Search This Blog

25.9.13

மதம் யானைக்குப் பிடித்தாலும் , மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!

மதம் பிடித்தால் ஆபத்தே! 

மதம் யானைக்குப் பிடித்தாலும் சரி, மனிதனுக்குப் பிடித்தாலும் சரி ஆபத்து ஆபத்துதான். மதம் என்றாலே வெறிதானே!

மதக் காரணங்களுக்காக உலகில் மனித ரத்தம் சிந்தப்பட்டதுபோல, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்பட்டதில்லை என்பது சரியான கணிப்புதான்.
இந்தியாவில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மதம் பிடித்தவர் கள்தானே? குஜராத்தில் ஈராயிரம் பேர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்ததும் மதவெறிதானே!

ஒரு மதத்துக்குள்ளிருக்கும் பிரிவுகளுக்குமிடையே கூட கலவரங்கள் நடந்ததுண்டு - நடப்பதுண்டு.

ஈராக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கொண்டாட்டம் போட்டதும் - இன்னொரு பிரிவினர் எதிர்ப்புக் காட்டியதும் அந்த வகையில்தான்.

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியதும், அன்பே சிவம் என்று சொன்ன சக்திகள் தானே? இந்துக் கடவுள்களின் கைகளில் சூலாயுதம், வேலாயுதம் வைத்திருப்பதன் நோக்கம் என்ன? கொலைகாரன், கொள்ளைக்காரன் கைகளில் இருக்கவேண்டிய ஆயுதங்கள் கடவுள்களிடம் இருக்கின்றன என்று தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில் குறிப்பிட்டபொழுதெல்லாம் - பெரும் வரவேற்பு ஆரவாரங்கள்தான்.
இன்னும் சொல்லப்போனால், இந்துக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய் துள்ளன - கற்பழித்துள்ளன என்பதற்கு எண்ணற்ற இந்துப் புராண - இதிகாசங்களிலே வண்டி வண்டியாக ஆதாரங்கள் உண்டு.
வேற்று மதங்களிலும் இந்த நிலை உண்டு. சிலுவைப் போர் என்பதெல்லாம் என்ன?

பாகிஸ்தானில் கிறித்துவ சர்ச்மீது தாக்குதல் நடத்தப்பட்டு 81 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே காலகட்டத்தில் கென்யாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
கென்யா தலைநகர் நைரோபியில் இஸ்ரேல் நிறுவனத்துக்குச் சொந்தமான வெஸ்ட் கேட் என்ற அங்காடியில் (ஷாப்பிங் மால்) கடந்த சனியன்று (21.9.2013) பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர்; 200 பேர்களுக்குமேல் காயமடைந் துள்ளனர் என்று புள்ளி விவரம் கூறினாலும், அதற்குமேல்தான் எண்ணிக்கை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், படுகொலை செய்வதற்குமுன் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணைகூட நடைபெற்றுள்ளது. பாத்திமா என்ற ஒரு பெண் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
தீவிரவாதிகள் என்னிடம் இஸ்லாம் மதத்தின் கோட்பாட்டைக் கேட்டனர். அதனைக் கூறியதும், என்னை விடுவித்தனர்; ஆனால், என் அருகில் இருந்தவரால் அதைச் சொல்ல முடியவில்லை என்ப தால், அவரைச் சுட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.

மத அடிப்படைவாதிகள் இப்படித்தான் இருப் பார்கள் என்று வேண்டுமானால் சமாதானம் கூறலாமே தவிர - மதம் மக்களுக்குக் கண்ணியமாக எதனைப் போதித்து இருக்கிறது?  நடைமுறையில் மத உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களின் சிந்தனை, எண்ணவோட்டம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மதம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாதா? மத நம்பிக்கையற்றவர்கள் சரியாக சிந்தித்து சரியான திசையில்தானே பயணிக்கிறார்கள்.
பொருள் செலவு இல்லை. நேரக்கேடு இல்லை; வீண் சடங்குகள் இல்லாததால் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும்கூட லாபகர மாகத்தானே இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் மதம் வழிகாட்ட என்ன இருக்கிறது? புதுமைகள் நாளும் பூத்துக் குலுங்கு கின்றன - புதிய சிந்தனைகள் அன்றாடம் பிறந்துகொண்டுதானிருக்கின்றன.

தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்ற கடுகுள்ளத்தைத் துறந்து மனிதாபிமானத்துடன் பிறருக்கும் உதவி செய்து, தொண்டு மனப்பான் மையுடன், எல்லார்க்கும் எல்லாமும் என்ற சிந்தனை யுடன் வாழ்ந்திட வழிகூறும் பகுத்தறிவு எந்த மதத்தையும்விட உயர்ந்தது என்பதை உணர்ந்திட என்ன தடை?

எந்த காலத்திலோ எந்தச் சூழலிலோ உரு வாக்கப்பட்ட மதங்கள் இன்றைய சமூகத்துக்கு உதவும் என்று நினைப்பது அசல் பத்தாம் பசலித்தனமே!
மதத்தை ஒட்டி வாழ்ந்த யுகத்துக்கு விடுமுறை கொடுத்து, மதமற்ற உலகை உருவாக்கி வாழ்ந்து பார்ப்போம் - வாருங்கள்!

                      ------------------------------"விடுதலை” தலையங்கம் 25-9-2013

22 comments:

தமிழ் ஓவியா said...


எது நாத்திகம்?


கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்ன்னு சொன்ன பொழுது எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அம்மாவுக்கு என் மேல் கோபம். எல்லோருடைய தோட் டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்டில் காய்கறி விலையாவது குறையுமே என்று நான் சொன் னதும், என்னைத் திட்டினார்கள். இயேசுவே என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சுடுன்னு பிரார்த்தனை செய்தாங்க.

சின்ன வயசில் இருந்து இந்தச் சண்டை என் வீட்டில் நடந்துகொண்டுதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்படவேண்டியவை தான். அது எந்த மதத்தில் இருந்தால் என்ன?

விகடன் மேடையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆனந்தவிகடன், 25.9.2013

தகவல்: சிவகாசி மணியம்

கேள்விக்கு விடையை மிகச் சரியாகவே நடிகர் பிர காஷ்ராஜ் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை கண்டிப் பாக விமர்சிக்கப்படவேண்டி யதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலென்ன என்ற முத்தி ரையடியுடன் பதிலடி கொடுத் துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

வெறும் வார்த்தையால் அல்ல- தன் தாயார் கிறிஸ்தவர் என்ற முறையில் தமது குடும் பத்திலிருந்தே தொடங்கி கேள்வியின் முனையை மழுங் கடித்துள்ளார்.

இந்து மத அபிமானி களுக்கு, இத்தகைய கேள்வி யைத் தவிர, வேறு கேட்கவே தெரியாதுபோலும்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஊசி போன பண்டம் இது.

இங்கர்சால் நாத்திகம் பேசினார் என்றால், அது பெரும்பாலும் கிறித்துவ மதத்தை விமர்சித்தே இருக்கும். ஏனெனில், அவர் சார்ந்த - அவரை சுற்றிப் பின்னிக் கிடக் கும் மதத்தைப்பற்றிதான், விமர்சனங்கள் இருக்கும் - இருக்க முடியும்.

ஜீன் மஸ்லியரின் மரண சாசனம், கிறித்துவ மதத்தை மய்யப்படுத்தி, இருந்ததில் என்ன ஆச்சரியம்?

தஸ்லிமா நஸ்ரீனின் நாத் திக வாதம், முஸ்லிம் மதத்தை முன்னிலைப்படுத்தியே, இருந்த தும் சரியானதே!

அதேபோல்தான் இந்தியா வில் நாத்திகவாதம் - மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் இந்து மதத்தின் ஆணிவேரை நோக்கியே!

இதனைக்கூடப் புரிந்து கொள்ள இயலாத அடிப்படை நுனிப் பகுத்தறிவும் இல்லாத வர்களாக வினா தொடுப்பது கண்டு பரிகசிக்கத்தான் வேண் டியுள்ளது.
இந்து மத வினா தொடுப் பாளர்களைப் பார்த்து இன் னொரு கூர்மையான - நுட்பமான கேள்வி உண்டு.

இந்து மதத்தில் நாத் திகத்திற்கு இடம் உண்டா, இல்லையா? என்பதுதான் அந்த நறுக்கான கேள்வி. இந்து மதத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு இருந்தால், தேவை யற்ற கேள்வியைக் கேட்டு இருக்கவே மாட்டார்கள்.

இராமாயணத்தில்கூட தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகர் உண்டு என்பது தெரியுமா?

சார்வாகம் (உலகாய்தம்) அய்ந்திரம், சாங்கியம், ஆசீ வகம், பிரகஸ்பதி என்பவை எல்லாம் இந்து மதத்தில் பேசப்படவில்லையா?

பவுத்தமும், சமணமும்கூட இந்து மதப் பார்வையில் நாத்திகம்தானே?

இவற்றைத் தெரிந்து கொண்டிருந்தால் நாத்திகர்மீது நறநற என்று பற்களைக் கடிக்கமாட்டார்களே! - மயிலாடன் 25-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றி கருநாடகமும் கொண்டு வருகிறது


பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா அளித்த பேட்டி வருமாறு:

மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.

மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதுபோன்ற பல சம்ப வங்கள் கருநாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற மாய, மந்திரங் களுக்கு கடிவாளம் போட புதிய சட்டம் அவசியப்படுகிறது.

மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலு வான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கருநா டக சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களிட மும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டு வரப் படும்.
நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய் யப்படும். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட் டில் குடியேறினால் உயி ருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னி டம் கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் அதை பொருட் படுத்தவில்லை. இப் போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.

இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம் பிக்கைகளைப் பரப்பு வது யாராக இருந்தா லும், அது எந்த வகை யில் பரப்பப்பட்டாலும் நட வடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற் றின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். எது மூட நம்பிக்கை, எது நம் பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டிருக் கும் என்றார்.

தமிழ் ஓவியா said...


இல்லத்தரசிகளுக்கு இதோ ஒரு நற்செய்தி!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர் கள் - ஒருவரிடம், ஒரு பொது நிகழ்ச்சியில், கேள்வி கேட்கும்பொழுது (அய்.நா. பொது அசெம்பளி) அந்த நபரைப் பார்த்து, நீங்கள் புகை பிடிப்பதை விட்டுவிட்டீர் களா?என்று கேட்கிறார்.

அதற்கு அவர் சற்று தடுமாற்றத்துடன் சிற்சில வேளைகளில் விட்டு விட்டிருப்பேன் என்று கூறுகிறார்.

ஆனால், ஒபாமா அவர்கள், நான் கடந்த 6 ஆண்டுகளாக புகை பிடிப்பதை அறவே விட்டுவிட்டேன். காரணம், என் வாழ் விணையர் திருமதி மிஷேல்தான். அவரைக் கண்டு நான் மிகவும் பயப்படுவேன்; மாற்றாக நிகோட்டைன் கம் (Niccotine Gum) என்பதை, எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தி வருகிறேன்.

இதனால் (புகைப் பிடிப்பதை நிறுத்திய தால்) கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைந்து, பார்டரில் நின்றுள்ளது எனக் கூறினார்.

இவரும், இவரது வாழ்விணையரும் உடல்நலப் பாதுகாப்பில் மிகவும் குறியாக இருப்பவர்களாம்; இதுவரை வெள்ளை மாளிகையில் குடியேறிய அமெரிக்க அதிபர்கள் பலர்; அமெரிக்க அதிபர் பொறுப்பு என்பது அவ்வளவு லேசானதல்ல! மிகவும் தொல்லைகள் நிரம்பிய உலகப் பார்வை விழும் பதவி அல்லவா!

மிகவும் மன உளைச்சல் அதிகம் ஏற்படுத்தும் பதவி. எனவேதான் அவர்களில் பலரும் நடைப்பயிற்சி, மெது ஓட்டப் பயிற்சி (Jogging), கால்ஃப் (Golf) மற்றும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து இவைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை (Stress) போக்கிக் கொள்ள முயலு கின்றனர்!

பலர் புகைப் பிடிப்பதற்கே மூல காரணம் இந்த மன அழுத்தம்தானே!

புகையிலை எந்த ரூபத்தில் நம் உடலுக் குள் - நுரையீரல், இருதயத்துக்குள் சென் றாலும் நம் ஆயுளை வெகுவேகமாகக் குறைக்கும் - அதிக ஆற்றல் அதற்கு உண்டே!

எனவே, இந்த ஆபத்திலிருந்து (அந்தப் பழக்கம் உடையவர்கள்) மீண்டாக வேண்டும்; ஒவ்வொரு தடவை புகை பிடிப்பதும், ஒவ்வொரு தடவை தற்கொலை மாத்திரைகளை உட்கொள்வதற்குச் சமமாகும்!

உங்களில் எவருக்காவது அந்தத் தீய பழக்கம் இருந்தால், உடனே நிறுத்துங்கள்! அது பழக்கமாகி, வழக்கமாகிவிட்டது, புகை பிடிக்காவிட்டால், சுறுசுறுப்பு அல்லது ஒரு உணர்வு பீறிட்டு வருவதிலிருந்து எப்படி நிறுத்துவது என்று கேட்காதீர்கள்!

மனதில் உறுதி இருந்தால், முடியாதது எதுவும் இல்லையே!

தந்தை பெரியார் அவர்களே கூறியுள் ளார், நான் சங்கிலித் தொடர் புகைப் பிடிப்பாளி (Chain Smoker) ஆக இருந்த வன்; பிறகு ஒரு நாள் முடிவுசெய்தேன், உடனே நிறுத்திவிட்டேன்! என்றார்!

சில கணவன்மார்கள் புகைப்பிடிப்பதை விட முடியவில்லை என்று பிடிவாதம் பிடித் தால், அவர்களை மனைவிமார்கள் (வாழ் விணையர்கள் என்ற சொல்லாட்சி இவர் களுக்குப் பொருந்தாது என்பதால், அதைத் தவிர்த்துள்ளேன்) கணவன்களுடன் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, அவர் களை பணிய வையுங்கள் (திட்டிக்கூட).

எதை மறுத்தால், அனுமதிக்காததால் (பொருளாதாரமோ, உணவோ அல்லது வேறு எதுவோ) அவர்கள் வழிக்கு வரு வார்களோ, அதனைச் செய்யவேண்டும்!

காரிகையை நம்பினோர் கைவிடப்படார்!

மனைவி சொல் கேட்பவர் மகத்தான வெற்றியாளர் - பல வீடுகளில்! - மறவாதீர்!

தமிழ் ஓவியா said...


கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவிடுமாமே ஆதிமூலம்...

முதலையின் வாயிலிருந்து ஆனை யைக் காப்பாற்றிய ஆதிமூலம் நாடே அப()யக்குரல் கொடுத்த பின்பும் பாராமுகமாக இருப்பதைப் பார்த்து ஆறாத்துயரத்தில் மக்களும், ஆட்சி யாளர்களும் இருக்கின்றனர்.

குருவாயூர் கோயிலில் இருக்கும் தங்கத்தைக் கணக்கிடுவதே கஷ்ட மாமே! அப்படியானால் அவற்றைப் பாதுகாப்பது அதைவிடக் கஷ்ட மாயிற்றே!

திருவட்டாறில் ஆதிகேசவப் பெரு மாள்மீது இருந்த தங்கத் தகட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்தெடுத்து பூசாரி கொண்டு சென்றபோது, அதைப்பற்றிக் கவலைப்படாமல் சப்தமின்றி இருந்த பெருமான் போன்று தானே குருவாயூரப்பனும் இருப்பார்? பூசாரிக்கும், அவரோடு சேர்ந்தவர் களுக்கும் கொண்டாட்டம் தானே? இதனால் தானே கணக்கு வழக்கென் றால், அரசியல் கட்சிகள் போல் இந்து அமைப்புகள் கூச்சலிடுகின்றன.

நாட்டில் எவ்வளவு தங்கம் இருக் கிறது என்பதைக் கணக்கிடவே ஒத்து ழைக்காத தேவஸ்தானங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
மக்களிடமிருந்து வரியாகப் பணம் வசூலித்தால் வருந்துகின்றனர். அப் படியின்றி அவர்களாகவே விரும்பி பணத்தைக் கொடுக்க வைக்க அரசாங்க கஜானா பெருக கவுடில்யரின் ஆலோ சனைப்படி அமைக்கப்பட்ட அமைப்புத் தான் கோயில்கள் என்பதை எல் லோரும் அறிவர். அரசாங்கம், பணம் பெறுவதற்காகவே அமைக்கப்பட்ட அமைப்பு இப்போது தன்னாட்சி பெற்று தங்கள் இஷ்டம்போல் செலவழிக்க ஆரம்பித்துவிட்டன. அதன் வருவாய் கள், இருப்புகள் தங்கம், வைரம் போன் றவைகூட சரிவர கணக்கில் காட்டப் படுவதில்லை உண்டியல் எண்ணும் போது தங்கம், பணம் காணாமல் போகின்றன. மக்கள் சுபிட்சத்திற்காக யாகம் நடத்துகிறோம் என்று பார்ப் பனர்கள் தங்கள் சுபிட்சத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.

கோயில் கருவூலங்களில் முடங்கிக் கிடக்கும் கணக்கற்ற பணக் குவியல் களை நாட்டுக்காகச் செலவு செய்வதில் என்ன தப்பு? இன்றைக்கு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழியத் தொடங்கியுள்ளது. இதனைச் சரி செய்யவேண்டாமா?

மத நிறுவனங்கள் தாமே முன்வந்து நெருக்கடி தீர உதவி இருக்கவேண்டும். அப்படி செய்யாததால் அதை செய்ய வைக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

சீன யுத்தத்தின்போது நாட்டுக்கு தங்கம் தேவை என்று அரசு அறி வித்ததும் மக்கள் தங்களிடமிருந்த தங்கத்தை மனமுவந்து கொடுத்தனர். கழுத்தில், காதில் கிடந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். தமிழ்நாடுதான் அதிக அளவில் தங்கம் வழங்கியது.

தேவஸ்தானங்களும், இந்து அமைப்புகளும் ஏதோ அவர்கள் வீட்டுத் தங்கக் கணக்கைக் கேட்பதுபோல அலறுகிறார்கள். சீன யுத்தத்தின்போது ஏழை எளியவர்கள் பொதுமக்கள் எவ்வளவு தங்கத்தை வாரி வாரி வழங்கினர். அவர்கள் கோயிலைவிட அங்கிருக்கும் சிலை முதலாளி களைவிட எவ்வளவு மேலானவர்கள் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கோயில்களில் இருக்கும் தங்கம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். நாட்டைக் காக்க, மக்களைக் காக்க பக்தர்கள் முன்வர வேண்டும். ஓர் இயக்கமாகச் செயல்பட்டு மத நிறுவனங்கள் தங் களிடமிருக்கும் தங்கத்தில் ஒரு சிறு பகுதியையாவது கொடுக்க வைக்க வேண்டும். அவர்களிடமிருக்கும் மக்கள் பணம் மக்களுக்குப் பயன்படாமல், ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுகிறது என்றால் அது பெருங்கொடுமை யல்லவா? இக்கொடுமையைப் போக்க வேண்டியது பக்தர்கள் கடமை அல்லவா?

- ப.சங்கரநாராயணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...


பெருமை


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

தமிழ் ஓவியா said...


காவி ரிப்பன்களும்... புன்னகைக்கும் பிள்ளையாரும்!


கடந்த 16.9.2013 அன்று சென்னை யில் பல இடங்களில் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக் கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு..

கண்கள் சிவக்க வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர் களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது. இவர்களுக்குக் கடவுள் பக்தியெல்லாம் இருப்ப தாகத் தெரியவில்லை. ஒரு வெறி யோடு இயங்குகிற இளைஞர்களா கவே இவர்கள் இருக்கிறார்கள். கணபதியைக் கடலில் கரைப்பது தங்களுடைய ஜபர்தஸ்த்தை காட் டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.

இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி மாதிரியான அமைப்புகளின் ஆதரவும், பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பலமென்ன என்பதைக் காட்டுவதற்கு விநாயகர் ஒரு கருவியாக இருக்கிறார். அவரும் இந்த காவி நாயகர்களோடு பயணிக்கிறார். இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு. காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப் படும் ஒருவித டெம்போ ஆட் டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பக்தர்களும் கடற்கரைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள் போல.... டிஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதி னைந்து வயது இருக்கலாம்.

அவள் அந்த டெம்போவையொட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக் கிறாள். ஆட்டோவில் இருந்த இளை ஞர்கள் முதலில் விசிலடித்தனர். பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எறிந்தனர். அதற்குப் பிறகு அதில் ஒரு பொறுக்கி தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின்மீது பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான். அந்தப் பெண் ஏதோ பதிலுக்கு திட்ட ஆரம்பிக்க, ஆட் டோவை அந்த பெண்மீது ஏற்றுவ தைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ ஓட்டுநர். உதயம் தியேட் டர் அருகே நூறடி சாலை திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப் பது போல ஓட்ட, அந்தப் பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீய ணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தத்தின் அருகே தடுமாறி விழுந்தாள்.

பெரிய காய மில்லை, விழுந்ததும் அருகிலிருந்து பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து கொண்டே, பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பக்தர்கள். அதில் ஒருவன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சத்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள் ளையார் வண்டிகளின் வரிசையில் இணைந்தது.

இவர்களைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர் களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும், கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல் லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர் களைப் பார்க்க ஒரு நீண்ட சண் டைக் காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. இந்தக் காவி ரிப்பன் பக்தர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வய துக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும், இவர்கள் எல்லோருமே குடிப்பவர்களாக சின்ன தூண்டுதல் ஆனாலும், அதைப் பெரிய வன் முறையாக நிகழ்த்திவிடுவார்கள் என் பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று சந்தித்த அந்த டெம்போ ஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின்மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத் திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும் வரை மறக்கவே முடியாதது.

- அதிஷாவினோ, சென்னை

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்ட அமலாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர் இருவர்; ஒருவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா.

இன்னொருவர் திருவாளர் சுப்பிரமணிய சாமி - ஜனதா கட்சி தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் அப்பொழுது அந்த வழக்கைத் தொடுத்தது ஒருபுறம் இருக்கட்டும்;

இப்பொழுது பி.ஜே.பி.யில் பொருத்தமாக - சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆறாவது தடத்தில் (ராமர் பாலம்) திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுதான் பி.ஜே.பி.யின் நிலைப்பாடே தவிர, திட்டமே கூடாது என்பதல்ல.

இந்த நிலையில், பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் சு.சாமி தொடுத்த வழக்கை வாபஸ் பெறவேண்டாமா? பி.ஜே.பி.தான் இதனை வலியுறுத்துமா?
எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

ராமன் பாலமா?

சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துத் தந்த அந்த ஆறாவது வழித்தடத்திலேயே நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு வழக்குரைஞர் கேசவன் பராசரன்; மத்திய அரசு சார்பில் வாதிடு வதற்கு அவரது மகன் மோகன் பராசரனை அணுகிய போது, எனது தந்தையார், ராமன்மீது மதிப்புள்ளவர்; அவரை எதிர்த்து நான் வாதாட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், எனக்கு ராமர்பாலம்பற்றி நம்பிக்கை உண்டு என்றும் கூறியுள்ளார். படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள சம்பந்தம் இதுதானா?

இந்த மத்திய அரசுக்கு ஏன்தான் இந்தப் புத்தியோ என்று தெரியவில்லை. நியாயத்தின் பலம் தம் பக்கம் இருக்கும் பொழுது எதற்காக மத்திய அரசு தயங்கிட வேண்டும்?

கம்பராமாயண மீட்சிப் படலம் 17ஆம் பாடல், ராமனே அந்தப் பாலத்தை இடித்து விட்டான் என்று கூறுகிறது.

அந்தப் பாடல் இதோ:
மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித்
தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி
நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

சேது புராணம் என்ன கூறுகிறது? ராமன் இலங்கை சென்று திரும்பும்போது அந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று விபீடணன் கூறினான். அந்தப் பாலம் அங்கு இருந்தால் அதனைப் பயன் படுத்தி, இலங்கையிலிருந்து கொடியவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல அதனடிப்படையில் அந்தப் பாலத்தை ராமன் இடித்துத் தள்ளினான் என்று சேது புராணம் கூறுகிறது.

ராஜாஜியின் கட்டுரைகள் என்னும் நூலில் ராமாயணம் என்பது வால்மீகியின் கற்பனை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமன் என்ற இதிகாச கற்பனைப் பாத்திரத்தை பராசரன்கள் கொண்டுவந்து திணித்தால், அந்த இதிகாசங் களையே ஆதாரமாகக் கொண்டு எதிர் தாக்குதல் தொடுத்துப் பொடிப் பொடி ஆக்கிட என்ன தயக்கம்?

தமிழ் ஓவியா said...

வீணாகும் பொருள்கள்

வீணாகும் பொருள்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பொறியியல் மய்யத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் டி.எம்.குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் முக்கியமாக முன்னெடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினை. சுற்றுச்சூழலுக்குச் சவால் இந்த வீணாகும் பொருள்கள்தான்.

இவற்றை மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்திப் பலன் காண்பது அவசியமாகும். வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் அருமை என்ன வென்று புரியும். விடுதியின் கழிவுப் பொருள்கள், கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் உள்பட அங்கு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்கள் பெறப்படுகின்றன.

பிளாஸ்டிக் பெரும் சவாலாகக் கிளம்பியுள்ளது உண்மை என்றாலும், அதனையும் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவேண்டும்.

வீணான பொருள்களைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற பொது ஒழுக்கத்தை முதலில் தொடக்கப் பள்ளியிலிருந்து கற்றுக் கொடுக்கக் கூடாதா?

தமிழ் ஓவியா said...


கொலைகார மந்திரவாதி கைது



சென்னை, செப்.25- மனைவியை குத்தி கொலை செய்த கேரள மந்திர வாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவொற்றியூர் சின்னமேட்டு பாளையத்தில் வசிப்பவர் முகமது ரபீக் (36). மந்திரவாதி. கேரளாவை சேர்ந்தவர். பில்லி, சூனியம், பேய் விரட்டுதல், தாயத்து மந்திரித்து கொடுத்தல் உள் ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இவரை தேடி வருவார்கள். வெளி மாநிலங்களுக்கும் சென்று அங்கேயே நாள் கணக்கில் தங்கிவிட்டு வீட்டுக்கு திரும்புவாராம்.

முகமது ரபீக்கின் முதல் மனைவி ரமிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. தினமும் இரவில் முகமது ரபிக் குடித்து விட்டு ரமிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரண மாக மனைவியை விவாகரத்து செய்து விட்டார். குழந்தைகளுடன் ரமிதா தனியே வசிக்கிறார்.

இதையடுத்து முகமது ரபீக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நூர்ஜகான் (31) என்பவரை 2ஆவது திருமணம் செய்தார். மந்திரம் செய்யும் தொழில் நூர்ஜ கானுக்கு பிடிக்கவில்லை. மந்திரம் செய்து முடிந்ததும் முகமது ரபீக் இரவில் மது அருந்தி விட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பார். அதற்கு அவர், மது அருந்தி விட்டு என்னிடம் வராதே என கண்டிப்பாக கூறி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற் பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது ரபீக் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த நூர்ஜகானை வலுக் கட்டாயமாக உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால், ஆத்திரமடைந்த முகமது ரபீக் சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்தார். திடீரென நூர்ஜகானின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அலறி துடித்து மயங்கினார்.

போதை தெளிந்தபின்னரே மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது முகமது ரபீக்குக்கு தெரிந்தது. உடனடியாக நூர்ஜகானை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தகவலறிந்து திருவொற்றியூர் ஆய் வாளர் பிரபு சம்பவ இடத்துக்கு சென்று ரபீக்கை கைது செய்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார். இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும்: தா.பாண்டியன் பேட்டி

தஞ்சை, செப். 25-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு சில மாநிலங்களில் போதிய ஆதரவு கிடையாது.

பிகார், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளே பலமாக இருக்கிறது. எனவே மாநில கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3ஆவது அணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தலுக்கு பின்னால் 3ஆவது அணி மூலம் கூட்டு அமைச்சரவை அமையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. வேதபுத்திரர்கள் வந்து வாக் களித்தால்தான் அவர் பிரதமராக முடியும். பூலோகத்தில் அவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அப்படி ஒருவேளை மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும். காஷ்மீர் தனிநாடு என மறுநாளே பிரகடனம் செய்யும். நாகாலாந்து சுதந்திர பிரகடனம் செய்து கொடியேற்றும். எனவே இத்தகைய நிகழ்வுகள் நிகழ்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக 190 இடங்களை தாண்ட முடியாது.
- இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


வீறுகொள் வரலாறு எழுதுவோம் விருத்தாசலத்தில்!


தோழர்காள்!

செப்டம்பர் 28 - நாம் கூடவேண்டிய இடம் விருத்தாசலம்.

இந்தப் பெயரே நம் சிந்தனை அலைகளை வேறு எங்கோ கொண்டு சேர்க்கிறது.

நமது பச்சைத் தமிழ் திருமுதுகுன்றம்தான் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் விருத்தாசலம் ஆகியிருக்கிறது.

இலக்கியத்தில் பழமலை என்ற பெயரும் இதற்குண்டு; விருத்தாசலத்தில் நாம் கூடுகிறோம் என்கிறபோது அந்தச் சதியின் கொடிய முகம் நம் கண்முன் நிற்கவேண்டும்.

இந்தப் படையெடுப்பை முறியடிக்கவேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் வெடித்துக் கிளம்ப வேண்டும்.

நம் பழம் தமிழ், பாழ்பட்டுப் போனதை எண்ணி பதைபதைக்க வேண்டும்.

நாம் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கவேண்டும்.

மாயவரம் - மயிலாடுதுறை என்று மீட்கப்பட வில்லையா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இனவுணர்வு பீறிட்டு எழுந்தால் இதனைச் சாதிப்பது எளிதான காரியம்தானே.

ஆரியம் புகுந்து அருமைத்தமிழ் மொழியைக் கூறுபோட்டு விட்டது. நம் ஊர்ப் பெயர்கள் ஆரியமயமாகின. தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு ஆரியம் வழிபாட்டு மொழியாயிற்று.

தமிழன் பெயர்கள் சமஸ்கிருதமாகி விட்டன. தமிழன் விழாக்கள் - பண்டிகைகளாகின - பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளானது தமிழ்ச் சமுதாயம்.

இந்த அடிமைத்தனத்தைத் தூக்கி எறிய நமது திருமுதுகுன்ற மாநாடு புதுத்திமிரைக் கொடுக்கட்டும்.

நமது உரை வீச்சுகள் இனமானத்தை முன்னெடுக்கட்டும் - மொழிமானத் தீயை மூட்டட்டும்!

மாணவரணியின் மண்டல மாநாடு என்று மிகப் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

இளைஞர்களின், மாணவர்களின் குருதி சூடேறினால்தான் புரட்சி எரிமலை வெடிக்கும்.

1993இல் இதே ஊரில் வட்டார மாநாடு நடத்தினோம் - நீண்ட இடவெளிக்குப்பின் இன எழுச்சிப் போர் முரசம் திருமுதுகுன்றத்தில் கேட்க இருக்கிறது.

மாணவர் பட்டாளமே எழுக!

இளைய தலைமுறையே தோள் தூக்கி வருக!

பெரியார் மறைவுக்குப் பிறகும் தமிழர் தலைவர் தலைமையிலே வீறு கொண்டு தமிழினம் எழுந்து நிற்கிறது என்று காட்டுவதற்கான சந்தர்ப்பம் இது.

கருஞ்சட்டைப் பூமியை காவி மயமாக்க ஒரு கூட்டம் கனவு கண்டு கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் தர்ப்பைப் புல்லை வளர்க்கலாம் - என்று மனப்பால் குடிக்கிறது மனுதர்மக் கும்பல்.

தோட்டத்துப் புடலங்காயா

தமிழ்நாடு?

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி

என்றார் நமது புரட்சிக் கவிஞர்.

அந்தச் சேதியைத் தெரிவிப்போம்! தோள் தூக்கி வருக! மாநில மாநாடு போல ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன!

எங்குப் பார்த்தாலும் சுவரில் எழுதிய விளம்பரங்கள் - பல வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள்.

பள்ளிகள் விடுமுறைதான். பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீறு கொண்டு வருக விருத்தாசலம் நோக்கி.

தமிழர் தலைவர் சங்கநாதம் செய்வார். காலத்தின் கருவில் முளைக்கும் தீர்மானங்கள் உண்டு.

மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் பேரணி தனிச்சிறப்பு! கருத்தரங்கம் என்ற கருத்துச் சுரங்கம் உண்டு.

படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்கிற வகையில் பகுத்தறிவுப் பெருங்குடும்பங்கள் குவியட்டும்! குவியட்டும்!!

தமிழர் தலைவர் சபாஷ் திருமுதுகுன்றம் என்று பாராட்ட வேண்டாமா? இடையில் இரண்டே நாட்கள் - இருளைக் கிழித்து பகை முகத்தை விரட்டிப் பகலாக்கிக் காட்டுவோம் - வாரீர்! வாரீர்!!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் கவிதை !
==================
இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும் !

(திராவிடநாடு 1956)

தமிழ் ஓவியா said...


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்! முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்!

முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்

கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலிக்கவும் வேண்டும்



http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg



கடந்த 10 நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.



அதற்காகப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முதல் அமைச்சர் சந்திப்புக்கான வாய்ப்பை அளிப்பதற்கு மாறாக பார்வையற்றவர்களைக் காவல்துறையினர் நடத்தும் முறை வேதனை அளிக்கிறது. பார்வையற்றோர் தங்கள் கோரிக்கையை முதல் அமைச்சரிடம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:



சென்னையில் கடந்த 10 நாள்களுக்கு மேல், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குள்ள வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு சரிவர நிரப்பப்படல் வேண்டும் என்றும் மற்றும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் முறை மிகவும் வேதனையாக இருக்கிறது! பார்வையற்றவர்களிடம் - அதுவும் அவர்கள் தமக்கு வாழ்வுரிமை தேவைக்கென போராடும்போது, அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல கருதி, அடக்குமுறைகளை ஏவுதல், அலைக்கழிக்கப்படுதல், எவ்வகையிலும் நியாயமல்ல; ஜனநாயக ஆட்சியின் அம்சமாகவும் அமையாது! மக்களாட்சித் தத்துவம் என்பது ஆட்சியாளர்களை நேரில் சந்திக்கும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா?



தமிழக முதல் அமைச்சர், போராட்டக்காரர்களை அழைத்து - மனிதாபிமானத்துடன் கருணை காட்டி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, செய்ய வாய்ப்பிருப்பவைகளை செயல்படுத்த ஆணை பிறப்பிக்கலாம்! அவர்கள்மீது கருணைபொழிய நடந்து கொண்டால்தான் ஆட்சிக்கு அவப்பெயரைத் தடுக்க முடியும். காவல்துறையினரையும் கடிதோச்சி மெல்ல எறியும் வண்ணம் அறிவுறுத்த வேண்டும்.



பார்வையற்ற பரிதாபத்திற்குரிய அத்தோழியர், தோழர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் நட்டம் ஒன்றும் ஏற்பட்டு விடாது.



எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் வாக்குரிமை உள்ள குடிமக்கள் என்பதை, தமிழக அரசு -ஆளுங் கட்சி மறந்து விடக் கூடாது!



எனவே ஆட்சியாளர் மனிதாபிமானத்தோடு அவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவசர அவசியமாகும். மாற்றுத்திறனாளிகள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முறையைத் தயவு செய்து கைவிட்டு அறவழியில் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது நல்லது.



கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்



சென்னை

26.9.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை



பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


தகுதி திறமை பேசும் அ.இ.அ.தி.மு.க. அரசு


செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆண்டாண்டுக் காலமாக அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த சமூக நீதியின் ஆணி வேரை, வெட்டும் ஓர் ஆபத்தான வேலையில் திட்டமிட்ட வகையில், இறங்கி விட்டதாகத் தெரிகிறது.

மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களே, சமூகநீதியின் தலையில் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு) கை வைத்ததன் பலனை, 1980 மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாக அனுபவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அவர் சந்தித்த மகத்தான மரண அடியாகும் அது.

தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்றினை எந்தக் காரணத்தாலோ, உணர மறுத்தால் 1980இல் எம்.ஜி.ஆர். அவர்கள், மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது போலவே, 2014 மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பெரும் அளவில் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கு மரண அடியை அ.இ.அ.தி.மு.க. அரசு கொடுத்து விட்டது.

தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அதற்கு மாறாக உயர் ஜாதியினருக்கு என்ன தகுதி மதிப்பெண்ணோ அதே தகுதி மதிப்பெண்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு - இதுவரை, தமிழ் மண் கட்டிக் காத்து வந்த சமூக நீதிக்கு, வெட்டப் பட்ட சவக்குழி அல்லாமல் வேறு என்ன?

69 சதவீத இடஒதுக்கீட்டைக் கட்டிக் காக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட ரீதியாக, வழிகாட்டி அதற்கான மசோதாவையும் உருவாக்கித் தந்து, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சட்டமாக்கச் செய்தார்.

இன்று சோ இராமசாமிகள் ஆலோசகர்களாக இருக்கின்ற காரணத்தால், சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கிறார் என்று தானே பொருள்?

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் இவ்வாறு கூறுகிறது.

The State Govt has taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation to any of the categories என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி திறமை என்பதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு, என்று கூறுகிறது அரசின் பிரமாணப்பத்திரம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்கிற பிரச் சினையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், எல்லாவற்றிலும் ஆதிக்கக் கொடியைக் கையில் ஏந்திய பார்ப்பனர்கள் எந்தத் தகுதி - திறமையைப் பேசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதத்தை வைத்தார்களோ, அதே பார்ப்பனர் வாதத்தைதான் செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு இன்றைக்கு வைத்துள்ளது - அதுவும் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரமாகவே தாக்கல் செய்துவிட்டது.

சமூகநீதிப் போராளிகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடும் ஒரு நிலையை அ.இ.அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்து விட்டது.

தகுதி - திறமை மோசடி பற்றி தந்தை பெரியார் கூறாததா? கல்வி வள்ளல் காமராசர் கூறாததா?

அறிஞர் அண்ணா பேசாததா?

ஒடுக்கப்பட்ட மக்களே, சமூகநீதிக் களத்தில் இறங்கிடத் தயாராவீர்!

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் வானொலி உரை


பெருமதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (17.9.2013), வானொலியில் தாங்கள் ஆற்றிய உரை, சொற்செறிவும், பொருள் ஆழமும் கொண்டு, தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டியது. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல், அறிவுப்பிழம்பாய்த் திகழ்ந்த அந்த உரையில், தாங்கள் கூறிய

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தால் அழியாதவை; கருத்தால் நிலையானவை; பயன்பாட்டால் இன்றும், என்றும் வேண்டப்படுபவை என்ற முடிவுரை, நெஞ்சை நெருடியது. அந்த உரையில் தொண்டறச் செம்மல் என்ற தலைப்பே, ஈர்ப்புடையது அவர் (பெரியார்) பதவியை நாடாதவர்; புகழைத் தேடாதவர்; பொதுவாழ்வில் நேர்மையும், சிக்கனமும் கொண்ட, தொண்டறச் செம்மல், என்ற வாசகங்கள் பெரியாருக்குப் புகழாரம் சூட்டின.

அவருடைய சொந்த சொத்துக்களும், மக்கள் அவருக்கு கொடுத்த பணமும், இப்போது கல்விக் கூடங்களாக, மருத்துவமனைகளாக, பிரச்சார நிறுவனங்களாக காப்பகங்களாக விளங்குகின்றன என்ற விளக்கம், தந்தை பெரியாரைத் தொண்டறச் செம்மலாகப் படம் பிடித்தது. கிரேக்க அறிஞன் சாக்ரடீசுக்கு வாய்த்த பிளோட் டோவின் பெயர் என் நெஞ்சில் நிழலாடியது.

- வீ.செ.கந்தசாமி, சென்னை- 14

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந் தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை)

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

தமிழ் ஓவியா said...


செப் 27: (இன்று) : உலக சுற்றுலா தினம்


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொரு ளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக்கருத்து.

சுற்றுலா பலவிதம்

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட் டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங் களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010 ஆம் ஆண் டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகை ஈர்க்கும் நாடு எத்தனை பேர்

பிரான்ஸ் 8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா 6 கோடியே 70 லட்சம்
சீனா 5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின் 5 கோடியே 77 லட்சம்
இத்தாலி 4 கோடியே 64 லட்சம்
துருக்கி 3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி 3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து 2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா 2 கோடியே 57 லட்சம்
மலேசியா 2 கோடியே 50 லட்சம்

தமிழ் ஓவியா said...


சாயிபாபா பக்தரின் கண் இப்பொழுதுதான் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.

சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம்.

அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலாளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)