Search This Blog

8.1.15

சாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்களே!




தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ; கண்டிப்பாக பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலைத் தான் குறிக்கும்.


ஆளுக்கு ஆள் பேசுவார்கள் - யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது - வாய் இருப்பது என்பது உளறு வதற்கே, வன்முறைகளைத் தூண்டும் வார்த்தைகளை உதிர்ப்பதற்கே என்பது அவர்களின் சித்தாந்தம் போலும்!
வாத்தியாரே ஓடிக் கொண்டு சிறுநீர் கழித்தால் மாணவன் எப்படி நடந்து கொள்வான்? என்ற பழமொழி ஒன்று நாட்டு வழக்கில் உண்டு; அதுபோல ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடியவரே (மோகன் பகவத்) இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் தான் என்று அடாவடியாகப் பேசுகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?


ஒருவர் சொல்லுவார் - காந்தியைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொன்று இருக்க வேண்டும்; இன்னொருவர்  சொல்லுவார் காந்தியாரைப் படு கொலை செய்த கோட்சே மகா புருஷன். அவருக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சிலை வைக்க வேண்டும் என்பார்; இன்னொருவர் இன்னொருபடி தாண்டி கோட்சேவுக்கு கோயிலே கட்ட வேண்டும் என்பார். அதற்கான விழாவில் பிரதமரே பங்கேற்க வேண்டும் என்பார்.


இன்னொரு அமைச்சர் சொல்லுவார்; பிஜேபிக்கு ஒட்டுப் போடுபவர்கள்தான் உண்மையான அப்பா அம்மாவுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் முறை தவறிப் பிறந்தவர்கள் என்று உளறுவார்.


இப்பொழுது ஒரு பி.ஜே.பி.காரர் - அவர் சாதாரண அனாமதேயம் அல்லர் - மக்களவை உறுப்பினர் பெயர் சாக்ஷிசாமியார் என்பவர் பேசி இருக்கிறார்.
இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் எப்படி யாவது நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும்; இதுவரை இருந்து வந்த இந்து விரோத அரசுகள் நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோரிக்கையை வைத்து இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டனர்;  இனிமேல் இந்து மக்கள் இதனைக் கருத்தில் கொள்ளக் கூடாது, ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்கள் எப்படியும் கட்டாயமாக குழந் தைககளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  அப்பொ ழுதுதான் இந்துக்களின் எதிர்காலமும் இந்துத் தர்மமும் காக்கப்படும் என்று உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் இவ்வாறு பேசியுள்ளார்.


இதே கூட்டத்தில் மதமாற்றம் செய்பவரைத் தூக்கிலிட வேண்டும், அவ்வாறு சட்டம் செய்ய பி.ஜே.பி தயாராகவும் உள்ளது என்றும் நல்ல பாம்பாக நஞ்சைக் கக்கியுள்ளார்.


நியாயமாக இந்தப் பேச்சின்மீது சட்டப் படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் இருக்கிறது; ஆனால் நடப்பது பி.ஜே.பி. ஆட்சியாயிற்றே! அதன் உள்ளுணர்வைத் தானே இவர் வெளிப்படுத்தி இருக் கிறார். அப்படி இருக்கும் போது அவர்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதில் முக்கியமாக ஒன்றைச் சிந்திக்க வேண்டும். ஒரு பெண் நான்கு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று சொல்லுவதற்கு இந்த ஆணுக்கு உரிமை எங்கே இருந்து வந்து  குதித்தது? குழந்தையைப் பெறுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது கணவன்கூட அல்ல - ஒரு பெண்தான் - துணைவிதான். அப்படி இருக்கும் போது பெண்ணைக் கட்டாயப்படுத்துவதற்கு இந்த ஆசாமியார்? என்ற கேள்வி எழலாம்.


ஆனால், இந்து மதத்தைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதாக இருக்காது; இந்து மதம் பெண்களை உயிர் உள்ள ஒன்றாக பொருட்படுத்துவதே கிடையாது. வெறும் ஜடமாகத்தானே கருதி இந்து மதம் கணிக்கிறது.


படுக்கை, ஆசனம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்று இந்துமதம் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 171). கூறுகிறதே. அப்படி இருக்கும்போது சாக்ஷி சாமியார்கள் வேறு மாதிரிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?


இந்தச் சாமியாரின் பேச்சுக்கு முதலில் எதிர்க்குரல் கொடுக்க வேண்டியவர்கள் இந்து மதத்தில் இருப்பதாகக் கருதப்படும் பெண்களே! வீதிக்கு வந்து போராட வேண்டியதும் முதலில் பெண்கள்தான்!


நான்கு பிள்ளைகளை ஒரு பெண் பிரசவித்தார் என்றால், அந்த நான்கு பிள்ளைகளை வளர்த்து எடுப்ப தோடு அவர்களின் வாழ்நாள் பெரும்பாலும் அடை பட்டுப் போய்விடுமே! அவர்கள் படிப்பதாவது, வேலைக்குப் போவதாவது!


இதனைத்தான் பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள் என்ற வினாவைத் தொடுத்தார் பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார்.
பெண்களின் முதற் கடமை இந்த இந்துத்துவா - பாசிச - பி.ஜே.பி., உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலை அடையாளம் கண்டுப் புறக்கணிப்பதேயாகும்.
இன்னொறும் முக்கியமானது. மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) என்ற அரசின் கொள்கையை எதிர்த்து ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே பேசியுள்ளாரே  - இதுபற்றிப் பிரதமர் கருத்து தெரிவித்திருக்க வேண்டாமா? எல்லாம் சொல்லி வைத்து ஆடும் நாடகம் தானோ!

                           -----------------------------”விடுதலை” தலையங்கம்  08-01-2014

7.1.15

புத்தக வாசிப்பும் பெரியாரும்

வானொலி உரை - புத்தக வாசிப்பும் பெரியாரும்




தந்தை பெரியாரின் பள்ளிப் படிப்பு என்பது குறிப்பிடத் தகுந்ததாக ஒன்றும் கிடையாது. தன் பள்ளிப் படிப்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷம். ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2 வருஷமும்தான் படித்தவன். எனக்குப் படிப்பே வராது என்று எனது பெற்றோர் முடிவுகட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும், ஆதலால் என்னை பகலெல்லாம் பிடித்து வைத்திருந்து இரவில் வீட்டிற்கனுப் பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தையும் பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.

1884-85லேயே தரகு மண்டி ஆரம்பித்தாகிவிட்டது. அப்போது நான் சிறிய பையன். என் சிறிய பாட்டியார் வீட்டில் தத்தாகக் கொடுத்து வளர்ந்து வந்தேன். அடிக்கடி தந்தையார் கடைக்குப் போய்விடுவேன். அப்பொழுது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். மூட்டைகள் ஏராளமாக வந்திறங்கும். அப்போதே நான் சிறு பையனாக இருந்தாலும் கடைக்குப் போகிறபோது ஏலம் கூறுவேன்.

சமர்த்தாகப் பேசுவேன். வியாபாரிகளிடமெல்லாம் நன்றாகப் பழகுவேன். சாதுர்யமாகப் பேசி அவர்களை என் வசத்துக்குக் கொண்டு வருவேன். எனக்காக சில வியாபாரிகள் ஏலத்தில் விலை கேட்பார்கள். இதனால் நான் சரியாகக்கூடப் பள்ளிக்கூடம் போக மாட்டேன். அதனால் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டு, என் தந்தையார் என்னை எட்டாம் வயதிலேயே கடையில் போட்டுவிட்டார்.

ஓர் ஆண்டு வரை கடையிலேயே இருந்து கொண்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்தேன். நான் சுறுசுறுப்பாகவும், வியாபாரத்தில் அதிக அக்கறையும் ஆசையும் காட்டி வந்ததனால் என் தகப்பனார் மகிழ்ச்சி அடைவார். ஆனால், ஊரில் உள்ள என் தகப்பனாரின் நண்பர் களும் மற்றும் பெரிய மனிதர்களும், இந்தச் சிறிய பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீணாகக் கடையில் போட்டுக் கெடுக்கிறீர்களே! இது நியாயமல்ல, எப்படியாவது அவனை நல்ல வார்த்தைகள் சொல்லி படிக்க அனுப்புங்கள் என்று வற்புறுத்தி வந்தார்கள்.

அதன்பேரில் மீண்டும் ஸ்கூலுக்கு அதாவது பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதற்கு முன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தேன். பிரைமரி வகுப்பில் நான்காம் வகுப்புப் படித்தேன். நான் பாஸ் செய்ததும் படிப்பை விட்டு விட்டேன். உடனே 1890ஆம் ஆண்டில் கடைக்கு மீண்டும் வந்துவிட்டேன்  என்கிறார்  பெரியார்.

இப்படி படிப்பு என்பது வெறும் நான்காம் வகுப்பே என்றாலும், இந்தத் தலைவரின் பேச்சுகளும், எழுத்துகளும் மிகப்பெரிய அளவில் வாசிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுதான் ஆச்சரியம். பள்ளிப் புத்தகங்கள் வாசிப்பு என்பது குறைவானதாக இருந்தபோதிலும், ஆய்வு நோக்கில் தந்தை பெரியார் கடைசிவரையில் படித்துக்கொண்டே தானிருந்தார்.

தந்தை பெரியாரின் நண்பர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதியும், மதுரைத் தமிழ்ப் பேரகராதிகளும் ஆகும். எப்பொழுதும் தந்தை பெரியார் அவர்களின் அருகிலேயே அவை இருக்கும்; வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், அவற்றைத் துருவிக்கொண்டே இருப்பார் பெரியார்.

முக்கிய குறிப்பு என்று தாம் கருதுவதை, புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் அதன் பக்க எண்களைக் கைப்பட எழுதி வைத்துக் கொள்வார்கள். எந்தப் பொருளைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் அதன் வேர்ச் சொல் என்ன? அதன் பொருள் என்ன? எப்படி மருவியது என்கிற அளவுக்கு அதன் மூல வேருக்கே செல்வதுதான் தந்தை பெரியாரின் வாசிப்பு என்னும் ஆய்வு முறையாகும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர்அண்ணா அவர்கள் அழகான வார்த்தைகளால் படம் பிடித்தார் - மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர்முறை என்பார் அண்ணா. எதை விமர்சித்தாலும், எதிர்த்தாலும் அதன் மூலபலத்தில் கைவைக்கக் கூடிய நுண்மாண் நுழைபுலத்தின் காதலர் அவர்.

நான் சாதாரணமாக ஒரு வெறும் பேச்சாளியல்ல, அல்லது விசயங்களை எல்லாம் படித்து அறிந்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும்படியான அறிவாளி அல்ல; நான் ஒரு கருத்தாளி. உலகத்தைப் பார்த்து எப்படி நடந்தால் அவர்களுக்கும் நல்லது - நாட்டுக்கும் நல்லது என்று தான் சொந்தமாகக் கொண்ட கருத்தினைக் கூறி வருபவன் என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார்கள்.

சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநராகவும் அதன்பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தவருமான ஏ.எஸ்.பி.அய்யர், சென்னை சட்டக் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில், உரையாற்றிட தந்தை பெரியார் வந்தபோது (10.2.1960) தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்:-

கீழை நாடுகளைப் பற்றி பெட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும் பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம்; தங்கள் கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில், மேற்கோள் காட்டிப் பேசாமல், தன்னறிவையே முன்னிறுத்திப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான் என்றாரே!
திருக்குறளையும், திருவள்ளுவரையும் பற்றிப் பேசும் போதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவரும் சொல்லி யிருக்கிறார் என்று சொல்லுவாரே தவிர, திருவள்ளுவர் சொன் னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. அந்தத் திருக்குறளுக்காக - மக்கள் மத்தியில் அதைக் கொண்டு செல்லுவதற்காக முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தான்!
திருவள்ளுவர் கூறும் விதி என்பது, ஊழ் என்பதுபற்றி எல்லாம் தனித்தன்மையாக பொருள் கூறியுள்ளார் பெரியார்.

ஊழ் என்பது சிலருக்குப் பிறவியிலேயே அமைந்த குணம். இதில் சிலவற்றை மாற்றலாம்; மாற்ற முடியாமலும் போகலாம். இதைத்தான் திருவள்ளுவர் ஊழ் என்று குறிப்பிடுகிறார் என்கிறார் தந்தை பெரியார்.

எழுபிறப்பு என்று திருவள்ளுவர் கூறுவது ஏழு ஜென்மமல்ல. ஒருவன் கொண்டுள்ள குண மாற்றங்களைத்தான் அவ்வாறு வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒருவனைப் பார்த்து அவன் புது மனிதனாகிவிட்டான் என்று சொல்லுவ தில்லையா? அதுபோலத்தான் என்று கூறுகிறார் அந்தக் கொள்கைக் கோமான்.


திராவிடம் என்பது எப்படி வந்தது? பலரும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், நான்காம் வகுப்பே படித்த தந்தை பெரியார் அவர்களோ எல்லோருக்கும் புரியும்படியாக பளிச்சென்று சொல்லுகிறார். திரு இடம் என்பதுதான் திருவிடமாகி திராவிடம் என்பதாகிவிட்டது என்று கூறுகிறார்.

இராமாயணத்தை எத்தனையோ ஆண்டுக் காலமாக எண்ணற்றோர் வாசித்துக் கொண்டு தானிருக்கின்றனர்.

தந்தை பெரியாரும் வாசித்தார். தந்தை பெரியார் அவர்கள் போல் பல்வேறு இராமாயணங்களையும் வாசித்தவர்கள் அரிதி னும் அரிது. அவர் வாசிப்பு என்பது அவரைச் சார்ந்ததல்ல - மக்களைச் சார்ந்தது. மக்களின் அறிவுப்புலத்தில் ஆழமான சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பக் கூடியது. இராமா யணத்தின் மீது பெரியார் மேற்கொண்ட வாசிப்பின் பலன் இராமாயணப் பாத்திரங்கள் என்றும், இராமாயணக் குறிப்புகள் என்றும் இரு நூல்களாக வெளிவந்துள்ளன.
இராமாயணப் பாத்திரங்கள் - எனும் நூல் ஆங்கிலத்தில் ஸிணீனீணீஹ்ணீஸீணீ - கி ஜிக்ஷீமீ ஸிமீணீபீவீஸீரீ எனும் தலைப்பிலும் இந்தியில் ச்ச்சு இராமாயணம் எனும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன.
இராமாயணத்தை வாசித்த பெரியார் அடிப்படையில் ஒரு வினாவை எழுப்புகிறார். அது ஆணிவேரையே வீழ்த்தக் கூடியதாகவும், அஸ்திவாரத்தையே பிளக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
திரேதாயுகத்துக்கு உண்டான வருஷம் 12,96,000தான். ஆனால் அந்த யுகத்தில் இராவணன் 50 லட்சம் வருடங்கள் ஆண்டிருக்கிறான்  என்பது இராமாயணக் கதையின்படி உள்ள சேதியாகும். 13 லட்சம் வருடத்திற்கு உள்பட்ட ஒரு யுகத்தில் நடந்த செய்கை 50 லட்சம் வருடம் நடந்ததாக இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பினார் - அந்த வெண்தாடி வேந்தர். பல்வேறு இராமாயணங்களைப் படித்துத் திளைத்த தலைவர் பெரியார் அவர்கள் பொதுக் கூட்டங்களில் சில பகுதி களைப் படித்துக் காட்டி பொதுமக்கள் மத்தியில் தம் விமர்சனத்தை வைப்பார்கள்.
அதன் விளைவு என்னாயிற்று? அவர் எடுத்துக்காட்டிப் பொதுக்கூட்டங்களில் படித்துக் காட்டிய பகுதிகளை அடுத்த பதிப்பில் எடுத்துவிட்டனர் என்பதுதான்.

தந்தை பெரியார் புத்தக வாசிப்பு என்பது மக்கள் மத்தியிலே மாபெரும் மாற்றத்தை - மறுமலர்ச்சியை மலரச் செய்வதற்கான காரணிகளாக அமைந்தது என்பது தனிச் சிறப்பாகும்.


கல்விக்கூடப் படிப்பு குறைவாக இருந்தாலும் அவர் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ஸிமீஸ்ஷீறீ முதலிய ஏடுகளுக்கு ஆசிரியராகவும் இருந்தார். விடுதலை ஏட்டைத் தொடங்கி நடத்தினார். திரையுலகில் நகைச்சுவைத் தேனில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் எனது குருநாதர் பச்சை அட்டைக் குடிஅரசு என்று கூறியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் மட்டுமல்ல - கோடிக்கணக்கான மக்களின் மூளையில் குடிபுகுந்து புரட்சி விதைகளை விதைத்தது. அறிஞர் அண்ணா, ஆசிரியர் வீரமணி போன்ற எண்ணற்ற படித்தவர்களையும், பாமரர்களையும்கூட சுண்டி இழுத்தது.

மூப்படைந்த நிலையில் படிப்பதற்குச் சிரமமான அந்த நிலையில்கூட, எழுத்துகளைப் பெரிதுபடுத்திக் காட்டும் லென்சை வைத்துப் புத்தகங்களை வாசித்தார் என்றால் சாதாரணமா? தமிழ், ஆங்கிலச் செய்தி ஏடுகளை விடாமல் படித்துத் தீர்த்துவிடுவார். படித்த பல பகுதிகளில் கோடிடுவ துண்டு. சிலவற்றைக் கத்தரித்து தனி நாட்குறிப்பில் வைத்துக் கொள்வார் - பொதுக் கூட்டங்களில் தேவைப்படும்பொழுது அதனை எடுத்துக்காட்டியும் விளக்குவார். எந்தப் புத்தகங்களை வாசிப்பது என்பது குறித்தும் அவர் கூறியுள்ளவை:
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவதற்கு. ஆனால் நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும் மூட நம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம்மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.
நீங்கள்  குடிஅரசு பகுத்தறிவுப் பதிப்பகப் புத்தகங்கள் வாங்கிப் படித்தால், கட்டாயம் பகுத்தறிவுவாதிகளாவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தம் நினைவு நாளான இன்று அவர்களின் புத்தக வாசிப்புக் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரத்த முறையில் சிந்திப்போமாக!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
------------------------------------தந்தை பெரியார் நினைவு நாள் உரையாக 24.12.2014 இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம் அவர்கள் ஆற்றிய உரை இது  --”விடுதலை”  04-01-2015

6.1.15

விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


    சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் :

    விவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை


    நூல்: கடவுளின் கதை - பகுதி IV
    ஆசிரியர்: அருணன்
    வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
    69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
    சிம்மக்கல், மதுரை - 625 001.
    தொலைப்பேசி: 0452-2621997
    பக்கங்கள்: 288
    விலை: ரூ.200/-

    நாடறிந்த முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களது கடவுளின் கதை மிக்ஷி _ என்ற அரிய ஆராய்ச்சி நூல் _ நான்காம் தொகுதி மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

    முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டில் எப்படி மேற்கிலும் கிழக்கிலும் கடவுள் _ மதப் பரப்புகள் - புரட்டுகள் - திட்டமிட்டு நடைபெற்றன. எதிர் சிந்தனையாளர்களின் கருத்துப்போரும் அறிவாயுதங்களும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல வாத ஆதாரங்களை முன்னிறுத்தி மிக சுவையான, ஆழமான, ஆய்வு நூலாக இந்நூல் - வழமைபோல் அமைந்துள்ளது!

    விவேகானந்தர் இப்போது ஆர்.எஸ்.எஸுக்குக் கிடைத்த அருமையான மயக்க பிஸ்கட் ஆகும்.

    படித்த நம்மில் பலரே இதில் மயங்கி வருகின்றனர்; அவர்களது மயக்கம் தெளிந்து சரியான புரிதல் பார்வையைப் பெற இந்த நூல் விவேகானந்தரை மிகவும் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்துப் புரியவைத்துள்ளது.
    அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்இது.
    பேச்சாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கையேடுபோல் பயன்படக் கூடும்.
                                                           -------------------------- ஆசிரியர் கி.வீரமணி
    அந்நூலின் ஒரு பகுதி:
    கல்கத்தாவில் 1863இல் ஒரு பாரம்பரியமான காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார் நரேந்திரநாத் தத்தா. தந்தையார் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நரேந்திராவுக்கு பிரம்மோ சமாஜ இயக்கத்தில் பற்றுதல் ஏற்பட்டது. அதன் வருணாசிரம மறுப்பு, பிரம்மோ இறையியல் அந்த பிராமணரல்லாத மாணவரை  ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இதை ராமகிருஷ்ணரைப் பற்றிய பதிவுகளைத் தந்த மகேந்திரநாத் குப்தா இப்படியாகக் குறிப்பிட்டுள்ளார்: பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு வாலிபரைப் பார்த்து பல விஷயங்களை ஆனந்தமாகப் பேசினார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வாலிபர் நரேந்திரா. அவர் கல்லூரி மாணவர்; சாதாரண பிரம்மோ சமாஜத்திற்கு அடிக்கடி செல்பவர்.

    விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள நிகிலானந்தாவும் இப்படிச் சித்தரித்துள்ளார்: நரேந்திரா நவீன உணர்வின் அடையாளமாக இருந்தார். பிரம்மோ சமாஜத்தின் விசுவாசமான உறுப்பினர் என்ற முறையில் இந்து மதத்தின் உருவ வழிபாடு மற்றும் இதர சடங்குகளை அவர் விமர்சித்து வந்தார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே குருமார்கள் தேவையில்லை என்று நினைத்தார். கடவுள்கள் மற்றும் தேவதைகள் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனங்களை அவர் கேலி செய்தார், அவை பொய்த்தோற்றங்கள் என்றார்.

    கேசவ சந்திரசென், விஜய் போன்ற பிரம்மோ சமாஜத் தலைவர்கள் ராமகிருஷ்ணரைச் சந்தித்து வந்தார்கள் என்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட சூழலில்தான் 1881 நவம்பரில் அவரை நரேந்திராவும் சந்தித்துப் பேசினார். அவரது ஆற்றலைச் சட்டென்று உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ணர் அவரைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவர முடிவு செய்தார்; குறிவைத்து வலை விரித்தார். தனது சீடர் (நரேந்திரா) சென்றிருந்த பிரம்மோ ஆலயத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் சென்றார். அவர் சென்றபோது நரேந்திரா மற்ற பிரம்மோக்களுடன் சேர்ந்து பாடிக்-கொண்டிருந்தார். நரேந்திராவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள் வந்தவராக ஆடினார். கூடியிருந்தவர்கள் பார்வையெல்லாம் அவர் மீது திரும்ப, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று விவரித்துள்ளார் நிகிலானந்தா.

    பிரம்மோ சமாஜக் கூட்டத்திற்கே சென்று நரேந்திராவை இப்படியாக அங்கிருந்து இழுத்துவரும் வேலையில் இறங்கினார். அப்படியும் நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணரின் வலையில் விழவில்லை. உலகம் மாயை, பிரம்மம் எனப்பட்ட கடவுள் ஒன்றே மெய்ப்பொருள் எனும் அத்வைதம் அவருக்கு இயல்பானதாகப் படவில்லை. பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த இரும்புக் கம்பத்தில் தனது தலையைப் பலமுறை மோதி இந்த உலகம் மெய்யா அல்லது மனதின் மாயையா என்று சோதனை செய்தார் என்கிறார் நிகிலானந்தா. நிச்சயம் உலகம் மாயை அல்ல என்பதை நெற்றிப்-பொட்டின் வலி காட்டிக் கொடுத்திருக்கும்!

    அப்படியும் முடிவில் நரேந்திரா ராமகிருஷ்ணரின் அத்வைதத்தையும், காளி வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார் என்றால் அதற்குச் சிந்தாந்தக் காரணமும், வாழ்வியல் காரணமும் இருந்தன. அந்த 19 வயது இளைஞர், சந்திக்கிற பெரிய மனிதர்களிடம் எல்லாம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டு வந்தார். பிரம்மோ சமாஜத்தின் தேவேந்திரநாத் தாகூரிடம் அப்படிக் கேட்டபோது அவர் பேச்சை மாற்றிவிட்டார்.

    அதே கேள்வியை ராமகிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் சொன்னார்: ஆமாம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பார்ப்பது போல, சொல்லப்-போனால் இதையும்விடத் தெளிவாக அவரைப் பார்க்கிறேன். கடவுளைப் பார்க்க முடியும், அவரோடு பேச முடியும். ஆனால் கடவுளைப் பார்க்க யார் பிரியப்படுகிறார்கள்? தங்களது மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுக்குத்-தான் மனிதர்கள் குடம்குடமாகக் கண்ணீர் விடுகிறார்களே தவிர கடவுள் தரிசனத்திற்காக யார் அழுகிறார்கள்? கடவுளுக்காக ஒருவன் உண்மையில் கதறினால் நிச்சயம் அவரைக் காண்பான். இந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோனார் நரேந்திரா.

    விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்று மரணத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பாமரர்களும் ஜாக்கிரதை-யாகவே பேசி வந்த இந்த நாட்டில் மகான்கள் எனப்பட்டோரே இப்படிச் சொல்லும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றிருந்தார்கள். கடவுள் எனும் கற்பிதத்தைக் கண்ணாரக் கண்டதாகச் சொன்னால் அதன் அர்த்தம் அந்தக் கற்பிதத்தின் மீது அவர்களுக்கிருந்த உறுதி-தானே தவிர புலனறிவால் ஒரு பவுதீக வஸ்துவைப் பார்த்த அர்த்தம் அல்ல என்று பின்னர் விளக்கினால் யாரால் மறுக்க முடியும்?

    அந்தத் தைரியம்தான் அவர்களை இப்படிப் பேச வைத்தது. அது மட்டுமல்ல, உண்மையில் கதறினால் என்று ஓர் இக்கு வைத்திருப்-பதையும் கவனிக்க வேண்டும். கடவுளின் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஒரு பக்தன் புகார் கூறினால் இந்த நிபந்தனையை நினைவுபடுத்தியும் அவர்களால் சமாளிக்க முடியும். உண்மையில் என்பதற்கு யாரால் இலக்கணம் தர முடியும்? இப்போதும்கூட நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணர் பின்னால் சென்றுவிடவில்லை. அவருக்கும் பிரம்மோ சமாஜத்திற்கும் இடையே அல்லாடினார். அந்தச் சமயத்தில்தான் - 1884இல் - அவரது தந்தையார் அகால மரண-மடைய, அவரது குடும்பம் நடுத்தெருவில் நின்றது பணச்சிக்கலில்மாட்டி. அதில் திகைத்துப்போன நரேந்திரா தனது குடும்பத்திற்காகக் காளியைப் பிரார்த்திக்குமாறு வேண்டினார் ராமகிருஷ்ணரிடம். அவரோ மிகச் சாதுரியமாக அவரையே நேரடியாகப் பிரார்த்திக்கச் சொன்னார். நரேந்திரா துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் விரும்பினார். அப்படி-யெனில், தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் நரேந்திரா. காளியைப் பிரபஞ்சத்தின் தெய்வத் தாயாக ஏற்றுக் கொண்டவர், அவளின் பக்தராக மாறினார் என்று விளக்கியிருக்கிறார் நிகிலானந்தா. வாழ்வின் எதிர்பாராத துயரங்கள் மனிதர்களை கடவுள் நம்பிக்கை-யாளர்-களாக மாற்றுகின்றன என்றால், அத்தகைய துயரம் ஒன்று இங்கே ஒரு பிரம்மோவை உருவ வழிபாட்டாளராக மாற்றியது! இதற்குப் பிறகு பிரம்மோ சமாஜத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை நரேந்திரா. அந்த சமாஜத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியில் இப்படியும் வெற்றிபெற்றார் ராமகிருஷ்ணர்.

    * * *
    1889 இறுதியிலிருந்து நரேந்திராவும் அப்படியொரு பாரத யாத்திரையை மேற்கொண்டார்.

    இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இந்து சமஸ்தானங்களாகப் பார்த்து அவர் விஜயம் செய்தது, அவற்றின் ராஜாக்களைச் சந்தித்து அளவளாவியது. அவர்களில் பெரும்பாலோர் இந்துப் பழமைவாதிகளாக இருந்தார்கள்; இவரை அன்போடு உபசரித்து மகிழ்ந்தார்கள். மேற்கத்திய நவீனக் கல்விக்கு ஆட்பட்டு இந்துப் பழமைவாதத்தை சில ராஜாக்கள் விமர்சித்தபோது அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை நரேந்திரா. அல்வார் மகாராஜாவை 1891 பிப்ரவரியில் சந்தித்தபோது அவர் உருவ வழிபாட்டைக் கேலி செய்ததை இவர் கேட்கவும் சகிக்கவில்லை. அவருக்குப் புத்தி புகட்டி அங்கிருந்து புறப்பட்டார்.

    கத்தியவார் ராஜாதான் இவரை மேற்குலகிற்குப் பயணம் செய்யுமாறு முதலில் ஆலோசனை சொன்னவர். அத்தகைய ஆலோசனையை ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி மூலமும் கேட்டார் நரேந்திரா. அமெரிக்காவில் நடக்கவிருந்த மதங்களின் நாடாளுமன்றம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் அவர் கூறினார்.

    கேத்ரி ராஜாவின் வேண்டுகோளின்படிதான் விவேகானந்தர் எனும் பெயரைச் சூட்டிக்-கொண்டார் நரேந்திரா. இதே ராஜா பட்டுக் காவி ஆடை, காவித் தலைப்பாகை, பெரிய பணமுடிப்பு, 1893 மே 31இல் கிளம்பவிருந்த எஸ்.எஸ்.பெனின்கலார் கப்பலில் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் என்று கொடுத்துதவினார் என்கிறார் நிகிலானந்தா. இந்த ராஜாக்களின் உதவி மட்டுமல்லாது இன்னும் மைசூர் மகாராஜா மற்றும் சமஸ்தானங்களது மந்திரிமார்களின் உதவியும் விவேகானந்தருக்கு இருந்தது என்கிறார் அவரே. ஆக, பாரதத்தின் பக்கா பழமைவாத நிலப்பிரபுத்துவ குறுநில மன்னர்களின் பிரதிநிதியாகத்தான் மனிதர் மேற்குலகிற்குப் பயணித்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவைக் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததன் நானூறாவது ஆண்டு விழாவை ஒட்டி அங்கே பலவித நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அப்படியொரு நிகழ்ச்சிதான் சிக்காகோ நகரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றம் எனும் கூட்டம். அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதில் பலரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று விளித்துப் பேசியபோது விவேகானந்தர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அழைத்துப் பேசியது இன்றளவும் பெரிதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அங்கே அவர் பேசிய பேச்சுகளைப் படித்துப் பார்த்தால் அப்படியொன்றும் சகோதரத்துவம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடியதாகத் தெரியவில்லை. அவருடைய கவலை எல்லாம் பாரதத்தில் நடந்து வந்த கிறிஸ்தவ மத மாற்றமே, அதைத் தடுக்க பிராமணிய இந்து மதத்தின் பெருமைகள் எனப்பட்டவற்றைப் பறைசாற்றுவதே. அந்தக் காரியத்தையே திறம்படச் செய்தார். அதனாலேயே அவரது அமெரிக்க விஜயத்தை அன்றும் இன்றும் இந்துப் பழமைவாதிகள் புகழ்ந்துரைக்கிறார்கள்.

    செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சின் தலைப்பே இந்தியாவின் உடனடித் தேவை  மதம் அல்ல என்பதுதான். அதாவது கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றார். பேச்சைக் கேளுங்கள்: பரசமயத்தவரின் ஆன்மாவைக் காப்பாற்ற மிஷனரிகளை அனுப்புவதில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மிக ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் பசியிலிருந்து அவர்களது உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது?

    இந்தியாவில் கொடூரமான பஞ்சங்களின்போது பசியால் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோகிறார்கள். அப்படியும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏதும் செய்வதில்லை. இந்தியா முழுக்க நீங்கள் தேவாலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இந்தியர்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு மதத்தைக் கொண்டிருக்கிறார்கள். எரியும் இந்தியாவின் கோடிக்கணக்கான வறியவர் தொண்டை வறளக் கத்துவது ரொட்டிக்காகத்தான்.

    இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது நிவாரணம் தந்தவர்கள், கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளே என்பது வரலாற்று உண்மை.

    இந்துமடாதிபதிகள் அப்படியெல்லாம் பஞ்ச நிவாரண வேலையில் இறங்கியதில்லை. பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதே சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் வழி என தர்ம சாஸ்திரங்கள் சொல்லியதை அட்சரம் பிசகாமல் பின்-பற்றினார்கள்.

    அடித்தட்டு ஜாதியினர் பஞ்சத்தால் செத்தால் அது அவர்களது பூர்வஜென்ம வினை. அதில் தாங்கள் தலையிடக் கூடாது என்றிருந்தார்கள்.
    அமெரிக்காவுக்குப் போன விவேகானந்தரோ கிறிஸ்தவ மிஷனரி-களின் பணிகளை அப்படியே மூடிமறைத்துப் பேசினார்.

    ஓர் உண்மையை மட்டும் ஒப்புக்கொண்டார். இங்கே பஞ்சகாலத்தில் பாமரர்கள் பசியால் மாண்டார்கள் என்பதை. ஆனால் அப்போது அவரது பெருமைமிகு இந்து மதம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த அந்நியர்களிடம் ரொட்டிக்காக இவரும் சேர்ந்து கையேந்த வேண்டிய நிலை ஏன் வந்தது என்றும் சொல்லவில்லை.
    அவரது கவலை எல்லாம் அவரது சொந்த மதத்தை _ பசியால் வாடினாலும் கோடிக்கணக்கான இந்தியர்-களுக்குச் சோறு போடாத பிராமணிய மதத்தை _ கட்டிக் காப்பதுதான். அதைச் சரியவைக்கும் வேலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது என்றவர், மாற்று வழியாக ரொட்டி கொடுக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்! ஆதாயம் இல்லாமல் யாரேனும் உபகாரம் செய்வார்களோ அடுத்த நாட்டவருக்கு என்பதையும் மறந்தார்!


    தனது சொந்த மதம் தனது சொந்த மக்களுக்குச் சோறு போடவில்லை என்பதை நாசூக்காக மறைத்துவிட்டு அதன் பெருமை-களை எடுத்தோத ஆரம்பித்தார் அமெரிக்கர்-களுக்கு.சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக இருக்கின்றனவோ அந்த உயர் ஆன்மிகமாகிய வேதாந்தத் தத்துவம் முதல் பலவித புராணங்களைக் கொண்ட தாழ்நிலையான உருவ வழிபாடு வரை, பவுத்தர்களின் அறியொணாவாதமும் சமணர்-களின் நாத்திகமும் என்று சகலமும் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன என்று ஒரு போடு போட்டார். நவீன விஞ்ஞானங்கள் எல்லாம் தங்கள் வேதங்களில் இருப்பதாக மார்தட்டுகிற இந்துப் பழமைவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முன்னோடி விவேகானந்தர். எல்லாம் வேதங்களில் உள்ளன என்றால் ஏன் நீராவிச் சக்தியையும், அதில் இயங்கும் இயந்திரங்களையும், அதில் ஓடும் ரயிலையும் இந்து அறிவுஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் அவரும் விளக்கவில்லை, அவருக்குப் பின்பு வந்தவர்களும் விளக்கவில்லை. மற்றொரு பொய்யுரை பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று அவர் பேசியது. அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ததை, முதன்முதலில் நானாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதைத் திட்டமிட்டு மறைத்தார். இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.
    இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். காணுங்கள் அதை: இந்துக்களின் மதம் இரு பகுதிகளைக் கொண்டது.

    அவை: 1. சடங்குப் பூர்வமானது. 2. ஆன்மிகப் பூர்வமானது.

    பிந்தியதைத் துறவிகள் சிறப்பாக ஆராய்கிறார்கள். அங்கே ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும், மிகத் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும் இந்தியாவில் துறவியாகலாம்; இரண்டு ஜாதிகளும் சமமாக மாறுகின்றன. மதத்தில் ஜாதி இல்லை; ஜாதி என்பது ஒரு சமூக நிறுவனமே. (செப்.26இல் நிகழ்த்திய உரை)
    ----------- மேலும் அறிய, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

    ஆஸ்.எஸ்.எஸ். ஒப்பனை கலைகிறது!



    ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடைபெறும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் நடவடிக் கைகள் குறிப்பாக, கல்வித் துறையில் அதன் பிடியை நாளும் இறுக்கி, நெருக்கி வருகிறது.

    சமஸ்கிருதத்தை எப்படியும் இந்தியாவின் பொது மொழியாக்கிட, திட்டமிட்ட ஊடுருவல் களும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவ னங்களும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் மாணவர் பிரிவான ABVP
    என்ற  அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தும் இணைந்து பல்வேறு வட்டார மாநாடுகள் கருத்தரங்கங்களை ஏதோ கல்விப் பிரச்சினைகள், கல்வித் தரம், உயர் கல்வியைப் பரப்புவது போன்ற வெளி வேஷத்தை போட்டு உள்ளுக்குள் ஆர்.எஸ். எஸ்.சின் ஹிந்து ராஷ்டிர, பத்தாம் பசலித்தன கொள்கைகளை கல்வித் திட்டங்களாக்கி, நாட்டின் இளைஞர்களின் மூளைகளில் காவிச் சாயத்தை ஏற்படுத்த மிகவும் தந்திரமான வித்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்!


    விவேகானந்தரை முன்னிலைப்படுத்தி, அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு மாணவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது போன்ற சூழ்ச்சிப் பொறி வைப்பது; வேதங்களில் விமானம் செய்வது, ஓட்டுவது முதற்கொண்டு ஏராளம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது; பரத்வாஜ் மஹராஜ் என்ற வேத ரிஷி இவைகளையெல்லாம் புட்டுப்புட்டு அக்காலத்திலேயே எழுதியுள்ளார் சமஸ்கிரு தத்தில்  என்று மும்பையில் கூடிய விஞ் ஞானிகள் மாநாட்டில் - சயின்ஸ் காங்கிரசில் ஏதோ மிகப் பெரிய கண்டுபிடிப்பு போல படிப்பது; அதை ஊடகங்களில் ஊதி ஊதிப் பெருக்குவது,


    வரலாற்று ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள் மாநாட்டிலும், புராணக் குப்பைகளைக் கொட்டி, ஏதோ நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களுக்கே, பிளாஸ்டிக் சர்ஜரி, (ஸ்டெம் செல்) மரபணு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் முனிவர்களாலும், இதிகாச புராணங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன என்று உளறுகிறார்கள்.


    சர் அய்சக் நியூட்டன், புவி ஈர்ப்பு (Law of Gravitation)  சக்தியை கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேதங்களில் இருக்கின்றன என்பதுபோல ஏதோ பெரிய ஆய்வுக் கண்டுபிடிப்புபோல சில ஸ்லோகங்களை வைத்துப் பேசுவது, காங்கிரஸ் பார்ப்பனராக இருக்கும் சசிதரூர் போன்ற பூணூல்களும் (இவருக்குள்ள நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பி.ஜே.பி.யுடன் இணைந்து கொள்ள இவருக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு போலும்), போன்றவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூறுவதில் பொருள் உண்டு; அலட்சியப்படுத்தக் கூடாது என்று ”ஜால்ரா” அடிப்பது - தெளி வாகிறது.

    மீண்டும் இந்த நாட்டை ஹிந்து ராஜ்ய மாக்குவது என்ற பெரிய பார்ப்பன ஆரிய சாம்ராஜ்யமாகவே மாற்றிக் காட்ட அனைத்து முயற்சிகளிலும் அசராமல் ஈடுபட்டுள்ளனர்.


    ஆட்சிக்கு வந்து 7 மாதங்களே ஆன நிலையில், சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமாகி - ஆரிய பார்ப்பனமயமாகி வருகிறது-


    பாரம்பரிய முறையில் பெரும் பகுதியாக உள்ள மலைவாழ் மக்களின் முதல்வர் உரிமைகூட, மெல்ல சத்தீஸ்கரில் மாற்றப்பட்டு விட்டது! வளர்ச்சி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ அமைப்பு, ஆட்சி அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி தன்னை வளர்க்க மிகப் பெரிய திட்டத்தைப் போட்டு முழு மூச்சில் இறங்கி விட்டது!


    அகமதாபாத்தில் ஓர் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன்பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை கிராமங்களில் பரப்ப வேண்டும்; முன்பு ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? எதற்கு இவர்கள் கையில் தடியோடு வரிசை யாக செல்கின்றனர்? என்று கேட்ட மக்கள் நம்மைப் பற்றி இப்போது நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.


    ஆரியக் கலாச்சாரம்தான் இந்தியாவின் அடையாளத்திற்கும் இந்தியப் பாரம்பரியத் திற்கும் அடிப்படை ஆகும்.


    (“The Aryan Culture was the basis of the Indian tradition and Indian identity”  - ‘The Hindu’ 5.1.2015 page 12)
    Any one born in India is a Hindu,

    இந்தியாவில் பிறந்த எவரும் இந்துவே! என்று பேசியுள்ளார்.

    என்னே அமுத மொழிகள்!


    ஆரிய வெறி அப்பட்டமாக வெளிச்சம் போட்டு ஆட்டமாடுகிறது! பலே பலே!

    இணையத்தில் குஜராத் வளர்ச்சி - வேலை வாய்ப்பு - இந்தியாவில் என்று புதுமுகம் மோடிக்கு ஏமாந்து வாக்களித்து விட்டு, இப்போது கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொண்ட இணைய இளைஞர்களே, இனியாவது இவர்களைப் புரிந்து கொண்டு, பாடம் பெறுங்கள் - விழிப்படையுங்கள்.

       --------------- ஊசி மிளகாய் 5-1-2015 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

    4.1.15

    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்

    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - தந்தை பெரியார்
    பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு  - தந்தை பெரியார்
    தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது. எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.


    தங்களது தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்விகளை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!


    தேர்தல் நடக்கிற அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும் ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான் ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின்றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.

    மாணவர்களுக்குச் சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது. வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால் அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.


    இக்காரியங்களைக் காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான் கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.


    தற்போது சில மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும் மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

    இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை மூடியது.


    நாளைக்குக் காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.


    ஜனசங்கம் முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும், ஒரு சில நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப் பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.


    1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள். மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக் காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம் கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும் அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார். மக்களிடையே ஆதரவு பெருகியது.


    அவர் போய் இவர்கள் ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக்கவே முடியாத பதவி உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று வருகின்றன.


    நம் இளைஞர்கள் எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில் மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க்கிறார். அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது.

    என்னைப் பொறுத்த வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!


    இன்றைக்கு முன்னேற்றக் கழகத்திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற  உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல்  வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


    மாணவர்களை நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.


    இன்று நம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.


    உத்தியோகங்களால் நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு ஒழிகிறதே!

    இது நம் நாடு- நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம் தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும். அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.


    --------------------------------22-11-1970 அன்று காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -"விடுதலை", 6.1.1971.