Search This Blog

7.9.13

ஆரியரின் அந்தரங்க அகராதி! - அறிஞர் அண்ணா


(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)

கோவில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்

கும்பம் = வயது, அபிஷேகம் = ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ, ஓர் வழி.

அர்ச்சனை...

ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.
திராவிட மக்களின் செல்வத்தையும் வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்

அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்

வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்குத் தோன்றினாலும், அதை மனதிற்குள்ளேயே முடங்கும்படிச் செய்வதற்காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.


ராவணன்

ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்

இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (Code) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை _ சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளிகளை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (Code) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன.

       ---------------------------------------------அறிஞர் அண்ணா- திராவிட நாடு, 8.11.1942

15 comments:

தமிழ் ஓவியா said...


இருப்பு


போடிநாயக்கனூரையடுத்த திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப் பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் கழிப்பதற் காக 4 கிலோ எடையுள்ள தங்கம் (மதிப்பு ரூபாய் ஒரு கோடி) பாதம் ஒன்றைச் செய்து ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்ய உள்ளா ராம்.

அதற்கான பூஜைகள் அவர் வீட்டிலேயே நடந்துள் ளன. அதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர் (என்ன நடந்தாலும் அவாள் காட் டில் தான் மழை பெய்யும் போலும்!)

பலத்த பாதுகாப்புடன் (ஏன், ஏழுமலையான்மீது நம்பிக்கை இல்லையா?) அந்தத் தங்க பாதங்கள் கடந்த வெள்ளியன்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆகா, என்னே கடவுள் நம்பிக்கை - பக்தர்களின் மனப்பான்மை! நினைத் தால் வாயால் சிரிக்க முடிய வில்லை.

இதற்கு முன்பேகூட மூன்று கிலோ எடையில் தங்கத்தினாலான பூணூலை (கவனிக்கவும் கடவுளும் பார்ப்பன ஜாதிப் பட்டியலில்) காஞ்சி சங்க ராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி, திருப் பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார் (மாலை மலர் 16.3.2002).

காஞ்சிபுரத்தையடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் ரூபாய் மூன்று கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்ட தோடு நிற்கவில்லை, அவ ரின் செருப்புக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் மக்களுக் காகப் பாடுபடும் தலைவர் களுக்குச் சிறப்பு செய்தால், அன்பளிப்புகள் வழங்கி னால் கேலி செய்யும் துக்ளக் சோ ராமசாமி தினமணி வைத்திகள், - குருமூர்த்தி வகையறாக்கள் இந்த சமூகத்துக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத காரியங்களுக்கு பணத்தையும், தங்கத்தை யும் கொட்டி அழுவதுபற்றி குறைந்த பட்சம் முணு முணுக்கவாவது செய் கிறார்களா?

அதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதுபற்றி குருமூர்த்திகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்களே - முடங்கிக் கிடக்கின்றன தங்கக் கட்டிகள் டன் டன்னாக கோயில்களில். அதை அரசின் இருப்புக் குக் கொண்டு வந்தால் தீர்வு கிடைக்கும் என்று இந்தப் பொருளாதார பு(ளி)களின் பேனாக்கள், மை சிந்துவதில்லையே - ஏன்? கோயில்களின் இருப்பில்தானே இவாளின் ஆதிக்க இருப்பும் இருக் கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வைஷ்ணவ அய்யர்


ஒரு நாளும் நான் அமைதியாய் இருக்க முடியாது
எனது ஆன்மாவை நிம்மதியாய் பற்றியிருக்கும் அது
என்னை ஒரு நாளும் நிம்மதியாய் இருக்க விடாது
முடிவற்ற போராட்டத்திற்காக நான் போராடியே ஆக வேண்டும்
எனவே சகலத்திலும் இறங்கிப் பார்ப்போம்
ஒரு போதும் ஓய்வில்லை ஒரு போதும் களைப்பில்லை
ஒரு போதும் வெற்று வார்த்தைகளை உச்சரிப்பதில்லை
எப்போதும் நம்பிக்கை எப்போதும் தாகம்
வலிஎனும் நுகத்தடிக்குள் கழுத்தை நுழைத்து
சோகப்பெரு மூச்சு விடுதல் மட்டும் வேண்டாம்
தாகம் நிறைந்தவனுக்கு முயற்சி செய்கிறவனுக்கு
சாதனைகள் இன்னும் மிஞ்சி நிற்கின்றன

-அருணனின் காரல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் நூலிலிருந்து கோட்டைப்பட்டியில் கஷ்டப்பட ஆரம்பித்தவுடன் மீண்டும் எழ வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும், என்கிற எண்ணம் தாகம் இருந்ததாக எனது தகப்பனார் கூறுவார். அப்போது கோட்ப்பட்டியில் சுப்பையா என்ற நண்பருடன் சேர்ந்து கழுகுமலை சந்தையில் கடைபோட்டு வியாபாரம் செய்யலாம் என எண்ணினேன். சரக்கு வாங்க பணம் வேண்டுமே என்ன செய்வது?

நண்பன் சுப்பையா யோசனை சொன்னான். கழுகுமலை சந்தை பெரிய சந்தை; மாட்டுத்தாவணியும் நடைபெறும். நிறைய மாடுகள் விற்பனைக்கு வரும்; கூட்டம் அதிகமாக இருக்கும்; எனவே அங்கே தோசைக்கடை போடலாம் எனச் சொன்னான். நான் சொன்னேன் நானோ நாடார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன், என் தோசை கடையில் யார் வந்து சாப்பிடுவார்? ஏற்கெனவே நாங்கள் ஊருக்குள் செருப்பு போட்டு நடக்கக்கூடாது.

பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது. நாடார் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். பின் எப்படிக் கடைபோடுவது? இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது. அதுதான் அய்யர் வேடம், பூணூல் போட்டுக் கொண்டோம் நெற்றியில் கைகளில் வயிற்றில் திருநீறு பூசிக் கொண்டு, தோசைக் கடை ஆரம்பித்தோம். சந்தையில் நான் தோசை சுடுவேன் உரு அணாவுக்கு நாலு தோசை, நண்பன் சுப்பையா பரிமாறி காசு வாங்குவான். நல்ல வியாபாரம் மதியம் இருக்கும் கோட்டைப்பட்டியில் இருந்து கழுகுமலைச் சந்தைக்கு வந்த ஒருவர் எங்களை பார்த்து விட்டார். அவர் அங்கு இருந்தவர்கள் இடத்தில் எங்கள் ஜாதியை சொல்ல என்னடா வேஷம் போடுகிறீர்களா? வேஷம் என எங்களை அடித்து விரட்டினார்கள். கிடைத்த வரை லாபம் என சாமான்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டோம். அய்யர் வேடத்தில் நாங்கள் கூட்ட தோசை சுவையாக இருந்தது. வேடம் கலைந்தவுடன் அது கசக்க ஆரம்பித்துவிட்டது. அன்று மாட்டுத்தாவணியில் மாடுகளுக்குக் கிடைத்த மரியாதை கூட மனிதர்களுக்குக் கிடைக்கவில்லை.

- (எஸ்.கே.நடராசன் எழுதிய பருத்திப் பழம் எனும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...


சாதிக் கொடுமைகளும், தீண்டாமையும்



இந்தியாவிற்கு விடுதலை வேண்டு மானால், சுயராஜ்யம் வேண்டுமானால் வெள்ளைக்காரர் சுய நல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக் கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும் தீண்டாமை ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், முத லாளித் தன்மை ஒழிய வேண்டும். இவ்வளவும் நடந்தபிறகுதான் வெள் ளைக்காரர் கொடுங்கோன்மை நம்மால் ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு

- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

என் தந்தையார் அவர்கள் கிராமத் தில் வாழ்ந்தவர் கிராமங்களில் வியா பாரம் செய்தவர். அதனால் அக்காலத் தில் கிராம;ங்களில் சமூகத்தில் நடந்த சாதிக்கொடுமைகளையும், தீண்டாமை யையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர். அக்கால நிகழ்ச்சிகளை அடிக்கடி எங் களிடம் பகிர்ந்து கொள்வார். அது கேட் பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந் தவன். அக்காலத்தில் மேல் சாதிக் காரர்கள் வசிக்கும் தெருவில் காலில் செருப்புடன் நடக்க முடியாது கையில் செருப்பை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் தெருக் கோடியில் உள்ள மரத்தடியில் செருப்பை விட்டுச்செல்ல வேண்டும். மேல்துண்டு போடக்கூடாது இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். கோயிலுக்குள் போக முடியாது. பொதுக் கிணறுகளில் குடிக்கத் தண்ணீர் எடுக்க முடியாது.

நான் 1942, 43-இல் தேனியில் குடி வந்து ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் மிளகாய்வத்தல் களம் போட்டிருப்பேன். மிளகாய் பழம் வாங்கி களத்தில் காயப்போட்டு வத்தல் ஆக்கி தேனி மார்க்கெட்டுக்கு விற் பனைக்காக கொண்டுவருவேன் நானும் என் தந்தையார் சண்முகவேல் நாடார் அவர்களும், மிளகாய் சீசன் நேரத்தில் கீரபோத்தம்பட்டி கிராமத்தில் தங்கி விடுவோம் என் தகப்பனார் சமையல் செய்வார். நான் மிளகாய் வாங்குவேன்.

கீரபோத்தம்பட்டி, அம்மாபட்டி கிராமங்களில் அதிகமான தேவர் சமு தாயத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்க்ள அவர்களிடம் எனக்கு நல்ல பழக்கம். தெற்கே இருந்து ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் என்று எனக்கு எல்லா உதவியும் செய்வார்கள். மழைகாலத்தில் மழைவந்து விட்டால் காயும் மிளகாய் நனையாமல் இருக்க ஊர்மக்கள் ஆண், பெண் அனைவரும் ஓடிவந்து எனக்கு உதவுவார்கள்.

அந்த காலம் வெள்ளைக்காரன் காலம் ரேகை சட்டம் இருந்தது (குற்ற பரம்பரைச் சட்டம்) ரொம்ப கொடு மையான சட்டம், தேவர் சமுதாயத்தை சார்ந்த ஆண்கள் எல்லாம் சாயங்காலம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து இரவு அங்குதான் படுக்க வேண்டும் விடிஞ்ச பிறகுதான் ஊருக்கு போகவேண்டும். ஒரு சிலர் தப்பு பண் ணுவதற்கு ஊரில் உள்ள விவசாயிகள், பெரியோர்கள் அனைவரும் நிலையத் தில் படுக்க வேண்டும். நானும் பல சமயம் இளவட்ட ஆட்களுடன் நிலையத்துக்கு படுக்க போயிடுவேன். அம்மாபட்டிக்கும் ஆண்டிபட்டிக்கும் 10 மைல் தூரமிருக்கும். நிலையத்திலி ருந்து ஊருக்கு வரும் போதே கண் ணில் பட்டதை தூக்கிட்டுவந்திடு வாங்க.

ஒரு சமயம் மிளகாய் பழ மூட் டையை தூக்கிட்டு வந்து என்கிட்டே வித்திடுவாங்க, காவலர்கள் என்னை தேடி கீரபோத்தம் பட்டிக்கு வந்திச்சு, ஊரில் இருந்த பெரிய தேவரு, என்னை டேய் கந்தசாமி நீ மரத்தின்மீது ஏறி உட்கார்ந்துக்க. காவலர்களை நாங்க பார்த்துக்கிறோம் எனச்சொல்லி காவலர்களைத் திருப்பி அனுப்பி வைச்சாங்க. காவலர் போனபிறகு மரத்தில் இருந்து இறங்கி வந்தேன்.

அதன்பிறகு ஆண்டிப்பட்டிக்கு அருகில் உள்ள தேக்கம்பட்டியில் வியாபாரம் செய்தேன். அங்கு அரிஜன மக்கள் வாழும் ஊர் அந்த ஊர் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து விளையும் சரக்குகளை நானே வாங்கிக் கொள்வேன் சரக்குகள் அனைத்தும் என்கமிசன் கடைக்குவரும். அப்ப அந்த ஊர் மக்கள் என்னை முதலாளின்னு கூப்பிட்டா.

அப்படி அழைக்க வேண் டாம் நானும் உங்களைப்போல் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்வேன். சிறுவயதில் என் னிடம் சாதிக் கொடுமை, தீண்டாமையை பற்றி ஒரு தாக்கம் இருந்தது. எனவே தேக்கம்பட்டி அரிஜன விவசாயிகளை தேனிக்கு கூட்டிவந்து என்கடையில் படுக்கச் சொல்வேன், தேனியில் அப் போது ரெங்கநாடார் கிளப் இருக்கும். அரிஜன விவசாயிகளை அங்கு கூட்டி சென்று எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வைப்பேன்.

பல நேரங்களில் என் விட்டில் சாப் பாடு போடுவேன் என் மனைவி சுந்தரம் மாளும், அன்போடு அவர்களுக்கு சாப்பாடு போடுவா, அப்போது வீட்டில் 10, 15, பால் மாடுகள் இருக்கும் அந்த மாடுகளை தேக்கம் பட்டியில் தான் வளர்க்கவிடுவேன். மாடுகளை நல்ல முறையில் வளர்த்துக் கொடுப்பார்கள்.

யாரும் சாதி வித்தியாசம் பார்க்க கூடாது நான் சமுதாயத்தில் வளர்ந்தது எல்லா சமுதாயத்தினரின் அரவணைப் போடு தான் என தந்தையார் அடிக்கடி கூறுவார். நான் கோட்டப்பட்டி நாயக் கர் வீட்டு கஞ்சி குடித்து வளர்ந்தவன் என பெருமையோடு பேசுவார்.

(எஸ்.கே.நடராசன் எழுதிய பருத்திப்பழம் எனும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...


மோடி - வித்தை - இது புதுவிதம்!



- ஊசி மிளகாய்


குஜராத் முதல் அமைச்சர் - நரேந்திரமோடி வித்தை காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்! பழைய மோடி மஸ்தான் வித்தைக் காரர்கள் எல்லாம் இந்தப் புதிய மோடி அரசிய லுக்கு வந்தபின், பின் வாங்கிவிட்டார்கள் - இவருக்கு முன் தங்கள் வித்தை எடுபடாது என்று!

திடீரென்று ஒரு புது வித்தை காட்டி இந்தியாவையே அதிரச் செய்ய எண்ணி, கிறங்கி அவர் பாவம் வழமைபோல் ஏமாந்து விட்டார்!

பிரதமர் கனவு தனக்கில்லை; எம்மக்கள் 2017 வரை எம்மை குஜராத் முதல் அமைச்ச ராகவே வாக்களித்து ஆணையிட்டுள்ளார்கள். அதிலேயே தொடருவதுதான் என் விருப்பம்; பிரத மராவதல்ல என்று ஒரு போடு போட்டுள்ளார்!

பிரதமராக இவரை முன்மொழிந்த முக்கிய காரணி - ஆர்.எஸ்.எஸ். தலைமை தானே!

அத்வானிகளும், ஜஸ்வந்த் சிங்குகளும், யஷ்வந்த் சின்காக்களும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தபோது, இதை மோடி சொல்லியிருக் கலாமே! அப்போது சொல்லாத மோடி இப்போது கூறுகிறாரே! எந்த போதி மரத்தடியில் அமர்ந்து புதிய ஞானோதயம் பெற்றார்?

பா.ஜ.க., கட்சிக்குள் ஆயிரம் கோஷ்டிகள் - இதற்கு மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ்.தான்!

அந்த ரிங் மாஸ்டர் வந்து அங்கே தனித் தனியே வரும் கூச்சல்களை அடக்க, சாட்டை எடுத்து வருவார் தீர்ப்பார்.

இப்படி மோடி மனமாரச் சொல்கிறார் என்று நினைக்க நாட்டில் அவ்வளவுப் பைத்தியக் காரர்களா நிறைந்துள்ளார்கள்?

உடனே இங்குள்ள சோக்களும், குரு மூர்த்திகள் போன்ற பார்ப்பனர்களும் மேலும் மோடியைச் சிலாகித்து எழுதிக் குவிப்பார்கள்.

இணையதளத்தைப் பயன்படுத்தி இமேஜ் பில்டப் நடத்தி, பலரும் பாடுபட்டு ஓநாய்க்கு பசுத்தோல் போர்த்தி, கோமாதா எங்கள் குலமாதா என்று காட்டிட ஒற்றைக் காலில் நின்று தவமோதவம் செய்கின்றனர்!

மோடியைக் களம் இறக்கினால் அதைவிட மற்ற முற்போக்காளர்கள் - மதச் சார்பற்றவர்கள் வருவதற்கு அதைவிட நல்ல வாய்ப்பு வேறு இருக்கவே முடியாது.

*மலிவான விளம்பர ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? சீப் (Cheap) பப்ளிசிட்டி உத்திகள் ஏராளம் வைத் துள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு வேடங்களான இந்து முன்னணி போன்றவை களாகும்.

திண்டுக்கல்லில் யாரோ ஒருவர் இந்து முன்னணி (ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்)யைச் சார்ந்தவர் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக அவரது மனைவி, குடும்பத்தவர்களை, விட்டு, பேட்டி கொடுக்கச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் (பிரவீன் என்ற ஒருவர் என்று நினைக்கிறோம்).

அதுபற்றி அங்குள்ள காவல் துறையின் கண்காணிப்பாளர் தலைமையில், (அந்த காவல் துறை கண்காணிப்பாளர் மிகவும் திறமையாக எப்பக்கமும் சாயாத நேர்மையாளர்) உடனே துப்பு துலக்கப்பட்டு உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்! சிறுபான்மையினர்மீது பழி போட்டது அம்பலமாகியது.

உண்மைக் குற்றவாளி யார் தெரியுமா? இந்த நபரே - இப்படி ஒரு ஜோடனை; குண்டு எறிந்து, தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொண்டார்! கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியில் இந்து முன்னணியினர், தங்கள் ஆள் ஒருவரை பலிகடாவாக்கி பழியை சிறுபான்மைச் சமூக இஸ்லாமியர்மீது போட்டு பிறகு காவல்துறை இந் தக் கொடுமையை அம்பலப்படுத்திடவில்லையா?

இதுமாதிரி மோடிகளின் ஒப்பனை பிரமாதம்-

திருச்சியே திக்குமுக்காடப் போகிறதாம்!

பிரதமராகும் முன்பே மோடியின் பேச்சின் காரம், கடுமையான பதப்பிரயோகங்களின் தன்மை அவரைத் தலைமைப் பண்புக்குரியவராக காட்டுகிறதா?

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது முந்தைய பழமொழி.

மோடி மோகம் அவ்வளவு நாள்கூடத் தாங்காது; தாங்கவே தாங்காது!

இது, போகப் போகப் புரியும்! - இந்த மோடியின் வாசனையும் தெரியும்.

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமை


வகுப்புரிமைக்காகப் பாடுபட்டு மானத்தைக் காப்பாற்றக் கொல் லப்படும் செய்கைக்கும் நாம் தயாராக இருக்கவேண்டும். அப்போது நமது உரிமை காக்கப் படுவதுடன், நல் வாழ்வும் பெற முடியும். மானம் காத்தவருமாவோம். - (விடுதலை, 13.8.1965)

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டர் புகழ் மோடி முதல்வராகத் தொடரலாமா?


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நேற்று குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

பரிசுத்த யோவான் வேடம் போட்டு, நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படும், பிரதமருக்கான வேட்பாளர் என்ற பொய்க்கால் குதிரைமீது, சவாரி செய்யும் இந்த ஜிகினா மனிதரின் உள்ளீடு என்ன?

ஏற்கெனவே, வண்டி வண்டியாக அவரைப்பற்றிய சமூக விரோதத் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன; என்றாலும் சிறைச்சாலையிலிருந்து தன் பதவியை பதவி விலகல் செய்தும், குஜராத் முதல் அமைச்சர், முந்தைய உள்துறை அமைச்சர், மற்றும் குஜராத் மாநில அரசுமீதும் குற்றப் பத்திரிகையைப் படிக்கும் வகையில் 20 பக்கங்களைக் கொண்ட, அறிக்கை யினை வெளியிட்டுள்ளார் குஜராத் மாநில அரசின் டி.அய்.ஜி.யான டி.என். வன்சரா.

இவர்மீது போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்குப் பதிவாகி, அதன் அடிப்படையில்தான் 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் சபர்மதி சிறையில் இருந்து வருகிறார்.

சொராபுதீன் ஷேக் மற்றும் இஸ்ரத் ஜஹான் ஜாவேத் ஷேக், அம்ஜத் அலிராணா, ஜீஷன் ஜோஹாய் ஆகியோர் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளில் டி.அய்.ஜி. வன்சாரா சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

சொரபுதீன் ஷேக்கைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுக்குச், சரியாகச் சூடு கொடுத்தது. வழக்கை சி.பி.அய். விசாரித்தது; அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் உரையாடல் அடங்கிய குறுந்தகடு (சி.டி.) மத்தியப் புலனாய்வுத் துறையிடம் வழங்கப்பட வில்லை. அதற்காக உச்சநீதிமன்றம் மோடி அரசைக் கடுமையாகச் சாடியது.

இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மோடி அரசால் போலி என் கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர் என்பது மிகப் பெரிய சோகமாகும்.

குஜராத் காவல்துறையை நம்ப முடியாது; என்று உயர்நீதிமன்றம் வெகு வெளிப்படையாகவே கூறி, வழக்குகளை சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தது. மோடி எந்த அளவுக்கு யோக்கியமாக ஆட்சி செய்தார்? என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே போது மானது.

2004 ஜூன் 15ஆம் தேதி போலி என்கவுண்டரில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப் பட்டனர். இவர்கள்மீது குஜராத் அரசு வைத்த குற்றச்சாற்று என்ன தெரியுமா?

இவர்கள் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு கொண்டவர்கள்; குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் என்று குற்றஞ் சாட்டப் பட்டுக் கொலை செய்யப்பட்டனர் காவல்துறையால்.

இதனை எதிர்த்து இஸ்ரத் ஜஹானின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மத்தியப் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தனர். ஆனால், குஜராத் அரசோ கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. ஆனாலும் உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய் வுக் குழுவை நியமித்தது. 2011 நவம்பர் 18 அன்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர்களும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறியது. அதில் இஸ்ரத் ஜஹான் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே கொல்லப்பட்டு, அவரது பிணம், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பிணத்தின்மீது குண்டுகளைப் பாய்ச்சி, குஜராத் காவல்துறை நாடகம் ஆடியது, என்றெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது.

ஹிட்லர் ஆட்சியில்கூட, நடந்திராத இத்தகைய கொடூரங்கள், இந்த மோடி மஸ்தான் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது.

இந்தப் போலி என்கவுண்டர்களை நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஜி. வன்சாராதான் இப் பொழுது உண்மையான குட்டுகளை உடைத்துக் காட்டியுள்ளார்.

இந்தப் போலி என்கவுண்டர் கொலைகளை நடத்தச் சொன்னது எல்லாம், அவற்றிற்கு வழி காட்டியதெல்லாம் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சராகவிருந்த அமித்ஷாவும்தான் என்று அறிக்கையில் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தார்.

பாவம்! மோடியைத் தூக்கிப் பிடித்த, பார்ப்பன ஊடகங்கள் எல்லாம் இஞ்சி தின்ற குரங்குகளாகக் காணப்படுகின்றன.
தன் அரசியல் எதிரிகளைப் போலி என்கவுண்டர் மூலம் கொன்ற ஒருவர் முதல் அமைச்சராகத் தொடரலாமா என்ற கேள்வியோடு குஜராத்தில் முழு அடைப்பு நடைபெற்றது நேற்று .

இதற்குப் பிறகும், மோடிதான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றால் அதைவிட வெட்கக் கேடு, வேறு எதுவாக இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்


ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்

சமூக நீதி காவலர் மற்றும் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இடஒதுக்கீடு தொடர்பாக விடுதலை நாளிதழில் கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள்.

கடந்த 18.8.2013 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி தங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்வித் தாள் தயாரிக்க கல்வி வல்லுநர் குழுவை தமிழக அரசு மற்றும் ஆசிரி யர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது. விடைகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் வல்லுநர் குழுவே பொறுப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

மதிப் பெண் குறைப்பு இல்லை என தமிழக அரசு கூறிய நிலையில் கேள்வித்தாள் தரம் உடையதாகவும் மற்றும் விடைகள் மாற்றம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வு நடத்த, தகுதித் தேர்வின் பிறகு விடைகள் வெளியிடப்பட்டு இதில் ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை சந்தித்து சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரி யர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன் பின் ஒரு கீ வெளியிடப்பட்டது. அப்புறம் எதற்கு கல்வி வல்லுநர் குழு. தேர்வு எழுதிய ஆசிரியர் அலுவலகத்தை சந்தித்தாலே முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்ற முறையும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படு கிறது. அதே சமயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் விடைகளில் குளறு படியில் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிபதி நாகமுத்து தீர்ப்பிற்குப்பின் பின்னர் விடைகள் சரிசெய்யப்பட்டு வெளியிடப் பட்டன.

அதே சமயம் 2012 தகுதித் தேர்வு விடைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சென்ற ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இவர் களது குளறுபடியால் 88/89 மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழக அரசு எதுவும் கவலைப்படவில்லை.

18.8.2013-இல் இந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கீ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது முடிவான கீ இல்லை 3.9.2013 அன்று வெளியிடப்படும். கீ முடிவானது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது (நன்றி: தினமணி)

தமிழகத்தில் விடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கொடுக்கப் பட்டு ஆசிரியர் தேர்வு கேலிக்கூத் தாக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளி யான செய்தியும் விசாரணையும் நடந்து வருவது ஊடகங்கள் மூலம் தெரிய வரும் நிலையிலும் வழக்குரைஞர் பழனிமுத்து பொதுநல வழக்கு செப்டம்பர் 17 அன்று நீதிமன்றத்தில் வரும் நிலையில் மற்றும் உயர்நீதி மன்றத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கபட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறிய நிலையில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக செயல்பட்டு பணிவழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையெனில் மறு தேர்வு நடத்தபட வேண்டும். விடை சம்பந்தமாக தேர்வு நடத்தும் அலுவ லகத்தை தேர்வு எழுதியவர்களையே அணுகச் சொல்வது எந்த தேர்வு வாரியத்திலும் இல்லாத நடைமுறை மற்றும் அந்த அலுவலகத்தின் தேர்வு குளறுபடி யானது என்பதை சுட்டிக் காட்டுகிறது. வல்லுநர் குழு செய்யும் குளறுபடிக்கு தமிழக கல்வியியல் பல்கலைக்கழகம் தகுதித் தேர்வு நடத்தினால் நல்லது.

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு


சரவணா இராஜேந்திரன்

தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும், சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன. அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம் கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார் சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது. இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர். தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும் எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.

சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும், அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)

கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும் தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர். ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்),

- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்தெலாம் நடைமுறைப்படுத்தினார் நரேந்திர தபோல்கர்!

மராத்தா மாநிலம் சதாரா மாவட்டம்

மாமேதை குலக்கொழு ந்தாம்
மனிதரின் நேயராம் மனதிலே தூயராம்
நரேந்திர தபோல்கரே!

நாத்திகக் கருத்தெல்லாம் நடைமுறைப் படுத்தினார்
நரேந்திர தபோல்கரே!
நல்லதோர் மருத்துவர்! மடமையை வெறுத்தவர்!
நரேந்திர தபோல்கரே!

அஞ்சாத உண்மைகள் நெஞ்சிலே கொண்டவர்
அறியாமைக்கு எதிரானவர்!
அகலாத கொள்கையே செயலாக வாழ்ந்தவர்
நரேந்திர தபோல்கரே!

சிரித்திடும் முகத்தவர்! பழித்திடும் பகைவரின்
சினத்தையும் முரித்தவர்தாம்!
சிந்தனை வளர்த்தவர் நொந்தவர்க் குதவினார்
நரேந்திர தபோல்கரே!

சிங்காபூர் கோயிலில் பெண்களுக்கு உரிமையாம்
சீர்திருத்தம் புரிந்தார்!
செய்தியாளர்கூட்டம் திறமையாய் நடத்தினார்
நரேந்திர தபோல்கரே!

மராத்தியில் மூடநம்பிக்கைஒழிப் பென்னுமோர்
மக்களமைப் பாக்கியவர்!
மாந்தரில் தாழ்வுயர் வற்றிடத் துணிந்தவர்
நரேந்திர தபோல்கரே!

பொதுநீர் எடுத்திடத் தாழ்ந்தவர் துணையாய்ப்
புத்தெழுச்சி ஊட்டினாரே!
பொல்லார் எதிர்ப்புகள் எல்லாம் ஒழித்தவர்
நரேந்திர தபோல்கரே!

பில்லிசூனியப்பேயின் பெருங்கேட்டை எதிர்த்தவர்!
பிதற்றியே திரிந்திடும்
பெருவேடச் சாமியார் பிழைகண்டு கொதித்தவர்
நரேந்திர தபோல்கரே!

சட்டமன்றத்திலொரு சட்டவரை வதுதாக்கல்
தனைச்செய்தார்! மடமையொடு
சார்ந்துள்ள சாத்திரப் பொய்ம்மை தகர்த்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஆகஸ்டு இருபதில் அதிகாலை வேளையில்
அகவை அவர்க் கெழுபத்தொன்றே
அன்று நடைப் பயிற்சியில் சென்று கொண்டிருந்தவர்
நரேந்திர தபோல்கரே!

ஒங்காரேஷ் வரர்கோயில் தீங்கான தே அருகில்
உடனிருவர் சுட்டபோதில்
ஓய்வுற்றது இதயமே! சாய்வுற்றார் உடலுமே!
நரேந்திர தபோல்கரே!

அரசாணை முதல்வரால் அதிவிரைவில் நடந்தது!
அவர்தொண்டு நிறைவானதே!
அறிவிலார் மடமைகள் அகன்றிடச் செய்தவர்
நரேந்திர தபோல்கரே!

மத்திய அரசுடன் மாநில அரசுகள்
மடமைகள் ஒழிக்க என
மானமிகு வீரமணி வேண்டினார்! தூண்டினார்!
மக்களும் விழிப்படையவே!

பொய்ம்மைகள் அகன்றிடப் புதுமைகள் மலர்ந்திடப்
புத்துணர்வு ஊட்டினாரே!
புரையோடி வளர்ந்திட்ட அறியாமை ஒழிந்திடப்
புதுச்சட்டம் இயற்ற வேண்டும்!

- பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

தமிழ் ஓவியா said...


தண்ணீரின் பயன்கள்



மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, உடல் சூடு இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, உறக்கத்திற்கு முன்பு, உறக்கத்தில் எழும்போது, உறங்கி எழுந்தவுடன் என எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் கடுமையான பசியின்போது மட்டும் நீர் பருகுவது தவறு.

தமிழ் ஓவியா said...


இரு அரிய நிகழ்ச்சிகள் பூரிப்பும், புளகாங்கிதமும்!



கடந்த இரண்டு நாள்கள் அளவிலா மகிழ்ச்சி ஆம்! பூரிப்பும், புளகாங்கிதமும் அடைந்த நாள்கள்!

தாயகத்திலும் அமெரிக்காவிலும் நடந்த நிகழ்வுகள் தான் மகிழ்ச்சிக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் எத்தனை இடங் களில் பெரியார் இளந்தலைமுறையின ரிடம் உலா வந்தார்? அதில் எத்தனை பெண் குழந்தைகள்? பெரியார் பற்றிய போட்டிக்கு இவ்வளவு ஆர்வமா? இத்தனை இடங்களில் போட்டிகள் நடந்தனவா? இது என்ன வெறும் பரிசிற்காகவா? நாம் ஒன்றும் வாரி வழங்கவில்லையே! மற்றவர்களைப் போல் நமக்கு விளம்பரம் அளிக்கும் ஊடகங்களும் இல்லையே? குழந்தை களே உங்கள் ஆர்வத்திற்கு மேலும் மேலும் ஊக்கமளிப்போம் என்று கூற வைத்து விட்டீர்களே!வாழ்க பெரியார்! என்ற பூரிப்பு நெஞ்சை நிறைவு செய்கின்றதே! உங்களுக்கு நன்றி! நன்றி!! அடுத்து அமெரிக்கா வில் வாசிங்டன் அருகே நடந்த புறநானூற்று மாநாடு. ஆம்! புரட்சிக் கவிஞர் சொன்ன நூலைப் படி! சங்கத் தமிழ் நூலைப் படி! என்று சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினார்கள்.
அங்கும் தந்தை பெரி யாரைப் பற்றிப் பேசினார்கள். ஓர் ஆறு வயதுச் சிறுமி புறநானூற்றைப் பற்றி அய்ந்து மணித்துளி அழகாகப் பேசி, பத்துப் பாடல்களையும் மனப் பாடம் செய்து சிறு தவறும் இல்லாமல் உண்ர்ச்சியுடனும், கண் உருட்டியும், கையசைத் தும், பாடியபோது மெய் மறந்து, வாய் பிளந்து அரங்கம் கேட்டது. மற்றொரு 8 வயது நமது இயக்கக் குடும்பத்துச் சிறுமி 15 பாடல்கள் போல் பாடிப் பரிசைத் தட்டிச் சென்றார். இன்னும் பல சிறுவர்களும் சிறுமியர்களும் பாடிய விதம், வார்த்தைகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து அறிஞர் பெருமக்கள் மருதநாயகம், முருகரத் தினம், அறிவு நம்பி கவிஞர் அறிவுமதி போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா தமிழ்த்துறைத் தலைவர் வாசு ரெங்க நாதன், மற்றும் அமெரிக்காவில் மற்ற துறைகளில் வல்லுநர்களாக இருந்தா லும் தங்கள் தமிழார்வத்தால் ஆராய்ச் சிக் கட்டுரைகள் படித்த முனைவர்கள் ராஜ் முத்தரசன், கல்வெட்டு ஆராய்ச் சியின் உண்மை நிலை பற்றியும், புற நானூற்றுக் கால ஜாதி என்பது பற்றிச் செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் உண்மைகள், பிறப்பால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் பற்றி சங்கரபாண்டி அவர்களும் விளக்கினர். பெண்பால் புலவர்கள் பாடியிருந்தாலும் பெண் ணடிமைச் சிந்தனைகள் இருந்தது பற்றி யும், எப்படிப் பலநூற்றாண்டுகளுக்குப் பின்னும் தந்தை பெரியார் தொண்டின் வழி முன்னேறிய பெண்கள் நாம், புதிய நானூறு படைக்க வேண்டும் என்று மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும், தூத்துக்குடியில் சிறந்த குடும்பத்தில் பிறந்து இப்போது ஹவாய் தீவில் வாழ்ந்துவரும் வைதேகி சங்க இலக்கியம் என்ற பெரும் புதையல் பற்றி தாமாகவே அறிந்து அவையனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் வாழும் ஹவாய் தீவில் சங்க இலக்கியம் என்பது கற் றோர் அனைவரும் தெரிந்து வியப்படைகின்றார்கள் என் பதைச் சொல்லிப் பாராட்டும் பெற்றார்கள். தமிழ்க் குடும்பத்து மேகலா ராமமூர்த்தி அரசியல் சிந்தனைகள் புறநானூற்றில் எப்படிச் சிறப்பாக வெளிப்படுத் தப்பட்டுள்ளன என்பதை அழுத்தத்துடன் உரைத்தார். கவிஞர் அறிவுமதி உணர்ச்சிப் பிழம்பாய் புதிய புறநானூறு படைத்த ஈழ உடன்பிறப்புக்களை உயிருடன் படைத்தார்.

இவை அனைத்திற்கும் காரணமான முனைவர் பிரபாகரன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவையும், அவருடன் சேர்ந்து மாதமிருமுறை ஒவ்வொரு பாடலாகப் படித்து ஆய்வு நடத்திய அத்தனை பேருக்கும் மற்றும் உதவியளித்த அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றி தெரிவித்துப் புறநானூறு பற்றிய, தம் ஆய்வுகளைப் படைத்தார். நூலையும் வெளியிட்டார். அந்தக் காலத்து மதம், வீரம், சமுதாயம், கல்வி, நீர், நில வளம், எல்லாம் பற்றிச் சொல்லி, ஒற்றுமையில்லாமல் அழிந் தார்கள் என்பதை எடுத்துரைத்தார். புறநானூற்று வீரம் உண்மை என்பதை ஈழத்தில் கண்டோம். தந்தை பெரியார் மூலம் தான் மனித நேயம், பெண் ணுரிமை தமிழினத்திற்கு வந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

புறநானூற்றுப் பாடல்கள் சிறுமியர் யாழினி பொற்செல்வன், பாரதி மலர்ச் செல்வன் இசைத்தனர். பாரதி பாடிய இசைத் தட்டு வெளியிடப்பட்டது. வீரவரலாறு நாட்டிய நாடகமாகப் படைக்கப்பட்டது. கவிமாமணி இலந்தை ராமசாமியார், உ.வே.சா புறநானூறு திரட்டியதையும், உவமை கள் கையாளப் பட்டுள்ள சிறப்புக் களையும் பாராட்டிப் பேசினார். .

புதுக்கோட்டைத் தமிழர் மேரிலாந்து மாநிலத்தின் துணை மாநிலச் செயலர் மேதகு நடராசன், மேரிலாந்து மாநில ஆளுநரின் வாழ்த்தையும் செப்டம்பர் முதல்வாரம் மேரிலாந்து மாநிலத்தில் புறநானூற்று வாரம் என்ற அறிவிப்பையும் வாழ்த்தி வழங்கினார்.

-- சோமசுந்தரம் இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


ஜஸ்டிஸ் திருநாள்



பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 ஆவது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பனகல் ராஜா அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந்நாளைக் கொண்டாட வேண்டிய விதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடிஅரசு பத்திரிகைகளுக்குச் சந்தாதாரர்களை சேர்ப்பதுதான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ளவேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில், ராய்ட்டர் அசோசியேட் பிரஸ் பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிருபங்கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிருபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பிப்ரவரி 26 ஆம் தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத வாலிபர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு தலையங்கம், 20.02.1927

தமிழ் ஓவியா said...

வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப் பிற்கிரையாக்கியதாக திராவிடன் பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆட்சேபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு, மனித சமுகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங் களையும், தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதங்கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம்.

யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மை இருந்தால் அக்கூட்டத் திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும், பேசவும் அனுமதி கிடைக்கா விட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுதான் யோக்கியர்களுக்கழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வது என்பது கலவரம் செய்பவர்களையும், அவர்களது கொள்கை களையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு, பேசுபவர் களுக்கு யோக்கியதையை உண்டாக்கி விடுகிறது. நாம் போன இடங்களிலும், இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சவுகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு, நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொதுஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய்ப் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும், தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதி இல்லாமல் மற்றோரை ஏமாற்றுவதானால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால், மற்றவர்களைப்பற்றி கவலை இல்லாமல் நமது கட்சியைப் பொறுத்தவரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய்ப் பேச இடம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கிறோம்.

- குடிஅரசு செய்தி, 10.04.1927

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை நிறுத்திடவேண்டும்! தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்!


சென்னை, செப். 7-இலங்கைக்குப் போர்க் கப்பல் வழங்கும் முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திட இந்திய அரசு முன்வரவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கேள்வி - பதில் வருமாறு:

கேள்வி: கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குவதாக இன்று செய்தி வெளி வந்திருக்கிறதே?

கலைஞர்: ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதைத்தான் இது நினைவூட்டுகிறது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய நேரத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து என்னுடைய உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், சிங்கள அரசினால் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தற்போது இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம், இந்திய அரசு இலங்கை அரசுக்குத்தான் உதவி செய்கிறதே தவிர, இலங்கை யிலே வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனு சரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடுத்துவைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகி விடுகிறது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கிடும் இரண்டு போர்க்கப்பல்களிலே இருந்து கொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவார்கள். இந்திய அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று தினத்தந்தி நாளிதழே வர்ணித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங் கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சி யினை தொடக்கத்திலேயே நிறுத்திடவும், இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்த்திடவும் இந்திய அரசு முன்வர வேண்டு மென்று வலி யுறுத்துகிறோம்.

- நன்றி: முரசொலி, 7.9.2013