Search This Blog

16.4.11

பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா?


85 வயதுக்காரரான புட்டபர்த்தி சாயிபாபாவின் உடல் நலம் மிகவும் கெட்டுப் போய் விட்டது. அவரைப் பிழைக்க வைக்க டாக்டர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். அவர் உடல் நலம் பெற்று நூறாண்டும் கடந்து வாழட்டும். அதில் ஒன்றும் நமக்குப் பிரச்சினை இல்லை. மனிதநேயக் கண்ணோட்டத்தோடு அவர் உடல் நலம் வளமோடு இருக்கவே விரும்புகிறோம் - வாழ்த்துகிறோம்.

அதே நேரத்தில் அவரின் கோடானு கோடி பக்தர்கள் ஒன்றை இந்த நேரத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நேரம்தான் அவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமான நேரம் என்பதால், பகுத்தறிவாளர்கள் நினைவூட்டுவது கடமை யாகும்.

சாயிபாபா - பகவான் சாயிபாபா என்றும், அவர் ஆசி தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கும் என்றும் சொல்லுகிறார்களே - பிரச்சாரமும் செய்கிறார்களே - வெளிநாடுகளில் உள்ள நோயாளிகளைக்கூட, நேரில் பார்த்து ஆசீர்வாதம் செய்யாமலேயே குணப்படுத்தும் தெய்வீகத் தன்மை அவருக்கு இருப்பதாக ஏடுகள் எல்லாம் ஏற்றிப் போற்றியதுண்டே - அவை எல்லாம் உண்மைதானா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.

காரணம், சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அத்தனை நோய்களும் அவரை இப்பொழுது தொந்திரவு பண்ணிக் கொண்டு இருக்கின்றன.

செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 20 நாள்களாக அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive Care Unit)வைத்து தீவிரமாக சிகிச்சை செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் மருத்துவர்கள் அறிக்கைகளைக் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்களும், அந்த மருத்துவமனையின் வெளியில் கூடி நின்று காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்! சாயிபாபாவைக் காப்பாற்றுங்கள்! என்று ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். வெளி நாட்டு மருத்துவ நிபுணர்களை ஏன் அழைக்கவில்லை என்று குற்றங் கூறுகிறார்கள்.

மற்றவர்களுக்கு ஏற்படும் புற்று நோயைக்கூட தன் பார்வையால் குணப்படுத்துவ தாகக் கூறும் பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா? செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாமா? என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு ஏற்பட்ட குடலிறக்க நோய்க்குக் கோவாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சண்டே இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதுண்டு.

சில வருடங்களுக்கு முன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு.

சாயிபாபாவை சிலர் கொலை செய்ய முயன்ற போது அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உயிர் தப்பிட வில்லையா?

சாயிபாபாவுக்குச் சக்தியிருப்பதாக நம்புவதெல்லாம் நமது அறியாமையே தவிர வேறு ஒன்றும் அல்ல - அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர்தான். அவர் சில வித்தைகளைக் (Magic) கற்று வைத்துக் கொண்டு, அவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கியவர் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும்!

--------------- மயிலாடன் அவர்கள் 16-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

yaanan.wordpress.com said...

இதையும் படிங்க
http://yananwritings.wordpress.com/2010/10/04/guru/

yaanan.wordpress.com said...

இதையும் படிங்க
http://yananwritings.wordpress.com/2010/10/04/guru/

yaanan.wordpress.com said...

http://yananwritings.wordpress.com/2010/10/04/guru/

yaanan.wordpress.com said...

http://yananwritings.wordpress.com/2010/10/04/guru/

வலிப்போக்கன் said...

சாய்பாபா, சய்ந்திட்ட பாபாவாக மாறினாலும் உயிரோடு இருப்பதாக நம்பும்,பக்தர்கூட்டம்