tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7598887610295280460..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை உச்சக்கட்டத்தில்..தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63541384743740304822009-04-10T22:47:00.000+05:302009-04-10T22:47:00.000+05:30//கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்//இது கு...//கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்//<BR/><BR/>இது குறித்து 10-4-2009 விடுத்லை தலையங்கக் கருத்தை தங்கள் பார்வைக்கு வைக்கிரேன்.<BR/>"ஜெயலலிதா போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் உண்டா?<BR/><BR/>ஈழத்தமிழர்ப் பிரச்சினையும் -<BR/>மக்களவைத் தேர்தலும்!<BR/><BR/>ஈழத்தமிழர்ப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல; உலகப் பிரச்சினையாக இன்று வடிவெடுத்திருக்கிறது. இனப் பிரச்சினை மட்டுமல்ல; மனித உரிமை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகவும் பேருரு எடுத்துள்ளது.<BR/><BR/>இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இதில் அதிக அக்கறையும், கவலையும், பாத்தியதையும் பட்டுள்ள தமிழ்நாட்டிலோ, தமிழர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, தேர்தல் இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர்.<BR/><BR/>அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சரி, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? மாநில அரசிடமும், மத்திய அரசிடமும்தானே கோரிக்கைகளை வைக்கிறார்கள்?<BR/><BR/>இந்த நிலையில், மாநில அரசு இப்பிரச்சினையில் சில முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது, கட்சி மாச்சரியங்களைக் கடந்து ஒத்துழைத்தி ருக்கவேண்டும்.<BR/><BR/>ஆனால், அப்படியான அணுகுமுறைகளை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கடை பிடித்ததுண்டா?<BR/><BR/>அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; பிரதமரைச் சந்திக்கச் செல்லும் குழுவில் இடம்பெற மறுப்பு. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது வெளிநடப்பு, இத்தியாதி - இத்தியாதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சில அரசியல் கட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்ட கட்சிகள் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க தகுதி உள்ளவைதானா - உரிமை உடையவைதானா என்பது அர்த்தமிக்க வினாக்களாகும்.<BR/><BR/>எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கிறது என்றால் பிரதமர், தமிழக முதல்வர் உருவப்படங்களை எரிக்கும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டு விட்டது.<BR/><BR/>இதன் விளைவு என்னவாகும்? ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் கடுமையான அளவுக்குப் பிளவு படவும், ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொள்ளவுமான ஒரு நிலையைல்லவா ஏற்படுத்தி இருக்கிறது.<BR/><BR/>ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க முடியும்?<BR/><BR/>இலங்கை அரசு தமக்குச் சாதகமாக இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே!<BR/><BR/>தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கூறுவதைக் கவனியுங்கள் என்று அவர்கள் கூறும் அளவுக்கு நிலைமையைக் கொச்சைப்படுத்தியவர்கள் தமிழர்களின் மத்தியில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அல்லவா?<BR/><BR/>இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் சார்பற்றது என்றுதானே தொடக்கத்தில் கூறப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திரு மாவளவன் தொடக்கத்திலேயே அதனைத் தெளிவுபடுத்தினாரே - இப்பொழுது அதன் நிலை என்ன? தேர்தலில் ஆளும் தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு சென்று விட்டதே!<BR/><BR/>இதில் என்ன வேடிக்கையான துன்பம் என்றால் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சோதரிபோல நடந்துகொண்டவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அல்லவா!<BR/><BR/>ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லுவதே - விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டவர்தானே ஜெயலலிதா?<BR/><BR/>இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?<BR/><BR/>இது அக்கட்சிகளின் நேர்மையற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும். ஈழத் தமிழர்ப் பிரச்சினையைக்கூட தேர்தல் இலாபத்துக்குத்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற உண்மையும், கோணிப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்ததுபோல வெளிவந்துவிட்டதா இல்லையா?<BR/><BR/>தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதனைக் கவனமுடன் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அக்கறை உள்ள நமது வேண்டுகோளாகும்.<BR/><BR/><BR/>------------------"விடுதலை" தலையங்கம் 10-4-2009"தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74802561714792245962009-04-10T19:58:00.000+05:302009-04-10T19:58:00.000+05:30ஓவியா கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்,ஓவியா கருணாநிதி யாருக்கு எதிராகப் போராடுகிறார்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64922916048394607992009-04-10T17:50:00.000+05:302009-04-10T17:50:00.000+05:30//தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சிக் குரலை இலங்...//தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சிக் குரலை இலங்கை அரசிடம் இந்தியப் பிரதமர் சிந்தாமல் சிதறாமல் எதிரொலித்தாலே போதும் - நெருக்கடிக்குத் தீர்வு கிடைத்துவிடும்.//<BR/><BR/>எப்போது எதிரொலிக்கும்?<BR/><BR/> தமிழன் முதலில் எப்போது ஒற்றுமையாக குரல் கொடுத்திருக்கிறான்?<BR/><BR/>எப்படியோ ஈழப்பிரச்சினக்கு நல்ல தீர்வு கிடைத்ததல் வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/04760824882299656442noreply@blogger.com