Search This Blog

14.11.13

புராணங்களும், இதிகாசங்களும் கடவுளை உயர்த்திப் பிடிக்கின்றனவா?கீழ்த்தரமாக வருணிக்கின்றனவா?


புராணங்களும், இதிகாசங்களும் உண்மையிலேயே கடவுளை உயர்த்திப் பிடிக்கின்றனவா? அல்லது கீழ்த்தரமாக வருணிக்கின்றனவா என்பது, மில்லியன் டாலர் கேள்வியாகும்.

மனிதன் தன் பல கீனங்களை, தன்னால் படைக்கப்பட்ட கடவுளின் மீது ஏற்றிப் பாடுகிறான் என்பதுதான் உண்மை.

ஒழுக்கத்தைப் போதித்த புத்தனை, அவரது மார்க்கத்தை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் பிண்டம் பிடித்ததுதான் இந்த ஒழுக்கங்கெட்ட கிருஷ்ணன்.

மனிதன் எவற்றைச் செய்தால் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதோ, அவற்றை எல்லாம் கடவுள் செய்தார் என்று கூறி, ஏற்றிப் போற்றிப் பாடுவது எதன் அடிப்படையில்?

மாலாய் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதரக் கண்டீரே

என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடுகிறாள்.

ஏலாப் பொய்கள் உரைப்பானை என்றால் என்ன பொருள்? வாயில் வருவதெல்லாம் பொய் - இப்படி ஒரு கடவுள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளிகளில் ஏதாவது விழா என் றால், இந்தக் கிருஷ்ணன் வேடம்தான் - ஆடல் பாடல் தான்.

பள்ளியில் இப்படிப் பொய்யை விதைத்தால் அந்த மனித மரம் எதைக் காய்த்துக் கொடுக்கும்?

கோகுலத்தில் கண் ணன் ஆய்ச்சியர் வீடு களில் புகுந்து வெண்ணெயைத் திருடுவான்.

ஓர் ஆய்ச்சியரிடம் வசமாகச் சிக்கிக் கொண் டான்.

காதைத் திருகிக் கேட்டபோது, பகவான் கண்ணன் என்ன சொல் லுகிறான்?
எதைத் திருட வந்தாய்? வெண்ணெயையா? நெய்ச் சீடையையா? என்று கேட் கிறாள்.

கண்ணன் என்ன சொல்லுகிறான்? தாயே என் வீடு என்று தவறாக வந்துவிட்டேன்! என்று புளுகினான். இதை நம்ப மாட்டேன்... உண்மையைச் சொல்லு என்று காதை இறுக்கித் திருகினாள்.

அம்மா பிருந்தாவனத்தில் நான் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந் தேன். ஒரு கன்றுக் குட்டி யைக் காணவில்லை. ஒருக் கால் இந்தப் பானைக்குள் ஒளிந்திருக்கிறதோ என்று எண்ணிக் கையை விட்டுத் துழாவினேன்! என்றான்.
இது மழலைப் பொய்யாம்; அதனால்தான் ஏலாப் பொய்கள் உரைப்பானை என்று ஆண்டாள் பாடி னாளாம்.

முளைக்கும்போதே இவ்வளவுப் பொய். இவன் தான், நம் கடவுள். அது சரி கடவுளே, பொய்தானே!

--------------------- மயிலாடன் அவர்கள் 13-11-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக்குப் பதில் ஜாதி!



மற்ற மற்ற கட்சிகள் மாநாடு நடத்தித் தீர்மானங் களை நிறைவேற்றுவதற்கும், திராவிடர் கழகம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் அடிப்படை யிலே வேறுபாடு உண்டு.

அடிப்படைப் பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சூறாவளியாக இருக்கக்கூடியவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்.

சமூகத்தைப் பீடித்த பெருநோய் ஜாதி என்பதை மறுக்கவும் முடியுமா? மனித சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு, மாண்புக்குரிய மனிதத்தை - பகைப் புலமாக மாற்றிக் கேட்டினைச் செய்தது ஜாதிதானே!

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமை - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்புவது திராவிடர் கழகம்தானே!

மனித சக்தி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக திசை திருப்பி, ஒருவருக்கொருவர் மோதலை உண்டாக் குவது எவ்வளவுப் பெரிய கேடு!

இந்தச் சமூகம் சீர்குலைந்து போனதற்கும், வறுமைக்குழியில் வீழ்ந்ததற்கும் முக்கிய காரணமே இந்த ஜாதி முறை சமூக அமைப்புதானே!

வறுமைக்கோட்டுக்குக் கீழே பெரும் அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாக்கப்பட்டதற்குக் காரணம், பிறவியின் அடிப்படையில் அவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதுதானே!

இந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை ஒழிந்துவிடுமா?

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவுதானே! ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்துவது போல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு (9.11.2013) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜாதி ஒழிக்கப்பட்டால் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் என்ற நிலைப்பாடும் நிர்மூலம் ஆகிவிடாதா?

கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாமா? இது ஜாதியை வளர்க்காதா? என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாசு கட்டி முண்டா தட்டும் பேர்வழிகள், சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்குக் கைதூக்கட் டுமே பார்க்கலாம்.

இதுபற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கருத்துக் கூறி இருக்கிறார் என்றால், சிலருக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல (திராவிட நாடு, 30.5.1943) என்று கருத்துக் கூறியுள்ளாரே!

இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு தம்ளர் கள், இன்னும் ஜாதி அடிப்படையில் சுடுகாடுகள், ஜாதியின் அடிப்படையில் திருமணங்கள் என்கிற மனிதத்துவத்திற்கு விரோதமான நடவடிக்கை களை அனுமதிப்பது கேவலம் அல்லவா? மனிதன் பகுத்தறிவுவாதி என்ற அடையாளத்துக்கு இது அழகல்லவே!

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மற்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு செல்லுவதைவிட தமிழ்நாட்டிலிருந்து செல்லுவது தானே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.

காரணம், இங்குதானே சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திக் காட்டினார். பத்தாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டின் இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சிகளைக் கடந்து சிந்திப்பார்களாக!
13-11-2013

தமிழ் ஓவியா said...


ஒ, அப்படியா


பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு.

- எச். ராஜா (தமிழக பா.ஜ.க., துணைத் தலைவர்)

காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா போகலாமா - போகக் கூடாதா என்று முடிவு செய்யக் கூடிய கூட்டத்தில் எந்தவித மான முடிவையும் எடுக்க முடியாமல் கூடிக் கலைந்த வர்களா இப்படியெல்லாம் பேசுவது?

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த்: பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோன் பேயர்ட் குறிப்பிடடுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 நாட்டுத் தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனடா நாட்டுப் பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி மீது அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!


வாஷிங்டன், நவ.14- கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. வருத்தத்திற்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.

அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுன்டான் ஆகியோர் ஊட கம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த காந்தியார், பல மதங்கள் நிலவும் சமூகத் தில் சகிப்புத் தன்மை யுடன் கூடிய தொலை நோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கி யத்துவம் அளித்தார். வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது? மதச் சுதந் திரத்திற்கா? மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்குப் பதிலளிக்கும்.

கலவரத்தைத் தடுப்பதில் இந்தி யாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திரமோடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர் தான் முதல்வராக இருந்தார்.

மோடி தலைமையி லான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை, குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழி பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித் துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத் துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெ ரிக்க வெளியுறவுத்துறை 2005ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.

எம்.பி.க்கள் கடிதம்

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி வித்துள்ளது. வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...


குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.14- வெளிப்படை யான குற்ற வழக்குகளில், உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜியா பாத்தை சேர்ந்த லலிதகுமாரி என்ற பெண், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை சீர்திருத்தம் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண் டும் என்று மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப் பட்டது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரம் வருமாறு:

ஒரு குற்றம் தொடர்பான புகாரில், குற்றம் நடந்திருப்பதை வெளிப்படை யாக உணர்ந்து கொண்டாலே, காவல் துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியமாகும்.

அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத்தவறும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை. மற்ற புகார்கள் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற புகார்களில், ஆதாரங் களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குற்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. எனவே இனி காவல் நிலையங் களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, இரு தரப்பினரையும் காவல் நிலையங்களிலேயே அழைத்துப் பேசி தீர்வு காண்பது (கட்ட பஞ்சாயத்து) போன்ற செயல்களில் இனி ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டாமையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த சாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் சாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்ற கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்; ஆனால் என் சாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த சாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாபத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமையைத்தான் அடியோடு தகர்த்தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி சி.பி.அய். இயக்குநர்


சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்த கருத்து இந்தியா முழுமையும் சர்ச்சை அலைகளை எழுப்பி விட்டது.

ஓட்டல்களில் சூதாட்ட விடுதிகள் செயல்படு கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி சீட்டு களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூதாட்டம் பாலியல் வன்முறை போன்றது. அதைச் சட்டத்தால் தடுக்க முடியாது; தடுக்க முடியாவிட்டால் அனுப வித்து மகிழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள்தான் பெரும் பிரச்சினை யாகியுள்ளன.

மிகப் பெரிய அதிகாரம் மிக்க பதவியில் உள்ள ஒருவர் பொறுப்பாக சிந்தித்து, பொறுப்பாகப் பேச வேண்டும்.

யாரோ சாலையில் போகிற பாமர மனிதன் அல்ல; - சி.பி.அய். இயக்குநர் - அதுவும் சி.பி.அய். பொன் விழா நிகழ்ச்சியில் இப்படிப் பேசி இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைபற்றி பெரிதாகப் பேசப்படும் காலத்தில், அதற்குக் காரண மானவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றெல்லாம்கூட கருத்துகள் கூறப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாவிட்டால் அனுபவித்து மகிழ வேண்டியதுதான் என்பது எவ்வளவுக் கீழ்த்தரமானது!

ஆண் வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற பெண் இயல்பான பாலியல் உறவில் அடையும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது சாத்தியமானதுதானா? மெத்த படித்த இந்த மேதாவிகள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்? ஒரு வக்கிரப் புத்தியோடு சொல்லப்படுகிற கருத்தாகத்தான் இதனைக் கருத முடியும்.

கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டிவிட்டு அவர்களைத் தேவர்களுக்கு அடியார்கள் என்று கூறி வந்தார்கள்.

கோயில் திருவிழாக்களில் ஆடிப் பாடி மகிழ்விப்பது மட்டுமல்ல; மற்ற மற்ற நேரங்களில் அந்தப் பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப் பட்டார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

அப்படி அவர்கள் இருப்பது கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று கூறப்பட்டதுண்டு. அதை எல்லாம் புறந்தள்ளி நீதிக்கட்சி ஆட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால் தேவதாசி முறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டது.

பெண்கள் என்றால் காமப் பதுமை என்று நினைக்கும் ஓர் இந்துத்துவ மனப்பான்மை இந்த நாட்டில் உண்டு. பெண்களை உயிருள்ள மானுடக் கூறு என்று கருதுவதில்லை. அதனால் தான் படித்தவர்கள்கூட, உயர்ந்த பதவிகளில் இருப்ப வர்கள்கூட, பெண்களைத் துச்சமாக, கொச்சைப் படுத்தும் தன்மையில் விமர்சித்து வருகிறார்கள்.

திருவாளர் சோ, ராமசாமி அய்யரின் துக்ளக் இதழைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு, ஒரு உண்மை விளங்காமல் போகாது.

பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் அவரை அடித்துக் கொள்ள இன்னொருவர் இருக்க முடியாது.

சி.பி.அய். இயக்குநர் ரஞ்சித்சின்காவை விமர் சிக்கிறவர்கள்கூட, துக்ளக்கில் பெண்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் சோ போன்றவர்களை, விமர்சிப்பதில்லை கண்டிப்பதும் இல்லை. ஒருக்கால் சோ அவ்வளவு முக்கியமான பேர் வழியா என்று நினைக் கிறார்களோ என்னவோ!

பெண்கள் என்றால் வில்லிகள்போலத் தானே நம் நாட்டு சின்னத் திரைகள் சித்தரிக்கின்றன; அப்படி இல்லாவிட்டால் சதா அழுது கொண்டு இருப்பவர்களாகவும் வசவுக்கும், அடிக்கும் ஆளாகுபவர்களாகவும் தானே சித்தரிக்கிறார்கள்.

இதனை எதிர்த்து பெண்கள் அணி திரண்டு எழ வேண்டாமா? பெண்ணுலகம் சிந்திக்கட்டும்! செயல்படட்டும்!!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சாதி


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


மோடி தமாஷ்!


அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்; அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்! - மயிலாடன்மோடி தமாஷ்!

அடுத்த பிரதமர் மோடி தான் - ஆம் மோடிதான்! மோடியேதான்! இப்பொ ழுதே எழுதி வைத்துக் கொள்க! என்கிற ரீதியில் நீட்டி முழங்கிப் பிரச்சாரம் செய்ய வாடகை ஒலி பெருக்கிகள் ஏராளமாகப் புழுத்துப் பெருகி விட்டன.

மோடி மேடையில் பேசும் போக்கைக் கவனிப்பவர் களுக்கு ஒன்று தெளி வாகவே புரியும். ஒரு பிரத மருக்கான வேட்பாளர் என்ற பெருங் குணமோ, பண்போ, அடக்கமோ, இன்சொற்களோ அதில் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பேட்டை தாதா தோற்று விட வேண்டும்;

அந்த அளவுக்கு முகம் முறுக்கேற கண்கள் சிவக்க, மேடையையே தண்டால், பஸ்கி எடுக்கும் இடமாகக் கிடுகிடுக்க வைக்கிறார்; ஒருக்கால் கோட்சே உயிருடன் இருந் தால் இந்தப் பாணியில்தான் இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பேச்சிலாவது தெளி வான கருத்தோ, சிறப்பான தகவல்களோ உண்டா என் றால் எந்த மண்ணாங்கட்டி யும் கிடையாது.

உளறல் திலகம் என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம். வேதாரண்யத் தில் உப்பு சத்தியாக்கிரகத் திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார் என்கிற ஜோக் குகளையெல்லாம் பின் னுக்குத் தள்ளும் வண்ணம் சமீபத்தில் பேசி இருக் கிறார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசிய சிந்த னையை வளர்க்கும் வகை யில் லண்டனில் இந்தியா ஹவுஸ் அமைப்பை ஏற்படுத் தியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் இந்தியப் புரட்சியாளர்களின் குரு என்று கருதப்படுகிறார். 1930ஆம் ஆண்டு உயிரி ழந்த சியாமா பிரசாத் முகர்ஜி, தனது அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து இந்தியா சுதந்திரம் பெற் றதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியி ருந்தார் குஜராத்தின் பெருமை மிகுந்த மைந்தன் சியாமா பிரசாத் முகர்ஜி என்று இடி முழக்கம் செய்தாரே பார்க்கலாம்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பிறந்தது குஜராத் தில் அல்ல; அவர் பிறந்தது கொல்கத்தாவில் -அவர் உயிரிழந்ததோ 1953ஆம் ஆண்டில் - மோடி சொன் னது போல 1930ஆம் ஆண்டில் அல்ல.

இதில் என்ன வேடிக்கை என்றால் அவரால் சொல் லப்பட்டதெல்லாம் சியா மாஜி கிருஷ்ணவர்மா என்ற குஜராத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரைப் பற்றி; ஆனால் அவர் குறிப்பிட்டதோ அவருக்குச் சம்பந்தமேயில்லாத சியாமா பிரசாத் முகர்ஜியை.

எப்படி இருக்கிறது! எத் தகைய அறிவு ஜீவி இவர். இவரைத் தவிர வேறு யாராவது இப்படி உளறியி ருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் செய் திருக்கும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளர் ராஜபக்சே அமெரிக்க நாடாளுமன்றக் குழு கண்டனம்


அமெரிக்கப் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இல்லினாய் மாநில மக் களாட்சிக் கட்சி உறுப் பினர் டேனி டேவிசும், ஒகையோ மாநில குடிய ரசுக் கட்சி உறுப்பினர் பில் ஜான்சன் அவர் களும் இணைந்து நவம் பர் 12, மாலை 2 மணிக்கு அமெரிக்க நாடாளு மன்ற இலங்கை இன, விடுதலைக் குழுவைத் தொடங்கி வைத்தனர்.

தொடக்கத்தில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் முன் னாள் அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்சு காட்டமாக வெற்றித் திமிரில் ராஜபக்சே வடக்கே சிங்களவர் களைக் குடிஅமர்த்தித் தமிழர்களை அடக்கி ஆளப் பார்க்கின்றார். அவரே ஒத்துக்கொண்ட 13ஆவது தீர்மானத் தையே நிறைவேற்றாமல் நீர்த்துப் போகச் செய் கின்றார். பத்திரிகை மற்ற உரிமைகளைப் பறித்துக் கொலை செய்து பயமு றுத்துகின்றார் என்று எடுத்துக்காட்டுக்களுடன் எடுத்துரைத்தார்.

அடுத்து ஹெரிட் டேஜ் பவுண்டேசன் சமூக அமைப்பின் லிசா கர்டிசு அம்மையார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன என்று வழக் குத் தொடர்ந்துள்ளனர். நான்காண்டுகளாக அடுக்கடுக்கான அபக ரிப்புக்களும், குற்றங் களும் நடந்து கொண் டுள்ளன. அமெரிக்கா இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது என்றார்.

அரசியல் ஆய்வாளர் நிம்மி கவுரி நாதன் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாக்கப் படுகின்றனர். பாலியல் கொடுமை கட்டாயக் கருச்சிதைவு, பரத்தையர் ஆக்கப்படும் சீர்குலைவு, தற்கொலை, மன நோய் உண்டாக் குதல் என்று ராணுவத் தினரின் வெறியாட்ட மாகவே 24 மணி நேர மும் நடந்து கொண் டுள்ளது. மூன்றிலொரு பங்கு தமிழ் நிலம் ராணுவத்தினர் எடுத்துக் கொண்டுள்ளனர் என்றார். கண்ணால் பார்க்க முடி யாமல், வாயால் பேச முடியாமல்,நடக்கவும் அஞ்சி வாழ்கின்றனர் என்றார்.

அமெரிக்கன் என்டர் பிரைசு நிறுவனத்தின் சதானந்த் தூமே கருத் தரங்கத்தையும், கேள்வி பதில்களையும் ஒழுங்கு செய்தார்.

நாடாளுமன்ற உறுப் பினர் பில் ஜான்சன் கூறியதாவது: போர் நடந்த போது பாதுகாப் பான இடம் என்று ஒதுக்கி அங்கேயே அப் பாவி மக்களைக் கொன்று குவித்தது போர்க்குற்ற மாகும். ஒளிப்படங் களில் பார்க்கும் காட் சிகள் அதிர்ச்சியூட்டு கின்றன. இவையெல் லாம் கட்டாயம் விசா ரித்துத் தண்டிக்கப் பட வேண்டும். நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கை மனித நேயமற்ற செயல்களை, இன்றும் அவை தொடர் வதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.நான் மற்ற உறுப்பினர்களுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி இந்தக் குழு வின் வேலையைத் தொடங் குவேன் என்றார்.

டேனி டேவிசு அவர் கள் சுனாமிக்குப்பின் தான் அங்கு சென்று இரண்டு அரசுகள் நடந் ததைப் பார்த்தேன். இரண்டு உச்ச நீதி மன் றங்கள், வங்கி மற்ற துறைகளைப் பார்த்தேன். என்னுடன் கூடவே இருந்த நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கிருஸ்துமசு அன்று சர்ச்சிலேயே கொல்லப் பட்டார். இளம் பிள் ளைகள், மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அந்தப் பிள்ளைகள் போர்ப் பயிற்ச்சி வீரர்கள் என்று கொல்லப் பட்டார்கள்.

தமிழர்களின் போராட் டத்தை கருப்பினத்து நான் நன்கு உணர்கின் றேன். இவ்வளவு ஆண்டு கள் கழித்தும் இன்ன மும் அமெரிக்க உள் ளங்கள் முழு விடுதலை உணர்ச்சி பெற வில்லை. மக்கள் மக்களாக வாழக் கட்டாயம் நாம் பாடு பட வேண்டும். இது ஒரு சிறிய முயற்சி. சிறிய முயற்சிகள் தான் பெரிய வெற்றிகளின் ஆரம்பம். மனந்தளராமல் நாம் பாடுபடுவோம். வெற்றி நிச்சயம் என்று சொல்லி முடித்தார்.

- சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நிதிஷ்!

செய்தி: குஜராத்தில் மோடி 450 அடி உயரத்தில் படேல் சிலையை அமைக் கிறார். அதற்குப் போட்டி யாக நிதிஷ்குமார் பீகாரில் உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோயிலைக் கட்டு கிறார். - செய்தி

சிந்தனை: குளிக்கப் போய் சேற்றில் விழலாமா நிதிஷ்?

தமிழ் ஓவியா said...

மோடியைப் பார்த்து கேட்க முடியாத கேள்வி

மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரிப் பணமா? அல்லது ராகு லின் தாய்மாமன் வீட்டுச் சீதனமா என்று ராய்ப் பூரில் வினா எழுப்பி யுள்ளார் மோடி.

குஜராத்தில் மோடியால் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறார்களே - அதெல்லாம் மோடியின் மாமியார் வீட்டுப் பணமா என்று கேட்க முடியாது. காரணம் கட்டிய மனைவியையே நட்டாற்றில் விட்டவராயிற்றே மோடி!

தமிழ் ஓவியா said...


அன்னதானம்!


தினமணி வெள்ளி மணியில் (15.11.2013) தானத்தின் பலன் என்ற தலைப்பில் மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் அருளுரை இதோ:

தானத்தின்பலன்

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில், எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிடு கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவ னேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்.

பிறருக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை. பாபத்தையே புசிக்கிறான் என்கிற மாதிரி சொல் கிறார். அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் அதிலேதான் ஒருத்தரைப் பூரணமாகத் திருப்திப் படுத்த முடியும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ் வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்ல மாட்டான். அன்னம் போடு கிறபோதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அள விற்கு மேல் சாப்பிட முடியாது. ஓர் அளவுக்கு மேல் போய் விட்டால், ஐயையோ இனிமேல் போடாதீர்கள் என்று மன்றாடச் செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரி விக்கிற போதுதான் தானத் தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.- காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்

ரொம்ப சரி.. சிறப்பா கவே சொல்லியிருக்கிறார். பாராட்டக் கூடச் செய்ய லாம்.

காஞ்சீபுரம் சங்கர மடத்தில் இன்றைக்குக் கூட, அங்கு சமைக்கப்பட்டு மீதமான உணவை என்ன செய்கிறார்கள்? குழி தோண்டி அல்லவா புதைக் கிறார்கள்! உண்மையா இல்லையா?
அன்னதானத்தைப்பற்றி ஆகாயம் வரை அள்ளி விடும். அந்தப் பெரியவாள் மீதி அன்னத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்கிட வழி செய்திருக்கக் கூடாதா?

அதே நேரத்தில் வடலூர் இராமலிங்க அடி களாரை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பு நெருப்பு இன்று வரை அணையவில்லையே! அன்னதானம் அன்றாடம் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது போய்ப் பார்த்தாலும் காணலாமே.

அதனால்தானே அவர் வள்ளலார் என்று அன் பொழுகப் போற்றப்படு கிறார். ஆனால் பார்ப்பனர் களின் கர்மா தத்துவப்படி, பட்டினி கிடப்பது அவாள் அவாள் தலையெழுத்து என்பதுதானே!

இந்த ஜென்மத்தில் கர்மப் பலன்படி பட்டினி கிடந்து அந்தத் துன்பத்தை அனுபவித்தால் அடுத்த ஜென்மத்தில் நல்லது கிடைக்கும் என்பவர்கள் இதுபோன்ற அருளுரை களைக் கூறுவதில் அர்த்தம் இல்லை.

நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லக் கூடியவர் தான் அவாள் அகராதியின் மகாப் பெரியவர்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தேர்தல் கருத்துக் கணிப்பு

தேர்தல் கருத்துக் கணிப்பு தடை செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை யாகும். இப்பொழுது அந்தக் கருத்தினைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, அதுபற்றி சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைச் சிந்திக்க விடாமல் கருத்துக் கணிப்பு என்கிற பெயரால் கருத்துத் திணிப்பினைச் செய்து வருகிறார்கள்.

ஊடகங்களில் 71 சதவிகித அளவுக்கு உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். டில்லியைப் பொறுத்தவரை 300-க்கும் மேற்பட்ட மூத்த ஊடக இயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது.

பணியாற்றுபவர்கள் தான் இப்படி இருக் கிறார்கள் என்றால் ஊடகங்களின் உரிமை யாளர்கள் எல்லாம் யாரென்றால், பெரும்பாலும் பெரும் பெரும் பண முதலாளிகள்தான்.
பிறவி முதலாளித்துவவாதிகளான பார்ப் பனர்களும், பொருள் முதலாளிகளும் சேர்ந்து தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கும் நயவஞ்சக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய நன்மைக்காகவும், இலாபத் துக்காகவுமான ஓர் ஆட்சியை உருவாக்குவதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்து வருவது கண்கூடு.
இவர்களுக்கு, மோடி பிரதமராக வர வேண்டும் என்பது மனம் கொண்ட அளவுக்கு ஆசையும், வெறியும் உண்டு.

சென்னையில் பெரிய பெரிய முதலாளிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று தங்கள் விருப் பத்தினை வெளிப்படுத்தியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

டாட்டா நிறுவனத்தின், நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விளை நிலங்களை மோடி தாரை வார்த்தார் என்றால் எந்த அடிப்படையில்? முத்திரைத்தாள் கட்டணமும் விதி விலக்காம்; 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கடன் தொகை ரூ.9750 கோடி - வட்டி விகிதம் என்ன தெரியுமா .1 (புள்ளி ஒன்று) சதவீதமாம்.

இப்படி முதலாளிகளையும், கார்ப்பரேட் கம்பெனிகளையும் ஊட்டி வளர்க்கக் கூடியவர் தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

இப்படிப்பட்டவரை பிரதமர் நாற்காலியில் அமர வைக்க எந்த முறைகளையும் கையாளக் கூடியதுதான் முதலாளித்துவம்! அவர்களின் கைகளில் பலமாகச் சிக்கிக் கொண்டுள்ள ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டு, அடுத்த பிரதமர் நரேந்திரமோடிதான் என்கிற மாயையைப் பாமர மக்களின் மனதில் திணிக்கும் வேலையில் திட்டமிட்டு இறங்கி யுள்ளனர்.

மோடியின் ஆட்சியில் 2002இல் நடைபெற்ற படுகொலையைத் திரையிட்டு மறைத்துவிட்டு மோடியினால் குஜராத் வளர்ச்சி வளர்ச்சி என்ற பொய்க் கதையை மூக்கும் முழியும் வைத்து இறக்கைக் கட்டிப் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக உணர்வைக் கொல்லைப்புற வழியாகக் காயடிக்கும் கயமையாகும்.

பெரிய முதலாளிகளுக்காக அவர்களிடம் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு அவர் களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியவர்களின் வரிசையில் பிஜேபி முதலி டத்தில் இருந்த தகவல் வெளி வரவில்லையா?

இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது; 2009- 15ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபிதான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டனவே அவை என்னாயிற்று? பொய்த்துப் போக வில்லையா?
மக்களைக் குழப்பும், மோசடி வேலையைச் செய்யக்கூடிய கருத்துக் கணிப்பைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமே!

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்



மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு


கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 11ஆவது மகாநாட்டில் சொற்பொழிவு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள் எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்புவாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள். மற்றொரு வகுப்பார் தலையெடுக்காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள். ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படியில்லை. பிறருக்குக் கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம் மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண்டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை துவேஷம் வேண்டாம், எல்லோரும் சமம் என்று சொல்லுங்கள்; சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக் கிறோம்.

நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டுவரும் ஒற்றுமை என்ற வார்த்தைகளும், பிரச்சினைகளும் வெளிவேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலைமை ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்யச் சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கவேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன் மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்ஜியமிருக்கிறது. சகலரும் ஒன்று. மேலோர், கீழோர் என்று உணர்ச்சி இருக்கவே கூடாது.
- குடிஅரசு - சொற்பொழிவு - 09.10.1927

தமிழ் ஓவியா said...


தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு

தேசூர், போர்டு எலிமென்டரி ஆண்கள் பாட சாலையில் 10-09-1927இல் உபாத்திமைச் சங்கம் கூடிற்று. அதில் அக்கிராசனம் வகித்தவர் ஒரு பார்ப் பனர், காரியதரிசியும் ஒரு பார்ப்பனர். மேற்படி தேதியில் ஒற்றுமை என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசினவரும் ஒரு பார்ப்பனர். இவர் இவ்விஷயத் தைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும்போது சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார். அதில், தற்காலந்தான் ஒற்றுமையைப்பற்றி ஒவ்வொரு சங்கத்திலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் பேசப்பட்டதே கிடையாது. மேன்மை தங்கிய விக்டோரியா மகாராணி காலத்திலும், எட்வர்ட் அரசர் முற்பாதி அரசாட்சி யிலும் ஒற்றுமையைப் பற்றி கூறினதே கிடையாது. காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் தோன்றி, ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பூடக மாகயிருந்த இந்து மத விஷயங்களை வெளிப் படுத்தியதால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை சீர் குலைந்தது என்று கூறினார். பாவம் இப்பார்ப்பனர், பார்ப்பனரல்லாதாருக்கு இழைத்து வரும், வருகின்ற தீங்குகளை, அப்படியே காக்கக் கடவுள் கருணைகூர்ந்தார் போலும்.

மேலும் கவர்ன்மெண்ட் உத்தியோகங்களில் உள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர்களுக்கு அதிகக் கடினமான விஷயங்களையும், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களுக்கு இலேசான விஷயங் களையும் கொடுத்து விவகாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பார்ப்பனர்களுக்குத்தான் அதிகப் புத்திக் கூர்மை, அதனால் பார்ப்பனர்களைக் கொண்டு மிகக் கடின விஷயங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை இப்பார்ப்பனர் தம் உள்ளக் கிடக்கையாய்க் கொண்டு பார்ப்பனரல்லாதாரை இழித்துக் கூறினார். என்னே! இப்பார்ப்பனரின் ஒற்றுமைக் கூற்று. மேலும் இவர் கைவிரல்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோல், மானிட வர்க்கத்திலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்டு என்று ஓர் ஆதி திராவிட உபாத்தியாயரைப் பார்த்து பஞ்சமன்-பஞ்சமன் என்று பல தடவைகளில் மிகத் தாழ்வு படுத்திக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் ஆதி திராவிட உபாத்தியாயர் எங்களை பஞ்சமன் என்று சொல் லுவது கிடையாது. ஆதிதிராவிடர் என்று கூறப்படு கிறது, கவர்ன்மெண்டாராலும் அங்கீகரிக்கப் பட்டிருக் கிறது. ஆகையால் எங்களை இவ்விதத் தாழ்வுபடுத் திக் கூறினது இச்சங்கத்திற்கழகல்ல எனக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் உபாத்தியாயர் வருணாசிரமம் பிரித்தவர்கள் நான்கு வருணங்களைத்தான் பிரித்திருப்பதாகத் தெரிகிறது. பஞ்சமன் என்ற ஒரு வருணத்தை உண்டாக்கினதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் பேசிய அங்கத்தவர் அவ்வார்த் தையை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனே அப்பார்ப்பன ஆசிரியர் வாபஸ் வாங்கிக் கொள்ளமாட்டேன். தொன்று தொட்டு வந்த வார்த்தையை நாம் ஏன் தள்ளவேண்டும்? அப்படித் தள்ளுவது கூடாது என்று கூறினார். என்னே இப்பார்ப்பனரின் தைரியம். பிராமணத் தன்மையினின்றும் நீங்கியவர்கள் சண்டாளன் என்று இவர்கள் வேதமே கூறுகின்றன. ஆகையால் இதற்கு இப்பார்ப்பனர் என்ன சமாதானம் கூறப் போகிறார்?

பிறகு அக்கிராசனாதிபதி மத விஷயங்களை இங்கு புகுத்தக்கூடாது என்று கூறினாரேயொழிய, தாழ்வான வார்த்தைகளை உபயோகித்தது தவறு என்று கூறினாரில்லை. என்னே! இப்பார்ப்பனர்களின் ஒற்றுமை. பிறகு ஓர் அங்கத்தினர், முதலிலேயே தடுத்திருந்தால் மிகவும் நல்லது. இப்பொழுது தடுப்பது அவ்வளவு உசிதமல்ல எனக்கூறினார். முதலில் பேசிய இப்பார்ப்பன ஆசிரியர், தன்னிடத் தில் இவ்வளவு வகுப்புப் பிரிவினைகளை வைத்துக் கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று நாம் கடாவுவதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார். இப்பார்ப்பனரின் ஒற்றுமையே ஒற்றுமை. பளா! பளா!!
- குடிஅரசு - கட்டுரை - 18.09.1927

தமிழ் ஓவியா said...

டில்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்

டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந் திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டில்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்தமாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக்கூடும்? ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப்பிடிக்காத கிருஷ்ணன யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927

தமிழ் ஓவியா said...


தாலிபற்றி ஒரு தகவல்

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் பகுத்தறிவு சிந்தனை மக்களை சென்றடைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான் பார்த்ததை விடுதலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புதுயுகம் என்ற தனியார் தொலைக்காட்சியில் வீடு தாண்டி வருவாயா என்ற நிகழ்ச்சியில் ஒருவர் கூறியது. அவர் சிறு வயதாக இருந்தபொழுது உறவினர் ஒருவர் தன் மனைவி அவர் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் எனவும் எதிர்த்து கேட்கக் கூடாது; ஏன்னா நான் தாலி கட்டியவன் என அடிக்கடி கூறுவார். ஒரு முறை அவர் மனைவி கோபப்பட்டு தாலியை கழற்றி வீசி விட்டார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து விட்டனர்; பின் அனைவரும் மனைவியை சமாதானபடுத்தி தாலி அணிவித்தனர். சில நாட்களில் மீண்டும் அதே போன்று தாலி கட்டினவன் சொன்னா கேட்கனும் என கூறவும், மனைவி கோபத்தில் தாலியை கழற்றி அம்மியில் வைத்து நசுக்கி விட்டார். பின் அனைவரும் சமாதானபடுத்த மீண்டும் அணிந்து கொண்டார் எனவும், தாலி பெண்களை அடிமைபடுத்துகிறது எனவும் கூறினார். தாலிமீது தனக்கு நம்பிக்கையில்லை எனவும் தன் திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வீடு வந்த பொழுது மனைவியின் தாலி எங்கோ தொலைந்து விட்டது. எனவும் மனைவி இதனால் பயந்துவிட்டார். உறவினர்கள் பூசை பரிகாரம் கூறினர். நான் எதுவும் ஆகாது பயப்பட வேண்டாம் என மனைவிக்கு ஆறுதல் கூறினேன். உறவினரின் தாலிபற்றிய கதையைச் சொன்னேன் உறவினரையும் அவருக்குக் காண்பித்து ஆறுதல் கூறினேன் என்று அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்படி அவர் அறிந்தோ அறியாமலோ பெரியார் கொள்கை அவரைச் சென்றடைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...


எடை மேடை

நிழலற்ற பயணம்

பி.ஆர்.சுபாஸ் சந்திரன் எதையும் கொடுக்காமல் ஒன்றை இலவச மாகக் கொடுக்க முடியாது. இது இயற்கை வகுத்த வழி.உழைப்பின் தரத்தையும் அள வையும் பொறுத்தே ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,பதவி,மரியாதை போன் றவை அமையும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் சுசில் குமார் சிந்தே. தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை (தற்போது நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருக்கும்) சிந்தே அவர்களின் பிறப்பு வளர்ப்பு என்பதில் தொடங்கி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சுவையான நிகழ் வுகள் "நிழலற்ற பயணமாக"(வாழ்க்கை வரலாறாக) தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல்,தமிழுக்குப் புது வரவு.ஆற்றல் மிக்க எழுத்தாளர் பி.ஆர்.சுபாஸ் சந்திரனால் எழுதப்பெற்ற சிறந்த நூல்.நல்ல மொழி நடையோடு வந்துள்ள ஓர் அருமையான தமிழ்ப்படைப்பு.

- மூனாதானா.

நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.

பக்கங்கள்: 454. விலை:ரூ.300.

தமிழ் ஓவியா said...


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!


ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள 80 (எண்பது) நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கோடீஸ்வரர்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சராசரியாக ரூபாய் 4 கோடியே 9 லட்சம் சொத்து உடையவர்கள்.

அதே உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவையில் உள்ள 403 சட்டப் பேரவை உறுப்பினர்களில் 271 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்தியா ஏழை நாடு என யார் சொன்னது?


இதுதான் இந்தியா
தலைமயிர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர் காணிக்கை மூலம் இந்தஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் எனினும் அதிகம் மயிர்க் காணிக்கை செலுத்துவோர் தமிழ்நாட்டு மக்களே ஆவர். உயிருக்கு இல்லையேனும், மயிருக்காவது மதிப்பு இருப்பதை எண்ணி ஆறுதல் அடையலாம். உலகிலேயே அதிக நீளமான முடி இந்தியப் பெண்களுக்கே உள்ளது என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாசுபாடு பட்டியலில் நமக்கு முதலிடம்

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகில் அதிக மாசடைந்த 25 நகரங்களில் இந்தியாவில் பெருவாரியாக 4 மாநிலங்கள் முறையே லக்னோ 1ஆவது இடத்திலும், கொல்கத்தா 14ஆவது இடத்திலும், மீரட் 17ஆவது இடத்திலும், மும்பை 21ஆவது இடத்திலும் உள்ளன. இந்நகரங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுக் குழுவினரால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடரும் இடிபாடுகள்

அண்மைக் காலமாக மகாராட் டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளால் உயிரிழப் போரின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துள்ளன. கட்டட இடிபாடு களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்றொப்ப 168 பேர். இவ்வாறு இடிந்த கட்டடங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டவை. மிக அதிக விலை கொடுத்து நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் பெறப்பட்டதே இத்தகைய சட்டவிரோத கட்டடங்கள் உருவானதற்கான மூல காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- தமிழ் இலெமுரியா அக்டோபர் 15 2013

தமிழ் ஓவியா said...


பார்ப்பனச் சேரி



சதுர்வேதி மங்கலங்கள்
அக்ரகாரமாய்ச் சுருங்கி
தேய்ந்த கட்டெறும்பாய்
அதுவுமான பார்ப்பனச் சேரிகள்
தம் அடையாளங்கள் தொலைக்க
ஆதலினாலங்கு குடியேறிய
ஒரு சூத்திரன் வீட்டு
பட்டாசாலையில் அமர்ந்து
தங்கள் சரிந்த சரிதம் எண்ணி
தங்களுக்காக தான் அழுவது
புகையினால்தான் எனக்காட்டி
வரிகள் சரியா எனத்தெரியாத
புரியாத மொழியில்
அவசர அவசரமாய்
மந்திரங்களை ஓதும்
அந்த கருப்புப் பார்ப்பன புரோகிதனின்
கவனங்கள் என்னவோ
யாசகப் பையில்தான்.
அக்ரகாரம் = பார்ப்பனச் சேரிகள் (Madras University
1936ல் வெளி யிட்ட Tamil Lexicon

தொகுப்பு: வையாபுரிப் பிள்ளை தலைமை யிலான குழு)

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதி முற்றிலும் குணமாகுமா?


சர்க்கரை வியாதி என்றால் என்ன? இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருந்தால் அது சர்க்கரை வியாதி எனப்படுகிறது. இந்த குளுகோஸை சரியான அளவில் வைத்திருக்கும் வேலையைத் தான் கணையம் செய்கிறது. இன்சுலின் என்ற ஹார்மோனை கணையம் சுரக்கிறது. இந்த இன்சுலின்தான் குளுக் கோஸை சரியான அளவில் இரத்தத்தில் சேர்க்கிறது. மிஞ்சி இருக்கும் குளுகோஸை சேமித்து வைத்து தேவைப்படும் போது வழங்குகிறது.

சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்திவிட்டால் குளுகோஸை கட்டுப்படுத்தும் நிலை இல்லாமல் ஆகி விடுகிறது. எனவே அளவின்றி குளுகோஸ் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி வருகிறது.

இந்த குளுக்கோஸ் எங்கிருந்து வருகிறது? நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் செரிமானமானதும் குளுகோஸாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்தில் சேர்ந்து பயணமாகி செல்களுக்கு வழங்கப்படுகிறது. செல்களில் குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சக்தி கிடைக்கிறது. குளுக்கோஸ் சக்தியைத் தானே தருகிறது? அதிகம் கலந்தால் ஏன் வியாதியாகிறது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே.

தடுக்க என்ன வழி? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரைமணி நேரமாவது காலாற நடக்க வேண்டும். பரம்பரையாக வரக்கூடும் என்பதால் முன்னோருக்கு இவ்வியாதி இருந்தால் எச்சரிக்கை மிக அதிகம் தேவை. இரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை அளவை அறிய வேண்டும். வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை அறிய வேண்டும் வெறும் வயிற்றில் 100.1நி சாப்பிட்ட பின் 140.1நி இருந்தால் அது சர்க்கரை வியாதியின் தொடக்கம் என அறிதல் வேண் டும். மேலும் செய்ய வேண்டியது என்ன?

உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம் இரத்தத்துக்கு எவ்வளவு குளுகோஸ் தேவையோ அந்த அளவுக்குத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எனவே வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது. குளுகோஸ் அதிகமுள்ள கிழங்குகள், பழங்கள் ஆகியன குறைவாக உண்ண வேண்டும். பட்டினியும் இருக்கக் கூடாது. மது, புகை, மாமிச உணவுகள் வேண்டாம். உடல் எடை போடக் கூடாது. தேவையற்ற கவலைகள் தேவையில்லை. மிஞ்சிய சர்க்கரையின்போது இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி நிவாரணம் பெறலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி வியாதி உள்ளவர்கள் செயல்பட வேண்டும். முற்றிலும் குணமாக்க முடியுமா? அப்படி ஒரு மருந்து இதுவரை இல்லை. எனவேஉணவுக் கட்டுப்பாடு தான்மிகவும் பயனுடையது. சர்க்கரை வியாதியின் பின் விளைவுகள் மோசமானது. இதயம், சிறுநீரகம், கண்பார்வை போன்ற முக்கியப் பகுதிகளைப் பாதிக்கும். எனவே அலட்சியமாக இருக்கக் கூடாது.

- பொதிகை மின்னல், நவம்பர் 2013

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பூமியிலிருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் 7 கிரகங்களுடன் கூடிய சூரியக் குடும்பத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.10180 என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள புதிய கிரகத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதற்கு கெப்லர் 78பி எனப் பெயரிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கல்யான் விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.சி_25 ராக்கெட் நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

நட்சத்திரக் கூட்டம்



பூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் தில்வி கூறியுள்ளார். அண்டவெளியில் ஏற்பட்ட பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பேரிழப்பு


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு 9.11.2013 அன்று காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு -_ இயக்கத்திற்கு இருந்தது! ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று. அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன். திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

இயக்கத்திற்குச் சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று. எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை, பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை -_ பிரிக்க முடியாதவை!

பாழும் சாவு பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!

அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

எனவே, நாம் அவருக்குப் பிரியா விடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்துச் செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம்


தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் _ அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை _- நெருக்கடி கால நிலையில் _- ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம் கொண்டுபோய்ச் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழையபடி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன _- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக்காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை _- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்களின் உரிமைகள் _- அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத்தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கை மணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் -_ வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to
Education) என்று அரசமைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்தியக் கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை, தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது _- இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

- கி.வீரமணி, ஆசிரியர்