Search This Blog

12.4.14

ஈழத் தமிழர்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது?

ஈழத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்தது திமுக
நாடாளுமன்றத்தில் ஈழ  தமிழர்களுக்காகக் கொண்டு வரப்படவிருந்த தீர்மானத்தைத் தடுத்துநிறுத்திய கட்சி பிஜேபி
விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் காரணம் அதிமுகவே!
ஈழத் தமிழர்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது
திமுகவும் - டெசோவும் என்பதை மறவாதீர்!

ஈழத் தமிழர்களுக்காக திமுக ஒன்றும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தக்க பதில் கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு இன உணர்வு, மனித நேயம், தொப்புள் கொடி உறவு - இவைகளோடு ஒன்றியுள்ள தி.மு.க. என்ன செய்தது? கருணாநிதி என்ன செய்தார்? என்று தேர்தல் மேடைகளில் கேட்கிறார் தமிழக முதல் அமைச்சர் அம்மையார்.

கருமத்திற்குரியவர்களே கடைசி வரை இருப்பர் என்ற பழமொழிக்கொப்ப, கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழகமும் செய்த தியாகங்கள், காட்டிய ஆதரவு அளவுக்கு தமிழ் நாட்டிலும் சரி, இந்திய அளவிலும் சரி வேறு எவரும் செய்யவில்லை. டெசோவின் பங்களிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. இரண்டு முறை ஆட்சியை இதற்காகவே - ஈழப் பிரச்சினைக்காக இழந்தது தி.மு.க. - அதன் தலைவர் கலைஞர்.

2.. எத்தனையோ முறை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக போராட்டங்கள் நடத்திச் சிறை சென்றுள்ளவர் கலைஞரும், கழக வீரர்களும்!

இந்திய இராணுவத்தை வரவேற்க மறுத்தவர் முதல் அமைச்சர் கலைஞர்

3. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை (IPKF) இராணு வத்தை அன்றைய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் துணிவான முடிவெடுத்து, திருப்பி அழைத்த நேரத்தில் அதனை எதிர் கொண்டு சென்னையில் வரவேற்க (1989-90) மாட்டேன் என்று பகிரங்கமாக முழங்கிய முதல் அமைச்சர். அதனாலேயே ஏதோ பெரிய தேச விரோதிபோல பார்ப்பன ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டவர் கலைஞர்.

4. அம்மையார் ஈழப் பிரச்சினையில் எடுத்த முரண்பட்ட நிலைப்பாடுகள் ஒன்றா? இரண்டா? எண்ணிலடங்காதே!

(அ) விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய தொடர்ந்து வற்புறுத்தியவர்; சட்டமன்றத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்திய இராணுவத்தை அனுப்பி கைது செய்து தமிழ் நாட்டிற்கு அழைத்துவரும்படி தீர்மானம் போட்டவர் அல்லவா இவர்?

தமிழ்ச்செல்வன் என்ற போராளி மரணம் அடைந்த நிலையில் முதல் அமைச்சர் கலைஞர் இரங்கல் கவிதை எழுதியதற்காக தி.மு.க. ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று சொன்னவர்தானே ஜெயலலிதா? ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரனின் தாயார் பார்வதி பிள்ளை ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மருத்துவ உதவி செய்யக் கூடாது என்று மனிதநேயம் சிறிதும் அற்ற நிலையில் ஈவு இரக்கமின்றி கருத்துத் தெரிவித்தவராயிற்றே செல்வி ஜெயலலிதா.

முள்ளி வாய்க்கால் நினைவிடத்தில் சுற்றுச் சுவர்களைப் புல்டோசர் கொண்டு இடித்து முடித்தவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவதை தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஆனந்தவிகடனே படப்பிடிப்பு!

(ஆ) ஆனந்தவிகடன் ஏடு இவரது ஈழத்தாய் வேடத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தி தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றி எக்ஸ்ரே கண்ணோட்டத்தோடு எழுதியுள்ள பகுதி இதோ (12.3.2014, ஆனந்தவிகடன்).


மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் இந்த மாயக் கம்பளம் மயக்கம் தருகிறது. முதலில் தலை சுற்ற வைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் எடுத்திருக்கும் உறுதி. 2008-09இல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகா சமுத்திரத்தை மூழ்கடித்தபோது, ஈழம் என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே? என்று ஜெயலலிதா விடம் (18.1.2009) கேட்கப்பட்ட போது, அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியில் சொல்லப்படுகிறது என்று வியாக்கியான வகுப்பு எடுத்தவர்.

இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படு வார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள், வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தபோது, தி.மு.க. அதைத் தட்டிக் கேட்கவில்லை என்று தேர்தல் அறிக்கையில் இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது (16.10.2008) என்றும் சொன்னவர்.

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவ தற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல், எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார். சிங்களப் பத்திரிகைகள், முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்தபோதுதான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் போட்டது. கொடூரம் கூடியது; தேர்தல் நெருங்கியது. தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில்  ஜெ. ஈழத் தாய் வேடமிட்டார். கருணாநிதிக்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால், அதனைக் கையில் எடுத்தார். ஆட்சியும் மாறியது. ஈழத்துக்கு ஆதரவான தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

தூக்கு விவகாரத்தில்கூட மாநில அரசால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று முதல் நாள் சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு (29.8.2011) செங்கொடி தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு அரங்கேறுவதைப் பார்த்தும், உயர்நீதிமன்றம் தடை கொடுக்கத் தயார் ஆகிவிட்டதை அறிந்தும் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா,இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் வேகத்தில் நிற்கிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட நானே காரணம் என்று பெருமைப்பட்டவர், பிரபாகரனைக் கைது செய்ய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டவர், கிட்னி செயல்படாத நிலையில் மரணப்படுக்கையில்கூட பாலசிங்கம் தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்றவர், இப்போது ஈழத் தமிழர்கள்மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தகைய தீர்மானங்களை அரங்கேற்றுகிறார் என்பதை நம்ப எவரும் இல்லை.

ஆனால், கடல்கடந்த மக்களைக் கருவறுக்க காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகள், இங்குள்ள தமிழர்களின் உதிரத்தில் அனலாக  தகித்து வருவதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய, ஈழம்தான் ஒரே வழி என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்திருக்கிறார்.

இவை எல்லாம் விடுதலை ஏடு அல்ல; ஆனந்தவிகடன் ஏட்டின் படிப்பிடிப்பே! அம்மையாரின் சந்தர்ப்பவாதத்தின் சாயத்தை ஆனந்தவிகடன் போன்ற ஏடுகளே அம்பலப்படுத்தி விட்டனவே!

இதற்கு மேல் அந்த அம்மையாரின் ஈழ ஆதரவு பற்றி மேலும் விளக்கம் வேண்டுமா?

பா.ஜ.க. ஏஜண்டுகளின் நிலை!

அடுத்து, மோடியின் தமிழ்நாட்டு மார்க்கெட் டின் ஏஜெண்டுகளாகி விட்ட சில பா.ஜ.க. தலைமையிலான கட்சிகள் மோடி வலையில் சிக்கிக் கொண்டு சீட்டணி அமைத்துள்ளனர்.

ஈழப் பிரச்சினையில் அவர்கள் காங்கிரஸ் செய்யத் தவறியவற்றையும் மோடி தலைமையில் ஆட்சி ஏற்பட்டால் செய்து ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவைகளைத் தீர்ப்பார்கள் என்று கூறி, அப்பாவி இன உணர்வுள்ளவர், வாக்காளர்களை இளை ஞர்களை - ஏமாற்றும் பிரச்சாரத்தினைச் செய்கிறார்கள்!

அவர்களது அந்த பொய்ப் பிரச்சாரம் தேர்தலுக்கு முன்பே அது நடக்காத ஒன்று என்பது தெரிய ஆரம்பித்து விட்டது.

7.4.2014-இல் வெளிவந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒருவரிகூட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையோ, தமிழக மீனவருக்கு விடிவை - தீர்வை தரக்கூடியதோ ஒன்றுமே இடம் பெறவில்லையே ஏன்? ஏன்?
ஈழத் தமிழர் பிரச்சினையில் வெளியுறவு நிலையில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் ஒரே கொள்கை உடைய இரண்டு அரசியல் கட்சிகள் என்பதே நடைமுறை உண்மையாகும்!

தடுத்தது பிஜேபிதானே?

டெசோ முடிவு எடுத்து தீர்மானித்து நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வாதாரம் பாதிப்புப்பற்றி  வலியுறுத் தும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர காங்கிரஸ், தி.மு.க.வின் வற்புறுத்தலை ஏற்றபிறகும்கூட, முட்டுக்கட்டை போட்டு அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று கூறியது பா.ஜ.க. - எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் அல்லவா?

மத்திய பிரதேசத்தில் முதன் முதலில் ராஜபக்ஷேவிற்கு நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி, சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அல்லவா? ராஜபக்ஷே சாஞ்சி புத்தக் கோயிலுக்குச் சென்ற நிலையில், கருப்புக்கொடி காட்ட வைகோ சென்றாரே, தம் தோழர்களுடன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சாலையில் உட்கார வைத்து திருப்பி அனுப்பிய கட்சி தானே பா.ஜ.க.?

அது மட்டுமா? ஈழத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சுகன்யா என்ற போர்க் கப்பல் அனுப்பப்படவில்லையா?

2000 ஆண்டில் இலங்கை அரசுக்கு அமெரிக்க டாலர் 10 கோடி (ரூ.450 கோடி)யை இந்திய பி.ஜே.பி. அரசு அளித்ததே - அதனைக் கண்டித்து அப்பொழுதே அறிக்கை வெளியிட்ட வர்கள் நாம் (விடுதலை 14.6.2000).

றீறீறீ 2000 ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய பி.ஜே.பி. ஆட்சி தடை செய்தது. அப்போது பிஜேபி அரசு (வாஜ்பாய் பிரதமர்) கூறிய காரணம் என்ன?

விடுதலைப்புலிகள் இயக்கம் வன்முறை இயக்கம் சீர்குலைவு நடவடிக் கைகளில் அது ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரானதாக உள்ளது. இந்தியப் பாதுகாப்புக்கு எதிரானது;  தமிழ் ஈழம் என்பதே அவர்களின் இலட்சியமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகள் தாராளமாக செயல்பட அனும தித்தால் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் அது குந்தகம் விளை விக்கும் என்று சொன்னது வாஜ்பேயி அரசு தானே!
இவற்றையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று பிஜேபியின் ஏஜெண்டுகள் துள்ளிக் குதிக்கலாம் - ஆனால் கருஞ்சட்டை வீரர்கள் இருக்கிறார்கள் இவற்றையெல்லாம் நினைவூட்டுவதற்கு! இப்படி பலப்பல உண்டு.

தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் மீனவர்களுக்கு பீப்பாய் பீப்பாயாக கண்ணீர் விட்ட பா.ஜ.க. தலைவர்களின் அறிக்கையில் அதுபற்றியோ, கச்சத்தீவு பற்றியோ ஒரு சொல்கூட இடம் பெற்றுள்ளதா?

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதா?

எனவே, கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள்மீது கல்லெறி யாதீர் என்பதை மட்டும் கூறுகிறோம்.

தமிழக வாக்காளர்கள் கூட்டணிகளை நன்கு புரிந்து வருகிறார்கள். கொள்கைக் கூட்டணி எது என்பது பற்றி தெளிவாகவே அறிவார்கள்.


-------------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் 11.4.2014  முகாம்: சேலம்

38 comments:

தமிழ் ஓவியா said...

கல் ஒன்று காய்கள் இரண்டு!


16ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் ஒரே கல்லால் இரண்டு அணிகளை வீழ்த்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

தமிழ் மண் எப்பொழுதுமே மதச் சார்பற்ற கொள்கைக்கு ஆதரவானது - மதவாதத்தை ஏற்காத மண்! அந்த அளவுக்குத் தந்த பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும், செம்மையாகச் செப்பனிட்டி ருக்கின்றனர் - பக்குவப்படுத்தி இருக்கின்றனர்.

1992இல் அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைமை தாங்கி பிஜேபி உள்ளிட்ட அமைப்புகள், சங்பரிவார் வில்லன்கள், சாமியார்கள் என்றெல்லாம் ஒன்றுகூடி அடித்து இடித்து பாபர் மசூதி தரை மட்டமாக்கப் பட்டபோது, இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களிலும் அதன் அதிர்வினைக் காண முடிந்தது - கலவரங்கள் நடந்ததுண்டு.

அதில் ஒரே விதி விலக்குத் தமிழ்நாடு மட்டும்தான். அதன் காரணம் - மேலே கூறப்பட்டதுதான்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் போதிய விழிப் புணர்வை ஏற்படுத்திட, நாடு தழுவிய அளவில் மத வெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்! - என்ற தலைப்பில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் வட்டார மாநாடு களை நடத்தினோம். தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளைக் கடந்து அவற்றிற்கு மிகப் பெரிய அளவில் ஆதரவுக் கரம் உயர்த்தினார்கள்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் (பிஜேபி உட்பட) வேர்ப்பிடிக்க முடியவில்லை. சுயமரியாதை இயக்கத்தைத் தந்தைபெரியார் தோற்றுவித்த அதே 1925ஆம் ஆண்டு வாக்கில்தான் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப்பட்டது என்றாலும் தமிழ்நாட்டில் அதன் பருப்பு வேகவில்லை.

தன்மான இயக்கத்தின் தனிப் பெரும் சாதனை இது! எவ்வளவோ தொடர்ந்து முட்டிப் பார்த்தாலும்கூட சொந்தமாக நின்று ஒரே ஒரு இடத்தில்கூட அது வெற்றியை ஈட்ட முடியவில்லை.

2011இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்தக் கட்சியும் முன்வரவில்லை. அதன் காரணமாக தன்னந்தனியாக நிற்க நேர்ந்த பி.ஜே.பி.க்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை என்பதைவிட தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. வேட்பாளர்கள் அத்தனைப் பேரும் கட்டிய பணத்தைக்கூட (Deposit) திரும்பப் பெற முடியாத பரிதாபம்தான்!

தமிழ் ஓவியா said...

வரும் 24ஆம் தேதி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தனது மதச் சார்பற்ற தன்மையைப் பளிச்சென பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இன்னொன்று அ.இ.அ.தி.மு.க.; தன்னந்தனியாக கூட்டணி இல்லாமல் நிற்கிறது. அது பிஜேபியோடு மறைமுகக் கூட்டு வைத்துள்ளது என்பது பொது மக்களே பரவலாகப் பேசும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

தன்னை எதிர்த்து எதிர் அணியில் பிஜேபி போட்டிப் போட்டாலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடி குறித்தோ தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை பேசுவதில்லை - அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா.

பி.ஜே.பி. தனது இந்துத்துவா காரம். மணம் குமட்டல் கமழ்ந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையிலும்கூட, அது குறித்தும்கூட, ஒரே ஒரு வார்த்தை விமர்சனங்கள் அ.இ.அ.தி.மு.க. தரப்பில் இல்லை என்பது கருத்தூன்றத் தக்கதாகும்.

மூன்றாவது அணியாக தமிழ்நாட்டில் போட்டியிடுவது பி.ஜே.பி. தலைமையிலானது என்று அரசியல் ரீதியாகக் கூறப்படுவதாகும். அந்தக் கூட்டணியில் குறைந்த இடம் பிஜேபிக்குத்தானே - அப்படி இருக்கும் பொழுது கூட்டணியின் தலைமை என்று அதனைக் குறிப்பிடுவது பொருத்த மானதாக இருக்க முடியாதே!

பிஜேபி தன் இந்துத்துவா முகத்தை தேர்தல் அறிக்கையில் பச்சையாகக் காட்டிக் கொண்டு விட்டது ராமன் கோயில் கட்டுவது உட்பட பசு பாதுகாப்பு என்கிற வரை அதன் உஷ்ண முகம் தேர்தல் அறிக்கையில் சுட்டெரிக்கிறது!

மதச் சார்பின்மை குறித்துத் தேர்தல் அறிக்கையில் மதிமுக கூறினாலும், பிஜேபியின் தேர்தல் அறிக்கை வெளி வந்ததற்குப் பிறகும் கூட பிஜேபியை ஆதரித்தே தீருவது - மோடி தான் அடுத்த பிரதமர் என்று தோளைக் குலுக்கிக் கொண்டு ஓங்காரக் கூச்சல் போடுவதில் தோழர் வைகோவுக்குதான் முதலிடம்.

பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வின் மவுனங்கள் பி.ஜே.பி.யின் பச்சையான இந்துத்துவா அறிக்கைக்கு ஆம் என்க! என்று கூறுவதற்குச் சமம் ஆகும்.

எனவே தமிழ்நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் அடையாளம் காண்பது எளிதாகவே போய் விட்டது.

உண்மையிலே மதச் சார்பற்ற அணி என்பது திமுக தலைமை வகிக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியே என்று தெளிவாக திட்டவட்டமாக தெரிந்து கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் கடந்த காலத்தில் நடந்து காட்டி வந்திருக்கும் முறையில், இந்த அணியையே ஆதரித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் அய்யமில்லை. பி.ஜே.பி. அணியையும் அதன் மறைமுகக் கூட்டணி அதிமுகவையும் முற்றிலும் நிராகரித்தால் அது இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு நல்வழி காட்டியதாக அமையுமே! அந்தப் பெரு மையைத் தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெரு மக்கள் உறுதிப்படுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/78521.html#ixzz2yd9f5Rwa

தமிழ் ஓவியா said...


கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகளின் பின்(பு)பலத்தில் பி.ஜே.பி.! மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர்! பல்துறைப் பெரு மக்களும் வேண்டுகோள்!!

பாஜக தலைமையிலான கார்ப்ப ரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற் சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கவுர், விவன் சுந்தரம், திரை யுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியா ளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.சிறீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டி ராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளைத் தலைமை ஏற்று வழி நடத்துபவர்.

கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.

பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலை மையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக் களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்தி களின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அலிகார் பல்கலை. குஜராத் கலவரத்துக்கு காரணமான வர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சங்கத்தின் கவுரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண் டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத் துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர் கள் தேல்வி அடையும் வகையில் முஸ் லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர் களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.

மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற் கடிக்க வேண்டும்.

நடந்த சம்பவத்துக்கு மோடி இது வரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்ய வில்லை.

முஸ்லிம்களின் முதல் முக்கியத் துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/78526.html#ixzz2yd9onR5I

தமிழ் ஓவியா said...


மோடியின் டிவிட்டரில் பொய்யான எண்ணிக்கைகள்

டிவிட்டர் எனும் நவீன ஊடக செயல்பாடு, ஒருவர் கருத்தை பதிவு செய்தால், அதனை வரவேற்கவும், கருத்து கூறவும், மாறுபட்ட எண் ணத்தை வெளிப்படுத்தவும் உள்ள ஓர் சிறப்பான விஞ்ஞான கண்டு பிடிப்பாகும். பலர் அதில் தங்களை இணைத்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்; விவா தம் மேற்கொள்கின்றனர். மிகப் பெரிய பிரபலங்கள் இந்த டிவிட் டரை பயன்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்த அடுத்த நிமி டங்களிலேயே, ஆயிரக்கணக்கான வர்கள் அவரது கருத்தை வரவேற்ப தாக விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர், மோடியின் டிவிட்டரை விரும்புகின்றனராம்; மோடி நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், அத்தகைய எண்ணிக் கையில் யாரும் உண்மையில் விருப் பம் தெரிவிக்கவில்லை; பொய்யான முறையில், இதனை உண்டாக்கி வருகின்றனர், மோடியின் ஊடக ஏஜெண்டுகள்.

ஸ்டேட்டஸ் பீப்பிள் எனும் இணையதள நிறுவனம் லண்டனில் உள்ளது. இந்த இணைய தள நிறு வனம், அல்காரிதம் எனும் முறை யில், டிவிட்டர் பயன்பாட்டாளர் களில் பொய்யானவர்கள் யார், எந்தவித செயல்பாடும் இல்லாதவர் கள் யார் என கண்டறியும் திறமை படைத்த நிறுவனம். இந்த நிறு வனம், மோடியின் டிவிட்டரை விரும்புவதாக காட்டும் எண்ணிக் கையில், 46 விழுக்காடு பொய் யானவை என்றும், 41 விழுக்காடு, எந்தவித செயல்பாடும் இல்லாத வர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது.

2009-ல் மோடி, டிவிட்டரை துவங்கும்போது, அவருக்கு ஒரு லட்சம் வாசகர்கள் உள்ளதாக சொன் னார்கள்; நவம்பர் 2011-ல், இந்த எண்ணிக்கை, நான்கு லட்சம் என்று சொன்னார்கள். தற்போது, பத்து லட்சம் என மோ(ச)டி சொல்கிறார்.

இதுபோல், பொய்யான வாசகர் களை உருவாக்குவது இப்போது அதிகமாகி உள்ளது; சில நிறுவனங் கள், இந்த வாசகர்களுக்கு, 10 பைசா முதல் 50 பைசா வரை, ஒவ்வொரு விருப்பம் தெரிவிக்கும்போதும் தருகிறார்கள் என்கிறார் இணைய தள நிறுவனத்தில் இயக்குநராக இருக் கும் அபிஜித் சோனாகரா.

மோடி என்கிற ஒரு மனிதர், எந்தெந்த வகையில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதற்கு, அவரது டிவிட்டரும் அதில் விருப் பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக் கையை பொய்யாக உயர்த்திக் காட்டி, மக்களிடையே தனக்கு அதிக செல் வாக்கு இருப்பதாக ஓர் மாயையை உருவாக்கும் இந்த மோசடிச் செய லும், ஒரு பானை சோற்றுக்கு ஓரு பருக்கை பதம் என்பதை தெளிவாக்கி உள்ளது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78528.html#ixzz2yd9xxNO1

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/78520.html#ixzz2ydA7fziL

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி


சென்னை, ஏப்.11- உலகப் புத்தகத் திருநாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரி டையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா-வுடன் இணைந்து, சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண் காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப்பயணம் ஆகியவை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து இன்று (11.04.2014) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களிடையே சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் புகழேந்தி, எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், பெரிகாம் பப்ளிக்கேஷன்ஸ் க.ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பக தி.வேணுகோபால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வீ.அன்புராஜ் ஆகியோர் கூறியதாவது:-

உலகப் புத்தக நாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. வார நாட்களில் புத்தகக் காட்சி பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும்.

இதில் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண்காட்சியுடன், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம், சான்றோர் பெருமக்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பினை வளர்க்கும் வகையில் சிந்தித்து தொண்டாற்றும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

200 புத்தக அரங்குகள்

தமிழக மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 100 தமிழ் நிறுவனங்களும், 35 ஆங்கில நிறுவனங்களும், 10 மல்டிமீடியா நிறுவனங்களும் பங்குபெறும் இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமத்தில் 200 அரங்குகள் இடம்பெறுகின்றன.

10% கழிவுடன் பல்துறைப் புத்தகங்கள்

இந்தக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. இப்புத்தகச் சங்கமத்தின் விற்பனை அரங்கத்தில் பகுத்தறிவு, இலக் கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளை யாட்டு, பொருளாதாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தலைப்பு களில் புத்தகங்கள் ஒரே இடத்தில் 10% கழிவுடன் கிடைக்கும்.

சிறப்புக் கழிவு 15%

உலகப் புத்தக நாளான ஏப்ரல்-23 அன்று (கூடுதலாக 5% கழிவு வழங்கப்பட்டு) 15% சிறப்புக் கழிவில் அனைத்து அரங்குகளிலும் புத்தகங்கள் கிடைக்கும்.

விழிப்புணர்வு நடைப்பயணம் (WALKATHON)

உலகப் புத்தக நாளான ஏப்ரல் 23ஆம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை புத்தக வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நடைப் பயணம் (WALKATHON) நடைபெறுகிறது.

பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு (Workshop for Publishers) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பதிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்கள், புத்தக உருவாக்கம் மற்றும் விற்பனையில் உள்ள உத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறு கின்றன. இத்துறை சார்ந்த அறிஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வருகைதந்து பயிற்சி வழங்கு கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள் & சொற்பொழிவுகள்

தமிழ் ஓவியா said...


நாள்தோறும் மாலை 6 முதல் மனங்கவர் தமிழக நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.

ஏப்ரல் 18 - புத்தர் கலைக்குழு வழங்கும் பறையிசை

ஏப்ரல் 19 - கட்டியக்காரி குழுவினர் வழங்கும் அவமானம் (நாடகம்) (இயக்கம் - சிறீஜித் சுந்தரம்)

ஏப்ரல் 20 - சங்கி மங்கி (Talent Show)

ஏப்ரல் 21 - நந்தலாலா குழுவினர் வழங்கும் நகைச் சுவை பட்டிமன்றம் ஏப்ரல் 22 - புதுகை

பூபாளம் வழங்கும் நாகரீகக் கோமாளிகள் (Comedy Show)

ஏப்ரல் 23 - கலை அறப்பேரவை மு.கலைவாணன் வழங்கும் பொம்மலாட்டம்

ஏப்ரல் 24 - திருத்தணி பன்னீர்செல்வம் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி ஏப்ரல் 25 சுக பாவலனின் வயலின் இசை நிகழ்ச்சி

ஏப்ரல் 26 - தென்றல் கலைக்குழு வழங்கும் குழந்தை களின் நாட்டுப்புற நிகழ்ச்சிகள்

பதிப்பாளர்கள் பயனுள்ள வகையில் நாள்தோறும் மேடைகளில் தங்களின் நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் வாசகர்கள் சந்திக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு 7 மணிமுதல் பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் அறிவுமதி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், நடிகர் இளவரசன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் நெல்லை ஜெயந்தா போன்ற அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள் நடைபெறு கின்றன.

விருது வழங்கும் விழா புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களான பொள்ளாச்சி, நசன், பழங்காசு ப.சீனிவாசன், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல் உள்ளிட்டோரைப் பாராட்டி 2014ம் ஆண்டிற்கான புத்தகர் விருதுகள் வழங்கும் விழாவும் 26.4.2014 அன்று நடைபெறுகிறது.


தமிழ் ஓவியா said...

உலகம் முழுக்க நேரலை

இப்புத்தகச் சங்கமத்திற்கான தனி இணையதளம் www.chennaiputhagasangamam.com
என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இப்புத்தகச் சங்கமம் தொடர்பான அனைத்துச் செய்திகளும், விவரங்களும், பயிற்சிகளில் பங்குபெறப் பதிவு செய்வதற்கான வசதி யும் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகச் சங்கமத்தின் நிகழ்வுகளை உலகம் முழுவதும் பார்க்கத்தக்க வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட வுள்ளது.

புத்தகக் கொடை விழா இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன், சுமார் ஒரு இலட்சம் புத்தகங் களைச் சேகரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பல்வேறு சிற்றூர் களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப் படும், புத்தகங்களை நன்கொடையாக வழங்குபவர் களுக்கு சிறப்புச் சலுகையுடன் கூடிய கூப்பன்கள் வழங் கப்படும். அதன் மூலம் அவர்கள் சிறப்புக் கழிவுடன் கூடிய புதிய புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறலாம்.

அதிரடி தள்ளுபடி அரங்குகள்

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புகளுள் ஒன்றாக 50ரூ கழிவு மற்றும் சிறப்புக் கழிவில் புத்தகங்கள் விற்பதற்கென்று தனி அரங்குகளும் (Separate Book Stalls for 50% Discount and Special Discount Price) அமைக்கப்பட உள்ளன. சென்னை புத்தகச் சங்கம நிர்வாகம் பொறுப்பேற்று நடத்தும் இந்த அரங்குகளில் பல்வேறு முன்னணி நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள, மக்களிடம் போய்ச் சேரவேண்டிய முக்கிய நூல்கள் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 18 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி முடிய இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்வு சென்னை மக்களுக்கும், கோடை விடுமுறையை சென்னையில் கழிக்க வரும் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் நடைபெறும்.

பார்வையாளருக்கு சுத்தமான குடிநீர் தாராளமாக கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புத்தகங்களை கடன் அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி வாங்கவும், IOB வங்கியின் நடமாடும் ATM மில் இருந்து பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

NTL Call Taxi மற்றும் நம்ம ஆட்டோ நிர்வாகத்தினர் நியாயமான கட்டணங்களில் (அரங்கத்தால் நிர்ணயிக் கப்பட்ட) பார்வையாளர்களைக் கொண்டுவிட தயார் நிலையில் இருப்பார்கள். முதலுதவி சிகிச்சை வசதிகள் கொண்ட உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய நடமாடும் மருத்துவமனை ஒன்றும் செயல்படும். நுழைவுக் கட் டணம் ரூ.10/- மட்டுமே. 12 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. பார்வையாளர் களுக்கு நாள்தோறும் சிறப்புப் பரிசுகளும் உண்டு.

இப்புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி தந்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கண்காட்சியில் ரூ.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். ஆங்கிலம், தமிழ் என புத்தகங்கள் விற்பனை தனித்தனியாக வைத்துள்ளோம்.

பதிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை மத்திய பகுதியில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு : சென்னை புத்தகச் சங்கமம், YMCA மைதானம், இராயப்பேட்டை, சென்னை.

தொலைப்பேசி : 044- 2661 8161 / 2661 8162 / 2661 8163 மின்னஞ்சல் : நீலீமீஸீஸீணீவீஜீலீணீரீணீணீஸீரீணீனீணீனீரீனீணீவீறீ.நீஷீனீ

ஒருங்கிணைப்பாளர்கள் :

திரு. க.ஜெயகிருஷ்ணன் - 99401 15614
திரு. கோ.ஒளிவண்ணன் - 98400 37051
திரு. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் - 94442 10999
மேலாளர்: திரு. ப.சீதாராமன் - 98401 32684

மேலும் விவரங்களுக்கு : www.chennaiputhagasangamam.com

Read more: http://viduthalai.in/page-3/78516.html#ixzz2ydB01dRz

தமிழ் ஓவியா said...

மனைவியை மறந்தவரால் ராஜ தர்மத்தை நிறைவேற்ற முடியுமா? - காங்கிரஸ்

புதுடில்லி, ஏப்.11- வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி, தனது வேட்பு மனுவில் தனக்கு திரு மணம் ஆனது பற்றி தெரி வித்திருந்தார். இதுவரை அவரை திருமணம் ஆகாத வர் என்று அறியப்பட்ட நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஷோபா ஓஜா கூறுகை யில், ஒரு பெண்ணிற்கு கண வர் செய்யும் நியாயமான கடமைகளைக்கூட மோடி செய்யவில்லை.

அப்பெண் ணிற்கு உரிய மதிப்பை அவர் கொடுக்கவில்லை. திருமணத்தின்போது தனது மனைவிக்கு கொடுத்த வாக் கினை நிறைவேற்ற முடி யாதவர் எப்படி இந்த நாட் டிற்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றுவார்?

40 ஆண்டுகளாக தனது மனைவிக்கு உரிய உரிமை யையும் பாதுகாப்பையும் வழங்காதவர் இந்த நாட் டிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்? மோடி ஒரு உண்மையை இந்த நாட் டிற்கு கூறவேண்டும். தனக்கு திருமணமான உண் மையை மோடி ஏன் மறைக்க வேண் டும்? எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப் பாக மோடியின் மனை வியை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

மோடி தனது திருமணத்தை வெளிப் படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். தனது மனைவி யின் உரிமைகளை தடுப்ப தற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா? மக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை சிந் திக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தனது வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/78495.html#ixzz2ydBU2oyr

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பாதே!


முன்காலத்தில் அடுத்த வீட்டுக்காரன் பசியால் துடிப்பதைப் பார்த்து உதவி செய்தார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை - எல்லாம் அவன் தலையெழுத்து, பட்டினி கிடக்கிறான் என்று பேசுகிறார்கள்.

தலையில் யார் வந்து எழுதியது? தலையெழுத்து எப்படி இருக்கும்? பட்டினி கிடப்பதற்கு தலை எழுத்து என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லை, கூலி கிடைக்கவில்லை, அதனால் அவன் பட்டினியாக கிடக்கிறான்.

-மதுரை ஜில்லா நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டது (29.12.1958)

தகவல்: ச.இராசாமி, சென்னை -18

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBq5ism

தமிழ் ஓவியா said...

அடிமைத்தன்மை

சிந்திக்க முடியாதவன் மனிதனைவிட மட்டமானவன்; சிந்திக்க மறுப்பவன் தனக்குத்தானே துரோகம் செய்பவன்; சிந்திக்க அஞ்சுபவன் மூட நம்பிக்கையின் முழு அடிமை.

- இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBxjVRn

தமிழ் ஓவியா said...

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydC6Unpw

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லை யென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங் களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ் வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCHscuu

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அழிவு வேலைக்கே


கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?

அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.

தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.

நம்மையும் ஒழித்திருப்பார்கள்: மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங் களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண் டான் என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!

இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும்.

அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCQJkLq

தமிழ் ஓவியா said...



முதல் தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அதுதான்! வேறு எது?

-வால்டேர்

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCXnMdH

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.



ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது.

நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCggqy6

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்


தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.

90 வயதைக் கடந்த நிலையிலும்கூட திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் பொழுதெல்லாம் அந்தவூருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பைப் பசுமையாக நினைவூட்டி, மலரும் நினைவுகளில் தோய்ந்து போகிறார்.

கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பேசும்பொழுது திராவிடர் கழகத்தில் அவர் இளைஞராக இருந்தபோது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டினார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பெரியாரைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும், சுயமரியாதைக் கொள்கைகள்பற்றியும் பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம்... தந்தை பெரியார் போதனைகளையும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைகளையும் விட்டு விட்டு இந்தக் கருணாநிதியால் பேச முடியாது என்று சொன்னாரே - அதுதான் முத்தாய்ப்பு!

இயக்கத்தின் அஸ்திவாரம் சித்தாந்தங்கள் இளைஞர்களிடத்தில் போய் சேராத வரை வெறும் தேர்தல் பிரச்சாரம் ஆழமாகப் போய்ச் சேர்ந்திடாது. இளைஞர்கள் திசை மாறி ஓடுகிறார்களே என்று குறைபட்டுக் கொள்வதில் பொருள் இல்லை.

இளைஞர்களிடத்தில் திராவிடர் இயக்கச் சித்தாந் தங்களையும், சாதனையையும் எடுத்துக் கூறாவிட்டால் வேறு சீரழிவுத் திசையில்தான் பயணம் செய்வார்கள். முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் மற்ற பேச்சாளர்கள் இதனைப் பாலபாடமாகப் பெற வேண்டும்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத்தின் இலட்சிய நீரோட்டத்தை எடுத்துச் சொல்லத் தவறுவதில்லை.

திராவிடர் கழகத் தலைவர் உரையைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக, இந்தத் தேர்தல் என்பது குலதருமத்துக்கும், சம தர்மத்துக் குமிடையே நடக்கும் போராட்டம் என்பதைக் காரண காரியத்தோடு எடுத்துக் கூறி வருகிறார்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்குத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை தெற்றெனப் புலனாகும்.

சமூக நீதிக்காகப் பிறந்த இயக்கமாயிற்றே திராவிடர் இயக்கம்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே சமூக நீதி என்ற சொல்லோ, இடஒதுக்கீடு என்ற பதமோ மருந்துக்கும்கூட இடம் பெறவில்லையே!

மாறாக மதவாத அனல் காற்று தான் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே வீசுகிறது. இந்த அடிப்படையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆழமான உரையாக திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் உரை அமைந்துள்ளது.

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார உரை; களை கட்டி நிற்கிறது; யதார்த்தமாக. கால தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல பல யுக்திகளை அவர் சொற்பொழிவில் காண முடிகிறது.

மக்களைப் பார்த்து ஜெயலலிதா கேள்வி எழுப்பி வருகிறார். செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களைப் பார்த்து செல்வி ஜெயலலிதா கேள்வி கேட்டு வருகிறார்.

அதே பாணியில் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்பது வாக்காளர் மத்தியில் மிகவும் எடுபடுகிறது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உரை - எழுதி வைத்துக் கொண்டு படிப்பதாகும். ஒரே உரையை எத்தனைக் கூட்டங்களில்தான் பேசுவது, பேசுவோருக்கே வெறுத்துப் போய் விடாதா? நாளடைவில் அவர் உரை உணர்ச்சியற்றதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

துணிந்து உண்மைக்கு மாறான வகையில் ஒரு முதல் அமைச்சர் பேசி இருப்பது ஆச்சரியமானது!

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்பதே கிடையாது என்று பேசக் கூடிய துணிவு அல்லது அசட்டுத் தைரியமே! இதனைக் கேட்கும் பொது மக்கள் முதல் அமைச்சரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அன்றாடம் மின் வெட்டினால் பல வகைகளிலும் அல்லற்படும் அந்த மக்களிடத்திலேயே இப்படி அபாண்டமாகப் பொய்யைக் கூறினால், அந்தப் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

இதில் இன்னொரு தகவலை முதல் அமைச்சர் கூறுவதுதான் வேடிக்கை.

மின்சார உற்பத்தி தன்னிறைவை அடைந்து விட்டதாம். ஆனால், நாள்தோறும் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றனவாம். இதில் ஏதோ சதி நடக்கிறதாம் - சொல்லுபவர் யார் தெரியுமா? ஒரு முதல் அமைச்சர்.

அப்படி சதி இருப்பது உண்மையென்றால் அதனைக் கண்டுபிடித்து, சதிகாரர்களைத் தண்டிக்க வேண்டியதும் முதல் அமைச்சரின் வேலைதானே! இப்படிக் கூறுவது - முதல் அமைச்சர் நிர்வாகத் திறன் அற்றவர் என்று பொருளாகி விடாதா?

தொலைக்காட்சிகளில் தலைவர்களின் உரைகளைக் கேட்கும் பொது மக்கள் இதுபற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/78566.html#ixzz2yiuH5uQ2

தமிழ் ஓவியா said...


விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்

கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்

ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.

அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.

அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துணைத் தேர்தல் அறிக்கையாம்

ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?

இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?

மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.

தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்

தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?

என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?

எங்கே அமைதி! எங்கே அமைதி?

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014

Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6

தமிழ் ஓவியா said...


மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது! - கி.வீரமணி


தி இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
மதச் சார்பற்ற அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது!

சென்னை, ஏப்.12- மதச் சார்பற்ற அணிக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தி இந்து (தமிழ்) நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக-வுக்கு ஆதரவாக நீங்கள் மேற் கொண் டிருக்கும் பிரச்சாரத்துக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?

மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

ராமர் கோயில் கட்டுவோம் என்பது உள்ளிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்கள் கருத்து?

பாஜக-வை ஆர். எஸ்.எஸ். தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. இந்தத் தேர்தலில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தது கூட ஆர்.எஸ்.எஸ்.தான். இதற்கெல்லாம் உதாரணம்தான் பாஜக தந்திருக்கும் தேர்தல் அறிக்கை . ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம், பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அஜென் டாக்கள் (செயல் திட்டங்கள்) இதுநாள் வரையில் மறைமுகமாக வைக்கப்பட் டிருந்தன. இப்போது தேர்தல் அறிக்கை யாக வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழகத்தை எந்தளவுக்கு முன்னேற்றும். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன பயன்?

தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தேர்தல் அறிக் கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. மாறாக, சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். இவை எல்லாமே தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண் டுள்ள திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

காங்கிரஸும் பாஜக-வும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருகிறது என்றால் மூன்றாவது அணிக்கு உங்களது ஆதரவு உண்டா?

மூன்றாவது மாற்று அணி என்பது ஏற்கெனவே கருச்சிதைவு அடைந்த ஒன்று. இந்த முறை மூன்றாவது மாற்று அணி என்ற கரு கூட உருவாகவில்லை. மாற்று அணி உருவாகும்போது அப்போது ஆதரவு குறித்துத் தெரிவிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்து மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்தால் திமுக அதற்கு ஆதரவளிக்குமா?

நூறு சதவீதம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக தலைவர் கலைஞர் மதச்சார்பற்ற அணி ஆட்சியமைக்க மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். எனவே அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின் றீர்கள். அவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

ஆ.ராசாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

திமுக-வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் விளைவித்து வருகிறார். அவர் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் விட்டதை கலைஞர் செய்த தவறாகக் கருது கிறீர்களா?

அழகிரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் திமுக-தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்த திமுக, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியதை நியாயப்படுத்துகிறீர்களா?

ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் திமுக-வின் நியாயத்தை காங் கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அமைச்சர வையிலிருந்து திமுக வெளியேறியது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து அந்த பழி தங்கள் மீது வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78560.html#ixzz2yiuhtpui

தமிழ் ஓவியா said...


திருமணத் தகவல்: முந்தைய தேர்தல்களில் மோடி மறைத்துவிட்டார் தேர்தல் ஆணையத்தில் கபில்சிபல் புகார்

புதுடில்லி, ஏப்.12-நாடாளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங் களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது திருமணம் ஆகிவிட் டதென்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந் தார்.

தற்போதைய நாடாளு மன்ற தேர்தலில், எந்த வொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடி வாளம் போட்டதால் மோடி இத்தகவலை இணைத்துள் ளதாக கூறப்பட்டது.

நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து முதன் முதலாக தகவல் வெளி யிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பி யுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய தேர்தல்களில் தனது திருமண தகவலை மோடி மறைத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. தேர் தல் ஆணையத்திடம் புகார் அளித்த சட்ட அமைச்சர் கபில்சிபல், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மோடி தனது திருமண தகவலை மறைத்துள்ள தாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78562.html#ixzz2yivKnYJm

தமிழ் ஓவியா said...


மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசிய மோடிக்கு கடும் கண்டனம்


சென்னை, ஏப். 12- மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சு மணன், செயலாளர் எஸ்.நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளி களை அவமானப்படுத் தும் விதத்தில் ஜாம்செட்பூ ரில் பேசியுள்ளதற்கு எமது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.

நாட்டிற்கு ஒரு ஊன முற்ற செவிட்டு ஊமை அரசு தேவையில்லை என - மாற்றுத்திறனாளிகள் எதற்கும் லாயக்கில்லை என்ற தொனியில் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியை சக்கர நாற்காலி பயன்படுத்தும் நொண்டி என குறிப்பிட் டவர் என்பதால், மாற்றுத் திறனாளிகளை கொச் சைப்படுத்துவது இவ ருக்கு வாடிக்கையாகி வரு கிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாட்டில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வரும் சூழ லில், மோடிக்கு மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்ப தாகவே நாங்கள் கருது கிறோம். மாற்றுத் திறனா ளிகள் எதற்கும் லாயக் கில்லை என்ற மன நிலை உள்ள ஒருவர் பிரதமரா னால் மாற்றுத்திறனாளி களின் நிலைமை என்ன வாகும்? என்பதே மாற்றுத் திறனாளிகளின் தற்போ தைய கேள்வி.
போராட்டம்

மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத் தில் பேசியுள்ள மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் இதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடி யாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78561.html#ixzz2yivU7Ozf

தமிழ் ஓவியா said...


இழிநிலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls

தமிழ் ஓவியா said...


அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா!!

இந்த வார துக்ளக்கில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சோ ராமசாமி, பாஜக நிற்கும் தொகுதிகளில் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும்; மீதம் உள்ள தொகுதிகளில், பாஜக சீட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வாக் களிக்க வேண்டாம்; அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்; அதிமுகவின் வெற்றி, பாஜகவிற்கு துணையாக இருக்கும் என பதில் அளித்துள்ளார்.

சோவின் கருத்து ஒன்றும் புதியது அல்ல; ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றும் அல்ல; இன்னும் சொல்லப் போனால், மோடி பிரதமராவது நல்லது; அவருக்கு வாய்ப்பு வர இயலாத சூழ்நிலை ஒன்று வருமா னால், மாற்றாக, ஜெயலலிதா, பிரதம ராவது நல்லது என துக்ளக் ஆண்டு விழாவில் 2013-இல் கூறியவர் சோ ராமசாமி. அந்த விழாவில் மோடியும் கலந்து கொண்டார்; அவரது முன்னி லையில் இந்த கருத்தை சொன்னார் சோ.

ஆக, ஜெயலலிதா பிரதமராவது நல்லது என்ற கருத்தை முதன் முதல் விதைத்தவரே சோ தான்.

மோடியின் அணுகுமுறைக்கும், ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கும் ஒன்றும் வித்தியாசம் கிடையாது. இரு வருமே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலும், தங்களது அமைச்சர்களை, அடிமைகளாக நடத்துவதிலும், ஊடகத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்வதைத் தவிர்ப் பதிலும். சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சியை விவாதம் செய்ய விடாமல் முடக்குவதிலும், ஒரே நிலைப் பாட்டைக் கொண்டவர்கள்.

ஆகவே தான், மோடிக்குப் பதிலாக, அத்வானியையோ, சுஸ்மா சுவராஜ் போன்றவர்களையோ, மாற்றாக கருதாமல், ஜெயலலி தாவைச் சிபாரிசு செய்கிறார் சோ.

மோடி அலை இந்தியா முழுவதும் வீசுகிறது என ஊடகம் மூலம் ஊதிப்பெருக்கி செய்தி வெளியிடும் பாஜகவினர், தமிழ் நாட்டிலும் அத் தகைய மோடி அலை வீசுவதாக சொன்னார்கள். கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜகவிற்கு எட்டு சீட்டுகள் என சுருக்கிக் கொண்டு, கூட்டணி அமைத்தார்கள். இதில் ஒரு இடம், நீலகிரியில் விற்கப்பட்டு விட்டது; வேலூர் தொகுதியை, பாஜக வில் இல்லாத ஒருவருக்கு, விற்று விட்டார்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

இப்போது பாஜகவிடம் இருப்பது ஆறு தொகுதிகள் தான். இந்த தொகு திகளில் பாஜக தோல்வி அடையும் என்றாகிவிட்டது.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஒன்றும் வெற்றி பெறப்போவது இல்லை என சோ கருதுகிறார். ஆகவே, தற்போது உள்ள நிலையில், மீதம் உள்ள 33 தொகுதி களில் அதிமுகவை ஆதரித்தால், மோடிக்கு உதவும் என்ற கணக்கில் சோ கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதெல்லாம் முன்பே தெரிந்து தான், பாஜகவின் தமிழ் மாநில செயலாளர் பொன்னார், இந்த கூட்டணி உருவான அடுத்த நாள் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்கொண்டார்.

சோ, மோடிக்கு நெருங்கிய நண்பர்; ஜெயலலிதாவிற்கும் நண்பர்; ஆலோசகர். ஆர்.எஸ்.எஸ். கருத்தி யலை ஏற்றுக்கொண்டவர்.

ஏற்கெனவே, பாஜகவில் சேர்ந் துள்ள சுப்ரமணியன் சுவாமி, மதிமுக வும், பாமகவும் தேசத்துரோகக் கட்சிகள் என்று சொன்னவர். இப் போது, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்; அதிமுகவிற்கு போடுங்கள் என்கிறார் சோ.

சு.சுவாமி, சோவின் கருத்தை, பாஜகவின் கூட்டணி கட்சிகள் எந்த வகையில் எதிர் கொள்ளப் போகி றார்கள்? இல்லை, அரசியலில் இதெல் லாம் சாதாரணம்பா என்பார்களா?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78569.html#ixzz2yiwT9sPk

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளேயாவர்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த சாரதாபில் என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்குச் சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும்.

சீர்திருத்த சம்பந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப்பட்டு வந்திருக் கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றத்தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அது பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்?

இந்தச் சர்க்கார் இந்நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்நாட்டில் உள்ள பார்ப்பனியக் கொடுமையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமே யொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாது நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.

எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனியக் கொடுமைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் கல்யாண மசோதா விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர் களுடன் சேர்ந்து கொண்டதற்குக் காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியது தானாம்.

இது யோக்கியமான சமாதானமல்லவென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சம்மதவயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண் ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது.

கலவி என்பது ஒரு உணர்ச்சி கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி. பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் உண்டாகலாம்.

அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவேகூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரண மான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயம் சட்டத்தையோ சிக்கலாகுமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?

கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?

ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக் கியதனத்தைக் காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை அதே காரியத்திற்கு அரசாங் கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என் பதையே காட்டுகின்றது.

எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாட்சியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.

குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/78594.html#ixzz2yix0ad1d

தமிழ் ஓவியா said...


திரு.ராஜகோபாலாச்சாரியின் பஞ்ச நிவாரணப் புரட்டு

சேலம் ஜில்லா திருச்செங்கோட்டுக்குப் பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபாரிசின் மீது வெளி இடங்களிலே யிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.

இந்த சூழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.

இவர் சென்ற தேர்தலின் போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரச்சாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்ததேயாகும். ஆனால் அந்தத் தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப்பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது சுதந்திரக் கட்சியாரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200- என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள்களாகத் தேடிப்பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்றுவதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதி இருக்கின்றார்.

ஆதியில் இந்த ஆசிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்திய தாகும். அந்தப் பெயராலேயே பொதுஜனங் களிடையே! பணமும் வசூலிக்கப்பட்டது.

எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆசிர மத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதாராரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்ப னரல்லாதாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆசிரமமான புதுப்பாளையம் ஆசிரமமென்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர் எண்ணிக்கை எவ்வளவு?

அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆசிரமப்புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும் நிற்க.

இச்சூழ்ச்சிகள் நடக்கும் இவ்வாச்சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபாரிசை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பயித்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் அக்கிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆனால் இந்தப் புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்துபோய்ப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத்தில் தான் நாம் கவலைப்படுவதோடு பொதுமக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-7/78592.html#ixzz2yixd28TP

தமிழ் ஓவியா said...


தமிழ்த் தாய்க்குக் கோவில் கட்டினாலும் கருவறையில் பார்ப்பனர்தான்


காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கிராமத்தில் புதிதாய் எழுந்தருளிய தமிழ்த் தாய் திருக்கோவிலுக்கு காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. டாக்டர் வ.கோ. ரங்கசாமி, தேன்மொழி ரங்கசாமி ஆகியோரால் நிறுவப்பட்ட தமிழ்த்தாய் அறக்கட்டளையினரால் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆன்மீக அன்பர்கள் மற்றும் தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (தினஇதழ் 7.4.2014- பக்.7).

தமிழ் நீஷ பாஷை என்று சொன்னவர் காஞ்சிப் பெரியவாள் சந்திரசேகரர். அந்தத் தமிழ் மொழிக்கு அதன் மொழியழகில் மயங்கி, அன்பு கொண்டு இருக்கின்ற கோவில்கள், கடவுள்கள் போதாதென்று தமிழுக்கு கோயில்கட்டி தமிழ்த்தாயைச் சிலையாக அமர வைத்து அழகு பார்க்க முடிவெடுத்தனர், டாக்டர் வ.கோ.ரங்கசாமியும், தேன்மொழி ரங்கசாமி அவர்களும். இப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கிராமத்தில் தமிழ்த்தாய் எழுந்தருளியிருக்கிறாள். தமிழ்பக்தி முற்றிப்போனவர்களை வைத்து தமிழ்த்தாய் அறக்கட்டளையும் தொடங்கி கோவிலுக்கு குடமுழுக்கும் செய்துள்ளனர். ஆனால் என்னதான் தமிழ்த்தாயின் மீது பக்தியோடு இருந்தாலும் அவர்களால் தமிழ்த்தாயின் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியவில்லை.

செய்வதென்னவோ பார்ப்பனச் சிண்டுகள்தான். நமக்கு ஒரு அய்யம். இந்த பார்ப்பனச் சிண்டுகள் தமிழ்த்தாய்க்கு எந்த மொழியில் மந்திரம் சொன்னார்கள்? அர்ச்சனை செய்தார்கள்? நிச்சயம் சிண்டுகள் தமிழில் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. தமிழ்தான் நீஷபாஷையாயிற்றே; அந்தத் தமிழுக்கு இவர்கள் அர்ச்சனை செய்கிறார்கள் என்றால் லோக குரு காஞ்சிப் பெரியவரை (அவர்கள் பார்வையில்) இந்தப் பார்ப்பனச் சிண்டுகள் அவமதிக்கின்றனர் என்று தானே பொருள்!

கோவிலைக் கட்டியபிறகு அவன் இராஜராஜ சோழனாக இருந்தாலும் சரி, டாக்டர் ரங்கசாமியாக இருந்தாலும் சரி, அவர்கள் கருவறைக்கு வெளியே தான். தமிழ்த்தாயை பார்த்து பரவசப்பட்டால் மட்டும் போதுமா? காலங்காலமாய் படுகின்ற அவமானத்தை எண்ணி ஆத்திரப்பட வேண்டாமா?

- இசையின்பன் - 9940348533

Read more: http://viduthalai.in/page2/78577.html#ixzz2yiz13DNV

தமிழ் ஓவியா said...


பசு மாமிசம்பற்றி குரல் கொடுப்போர் மாநிலத்தில்தான்...

நரேந்திர மோடி கடந்த ஒன்றரை ஆண்டாக இந்தியா முழுவதும் சுற்றி குஜராத் வளர்ச்சி என்ற பொய்யான தகவலை பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரது பொய் முகம் தற்போது வெளிவரத்துவங்கியவுடன், இதுநாள் வரை நாட்டு வளர்ச்சி என்ற பொய்வேசத்தைக் களைந்து தனது உண்மையான இந்துத்துவா முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

பசுவதை என்ற பெயரில் கர்மவீரரை உயிரோடு எரிக்க துணிந்த கும்பல் இன்று அதே பசுவதையை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. தற்போதைய அரசு பசுவதையை ஆதரிக்கும் அரசு, பசுப் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பசுக் கொலை செய்யும் மாட்டிறைச்சி தொழிலுக்கு மானியம் கொடுத்துவருகிறது, என்ற மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஓட்டு வாங்க முற்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் பசுவதை மாட்டிறைச்சி தடை என்று பேசிவரும் மோடியின் உண்மை முகம் குஜராத் அரசின் மாட்டிறைச்சி ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்தின் புள்ளி விவரத்தில் இருந்தே தெரியவரும். குஜராத்தில் 2001-02ஆண்டு 10,600 டன்னாக இருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி 2010-11ஆம் ஆண்டு 22,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 27 விழுக்காடு ஆகும். இந்திய தொழில் வர்த்தக மய்யம் கொடுத்துள்ள புள்ளி விவரப்படி மாமிசம் ஏற்றுமதியில் அதிக லாபம் பார்க்கும் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்கிறது, பால் பொருட்கள் உற்பத்தி பெருகி வரும் அதே வேளையில் மாமிச ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.

குஜராத்தில் சூரத், அகமதாபாத், வதோதரா, ஜாம் நகர், ராஜ்கோட் ஹப்பா, ஜூனாகட் போன்ற நகரங்களில் மாநக ராட்சியின் துணையுடன் மாட்டிறைச்சிக் கூடம் இயங்கிவருகிறது. இதற்கான அனைத்து உதவிகளும் அரசு மூலம் மாநராட்சிக்கு கிடைக்கிறது.

இங்கு ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்படுகின் றன. இதன் மூலம் மாநகராட்சிகளுக்கு அதிக வருமானமும் வருகிறது, உண்மை இப்படி இருக்க மோடி ஊர் ஊராகச் சென்று பொய்பேசிவருகிறார். பசுமாமி சத்தில் எளிதில் ஜீரணமாகி புரதத்துடன் கலக்கும் சொல்லுலோஸ் அதிகம் உள்ள தால் ஏற்றுமதியாளர்கள் பசுமாமிசம் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

சிவசேனாவும் தான்

மும்பை மாநகராட்சியின் தேவ்நாட் மாட்டிறைச்சிக்கூடம் தான் ஆசியா விலேயே மிகப்பெரிய மாட்டிறைச்சிக் கூடமாகும். அதேபோல் யூனியன் பிரதேச வரவுசெலவு தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேவ்னார் மாட்டிறைச்சிக் கூடத்தின் வருவாய் உள்ளது. இங்கிருந்து ரஷ்யா மற்றும் சில அய்ரோப்பிய நாடு களின் இராணுவத்தினருக்குத் தேவை யான மாட்டிறைச்சிகளும் இந்திய இரா ணுவத்திற்கு தேவையான இறைச்சிகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியைத் தன்வசம் வைத்தி ருக்கும் சிவசேனா வெளியில் பசுப்பாது காப்பு பேசினாலும் தனது மாநகராட்சி யில் நடக்கும் இந்த மிருகவதைபற்றி மறைந்த சிவசேனைத்தலைவர் பால் தாக்கரே அவர்களும் பேசவில்லை, அதே போல் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரேயும் பேசவில்லை.

Read more: http://viduthalai.in/page3/78581.html#ixzz2yizGJiHz

தமிழ் ஓவியா said...


புள்ளிகள் பேசுகின்றன


கடந்த 50 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலிருந்து காணாமற் போன மொழிகளின் எண்ணிக்கை 220.

சென்னைப் பெரு நகரில் மக்கள் தொகை 46.8 லட்சம் (2011 கணக்குப்படி) படித்தவர்கள் 90.3 சதவிகிதம்.

124 கோடி இந்திய மக்கள் தொகையில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட் டோர் 10 சதவிகிதமாகும்.

நாள் ஒன்றுக்குச் சிறுநீரகப் பாதிப்பால் ரத்தச் சுத்திகரிப்பு (டயலி ஸிஸ்) செய்து கொண்டோர் எண் ணிக்கை 20 ஆயிரமாம்!

80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர் தமிழ்நாட்டில் 9.27 லட்சம்.

உலக நாடுகளின் வரிசையில் குழந்தைகளுக்கான பசி குறியீட்டில் இந்தியாவுக்குள்ள இடம் 15.

இந்தியாவில் நபர் ஒருவருக்கும் தேவைப்படும் மின்சாரம் 800 யூனிட் டுகள் - மின்சார விளக்குகள் பயன்படுத்தும் மக்கள் 67 சதவிகிதம்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 3 லட்சம்.

உலகெங்கும் 2013இல் மேலும் 50 லட்சம் பேர் வேலையில்லாதார் கணக்கில் சேர்ந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page3/78582.html#ixzz2yizRVQVx

தமிழ் ஓவியா said...


எடை மேடை


அயோத்தி இருண்ட இரவு (பாபர் மசூதிக்கும் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு - எனும் நூல் (கிருஷ்ணாஜா மற்றும் திரேந்திர கே.ஜா) விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் 248 பக்கங் களைக் கொண்டது விலை ரூ.150/-

இந்தக் கால கட் டத்தில் தேவையான நூலில் முதற்பதிவு எனும் தலைப்பாக இதோ (பக்.29-30).

1949ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், 23ஆம் நாள், காலை 9 மணி. பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணி நேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம். பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (திமிஸி) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின்கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 - 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.

காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ஜன்மபூமி இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண்- 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50-60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டு வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண்- 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர். அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது.

அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 - 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மதமுழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 - 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டு வைத்ததோடு, மசூதியின் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொது மக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வுமெய் யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/78585.html#ixzz2yizkzrHs

தமிழ் ஓவியா said...


ராமன் பிறந்த நாளை கண்டுபிடிச்சிட்டாங்கோ!


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் என்ற தலைப்பில் சென்னை தியாகராயர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சி ( 05-04-2014) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்? பூர்வமான(?) ஆதாரங்களுடன் அடித்துக் கூறினார் முனைவர் ஹரி. அதைப்புரிந்து கொள்ள நமக்கு எத்தனை கேலரி உணவு தேவை என்பதை நமது மூளை படும் பாட்டை அறிந்து கொண்ட பிறகு புரியும். அவர் அடித்துக்கூறுவது இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128). அதை விட பெரிய அணுகுண்டு செய்தி என்னவென்றால் இதை நிரூபிக்க சாப்ட்வேர், ஹார்டுவேர் வெட்டிவேர் மற்றும் சல்லிவேர் எல்லாம் பயன்படுத்தி ஆராய்ந்தார்களாம். அதன் முடிவு வியப்பில் ஆழ்த்தியதாம் அதாவது

* நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது, கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.

* வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.

* ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.

* சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (கிஷ்கிந்தா) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.

* அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற் காகக் கட்டப்பட்ட பாலம் (ராமசேது) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவ மைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாம். இறுதியில் கலைஞரின் கேள்விக்கு விடை யும் கிடைத்துவிட்டது. அதாவது சேதுபால தொழில் நுட்பம். எல்லாம் சரிங்கோ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அந்த காலகட்டத்தில் நதிக் கரை நாகரிகம் மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளார்களே. இன்றும் பல்கலைகழக வரலாற்றுப்பேராசிரியர் அதைத்தானே கூறி பாடம் எடுக்கிறார்கள், முனைவர் ஹரி அவர்கள் எழுதிய ஹிஸ்டோரிகல் ராமா உண்மை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு? இதையெல்லாம் சேர்த்து விடுவார்களா?

அங்கு வந்த என்னைப்போன்ற சாமானியனும் இந்துமத்தில் பற்றுள்ள பெரியவாள்களும் இதை நம்பி கொஞ்சம் அல்ல அதிகமாகவே புகழ்ந்துவிட்டு இலவசமாக இரண்டு புத்தகங்களை அவர் கையெழுத்துடன் வாங்கிக்கொண்டு செல்லலாம். ஆனால் இந்துமத சாஸ்திரங்கள் படி நடப்பவர்கள் இதை நம்புவார்களா?, பகுத்தறிவுவாதிகள் சண்டைக்கு வருவது இருக்கட்டும்; வடக்கில் இருந்து லட்சு மண் சேனாவினர் வந்து வம்பு செய்யப் போகிறார்கள், ஏன் தெரியுமா சுமார் 30,00,000 அதாவது முப்பது லட்சம் வயதை கொண்டு ஒரு அவதார புருடரான இராமனுக்கு (இராமனே புரூடா தானே) வெறும் 7128 வயது என்று கூறுகிறாயே - உனக்கு எந்த அமெரிக்க அமைப்பு இராமர் பெயரை பாழ்படுத்த பணம் (திஸீபீ) கொடுத்தது என்று கேட்க மாட் டார்களா?

சாஸ்திரங்களில் கூறப்படுவது திரேதா யுகத்தில் இராம அவதாரம் நடந்தது. அதாவது 12,66,000(பனிரெண்டு லட்சத்து அறுபத்து ஆறாயிரம்) இது மாத்திரமா அதன் பிறகு கிருதா யுகம் அங்கு தான் கிருட்டிணர் பிறந்தார் அந்த யுகம் 17,28,000 (பதினேழு லட்சத்து இருபத்தெட்டாறா யிம்) ஆண்டுகள். இவை யிரண்டும் முடிந்த பிறகு கலியுகம் பிறக்கிறது. அதாவது கிமு 3102. இதெல்லாம் இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேண்டு மென்றால் மாம்பலம் ரயில் நிலையத் திற்கு அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று விளக்கம் கேளுங்கள் இல்லையென்றால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இராமகிருஷ்ணா புத்தக மய்யத்தில் சென்று கேளுங்கள்! உண்மையில் இராமனின் வயது 29,94,000 இதுதான் இந்துமத சாஸ்திரங் களின் படி கணக்கு எல்லாம் போட்டு அது வும் டிஜிடல் கால்குலேட்டர் ஒரு புள்ளி கூட தப்பாக கூறாது என்பதை கவனிக்க. அதுசரி ராமன் பாலம் கட்டியது 17 லட்சத்தை 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாக சங்பரிவார் வகையறாக்கள் சொன்னதெல்லாம் டூப் - அசல் டூப்பு தானா!

என்னவோ போங்க கையில் காசும், எழுத்துத் திறமையும் இருந்தால் நேற்று கூட ராமர் எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போனார் என்று பொஸ்தகம் போடலாம். கேட்டால் சாட்டிலைட் மற்றும் கூகிள் மேப் டைம்லைன் பிறகு வாட்ஸ் அப், மற்றும் ஸ்கைப் போன்ற இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் ஆதாரம் வைக்கலாம். டிஜிடல் பொஸ்தகம் வைக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஹரி என் மனைவி வந்திருந்தால் இதைவிட அதிகம் தகவல் கூறியிருப்பார் என அடிக்கடி கூறினார். இதிலிருந்து என்ன தெரிகிறது.


எல்லாவற்றையும் விட தமிழ் பாரம் பரிய அறக்கட்டளை என்ற அமைப்பின் பணி தான் என்ன?

- சரா

Read more: http://viduthalai.in/page5/78588.html#ixzz2yj0Adc2j

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் வங்கி

சென்னையில் விரைவில் இரண்டாம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் சுகாதார பயிற்சி நிறுவனத்தில் (மிஸீவீமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீலீ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது, தனியார் மருத்துவமனையாகிய விஜயா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இந்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

பிறக்கும் குழந்தைக்கு புகட்டப்பட வேண்டிய தாய்ப்பால் மிகச் சிறப்பான உணவாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. தாய்க்கு பல காரணங்களால் பால்சுரக்காமல் உள்ளது. குறிப்பாக குறைப்பிரசவம், ஆரோக்கி யமில்லாத குழந்தைகளால் தாய்ப்பாலை அருந்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற தானே அருந்த முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை வற் புறுத்தி அளிக்க மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது என்று விஜயா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் பொறுப்பாளராகிய அனில் குமார் கூறினார். தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் கொடையாக வங்கியில் அளிக்கலாம். அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிரிகளைக் களைவதற்கு சூடு படுத்தப்பட்டு, வங்கியில் பாதுகாக்கப் படும். ஆறு மாதங்கள் வரை வங்கியில் பாதுகாக்கப்படுகிறது என்று மருத்துவர் குமார் தாய்ப்பால் வங்கியின் பயன்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொல்கத்தா, குஜராத், உதய்ப்பூர் மற்றும் பூனா ஆகிய நகரங் களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதற்கு முன்ன தாகவே தாய்ப்பால் வங்கிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்படுத்த முடி யாமல் இருந்தது.

இதுதான் முதல் தனியார் மருத்துவ மனையில் தொடங் கப்பட்டுள்ள தாய்ப் பால் வங்கியாகும். குறைப் பிரச வத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (மிசிஹி) உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியிலிருந்து அளிக்கப்படும்.
முறைப்படி தாய்ப்பாலை கொடை யாக அளிக்க விருப்பம் தெரிவிப்பவர் களின் தாய்ப்பால் மாதிரி எடுக்கப்பட்டு கிருமித்தொற்று, நுண்ணுயிரிகள் உள் ளனவா என்று ஆய்வு செய்யப்படும். கூடுதலாக சுரக்கும் தாய்ப்பாலை சேக ரித்து வைப்பதற்கு, தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தாய்ப்பாலைப் பெறுவதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் தாய்ப் பாலை அளிப்பதற்கும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறோம். தாய்ப்பாலை அளிக் கும் தாய்மார்கள் பட்டியலை பதிவு செய்கிறோம். தகுந்த விலையுடன் தாய்ப் பாலை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவர் குமார் கூறினார். எழும்பூர் குழந்தைகள் சுகாதாரப் பயிற்சி நிறுவனத்தின் பிறக்கும் குழந்தை களுக்கான பிரிவான நியூனாடாலஜி தலைவரும், பேராசிரியருமாகிய ஜெ.குமுதா கூறும்போது, எழும்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை 800மிலியிலிருந்து ஒரு லிட்டர்வரை கொடையாகப் பெறுகி றோம். தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களிட மிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, பாலின் பாதுகாப்பு பலமுறை செய்யப்படும் ஆய்வின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. குறைப்பிரசவத் தில் பிறக்கும் 1.00 கி.கி, 1.20 கி.கி. அளவில் எடை குறைந்த குழந்தைகளுக்கும், போதுமான அளவு பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page5/78590.html#ixzz2yj0J8xZz

தமிழ் ஓவியா said...


வேலை தேடி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!


விப்புல் பாண்டியா (பொதுச் செயலாளர், பங்கத்தன் மஸ்தூர் சங்கம், அகமதாபாத்); குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லை என்பதுபோல சித்திரிக்கவே அரசு முனைகிறது. அதனால், வேலை இல்லாமல் இருப்பவர் களை எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்தவர்களாக அது சித்திரிக்க முயல்கிறது.

வெளிமாநிலத்தில் இருந்து மட் டுமல்ல, வளர்ச்சி காணாத பகுதி களில் இருந்து அதிக வளர்ச்சி கண்டுவரும் சூரத், அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா போன்ற நகரங்களுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான பலர் வேலை தேடி குடி பெயர்ந்து வருகிறார்கள்.

விவசாய நிலங்களை எல்லாம் அரசு தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டதால்...

நிலச்சுவான்தார்களுக்கு வேண்டு மானால் பணம் கிடைத்திருக்கலாம். விவசாயக் கூலிகள்எங்கே வேலைக் குப் போவார்கள்? ஆனால், அரசு அவர்களை கண்டு கொள்வதே இல்லை. நகர்ப்புறங்களில் ஆபத் தான கட்டுமான வேலைகளில் வேலை செய்பவர் களுக்குப் பணி பாதுகாப்பு இல்லை.

ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு தலைக் கவசம், ஷூ ஆகியவைகூட இந்த மாநிலத்தில் பல இடங்களில் வழங்கப்படுவது இல்லை. அதனால், கட்டட சாரம் சரிந்து தொழிலாளர் பலி, உயரத்தில் இருந்து கால் தவறி விழுந்து இருவர் பலி என்று தினம் தினம் இங்கே செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. அமைப்புசாரா தொழி லாளியைப் பொறுத்த மட்டில், அவன்தான் அவனது குடும்பத்துக்கு ஆதாரம்.

அவன் இப்படி திடீர் என்று இறந்துவிட்டால் அவனது குடும்பம் என்னாகும்? ஒரு தொழிலாளி உயிருடன் இருக்கும்போதே அவனது குழந் தைகள் படிக்க இங்கே வழியில்லை. இந்த நிலையில் அவன் இறந்து விட்டால், அவனது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? இது போன்ற செலவுகளுக்காக தொழி லாளர் நலநிதி வரி என்ற பெயரில் அரசிடம் 500 கோடி ரூபாய் இருந்தும் அதில் இருந்துஒரு சதவிகிதத்தைக் கூட இந்த அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ கொடுப்பது இல்லை. இந்தப் பணம் முழுவதையும் அது செலவு செய்யம லேயேதான் வைத்திருக்கிறது. தொழிற்சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் இங்கு நசுக்கப்பட்டு வெகு காலம் ஆகி விட்டது.

- ஜூனியர் விகடன் 6.4.2014

Read more: http://viduthalai.in/page7/78598.html#ixzz2yj0V9O9Z

தமிழ் ஓவியா said...


மோடி மனைவியின் மனக் குமுறல்!


தன்னை மிகவும் பிரபல மானவர் என்று உலகிற்கு தெரியும் வகையில் நடந்து கொள்பவர் மோடி, அதிலும் நான் சுயம்சேவகன்(ஆர் எஸ் எஸ் தொண்டன்) என்று எல்லா பொதுகூட்டமேடையிலும் பேசுவதை வழக்கமாக கொண்டு இருப்பவர். பொது வாக சுயம்சேவகர்கள் திரு மணம் செய்யக்கூடாது என்று விதிமுறை உண்டு. இதன் காரணமாக நரேந்திரமோடி உலகத்தாருக்கு திருமணமாகாதவர் என்ற பிம்பத்தையே ஏற்படுத்திவந்தார். சுமார் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டவர் தான் திருமணமானவர் என்று குறிப் பிடவில்லை. இவர் திருமணமானவர் என்று சொன்ன தகவல் எல்லாம் வதந்தி என்றும் நரேந்திரமோடி உறுதியான மனப்பான்மையுள்ள உண்மையான சுயம்சேவக் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தே 2013-மார்ச் நாக்பூரில் நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனுடைய உண்மையான விளக்கம் கடு மையான பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்கும் திருமணமாகாத தொண்டர் என்பதாகும். கடந்த வருடம் நரேந்திர மோடி பாஜக பிரதமவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரது திருமணம் குறித்த விவாதமும் துவங்கிவிட்டது, ஏற்கனவே 2008 ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் நரேந்திரமோடியின் மனை வியைப் பேட்டி கண்டு செய்திவெளியிட்டு பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செய்தி அதிகம் பரவாமல் மறைக்கப்பட்டு விட்டது. இந்த வருடம் பெண்கள் தினம் அன்று நரேந்திரமோடியின் டீக்கடை விவாதம் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினம் குறித்த நரேந்திர மோடியின் பேச்சிற்கு தன்னுடைய மனைவியை சரியாக கவனிக்காதவர் பெண்களின் நலன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது, மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது தான் திருமணமாகாதவர் என்று வேட்பாளர் பிரமாணபத்திரத்தில் எழுதியிருந்ததைக் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று வழக்கை தள்ளிவைத்துவிட்டது. இம்முறை ஆம் ஆத்மி தலைவர்களும் நரேந்திரமோடியின் திருமண வாழ்க்கை குறித்து பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது திருமண விவகாரம் குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்த பிறகு தனது மவுனத்தைக் கலைத்து தான் திருமணமா னவர் என்று குறிப்பிட்டார் நரேந்திரமோடி.

நேற்று பாஜகவின் சார்பில் வதோதராவில் போட்டியிடும் நரேந்திர மோடி தனது வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

கடந்த 3 சட்ட மன்றத்தேர்தலின் போது தன்னை திருமணமாகாதவர் என்று குறிக் கும் விதமாக தனது பிரமாணப்பத்திரத்தில் திருமண பகுதியை நிரப்பாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்டிருப் பதை நகலாக எடுத்து வதோதரா ஆட்சியாளர் அலுவலக சுவரில் யாரோ ஒட்டி விட்டனர். இதை சிலர் பார்த்த பின்பு மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்ட செய்தி இரவு செய்தி ஊடகங்கள் மூலம் பரவியது. ஆனால் இதுவரை ஆட்சியாளர் அலுவலக இணையதளத்தில் மோடியின் பிரமாண பத்திர தகவல் குறித்து எந்த தகவலையும் சேர்க்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஜசோதா பென் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த செய்தியின் தமிழாக்கம் “I am Narendra Modi’s Wife” | OPEN Magazine 2009
மார்ச்.

.”Joshodaben claims she was deserted and never given the privileges of a wife”...........
......

......நான் ஒரு சராசரி இந்தியப்பெண்ணிற்கு உண்டான மகிழ்ச்சிகளைக்கூட பெற முடியாத பாவப்பட்ட ஜென்மம் ஆகிவிட் டேன், எனது திருமணவாழ்க்கை துவக்கத் தில் இருந்தே பாலைவனமாகிப்போனது. மனைவிக்கான எந்த ஒரு அதிகாரமும் வழங்கவில்லை, மோடி அவர்கள் என்னை ஒரு மனைவியாகவே நினைக்கிறாரா இல்லையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். இது பேட்டி கேட்கும் முன்பு கூறியவார்த்தை பேட்டி கொடுக்க வெளியே வந்தவரை மிரட்டிய பள்ளி நிர்வாகம், செய்தியாளர்களை விரட்டிவிட்டதுடன், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பத்தி ரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி இருக்கிறார்........

Read more: http://viduthalai.in/page8/78600.html#ixzz2yj1AEJJr

ராவணன் said...

பாப்பாத்தி ஜெயலலிதாவிற்கு உங்கள் கூறுகெட்ட வீரமணி பட்டம் கொடுத்தது எதுக்கு?

…வீரமணி பாப்பானா?

…கருணாநிதி கைது செய்யப்பட்டபோது உங்கள் கூறுகெட்ட வீரமணி பேசியது என்ன?

…சங்கர மடத்தைப்போல் வாரிசுக்கு பட்டம் கட்ட திராவிடர் கழகம் என்ன வீரமணியின் அப்பன் வீட்டு சொத்தா?

…திண்டுக்கல் பெண்ணிற்கு தில் இருந்தால் இதுக்கு பதில் சொல்லிவிட்டு அந்த கூறுகெட்ட வீரமணியை புகழ்ந்து பேசலாம்.

…இல்லாவிட்டால் நீயும் ஜெயலலிதாவும் ஒன்னுதான்.

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது ஆர்.எஸ்.எஸின் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்பட்டதுதான் தேர்தல் அறிக்கை அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவர் ஜோஷி ஒப்புதல்


டில்லி, ஏப்13- பாஜக வின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டங்கள் இடம் பெற் றுள்ளன அதன் ஆலோச னைகளும் பெறப்பட்டன என்று டில்லியில் செய் தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி விரிவாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

"எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தா லும், அதற்கு முன், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின், அறிவுரையை கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு வரும், அந்த கட்சியின் தேர் தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளிமனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கலாச்சார அமைப்பு மட்டும் தான். இருப்பினும், தேச பக்தி, பண்பாடு விஷயங் களில் தலைசிறந்து விளங் கும் அமைப்பு அது. அந்த அமைப்பின் தாக்கம் பா.ஜ.க.வில் இருப்பதை பெருமையாகவே கருதுகி றோம். மஸ்தூர் சபா, கிசான் சபா என்று ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பல அமைப்பு களின் கருத்துகளை கேட்டு த்தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டது.

எந்தவொரு விஷயத் தில் இறங்குவதாக இருந் தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம் தான். அந்த அமைப்பின் வழிகாட்டுதலை ஏற்பதா, வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. தேர்தல் அறிக்கை உருவாக்கியதி லும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப் பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நரேந் திர மோடிக்கு வாரணாசி தொகுதியை நான் விட்டுக் கொடுக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. நரேந்திர மோடி எங்கள் கட்சியின் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வர். அப்படிப்பட்ட தலை வருக்கு தொகுதியை தர மறுப்பேனா? அவ்வளவு தூரம் நான் என்ன முட் டாளா? என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78652.html#ixzz2yofa4d2A

தமிழ் ஓவியா said...


வெளிப்படைத் தன்மையும், கபடத் தன்மையும்


- குடந்தை கருணா

மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவாக யார் முன் வந்தாலும் அதற்கு திமுக கை கொடுத்து, கை குலுக்கி வரவேற்கும் என கலைஞர் பொதுக் கூட்டத்தில் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, திமுகவின் தலைவர் கலைஞர் சொன்ன செய்தி, இந்த தேர்தலில், மதசார்பின்மை, சமூக நீதி என்ற இரண்டு கொள்கையையும் முன் வைத்து, திமுகவும் தோழமை கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கொள்கைக்கு ஆதரவாக யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.

பாஜகவை திமுக விமர்சிக்கவில்லை என சிலர் வேண்டுமென்றே கூறிய நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து, கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மதசார்பின்மையைக் குலைக்கும் கொள்கைகளை விமர்சித்து திமுக வெளிப்படையாகப் பேசி வருகிறது.

கம்யூனிஸ்டுகளை எந்த காரணமும் சொல்லாமல் கழற்றி விட்ட நிலையில், மதசார்பின்மை கொள் கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் திமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என கலைஞர் உள்ளிட்ட திமுக அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

திமுகவின் இந்த வேண்டுகோள் வெளிப் படையாக, கொள்கை அடிப்படையில் வெளியிடப் பட்ட வேண்டுகோள். மதசார்பின்மை கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், திமுக மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவினை வலுப் படுத்துவது இயற்கையானது; நியாயமானது.

அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு எப்படி உள்ளது? கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணத்துக் காக விரட்டப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை ஜெயலலிதாவோ, அதிமுகவோ எந்த காரணத்தையும் சொல்லவில்லை; பாஜகவோடு, தேர்தல் முடிந்து கூட்டு வைத்துக்கொள்ள அதிமுக முடிவு செய்துதான் இத்தகைய நிலையை எடுத்துள்ளது என இப்போது கம்யூனிஸ்டுகள் காரணம் சொல்கிறார்கள். இதற்கும் ஜெயலலிதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை;

ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி யைப்பற்றியோ, பாஜக பற்றியோ ஒரு விமர்சனம்கூட இதுவரை சொல்லவில்லை; பாஜக தலைவர்களும், மோடி உட்பட, தமிழ் நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா வையும் அதிமுகவையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை;

எதற்கெடுத்தாலும், கலைஞரைக் கேள்வி கேட் கும் ஊடகங்கள், ஜெயலலிதாவின் இந்த மவுனத் தைப்பற்றி அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை; மாறாக, சோ ராமசாமி மூலமாக கேள்வி பதில் என்கிற முறையில், பாஜக நிற்கும் இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வேட்பா ளர்களை ஆதரிக்காமல், அதிமுகவை ஆதரியுங்கள்.

அதிமுக வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு உதவிகரமாக இருக்கும் என கபடத் தனமாக, சோவை விட்டு இந்த செய்தியை சொல்லி யிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வும், மோடியை முன்னிறுத்தும் பாஜகவும்.

மதசார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்த வெளிப்படையாக, நேர்மையாக ஆதரவு திரட்டும் திமுக அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? அல்லது தங்களோடு கூட்டணி அமைத்துள்ள கட்சி களை காவு கொடுத்து, கள்ள உறவு வைத்துள்ள பாஜக வையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமா?

Read more: http://viduthalai.in/page-2/78650.html#ixzz2yofpSnaV

தமிழ் ஓவியா said...


குடும்ப தர்மத்தையே காப்பாற்றாத மோடி நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? லாலு பிரசாத் கேள்வி


பட்னா ஏப்.13- தன் மனைவியை மறைத்து, குடும்பத் தர்மத்தையே காப்பாற்றத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பாற் றுவார் என்ற வினாவை எழுப்பினார் லாலு பிரசாத். ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சிதலைவர் லாலு பிர சாத் - தலைநகர் பாட்னா வில் தனது கட்சி ஆதர வாளர்களுடன் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட் டம் நடத்தினார்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகை யாளர்கள் பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் திருமணம் விவாதம் குறித்து கேள்வி கேட்டனர். குடும்ப தர்மம் காப் பாற்றுபவர் தான் தேசத்தின் தலைமை ஏற்க தகுதியான வர் என்றார் லாலு. நேற்று மாலை சமூக இணையதளத்தில் மோடி யின் திருமணவிவகாரம் குறித்து பதிலளித்த லாலு பிரசாத், மோடி போன்ற ஒரு முக்கியமான தலைவர் பல முறை அரசு விண்ணப்பங் களில் தனது திருமணத்தை மறைத்துவிட்டார்.

இம் முறை நீதிமன்ற தீர்ப்பின் படி வேறு வழியில்லாமல் தனக்கு திருமணமானதை யும், தனது மனைவி பெய ரையும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப தர்மமும் நாட் டைக்காப்பாற்றும் தர்ம மும் ஒன்றுதான் வீட்டிற் குத் தலைவனாக இருக் கிறவர். குடும்பத்தை சரி வர கவனிக்கவேண்டும்;

தனக்கு குடும்பம் உள் ளதையே மறைத்து இத் தனைக் காலம் வாழ்ந்தவர் எப்படி தேசத்தை காப் பாற்றும் பணியை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/78645.html#ixzz2yofzABkv