கைகளில் கொலைக் கருவிகளுடன் கூடி வெறியாட்டம் போட்டு, காமராசரை உயிரோடு கொளுத்த திட்டம் போட்டார்களே - (தி.மு.க. தொண்டனால் தப்பிப் பிழைத்தார்) காமராசரின் சீடர் காந்தீய மக்கள் கட்சியின் நிறுவனர் அந்தப் பி.ஜே.பி. கோத்திரத்துக்கு கோவிந்தா! போட ஆரம்பித்துவிட்டாரே - அது எப்படி? நடந்த தென்ன என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா? (காந்தியாரைக் கொன்றவர் களோடு ஆலிங்கனம் செய்யத் தயாராகிவிட்ட நிலையில், இது எம்மாத்திரம் என்று பதில் சொல்லுவார்களோ!)

9. தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.பற்றி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு வரி விமர்சனம் கூட செய்யவில்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியான பிறகும், ஒரு முணு முணுப்புக்கூட அம்மையாரிடமிருந்து வெளிவர வில்லை. இதன்மூலம் அண்ணா என்ற பெய ரும், திராவிட என்ற இனக் கலாச்சார அடை யாளமும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு அறவே பொருத்தமற்றது என்று பகிரங்கப்பட்டுவிட்ட தல்லவா!

பச்சையான பாசிச ஹிந்துத்துவா தேர்தல் அறிக்கையைக் கொடுத்துவிட்டது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம் என்று தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரே - இதற்குப் பின்பும் வைகோ கம்பெனி என்ன செய்ய போகிறது? கூட்டுச் சேர்ந்தவர்கள்பற்றிச் கிஞ்சிற்றும் கவலையில்லை - அந்தக் காவிக் கட்சிக்கு! ஆனால், தீவிர வித்தாரம் பேசும் ம.தி.மு.க., பா.ம.க., மணியன் வகையறாக்கள் அனைத்தை யும் துறந்து, காட்டிக் கொடுத்து, அவலநிலைக்கு ஆளாகிவிடவில்லையா?
கையறு நிலைக்குத் தங்களைத் தாங்களே தள்ளிக்கொண்டு விடவில்லையா?

இதுபோன்ற ஏராளமான கேள்விகள் உண்டு.

முதலில் இவற்றிற்கு மட்டும் பதுங்காமல், பதில் சொல்லுவார்களா - பா.ஜ.க. பார்ட்னர்கள்?

Read more: http://viduthalai.in/page-8/78619.html#ixzz2yohLjiOI

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளி வந்த நிலையில் வாக்காளர்களின் மனப்பான்மையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பாரக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பி.ஜே.பி. வெளியிட்டு இருப்பது மக்களிடம் வாக்குறுதி கொடுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாகத் தெரிய வில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நெடு நாளாகக் கூறி வந்துள்ள ஹிந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பதற் கான அதிகாரப் பூர்வ அறிவிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையை நினைக்க வேண்டும்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதற்குப் பதிலாக ஹிந்து ராஜ்ஜியத்தின் சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மதச் சார்பற்ற தன்மையைக் காப்போம் என்ற உறுதி மொழி இல்லை.

அதே நேரத்தில், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான செயல் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள தனி சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 370ஆம் பிரிவு நீக்கம், பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக் களுக்குப் பாதுகாப்பு (அதற்கென்றே தனித்துறை), வடகிழக்கு மாகாணத்தில் கடைப்பிடிக்கப்படும் பிரத்தி யேக வாய்ப்புகள் பறிப்பு (அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்!) இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஹிந்துத்துவா செயல் திட்டங்களே!

இவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் பிஜேபியை எதிர்த்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது; மதச் சார்பின்மையைத் தகர்க்கும் ஓர் அரசியல் சட்டம் மக்களை மிகப் பெரிய அளவில் செங்குத்தாகப் பிளந்து எறிந்து விடும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மதமாச்சரிய நெருப்பை ஊதிவிட்டு கலகம் விளைவிப்பதை கலையாகக் கருதும் ஓர் மனப்பான்மை வந்து குதித்து விடும். சமூக அமைதி என்பது மயானத் தில் மட்டும்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும்.

இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமான சமுதாயமே அமைதியைத் தொலைத்து விடக் கூடிய அபாயம் தலைக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் மோடியைப் பிரதமராக் குவதற்கு சுயநலவெறி காரணமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சமுதாயத்தை மத ரீதியாகக் கூறு போட்டு மக்களின் வளர்ச்சிப் போக்குக்கு மரண குழி வெட்டும் வேலை! பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிஜேபி கூறும் ஹிந்துத்துவாவை ஏற்கிறார்களா என்பது பிரச்சினையல்ல; பிஜேபி ஆட்சி அமைக்குமானால் அந்தப் பெரும்பான்மை மக்களின் சகல வாழ்வும் சுக்கு நூறாகி விடும் என்பதை மறந்து விடக் கூடாது பெரும்பான்மை என்ற போர்வையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் கைதான் ஓங்கும் - மீண்டும் மனுதர்மமே கோலோச்சத் தொடங்கும். இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததைத் தெரிந்துகொண்டால் இந்தச் சூட்சுமத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியிலே அக்கறை உள்ளவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மோடியின் தலைமை யில் அணி வகுத்து நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே (என்.டி.ஏ.) ஒட்டு மொத்தமாக வீழ்த்திட முனைய வேண்டும். விவரம் தெரியாமல் வழக்கம் போல வந்து போகும் ஒரு பொதுத் தேர்தல் என்று மேம்போக்காகக் கருதிக் கொண்டு, கோட்டை விட்டால், சமூகநீதியின் அஸ்திவாரமே கலைந்து போய் விடும் எச்சரிக்கை!!

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை, மாச்சரியங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது தேவை ஒட்டு மொத்தமான சமூக நீதி, மதச் சார்பின்மை என்பதை மனதிற் கொண்டு, ஒரு மூச்சுப் பிடித்து பிற்போக்கு அணியை ஊதித் தள்ளிட வேண்டும். நம்மில் சில மனிதர்கள், அமைப்புகள் பதவிப் பசி எடுத்து வித்தாரம் பேசுவார்கள் நீட்டி முழங்குவார்கள்; அந்த மத்தாப்பு வெளிச்சத்தில் மனதைப் பறி கொடுத்து அஸ்திவாரத்திற்குத் தங்களுக் குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் வேண்டுகிறது - அதன் தலைவர் குரல் கொடுக்கிறார்.

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை என்பதை நினைவிற் கொள்வீர்!

Read more: http://viduthalai.in/page-2/78680.html#ixzz2yufpIX3Z

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும். - விடுதலை, 22.9.1972

Read more: http://viduthalai.in/page-2/78679.html#ixzz2yug2fqcF

தமிழ் ஓவியா said...


ரஜினியைப் பார்த்த மோடியைப் புறக்கணித்த விஜயகாந்த் பிஜேபி முகாமுக்குள் மோதல்!


டில்லி.ஏப்.14- மோடியின் கவனத்தை அவர் வெற்றிக்காக ஈர்ப்பதில் விஜயகாந்தைவிட ரஜினிகாந்த் இருப்பதாகக் கருதி சென்னை வருகையின்போது, ரஜினி வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதனால், வருத்தமடைந்த விஜயகாந்த் பாஜகவின் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தை முழுமையாகப் புறக்கணித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூறியுள்ளபடி, மோடியின் கடைசி நேர சென்னை வருகைகுறித்து விஜயகாந்துக்கு தெரிவிக்கப்படவில்லை. சனிக்கிழமை அன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங் கேற்க தன் கட்சியினரை விஜயகாந்த் அனுமதிக்கவில்லை. விஜயகாந்த் கட்சி முதலில் கூட்டணியின் அங்கமாக சேர்ந்துவிட்டபின் அவரைப்பின்பற்றும் ஏராளமானவர் களும் பாஜகவுடன் இணைந்து மாநிலம்முழுதும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மோடி வருகை தெரிவிக்கப்படாததோடு, ரஜினிகாந்த்தை சந்தித்த விவகாரத்தால் விஜயகாந்த் கோபத்தில் உள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் விஜயகாந்த் கட்சிக் காரர் ஒருவர் கூறும்போது, விஜயகாந்த் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பிரதமர் வேட்பாளர் மோடிகுறித்து பேசி வருகிறார். ஆனால், பாஜக இவரை விட அடுத்த நடிகருக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கிறது. ஆனாலும், அந்த நடிகர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறவில்லை என்கிறார். மோடிக்கு கெட்ட வாய்ப்பாக ரஜினிகாந்துடனான சந்திப்பு அமைந்துவிட் டது. பாலிவுட் நடிகர் சல்மான்கானை மோடி சந்தித்தது போலவே இதுவும் நடந்துள்ளது. இது குறித்து நட்பு முறையில் சந்தித்ததாகவும், அரசியல் ஏதுமில்லை என்றும் அவர் கூறிவிட்டதால் மோடி ஏமாற்றத்துக்கே ஆளாகி உள்ளார். ரஜினிகாந்த் நன்றாகவே வாழ்த்தினார் என்பதாலேயே அவர் ஆதரித்துள்ளார் என்றால் அதை விட வேறு நகைச் சுவை கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்று சொன் னால் விஜயகாந்த் கடைசியாக நகைப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான்.

- -ஃபர்ஸ்ட்போஸ்ட், 14-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/e-paper/78672.html#ixzz2yugf8PNM

தமிழ் ஓவியா said...


குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!


நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா

சிம்லா, ஏப். 14- நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் மோடி அலை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பாதியளவில் கூட பா.ஜ.க. இல்லை. மோடி அலையை உருவாக் கும் ஊடக விளம்பரங்கள் கிராமப்புறங்களில் சென் றடைய வில்லை. ஏனென்றால் களத்தில் உண்மை நிலவ ரங்கள் வேறுபட்டுள்ளன.

அறிக்கைகளின் படி, பா.ஜ.க. ஊடக பிரச்சார விளம்பரங்களுக்காக பல கோடிகளைச் செலவு செய் துள்ளது. ஆனால் காங்கிரஸ், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குகளை கேட்கும். இமாசல பிரதேசத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். என்றார்.

மேலும், பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தன்னுடைய புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், அது முற்றிலும் கற்பனையானது, உண்மையான தகவல்களின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதப்படவில்லை. வணிக லாபத்திற் காகவே அது எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளி யிட்டிருந்தாலும், சஞ்சய பாரு தேர்தல் நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது கேள்விக் குரியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhAC5n5

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா

கொல்கத்தா, ஏப். 14-தேர்தல் கருத்துக் கணிப் புகள் பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது, அரசியலமைப்பில் அது போன்ற ஒன்றே கிடையாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் தெரிவித்ததாவது:- பிரதமர் வேட்பாளர் என்பது கற்பனையான கருத்து, அது போன்ற எதுவும் அரசியலமைப் பிலேயே கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் நாடாளுமன்ற பிரதிநிதி களைத் தேர்வு செய்கின்றனர். அந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் பிரதமரை தேர்வு செய்கின்றனர்.

ஊழல், குடும்ப அரசியல், மதவாதம், ஆகிய வற்றை எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. ஆனால் இதனை செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தவறிவிட்டது. காங்கிரஸ் நாட்டை ஆட்சி செய்வ தற்கு தேவையான நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நன்னடத்தை ஆகிய அனைத்தையும் இழந்து விட்டது. மீண்டும் நம்மால் ஊழல் மிகுந்த அர சையோ, மதக்கலவரங்களை தன்னுடைய முகமாக கொண்டிருக்கும் அரசையோ ஆட்சிக்குக் கொண்டு வர முடியாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டு கட்சிகள் வெல்லும் இடங்களை கூட்டினால் 273 இடங் களுக்கு கீழேயே இருக்கும். இதுதான் இன்றைய அரசியல் உண்மை. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் இந்தியாவை விற்பதற்கான அரசையே அமைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. மாற் றுக்கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhGf5jk

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இன்று உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். அவர் வாழ் நாளில் எல்லாம் மதவாதத்தை ஜாதிய வாதத்தை - சமதர்மத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வந்தவர். தந்தை பெரியாரின் அன்புக்கும் மதிப்புக்குமுரியவர் - அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றிட இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

- சென்னையில் செய்தியாளர்களிடம் 14.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78677.html#ixzz2yuharuXT

தமிழ் ஓவியா said...


பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் நரேந்திரமோடி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கு!

பெங்களூரு, ஏப்.14- பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று கருநாடக முதல்வர் சித்த ராமையா தெரிவித்தார்.

பெங்களூரு மகாதே வப்புரா மாருத்தஹள்ளி யில் சனிக்கிழமை காங் கிரஸ் வேட்பாளர் ரிஸ் வான் அர்ஷத்தை ஆதரித்து அவர் பேசியதாவது:

20 தொகுதிகளைக் கைப்பற்றும்

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திரமோடி குஜ ராத் மாநிலம் வளர்ச்சிப் பணிகளில் முதலாவதாக உள்ளதாக தான் பங்கு கொள்ளும் பொதுக்கூட் டங்களில் பேசி வருகிறார். இதில் உண்மையில்லை என்றாலும் அவர் அதைத் தொடர்ந்து பேசி வரு கிறார். பொய் சொல்வதில் கை தேர்ந்தவரான நரேந் திரமோடி, ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்.

கருநாடகத்தில் அக்கட்சி யினர் செய்த ஊழலால் அக் கட்சியின் முதல்வர் உள்பட பலர் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இதனால் மக் களவைத் தேர்தலில் காங் கிரஸ் கட்சியை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ள னர். கருநாடகத்தில் காங் கிரஸ் 20 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றார் அவர்.

மோடியின் முதுகில் ஏறி பாஜகவால் வெற்றி சவாரி செய்ய முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச் சரும், தேசிய செய்தித் தொடர் பாளருமான தாராதேவி சித்தார்தா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூ ருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் எங்கும் நரேந் திரமோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை. இது பாஜகவினரால் அவிழ்த்து விடப்பட்டுள்ள பொய் மூட்டைகளில் ஒன்று. மக் களவைத் தேர்தல் முடிவு கள் வெளியான பிறகு கரு நாடகத்தில் மோடி அலை இல்லை என்பது தெளிவா கும். கருநாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவி னர் நடத்திய ஆட்சியை மக்கள் கெட்ட கனவாக கருதியுள்ளனர்.

பாஜக ஆட் சிக் காலத்தில் மாநிலத்தின் இயற்கை கனிமவளம் கொள்ளை அடிக்கப்பட் டது. உற்றார் உறவினர் களுக்கு சாதகமாக ஆட்சி வளைந்து கொடுக்கப்பட் டது.

மோடியை முகமூடியாக அணிந்துகொண்டு...

5 ஆண்டுகாலத்தில் 3 முதல்வர்கள் பதவி வகிக் கும் அளவுக்கு ஆட்சியி லும், கட்சியிலும் குழப் பம். முதல்வராக இருந்த எடியூரப்பா உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர் கள், தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வரிசையாக சிறைக்குச் சென்றனர். நில ஒதுக்கீட் டில் முறைகேடு போன்ற ஏராளமான குளறுபடி களுக்கு இடையே பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனவே, காங்கிரசை விமர் சிக்கும் தார்மீக உரிமையை பாஜக இழந்துள்ளது. பாஜக வின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக அக்கட்சி யினர் மோடியை முகமூடி யாக அணிந்துகொண்டு வாக்கு கேட்க வந்துள் ளனர்.

மோடியின் பின்னால் இருப்பவர்கள் அனை வரும் ஊழலில் சிக்கிய தலைவர்கள் தான். அரசி யல் வியாபாரம் என்ற மோசமான வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள் பாஜ கவினர். அதையெல்லாம் மூடிமறைத்துவிட்டு நீதி மான்களைபோல மக்கள் முன் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

நரேந் திரமோடியின் முதுகில் ஏறி பாஜகவினரால் வெற்றி சவாரி செய்ய இயலாது. ஊழல்வாதிகள் பாஜகவில் அய்க்கியமாகியுள்ளனர். ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க ஆட்சி அதிகாரம் தேவைப்படுவதால் ஒன்றா கியுள்ளனர். தேர்தலுக்கு பிறகு பாஜகவில் கோஷ்டிபூசல் தலைதூக்கும். அப்போது பாஜகவினர் ஒருவர் காலை ஒருவர் இழுத்துக்கொள் வார்கள் என்றார் அவர்

Read more: http://viduthalai.in/page-5/78669.html#ixzz2yuiTptzh

தமிழ் ஓவியா said...


வெந்தயத்தின் பல்வேறு மருத்துவக் குணங்கள்

நமது முன்னோர்கள் சமையலறையிலேயே வைத்தியத் தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும் கூட்டு டையோஸ் ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளையும் தன்னகத்தே கொண் டுள்ளது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப் புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும்.

வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குக் கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்கு விப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்பக் காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மாதவிடாய் காலத்தின்போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல்சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால், அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச் சத்துக்கள், பசியை அடக்கிவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulHFmUi

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4

தமிழ் ஓவியா said...


மூலிகைகளால் நமக்கு ஏற்படும் மருத்துவப் பயன்கள்

மிளகையும், வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல், நீர்க்கோவை ஆகியவை குண மாகும். சீரகத்தையும், கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

நான்கு மிளகையும், இரு கிராம் பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றி லையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குண மாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஒதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெய்யை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரியையும், திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து, தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து, டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங் காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டை யும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்சவேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulde500

தமிழ் ஓவியா said...

உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இவை ஆரோக் கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பையும் பாழாக்கி விடுகிறது.

பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவு களை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு சிரமங்கள்தான் மிச்சம்.

ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும், பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.

டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் செரிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப்போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருள்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த அளவுக்கு நொறுக்குத் தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக் கியம் பாழாகாமல் இருக்கும்.

இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச் சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulq11a7