Search This Blog

1.4.14

பெரியாரே என் தலைவர்! திராவிடர் கழகமே என் இயக்கம்!

நன்னன் அவர்களின் நளபாகம்!
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மானமிகு மா.நன்னன் அவர்கள் கடந்த 28 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் சமைத்துத் தந்த நளபாகம் இயக்க வரலாற்றில் ஒரு புதிய சிந்தனைக்கான நீரோட்டம்!
ஆழமான சிந்தனைக்கு அடியெடுத்துக் கொடுத்த அருமை! இயக்கத்தில் இருக்கிறோம் - செயல்படுகிறோம் - நம்மைச் சுற்றி, நாளும் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி நிரல்களை நாளும் நடக்கும் அன்றாட செய்திகளாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

அவற்றையும் தாண்டி அரிய சிந்தனைகளுக்கான விதைகள் அவற்றில் சூல் கொண்டுள்ளன என்பதை நம்மில் எத்தனைப் பேர் அசைப் போட்டுப் பார்க்கிறோம்? அவற்றில் எத்தனைப் பாடங்களைப் படித்துக் கொள்கி றோம் - பதிவு செய்கிறோம்?

இந்தக் கேள்விகளுக்கு மிகப் பெரும்பாலோரிடம் பதில் கிடையாது என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும்.

தொண்ணூறைத் தாண்டிப் பயணம் செய்யும் அவர் தன்மான இயக்கத்தோடு நெருக்கமான தொடர்புடையவர் என்கிற முறையில் அப்படிச் சிந்திக்கவும், சிந்தித்த வற்றை - சொல்லலாமா? சொல்லக் கூடாதா? என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் சொல்லக் கூடியவராக இருக்கிறார். மற்றவர்களின் சிந்தனைக்கே அவற்றை விட்டுவிடுகிறார் நன்னன் அவர்கள்.
ஆரியத்தை எதிர்த்தவர்களை விட்டு வைத்தார்களா? நந்தனுக்கு என்ன கெதி ஏற்பட்டது? வள்ளலார் இராம லிங்க அடிகளாருக்கு ஏற்பட்டது என்ன?
வெகுதூரம் போகவேண்டாம். நெருக்கடி காலத்தில் என்ன நடந்தது - நம் கண்முன்னே?

ஒரு சுப்பிரமணியனும், ஒரு தவேயும் என்ன பாடுபடுத்தினார்கள்? சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் அப்படியே நடந்துகொள்பவர்கள்தான் அவர்கள்.
பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் சோர்ந்து போயிருந்தால், தளர்ச்சி அடைந்திருந்தால் என்னவெல் லாம் நடந்திருக்கும்?

ஆனால், ஒன்று பெரியார் இயக்கம் - திராவிடர் கழகம் எப்படி உண்டானது? அது காலத்தின் கட்டாயப் பிரசவம்!

சூரியன் எப்படி உண்டானதோ அதுபோன்றே இயல் பாகவே அது தோன்றவேண்டிய அவசியம் எனும் முறை யில் முகிழ்த்தது. இயற்கையாக உண்டான இந்த இயக் கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது!

அண்ணா அவர்கள் மிகப்பெரிய அறிஞர். அய்யா வின் தலைமைச் சீடர். அவரும் அவரைச் சார்ந்து ஏராள மானவர்கள் பெரியாரை விட்டுப் பிரிந்த போதும், பெரியார் நின்றார் - நிலைத்து நின்றாரே! பெரியாரின் தத்துவம் தேவை என்ற நிலை இருக்கும்பொழுது, அது எப்படிப் பட்டுப் போகும்? எப்படி வீழ்ச்சிதான் அடை யும்? வீழ்ச்சி அடைய பலன் பெற்ற மக்கள்தான் எப்படி விடுவர்?

மக்கள் தொகுதி எக்குறையாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறுதல் இயற்கை

என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இதுதான் அப்பொழுதும் நடந்தது - இப்பொழுதும் நடந்துகொண்டும் இருக்கிறது.

பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பிணக்குகள் தோன் றியது போல் காணப்பட்டாலும், அந்தப் பிணக்குகள் காலவோட்டத்தில் மறைந்து போய் இணக்கமானது எப்படி?

பதவிப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காத பெரியாருக்கு - இந்த மந்திரி சபையே காணிக்கை என்று அண்ணா அவர்கள் சட்டம் இயற்றும் ஓர் அவையி லேயே (20.6.1967) அறிவித்தது எதைக் காட்டுகிறது?

எத்தனை எத்தனையோ விமர்சனங்களுக்கு ஆளாக்கப் பட்டார் அன்னை மணியம்மையார்! அண்ணா அவர்களும் கூட அப்படி விமர்சனம் செய்தவர்கள்தாம்.

ஆனால், அந்த அண்ணா அவர்களே பிற்காலத்தில் அன்னை மணியம்மையார் அவர்களை அங்கீகரித்ததன் காரணம் என்ன? அவரின் அருமையை உணர்ந்து பாராட்டியது ஏன்?

அய்யாவின் ஆயுள் நீட்சிக்கு அவர்களே காரணம் என்று அண்ணாவே மனந்திறந்து பாராட்டியது எதைக் காட்டுகிறது? ஒரு காலத்தில் இருந்த அந்தப் பிணக்கு எப்படி இணக்கமாக வடிவெடுத்தது? தனிப்பட்ட பிரச்சினைகளாக, விரோதமாக இல்லாமல், இலட்சிய நீரோட்டம் எனும் முறையில் ஒரு கட்டத்தில் பீறிட்டு வெளிவருகிறது.

பெரியார் ஆயுள் நீட்சி என்பது சாதாரண ஒன்றா? அது சமுதாயத்தின் நலம் சார்ந்த - உரிமை சார்ந்த ஒன்றாயிற்றே!

அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுதுதான் அந்தத் தாயின் அருமையும், அதற்குள் புதைந்திருக்கும் அந்தத் தியாகத் தீயும் தெற்றெனப் புலனாகும்.

ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டி விளக்கினார் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்.
ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுடன் தங்கி இருந்து இயக்க இதழ்ப் பணிகளில் ஈடுபட்டார் அறிஞர் அண்ணா. சிறிது காலம் அங்கு தங்கியும் இருந்தார்.

பெரியார், அண்ணா ஆகியோர் மறைவிற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் இல்லத்தை அவரின் பெயரால் நினைவில்லமாக மாற்ற கலைஞர் அவர்களின் தலைமை யிலான அரசு முடிவு எடுத்தது. அந்த வீட்டுக்கான விலை யையும்கூடக் கொடுக்க முன்வந்தார் முதலமைச்சர். அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு புறம்; அது ஒரு தனிச்சிறப்பு - பண்பு!
பெரியார் இல்லமாக மட்டும் அறிவிக்காமல், அய்யா - அண்ணா நினைவகமாக அது அமையவேண்டும் என்று நினைத்தாரே - நினைத்தபடி அரசு மூலம் செய்வித் தாரே - அது ஒன்றே ஒன்றுபோதும் அம்மா அவர்களின் பெருந்தன்மைக்கும், பெற்றிக்கும் என்று புலவர் மானமிகு நன்னன் அவர்கள் நினைத்துச் சொன்னது என்றும் நிலைத்து நிற்கும் - சீனத்து நெடுஞ்சுவர்!
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 4 - தன்வரலாறு) எனும் நூலை வெளியிட்டவர் என்ற முறையில் நன்னன் அவர்கள் வெளியிட்ட கருத்து கள் மிகவும் கனமானவை! கருத்துப் பேழையில் வைத்துக் காக்கப்படவேண்டியவை!

தலைப்பே மிகவும் சிறப்பானது என்றார்.

தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டில் அளந்து நடைபோட்டு வந்தவர் ஆயிற்றே - எனக்கு என் சொந்தப் புத்தி தேவையில்லை - பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்பவர் ஆயிற்றே!

சொந்த புத்திக்குச் சபலம் வரலாம் - பெரியார் தந்த புத்திக்கு சபலம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதற்கு விளக்கம் சொன்ன தலைவராயிற்றே - அதனால் தான் அய்யாவின் அடிச்சுவட்டில்! என்று அர்த்தம் ஆழமுள்ள தலைப்பினைக் கொடுத்தார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

நூலாசிரியரைப்பற்றி ஒரே ஒரு கருத்துக் கூறுகிறேன் என்று ஆரம்பித்த பெரியார் பேருரையாளர் அவர்கள், ஆசிரியர் அவர்கள், இந்த இயக்கத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு! என்றார்.

பேருக்காகச் சொல்லப்பட்டதல்ல - பெரியாருக்குப் பிறகு இயக்க வளர்ச்சி - கொள்கைப் பிரச்சாரம் - அந்தப் பிரச்சாரத்திலும் காலத்திற்கேற்ப யுக்திகள் - இயக்க வெளி யீட்டில் பெரும் பாய்ச்சல், கல்வி நிறுவனங்களின் நெடிய பட்டியல் - இந்தியத் தலைநகரமான டில்லியிலேயே பெரியார் மய்யம், உலகளாவிய பெரியார் பன்னாட்டு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பெரியார் நூலகம் - ஆய்வகம் - பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், சூழியம் என்று சொல்ல ஆரம்பித்தால், மிகப்பெரிய பட்டியலாகும்.

பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், மூதறிஞர் குழு, சுயமரியாதைத் திருமண நிலை யம், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் சுயமரி யாதை ஊடகத் துறை, பெரியார் வலைக்காட்சி, பெரியார் மருத்துவ அணி, பெரியார் மருத்துவமனைகள், பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், மகளிர் பாசறை, பெரியார் பகுத் தறிவு கலை, இலக்கிய அணி, பெரியார் களம் என்பவை யெல்லாம் தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, இந்தத் தலைவரால் உருவாக்கப்பட்டவை. வீரியமான வகையில் செயல்படுத்தப்படுபவை என் பதை எவர் அறிந்தாலும் மலைக்கவே செய்வர்.
இவற்றின் பலன் மக்களின் செழுமையான விளைச் சலுக்குப் பயன்பட்டதே!
அவற்றையெல்லாம் உள்வாங்கிதான் குப்பிக்குள் மருந்தை வைத்துள்ளதுபோல, அவர் கிடைத்தது நமக்குப் பெரிய பேறு என்றார் புலவர் நன்னன் அவர்கள்.

அடுத்து அவர் சொன்னது மிகமிக முக்கியம். தோழர் களே! அவருக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமாய் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்! என்றார்.

அவர் சொன்னது வேண்டுகோளாகக்கூட இருக்கலாம் - நம் தோழர்களோ அதனைக் கட்டளையாகக்கூட ஏற்றுக் கொள்ளத் தயார்தான்!
தந்தை பெரியார் ஒவ்வொரு இயக்கத் தோழரின் வீட்டுக்கும், குடும்பத் தலைவராகத்தான் இருந்தார்கள்.

பெண்ணுக்கு மணமகனா? மணமகனுக்கு மணமகளா? வீடு வாங்க வேண்டுமா? அல்லது வீடு கட்டவேண்டுமா? நீதிமன்றத்தில் வழக்கா? குடும்பத்தில் பிரச்சினையா? பிள்ளைகளின் படிப்பா? உத்தியோகமா? எதைக் கருஞ்சட்டைத் தோழர்கள் விட்டு வைத்தார்கள்?

அத்தனையையும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை யையும் ஒட்டுமொத்தமான மனித குலத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்தப் பகுத்தறிவுப் பகலவன் திரு முன் அல்லவா வைத்தார்கள்? அவற்றை என் றைக்கும் அலட்சியப்படுத்தவில்லை அய்யா! அதுவும் தன் தொண்டின் முறையிலும் ஒரு கடமை என்று நினைத்தே மகிழ்ச்சியுடன் செய்து கொடுத்தார்கள் - அவற்றை விரிக்கின் விரிகடலாகும்!

தந்தை பெரியார் அவர்களால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட கடைசித் தலைவர் இவர்! 81 ஆண்டில் 71 ஆண்டுப் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

இது வேறு எவருக்கும் கிட்டிராத தனித்த முத்திரை!

தந்தை பெரியார்தம் தாக்கத்தின் முழுவடிவம்தான் இவர்! அந்தப் புவி ஈர்ப்பிலிருந்து விலகிச் செல்ல நினைத்தாலும் இவரால் முடியாது!
தொண்டர்களும் அப்படியே இருக்கிறார்கள். 50 ஆண்டு விடுதலை ஆசிரியராகப் பணியாற்றியவர் என்ப தற்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் என்று திட்ட மிட்டு அதனைச் சாதித்தும் காட்டினரே!

50 ஆயிரம் சந்தாக்கள் தாருங்கள் என் ஆயுளும் நீளும் என்று வேறு சொல்லிவிட்டாரே - தூங்குவார்களா தோழர்கள்?

இன்று பெரியார் உலகம்! 30 கோடி ரூபாய்க்கான மகா திட்டமிது! நம்மால் முடியுமா என்று நினைக்க வில்லையே!

பெரியார் என்ற பெருஞ்சுடரை எடுத்துக்கொண் டல்லவா புறப்பட்டு இருக்கிறோம்! தந்தை பெரியார் தொண்டு போய் சேராத தமிழன் இல்லம் இருக்கிறதா? ஒரு கை பார்த்துவிடுவோம் என்றல்லவா தோழர்கள் புறப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியாரைத் தவிர்த்துவிட்டு, தமிழன் எங்கே? தமிழ்நாடு எங்கே? நமக்கு அடையாளமே பெரியார்! முகவரியே பெரியார் - பெரியார்தானே!!
அவர் உருவாக்கிய இயக்கம் - அவர் அடையாளம் காட்டிய தலைவர் - அவர் உருவாக்கிக் கொடுத்த சித்தாந்தம் - இலட்சியம் - போட்டுத்தந்த சபலமற்ற பாதை - இலட்சியத்தை நிறைவேற்றிட எந்த விலையையும் கொடுக்கச் சித்தமாக இருக்கும் தற்கொலைப் பட்டாளமாம் கருஞ்சட்டைச் சேனை -  இவை இருக்கையில் என்ன பயம்? என்ன தயக்கம்? எதைத்தான் சாதிக்க முடியாது?

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் நன்னன் அவர்கள் தெரிவித்த கருத்துகள் தோழர்களே நம் சிந்தனையில் என்றென்றைக்கும் நிலைக்க வேண்டிய அன்றாடம் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கண் ணாடி - தொண்ணூறைத் தாண்டிய அந்தப் பெரியார் பெருந்தொண்டருக்கு சூழியம் கண்ட அந்த சிந்தனை யாளருக்கு - பெரியார் பேருரையாளருக்கு நமது வணக்கமும், நன்றியும் உரித்தாகட்டும்!

பெரியாரே என் தலைவர்!  திராவிடர் கழகமே என் இயக்கம்!

ஒரு தொண்டனின் எளிமையான கணிப்பாக இன்னொன்றையும் எடுத்துக் கொள்ளலாம். (நிகழ்ச்சியில் இதனைச் சொன்னவர் - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்).

தி.மு.க. பிரிந்தபோது அவர் சிறுவன் வீரமணிதான் - வயது 16; அவரை ஆளாக்கிய அவரின் அண்ணன் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கி.கோவிந்தராசன், அவரது ஆசானான ஆசான் புதூர் ஆ.திராவிடமணி அவர்கள் தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள். சுற்றம் எல்லாமே பெரியாரை விட்டு விலகிப் புதிய முகாமுக்குச் சென்ற நிலையில், அந்த 16 வயது மாணவன், பெரியாரே என் தலைவர்! திராவிடர் கழகமே என் இயக்கம்! என்று சிந்தாமல், சிதறாமல் உறுதியாகச் சிந்தித்தது எப்படி? செயல்பட்டது எப்படி?

பொதுவாக அந்த வயதில் மற்றவர்களைச் சார்ந்தே செல்லக்கூடிய நிலைதான் இருக்கும். இதனைப் பிஞ்சில் பழுத்தது என்று சொல்லலாம். (வழக்கமான பொருளைக் கொள்ளற்க).

இந்த இடத்தில் புரட்சிக்கவிஞரின் தொலைநோக்குக் கணிப்பையும் இணைத்துக் கொள்ளலாம்.

தமிழன் அடிமை தவிர்த்து குன்றென
நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்
பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீர மணியை
வீண்செயல் எதிலும் வீழ்த்த வில்லை!

அந்த 16 வயது சிறுவன் வீரமணி வித்தியாசமானவராக இருந்ததால், இன்றைக்குத் தமிழர் தலைவராக - திராவிடர் கழகத்தின் ஈடு இணையற்ற தலைரவாக - உலகம் போற்றும் ஒப்பற்ற ஒளியாக - பெரியார்தம் எச்சமாக - எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாத இலட்சிய மாந்தராக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறார். (துணைத் தலைவரின் இந்தக் கருத்தையும், புலவர் நன்னன் அவர்களின் கருத்துக் கோவையில் ஒரு அரைப்புள்ளியாகவாவது இருக் கட்டுமே!).

---------------------------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை "விடுதலை” 31-03-2014

36 comments:

தமிழ் ஓவியா said...


யார் வெட்கப்பட வேண்டும்? - திக்விஜய்சிங்

புதுடில்லி, மார்ச். 31- மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'ஊழல் கறை படிந்த அசோக்சவானுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது வெட்கப்பட வேண்டிய செயல்,' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங், 'ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள எடியூரப்பாவை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், அசோக்சவான் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் யார் வெட்கப்பட வேண்டும்? என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77904.html#ixzz2xahy1Hra

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்

நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர். - (விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/77892.html#ixzz2xai8LLPa

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

இந்த மவுனத்தைச் சாமர்த்தியமாக ஜெயலலிதா அம்மையார் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை வேறு விதமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. பரவலாகப் பொது மக்கள் இதுகுறித்துக் கேலி செய்யும் போக்கைக் காண முடிகிறது. ஆனால், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப் பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்காது. இந்துத் துவா கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இவர்.

திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக அவர் சொல் லிக் கொள்ளலாம். அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்கலாம். ஆனால், அவை உதட்டிலிருந்து உதிரக் கூடியவைகளே தவிர, உள்ளத்தின் வேர்களிலிருந்து வெளிவரக் கூடியவையல்ல! அண்ணா நாமம் வாழ்க! என்று அம்மையார்உச்சரிப்பது - அண்ணா கொள் கைக்கு நாமம் போடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக் கையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அதற்கு அவர் என்ன காரணம் சொல்லியுள்ளார்?

தமிழ் ஓவியா said...


இராமன் பாலத்தை இடித்து ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றல்லவா உச்சநீதி மன்றத்தில் காரணம் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஹிந்துத்துவாவைக் கொண்டு வந்து திணிக்கின்றாரே! பி.ஜே.பி.யும் இதே காரணத்தைக் கூறித்தானே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

அந்த வகையில் பி.ஜே.பி.யும். அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்துத்துவா படகில் பயணம் செய்யக் கூடிய வெவ் வேறு பெயர்களில் நடமாடும் ஒரே கொள்கைக் கோட் பாட்டைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாக - அப்பட்டமாகத் தெரியவில்லையா?

இடதுசாரிகள் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இந்த ஹிந்துத்துவா மனப்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்கிறார்களே, அதுதான் மிகவும் ஆச்சரியமானது!

இடதுசாரிகள் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும்கூட செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபியைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ பேச மாட்டார்தான். இதில் இடதுசாரிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். அம்மை யாரைப் பொறுத்தவரை அவர் தெளிவாகவே இருக் கிறார். பி.ஜே.பி.யும் தெளிவாகவே இருக்கிறது. அவர் களும் அதிமுகவைப் பற்றியோ செல்வி ஜெய லலிதாவைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை.

பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் நாட்டுக் கட்சிகளுக்கும் இந்த நிலைமைகள் புரியும் என்றாலும், அவர்களும் இதனை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்புபோல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்கும் என்ன பரிதாபம் என்றால் அ.இ.அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் இவர்களின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்தே நிற்கிறது.

இந்த விசித்திர நிலையைக் கண்டு நன்கு இரசிக்கத் தான் தோன்றுகிறது. வீராதி வீரராக தோள் தட்டி, தொடை தட்டி சண்டமாருதம் செய்பவர்கள் எல்லாம் கூட, பதவி என்று வந்து விட்டால் எத்தகைய பலகீனங் களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைத்தால் ஒரு வகையிலே பரிதாபப் பட வேண்டியுள்ளது! இன்னொரு வகையில் எல்லாவற்றையும் இழந்துதான் பதவியைப் பிடிக்க வேண்டுமா? சுயமரியாதையோடு வாழக் கூடாதா? கொள்கையைச் சொல்லித் தோற்பது - கொள்கை களைப் பலி கொடுத்து வெற்றி பெறுவதைவிட சிறந்ததல்லவா!

தமிழ் ஓவியா said...


கமலாலயம் சென்றவர்கள்!


பேரா. பூ.சி.இளங்கோவன்
அமைப்புச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு - முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா அணியில் பார்ப்பன மதவாதிகள் தங்கள் கொள்கையை ஒவ்வொரு கட்டத்திலும் புகுத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால், அவ்வணியில் சேர்ந்துள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கண்களுக்கு பார்ப்பன - மதவாதிகளின் சூழ்ச்சி தெரியவில்லை; இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பதவி சுகம் என்ற நோயே ஆகும். கூட்டணி குறித்துப் பேச கமலாலயம் சென்ற நம் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் - அங்குள்ள பாரதமாதா சிலை முன்பும், அங்குள்ள கடவுளர் படங்கள் முன்பும் மண்டியிடாத குறை யாக வணங்குவதைக் காணலாம். அங்குள்ள படங்கள் யார் யார் என்பதைப் பார்க்கும்பொழுது நம் நெஞ்சம் பதைக்கிறது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களான கோல்வால்கர், தீன் தயாள் உபாத்யாயா, வீரசவர்க்கார் - இவர்கள் எல்லாம் யார்? இடஒதுக்கீடு வாங்கித் தந்த வள்ளல்களா? அல்லது சமத் துவம் - சாதி வேறுபாடு நீக்கத்தொண்டாற் றிய சான்றோர்களா? அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட ஏந்தல்களா? பின் ஏன் நம்ம வர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தோர், நெடுஞ்சுவர்கள் என நிற்பதேன்? சின்னய் யாவுக்கும் (அய்யா என்பது தந்தை பெரியார் ஒருவருக்கே வழங்கப்பட்ட சொல், அது வேறு செய்தி) தீரன் சின்ன மலை வாரிசுக்கும் அங்கென்னய்யா வேலை?


தமிழ் ஓவியா said...

1930 கள் வரை சமஸ்கிருதம் தெரிந்தி ருந்தால்தான் மருத்துவம் படிக்கமுடியும் என்ற செய்தி - தெரியாத, வரலாறு அறியாத கத்துக்குட்டி மருத்துவர் ஒருவர், தன் தந்தையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பார்ப்பனர் வைத்த கெடு முடிவதற்குள் உள்ளே சென்று மண்டி யிட்டார். கடந்த நாடாளுமன்றத்தில் அய்ந்தாண்டுகள் அனுபவித்த பதவி சுகம் சும்மாவிடுமா? 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலையிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் தரும லிங்கம், நாமக்கல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்ட்ட தோழர் ஈ.வெ.கி. சம்பத் ஆகியோரை, தில்லிக்கு வழி யனுப்பி வைத்து பேசும்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் வாடைக்காற்று உடலுக்கு நல்லதல்ல - என்று குறிப் பிட்டது. இன்று கமலாலயம் சென்று பார்ப்பான் காலில் விழுந்துள்ள அரை வேக்காடுகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நினைவூட்டுவது சுய மரியாதைத் தமிழனின் கடமையாகும்.

இன்றைக்கு கமலாலயம் அமைத் துள்ள கூட்டணி, அவாளின் பழமொழி களுக்கேற்ப (அ) வழக்குமொழிகளுக் கேற்ப அமைந்துள்ளது என்றால் மிகை யாகாது. பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது போலவும், பாப்பாத்தியம்மா மாடு வந்துள்ளது கட்டினா கட்டு; விட்டால் விடு என்பதற்கேற்பவும் அமைந்துள்ளது. குறிப்பிட்ட ஒரே தொகுதியில் இரு கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி வைத்திருப்பது;

தமிழ் ஓவியா said...

புதுவையில் பா.ம.க.வுடன் கூட்டணியா? என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணியா? என்பது கூட்டணித் தலைமைக்கு தெரியவில்லை கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரிய வில்லை; வாக்காளர்களுக்கும் தெரிய வில்லை. ஏனெனில், பார்ப்பனர் தலைமை பரிதவித்துக் கொண்டுள்ளது. பிரச்சாரத்திற்குச் சென்ற நடிகர் - குழப்பத்தின் விளைவாக, வாகனம் பழுது என்ற குண்டை தூக்கிப் போட்டு விட் டார்; வாகனம் பழுதா? வேட்பாளர் குழப்பமா? கூட்டணித் தலைமையின் கையாலாகாத்தனமா?

கானல் நீர் பிரதமர் மோடியின் சொற் பொழிவைக் கூர்ந்து கவனித்தவர் களுக்கு - ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சொல் மிகவும் தெளிவாகத் தெரியும்; அந்த சொல்தான் ஹிந்துஸ்தான் என்பதாகும். மதவெறியர் மோடி அவர்களின் சொற் பொழிவில், ஒரு ஊரில்கூட, வாய் தவறியும் இந்தியா என்று சொல்வதே இல்லை.

நம்மவூர் பதவி வெறிபிடித்த மண்டூகங்களுக்கு இச்செய்தி தெரிந் திருக்க வாய்ப்பில்லை;

ஏனெனில் பதவிவெறி என்னும் திரை கண்ணை மறைக்கிறது அவர்கள் ஆர்.எஸ். எஸ்.சின் கொள்கை இந்தி - இந்து - இந்துஸ்தான் என்கிற தாரக மந்திரத்தை முன்னிறுத்துகின்றனர். அவ்வணியில் உள்ள நம்மவர்களுக்கு இதெல்லாம் புரியாத புதிராகும்.

கானல் நீர் அணியில் தமிழகத்தில் மட்டும் குழப்பமல்ல இந்தியா முழுவதும் இதே கேலிக்கூத்து தான். கோஷ்டிப் பூசலில் காங்கிரசையே தூக்கி விழுங்கி விடுவார்கள் போல் உள்ளது. அங்கே மூத்த தலைவர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் திரிசங்கு நிலையில் உள்ளனர். தமிழகத்தில் இராமநாதபுரம் தொகுதியை மாநில பாரதீய ஜனதா செயலாளர் கேட்கிறார். ஆனால் அங்கே ஆர்.எஸ்.எஸ். தென்னக பொறுப்பாளர் குப்புராம் என்பவருக்கு கொடுக்கப் பட்டுள்ளது. பாரதீய ஜனதாவைவிட ஆர்.எஸ்.எஸ் கை ஓங்கியுள்ளது என்பது, இதிலிருந்து தெரியவில்லையா?

ஆரியக்கூத்தாடினாலும், காரியத்தில் கண் வையடா என்பதற்கேற்ப - தொகுதி பிரிப்பு என்கிற குடுமிபிடி சண்டையில், பாரதீய ஜனதா கட்சி இராமநாதபுரத் தையும், மயிலாடுதுறையையும் கேட்கக் காரணமென்ன? இவ்விரு தொகுதியிலும் முஸ்லீம் வேட்பாளர்கள் நிற்கிறார்கள் - அவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்கிற மதவெறியில்லாமல், வேறென்ன காரணமாக இருக்கமுடியும்? தமிழகத் தையும் ஒரு குஜராத் கலவர பூமியாக்க பூணூல் சிசுக்கள் திட்டமிடுகிறதா? பெரியார் மண்ணில் இவர்களின் கயமை வெற்றி பெறாது. வெற்றிபெற விட மாட்டோம்.

Read more: http://viduthalai.in/page-2/77896.html#ixzz2xajClR27

தமிழ் ஓவியா said...


கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்


கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க மருத்து வர்கள் கூறிய ஆலோசனை வருமாறு: கோடை காலத்தில் சுற்றுப் புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச் சினைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும்.

வாந்தி, பேதி, வயிற்றுக் கடுப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ளவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakbntvk

தமிழ் ஓவியா said...


கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?


கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ மூட்டைகட்ட முடியாது.

அப்படியே போனாலும் ஒரு சில நாள்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... அனைவரும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அந்த ஆடை களின் வண்ணங்கள், வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும்.

வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தர்பூசணி, பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய நவ தானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு களை சர்க்கரை நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ள போதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalBmXBt

தமிழ் ஓவியா said...


எலி - தவளை - பருந்து கூட்டணி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் இவர் களிடையே இன்னொரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக முடியாது என்று தைலாபுரம் தோட் டத்தில் உடல் நலமில்லை என்று கூறிப் படுத்துக் கொண்டு விட்டார் மருத்துவர் ராமதாசு.

வானூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா பேசும்போது, பா.ம.க.,வைப் பற்றியோ, மருத்துவர் ராமதாசைப் பற்றியே டாக்டர் அன்புமணி ராம தாசைப் பற்றியோ ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையாம். பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூடச் சொல்ல வில்லையாம். இதனால் பா.ம.க.வினர் முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டனராம்.

தேர்தலில் ஆதரவு கோரி பா.ஜ.க. வினர் எங்களை முறைப்படி அணுக வில்லை என்று கூறி கோவை பா.ம.க. வினர் தேர்தல் பணி புறக்கணிப்பை அறி வித்தனர் என்பது இன்னொன்று இந்த செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.

மதிமுக கொடி மருந்துக்கும்கூட கிடையாதாம்! இப்படி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA).

எலி, தவளை - பருந்து கூட்டணி என்று நாம கரணம் சூட்டலாம் இந்த அணிக்கு.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நெடி ஏறலாம். ஒருவர் காலை இன்னொ ருவர் வாருவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொள்கையில் அப்பட்டமான முரண் பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் இந்தப் பரிதாப நிலைதான்!

Read more: http://viduthalai.in/e-paper/77933.html#ixzz2xgdoLdWC

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


எதற்குத் தெரியுமா?

சு.சாமி தலைமையில் பி.ஜே.பி. ஒரு குழுவை அமைத்துள்ளது. எதற்குத் தெரியுமா? தேர்தலின் போது இந்தக் குழு ஆலோசனை களைக் கூறுமாம். சு.சாமி எப்படிப் பட்ட யோசனைகளைச் சொல்லு வார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சேது சமுத்திரத் திட்டம் பற்றி யும், ஈழத் தமிழர் பற்றியும் இவர் உளறிக் கொட்டுவது ஒன்று போதும் - மக்கள் அள்ளிப் போடுவார்கள் மண்ணை!

குல்லாயில் துடைப்பம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் போட்டிப் போட இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம் துடைப்பம் (விளக்கமாறு) அந்தச் சின்னம் பொறிக்கப்பட் டுள்ள குல்லாய்களை அக்கட்சி யினர் அணிந்து வருகிறார்கள். நெற்றியில் திருநீறுபூசிக் கொண்டே துடைப்பம் படம் உள்ள குல்லாவை அணிந்து வருகிறார்களாம் - அது திருநீறை அவமதிக்கிறதாம்; இப்படி வருகின்றவர்களை வாரணாசி விசுவநாதன் கோயிலுக்குள் அனு மதிக்க முடியாது என்று கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கண்டிப் பாகக் கூறுகிறார்களாம். வேண்டுமா னால் சட்டையில் துடைப்பச் சின்னத்தை பொறித்துக் கொள்ள லாமாம். அப்பொழுது மட்டும் துடைப்பத்தோடு கோயிலுக்குள் சென்றால் அந்தக் கடவுளை அவமதித்தது ஆகாதா? கடவுள்தான் தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் என்கிறார்களே - துடைப்பத்தில் இருக்க மாட்டார்களா? என்கிற கேள்விகள் எல்லாம் அலை அலை யாகப் புறப்படும்; அவற்றிற்கெல் லாம் பதில் உண்டா?
தேர்தல் ஜன்னியில் எதையா வது உளறிக் கொண்டு இருப்பது என்று முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/77932.html#ixzz2xgeDW2hR

தமிழ் ஓவியா said...

இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!

சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள் என்ற இலக்கியக் கூட்டம் கடந்த ஞாயிறன்று நடை பெற் றுள்ளது.

இந்த நிகழ்வில் தென் சென்னைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளர் இல. கணேசன், இலக்கியவாதிகள் முத்துக் கண்ணன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் அவ்வை நடராசன் முதலியோர் பங்கு கொண்டுள்ளனர்.

காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்ற தலைப்பிட்டு தினமணி (31.3.2014 பக்கம் 6) 5 பத்தியில் செய்தியை வெளியிட்டது.

அது அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியக் கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த இல. கணேசன் வாள் என்ன பேசியிருக்கிறார்?

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திரமோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாக பேசியுள்ளார்.

இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு தரவில்லை என ப. சிதம்பரம் கூறியிருப்பது - மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான்; தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியதுபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.


தமிழ் ஓவியா said...


தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிகவும், பா.ம.க.வும் ஒற்றுமையாகத் தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதும் அதன் வெளிப்பாடு தான்.

உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார் - என்று பிஜேபியைச் சேர்ந்த திரு. இல. கணேசன் பேசியுள்ளார்.

நினைவு கொள்ளுங்கள், நடைபெற்ற நிகழ்ச்சியோ இலக்கியத் தொடர்புடையது;

அரசியலுக்கு அப்பாற்பட்டது. அத்தகு கூட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தாம் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தமேடையைப் பயன்படுத்திக் கொண்டது அரசியல் நாகரிகமா? அல்லது அருவருப்பின் அடையாளமா?

இந்தப் பிஜேபியினர் தார்மீகம், பண்பாடு பற்றி யெல்லாம் பலபட பரக்கப் பரக்கப் பேசக் கூடியவர்கள் தாம். இவை எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமாக இருக்குமே தவிர, தங்களுக்கென்று வருகிறபோது அவையெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்.

காரணம் இவர்கள் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் ஆயிற்றே! அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்ற ஒரு பழமொழி உண்டு.

இலக்கிய வட்டத்துக்குள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வேலை என்ன? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வேண்டுமென்றே தான் இல. கணேசன் பெயரைத் திணித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாதா இது தேர்தல் நேரம் - அரசியல்வாதிகளை அழைத்தால் இலக்கிய வட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று?

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை பொது மக்கள் பொதுவாக என்ன நினைக்கக்கூடும்? பி.ஜே.பி.யோடு சம்பந்தப்படுத்தித் தானே பார்ப்பார்கள்?

பிஜேபியைச் சேர்ந்த (அவர் ஒரு வேட்பாளரும் கூட!) இல. கணேசனுக்கு அந்த இலக்கியவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? அப்படி பதில் சொல்ல ஆரம் பித்தால் அந்த மேடையின் நிலை என்ன? ஏற்பாட்டா ளர்களின் நிலை என்னாகும்? பார்வையாளர்கள் பகுதியும் இரண்டுப்பட்டு படுமோதல் வெடிக்காதா?

அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இலக்கிய வாதிகளுக்கு இது ஓர் அனுபவமாகக்கூட இருக்கலாம்; எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் யார்? அவர்களின் தன்மை என்ன? யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் முன்ன தாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி இல்லாமல் யார் கூப்பிட்டாலும் போய் விடுவது என்ற நிலைப் பாட்டைக் கொண்டால் அவர்களுக்குத்தான் தர்ம சங்கடமும், அவப் பெயரும் ஏற்படும்.

தினமணி ஏட்டுக்காவது ஓர் இங்கிதம் இருக்க வேண்டாமா? இலக்கிய விழாவில் ஓர் அரசியல் வாதியின் பேச்சை மட்டும் அய்ந்து பத்தி தலைப்புப் போட்டு, அவர் பேச்சை மட்டுமே வெளியிட்ட தன்மைக்கு புத்திக்குப் பொருள் என்ன?

தினமணி என்பது பிஜேபிக்கு அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படும் ஒரு மேடையாக ஆகிவிட்டது என்றே மற்ற கட்சி அரசியல்வாதிகளும், பொதுவாக பொது மக்களும் தெரிந்து கொள்வார்களாக!

பார்ப்பனர்கள் பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடிப்பதில் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லையே, இதனைப் பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிஜேபியின் வெற்றி என்பது பார்ப்பனர்களின் வெற்றி, அவர்களின் ஆதிக்கத்துக்கான முழு முயற்சி என்பதை வாக்காளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வார்களா?

தமிழ் ஓவியா said...


மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா

போபால், ஏப்ரல்.1- நாட்டின் இதயப் பகுதியாகிய மத்திய பிரதேசத்தில் பாஜக வுக்கு, மோடிக்கு சவாலாக மத்தியப் பிரதேச மோர்ச்சா என்கிற அமைப்பு உருவாகி உள்ளது. பாஜகவிலிருந்து அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களால் ஒருங்கிணைக்கப் பட்ட ஓர் அமைப்பாக மத்தியப் பிரதேச மோர்ச்சா உருவாகிறது. சத்தீஸ்கர் அல்லது குஜராத் போலன்றி மோடியின் எதிர்ப் பாளர்கள் அணி மத்தியப்பிரதேசத்தில் வலிமையாக உள்ளது.

மும்முறை வெற்றிபெற்ற முதல்வ ரான சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமை யிலான ஆட்சியின்மூலம் கட்சிக்கு வலிமையும் இருப்பதாக சொல்லப்பட் டாலும், கட்சியில் அதிருப்தியாளர்கள் பிரிவு உருவாவதை தவிர்க்க முடிய வில்லை. ஜான்சி தொகுதியில் போட்டி யிட்ட உமாபாரதி, பாதுகாப்பான தொகு தியாகக் கருதி போபாலில் போட்டியிட விரும்பிய அத்வானி, அவரைத் தொடர்ந்து கட்சி மூத்தத் தலைவரான சுஷ்மாசுவராஜ் ஜான்சியில் போட்டியிட விரும்புகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள்நிலை குறித்து கூறும்போது, சவுகானுக்கு முழு ஆதரவாக இருப்பினும், மோடி எதிர்ப்புத் தோற்றம் தெரியாதவாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

சுஷ்மாசுவராஜ் துணைப்பிரதமர் என்று பேசி தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திர பட்வா அவர்மட்டுமே கட்சித் தொண்டர்களை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைப்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, விடிஷா தொகுதியில் வரலாற்றில் வாஜ்பாய், சவுகான் மற்றும் பலரும் தொடர்ந்து வெற்றிபெற்று, உயர் பதவிகளை அடைந் ததாலும், முதல்வராகவும், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்ப தால் சுஷ்மாசுவராஜ் துணைப் பிரதம ராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினேன் என்றார்.

எப்படியானாலும், கட்சியால் சுஷ்மா சுவராஜ் துணைப் பிரதமராக ஆக்கப் பட்டாலும், ஆக்கப்படா விட்டாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாத தலைவரா வார். அவர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் நன்கு செய்துள்ளார். இவை யாவும் அவருக்கு சாதகமாக உள்ளன.

அம்மாநில பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில் மோடி கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதற்கு முன்னதாக சவுகான் டிவிட்டரில் வெளியிட்ட தகவல் குறித்து தன் கருத்தை சுஷ்மாசுவராஜ் வெளியிட் டது மட்டுமே எதிராகி உள்ளது.

பாஜகவில் தங்களைத் தாங்களே தலைவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் இருக்கின்றபடியால், கட்சியைச் சேர்ந்த தொண்டர்கூட மிகவும் கவனமாகவே தேர்தலையொட்டிப் பேச வேண்டி உள்ளது. ஒன்றுபட்டு இருப்பதான தோற் றத்தையும் அளிப்பது அவசியமாகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, போபாலில் அத் வானி போட்டியிட்டிருந்தால் மகிழ்ந் திருப்போம். ஆனாலும், அத்வானி ஏன் போபாலில் போட்டியிடவில்லை என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரம் எனக்கில்லை. பாஜகவின் தேர்தல் குழு வைத்தான் இதுகுறித்து கேட்க வேண் டும் என்றார். போபால் உள்ளுர் பாஜக தலைவர் மாநிலத்தில் கட்சியினரை ஒருங்கிணைப் பதில் முனைப்பும், முயற்சியும் இல் லாததாலேயே மத்திய பிரதேச மோர்ச்சா அமைதியான வழியில் தன் பணியைத் தொடர்கிறது. அதேபோல் மோடியின் படத்தைக் காட்டிலும், போஸ்டர்களில் பெரிய அளவில் முதலமைச்சர் சவுகான், சுஷ்மா சுவராஜ் படங்கள் இடம் பெற் றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்து வதைப்போல் பிற மதங்களுக்கு எதிரான முழக்கங்கள் மத்தியப்பிரதேசத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரைப் பயன்படுத்துவதால் மாநிலத் தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போபால் நாடாளுமன்ற உறுப்பினரான கைலாஷ் ஜோஷி மூத்த தலைவரான அத்வானிக்கு பாதுகாப்பான தொகுதி போபால் என்று மாநில பாஜகவால் உருவகம் செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மோடியிடமே மனு போட்டுக் காத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதல்ல என்றார். மேலும், அத்வானி யிடம் போபாலில் போட்டியிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதையே தானும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், கட்சியின் முடிவு அத்வானி காந்திநகரில் போட்டியிடவேண்டும் என்கிறது. பாஜ வின் ஒழுங்கமைந்த தொண்டர்கள் கட்சித் தலைமையை எதிர்க்க முடியுமா? என்றார்.

- தி எகனாமிக் டைம்ஸ் டில்லி பதிப்பு 29-3-2014

Read more: http://viduthalai.in/page-2/77937.html#ixzz2xgf7iUOg

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி யோக்கியதை?


- குடந்தை கருணா



போலியோ முற்றிலுமாக இந்தி யாவில் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்தி வந்துள்ளது. ஆனால், குஜராத் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தில் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட வில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை நவ்சர்ஜன் டிரஸ்ட் என்கிற மனித உரிமை அமைப்பு, அமெரிக்க நிறு வனமான ஈஸ்ட் வெஸ்ட் நிர்வாக நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் துகளுக்கு இந்த போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை; பெரும் பாலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், துப்புரவு பணியிலும் இந்த வால்மீகி பிரிவினர்தான் பெரும் பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பு சக்தி மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், போலியோ பாதிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விழுக்காடு குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது எனும் தகவலை விக்கிபீடியா இணைய தளம், புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு, 81 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது என தகவல் தந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்றால் குஜராத் தான் என ஊர்தோறும் முழங்கி வரும் மோடி ஆளும் குஜராத்தில் என்ன நிலைமை தெரியுமா? 45 விழுக்காடு மட்டுமே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு, 19ஆம் இடத்தில் உள்ளது என விக்கி பீடியா இணைய தளம் புள்ளி விவரம் தந்துள்ளது. போலியோ இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவு செய்து வரும் நிலையில், குஜராத்தில், தலித் குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் வராத மோடி அரசு தான், வளர்ச்சிக்கு உதாரணமா?

இந்த குஜராத் வளர்ச்சியைத் தான், நம்மூர் பாஜக கம்பெனியில் சேர்ந்திருக் கும் மோடி ஏஜெண்டுகளாக திகழும் வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் வர வேற்கின்றனர். எப்படி? போலியோ ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழும் தமிழ் நாட்டை, 19-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் போல, கீழே தள்ளுவதற்கு, இந்த அணியினர் துடிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, கீழே தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/77940.html#ixzz2xgfSSc2w

தமிழ் ஓவியா said...


மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்


போச்சம்பள்ளி, ஏப். 1- கிருஷ்ணகிரி நாடாளுமன் றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அரசம்பட்டி யில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், வேலம்பட்டி யில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் காவேரிப்பட்ட ணம் பேருந்து நிலையம் அருகேயும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அரு கிலும் நடந்த தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டங்களி லும் பேராசிரியர் க.அன்பழ கன் பேசினார்.

தி.மு.க. தலைவர் கலை ஞர் ஒவ்வொருமுறை ஆட் சிக்கு வரும்போதும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவேண்டும் என்று கலைஞர் இலவச வேட்டி-சேலை திட்டத் தைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா, வங் காளம், ஒரிசா போன்ற மாநி லங்களில் இருந்து இலவச வேட்டி-சேலைகளை வாங்குகிறார்.

இதில் கமிஷன் பெறுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் நெசவாளர் மற்றும் விவ சாயிகளுக்கு சலுகையில் 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டது. இதை ஜெயலலிதா நிறுத்திவிட் டார். சென்னை கிண்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூல கத்தை பார்த்து வெளிநாட்டி னரே பாராட்டினர். ஆனால் அதையும் முடக்கிவிட்ட னர். செம்மொழி ஆராய்ச் சிப் பணியும் முடக்கப்பட் டுள்ளது. மதச்சார்புள்ள மோடியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செங் குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுக வனம் எம்.பி., தொகுதி தேர் தல் பொறுப்பாளர் பனமரத் துப்பட்டி ராஜேந்திரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/77965.html#ixzz2xggMgSuP

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

- (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77934.html#ixzz2xgiV4nWv

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...


மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேசுகிறாரா விஜயகாந்த்?

தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் பெரியார் என்றால், அது தந்தை பெரியார். குஜராத்தில் வெண்தாடி வேந்தர் மோடிதான்!

- இப்படிப் பேசி இருக்கிறார் சினிமா நடிகர் விஜயகாந்த்.

அரசியலிலே நிதானமின்றி அவர் எப்படி யாவது உளறித் தொலைக்கட்டும்!

சமுதாயப் புரட்சி வீரரான ஒரு சகாப்த தலை வர்பற்றி வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கலாமா?

பாலும், நஞ்சும் ஒன்று என்று பேசலாமா?

கோட்சேயும், காந்தியும் ஒன்றே என்று கூறலாமா?

எலியும், பூனையும் இணையற்ற நண்பர்கள் என்று உளறலாமா?

பெரியார் யார்?

பேதங்கள் எந்த வடிவில் இருந்தாலும், அவற் றைப் பூண்டற்றுப் போகச் செய்யவேண்டும் என்று வெடித்துக் கிளம்பிய புரட்சியாளர் அல்லவா!

மனிதநேயத்தை வளர்த்த மாமனிதர் அல்லவா!

யானைக்கு மதம் பிடித்தாலும் சரி, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் சரி, இரண்டும் ஆபத்தே என்று அறிவுறுத்திய அறிவுலக ஆசான் அல்லவா பெரியார்!

அவரைப் போய் நரவேட்டை மனிதன் நரேந்திர மோடியுடன் ஒப்பிடலாமா?

மதவெறியர் மோடி! மனித நேயர் பெரியார்!

மனநோயாளிகளைத் தவிர இவ்விருவரையும் வேறு யாரால் இப்படி ஒப்பிட முடியும்?

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகவிருந்த ஹிட்லர் அல்லவா இந்த மோடிமஸ்தான்!

மதவெறிக் கலவரத்தில் மருண்டு உயிருக்குப் பயந்து முகாம்களில் பதுங்கிக் கிடந்த முஸ்லிம் களைப் பார்த்து குழந்தை உற்பத்தி வேலையில் இறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஈவிரக்க மற்ற முறையில் விமர்சித்த விஷமத்தின் ஊற்றுக் கண்ணல்லவா மோடி!

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்துக் கள் அலிகள் அல்ல - ஆண்மை மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என்று காட்டுமிராண்டிக் கருத்தை உதிர்த்த மோடி எங்கே?

சமூகநீதியின் தந்தை பெரியார் எங்கே?

சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பி.ஜே.பி.யின் பிரதிநிதி யல்லவா மோடி எங்கே?

உலக மக்களை எல்லாம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற பார்வையில் பார்த்து மனித நேயத்தையும், பகுத்தறிவையும் போதித்த புத்தரின் மறுவடிவமாம் தந்தை பெரியாரை விளையாட் டுக்குக்கூட இப்படி ஒப்பிட்டுப் பேசலாமா?

நிதானம் இழந்து பேசும் விஷம விளையாட்டு வேலைகளையெல்லாம் அரசியலோடு நிறுத்திக் கொள்ளட்டும்! கருஞ்சட்டைப் படையினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
ஏன்?

தந்தை பெரியார்பற்றி பொறுப்பற்றுப் பேசுவதை தமிழ்நாட்டு மக்களே பொறுத்துக் கொள்ளமாட்டார் கள். பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சு! அடக்கப்பட்ட மக்களுக்காக பொங்கி எழுந்த அரிமா!

சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும் வித்தி யாசம் தெரியாத வெண்ணெய் வெட்டி வீரர் கள் விபரீதத்தை ஏற்படுத்தும் வார்த்தை களைக் கொட்டவேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/e-paper/77998.html#ixzz2xmXJFmLY

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்ஜியம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்ஜியம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 24.1.1926)

Read more: http://viduthalai.in/page-2/78006.html#ixzz2xmdIoEk4

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?

தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.

இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.

நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)

குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK

தமிழ் ஓவியா said...


சொன்ன ஞாபகம் இல்லையோ...


திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் சுகந்தி (வயது 28) மகள் மேனகா (வயது 8), மகன் ஹேமசந்தர் (வயது 7) மூவரும் கிணற்றில் விழுந்து வறுமையால் தற்கொலைசெய்து கொண்டனர் என்பது செய்தி.

இன்றைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் மிக முக்கிய சாதனை இது. இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது 8 ஆண்டுகளுக்கு முன் நம் ஞாபகம் சென்றாக வேண்டும். திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஆதிச்சபுரம் என்னும் கிராமம். பட்டினியால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி (இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்ன பொழுது - முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு வெடித்துக் கிளம்பியது கோபத் தீ!

என்ன சொன்னார் முதல் அமைச்சர் தெரியுமா?

மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலை திரும்பத் திரும்ப சொல்லி எனது அரசுக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன். பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால் மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என கேட்டாரே பார்க்கலாம்.

என்னே மனிதாபிமானம் பார்த்தீர்களா?

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஜனசக்தி 19.3.2006 அன்று என்ன எழுதியது தெரியுமா?

குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி ஒரு பட்டினிச்சாவு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முதல் அமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால் அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம், போற்றலாம். மாறாக மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா? என்று அன்று ஜனசக்தி எழுதியதே.

அத்திப்பட்டுக் கிராமத்தில் இரு குழந்தைகளோடு ஒரு தாயும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறாரே - அதே கேள்வியையே இன்றைக்கு கேட்க வேண்டாமா?

சிந்திப்பீர் வாக்காளர்களே!

Read more: http://viduthalai.in/page-8/78013.html#ixzz2xmeHt2IM

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் வாக்காளர் கள்பற்றிய ஒரு தகவல்:

30-39 வயதுள்ள வாக் காளர்கள் 1.34 கோடி

40-49 வயதுள்ள வாக் காளர்கள் 1.15 கோடி

50-59 வயதுள்ள வாக் காளர்கள் 83 லட்சம்

60-69 வயதுள்ள வாக் காளர்கள் 55 லட்சம்

இது தேர்தல் ஆணையம் அளித்துள்ள புள்ளி விவரம்.

இல்லை

உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வில்லை.

சீசரின் மனைவி...

தமிழக அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சிறிய பேருந்துகள், விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய் யப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றத்திற்கு ஆளும் தரப்பில் அது எடுத்துச் செல்லப்பட் டது. நீதிமன்றத்தின் ஆணைப் படி சிறிய பேருந்துகளில் இரட்டை இலை நீக்கப்பட் டது. இப்பொழுது குடிநீர் பாட்டிலிலும் இடம்பெற் றுள்ள இரட்டை இலையை நீக்குவது குறித்துத் தலை மைத் தேர்தல் ஆணையத் திடம் ஆலோசனை கேட் டுள்ளதாக தமிழ்நாடு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

இதில் ஆலோசனை கேட் பதற்கு என்ன இருக்கிறது? சுவரில் எழுதும் தேர்தல் சின் னத்தையே அனுமதிக்காத தமிழகத் தேர்தல் ஆணையம், அரசு விற்கும் குடிநீர் பாட்டி லில் சட்ட விரோதமாக இரட்டை இலை இடம்பெற்றி ருப்பதை நீக்குவதற்கு எண் பேராயத்தைக் கூட்டித்தான் முடிவு செய்யவேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

சீசரின் மனைவி சந்கேத் திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்துமே!

அ.தி.மு.க. கலக்கம்!

அவாள் ஏடான தின மலரே இன்று வெளியிட் டுள்ள கருத்தும் தகவலும் அ.தி.மு.க. அணியின் தற் போதைய நிலவரம் - கலவ ரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரச்சாரத்தைத் தொடங் கும்போது இருந்த நிலை வேறு - இப்பொழுதுள்ள நிலை வேறு.

நிலைமை தலை கீழாக மாறிவிட்டதால், அ.தி. மு.க. கலக்கத்தில் இருப்பதாக தினமலர் எழுதியுள்ளது.

(அ.தி.மு.க. விழிப்போடு இருக்கவேண்டும் என்று தினமலர் அக்கறையோடு கொடுக்கும் சமிக்ஞை இது!)

கறுப்புப் பணம்

மக்களவைத் தேர்தலை யொட்டி வெளிநாடுகளில் தூங்கும் கறுப்புப் பணம் என்ற பூனைக்குட்டி (அதிகம் இல்லை ரூ.23 லட்சம் கோடி தான்) இந்தியா திரும்புகிற தாம்! வாக்குகளை விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்களோ! எச்சரிக்கை!!

தாவலோ, தாவல்!

கருநாடகத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கா ததால், எடியூரப்பாவின் கூட் டாளிகளான லட்சுமி நாராய ணன் மற்றும் நிருவாகிகள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். நடிகை லட்சுமி தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால், மதச் சார்பற்ற ஜனதா தளத்தி லிருந்து விலகி, பி.ஜே.பி.,க்குத் தாவினார்.

சென்னப் பட்னா தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. யோகேஷ் வர் காங்கிரசுக்குப் போனார். முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மகிமா பட்டேல் காங்கிரசு சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார்.

சீட்டுக் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் சீட்டைக் கிழித்துவிட்டு, சீட்டைத் தேடித் தாவ ஆரம்பித்து விட் டனர். இவர்கள் மேடைகளில் ஏறிக் கொள்கை முழக்கம் செய்வார்கள் பாருங்களேன்!

Read more: http://viduthalai.in/page-8/78017.html#ixzz2xmeQQ4ev

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்


ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.

அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!

தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.

1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?

2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!

3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?

தமிழ் ஓவியா said...

4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!

5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:

அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?

6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!

தமிழ் ஓவியா said...


ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?

தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?

7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!

லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?

கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?

இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.

அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?

சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?

மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கமலைப் பிறாண்டும் பூணூல்கள்


கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.

நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?

கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?

நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!

இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

கருத்து


தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.

- நிமல்கா பெர்னாண்டோ,
இலங்கை மனித உரிமைப் போராளி

மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.

- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

- டாக்டர் சாந்தா,
சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?


இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!

குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.

ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.

வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.

ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.

மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:

ஆண்கள் 63..12, பெண்கள் 64.10

பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!

இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.

8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.

மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :

குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் சுளீர்

செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.

- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)

தமிழ் ஓவியா said...

சில்லறை யு(பு)த்தி



கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!

தமிழ் ஓவியா said...

ஜாதகம் அது பாதகம்


இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.


என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.

பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


ஆண்டவரும்
அளவுகோலும்!

நான் எப்போதும்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்று சொன்ன
என் ஆண்டவரே!
அனைத்தையும்
சுனாமி வந்து சுருட்டி
வாயில் போட்டுக்கொண்டுவிட
தனிமரமாய்
தன்னந்தனியே தவிக்கிறேனே!
நெஞ்சிலே நஞ்சை வைத்து
நாவிலே தேனைத் தடவி
நயவஞ்சகமாய்ப் பேசி
நம்பவைத்துக் கழுத்தறுப்பது
தனிமனித ஒழுக்கக்கேட்டின்
அடையாளம் மட்டும்தானா?
ஆண்டவராகிய உமக்கு - அந்த
அளவுகோல் கிடையாதா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா



மகாத்மா மண்ணில்
மதம் எனும் மலத்தை
தேர்தல் களமாய்
தின்னுகின்றன
நாகரிகப் பன்றிகள்

செய்திகளும் தின்பண்டங்களாக
தின்னுகின்றன மாயைகளை...
(மோடி... மோடி
ஜாடி... ஜாடி)

ஜனநாயகம் என்னும் குடிசையை
அயோத்திய அனுமான்கள்
தீவைக்கின்றன...
மீண்டும்
பதாகை ஆட்சி
வேண்டுமென்று...

நம் இராவணனின் விபீசனர்கள்
கூட்டாஞ்சோறு எனும்
தேர்தல் பந்தியில்
பாத்தி கட்டுகிறார்கள்

இந்திய வாக்காளனுக்கு
நோட்டா எனும்
வாக்குச் சீட்டில்
வாக்குச் சாவடி

ஜனநாயகமே
உனது மறுமலர்ச்சி
எப்போது?

- சின்னவெங்காயம், சென்னை

தமிழ் ஓவியா said...

நீங்களே சொல்லுங்க சார்....!


- டான் அசோக்

ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.

அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.

ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.