Search This Blog

16.9.13

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத் திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந் ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத் திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13)    அதற்குப் பெண்டு பிள்ளை களும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14)    சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15)    ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?
16)    சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள் கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17)    ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18)    சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19)    சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20)    சைவ சமயத்திற்குள்ள சித் தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21)    சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித் தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22)    சமயாச்சாரிகள் என்போர் களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர் களையும், சமணர்களையும் துன் புறுத்தியதேன்?
24)    துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர் களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25)    வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27)    எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28)    இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29)    சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30)    விக்ரக ஆராதனை உண்டா?
31)    வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32)    ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33)    சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34)    சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35)    சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38)    கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40)    கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41)    பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42)    கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43)    ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44)    சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46)    அவை தனித்தனி கடவுள் களா?
47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49)    சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திரு விளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50)    திருநீறு எதற்காகப் பூசுவது?
51)    இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52)    ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54)    கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55)    மலையரசன் மகனென்றால் என்ன?
56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57)    இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64)    சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65)    மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66)    ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67)    சைவர்களுக்குச் சரியான முறை எது?
68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69)    வருணாசிரமம் உண்டா?
70)    உண்டென்றால் ஆதாரம் எது?
71)    இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73)    சைவ மடங்கள் எதற்கு?
74)    அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75)    அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78)    அருகதை உடையவர் யார்?
79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
80)    வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

84 comments:

தமிழ் ஓவியா said...


விநாயகப் புராணம்


விநாயகனுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு - அதில் ஒன்று பிரளயம் காத்த விநாயகராம்; கும்பகோணம் அருகே திருப்புறம் பியத்தில் இப்படி ஒரு விநாயகர் இருக்கிறார்.

இருக்கட்டும்! இருக்கட்டும்! சுனாமி வந்து பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தபோது - இந்தப் பிரளயம் காத்த விநாயகர் எங்கே போனாராம்.

சுயம்பு விநாயகர்

வேலூர் அருகே சேண்பாக்கம் என்னும் ஊரில் விநாயகர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் சுயம்பு 11 விநாயகர்கள் இருக்கிறார்களாம்.

சுயம்பு என்றால், தானாக பூமியை வெடித்துக் கிளம்புவது என்று பொருள்.

சென்னை தியாகராய நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் 1970 செம்டம்பரில் இப்படித்தான் திடீர் விநாயகர் என்று பொய்யை முதலீடாக வைத்து, புரளியைக் கிளப்பி உண்டியல் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அந்த இடத்திலேயே பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவேன் என்று தந்தை பெரியார் அறிவித்தார். அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் பொருத்தமாக முதல் அமைச்சராக இருந்த காரணத்தால் உடனே தலையிட்டு உண்டியலையும் பறி முதல் செய்து, அந்தப் பித்தலாட்டத்துக்கும் மூடு விழா நடத்தினர்.

விசாரணையின் போது தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனரின் தூண்டுகோல்படி செல்வராஜ் என்ற போலீஸ் கான்ஸ்டபுள்தான் பூமியில் இரவோடு இரவாக, பிள்ளையாரைப் புதைத்து, பூமிக்குள் பருத்திக் கொட்டையையும் தண்ணீரையும் ஊற்றி, வெளியில் வரச் செய்த பித்தலாட்டம் வெளியானது.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தத் திடீர் பிள்ளையார் சுயம்புவானது உண்மைதான் என்று அன்றைய சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பொய் சொல்லிக் காப்பாற்ற முற்பட்டதுதான். அந்தப் பகுதியில் மசூதி கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை தடுக்கத்தான் இந்தப் பித்தலாட்டம்.
வேலூர் சேண்பாக்கம் 11 சுயம்புப் பிள்ளையாரிலும் இது போன்ற சதிகள் இருக்கவே செய்யும்.

கடலில் கரைப்பது ஏன்?

கடலில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குத் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். விநாயகருக்குப் பார்வதி எப்படி அன்னையோ, அதுபோல கங்கையும் ஒரு அன்னைதானாம் அதனால் அவரோடு அய்க்கியமா கிறாராம். அக்னி பகவானுக்கு விநாயகர் என்ன உறவு! நெருக்கமான உறவு இருந்தால் எரித்திருப்பார்களோ?

கடல் நீர் உப்பு கரிப்பதற்குக் காரணம் விநாயகன் சிறுநீர் கழித்ததுதான் என்று புராணம் கூறுகிறது.

கடல் நீரைக் குடிநீராக்க பன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து சுத்திகரித்துக் கொண்டு இருக்கிறார்களே. இது விநாயகன் செயலுக்கு விரோதம் என்று விநாயகப் பக்தர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

தேங்காய் உடைப்பது ஏன்?

அகங்காரம் என்னும் ஓடு சுக்கல் நூறாகி அமிர்தம் என்ற இளநீர் கிடைக்குமாம். அதுதான் தேங்காய் உடைப்பதன் புடலங்காய் தத்துவமாம்.

தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கிற பக்தர்கள் எல்லாம் ஆணவம் அற்றவர்களா?

நான் ஆயிரம் விவேகானந்தருக்கு மேலே என்று காஞ்சி சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திர சரஸ்வதி சொல்கிறாரே - இது ஆணவம் அல்லாமல் வேறு என்னவாம்?

இவர் தேங்காய் உடைப்பது இல்லையா? பிள்ளையா ருக்கு நான் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும் என்று அவர் சொன்னால் அதுவும் ஆணவம் தான்! பிள்ளை யாரையே கருப்புச்சட்டைக்காரர்கள் வீதிக்கு வீதி போட்டு உடைத்தார்களே - உண்மையில் அவர்கள் தான் ஆணவம் அற்றவர்கள்.

வினை தீர்க்கும் விநாயகளாம். அவனுக்காக சென்னையில் பத்தாயிரம் போலீஸ் பாதுகாப்பாம்!

பேஷ்! பேஷ்!! இதைவிட விநாயகன் சக்தியை எப்படி கேலி செய்ய முடியும்? 9-9-2013

தமிழ் ஓவியா said...


விநாயகன் பிறந்தானா?

கடவுள் பிறந்தார் என்று சொன்னாலே மதவாதி கள் சொல்லும் கடவுள் தத்துவம் அடிபட்டு, ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைந்து விடுகிறதே.

கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்கிற சங்கதியும் சகட்டுமேனிக்குப் பெரும் பொய் என்பதும் புலப்படவில்லையா?

ராம நவமி என்பதும், கிருஷ்ணஜெயந்தி என்பதும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதானே.

இன்று விநாயக சதுர்த்தியாம். இவன் உரு வத்தைப் பார்த்து புராணக் கடவுளான சந்திரனே கேலி செய்தான் என்று எழுதி வைத்துள்ளனர். விநாயகன் உருவத்தைப் பார்ப்பவர் யார்தான் கேலி செய்யாமல் இருப்பார்கள்?

பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்தவன் இந்தப் பிள்ளையார் என்றால் மனிதன் காட்டு விலங் காண்டிப் புத்தியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது தான் இந்தக் கடவுள் வகைகள் என்பது விளங்கவில்லையா?

இப்பொழுது விநாயக ஊர்வலத்தில் விநாயகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து கார்கில் விநாயகர் என்று பெயர் கொடுப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டு இருக்க வேண்டுமே! மனிதன்தான் அந்தந்த காலத்தின் பக்குவத்துக்கு ஏற்ப இந்தக் கடவுள்களைக் கற்பித்தான் என்பது விளங்கிடவில்லையா?

கடவுள் ஒருவர் பிறந்தார் என்று வாதத்திற் காகவே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள் வோம். அதற்கென்று எதாவது ஒன்றே ஒன்றைச் சொன்னாலாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டுத் தொலைக்கலாம்.
விநாயகன் பிறப்புக்கு எத்தனை எத்தனைக் கதைகள்! கழுதை களமாடும் குப்பைத் தொட்டிகூட வெட்கப்படும் அளவுக்கு அசிங்கமாகவும் ஆபாச மாகவும் உளறிக் கொட்டி வைத்துள்ளார்களே.

சண்டை போட்டது கடவுள், எதிரிகளைக் கொன்றது கடவுள், கற்பழித்தது கடவுள் என்றால் அதன் யோக்கி யதைதான் என்ன? கருணை உடையவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில், தன் சகோதரன் சுப்பிரமணியனுக்காக விநாயகன் சண்டை போட்டு எதிரிகளைக் கொன் றான் என்றும், வல்லபை என்ற அரக்கக் குலப் பெண்ணின் குறியிலிருந்து உற்பத்தி யாகி வந்த அசுரர்களை தம் துதிக்கையால் பெண் குறியை அடைத்துத் துவம்சம் செய்தான் என்றும் அதனாலே வல்லபைக் கணபதி என்று பெயர் பெற்றான் என்றும் சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கொஞ்சம்கூடக் கூச்சப்படவில்லையே!

தருமபுரி மாவட்டம், மத்தூர் கோயிலில் பெண் குறியில் விநாயகன் தன் துதிக்கையை வைத் திருக்கும் பிரம்மாண்டமான சிலை வைக்கப் பட்டுள்ளதே.

கோயில் தேர்களிலும் இந்தக் கண்ணராவிக் காட்சியைக் காண முடியுமே! தம் வீட்டுப் பிள்ளை களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் போது, இந்தக் காட்சியைக் காட்டி இது என்ன? என்று கேட்டால் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும்?

இந்து மதம் என்று எடுத்துக் கொண்டால் எதைத் தொட்டாலும் இந்த ஆபாசம்தான் - அசிங்கச் சாக்கடைதான்.

இதைப் பகுத்தறிவாளர்கள் எடுத்துச் சொன் னால் சிந்திப்பதற்குப் பதிலாக சிறீ விழுகிறார்கள் என்றால் பக்தியின் பெயரால் இவர்களின் புத்தியும் நாசமாகப் போய் விட்டது - ஆபாசத்தில் இலயித்து விட்டது என்று தானே பொருள்?

இந்த விநாயகனுக்காக ஒரு பண்டிகை. அதற்கு அரசு விடுமுறையாம்! இந்த விநாயகன் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்றால் இது என்ன நிலைப்பாடு?

மும்பையில் இந்து மதவெறியை ஊட்டுவதற்கும் பாலகங்காதரர் கிளப்பி விட்ட இந்தச் சதித் திட்டம் இப்பொழுது வேறு பகுதிகளில் பரவி, பொது மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. மதக் கலவரங்களுக்கு இந்த ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடவுளை உண்மையில் நிந்திப்பவர்கள் இந்தப் பக்தர்கள்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

விநாயகன் பிறப்பு - அவனைப்பற்றிச் சொல்லப்படுகிற புராண சங்கதிகள் இவற்றைப் பார்க்கும்பொழுது இந்து மதவாதிகளும், சனாதனி களும் தான் கடவுளைக் கேவலப்படுத்துகிறார்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!

அழுக்குருண்டைப் பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க; பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவோமா சொல்லுங்க என்று திராவிடர் கழகப் பேரணியில் முழங்கிச் செல்லுவதற்கு இதுவரை பதில் இல்லையே!
9-9-2013

தமிழ் ஓவியா said...


திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்? இதோ தீர்வு...


- முனைவர் வா. நேரு

திவாலாகும் இந்தியப் பொருளா தாரம் ? இதற்கு தீர்வு என்ன? என்று ஒரு தொடர் கட்டுரை தினமணியில் வருகின்றது. ஆடிட்டர் எஸ்.குரு மூர்த்தி அந்தப் பத்திரிக்கையில் எழுதுகின்றார். பொருளாதார வீழ்ச் சிக்கு, ஒரு முக்கியமான காரணம் தங்கத்தின் இறக்குமதி என்ற கருத்தை ஒப்புக்கொள்ளும் குரு மூர்த்தி அது மட்டும் காரணமல்ல என்று பல்வேறு புள்ளி விவரங்களை புரியாத புள்ளி விவரங்களை அந்தப் பத்திரிக்கையில் கொடுத்து, தொடர் கட்டுரையாக எழுதி வருகின்றார். நாம் எளிமையாகவே கேட்கின்றோம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடாமல் இருப்பதற்கு தங் கத்தின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்கள், இந்திய மக்களிடம் மக்களே, கொஞ்ச நாட்களுக்கு தங்கம் வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கின் றார், சாதாரண மக்கள் தங்கம் வாங்குவதற்கும், ரூபாயின் மதிப்பு கூடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, எனவே தங்கம் வாங்கா தீர்கள் என வேண்டுகோள் வைக் கின்றார்.மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்கும் நோக்கத்தில், தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அதிக வரி போடப்படுகின்றது. எப்படியாவது தங்கம் இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும் என அரசு பல விதமான நடவடிக் கைகளை எடுத்து வருகின்றது. மூட நம்பிக்கை வியாபாரிகள், இல்லாத அட்சய திருதியை எனச்சொல்லி, மக் களை குண்டூசி தங்கமாவது அட்சய திருதி அன்று வாங்குங்கள்,உங்கள் வீட்டுக்கு மகாலெட்சுமி வருவாள், மங்கையர்க்கரசி வருவாள் என்று சொல்லி, பாமர மக்களின் மூளையில் மாட்டப்பட்டிருக்கும் மூட நம்பிக்கை விலங்கை முதலாகக்கொண்டு தங்கத்தை வாங்க வைக்கின்றார்கள். இது முட்டாள்தனம் என்று குரு மூர்த்திகள் எழுதுவதில்லை. நாட்டுக்கும் கேடு, கடனை வாங்கியாவது அன்றைக்கு நகை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வீட்டுக்கும் கெடுதலானது என்று தினமணிகள் சொல்வதுமில்லை, சொல்லப்போவதுமில்லை. மக்கள் தங்கத்தை வாங்காமல் இருப்பதற் கான வழிமுறைகள் இப்போது இல்லை. ஆனால் மேலும் மேலும் தங்கத்தை வாங்க, வாங்க ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் .

தமிழ் ஓவியா said...

எனவே என்ன செய்வது என்று யோசிப்பவர்கள், ஒரு கருத்தை வலியுறுத்துகின்றார்கள், அது என்ன வென்றால் ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் தங்கத்தை மறு சுழற்சி செய்தால், இந்த பண வீக்கத்தைக் குறைக்க முடியும், டாலருக்கு நிக ரான ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி யடையாமல் தடுக்க இயலும், இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கம் 2.79 சதவீதம் மட்டுமே என ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. 100க்கு 2.79 சதவீதம் ரிசர்வ் வங்கியில் இருக்கின்றது , சரி மீதம் 97.21 சதவீதம் எங்கு இருக் கின்றது என்று கேட்டால், இந்திய மக்களின் வீடுகளில் இருக்கின்றது, கோவில்களில் இருக்கின்றது என்று பதில் வருகின்றது. இந்தியாவில் மொத்தம் 20000 டன் தங்கம் இருப்பதாக உலகத் தங்கக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறு கின்றது. அதில் 588 டன் தங்கம்தான் ரிசர்வ் வங்கியில் இருக்கின்றது.' அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை, எதுவும் தேவைப்படாதவன், எல்லாரின் தேவையையும் சரி செய்பவன் கடவுள்' என்று சொல்கின்றார்கள். பற்றற்ற கடவுளின் இருப்பிடமாக நம்பப்படும் கோவில்களில் கோடி கோடியாகக் கொட்டிக்கிடக்கும் நகைகள் எதற்கு? அந்த நகைகளை நாட்டின் வங்கிகளில் ஒப்படைத்தால் என்ன? கோவிலுக்குள் இருக்கும் நகைகளைக் கொண்டு சென்று வங்கிகளில் வைத்தால், அதுவும் இருக் கும் நகைகளில் பத்து சதவீதம் மட்டும் ஒப்படைத்தால், இரண்டு ஆண்டுகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய தில்லை. தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய தில்லை என்றால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழாது , ரூபாயின் மதிப்பு வீழாது என்றால் அத்தியாவசியப் பொருட் களின் விலை ஏறாது. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறாது என்றால், குப்பனுக்கும் சுப்பனுக்கும் வாங்கும் விலையில் வெங்காயமும், அரிசியும் மற்ற பொருட்களும் கிடைக்கும். கடவுள் கோவில்களுக்குள் கொட்டிக்கிடக்கும் தங்க நகைகள் மறைமுகமாக சாதாரண மக்கள் வாங்கும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. வரும்படியை நினைக்கையிலே உள்ள மெலாம் நோகும்! வாராத நினைவெல் லாம் வந்து வந்து தோன்றும்! துரும் பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால் தொடர்பாகப் பத்து நாள் படுத்துவிட்டால் தொல்லை' எனப் பாடுபடும் தொழிலாளிகள் பதை, பதைத்து சோர்ந்துபோகும் வேளையிலே, கடவுள் சிலைக்கு தங்கத்தாலே தேர் என்றும், தங்க வாகனம் என்றும், தங்க ஆபரணம் என்றும் கொட்டி கொட்டிக் குவித்து வைத்து , கோவில் அறைக்குள்ளே பூட்டிப் பூட்டி வைத்திருக்கின்றார்களே, அதனை எடுத்து உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அளிக்கும் நாள் எந்த நாள் ?

ஒரு கோயிலில் இருந்த தங்க குவியல்களின் செய்தி இதோ : திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏ ரகசிய அறை நேற்று திறக்கப்பட்டது. இதில், 55 கிலோ எடையுள்ள பல தங்க அங்கிகள், 35 கிலோ எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் தங்கம், வைரம், மரகத நகைகள் உள்ளன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்தாண்டு திறக்கப்பட்டது. அப்போது, பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பி அறை மட்டும் திறக்கப்படவில்லை.
மற்ற 5 அறைகளையும் திறந்தபோது பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம், மரகதத்தால் ஆன பொக்கிஷங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த 5 அறைகளில் ஏ அறையில் மட்டுமே பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அது மூடப்பட்டது. இந்நிலையில், இந்த 5 அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் உண்மையான மதிப்பை கண்டறிய உச்ச நீதிமன்ற உத் தரவுப்படி கடந்த 3 மாதங்களாக மதிப்பீடு பணி நடந்தது. இதில், சி முதல் எப் வரையுள்ள அறைகளில் உள்ள பொக் கிஷங்களை கணக்கிடும் பணி சமீபத்தில் முடிந்தது.

தமிழ் ஓவியா said...

இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஏ அறை திறக்கப்பட்டது. மூல விக்ரகம் அமைந்துள்ள பகுதியின் தெற்கு திசை யில் இது உள்ளது. இந்த அறைக்கு 2 மரத்தினால் ஆன கதவுகளும், இரும் பினால் ஆன 2 கதவுகளும் இருந்தன. இவற்றை திறந்த பிறகு பெரிய கல்லால் ஆன ஒரு கதவு காணப்பட்டது. அதை அகற்றிய பிறகுதான் பாதாள அறைக்கு செல்ல முடிந்தது. கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த அறையில் தென்மேற்கு மூலையில் தரைக்கு அடியில் 2 அடி நீளமும் 2 அடி அகலமும் 6 அடி உயரமும் உள்ள பாதாள அறையில்தான் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைக்கு படிகள் இல்லை. கயிற்றை கட்டித் தான் கீழே இறங்க முடிந்தது. 2 பேர் கீழே இறங்கி நகைகளை மேலே இருப்பவர்களிடம் எடுத்து கொடுத்தனர். இதில் 3 சாக்கு பைகளில் தங்க காசுகள், தங்க சிலைகள், தங்க அங்கிகள், வைரம், மரகத கற்கள் உள்பட பொருட்கள் காணப்பட்டன. இதில், 55 கிலோ எடையுள்ள பல தங்க அங்கிகள் உள்ளன. முதலில் அதிக எடை இல்லாத பொக்கிஷங்களை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. எடுக்கப்பட்ட பொக் கிஷங்களின் விவரம்

ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட 300க்கும் அதிகமான தங்க குடங்கள்
55 கிலோ எடையுள்ள பல தங்க அங்கிகள்
35 கிலோ எடையும் 18 அடி நீளமும் கொண்ட சங்கிலி
நெப்போலிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய 5 கிலோவுக்கு அதிக மான தங்க நாணயங்கள்
கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பயன்படுத்திய 16 கிலோ தங்க நாணயங்கள்
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 16 கிலோ தங்க நாணயங்கள்.

நன்றி : தினகரன் -

6.7.2012 திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் - ஒரு கோயிலில் உள்ள தங்கத்தின் அளவைக் கணக்கிட முடியவில்லை.இன்னும் முழுமையான விவரம் வரவில்லை. இதனைப் போல பல கோயில்கள் இந்தியாவில் உள் ளன. திருப்பதி கோயிலில் 1000 டன் தங்ககதிற்கு மேல் இருக்கும் என்று சொல்கின்றார்கள். இந்தியா வில் உள்ள கோயில்களில் உள்ள தங்கம் மட்டும் பதினெட்டாயிரம் டன் தங்கத் திற்கு மேல் என்று சொல்கின்றார்கள். இந்தத் தங்கத்தை மத்திய அரசு தன் வயப்படுத்த வேண்டும் . தன் வயப்படுத்தினால், ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இப்போது இருக்கும் 66 பைசா மதிப்பிலிருந்து 30 பைசா மதிப்பிற்கு வர வாய்ப்பிருக் கிறது. இந்தத் தீர்வினை ஏற்றுக் கொள்ளலாமா? திருவாளர் குரு மூர்த்தி அவர்களே! ஆடு மாடுகள் முன் நடந்திட, ஆரணங்குகள் பின் நடந்திட' என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட் டதைப் போல ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தவர்கள் கொண்டு வந்த செல்வமல்ல, இந்தக் கோயில்களில் உள்ள தங்கக் குவி யல்கள். கோவிலைக் கட்டிய மன் னர்கள் கொடுத்தது, கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கொடுத்தது. மன்னர் மான்யம் கொண்டு வந்து, மன்னர் பரம்பரையினர் வைத்திருந்த சொத்துக்கள் எல்லாம் நாட்டு உடமை யாக்கப்பட்டன, மன்னர்கள் அளித்த தங்கம் மட்டும் நாட்டுடைமையாகாமல், கோயில்களுக்குள் பூட்டி வைக்கப்பட் டிருப்பது ஏன்? சாதாரண பக்தர்கள் அளித்த தங்கக்காணிக்கைகளை, நாட்டின் நலன் கருதி, நாட்டின் வங்கியிடம் ஒப்படைத்தால் என்ன? தங்கத் தேர் செய்ய என்று ஒரு கோடி செலவு செய்கின்றார்கள். இதற்கு பக்தர்கள் எல்லாரிடமும்தான் வசூலிக் கின்றார்கள்.

வசூலித்த பணத்தால் கோடி ரூபாய்க்கு தேர் செய்கின் றார்கள். பின்னர் அந்தத் தேரை கோவிலுக்குள்ளே வைத்து பூட்டி விடுகின்றார்கள் . இதனால் நாட்டுக்கு என்ன பலன்? திவாலாகும் இந்தியப் பொரு ளாதாரம் என்று குருமூர்த்தி எழுது கின்றார், திவாலாகாமல் காப்பாற்றுவ தற்கான வழிமுறை, கோவிலுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் தங்கத்தை அரசு தன் கையில் எடுப்பது .... ஏற்றுக் கொள்ளலாமா திருவாளர் குருமூர்த்தி அவர்களே!

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கத் துடன் எழுதிக்கொண்டது. கடந்த 25.8.2013 விடுதலை நாளிதழில் தங்கள் அறிக்கையைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மராத்திய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ் நாட்டிலும் அச்சட்டம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசும் அச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமூகசீர்திருத்தக்குழு ஒன்றை உரு வாக்கினார். அதிமுக ஆட்சியில் அந்தத்துறை செயல்படவே இல்லை. பின்னர் எப்படி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவார்?

தாங்கள் கூறியவாறு மத்திய அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தால், இந்தியா முழுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். நரபலிகள் தடுக்கப்பட்டு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகியவற்றில் அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற, மூடநம்பிக்கை பிரச்சாரம் தடுக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே அச்சட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வாய்ப்புள்ளது. செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அச்சட்டத்தால் மொத்தத்தில் மனித சமுதாயத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டு, தந்தை பெரியார் கூறியவாறு மனிதன் மனிதனை நினைப்பான்.

இச்சட்டம் கொண்டு வருவதற்காக ஒரு தீவிரப்பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை தெரிவித்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

- எஸ்.என்.அசோகன் (திமுக மாவட்ட பிரதிநிதி)
நகராட்சி நியமனக் குழு உறுப்பினர், திருவாரூர்

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...

தன் சொந்த செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னது ஒழுக்கமா? திருடிக்கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?


அறிவார்ந்த வினாவை எழுப்பி தமிழர் தலைவர் உரை

பட்டுக்கோட்டை, செப்.9- தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இயக்கத் தோழர்களை, தன் சொந்த செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக்கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா? என்ற அறிவார்ந்த வினாவினை எழுப்பி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூ ரணியில் திராவிடர் கழக வட்டார மாநாடு 8.9.2013 அன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மனித உருவம், யானைத் தலையில் ஒரு கடவுளா?

உலகத்தில் ஒரு கேலிக்கூத்தான விஷயம் என்னவென்றால், யானை முகத்தில் பெரிய பெரிய பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்; இன்னும் அதிலும் பெருமை என்னவென்றால், அரசாங்கமே உச்சவரம்பு போட்டு, இத்தனை அடிக்கு மேலே இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரன் வட இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ சுற்றுலா வரும்பொழுது, இதனைப் பார்த்தால் என்ன என்று கேட்டால், இது ‘‘Elephant God’’ யானை முகக் கடவுள் என்று இங்கிலீசில் விளக்கிச் சொல்லும்பொழுது, அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். ஏனென்றால், இந்த மாதிரி ஒரு கடவுளை நம் நாட்டில் காண முடியவில் லையே என்று. மனித உருவம், யானைத் தலையில் ஒரு கடவுளா? என்று. இந்தக் கடவுள் 9 ஆம் தேதிதான் பிறக்கிறார் என்று சொல்கிறார்கள்.

வடலூர் வள்ளலார் மிக அழகாகச் சொல் வார்: ஆனகரே சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டு என்று.

சின்ன பிள்ளைகள் மண்ணில் உட்கார்ந்து கொண்டு, தண்ணீர் எடுத்தோ அல்லது மூத்திரம் பெய்தோ அந்த மண்ணைப் பிடித்து சாமி என்று சொன்னால் அதனை நீங்கள் கண்டிப் பீர்கள். ஆனால், இப்பொழுது பெரிய பிள்ளை கள் விளையாடுகிறார்கள், வேறொன்றுமில்லை. இதனை நாங்கள் சொல்லவில்லை, வள்ளலார் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களைப் புண்படுத்தவேண்டும் என்ப தற்காகச் சொல்லவில்லை, கொஞ்சம் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடவுளுக்குப் பிறப்பும் இல்லை;

இறப்பும் இல்லையாம்!

கடவுள் என்று சொன்னால், எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள்; அதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பிறகு எப்படி கடவுள் பிறப்பார்?

ஒரு கடவுள் சஷ்டியில் பிறக்கிறார்; கந்தர் சஷ்டி. இன்னொரு கடவுள் சதுர்த்தியில் பிறக் கிறார்; விநாயகர் சதுர்த்தி. இன்னொரு கடவுள் நவமியில் பிறக்கிறார்; ராம நவமி. இன்னொரு கடவுள் அஷ்டமியில் பிறக்கிறார்; கோகுலாஷ் டமி, கிருஷ்ணன் பிறக்கிறாராம்.

விசித்திரமான ஒரு தகவல் என்னவென்றால், இதில் எந்தக் கடவுளும் கடைசி வரையில் இருந் ததில்லை. இந்தக் கடவுள்களுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால், அவர்கள் எழுதியிருக் கின்ற புராணம்தான்; விடுதலையிலோ, குடிஅரசுவிலோ, தந்தை பெரியார் எழுதியோ, அண்ணா எழுதியோ, தி.மு.க. அச்சிட்டோ, கலைஞர் எழுதியோ வந்ததில்லை.

காலங்காலமாக ஒவ்வொரு கடவுள்களுக்கும் புராணம் எழுதி வைத்திருக்கிறார்கள். நம் கண் முன்னாலேயே கடவுளை உண்டாக்குகிறார்கள். கடவுளை உண்டாக்கியவர் யார்? நமக்கே தெளிவாகத் தெரிகிறதே!
களிமண்ணை வண்டி வண்டியாகக் கொண்டு வந்து போட்டு, அதனை அச்சில் வார்த்து, விநாய கன் உருவத்தை உண்டாக்குகிறார்கள்.

மதவெறித்தனத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு போவதற்காக...

அதற்கு முன்னாடி பார்த்தீர்களேயானால், வடநாட்டிலிருந்து இந்துத்துவா என்ற பெயரில், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இவைகளெல் லாம், பக்தியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மதவெறித்தனத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு போவதற்கு இன்றைக்குப் பயன்படுத் திக் கொள்கிறார்கள்.

இதற்கு முன்பெல்லாம் பெரிய பெரிய அளவில் இந்த மாதிரி பொம்மைகளை வைத்துப் பழக்கம் இல்லை. கடைவீதிகளில் சின்னச் சின்ன தாக பிள்ளையார் விற்கும்; அதனை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு குடையை வைத்து, அதைக் கொண்டுபோய் வீட்டில் வைத்து, மூன்று நாள் கழித்து கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ போடுவார்கள், இதுதான் வழக்கமாக இருந்தது.

தமிழ் ஓவியா said...


கடவுளை உண்டாக்குகிறவனும் நம்மாள்; களிமண்ணை பிடிக்கின்றவனும் நம்மாள்; அத னைக் கொண்டு போய் மூன்றாவது நாள் கட லிலோ, குளத்திலோ, ஆற்றிலோ, கிணற்றிலோ போடுகிறார்கள் என்றால், இதனை வெளி நாட்டுக்காரன் கேட்டால், கடவுளுக்கு இவ்வளவு பெரிய விபத்தா நடக்கிறது உங்கள் நாட்டில் என்று கேட்கமாட்டானா? சிந்திக்க வேண்டாமா நீங்கள். இது அறிவுடைமையா? இதனை பிள்ளை விளையாட்டு என்று வள்ள லார் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

அறிவியல் வளர்ந்த காலத்திலும்...

கொஞ்சம்கூட சங்கடம் இல்லாமல், மக்க ளுடைய அறியாமையை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பாருங்கள். அதுவும் எந்தக் காலத்தில், விண்வெளிப் பயணம் நடக்கக்கூடிய காலத்தில். ஒரு பக்கத்தில் ராக்கெட் விட்டு, நிலாவுக்குப் பயணமாகிறான்; அடுத்தபடியாக செவ்வாய்க் கிரகத்தில் இடம்பிடிப்பதற்கு இப் பொழுது அறிவிப்பு வெளியிடுகிறார்கள்; இவ் வளவு பணம் கட்டினீர்கள் என்றால், செவ்வாய்க் கிரகத்தில் குடியேறலாம் என்று. இவ்வளவு அறி வியல் வளர்ந்த காலத்தில், இன்னமும் களிமண் எடுத்து பிசைந்து, சின்னப் பிள்ளைகள் விளை யாட்டுபோல, அதனை வைத்துக்கொண்டு, அதற்கு ஊர்வலம் என்று சொல்லி, காவல்துறை யினருக்கும் கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டு, சங்கடங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கி றார்கள். ஒரு பக்கத்தில் கொலை, கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அதனைக் கண்டுபிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக் கிறான்; தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டு, அப் புறம் எதற்கு இந்தப் பொம்மைகளைக் கொண்டு வந்து வைத்து, அதற்குப் பூசை புனஷ்காரங் களைச் செய்து, படையல் வைத்து, திரும்பவும் கடலில் போய் கரைக்கிறார்கள்.

கடவுளை உண்டாக்கியவர் யார்? களிமண் ணைப் பிடித்து வைப்பவர்தானே!

நீங்கள் நன்றாக ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்னாடியே செய்ததினால்தானே, பிள்ளையாரை இங்கே கொண்டு வந்து வைத் திருக்கிறார்கள். அப்புறம் என்ன 9 ஆம் தேதி பிறக் கிறார் என்று சொல்கிறார்கள். குழந்தை பிறந் தால், மருத்துவமனையில் பிறக்கின்ற நாளைத் தானே பிறந்த நாள் என்று சொல்வார்கள். குழந்தையை வீட்டிற்குக் கொண்டுவரும் நாளையா பிறந்த நாள் என்று சொல்வார்கள்?

ஆனால், நம் நாட்டில் இது ஒரு விளையாட்டு போல நடந்துவருகிறது. இதற்குப் பிரச்சாரத் தைப் பார்த்தீர்களேயானால், மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படைக் கடமைகள்

நம்முடைய அரசியல் சட்டத்தில், மிக முக்கிய ஒரு பகுதி இருக்கிறது. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) 51-A என்ற பிரிவு. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

It shall be the duty of every citizens of India- அந்த அடிப்படைக் கடமைகள் பகுதியிலே, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டு.
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;

ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றப்படவேண் டியது என்னவென்றால், அறிவியல் மனப் பான்மை;

அறிவியல் மனப்பான்மை மட்டுமல்ல, அதைவிட மனிதநேயம்; அதைவிட, எதையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பாமல், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கவேண்டும். அதற் கும்மேலே சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். இது இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் அளித்திருக்கின்ற அடிப்படை கடமை.

எங்களைத் தவிர வேறு யார்?

இதை இந்த நாட்டில் ஒழுங்காகக் கடைப் பிடிக்கின்ற ஒரு இயக்கம் இருக்கிறதென்றால், இந்தியாவிலே அது திராவிடர் கழகம் - பகுத் தறிவாளர் கழகம் ஆகியவற்றைத் தவிர, வேறு உண்டா?

நடுநிலையாளர்கள், பொதுநிலையில் இருந்து சிந்தித்துப் பதில் சொல்லுங்கள்.

மற்றவர்கள் செய்யத் தவறிய பணியை, நாங்கள் செய்கின்றோம்.

மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

என் கையில் இருப்பது, ஆர்.எஸ்.எஸ். பத் திரிகை. விஜயபாரதம் என்ற வார இதழாகும்.
இதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால்,

தமிழ் ஓவியா said...

பிள்ளையாருக்குக் கோவில் கட்டலாமா? கோவில் கட்டலாம். ஆனால், ஒரு அய்தீகம் இருக் கிறது. அந்தக் கோவிலில் கொண்டு வந்து வைக் கின்ற பிள்ளையார் சிலை இருக்கிறது பாருங்கள், சிற்பி செதுக்கி வைத்தால், அச்சிலைக்கு சக்தி கிடையாதாம்; திருடிக்கொண்டு வந்துதான் வைக்கவேண்டுமாம்.

இதற்கு என்ன அர்த்தம்?

பிள்ளையார் பக்தர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும், கோபப்படாமல் - இச்செயல் ஒழுக்கத்தை வளர்ப்பதாகுமா?

கணினியைக் கையில் கொடுத்தால், பிள்ளையாரை வரைகிறார்கள்!

2014 ஆம் ஆண்டு வரவிருக்கின்ற கால கட்டத்தில், இப்படி இருந்தால், நாடு உருப் படுமா? வளருமா? இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அறிவியல் மனப்பான்மை வளர வேண்டாமா? அறிவியலை நாம் பாடம் படித் தால் மட்டும் போதுமா? அறிவியல் கருவிகளை கையில் வைத்திருந்தால் போதுமா? கணினியைக் கையில் கொடுத்தால், பிள்ளையாரை வரை கிறார்கள்; பிள்ளையார் சாப்பிட்டாரா? என்று போடுகிறார்கள்.

கேட்டதைக் கொடுக்கும் கற்பக விநாயகர் என்று சொல்கிறான்; மணக்குல விநாயகர் என்று சொல்கிறார்கள்;

பிள்ளையாரையே பலவித மாகப் பிரித்து, இந்த இந்த விநாயகருக்கு, இன்ன இன்ன சக்தி என்று சொல்கிறார்கள்.

இன்று காலையில் வெளிவந்துள்ள தமிழன் நடத்துகின்ற நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி யை பாருங்கள்,
வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும் பிள்ளையார்! என்று.

நம்மை மட்டும் முட்டாள் ஆக்குவது மட்டு மல்லாமல், வெளிநாட்டுக் காரனுக்கும், பிள்ளை யாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

சவுதி அரேபியாவிற்கோ, துபாய்க்கோ அல் லது மற்ற நாடுகளுக்கோ வேலைக்குச் செல்ல வேண்டுமானால், விசா வேண்டுமென்றால், அவன் என்ன சொல்கிறானோ, அதன்படி பின் பற்றினால்தான் விசா கிடைக்கும். இதுதான் நடைமுறை.

வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும் பிள்ளையார்! என்று செய்தி வெளியிட்டால், இதைவிட அயோக்கியத்தனம் வேறு உண்டா?

இதனை எடுத்துச் சொல்வதற்கு எங்களைத் தவிர, வேறு யாரும் தயாராக இருக்கிறார்களா? நாங்கள் எதையாவது தவறாகச் சொல்கிறோம் என்று சொன்னால், நாங்கள் திருத்திக் கொள்கி றோம் அல்லது மாற்றிக் கொள்கிறோம்.
பிள்ளையார் சிலையை உடைத்த பெரியார்!

பேராவூரணியில் நடைபெற்ற கழக வட்டார மாநாட்டில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் இளைஞரணியினர் எடுத்து வந்த காவடி (8.9.2013)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினை தன்னுடைய தோழர் களுக்கு சொல்லியிருக்கிறார், குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்கவேண்டாம்; நம்மு டைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள் ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத் துக் காட்டவேண்டும் என்றுதான் சொன்னார்.

இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதை செய்யக்கூடாது.
ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட் டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.

இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப் பிட்டுப் பாருங்கள்.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்த செல வில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

தமிழனால் நடத்தப்படும் நாளிதழில் வெளி யிட்டுள்ள வார இதழில்,

வெளிநாடு செல்ல விசா கிடைக்கவில்லையா.... அல்லது கிடைக்கத் தாமதமாகிறதா? கவலையை விடுங்கள். உடனே விசா பிள்ளையாரை வணங்குங்கள். அடுத்த சில நாட்களில் நீங்கள் அலையோ அலை என்று அலைந்த விசா, உங்களைத் தேடிவரும்...!

விலாசம் தேடி அலையவே வேண்டாம். யாரைக் கேட்டாலும், இடத்தைத் துல்லியமாக சொல்கிறார்கள். எல்லாம் விநாயகரின் மகிமை. இவர் ஜகனாதன் என்பவரின் வீட்டில் குடியிருக்கிறார். விசா பிள்ளையாரின் மகிமையை உற்சாகத் துடன் சொல்ல ஆரம்பித்தார் ஜகனாதன்.

அய்ந்து நட்சத்திர ஓட்டலில் ஜி.எம்.ஆக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளை கள். இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். நாங்கள் திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவிலின் தர்மகர்த்தா பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இப்போது சோளிங்கர் மலைக்கோவிலில் கருட சேவை செய்து வருகிறோம். தவிர, வேலூர் அருகே பிருந்தா வன ஸ்ரீ துளசி கிருஷ்ணா கோவில் ஒன்றை கட்டியிருக்கி றோம். இந்தக் கோவில் காதலர்களின் பிரச்சினையைத் தீர்க் கும் தலமாக விளங்கி வருகிறது என்று முன்னுரை வழங்கி யவர், விசா பிள்ளையார் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

நான்கு சாலைகள் கூடும் இடத்தில் எங்கள் வீடு இருப்ப தால், காம்பவுண்டில் ஒரு பிள்ளையார் சிலையை வைக்கும்படி வாஸ்து நிபுணர்கள் கூறினார்கள். 1988 ஆம் ஆண்டு இந்தக் கோவிலைக் கட்டினோம். லட்சுமி கணபதியாகத்தான் இந்தப் பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆரம்பத்தில், சாதாரண காம்பவுண்ட் பிள்ளையார் போல்தான் இருந்தார். காம்பவுண்ட் பிள்ளையார் என்றாலும், மூன்று கால பூஜைகள் இவருக்குத் தவறாமல் நடக்கும். சாலையைக் கடப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

இந்நிலையில், பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு வாலிபர் இந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துவிட்டுச் சென்றார். போனவர் பத்து நாள்களில் மறுபடியும் வந்து எங் களிடம், இந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுச் சென்றேன். அந்த மகிமையில் வெளிநாட்டில் வேலைக்கான விசா கிடைத்துவிட்டது என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளிநாட்டு விசா கிடைத்ததில் இவ்வளவு சந்தோஷமா? என்று நினைத்தோம்.

விசாரித்தபோதுதான் உண்மையைச் சொன்னார். அதாவது, விசா கிடைப்பது இழுபறியாக இருந்ததாம். கிடைக் கவே கிடைக்காது என்று கூட நினைத்தாராம். இந்தச் சூழலில் தான் இந்தப் பிள்ளையாரை வணங்கியிருக்கிறார். கிடைக் கவே கிடைக்காது என்றிருந்த விசாவும் கிடைத்திருக்கிறது.

இப்படியாக அந்த வாலிபர்தான் இந்தப் பிள்ளையாருக்கு விசா பிள்ளையார் என்று பெயரிட்டார். இந்தப் பிள்ளை யாருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கூட இரண்டு முறை சிங்கப்பூர், மலேசியா சென்று வந்திருக்கிறார்!

தொடக்கத்தில் விசாவுக்காக மட்டுமே வந்தவர்கள் இப்போது எல்லா விதமான வெளிநாட்டுப் பயண பிரச்சினை களுக்கும் இவரைத் தேடி வருகிறார்களாம் என்று சொல்லும் ஜகனாதன் ஒவ்வொரு சதுர்த்திக்கும் இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ பூஜை செய்கிறாராம்.

இதுபோல் மக்களை ஏமாற்றுவது; மிகப் பெரிய அளவிற்கு இன்னமும் மோசடி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு நாம் வெட்கப்படவேண்டாமா? ஆகவேதான், எங்களைப் பொறுத்தவரையில், இந்த இயக்கம் யாரையும் சங்கடப்படுத்துவதற்கல்ல.

அறியாமையைவிட பெரிய நோய் வேறொன்றுமில்லை!

அறியாமையைவிட பெரிய நோய் வேறொன் றும் இல்லை என்றார் இங்கர்சால் அவர்கள். மனி தனுக்கு இருக்கின்ற நோய்களிலேயே அறியாமை தான் மிகப்பெரிய நோய். அந்த அறியாமை யிலிருந்து மக்களை விடுவித்தால்தான், மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்க முடியும். அதனு டைய விளைவாகத்தான் இன்றைக்கும் இந்தப் பிரச்சினைகளை நாங்கள் மக்கள் மத்தியில் சொல்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்

கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.

கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சினை இப்படி வயசான வர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தற வங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம் தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கி யிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.

நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும்.

தமிழ் ஓவியா said...

திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..



சிலருக்குன்னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறி களாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சி னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங் கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற, டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

தமிழ் ஓவியா said...

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிருங்கள், டென்சன் படாதீர்கள் என்று எல்லா மருத்துவர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.

உண்ணும் உணவு பழக்கத்தை சத்துள்ளதாக மாற்றிக்கொண்டால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் அலுவலக வேலைக்கு செல்லும் போது சிறிது தூரம் காலார நடைபயிற்சி செய்யுங்கள். தினசரி வைட்டமின் ஈ யை உணவில் எடுத்து கொள்பவர் களுக்கு இதயநோய் வர வாய்ப்பில்லை என்று ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400யுனிட் வைட்டமின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதயநோய்களே வருவ தில்லையாம். வைட்டமின் டி உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், கோதுமை மாவு, முளைக்கட்டிய தானியங்கள், கொட்டை உள்ள உணவுகள் கீரைகள், கடுகு, தாவர எண்ணெய் போன்றவைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் ஆசிட் நல்ல இதயநோய் தடுப்பாக செயல்படுகிறது. ஒமேகா3 உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவு, வால்நட், பருப்பு, சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளில் ஒமேகா 3 இருப்பதால் இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இவைகளை உபயோகித்து செய்யும் உணவுப் பண்டங்களை தவிர்க் கவும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடை கட்டி, அய்ஸ்கீரிம் போன்றவற்றை குறைவாகவே உபயோகி யுங்கள். இதனால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும் என்கிறது ஆராய்ச்சி. அதிக உப்புள்ள ஊறுகாய், சமையலில் மசாலா பொருட்கள் சோடா ஆகியவற்றை, முடிந்தவரை தவிர்ப்பது நல் லது. உப்பிற்கு பதிலாக வெங் காயம், எலுமிச் சை, பூண்டு, சேர்த்த உணவு கள் தரமானவை. அளவோடு உண்பது, நேரத்துடன் உணவு உட்கொள்வது போன்றவை இதயத்திற்கு நன்மை பயக்கும். எப்போதும் புதியதாக தயாரித்த உணவுகளே சிறந்தவை.

புதிய பழங்கள், ஓட்ஸ். கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு சப்பாத்தி எல்லாமே இதயநோயை தடுக்கும். மாதுளம் பழச்சாறு இதயத்திற்கு வலுவூட்டும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நமது உணவு பழக்கங்கள் உடலுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். உணவே நோயை தருவதாக இருந்துவிடக் கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந் தெடுத்து இதயத்தை காப்போம்.

தமிழ் ஓவியா said...

இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?


கோயில் மண்டபங்களை நாத்திகர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது சட்ட விரோதம்!

இந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?

இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் - நீதிமன்றம் சென்றால் சட்டத்தின்முன் இந்த சுற்றறிக்கை நிற்காது! தமிழர் தலைவர் விடுத்த முக்கிய அறிவிப்பு

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்களுக்கு, மதச் சார்பற்றவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதியில்லை என்ற தமிழ்நாடு அரசின் - இந்து அற நிலையத்துறையின் ஆணை சட்ட விரோதமானது. அதனைத் திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் நீதிமன்றம் செல்ல நேரிடும் - அங்கு சட்டத்தின்முன் இந்தச் சுற்றறிக்கை நிற்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!

கண்டனத்துக்குரியது

இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!

தமிழ் ஓவியா said...


கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் - சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியா இந்து நாடல்ல

மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு - ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)

எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.

இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக் களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.

இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?

இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.

தணிக்கைத்துறை, கோயில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு - செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!

இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டே!

மேலும் இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப் பட்டதேயாகும்.

சார்வாகர்கள் - பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!

கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.

இது சட்டப்படி - ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை யாகும்.

சுயமரியாதைத் திருமணம் நடைபெறக் கூடாதா?

அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.

இந்த திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் - ஹிந்து கோயில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?

திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள) கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ - சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்தி கர்கள் - நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள் ளனரே!

இந்தச் சுற்றறிக்கை கோயில் நிருவாக அதிகாரிகள் - பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை தகராறை உருவாக்கக் கூடியதாகும்.

நீதிமன்றம் சென்றால் அரசுக்குத் தோல்விதான்!

இந்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை

இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறி வாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்துச் செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.

எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோயில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் - கடவுளச்சிகளை பாதுகாப்பதையும் கவனத் தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பகிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!

நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!


கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
10.9.2013

தமிழ் ஓவியா said...


அல்லவே அல்ல!


மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமும் அல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


உ.பி. குஜராத் ஆகிறதா?



உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான கலகம் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனராம். கலவரத்தை அடக்க இராணுவம் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளது.

முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கம்பெனி இராணுவம் மற்றும் துணை இராணுவ அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஹூக்கும் சிங், சங்கீத் ஷோம், சுரேஷ் ரானா, பர்தேண்டு சிங் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறிய கருத்துக் கவனிக்கத்தக்கது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அதற்கு முன்பாகவே உத்தரப் பிர தேசத்தில் பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்டி விடத் தொடங்கி விட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க.வினர் துடிக் கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.

இதே கருத்தினை சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வாலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் சிறு பான்மை அல்லாதார் என்று உத்தி பிரிக்கும் வேலை யில் (Polarisation) இறங்கி அதில் வெற்றி பெற்றதன் அறுவடையை நரேந்திரமோடி அனுபவித்துக் கொண்டுள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வை அதற்குச் சாதகமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இரயில் பெட்டி எரிப்பில் மரணம் அடைந்தவர் களின் உடல்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லவிருந்த திட்டத்தை மாற்றி, அனைத்து உடல்களையும் அணி வகுக்கச் செய்து அகமதாபாத் நகரில் ஊர்வலம் நடத்தச் செய்ததன் பின்னணி நோக்கம் எளிதிற் புரிந்து கொள்ளத் தக்கதே!

எதற்கும் எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் தத்துவத்தை அதற்கு எடுத்துக் காட்டினார். அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த சிறுபான்மை மக்களை மிகவும் கேவலமான முறையில், கொச்சைப் படுத்தும் வகையில் தங்கள் ஜனத் தொகையைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்.

இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், பிரதமர் வாஜ்பேயி செவி சாய்க்கவில்லை. இத்தகவலை கே.ஆர். நாராயணன் அவர்களே பிற்காலத்தில் கூறி, தம் வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

பாபர் மசூதி இடிப்பு நடந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் மிகவும் கூர்மையாயின. அதற்குக் காரணமான குற்றவாளிகள் - பிஜேபியில் உள்ள பெரிய மனிதர்கள், சங்பரிவார்த் தலைவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் மேலும் முரட்டுத் துணிவு ஏற்பட்டு விட்டது.

காவி பயங்கரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சொன்னபோது எகிறிக் குதித்தனர்; உள்துறைச் செயலாளரோ, காவிகள் கலவரத்தின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் அரசு வசம் உள்ளன என்று அதிகார பூர்வமாக தெரிவித் துள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடக்கத்தில் சிறுபான்மையினர் மீது கண்கள் பாய்ந்தன. பலர் கைது செய்யவும் பட்டனர். பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. காவிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சந்தேகத்துக்குரிய வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின் மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொம்பைச் சீவிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதனை இந்திய வாக்காளர்கள் அடையாளம் காணாவிட்டால் அதற்கான விலையைப் பிற்காலத்தில் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


நரேந்திர தபோல்கர் படுகொலை எதிரொலி


மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை
மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும்!
தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, செப். 10- மூடநம்பிக்கை ஒழிப்புக்கு வகை செய்யும் சட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற நரேந்திர தபோல்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், பேராசிரியர்களும் தெரிவித்துள்ள கருத்தினையும் கலைஞர் அவர்கள் இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். அறிக்கை வருமாறு:-

மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம் பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி சூனியம், மாந் திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமை யான பழக்கங்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, மோசடிச் செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், உடனே ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூ பிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக் கும். இந்தச் சட்டத்திற்கான மசோதா மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் மூன்று முறை அறி முகப்படுத்தப்பட்டு, 29 திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு, நிறைவேற்றப் படாமலேயே இதுவரை இருந்து வந்தது. மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசரஅவசரமாக 22-8-2013 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதற்குக் காரணம் மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாள ரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகர வீதியில் 20-8-2013 அன்று படுகொலை செய்யப் பட்ட மாபாதகச் சம்பவம்தான். அந்தக் கோரச் சம்பவம் நாடெங்கிலுமுள்ள பகுத்தறிவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நரேந்திர தபோல்கர் காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவர் கொல்லப்பட்ட செய்தி மராட்டிய மாநிலம் முழுவதும் தீயெனப் பரவியது. கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புப் போராட்டங்களும் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. மருத்துவப் பட்டம் பெற்றவரான தபோல்கர், பன்முக ஆற்றல்களின் பெட்டகமாகத் திகழ்ந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணிப் போர்வீரராக இருந்த அவர், சமூகச் சீர்திருத்தங் களில் பேரார்வம் காட்டினார்.இந்தியச் சமுதாயத் தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருப்பது சாதியம்தான் என்று கருதினார்.

சாதிய அமைப்பை அறவே ஒழித்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப் புரட்சி நடக் காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார். அறியாமையைப் போக்குவதற்கான போராட்டத் தில் எனக்கு எவ்வித ஆயுதமும் தேவையில்லை என்று தபோல்கர் கூறினார்.தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், தபோல்கர், ஆண்ட வனுக்கோ, மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம் பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார் என்று கூறி யிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக என்ற, நான் எழுதிய பராசக்தியின் வசனம் என் நினைவுக்கு வந்தது. தனது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடியவர் தபோல்கர். சமூகநீதி நிலைத்திருக்கவும், சமத்துவம் மலர்ந் திடவும், சாதி மறுப்புத் திருமணங்களை அவர் ஊக்குவித்து, முன்னின்று நடத்தினார். மந்திர வாதிகள் மற்றும் மோசடிச் சாமியார்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடியவர் அவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டங்களின் விளை வாக, மராட்டிய மாநிலத்தில் பல முனைகளிலும் அவருக்கு எதிரிகள் முளைத்தனர். பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றிட வேண்டுமென்று தபோல்கர் நீண்டகாலமாகக் கோரி வந்தார். அவரது கோரிக்கை அவர் கொலை செய்யப் பட்டதற்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மூடநம்பிக் கைகளுக்கு எதிராக மராட்டிய மாநில அரசு இயற்றியிருக்கும் சட்டத்தைப் போலவே, தமிழ கத்திலும் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், பேராசிரியர்கள் - சமூக ஆர்வலர்கள் - அறிவியல் இயக்கத் தினர் பலரும் முன் வைத்திருக்கிறார்கள்.

மூடநம்பிக் கைகளைப் பற்றி விவாதிக் கக்கூடிய சூழ்நிலையைப் பள்ளி களி லும், கல்லூரிகளிலும் உருவாக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளும் எழுந்துள்ளது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்ப டைக் கடமை ஆகும் என்று இந்திய

தமிழ் ஓவியா said...

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு51-A(h) cz®¤J »wJ. It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and
reform (அறிவியல் மனப்பான்மை, மனிதநேயக் கோட்பாடு, ஆராய்ச்சி மற்றும் சீர் திருத்த மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்தல்) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. தர்க்க நெறிமுறை களைக் கடைப் பிடிப்பதோடு, வேண்டுதல் வேண்டாமை அகற்றி, ஏற்கனவே மனதில் ஊறிப்போன கருத்துக்களை எதிலும் வலிந்து புகுத்திடாமல் பின்பற்றப்படும் நடைமுறையே அறிவியல் மனப்பான்மை என்ப தற்கான விளக்கமாகும். தீவிரமாகக் கலந்தாலோ சித்தல், விரிவாக விவாதித்தல் மற்றும் ஆழமாக ஆராய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் முக்கியமான அம்சங்கள் ஆகும். பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை அறிவியல் மனப் பான்மை என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழகத் திலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்த னையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது - அதிலும் கல்வி கற்றவர்களே அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது, கொடுமை யானதும் வேதனைக்குரிய தும் ஆகும். அண்மையிலே நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படி யெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை உணர்த்து கிறது.

சென்னையை அடுத்த கொளத்தூர், ரெட்டேரிப் பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ் என்பவர். இரத்தப் பரிசோதனை மய்யம் நடத்தி வந்தார்.அவருடைய மனைவி மைனா என்ற லட்சுமி அழகு நிலையத்தில் பயிற்சி பெற்றவர். இவர்களுடைய மகள் சினேகா, அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவர்.தாய் - மகள் இருவரும் சேர்ந்து, தனியாக அழகு நிலையம் நடத்த முடிவுசெய்து, புழலை அடுத்த புத்தகரத்தில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் கடையை வாடகைக்கு எடுத்தனர். 1-9-2013 அன்று காலை 5.30 மணி அளவில் லட்சுமி அழகு நிலையம் எனப் பெயரிடப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. குரோம்பேட்டை நாகப்பா நகரைச் சேர்ந்த புரோகிதர் இராமமூர்த்தி என்பவர் கடையின் உள்ளே ஹோமம் வளர்த்தார். பின்னர், டிஜிட்டல் போர்டால் ஆன கடையின் பெயர்ப் பலகைக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மலர்மாலை வைத்து பூஜை நடத்தினார். பூஜைகள் முடிந்ததும் நல்லநேரம் பார்த்து, கடையின் முன்பகுதியில் பெயர்ப் பலகையை மாட்ட திலகராஜ், அவரது மகள் சினேகா, எலக்ட்ரீஷியன் நவீன்சந்திரன், புரோகிதர் ராமமூர்த்தி ஆகிய நால்வரும் கடையின் உள்ளே இருந்து பெயர்ப் பலகையை வெளியே தூக்கி வந்தனர். கடையின் முன்பு பால்கனியில் நின்றவாறு நால்வரும் பெயர்ப் பலகையை மாட்ட, உயர்த்தித் தூக்கினார்கள். அந்தப் பலகையை வாஸ்து சாஸ்திரப்படி வைக்குமாறு புரோகிதர் ராமமூர்த்தி சொன்னார்.

தமிழ் ஓவியா said...

அவர் அறிவுரைக்கேற்ப, பெயர்ப் பலகையை அப்படியும் இப்படியுமாக அந்த நால்வரும் மாற்றி மாற்றி வைத்தனர். இறுதியாக, புரோகிதர் சொன்னபடி பெயர்ப் பலகையைத் திருப்பி வைத்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பெயர்ப் பலகையில் இருந்த இரும்பு உரசி, அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நான்கு பேரையும் மின்சாரம் தாக்கி, அதே இடத்தில் அவர்கள் கருகிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளிவந் திருந்தன.நெஞ்சைப் பிழிந்திடும் இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் 2-9-2013 அன்று மின்சாரம் தாக்கி இறந்தோர் இல்லத்திற்குச் சென்று, உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

வார ஏடு ஒன்றில் வந்த மற்றொரு செய்தி. பில்லி சூனியம், மந்திரங்களால் பெருமளவுக்குப் பணம் குவித்த திவ் யானந்தா என்ற பூசாரி பழனிச்சாமி என்பவர், தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 17ஆவது கிலோ மீட்டரில் இருமத்தூர் என்னும் இடத்தில், கொல்லாபுரி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில், அதற்குப் போட்டியாக சிவகாளியம்மன் கோவில் ஒன்றைக் கட்டினார்.அந்தக் கோவிலுக்கு 8-9-2013 அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அழைப் பிதழும் அச்சடித்து அனைவருக்கும் அனுப்பி இருந்தார். அந்தப் பூசாரியார், எதிரிகளின் கை, கால்களை விளங்காமல் செய்கிறேன், சாகடிக் கிறேன், பில்லி சூனியம், செய்வினை செய்கிறேன் என்று லட்சம் லட்சமாய்ப் பணம் பிடுங்குவதாகவும்; அம்மன் கோவில் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, 72 அடி உயர சிமெண்ட் சிலையைச் செய்து, நிறுவி இருப்ப தாகவும்; தனது பில்லி சூனியத் தொழிலுக்காகவே அரசாங்க நிலத்தை ஆக்கிரமித் திருப்பதாகவும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்துக்காக பில்லி சூனியம், செய்வினை என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற் றியதோடு, பூசாரி பழனிச்சாமி அரசு நிலத்தையும் ஆக்கிரமித்ததால், கும்பாபிஷேகத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறதாம்.

தமிழ் ஓவியா said...

மற்றொரு செய்தி, நரபலியைப் பற்றியது. 15-4-2013 அன்று நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா? என்ற தலைப்பில், முரசொலியில் வெளியிடப்பட்ட எனது கடிதத்தில், சென்னை, வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி விளக்கியிருந்தேன். குடுகுடுப்பைக்காரன் ஒருவன் செய்வினை வைத் திருப்பதாகச் சொன்னதை நம்பி, சென்னை, வியாசர் பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், குடுகுடுப் பைக்காரன் கொடுத்த தாயத்தைக் கட்டிக்கொண்டு, கீதா என்பவரின் குழந்தை இரண்டரை வயது விஷ்ணுவை, தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கி, கொலை செய்ய முயற்சித்தார். குழந்தை மூச்சுத் திணறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், மகேஸ்வரி குழந்தையைத் தூக்கிச் சென்று, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடக மாடினார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணுவின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித் தார்கள். மகேஸ்வரி குடுகுடுப்பைக்காரன் பேச்சை நம்பி, தோஷம் கழிக்கும் நோக்கத்தில், குழந்தையை நரபலிக் காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தார்கள். நரபலி பற்றிய இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உயிர் களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒருசிறு கிராமமாகச் சுருக்கி விட்டது; உள்ளங்கையில் உலகம் என்ற நிலை உருவாகிவிட்டது; இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; செய்வினை - குடுகுடுப் பைக்காரன் - தாயத்து - தோஷம் - நரபலி என் றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில்லையோ என்று தோன்றுகிறது. என்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது. நாம் மீள வேண்டு மானால் - சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் - அடிமைப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1923ஆம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்து கின்றன. பகுத்தறிவு - அறிவியல் மனப்பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்! அதுவே நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீர வணக்கமாகும்.

தமிழ் ஓவியா said...


வேப்பமரத்துக்கும், அரச மரத்துக்கும் டும் டும் டும்!


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியாரும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும் சொன்னால் சுர்ரென்று மூக்குப் புடைக்கும் ஆசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லு வார்களாம்?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யடுத்த டி.எடையார் கிராமத்தில் மாணிக்க விநாயகர் கோவில் அருகே வேப்பமரமும், அரச மரமும் பின்னிக் கொண்டு இருக்கிறதாம்.

விட்டுவிடுமா புரோகிதம்? சுரண்டலுக்கு மறு பெயர்தானே பக்தியும் - அதன் தகப்பனாகிய புரோகிதமும்?

இது ஓர் அபூர்வ காட்சி - இந்த இரண்டு மரங் களுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் ஊரே சுபீட்சம் அடையும் என்றனர் குருக்கள் பார்ப்பனர்கள்!

குருக்களே சொல்லிவிட்டார் - வேறு அட்டி யென்ன? மேளதாளத்துடன் கல்யாண திருக்கோலம் - புரோகிதர்கள் தட்டுகளை மாற்றிக் கொண் டார்களாம் - மொய் எழுதப்பட்டது - உண்டியலும் நிரம்பி வழிந்தது.
மொட்டை சாமி தலையில் உட்கார்ந்த காக்கை எச்சமிட்டால் அதிலிருந்து விழும் விதையில் மரம் முளைப்பது இயல்பான ஒன்றுதானே. இதில் என்ன அதிவிசேஷம் வாழுது?

இந்தப் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் என்னும் இவர்களின் முன்னோரான மற்றொரு பார்ப்பனன்.

அவன் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில், அரசன் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம்? வரி போடலாம்? என்று விலாவாரியாக எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

ஒரு மரத்தில் பிசாசு தோன்றிவிட்டதாக முதலாவது பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ணிவிட வேண்டும். இந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான கூச்சல் இடும்படியாக அரசன் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தத் துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு ஆகும் என்று கூறி மக்களை நம்ப வைக்கவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிபோல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து குடிகளிடம் பணம் வசூல் பண்ணவேண்டும்.

பிசாசு நகரத்தைவிட்டுப் போய்விடுகிறது. பணம் அரசனின் பொக்கிஷத்தைப் போய் அடைகிறது.

அதேபோல, அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது மக்களிடம் காட்டிப் பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை உடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்கிறான் கவுடில்யன்.

எந்தப் புரட்டையாவது செய்து குடிமக்களை ஏமாற்றி அரசன் பணம் பறிக்கலாம் என்னும் வஞ்சக தந்திரங்களை கூடை கூடையாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறான் சாணக்கியன் என்று கூறப்படும் கவுடில்யன் தன் அர்த்தசாஸ்திர நூலில்!

இன்று அரசன் இல்லை; ஆனால், அதேநேரத்தில் அர்ச்சகப் பார்ப்பான் இருக்கிறான் சுரண்டிக் கொழுக்க - திடீரென்று ஒரு நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்று புரளி கிளப்பவில்லையா? ஒரு நாள்தான் குடித்தானா? ஏன் மறுநாள் குடிக்கவில்லை? குட்டு வெளிப்பட்டு உள்ளி மூக்கு உடைந்துவிட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், சந்திராசாமியும் இருந்தனர் என்று பிறகு அம்பலமாகிடவில்லையா?

பிள்ளையார் பால் குடிப்பார் என்றால், கொழுக்கட்டை சாப்பிடமாட்டாரா?

பிள்ளையார் பால் குடித்தார் என்று நிரூபித்தால் ஒரு லட்சமும், கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்துக் காட்டினால் இரண்டு லட்ச மும் ரூபாய் பரிசு என்றும் சென்னை அண்ணா சாலையில் (23.9.1995) திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித் தாரே - அந்தச் சவாலை யாராவது ஏற்றார்களா?

பக்தியின் பேரால் மோசடி செய்யும் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் தள்ளவேண்டாமா?

மகாராட்டிர மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டப்படி எடுத்த எடுப்பிலேயே பில்லி சூன்யக்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளார்களே!

அண்ணா பெயரைச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு செய்யுமா? எங்கே பார்ப்போம்!

குறிப்பு: சாணக்கியனின் மோசடிகளை மேலும் தெரிந்து கொள்ள தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட - கழக வெளியீடான கோவில்கள் தோன்றியது - ஏன்? என்ற நூலை வாங்கிப் படியுங்கள்!

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம். (விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


பேராவூரணியில் கொட்டும் மழையில் பேரணி, தீமிதி, மாநாடு

பேராவூரணி - சேதுபாவா சத்திரம் ஒன்றிய கழகங்களை உள்ளடக்கிய பேராவூரணி வட்டார திராவிடர் கழக மாநாடு 8.9.2013 ஞாயிறு அன்று மாலை நடந்தது. மாநாட்டையொட்டி மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி 5.30 மணிக்கு பேராவூரணி பயணியர் விடு தியில் இருந்து தொடங்கியது. மண்டல தி.க.இளைஞர் அணி செயலாளர் சோம.நீலகண்டன் தலைமையிலும், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கா.தென்னவன், அறந்தை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப.மகாராசா, அறந்தை மாவட்ட துணை செயலாளர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் அணி தலைவர் இரா.மணிகண்டன் நகர கழக செயலா ளர் பொ.மதியழகன், ஒன்றிய கழக அமைப்பாளர், சு.சோணமுத்து, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சுரேசு கோபி, நகர இளைஞர் அணி தலைவர் த.நீல கண்டன் நகர, ப.க.அமைப்பாளர் வை. செல்லையன், ஒன்றிய மகளிர் அணி நீ.தேவி ஆகியோர் முன்னிலையிலும், பட்டுக்கோட்டை ச.மணியன் மதுரை ச.பால்ராஜ் (உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஓய்வு)), முன்னாள் மாவட்ட ப.க. தலைவர் வீ.ஆத்மநாதன், பேரா வூரணி ஒன்றிய ப.க.அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், சேது ஒன்றிய ப.க.தலைவர் சி.செகநாதன் ஆகியோர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர். இராசகிரி கோ.தங்கராசு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அத்தி வெட்டி வெற்றி செல்வன், இராசசேகர், பாண்டித்துரை, அய்யப்பன் ஆகியோர் காவடி எடுத்து வந்தனர். பொதுக்குழு உறுப்பினர் அல்லிராணி தலைமையில் மணிகண்டன் அய்யப்பன் மற்றும் பலர் தீச்சட்டி ஏந்தி வர பேராவூரணி இளைய தப்பு செட் குழுவின் தப்பு மேளத்துடன் செயங்கொண்டம் கலியமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் அலகு குத்தி காவடி எடுத்து வந்தனர். சடையார் கோயில் பெரியார் பிஞ்சுகள் கோலாட்டம் நிகழ்ச்சி நடத்தி வந்தனர்.

அலகு குத்தி காவடி எடுத்தல்

கறம்பக்குடி, முத்து அவர்களின் வீரவிளையாட்டு, அரிவாள் மீது ஏறுதல் நிகழ்ச்சியும் அதன் பின்னர் கழக தோழர்கள் கழக கொடியுடன் அணி வகுப்பு செய்ய, அறந்தை மாவட்ட கிளை அணி தலைவர் ப.மகாராசா, பேராவூ ரணி ஒன்றிய இளைஞர் அணி தலைவர் க.சுரேசுகோபி சித்தாதிக்காடு, பா.சக்தி வேல் ஆகியோர் அலகு குத்தி அம்பாசி டர் கார் இழுத்து வந்தனர். ஊர்வலம் அண்ணா சாலை முதன்மைச் சாலை வழியாக இரவு 7 மணிக்கு மாநாட்டு மேடையை மழை தூரலுடன் வந்து அடைந்தது.

மந்திரமா? தந்திரமா?

பேராவூரணி வி.எஸ்.குழந்தை நினைவு திடலில் சுயமரியாதை சுட ரொளி ச.சந்திரசேகரன் நினைவு மேடையில் ஈட்டி கணேசனின் மந்தி ரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. கழகத்தோழர்களின் தீ மிதி

தமிழ் ஓவியா said...

நிகழ்ச்சி

தீ மிதி நிகழ்ச்சியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கடவுள் இல்லை கடவுள் இல்லை என பலத்த கொள்கை முழக்கங்களுக் கிடையே ஏராளமான தோழர்கள் மதுக்கூர் சொக்கனாவூர் கு.சிவாஜி அவர்களின் தலைமையில் தீ மிதித்து, தீ மிதிப்பது கடவுள் சக்தி அல்ல என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் செய்து காட்டினர்.
மாநாடு ஒன்றிய கழக தலைவரும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான வை.சிதம்பரம் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாநாட்டு ஒருங்கிணைப் பாளர்கள் முனைவர் கரு.கிருட்டிண மூர்த்தி, விடுதலை வாசகர் வட்ட தலை வர் சி.வேலு, சேது ஒன்றிய தலைவர் த.பெரியராசன், ஒன்றிய செயலாளர் மு.சத்தியமூர்த்தி, நகர தி.க.தலைவர் குழ.அரங்கசாமி, முன்னிலையிலும் பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையி லும் தொடங்கியது. மாநாட்டு பொருளா ளர் அரு.நல்லதம்பி, அத்திவெட்டி சோதியின் மகள் காவியா, முனைவர் கரு.கிருட்டிணமூர்த்தி, ஆசிரியர் சி.வேலு (மாநாட்டு ஒருங்கிணைப்பா ளர்கள்) ஆகியோரைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் சார்பாக பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட தலைவர்கள் சார்பாக தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மண்டல தலைவர் செயலாளர்கள் சார்பாக தஞ்சை மண்டல தலைவர் வெ.செயராமன், பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் வடசேரி இளங் கோவன் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு தீர்மான அரங்கம் நடை பெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களையும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அ.அண் ணாத்துரை, மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.கதிர்வேல் ஆகியோர் முன் மொழிந்தனர். தொடர்ந்து அதிரடியான இடி முழக்க உரையை மூடநம்பிக்கை ஒழிப்பு, நதி நீர் பிரச்சினை, சமூக நீதி ஆகிய களங்களை மய்யப்படுத்தி கழக பேச்சாளர் இராம.அன்பழகன், அதிரடி க.அன்பழகன், பெரியார் செல்வன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழக பொதுச்செய லாளர் தஞ்சை இரா.செயக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவர் சிறப்புரை

மாநாட்டிற்கு பல்வேறு பணிகள் செய்த கழக தோழர்களுக்கு கருப்பு ஆடையையும், பயனாடையையும் அணி வித்து மாநாட்டின் நிறைவுரையான எழுச்சியுரை கழகத்தலைவர் தமிழர் தலைவர் பேராவூரணி பகுதியில் கழக இளைஞர் இணி தொடங்கப்பட்ட 27 ஆம் ஆண்டின் (5.9.1987) 17 ஆவது முறையான உரையை புத்தக ஆதாரங் களை கையில் எடுத்து காட்டி உரை யாற்றினார்.

நன்றியுரையாற்றினார் மாவட்ட கழக துணை செயலாளர் இரா.நீலகண்டன்.

தமிழ் ஓவியா said...


மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் கழகத் தலைவர் அவர்களுக்கு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. திருஞானசம்பந்தம், மேனாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம், பேரூராட்சி மன்ற தலைவர் நா.அசோக்குமார், திமுக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சுப. சேகர் ஆகியோர் பயனாடை அணிவித் தனர்.

பேரணி துவங்கி சென்று கொண்டி ருக்கும் போது மழை பெய்ய துவங்கி மேடையை பேரணி அடையும் வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது அந்த மழையிலும் கருஞ்சிறுத்தை அணிவகுப்பு உற்சாக முழக்கமிட்டு சென்றது காண்போரை வியக்கச் செய்தது. தமிழர் தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மீண்டும் மழை பெய்தபோதும் உரையைக்கேட்க திரண் டிருந்த கூட்டம் கலையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள நிலை, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு எதிரான தீர்ப்பு, எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை - இவற்றை எதிர்த்தும், கண்டித்தும் வரும் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கருநாடக மாநில அரசைப் பொறுத்தவரையில் எந்தவித சட்ட திட்டங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை! உச்சநீதிமன் றத்திற்கு நிகரான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எல்லாம்கூட கருநாடகம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் வருகிறது. மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதில்லை.

எந்த ஓர் அணையைக் கட்டுவதானாலும் கீழ்ப்படுகையில் உள்ள மாநிலத்தின் ஒப்புதலையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற்றுத்தான் செய்யவேண்டும்.

ஆனால், 1959 இல் கபினி அணையையும், 1965 இல் சுவர்ணவத் அணையையும் கட்டியதே கரு நாடகம் - எந்தச் சட்டம் அம்மாநிலத்தின் கழுத்தை நெரித்தது?

இப்பொழுதும் அதே பாணியில் அணைகளைக் கட்ட முடிவெடுத்துவிட்டது, கருநாடகம். தேசிய நீரோட்டம் என்பதெல்லாம் காகிதக் கப்பலோட்டம் தான். மாநிலக் கட்சிகள் பேசினால் பிரிவினை வாதம் - அதைத்தானே தேசிய கட்சிகளும் செய் கின்றன - அது என்ன வாதம் - பக்கவாதமோ!

1924 ஆம் ஆண்டு ஒப்பந்த காலத்தில் கருநாடகத்தில் காவிரி பாசனப் பகுதி 6 லட்சம் ஏக்கராக இருந்தது. இப்பொழுது அது 25 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? 25 லட்சம் ஏக்கர் என்ற நிலை மாறி இப்பொழுது வெறும் 14 லட்சமாகத் தேய்ந்து கருவாடாகி விட்டது.

விவசாயம் இனி கைகொடுக்காது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள். விவசாய நிலங்கள் எல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங் களுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, இன்று வெளி மாநிலத்தை நோக்கிக் கையேந்தி நிற்கும் அவலம்.

கருநாடக மாநிலத்தில் காவிரி ஓடும் தூரம் 320 கிலோ மீட்டர்தான். தமிழ்நாட்டிலோ தலைக் காவிரியில் புறப்பட்டு 800 கி.மீட்டர் பயணம் செய்து பூம்புகார் கடலில் சங்கமம் ஆகிறது.

இதிலிருந்தே நியாயப்படி அதிக பலன் தமிழ்நாட்டிற்கே என்பது வெளிப்படையாகும். கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் வந்து அணைகள் உடையும் நிலை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் பயன்படுத்திக் கொள்கிறது.

உள்நாட்டிலும், தமிழர்களுக்கு வஞ்சனை; இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தமிழர் களுக்கு வஞ்சனைதானா என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

இந்த வஞ்சனையை எதிர்த்துப் போராடித்தான் தீரவேண்டும். தொடர்ந்து திராவிடர் கழகம் குரல் கொடுத்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும், போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் வருகிறது.

பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதையொட்டி, தமிழ்நாடு அளவில் தொடர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறோம்.

வருகின்ற 19 ஆம் தேதி நன்செய் பூமியாம் தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப் பாட்டம்! கழகத் தோழர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே அணிதிரள்வீர்! திரள்வீர்!!

தமிழ் ஓவியா said...


எளிமை, சிக்கனம், நாணயம், ஒழுக்கம், மனிதநேயம் இவைதான் பெரியார் கொள்கை

பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி இல்லம் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

பேராவூரணி, செப்.11- பேராவூரணியில் 8.9.2013 அன்று காலை பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் புதிய இல்ல அறிமுக விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய இந்த புதிய இல்ல அறிமுக விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, ஜெயராமு ஆகியோருடைய இந்த இல்லம் புதுமனையாக நல்ல அளவிற்கு கட்டி அதை அறிமுகப்படுத்தி இது எங்களுடைய இல்லம் என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்துகின்ற இந்த விழா விற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, கழக பொதுச் செயலாளர் ஜெயகுமார் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, தோழர் சிதம்பரம், நீலகண்டன் அவர்களே மற்றும் கழக பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களை சேர்ந்தவர்களே, பொதுமக்களே, பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் அன்பு சகோதரர் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியை இணைந்து அமைத்துள்ள பாப்பம்மாள் அவர்களே, கார்த்தி கேயன், சரோஜா, டாக்டர் சிவசங்கரி அவர்களே, அவருடைய குடும்ப பிள்ளைகள் பார்கவி, செய மூர்த்தி, சித்தார்த்தன் அவர்களே, பெரியோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

வரவேற்புரை ஆற்றிய சகோதரர் மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சிறப்பாக ஒன்றை சுட்டிக் காட்டினார். நல்ல சீரிய பகுத்தறிவாளரான இல்லத் திற்கு உரியவர்களாக இருக்கக்கூடிய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, இந்த இயக்கத்தின் கொள்கை களை பின்பற்றிய காரணத்தாலே இன்றைக்கு தலைசிறந்து நான் முன்னேறி இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்துகின்ற விழாதான் இது. (கைதட்டல்) இந்த விழா என்பது வீட்டுக்காக மட்டுமல்ல. வீட்டுக்கு வந்து விட்டாலே அறிமுகமாகி விடும். விழாவிற்கு வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் அறிமுகமாகிவிட்டது. பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் தாழ மாட்டார்கள். அவரும் அவரது சகோதரரும் இந்த அழைப்பிதழை எவ்வளவு சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். மாணவர் பருவத்திலிருந்து கிருட்டிணமூர்த்தி அவர்கள் எனக்கு அறிமுகம். அவர் மாணவர் பருவம், கல்லூரி பருவம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியராக இருந்து இப்போது பேராசிரியராக ஆகி இருக்கிற வரை இவ்வளவு வளர்ந்துள்ள காலம், இன்று வரை இவர் என்ன ஜாதி என எனக்கு தெரியாது. இதன் பெயர் தான் திராவிடர் கழகம். அதுதான் பெருமை.

நாங்கள் எல்லாம் ஒரே கொள்கை உடையவர்கள். இது ஜாதி, இரத்த உறவை விட ஆழமானது. பிரிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்று எளிமை, சிக்கனம், வருவாய்க்கு உட்பட்டு வாழ்வது, நாணயமாக வாழ்வது, ஒழுக்கமாக வாழ்வது, பிற மக்களுக்கு தொண்டாற்றுவது இதுதான் பெரியார் கொள்கை. கடவுளை மற என்ற பெரியார் மனிதனை நினை என சொன்னார். மனிதனை நினை என்பதில் எல்லாமே அடக்கம். இந்த குடும்பம். நல்ல பல்கலைக் கழகமாக இருக்கிறது. நம்முடைய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பெருமையாக உள்ளது.

அவரின் வாழ்விணையர் ஜெயராமு நிறைய டிகிரி வாங்கியுள்ளார். பெரியார் பிறந்திருக்காவிட்டால் திராவிடர் கழகம் தோன்றியிருக்காவிட்டால், சுய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த இயக்க கொள்கை பரவாமல் இருக்குமானால் இன்றையக்கு ஜெயராமு இத்தனை டிகிரி பெற்றிருக்க முடியுமா? அதைவிட இந்த குடும்பத்திலே கார்த்திகேயன், சரோஜா ஆகியோரின் குழந்தைகள் டாக்டர் க.சிவசுந்தரி எம்டி., படிக்கிறார். அடுத்த பெண் எம்.இ. படிக்கிறார்.

அனைவரும் சிறப்பாக படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த குடும்பத்திலே டாக்டர், பொறியா ளருக்கு பஞ்சமில்லை, பேராசிரியருக்கு பஞ்சமில்லை. இவ்வளவும் தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என பயமுறுத்தி விட்டான் - கிருட்டிணமூர்த்திக்கு இரண்டையும் நாம் பண்ணிட்டோம். திருமணத்தையும் நாம்தான் நடத்தி வைத்தோம். வீட்டையும் நாம்தான் இப்போது அறிமுகப்படுத்தி யுள்ளோம். நல்ல பகுத்தறிவாளராக இருப்பவர் முன்னேற முடியும். இந்த இல்லம் கிருட்டிணமூர்த்தி இல்லமாக இருந்தாலும் பெரியார் இல்லமாக அமைந்திருக்கிறது என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.

முன்னதாக புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். அனைவரையும் வரவேற்று மதியழகன் உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் இராச கிரி கோ.தங்கராசு, ஆர்பிஎஸ் சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்!

(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


உயர் நிலைக் கல்வியிலும் தேவை இட ஒதுக்கீடு


வரும் 19ஆம் தேதி காலை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற உள்ளது. கருநாடகத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டப்படுவது குறித்து நேற்று எழுதி இருந்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டாவது காரணம் - உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது - பேராசிரியர்கள் நியமனத்தில் டில்லி எய்ம்ஸில் இடஒதுக்கீடு கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் மற்றும் சிறுபான்மையினரும் ஆவார்கள்.

நீண்ட காலமாக இந்தப் பெரும்பான்மை மக்களுக் குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு போராடிப் போராடிப் பெறப்பட்டது.
மாநில அளவில் இந்த இடஒதுக்கீடுகள் இருந் தாலும் மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை.

அதற்காகவும் திராவிடர் கழகம் பெரும் அளவில் போராடி வந்திருக்கிறது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து 1990 வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதானது மாபெரும் சமூக அநீதியாகும்.

மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, போராட்டங்கள் - 16.

1990இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் (கல்வியில் அல்ல) 27 சதவீதத்திற்கு வழி செய்யப் பட்டது. அதனை எதிர்த்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர் கூட்டம் நீதிமன்றம் சென்று முடக்கியது. 1992-க்குப் பிறகுதான் ஏதோ நடைமுறைக்கு வந்துள்ளது.

20 ஆண்டுகள் கழிந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களும் கிடைக்க வில்லை. 7 சதவீதத்தைத் தாண்டவில்லை.

கல்வியில் இடஒதுக்கீடு 27 சதவீதம் என்பதைக் கூட ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் வழங்குவது என்று தான் கூறப்பட்டது. இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எந்த வகையில் நியாயம்?

இலையைப் போடுவதற்கு முன்னதாகவே வெளியே தள்ளி விடுவதா? மிகவும் வளர்ந்த நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில்கூட ஒடுக்கப்பட்ட மக்களான நீக்ரோக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சங்கம் (National Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ் என்பவர் (Charles Lyons) சென்னைக்கு வந்தபோது (அவருடன் 10 பேர் வந்தனர்) 1.2.81 அன்று பேட்டி ஒன்று அளித்தார். அச்செய்தி ஏட்டிலும் 2.2.1981 வெளிவந்தது. .

எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளன. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலேயே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேல் நிலைக் கல்வி எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே வந்த குழு அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மேல் நிலைக் கல்வி, உத்தியோகம் உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் வகையில் உத்தேச சட்டம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
மக்களின் இந்த மக்கள் நாயகக் குரலை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க் கிறோம். இல்லையேல் அகில இந்திய அளவில் போராட்டத்தை நகர்த்தி செல்லும் திராவிடர் கழகம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 19ஆம் தேதி தயாராவீர் தோழர்களே!

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.மீது சி.பி.அய். விசாரணை

அய்.அய்.டி.மீது சி.பி.அய். விசாரணை அய்.அய்.டி.ஒத்துழைப்புத் தராவிட்டால் ஒன்றுபட்டுப் போராடுவோம்: தொல்.திருமாவளவன்

நவீன மனுதர்ம ராஜ்ஜியம் நடக்கிறது: கவிஞர் கலி.பூங்குன்றன்

செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை, செப்.12- சென்னை அய்.அய்.டி.மீது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட சி.பி.அய். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால், அனைத்து சமூகநீதி சக்திகளையும் ஒன்று திரட்டிப் போராடுவோம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன். ஒரு நவீன மனுதர்ம ராஜ்ஜியமே நடக்கிறது என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

த.மு.மு.க. தலைவர் பேராசிரியர் ஜவஹருல்லா, முனைவர் ஈ.முரளிதரன் ஆகியோர்களும் செய்தி யாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
செய்தி அறிக்கை

செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பு பின்வருமாறு:

1995 முதல் 2000 வரை அய்.அய்.டி.யில் நடந்த பணி நியமனங்களில் பெருவாரியான முறை கேடுகள் நடந்துள்ளன என்பதை விசாரிக்க 27.7.2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி நாகமுத்து அவர்கள் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டார். டில்லியில் உள்ள சி.பி.அய். இயக்குநருக்கு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட உத்தரவு சென்னை சி.பி.அய். இயக்குநருக்கு வந்தது. சென்ற மாதம் அய்.அய்.டி. நிர்வாகத்தின்மீது சி.பி.அய்.யால் வழக்கும் (Case No.RC38(A)2013) தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்ந்துவரும் நிலையில் இதைச் சீர்குலைக்க தன்னுடைய செல்வாக்குப் பலத்தாலும், அரசுப் பணத்தாலும் பல்வேறு நடவடிக்கைகளை அய்.அய்.டி. மேற்கொண்டு வருவது நம்முடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக் கழகத் திலும் டெலிபோனில் இண்டர்வியூ நடத்தி, அவர் களைப் பேராசிரியர்கள் பதவியில் அமர்த்துவது என்பது கனவு கூட கண்டறிய முடியாத செய்தி. ஆனால், அய்.அய்.டி.,யில் வெளிநாட்டில் அய்.டி. வீழ்ந்தபோது, அவர்களுக்கு உயரிய பதவிகள் கொடுக்கும் விதமாக டெலிபோனில் பேசியும், டெலிபோனில் பேச முடியாதவர்களுக்கு அய்.அய். டி.,யில் வேலை செய்வதற்கான அழைப்பு அனுப் பியும் உள்ளனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

டாக்டர் பட்டம் முடிக்காதவர்கள்கூட உதவிப் பேராசிரியர்களாகச் சேர்ந்திருக்கின்றனர். இரண் டாம் வகுப்பில் தேறியவர்களுக்கும் இங்கு ஆசிரியர் வேலை. வேண்டியோர்களுக்குத் தகுந்தாற்போல சம்பள விகிதங்களில் ஏற்றத் தாழ்வு. தமிழ்நாட்டில் 0.25 சதவிகிதம்கூட இல்லாத ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் இயக்குநராக இருந்தபோது, அவருடைய ஜாதியைச் சார்ந்தவர் பலர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் நியமித்த சி.பி.அய். விசாரணையை நிறுத்தக்கோரி சென்னை அய்.அய்.டி., மேல்முறை யீடு செய்து மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் து.ராஜாவும், அனுமந்தராவும், நாடாளுமன்றத்தில் (6.8.2013 இல்) கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

பல இலட்சக்கணக்கான தொகையில் டில்லியில் இருக்கும் பெரிய பெரிய வழக்குரைஞர்களை சென்னைக்கு அய்.அய்.டி. நிர்வாகத்தினரே அழைக் கின்றனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடமோ அய்.அய்.டி.,களின் விசிட்டராகிய குடியரசுத் தலைவரிடமோ அதற்கான உரிமைகள் வாங்காம லேயே சி.பி.அய். விசாரணையை நிறுத்த முயற்சி செய்கின்றனர்.

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத் திலும் தன்னுடைய ஜாதிக்காரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு சம்பள உயர்வு கொடுத்து இளம் வயதினர்களை உயர் பொறுப்புகளில் அமர்த்தி வருகின்றனர்.

சி.பி.அய். நிறுவனம் அய்.அய்.டி.யினுள் நுழைந் தால், இன்னும் பல்வேறு செய்திகள் வெளியாகி விடுமோ என்று பயந்து உரிய ஆவணங்களை அழித்து வருவதாக அங்கிருந்து செய்திகள் வரு கின்றன.

54 இல் ஒருவர்கூட தேர்வு செய்யப்படவில்லை

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளி யிடங்களில் பணியாற்றும் 54 தாழ்த்தப்பட்ட பேரா சிரியர்கள் டாக்டர் பட்டம் பெற்று உரிய தகுதி யுடன் விண்ணப்பித்தபோது, அவர்களின் 6 பேருக்கு மட்டும் நேர்முகத் தேர்வை வைத்து, ஒருவரைக்கூட அதில் தேர்ந்தெடுக்காத செய்தி கொடுமையிலும் கொடுமையானதாகும். இதை ஆர்.டி.அய்.யில் கேட்ட அய்.அய்.டி., பழைய மாணவர் டாக்டர் முரளிதரன் கேள்விக்குப் பதிலாகக் கொடுத்திருக் கின்றனர்.

இந்த டாக்டர் முரளிதரன் அய்.அய்.டி.யிலேயே படித்து பி.எச்டி., பட்டமும் வாங்கியவர். அமெ ரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளில் ஆசிரியராகப் பணியாற்றியதோடு மேற்படிப்பையும் மேற் கொண் டவர். இவர் 8 முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் இவரை உதவிப் பேராசிரியராகக்கூட ஏற்கவில்லை. இத்தனைக்கும் இவர் பிற்படுத்தப்பட்ட (வன்னியர்) சமூகத்தைச் சார்ந்தவர்.

தற்போதுள்ள இயக்குநர் டாக்டர் பாஸ்கர ராமமூர்த்தி உள்பட இதற்கு முன்பிருந்த மூன்று இயக்குநர்களும் முறையான நியமனம் பெற்று அமராமல் கொல்லைப்புற வழியாக வந்தவர்கள் என்பது quo warranto போட்டு நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்டவர்கள்.

தமிழ் ஓவியா said...

இதுபோலவே அய்.அய்.டி.,யில் நியமனம் பெற்ற பதிவாளர்கள் பலரும் இரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்று, தான் படிக்காத பாடங்களில் டாக்டர் பட்டம் பெற்று அய்.அய்.டி.யில் உலா வந்திருக் கின்றனர்.

இவர்கள் சென்னை நகர்மன்ற வளர்ச்சிக் குழு மத்திடமோ, வனத்துறை அதிகாரிகளிடத்திலோ, விமானத்தள அதிகாரிகளிடத்திலோ எந்தவித உரிமைகளும் வாங்காது, தானே முடிவெடுக்கும் அதிகாரிகளாக மாறி, காடு முழுவதையும் அழித்து பல்லாயிரம் கோடி.... கோடியில் வெறும் கட்டடங் களாகக் கட்டியுள்ளனர்.

கட்டடங்கள் கட்ட டெண்டர்கள் விட்ட முறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

ஒருவருக்கு மட்டுமே (எல்லோரையும் புறக் கணித்து) டெண்டர்கள் கொடுப்பதும், குறைவாகக் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல், உயர் கொட் டேசன் கொடுத்தவருக்குக் கொடுப்பதும் நடந் தேறியிருக்கிறது.

மருத்துவமனைகள், அதற்கான மருந்து வாங் குதல்கூட தெரிந்தோர்களுக்கும், தன் ஜாதியின ருக்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இயக்குநரின் யோக்கியதை

எந்த ஆராய்ச்சியும் செய்யாது அய்.அய்.டி., இயக்குநரை (டீன்களாக) சுற்றிவரும் நபர்கள் அடுத்த இயக்குநர் ஆவது மரபாகவே இங்கு மாறி விட்டது. ஒரு பி.எச்டி., மாணவர்க்குக்கூட வழி காட்டுதல் செய்யாது, ஒன்றரை பேப்பர் எழுதியவர் இன்று டீனாக இருக்கிறார் என்பது வியத்தற்கரிய செய்தியாக நமக்குக் கிடைக்கிறது.

வெளிநாடு செல்லுவது என்பது வேண்டியோர் களுக்கு மட்டுமே இங்குக் கிடைக்கிறது. இதோடு நில்லாது உலகம் போற்றும் விஞ்ஞானிகளை வேலை செய்யவிடாது தொந்தரவு செய்து வருவதும் நமது கவனத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்காவில் 85 புத்தகங்களும்,100-க்கும் மேற் பட்ட எம்.எஸ்சி., எம்.டெக்., புராஜெக்டுகளையும், அய்.அய்.டி.யிலேயே 13 பி.எச்டி., மாணவர்களையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி, பாபா அணுமின் சக்தி நிறுவனம், எய்ட்ஸ் நோய் தடுப்பு முதலான நிறுவனங்களில் பல கோடி ரூபாய் பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை முடித்த பெண்மணியான வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு கொடுக்காமல், ஒரு புத்தகமும் எழுதாத - ஒரு பி.எச்டி., மாண வரைக்கூட உருவாக்காத - மற்ற ஆராய்ச்சி நிறு வனங்களிடம் இருந்து எந்த ஆராய்ச்சித் திட்டத் திற்காகவும் ஒரு நயா பைசாகூட வாங்காத ஆண் மக்கள் டாக்டர் அழகர் ரங்கன், டாக்டர் காமத்... என்றுபலர் பேராசிரியர்களாக பவனிவருவதும் அய்.அய்.டி.,யினுள் நடைபெறுவது உலகமறிந்த ஒன்று.

அதனால், உயர்நீதிமன்றம் நியமித்த சி.பி.அய். விசாரணை தொடரவேண்டும். இதற்கான தடை களை அய்.அய்.டி., நிர்வாகம் மேற்கொள்ளுமே யானால், மக்கள் மன்றத்தில் அய்.அய்.டி.யில் நடைபெறும் இன்னும் பல மோசடிச் செயல்களை வெளிக்கொணருவோம்! அதற்கான போராட்ட வழிமுறைகளை தமிழக அரசியல் கட்சிகளும், எங்களைப் போன்ற சமூகநீதிக்கான ஆர்வலர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம். - இவ்வாறு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

தமிழ் ஓவியா said...


வாழ்க முத்தையா!


இன்றைக்குத் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடு; சட்டப்படி இன்றைக்கு மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக் கீடு - இவை எல்லாம் இம்மக்களின் வளர்ச்சிக்கு இடப்பட்ட அடி உரம்.

இந்த அடி உரம் தந்த வர்கள் மேன் மக்களே! ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றிக்கும், போற்றுதலுக் கும் உரிய பெரு மக்களே!

அந்த உன்னத ஒப்பரிய பட்டியலில் பெருந்திரு எஸ். முத்தையா முதலியார் அவர் களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆண் குழந்தை பிறந் தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முத் தையா என்று பெயர் சூட் டுமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்திருந் தார் என்றால், அது என்ன சாதாரணமா?

இதே நாளில்தான் (13.9.1928) டாக்டர் சுப்ப ராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவை யில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர் கள் முதல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்து நடைமுறைக்கும் கொண்டு வந்தார். (அரசு ஆணை எண் 744 நாள்: 13.9.1928).

அரசு நியமனத்திற்கும் 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றில்

இந்து பார்ப்பனரல்லா தாருக்கு - 5

பார்ப்பனர்களுக்கு - 2
இசுலாமியர்க்கு - 2
கிறித்தவர்களுக்கு - 2

ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு (ஆதி திராவிடர் உட்பட) - 1

இந்த வகையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றது அமைச் சர் முத்தையா அவர்களால் கொண்டு வரப்பட்ட ஆணை.

இந்த வகையில் பார்த் தாலும்கூட 3 சதவீதமுள்ள பார்ப்பனர்களுக்கு 17 சத வீதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் கூடப் பொறுக்காத பார்ப்பன ஏடான சுதேசமித்திரனோ முத்தையா முதலியா ருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று எழுதியதே!

முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம், மக்கள் இதனைக் கண்டிக் கின்றனர் என்று இந்து ஏடு எகிறியதே!

உண்மையில் இப்படி எழுதிய பார்ப்பன ஏடு களின் எழுத்துக்களே அவர்களுக்கு வகுப்புப் பித்தம் எந்த அளவுக்குத் தலைக்கேறியது என்பதற் கான அளவுகோலாகும்.

முத்தையா அவர்கள் மறைந்தபோது அண்ணா அவர்கள் எழுதியது. தனக் குக் கிடைத்த சந்தர்ப் பத்தை (அமைச்சர்) கித் தாப்புக்கும், திறப்பு விழா வுக்கும் மட்டுமே கிடைத் தது எனக் கருதாமல் திராவிட இன மக்களின் துயர் துடைக்கும் திட்டங் களுக்காகப் பயன்படுத்தி யவர் என்று எழுதியதைப் பதவியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வாழ்க எஸ். முத்தையா முதலியார்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

குருபூஜைக்கு தடை விதிக்கலாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.13-குரு பூஜைகளை தடை செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்; முன்னாள் தலைவர்களுக்கு மரி யாதை என்ற பெயரில் இப்போ துள்ள மக்களைக் கொடுமைப் படுத்துவதை ஏற்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறி யுள்ளது.
இம்மானுவேல் சேகரன், ஒண்டிவீரன், பூலித்தேவன் ஆகி யோரின் குருபூஜைக்கு வெளியூரி லிருந்து ஆட்கள் வர அனுமதி வழங்கக்கோரி 3 பேர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உத்தரவில் நீதிபதி கூறியிருப்ப தாவது:

ஜாதி ரீதியாகவும், சமூக ரீதி யாகவும் இயக்கங்கள் அடிக்கடி தலை தூக்குவது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. தென் தமிழ கம் ஜாதி அடிப்படையில் அதிக உணர்வு உள்ள பகுதியாகும். எனவே, ஜாதி மோதலைத் தூண் டும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜாதி தலைவர்கள் அடையாளம் காணப் பட்டு அவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற் றுக்கு குருபூஜை என்று பெயரிடப் பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களின் பலத்தை மற்றவர் களுக்கு காட்டுவதாக நினைக் கிறார்கள். தலைவர்களும், தியாகி களும் ஜாதி அடிப்படையில் இல் லாமல் அனைவராலும் கவுரவிக் கப்பட வேண்டியவர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதன் மூலம் அந்த தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் என்று முத்திரை குத்தப்படுகிறது.

குருபூஜைகள் நடக்கும்போது வெளியூரிலிருந்து வருபவர்களின் முழக்கம் போன்றவற்றால் பிரச் சினைகள் ஏற்படுவதால்தான் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச் சினையில் பொதுவாக நீதிமன்றம் தலையிட முடியாது.

தமிழ் ஓவியா said...

சிறிய பிரச்சினைகள்தான் பூதாகரமாக உருவெடுத்து பெரிய பிரச்சினையாக மாறுகிறது. இந்த குருபூஜைகளை அரசியல்வாதி களும் பயன்படுத்திக் கொள் கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்களும் ஏராளமாக செய்யப்படுகின்றன. எனவே, மக்களின் நலன்கருதி அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச் சிகளுக்கு செல்லாமல் இருப் பார்கள் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

தடை விதிக்க வேண்டும்

எனவே, குருபூஜைகளால் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படா மலிருக்கவும், மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தவும் இந்த நீதிமன்றம் அரசுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இதன்படி, குருபூஜைகளுக்கு தடை விதிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். குருபூஜையில் அரசியல் கட்சித் தலைவர்களும், ஜாதி தலைவர்களுக்கும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்.

தலைவர்களுக்கும், தியாகி களுக்கும் மரியாதை செலுத்த விரும்பும் அரசியல்வாதிகள் மற் றும் சமூகத் தலைவர்கள் தியாகிக ளின் நினைவிடங்களுக்குச் செல் லாமலேயே மரியாதை செலுத் தலாம். இந்த நிகழ்ச்சி காலங்களில் அவர்கள் ஏழைகளுக்கு உணவு வழங்குதல், அனாதை ஆசிர மங்கள், முதியோர் இல்லங் களுக்குச் சென்று ஆதரவற்றவர் களுக்கு தேவையான உதவிகளைச் செய்யலாம். தலைவர்களின் நினை விடங்களுக்குச் செல்லும் பயணச் செலவைக்கூட சமுதாய சேவைக்கு பயன்படுத்தலாம். தொண்டர்கள் பயனுள்ள பணிகளில் தங்களை ஈடுபடுத்தலாம். இந்த நடவ டிக்கைகள் மூலம் தேசத் தலை வர்களுக்கும், தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கவுரவப் படுத்தலாம். முன்னாள் தலைவர் களுக்கு மரியாதை செலுத்து வதற்காக இப்போதுள்ள சாதா ரண மனிதனுக்கு தொந்தரவு கொடுப்பதோ, காயமடையச் செய்வதோ, கொடுமைப்படுத் துவதோ கூடாது.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

அரசுக்கு நீதிமன்றத்தின் 9 அறிவுரைகள் குருபூஜைகளுக்குத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த பூஜைகளை குறைந்த அளவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண் டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள்

அரசியல் கட்சித் தலைவர் களும் ஜாதித் தலைவர்களும் பூஜைகளில் கலந்துகொள்ள வருவ தற்கு தடை விதிக்க வேண்டும்.

பத்திரிகைகள் இதுபோன்ற குருபூஜைகள் குறித்து விளம்பரம் மற்றும் செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

குருபூஜை நடைபெறும் மாதங்களில் ஜாதி தலைவர்களின் வெறுக்கத்தக்க உரைகள், ஆட் சேபனைக்குரிய முழக்கங்கள், கோபத்தைத் தூண்டக்கூடிய பேச்சுகள் தடை செய்யப்பட வேண்டும்.

குருபூஜை தொடர்பாக பேனர்கள் கொண்டுவருவது, போஸ்டர்கள் ஒட்டுவது, சுவர் களில் எழுதுவது தடை செய்யப் பட வேண்டும்.

குருபூஜைகளுக்கான ஆயத்த கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

பேரணி மற்றும் அதிக மக்கள் கூடுவது சட்டம் ஒழுங்கு பிரச் சினையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தடுக்க வேண்டும்.

குருபூஜைகளுக்கு செல்ல வாகனங்களை வாடகைக்கு விடுவ தற்கு இந்த ஆண்டு தடை விதிக் கப்பட்டதுபோல் வரும் ஆண்டு களிலும் தடை விதிக்க வேண்டும்.

அனைத்து தரப்பு ஜாதியின ரிடமும் சுமூகமான நல்லுறவு ஏற்படும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக சேவகர்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் அடங் கிய அமைதிக்குழு உருவாக்கப் படவேண்டும்.

தமிழ் ஓவியா said...

கொல்கத்தாவில் பெரியார் பிறந்த நாள் விழா


பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு மேற்கு வங்கத்திலோ வெறும் 7 சதவீதம் தான்!

பெரியார் கொள்கையைப் பின்பற்றி போராடி வெற்றி பெற வேண்டும்!

தமிழர் தலைவர் முழக்கம்

கொல்கத்தா, செப்.13- தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் சமூக நீதி கொள்கையை வெற்றி பெறச் செய் வீர் என்றார் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மேற்கு வங்க மாநில தலைநகராம் கொல் கத்தாவில் உள்ள யூனி யன் பாங்க் ஆஃப் இந்தி யாவின் மிகப் பெரிய கிளையான இந்தியா எக்சேஞ்ச் பிளேஸ் கிளை யில் தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. 12.9.2013 மாலை 6 மணிக்கு கிளை யின் உள்ளே அமைந் துள்ள பிற்படுத்தப்பட் டோர் நல சங்கத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத் தார். பின்னர் யூனியன் வங்கி கிளையில் அமைக்கப்பட்ட மேடையில் பெரியார் பிறந்த நாள் விழா துவங்கியது. யூனியன் வங்கி நல சங்கத்தின் மேற்கு வங்க மாநில செயலாளர் பிரகாஷ் மஜீம்தார் அனைவரை யும் வரவேற்றார். ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்ட நல சங்கத்தின் தலைவர் அசோக்குமார் சர்க்கார் தலைமை வகித்தார். யூனியன் வங்கி கிளை யின் உதவி பொது மேலாளர் வி.கே. சீறி வஸ்தவா, யூனியன் வங்கி நல சங்கத்தின் செயல் தலைவர் ரவீந்தரராம் எஸ்.சி. எஸ்.டி. சங்கத்தின் முன்னாள் செயலாளர் பிஸ்வாஸ், ரயில்வே எஸ்.சி.எஸ்.டி. சங்கத்தின் மேற்கு வங்க முன்னாள் செயலாளர் சுக்ரிதி பிஸ்வாஸ் மேற்கு வங்க குழந்தைகள் நல அமைச் சரின் தனி செயலாளர் உதவி மாஜிஸ்டிரேட் அந்தஸ்து பெற்ற சிவ்நாத் மண்டல், அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகி யோர் விழாவில் பங் கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, தந்தை பெரியார் படத் தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தனது உரையில் இன்றைக்கு காலையில் கொல்கத்தாவிற்கு வந்த டைந்தது முதல் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள் - பயணம் என இருந்தாலும் அத னால் எந்த சோர்வும் ஏற்படவில்லை.மாறாக பாட்டரிக்கு சார்ஜ் செய்வது போன்று எனது உணர்வுக்கு மேலும் ஊக்கம் அளிக்கக் கூடிய வகையிலே உள்ளன. பெரியாரின் பிறந்த நாளை வங்கி வளாகத் தில் நடத்தி, அதிலே நானும் கலந்து கொண்டு கருத்துக்களை கூறுவ திலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெரி யாரின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி; ஆனால் இன்றைக்கு முன் கூட் டியே கொண்டாடுகி றோமே என சிலர் கருத லாம். ஆனால் பெரியார் காலத்தை வென்றவர்! செப்டம்பர் 17 என்பது ஒரு குறியீடு. அந்த நாளில் அவரது சிந் தனைகளை எண்ணிட, செயல்படுத்திட நினைவு படுத்திக் கொள்ளும் நாள் ஆண்டுதோறும் நாம் நினைத்துக் கொள் வதிலே நமக்குத்தான் மகிழ்ச்சி. இந்த விழா விலே எனக்கு மிகுந்த மரியாதையினை அளித் தீர்கள். சிறப்பான செய் திகளைச் சொன்னீர்கள். என்னைப் பொறுத்த வரை, நான் பெரியாரின் எளிமையான தொண் டன். அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல. ஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான்; அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவரது சிந்தனைகளை, கருத்துக்களை, நாடெங் கும் பரப்பிட நாம் பணியாற்றுகிறோம். எங்களது பெரியார் இயக்கம் திராவிடர் கழகம் பணியாற்று கிறது. அந்த இயக்கத் திற்கு இப்போது தலை வர் என்கிற முறையில் நான் செயலாற்றி வரு கிறேன்.

தமிழ் ஓவியா said...

இதே கொல்கத்தாவில் 1944இல்....

இதே கொல்கத்தா வில் 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற மிகப் பெரிய விழாவில் தந்தை பெரியார் உரை நிகழ்த்தி உள்ளார். அந்த விழா வில் நாத்திக இயக்கத் தின் நிறுவனரான எம்.என்.ராய், தந்தை பெரியாரை வணங்கி மகிழ்ந்தார் - நீங்கள் தான் எனது குரு என கூறினார்.

பெரியார் மிகப் பணி வுடன் கூறினார். தான் ஒரு போராட்டக் காரன் எனக் கூறினார். பெரி யார் தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் போராடினார். அவரது நோக்கம் மிக அற்புத மானது! தோழர்களே, பெரி யாரின் நூல்களை எங் களது இணையதளத் திலே வெளியிட்டு வருகிறோம். அதனைப் படியுங்கள். நாங்கள் நடத்திவரும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் மாத இதழுக்கு சந்தா செலுத்தினால் உங்களைத் தேடி வரும். அதிலே பல கருத்துக்களை நாங்கள் பதிவு செய்கிறோம். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முறை சென்னையில் நடை பெற்ற விழாவில் சமூகநீதி காவலர் வி.பி.சிங் கலந்து கொண்டு பேசு கையில் கூட்டத்தினரைப் பார்த்து சுயமரியாதை என்ன என கேட்டு விட்டு; உங்கள்மீது ஒருவர் காறி உமிழ்ந்தால் பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். கூட்டத்திலிருந்த எங்களது இயக்க இளைஞர் வி.பி. சிங்கைப் பார்த்து காறி உமிழ்ந்தவரின் கன்னத்தில் அறைவேன் என பதில் சொன்னார். உடனே வி.பி.சிங் சொன்னார் இதுதான் சுயமரியாதை என்றார். மற்றவர் நம்மை இழிவுபடுத்துவதை நாம் தாங்கிக் கொள்ள முடியாது. ஆகவேதான் சுயமரியாதை இயக்கம் இழிவை துடைத்திடபோராடியது.
ஒடுக்கப்பட்ட மக்கள், தீண்டத் தகாதவர்கள் பார்க்கக் கூடாதவர்கள் என்ற இழிவிலே வாழ்ந்த மக்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவர் பெரியார். நமது நாட்டிலே நிறைய மகாத்மாக்கள், அவதாரங்கள், குருக்கள் வந்தார்கள். சென்றார்கள். ஆனால் நமது இழிவு அப்படியே தான் இருந்தது. அதனைத் தடுத்திட, துடைத்திட அவர்கள் யாரும் முன் வரவில்லை. பெரியார் இந்த நிலை கண்டு கவலை கொண்டார். இழி வைத் துடைத்திட இயக்கம் கண் டார். இழிவுக்குக் காரணமாக விளங்கும் அத்துணை நிலைகளை யும் எதிர்த்தார்.

தமிழ் ஓவியா said...

மனு ஸ்மிருதி, கீதை, ராமாயணம் என அத்தனையும் எதிர்த்துப் போராடினார். யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்த வகையிலேதான் நமது நாட்டில் தோன்றிய புரட்சியாளர் களில் பெரியாரும், அம்பேத்காரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்கினார்கள். அவர்களது சிந்தனை ஒரே மாதிரியாக இருந்தது. பெரியார் கருத்தை எடுத்து அதற்குக் கீழே அம்பேத்கர் என்று போட் டாலும், அதேபோல் அம்பேத்கர் கருத்தைக் கூறி கீழே பெரியார் என்று போட்டாலும் எந்த வேறுபாடும் இருக்காது. ஒரே ஒரு வேறுபாடுதான் அது என்னவென்றால், பெரியார் அரசியலில் பதவிக்கு செல்லவில்லை அம்பேத்கர் அரசியலில் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் பெரி யார் பதவி பக்கம் செல்லவில்லையே தவிர, அரசியலில் யார் பதவிக்கு வர வேண்டும், வர கூடாது என முடி வெடுத்து மக்கள் நிலைப்பாட்டை உருவாக்கக் கூடிய பணியைச் செய் தார். சிலர் பெரியாரை சீர்திருத்தவாதி என்றார்கள். ஆனால் பெரியார் அதை மறுத்தார். நான் சீர்திருத்தவாதியல்ல புரட்சிக்காரன் என்றார் காரணம் சொன்னால் சீர்திருத்தம் என்றால் இருக்கும் நிலையில் சில மாற்றங் களைச் செய்வது. ஆனால் பெரியார் செய்தது இருக்கும் நிலை அடியோடு மாற்றி புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். மிகப் பழைய வற்றில் எந்த மாற்றம் செய்தாலும் சரி வராது என்கிற நிலையில் அதனை இடித்துத் தள்ளி புதிய வீட்டினைக் கட்டுவது போல, பெரியார் சமுதாயத் தில் உள்ள பேதம் நீங்கிட தடையாக வுள்ள அத்தனையையும் முற்றிலு மாகத் தகர்த்து புதிய சிந்தனைகளை உருவாக்குவதாகும். இதுதான் பெரி யாரின் அணுகுமுறை! ஒப்பிட முடி யாத அளவுக்கு அவரது சிந்தனைகள் இருக்கின்றன. தோழர்களே, தமிழ்நாட்டிலே 1928 முதல் இருந்து வந்த வகுப்புவாரி உரிமை, அனைத்து மக்களுக்கும் இடஒதுக்கீடு 1950 வரை இருந்தது. பின்னர் அரசியல் சட்டத்தின் பிரி வைக் காட்டி, நீதிமன்றத்தாலே தடை செய்யப்பட்ட போது, பெரியார் கொதித்தெழுந்தார். அனைத்து மக்களையும் திரட்டினார். முதல் திருத்தம் பெரியாரால்!

காரணம், அன்றைய இடஒதுக்கீடு காரணமாக நமது மக்களுக்கு கல்வியில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இருந்தது. அது தடை செய்யப்பட்டது. பெரியார் நடத்திய போராட்டத்தின் காரணமாக 1951-இல் முதல் அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. பிரிவு 15(4) சேர்க்கப் பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு தொடர்ந்திட வகை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு!

இன்றைய தினம் தமிழ்நாட்டிலே 69 விழுக்காடு இடஒதுக்கீடு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சட்ட ரீதியாக உள்ளது என்றால் அதற்குக் காரணம்

தமிழ் ஓவியா said...

பெரியாரும், அவரது இயக்கமும்தான். அரசுகள் மாறலாம். ஆனால் தமிழ் நாட்டிலே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவினை மாற்றிட எந்த அரசும் முயலாது - முடியாது.
இங்கே நண்பர் கபாஷ் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். நானும் மறைந்த சமூகநீதி போராளி சந்திரஜித் யாதவும் கொல்கத்தாவிலே கபாஷுடன் சேர்ந்து, மேற்கு வங்க மாநிலத்திலே இடஒதுக்கீடு வேண்டும் எனப் போராடி உள்ளோம். அன்றைய ஆளுநர் ரகுராம் ரெட்டி அவர்களைச் சந்தித்து கோரிக்கை அளித்தோம். ஆனால் மேற்கு வங்க அரசு பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு 7 விழுக் காடுதான் இடஒதுக்கீடு அளித் துள்ளது. மத்தியிலே மண்டல் குழு அறிக்கை காரணமாக 27 விழுக்காடு உள்ளது. அந்த விழுக்காடுகூட சரியல்ல. உரிய சதவீதத்தைப் பெற பெரியார் கொள்கை வழியில் போராட வேண்டும்! (முஸ்லீம் களுக்கு 10 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கு 7 விழுக்காடு)

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 52 விழுக்காடு தான் மண்டல் பரிந்துரை செய்தார். ஆனால், அன்றைய நேரத் திலே வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிலே 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என தீர்ப்பளித்த நிலையில், ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங் குடி மக்களுக்கு இருந்த 22.5ரூ இடஒதுக்கீட்டில் 50 விழுக்காட் டினை கழித்து மீதம் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், அரசியல் சட்டத்திலே எங்கேயும் இடஒதுக்கீடு உச்ச அளவு குறிப் பிடப்படவில்லை. இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பிலே 50 விழுக் காட்டை உறுதி செய்ததால் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மண் டல் குழுவின் பரிந்துரைகள் அனைத் தும் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். நாம் நமது உரிமைகளைத் தான் கேட் கிறோம். நாம் கேட்பது சம உரிமை; நாம் கேட்பது பிச்சை அல்ல; பெரியாரின் போராட்டத்தால் முதல் அரசியல் சட்டம் திருத்தப் பட்டு 15(4) என்ற பிரிவு உருவாக் கப்பட்டு, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிட வகை செய்யப்பட்டது. ஆனால், 2013ஆம் ஆண்டிலும் நாம் அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படவில்லை எனப் போராடுகிறோம். ஆனால் தொடர்ந்து போராட வேண்டும். பெரியார் இயக்கம் எங்கள் திராவி டர் கழகம் தொடர்ந்து போராடிய தால்தான் தமிழ் நாட்டிலே 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது விரிவுப் படுத்தப்பட வேண்டும். 50 விழுக் காட்டிற்குமேல் இடஒதுக்கீடு கூடாது என்பதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதற்குப் பெரியாரின் போராட்டங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. பெரியார் தனி மனிதரல்ல. தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த பேரறிஞர் அண்ணா, பெரியாரைப்பற்றி சொன்னார்கள்: ஒரு நூற்றாண்டைக் குப்பியில் அடைப்பது போன்ற பணி அவரது பணி. 69 விழுக்காடு தமிழகத்திலே உள்ள நிலையில் அதனை எதிர்த்து சில சக்திகள் தடை பெற்ற போது, எங்களது இயக்கம் போராட்டம் நடத்தியது. 31சி சட்ட பிரிவின்படி அரசுக்கு ஒரு மாதிரி மசோதாவை நாங்கள் அனுப்பி, அதனை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிக் காட்டினோம். அன்றைய தினம் முதல்வராக இருந்தவர் பார்ப்பன அம்மையார் ஜெயலலிதா, நாடாளு மன்றத்தில் அது சட்டம் நிறை வேற்றப்பட்டபோது அன்றைய பிரதமராக இருந்தவர் பி.வி. நரசிம்ம ராவ். சட்டத்திற்குக் கையொப்ப மிட்டவர் அன்றைய குடியரசு தலைவர் பார்ப்பனர் சங்கர்தயாள் சர்மா. ஆகவே பெரியார் இயக்கம் இந்த சாதனைகள் செய்துள்ளது. பெரியாரின் போராட்டம் ரத்தம் சிந்தாத போராட்டம். மக்களின் மனதோடு அவர் போராட்டம் நடத்தினார். அவரது அணுகுமுறை மக்களின் மனத்திலே மாற்றம் தந்தது.

ஆகவே பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது மிகுந்த உற்சாகமாக உள்ளது. ரிசர்வ் வங்கி, யூனியன் வங்கி என வங்கிகளிலே சிறப்பான அதி காரிகள் கலந்து கொண்டு பெரியாரின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது மிகச் சிறப்பானது.

பெரியாருக்காக அல்ல - நமக்காக பெரியாரின் சிந்தனைகள் நமக்கு மருந்து உட் கொள்வதுபோல; மருந்தினை நாம் சாப்பிடுவது மருந்து கம்பெனிக்காகவோ அல்லது அதனை நடத்தும் வியாபாரி. பலன் பெற வேண்டும் என்பதற்கோ அல்ல. நமக்கு ஏற்படுகிற பிணியின் தன்மை - நோயின் தன்மை குறித்து நமது நலனுக்காக நாம் சாப்பிடுகிறோம். ஆகவே பெரியாரின் கருத்துகளை நாம் செயல்படுத்துவது பெரியாருக் காக அல்ல. நமக்காக, நமது முன் னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்காகவும் பெரியாரின் சிந்தனையே எல்லார்க் கும் எல்லாமும் என்பதே. அதுவே சமத்துவம் ஆகும்.

தமிழ் ஓவியா said...


அதனால்தான் யுனெஸ்கோ நிறு வனம் அவரைப் பாராட்டி தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என அறிவித்தது அன்றைய சாக்ரடீஸ் போராடினார். இறுதியாக விஷம் அருந்தி மாண்டார்.

ஆனால் தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸான பெரியார் தனது கருத்துக்கள் வெற்றி பெறுவதை தனது வாழ்நாளிலேயே கண்டார். பெரியாரின் போராட்டத்தால் அரசி யல் சட்டம் முதல் திருத்தம் நிகழ்ந் தது. அவரது இயக்கத் தொண்டர் களால் 77ஆவது திருத்தம் ஏற்பட்டு 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு பெற்றது.
ஆகவே பெரியாரின் சிந்தனை களை கருத்துக்களை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!
உங்களது முயற்சி வெற்றி பெறும், சிறப்பான விழாவை நிகழ்த்திட காரணமாக இருந்த தோழர் பிரகாஷ் மஜீம்தார் மற்றும் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பெரியார் வாழ்க என கூறி நிறைவு செய்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...


பொறுத்திருந்து பார்ப்போம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பிஜேபி சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர் ஜாதி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்பொழுதே மோடி வெற்றி பெற்று பிரதமராகவே ஆகி விட்டதுபோல குதிகால் தரையில் படாமல்கூடக் குதிக்கிறார்கள்.

கோட்டைக்குள் இப்பொழுது குத்து வெட்டுக் கிளம்பி விட்டது. மூத்த தலைவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் முற்றி வெடித்து வருகின்றன.

பி.ஜே.பி. பிரச்சாரக் குழுத் தலைவராக, பிஜேபி கோவா செயற்குழுவில் மோடி அறிவிக்கப்பட்ட போதே, பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அத்வானி தம் எதிர்ப்பை, அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பின், அத்வானியின் கையில் - காலில் விழுந்து ஏதோ சமாதானம் படுத்தினார்கள்.
உள் காயத்துக்கு மேலே களிம்பு பூசி மெழுகினர் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குமுன், நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கட்டளை.

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கலாம் என்பது, அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி போன்றவர்களின் நிலைப்பாடு.

வயதான காலத்திலும்கூட அத்வானிக்குப் பதவி ஆசை போகவில்லை என்று மோடியின் ஆட்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியெல்லாம் திட்டமிடு வதில் தான் மோடி (மஸ்தான்) கில்லாடி ஆயிற்றே!

பிஜேபியைப் பொறுத்தவரை, வாஜ்பேயியாக இருந்தாலும் சரி அத்வானியாக இருந்தாலும் சரி, முரளி மனோகர் ஜோஸியாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உத்தம புத்திரர் என்று அவர்கள் வட்டாரத்தால் புகழப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி லக்னோ பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை ஒரே ஒரு முறை நினைத்துப் பார்க்கட்டும்.

நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முள்ளின்மீதும் கூரிய கற்களின் மீதும் அமர்ந்தா கரசேவை செய்ய முடியும்? எல்லா வற்றையும் சமன் செய்து அதன் மேல் அமர்ந்துதான் கரசேவை செய்ய முடியும் என்று வாஜ்பேய் சொல்ல வில்லையா? அவர் ஒரு கவிஞர் என்று கூறப்படுவ தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சமன் செய்து அதன் மேல் கரசேவை நடைபெறும் என்று மறைமுகமாக கூறினார் என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியாதா?

நரேந்திரமோடி அளவுக்குப் பச்சையாக சிறுபான் மையினரைக் கொன்று குவிக்கும் அளவுக்கு அவர் களின் அணுகுமுறை மதம் கொண்ட யானைபோல் திமிர் முறித்து எழாது என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

கோத்ரா அளவுக்கு நிலைமையைக் கொண்டு செல்லத் தயங்குவார்கள் என்று வேண்டுமானால் கருதலாம்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அரசியல் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப கொண்டு செலுத்த வேண்டும் என்கிற அணுகுமுறை அவர்களிடம் இருக்கும்.

ஆனால் மோடியோ நேரடியாகவே களத்தில் இறங்கி துப்பாக்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்குச் செல்லும் வெறித்தனம் தூக்கலான மனப்பான்மை கொண்டவர்.

இந்தியா முழுமைக்கும் மோடியின் பிம்பம் விகாரப்பட்டுப் போயிருக்கிறது. அவரை பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்தால் அது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் அனுபவத் தன்மையோடு அத்வானி கூறக் கூடும். ஆனாலும் ஆர்.எஸ்.எஸின் முடிவு தானே இறுதி முடிவு! ஆர்.எஸ்.எஸ். யாரைத் தேர்வு செய்யும்? நரேந்திர மோடி போன்றவர்களைத் தான் தேர்வு செய்யும் என்பது எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றே!

நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எதிர் விளைவை உண்டாக்கும்; ஒருவகையில் மதவாத சக்தி மத்தியில் ஆட்சியில் வராமல் இருக்க ஒரு வகையில் நல்லது தானே என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. நடக்கட்டும்; பிஜேபிக்குள் இன்னும் என்னென்ன உட்குத்துகளோ!

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சித்திரவதைக்கு...



நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


பொதுவாக்கெடுப்பே ஈழத்தமிழர்க்கு புதுவாழ்வு தரும்!: கலைஞர் கடிதம்



உடன்பிறப்பே,

போருக்குப் பின்னர் உருவாகி வரும் நிலைமையை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்ததையொட்டியும், இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்திடவும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை ஆகஸ்டு 25 அன்று இலங்கை சென்று, ஒருவார காலமாகப் பல பகுதிகளை ஆய்வு செய்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடைய மனக்குறைகளையும், குமுறல் களையும் அனுதாபத்தோடு கேட்டறிந்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், அரசியல் கட்சியினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும், பத்திரிகையாளர் களையும் சந்தித்துப் பேசிவிட்டு ஜெனீவா திரும்பி யிருக்கிறார். போருக்குப் பின்னர் இலங்கைக்கு நேரில் சென்ற அய்.நா. மன்றத்தின் முதல் முதுநிலை அலுவலர் நவநீதம் பிள்ளைதான் என்பது குறிப்பிடத்தக்கது. போர்க் குற்றங்கள் புரிந்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்றும்; நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி நிறை வேற்றிட வேண்டுமென்றும்; சர்வதேச சமுதாயம் இலங்கையை வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. இத்தகைய பின்னணியில் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணமும், அவர் இப்போது 9-9-2013 அன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 24வது கூட்டத்தில் வழங்கிட உள்ள விளக்க உரையும், 2014 மார்ச் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் தர விருக்கும் அறிக்கையும், உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நவநீதம் பிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தி லிருந்து கிளிநொச்சிக்கும் அங்கிருந்து முல்லைத் தீவு மாவட்டம் புதுமாத்தளை, முள்ளிவாய்க்கால், கோப்பாப்பிலா மாதிரிகிராமம், திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கெல்லாம் சென்று போரினால் சீர்குலைந்த அந்தப் பகுதிகளில் என்னென்ன மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன என்பதை ஆய்வு செய்ததோடு; தமிழ் மக்களைச் சந்தித்து அளவளாவி விவரங்களை அறிந்து கொண்டார். முள்ளிவாய்க்கால் சென்றபோது அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள் நவநீதம் பிள்ளையிடம், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும்; தங்க ளுடைய விவசாய நிலங்கள் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும், அவற்றைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டனர். போரினால் தங்கள் குடும்பங்களில் பலரையும் பறிகொடுத்த பெண்கள் நவநீதம் பிள்ளையின் கால்களில் விழுந்து கதறித் துடித்தது கண்டு அவர் கண்ணீர் சிந்தினார். 31-8-2013 என்ற நாள் பலவந்தம் காரணமாகக் காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் (ஐவேநசயேவடியேட னுயல டிக குடிசஉநன னுளையயீயீநயசயஉநள) ஆகும். அன்றைய தினம் நவநீதம் பிள்ளை கொழும்பு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது; இலங்கையில் உள்ள நிலைமை எனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும், இப்போதும் மக்கள் மனித உரிமைப் பிரச்சினை களுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மேலும், இலங்கை அரசின் விசாரணைக்குழு காணாமல் போனவர்கள் பற்றி அளித்துள்ள அறிக்கை ஏமாற்றம் தருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு அமைப்புகளால் மனித உரிமை ஆர் வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகமாகி இருக்கிறது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் மிகுந்து காணப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. என்னுடைய பயணத்தின்போது என்னுடன் கலந்துரையாடிய மனித உரிமை ஆர் வலர்கள், இலங்கைப் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இலங்கை மோசமான நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கை யில் மக்கள் கண்காணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படு வதும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தை விமர்சிப் பவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப் பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதுடன், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளும் செய்யவேண்டும் என்று நவநீதம் பிள்ளை விளக்கியிருப்பது, இலங்கை நிலை குறித்துச் சர்வதேச சமுதாயத்தின் கவலையை மேலும் பெருக்கியிருக்கிறது.


தமிழ் ஓவியா said...

ஐ யஎந சநஉநஎநன சநயீடிசவள வாயவ யீநடியீடந ஐ அநவ னரசபே அல எளைவை றநசந டயவநச ளூரநளவடிநேன. ஐ ளவசடிபேடல டிதெநஉவ வடி வாளை ளரசஎநடைடயஉந யனே யசயளளஅநவே. ளுசடையமேய ளை ளாடிறபே ளபைளே டிக நயனபே ய உசநயளபேடல யரவாடிசவையசயை னசைநஉவடி. கூந றயச அயல யஎந நனேநன, ரெவ வாந அநயவேஅந னநஅடிஉசயஉல யள நெந ரனேநசஅநேன யனே வாந சரடந டிக டயற நசடினநன. குசநநனடிஅ டிக நஒயீசநளளடி ளை ரனேநச ய ளரளவயநேன யளளயரடவ. ஐ யஎந உயடடநன கடிச வாந சபைவ வடி கேடிசஅயவடி யஉவ வடி நெ யனடியீவநன, டமைந அயலே டிக வைள நேபைடிரசள ளுஹஹசுஊ. என்று நவநீதம்பிள்ளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
முல்லைத் தீவில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நான் செல்வதற்கு முன்பும் பின்பும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் சென்றதாக எனக்குத் தகவல் வந்தது என்றும் நவநீதம் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நவநீதம் பிள்ளையின் அறிக்கை எங்களுடைய எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் அடுத்த அறிக்கை, இதற்கு முந்தைய அறிக்கைகளைப் போல மென் மையாக இருக்காது என்றும் நிச்சயமாக நம்புகிறோம் என்று இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் இந்தியா டுடேயிடம் கூறியிருக் கிறார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசு நீக்கிட வேண்டும்; போரில் காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை சொல்லியிருப்பது இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று இலங்கைத் தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் தெரிவித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...

முள்ளி வாய்க் காலில் தமிழ் மக்கள் கலங்கிக் கண்ணீர் வடித்த போது, நான் தூர தேசத்திலிருந்து உங்களுடைய பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே வந்துள்ளேன். காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைகளை நான் முன்னரே அறிவேன். அதைப்போல இங்குள்ள மற்ற பிரச்சினை களையும் ஆராய்ந்து தீர்வைத் தேடித் தரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களுடைய பிரச்சினை களுக்காக, எனக்குள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தித் தீர்வைத் தேடித் தருவேன் என்று நவநீதம் பிள்ளை உறுதி அளித்துள்ளார். எனினும், 1) தமிழ் மக்களுக்கு நிம்மதியான மறுவாழ்வை உருவாக்கித் தரவேண்டும் என்ற கடமையை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. 2) பதிமூன்றாவது சட்டத் திருத்தத்தின்படி நடந்துகொள்ள மறுத்து வருகிறது. 3) தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளவில்லை. 4) தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற் றத்தை ஊக்குவித்து வருகிறது. 5) ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் குறித்த பிரச்சினையில் மாற்றம் இல்லை. 6) தமிழ் மொழிக்கான சமஉரிமை அரசியல் சட்டரீதியாக அங்கீகாரம் செய்யப்பட வில்லை. 7) காணாமல் போனவர்கள் பற்றிய முழுமை யான பட்டியலைத் தயாரித்து நேர்மையான விவரங்களைத் தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்ல எந்த முயற்சியும் இல்லை. 8) யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் சிங்கள ராணுவக் குடியிருப்புகள் அமைக் கப்பட்டு வருவதால் இன்னும் அய்ந்தாண்டு களில் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்கள் வாழ்வதற்குக்கூட இடமில்லாமல் போகலாம். 9) மதவழிச் சிறுபான்மையோரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் அழிக் கப்பட்டும் வருகின்றன. 10) தமிழ் அரசியல் கைதிகளின் நிலை என்ன என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்பட வில்லை.

தமிழ் ஓவியா said...

11) வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் 21 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பு, அடிப்படை ஜனநாயக வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை. 12) தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தரமாகத் தீர்வு காண எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை; - என்பன போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் முடிவின்றித் தீவிரமடைந்து வருகின்றன.

அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுனர் குழு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து 2011 ஏப்ரல் மாதத்தில் அளித்த அறிக்கை யின்படியோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியோ; அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியோ, இலங்கை அரசு நடந்து கொள்ளவும் இல்லை; தீர்மானங்களில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றுவது பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை. மனித உரிமைகளுக்கான பல்வேறு அமைப்புகள் உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து, தீர விசாரித்து வெளியிட்ட அறிக்கைகள் எதையும் இலங்கை அரசு சிறிதும் காதில் போட்டுக் கொள் ளாமல் அலட்சியப்படுத்தி விட்டது.
இலங்கை அரசே அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் காணும் குழு (எல்.எல்.ஆர்.சி.) வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றிட இலங்கை அரசு எந்தவித முயற்சியும் எடுக்க வில்லை.

இந்த நிலையில், நவநீதம் பிள்ளை இலங்கை சென்று, நேரடியாகக் கண்டும் கேட்டும், ஆய்ந்தறிந்தும் தெரிவிக்கும் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளும் முடிவுகள் அடிப்படையில் தயாரித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் அவர் அளித்திடும் அறிக்கை, ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடையப் பிரச்சினையை அடுத்த ஆக்கப்பூர்வமான கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்திருக்கிறது. இலங்கை அரசாலும், இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் களை போர்க் குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்து குறிப்பிட்ட காலவரை யறைக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும்; என்று நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதற்கு நவநீதம் பிள்ளையின் அறிக்கை எந்த அளவுக்குத் துணை புரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். எனினும் இலங்கையிலே உள்ள தமிழர்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை முடிவு செய்திடும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது ஒன்றே, புதுவாழ்வு புலர்ந்திடச் செய்யும்! இத்தகைய நிரந்தரத் தீர்வுக்கு, நவநீதம் பிள்ளை நேரடி ஆய்வின் அடிப்படையில் தரவிருக்கும் அவரது அறிக்கைக்குப் பிறகு, அய்.நா. மன்றம் தாராளமாக முன்
வருமென்று உலகத் தமிழர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்!

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 13.9.2013)

தமிழ் ஓவியா said...

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்த திராவிடர் கழகம் 42 மாநாடுகள்; 16 போராட்டங்களை நடத்தியுள்ளது


எங்கள் இணைய தளத்தின்மூலம் பெரியார் கருத்துகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் - போராடவேண்டும்!

பங்களாதேஷ் எல்லை - ரயில்வே பிற்படுத்தப்பட்ட சங்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் கிழக்கு மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

காஞ்சரபாரா, செப்.13- ரயில்வேயில் பணியாற்றும் நீங்கள் எங்கள் இணைய தளம்மூலம் தந்தை பெரியார் கொள்கைகளைத் தெரிந்துகொண்டு உங்கள் உரிமை களுக்காகப் போராடவேண்டும் - மற்றவர்களுக்கும் உதவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

ரயில்வே பிற்படுத்தப்பட்டோர்

நல சங்க மாநாடு

ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் கிழக்கு மண்டல மாநாடு, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள காஞ்சரபாராவில் (பங்களா தேஸ் எல்லை அருகில்) 12.9.2013 காலை 10 மணிக்கு துவங்கியது. கிழக்கு மண்டல சங்கத்தின் தலைவர் ஆர்.கே.ராய் தலைமை வகித்தார். ரயில்வே பிற்படுத்தப்பட்ட நல சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ராமசந்திர ராவ் துவக்கவுரை ஆற்றினார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஜே.சுந்தர ராமையா, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி கிழக்கு மண்டல சங்கத் தின் செயலாளர், ஷியாமன் காந்திதர், ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்ட நல சங்கத்தின் தலைவர் அசோக் சர்க்கார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

ரிசர்வ் வங்கியின் பிற்படுத்தப்பட்ட நல சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக்குமார் சர்க்கார், தமிழர் தலைவர், கோ.கருணாநிதி (கொல்கத்தா, 12.9.2013).

கிழக்கு மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப் புரை நிகழ்த்தினார். விழா முகப்பில் தமிழர் தலைவரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேடையில் இருபுறமும் தந்தை பெரியார், ஜோதிராவ் பூலே படங்கள் மலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை
மாநாட்டில் தமிழர்தலைவர் சிறப்புரையில் ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் கிழக்கு மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங் கள், உங்கள் பகுதிக்கு மட்டும் உள்ளவை அல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கோரிக்கைகளாகும். மண்டல் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். மண்டல் அவர்கள் அறிக்கையினை வெளியிடுவதற்கு முன்னர் சென்னையில் பெரியார் திடலில் நிகழ்ந்த மாநாட்டிற்கு வருகை தந்து பேசினார். அப்போது அவர் சொன்னார். இந்த அறிக்கையை நான் வெளியிட உள் ளேன். ஆனால் அதனை அமுல்படுத்துவது பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்களின் கையில் தான் உள்ளது. ஏற்கனவே நேரு பிரதமராக இருந்தபோது அமைக் கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை காகா காலேல்கர் தலைமையில் அரசிடம் தரப் பட்டது. ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமலே முடக்கப்பட்டது. அந்த நிலைமை எங்களது இந்த அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றார். மண்டல் குழு அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் சார்பில் நாடெங்கும் 42 மாநாடுகள் நடத்தினோம். 16 போராட்டங் களை நடத்தினோம். புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்களது தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் கிழக்கு மண்டல மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள். மாநாட்டில் தந்தை பெரியார் படம் (கொல்கத்தா, 12.9.2013).

தமிழ் ஓவியா said...


மேற்கு வங்கத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் சார்பிலும் தோழர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போரட்டத்தின் காரணமாகத்தான் மண்டல் அறிக்கை மீதான விவாதமே நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தது என் பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ரயில்வே நிர்வாகத்தில் முதல் நிலை, இரண்டாம் நிலை பதவிகளில் பிற்படுத் தப்பட்டோர் ஒருவர் கூட இல்லை என்ற புள்ளி விவரம் இங்கே தரப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னர், ரயில்வேயில் இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் நமக்கு நூறு சதவிகிதம் இடஒதுக் கீடு இருந்தது என்றால் உங் களுக்கு வியப்பாக இருக் கும். ஆம் நண்பர்களே, போர் டர் பணிகளில், காவல் பணி களில், காங்கி மேன்களாக நமது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தோழர்கள் நூறு சதவிகிதம் இருந்தனர். அந்தப் பதவி களுக்கு மேல் சாதியினர் போட்டியிடுவதில்லை. நமது தோழர்கள், காங்கி மேன்களாக, ரயில் தண்டவாளத்தில், கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் டிராலியைத் தள்ளிக்கொண்டு செல்வர். அதிலே உயர்சாதியைச் சேர்ந்த அதிகாரி வசதி யாக உட்காந்து, மேற்பார்வையிட செல்வார். நமது தோழ ருக்கு மாதம் ரூ. 7 சம்பளம். இந்த நிலைமையை எதிர்த்து தான் பெரியார் போராடினார். சவுத் இந்தியன் ரயில்வே என்பதை சீரங்கம் அய்யங்கார் ரயில்வே என்று பெரியார் கூறினார். ஏனென்றால் உயர் பதவிகளில் முழு ஆதிக் கத்தை பார்ப்பனர்கள் செலுத்தினார்கள். இப்போது மண் டல் குழு பரிந்துரை நிறைவேற்றப்பட்ட நிலையில் தான் நமது மக்கள் உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர். காலம் விரைவில் வரும். நமது சமுதாய மக்கள் ரயில்வே போர்டில் தலைவராக, உறுப்பினராக நியமிக்கப்படும் காலம் வந்தே தீரும். ஏனென்றால் இன்றைக்கு நமது மக்கள் நன்கு படித் துள்ளார்கள். பிறர் யாருக்கும் தகுதியிலும், திறமையிலும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துள்ளார்கள். ஆனாலும் உயர் பதவிகளில் இடஒதுக்கீடு இல்லாமல் நமது மக்கள் அந்த பதவிக்கு வரமுடியாது. ஆகவே தான் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவை என வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...

கொல்கத்தா ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க அலுவலகத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தந்தை பெரியார் படத்திற்கு தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை செய்தார் (12.9.2013).
சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து இப் போது தான் உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற் படுத்தப்பட்டவர் நீதியரசர் சதாசிவம் தலைமை நீதிபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார் கள். இந்த வாய்ப்பு ரயில்வே துறையிலும் வரவேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டும். ஒற்று மையில்லாமல் நமது உரி மையைப் பெற முடியாது. இங்கே சங்கத்தில் பணி யாற்றுகின்ற தோழர்கள் நன்றி பாராப்பணியைச் செய்கிறார்கள். இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த தலைவர்களின் பணியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் செல்ல வேண்டிய தூரம் மிக நீண்ட பாதையாக உள்ளது. தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் தரப் படவேண்டும். கிரிமிலேயர் முறை அகற்றப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் பொருளாதார ஒதுக்கீடு எனக் கூறப்படவில்லை. ஆகவே நீங்கள் ஒற்றுமையுடன் போராடி இந்த கோரிக்கைகள் நிறைவேற பாடுபட வேண்டும். அதற்கு நானும் பெரியார் இயக்கமாகிய திராவிடர் கழக மும் என்றும் உங்களோடு துணை நிற்போம். இந்த வாய்ப் பினை அளித்த தோழர்களை நன்றி பாராட்டி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

தமிழ் ஓவியா said...

ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்க உறுப்பினர், தான் வரைந்த தமிழர் தலைவரின் ஓவியத்தை, தமிழர் தலைவரிடம் வழங்கினார் (கொல்கத்தா, 12.9.2013).

பெரியாருக்கு ஜிந்தாபாத்! வீரமணிக்கு ஜிந்தாபாத்! முன்னதாக தமிழர் தலைவரை அரங்க வாயிலில் சங்கத்தின் நிர்வாகிகள் வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். சமூக நீதிக்கு பாடுபடும் தமிழர் தலைவர் வீரமணி ஜிந்தாபாத், பெரியார் ஜிந்தாபாத் என தோழர்கள் முழங்கினர்.

ரயில்வே பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுந்தர ராமய்யாவிற்கு, தமிழர் தலைவர் இயக்க நூலினை வழங்கினார் (கொல்கத்தா, 12.9.2013)

தமிழர் தலைவரை ஓவியமாக வரைந்து இரு படங்கள் ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றும் ஓவியரால் விழா அரங்கில் அளிக்கப்பட்டது.

கொல்கொத்தா ரிசர்வ் வங்கியில் பெரியார் பிறந்த நாள் விழா

12.9.2013 மாலை கொல்கத்தாவில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட பணி யாளர் நல சங்க அலுவகத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நல சங்கத்தின் தலைவர் அசோக்குமார் சர்க்கார் மற்றும் நிர்வாகிகள், நல சங்கத்தின் உறுப்பினர்கள் வருகை தந்தனர். அலு வலகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தமிழர் தலைவர் உரை நிகழ்த்தினார். தமது ரையில் ரிசர்வ் வங்கியின் வளாகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அலுவலகத்திற்கு வருகை தந்து உங்களை எல்லாம் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்கள் பலர் இங்கே பணியிலே இருந்து இந்த சங்கத்தில் சேர்ந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் சமூக நீதியைப் பற்றியும் அதற்கு பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை யும், குறிப்பாக தந்தை பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இன்றைக்கு இணை யத்திலே எங்களது இணைய தளம் உள்ளது. அதில் பல செய்திகளை நீங்கள் படித்து, நமக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு தகுந்த முறையில் பதிலடி தர தயாராக வேண்டும். சமூக நீதியை நீங்கள் மட்டும் பெற்றால் போதாது. நமது சமுதாய மக்கள் அனைவரும் பெற வேண்டும். அதற்கு உங்களை நாடிவரும் நமது சமுதாய மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் மட்டும் முன்னேறினால் போதாது. நீங்கள் மற்றவர்களுக்கு படிக்கட்டுகளாக, ஏணிகளாக அமைந்து சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை இத் தருணத்தில் உங்களிடம் பெரியர் பிறந்த நாள் செய்தியாக கூற விரும்புகிறேன். நீங்கள் நன்கு படித்தவர்கள், ஆற்றல் மிக்கவர்கள். நமது சமுதாயத்திற்கும், இந்த சங்கத்திற்கும் உங்களது பணியினை தொடர்ந்து செய்திடுங்கள் என வாழ்த்து கூறி உரையை நிறைவு செய்தார். தமிழர் தலைவருக்கு, சங்கத்தின் சார்பில், பூங்கொத்தும், சால்வையும் அளிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...




விநாயகரை மறந்த இந்து முன்னணி

பாரத் இந்து முன்னணி என்று ஏதோ ஒரு அமைப்பாம். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 21 அடி விநாயகர் சிலையை வைத்து அதன் முன்பு யாகம் நடத்தியுள்ளனர். இலஞ்சம் ஊழலுக்கு எதிராக இந்த யாகமாம்!

யாகமும், பிரார்த்தனையும்கூட ஒரு வகையான லஞ்சம்தானே நான் உனக்கு சுண்டல், கொழுக்கட்டை செய்து வைக்கிறேன் எனக்கு இவற்றை எல்லாம் கொடு என்பதும் கையூட்டுதானே! கடைசியாக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்து மதத்தை இழிவு செய்யும் கி.வீரமணியைக் கைது செய்ய வேண்டுமாம்! ஏன் விநாயகரிடம் இந்த வேண்டுகோளை வைக்கவில்லை யாம்? அவர்களுக்குத் தெரியாதா - அது வெறும் களி மண்ணுதான் என்று.

சண்டித்தனம்!

வழக்கம்போல சண்டித்தனம் செய்து தற்காலிக விளம்பரத்தைத் தேடிக் கொள்வதில் ராமகோபால அய்யருக்கு நிகர் அவரேதான். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் காவல்துறை அனுமதி கொடுத்துள்ள பாதையை புறக்கணித்து ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ள மசூதி தெருவிற்குள் ராம-கோபாலன் தலைமையில் 65 பேர் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே வேலை - இதே விளம்பரம்! 15 நாள் உள்ளே வைத்தால் தெரியும் சேதி!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் சதி



பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.
(விடுதலை, 14.7.1961)

தமிழ் ஓவியா said...


திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?


மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந் தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்னு "வாமனன்" அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்னு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தம ரானார். அதைக் கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என் றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்த மனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலி யின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம்.

- தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?

விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்ணு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்றுகொண்டிருந்தான்?

தினமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால் தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூணுல் சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புளகாங்கிதம் அடைந்திருக் கிறதா?

வாமனன் உருவத்தில் தானம் கேட் டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிக் கேட்டால் மகாபலி மகன் மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

- கி. தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...


தி இந்து தமிழ் பதிலளிக்குமா தமிழில்?


தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள்.தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத் துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.

நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன்.பார்ப்பவனல்ல! ஆங்கில நாளிதழில் பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளி தழ்கள் மொழி பெயர்த்து வெளி யிட்டுள்ளன.

இப்போது ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய் வாங்கி படித்தேன். நல்ல பல கட்டு ரைகள். கவர் ஸ்டோரி,விளையாட்டு, இன்னும்பல..ஆனால்தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. இது தொடர்பான சைக்கிள்பந்தயம் என்ற ஒரு செய் தியை தவிர.. தங்களின் தலையங்கத் தில் தமிழ் மொழியின் சிறப்பிற்கு மேலும் அழகூட்ட நாங்களும் வந் துள்ளோம் என்று எழுதி விட்டு அன்னை தமிழ் மொழிக்கு எப்படி யெல்லாம் சிறப்பை சேர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்த தமிழ்த்தாயின் மூத்த குடிமகன் என்று தமிழர்களால் அடையாளம் காணப் பட்ட அந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செய்தியை விட்டு விட்டீர்களே! அரசியல் கட்சியினர் நடத்தும் அண்ணா பிறந்தநாள் செய்திகள் இடம்பெற வில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலாவது செய்தி வெளியிட்டு சிறப்பை சேர்த்திருக்கலாமே! ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததுதான் தவறு என நினைக்கின்றேன்.

ஆம். சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால்தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக் கணிக்க மாட்டார்கள்.

- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட தி.க.செயலாளர் காரைக்குடி-630002

தமிழ் ஓவியா said...


துவக்கத்தில் தோடி முடிவில் முகாரி!


- ஊசி மிளகாய்

முன்பு திராவிட நாடு ஏட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அக்கால காங்கிரஸ் - பார்ப்பனர் கூட்டு பற்றி எழுதுகையில், துவக்கத்தில் மகிழ்ச்சி இன்பம்; முடிவில் துயரம் - துன்பம் - என்ற கருத்து வரும் வகையில்,
ஆரம்பத்தில் அடானா (ராகம்)

முடிவில் முகாரி (ராகம்) என்று தலைப் பிட்டு எழுதுவார்!

அண்ணாவின் எழுத்துக்களை மேலும் மெருகூட்டி வாசகர்களுக்குத் தந்து வசியப் படுத்துவது அவர் தந்த தலைப்புகளேயாகும்!

சீடர் சிலம்பம் எடுக்கிறார்!

இரு கொடி ஏந்திகள்!

அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!

இது சகஜம் இது சகஜம்

விதைக்காது விளையும் கழனி!

அதிசயம் ஆனால் உண்மை

இப்படி பலப்பல என்றென்றும் நினைவில் நிற்கும் தலைப்புகள் தனி ரகமானவை.

அதுபோல் இன்று ஒரு தலைப்பு இது!

துவக்கத்தில் தோடி, முடிவில் முகாரி

குஜராத் மக்களுக்காகவே சேவை செய்ய 2016 வரை, தம்மைத் தேர்ந்தெடுத்த குஜராத் வாக்காளர்களுக்கே சேவை செய்வேன் என்று பேசி, ஒரு வாரம் கூட ஆகவில்லை; இப்போது, அத்வானிகளின் அங்கலாய்ப்பு களைக் கூட பொருட்படுத்தாமல் திடீரென்று, கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதற்கொப்ப, மோடியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் ஏற்று அதன்படி ஆடும் - ஆட்டி வைக்கப்படும் ராஜ்நாத்சிங் அறிவித்துவிட்டார்!

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வட்டாரத்தில்தான் இதுகுறித்து பெரு மகிழ்ச்சி வரவேற்பு எல்லாம்!

காரணம், மணி சங்கர்(அய்யர்) கூறிய படி, இதனால் காங்கிரஸ் வெற்றி உறுதி யாகி விட்டது என்று பல அரசியல் வட்டாரங் களில் ஒரு குரலில் ஓசை கேட்கிறது!

ஒரு வாரத்திற்குள் என்னே மனமாற்றம் - மோடிக்கு!

குஜராத்திற்குப் பதில் தேச முழுவ தற்குமே சேவை செய்து, பாரதத்தினை முழுக்க ஹிந்துத்தாயாக இராமன், கிருஷ்ணன் தவிர வேறு எந்த கடவுளுக்கும் இடமில்லாத, இந்த அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மத்தையே மீண்டும் நமது ஹிந்துத்துவ சர்க்காரின் அரசியல் சட்டமாகப் பிரகடனப்படுத்து வதற்கு, மோடியை விட்டால் வேறு யார்தான் கிடைப்பர்?

குறி வைத்து சிறுபான்மையினரான இஸ்லாமிய, கிறித்துவர்களை வேட்டை யாடு, விளையாடு என்று புகுந்து அழித்து, ஒரு தடாவை, பொடாவை யெல்லாம் மிஞ்சும் ஹிட்லரிசதர்பார் நடத்தி நாட்டை இந்து நாடாக்க வருகிறார் மோடி!

பராக்! பராக்!!

ஒரு வாரத்திற்குள் இரு முடிவுகள் அல்லது இரு வகை மோடி வித்தைகள்!

அடடா! என்னே ஜால வித்தை!

இதோ சோ ஒருபுறம், குருமூர்த்திகள் மறுபுறம் புடைசூழ, வரவிருக்கிறார்! சோ அய்யர் கதவு தட்ட கோட்டைக்கே கிளம்பி விட்டார்!

இதற்காக, தமிழ்நாட்டில் திருச்சியில் பண மழை கொட்டுகிறது! விளம்பரங்கள் தூள் பறக்கிறது!

இணைய தளப் பிரச்சாரம் என்ற புது வகை மோ(ச)டிப் பிரச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது!
மீடியாக்கள் எல்லாம் நம்மவாள் தானே - பின் என்ன ஜமாயுங்கள் என்று அவாள் மகிழ்ந்து குலாவிட எல்லாம் துவஜாரோ கணம் நடக்கிறது! ஆலோப ஆரோகரன சங்கீதங்கள் எல்லாம் மோடி பற்றியே!

ஆனால் தோடியில் ஆரம்பிக்கிறது! முடிவில் முகாரியில் முடிந்து விடுவது உறுதி என்கின்றனர். மோடி விளைவுபற்றி தேடி ஓடி, நாடி ஆராய்ச்சி செய்த அரசியல் விற்பன் னர்கள்!

பொறுத்திருந்து பார்க்கத்தானே போகி றோம்; பெங்களூரு - கர்நாடகத் தேர்தல் முடிவில் என்ன பதில்? நினைவிருக்கிறதா?

தமிழ் ஓவியா said...


டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்


வரவேற்கத்தக்க முடிவு

டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்

மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி, செப்.16- டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ("எய்ம்ஸ்') காலியாக உள்ள 148 அதி சிறப்பு (சூப்பர் ஸ்பெஷா லிட்டி) பணியிடங்களை தற்போதைய இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி நிரப்பலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத் தியுள்ளது.

இதுபோன்ற சிறப் புப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டு முறை யைப் பின்பற்றத் தேவை யில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எய்ம்ஸ்க்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுரை

இந்தப் பணியிடங் களை நிரப்புவது தொடர் பாக எய்ம்ஸ் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநருக்கு மத்திய சுகாதார அமைச் சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப் பிட்டுள்ளதாவது: மருத்துவ உதவிப் பேரா சிரியர்கள், நர்சிங் விரை வுரையாளர்கள் உள் ளிட்ட 148 பணியிடங் களுக்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படியும், இட ஒதுக்கீடு அடிப் படையிலும் தகுதியான வர்களைத் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். எனி னும், இந்தப் பணியி டங்கள் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பைப் பொறுத்து அமையும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லி எய்ம்ஸ் உள் பட அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப் படும் சிறப்பு மற்றும் அதி சிறப்பு படிப்புகளுக் கான உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்பும் போது, இட ஒதுக்கீட்டுக் கொள் கையைப் பின்பற்றத் தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலை மையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதி சிறப்புப் பணியிடங்களைப் பொறுத்த வரையில் திறமைக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்; இந்த விஷயத் தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கடந்த 1992 ஆண்டைய மண்டல் வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஏற்கெனவே தெளிவு படுத்தியுள்ளது. இதற்கு மாறான நிலையை எடுக்கத் தாங்கள் விரும் பவில்லை என்றும் அல் தமஸ் கபீர் தலைமையி லான அமர்வும் உறுதி படத் தீர்ப்பளித்தது.

மறு ஆய்வு மனு!

இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மத்திய அரசு மனு தாக் கல் செய்தது. அதன் பிறகு, மூன்று நாள்கள் கழித்து இந்த மனுவை அவசரமாக விசார ணைக்கு எடுத்துக் கொள் ளக் கோரி, மற்றொரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல் லாததாக்க வகை செய் யும் அரசியல் சட்டத் திருத்த மசோதவை, மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விரைவில் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு அரசி யல் கட்சிகளும் வலியு றுத்தின. மத்திய அரசும் இத்தகைய மசோதா வைக் கொண்டு வருவ தாக உறுதியளித்தது. ஆனால், மத்திய அரசு இதற்கான நடவடிக் கையை எடுக்கவில்லை.

தற்போதைய நிலை தொடரும்

இட ஒதுக்கீடு தொடர் பான தற்போதைய கொள்கை நிகழ்காலத் துக்கும், வருங்காலத்துக் கும் செல்லுபடியாகும் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், அண்மையில் முடிவ டைந்த மக்களவைக் கூட்டத்தில் தெரிவித் தார். மறு ஆய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளிக்காவிட்டால், அட்டார்னி ஜெனரலுடன் கலந்தாலோசித்து, இட ஒதுக்கீடுக் கொள்கை வருங்காலத்திலும் செல் லத்தக்க வகையிலான அரசாணையை மத்திய அரசு வெளியிடும் என் றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எய்ம்ஸ் மருத்து வர்களின் பதவி உயர்வை எந்தவிதத்திலும் பாதிக் காது என்று, அதை நிர்வகிக்கும் அமைப் பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதவெறி சக்திகளை முறியடிக்கும் ஒரே மாமருந்து தந்தை பெரியார்தான்


வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி விழா எடுப்பீர்! தமிழர் தலைவர் வேண்டுகோள்!

மண் புழுவைவிடக், கேவலமாக மதிக்கப் பட்ட மக்களுக்கு விடுதலை உணர்வைப் பெற்றுத் தந்த, தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை, திருவிழாவாக வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி கொண்டாடுவீர்! மதவாத சக்திகளை முறியடிக்கும் மாமருந்து, தந்தை பெரியார் என்பதை மறவாதீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாளை (17.9.2013) அறிவு ஆசானின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திராவிடர் இனத்தின் திருவிழா!

மண் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்ட அடிமை இனத்திற்கு விடுதலை தேடித் தந்து அவர்கள் மானமும் அறிவும் பெற, தமது 95ஆம் வயதிலும் - தளர்ந்து தள்ளாடிய நிலையிலும், தளரா முயற்சியோடு உழைத்த தகைசால் பெருந்தகைக்குப் பிறந்த நாள் விழா என்பது இனத்தின் மீட்சிக்குரிய தனி விழா - தரணியெங்கும் கொண்டாடப்படுகிறது! உலக நாடுகளில் பற்பலவற்றிலும், பார் போற்றும் பகுத் தறிவுப் பகலவனுக்கு விழா எடுக்கப்படுகிறது. ஆம்; அது நன்றித் திருவிழா! நானிலம் போற்றும் நாயகரின் தொண்டினைத் தொடர சூளுரைத்து சுயமரியாதை உலகு அமைக்க, சோர்விலா உழைப் பைத் தரும் உன்னதத் தொண்டர்களுக்கு, உற்சாக மூட்டும் உயர் தனி விழா!

மதவெறி சக்திகளுக்கு எதிராக...

ஒவ்வொரு ஆண்டும், அவரது வெற்றிகள் பரந்து விரிகின்றன; சிறந்து உயர்கின்றன!

இன்றைய கால கட்டத்தில் இனத்தின் எதிரிகளும், மத வெறி சக்திகளும் கைகோர்த்து களம் வரும் நிலையில், அவர்களின் அதி சக்தி வாய்ந்த கூட்டணியை, முறியடித்து, மனிதநேயம் தழைக்கச் செய்யும் ஒரே மாமருந்து, பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்லர்; தத்துவங்கள்! கொள்கைகள்!! லட்சியங்கள்!!!

அவற்றை அமுல்படுத்தி, முழுப் புரட்சி - ஆயுத மேந்தாத அறிவுப் புரட்சியை, வன்முறைக்கு இடந்தராத வைக்கம் முறை புரட்சியைச் செய்து, வாகை சூடிடுவர் அவர்தம் வாரிசுகள்!

இது உறுதி! உறுதி!! உறுதி!!!

நமது பணிகள் இரண்டே முனைகளில்; ஒன்று பிரச்சாரம், இரண்டு போராட்டம்!!

வீட்டுக்கு வீடு

சாதிக்க முடியாதவை என்று பிறரால் கருதப் பட்டவைகளைச் சாதித்துக் காட்டி, சரித்திரம் படைக்க நாம் என்றென்றும் உழைப்போம்! வெற்றி பெறுவோம்!!

உறுதி பொங்க, உற்சாகம் மிளிர, உவகை வழிய, பணி முடிக்க வாரீர்! வாரீர்!!

மத விழாக்களை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், புத்தாடை வரை வழங்குவீர்!

பல வழிகளில் பெரியார் தத்துவங்களை மய்யப் படுத்தும் விழாக்கள் செப்டம்பர் தாண்டியும் தொடரட்டும்! தொடரட்டும்!!

தோழர்களே, தோழர்களே! பணி முடிப்பீர்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
16.9.2013

தமிழ் ஓவியா said...


பெரியார் 135


இன்று தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள்; இது ஒரு தனி மனிதர் பிறந்த குறிப்பு நாள் அல்ல.

தமிழ் நாட்டின் வரலாற்றை பெ.மு., பெ.பி. (பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின்) என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது அறிஞர் பெரு மக்களின் ஆய்வுக் கருத்தாகும்.

பெரியாருக்கு முன், நாம் நாலாஞ் ஜாதிப் பட்டியலில்; இப்பொழுதும் சாஸ்திரப்படி சட்டப்படி அந்த நிலைதான் என்றாலும் நடப்பில் மிகப் பெரிய மாறுதல்!

சூத்திரச்சி வேலைக்கு வந்து விட்டாளா? என்று பார்ப்பனர்கள் இன்று கேட்க முடியாது - முன்பு வெளிப்படையாகவே கேட்பார்கள்.

பெரியாருக்கு முன் சூத்திரனுக்குக் கல்வி கூடாது - கிடையாது - பெரியாருக்குப் பின் ஆச்சாரியார் அந்த வழியில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது அது கடைத்தேறவில்லை - இன்னும் சொல்லப் போனால் அந்தத் திட்டத்தை கொண்டு வந்த ஆச்சாரியாரின் அரசியல் பொது வாழ்வின் கடை கட்டப்பட்டு விட்டது. பெரியாருக்கு முன், ஜாதி, நம் மக்களை இழிவுபடுத்தியது - இன்றைக்கு ஜாதி இழி வானது என்பது உண்மைதான் என்றாலும் அந்த ஜாதி ஓர் அளவுகோலாக்கப்பட்டு, ஆண் டாண்டு காலம் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்களுக்கு ஏணிப்படி கட்டுகளாக்கப்பட்டது.
பெரியாருக்குப் பின்பு எங்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை- கருணை காட்டுக என்று மனு போடும் ஒரு நிலை பார்ப்பனர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

பெரியாருக்கு முன், பெயர்களுக்குப் பின் ஜாதிவால் போட்டுக் கொள்ளுவது பெருமை! பெரியாருக்குப்பின், பெயருக்குப் பின் ஜாதி வாலைப் போட்டுக் கொள்வது இழிவு - அவமானம் - அநாகரிகம் என்ற மனப்பான்மை.

ஜாதி பட்டத்துக்குப் பதிலாகக் கல்விப் பட்டங்களை போடும் தலைகீழ் மாற்றம்!

பெண் என்றால் பிள்ளைப் பெறும் இயந்திரம், அடுப்பூதும் வெறும் ஜடம் என்ற கணிப்பு. இன்றோ தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை எனும் புரட்சிக் கவிஞரின் வயிர, வரிகளுக்கான அடையாளங்கள் எங்குப் பார்த்தாலும்!

சிந்தனையில் மாற்றம், செயல்பாடுகளில் மாற்றம் - எல்லாம் தலையெழுத்து என்னும் குன்றிப் போன முதுகு எலும்புகள் இன்றைக்கு செங்குத்தாக எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை எழுச்சி மனப்பான்மை.

திருவள்ளுவருக்குக்கூட ஏழு சொற்கள் தேவைப்பட்டன.

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று நான்கே சொற்களில் மனிதன் என்றால் யார்? எத்தகையவனாக இருக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறி விட்டாரே அய்யா!

கடவுளை மற - மனிதனை நினை! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! என்ற வரிகள் குறளைவிட குறுகிய சொற்கள் - ஆனால் விரித்த பொருள் கொண்ட மனிதத் தின் மகத்துவத்தைச் செழுமைப்படுத்தும் - நெறிபடுத்தும் அறிவு மொழிகள்! மதத்தால் மனித சமூகம் வதைப்பட்டது போதும் போதும்! மத மற்ற உலகு ஒன்றைப் படைப்போம் - அங்கே மனிதநேயம் என்ற மூச்சுக் காற்று உலவும் தொண்டறம் என்னும் பயிர் செழித்து வளரும்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற சமத்துவ அடிக்கட்டுமானம் அமையட்டும்! அமையட்டும்! அறிவு வழி காட்டட்டும் - அன்பு அரவணைக் கட்டும் - அய்யா, காண விரும்பிய அந்தச் சுய மரியாதை உலகைப் படைக்க அறிவு ஆதவன் பிறந்த இந்நாளில் உறுதி ஏற்போம்!

தமிழ் ஓவியா said...


திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்


தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றனர்.


சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு!

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்

தந்தை பெரியார் பிறந்த நாளில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, செப்.17- திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளையும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டினையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை உடனே செயல்படுத்த மாநில அரசிற்கு கோரிக்கையினையும் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மலர்வளையம் வைத்து உறுதிமொழி!

தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் புடைசூழ மாலை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தொண்டர்கள், மகளிரணியினர் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

பின்பு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் பேட்டியளித் தார். பேட்டி வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இந்த நாளில், பெரியாருடைய புகழ் பாடுவது மட்டும் நம் முடைய நோக்கமல்ல; பெரியாரால் பயன் பெற்றவர்கள் இந்நாளை நன்றித் திரு நாளாக இதனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஓங்கிய கல்வி அறிவு, சிறந்த பகுத்தறிவாக மாறவேண்டும் என்பதற்காக, மீண்டும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு போன்ற லட்சி யங்கள் இன்னும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையில், பெரியார் பிறந்த நாள், மீண்டும் அக்கொள் கைகளைப் பரப்புவதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாகும்.

முக்கியமான கோரிக்கை!

பெரியாருடைய உழைப்பை, உலக நாடுகள் முழுவதும் பாராட்டிப் பெரு மைப்படுத்துகின்ற இவ்வேளையில், மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு முக்கி யமான கோரிக்கையை, உலகம் முழு வதும் உள்ள பெரியார் தொண்டர்கள் சார் பில் மட்டுமல்ல, பெரியார் பற்றாளர்கள் சார்பாகவும் வெளியிட விரும்புகிறோம்.

பெரியார் பிறந்த நாளில் கிடைத்த பரிசு!

மத்திய அரசைப் பொறுத்தவரையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதே வழித் தடத்தில் நிறைவேற்று கிறோம் என்ற அறிவிப்பு, பெரியார் பிறந்த நாள் விழாவிலே கிடைத்த ஒரு நல்ல பரிசு என்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. ஆயிரம் எதிர்ப் புகள் வந்தாலும், மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண் டும். திருச்சி விமான நிலையத் திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் மத்திய அரசு என்பதை நாங்கள் முழுமையாக இன்றைக்குத் துவக்குகிறோம். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அத்துணை பேருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் - தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலை வர்கள் அனைவருக்கும்.

காரணம், தந்தை பெரியார் அவர்கள் திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். எனவே, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றுவதில் இன்றைய அரசும் பங்குபெறவேண்டும்!

அதுபோலவே, மாநில அரசைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றி, அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு - 206 பேர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து வந்த நிலை யில், இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை காரணமாக, செயல்படுத் தப்படாமல் முடக்கப்பட்டு இருக்கிறது.

வெளியிலேயே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொன்ன இன்றைய தமிழக அரசு, இன்னமும் முழு முயற்சி எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இந்தப் பெரியார் பிறந்த நாளில், பெரியா ருடைய படத்திற்கு மாலை சூட்டினால் மட்டும் போதாது; பெரியாருடைய நெஞ் சில் தைத்த முள்ளினை அகற்றுகின்ற பணியில் தமிழக அரசினுடைய பங்கும் உண்டு. அதனை நாங்களும் செய்திருக் கிறோம் என்ற பெருமையை, இந்த அரசும் சேர்த்துப் பெறவேண்டும். அதன் மூலமாக தீண்டாமை, ஜாதிக் கொடுமை, ஜாதி ஒழிய அவர்கள் உதவியதாக ஆகும்.

எனவே, ஜாதி ஒழிய, தீண்டாமை அறவே அழிக்கப்பட, இந்த நாட்டில் மிகத் தேவையான ஒன்றுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கருவறை தீண்டாமையை ஒழிக்கக்கூடிய சிறப்பான இந்த முயற்சி - அதனை இந்தப் பெரியார் பிறந்த நாளிலே செயல்படுத்தவேண்டும்.

குறிப்பாக, மாநில அரசு அதிலே அதிக கவனம் செலுத்தவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டு சாதகமாக இருக்கின்றன. எல்லாமே தெளிவாக இருக்கிறது. எனவே, இதில் தயக்கம் காட்டக்கூடாது என்பதை வேண்டு கோளாக - பெரியார் பிறந்த நாள் விழா வேண்டுகோளாக மாநில அரசுக்கு வைக்கிறோம். அதுபோல, மத்திய அர சினை சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்திற்காகப் பாராட்டுகின்ற நேரத்திலே, திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் என் கிற கோரிக்கையையும்முன் வைக்கிறோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார்


பெரியார் என்றும் பெரியார்!
பகுத்தறிவு சொன்னதால் பெரியார்!
பெரியார் சுயசிந்தனை சொன்னதால் பெரியார்!
பெரியார் ஒழுக்கம் பண்பு சொன்னதால் பெரியார்!
பெரியார் என்றும் பெரியார்!
ஆண்டுகள் பல உருண்டோடினும்
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!
வெண்தாடி வேந்தருக்கு
நூற்றி முப்பத்து அய்ந்தாவது பிறந்த நாள்
அய்யா, உமது ஆயிரமாவது
பிறந்த நாளையும்
தமிழ் மண் மறவாது
கொண்டாடும்!
உன்னை முன் வைத்தே
அரசுக் கட்டில் அகப்பட்டது வந்தேறிகள் ஆளும் நாட்டில்.
அய்யா, உம்மை அறிந்ததால்
மங்கையர்கள் பாழும் புகையை விட்டு
படித்துயர்ந்தனர்.
உம்மை புரிந்தால் மாளும்
மங்கையர் உயிர் வாழும்.
ஆயினும், ஆயிரம் ஆண்டுகள் ஆயினும்,
பகுத்தறிவுப் பகலவன் நீரே!
பகுத்தறிவு ஒளி விளக்கும் நீரே!

= வசந்தகுமாரி செல்லையா, வழக்குரைஞர்

தமிழ் ஓவியா said...


ஆத்திகமா? நாத்திகமா? சொல்லுங்கய்யா!

ஆத்திகமா நாத்திகமா சொல்லுங்கய்யா - பார்ப்பன
ஆதிக்கத்தைப் பெரியாராலே வெல்லுங்கய்யா!
அப்பன் தொழிலைச் செய்யச் சொன்னது ஆத்திகந்தான் நம்
அனைவரையும் படிக்க வைத்தது நாத்திகந்தான்
அம்மா விதவை என்றொதுக்கிய தாத்திகந்தான் - அவரை
அவைக்குள்வந்து அமரவைத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பெண்கள் படிக்கக் கூடாதென்றது ஆத்திகந்தான் - வீட்டுப்
பெட்டைக்கோழி யாக்கிவைத்தது ஆத்திகந்தான்
பொட்டுக்கட்டித் தாசியாக்கிய தாத்திகந்தான் அதைப்
பொசுக்கிப் பெண்ணியம் மீட்டெடுத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
ஆடுமாடு பலிகொடுத்தது ஆத்திகந்தான் சாமி
ஆடுவதைக் கேலிசெய்வது நாத்திகந்தான்
மனிதனையே பலிகொடுப்பது ஆத்திகந்தான் அவன்
மானம், அறிவை மீட்டுத் தந்தது நாத்திகந்நாதன்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
சாதிகளை வகுத்ததுவும் ஆத்திகந்தான் - மூடச்
சடங்குகளைப் புகுத்தியதும் ஆத்திகந்தான்
சாமியார்கள்; சல்லாபங்கள் ஆத்திகந்தான் - அந்தச்
சாக்கடைகளை அகற்றுவது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பக்திப் போதை ஏற்றுவது ஆத்திகந்தான் மானிடப்
பண்பொழுக்கம் பேணுவது நாத்திகந்தான்
கத்தி எடுத்து ரத்தம்குடிப்ப தாத்திகந்தான் நம்மைக்
கருணையோடு வாழ வைப்பது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
உலகம்தட்டை என்று சொன்னது ஆத்திகந்தான் - கலிலியோ
உருண்டைஎன்று ஆய்ந்துசொன்னது நாத்திகந்தான்
உலகம் அழியப் போகுதென்றது ஆத்திகந்தான் - அது
உண்மை இல்லை என்று சொன்னது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)


- திருவாரூர் பாவலர் க. முனியாண்டி

தமிழ் ஓவியா said...


எனது கருத்து



மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

தமிழ் ஓவியா said...


பெரியார் அம்மானை!


வெண்தாடி வேந்தரென்றும் ஈரோட்டுச் சிங்கமென்றும்
தென்னாட்டில் மாப்புகழ் பெற்றவரார்? அம்மானை!
தென்னாட்டில் அப்புகழ் பெற்றவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே அய்யமில்லை அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

வைக்கத்தில் போர்நடத்தி வாகைசூடி வந்ததனால்
வைக்கம்வீ ரர்எனவே ஆனவரார்? அம்மானை!
வைக்கம்வீ ரர்எனவே வையப் புகழ்பெற்ற
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

சூத்திரன் என்றுன்னைச் சொன்னவனை நீஎதிர்த்தே
ஆத்திரம் கொண்டெழுவாய் என்றவர்யார்? அம்மானை!
ஆத்திரம் கொண்டெழச் சொன்னவர் யாரெனிலோ
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

தன்மானம் காக்கத் தமிழ்நாட்டில் அந்நாளில்
தன்மானப் பேரியக்கம் கண்டவர்யார்? அம்மானை!
தன்மானப் பேரியக்கம் கண்டவர் யாரெனிலோ
தன்மானத் தந்தை பெரியாரே அம்மானை!
தன்மானத் தந்தையைப் பாடேலோர் அம்மானை!

இந்தித் திணிப்பை எதிர்த்துப் படைதிரட்டி
நற்றமிழைக் காத்திட்ட நாயகர்யார்? அம்மானை!
நற்றமிழ் காத்திட்ட நாயகர் யாரெனிலோ
தந்தை பெரியாரே என்பதறி அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

திருமணத்தில் சீர்திருத்தக் கொள்கை மணக்கத்
திருமணமு றைகண்டார் யாராவார்? அம்மானை!
கொள்கைத் திருமணம் கண்டவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே! நாடறியும் அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடச் செய்துநம்
கண்திறக்கச் செய்தவர் யாராவார் அம்மானை!
கண்திறக்கச் செய்தவர் யாரெனிலோ அய்யா
அறிவாசான் நம்பெரியார் என்றறிக அம்மானை!
நம்பெரியார் பேர்சொல்லிப் பாடேலோர் அம்மானை!

இரு பெண்கள் எதிரெதிரே அமர்ந்து காயைத் தூக்கிப் போட்டு ஏந்திப் பிடித்து விளையாடுவது ஒருவகை விளையாட்டு. அப்போது அவர்களில் ஒருவர் வினாத்தொடுத்தும் மற்றவர் விடையளித்தும் பாடுவதற்கு அம்மானை என்று பெயர்.

இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து தளை தட்டாமல் செப்பலோசையுடன் அமையக்கூடியது இப்பாடல்.

சிலப்பதிகாரத்தில்தான் அம்மானை முதன்முதலாக இடம்பெற்றதாக தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் உள்ள நினைவு கல்வெட்டு அருகில், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

* தந்தை பெரியார் பிறந்த நாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட முதல் பிரதியை இருதய நோய் தடுப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.

* உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி - 1 பதிப்பாசிரியர் கி.வீரமணி) நூலை தமிழர் தலைவர் வெளியிட வரியியல் அறிஞர் ச.ராஜரத்தினம் பெற்றுக்கொண்டார்

* பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை எழுதிய எது வகுப்புவாதம்? என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட திராவிட மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை பெற்றுக்கொண்டார்.

* திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ) என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, பெரியார் நூலகர் வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். (61 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்)

* திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ஒற்றைப்பத்தி (தொகுதி 2) நூலை, தமிழர் தலைவர் வெளியிட, மும்பை த.மு.ஆரிய சங்காரன் பெற்றுக்கொண்டார். புலவர் அறநெறியன் எழுதிய பெரியார் புரட்சி மொழிக்குறள் என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் பெற்றுக் கொண்டார். டாக்டர் மு.கன்னியப்பன் அவர்கள் எழுதிய ஒரு நாத்திகனின் பவுத்தனின் அம்பேத்கர் வாதியின் இறுதி எச்சரிக்கை! என்ற நூலை நூலாசிரியர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய 39 புத்தகங்கள் அடங்கிய ரூ. 6135 மதிப்புள்ள பெரியார் ஆண்டிராய்டு செயலி பெரியார் - கையடக்க நூலகம்)த்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, டாக்டர் சரோஜா, நாகரசன்பட்டி யைச் சேர்ந்த பொறியாளர் என்.எல். ஏகாம்பரம், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் அரிமா ஒளிவண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுச் சிங்கம்
- உவமைக் கவிஞர் சுரதா

நூற்றாண்டு பிறப்பதொன்றும் புதுமை இல்லை
நூற்றாண்டில் மிகச்சிறந்தோர் பிறந்தால், அந்த
நூற்றாண்டு பெருமைபெறும், எனவே, சென்ற
நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தோன்றி
நூற்றாண்டைச் சிறப்பித்தார். அதுபோல் சென்ற
நூற்றாண்டில் நம்பெரியார் தோன்றி, இந்த
நூற்றாண்டில் புரட்சிபல செய்து, இந்த
நூற்றாண்டில் மேதையென விளங்குகின்றார்.
நாத்திகச் சிங்கமவர், பெரியார் என்னும்
நான் கெழுத்துத் தலைவரவர். நாட்டிலுள்ள
ஆத்திக வாதிகளின் கொட்டம் தன்னை
அன்றாடம் அடக்கியவர், நம்மை யெல்லாம்
சூத்திரனென் றழைத்தோரை ஓட ஓடத்
துரத்தியவர் தமிழர்க்கு வாழ்வு தந்த
மூர்த்தியவர் தமிழகத்தில் முதல்வ ராகா
முதல்வரவர் நம்பெரியார் அறிவின் உச்சி!
தம்முடைய கருத்துக்கள் பலவற் றுக்கும்
தாமேவோர் களமமைத்துத் தலைமை தாங்கி
தம்முடைய குறிக்கோளுக் காக வேண்டித்
தாமேபோர்க் களஞ்சென்றும் சிறைக்குச் சென்றும்,
தம்முடைய தள்ளாத வயதில் கூடத்
தளராமல் போராடிச் சாகு மட்டும்
தம்வாழ்வைத் தமிழ்நாட்டுக் கர்ப்ப ணித்த
தன்மானப் பகுத்தறிவுச் சிங்க மன்றோ?
சாக்கிரட்டீஸ் இல்லையென்றால் பிளாட்டோ இல்லை;
ஜங்என்பான் இல்லையென்றால் ஃராய்டு இல்லை;
சாக்கியராம் புத்தர்பிரான் இல்லை யென்றால்
சத்யகுண போதனெனும் அசோகன் இல்லை;
நாக்கரசன் நக்கீரன் இல்லை என்றால்,
நம்நாட்டில் ஓர் ஓட்டக் கூத்த னில்லை;
பாக்கியவான் நம் பெரியார் இல்லை என்றால்,
பாவேந்தர் பேரறிஞர் இவர்கள் இல்லை.
தந்தை பெரி யாரைப்போல் நீண்ட நேரம்
தமிழ்நாட்டில் பேசியவர் யாரு மில்லை
எந்தவிதக் கேள்விக்கும் பதில் சொல் லாமல்
இவரெழுந்து சென்றதில்லை. தம்மை யாரும் நிந்திப்பார் என்பதற்கோ, இவற்றைச் சொன்னால்
நெருக்கடிகள் ஏற்படுமே என்ப தற்கோ,
தந்தை பெரி யாரென்றும் அஞ்ச வில்லை.
தம் கருத்தைக் கூறாமல் இருந்த தில்லை.
நினைவாற்றல் சர்ச்சிலுக்கும் சீச ருக்கும்
நிச்சயமாய் அதிகந்தான். தமிழர் நெஞ்சில்
நிலைபெற்ற ஈரோட்டுப் பெரியா ருக்கு
நினைவாற்றல் அதிகந்தான் தமிழர் கட்கு
தனியாற்றல் பலவுண்டு; இவரைப் போன்று
தங்குதடை இல்லாது பேசும் ஆற்றல்
இனியொருவர்க் கமைந்திடுமா? பெரியார் போன்று
எதிர்வாதம் செய்வதற்கு நம்மால் ஆமோ?
பெண்ணுரிமை பெறவேண்டும்; விதவை யான
பெண்ணுக்கு மறுவாழ்விங் களிக்க வேண்டும்
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்
குண்டர்களின் வஞ்சகமும், ஜாதி பேதக்
கொடுமைகளும் மனுநீதி முறையும், இந்த
மண்டலத்தில் ஒழிந்தாக வேண்டும் என்று
வாதித்தார், சாதித்தார், வெற்றி பெற்றார்.
உலகிலுள்ளோர் அனைவர்க்கும் உரியார் சற்றும் ஒடுங்காத புகழ்பெற்ற பெரியார்; வாழ்வில்
பலதுறைக்கும் வழிகாட்டி; உலகத் திற்கோர்.
பகுத்தறிவுப் படகோட்டி; நமக்கோர் ஈட்டி;
மலைநிலத்து வரிவேங்கைப் புலியைக் கொன்ற
மாவீரன்; வைதீக வேட்டைக்காரன்
தலைசிறந்த எழுத்தாளர் பெரும்பேச்சாளர்
தன்மனைவி இறப்புக்கும் அழாத தீரர்.
கூறுமடி யார்கள் வினை தீர்த் தானாமே,
குன்றுருவ வேல்வாங்கி நின்றானாமே,
மாறுபட சூரரைவ தைத்தா னாமே
வடிவேலன்! அன்னவனை பக்தரெல்லாம்
ஆறுமுறை நினைத்திட்டால், புரட்சி செய்த
அய்யாவை நீங்களெலாம் ஒவ்வோர் நாளும்
நூறுமுறை நினையுங்கள்! நினைக்கா விட்டால்
நுரையைப்போல் நாமெல்லாம் கரைந்தே போவோம்
சமுதாயம் திருந்துவதற்கும், நமது நாட்டில்
சாதிமதம் ஒழிவதற்கும் பாடுபட்ட
இமயமலை! ஈரோட்டுப் பெரியார் என்னும்
எரியீட்டி அன்றிருந்தார். இன்றோ இல்லை
நமைவிட்டு நம்பெரியார் மறைந்த போதும்
நாமவரை ஒரு போதும் மறக்கவில்லை
இமயத்தை வடநாட்டான் மறந்திட்டாலும்
ஈரோட்டை நாமென்றும் மறக்க மாட்டோம்.
கடுகுண்டு, மிளகுண்டு, பூண்டு முண்டு,
கத்தரிக்காய் அவரைக்காய் இவையு முண்டு
கடலுண்டு ஆறுண்டு குளங்கள் உண்டு;
கடவுளுண்டா என்றொருவர் கேட்ட போது,
கடவுளில்லை என்று சொன்னார் விவேகா னந்தர்
கடைசிவரை சொன்னாரா? சொல்லவில்லை
கடவுளில்லை கடவுளில்லை இல்லை என்று
கடைசிவரை பெரியார் தான் சொல்லி வந்தார்.
பெரியாழ்வார் ஆத்திகர்; நமது தந்தை
பெரியாரோ நாத்திகர். இரண்டு பேரும்
சரியான சத்துருக்கள்; இரண்டு பேரில்
சமூகத்திற் கார் தேவை? ஆழ்வா ரெல்லாம்
மரியாதைக் குரியவர்தாம்.அவர்கள் பாடல்
மறுமலர்ச்சிக் குதவிடுமா? நமது தந்தை
பெரியாரின் போதனைத்தான் இந்த நாட்டின்
பிரச்சினைகள் தீர்வதற்கு உதவி செய்யும்.

நன்றி: வள்ளுவர் தமிழ்ப்பீடம், 1.9.2013

தமிழ் ஓவியா said...


ஒழுக்கம்பற்றி பெரியார்...

உண்மையான ஒழுக் கம், நாணயம் வேண்டுமா னால் தேவை குறைய வேண் டும். அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவ சியமும் அதிகமாக அதிக மாக நாணயக்கேடும், ஒழுக்கக் கேடும் வளர்ந்து கொண்டுதான் போகும்.

- (விடுதலை, 22.7.1969)

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல், அவனைச் சுற் றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும்.

- (விடுதலை, 30.7.1969)

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

- (குடிஅரசு, 22.12.1929)

உங்கள் மனதை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு, தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மன மறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- (குடிஅரசு, 30.9.1944)

பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லுவதை விடத் தன்னிடத்து அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

- (விடுதலை, 20.11.1958)
//

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

நாசவேலைக்காரன்

அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் புரட்சிக்காரனும், சகல துறையிலும் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் ஜாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை, வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன்; நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு, மத அடிப்படை என்பவைகளைக்கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன். இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

எனது பள்ளிப் படிப்பு

நானும் படிக்கலே. என்னுடைய 10ஆவது வயசிலே நாலாவது வகுப்பு பாஸ் பண்ணினவன். அதுவும் இரண்டு வருஷம் படிச்சி முதல் வருஷம் பெயிலாகி, அடுத்த வருஷம் பாஸ் பண்ணினேன். 1888, 1889லே. எனக்கு ஞாபகமிருக்குது. என் 10ஆவது வயதிலே. அதற்கப்புறம் நானு எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் படிக்கலே. எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லே பெரியவங்க நம்பிக்கையில்லே.

எனக்கு இரண்டாவது நாட்டைப் பற்றிக் கவலை இல்லை. மொழியைப் பற்றிக் கவலை இல்லை. நம்ம நாட்டை எவன் அரசாளுகிறான் என்பதைப் பற்றியும் கவலையில்லை. அதனாலே இஷ்டம் போல என்னாலே பேச முடிஞ்சிது.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் மனம்


விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவர் திடீரென கத்தியுடன் அய்யாவை நோக்கிப் பாய்ந்துள்ளார். சிறிதும் பதற்றமடையாத அய்யா அவர்கள், அந்த நபரின் கையை எட்டிப் பிடித்துள்ளார். அய்யாவின் தொண்டர்கள் அந்த நபரைத் தாக்க ஆயத்தமாகிவிடவே, அய்யா அனைவரையும் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் அந்த நபரை மேடையில் தன் அருகிலேயே அமர வைத்துவிட்டு, தொடர்ந்து உரையாற்றிய அய்யா அவர்கள் கூட்டம் முடிந்ததும், பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுபோய் விடும்படி தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் அந்த நபரைப் போலீசில் ஒப்படைப்பார் என நினைத்தவர்களுக்கு அய்யாவின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்ததாம்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கைத் துணைவிக்காக வாதாடிய பெரியார்


அய்யா அவர்கள் இரவு நீண்ட நேரம் கடையில் இருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அய்யா வரும்வரை விழித்திருந்து உணவு பரிமாறுவார் நாகம்மையார். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் அய்யா வீட்டிற்கு வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாகம்மையார் அருகில் இருந்த தூணில் சாய்ந்தபடியே அயர்ந்து தூங்கிவிட்டார். அய்யா வீட்டிற்கு வந்ததுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த அய்யாவின் அம்மா மருமகளை எழுப்பிச் சாப்பாடு எடுத்து வைக்கும்படிக் கூறியுள்ளார். அரைகுறைத் தூக்கத்தில் பதற்றத்துடன் எழுந்தார் நாகம்மையார். தூக்கக் கலக்கத்திலேயே சாதம் வைத்தார். காய்கறிக் கூட்டு வைப்பதாக நினைத்து அருகில் பசு மாட்டுக்காகக் கலக்கி வைத்திருந்த பருத்திக் கொட்டை புண்ணாக்குக் கலவையை எடுத்து வைத்தார். அருகில் ஒரு பாத்திரத்தில் மாடு குடிப்பதற்காக கழுநீர் வைக்கப்பட்டிருந்தது. அதனை ரசம் என நினைத்து ஒரு டம்ளரில் எடுத்து வைத்துவிட்டுப் படுத்துவிட்டார்.

அய்யாவுக்கு முதலில் இதனைப் பார்த்துத் திகைப்பும் ஆத்திரமும் வந்தாலும், அடித்துப் போட்டாற்போல் நாகம்மையார் தூங்குவதைப் பார்த்ததும் பரிதாபமும் அனுதாபமும் ஏற்பட்டுள்ளது. அய்யா அவர்களின் அம்மாவை அழைத்துக் காட்டியுள்ளார். அய்யாவின் அம்மாவுக்கோ கோபம் வர முறைத்துப் பார்த்துள்ளார். உடனே அய்யா, அவளை முறைத்து என்னம்மா பிரயோசனம்? பகல் முழுக்க எவ்வளவு கடுமையாக வேலை செய்திருந்தால் இந்தப் பெண் இப்படி உடலும் புத்தியும் சுவாதீனமில்லாமல் தூங்குவாள்? ஒரேடியா வேலை வாங்காமல் பகலில் கொஞ்ச நேரம் தூங்க விட்டிருந்தால் இப்படி அடித்துப் போட்டதுபோல் தூங்குவாளா? என நயமாகப் பேசியுள்ளார். அய்யாவின் அம்மா சின்னத்தாயம்மையாருக்கும் உண்மைநிலை புரிந்தது.

பெண்ணடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலேயே பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கழுநீரைச் சாப்பாடாகப் படைத்த மனைவியின்மீது கோபப்படாமல் உடல் உழைப்பின் அயர்வைக் காரண காரியத்துடன் சிந்தித்து, பிற்காலத்தில் பெண் விடுதலை இயக்கப் போராளியாகத் திகழ்ந்து வெற்றிபெற்றவர் நம் அய்யா அவர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழி எப்படி இருக்க வேண்டும்?



மனுஷனுக்கு மொழி வேணும்ன்னா, அந்த மொழியில் இருந்தே உணர்ச்சி கிளம்பணும். அறிவு வளர்ச்சியடையணும். விஞ்ஞானத்துக்கு எல்லாம் தோது இருக்கணும். தமிழிலே என்னா இருக்குது. தமிழைக் காட்டுமிராண்டின்னு சொல்லிட்டாங்கிறான் யாரு? சுத்தக் காட்டு மிராண்டிப்பசங்கதான் (கைத்தட்டல்) அதைச் சொல்றவங்க அறிவாளியில்லே. நான் சொல்றேன். நீங்களும், நானும் சண்டை பிடிச்சிக்கிட்டா, வாடா போடாங்கிறோம். வாத்தாங்கிறோம் (சிரிப்பு) அவுங்கம்மா இவுங்கம்மாங்கிறோம். அவனே, அவன் மகனே இவன் மகனேங்கிறோம். இதெல்லாம் தமிழ்லே இருக்குது. இந்தப் பேச்செல்லாம் ஆங்கிலேத்திலேயே கிடையாதே. (சிரிப்பு) ராணியாய் இருந்தாக் கூட அவள்தான் “Her Majesty” ராணி அவளை அவள்ன்னுதான் கூப்பிடுகிறோம். “Her”ராஜாவாக இருந்தாலும் அவன் தான் “His Majesty”ன்னுதான் சொல்லுகிறோம். நீ ஒரு ராஜாகிட்டே பேசறாப்பிலே இருந்தாலும் ஒரு பிரபுகிட்டே அவனுடைய வேலைக்காரன் பேசறாப்பிலே இருந்தாலும் நீ சீஷீ தான். ஒருத்தனுக்கு நீ அடா இன்னொருத்தன் அவனே (சிரிப்பு) இன்னொருத்தனுக்கு இவனே இந்த மாதிரி மொழிபேதம் வைச்சிக்கிட்டு இருக்கிறதுன்னா சமதர்மம்ன்னு வாயிலே பேசிக்கிட்டு, அடா, போடாங்கிற, பேச்சு வேணும்கிறியே, எதுக்காக வேணுங்கிறே? இல்லே மனிதன் அறிவு இருக்குது. வளர வேணும்ங்கிறான். சமதர்மம் வேணுங்கிறான். என்னதுக்குப் பணக்காரன்கிறான்? என்னத்துக்கு முதலாளிங்கிறான்? அடாபுடா_-ங்கிற வார்த்தை மட்டும் என்னத்துக்கு இருக்கணும்? மனிதன் அடா புடான்னு வார்த்தையைத் தமிழில் வச்சிக்கிட்டு அப்புறம் என்னா பண்ணுவான்.

நூல்: பெரியார் சிந்தனைத் திரட்டு

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?


அன்று பெரியார் சொன்னது இன்று நடந்தே விட்டது!

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தாலும் பத்து வருடத்திலே நாம் நூறு வயது வரை வாழ்வோம். ஆகாயத்திலே பறப்போம். உங்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்போது நானூறு பேரை, முன்னூறு பேரைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது ஆகாயக் கப்பல். ஒரு மனிதனைத் தூக்கிக் கொண்டு ஏன் பறக்காது? தனித்தனியாக வாங்கி முதுகில் கட்டிக்கொண்டால். ஏறுது மேலே விர் என்று! இப்பவே நாற்பது வருடம் சராசரி வயது உயர்ந்துவிட்டதே! தோழர்களே! 1952இல் நமது சராசரி வயது 25. இன்று சராசரி வயது 52. இடையிலே 20 வருடத்தில் 30 வருடம் நமது ஆயுள் உயர்ந்து விட்டது. இன்னும் 2000 வருடம் வரும்போது நாம் 75 வருடம் இருப்போம். வெள்ளைக்காரன் நூறு வருடத்திற்கு மேல் இருப்பான் சாகமாட்டான். சாவதற்கு அவசியம் இல்லை. அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை. அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், நேற்று வந்த பத்திரிகைகளிலே விந்துகளை விந்து பேங்கில் சேர்த்துவைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கூட குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது.

கோழிக்குஞ்சைப் பொறிக்க வைப்பதுபோல் பொறிக்க வைத்துவிடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே, பேங்கு என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக் கொள்ளலாம். என்றைக்குக் குழந்தை வேண்டுமோ, அன்றைக்குக் குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். பியா, பியா என்று கத்திக்கொண்டு குழந்தை வரும், இதையெல்லாம் பொய் என்று சொல்ல முடியாது.

- சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் அவர்கள் 19.12.1973 மாலை ஆற்றிய தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்ட சிந்தனை இது. அய்யா பெரியார் சொன்னதுபோல தனி மனிதன் பறப்பதற்கான வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் பல நடந்து வருகின்றன. சிலர் அதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இங்கே படங்களில் உள்ளவை அந்த இயந்திரங்களே! மனிதனின் சராசரி வயதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். 75 வயதைக் கடந்தவர்கள் நம்மில் ஏராளமானோர் வாழ்வதே அதற்குச் சாட்சி. உலகில் அறிவியலில் வளர்ச்சி பெற்ற நாடுகள் பலவற்றில் விந்து சேமிப்பு வங்கிகளும், விந்துதான அமைப்புகளும் இயங்கி வருகின்றன. விந்து வங்கிகள் சென்னைக்கேகூட வந்துவிட்டன. இணையத்தில் நுழைந்து sperm bank, sperm donors, semen for sale எனக் குறிப்பிட்டால் ஏராளமான வலைத்தளங்கள் திறக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இந்து சமய அறநிலையத் துறையின் ஆணை சட்டத்தின்முன் நிற்காது


இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!

இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!

கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் -_ சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு _- ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)

எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.

இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.

இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.

தணிக்கைத்துறை, கோவில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு - செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!

மேலும், இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டதேயாகும்.

சார்வாகர்கள் _- பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!

கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.

இது சட்டப்படி _- ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.

இந்தத் திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் _- ஹிந்து கோவில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?

திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள) கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்திகர்கள் _- நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள்ளனரே!

இந்தச் சுற்றறிக்கை கோவில் நிருவாக அதிகாரிகள் -_ பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை _ தகராறை உருவாக்கக் கூடியதாகும்.

இந்தச் சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.

எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோவில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் _- கடவுளச்சிகளைப் பாதுகாப்பதையும் கவனத்தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பக்கிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!

நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இவர்தான் மோடி


நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகளை போலி என்கவுன்டரில் சிக்கவைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான அமித் ஷாவை மோடி பாதுகாப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறை) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்ஸாரா.

6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் வன்ஸாரா மோடியின் நம்பிக்கைக்குரிய மேனாள் அதிகாரி. சி.பி.அய்.ஆல் புலனாய்வு செய்யப்பட்டு வரும் 2003_06 இடையேயான 4 போலி என்கவுன்டர், சோராபுதீன், பிரஜாபதி, இஷரத் ஜஹான், சாதிக் ஜமால் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்த அதிகாரிகளை ஷா கைவிட்டுவிட்டார் என்றும், முதலமைச்சரைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் வெறும் களப் பணியாளர்கள்தான், அவர்கள் கொள்கை வகுப்பாளர்களான மோடி மற்றும் ஷாவின் உத்தரவுகளைச் செயல்படுத்துபவர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...




தந்தை பெரியார் பேசுகிறார்...

உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்


மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ணமுடியாத தேசாபிமானம் வேண்டாம். தேசாபிமானம் நாளைக்கு; இன்றைக்கு வயிற்றுச்சோற்றுக்கு விசயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.

நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.

தமிழ் ஓவியா said...

எதிரொலி


திரவுபதியைக் காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார் என்பது புராண காலம். இப்போதும் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்று எண்ணும் அளவுக்கு நம்மிடம் பயமோ, பக்தியோ இல்லை. அதனால் பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம்.

- பா.ஜ.க முன்னாள் எம்பி, நடிகை ஹேமாமாலினி, புனேயில் அளித்த பேட்டியில்...

பயமும் பக்தியும் இருந்தால் மட்டும்தான் கிருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் அந்த வெண்ணை திருடிக் கண்ணன் கடவுளா? மனிதனா? பக்தன் எப்படி இருந்தாலும் அவனைக் காப்பாற்ற வேண்டியது கடவுளின் கடமை இல்லையா? புராண கால திரவுபதிக்குப் பிறகு ஒருவருக்குக் கூடவா கிருஷ்ணனிடம் பயமும் பக்தியும் இல்லாமல் போய்விட்டது? பிரதிபலனை எதிர்பார்ப்பவன் கடவுளாக இருக்கமுடியுமா? `கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர்ர்ர்ர்ர்...கூறியிருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைவோரே... ஊருக்குத்தான் உபதேசமா? தான் சொன்னதை தானே கடைப்பிடிக்கமாட்டானா கிருஷ்ணன்? - பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

எரிசர சூரியன் கண்விழித்த வேளையிலே...


ஈரோட்டு மேகத்தில்
எரிசர சூரியனாய் கதராடை ஓவியம்
கண்விழித்த வேளையிலே
நீருக்குள் நிமிர்ந்தபடி
நெடுநேரம் மூச்சடக்கி முங்கிக்கிடந்த
முத்தெல்லாம் முகமன் செய்ததடா

பெண்ணின் விடுதலையைப்
பேசிப்பேசி ஓயாது
கல்விக்கும் கஞ்சிக்கும்
கட்டுகின்ற கந்தைக்கும்
வக்கற்று வாழ்ந்தவனுக்கு
வக்காலத்து வக்கீலாகி துன்பந்தரும்
இழிவுகளைத் துடைத்தெறிந்த பெம்மானே!

எழுத்துச் சீர்திருத்தம்
எளிதான வரிவடிவம் சொல்லாத சொல்லெடுத்து
செம்மாந்தக் கவிதைகளால்
அய்யாவுன் தொண்டினையே அனுதினமும்
நாவசைத்து கன்னித் தமிழன்னை
கனிமொழியில் பாடுகின்றாள்!

காதறுந்த செருப்புகள்
கல்லெறிந்து கலகம்
கடவுள் பித்தலாட்டத்தைக்
கனத்த பொருளுரைத்து மானிட பேதங்கள்
மணியொலிக்கும் வேதமென
ஊசலிட்ட வையத்தை உரியடித்த தீரர்நீர்!

சிக்கனச் செல்வத்தைச்
சீதனமாய்த் தந்தவர்தான்
ஒழுக்கத்தை எஞ்ஞான்றும்
ஓம்புகின்ற மக்களில்
ஆகச்சிறந்த வேந்தராக
அணுவளவும் பிசகாது உள்ளளவும்
கடைப்பிடித்த உலகளந்த பெரியோனே!

காவிப் பூனைகளின்
கண்கட்டு வித்தைகளை
ஆவி பூதமென்று அறிவுக்கு
ஒவ்வாததை மூத்திரச் சட்டியுடன்
மேடைதனில் முழங்கியவர்
சாத்திரப் பொய்யுரைத்த சத்திய சீலரன்றோ!

ஈன்றளித்த கொள்கையெலாம்
இடுகாட்டில் இட்டுவிட்டோம்
வியர்வைத் தீயினிலே வேதனை
விறகெரிய கண்ணின் கருமணியில்
கரும்புகை மூளுதய்யா மண்ணின்
வேரடியில் மகத்துவம் ஆனவரே!

உழைப்பைச் சுரண்டுவோர்
ஊளைச்சதை வாதிகளே சோம்பலுக்கு
எதிர்வினையாய் செயலாற்ற மதியிழந்து
இழிவுகளை ஒழித்திட இம்மியும்
இயலாதவன் அருகதை அற்றவனாம்
ஆனமட்டும் சொன்னீரே!

ஜாதி(க்)காளை விரட்டும்நின்
சாட்டைக்கு அஞ்சியவை சகதிக்குள்
சக்கரமாய் சண்டித்தனம் செய்யாதுன்
தோற்றத்தால் கட்டுண்டு தோல்விதனைக்
கண்டதய்யா ஆனாலும் ஆனதென்ன
அடிமாடாய் வாழ்கின்றோம்

மானுடம் போற்றியே
மனுவைச் சாற்றியே
தமிழர்தம் தந்தையாய்
தரணியிலே நின்றிட்டாய்
ஏனெதற்கு என்றிங்கு
ஏகமாய்க் கேட்டுவிட்டால்
மூடத்தனம் தொழுகின்ற
மடத்தனம் விட்டகழும்!


- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...

கிராமங்களே இருக்கக்கூடாது

தோழர்களே! எனது கிராமச் சீர்திருத்தத் திட்டம் என்பது என்னவென்றால், நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும். அது மாத்திரமல்லாமல், கிராமங்கள் (க்ஷிவீறீறீணீரீமீ) என்கின்ற வார்த்தைகள் அகராதியில்கூட இல்லாதபடி செய்துவிட வேண்டும். அரசியலிலும்கூட கிராமம் என்கின்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்றே சொல்லுவேன். கிராமம் என்கின்ற எண்ணத்தையும், பெயரையும், அதற்கு ஏற்ற பாகுபாட்டையும், பாகுபாட்டு முறையையும் வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் பறையன், சக்கிலி என்பவர்கள், எப்படி அரிஜனன் ஆனானோ அதுபோலவும், ஆதிதிராவிடன் ஆனானோ அதுபோலவும் போன்ற மாற்றம்தான் ஏற்படுமே ஒழிய, பறையன் மற்ற மனிதர்களைப் போல மனிதனானான் என்கின்ற மாற்றம் எப்படி ஏற்படாதோ அதுபோல் கிராமச் சீர்திருத்தம் செய்யப்படுவதால் நல்ல கிராமம் ஆயிற்று என்றுதான் ஏற்படுமே ஒழிய மற்றபடியான நகரத்தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையையும் அனுபவிக்க முடியவே முடியாது.

கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றி பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வது கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவிப்பது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3 மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3, 4, 5 மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை அய்யா பாலு அம்மா பாலுக்காரி நான் என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்து விடுகிறார்கள். இதற்கு நகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.
நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல்தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்-குக் கொண்டுவந்தால், நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு _ முட்டுவலிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் தரகு, மகிமை, சாமிக்காக, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவு என்றெல்லாம் பல செலவுகணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலைவரும்போது விற்று லாபமடைந்து லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.

சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.

ஆகவே கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் சூத்திரன் _ தீண்டாத ஜாதியான் நிலையில்தான் இருக்கும்.

எனவே, சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெறவேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும், பறையன் என்ற ஒரு ஜாதியும் அடியோடு இல்லாமல் மனிதன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம் நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள்தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்படவேண்டும். - நூல்: கிராமச் சீர்திருத்தம்

தமிழ் ஓவியா said...

கிருஷ்ணன் மட்டும் வாழ்க!


ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார்: நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000க்கு மேல்சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார். உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார். உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன், கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று சொன்னாராம். தகவல்: சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?


தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னைச் சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, கீதை வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னைத் தீண்டாத ஜாதியாக பார்ப்பானும் அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றிச் சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

* * *

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துகளையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

* * *

அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டுவிட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? நீ யாருக்குப் பிறந்தவன்? என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும்விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து, நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கும்படிச் செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்குப் பொத்துக்கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனைச் சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்! சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!

- நூல்: தமிழும் தமிழரும்

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...
நமது தேர்தல் முறை சரியா?


தோழர்களே! இந்த எலக்ஷன் முறையின் காரணமாக, பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற காரணத்திற்காக ஓட்டுப் பெற்று, அதனால் பலனை உண்டாக்குவதைவிட இந்த ஓட்டுக் காரணமாக எவ்வளவு நல்ல வேட்பாளனையும் அயோக்கியனாக்கி விடுகிறார்கள். எவ்வளவு யோக்கியர்களா இருந்தாலும் வேட்பாளர்கள் ஒழுக்கத்தோடு இல்லை. நான் சீமையில் தேர்தல் நடந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் ஓட்டு இங்கு இருந்தது வெள்ளைக்காரன் காலத்திலே.

ஆனால் ஒரு அளவுக்குத் தகுதிபார்த்துக் கொடுப்பான். அபேட்சகர்களும் தகுதியுள்ளவர்களாகவே நிற்பார்கள். அப்ப பணம் கொடுக்காமல் தேர்தல். நாணயம், ஒழுக்கம் கெடாமல் காரியம் நடக்கும். அப்படித்தான் இருந்தது. அவன் போன பிறகு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கணும்ன்னு ஆரம்பிச்ச பிறகு வேட்பாளர்களான இரண்டு பேர் நிற்பதில் போட்டி ஏற்பட்டு நாணயம் இல்லாமல் போய் விடுகிறது. காரணம் என்னா? கொள்கையில்கூட அவர்களுக்கு இலட்சியம் இல்லை. தேர்தலில் நின்றுவிட்டால் சரி, எப்படியாவது ஜெயிக்கணும். அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டமான ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்யணும். எவ்வளவு யோக்கியமான ஓட்டராக இருந்தாலும் அவன் எந்த அளவிற்கு நாணயமாயிருந்தாலும் அவனை நாணய மற்றவர்களாக ஆக்கி எந்த விதத்திலாவது ஓட்டு வாங்கணும். இதுதான் ஓட்டுரிமையிலே ஏற்படுகிற பலன்.

* * *

10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு பண்ணி எலெக்ஷனில் ஜெயிக்கணும்ன்னா, உண்மையான ஜனநாயகத்திலே 100க்கு 95 பேருக்கு வசதி வாய்ப்பு இருக்குமா? எத்தனை பேரு நம்ம ஜனங்களிலே இலட்ச ரூபாய் செலவு பண்ணி எலக்ஷனிலே ஈடுபட வாய்ப்போடு இருக்கிறாங்க? எந்தக் கட்சிக்காரனும் அபேட்சகரை எதிர்த்து நிற்கும் ஆளு ஓட்டுக்கு வந்தாலும், அவனிடம் ஓட்டர்கள் ரூ 5 கொடுக்கறீயா, 10 ரூபாய் கொடுக்கறீயான்னு கேட்கலாம். இது ஒன்னும் ரகசியமில்லே. நம்ம நாடு பூராவும் தெரிந்திருக்கிற ரகசியம் இது. இதைப் பற்றி யாருக்கும் கவலையில்லையே. இலட்சியம் பண்றதில்லையே? எல்லாக் கட்சிக்காரர்களும் காந்தியார் காலம் தொட்டு மக்களுக்கு ஓட்டுக் கொடுத்து வருகிறாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏச்சி, எப்படியாவது பதவிக்கு வரணும் அது தான் அபேட்சகர்களின் நோக்கம். இப்படிப் பணம் கொடுத்துப் பதவிக்கு வந்த பிறகு அதுதான் ஜனநாயகம்ன்னு பேசுறாங்க.

நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் ஒரு சமுதாயச் சீர்த்திருத்தக்காரன் என்பதனாலே இதைச் சொல்லுகிறேன். நான் அரசியலில் இருந்தால் கூட இந்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் நானும் பண்ணித்தான் ஆகணும். காந்தி அரசியலில் நின்னாலும் பணம் கொடுத்துத்தான் ஆகணும், ஜவஹர்லால் நேரு எலெக்ஷனில் நின்னாலும் அவரும் பணம் கொடுத்துத்தான் ஆகணும். நம்ம காமராசர் எலெக்ஷனில் நிற்கணும்ன்னு சொன்னாலும் அவரும் இலட்ச ரூபாய் செலவு பண்ணித்தான் ஆகணும், அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேணுமா? இப்படி எல்லாம் எலெக்ஷனில் ஜெயிச்சி வரணும்ன்னா இது என்னா ஜனநாயகம்? வெங்காய ஜனநாயகம் (சிரிப்பு கைத்தட்டல்) பணத்தினாலே ஜெயிக்கலாம், பித்தலாட்டத்திலே ஜெயிக்கலாம். மக்களை ஏய்க்கிறதினாலேயும் ஜெயிக்கலாம். (சிரிப்பு) அப்படி ஜெயிச்சி வந்ததுக்கு அப்புறம், அதை ஜனநாயகம் என்கிறான். ஜனநாயகத்தில் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறான்.

ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா? பணம் கொடுக்கிறதாலே நாணயம் கெட்டுப் போகுது ஒழுக்கம் கெட்டுப்போவுது. இந்த முறையிலே நல்லவன் _ யோக்கியன் வரமுடியாமல் போயிடுது. நல்ல மனுஷன் வருவதுக்கு வாய்ப்பும் இல்லாமல் போயிடுது இந்த மாதிரியான தேர்தல் முறையினாலே. ஆனதினாலே இந்த மாதிரியான, ஒழுக்கக்கேடான, நாணயக்கேடான, ஜனநாயகத்தை ஒழிக்கத்தான் நான் பாடுபடுகிறேன். (கைத்தட்டல்) இது மாறணும் விரைவிலே. (கைத்தட்டல்) சுத்த காலிப்பசங்களைக் கொண்டுவந்து விட்டுடுறாங்க, மகா அயோக்கியத்தனங்களைச் செய்யப் பயப்படாமே துணிஞ்சி தேர்தலில் வந்திடுறாங்க. பணத்துக்குத்தான் ஓட்டுத் தந்தாங்கன்னு அவனுக பதவிக்கு வந்த உடனே பொறுக்கித் திங்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி நிலை நீடிக்கிறதினாலே நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு _ கஷ்டப்படுகிற மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...
பார்ப்பனர்களை ஆதரித்தது ஏன்?


பொதுவாக இந்தக் காரியத்திலே (தேர்தலிலே) கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே, வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபிராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம்தான், ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமாராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னுதான் நினைச்சேன், அதுதான் காரணம்.

அய்யமாரை ஆதரிக்கிறேன்னா காமாராசருக்குக் கையாளுன்னுதான், அய்ந்தாம் படையாய் இல்லாமல், சூழ்ச்சி பண்ற ஆளாய் இல்லாமே _- இந்த மாதிரி இருப்பாங்களேன்னு, இந்தக் காரியத்துக்காகத்தான் என் ஆதரவு,

பாரத நாடும் காந்தி நாடும்!

இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்குக் காந்தி நாடுன்னுபேரு வைச்சா நான் வரவேற்பேன். காந்தி- சகாப்தமானாலும் நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு பாரத நாடு என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. எதுக்காக இந்த நாட்டுக்குப் பாரத நாடு-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம், சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் பாரத நாடுங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் காந்தி நாடு-ன்னு வைக்கச் சொன்னேன்.

அதாவது வருஷம் என்றதுக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் வருஷம் என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிறிஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டசி மாதம் பிறந்தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? முஸ்லீம் முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே காந்தி பேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்.