tag:blogger.com,1999:blog-1474608369333206681.post795869090167158466..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயை கூண்டில் ஏற்றுவோம்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85873218911418170912011-04-28T17:42:08.655+05:302011-04-28T17:42:08.655+05:30உலக நாடுகள் கண் முன்பு இலங்கை போர் குற்றவாளி
உலக ...உலக நாடுகள் கண் முன்பு இலங்கை போர் குற்றவாளி<br /><br />உலக நாடுகளின் கண்கள் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளிதான் என்பதை<br />அய்.நா. மன்றம் அறிவித்திருக்கிறது. எனவே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை<br />உலகத்தின் முன்பு போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம்<br />வந்துவிட்டது.<br /><br />எம் இனம் அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை சிங்கள அரசு<br />தர மறுக்கிறது. ஆட்டிக்குட்டி ஓநாயிடம் பாதுகாப்பாக உள்ளது என்று சிங்கள<br />அரசு சொல்கிறது.<br /><br />தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு<br /><br />ஈழத் தமிழருடைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். தனி ஈழம் மலரும்<br />வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும். தனி ஈழம் வந்தாக வேண்டும்.<br />நம்மிடையே அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம்<br />ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்கள்<br />எந்தவித சுருதி பேதமும் இல்லாமல் குரல் கொடுக்க வேண்டும்.<br /><br />தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்<br /><br />இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக தமிழ் நாடு முழுக்க அனைத்து மாவட்ட<br />தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.<br /><br />இந்திய அரசு ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோகக் கூடாது. கடந்த கால<br />செயல்களுக்கு கழுவாய்த் தேட வேண்டும். இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க<br />வேண்டும்.<br /><br />மலரப் போவது தமிழ் ஈழம்தான்<br /><br />இந்தியா தமிழர்களுக்கு விரோதமான செயல்களுக்கு துணை நிற்கக் கூடாது.<br /><br />ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை<br />கவலையோடு கவனம் செலுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுடைய உரிமையை மத்திய அரசு<br />மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அடுத்து மலரப் போவது தமிழ் ஈழம்தான்.<br />தமிழ் ஈழ மாநாட்டை அடுத்து நடத்தலாம் என்று இருக்கின்றோம். மத்திய அரசு<br />மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகத்தான்<br />இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.<br /><br />ராஜபக்சேவை கைது செய்யும் வரை<br /><br />ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, உலக குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி கைது<br />செய்யும் வரை போராட்டம் ஓயாது. இது போன்ற போராட்டங்கள் தொடரும்.<br />பிறவியிலேயே ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இன்றைக்கு ஏதோ<br />ஆதரவாளர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.<br /><br />அத்தகையவர்கள் தமிழ் இனத்துக்கு துரோகிகள்.<br /><br />தமிழ் ஈழம் வருகிற வரை தமிழர்களுடைய போராட்டம் தொடரும்! தொடரும்!!<br />இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.<br /><br />தென் சென்னை மாவட்ட தி.க.தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.<br /><br />விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு,<br />பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்<br />மயிலை கிருஷ்ணன், பேராசிரியர் மங்கள முருகேசன், சாமியார் தஞ்சை முருகன்<br />போன்ற முக்கியப் பிரமுகர்களும் மற்றும் ஏராளமான தோழர்களும் இந்த<br />ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.<br /><br /> ------------------”விடுதலை” 28-4-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21982700394230106792011-04-28T17:42:02.006+05:302011-04-28T17:42:02.006+05:30சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
த...சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!<br /><br />தமிழீழம் மலர்வது உறுதி!<br />ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி கைது செய்யும் வரை ஓய மாட்டோம்!<br /><br />சென்னை, ஏப்.28- ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு.<br />தமிழ் ஈழம் விரைவில் மலரப் போவது உறுதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை<br />பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வரை தமிழர்கள்<br />ஓய மாட்டோம். இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது. எதிர்ப்பு தெரிவிக்க<br />வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர்<br />கி. வீரமணி கூறினார்.<br /><br />போர்க் குற்றவாளி ராஜபக்சேவை உலக குற்றவாளிக் கூண்டில் ஏற்றக் கோரியும்<br />ஈழத் தமிழர் மீட்சியை வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை<br />முன்பு இன்று (28.4.2011) காலை 11 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம்<br />திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.<br /><br />பல அமைப்பினர்<br /><br />இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை,<br />விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இன உணர்வுள்ள அமைப்புகளைச்<br />சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.<br /><br />ஒலி முழக்கங்கள்!<br /><br />போர்க் குற்றவாளி ராஜபக்சேவை கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும் என்பதை<br />வலியுறுத்தி ஒலி முழக்கங் களை மு.அ. கிரிதரன், பிரின்ஸ் என்னரெசு, கோ.வீ.<br />ராகவன் ஆகியோர் முழங்கினர். அதைக் கூடியிருந்த தோழர்கள் பின்பற்றி<br />ஆவேசமாக முழங்கினர். ஆர்ப்பாட் டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று<br />திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்றுப்<br />பேசினார்.<br /><br />சுப. வீரபாண்டியன்<br /><br />திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.<br />வீரபாண்டியன் தமதுரையில் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு<br />தமிழ் இன அழிப்பு வேலையை செய்ததற்காக சிங்கள இலங்கை அரசை - ராஜபக்சேவை<br />குற்றவாளி என்று உலக நாடுகள் அய்.நா. மன்றத்தின் மூலமாக முதல் அறிக்கையை<br />வெளியிட்டிருக்கின்றன.<br /><br />அதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து என்ன சொன்னார்? இலங்கை அரசை போர்<br />குற்றவாளி என்று அறிவித்ததற்காக மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி<br />அய்.நா.வுக்கு எதிர்ப்பைக் காட்டுவோம் என்று சொல்லியிருக்கின்றார்.<br />இந்தியாவுக்கு அவமானம்<br />இரண்டாவது தமிழக மக்களுக்கு வழங்கும் உதவி பாதிக்கும். மூன்றாவது<br />எங்கள் அரசுக்கு இந்தியா உதவு வதாக அறிவித்திருப்பது எங்களுக்கு<br />மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.<br /><br />இந்தியா உதவி செய்யும் என்று ராஜபக்சே கூறியிருப்பதை இந்தியா நிறுத்திக்<br />கொள்ள வேண்டும். இப்படி ராஜபக்சே கூறியிருப்பது தமிழர்களுக்கும்<br />இந்தியாவுக்குப் பெருத்த அவமானமாகும். உலகம் முழுவதிலும் இருக்கின்ற<br />தமிழர்கள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.<br /><br />ஒரு பத்திரிகை எழுதுகிறது. ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தீர்மானம்தான்<br />நிறைவேற்றியிருக்கிறது. அம்மையார் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கையே<br />கொடுத்திருக்கின்றாரே என்று எழுதியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான<br />உணர்வு கொண்ட பத்திரிகையும், அதன் ஆசிரியரும் எழுதுகிறார். தி.மு.க.<br />நிறைவேற்றிய தீர்மானத்தை இரண்டாம் தரமாக கருதி அந்த பத்திரிகையில்<br />எழுதுகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் கெட்ட எண்ணத்தை நீங்கள் புரிந்து<br />கொள்ள வேண்டும்.<br /><br />ராஜபக்சேவை சிறைக் கைதியாக ஆக்கும் வரை ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்க<br />வேண்டும்.<br /><br />இவ்வாறு அவர் பேசினார்.<br /><br />தமிழர் தலைவர் உரை<br /><br />திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்<br />ஆற்றிய சிறப்புரை வருமாறு:<br /><br />சுப. வீரபாண்டியன் சொன்னதை வழிமொழிகிறேன்<br /><br />இங்கே நமது சகோதரர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சொன்ன கருத்துக்கள்<br />அத்தனையையும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே வழிமொழிய<br />கடமைப்பட்டிருக்கின்றேன். இலங்கை புரிந்த இனப் படுகொலையை கடந்த 10<br />மாதங்களாக விசாரித்து இலங்கை அரசு ராஜபக்சே அரசு குற்றவாளி என்பதை<br />அய்.நா. மன்றம் அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் அறிக்கையை<br />வெளியிட்டிருக்கின்றது. சிங்கள இன வெறியர்கள் தமிழின அழிப்பு வேலையை<br />அங்கு நடைபெற்ற போருக்கு முன்பும் சரி, போருக்குப் பின்பும் சரி இன்றும்<br />தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35941782899236425462011-04-27T17:34:18.478+05:302011-04-27T17:34:18.478+05:30ராஜபக்சேவின் தில்லுமுல்லு!
இலங்கைத் தீவின் அதிபர...ராஜபக்சேவின் தில்லுமுல்லு!<br /><br /><br />இலங்கைத் தீவின் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் போல ஒரு தில்லுமுல்லுக்காரரை உலகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் பொய், பொய், பொய்யிலே புழுத்த புழுதான்.<br /><br />ஈழத்திலே கடைசிக் கட்ட போரிலே பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னதைவிட உலக மகாப் பொய் வேறு ஒன்று இருக்க முடியாது.<br /><br />கடைசிக் கட்டத்தில் அங்கே என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் கண்ணுக்கு எதிரே கொண்டு வந்து நிறுத்தவில்லையா?<br /><br />முள் வேலிக்குள் எந்தத் தமிழரும் இல்லை - எல்லாம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்குக் குடியேற்றப்பட்டு விட்டனர் என்று அப்பட்டமாகப் பொய் பேசவில்லையா?<br />பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான், கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள் என்பதுதான் உச்ச கட்டம். வேண்டுமானால் ராஜபக்சே பொய்யின் திலகம் என்று உலகம் தெளிந்து கொள்வதற்கு மேலும் கூடுதல் நாட்கள் தேவைப்பட்டு இருக்கலாம்.<br />இப்பொழுது எல்லாத் திசைகளும் இந்தக் குரூர மனிதன்மீது தனது அம்புகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டன.<br /><br />தொடக்கத்தில் தன் கடமையைச் செய்யத் தவறிய அய்.நா. மன்றமும் - இதற்குமேல் ராஜபக்சேவைக் காப்பாற்றிட முடியாது - அவ்வாறு செய்தால் தன் விரலைத்தானே சுட்டுக் கொள்ள நேரிடும் என்ற நிலையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்திடச் சொன்னது.<br /><br />அந்த அறிக்கை வெளிவந்துவிட்டது. உலக நீதிமன்றத்தில் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளார்.<br /><br />இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே வழக்கமான தந்திரம் ஒன்றில் ஈடுபட்டார்.<br />டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கும் உலகின் சக்தி மிகுந்த 100 முக்கியமான மனிதர்களின் பட்டியலில் ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தார். நான்காவது இடம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டார்.<br /><br />அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 2,38,908. எதிராகப் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 44,428.<br /><br />இந்த நூறு பேர் பட்டியலில் இவ்வளவு அதிகமான எதிர் வாக்குகளைப் பெற்ற ஒரே ஆசாமி ராஜபக்சே தான். இந்த நிலையில், இதனைச் சரி செய்வதற்காக தமது அலுவலகத்திலேயே குழு ஒன்றை உருவாக்கி, அவர்கள் வழியாக ஆன்லைன் மூலம் வாக்கு களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்துவிட்டார். இதன் காரணமாக 6ஆம் வரிசையில் இடம் பெற்ற இந்த இடி அமீன் 4ஆம் இடத்திற்கு முன்னேறினார்.<br /><br />இதில் ஏதோ மோசடி நடந்துள்ளது என்று சந்தேகப்பட்ட டைம்ஸ் ஏடு நிருவாகம் தமது தொழில் நுட்பக் குழு மூலம் ராஜபக்சே தரப்பின் மோசடியைக் கண்டுபிடித்தது.<br /><br />இறுதிப் பட்டியலில் இருந்து ராஜபக்சேயின் பெயர் தூக்கி எறியப்பட்டு விட்டது.<br /><br />அதிர்ச்சிக்கு ஆளான இந்த ஆசாமி சக அமைச்சர்களையும், அலுவலகக் குழுவினரையும் கடுமையாகச் சாடினார் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன.<br /><br />இந்த மனிதரை எந்தவகையிலாவது காப்பாற்றிட முயலுவோர் - தனி நபராக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, அவர்கள் உலக மக்கள் மத்தியிலே மிகவும் கேவலமாக அம்பலமாகி விடுவார்கள் என்பதில் அய்யமில்லை.<br /><br />ராஜபக்சே என்னும் இந்தக் குரூரமான பாசிஸ்ட் தண்டிக்கப்படவில்லையானால் உலகில் நீதி பற்றியும், நியாயம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும், மனிதநேயம் பற்றியும் பேசுவது என்பதே அர்த்த மற்றதாகி விடும்.<br /><br />சமாதானம் பேசிட வெள்ளைக் கொடி பிடித்து வந்தவர்களையே குரூரமாக கொன்ற கூட்டத்தின் தலைவரை உலகம் தண்டித்தது என்ற செயல் பாட்டின்மூலம் உலகம் தன் பெருமதிப்பைக் காப்பாற்றிக் கொண்டது என்று நாளைய உலகம் எழுதிட வேண்டாமா?<br /><br />நாளை (28ஆம் தேதி) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. போர்க் குற்றவாளி ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.<br />கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே! உணர்ச் சியோடு வெற்றிகரமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! நடத்துவீர்!!<br /><br /> -----------"விடுதலை” 27-4-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25368253165957263672011-04-26T22:53:32.719+05:302011-04-26T22:53:32.719+05:30அப்படி வாயா, அந்துமணிப் பட்டரே!
தினமலரின் தனபாலு...அப்படி வாயா, அந்துமணிப் பட்டரே!<br /><br /><br />தினமலரின் தனபாலுக்கு எப்பொழுதுமே டவுட்தான். அதனால்தான் அதற்கு டவுட் தனபாலு என்று பெயரோ!<br /><br />நேற்றைய இ(தி)னமலரில் ஒரு டவுட்டாம். தமிழக முதல்வர் கருணாநிதி: சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குற்ற நடவடிக்கைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கக்கூடியதுதான்.<br /><br />டவுட் தனபாலு: இதாங்க நேரங்கிறது . . . குற்றங்கள் எல்லாக் காலத்திலேயும் நடக்கிறதான்னு ஒரு முதல்வர் சொன்னா குத்தம் கிடையாது. . . போர்க்களத்துல பொது மக்கள் பலியாகிறது சகஜம் தான்னு அந்தம்மா சொல்லிட்டா பெருங்குத்தம் . . . அப்படித் தானே.. . ? (தினமலர்: 25-4-2011)<br /><br />அப்படி வாயா அந்துமணி பட்டரே!<br /><br />அடேயப்பா, எப்படிப்பட்ட அண்டார்டிகா கண்டுபிடிப்பு - வெண்ணெய்யையும் சுண்ணாம்பையும் ஒண்ணுன்னு அடம் பிடிக்கும் அபாரக் கண்டுபிடிப்பு!<br /><br />அட, அகங்காரம் பிடித்த ஆரியக் குஞ்சே...<br /><br />இலங்கையில் நடைபெற்றது ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெற்ற சண்டையல்ல - போர் அல்ல; அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை! குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் - உரிமைகள் மறுக்கப்படுகிறோம். எங்கள் மொழி ஒதுக்கப்படுகிறது - எங்கள் இனம் ஒழித்துக் கட்டப்படுகிறது என்பதற்காக நடத்தப்படும் தேசிய இன உரிமைப் போராட்டம்!<br /><br />மக்கள் நல அரசாக இலங்கை அரசு இருந்திருந்தால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்திருக்கும். மாறாக தமிழ் இனம் என்ற ஒன்று இருப்பதால்தானே கூக்குரல் போடுகிறார்கள், அணி திரள்கிறார்கள் - அந்த இனத்தையே முற்றாக அழித்துவிட்டால். விடுதலைப் புலிகளாவது-வெங்காயமாவது! தமிழாவது - தகர டப்பாவாவது! அதற்குப் பின் இலங்கைத் தீவு என்றால் அங்கு ஒரே இனம் - சிங்கள இனம்தானே! என்ற வெறியில் சொந்த நாட்டு மக்களையே பீரங்கிகள் வைத்து பிணமாக்கிய கொடியவர்களின் குரூரச் செயல்கள் அங்கே நடந்தது. சொந்த நாட்டு மக்களையே விமானங்கள் மூலம் மரணக் குழிக்குள் தள்ளிய மனிதாபி மானமற்ற வக்கிரம் அது. அதைப் போய் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமிடையே நடக்கும் போர் என்று ஜெயலலிதா கருதுவதும், போர் என்றால் பொதுமக்கள் பலியாவது சகஜம்தான் என்று கூறுவதும் சரியானதுதானா - சகஜமானது என்ற பொருளுக்குப் பொருத்தமானதுதானா?<br /><br />கணவனும் மனைவியும் வீட்டுக்குள் போட்டுக் கொள்வதும் சண்டைதான்- பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நடந்ததும் சண்டைதான் என்று இந்தச் சாம்பார் பன்னாடைக் கூட்டம் பகருமோ!<br /><br />தமிழர்கள் என்ற சொல்லைக் கேட்டாலே ஸ்ரீரங்கத்து அம்மையாரிலிருந்து தினமலர் பூணூல் வரை ஒரே மாதிரியான நமைச்சல் - எரிச்சல்! நன்னா புரிஞ்சுப் போச்சு!<br /> --"விடுதலை” 26-4-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com