tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7546019996639377818..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: விவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2715039205416216112014-07-13T18:05:57.880+05:302014-07-13T18:05:57.880+05:30ஆபாச வீடியோவில் சிக்கிச் சிறை சென்ற சாமியார் நித்ய...<br />ஆபாச வீடியோவில் சிக்கிச் சிறை சென்ற சாமியார் நித்யானந்தா கருநாடகத்தை விட்டு வெளியேற வேண்டும் - கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்<br /><br /><br />பெங்களூரு ஜூலை 13- ஆபாச வீடியோவில் சிக்கிச் சிறை சென்ற சாமியார் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி, பெங்களூரு அருகே பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன், கன்னட அமைப்பினர் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூரு அருகே, ராம்நகர் மாவட்டம், பிடதியில் 'தியான பீடம்' என்ற பெயரில் நித்யானந் தாவின் ஆசிரமம் உள்ளது.<br /><br />இங்கு சனிக்கிழமை குரு பூர்ணிமா சிறப்பு பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கன்னட அமைப் புகள் எதிர்ப்பு தெரிவித் தன. பெங்களூரு -மைசூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரம் வைக்கப் பட்டிருந்த (பிளெக்ஸ்) பேனர்களை கன்னட அமைப்பினர் வெள்ளிக் கிழமை தீயிட்டு கொளுத் தினர்.<br /><br />கன்னட அமைப்பு களின் எதிர்ப்பை மீறி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிடதி ஆசிர மத்தில் குரு பூர்ணிமா பூஜை தொடங்கியது. இதனிடையே கன்னட சலுவளி கட்சி, கன்னட நவநிர்மாண் சேனை, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்பு களை சேர்ந்த 100_-க்கும் மேற்பட்டோர் பிடதி பேருந்து நிலையத்தில் இருந்து நித்யானந்தாவின் ஆசிரமம் நோக்கி ஊர் வலமாக சென்றனர். பின்னர் ஆசிரமத்துக்குள் நுழைய முயன்ற அவர் களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.<br /><br />இதையடுத்து அனை வரும் ஆசிரமம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நித்யானந்தா பேனர்களை அவமரி யாதை செய்தும், தீயிட்டு கொளுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கன்னட சலுவளி கட்சி யின் மாநில தலைவர் மது கவுடா கூறும்போது, ஆபாச வீடியோவில் சிக்கி சிறைக்குச் சென்ற சாமியார் நித்யானந்தா, இந்து மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வரு கிறார்.<br /><br />ஆசிரமம் நடத்துவ தாக கூறி கோடிக்கணக் கில் பணம் வசூலித்து பல குடும்பப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார். அவர் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து அவரை சிறை யில் அடைக்க வேண்டும். அவரது ஆசிரமத்துக்கு கருநாடக அரசு உடனே சீல் வைக்கவேண்டும்.<br /><br />நித்யானந்தா கருநா டகத்தை விட்டு வெளி யேற வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் அவரைத் துரத்துவோம் என்றார். இந்தப் போராட்டம் காரணமாக சனிக்கிழமை மாலை பிடதியில் நடைபெற இருந்த நித்யானந்தாவின் ரத ஊர்வலத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/83987.html#ixzz37LqsVynv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76240553048929581402014-07-13T08:17:26.962+05:302014-07-13T08:17:26.962+05:30
அன்று விடுதலை வெளியிட்ட சவால்!
சென்னையைச் சார்ந்...<br />அன்று விடுதலை வெளியிட்ட சவால்!<br /><br />சென்னையைச் சார்ந்த எஸ்.ஆர்.எஸ். சர்மா என்ற பார்ப்பனர் பாதரசத்தைப் பயன்படுத்தி சிவலிங்கம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.<br /><br />இதுபற்றிதினமணி ஏடு வெளியிட்டி ருக்கும் செய்தி இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.<br /><br />இந்த திட்டத்தில் இறங்குவதற்கு முன் இந்த பார்ப்பனர் காஞ்சி சங்கராச் சாரியாரை சந்தித்து ஒரு சிறிய பாதர சலிங்கம் ஒன்றை அவரிடம் கொடுத்து - _ ஆசிபெற்றுக் கொண்டார். பிறகு - சிவலிங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் இதற்கு 60 கிலோ எடை யுள்ள பாதரசம் தேவைப்பட்டது. இதில் 35 கிலோ மெக்சிகோவிலிருந்து வரவ ழைக்கப்பட்டது இதற்கு ஒரு லட்சம் நன்கொடையாகப் பெறப்பட்டது. அந்த பார்ப்பனர் தன்னுடைய மந்திர சக்தி மற்றும் தியானத்தின் மூலம் திரவ வடிவில் இருந்த அந்த பாதரசத்தைக் கெட்டியாக்கினார்.<br /><br />மகாசிவராத்திரி அன்று இதை 27 செ.மீ. உயரமுள்ள லிங்கமாக அவர் உருவாக்கினார்.<br /><br />100 டிகிரி உஷ்ணம் கொண்ட ஒரு பாத்திரத்தில் 5 நாட்கள் இதை வைத்து மந்திரங்களை ஓதி, அதில் இருந்த உலோகங்களை அகற்றினார்.<br /><br />பிறகு, இதைப் புனிதப்படுத்த தமஷ்ட்ரகராண ருத்ர ஹோமம் நடத்தினார். இந்த லிங்கத்தை பிர திஷ்டை செய்வதற்கு முன் அதற்கு சக்தி கொடுக்க ஆருத்ரா ஹோமம் செய்யப் போகிறார்; இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்<br />இவ்வாறு தினமணி ஏடு செய்தி வெளியிட்டிருக்கிறது.<br /><br />பித்தலாட்டம்: பாதரசத்திலிருந்து _ சிவலிங்கம் உருவாக்க மந்திர சக்திகளும் யாகங்களும் கை கொடுத்தன என்றும் இப்படி தயாரிப்பது ஒரு அபார சாதனை என்றும் பார்ப்பன ஏடுகள் எழுதியிருப்பது (உண்மைக்கும், விஞ்ஞானத்துக்கும் எதிரான, ஒரு பித்தலாட்டம் என்பதை, ஒரு விஞ்ஞானி சவால் விட்டுக் கூறியிருக்கிறார்.)<br /><br />இதுபற்றி அந்த விஞ்ஞானியிடம் நாம் கேட்டபோது -_ அவர் கீழ்க்கண்ட வினாக்களை முன் வைத்தார். 1. பாதரசத்தை திடப் பொருளாக்க மந்திர சக்தியும் தியானமும் பயன் படுத்தப்பட்டது என்று யாரிடம் கதை விடுகிறீர்கள்? பாதரசம் இரும்பைத் தவிர மற்ற எல்லா உலோகங்களுடன் சாதா ரண வெப்ப நிலையிலேயே கூடி திடப் பொருளாக மாறக் கூடியது என்பது அடிப்படை விஞ்ஞானம்; இந்த பொற் கொல்லர்கள், தங்கத் தூள்களை சேகரிக்க பாதரசத்தைப் பயன்படுத்துகின்றனர். இது சாதாரணமாக அன்றாடம் பொற்கொல்லர்கள் செய்து வரும் தொழில்! ஆனால் ஒரு பார்ப்பனர் சிவலிங்கம் செய்து விட்டார் என்றவுடன் அதற்கு இப்படி ஒரு போலிப் பெருமையை ஏற்படுத்துவதா?<br /><br />2. திரவ நிலையில் இருக்கும் பாதர சத்தை திடப் பொருளாக மாற்ற, மந்திர சக்தியோ யாகமோ பயன்படாது; சாதா ரண துத்தநாகத்தூளை சேர்த்தாலே போதும் திடப் பொருளாக மாறி விடும் இதுதான் விஞ்ஞான உண்மை! இப்படி விஞ்ஞான முறைகளைப் பின்பற்றாமல் வெறும் மந்திரத்தால் மட்டுமே அந்த பார்ப்பனர் பாதரசத்தை திடப் பொரு ளாக பொது மக்கள் முன்னிலையில் மாற்றிக் காட்டத் தயாராக இருக்கிறாரா? சவால் விட்டுக் கேட்கிறோம்!<br /><br />3. 100 டிகிரி வெப்ப கொதி நீரில் கொதிக்க வைத்து பாதரசத்தில் உபரியாக இருந்த பாதசரம் ஆவியாகி விட்டதாம்? காதிலே பூ சுற்றுகிறார்கள்! 100 டிகிரி வெப்பத்திலே பாதரசம் ஆவியாகப் போய் விட்டது என்று சொன்னால், விவரம் புரிந்தவர்கள் கை கொட்டித்தான் சிரிப்பார்கள்! இந்த வாதப்படி பார்த்தால் -_ தெர்மா மீட்டர் 100 டிகிரிக்கு அதிக வெப்பத்தைக் காட்டினால் உடனே பாதரசம் ஆவியாகப் போய் விடும் என்கிறார்களா? அப்படியானால் தெர்மா மீட்டரை இனி மேல் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான்!<br /><br />4. உலகத்திலேயே மிகவும் அரிதாக வரும் பொருள்களில் பாதரசமும் ஒன்று வளர்ந்துவரும் விஞ்ஞானப் புதுமை களுக்குப் பயன்படக் கூடிய இந்த அரிய பொருளைப் பயன்படுத்தி சிவலிங்கம் செய்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வீண் விரயங்கள் தடுக்கப்பட வேண் டாமா?<br /><br />இந்த மோசடிச் செய்திகளைத் தந்த, அந்தப் பார்ப்பனரானாலும் --_ அவருக்கு ஆசீர்வாதம் தந்த சங்கராச்சாரியானா லும், அதை வெளியிடுவதில் அற்ப மகிழ்ச்சி காணும் பார்ப்பன ஏடுகளானா லும் விடுதலை சார்பில் அனைவருக்கும் சவால் விட்டுக் கேட்கிறோம், துணி விருந்தால் இந்தச் சவாலை ஏற்கட்டும்.<br /><br />வெறும் மந்திர சக்தியால் இவைகள் நடந்தன என்பதை நேரடியாக நிரூபித்துக் காட்டத் தயாரா?<br /><br />மந்திர சக்தி எதுவும் இல்லாமல் கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்களே - அந்த சிவலிங்கத்தை செய்து காட்டவும் தயாராக இருக்கிறோம், இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்த பார்ப்பனர் தயாரா?<br /><br />-விடுதலை 23.7.1983<br /><br />Read more: http://viduthalai.in/page8/83898.html#ixzz37JSfTajF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45920526753159274172014-07-13T08:16:34.995+05:302014-07-13T08:16:34.995+05:30
கேபினட்டில் உயர் சாதியினர்...
மோடி உள்ளிட்ட 23 ...<br />கேபினட்டில் உயர் சாதியினர்...<br /><br /><br />மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர். என்னென்ன சாதியினர்? பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸூம் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் இருவர் தலித்துகள், ஒருவர் பழங்குடி இனத்தவர்.<br /><br />தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10: தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர் ஒருவர். 12 இணை அமைச்சர்கள்: இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/83892.html#ixzz37JS1Tnxl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65295819149275509072014-07-13T08:16:30.427+05:302014-07-13T08:16:30.427+05:30
கேபினட்டில் உயர் சாதியினர்...
மோடி உள்ளிட்ட 23 ...<br />கேபினட்டில் உயர் சாதியினர்...<br /><br /><br />மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர். என்னென்ன சாதியினர்? பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸூம் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் இருவர் தலித்துகள், ஒருவர் பழங்குடி இனத்தவர்.<br /><br />தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10: தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர் ஒருவர். 12 இணை அமைச்சர்கள்: இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/83892.html#ixzz37JS1Tnxl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11720946590602033412014-07-13T08:13:59.935+05:302014-07-13T08:13:59.935+05:30
அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?
பம்பை நதி...<br />அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?<br /><br /><br />பம்பை நதியில் சேரும் அசுத்தங்களால் நீரில் நோய்க் கிருமிகள் அபாய நிலையைவிட மிக அதிக அளவில் உள்ளன என கேரள மாநில சுற்றுச்சூழல் துறையினர் எச்சரித்துள்ளனர். சாதாரணமாக 100 மி.லிட்டர் நீரில் 500 கோலிபாம் கிருமிகள் வரை, இருக்கலாம் இதுவே சற்று கடுமையான நோய்களை உண்டாக்கும் அளவாகும். சில தினங்களுக்கு முன்னர் பம்பை நதியில் 100 மி.லி. நீரில் 3000 அளவு கோலிபாம்கள் இருந்தன.<br /><br />தற்போது பம்பை நதியில் குறைந்த அளவு நீர்வரத்து இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்காக வலியானை வட்டம் அருகே உள்ள நிரந்தர தடுப்பணை மதகுகளை அடைத்து வைத்துள்ளனர். பம்பை திரிவேணி சங்கமத்துக்கு மேலே மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்கு மேலே சென்று அறுசெழிக்குழி ஆற்றில் குளித்தும், துணிகளைத் துவைத்தும் அசுத்தப்படுத்துகின்றனர்.<br /><br />ஹக்கி ஆற்றின் கரையில் பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வரும் பக் தர்கள் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், சிறியான வட்டம் அருகே நுனுஞான் ஆற்றங்கரையில் உள்ள விரிகளில் தங்கியுள்ள பக்தர்கள் இந்த ஆற்றைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின் றனர். பலர் சமையல் செய்து சாப்பிட்டபின் எச்சில் இலை மற்றும் கழிவுகளை ஆற்றில் போடுகின்றனர்.<br /><br />செழிக்குழி, ஹக்கி நுனஞான் ஆறுகளில் வரும் சிறிய அளவிலான நீர் பம்பையில் சேருகிறது. மொத்த நீரும் தேக்கி வைக்கப்பட்டு தடுப்பணைக்கு மேலே வழிந்தோடுகிறது.<br />பக்தர்கள் குளிக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் துறையினர் செவ்வாய்க்கிழமை நீரை ஆய்வு செய்தனர். அப்போது 100 மி.லிட்டர் நீரில் 5000 கோலிபாம் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை யினர், குடிநீர் எடுக்கும் பகுதி மற்றும் அசுத்தமாக்கப்படும் பகுதிகளில் அசுத்த மாக்கப்படுவதைத் தடுக்கவும், பம்பை நீரை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.<br /><br />நன்றி: தினமணி நாளிதழ் நாள்: 7.1.1999<br /><br />Read more: http://viduthalai.in/page3/83891.html#ixzz37JRqODDV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27723373739691514202014-07-13T08:13:12.812+05:302014-07-13T08:13:12.812+05:30
இனி இம்மண்ணை ஆள்வது அரசப் பயங்கரவாதமே!
அடிப்படை...<br />இனி இம்மண்ணை ஆள்வது அரசப் பயங்கரவாதமே!<br /><br /><br />அடிப்படைக்கே அல்லாடும் கோடானு கோடி<br />மக்கள் வதியும் மண்ணில்மத<br />அடிப்படை வாதிகள் கையில் ஆட்சி;<br />மீண்டும் வேதகாலம் திரும்பும்<br />மக்கள் நாயகத்தின் பேரால் மதப்பயங்<br />கரவாதி பிடியில் இந்தியம்<br />சிக்கலைத் தீர்க்காமல் சீர்குலைவு செய்யும்<br />புஷ்யமித்திர சுங்கன் கூட்டம்!<br /><br />பேராயக் கட்சியின் பித்தலாட்ட ஆட்சியைத்<br />துடைத்தெறிய எண்ணிய மக்கள்<br />ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் கோலத்தில்<br />அளித்த தீர்ப்பின் வெளிப்பாடு!<br />குரங்கு கையில் பூமாலை குரங்குப்<br />படைகளுக்குச் சொல்லவும் வேண்டுமா?<br />அரத்தக் களரியால் நாட்டை அமளிக்<br />காடாக்கத் துடிக்கிறது ஆரியம்!<br /><br />இந்நாட்டுத் தேசியம் இந்து இந்தியை<br />உருஉள் ளடக்கமாய்க் கொண்டது<br />இந்நாட்டில் தேசிய இனங்களை ஒடுக்கியது<br />பார்ப்பன டில்லி வாலாக்கள்<br />மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துவந்த<br />மய்யஅரசை மக்கள் நிராகரிக்க<br />மாநில அரசுகளின் தயவில் கடந்த<br />முப்பது ஆண்டுகளாய் மய்யஅரசு!<br /><br />மண்டல் குழுப் பரிந்துரையை வி.பி.சிங் மய்யஅரசில்<br />ஏற்றதால் ஆட்சியைக் கவிழ்த்தனர்<br />மண்டலுக் கெதிராய்க் கமண்டலம் தூக்கியோர்<br />பரிந்துரையை ஏற்றிட வைத்தது<br />தமிழரின் கனவுத் திட்டமாம் தமிழன்<br />கால்வாய்த் திட்டம் செயலாக்கம்<br />செம்மொழியாய்த் தமிழும் இன்னபிற மொழிகளும்<br />ஆனது மாநிலப் பங்கேற்பால்!<br /><br />பார்ப்பன சனதாவின் எதிர்பாரா வெற்றியால்<br />பார்ப்பனர் உள்ளங் குளிர்ந்தது!<br />பார்ப்பனர் பண்ணையம் ஏற்கெனவே கேட்பா<br />ரில்லை; ஆட்சி அதிகாரம்<br />ஆர்.எஸ்.எஸ். கட்டுக்குள்! இவ்வாட்சி எந்தத்<br />திசையில் பதவியேற்பில் ராசபக்ஷே!<br />பார்ப்பனர்க்குக் கொண்டாட்டம் திண்டாட்டம்<br />பார்ப்பன ரல்லாத மக்கட்கே!<br /><br />மக்கள் நலத் திட்டத்தை மாநிலத்தை யாளும்<br />செயா, ராமன்பேரால் முடக்கினார்<br />மக்கள் நலனைவிட மக்கள் விரோத<br />இந்துவியத் திட்டம் செயலாக்கம்<br />மய்ய மாநில அரசுகளின் தலைவர்கள்<br />மதவெறிச் சிந்தனையில ஊறியவர்<br />அய்ந்தாண்டுக் காலம் இம்மண்ணை ஆள்வது<br />இனி அரசப் பயங்கர வாதமே!<br /><br />- கவிஞர் இனியன், திருச்சி-13<br /><br />Read more: http://viduthalai.in/page3/83887.html#ixzz37JRcPwhi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5144857915586985762014-07-13T08:13:07.214+05:302014-07-13T08:13:07.214+05:30
விஞ்ஞானம் - அஞ்ஞானம்
விஞ்ஞானம்: கிருஷ்ணகிரி சுண...<br />விஞ்ஞானம் - அஞ்ஞானம்<br /><br /><br />விஞ்ஞானம்: கிருஷ்ணகிரி சுண்டே குப்பம் பகுதியைச் சார்ந்த வேலப்பன் மகன் மதியழகன் (28) ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்குமிடத்தில் படுக்கைகளை சரி செய்யும் பணியில் பணியாற்றி வருகிறார். அவர் ஊருக்கு வரும்போது பழுதான செயற்கைகோள் செல்பேசியைக் கொண்டு வந்தார். ஊரில் பழுதை நீக்கி செயல்பட வைத்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கியூ பிரிவு காவலருக்கு கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செயற்கைகோள் செல்பேசி பயன் படுத்துவது குறித்து ஜி.பி.ஆர்.எல் கருவி மூலம் தெரியவந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.<br /><br />அஞ்ஞானம்: நாகர்கோவில் வடிவீசுவரம், அழகம்மன் கோவிலில் 29.6.2014 அன்று பலகோடி ரூபாய் செலவு செய்து மகாகும்பாபிஷேகம், யாரும் நடத்தாத முறையில் அதிக விளம்பரத்துடன் காலை 8.30 மணியளவில் நடந்தது. வடசேரியைச் சார்ந்த சி.இரத்தினம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிடும்போது கழுத்தில் உள்ள நாலேகால் பவுன் தங்க செயின் தாலியுடன் கூடியது. பெண் திருடர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளார்கள். அழகம்மாள் இன்று வரை திருடர்களை பிடிக்கவில்லை, செயினும் கிடைக்க வில்லை. என்ன மகிமை! - எஸ்.நல்லபெருமால் (வடசேரி)<br /><br />Read more: http://viduthalai.in/page3/83889.html#ixzz37JRTVzFD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64615328223728569742014-07-13T08:10:31.821+05:302014-07-13T08:10:31.821+05:30
தாய்வழி பாட்டனாரின் சொத்தில் தந்தையின் உரிமை என்ன...<br />தாய்வழி பாட்டனாரின் சொத்தில் தந்தையின் உரிமை என்ன? சட்டம் என்ன சொல்கிறது?<br /><br /><br /> <br /><br />பரம்பரை சொத்துப் பங்கீட்டில், பல்வேறு சட்டசிக்கல்கள்இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. இவற்றில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படாததே, பல்வேறு குடும்பங்களின் சொத்துப் பங்கீடு தொடர்பான வழக்குகள் அதிகரிக்க, முக்கிய காரணமாக உள்ளது.<br /><br />ஒரு குடும்பத்தில் தந்தையின் பெயரில் உள்ள, அவரின் சுய சம்பாத்திய சொத்துக்கள், அவர் காலத்துக்கு பின் யார் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது, அவரது விருப்பத்தை பொறுத்தது. ஆனால் பரம்பரை வழியாக, அவரது பெயருக்கு வந்த சொத்தில் இப்படி அவர் செயல்பட முடியாது. அந்த சொத்து தனக்குப்பின், யாருக்கு சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ, அதன் படியே செயல்பட வேண்டும்.<br /><br />இதில் குறிப்பாக பரம்பரை, ஒரு பொண்ணுக்கு வரும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகிடும். அந்த மனைவி இறந்து விட்டால் அந்த சொத்துகள், அவரது கணவரின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதை அவர் யார் பெயருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். இது போன்ற சமயங்களில், அந்த கணவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் முன்னோர் வாயிலாக வந்த சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்.<br /><br />இதில் மறுமணத்துக்கு பின் பிறக்கும் குழந்தைக்களுக்கும், அவர் அவர் பங்கு கொடுக்கலாம். சட்டம் இதை ஏற்கிறது. ஆனால் நடைமுறையில், முதல் மனைவியின் வாரிசுகள், இதை ஏற்பது அரிது. ஒரு வேளை மறுமணத்துக்கு பின் அவருக்கு குழந்தைகள் பிறக்காவிட்டால், முதல் மனைவியின் வாரிசுகள், தங்களுக்குள் பேசிவைத்து, சொத்தை பங்கிட்டுக் கொள்ளலாம்.<br /><br />இதில் இன்னொரு அம்சமாக அந்த கணவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது முதல் மனைவியின் வாரிசுகள் சொத்து மீதான உரிமையைப் பெறுவர். இதுபோன்ற சொத்துகள், விற்பனைக்கு வரும்போது, அது, அப்போது, யார் வாயிலாக, தற்போதைய உரிமையாளருக்கு வந்தது. இதற்கு அடுத்து யார், யாருக்கு அதில் உரிமை உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது என்கின்றனர், கட்டுமான வல்லுநர்கள்.<br /><br />- குடிமக்கள், ஆனி/ஜூன் 2014<br /><br />Read more: http://viduthalai.in/page3/83885.html#ixzz37JQmYImw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23359125370466869532014-07-13T08:08:32.317+05:302014-07-13T08:08:32.317+05:301939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெ...1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன? தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?<br /><br />1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.<br /><br />திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.<br /><br />மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/83884.html#ixzz37JQFXF9Rதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20133829028060690672014-07-13T08:08:27.553+05:302014-07-13T08:08:27.553+05:30மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரல...<br />மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?<br /><br /><br />- கி.தளபதிராஜ்<br /><br />தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.<br /><br />யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.<br /><br />"நாடார் சகோதரர்களை உண்மை யான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தன மான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார். கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.<br /><br />"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.<br /><br />திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்? எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3559666975549507392014-07-13T08:03:32.776+05:302014-07-13T08:03:32.776+05:30
கடவுளை பரிகாசம் செய்யலாமா?
சிவன் தன் பாரியாளுடன...<br />கடவுளை பரிகாசம் செய்யலாமா?<br /><br /><br />சிவன் தன் பாரியாளுடன் 3,60,000 நாட்கள் கலவி செய்துள்ளான். அதனால் வந்த விந்தை சூன்ய வெளியில் பீச்சி அடித்துள்ளான். அதை அக்னி பகவான் எடுத்து குளிக்க வந்த பெண்களிடம் கொடுக்க அவர்கள் பெற்றவுடன் குழந்தைகளாய் மாறிவிட அந்த ஆறும் ஓரிடத்தில் வைக்க ஆறும் ஓருடலாயும் தலை ஒன்றாகவும் மாறி நின்றுள்ளது. அதுதான் ஆறுமுக கடவுளானது.<br /><br />சிவன் 3,60,000 நாட்கள் தன் மனைவியுடன் கலவி செய்ததை பார்த்து எண் ணியவன் யார்? ஆறு குழந்தைகளும் உடல் ஒன்றானது - தலை மாறாதது ஏன்? முருகக் கடவுளுக்கு மனைவிகள் இரண்டு இவருக்கு குழந்தை இல்லை. ஏன்?<br /><br />கடவுள் சிலை செய்து அதற்கு கோவில் கட்டி பிரதியாண்டும் திருமணம் செய்கிறோம் எல்லாம் கொடுக்கும் கடவுள் செயலைக் கண்டு இப்படியெல்லாம் எழுதி கேளிக்கையாக்கி கும்பிடுவது சரியா?<br /><br />- மா. சென்றாயன், தருமபுரி<br /><br />Read more: http://viduthalai.in/page2/83872.html#ixzz37JPD4Ysl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32844740194443911312014-07-13T08:03:00.630+05:302014-07-13T08:03:00.630+05:30
தபால் டெலிவரி! இல்லை!
தந்தை பெரியார் அவர்களும், ...<br />தபால் டெலிவரி! இல்லை!<br /><br />தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும் பட்ட அரும்பாட்டின் காரணமாகவேதான் இன்றைக்குத் தமிழரினம் குறிப்பாக, ஆதி திராவிடப் பெரு மக்கள் மஞ்சள்குளிக்க முடிகிறது.<br /><br />அய்யா அவர்கள் இயக்கம் காண்பதற்கு முன்பு இந்நாடு இருந்த நிலை இன்றைய இளைஞர் தலைமுறையினர் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. அதனாலேதான் அய்யா அவர்களது தொண்டின் மேன்மையை உணராது அரசியல் வெட்டுக்கிளிகளாகப் பச்சை கண்ட இடம் பறந்து குதிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.<br /><br />எங்கள் வில்லிவாக்கத்தை எடுத்துக் கொண்டால், உயர் ஜாதிக்காரர்கள் வசிக்கும் இடம் என்று கருதப்படும் சன்னதி தெரு மாடவீதிகள் பக்கம் ஆதித் திராவிடர்கள் நடந்து போகவே முடியாது. முதலாவது உலக யுத்தம் நடந்த போது, ரஜ்பட், ஈரான், பாக்தாத் முதலிய வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த ஆதிதிராவிடத் தோழர்கள் ஆவலோடு தங்கள் வீடுகளுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களை, சேரிக்குள் வந்தால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதி, தபால்காரன் ஆஞ்சநேயர் மண்டபத்தின் அருகே போட்டு விட்டுப் போய் விடுவான். அவன் போட்டு விட்டு வெகுதூரம் போனதற்குப் பின்னாலேயே அந்தத் தபால்களை வேகவேகமாக எடுத்து வருவார்கள்.<br /><br />- பெரியார் பெரும் தொண்டர் வில்லிவாக்கம் அ. தியாகராசன் கூறிய தகவல் இது.<br /><br />Read more: http://viduthalai.in/page2/83873.html#ixzz37JP4f1DN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78007103776921951252014-07-13T08:01:38.950+05:302014-07-13T08:01:38.950+05:30எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைச...எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைசியில் ஊருக்குத் தான் செல்ல வேண்டும் என் றார். ஏன் என்றால் இங்கே அமெரிக் காவிலே என்னைப் பெட்டியிலே போட்டு அனுப்பி விடுவாய். எனக்கு உற்றார், உறவினர் அனைவரும் வந்து கொட்டி, முழக்கித்தான் செல்ல வேண் டும் ,என்றார்கள். நான் அதெல்லாம் பார்க்க முடியாதே, காதிலேயும் விழாதே என்றேன். அதெல்லாம் எனக்குத் தெரியும், விழும் என்று சொல்லி, ஏன் மானமிகு ஆசிரியரின் இரங்கலுரை யையும் கேட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் கடைசியாக ஊருக்குப் போகப் போகின்றார்கள் என்பதால் உறவினர், நண்பர்கள் (அம்மாவுக்கு அமெரிக்கா வில் நிறைய நண்பர்கள் )அனைவரையும் வரச் சொல்லி பிரிவு விழா நடத்தினோம். அதில் பேரக் குழந்தைகளும், நண்பர் களும் ,ஒவ்வொருவரும் அப்பா, அம்மா விற்கு அவர்களைப் பற்றிச் சொன்னது அனைவரையும் அழ வைத்து விட்டது. இதை நான் பலரிடம் சொவதுண்டு. வய தானவர்கட்கு அவர்கள் இருக்கும் போதே விழாக்கள் நடத்த வேண்டும், சென்ற பின் சொல்வது அவர்களுக்குக் கேட்காது என்று.<br /><br />ஒரு வழியாகச் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது என் துணைவி யாரின் பெரு முயற்சியாலும், மாமியாருக் கும் கடைசிகால அச்சம் வந்ததாலும் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அப்பா அம்மா படங்களுக்கு வருத்தமும், வாழ்த்தும் தெரிவிக்க உறவு மீண்டது. நிற்க முடியாமல், திருவெறும் பூர் பெரியார் மணியம்மை செவிலியர் பயிற்சி மாணவியர் உதவியுடன் நின்று அவரது கையாலேயே செய்த அற்புத மீன் குழம்பைச் சாப்பிட்டு வந்தேன். அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனை வரும் சென்று பார்த்து விடை பெற்றும் வந்தனர். அவர் விருப்பப் படியே எளிமையாக அவர் இறுதி நிகழ்வுகளும், படத்திறப்பும் நடந்தது. நமக்குப் பிடிக்காத மந்திரங்கள் நிகழ்வுகளும் அவர் விருப்பப் படி நடந்தது.<br /><br />அடுத்து நமக்கெல்லாம் பெரிய இடர் ப்பாடு நமது குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இல்லத் திருமணங்கள். இதிலேயும் நாம் எவ்வளவு தான் மந்திரங்களின் பொருளை விளக்கிச் சொல்லி வெட்கப் பட்டாலும், இன்றும் பலர் அர்த்தமற்ற மத வழித் திருமணங் கள் நடத்துகின்றனர். அதில் நாம் பெண்ணின் பெற்றோர்கள் என்றால் கட்டாயம் மணமகன் இல்லத்தார்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் சென்னையில் தங்கும் போது வசதிக்காக நியூ உட்லண்ட்சு விடுதியில் தங்குவேன்.அங்கு பார்க்க வந்த பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வேல் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பன விடுதி என்று காபி குடிக்க மறுத்து விட்டார். அவருக்கே அவரது பெயர்த்தியின் மணவிழா நடந்தது பெரும் இடர்ப்பாடாகி விட்டது. விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இது நம்மில் பலருக்கு நிகழும் போது எதிரி களின் பேச்சுக்கள் பற்றிக் கவலையில்லை என்றாலும், நமது கொள்கையை நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கே செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மகிழ்வைக் குறைத்து விடுகின்றது.<br /><br />இதையெல்லாம் மானமிகு ஆசிரியர் அவர்கள் நமது கொள்கைக் குடும்பத் தினர்க்கே, எனக்கும் சேர்த்துத் தான் ,அறிவுரைகள், ஆறுதல்கள் வழங்கி அய்யா வழியில் "அவர்கள் சுபாவம்" ஆனால் எதிர் காலம் நமது தான் என்ற உறுதியைச் சொல்வார்கள். காலம் மாறித்தான் வருகின்றது. நாம் நமது கொள்கையைக் கடைப்பிடிப்போம், உற்றாரும் ,உறவுகளும் திருந்தும் காலம் வரும். அது வரை பொறுமை காப்போம், அவர்களிடம் அன்பு செலுத்துவோம், கோபம் தவிர்ப்போம்.<br /><br />வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு.<br /><br />- சோம.இளங்கோவன் (அமெரிக்கா)<br /><br />Read more: http://viduthalai.in/page2/83871.html#ixzz37JOTrt85தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9217236103571149732014-07-13T08:01:33.580+05:302014-07-13T08:01:33.580+05:30உறவினரும் கொள்கையும்!
தந்தை பெரியார் அவர்களின் த...<br />உறவினரும் கொள்கையும்!<br /><br /><br />தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்களாகிய நமக்குப் பல நேரங்களில் எதிரிகளை விட உற்றார் உறவினரே பெரும் இடர்ப்பாடு தருகின்றனர். இது தந்தை பெரியாருக்கே நிகழ்ந்தது தான் நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டும்.<br /><br />ஈரோட்டிலே முனிசிபல் தலைவராக இருந்து ஆச்சாரியார் அவர்களே உமது சுகாதார அதிகாரியைச் சேலத்திற்குக் கொஞ்ச நாள் கடன் தரவும் என்று வேண்டிய அளவு நன்மைகள் செய்தவர். குடிநீர் வசதிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டி, குழாய்களில் தண்ணீர் வரும்படிச் செய்தவர்.அதில் தீட்டு கழுவித் தண்ணீர் பிடிக்கும் நிகழ்ச்சியை நாம் பெரியார் படத்தில் பார்த்தோம்.<br /><br />கடைசிவரை தந்தை பெரியார் அவர்களின் தாயார் அந்தக் குழாய் நீரைப் பயன் படுத்தாமல் ஆற்றிலிருந்து நீர் பிடித்து வந்துதான் பயன்படுத் தினார்களாம்.அய்யாவும் கடைசியில் ஏன் என்று பிடிவாதமாகக் கேட்க, அம்மா அந்தத் தண்ணீர் சுத்தமில்லாதது என்றாராம்.<br /><br />ஒன்றும் புரியாத பெரியார் எப்படிச் சுத்தமில்லை என்று கேட்ட தற்கு அம்மா அளித்த பதில் நம் ஒவ் வொருவருக்கும் கன்னத்தில் கொடுக்கும் அறை போன்று அந்தக் காலத்தை நினை வூட்டும்.<br /><br />" குழாய் தண்ணீரெல்லாம் சரி தான். ஆனால் அந்தப் பம்பு சுவிட்ச்சைப் போடும் ஆள் கீழ்ச்சாதிக்காரர்" என்றா ராம்.<br /><br />இன்று நமது உற்றார், உறவினர் செய்கைகள் பல நமக்குச் சங்கடத்தைத் தருவது நம்மில் பலருக்கு வெட்கமும், வேதனையும் தரக்கூடியது என்றாலும் நாம் தலைவர் பெரியாரைப் போலவே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர கோபமோ,முரட்டு வார்த்தைகள் வரும் படியோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.<br /><br />தந்தை பெரியார் அவர்கள் சொன்ன படி "அவர்கள் சுபாவம் அது" என்று அவர் களுக்குத் துணிவில்லை, அறிந்தது அவ் வளவு தான் என்று எடுத்துக் கொண்டு அன்பு காண்பிக்க வேண்டுமே தவிர ஒதுங்கக் கூடாது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த எதிரிகளின் வார்த்தைகளைப் பற்றிக் கவலை படக் கூடாது.<br /><br />எனது மகள் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமெரிக்காவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வரவேற்பு வைத்திருந்தோம். அதை விரும் பாத எனது மாமியார் வரவில்லை. அவர்களைப் பார்க்கச் சென்ற மணமக்களைப் பார்க்கவும் இல்லை. இது வளர்ந்து எனக்கும் அவர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையே இல்லை. ஆசிரியர் அய்யா கூட நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியும் நான் போக வில்லை. எப்படி ஆசிரியர் அவர்கள் கொள்கைக்காக தனது மாமனாருக்குக் கொள்ளி வைக்க மாட்டேன் என்று மாமியார் கொள்ளி வைக்காவிட்டால் அவ்வளவு சொத்துக்களையும் கிருத்துவ மிசனரிக்கு எழுதிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், தந்தை பெரியார் அவர்களும் " நெருப்புத் தானே, வைத்து விடு, அவ்வளவு சொத்துக்களும் போகப்போகின்றதே என்று சொல்லியும், வைக்க மறுத்துக் கடைசிவரை அவ ருடன் பேசாமலே இருந்தாரே அது மாதிரி நம்மில் பலருக்கு நேர்ந்துள்ளது.<br /><br />எனது மாமியார் கடும் உழைப்பாளி. நல்ல அறிவாளி. அத்தனை குழந்தை களையும் நன்றாகப் படிக்க வைத்து அனைத்தும் செய்தவர்.இரண்டு பெண் களையும் மருத்துவர்களாக்கி மகிழ்ந்தவர் எனது மாமனார் தனது பிள்ளைகளை விடத் தனது உடன் பிறப்புக்களுக்குத் தான் எல்லாம் செய்கின்றார், என்ற நமது அனைவர்க்கும் பழக்கப்பட்ட தொடர்கதை வசனந்தான். அதுவே என் துணைவியாரும், அவரது தங்கையும் இரண்டு குடும்பங்களும் நம் குடும்பங்கள் தான் என்று மனமாரச் செய்ய வழி செய்து விட்டது.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77546811727780109312014-07-13T07:59:47.462+05:302014-07-13T07:59:47.462+05:30
கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்க...<br />கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு<br /><br /><br />கணிதவிய லில் 50 ஆண்டு களுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்க லான கோட் பாட்டுக்கு இந் தியாவைச் சேர்ந்த நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனி யல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.<br /><br />இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணித வியல் மற்றும் தொழில்துறையியல் கூட்ட மைப்பு சார்பில் ஜார்ஜ் போல்யா-2014 என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.<br /><br />வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.<br /><br />பெங்களூருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.<br /><br />குவாண்டம் மெக்கானிக்ஸ் உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடு களுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959 ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளி யிட்டனர். ஆனால், அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.<br /><br />இந்நிலையில், அதற்கு நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br />ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/83883.html#ixzz37JOH9xoF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18140323081575686422014-07-13T07:58:28.018+05:302014-07-13T07:58:28.018+05:30கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்...கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரண மாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும்தான் இச்சையால், புத்தியால் செய்துகொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக்கொண்டு திரிபவன் அயோக்கியன்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83878.html#ixzz37JNwVKdM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55801877177938490972014-07-13T07:56:56.551+05:302014-07-13T07:56:56.551+05:30
சிவகாமி - சிதம்பரனார் புனர் (மறு) விவாகம்
இத்திர...<br />சிவகாமி - சிதம்பரனார் புனர் (மறு) விவாகம்<br /><br />இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து, மெய்க்காதல் கொண்டு, தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்து வதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை.<br /><br />ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது, ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.<br /><br />பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை யான கொள்கையுடைய சுயமரி யாதை இயக்கம் தோன்றி, இன் றைக்கு 4, 5 வருஷங்களே யாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரி யாதைத் திருமணங்கள் நடந்தேறி யிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.<br /><br />இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டி ருக்கிறது. கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.<br /><br />பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்ப தற்குமென்றே கருதப்பட்டு வருகிறது.<br /><br />அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா?<br /><br />அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்டவேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்த தோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள் ளலாம்.<br /><br />கணவனையிழந்த கன்னிகை, தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப் பாட்டில் கழிக்கவேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமிபோல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிக மான செய்கை யென்றுதான் சொல்ல வேண்டும்.<br /><br />அத்தகைய எதிர்ப் பையும், இடைஞ்சலையும், மூடக் கட்டுப் பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடுகூடிய செய்கைகளையும், நடவடிக்கை களையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.<br /><br />(05-05-1930 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரிமேஜிஸ்திரேட்டுமாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும் ஈரோடு திரு.ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2ஆவது சுயமரியாதை மகாநாட்டுக்கென அமைந்திருந்த சிங்காரக் கொட்டகையில், திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்த (தாலி கட்டுதல் ஒழிந்த) திருமணத்தில் பேசியது ).<br /><br />- குடிஅரசு - சொற்பொழிவு - 11.05.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNPVS6m<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41117392037437521092014-07-13T07:55:30.229+05:302014-07-13T07:55:30.229+05:30
புரட்டு
பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல ப...<br />புரட்டு<br /><br /><br />பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.<br /><br />கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல் வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.<br /><br />அவ்வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.<br /><br />இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம்.<br /><br />தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.<br /><br />மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.<br /><br />கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11. 05.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83875.html#ixzz37JNBvGjt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54261651505167857962014-07-13T07:53:14.015+05:302014-07-13T07:53:14.015+05:30
தலையெழுத்தாம்
ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் ப...<br />தலையெழுத்தாம்<br /><br /><br />ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.<br />(குடிஅரசு, 6.7.1968)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/83922.html#ixzz37JMb0hWG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39886631714456103052014-07-13T07:52:41.250+05:302014-07-13T07:52:41.250+05:30
கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு
கருநாடக ...<br />கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு<br /><br />கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எச். வகேலா, எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.<br /><br />நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை அகற்றிட வேண்டும் என்று ஜெனிபர் பிண்டோ, பிரியாராவ் ஆகியோர் கடந்தஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.<br /><br />நடைபாதைப் பகுதிகளில் உள்ள கோவில் ஆக்கிரமிப்புகளால் குழந்தைகளும், பெரியோர்களும், பொது மக்களும் சாலை விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.<br /><br />உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெங்களூரு மாநகரத்தில் நடைபாதைக் கோவில்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் எவை அகற்றப்படக் கூடியவை? எவை அகற்ற இயலாதவை? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் கூறியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது? நடைபாதைகளில் உள்ள கோவில்கள் முக்கியமா? அல்லது சிறுவர்களின் உயிர்கள் முக்கியமா? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச் சினையினை மனிதர்களானாலும், கோவில்கள் ஆனாலும் சட்டம் ஒன்றே இதில் விதி விலக்குக் கிடையாது - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறாராகக் கருத்து கூறினார்கள்.<br /><br />உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது ஒன்றும் புதுத் தீர்ப்போ, ஆணையோ அல்ல. உச்சநீதி மன்றமே இதைவிட அழுத்தமாக தீர்ப்புக் கூறியுள்ளது.<br /><br />பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்வதில் தன் இயலாமையை பல நேரங்களில் அரசுகள் காட்டி வருகின்றன. இந்தக் கோவில்களில் எவ்விதப் புனிதமும் கிடையாது. பொதுப் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டு என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பு வெளி வந்தது. 2006இல்.<br /><br />அதன் தொடர்ச்சியாக 2010 செப்டம்பரில் இதே உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (14.9.2010).<br /><br />தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் நடைபாதைகளில் கட்டப்பட் டுள்ளன. அதன் எண்ணிக்கை 77,450. ராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கோவில் கூடக் கிடையாது என்று அம்மாநில அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டதை நீதிபதிகள் நாகரிகமான மாநிலம் என்ற வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்தினர்.<br /><br />இதிலிருந்து என்ன தெரிகிறது? அனுமதியின்றியும், பொது மக்களுக்கு இடையூறாக கோயில்களைக் கட்டுவது அநாகரீகம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.<br /><br />இப்படி தீர்ப்புக் கூறியிருப்பது தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற திராவிடர் கழகத் தலைவரோ அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பதை மறந்து விடக் கூடாது.<br /><br />சட்டத்தின் முன் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை அரசுகள் உணருமா? ஊடகங்களும் இந்த வகையில் வலியுறுத்துமா?<br /><br />காலந் தாழ்ந்தாலும் மாநில அரசுகள், உள்ளாட்சித் துறைகள் செயல்படுத்துமா? எங்கே பார்ப்போம்!<br /><br />யாருக்காவது கோவில்களை இடிப்பதில் தயக்கம் அச்சம் இருக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கழகம் தயாரே! கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் சொன்னதுதான் இது. (21.9.1975).<br /><br />Read more: http://viduthalai.in/page-2/83923.html#ixzz37JMSrO9U<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55207978366552941062014-07-13T07:51:43.596+05:302014-07-13T07:51:43.596+05:30
கடவுளானாலும் சட்டம் ஒன்றுதான் நடைபாதைக் கோவில்களை...<br />கடவுளானாலும் சட்டம் ஒன்றுதான் நடைபாதைக் கோவில்களை அகற்றுக!<br /><br /><br /><br />கருநாடக உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க தீர்ப்பு<br /><br />பெங்களூர் ஜூலை 12-_ நடைபாதைக் கோயில் களை அகற்றலாம் கடவு ளானாலும் சட்டம் ஒன்று தான் என்று கருநாடக உயர்நீதிமன்றம் சிறப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.<br />நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்பு அகற் றுவதில், மனிதர்களானா லும் கடவுள்களானாலும் சட்டம் ஒன்றே என்று கருநாடக உயர்நீதிமன்றம் கருத்தறிவித்துள்ளது..<br /><br /><br />நடைபாதைகளில் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளால், குழந்தை களும் மற்றவர்களும் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. அத னால் ஏற்படும் விபத்து களில் அவர்கள் இறக்கும் நிலைகளும் உண்டாகின் றன. நடைபாதைகளில் நிறுவப்பட்டுள்ள சிலை முக்கியமானதா? அல்லது சிறுவர்களின் உயிர் முக்கியானதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது. பெங்களூர் நகரில் உள்ள பெரும் பாலான நடைபாதை களை கோயில்களும் கடவுள் சிலைகளும் ஆக்ரமித்துள்ளதாக, பெங்களூர் பெருநகர மன்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத் துரைத்தபோது, தலைமை நீதியரசர் டி.எச். வகேலா, நீதியரசர் எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 09.07.2014 அன்று மேற்கண்ட கருத்தைக் கூறியது.<br /><br />உயர்நீதிமன்றம் ஏற் கெனவே அறிவுறுத்தி யதன் பேரில் பெங்களூரு மாநகரத்தில் உள்ள நடைபாதைகளின் நிலை குறித்த பெரு நகர மன்ற ஆணையர் நடத்திய கள ஆய்வின் அடிப்படையில் பகுதிவாரியாகப் பிரிக்கப் பட்டு அவற்றுள் எவை அகற்றப்படக் கூடியன; எவை அகற்ற இயலாதன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக வழக்குரைஞர் கூறினார்.. கோயில்கள் போன்ற அகற்ற இயலாத ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் சிக்கல்கள் உள்ளதாக வழக்குரைஞர் கூறிய போது குறிக்கிட்ட நீதி யரசர்கள், அத்தகைய ஆக்ரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடை யாக இருப்பது எது? நடை பாதைகளில் உள்ள ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் மனிதர்களானாலும் கட வுள்களானாலும் சட்டம் ஒன்றே. நடை பாதை களில் நிறுவப்பட் டுள்ள சிலைகள் முக்கியமான வையா? அல்லது சிறுவர் களின் உயிர் முக்கியான வையா? என்று கேட்டனர்.<br /><br />நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட உரிய அதிகாரி களுக்கு ஆணையிட வேண் டுமென்று ஜெனிபர் பிண்டோ, பிரியா ராவ் ஆகி யோர், கடந்த ஆண்டு தொடுத்த பொது நல வழக்கின் விசாரணையின் போது கருநாடக உயர்நீதி மன்ற நீதியரசர்கள் தெரி வித்த பொருள் பொதிந்த அறிவு நாணயம் மிக்க கருத் துரைகள் பெங்களூருக்கு மட்டுமன்று; இந்தியா வுக்கே பொருந்துவதாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/83907.html#ixzz37JMESYuK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com