tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8545722876420895507..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! - 25தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6497243018974434872012-01-01T17:37:33.308+05:302012-01-01T17:37:33.308+05:30இன்றே துவங்குவோம்!
இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண...இன்றே துவங்குவோம்!<br /><br /><br />இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. உலகம் ஓர் குலம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அரிய தத்துவத்திற்கு அருமையான வாழ்வாதாரம் இது!<br /><br />அது மட்டுமா? ஆங்கிலமும் தமிழும் நமக்கு இரு விழிகள்; தாய் மொழி நமது வீட்டின் கதவுகள் என்றால், ஆங்கிலம் உலகத்தை அறிந்து கொள்ளச் செய்யும் சாளரங்கள் அல்லவா?<br /><br />சுதந்தரச் சிந்தனை, பல்நோக்கு, அடிமைத்தளைக்கு எதிரான போர்க் குரல், உரிமைக்குரல், தாராள மனப்பான்மை - இவை எல்லாம் ஆங்கிலம் படித்த தினால் வேகமாக உருவாகிய செயல் திறன் ஆகும்.<br /><br />காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நம்மை நாகரிகப் படுத்திடும் அறிவியலுக்கு ஆங்கிலம் அல்லவா நுழைவு வாயில்? எனவே ஆங்கிலப் புத்தாண்டை தமிழர்கள் திராவிடர்கள் கொண்டாடலாமா? என்று கேட்போர் ஒன்று விவரமறியாதோர்; இன்றேல் விஷமக்காரர்கள்!<br /><br />இந்த புத்தாண்டில் பல பேர் உறுதிகள் எடுத்துக் கொள்ளுவது வழமை. பலர் சில நாள்கள் அதனைக் கடைப்பிடித்து பிறகு, மெல்ல மெல்ல அதனைக் கை விட்டு விடுவதும் உண்டு. ஆனால் சிலரோ மாறியவர்களாகவும், ஒரு எடுத்த முடிவைக் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நம் பாராட்டுதலுக்குரியவர்கள். மற்றொல்லா உறுதிகளை விட ஒரு எளிய ஆனால் பெரிய உறுதியை நாம் அனைவரும் எடுக்க முன்வர வேண்டும்.<br /><br />நன்றி காட்டுதலை நம் வாழ்வின் முக்கிய மூச்சுக் காற்றாக்கிக் கொள்வோம் என்றே உறுதி செய்தல் மிகவும் முக்கியம் ஆகும். எவர் எத்தகைய உதவி செய்தாலும் அது சிறியதானாலும், பெரியதானாலும் உடனடியாக அதற்கு நன்றி கூறிடத் தயங்கக் கூடாது.<br /><br />நன்றி என்பது பயனடைந்தவர் கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது; அப்படி எதிர் பார்த்தால் அது சிறுமைக் குணமே என்றார் தந்தை பெரியார் அவர்கள். அது மனதில் செதுக்கப்பட வேண்டும். சிறு குழந்தை களுக்கும்கூட முதலில் வீடுகளில் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய முதல் வார்த்தையே நன்றி - ஆங்கிலத்தில் Thanks என்பதாகும். நன்றி காட்ட மறந்த மக்களாலோ, சமுதாயத்தாலே ஒரு போதும் ஒரு நாளும் முன்னேறவே முடியாது. எனவே புது ஆண்டின் தொடக்க முதலே இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும், குழந்தைகளைவிட பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.<br /> ---கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து.. 1-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-956832007373968342012-01-01T17:34:31.614+05:302012-01-01T17:34:31.614+05:30என்னே தமிழ்ப்பற்று!
திராவிடர் கழகத் தலைவர்: செல்...என்னே தமிழ்ப்பற்று!<br /><br /><br />திராவிடர் கழகத் தலைவர்: செல்லும் ஆண்டு, பல்வேறு அதிர்வுகளையும், வேதனைகளையும் மக்களுக்குத் தந்த சோதனை மிக்க ஆண்டாக அமைந்தது. வருகிற புத்தாண்டு, அனைவருக்கும், அனைத்தும் தரும் சாதனைமிக்க ஆண்டாக அமையட்டும்.<br /><br />டவுட் தனபாலு: ஓட்டு வாங்கி அரசியல் நடத்துற கட்சித் தலைவர்கள் தான் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்றாங்கன்னா, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழர்களுக்காகவே போராடி, தமிழினத்தையே மூச்சா வச்சுட்டு இருக்கிற, பகுத்தறிவுப் பகலவனான நீங்க எதுக்குங்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க...? - (தினமலர், 1.1.2011)<br /><br />ஏதோ இந்த ஆண்டு மட்டும் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆங்கிலப் புத்தாண்டு சொல்லுவது போல புதுக் கரடி விடுகிறதே தினமலர்? அப்பொழுதெல்லாம் எங்கே மேயப் போனது!<br /><br />ஆங்கிலப் புத்தாண்டின் போது கோயில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என்று உங்கள் சங்கராச்சாரியார் கரடியாகக் கத்தி பார்த்தாரே - நடந்ததா? வரும்படியை விடுமா இந்தத் தினமலர் பார்ப்பன அர்ச்சகர் கூட்டம்?<br /><br />அது சரி... இவ்வளவு எழுதும் இந்தத் தினமலர் கும்பல் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டி உச்சிக் குடுமியோடு திரிகிறதா - இன்னும் ஆங்கிலேயர் கலாச்சாரத்தை பேண்ட், டிசர்ட் சகிதமா திரிகிறதா?<br /><br />தமிழுக்காக, தமிழர்களுக்காகப் பாடுபடுவது பெரியார் - அவர் வழிவந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்பதை ஒப்புக் கொண்டு விட்டது தினமலர் - பலே, பலே!<br /><br />ஆமாம், திடீரென்று தமிழ் மீது என்ன பாசம்? தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதிய இதே தினமலர் சோற்றுப் பட்டாளத்துக்கு இப்பொழுது என்ன தமிழ் மீது திடீர் கரிசனம்?<br /> ---"விடுதலை” 1-1-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com