Search This Blog

8.9.13

பிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்


கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்!

பிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்
இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத் தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.
நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதிக செல் வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண் டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத் தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதி யின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலி ருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத் திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற் பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றி ருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பி னதாகவும், அவன் போய்ப்பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப்படு கின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

5. இன்னும் பல வழிகள் சொல்லப்படு கின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளை யாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல வித மாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதா யிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? 


நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள் களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டு தானே தீரும் 

(இவைகளைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர் என்று சொல்லுவதும் மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்க வும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய் யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்ப துடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத் தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டி ருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல் பல லட்சக் கணக்காய் வந்து கொண்டே இருந்த தாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையா ரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல் களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களை யெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மை யான ஆபாசங் களுக்கு கண்டவை களையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா?

இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்வதனால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை யில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங்களையெல் லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவ தாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியா தென்றே சொல்லுவோம் இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

--------------------------------தந்தை பெரியார் "குடிஅரசு" - கட்டுரை - 26.08.1928

30 comments:

தமிழ் ஓவியா said...

நாங்கள் பிள்ளையாரை உடைத்ததால் அது ஒழிந்துவிட்டதா? இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று. சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2- லட்சத்தோடு இப்போது ஒரு 3,000- சேர்ந்திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2- லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000- பிள்ளையாரும் ஒழிந்து தானே போகும்? அல்லது இப்போது புதிதாக இந்த 3000- பிள்ளையார்கள் போல் உற்பத்தியானதால் இந்த 2- லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை! சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளையாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது? ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை. இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது! நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், கீழ் ஜாதி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள் தான்! எனவே நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை; தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி, நாம் இந்தக் கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்! ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான்; அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வதும் என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும் தான் அவர்களால் செய்ய முடிந்தது! சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இதுவரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள், தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை.

தமிழ் ஓவியா said...

எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன? இன்னும், நாம் பிள்ளையார் உடைக்கிறோம் என்றவுடன், திராவிட கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரசாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியாயங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக் காட்டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம். விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித்தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதுபோலவே இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயத்தை பக்கம் பக்கமாக என்றால் காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்கிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் - கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப்போனால் புராணங்களை அவர்கள் பிரசாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவைகளின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால் இப்படிப்பட்ட எதிர்ப் பிரசாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது! நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம். முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்! - (05.07.1953- அன்று திருச்சியில் நடந்த திராவிட நாடு பிரிவினை நாள் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 11.07.1953- 'விடுதலை' இதழில் வெளியானதில் ஒரு பகுதி)
நாங்கள் பிள்ளையாரை உடைத்ததால் அது ஒழிந்துவிட்டதா?

இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2- லட்சத்தோடு இப்போது ஒரு 3,000- சேர்ந்திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2- லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000- பிள்ளையாரும் ஒழிந்து தானே போகும்? அல்லது இப்போது புதிதாக இந்த 3000- பிள்ளையார்கள் போல் உற்பத்தியானதால் இந்த 2- லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளையாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது! நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், கீழ் ஜாதி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள் தான்!

எனவே நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை; தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி, நாம் இந்தக் கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான்; அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வதும் என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும் தான் அவர்களால் செய்ய முடிந்தது! சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இதுவரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள், தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையார் உடைக்கிறோம் என்றவுடன், திராவிட கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரசாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியாயங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக் காட்டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித்தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதுபோலவே இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயத்தை பக்கம் பக்கமாக என்றால் காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்கிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் - கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப்போனால் புராணங்களை அவர்கள் பிரசாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவைகளின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால் இப்படிப்பட்ட எதிர்ப் பிரசாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

- (05.07.1953- அன்று திருச்சியில் நடந்த திராவிட நாடு பிரிவினை நாள் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 11.07.1953- 'விடுதலை' இதழில் வெளியானதில் ஒரு பகுதி)

தமிழ் ஓவியா said...


இரயிலைத் தவற விட்டார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களுடன் நான் என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து தொடர்பு கொண்டு தொண்டாற்றியவன் என்றால் அது மிகையாகாது. என்றாலும் காலத்தை கண் இமைபோல் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். சீமானாக வாழ்ந்தவர் என்றாலும் அவர்கள் பொதுத் தொண்டிற்கு வந்தபின்பு, மிகவும் சிக்கனமாகவும், எளிய வாழ்வு வாழ்ந்தும் காட்டியவர் ஆவார்கள் ஒரு சமயம் 4-0 ஆண்டுகட்கு முன்பு நானும் தந்தை பெரியாரவர்களும், திருக்க்யிலூர், திருவாளர் மா.நா. குமாரசாமிப் பிள்ளை அவர்களின் இறுதி முடிவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அதன்பின், அங்கிருந்து திருக்கோயிலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காலை 4 மணிக்கு புறப்படுகிற வண்டிக்காக ஸ்டேஷனில் தங்கினோம். நாங்கள் இருவரும் தூங்கி விட்டோம். வண்டி வந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று விட்டது; விடிந்து காலை 4 மணிக்கு எழுந்தோம்.

வண்டி சென்று விட்டது தெரிந்ததும் அய்யா அவர்கள் என்னை பார்த்து காளியப்பா என்னுடைய வாழ்நாளில் ரயில் வண்டியை தவற விட்டது இதுதான் முதல் தடவை இதுதான் கடைசித் தடவையாகவும் இருக்கும் என்றார். அடுத்த ரயில் வண்டியில் புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சேலம் சென்றோம்; அங்கு பொது மக்கள் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டு, ஈரோடு பயணம் ஆனோம். இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாக பெரியார் தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருந்தார். அடிக்கடி அய்யா இதை சொல்லு வார்கள். கடிகாரம் பார்த்து ரயிலுக்கு போகக் கூடாது. ரயில் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன்பு போக வேண் டும் என்பார்கள். அந்த அறிவு மொழியை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

-_ நாகை என்.பி. காளியப்பன்

தமிழ் ஓவியா said...


புத்துலகக் குழந்தையின் பெயர் என்ன?


அய்யா
வாழ்ந்தபோதும்
ஜீவ நதி நீ;
மறைந்த நிலையிலும்
ஜீவித்திருக்கும் நீ;
சித்தாந்தத்தின்
இரகசியம் என்ன?
இன எதிரிகளின்
அணுக்களில் எல்லாம்
நித்தம், நித்தம்
சூடு போடுகிறாயே!
எப்படி? எப்படி?
எதிரும், புதிருமாய்
இருக்கும் இரு முனைகள்கூட,
தவிர்க்க முடியாத
அழுத்தத்தின் பிதுக்கலால்
உமது தொலைநோக்கு
முத்திரை அடிகளுக்கு
முத்தம் பொழியும்
முகாமை என்ன?
காரணம் தெரிகிறது
உன் தத்துவ மூலிகை
காயங்களுக்கு
மருந்தாகிறது
தவித்த வாய்களுக்கு
தண்ணீர்ப் பந்தல்!
அறியாமை இருட்டில்
அகப்படுபவர்களுக்கு - உன்
அறிவுச் சுடர்
உதவும் கரம்!
நம்பிக்கை இழந்த
நரம்புகளுக்கு - தன்
நம்பிக்கை என்னும்
தாது புஷ்டி!
உன்னை ஒதுக்க
முடியவில்லை
ஒதுக்கினால், அவர்கள்
ஒதுக்கப்படுவார்கள்
எந்தப் பிரச்சினையையும்
எடை போட,
ஈரோட்டுத் தராசைத்
தேடுகிறார்கள்
பெரியார் சொல்லி இருக்கிறார்
என்று சொன்னால்போதும்
ஆவேசப் புயல்களும்
அடங்கி விடும்
அப்படி ஒரு அங்குசம்
நீங்கள்!
அப்படி ஒரு
சித்தாந்தம் நீங்கள்!
அமெரிக்கா செல்லவில்லை
நீங்கள்
ஆனாலும் அங்கு
அய்யா விழா!
ஆப்பிரிக்காவிலும்
பெரியார் ஃபவுண்டேஷனாம்
ஆஸ்திரேலியாவிலும்கூட
உங்கள் பேரர்கள்
பெரியார் என்னும்
உயிர் மெய்யெழுத்துக்களை
போதிக்கிறார்கள்
மதம் ரொம்பவே
படுத்துகிறது!
நதிகள் எல்லாம்
மனித ரத்தத்தால்
நிரம்பி, நுரைதள்ளி,
ஓடுகின்றன.
போதுமடா சாமி!
மதத்திற்கு விடை கொடு!
மதமற்ற புத்துலகை
மனம் தேடுகிறது
அங்கு அன்பு நதி உண்டு
அறிவு ஒளி உண்டு
பேதச் சரக்குகள்
விற்பனைக்குத் தடை!
எல்லார்க்கும்
எல்லாம்
சண்டை ஏது?
சழக்கு ஏது?
பொறாமை ஏது?
புகைச்சல் எது?
தொண்டறம் எனும்
தூயமணம் எங்கும்
எல்லார்முகத்திலும்
புன்னகைப் பூக்கள்!
சமநிறை சமன்முறை
சமத்துவ மூச்சுக் காற்று!
அந்த உலகக் குழந்தைக்கு
அய்யா உங்கள் பெயர்தான்
பெரியார் ஈ.வெ.ரா.!

-கவிஞர்
கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


அப்பாடி ஈ.வெ.ரா. தொலைந்தார்!


நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் உடல் நலம் இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக் கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் சிவநேசர்கள் என்றும் தேசியவாதிகள் என்றும் சைவப் பெரியார் என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக் கும் அயோக்கியர்கள் சிலரும் ஈ.வெ.ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும். போய்விட் டால் நாடு நன்மை அடை யும் என்று முட்டாள் தனமாகவும் சிறிதும் உலக ஞானமில்லாமலும் பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு ஈ.வெ.ராமசாமி அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள் ஆனந்தக் கூத்தாடி னார்கள். நமது இயக்கம் செத்துப் போய் விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாமென்று கும்மாளம் போட்டார்கள். இதனால் இத்தகைய பேட்டிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதி லிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் நமது இயக்கம் பொது ஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள் சுயநலத் திற்கான இயக்கம் அல்லவென்பதையும் உணர்ந்து வாயடங்கு வார்களென்று நினைக்கிறோம்.

(ஈ.வெ.ரா. அவர்கள் அய்ரோப்பா சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது சென்னை மகாநாடு சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்

2009 டிசம்பர் 11 அன்று தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதித்து அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாபெரும் தலைவரின் சிலையை வைப்பதால் மட்டுமே பள்ளிக் குழந்தை கள் தாங்களாகவே நாத்திகர்களாக மாறி விடுவார்கள் என்று மனுதாரர் எவ்வாறு கூறமுடியும்? என்று தனது வியப்பைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

அதற்கு மாறாக, பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது சேவை பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனால், தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைவரின் கோட்பாட்டை, தத்துவத்தை நன்கு புரிந்து கொள்வது, அரசமைப்பு சட்ட 51-கி பிரிவில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வு, சீர்திருத்தம் ஆகிய வற்றை வளர்க்கும் அடிப்படைக் கடமையை ஆற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நீதியரசர் கூறினார்.

2008 செப்டம்பர் 4 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்த பிறகுதான் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உள்ளூர் பா.ஜ.கட்சித் தலைவர்கள்தான் பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவரின் சிலையை அங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினார்கள். அதனால், மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங்களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்ப்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கோ, பள்ளி மாணவர் களுக்கோ எந்த இடையூறும் இன்றி, வெண்கலச் சிலை ஒன்றை நிறுவி, அதனை பராமரிக்க ஒரு தனியார் அமைப்புக்கு அனுமதி அளித்து இந்த அரசாணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத் திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை.

உண்மையைக் கூறுவதானால், சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பெரியாரின் போதனைகள் பற்றி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்தி ருப்பவையே, தமிழ் சமூகத்தைப் பல வழிகளிலும் மறு மலர்ச்சி பெறச் செய்வதில் ஒரு மாபெரும் தலைவர் ஆற்றிய பெரும் பங்கினை அறியாதவர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன என்று நீதியரசர் கே. சந்துரு கூறினார்.

(காவேரிப்பட்டினம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் பெரியார் சிலை நிறுவுவது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு)

தமிழ் ஓவியா said...


புரியாத புதிர்


பிள்ளையாருக்கு வடநாட்டில் இரண்டு மனைவிகள்!

தென்னாட்டில் கல்யாணம் ஆக வில்லை! என்கிறது ஆரியம்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

எப்படி என்று கேட்டால்?

ஆத்திகர்களிடம் இருந்து அது அப்படித்தான் என்று பதில். ஆத்திக அன்பர்களே!

ஒருவன் வடநாட்டில் இரு திருமணம் அல்ல.

ஒரு திருமணம் செய்து கொண்டு வந்து,

தென்னாட்டிலும் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பெண்ணையோ, உங்களுக்குத் தெரிந்த பெண்ணையோ திருமணம் செய்து கொடுப்பீர்களா?

- ம. சீனிவாசன், பிள்ளையார் தோப்பு, இலுப்பூர்

தமிழ் ஓவியா said...


எரிதழலாய்ப் பெரியார் வந்தார்



- பாவலர் பெரு. முல்லையரசு

பாராண்ட தமிழ்மறத்தை வீழ்த்து தற்குப்
படைகொண்டு பகைமுறிக்க இயலா தென்றே
போராட வக்கற்ற பேடி யர்கள்
பொய்விரித்து மெய்விரித்துக் கடைவி ரித்தார்!
யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த
ஏமாளித் தமிழர்க்குள் சண்டை மூட்டி
போராட்டக் களத்தினிலே குளிரும் காய்ந்தார்
போக்கற்ற பேதையராய் மகிழ்ந்தார் நெஞ்சம்!

ஆண்டவனின் பெயராலே ஏய்த்த வர்கள்
அஞ்சாமல் அறச்செயல்கள் பலவ கற்றி
ஆண்டிட்ட தமிழ்மரபை அடிமை கொள்ள
அன்றாடம் நிகழ்த்திவரும் நச்சு வேலை
மாண்டிட்டு மண்மூடிப் போதல் வேண்டி
மறத்தமிழர் இனவெழுச்சி கூட்டி இங்கே
மூண்டெழுந்த எரிதழலாய்ப் பெரியார் வந்தார்
முழங்கிட்டார் தன்மானம் எழுச்சி பொங்க!

ஆர்த்தெழுந்த பெரியாரின் எழுச்சி யாலே
அணிதிரண்டார் தன்மானத் தமிழ ரெல்லாம்
ஈர்த்திட்ட பெரியாரின் கொள்கை யிங்கே
எத்தர்களை முனைமழுங்க வைத்த தய்யா!
போர்ப்பரணி பாடிட்ட பெரியார் பின்னே
பைந்தமிழர் படைகிளம்பிப் புயலாய் மாறி
பார்வியக்கப் பகையொடுங்க முரசு கொட்டிப்
பாய்ந்ததுவே பகுத்தறிவு இயக்கம் இங்கே!

தமிழ் ஓவியா said...


பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்!


- எஸ்.கே. கங்கா

ரசூல், வணக்கம்! உங்களுடைய பெரியார்தாசன் பற்றியக் குறிப்புகளைப் படித்தேன். பெரியார்தாசன் என்ற சமூகப் பண்பாட்டுப் போராளிக்கு உரிய மரியாதை உங்கள் அஞ்சலி வாசகங்கள். அவருடைய ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை அழகாகச் சித்திரப்படுத்தியுள்ளீர்கள்.

எனினும் பெரியாரைப்பற்றிய உங்களின் ஆதங்கம் என்னைக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது இன இழிவு நீங்க இஸ்லாத்தில் இணையுங்கள் என முழக்கமிட்ட பெரியார் இறுதி வரை இஸ்லாத்தில் இணையவில்லை. ஆனால் பெரியாரின் பெயரைச் சூடிக் கொண்ட பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்தார் என நீங்கள் ஒப்பீட்டுள்ளீர்கள். இந்த ஆதங்கத்துக்கு காலப் பொருத்தம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண் டில் எந்த முன்னுதாரணமும் இல்லாத மகத்தான பேராளுமை என ஜெர்மன் பேரறிஞர் வால்டர் ரூபன் வியந்து பாராட்டிய பெரியார் இனமான சுயமரியாதைக் காரராக வாழ்ந்தவர். பகுத்தறிவுப் பகலவனாக பரிணமித்தவர். பார்ப்பனியத்துக்கு எதிராக இறுதிமூச்சு வரை வியூகம் அமைத்த பெரும் போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காத முழு நாத்திகராக வாழ்ந் தவர் இந்த பெரியார் இஸ்லாத்தைத் தழுவவில்லை என ஆதங்கப் படுவதில் வரலாற்று நியாயம் ஏதேனும் இருக்கிறதா?

ரசூல், பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்! அந்தப் பேரொளி இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு வேண்டும்!

(கவிஞர் ஹெக் ஜி. ரசூல் பெரியார்தாசன் பற்றி முகநூலில் 20.08.2013 அன்று எழுதிய குறிப்புகள் மீதான ஒரு எதிர்வினை).

தமிழ் ஓவியா said...


மதுரைக் கோவிலுக்குள் புரட்சி!



நேற்றிரவு 8 மணிமுதல் நடுராத்திரி 12 மணி வரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோயிலின் வாயிற் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பந்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததினால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோயில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன், பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனையையும் கவனியாமல் கணேசருக்குத் தாமாகவே தேங்காய் உடைத்து கற்ப்பூர ஹ--ரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீ மீனாக்ஷி கோயிலுக்குச் சென்றதாகவும், பிறகு அவர்கள் ஸ்ரீ மீனாக்ஷியம்மனின் கர்ப்பக் கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடிவிட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும், அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபணைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற்கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9.30 மணி வரை வெளியே வர முடியவில்லை. நிற்க. வெளியிலிருந்தவர்கள் இரவு 12 மணிவரை உள்ளே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள். ஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்தபொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோஷ ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12.30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்நியாசம் செய்தார். _ குடிஅரசு 6.2.1927 பக்கம் 8

தமிழ் ஓவியா said...

அடுத்த வீட்டு அகிலாண்டம்

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக் கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால். எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்த... கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர் களா? இல்லையே! வழியிலே குடியி ருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங் களின் கருத்து குருடானதைக் கூறி னாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

- அண்ணா
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)

தமிழ் ஓவியா said...


விநாயகப் புராணம்


விநாயகனுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு - அதில் ஒன்று பிரளயம் காத்த விநாயகராம்; கும்பகோணம் அருகே திருப்புறம் பியத்தில் இப்படி ஒரு விநாயகர் இருக்கிறார்.

இருக்கட்டும்! இருக்கட்டும்! சுனாமி வந்து பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தபோது - இந்தப் பிரளயம் காத்த விநாயகர் எங்கே போனாராம்.

சுயம்பு விநாயகர்

வேலூர் அருகே சேண்பாக்கம் என்னும் ஊரில் விநாயகர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் சுயம்பு 11 விநாயகர்கள் இருக்கிறார்களாம்.

சுயம்பு என்றால், தானாக பூமியை வெடித்துக் கிளம்புவது என்று பொருள்.

சென்னை தியாகராய நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் 1970 செம்டம்பரில் இப்படித்தான் திடீர் விநாயகர் என்று பொய்யை முதலீடாக வைத்து, புரளியைக் கிளப்பி உண்டியல் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அந்த இடத்திலேயே பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவேன் என்று தந்தை பெரியார் அறிவித்தார். அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் பொருத்தமாக முதல் அமைச்சராக இருந்த காரணத்தால் உடனே தலையிட்டு உண்டியலையும் பறி முதல் செய்து, அந்தப் பித்தலாட்டத்துக்கும் மூடு விழா நடத்தினர்.

விசாரணையின் போது தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனரின் தூண்டுகோல்படி செல்வராஜ் என்ற போலீஸ் கான்ஸ்டபுள்தான் பூமியில் இரவோடு இரவாக, பிள்ளையாரைப் புதைத்து, பூமிக்குள் பருத்திக் கொட்டையையும் தண்ணீரையும் ஊற்றி, வெளியில் வரச் செய்த பித்தலாட்டம் வெளியானது.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தத் திடீர் பிள்ளையார் சுயம்புவானது உண்மைதான் என்று அன்றைய சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பொய் சொல்லிக் காப்பாற்ற முற்பட்டதுதான். அந்தப் பகுதியில் மசூதி கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை தடுக்கத்தான் இந்தப் பித்தலாட்டம்.
வேலூர் சேண்பாக்கம் 11 சுயம்புப் பிள்ளையாரிலும் இது போன்ற சதிகள் இருக்கவே செய்யும்.

கடலில் கரைப்பது ஏன்?

கடலில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குத் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். விநாயகருக்குப் பார்வதி எப்படி அன்னையோ, அதுபோல கங்கையும் ஒரு அன்னைதானாம் அதனால் அவரோடு அய்க்கியமா கிறாராம். அக்னி பகவானுக்கு விநாயகர் என்ன உறவு! நெருக்கமான உறவு இருந்தால் எரித்திருப்பார்களோ?

கடல் நீர் உப்பு கரிப்பதற்குக் காரணம் விநாயகன் சிறுநீர் கழித்ததுதான் என்று புராணம் கூறுகிறது.

கடல் நீரைக் குடிநீராக்க பன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து சுத்திகரித்துக் கொண்டு இருக்கிறார்களே. இது விநாயகன் செயலுக்கு விரோதம் என்று விநாயகப் பக்தர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

தேங்காய் உடைப்பது ஏன்?

அகங்காரம் என்னும் ஓடு சுக்கல் நூறாகி அமிர்தம் என்ற இளநீர் கிடைக்குமாம். அதுதான் தேங்காய் உடைப்பதன் புடலங்காய் தத்துவமாம்.

தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கிற பக்தர்கள் எல்லாம் ஆணவம் அற்றவர்களா?

நான் ஆயிரம் விவேகானந்தருக்கு மேலே என்று காஞ்சி சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திர சரஸ்வதி சொல்கிறாரே - இது ஆணவம் அல்லாமல் வேறு என்னவாம்?

இவர் தேங்காய் உடைப்பது இல்லையா? பிள்ளையா ருக்கு நான் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும் என்று அவர் சொன்னால் அதுவும் ஆணவம் தான்! பிள்ளை யாரையே கருப்புச்சட்டைக்காரர்கள் வீதிக்கு வீதி போட்டு உடைத்தார்களே - உண்மையில் அவர்கள் தான் ஆணவம் அற்றவர்கள்.

வினை தீர்க்கும் விநாயகளாம். அவனுக்காக சென்னையில் பத்தாயிரம் போலீஸ் பாதுகாப்பாம்!

பேஷ்! பேஷ்!! இதைவிட விநாயகன் சக்தியை எப்படி கேலி செய்ய முடியும்? 9-9-2013

தமிழ் ஓவியா said...


விநாயகன் பிறந்தானா?

கடவுள் பிறந்தார் என்று சொன்னாலே மதவாதி கள் சொல்லும் கடவுள் தத்துவம் அடிபட்டு, ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைந்து விடுகிறதே.

கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்கிற சங்கதியும் சகட்டுமேனிக்குப் பெரும் பொய் என்பதும் புலப்படவில்லையா?

ராம நவமி என்பதும், கிருஷ்ணஜெயந்தி என்பதும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதானே.

இன்று விநாயக சதுர்த்தியாம். இவன் உரு வத்தைப் பார்த்து புராணக் கடவுளான சந்திரனே கேலி செய்தான் என்று எழுதி வைத்துள்ளனர். விநாயகன் உருவத்தைப் பார்ப்பவர் யார்தான் கேலி செய்யாமல் இருப்பார்கள்?

பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்தவன் இந்தப் பிள்ளையார் என்றால் மனிதன் காட்டு விலங் காண்டிப் புத்தியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது தான் இந்தக் கடவுள் வகைகள் என்பது விளங்கவில்லையா?

இப்பொழுது விநாயக ஊர்வலத்தில் விநாயகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து கார்கில் விநாயகர் என்று பெயர் கொடுப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டு இருக்க வேண்டுமே! மனிதன்தான் அந்தந்த காலத்தின் பக்குவத்துக்கு ஏற்ப இந்தக் கடவுள்களைக் கற்பித்தான் என்பது விளங்கிடவில்லையா?

கடவுள் ஒருவர் பிறந்தார் என்று வாதத்திற் காகவே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள் வோம். அதற்கென்று எதாவது ஒன்றே ஒன்றைச் சொன்னாலாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டுத் தொலைக்கலாம்.
விநாயகன் பிறப்புக்கு எத்தனை எத்தனைக் கதைகள்! கழுதை களமாடும் குப்பைத் தொட்டிகூட வெட்கப்படும் அளவுக்கு அசிங்கமாகவும் ஆபாச மாகவும் உளறிக் கொட்டி வைத்துள்ளார்களே.

சண்டை போட்டது கடவுள், எதிரிகளைக் கொன்றது கடவுள், கற்பழித்தது கடவுள் என்றால் அதன் யோக்கி யதைதான் என்ன? கருணை உடையவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில், தன் சகோதரன் சுப்பிரமணியனுக்காக விநாயகன் சண்டை போட்டு எதிரிகளைக் கொன் றான் என்றும், வல்லபை என்ற அரக்கக் குலப் பெண்ணின் குறியிலிருந்து உற்பத்தி யாகி வந்த அசுரர்களை தம் துதிக்கையால் பெண் குறியை அடைத்துத் துவம்சம் செய்தான் என்றும் அதனாலே வல்லபைக் கணபதி என்று பெயர் பெற்றான் என்றும் சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கொஞ்சம்கூடக் கூச்சப்படவில்லையே!

தருமபுரி மாவட்டம், மத்தூர் கோயிலில் பெண் குறியில் விநாயகன் தன் துதிக்கையை வைத் திருக்கும் பிரம்மாண்டமான சிலை வைக்கப் பட்டுள்ளதே.

கோயில் தேர்களிலும் இந்தக் கண்ணராவிக் காட்சியைக் காண முடியுமே! தம் வீட்டுப் பிள்ளை களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் போது, இந்தக் காட்சியைக் காட்டி இது என்ன? என்று கேட்டால் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும்?

இந்து மதம் என்று எடுத்துக் கொண்டால் எதைத் தொட்டாலும் இந்த ஆபாசம்தான் - அசிங்கச் சாக்கடைதான்.

இதைப் பகுத்தறிவாளர்கள் எடுத்துச் சொன் னால் சிந்திப்பதற்குப் பதிலாக சிறீ விழுகிறார்கள் என்றால் பக்தியின் பெயரால் இவர்களின் புத்தியும் நாசமாகப் போய் விட்டது - ஆபாசத்தில் இலயித்து விட்டது என்று தானே பொருள்?

இந்த விநாயகனுக்காக ஒரு பண்டிகை. அதற்கு அரசு விடுமுறையாம்! இந்த விநாயகன் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்றால் இது என்ன நிலைப்பாடு?

மும்பையில் இந்து மதவெறியை ஊட்டுவதற்கும் பாலகங்காதரர் கிளப்பி விட்ட இந்தச் சதித் திட்டம் இப்பொழுது வேறு பகுதிகளில் பரவி, பொது மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. மதக் கலவரங்களுக்கு இந்த ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடவுளை உண்மையில் நிந்திப்பவர்கள் இந்தப் பக்தர்கள்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

விநாயகன் பிறப்பு - அவனைப்பற்றிச் சொல்லப்படுகிற புராண சங்கதிகள் இவற்றைப் பார்க்கும்பொழுது இந்து மதவாதிகளும், சனாதனி களும் தான் கடவுளைக் கேவலப்படுத்துகிறார்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!

அழுக்குருண்டைப் பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க; பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவோமா சொல்லுங்க என்று திராவிடர் கழகப் பேரணியில் முழங்கிச் செல்லுவதற்கு இதுவரை பதில் இல்லையே!
9-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கத் துடன் எழுதிக்கொண்டது. கடந்த 25.8.2013 விடுதலை நாளிதழில் தங்கள் அறிக்கையைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மராத்திய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ் நாட்டிலும் அச்சட்டம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசும் அச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமூகசீர்திருத்தக்குழு ஒன்றை உரு வாக்கினார். அதிமுக ஆட்சியில் அந்தத்துறை செயல்படவே இல்லை. பின்னர் எப்படி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவார்?

தாங்கள் கூறியவாறு மத்திய அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தால், இந்தியா முழுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். நரபலிகள் தடுக்கப்பட்டு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகியவற்றில் அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற, மூடநம்பிக்கை பிரச்சாரம் தடுக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே அச்சட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வாய்ப்புள்ளது. செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அச்சட்டத்தால் மொத்தத்தில் மனித சமுதாயத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டு, தந்தை பெரியார் கூறியவாறு மனிதன் மனிதனை நினைப்பான்.

இச்சட்டம் கொண்டு வருவதற்காக ஒரு தீவிரப்பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை தெரிவித்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

- எஸ்.என்.அசோகன் (திமுக மாவட்ட பிரதிநிதி)
நகராட்சி நியமனக் குழு உறுப்பினர், திருவாரூர்

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்

கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.

கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சினை இப்படி வயசான வர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தற வங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம் தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கி யிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.

நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும்.

தமிழ் ஓவியா said...

திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..



சிலருக்குன்னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறி களாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சி னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங் கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற, டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

தமிழ் ஓவியா said...

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிருங்கள், டென்சன் படாதீர்கள் என்று எல்லா மருத்துவர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.

உண்ணும் உணவு பழக்கத்தை சத்துள்ளதாக மாற்றிக்கொண்டால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் அலுவலக வேலைக்கு செல்லும் போது சிறிது தூரம் காலார நடைபயிற்சி செய்யுங்கள். தினசரி வைட்டமின் ஈ யை உணவில் எடுத்து கொள்பவர் களுக்கு இதயநோய் வர வாய்ப்பில்லை என்று ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400யுனிட் வைட்டமின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதயநோய்களே வருவ தில்லையாம். வைட்டமின் டி உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், கோதுமை மாவு, முளைக்கட்டிய தானியங்கள், கொட்டை உள்ள உணவுகள் கீரைகள், கடுகு, தாவர எண்ணெய் போன்றவைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் ஆசிட் நல்ல இதயநோய் தடுப்பாக செயல்படுகிறது. ஒமேகா3 உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவு, வால்நட், பருப்பு, சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளில் ஒமேகா 3 இருப்பதால் இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இவைகளை உபயோகித்து செய்யும் உணவுப் பண்டங்களை தவிர்க் கவும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடை கட்டி, அய்ஸ்கீரிம் போன்றவற்றை குறைவாகவே உபயோகி யுங்கள். இதனால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும் என்கிறது ஆராய்ச்சி. அதிக உப்புள்ள ஊறுகாய், சமையலில் மசாலா பொருட்கள் சோடா ஆகியவற்றை, முடிந்தவரை தவிர்ப்பது நல் லது. உப்பிற்கு பதிலாக வெங் காயம், எலுமிச் சை, பூண்டு, சேர்த்த உணவு கள் தரமானவை. அளவோடு உண்பது, நேரத்துடன் உணவு உட்கொள்வது போன்றவை இதயத்திற்கு நன்மை பயக்கும். எப்போதும் புதியதாக தயாரித்த உணவுகளே சிறந்தவை.

புதிய பழங்கள், ஓட்ஸ். கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு சப்பாத்தி எல்லாமே இதயநோயை தடுக்கும். மாதுளம் பழச்சாறு இதயத்திற்கு வலுவூட்டும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நமது உணவு பழக்கங்கள் உடலுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். உணவே நோயை தருவதாக இருந்துவிடக் கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந் தெடுத்து இதயத்தை காப்போம்.

தமிழ் ஓவியா said...


அல்லவே அல்ல!


மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமும் அல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


உ.பி. குஜராத் ஆகிறதா?



உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான கலகம் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனராம். கலவரத்தை அடக்க இராணுவம் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளது.

முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கம்பெனி இராணுவம் மற்றும் துணை இராணுவ அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஹூக்கும் சிங், சங்கீத் ஷோம், சுரேஷ் ரானா, பர்தேண்டு சிங் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறிய கருத்துக் கவனிக்கத்தக்கது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அதற்கு முன்பாகவே உத்தரப் பிர தேசத்தில் பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்டி விடத் தொடங்கி விட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க.வினர் துடிக் கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.

இதே கருத்தினை சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வாலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் சிறு பான்மை அல்லாதார் என்று உத்தி பிரிக்கும் வேலை யில் (Polarisation) இறங்கி அதில் வெற்றி பெற்றதன் அறுவடையை நரேந்திரமோடி அனுபவித்துக் கொண்டுள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வை அதற்குச் சாதகமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இரயில் பெட்டி எரிப்பில் மரணம் அடைந்தவர் களின் உடல்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லவிருந்த திட்டத்தை மாற்றி, அனைத்து உடல்களையும் அணி வகுக்கச் செய்து அகமதாபாத் நகரில் ஊர்வலம் நடத்தச் செய்ததன் பின்னணி நோக்கம் எளிதிற் புரிந்து கொள்ளத் தக்கதே!

எதற்கும் எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் தத்துவத்தை அதற்கு எடுத்துக் காட்டினார். அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த சிறுபான்மை மக்களை மிகவும் கேவலமான முறையில், கொச்சைப் படுத்தும் வகையில் தங்கள் ஜனத் தொகையைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்.

இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், பிரதமர் வாஜ்பேயி செவி சாய்க்கவில்லை. இத்தகவலை கே.ஆர். நாராயணன் அவர்களே பிற்காலத்தில் கூறி, தம் வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

பாபர் மசூதி இடிப்பு நடந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் மிகவும் கூர்மையாயின. அதற்குக் காரணமான குற்றவாளிகள் - பிஜேபியில் உள்ள பெரிய மனிதர்கள், சங்பரிவார்த் தலைவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் மேலும் முரட்டுத் துணிவு ஏற்பட்டு விட்டது.

காவி பயங்கரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சொன்னபோது எகிறிக் குதித்தனர்; உள்துறைச் செயலாளரோ, காவிகள் கலவரத்தின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் அரசு வசம் உள்ளன என்று அதிகார பூர்வமாக தெரிவித் துள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடக்கத்தில் சிறுபான்மையினர் மீது கண்கள் பாய்ந்தன. பலர் கைது செய்யவும் பட்டனர். பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. காவிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சந்தேகத்துக்குரிய வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின் மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொம்பைச் சீவிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதனை இந்திய வாக்காளர்கள் அடையாளம் காணாவிட்டால் அதற்கான விலையைப் பிற்காலத்தில் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


வேப்பமரத்துக்கும், அரச மரத்துக்கும் டும் டும் டும்!


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியாரும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும் சொன்னால் சுர்ரென்று மூக்குப் புடைக்கும் ஆசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லு வார்களாம்?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யடுத்த டி.எடையார் கிராமத்தில் மாணிக்க விநாயகர் கோவில் அருகே வேப்பமரமும், அரச மரமும் பின்னிக் கொண்டு இருக்கிறதாம்.

விட்டுவிடுமா புரோகிதம்? சுரண்டலுக்கு மறு பெயர்தானே பக்தியும் - அதன் தகப்பனாகிய புரோகிதமும்?

இது ஓர் அபூர்வ காட்சி - இந்த இரண்டு மரங் களுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் ஊரே சுபீட்சம் அடையும் என்றனர் குருக்கள் பார்ப்பனர்கள்!

குருக்களே சொல்லிவிட்டார் - வேறு அட்டி யென்ன? மேளதாளத்துடன் கல்யாண திருக்கோலம் - புரோகிதர்கள் தட்டுகளை மாற்றிக் கொண் டார்களாம் - மொய் எழுதப்பட்டது - உண்டியலும் நிரம்பி வழிந்தது.
மொட்டை சாமி தலையில் உட்கார்ந்த காக்கை எச்சமிட்டால் அதிலிருந்து விழும் விதையில் மரம் முளைப்பது இயல்பான ஒன்றுதானே. இதில் என்ன அதிவிசேஷம் வாழுது?

இந்தப் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் என்னும் இவர்களின் முன்னோரான மற்றொரு பார்ப்பனன்.

அவன் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில், அரசன் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம்? வரி போடலாம்? என்று விலாவாரியாக எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

ஒரு மரத்தில் பிசாசு தோன்றிவிட்டதாக முதலாவது பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ணிவிட வேண்டும். இந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான கூச்சல் இடும்படியாக அரசன் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தத் துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு ஆகும் என்று கூறி மக்களை நம்ப வைக்கவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிபோல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து குடிகளிடம் பணம் வசூல் பண்ணவேண்டும்.

பிசாசு நகரத்தைவிட்டுப் போய்விடுகிறது. பணம் அரசனின் பொக்கிஷத்தைப் போய் அடைகிறது.

அதேபோல, அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது மக்களிடம் காட்டிப் பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை உடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்கிறான் கவுடில்யன்.

எந்தப் புரட்டையாவது செய்து குடிமக்களை ஏமாற்றி அரசன் பணம் பறிக்கலாம் என்னும் வஞ்சக தந்திரங்களை கூடை கூடையாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறான் சாணக்கியன் என்று கூறப்படும் கவுடில்யன் தன் அர்த்தசாஸ்திர நூலில்!

இன்று அரசன் இல்லை; ஆனால், அதேநேரத்தில் அர்ச்சகப் பார்ப்பான் இருக்கிறான் சுரண்டிக் கொழுக்க - திடீரென்று ஒரு நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்று புரளி கிளப்பவில்லையா? ஒரு நாள்தான் குடித்தானா? ஏன் மறுநாள் குடிக்கவில்லை? குட்டு வெளிப்பட்டு உள்ளி மூக்கு உடைந்துவிட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், சந்திராசாமியும் இருந்தனர் என்று பிறகு அம்பலமாகிடவில்லையா?

பிள்ளையார் பால் குடிப்பார் என்றால், கொழுக்கட்டை சாப்பிடமாட்டாரா?

பிள்ளையார் பால் குடித்தார் என்று நிரூபித்தால் ஒரு லட்சமும், கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்துக் காட்டினால் இரண்டு லட்ச மும் ரூபாய் பரிசு என்றும் சென்னை அண்ணா சாலையில் (23.9.1995) திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித் தாரே - அந்தச் சவாலை யாராவது ஏற்றார்களா?

பக்தியின் பேரால் மோசடி செய்யும் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் தள்ளவேண்டாமா?

மகாராட்டிர மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டப்படி எடுத்த எடுப்பிலேயே பில்லி சூன்யக்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளார்களே!

அண்ணா பெயரைச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு செய்யுமா? எங்கே பார்ப்போம்!

குறிப்பு: சாணக்கியனின் மோசடிகளை மேலும் தெரிந்து கொள்ள தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட - கழக வெளியீடான கோவில்கள் தோன்றியது - ஏன்? என்ற நூலை வாங்கிப் படியுங்கள்!

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம். (விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள நிலை, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு எதிரான தீர்ப்பு, எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை - இவற்றை எதிர்த்தும், கண்டித்தும் வரும் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கருநாடக மாநில அரசைப் பொறுத்தவரையில் எந்தவித சட்ட திட்டங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை! உச்சநீதிமன் றத்திற்கு நிகரான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எல்லாம்கூட கருநாடகம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் வருகிறது. மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதில்லை.

எந்த ஓர் அணையைக் கட்டுவதானாலும் கீழ்ப்படுகையில் உள்ள மாநிலத்தின் ஒப்புதலையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற்றுத்தான் செய்யவேண்டும்.

ஆனால், 1959 இல் கபினி அணையையும், 1965 இல் சுவர்ணவத் அணையையும் கட்டியதே கரு நாடகம் - எந்தச் சட்டம் அம்மாநிலத்தின் கழுத்தை நெரித்தது?

இப்பொழுதும் அதே பாணியில் அணைகளைக் கட்ட முடிவெடுத்துவிட்டது, கருநாடகம். தேசிய நீரோட்டம் என்பதெல்லாம் காகிதக் கப்பலோட்டம் தான். மாநிலக் கட்சிகள் பேசினால் பிரிவினை வாதம் - அதைத்தானே தேசிய கட்சிகளும் செய் கின்றன - அது என்ன வாதம் - பக்கவாதமோ!

1924 ஆம் ஆண்டு ஒப்பந்த காலத்தில் கருநாடகத்தில் காவிரி பாசனப் பகுதி 6 லட்சம் ஏக்கராக இருந்தது. இப்பொழுது அது 25 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? 25 லட்சம் ஏக்கர் என்ற நிலை மாறி இப்பொழுது வெறும் 14 லட்சமாகத் தேய்ந்து கருவாடாகி விட்டது.

விவசாயம் இனி கைகொடுக்காது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள். விவசாய நிலங்கள் எல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங் களுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, இன்று வெளி மாநிலத்தை நோக்கிக் கையேந்தி நிற்கும் அவலம்.

கருநாடக மாநிலத்தில் காவிரி ஓடும் தூரம் 320 கிலோ மீட்டர்தான். தமிழ்நாட்டிலோ தலைக் காவிரியில் புறப்பட்டு 800 கி.மீட்டர் பயணம் செய்து பூம்புகார் கடலில் சங்கமம் ஆகிறது.

இதிலிருந்தே நியாயப்படி அதிக பலன் தமிழ்நாட்டிற்கே என்பது வெளிப்படையாகும். கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் வந்து அணைகள் உடையும் நிலை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் பயன்படுத்திக் கொள்கிறது.

உள்நாட்டிலும், தமிழர்களுக்கு வஞ்சனை; இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தமிழர் களுக்கு வஞ்சனைதானா என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

இந்த வஞ்சனையை எதிர்த்துப் போராடித்தான் தீரவேண்டும். தொடர்ந்து திராவிடர் கழகம் குரல் கொடுத்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும், போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் வருகிறது.

பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதையொட்டி, தமிழ்நாடு அளவில் தொடர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறோம்.

வருகின்ற 19 ஆம் தேதி நன்செய் பூமியாம் தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப் பாட்டம்! கழகத் தோழர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே அணிதிரள்வீர்! திரள்வீர்!!

தமிழ் ஓவியா said...


எளிமை, சிக்கனம், நாணயம், ஒழுக்கம், மனிதநேயம் இவைதான் பெரியார் கொள்கை

பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி இல்லம் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

பேராவூரணி, செப்.11- பேராவூரணியில் 8.9.2013 அன்று காலை பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் புதிய இல்ல அறிமுக விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய இந்த புதிய இல்ல அறிமுக விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, ஜெயராமு ஆகியோருடைய இந்த இல்லம் புதுமனையாக நல்ல அளவிற்கு கட்டி அதை அறிமுகப்படுத்தி இது எங்களுடைய இல்லம் என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்துகின்ற இந்த விழா விற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, கழக பொதுச் செயலாளர் ஜெயகுமார் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, தோழர் சிதம்பரம், நீலகண்டன் அவர்களே மற்றும் கழக பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களை சேர்ந்தவர்களே, பொதுமக்களே, பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் அன்பு சகோதரர் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியை இணைந்து அமைத்துள்ள பாப்பம்மாள் அவர்களே, கார்த்தி கேயன், சரோஜா, டாக்டர் சிவசங்கரி அவர்களே, அவருடைய குடும்ப பிள்ளைகள் பார்கவி, செய மூர்த்தி, சித்தார்த்தன் அவர்களே, பெரியோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

வரவேற்புரை ஆற்றிய சகோதரர் மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சிறப்பாக ஒன்றை சுட்டிக் காட்டினார். நல்ல சீரிய பகுத்தறிவாளரான இல்லத் திற்கு உரியவர்களாக இருக்கக்கூடிய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, இந்த இயக்கத்தின் கொள்கை களை பின்பற்றிய காரணத்தாலே இன்றைக்கு தலைசிறந்து நான் முன்னேறி இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்துகின்ற விழாதான் இது. (கைதட்டல்) இந்த விழா என்பது வீட்டுக்காக மட்டுமல்ல. வீட்டுக்கு வந்து விட்டாலே அறிமுகமாகி விடும். விழாவிற்கு வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் அறிமுகமாகிவிட்டது. பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் தாழ மாட்டார்கள். அவரும் அவரது சகோதரரும் இந்த அழைப்பிதழை எவ்வளவு சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். மாணவர் பருவத்திலிருந்து கிருட்டிணமூர்த்தி அவர்கள் எனக்கு அறிமுகம். அவர் மாணவர் பருவம், கல்லூரி பருவம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியராக இருந்து இப்போது பேராசிரியராக ஆகி இருக்கிற வரை இவ்வளவு வளர்ந்துள்ள காலம், இன்று வரை இவர் என்ன ஜாதி என எனக்கு தெரியாது. இதன் பெயர் தான் திராவிடர் கழகம். அதுதான் பெருமை.

நாங்கள் எல்லாம் ஒரே கொள்கை உடையவர்கள். இது ஜாதி, இரத்த உறவை விட ஆழமானது. பிரிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்று எளிமை, சிக்கனம், வருவாய்க்கு உட்பட்டு வாழ்வது, நாணயமாக வாழ்வது, ஒழுக்கமாக வாழ்வது, பிற மக்களுக்கு தொண்டாற்றுவது இதுதான் பெரியார் கொள்கை. கடவுளை மற என்ற பெரியார் மனிதனை நினை என சொன்னார். மனிதனை நினை என்பதில் எல்லாமே அடக்கம். இந்த குடும்பம். நல்ல பல்கலைக் கழகமாக இருக்கிறது. நம்முடைய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பெருமையாக உள்ளது.

அவரின் வாழ்விணையர் ஜெயராமு நிறைய டிகிரி வாங்கியுள்ளார். பெரியார் பிறந்திருக்காவிட்டால் திராவிடர் கழகம் தோன்றியிருக்காவிட்டால், சுய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த இயக்க கொள்கை பரவாமல் இருக்குமானால் இன்றையக்கு ஜெயராமு இத்தனை டிகிரி பெற்றிருக்க முடியுமா? அதைவிட இந்த குடும்பத்திலே கார்த்திகேயன், சரோஜா ஆகியோரின் குழந்தைகள் டாக்டர் க.சிவசுந்தரி எம்டி., படிக்கிறார். அடுத்த பெண் எம்.இ. படிக்கிறார்.

அனைவரும் சிறப்பாக படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த குடும்பத்திலே டாக்டர், பொறியா ளருக்கு பஞ்சமில்லை, பேராசிரியருக்கு பஞ்சமில்லை. இவ்வளவும் தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என பயமுறுத்தி விட்டான் - கிருட்டிணமூர்த்திக்கு இரண்டையும் நாம் பண்ணிட்டோம். திருமணத்தையும் நாம்தான் நடத்தி வைத்தோம். வீட்டையும் நாம்தான் இப்போது அறிமுகப்படுத்தி யுள்ளோம். நல்ல பகுத்தறிவாளராக இருப்பவர் முன்னேற முடியும். இந்த இல்லம் கிருட்டிணமூர்த்தி இல்லமாக இருந்தாலும் பெரியார் இல்லமாக அமைந்திருக்கிறது என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.

முன்னதாக புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். அனைவரையும் வரவேற்று மதியழகன் உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் இராச கிரி கோ.தங்கராசு, ஆர்பிஎஸ் சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்!

(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


உயர் நிலைக் கல்வியிலும் தேவை இட ஒதுக்கீடு


வரும் 19ஆம் தேதி காலை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற உள்ளது. கருநாடகத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டப்படுவது குறித்து நேற்று எழுதி இருந்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டாவது காரணம் - உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது - பேராசிரியர்கள் நியமனத்தில் டில்லி எய்ம்ஸில் இடஒதுக்கீடு கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் மற்றும் சிறுபான்மையினரும் ஆவார்கள்.

நீண்ட காலமாக இந்தப் பெரும்பான்மை மக்களுக் குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு போராடிப் போராடிப் பெறப்பட்டது.
மாநில அளவில் இந்த இடஒதுக்கீடுகள் இருந் தாலும் மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை.

அதற்காகவும் திராவிடர் கழகம் பெரும் அளவில் போராடி வந்திருக்கிறது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து 1990 வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதானது மாபெரும் சமூக அநீதியாகும்.

மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, போராட்டங்கள் - 16.

1990இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் (கல்வியில் அல்ல) 27 சதவீதத்திற்கு வழி செய்யப் பட்டது. அதனை எதிர்த்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர் கூட்டம் நீதிமன்றம் சென்று முடக்கியது. 1992-க்குப் பிறகுதான் ஏதோ நடைமுறைக்கு வந்துள்ளது.

20 ஆண்டுகள் கழிந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களும் கிடைக்க வில்லை. 7 சதவீதத்தைத் தாண்டவில்லை.

கல்வியில் இடஒதுக்கீடு 27 சதவீதம் என்பதைக் கூட ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் வழங்குவது என்று தான் கூறப்பட்டது. இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எந்த வகையில் நியாயம்?

இலையைப் போடுவதற்கு முன்னதாகவே வெளியே தள்ளி விடுவதா? மிகவும் வளர்ந்த நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில்கூட ஒடுக்கப்பட்ட மக்களான நீக்ரோக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சங்கம் (National Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ் என்பவர் (Charles Lyons) சென்னைக்கு வந்தபோது (அவருடன் 10 பேர் வந்தனர்) 1.2.81 அன்று பேட்டி ஒன்று அளித்தார். அச்செய்தி ஏட்டிலும் 2.2.1981 வெளிவந்தது. .

எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளன. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலேயே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேல் நிலைக் கல்வி எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே வந்த குழு அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மேல் நிலைக் கல்வி, உத்தியோகம் உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் வகையில் உத்தேச சட்டம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
மக்களின் இந்த மக்கள் நாயகக் குரலை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க் கிறோம். இல்லையேல் அகில இந்திய அளவில் போராட்டத்தை நகர்த்தி செல்லும் திராவிடர் கழகம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 19ஆம் தேதி தயாராவீர் தோழர்களே!

தமிழ் ஓவியா said...


வாழ்க முத்தையா!


இன்றைக்குத் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடு; சட்டப்படி இன்றைக்கு மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக் கீடு - இவை எல்லாம் இம்மக்களின் வளர்ச்சிக்கு இடப்பட்ட அடி உரம்.

இந்த அடி உரம் தந்த வர்கள் மேன் மக்களே! ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றிக்கும், போற்றுதலுக் கும் உரிய பெரு மக்களே!

அந்த உன்னத ஒப்பரிய பட்டியலில் பெருந்திரு எஸ். முத்தையா முதலியார் அவர் களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆண் குழந்தை பிறந் தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முத் தையா என்று பெயர் சூட் டுமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்திருந் தார் என்றால், அது என்ன சாதாரணமா?

இதே நாளில்தான் (13.9.1928) டாக்டர் சுப்ப ராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவை யில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர் கள் முதல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்து நடைமுறைக்கும் கொண்டு வந்தார். (அரசு ஆணை எண் 744 நாள்: 13.9.1928).

அரசு நியமனத்திற்கும் 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றில்

இந்து பார்ப்பனரல்லா தாருக்கு - 5

பார்ப்பனர்களுக்கு - 2
இசுலாமியர்க்கு - 2
கிறித்தவர்களுக்கு - 2

ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு (ஆதி திராவிடர் உட்பட) - 1

இந்த வகையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றது அமைச் சர் முத்தையா அவர்களால் கொண்டு வரப்பட்ட ஆணை.

இந்த வகையில் பார்த் தாலும்கூட 3 சதவீதமுள்ள பார்ப்பனர்களுக்கு 17 சத வீதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் கூடப் பொறுக்காத பார்ப்பன ஏடான சுதேசமித்திரனோ முத்தையா முதலியா ருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று எழுதியதே!

முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம், மக்கள் இதனைக் கண்டிக் கின்றனர் என்று இந்து ஏடு எகிறியதே!

உண்மையில் இப்படி எழுதிய பார்ப்பன ஏடு களின் எழுத்துக்களே அவர்களுக்கு வகுப்புப் பித்தம் எந்த அளவுக்குத் தலைக்கேறியது என்பதற் கான அளவுகோலாகும்.

முத்தையா அவர்கள் மறைந்தபோது அண்ணா அவர்கள் எழுதியது. தனக் குக் கிடைத்த சந்தர்ப் பத்தை (அமைச்சர்) கித் தாப்புக்கும், திறப்பு விழா வுக்கும் மட்டுமே கிடைத் தது எனக் கருதாமல் திராவிட இன மக்களின் துயர் துடைக்கும் திட்டங் களுக்காகப் பயன்படுத்தி யவர் என்று எழுதியதைப் பதவியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வாழ்க எஸ். முத்தையா முதலியார்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பொறுத்திருந்து பார்ப்போம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பிஜேபி சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர் ஜாதி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்பொழுதே மோடி வெற்றி பெற்று பிரதமராகவே ஆகி விட்டதுபோல குதிகால் தரையில் படாமல்கூடக் குதிக்கிறார்கள்.

கோட்டைக்குள் இப்பொழுது குத்து வெட்டுக் கிளம்பி விட்டது. மூத்த தலைவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் முற்றி வெடித்து வருகின்றன.

பி.ஜே.பி. பிரச்சாரக் குழுத் தலைவராக, பிஜேபி கோவா செயற்குழுவில் மோடி அறிவிக்கப்பட்ட போதே, பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அத்வானி தம் எதிர்ப்பை, அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பின், அத்வானியின் கையில் - காலில் விழுந்து ஏதோ சமாதானம் படுத்தினார்கள்.
உள் காயத்துக்கு மேலே களிம்பு பூசி மெழுகினர் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குமுன், நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கட்டளை.

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கலாம் என்பது, அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி போன்றவர்களின் நிலைப்பாடு.

வயதான காலத்திலும்கூட அத்வானிக்குப் பதவி ஆசை போகவில்லை என்று மோடியின் ஆட்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியெல்லாம் திட்டமிடு வதில் தான் மோடி (மஸ்தான்) கில்லாடி ஆயிற்றே!

பிஜேபியைப் பொறுத்தவரை, வாஜ்பேயியாக இருந்தாலும் சரி அத்வானியாக இருந்தாலும் சரி, முரளி மனோகர் ஜோஸியாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உத்தம புத்திரர் என்று அவர்கள் வட்டாரத்தால் புகழப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி லக்னோ பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை ஒரே ஒரு முறை நினைத்துப் பார்க்கட்டும்.

நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முள்ளின்மீதும் கூரிய கற்களின் மீதும் அமர்ந்தா கரசேவை செய்ய முடியும்? எல்லா வற்றையும் சமன் செய்து அதன் மேல் அமர்ந்துதான் கரசேவை செய்ய முடியும் என்று வாஜ்பேய் சொல்ல வில்லையா? அவர் ஒரு கவிஞர் என்று கூறப்படுவ தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சமன் செய்து அதன் மேல் கரசேவை நடைபெறும் என்று மறைமுகமாக கூறினார் என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியாதா?

நரேந்திரமோடி அளவுக்குப் பச்சையாக சிறுபான் மையினரைக் கொன்று குவிக்கும் அளவுக்கு அவர் களின் அணுகுமுறை மதம் கொண்ட யானைபோல் திமிர் முறித்து எழாது என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

கோத்ரா அளவுக்கு நிலைமையைக் கொண்டு செல்லத் தயங்குவார்கள் என்று வேண்டுமானால் கருதலாம்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அரசியல் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப கொண்டு செலுத்த வேண்டும் என்கிற அணுகுமுறை அவர்களிடம் இருக்கும்.

ஆனால் மோடியோ நேரடியாகவே களத்தில் இறங்கி துப்பாக்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்குச் செல்லும் வெறித்தனம் தூக்கலான மனப்பான்மை கொண்டவர்.

இந்தியா முழுமைக்கும் மோடியின் பிம்பம் விகாரப்பட்டுப் போயிருக்கிறது. அவரை பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்தால் அது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் அனுபவத் தன்மையோடு அத்வானி கூறக் கூடும். ஆனாலும் ஆர்.எஸ்.எஸின் முடிவு தானே இறுதி முடிவு! ஆர்.எஸ்.எஸ். யாரைத் தேர்வு செய்யும்? நரேந்திர மோடி போன்றவர்களைத் தான் தேர்வு செய்யும் என்பது எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றே!

நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எதிர் விளைவை உண்டாக்கும்; ஒருவகையில் மதவாத சக்தி மத்தியில் ஆட்சியில் வராமல் இருக்க ஒரு வகையில் நல்லது தானே என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. நடக்கட்டும்; பிஜேபிக்குள் இன்னும் என்னென்ன உட்குத்துகளோ!

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சித்திரவதைக்கு...



நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)