Search This Blog

27.11.13

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்!



பேய் என்றெல்லாம் வேறொன்றும் இல்லை; இல்லாததை இருக்கிறதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாகத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருப்பதுதான். சாதாரணமாக நம் பெண்களிடத்தில் பார்த்தால் தெரியும்; 'பேய் பிடித்துவிட்டது அதை விரட்டுகிறோம்' என்பார்கள்! பேயைப் போலவே இல்லாததை இருப்பதாக நம்புவது, கடவுள், மதமும் ஜாதியும், ஜனநாயகம் - இந்த மூன்று பேய்களும் நாட்டைவிட்டே விரட்டப்படவேண்டும். 

அப்போதுதான் நம் மக்கள் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபட முடியும். கடவுள் என்ற ஒன்று கிடையாது. பேய் போல அது ஒரு கற்பனைதான். உங்களிடத்திலேயே பலர் பக்தி நிறைந்தவர்களாக இருக்கலாம். ஆத்திரப்படாமல் கேட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திப்பதற்கு முன், இதைச் சொல்லுகிற நான் யார் என்று யோசனை செய்து பார்க்க வேண்டும்.

'எங்கள் குடும்பம் ஈரோட்டிலேயே பெரிய கடவுள் பக்திக் குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன் நான். ஊரில் உள்ள பாகவதர்களெல்லாம் எங்கள் வீட்டில்தான் சதா சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் எந்த சாமானைப் பார்த்தாலும் அதில் நாமம் போட்டுத்தான் இருக்கும். நானும் பெரிய பதவிகள் வகித்து இருந்திருக்கிறேன். ஈரோடு தேவஸ்தான கமிட்டிக்கு பிரசிடென்டாக இருந்திருக்கிறேன். சில பாடல் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம்கூட என்னுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நிர்வாகம் செய்து முதன் முதலாக ஆதிதிராவிடனை கோயில் உள்ளே நுழைய வைத்து கோர்ட் வரையிலே சென்றிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுள் என்பதை நம்பாததற்குத்தான் நிறைய அறிவு வேண்டும். கடவுளை நம்ப முட்டாள்களாக இருக்க வேண்டும். கடவுள் இல்லையென்று சொல்ல வேண்டுமானால் அதற்கு இயற்கையைக் கட்டி ஆள வேண்டும்; ஒவ்வொன்றுக்கும் சரியான சமாதானம் சொல்ல வேண்டும்.

நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும், நினைக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறதாகவே வைத்துக் கொண்டால், அது எப்படி இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கேள்வி! உலக மக்கள் தொகையாகிய 230-கோடியில் இந்தியா என்ற இந்த நாட்டில் உள்ள 30- கோடியைத் தனியாக வைத்து விட்டு மற்றதைப் பார்த்தால் 100-கோடி மக்களுக்கு மேல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் சரிபகுதி மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சைனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன், கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பவுத்தர்களுக்கு மோட்சம், நரகம் ஆகியவற்றால் ரஷ்யாவில் உள்ள 30- கோடி மக்கள் ஒரு குஞ்சுக்குக்கூட கடவுள் நம்பிக்கை இல்லை. ஒன்றிரண்டு கிழடுகளுக்குத்தான் சில கோயில்கள் இருக்கின்றன. அதுவும் எல்லாக் கிழடுகளும் அப்படியிருப்பதில்லை. மற்ற பெரிய பெரிய ஆலயங்களெல்லாம் கண்காட்சி சாலையாகத்தான் அங்கு இருக்கிறது.

நாம் 30 கோடி மக்களும் காட்டுமிரண்டிகளாக இருக்கிறோம். கடவுள், பேய் பிடித்து ஆட்டுபவர்களாக இருக்கிறோம். ஏன் மற்ற மதத்துக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போலாவது கடவுளைப்பற்றி நினைக்கிறோமா? கடவுளால் ஜாதிக்க இயலாததை எல்லாம் வெள்ளைக்காரன் தற்போது ஜாதித்துக் காட்டுகிறானே, சக்கிமுக்கிக்கல் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் அவன் நமக்கு எலக்டிரித் தரவில்லை? கட்டை வண்டிக் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் நமக்கு அவன் ஆகாய விமானம் தரவில்லை? அவ்வளவு தான் கடவுள் சக்தி. கிறிஸ்தவனாக உள்ள வெள்ளைக்காரன் இதுமாதிரி பற்பல அதிசயங்களைச் செய்கிறான்.

கடவுளால் ஆகாததைச் செய்துகாட்டி, கடவுள் சக்தி இவ்வளவுதான் காட்டுகிறான் என்றாலும் அவன் ஒரு கடவுளைக் கும்பிடுகிறான் என்றால் அது சடங்கு சம்பிரதாயத்திற்கே தவிர வேறில்லை. அவன் கடவுளைத் தொழுகிறான்; அவனுக்கு ஒரே கடவுள்தான் உண்டு. அதற்கு உருவமில்லை; மகா யோக்கியர் அந்தக் கடவுள் என்கிறான். கருணாநிதி என்கிறான்; ஒழுக்கமுள்ளவர் என்று வருணிக்கிறான். அந்தக் கடவுளுக்கு ஒன்றும் தேவையில்லை. இதுதானய்யா கிறிஸ்தவனும், முஸ்லிமும் சொல்லும் கடவுள்! ஆனால், உனக்குத் தெரியாதே உன் கடவுள் எப்படிப்பட்டதென்று. உனக்கு எத்தனை கடவுள் என்றால் உனக்கே தெரியாதே! நாட்டில் இருக்கிற அத்தனையும் கடவுள்கள்!

ஏதோ நாங்கள் வந்ததனாலே இப்போது இந்த நாட்டிலே கடவுள்கள் குறைந்து இருக்கின்றன. ஒன்றா இரண்டா இங்கே - உன் கடவுள்? மாடு, பன்றி, குரங்கு, மீன், நாய், கழுதை, குதிரை எல்லாம் உன் கடவுள்! 600, 700- ரூபாய் செலவு செய்து கல்லில் குதிரை செய்து வைக்கிறானே; மாட்டுச் ஜாதியைக் கடவுளாக்கி வைத்திருக்கிறானே. நல்ல வேளையாக மனுஷன் ஜாதியை கடவுளாக்கவில்லை. ஏனென்றால், பார்ப்பானுக்குத் தெரியும், அப்படி ஆக்கினால் பின்னால் அவனுக்கே கஷ்டம் என்று அதனால்தான் விட்டு விட்டான். மதுரை வீரன் என்றொரு கோயிலுக்குப் போனால், அங்கு இரண்டு நாய்கள் இருக்கும். ஒரு கடவுளுக்குப் பதில் இத்தனை கடவுள்கள் எப்படி ஆயிற்று இந்நாட்டில்?

ஒரு கடவுளைப் பற்றிச் சொல்லுகிறான். அவனது அரைஞாண் கயிறு படாத பெண் பிள்ளையே உலகத்தில் இல்லை என்று சொல்லுகிறான்! கிருஷ்ணனைப் பார்த்து நாரதர் இப்படிச் சொன்னார் என்று எழுதி வைத்திருக்கிறான். கடவுள் யோக்கியதை இப்படியா இருக்கவேண்டும்? பெரும்பாலான கடவுள்கள் ஒண்ணாம் நம்பர் கொலைக்காரக் கடவுள்களாக இருக்கின்றன. கடவுள் தொகையைப் பெருக்குவதில் சைஃபர் சேர்ப்பதற்கு பஞ்சம் வந்தால்தான் அதோடு நிறுத்துகிறான்.

கருணாநிதியான கடவுள் மற்றவனைக் கடித்துத் தின்னும்; இரணியனைப் பிய்த்து எறிந்து கடித்தது என்றல்லவா எழுதி வைத்திருக்கிறான். நாய்கூட மனிதனைக் கடிக்கிறதே தவிர கடித்துத் தின்னுவதில்லை. ஆனால், கடவுள் மனிதனைக் கடித்ததோடு இல்லாமல் தின்னவும் செய்திருக்கிறது. நடராசன் என்று ஒரு கடவுள் மனுஷனை அதுவும் நம்மவனைப் போட்டு மிதித்து வைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறதாம். காளி என்ற இன்னொரு கடவுள் கழுத்தெல்லாம் மனிதத் தலையாகவே இருக்கும்! அவ்வளவு கருணை வெள்ளம்! கடவுள் உருவம் செய்தவனுக்காகவது புத்தி இருந்திருக்க வேண்டாமா? அன்பு வடிவமான கடவுள் என்று சொல்லப்படுவதற்கு வேலாயுதம் ஏன்? சூலாயுதம் எதற்கு? கொழுவும் மழுவும் வைக்கலாமா என்று யோசிக்க வேண்டாமா? இதையெல்லாம் வைத்திருந்தால் அவை கொலை பண்ணாமல் இருக்க முடியுமா? இப்படி நாம் அந்த காட்டுமிராண்டிகளாகத்தானே வாழ்கிறோம்?

படியளக்கும் கடவுள் என்று சொல்லப்படுவதற்கு நாம்தானே படியளக்க வேண்டியிருக்கிறது? ஆவுடையார் கோயிலில் மூன்று மூட்டை அரிசி தினசரி செலவாகிறது என்றால் எதற்கு? சாமி பேரைச் சொல்லி பார்ப்பான் விழுங்குகின்றான். மிகுந்ததைப் பிறகு மார்க்கெட்டிலும் விற்கிறான், பார்ப்பான். தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லாமல் செத்தார்கள் என்று போட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவற்றிற்கு குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்கு ஜீரணமாகுமா? என்று யாரும் யோசிப்பதில்லையே. இவ்வளவும் செய்த நாம் கோயிலில் ஏன் கடவுளுக்கு கக்கூஸ் கட்டி வைக்கவில்லை என்று யோசிப்பது இல்லையே? ஸ்ரீரங்கம் கோயிலில் டின் டின்னாக நெய்யை ஊற்றிச் செய்கிறானே, அதையெல்லாம் யார் வயிற்றிலே அறுத்து வைப்பதற்கு? கொட்டாப்புளி மாதிரி இருக்கிற பார்ப்பான்களுக்குத்தானே அவ்வளவும்.

ஸ்ரீரங்கம் கோயிலிலே சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. திருகுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியிலே திருகிவிடும். ஏண்டா என்றால், உடைக்கிற சப்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவார் என்று சொல்கிறார்கள். எப்போது படுத்தார், எப்போது எழுந்திருப்பார் என்று ஒரு பயலுக்கும் தெரியாது.

அப்படி எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டேயிருக்கும் சாமிக்கு எதற்கு இத்தனைப் பண்டங்கள், ஆறுகால பூஜைகள்? ஒருத்தனும் ஏன் என்றே கேட்டதில்லையே. ஒருவனுக்கும் இந்த 1958-இல் கூட புத்தி இல்லையே. இன்னும் நாங்கள் இல்லை என்று சொன்னால் ஒவ்வொருவரும் கட்டாயம் ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்று சொல்லி உதைப்பானே?

இந்த சாமிகளுக்கு எத்தனை பெண்டாட்டிகள், கருமாதிகள், கல்யாணங்கள் போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆயிற்று. இந்த வருடம் சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்களே என்று ஒருத்தனும் யோசிப்பது இல்லையே. காளை மாடு கன்று போட்டது என்றால் உடனே சொம்பு எடுத்துக் கொண்டு போய் பால் கற என்று சொல்லுபவன் புத்தி மாதிரிதான் இருக்கிறது இவர்கள் நிலை, சாமி எதற்காக தேவடியாள் வீட்டிற்குப் போவது? மனுஷன் பிறகு இந்த இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக மாட்டானா? கடுகு அளவு புத்தியிருந்தால் ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூருக்கு தேவடியாள் வீட்டிற்காக சாமியைத் தூக்கிக்கொண்டு வருவானா? வெளியார்கள் பார்த்தால் காரித்துப்ப மாட்டார்களா? நாம் இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டாமா?

பக்தி என்றால் ஒழுக்கம், நாணயம் இவை வேண்டாமா? பன்னிராயிரம் கோபிகாஸ்திரீகளோடு கொஞ்சினார், அத்தனை பேரும் கடவுளுடைய பெண்டாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கின்றானே. நாரதர் தனக்கொரு பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டாராம். கிருஷ்ணன், நான் எந்த வீட்டில் இல்லையோ அந்த வீட்டிற்கு நீ போ என்றானாம். நாரதர் எந்த வீட்டிற்குப் போனாலும் அங்கே கிருஷ்ணன் இருந்தானாம். நாரதர் திரும்பி வந்து இதைச் சொன்னாராம். பிறகு நாரதரும், கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெற்றார்களாம். அப்படிப் பிறந்த 60-குழந்தைகள்தான் பிரபவ, சுக்கில மற்றும் தமிழ் வருடங்கள் எனப்படுபவை எங்கேயாவது ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை பெற முடியுமா? இது எவ்வளவு ஆபாசமும் அறிவு அடிப்படையும் இல்லாத கதையாகும்.

இவ்வளவு ஒழுக்க ஈனமாக, அநாகரிகமாகவா நமது கடவுள் தன்மை இருக்க வேண்டும்? மனிதத் தன்மைகளே இல்லை இவைகளிடத்தில், இந்த மாதிரியான அயோக்கிக் கடவுள்கள் இருக்கலாமா? விஷ்ணு, சிவன், பிள்ளையார் கொழுக்கட்டைராயன் மாதிரி இந்தக் கடவுள்கள் என்ன ஜாதித்திருக்கின்றன? அல்லது அவற்றால் நாம்தான் என்ன ஜாதித்துக் கொண்டோம்? இல்லாத குறை ஒன்றைப் போக்க இத்தனை இழிவுகளா? எனவேதான் இந்தப் பேயை ஒழிக்க வேண்டுமானால், கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்; பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம்.

உலகத்தில் அனுபவிப்பதற்கென்றே பார்ப்பான் இருக்கிறான். நாம் என்ன பலனைக் கண்டோம்? அவன் அனுபவிப்பதைக் கண்டு நாம் என்ன பயன் பெறுகிறோம்?

----------------------------- 14.10.1958- அன்று மதுரை மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி - "விடுதலை", 19.10.1958

47 comments:

தமிழ் ஓவியா said...


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:

சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?

81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).

சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.

இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.

இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்து நமது நடவடிக்கை

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.

அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

27.11.2013

தமிழ் ஓவியா said...


இன்று வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரைச் சூட்டியவர்; பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறி வித்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக் கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்கு வோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி

திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமி துரை அவர்கள் 9.11.2013 அன்று மறைவுற்றார்.

அவருக்குப் பதிலாக 26.11.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி (65) திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

கல்வித்தகுதி: பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர். விருப்ப ஓய்வு கொடுத்து திராவிடர் கழகத்தில் பணியாற்ற முன்வந்தவர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் இணையர் இரா.கவுதமன் அவர்களும் மருத்துவர் ஆவார். ஒரு மகன் மருத்துவர்; ஒரு மகள் பொறியாளர். இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

மக்கள் கடலில் தஞ்சை மிதக்கட்டும்!

அன்றைக்கு (1957 நவம்பர் 3இல்), அய்யா பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்களை அளித்தது. தஞ்சை அன்றைக்கு அதன் மதிப்பு ரூ.7704.

அதே தஞ்சையிலே, அய்யா நூற்றாண்டு விழாவையொட்டி, நூறு பவுனை அளித்தது. (7.10.1979 அன்று அதன் மதிப்பு ரூ.80 ஆயிரம்) அது தான் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் தொடங்கப்படுவதற்கான கை முதல் - ஊட்டச்சத்து!

இன்று இந்தியாவிலேயே குறிப் பிடத்தக்க தொழில் நுட்பக் கல்லூரி யாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்ட விழா நடந்ததும் இதே தஞ்சையில்தான் (1.2.1998).

அதுதான் இன்றைக்குப் பெரி யார் மய்யமாக இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியிலே புகழ் பூத்த கம்பமாக நின்று ஒளிவீசி காண் போர் கண்களைப் பறிக்கிறது.
இப்பொழுதும், அதே தஞ்சை யிலே வரும் டிசம்பர் 2ஆம் நாளன்று, முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை அளிக்கப் போகிறோம்.

ஆம்! காலத்தை விஞ்சி நிற்கக் கூடிய 95 அடி உயரப் பேருருவ வெண்கலச் சிலையாக தந்தை பெரி யார் அவர்கள் செம்மாந்து நிற்பதற் கான அடித்தளத்தை அது கொடுக் கப் போகிறது.

நாம் திட்டமிட்டது எதுவும் இடையில் நின்றதில்லை; காரணம் திட்டமிடுவதற்குமுன், ஆயிரம் ஆயிரம் கோணங்களில் ஆய்வு செய்யக் கூடியவர் நமது தலைவர்.

அதற்குரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கேட்டு, அலசி அலசி அதற்குப் பின் அரிய முடிவை எடுக்கக் கூடிய நிருவாகத் திறன் படைத்தவரும் அவரே!

அவரது பவள விழாவில் அவர் அடி நெஞ்சில் ஊற்றெடுத் தது அத்திட்டம்!

95 ஆண்டுகள் வாழ்ந்து அகிலத் திற்கே அறிவு வெளிச் சம் தந்த அந்தப் பகுத் தறிவுப் பகலவனை 95 அடி உயரத்தில் நிற்க வைத்துப் பார்க்க ஆசை!

தமிழ் ஓவியா said...


உலகெங்குமிருந்து வருபவர்கள் பார்க்க வேண்டும்; பார்த்து வியக்க வேண்டும்! யாரிவர்? இந்தப் பிரம்மாண்டத்துக்கு என்ன அடிப்படை? என்று கேட்க வேண் டும்.

கடவுள் இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். கடவுள் இல்லை என்று சொன்ன நாத்திகருக்கு, இவ் வளவுப் பிரம்மாண்டமான சிலையை ஒரு நாட்டில் நிறுவி இருக்கிறார்களா என்று அவர்கள் மூக்கின்மீது விரலை வைக்க வேண்டும்.

கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லவில்லை. ஒரு புதிய வாழ்க் கைக்கு,பாட்டை அமைத்து பகுத் தறிவு வெளிச்சம் தந்த பகலவன் அவர் என்று வேறு சிலர் சொல்லக் கூடும்.

அப்படியா? அப்படியானால் அந்தத் தலைவரின் கொள்கைகளை அறிய வேண்டும் என்று ஒரு துடிப்பை உலக மக்களுக்கு அளிக் கப் போகிறது. அந்தச் சிலை - அந்தப் பெரியார் உலகம்! வெறும் சிலையல்ல- சிந்தனைகளைத் தூண்டும் பேராயம்!

தந்தை பெரியார் எதைச் சொல்லி யிருந்தாலும்.. இது ஒருபுறம்.. அவர் நமது தந்தை - நமது இரட்சகர் - நம்மை வாழ வைத்த வள்ளல்.

தமிழ் ஓவியா said...

ஆணவம் பிடித்த ஆரிய ஆதிக் கத்தின் ஆணி வேர், பக்க வேர், சல்லி வேர்களைச் சுட்டெரித்த சூரியன். வீழ்ந்துபட்ட திராவிட இனத்திற்குச் சுயமரியாதை சூடு போட்டு கிளர்ந்து எழச் செய்த கிளர்ச்சிக்காரர்!

அவருக்குச் செய்யாமல், வேறு யாருக்குச் செய்யப் போகிறோம், என்ற இனவுணர்வுத் தாகத்தை எங்கு சென்றாலும் காண முடிகிறது - காண முடிகிறது என்று களப் பணியாற்றும் நமது களப் பணியா ளர்கள், கருஞ்சட்டைத் தோழர்கள் கூறுகிறார்கள்.

வாய்ப்புள்ளவர்கள் மட்டுமல்ல - வறுமை நிலையில் உள்ளவர்கள்கூட அதனை ஒரு புறத்தில் ஒதுக்கி வைத்து ரூபாய் 25 ஆயிரத்தைத் தேடிப் பிடித்து அளித்து சொல் லொண்ணா மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துகிறார்கள்.

தோழர்கள் சொல்லும் தகவல் கள் தமிழர் தலைவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. அவர் என்ன கேட்கிறார் நம் மிடம், விடுதலை சந்தாக்களைக் கேட்டார்; 50 ஆயிரமா அடேயப்பா! ஆகக்கூட கூடிய காரியமா என்று ஆரம்பத்தில் அதிர்ந்து நின்றவர்கள் அதைச் சாதித்துக் காட்ட வில்லையா?

தமிழ் ஓவியா said...

இதுவும் அப்படித்தான் - இது வரை வந்துள்ள தகவல்கள் எல்லாம் நம்பிக்கையை அளிக்கின்றன.

இடையில் இன்னும் அய்ந்தே நாட்கள்; தேர்வுக்குக் கடைசி நேரத் தில் விழுந்து விழுந்து படிக்கும் மாணவரை போல, இந்த அய்ந்து நாட்களில் கழகத் தோழர் தோழி யர்களே ஒரு மூச்சுப் பிடியுங்கள்.

இலக்கினை எளிதில் அடைந்து விடலாம். தலைவர் ஆயிரம் சவரன் கேட்டால் - இதோ அதற்குமேல் ஒரு சவரன் அதிகம் என்ற சாதனையை நிகழ்த்துவீர் தோழர்களே!

இதுகூட நாம் நமது சொந்த பணத்தில் அள்ளிக் கொடுத்து விடவில்லை.

அய்யா அள்ளிக்கொடுத்ததில் ஒரு பகுதியைத் தான் கொடுக் கிறோம். அவர் தந்த அந்த அறிவுக் கொள்கையை நாம் தாவிப் பற்றிக் கொள்ளவில்லையென்றால் மூடப் பண்டிகைகளுக்காக எவ்வளவு செல வழித்திருப்போம்? மொட்டையடித்து உண்டியலில் போட எத்தனைக் கோயில்களை நோக்கி அலைந்து திரிந்திருப்போம்.

அவர் வாய் உதிர்த்த அந்த அறிவுச் சுடரால், அறிவு துலக்கம் பெற்று அந்த மூடத்தனங்களுக்கெல் லாம் செலவழிக்காமல் இருந் தோமே, அவை எல்லாம் மிச்சம் அல்லவா!

ஒரு வருடத்துக்கு இவ்வளவு செலவு என்று கணக்குப் போட்டு, சராசரியாக 25 ஆண்டு செலவினை கொஞ்சம் பெருக்கிப் பாருங்கள்.

பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி ஒழுகியதால், நமக்கு இவ்வளவு இலாபம் குவிந்தது என்று கணக்குப் போட்டு, அதில் ஒரு சின்னஞ் சிறுபகுதிதான் இந்த 25 ஆயிரம் ரூபாய் - உண்மை தானே!

டிசம்பர் 2இல் 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தலை வரை - தந்தை பெரியார் அவர் களால் அடையாளம் காட்டப்பட்ட அன்புத் தலைவரை வல்லத்தில் நாம் சந்திப்போம். (காலை 9 முதல் 11 மணி வரை).

வெறுங்கையோடு சந்திக்க மாட்டோம் - சால்வை சங்கதிகள் வேண்டவே வேண்டாம்.

இனி நமது சிந்தனை எல்லாம் பெரியார் உலகம் பற்றியதாகவே இருக்கட்டும் - இருக்க வேண்டும்.

மாவட்டக் கழகத் தோழர்கள் தங்களுக்குரிய இலக்கினை முடிக் கும் வகையில் நிதியோடு வாருங்கள். தனிப்பட்ட வகையில் நிதி வழங்கு வோரும் தாராளமாக வழங்கலாம்.

நம் இல்ல நிகழ்ச்சிக்காக ஓர் அழைப்பு அச்சிடுவதாக இருந்தாலும் - அதில் பளிச்சென்று வரும்படி பெரியார் உலகம் பற்றி ஒரு சிறு குறிப்பு இடம் பெறட்டும்! இடம் பெறட்டும்!!

தமிழர் தலைவர் சந்திப்புக்குப் பின் சிந்தனையாளர்கள் பங்கேற் கும் கருத்தரங்கம் வல்லத்தில்; மாலை - தஞ்சை திலகர் திடலில் மிகப் பெரிய திருவிழா.

அந்தத் திலகர் திடல் கழக வரலாற்றில் எத்தனையோ சரிதங் களைப் படைத்ததுண்டு; வரும் டிசம்பர் 2இல் இதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடிக்கப் போகிறது.
இப்பொழுதே தஞ்சை களை கட்டி விட்டது; காணும் இடங்களில் எல் லாம் சுவர் எழுத்து விளம்பரங்கள், பதாகைகள்.

வாருங்கள் வாருங்கள் தோழர்களே!

வாழ்வளித்த வள்ளல் பெரியா ருக்கு விழா எடுப்போம்! அவர் வழி அரிமா நடைபோடும் ஆசிரியராம் நம் தலைவருக்கு விழா எடுப்போம்!

நமது இனத் தலைவர்கள், தளபதிகள் இன முரசு கொட்டு வார்கள் - வாருங்கள் வாருங்கள் குடும்பம் குடும்பமாய்!!

கூடுங்கள் கூடுங்கள்! மக்கள் கடலில் தஞ்சை மிதக்கட்டும்! மிதக் கட்டும்!!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: அதிமுகவை மன்னிக்கவே முடியாது


சேது சமுத்திரத் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய திட்டம் - வெகு காலமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் திட்டமாகும்.

அந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் யாராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களே - இது கல்லின் மேல் எழுத் தாகும். இந்தத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வும் - அதன் பெயரில் அமைந்த அரசும் எதிர்க்கிறது - எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது எந்த அடிப்படையில்? இப்பொழுது இரண்டாவது முறையும் எதிர்த்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்கத் தக்கதுதானா?

இதே அ.இ.அ.தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் அவசியமானது - வேண்டுமென்றே மத்திய அரசு, கால தாமதம் செய்கிறது என்று குறிப்பிட்டி ருந்ததே - அந்தத் தெளிவான நிலை இப்பொழுது ஓடி மறைந்த மர்மம் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. இத்திட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதால் அதன் பெருமை அல்லது அரசியல் லாபம் தி.மு.க.வுக்குப் போய் விடுமே என்ற ஆற்றாமை தான் இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத் திற்குச் சென்றுள்ள காரணமாகும்.

அ.இ.அ.தி.மு.க.தான் இந்நிலையை எடுத் துள்ளது என்றால் பிஜேபி திடீரென்று எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அய்யகோ இராமன் பாலத்தை இடிக்கிறார்களே! என்று சந்திரமதியின் மயானக் கூச்சலைப் போடுவானேன்?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தானே இந்தத் திட்டம் இப்பொழுதுள்ள பாதையில் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது?

பிரதமர் வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, சு.திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் யார்? பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் தானே - இவர்கள் தானே அனுமதி அளித்து ஒப்புதல் கையொப்பமிட்டார்கள்.

இன்றைக்கு ஏன் சுருதிபேதம்? அவர்களையும் ஆட்டிப் படைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானா?

இராமன் பாலம் என்றெல்லாம் பேசுவது அறிவியலுக்கு உட்பட்டதுதானா? அரசு, தனது திட்டத்தில் புராண நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் எந்த ஒரு திட் டத்தையும் உருப்படியாக நிறைவேற்றத்தான் முடியுமா?

இராமனையும், கிருஷ்ணனையும் அவரவர் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசுப் பணத்தை செலவழிக்கும் ஒரு திட்டத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக் கலாமா?

இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதே - அதன் நிலை என்னாவது? இவ்வளவுப் பெருந் தொகை செலவழிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை போட்டால் இதற்கான நட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யார்?

அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளுமா? அல்லது பிஜேபி என்ற கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகள் - இந்த நிலைகளுக்குப் பிறகும் மவுன சாமியார்களாக ஆன மர்மம் என்ன?

அரசியல்தானா? கூட்டணிதானா? கேவலம் ஒட்டுக்காகத் தானா?

பதவிப் பசி எடுத்தால் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


ஏன்?



மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்பட வேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அம்பலமாகிறார் நரேந்திரமோடி அந்தப் பெண்ணுக்கும், மோடிக்குமான உறவு என்ன?

அய்.பி.என். தொலைக்காட்சி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

23.11.2013 இரவு அய்.பி.என் தொலைக்காட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்ட பிரதீப் சர்மா என்ற அய்.ஏ.எஸ் அதிகாரியிடம் சிஎன்என் அய்.பி.என் ஆங்கில சேனல் எடுத்த பேட்டியின் தமிழாக்கம் இதில் உள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதீப் சர்மா என்ற கட்ச் மாவட்ட ஆட்சியாளர் நரேந்திர மோடிக்கும், மான்சி என்ற பெண் கட்டடக்கலை நிபுணருக்கும் இடையேயான தொடர்பு குறித்து உச்சநீதிமன்றம் சி.பி.அய் யிடம் விசாரனைக்கு விடவேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று இரவு ஒரு ஆங்கில செய்தி அலை வரிசைக்கு கொடுத்த பேட்டியின் விவரம் வருமாறு: நரேந்திர மோடி யுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் மான்சி என்ற பெண்ணிற்கும் உங் களுக்கு என்ன உறவு? பிரதீப் சர்மா: இந்தக்கேள்வி மிகவும் வித்தியாசமாக உள்ளது, நான் பள்ளிப்பருவத்தில் இருந்து என்னு டைய 27 அய்.ஏ.எஸ் பணிக் காலத்தில் பல பெண்களுடன் பணி நிமித்தமாக, நட்பு முறையில், பழகி இருக்கிறேன். அப்படியான ஒரு நட்பு தான் எனக்கும், அந்தப் பெண்ணிற்கும் வேறு எதுவு மில்லை. கேள்வி: அந்த பெண்ணின் (மான்சி) பெற்றோர் தான் உங்கள் மீது புகார் கொடுத்தார்கள் என்று பாரதீய ஜனதாகட்சியின் செய்தித் தொடர்பா ளர் கூறியுள்ளாரே? அதிகாலையில் கைது பிரதீப் சர்மா: மிகவும் தவறான செய்தி. அவர்கள் மனதிற்கு ஏற்றாற் போல் கதையளக்கிறார்கள், என்ன காரணம் என்றே கூறாமல் 2010-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு எனது வீட்டை சோதனை செய்தார்கள், அப்போதே கைது செய்தார்கள், உடைகூட மாற்ற அவகாசம் தராமல் என்னை காவல் நிலையம் அழைத்துச்சென்றார்கள், அன்று முழுவதும் மதிய உணவு, இரவு உணவு எல்லாம் மான்சியும் அவர்கள் பெற்றோர்களும் நேரில் வந்து கொடுத்து எனக்கு ஆறுதல் சொல்லிச் சென்றார்கள். காவல் துறையின் தினசரி வருகைப்பதி வேட்டைப் பாருங்கள், காவல் நிலையத்தில் மான்சி என்னிடம், நான், நரேந்திர மோடியின் இந்த மட்டமான செயலால் மிகவும் வெட்கப்படுகிறேன் என்று கூறினார். மான்சியின் தந்தை கவலைப்படாதே விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார். கேள்வி: உங்களின் பதவிக் காலத்தில் இதுவரை யாரும் எந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தியதில்லை, நீங்கள் கட்சு மாவட்ட ஆட்சியாளராக இருந்த சில மாதங்களிலும் உங்களின் பணி அற்புதமாக இருந்தது. திடீரென ஒரே இரவில் உங்கள் மீது எப்படி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது? பிரதீப் சர்மா: எனக்கும் அதுதான் தெரியவில்லை, நீதிமன்ற விசாரணை யின் போது தான் பல குற்றாச்சாட்டுகள் என்மீது சுமத்தியிருப்பது தெரிய வந்தது, அதில் ஒன்று கைப்பேசி வாங்கியது. என்னுடைய பணத்தில் ஒரு சாதா ரண கைப்பேசி வாங்கினேன் அதை ஊழல் பணத்தில் வாங்கியதாக கூறி யுள்ளார்கள், பல அதிகாரிகள் விலை யுயர்ந்த கைப்பேசிகளை வைத்துள் ளார்கள், ஆனால் என்னிடம் இரண்டு தான், என்னுடைய ஒரே ஒரு குற்றம் குறிப்பிட்ட கைப்பேசியில் இருந்து பெரிய நபர் ஒருவரோடு தொடர்பு கொண் டேன். அவ்வளவு தான்? கேள்வி: அந்த தொலைப்பேசி பேச் சுக்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள் ளன என்று தெரியவந்த போது கவலைப் படவில்லையா?

பிரதீப் சர்மா: 2008-லிருந்தே என் னுடைய தொலைப்பேசி பதிவு செய்யப்படு கிறது என்பது எனக்கு தெரியவந்தது.; நரேந்திர மோடி என்னுடைய திறமையைப் பாராட்டி ராஜ்கோட் மாநகராட்சி ஆணை யராக நியமித்தார். அதன் பிறகு கட்சு மாவட்ட ஆட்சியராக நியமித்தார். நான் யாருடனும் ரகசியமாக ஏதாவது சட்ட விரோதமாக செய்தால் தானே பயப்பட வேண்டும்.

கேள்வி: சரி மான்சி தொடர்பான கேள்விக்கு வருகிறோம். அமித் ஷா மற்றும் முன்னாள் அய் பி எஸ் அதி காரியும், தற்போது போலி என்கவுண்டர் வழக்கில் சிறையில் இருக்கும் ஜி.எல். சிங் கால் இடையேயான பேச்சை பதிவு செய் யப்பட்டதிலும் ஏதாவது தொடர்பு உண்டா? பிரதீப் சர்மா:என்னுடைய தொலைப் பேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட் டது குறித்து நான் கவலைப்படவில்லை, அவர்கள் உரையாடல் குறித்து அவர் கள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

தமிழ் ஓவியா said...


கேள்வி: இந்த தொலைப்பேசி உரை யாடல் பதிவுகள் குறித்து உங்களிடம் யாராவது கூறினார்களா? இதைக் கேட்ட வுடன் உங்கள் மன நிலை எப்படி இருந்தது. பிரதீப் சர்மா: யார் கூறினார்கள் என்று எனக்கு நினைவில்லை, ஆனால் மான்சிக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து எனக்கு தெரிய வந்தது.

கேள்வி: அப்படியானால் உங் களுக்கு முதல்வரின் சில தனிப்பட்ட உறவுகள் தெரியவந்ததால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள், சரிதானே

பிரதீப் சர்மா: இதுதான் உண்மை, இதை நான் மக்கள் முன்பு ஒப்புக்கொள் கிறேன், நான் அதிகாலை 5 மணிக்கு கைது செய்ப்பட்டபோது நடந்த சம்பவம் என்னுடைய படுக்கையறையில் சென்று பரிசோதனை செய்தார்கள், என்னுடைய குளியலறையைத் திறந்து பார்த்தார்கள், ஒரு நண்பர் கொடுத்த அழகிய வேலைப் பாடமைந்த பை ஒன்று இருந்தது, அதைப் பார்த்து இதை பயன்படுத்திய பெண் எங்கே என்று கேட்டார்கள், அமித்ஷா ஒரு கொலைச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பல வாரங்கள் அழைப்பாணை அனுப்பி அவரின் அனுமதி பெற்றபிறகு அவரை விசாரிக்க சென்றார் கள், ஆனால் என் கைது சம்பவத்தில் இப்படி ஒரு அவமானகரமான சம்பவம் நடந்தது. அது ஏன் என்று முதல்வர் நரேந்திரமோடிதான் கூற வேண்டும். கேள்வி: நாங்கள் உங்களிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கிறோம். எதிர்கால பிரதமர் என்று பாரதீய ஜனதா கூறும் ஒரு நபர் மீது நீங்கள் ஒரு பெண் தொடர்பான குற்றச்சாட்டை வைக்கிறீர் கள், அப்படி என்றால் அமித்ஷா மற்றும் அய்.பி.எஸ் அதிகாரியின் போனை ரக சியமாக பதிவு செய்தவர்கள் யார்? என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டுமே?

பிரதீப் சர்மா: இதுகுறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் மான்சி, அவருக்கும் முதல்வர் நரேந்திர மோடிக் கும் உள்ள தொடர்பு பற்றி என்னிடம் நிறைய கூறியுள்ளார். அவர்கள் பேசிய உரையாடலை நான் கேட்கும்படி அவர் வற்புறுத்தினார். நான் தான், நரேந்திர மோடி பேசியதை பதிவு செய்து காட்டும்படி கூறினேன் என்று கூறுவதெல்லாம் தவ றான செய்தி. கேள்வி: நரேந்திர மோடிக்கும் மான் சிக்கும் உள்ள தொடர்பு குறித்து உங்களி டம் ஏதாவது சான்றுகள் உள்ளனவா?

தமிழ் ஓவியா said...

பிரதீப் சர்மா: எந்த மாதிரிச் சான் றுகள்?

கேள்வி: நரேந்திர மோடிக்கும், மான் சிக்கும் உள்ள உறவுகளை ஆதாரமாக குறிக்கும் உறுதியான சான்றுகள்?
பிரதீப் சர்மா: நான் இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால் இருவருக்கும் உறவுகள் உள்ளது பற்றி இன்று உலகமே அறிந்து கொண்டுள்ளது, கேள்வி. நரேந்திர மோடியின் தனிப் பட்ட உறவு குறித்து அந்தப் பெண்ணிடம் நீங்கள் எதுவும் கேட்டீர்களா? பிரதீப் சர்மா: நரேந்திர மோடி தான், முதலில் எனக்கு அந்தப்பெண்ணை அறி முகப்படுத்திவைத்தார். பூன்ச் மாவட்ட புதிய கட்டடம் குறித்து எந்த ஒரு தகவலை(மட்டும்)யும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதன் பிறகு அந்த பெண் நான் புதிய கட்டடக்கலை பணிக்காக பெங்களூ ருவில் இருந்து இதர மாநிலங்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன், இந்த பணி எனக்கு மிகவும் விருப்பமான பணி என்று கூறினார். ஆரம்பத்தில் சிறப்பான பணி யாற்றியவர் நரேந்திரமோடி அந்தப் பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் பல பணிகளை டெண்டர் விடாமலேயே தரப் படுவதை கண்டும், பழங்கால கட்டடங் களை புதுப்பிக்கும் பணி தரப்படுவதையும் அவர் விரும்பவில்லை, சில வருடங்களாக நாங்கள் நட்பில் இருந்த போது நரேந்திர மோடி அனுப்பிய சில எஸ் எம் எஸ் களை என்னிடம் காட்டினார். மேலும் கட்டடப் பணிகள் தவிர்த்து அதிகமாக அவரிடம் அக்கறை காட்டுவதாகவும் கூறினார். கேள்வி அந்த எஸ் எம் எஸ் சில் என்ன எழுதி இருந்தார்?

பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய மோடி!

பிரதீப் சர்மா: அது இரட்டை அர்த் தம் கொண்ட எஸ். எம்.எஸ்

தமிழ் ஓவியா said...

கேள்வி: என்னவென்று கூற முடியுமா?

பிரதீப் சர்மா: தேநீர் அருந்தி னாயா? கக்கரா(புதுமணத்தம்பதி களுக்கு தரும் இனிப்பு சுவையுடன் கூடிய ரொட்டி) சாப்பிட்டாயா? பாவ் நகரின் காட்டியான் (வாழைப்பழங் களுடன் பரிமாறப்படும் இனிப்பும் புளிப்பும் கலந்த சாற்றில் ஊறவைத்த கொழுக்கட்டை போன்ற ஒரு உணவு) சாப்பிட்டாயா?

கேள்வி: நீங்கள் இது குறித்து மான்சியிடம் கேட்டீர்களா? பிரதீப் சர்மா: கேட்கவில்லை ஆனால் அவர் நரேந்திரமோடி மற்றும் தன்னுட னான உறவு எப்படிப்பட்டது என்பதை குறிப்பால் உணர்த்தியுள்ளார். கேள்வி: அந்தப்பெண் நரேந்திர மோடியுடன் நெருக்கமான உறவு கொண் டதில் ஏதாவது தவறு உண்டு என்று உங்களுக்குப்பட்டதா? பிரதீப் சர்மா: அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை, ஆனால் நரேந்திர மோடியுடன் நடு இரவில் அவர் வீட்டிற்கு சென்று ஏன் சந்திக்க வேண்டும், கேள்வி: இந்தக் குற்றச்சாட்டிற்கு உங்களிடம் ஏதாவது ஒரு சான்று உண்டா?

பிரதீப் சர்மா: நான் ஒரு நேர்மை யான அதிகாரி, நான் ஒரு மாநில முதல்வரைப் பற்றி பொதுவில் பொய் சொல்லி பகையை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அந்தப் பெண் கூறி யதை இங்கே உங்களிடம் கூறுகிறேன், கேள்வி: அந்தப்பெண் உங்களிடம் ஏன் இதையெல்லாம் கூறவேண்டும்?

பிரதீப் சர்மா: அவர் கட்டடக்கலை நிபுணர் மட்டுமல்ல, நல்ல தோட்டக் கலை நிபுணரும் கூட மேலும் நல்ல நண்பர், உள்ளத்தில் ஒன்று வெளி யில் ஒன்று வைத்துக் கூறும் பழக்கம் அவரிடம் இல்லை, ஆரம்பத்தில் அவரின் சில பழக்கவழக்கங்களை என்னிடம் கூறியுள்ளார். பிறகு மெல்ல மெல்ல அவரது பிரச்சினைகளை என்னிடம் கூறி அறிவுரைகளைக் கேட்டுள்ளார். கேள்வி: ஆனால் பாரதீய ஜனதா தலைவர்கள் அனைவரும் உங்களுக் கும், அந்தப் பெண்ணிற்கும் தவறான தொடர்பு உள்ளது, உங்களிடம் இருந்து தனது பெண்ணை காப்பாற் றும்படி, பெண்ணின் தந்தை நரேந்திர மோடியிடம் கூறினார். என்று தான் இன்றுவரை கூறிவருகிறார்கள், பிரதீப் சர்மா: 2006-ஆம் ஆண்டு சாதாரண கட்டடக்கலை நிபுணராக வந்த ஒரு பெண், சில ஆண்டு களிலேயே குஜராத் அரசின் பெரிய பல ஒப்பந்தங்களைப் பெற்று கோடி களை வருவாயாகப் பெற்றுள்ளார். இது எப்படி என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒன்று நான் கண்ணால் கண்டது. சில ஆண்டுகளுக்குள் ளேயே விலை உயர்ந்த அயல் நாட்டுக் கார் ஒன்றிற்கு உரிமையாளராக மாறிவிட்டார். அந்தக்காரை பழைய விலைக்கு விற்றால் கூட அதை வாங் கும் தகுதி பலருக்கு இல்லை. காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும். செய்தியாளர்: இதுவரை எங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி.

- (சரவணா ராசேந்திரன்)

தமிழ் ஓவியா said...


ஏகலைவனின் கட்டைவிரலை இன்று கேட்டால் கேட்பவரின் தலையைக் கேட்பார்கள்!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏகலைவன் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம்

தமிழர் தலைவர் அவர்கள் கண்பார்வை - வாய்ப்பேச முடியாத பாத்திமா பானுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

சென்னை, நவ. 27- ஏகலைவனின் கட்டை விரலைக்கேட்கும் காலம் மலையேறிவிட்டது; இன்று அப்படிக்கேட்டால் கேட்பவனின் தலை யைக் கேட்பார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏகலைவா புரோஸ்கார் 2013 விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் மன்றத்தில் 24.11.2013 அன்று மாலை நடை பெற்றது. விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் பேசியதாவது:

முதலில் இந்த விருதுக்கு ஏகலைவன் பெயரைத் தேர்ந்தெடுத்ததற்காகப் பாராட்டுகிறேன்.

ஏகலைவன் யார்? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தக்காலத்தில் கல்வி என்பது கெமிஸ்ட்ரி பிஸிக்ஸ் அல்ல வித்தை என்று பொருள் தான் கல்வி.
அன்று கல்வி என்பது என்ன?

சொல்வதைக் கேட்பது - பயிற்சிகளைக் கற்றுத் தருவது தான் வித்தை.

அதில் சேர்ந்தது தான் இந்த வில்வித்தை என்ப தாகும். அந்நாளில் துரோணாச்சாரி காட்டில் சென்று கொண்டிருந்தார். நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. அந்தச்சத்தம் வந்த திசையை நோக்கி ஏகலைவன் அம்பை எய்துகிறான்- சரியாக நாயின் வாயை அந்த அம்பு தாக்குகிறது.

துரோணாச்சாரிக்கு ஏற்பட்ட ஆச்சரியம்!

துரோணாச்சாரிக்கு ஆச்சரியத்தில் ஆச்சரியம் அது போன்ற திறமை அர்ச்சுனனுக்குத் தானே உண்டு என்று யோசிக்கிறான்.

அந்த நேரத்தில் ஏகலைவன் வருகிறான். அந்த அம்பை எய்தது நான்தான் என்கிறான்.

நீயா? நீ யார்? என்ற கேள்வியைக் கேட்டான் துரோணாச்சாரி. வேட்டுவக்குலத்தில் பிறந்த என் பெயர் ஏகலைவன் என்று பதில் சொல்கிறான்.

கட்டை விரல் காணிக்கை

உனக்கு இந்த வித்தையைச் சொல்லிக் கொடுத்தது யார் என்று கேட்டான் துரோணாச்சாரி. அவன் உண்மையை சொல்லுகிறான். நான் முதலில் உங் களிடம் தான் வந்தேன். உங்களிடம் வில்வித்தை யைக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆசைப்பட் டேன் ஆனால் என்னைக் கீழ் ஜாதி என்று கூறி நீங்கள் மறுத்து விட்டீர்கள்.

நான் என்ன செய்தேன்? உங்களை மாதிரி ஓர் உருவத்தைச் செய்து வைத்து இந்த வில் வித்தை யைப் பயின்றேன், என்றான் ஏகலைவன்.

பார்ப்பன மூளை வேலை செய்தது துரோணாச் சாரிக்கு; என்றைக்கு பார்ப்பனருக்கு நேர்மையான பார்வை இருந்தது?

என்னைக் குருவாக வைத்துத்தானே இந்த வில் வித்தையைக் கற்றுக்கொண்டாய்? அப்படியானால் குரு தட்சணை எங்கே என்று கேட்டான்.

அந்த அப்பாவியான ஏகலைவன் எதைக் கேட்டாலும், கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றான் முன்யோசனை இன்றி.

இது போதாதா துரோணாச்சாரிக்கு? உனது வலது கைக்கட்டை விரலை குரு தட்சணையாகக் கொடு என்று கேட்கிறான்.

ஏகலைவனோ சற்றும் தயக்கமின்றி வலது கை கட்டை விரலை வெட்டிக் கொடுக்கின்றான்.

கட்டை விரலை வைத்துத் தானே வில்லை வளைத்து அம்பை எய்திட முடியும், கட்டை விரலை எடுத்து விட்டால் கீழ் ஜாதிக்காரன் எப்படி அம்பை எய்வான்?

தமிழ் ஓவியா said...

இதுதான் வருணா சிரமம்

இந்து மத சமூக அமைப்பில் வருணா சிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட ஒன்று.

ஏணிப் படிக்கட்டு முறையில் ஜாதி அமைக் கப்பட்டது. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற அமைப்பில் சூத்திரன் படிக்கக் கூடாது. கல்வியைக் காதால் கேட்க முடியாது.

சூத்திரனின் நிலை

சூத்திரனுக்குக் கூலிக் கொடுத்தேனும், கொடுக்கா மலேனும் சூத்திரனை வேலை வாங்கலாம். சூத்திரன் சொத்துக்களை உயர் ஜாதிக்காரன் கொள்ளை அடிக்கலாம் என்பதுதான். பார்ப்பனீய மதமான இந்து மதத்தில் மனுதர்மம் கூறுகிறது.

குஜராத்தில் மனுதர்மம்

இந்த மனு தர்மம் தான் குஜராத்தில் மோடி ஆட்சியில் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சொல் லிக் கொடுக்கப்படுகிறது. மோடிகள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய கதைதான்.
இங்கு ஏன் அந்தத்திட்டம் வரவில்லை என்றால் நாங்கள் இருப்பது தான் காரணம்! (பலத்த கர ஒலி!)

இராமாயணமாக இருந்தாலும் சரி, மகா பாரதமாக இருந்தாலும் சரி. அது ஆரிய, திராவிடர் போராட்டம் தான். சமூக நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடந்த போராட்டம். அன்று சமூக நீதி என்பது குலதர்மம் தான்

விளையாட்டு வீரர்களுக்குத் துரோணாச்சாரி விருதா?

இதில் வெட்கக்கேடு என்னவென்றால் விளை யாட்டுகளில் வெற்றி பெறுவோர்களுக்குத் துரோணாச்சாரியின் பெயரில் விருது கொடுக்கப் படுவது தான்.

1989ஆம் ஆண்டில் மத்தியில் வி.பி.சிங் பிரதம ராக இருந்தார். ராம் விலாஸ் பஸ்வான் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் இதே சென்னையில் கூறினேன்.

ஏகலைவன் கட்டை விரலை குரு தட்சணை யாகப் பெற்ற துரோணாச்சாரி பெயரால் மத்திய அரசு விருதுகளை வழங்கலாமா? இது சமூக நீதியா? என்ற வினாவை எழுப்பினேன்.

எனது கேள்வியில் இருந்த நியாயத்தை பஸ்வான் உணர்ந்தார். கெட்ட வாய்ப்பு அந்த ஆட்சி நீடிக்க முடியவில்லை. சமூக நீதிக்கு எதிரான சக்திகள் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டன.

துரோணாச்சாரிகளின் காலம் மலை ஏறிப் போய்விட்டது

கருநாடக அரசுக்கும் வசந்தகுமாருக்கும் இடையே நடந்தது ஒரு பிரபலமான வழக்கு. உச்சநீதி மன்றத்தில் முழு அமர்வு அதனை விசாரித்தது. நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி அந்த வழக்கில் ஒன்றை அழுத்தமாகப் பதிவு செய்தார். கூந னுயலள டிக னுரசடியேஉயசல யனே நுமயடயஎய ளை டிஎநச துரோணாச்சாரி - ஏகலைவனைப் பழிவாங்கிய அந்த காலம் மலையேறி விட்டது என்று அழகாகக் குறிப்பிட்டார்.

இன்று கட்டை விரலைக் கேட்டால்...

இன்று யாராவது கட்டை விரலை வெட்டிக் கொடுக்கச் சொன்னால் சொல்லுகின்றவனின் தலையை வெட்டும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

உங்கள் அமைப்பு ஓர் அருமையான பணியைச் செய்ய முன்வந்துள்ளது, பாராட்டுக்குரியது.

ஏகலைவா புரோஸ்கார் 2013ஆம் ஆண்டுக்கான விருதுக்குக் காது கேட்காத, பேச முடியாத மாற்றுத் திறனாளியாகிய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது.

தமிழ் ஓவியா said...

பார்வையுள்ளவர் யார்?

அவர் கண் பார்வையற்றவர் என்று சொல்லப் படலாம். ஒருவன் சாலையில் போகிறான். பார்வையு டையவன்தான். ஒரு கல் அவனைத் தடுக்கிறது என்றால் அதைத் தூர எறியாமல் போகிறான். இன்னொருவன் கண்பார்வை இல்லாதவன், அவன் காலில் தடுக்கிய கல்லை எடுத்துத் தூக்கி எறிகிறான்.

இருவரில் உண்மையில் பார்வை உள்ளவர் யார்? (கைதட்டல்).

பாத்திமா பானுக்குப் பாராட்டும் - வாழ்த்தும்!

நீங்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கின்ற செல்வி பாத்திமா பானு கண் பார்வை இல்லாதவர் - வாய்ப் பேச முடியாதவர் அதே நேரத்தில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் என்று அறிகிறபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. செல்வி பாத்திமாபானுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சி இருந்தால் சாதனைகள் நிகழ்த்தலாம் - முன்னேறலாம் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு!

இந்தியாவிலேயே உங்கள் அமைப்பு இதில் முன் மாதிரியாக இருக்கிறது என்பதற்காக உங்களையும் பாராட்டுகிறேன்.

மதவாத சக்திகள் - எச்சரிக்கை!

இன்றைக்கு மதவாத சக்திகள் தலைதூக்கப் பார்க்கின்றன; அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக் கின்றன.

இவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்தாலும் சரி, சிறு பான்மை மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக் காக நாங்கள் அரணாக இருப்போம் - அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம்.

இந்துத்துவா என்ற பெயரில் பார்ப்பன சக்திகள் தலைதூக்கப் பார்ப்பதை முறியடிப்போம் என்று கூறினார்.

ஏ.எஸ்.இஸ்மாயில்

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் குறிப்பிட்டதாவது:-

பாசிசத்தை எதிர்ப்பதில் திராவிடர் கழகமும் அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் தொடர்ச்சியாக உறுதியாக சரியான நிலைப் பாட்டை எடுத்துப் பாடுபட்டு வருகின்றார்கள்.

ஒரு காலத்தில் வறுமையின் காரணமாக தீவிர வாதிகள் தோன்றியதாகக் கூறப்பட்டது. இப் பொழுது படித்து நல்ல நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களையும், சிறுபான்மை மக்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு முசுலிம்களை எடுத்துக் கொண்டால் ... அய்.ஏ.எஸ். வெறும் 2.90 சதவீதம்தான் அய்.பி.எஸ். எனில் வெறும் மூன்றே சதவீதம்தான். ஆளும் வர்க்கம் சட்டம் இயற்றினாலும் அதிகார வர்க்கம் முட்டுக்கட்டை போடுகிறது.

ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் 20 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏ.பி.வி.பி. எனும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவு அவர்களை பலவகைகளிலும் அவமானப்படுத்தி வருகிறது - சிறுமைப்படுத்தி வருகிறது.

தனியார்க் கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா பாடத்திட்டங்களில் இடம் பெறுகின்றது.
கற்றல், போராடுதல் அர்ப்பணிப்பு இம்மூன்றும் நமக்குத் தேவைப்படுகிறது அவற்றை வளர்த் தெடுப்போம் என்றார்.

நிகழ்ச்சி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏகலைவா புரோஸ்கார்-2013 விருது வழங்கும் விழா சென்னையில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் மன்றத்தில் 24.11.2013 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அப்துல்ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.அய். கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவரைத் தேர்வு செய்து ஏகலைவா புரோஸ்கார் விருது வழங்கப் படுகிறது.

ஆண்டிற்கான ஏகலைவா புரோஸ்கார்-2013 விருதிற்கு சென்னையைச் சார்ந்த மாற்றுத் திறனாளி மாணவி பாத்திமா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காது கேளாதவர் பேச முடியாதவர்! - 10ஆம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடமும், +2வில் முதலிடமும் பெற்றவர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஏகலைவா புரோஸ்கார்-2013 விருது மற்றும் ரூபாய் அய்ந்தாயிரம் ரொக்கப் பரிசினை தேர்ந் தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவிக்கு வழங்கி கவுரவித்து சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏ.எஸ்.இஸ் மாயில் மற்றும் எஸ்.டி.பி.அய். கட்சியின் கே.கே.எஸ். எம். தெஹலான் பாகவி அவர்களும் மாணவர்களின் அறிவு சார்ந்த சமூகம் சார்ந்த சிந்தனைகள் புனரமைப்பது குறித்து சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை - பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் லண்டன் பத்திரிகைக்கு கேமரூன் பேட்டி



லண்டன், நவ. 28- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண் டார். அப்போது, தமிழர்கள் பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடு மைகளையும், ராணுவ அத்துமீறல் களையும் கதறியபடி அவரிடம் எடுத் துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத் தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறு திக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசா ரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.

இந்த நிலையில், தற்போது லண் டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:

நான் இலங் கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனா லும், அங்கு பார்த்த காட்சி கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் அய்.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷ யத்தில் முன்னேற்றம் வேண்டும். உண் மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் சிங்களர் இடையே நல்லிணக் கம் வேண்டும்.

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது. - இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மின்னஞ்சலில்...



ராமர் பாலம் மிதக்கும் பாலமே! சுக்ரீவனின் சேனை சேது கரையோரமாக இருந்த கற்களையும், பாறைகளையும் பெயர்த்தெடுத்து விஸ்வகர்மாவின் மகன் நளன் கையில் கொடுக்க, அவன் அதைக் கடலில் தூக்கிப் போட்டான். நளன் கையில் பட்ட அனைத்தும் மிதக்கும் என்ற அவன் பெற்ற வரத்தின் காரணமாக அவை அனைத்தும் மிதந்தன. ஆகவே அது மிதக்கும் பாலமே, அது கடலின் அடிபகுதிக்கு எப்படி சென்றது? சிந்திப்பீர்!

- பெரியார்மணி

தமிழ் ஓவியா said...


இடையில் மூன்றே நாட்கள்!
எழுத்துரு அளவு Larger Font

கழகத் தோழர்களே, தோழியர்களே!

டிசம்பர் 2 - இடையில் மூன்றே நாள்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாள்,

தமிழர் தலைவர் பிறந்த நாள்,

பெரியார் பேருருவச் சிலை - பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி வழங்கும் விழா -

தோழர்களே, உங்கள் மாவட்டத்திற்கான இலக்கினை முடித்து விட்டீர்களா?

நிலுவையிருந்தால், இந்த மூன்று நாள்களிலும் முடுக்கோடு முனைப்பாகச் செயல்படுவீர்!

செயல்படுவீர்!!

டிசம்பர் 2 - தஞ்சை கண்கொள்ளாக் காட்சி - களேபரமான ஏற்பாடுகள் - கழகத் தோழர்களின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பெரியார் பேருருவச் சிலை இப்பொழுதே அங்கு நிற்பது போன்ற உணர்ச்சி அலைகள்!

வாழ்விலோர் திருநாள்!

வாருங்கள் தோழர்களே,

குடும்பம், குடும்பமாய்!

மறக்கவேண்டாம் - உங்கள் மாவட்ட இலக்கினை நிறைவு செய்த நிறைவோடு வாருங்கள் - கூடுதல் மகிழ்ச்சி உங்களுக்கும், தமிழர் தலைவருக்கும்!

என்ன சரிதானே!

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏற்காடு இடைத்தேர்தல் அத்துமீறல்: கலைஞர் பேட்டி


சென்னை, நவ.28- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விதி முறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

கலைஞர் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக் கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்தியாளர் :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கலைஞர் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். செய்தியாளர் :- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
செய்தியாளர்:- புதுச்சேரி நீதிமன்றம் சங்கரராமன் கொலைவழக்கு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி.

கலைஞர்:- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.

செய்தியாளர் :- உங்களுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்

கிறார்களே? கலைஞர் :- கண்ணகி சிலை யையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும் பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக் கட்டும். செய்தியாளர் :- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற் பட்டுள்ள திடீர் பழுது கள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!


எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்...
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்....
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட, தமிழகம் முதல் டெல்லி வரை 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்பதும், அதன் விளைவாக மண்டல் சூறாவளி வடபுலத்தில் வீசி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒப்பிட முடியாத வாழ்க்கை


எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின. இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

- டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.

- நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

நீ சொல்லு - நான் சொல்றேன்

(இன்றைய காலத்தில் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுப்புக் கழிப்பறைகள்தான் இருந்தன. நகரங்களில் சிலர் தெரு ஓரங்களையே கழிப்பிடமாக ஆக்கிவிடுவார்கள். அந்த மலத்தை அள்ளும் தொழிலாளர்கள் அதன் மீது முதலில் சாம்பலைப் போடுவார்கள்; பின்பு அள்ளிச் செல்வார்கள். இந்த நடைமுறை இருந்த காலத்தில் பின்வரும் நகைச்சுவை உரையாடலைப் பெரியார் எழுதியுள்ளார்.)

வைணவ தாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படிச் சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்குச் சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மைக் கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

(9.11.1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்


இந்து மதம் ஒழிவதே நல்லது!

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்

(1929 இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில், இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

நேர்மை + நாணயம் = ஆசிரியர்


ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு - அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.

மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.

அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.

எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.

அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.

அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.

அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் (இன்பிராரெட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்விட்சினை பொறியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார்.

செல்பேசி மூலமாக பயனாளிகள் மணியார்டர் தொகையினைப் பெறும் வசதி நவம்பர் 16 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் காவல்துறையின் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 19 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய பெண்கள் வங்கி) நவம்பர் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பண்பாளர் - பேரா.நம்.சீனிவாசன்

கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார்.

ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக வரும் பழக்கமும் அவரிடம் இல்லை. முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கின்றார். கழகத் தோழர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கின்றார். குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிகின்றார்.

மணவிழா அழைப்பிதழ் தருவோரிடம் திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார். சுவரொட்டி விளம்பரங்கள், அழைப்பிதழ்களில் தன் பெயர் சிறிய எழுத்தில் இருக்கிறதா -_ பெரிய எழுத்தில் இருக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் நட்புறவாகப் பழகுகின்றார். ஒருமுறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்றார். வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றிக் கௌரவிக்கின்றார். உடல் நலம் குன்றிய தோழர்களை மருத்துவமனையிலும் அவர்களது இல்லத்திலும் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை ஊட்டுகின்றார்.

இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகின்றபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, உணவை விரயமாக்காமல் உண்கின்றார். கட்சித் தோழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்கின்றார்; செய்த உதவிகளை யாரிடமும் சொல்லாமல் மௌனம் காக்கின்றார்.

தமக்கு வருகின்ற அன்பளிப்புப் பொருட்களை இயக்கத்திற்குக் கொடுத்து விடுகின்றார். கி.வீரமணியைச் சந்தித்துப் பேசுவதற்கு எவ்விதத் தடையும் யாருக்கும் கிடையாது. யாரையும் காக்க வைக்காமல் உடனே சந்தித்து அனுப்பி வைக்கின்றார். சுற்றுப் பயணத்தின்போது கி.வீரமணி ஆடம்பர விடுதிகளில் தங்குவதில்லை. கட்சித் தோழர்கள் கூட்டம் கூட்டமாக அறைகளில் வந்து சந்திப்பதைத் தடுப்பதில்லை.

கி.வீரமணி தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லும்போது உடனே பணத்தைக் கொடுத்து விடுகின்றார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்து சுறுசுறுப்புடன் இயங்குகின்றார். உடல் நலமில்லை; சோர்வாக இருக்கின்றேன் என்றெல்லாம் கி.வீரமணி கூறுவதே இல்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், நீதிபதி, உயர் அதிகாரி, கல்வியாளர் என்று பலரிடமும் செல்வாக்குடன் திகழும் கி.வீரமணி அதனைப் பற்றி எவரிடமும் பெருமையாகக் கூறுவது இல்லை. திராவிடர் கழகத்தின் செல்வாக்குக்கும், பல அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்கும் கி.வீரமணியே காரணமாக இருக்கின்றார் என்றாலும், நான் என்று சொல்லாமல் நாம் என்றே கூறுகின்றார்.

கி.வீரமணி பாராட்டப்பட வேண்டியவர்களை மனம் திறந்து பாராட்டுகின்றார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறுவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதை வீரமணியிடத்தில் காண முடிவதில்லை. எப்போதும் கொள்கையாளராகவே இருக்கின்றார்.

பொய் சொல்லுவதில்லை; மது அருந்துவதில்லை; மறைமுகமாகக் காரியம் ஆற்றுவதில்லை; வாக்கு மாறிப் பேசுவதில்லை; பிழைகளைப் பொறுத்துக் கொள்கின்றார். நெருக்கமானவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றார். நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர்; கலகலப்பானவர்; ஒளிவு மறைவு இல்லாதவர்; காலந்தவறாதவர்; எளிய உணவை மேற்கொள்பவர்; சேர்ந்து உண்பதை விரும்பக் கூடியவர்.

தமிழ் ஓவியா said...

பாராட்டி வரவேற்கிறேன்


வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

- பெரியார் ஈ.வெ.ரா.
விடுதலை, 10.8.1962

தமிழ் ஓவியா said...

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - -_ பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி - -_ குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_ -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது --_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பொன்மொழி


நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


சங்கரமடம்


காஞ்சிபுரம் ஏனத்தூரில் உள்ள சங்கர மடத்தின் நிர்வா கத்தில் நடைபெறும் சங்கரா ஆர்ட்ஸ் சயின்ஸ் கல்லூரி நிர்வாகமே! உங்களுக்கு ஓர் கேள்வி!

பெரியார் அறக்கட்டளை சார்பில் தஞ்சை வல்லத்தில் இயங்கும் பெரியார் மணியம் மைப் பல்கலைக் கழகம் தஞ்சை யிலுள்ள நகரப் பேருந்து நிலை யத்திலுள்ள பொது சுகாதார கழிப்பறையை சுத்தம் செய்து, தனது செலவில் இன்று வரை பராமரித்து வருகின்றது.

காஞ்சிபுரம் சங்கரமடம் நிர்வாகம், இம்மாதிரி காஞ்சியில் ஏதாவது ஒரு சமுதாயப் பொது நலன் கருதி செய்வது இல் லையே! ஏன் என்றால் சூத்திர னும், பஞ்சமர்களும் அதை பயன்படுத்துவர்கள் அல்லவா? என்று தஞ்சைக்குச் சென்று வந்த - காஞ்சிபுரத்தைப் பூர்வீக மாகக் கொண்ட - இப்பொழுது சென்னையில் வசித்துவரும் தோழர் அ.நா. பாலகிருஷ்ணன்; அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள் ளார்.

சங்கரமடமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் கர்மா தத்துவத் திலே முழு அளவு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.

தொழில் பாகுபாடும்; ஆசாரங்களை சாஸ்திரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்பொழுதுள்ள நிலைமை ஏற்பட்டு விட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்து கொள்ள வேண்டும் - என் கிறார் மறைந்த காஞ்சீபுரம் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல்).

இந்த நிலையில் உள்ளவர் கள் சமதர்ம சமத்துவச் சிந்த னையோடு செயல்பட முன்வரு வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஓர் அதிர்ச்சியான தகவல் - இப்பொழுது சொன்னால் எவரும் எளிதாக நம்பக் கூட மாட்டார்கள்.

1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதிலேகூட தீண்டத்தகாத வர்கள் அக்ரகாரத்துக்குள் நுழையக் கூடாது என்ற பாகுபாடு இருந்தது என்றால்; சங்கர மடம் நண்பர் பால கிருஷ்ணன் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல முதலில் சிந்திக் குமா? சிந்தித்தால் அல்லவா செயல் என்பது அடுத்த கட்டம்.

சிறைக்குச் சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மல ஜலம் கழிக்க வாழை இலை கேட்கிறார் - அவர்களுடைய புத்தி எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்குக்கூட ஒரே சுடுகாடு கூடாது என்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். கேட்டால் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கிறதே என்கிறார். சமபந்தி போஜனம் என்பதைக்கூட சங்கரமடம் ஏற்றுக் கொள்வதில்லை.

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களின் குணதோஷங்களில் பரமாணுக் களும் நாம் சாப்பிடும் அன்னத் தில் ஓரளவு சேருகிறது.

பரிசுத்தமாக இருக்கப்பட்ட வர்களைப் பங்கத்தி பாவனர் கள் என்று சொல்லியிருக் கிறது. அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தியைச் சுத்தப்படுத்தி விடுவார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆகாரம் உள்ளே போய் நம் மனத்தைத் தூய்மையதாக் கும்.

அதே மாதிரி பங்க்த்தி தூஷகர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ளவர்கள் - இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அவர்களுக்குப் பந்தி முழுவதும் அசுத்தமாகி விடுகிறது என் கிறார் சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதி - இப்படி சொல்லுவது சாதா ரணக் குரல் அல்ல - தெய்வத் தின் குரலாம்.

நண்பர் பாலகிருஷ்ணன் போன்று நல்ல மனம் கொண்ட வர்கள் இத்தகு மனப்பான்மை கொண்டவர்களிடம் தாராள எண்ணத்தையும் மனிதநேயத் தையும், பண்பையும் எதிர்பார்க் கலாமா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு : சட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.29-திருமணம் செய்து கொள் ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண் களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண் ணும் இணையர் களாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப் போது அதிகமாகி உள் ளது. சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பா லோர் பிரிந்து விடுகின் றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ் கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் சட்ட பாது காப்பு இல்லாமல் இருக் கிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதா கிருஷ்ணன் தலைமை யிலான அமர்வு விசாரித்து நேற்று வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக் கப்படாமல் இருப்பதா லும், இயற்கை திருமணத் துக்கு முரணாக இருப்ப தாலும், இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண் களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.

எனவே, இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக் கும் வகையில், நாடாளு மன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், இந்த உறவுமுறையையும் இயற்கை திருமண உறவு முறைக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் தீர்ப்பு அளித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் மறுபக்கம்


மோடியைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஒரு பக்கம் திட்டமிட்ட வகையில் புகழ் புராணப் பட்டம் பறக்க விடப்பட்டாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் மூலம் அவரது அந்தரங்கம் அசிங்கமானது என்பது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக பிரதீப் சர்மா என்னும் அய்.ஏ.எஸ். அதிகாரி சி.எஸ்.என். அய்.பி.என். ஆங்கில அலை வரிசையில் அளித்த பேட்டி ஒன்று போதும் - மோடி என்னும் விகார மனிதனின் முழு வடிவத்தைத் தெரிந்து கொள்வதற்கு.

இதில் ஒரு பெரிய வெட்கக்கேடு என்ன வென்றால், மோடியைப்பற்றி வெளிவரும் அசிங்கமான தகவல்களை இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளின் கைகளில் பதுங்கியுள்ள ஏடுகளும், இதழ்களும் அப்படியே மூடி போட்டு மறைக் கின்றன.

தெகல்கா ஆசிரியர் தேஜ்வால் பற்றிய தகவல்களைப் பெரிதாக்கி, மோடியின் பெண் தொடர்பான சங்கதிகளைக் கழுத்தைத் திருகிப் புதைத்து விட்டனர்.

மான்சி என்னும் கட்டடக் கலை பொறியாள ரான பெண்ணுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.அய். வசம் விசார ணையை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்களையும் பிரதீப் சர்மா அந்தப் பேட்டியில் கூறினார். ஒரு பெண்ணிடம் பேசத் தகாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களை உதிர்த்திருக்கிறார்.
நள்ளிரவில்கூட மோடியை, அந்தப் பெண் சந்தித்திருக்கிறார் என்கிற தகவல்கள் எல்லாம் வெளி வந்துள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி, விதிமுறை களை எல்லாம் தாண்டி, கட்டடக் கலை தொடர்பாக பெரிய பெரிய ஒப்பந்தங்கள் மோடி அரசால் அந்தப் பெண்ணுக்கு, அளிக்கப் பெற்று கோடிகளை வருவாயாகப் பெற்றிருக்கிறார்.

விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் அந்தப் பெண் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் காரை பழைய விலைக்கு விற்றால்கூட அதை வாங்கும் தகுதி பலருக்கு இல்லை; காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பேட்டியில் போட்டு உடைத்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரிகூட இதனை மோடியால் மறுக்க முடியவில்லை என்பதுதான். பதில் சொல்ல ஆரம்பித்தால் வசமாகச் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற அச்சம்தான்.

பிரதீப் சர்மாவை அந்தப் பெண் சந்தித்து வந்ததால், அந்தப் பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளார், முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அந்த அளவுக்கு அந்தப் பெண் ணின்மீது உரிமை கொண்டாடியிருக்கிறார் உள்ளத்தில் என்பதுதான், இதற்குள் குடி கொண்டிருக்கும் உண்மையாகும்.

ஒரு கட்டத்தில் பிரதீப் சர்மா அய்.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட் டுள்ளார். 27 ஆண்டு காலம் சிறந்த அய்.ஏ.எஸ். அதிகாரியாக பெயர் பெற்றவர்; இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மோடியாலும் புகழப்பட்டவர்கூட!

அந்தப் பெண் விஷயத்தில் இவர் போட்டிக்கு வந்து விடுவார் என்ற நினைப்பில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர் இந்தமோடி; அவர் பேச்சை நம்பி அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் யெல்லாம் நட்டாற்றில் விடப்படவில்லையா?

இத்தகு குணாளர் தான் பாரதப் புண்ணிய பூமியின் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார்.

நாட்டு மக்கள் அசிங்கப்படப் போகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப் பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகத்திற்கு பெரியார் பெருந்தொண்டரின் நன்கொடை


தமிழர் தலைவர் மானமிகு முனைவர் கி.வீரமணி அவர்கள் 7.11.2013 விடுதலை இதழில் செல்வத்திற்கு நோய் வரும் - எச்சரிக்கை என்ற தலைப்பில் அருமை யான வாழ்வியல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையில் எங்கள் செய்யாறு நகரைச்சேர்ந்த முதுபெரும் பெரியார் தொண்டர் 88-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் பா.அருணாசலம், பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ள நன் கொடையைப் பற்றி புகழ்ந்துள்ளார்.

பா.அருணாசலம் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள உத்தமர். முயற்சி திருவினை ஆக்கும் என்ற குறள் நெறிக்கு எடுத்துக் காட்டு அவர்.

தமிழர் தலைவர் திருக்குறளில் நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான் (குறள் 1006)

என்ற குறளுக்கு அருமையான பொருளைக்கூறி இருக்கிறார். பெருஞ்செல்வம் படைத்த ஒருவன் தானும் நுகர மாட்டாதவனாய் தகுதி படைத்தவர்களுக்குக் கொடுத்து உதவும் பண்பும் இல்லாதவனாய் இருப்பானேயானால், அவன் தன் பெருஞ்செல்வத்திற்கே கேடு பயக்கும் ஒரு நோயாகக் கருதப்படுவான்.

தான் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரிடம் கழக வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கி வருபவர் அண்ணன் அருணாசலம் தக்கார்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப்பொருள் உண்டானாலும் அதனால் பயன் இல்லை என்பது வள்ளுவர் பொன்மொழி ... (குறள் 1005)

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களால் நிறுவப்பட்டு அவர்களை வேந்தராகக் கொண்டு தஞ்சை - வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பல்லாயிரம் மாணவர்கள் நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன்னால் தமிழர் தலைவர் விடுதலையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பெரியாரின் பரிந்துரையால் நன்மை அடைந்தவர்கள் தங்கள் நன்றிக்கடனாக விடுதலைக்கு சந்தா செலுத்தி இருப்பார்களானால் இன்று விடுதலை இதழ் 2 இலட்சத்திற்கு மேல் வாசகர்களைக் கொண்டு சிறப்புடன் விளங்கும் என்பதே அந்த செய்தி.

தந்தை பெரியார் ஒரு பொன்மொழியைக் கூறுகிறார். நாம் தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளோம். தண்ணீர் குடித்து, தாகத்தை தீர்த்துக் கொண்டவர் களில் எத்தனை பேர் தண்ணீர்ப் பந்தல் வைத்தவர் களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணு கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் கூடக்கிடையாதே.

திருவள்ளுவர் இரு வகை மனிதர்களை இரு வேறு மரங்களுக்கு ஒப்பிடு கிறார். ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின் - (குறள் 216)

தக்கார்க்கு உதவாத காரணத்தில் ஒருவராலும் விரும்பப்படாதவ னுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது (குறள் 1008) பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் போன்றோர் ஊரின் நடுவே உள்ள பயன் மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

தமிழர் தலைவர் தொடங்கியுள்ள பெரியார் உலகம் என்ற அரிய திட்டத்திற்கு அண்ணன் அருணாசலம் தன் குடும்பம் சார்பில் 10 பவுன் (இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார். நண்பர்களிடம் பெரியார் உலகம் நன்கொடை பெற்று பதினாறரை பவுன் வழங்கியுள்ளார்.

வாழ்க பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்!
வளர்க அவர்தம் தொண்டு!

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு முனைவர் வீரமணியார்!
வெல்க அவர்தம் பகுத்தறிவுத் தொண்டு!

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


போலிக் கடவுள்கள்


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில்களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை. விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது. அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது.

சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின்டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி



ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர் வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேதவாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்



மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப் பாரு!

-கி.கி.ஜின்னா

தமிழ் ஓவியா said...


உலகப் பகுத்தறிவாளர்கள்

பேரறிஞர் அண்ணா அவர் கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சியையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத் தைத் தட்டி எழுப்பினார்.

அறிஞர் அண்ணா கூறு கிறார்;

கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத் துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண்டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்? (நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)

தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சி



நீங்களெல்லாம் நன்றாக உணர்ந்துள்ள உண்மைதான் அறிவியல் வளர்ச்சி.

பொறியியல் துணைக் கொண்டு எத்தனை படிக்கட்டுகளைத் தாண்டி அந்த வளர்ச்சி வந்திருக்கின்றது என்பது முதன் முதல் சக்கரம் - உருளையைக் கண்டுபிடித்தானே, அது அறிவியலில் தொடக்கக் கால வளர்ச்சி. சக்கரம் கண்டுபிடிக்காமலிருந்திருப்பின் மகா விஷ்ணுவே கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். திருமாலுக்குக் கூடச் சக்கரம்தான் பெரிய ஆயுதம்.

அசோகர் காலத்தில் அதே சக்கரம் சமாதானத்திற்கு அடையாளம்; போருக்கு ஆயுதமன்று.

நூல்: பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன் -பக்கம் 132

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுவிக்கப்பட வேண்டும்: கலைஞர் கருத்து


கேள்வி :- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந் தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?

கலைஞர் :- புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.அய். அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன. அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது கூறும்போது, சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார்.

அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய் திருந்தேன். எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன்.

வழக்கு விசாரணையில், இதுபோல் வாக்குமூலம் தரவில்லை என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதி மன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக் கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன் என்று குறிப் பிட்டுள்ளார். தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்? காவல்துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்.