Search This Blog

1.5.13

புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -3

பெண்ணுரிமை என்பதை மனித நேயத்தின் மறுபகுதியாகப் பார்த்த மானுடநேயர் தந்தை பெரியார் அவர்கள்.
அதனால்தான் 1930களிலேயே இந்தியத் துணைக் கண்டத்தின் முன் னோடியாக (Pioneer) கர்ப்பத்தடை அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல் எப்படி என்ற தலைப்பில், வெளிநாட்டு மருத்துவ அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்து - எளிய முறையில் - தமிழில் நமது மக்கள் குறிப்பாக பெண்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மலிவு விலையில் வெளியிட்டுப் பரப்பினார்கள்!
மேரி ஸ்டோப்ஸ் என்ற இங்கி லாந்து நாட்டு அம்மையாரின் அரிய கருத்துக்களையும், இன்னும் பல மேதைகளின் கருத்தையும் விளக்கி குடிஅரசு வார ஏட்டில் கட்டுரை களாகவும் வெளியிட்டு, அதனை மேடைகளில், சுயமரியாதைத் திருமண பிரச்சாரக் களங்களில் கூறி, மக்களை ஆயத்தப்படுத்தியதுபோலவே, புத்தகங்களை வெளியிட்டு விளக் கினார்கள்.
அக்காலத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்றால், அது கடவுள் விரோதம், மத விரோதம், சமூக விரோதம் என்று கருதி, கூறியவர்களைச் சாடிய காலம் ஆகும்!
அதில் தந்தை பெரியார் செய்த பணி அசாதாரணமான பெண்ணிய விடுதலைக்கான அமைதியான புரட்சி யாகும்!
குடும்பக் கட்டுப்பாடு என்று இன்று அரசுகளால் அழைக்கப்படும் இத்திட்டத் திற்கு முக்கியமாகக் கூறப்படும் காரணம் - மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதேயாகும். பொருளாதாரக் காரணமே பெரிதும் பெரும்பாலோரால் சொல்லப்பட்டு வருகின்றது.
ஆனால் தந்தை பெரியார்தம் கண் ணோட்டமே இப்பிரச்சினையில் வேறு, வெறும் மக்கள் தொகை ((Population)) கட்டுப்பாடு என்பது பெரியார் அவர் களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்தான்.
முதலில் பெண்களின் சுதந்திரத் திற்கும், சுகவாழ்வுக்கும் பிள்ளைப் பேறு மிகப் பெரிய இடையூறு ஆகும்! அவர்களைப் பிள்ளைகளைப் பிரசவிக்கும் இயந்திரங்களாக்கி, அவர்கள் சுதந் திரத்தை, இழந்து, உடல் நலம் குன்றி, என்றென்றும் மற்றவர்கள் தயவில் தான் பெண் என்பவள் வாழ வேண்டும் என்ற ஒரு நிலையைத் தவிர்க்கவே கர்ப்பத் தடை - கர்ப்ப ஆட்சி முக்கியம்; ஆணின் அகம்பாவம்தான் பெண்களை இத் துறையில் அடக்கி, பிள்ளை பெறாதவர் களைக் கொச்சைப்படுத்துவது, அதை சாக்காகக் கொண்டு, மற்ற பெண்களு டன் வாழ்க்கையை அமைப்பது போன்ற முறையற்ற செயல்களுக்கு இதை ஒரு வாய்ப்பான கருவியாக ஆண்கள் பயன்படுத்துவது கூடாது என்பதை பெண் ஏன் அடிமை ஆனாள்? என்ற பெண்ணுரிமைச் சாசனமான அந்த நூலில் விளக்கியுள்ளார் புத்தகர் பெரியார்!
அதைவிட எதிலும் சிக்கனம் காட்டும் அய்யா அவர்கள், புத்தகங்கள் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும் வாங்கிட தாராளமாகப் பணம் கொடுத்து வாங்கி, தமிழில் மொழி பெயர்க்கவோ, அல்லது ஆதாரங்களாக்கி தமது கொள்கை களுக்கு வலு சேர்ப்பதாகவோ அவை இருப்பின் அதை வாங்கிடத் தயங்க மாட்டார்கள்!
அறிஞர் அண்ணா அவர்கள் 1940 களில் ஈரோட்டில் விடுதலை ஆசிரியராக இருந்தபோது, ஈரோடு ப. சண்முக வேலாயுதன், எஸ்.ஆர். சந்தானம் ஆகிய நண்பர்களுடன் மாலையில் நடந்து ஈரோடு ரயில்வே சந்திப்புக்குச் சென்று, அங்கே தேனீர் பருகி விட்டு, அங்கிருந்த ஹிக்கின்பாதம் Higginbothams ரயில்வே புத்தக ஸ்டாலில் புதிதாக வந்துள்ள நல்ல ஆங்கில நூல்களைப் படித்து விடுவார்கள் (ஒரு பெரும் பகுதியை - உட்கார்ந்து பழக்கமாகிய காரணத்தால்) இந்த நூல் மிகவும் நமக்குப் பயன்படும்; நல்ல நூல். ஆனால் விலை அதிகம் என்று கூறிடுவார். தந்தை பெரியார் காதுக்கு இது சென்றவுடன் வாங்க அண்ணாதுரை, இந்த புத்தகங்கள் 2 பிரதிகள் வாங்கி வாருங்கள்; ஒன்று உங்களிடம் இருக்கட்டும் மற்றொன்று அலுவலகத்தில் இருக் கட்டும் என்று உடனே பணத்தை எடுத்துக் கொடுத்துச் சொல்வார்கள்.

எங்களிடம் இதை அய்யாவும் கூறியுள்ளார், நண்பர் சண்முக வேலாயுதனும் கூறியுள்ளார்.
அதுபோலவே அபிதான சிந்தா மணி அப்போது (1940களில் - ரூபாய் 50)  பத்து  பிரதிகள் வாங்கி, பல அலுவலகங்களில் வைத்ததோடு, அறிஞர் அண்ணாவிற்கும் ஒரு பிரதியை அன்பளிப்பாக தந்து பயன் படுத்துங்கள் என்றாராம்!
அன்னை மணியம்மையார் அவர்கள் திருமணம் என்ற ஏற்பாட்டிற்கு முன் செயலாளராக செவிலியராக அய்யாவிடம் தொண்டாற்றியபோது அவருக்கு ஆங்கிலத்தில் கையொப்ப மிட்டு அபிதான சிந்தாமணி புத்தகப் பிரதியை அய்யா அளித்தார்கள்.
அதை அன்னையார் பிறகு எனக்குக் கையொப்பத்துடன் அன்பளிப்பாகத் தந்தார்கள்.

எனது அரிய கருவூலங்களில் அதுவும் ஒன்று!
எனவே புத்தகர் பெரியார்பற்றி இன்னமும் எவ்வளவோ எழுதலாம் என்றாலும் இத்துடன் இப்போது முடிக் கிறோம்.

         ----------------- கி.வீரமணி அவர்கள்  25-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

16 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்

எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.

(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

கேள்வியும் - பதிலும்

- சித்திரபுத்திரன்

கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

குடி அரசு - வினா விடை - 29.10.1933

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவும் - சுயமரியாதையும்


மே தினத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் மானமிகு செ. குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் சுயமரியாதையும், பகுத்தறிவுமே அடிப்படை என்ற அழகான, ஆழமான கருத்தினைக் கூறியுள்ளார்.

இதனை திராவிடர் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லர், (முக்கியமாக அழுத்தமாகக் கடைபிடிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றாலும்) தமிழர்கள் அனைவரும் உணரவும், கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து உலக மானுடத்திற்கே கூடத் தேவையானதுதான்.

திருவள்ளுவரின் திருக்குறளில்கூட ஏழு சொற்கள் இடம் பெறும்; தந்தை பெரியார் அவர்கள் வடித்துக் கூறியதோ நான்கே நான்கு சொற்கள்.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு - இந்தக் கருத்தின் கருவைத் தான் கலைஞர் அவர்கள் வேறு சொற்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் அடிப்படை என்று கூறியுள்ளார்.

மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி கூறுவார். ஒரு இயந் திரத்தின்மீது மனிதன் எச்சிலை உமிழ்ந்தால் அதற்குக் கோபம் வரப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்லவே.

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பெறாத உள்ளம்
என்பார் புரட்சிக் கவிஞர்.

தமிழர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்குக் காரணமே இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனீயம் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டில், பக்தி எனும் போதை மருந்துக்குப் பலியாகி, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பறி கொடுத்திருப்பதை மறுக்க முடியுமா?

உலகத்தில் எந்த நாட்டிலாவது கேள்விப்பட்ட துண்டா? கடவுள் தனது முக்கிய நான்கு உறுப்புகளிலிருந்து மனிதர்களை பிறவிப் பேதத்தை அடிப்படையாக வைத்துப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளதா?

அர்த்தமுள்ள இந்துமதம் என்று சொல்லும் இந்தப் பாழும் மதத்தில்தானே பிர்மா எனும் படைத்தல் கடவுள், தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத் தார், தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தார், இடுப்பிலிருந்து வைசியனைப் படைத்தார், பாதங்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தாராம்.

இந்த நான்காம் ஜாதியான சூத்திரர்கள் அடிமைத் தொண்டு செய்ய வேண்டியவர்கள், பார்ப்பனர்களின் வேசிப் புத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளனர் என்பதோடு இன்று வரை இதன் அடிப்படையில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று எழுதியதை இன்றைய உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் நாம் 2013ஆம் ஆண்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, நம் உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதே!

இன்னும் தமிழன் பக்தியின் பெயரால் செருப்படித் திருவிழா நடத்திக் கொண்டு கிடக்கின்றானே! ஒருவனுக்கொருவன் விளக்கமாற்றால் அடித்துக் கொண்டு கிடக்கிறானே!

வெட்கப்பட வேண்டாமா? விஞ்ஞானி எனும் நிலையை அடைந்தவன்கூட மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம்) குடிக்கிறானே! கோயிலுக்குள் சென்று பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கூறிக் கைகட்டி நிற்கிறானே!

பார்ப்பானை உயர் ஜாதியான் என்று ஒப்புக் கொண்டு தன் வீட்டு நிகழ்ச்சிகளை அவனை அழைத்து நடத்தி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தானே செய்கிறது!

சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாததால் தானே - பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பொழுது பொங்கி எழும் உணர்ச்சிக்கு ஆளாவ தில்லை.
நிஜம் எது, நிழல் எது என்று தெரியாமல் எதிரிகள் விரிக்கும் வலையில் தமிழன் விட்டில் பூச்சியாக விழுவதற்குக் காரணம் - தந்தை பெரியார் எடுத்துச் சொன்ன - கலைஞர் தொடுத்துச் சொன்ன அந்தவுணர்வு இல்லாது போனதுதானே!
தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தையும் இணைத்துக் கொள்வீர் தமிழர்களே! 2-5-2013

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...


மானங்கெட்ட கோயில் விழா விளக்கு மாற்று அடி பரிமாற்றம்


ஆண்டிபட்டி, மே 2- ஆண்டிபட்டி அருகே கோயில் விழாவில் மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலை வில் மறவப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூறாண்டுகள்

தமிழ் ஓவியா said...


ஜனநாயகமா - காலி நாயகமா?


ஜனநாயகமா - காலி நாயகமா?

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 681 கோடீசுவரர்களும், 220 குற்றவாளிகளும் (13 பேர் கொலைக் குற்றவாளிகள்) போட்டியிடுகின்றனர்.

இது என்ன ஜனநாயகமா - காலி நாயகமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

#####

செவ்வாய்க்கிரகத்தில்
குடியேற விருப்பமா?

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விளம்பரம் செய்திருந்தது. மூன்றே நாளில் 20 ஆயிரம் விண்ணப்பம் குவிந்தது. இதற்குப் பிறகாவது செவ்வாய்த்தோஷம் பற்றிப் பேசுவதை இந்துத்துவாவாதிகள் கை விடுவார்களா?

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் - நாணயமும்!



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


நாக தேவதையை வணங்கினால்...


உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி என்னும் கிராமத்தில், படமெடுத்து நின்ற பாம்பை அன்புக்கொடி என்ற சிறுமி மண்டியிட்டு வணங் கினாள். அச்சிறுமியை அந்நாகம் மூன்றுமுறை தீண்டி அவளை மாய்த்தது. - இது தினமணி நாளிதழில் 25.11.1982 அன்று வெளியான கட்டச் செய்தியின் சுருக்கம்.

நாக தேவதை என்ற தெய்வம் நம் நாட்டில் உலவுகிறதே; அப்பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்த அத் தெய்வ பக்தி - அவர்கள் மொழியில் சொல்வதனால் - அன்புக் கொடிக்கு எமனாகி விட்டது. ஆத்திகப் பெருமக்களே ஆத்திரங் கொள் ளாமல் மூடக் கொள்கையால் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பாருங்கள்.

- பி.இரத்தினசபாபதி, சென்னை-24.

தமிழ் ஓவியா said...

கிரக சேர்க்கை பற்றி நேருவின் கருத்து



இந்த எட்டு கிரக சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலைவிதியை ஆக்குவதோ, அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல நம் தலைவிதியை நிர்ணயிப்பது நம் கையில் தான் இருக்கிறது.

- பண்டித நேரு, (விடுதலை - 8.1.1962 அலகாபாத்தில் பேச்சு, 11.1.1962

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். ger Font Smaller Font

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர். நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர். நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்கள்.

ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.

ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர். நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர். நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர். நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.

நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே! உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

தமிழ் ஓவியா said...

நாயுறங்கும்



எவன் படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன் காத்தான்?
காக்கிறான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்து வளர்குழந்தைபோலும்
தனி, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்த தலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணி நாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திட ஓர் ஈச்சம்பாய் இல்லை - தங்க
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்

- புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


ஈச்ச மர(த்திலும்) கடவுள்


இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயிலில் வழக்கமாக காலையிலும் மாலையிலும் கடவுள் வழிபாட்டின் போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணி யடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு. மறுநாட்காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத் தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும்.

இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு காலையில் எழுந்திருப்பதாகக் கருதி அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் வழிபாடு நடத்தி வந்தனர்.

நம் நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தை கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினர். பல நாட்கள் வரை ஆராய்ந்து அதன் உண்மையை கண்டு பிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற சூரிய வெப்பத்தால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்து கொள்கிறது.

இம்மரம் மட்டும் இவ்வாறு சாய்ந்து நிமிருவதற்கு காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

- உலக அதிசயங்கள் நூலிலிருந்து
ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632315

தமிழ் ஓவியா said...


பிக்பாக்கெட் கடவுள்

சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013

கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.

விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!

கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)

பிக்பாக்கெட்காரர்கள் முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.

கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.

திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!

- மயிலாடன் 03-05-2013

தமிழ் ஓவியா said...

ஜெயங்கொண்டம், மே 3- தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஈட்ட ஜாதி மதங்களை மறந்து ஒன்றுபட்ட தமிழர் களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில், அரிய லூர் மாவட்டம் செயல் வீரர்கள் நிறைந்த மாவட்டம். எந்தப் பணிகளை தலைமைக் கழகம் இட்டாலும் விரைந்து முடிக்கக் கூடியவர்கள் அந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் இந்த மாநாடு அறிவிக்கப் பட்டாலும் சிறப்பாக நடைபெறுகிறது.

யாருக்கோ பதில் சொல் வதற்காக கூட்டப்பட்ட மாநாடு அல்ல. மாறாக நமது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு. சேது சமுத்திர திட்டம் கிடப்பில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் உரிமை ஆகியவற்றுக்காக போராட வேண்டிய நாம் தரக் குறைவாக பேசும் சிலருக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை.

தந்தை பெரி யாரின் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்பிற்காக ஏராளமானோர் சிறை சென்ற மாவட்டம் அரி யலூர் மாவட்டம் கலைஞரோ, நாங்களோ சந்திக்காத எதிர்ப்பா? எங்கள் அனுபவத்தைக் கூட வயதாகக் கொள் ளாதவர்கள் சீசனல் வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்தி தமிழர்களை கூறு போடலாமா? நாங்கள் உயிரை துச்சமெனக் கருதுபவர்கள் என் உயிருக்கு மம்சாபுரம் சென்னை உட்பட நான்கு இடங்களில் குறி வைக்கப்பட்டது. அதை யும் தாண்டி பணியாற் றுபவர்கள் நாங்கள். பார்ப்பனர்களால் விளம்பரம் செய்யப்படு வதால் எதை வேண்டு மானாலும் பேசுவதா? நாம் அடித்துக் கொள் வதைப் பார்த்து அவர் கள் மகிழ்ச்சியடைகி றார்கள். ஏணியின் சுபாவம் ஏற்றி விடும். தோணியின் சுபாவம் கரை சேர்க்கும். ஆனால் ஏறி வந்த ஏணியையும் கரை சேர்த்த தோணி யையும் எட்டி உதைக் கலாமா? சிந்திக்க வேண் டும்.

50 சதவீதம் வந்தது திராவிட இயக்கத்தால் தானே?

50 சதவீத இட ஒதுக் கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு கிடைக்க காரணமானவர்கள் யார்? சிந்திக்க வேண் டாமா? திராவிட இயக் கத்தலைவர்கள் அல் லவா? 18 சதவீத திமிர் என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து பேசலாமா?

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை விட ஆபத் தானது பதவிக்காய்ச்சல். பதவிக்காக எதையும் செய்ய முனைவதா? அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் கொள்கை.

கருவறைக்குள் ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர் பெரியார். இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக முடியவில்லை. ஏராளமான தடைகள் தடைகளை தகர்த்து உரிமைகளை வென் றெடுப்போம். பெரியார் என்ற மூச்சுக்காற்று இல்லையென்றால் தமிழினத்திற்கு எழுச்சி இல்லை. ஜாதி, மதம், கட்சிகளால் பிரியாமல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தாழ்த்தப்பட் டவர்கள் உள்பட யாரை யும் எதிரிகளாக பா.ம.க. கருதக்கூடாது. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம்! உரி மைகளை வென்றெடுப் போம் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி னார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.