tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7470637228444781711..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: வைக்கம் போராட்டத்தை காந்தியார் விரும்பவில்லை-ஏன்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41809169758731579932015-02-11T20:28:51.933+05:302015-02-11T20:28:51.933+05:30மதுவால் மதி மயக்கம்
கரூர் பேருந்து நிலையம் அருகே ...மதுவால் மதி மயக்கம்<br /><br />கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது. கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17).<br /><br />கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர்.<br /><br />நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி சீருடை யிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறிச் செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கிக் கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர்.<br /><br />இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்துச் சென்றனர். வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்! பள்ளிச் சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95725.html#ixzz3RRsrP7Xg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4379847851548227972015-02-11T20:28:29.120+05:302015-02-11T20:28:29.120+05:30இந்திய அறிவியல் கழகம்
இந்திய அறிவியல் கழகத்தின் 1...இந்திய அறிவியல் கழகம்<br /><br />இந்திய அறிவியல் கழகத்தின் 102 ஆவது கூட்டம் 5, ஜனவரி, 2015 அன்று மும்பையில் நடைபெற்றது. அதில் வேத அறிவியல் என்று சில மூட அறிவியல்களை பரப்பியதுமட்டுமன்றி உலக அறிவியல்களின் மூதாதையர்கள் இந்தியர்கள் என்றும், இவர்களின் கண்டுபிடிப்புகளை மேல்நாட்டார் கவர்ந்து சென்றது போன்றும் கருத் துக்களை பரப்பினர்.<br /><br />இதனைச் சார்ந்து 06.01.2015 அன்றைய ஆங்கில இந்து நாளேட்டில் டி.கீதா அவர்கள் 'ஆசிரியருக்கு கடிதம்' பகுதியில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட் டவை: வேத கால அறிவியல் அறிக் கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு தொல்துறை நிபுணர்கள், வெட் டெழுத்து நிபுணர்கள் மற்றும் வர லாற்று வல்லுனர்கள் தகுந்த ஆதா ரத்தை வழங்குமாறு உரிமையுடன் கேட்க வேண்டும்.<br /><br />கடந்த ஆண்டு புதுச்சேரி பல் கலையின் பேராசிரியர் ராஜன் அவர்கள் பொருந்தல் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற பழங்கால தாழிகளில் கண்ட 'தமிழி' எழுத்து வடிவினை ஆராய்ந்த தில் இந்திய மொழிகளின் வரிவடிவின் அடித்தளமே இந்த தமிழி எழுத்து வரிவடிவங்கள் தான்' என்று ஆணித் தரமாக நிரூபித்தார்.<br /><br />இதனை சென் னையில் இயங்கும் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழியில் இருந்த வரிவடிவங்கள் வழியாக மேலும் உறுதி செய்தனர். வெப்பமிளிர்வு சோதனைக்கு உட்படுத்தியதில் பொருந்தல் கிராமத் தில் கிடைக்கப் பெற்ற பானை ஓடுகள் கி. மு 1000 ஆண்டுகளை சார்ந்ததாக்கும் என்று உறுதிப்படுத்தினார்.<br /><br />இதனை மேலும் உறுதிசெய்ய இந்தத் தாழியை மைசூர் கிளை தொல்லியல் துறை, வெட்டெழுத்து வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களை உறுதி செய்யுமாறு மீண்டும் நினைவுபடுத் தினர். வந்த பதில் "அந்தத் தாழியைக் காணோம் தேடியும் கிடைக்கவில்லை" இது வேண்டுமென்றே செய்யப் பட்ட தகாத செயல் என்ற முடிவுக்குத் தான் வர முடிகிறது.<br /><br />டி.கீதா, அய்தராபாத்.<br />நாம் அறிவது - தமிழின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் கண்டு பொறுக்காத இனங்கள் இன்னமும் உள்ளன.<br />தகவல்: சி.நடராசன்<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95724.html#ixzz3RRskwq5T<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62211150259793095692015-02-11T20:26:49.030+05:302015-02-11T20:26:49.030+05:30இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி
இந்தியாவில் ப...இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி<br /><br />இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர்.<br /><br />ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர்.<br /><br />ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, அந்த ஆரம்ப கட்டபோராட்டத்தில் வெற்றிபெற்றவர்களும் அன்னை ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, போன்றோரை அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்களின் வரிசையில் முத்தம்மாவை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.<br /><br />அப்போதைய மதராஸ் மாகாணத்தில் பிறந்து சென்னை கிருஸ்தவ கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பயின்ற முத்தம்மா அவர்கள் அய்.எஃப்.எஸ் படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் மற்றும் அய்.எஃப்.எஸ் ஆவது குதிரைக் கொம்பாகும்; அதை முறியடித்து இந்தி யாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஆனார் சி.பி. முத்தம்மா (1924_2009).<br /><br />1949-ஆம் ஆண்டு இந்திய வெளி யுறவுதுறை அதிகாரியாக இருந்த முத் தம்மாவிற்கு அவரது பொது வாழ்க் கையில் பல்வேறு தடைகள் முக்கியமாக திருமணம் செய்யவேண்டும் என்றால் பதவியில் இருக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தது, இது மட்டுமல்ல பல்வேறு விதிகள் முக்கியமாக பெண் களுக்கு எதிரான விதிகள் இருந்தன.<br /><br />இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் முத்தம்மா, மறைந்த கிருஷ் ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வெளியுறவுத் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை 8(2) பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்று கூறி<br />ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டு மென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத் தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம்.<br /><br />தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறி போகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?<br /><br />விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமண மான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான ஆணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மனநிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்த பாகுபாடு? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.<br /><br />அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்தத்துவம் நடைமுறையில் செயல் படுத்தப்படுவதில்லை என்பதை இந்த விதி கட்டுகிறது,என்றார். கிருஷ்ணய் யரின் இந்தத் தீர்ப்பை அடுத்து அந்த பிரிவு நீக்கப்பட்டது.<br /><br />கோடானு கோடிப் பெண்களில் ஒரு முத்தம்மா எடுத்த துணிச்சலான நட வடிக்கை அரசுத்துறைகளின் சுதந்திரத் திற்கு பின்பும் இருந்த ஆணாதிக்க திமிர் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு முத்தம்மா பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார். 35 ஆண்டுகள் பணிக் காலத்தில் அரசு உயர் பதவிகளில் பெண்களுக்கான தடைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நீக்க போராடினார்.<br /><br />தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களை வியந்து பார்க்கவைத்தது. டில்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடை யாக வழங்கினார். அப்போதே அந்த இடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட தாகும். அரசுத் துறைகளின் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க அவர் எடுத்துக் கொண்ட போராட்டத்திற்கு உரமாக திகழ்ந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டம் கொடுத்த ஊக்கமாகும்.<br /><br />கருநாடகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கொடவா என்ற பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />(அவரின் பிறந்த நாள் 24.1.1924)<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95718.html#ixzz3RRsKokch<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31442866713099358482015-02-11T20:26:18.590+05:302015-02-11T20:26:18.590+05:30கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை
கம்யூனிஸ்டு ஒழுக்க...கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை<br /><br />கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறையில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். இது பிரச்சினையைக் குழப்பும் முறையாகும்.<br /><br />தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம். பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப்படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் கூறப்படும் அவைகளை நிராகரிக்கின்றோம்.<br /><br />இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. மதக் குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.<br /><br />- வி.இ. லெனின்<br />(மதத்தைதப்பற்றி எனும் நூல் பக்.103)<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95720.html#ixzz3RRs5IJ4n<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50267797516500950462015-02-11T20:25:12.239+05:302015-02-11T20:25:12.239+05:30வாஜ்பேய யாகம்
வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகித...வாஜ்பேய யாகம்<br /><br />வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.<br /><br />வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.<br /><br />யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.<br /><br />- எஸ். நல்ல பெருமாள், வடசேரி<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68339456004875161972015-02-11T20:24:09.745+05:302015-02-11T20:24:09.745+05:30வாஜ்பேய யாகம்
வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகித...வாஜ்பேய யாகம்<br /><br />வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.<br /><br />வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.<br /><br />யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.<br /><br />- எஸ். நல்ல பெருமாள், வடசேரி<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60956235945420920162015-02-11T20:21:59.363+05:302015-02-11T20:21:59.363+05:30தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தை முறியடிப்பீர்!...தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தை முறியடிப்பீர்!<br /><br />உலகில் தோன்றிய முதல்மொழி தமிழே<br />தனித்தியங்க வல்ல மொழிதமிழ்<br />உலகில் வாழும் மொழிகளுள் இன்றும்<br />உயிர்ப்புடன் வாழ்வது தமிழே!<br /><br />இறவா இலக்கிய இலக்கணம் படைத்த<br />எழுத்துப் பேச்சு மொழிதமிழ்<br />ஆரிய ஆங்கிலத் திணிப்பை மீறி<br />அழியா மொழி நம் தமிழே!<br /><br />கிறித்துவச் சமயம் பரப்பவந்த அய்ரோப்பா<br />பாதிரிகள் தமிழைக் கற்றனர்<br />அரும்பெரும் தமிழின் ஆற்றலை அதன்<br />கட்டமைப்பைக் கண்டு வியந்தனர்<br />தேர்ந்த காவியம் படைத்தார் திராவிட<br />மொழிகளின் ஒப்பிலக்கணம் வரைந்தார்<br />திருக்குறள் சங்க இலக்கியத்தை மொழி<br />பெயர்த்து உலகிற்கு உணர்த்தினர்!<br /><br />ஆரியம் தமிழில் கலந்ததால் தெலுங்கு<br />கன்னடம், மலையாளம் தோன்றின<br />புராண இதிகாச புனைவுகள் புளுகுகள்<br />பொய்யும் புரட்டும் எழுந்தன<br />இயற்கை வழிபாடு இல்லாத கற்பனை<br />கடவுள் உருவ வழிபாடாக<br />ஆயக்கலையெல்லாம் ஆரிய மாக்கி<br />பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தினர்!<br /><br />பொறியியல் மருத்துவம் வானியல் இசை<br />சிற்பம் கட்டடக் கலைபோன்று<br />அறிவுத் திறமுடை நூல்களை ஆரியத்தில்<br />பெயர்த்து நீர்நெருப்பில் அழித்தனர்<br />பெருவுடையார் பிரகதீஸ்வரர் சிற்றம்பலம் சிதம்பரம்<br />திருவரங்கம் சிறீரங்க மாக்கினர்<br />திருவுடை தமிழக ஊரை யெல்லாம்<br />வடமொழியால் ஆக்கியவர் பார்ப்பனர்!<br /><br />திருவள்ளுவர் நாளைக் கொண்டாட திருகு<br />தாளங்கள் பாரதியைத் திணிக்கின்றார்<br />திருக்குறளைத் தேசிய நூலாக்க மறுக்கின்றார்<br />இங்கே ஒளிந்திருக்கும் ஆர்எஸ்எஸ்<br />குரங்குதன் குட்டியை விட்டாழம் பார்க்க<br />தருண்விஜய் பாராட்டு!<br /><br />காவிகள்<br />பாராட்டில் கிரங்காதீர் கீதையைத் தேசிய<br />நூலாக்க ஆடிய நாடகமே!<br /><br />இந்தி எதிர்ப்பில் இன்றுவரை தமிழகம்<br />விழிப்புடன் இருப்பதைக் கண்டு<br />இந்துவியக் கும்பல இப்போது தங்கள்<br />அணுகு முறையை மாற்றிக் கொண்டு<br />தமிழைப் போற்றியும் திருக்குறளை ஏற்றியும்<br />புதிய வடிவமெடுக் கின்றார்<br />தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தின்<br />தந்திரத்தை முறியடிப் பீரே!<br />கவிஞர் இனியன், திருச்சி<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95715.html#ixzz3RRr7RCHX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68217723817414754642015-02-11T20:21:19.877+05:302015-02-11T20:21:19.877+05:30சாமிக்கு சாராய அபிஷேகம்!
மத்தியப்பிரதேசத்தில் கால...சாமிக்கு சாராய அபிஷேகம்!<br /><br />மத்தியப்பிரதேசத்தில் காலபைரவர் சிலைக்கு சாராயம் அபிஷேகம் செய்ய அரசு சார்பில் கடை அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு காலபைரவரின் மிகப்பெரிய சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.<br /><br />சாமியின் கண் வழியே சாராயத்தை ஊற்றுகிறார்கள். இதனால், பக்தர்கள், வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து சாராயம் மற்றும் வெளிநாட்டு மது வாங்குகிறார்கள். அரசு சார்பில் கடை திறப்புபக்தர்களிடம் வியாபாரிகள் அதிக விலைக்கு சாராயம் விற்பதை தடுக்க தற்போது மத்தியப்பிரதேச அரசே கோவில் அருகே கடை திறந்துள்ளது.<br /><br />இங்கு 2 கவுண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.ஒன்றில் அரசு சாராயமும், மற்றொன்றில் வெளிநாட்டு மதுவும் விற்கப்படுகிறது. 180 மி.லிட்டர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்த கோவிலில் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாகவும் கொடுக்கப்படுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95717.html#ixzz3RRqxIEb6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31262833744302539172015-02-11T20:20:05.274+05:302015-02-11T20:20:05.274+05:30வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!
அறி...வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!<br /><br />அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள் இங்கு நிலவு கின்றன.<br /><br />எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.<br /><br />இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.<br /><br />அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?<br /><br />இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.<br /><br />இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.<br /><br />இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.<br /><br />ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.<br /><br />அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.<br /><br />ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,<br /><br />இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்<br /><br />ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.<br /><br />இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை<br />வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை<br />தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை<br />பிந்திய நடுவது பிரமன்தானமே<br />என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.<br /><br />இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.<br /><br />இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.<br /><br />ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?<br /><br />முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95716.html#ixzz3RRqdcwjk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76075509540724465162015-02-11T20:18:48.245+05:302015-02-11T20:18:48.245+05:30தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டமான ...தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டமான சட்ட எரிப் புப் போராட்டத்தில் பங்கு ஏற்றேன். 6 மாத கடுங்காவல் தண்டனை - திருச்சி மத்திய சிறையில் இருந்தேன்.<br /><br />சட்டத்தை எரிப்பதற்கு முன் என்னை முன்கூட்டியே கைது செய்ய போலீஸ்காரர்கள் கடைக்கு வெளியிலே காத்துக் கொண்டு இருந்தார்கள்.<br /><br />நான் என்ன செய்தேன் தெரியுமா?<br /><br />சட்ட நகலை எரித்துக் கொண்டே வெளியில் வந்தேன். அவர்கள் ஏமாந் தார்கள்; முன்கூட்டியே என்னைக் கைது செய்திருந்தால் எனக்குத் தண்டனை கிடைத்திருக்காது; நான் அவ்வாறு தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. தந்தை பெரியாரின் தொண்டர்கள் கட மையைச் செய்பவர்கள் தண்டனைக்கு அஞ்சாதவர்கள் அல்லவா!<br /><br />நான் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முதல் நாள் 35 ஆண்டுகளாக திருச்சி சிறையில் பணியாற்றிய வார்டன் ஜெயிலரிடம் என்னை பற்றிச் சொன் னார் _ எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.<br /><br />இந்த 35 வருட சிறைப் பணியில் திராவிடர் கழகத் தோழர்கள் போல யாரையும் நான் பார்த்ததில்லை; அதிலும் குறிப்பாக இந்தத் தோழர் கோபால் மிகவும் சிறந்த கண்ணியமான மனிதர் என்று சொன்னார்.<br /><br />எனது திருமணம் சுயமரியாதை முறையில்தான் நடந்தது. அய்ந்து மக்கள் எனக்கு; மூவர் பெண்கள் இருவர் ஆண்கள் -நல்ல முறையில் வசதி குறை வின்றி சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.<br /><br />மன்னார்குடியில் கே.ஆர்.ஜி.பால், கீழப்பாலம் ஆர்.ஆர்.எஸ். இராமச் சந்திரன், தஸ்தகீர் போனற இயக்க வீரர்களிடம் எனக்குப் பழக்கம் அதிகம். எடகீழையூர் க. நல்லதம்பி என்னை மத்திய கமிட்டி உறுப்பினராக ஆக்கு வதாகச் சொன்னார். நான் வேண்டாம்; சாதாரண - உண்மையான தொண் டனாக இருக்கவே விருப்பம் என்று சொன்னேன்.<br /><br />என்னுடைய பேரன் வல்லம் பெரி யார் பாலிடெக்னிக்கில் மெக்கானிக் பிரிவில் படித்து இப்பொழுது சிங்கப் பூரில் பணியாற்றுகிறான்.<br /><br />நான் என் வீட்டில் உள்ளவர் களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். நான் மரணம் அடைந்தவுடன், என் உடலக்குக் கருப்புச் சட்டை அணிவித்து, தீயிட்டுக் கொளுத்தி அந்த சாம்பலை வயல்களில் தெளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இதுதான் எனக்குக் காட்டும் முக்கிய மான மரியாதை என்று சொல்லி வைத்துள்ளேன் என்று உற்சாகம் பொங்கக் கூறினார்.<br /><br />தந்தை பெரியார் எத்தகைய தொண் டர்களை உருவாக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?<br />இந்த இயக்கத்துக்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு இந்த உலகத்தில் ஏது?<br /><br />(சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் தொடக்கத்தில் முடி திருத்தகங் கள் தான் நமது கழகத்திற்குப் பாசறையாக இருந்தன என்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியது தான் நினைவிற்கு வருகிறது)<br /><br />(பேட்டி கண்டவர்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் - இடம் மன்னார்குடி புதிய வீட்டு வசதிக் குடியிருப்பு, உடனிருந்தோர் பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மன்னார்குடி நகர திராவிடர் கழகத் தலைவர் ஆர்.எஸ். அன்பழகன்).<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95714.html#ixzz3RRpv4Wwzதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77704215923989646412015-02-11T20:18:42.981+05:302015-02-11T20:18:42.981+05:3090 வயது சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மன்னை கோபால்
...90 வயது சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மன்னை கோபால்<br /><br />மன்னார்குடி சட்ட எரிப்பு வீரர் (6 மாதம் சிறை திருச்சியில்) மானமிகு கு. கோபால் அவர்கள் 90 வயது காணும் இளைஞர்.<br />தன்னுடைய மகன் கவுதமன் வீட்டில் மன்னார்குடியில் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இப்பொழுது வசித்து வருகிறார்.<br />இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.<br /><br />அவரை விடுதலை சார்பில் பேட்டி காணச் சென்றபோது அவர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.<br />என்னுடைய 12ஆம் வயதில் தஞ்சாவூர் திலகர் திடலில் தந்தை பெரி யாரைப் பார்த்தேன் - அவர் பேச்சையும் கேட்டேன் _ பசு மரத்தாணிபோல் அவர் பேச்சு என்னெஞ்சில் தைத்து விட்டது.<br /><br />நான்காம் வகுப்புவரை மட்டுமே படிக்கக் கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், பெரியாரின் கொள்கைக் கல்வி என் நெஞ்சைத் தொட்டு விட்டது - இவர்தான் நம் தலைவர் இவர் கொள்கைதான் நம் வாழ்க்கைப் பாதை என்று உறுதி கொண்டேன்.<br /><br />இன்று வரை அய்யாவின் கொள் கைகள் ஊக்கமுடன் என்னை வாழ வைத்துக் கொண்டுள்ளன. பெரியாரைப் போல ஒரு தலைவரை காண முடியாது - புத்தருக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார்.<br /><br />மன்னார்குடியில் ஆறுமுக ஹேர்டிர சிங் சலூன் ஒன்றை நடத்தி வந்தேன். என்னிடம் வரும் வாடிக்கையாளர் களிடம் பெரியார் கொள்கைகளையும், இயக்கச் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறிக் கொண்டே இருப்பேன் யார் _ மனமும் கோணாதபடி பக்குவமாகச் சொல்லுவேன்.<br /><br />பார்ப்பனர்களும் என் வாடிக்கை யாளர்கள்தான்; அவர்களிடமும் பெரியார் கொள்கையை எடுத்துச் சொல்லுவேன். அவர்களும் ஆச்சரியப் படுவார்கள். பெரியார் இப்படி எல்லாம் சொல்லியிருக்கிறாரா? எங்களிடம் வேறு மாதிரியாக அல்லவா பெரி யாரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். அதெல்லாம் தப்புப் பிரச் சாரம் என்று பார்ப்பன வாடிக்கையா ளர்களிடமும் தெளிவுப்படுத்துவேன்.<br />முடி திருத்தகத்தில் விடுதலை உட்பட இயக்க ஏடுகளை போடுவேன். யாராவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.<br /><br />மன்னார்குடியில் பெரியார் படிப் பகத்தை என் சொந்த செலவில் ஏற்படுத்தினேன். தந்தை பெரியார் அவர்களை அழைத்து நடத்தினேன். ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் வந்திருந்தார். அந்தப் படிப்பகத்திற்கு நன்கொடையாகப் புத்தகங்களை வசூல் செய்தேன் - பணம் வசூல் செய்யவில்லை.<br /><br />முடி திருத்தகப் பணியோடு வைத்தியம் பார்க்க என்னிடம் வருவார் கள். அப்பொழுதும் - கொள்கைப் பிரச் சாரம்தான். அந்த வைத்தியம் என்பது எங்களுக்குப் பாரம்பரியமாக வந்தது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65777614346884682202015-02-11T20:15:30.585+05:302015-02-11T20:15:30.585+05:30சரியான தரு ணத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப் பட்...சரியான தரு ணத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வரவேற்க வேண்டியது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதை முக்கிய குறிக்கோளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம். வெறும் பட்டம் மட்டும் கொடுத்து அனுப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.<br /><br />அதற்கான ஒரு மய்யத்தை அந்தந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். இது படித்துவிட்டு செல்லும் மாணவர்களுக்கு நல்ல வகையில் பயன்படக் கூடியதாக இருக்கும் என்று தமது கருத்தைப் பதிவு செய்தார்.<br /><br />இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்ற தஞ்சை வெட்டிக்காட்டை சேர்ந்த திவ்யா கூறும்போது, நான் எதிர்ப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமென்று! முகாமிற்கு வந்ததை வெற்றிப் படிக்கட்டாக நினைக்கிறேன் என்றார். இதுபோன்ற பல தொழில் முனைவோர் தங்கள் கருத்துகளை இம்முகாம் மூலம் பகிர்ந்து கொண்டனர்.<br /><br />படித்தவர்கள், படிக்காத வர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தனக்கென ஒரு வேலை வாய்ப்பினையும், ஆலோசனையையும், தொழில் முனை வோருக்கான வாய்ப்பினையும் பெற்றுச் சென்றனர்.<br /><br />அவர்கள் செல்லும் போது, பவர் அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று அவர்களே தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து, தனித் தன்மை யோடு, தொழில்முனைவோராகவும், வேலை வாய்ப்பினை தரக்கூடியவராக வும் ஆகும் போது, பவர் அமைப்பின் உழைப்பிற்கான பலனை கண்முன் பார்க்கும் போது, ஏற்படுகிற மகிழ்ச் சியும், பெருமையும், இந்த முகாமினை ஏற்படுத்திய ஏற்பாட்டளர்கள் அனை வரின் கண்முன் காண முடிந்தது.<br /><br />அவர்கள் கொடுத்த பயனுள்ள பாதை யில், ஊக்கமும், உற்சாகமும் குறையாமல் வாழ்வில் முன்னேற தொழில் முனை வோர்கள் பயணித்தால் வெற்றி நிச்சயம். திறமைக்கான முகாமினை பவர் அமைப்பின் செயலர் பர்வீன், பெரியார் தொழில் வணிக காப்பக செயல் அலுவலர் அருணாவும் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.<br /><br />மேலும் இதுபோன்ற முகாம்கள் வரும் மாதங்களிலும் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியது இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் மேலும் ஊக்கத்தை தந்தது. - மா.செந்தமிழினியன்<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95713.html#ixzz3RRpM2gXnதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80105155065865595082015-02-11T20:15:25.472+05:302015-02-11T20:15:25.472+05:30பட்டம் வழங்கினால் போதாது!
- ராஜமகேஸ்வரி
அடுத்து ...பட்டம் வழங்கினால் போதாது!<br /><br />- ராஜமகேஸ்வரி<br /><br />அடுத்து ஜெயம் இண் டஸ்ட்ரீஸ் நிருவாகத்தை நடத்தி வரும் ராஜ மகேஸ்வரியை சந்தித் தோம். இவர் பெரியார் பாலிடெக்னிக் முன்னாள் மாணவி. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்த வர்கள் சாதனையாளர் களாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு இவரும் உதாரணம். கடல் கடந்தும் பணியாற்றி வரு கின்றனர்.<br /><br />இவர் தஞ்சை அருகேயுள்ள புதுக் குடியில் ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் நேரிடை யாகவும், மறைமுகமாக 5-0க்கும் மேற் பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர் நம்மிடம் மனம் திறந்து பேசினார், இதுபோன்ற முகாம்களில் படித்த இளைஞர்கள் முதலில் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.<br /><br />அதனால் பல நிறுவனங்களின் தொடர்பு, அதன் மூலம் வேலை வாய்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தொழில் முனைவோர்களும், வேலை வாய்ப்பினைப் பெறுபவர்களும், தன்னம்பிக்கையோடும் தொடர் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல தொழில் முனைவோராகவோ, அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப் பினையோ பெற முடியும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32123529587167889092015-02-11T20:15:16.692+05:302015-02-11T20:15:16.692+05:30இவ்விழா தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தொழில் மய்ய பொது...இவ்விழா தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தொழில் மய்ய பொது மேலாளர் ராம லிங்கம், மத்திய அரசு பயிற்சி நிறுவன இயக்குநர் பேரா. உதயசங்கர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டாக்டர் தவமணி ஆகியோர் கலந்து கொண்டு, இம் முகாமின் முக்கியத்துவத் தையும், சிறப்பினையும் எடுத்துக் கூறி உரையாற்றியது வருகை தந்த இளைஞர்களுக்கு ஊக்கமளித்தது.<br /><br />27 நபர்களுக்கு சுயவேலை வாய்ப்பிற்கான கடனுதவி ஆவணங்கள் இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் (பவர்) மூலம் பயிற்சி பெற்று தொழில் தொடங்கியுள்ள பிரபாகரன் என்பவர் நான்கு பேர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கினார்.<br /><br />லட்சுமி விலாஸ் வங்கி அழகு நிலையம் நடத் துவதற்கு 3 பெண்களுக்கு கடனுதவி வழங்கியது. தொடர்ந்து இம்முகாமில் இடம் பெற்ற அனைத்து நிறுவனங் களும் தங்களது பெயர்ப் பலகையை வைத்து தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்தார்கள். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிக ளவில் வருகை தந்து பயன்பெற்றார்கள்.<br /><br />சமூகத்தில் பெண்கள் சாதிக்க முடியும்<br /><br />- பூங்கொடி<br /><br />இந்த முகாமில் பவர் அமைப்பு மூலம் தொழிற்பயிற்சி பெற்று மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானத்தை ஈட்டக் கூடிய அளவிற்கு உயர்ந்து மேலும் பல புதிய தொழிற் பயிற்சி களையும் மேற்கொண்டு வரும் தஞ்சையை சேர்ந்த பூங்கொடி பவர் அமைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு பயிற்சி பெற்றுள் ளார். அதன்பின்னர் பயிற்றுநராகவும் இருந்து வருகிறார்.<br /><br />அவரை இம்முகா மில் சந்தித்தோம். அவர் நம்மிடம் கூறு கையில்: பவர் அமைப்பு கொடுத்த ஊக்கம்தான் என்னை இந்த அளவிற்கு வாழ்க்கையில் உயர்த்தியுள்ளது. பெண்களுக்கு பல்வேறு திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.<br /><br />அந்த வாய்ப்புகள் இல்லாமல் சமூகத்தில் புறந்தள்ளி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து சமூகத்தில் சமவாய்ப்பளித்து அவர்களுடைய திறமையை வெளிக் கொண்டு வந்தால் அவர்கள் நல்ல நிலைக்கு உயர்வார்கள் என்பதில் அய்யமில்லை. அப்படியொரு உயர்வை எட்டிப்பிடிக்க காரணமாக அமைந்தது பவர் அமைப்பு.<br /><br />எனது திறமையை கண் டறிந்தது பவர் அமைப்பு தான். நான் ஒரு தொழில் முனைவோ ராக இன்றைக்கு உயர்ந் திருக்கிறேன். வாழ்க்கைத் தரத்திலும் நல்ல நிலைக்கு உயர்ந் திருக்கிறேன். தற்போது முகிலன் அலங்கார அங் காடியை சொந்தமாகவும் நடத்தி வருகிறேன். அதில் நாங்கள் தயாரிக்கும் பொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். இதில் எங்களுக்கு மிகவும் மனநிறைவு கிடைக்கிறது.<br /><br />சிறிய அளவில் தொடங்கிய எனது வியாபாரத்தை, பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறேன். பலருக்கும் வேலை வாய்ப்பினை கொடுத்து வருகிறேன். தொடக்கத்தில் வங்கி மூலம் ரூ.1 இலட்சம் கடன் பெற்றேன். மேலும் பவர் அமைப்பு மூலம் கொடுத்த பயிற்சியினை நன்கு பயன் படுத்திக் கொண்டேன். எனது நிறு வனத்தை சிறப்பாக நடத்தி வருகிறேன்.<br /><br />நான் இதுவரைக்கும் 750 பேர்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். இப்பயிற்சியில் சின்னஞ் சிறிய ஆபர ணங்கள், முத்துமாலை, பாசி மாலை, தோடு, காகிதப் பூ, மற்றும் சேலையை அழகுப்படுத்துதல், காகி தத்தில் வண்ண வண்ண அலங்காரப் பொருள் களும் தயாரித்து வருகிறோம். தங்க ஆபரணங்களுக்கு மாற்றாக அழகு பொருளாக தயாரித்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து வருகிறோம்.<br /><br />இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிறையே பேர் வாங்கு கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு எதையும் அழகுப் படுத்தி செய்வது விரும்புவார்கள்.. அந்த வகையில் அழகு சாதனங்களைத்தான் எங்கள் திறமைக்கு ஏற்றவாறு நாங்கள் செய்து வருகி றோம். இந்த தொழிலில் கணவனை இழந்தவர்கள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.<br /><br />சமூகத்தில் பெண்கள் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்த பவர் அமைப்பிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் சாதித்ததை போல் பலரும் சாதிக்க வேண்டும். அந்த சாதனைக்கு உந்து கோலாக பவர் அமைப்பு எங்களுக்கு கைகொடுத்துள்ளது.<br /><br />நான் வேறு ஒரு பயிற்சி நிறுவ னத்தில் இதை கற்றுக் கொண்டால் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும். ஆனால் பவர் அமைப்பு எனக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்தது. இந்த தொழில் எனக்கு மனநிறைவையும், பண நிறைவும் கொடுத்து வருகிறது என்றார்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67715458318146952012015-02-11T20:15:04.857+05:302015-02-11T20:15:04.857+05:30தன்னம்பிக்கையை ஏற்படுத்திய திறமைக்கான முகாம்
நா...தன்னம்பிக்கையை ஏற்படுத்திய திறமைக்கான முகாம்<br /><br />நாட்டில் வேலையில்லா திண் டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகின்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொண்டு வாழவேண்டிய கட் டாயத்தில் இன்றைய இளைஞர்கள், பெண்கள் இருக்கிறார்கள்! பொதுவாக தொழில் முனை வோர்கள் தன்னம்பிக்கை உள்ளவர் களாகவும், தொழில் சார்ந்த சவால் களையும், நிதிச் சுமைகளையும் எதிர் கொண்டு வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வமுடன் இருக்க வேண்டுமென்பது முக்கியம்.<br /><br />பெண்களுக்கு இந்த முக் கியத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி சமூகத்தில் சம நிலை உடையவராகவும் ஆண்களைப் போல் பெண்களும், வருமானம் ஈட்டக் கூடியவராகவும். இந்த சமூகத்தில் வாழ முடியும் என்ற தூண்டுதலையும், ஊக்கத்தையும் கொடுத்து வருவது (பவர் அமைப்பு).<br /><br />பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகமும் (பவர்) மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான பெரியார் அமைப்பும் (ஜிஙிமி) இவ்விரு அமைப்பு களும் அடித்தட்டு மக்களின் மேம் பாட்டிற்காகவும் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட உருவாக்கப்பட்டு, தொடர்ந்து செயலாற்றி வருகிறது.<br /><br />தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த அமைப்புகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்திய அரசின் குறு சிறு, மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் தேசிய நிருவாகத்தையும், இணைத்து தஞ்சை கவிதா மன்றத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை ஜன.31 ஆம் தேதி நடத்தியது.<br /><br />இம்முகாமில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களி லிருந்தும் படித்த இளைஞர்கள், மாணவிகள் ஏராளமானோர் பங்கேற் றனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தஞ்சை, திருச்சி, கரூர், கோவை உள் ளிட்ட மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொண்டனர்.<br /><br />காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 1200க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தார்கள். இம்முகாமில் பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், சி.என்.சி வெல்டிங், டி.டி.பி ஆப்ரேட்டர், வெல்டிங், அழகு நிலையங்கள், ஆட்டோ மெஷின் நிறுவனங்களும் மேலும் கேபிள் தயாரிப்பு பணிக்கு 500க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும் இம்முகாமில் அறிவித்தது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தந்ததை காணமுடிந்தது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65855415594547178172015-02-11T20:13:29.966+05:302015-02-11T20:13:29.966+05:30இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்...இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்<br /><br />இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.<br /><br />தலைநகர் டில்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.<br /><br />விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப் பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு. கடந்த 2011-_12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.<br /><br />அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழை யவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண் டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.<br /><br />இந்த ஆய்வின் முழு விவரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விவரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.<br /><br />மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை `இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.<br /><br />இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.<br /><br />இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச் சியாளர் டாக்டர் அமித் தோரட், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே ஜாதியின் தாக்கம் குறைந்துள் ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95711.html#ixzz3RRoyPHiq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82962772597097498862015-02-11T20:12:51.507+05:302015-02-11T20:12:51.507+05:30பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளட்டு...பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளட்டுமே?<br />செம பஞ்ச்:<br /><br />கேள்வி: நாத்திகர்களுக்கு ஏன் மத பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்? கடவுள்கள் பற்றிய கருத்தில் நாத்திகர்களுக்கு அசவுகரியம் இருக்கும் நிலையில், கடவுள் பெயரால் உள்ள பண்டிகைகளை மட்டும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது ஏன்?<br /><br />பதில்: விஞ்ஞான முறையில் உரு வான மருத்துவ வசதிகளை ஆத்திகர்கள் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண் டும்? அவர்கள் பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள் ளட்டுமே?<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRopUR1W<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36320157281501834722015-02-11T20:12:27.496+05:302015-02-11T20:12:27.496+05:30என்ன நான் சொல்றது.. சரிதானே
பாஜகவின் அடியாள் சங்க...என்ன நான் சொல்றது.. சரிதானே<br /><br />பாஜகவின் அடியாள் சங்கங்களான வி.ஹெச்.பி. போன்ற கோஷ்டிகள், மதமாற்றத்தை செய்வதற்கு ஒரு பெயர் வைத்துள்ளார்கள். அதற்கு பெயர் கர் வாபஸ். அதாவது வீட்டுக்கு திரும்ப வேண்டும்.<br /><br />மோடி தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்? நம் நாட்டை ஏமாற்றி வெளி நாட்டில் பதுக்கி வைத்த பணத்தை மீட்டு வாபஸ் செய்து நம்ம கணக்கில் வைப்பேன் என சொன்னாரே, அதை முதல்ல செய்கய்யா.<br /><br />எங்களுக்கு வேண்டாம் GHAR VAPASI கர் வாபஸ்<br />எங்களுக்கு வேண்டியது PAISA VAPASI பைசா வாபஸ்.<br />என்ன நான் சொல்றது.. சரிதானே.<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRojHYVD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62088561159706521162015-02-11T20:12:04.553+05:302015-02-11T20:12:04.553+05:30வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!
விவேகானந்தர் சிகாக...வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!<br /><br />விவேகானந்தர் சிகாகோ செல்வ தற்கு பொருள் உதவி செய்தவரும் ,சிகாகோ மாநாடு முடித்து திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளித்த வருமான ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தான் 1897 மே 14 கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாடார்கள் நுழைந்து வழிபாடு செய்ததை கண்டித்து,<br /><br />நாடார்கள் பிறப்பால் தாழ்ந்த சாதிகாரர்கள் ,அவர்களுக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது , மீறி நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது எனவும், கோவிலை மத சடங்குகள் மூலம் தூய்மைபடுத்த நாடார்கள் ரூ.2500/ தர வேண்டும் என ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மதுரை சிவில் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? உங்களுக்கு<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRodFFpZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66001731898536355342015-02-11T20:11:16.555+05:302015-02-11T20:11:16.555+05:30அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்
தலைய...அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்<br /><br />தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.<br />இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.<br /><br />தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.<br /><br />முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.<br /><br />ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.<br />அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61494993796112020642015-02-11T20:09:22.056+05:302015-02-11T20:09:22.056+05:30அங்கும் இங்கும்
அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால்...அங்கும் இங்கும்<br /><br />அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.<br /><br />இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.<br /><br />- எஸ். நல்லபெருமாள், வடசேரிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47459531223000628462015-02-11T20:08:15.788+05:302015-02-11T20:08:15.788+05:30ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்
ஆதி சங்கராச்சாரி ஏ...ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்<br /><br />ஆதி சங்கராச்சாரி ஏன் இவ்வுலகில் அவதரித்தார்! அவர் அவதாரித்தன் உள் ளோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரம சிவனே காதோடு காதாக தனது ஓய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்ட வாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.<br /><br />கலியுகத்திலுண்டாகும் பக்தர்களுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லுகின் றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்கது; ஒருவர்க்குஞ் சொல்லத் தக்கது அன்று அம் பிகையே!<br /><br />பாவ கர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறழ்ந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற் கலியுகத்தில், எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்கவேன். மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல்வேன், கேட்பாயாக!<br /><br />இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்பவர்கள்; வேதபோதக வாக்கியங்களுக்குமாறு பாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்;<br /><br />பெரிய சாத்திரங்களால் அத்வைதத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர்களாகிய இவர்களால், குரு ஆசாரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.<br /><br />அப்போது அவர்களைக் கரையேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற்றில் சங்கரர் என்னும் திருநாமமுடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்<br />(சங்கரதிக்கு விஜயகாவிய வசனம் நூல் பக்.2)<br />எப்படியிருக்குக் கதை?<br /><br />Read more: http://viduthalai.in/page-1/95709.html#ixzz3RRneIIbj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21974932724909503312015-02-11T20:03:03.639+05:302015-02-11T20:03:03.639+05:30குளிர்ச்சி தரும் கற்றாழை
கற்றாழை என்பது ஒரு சிறு ...குளிர்ச்சி தரும் கற்றாழை<br /><br />கற்றாழை என்பது ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை கொத்தாக வளரும் அடிப்பாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும், சாம்பல், சிவப்பு நிறம் கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வறட்சியைத் தாங்கும்.<br /><br />நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையான சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதி வாசிகள் மலையில் நடக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள். இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இதன் இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெறும்.<br /><br />கற்றாழை உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சியை உண்டாக்கும். செரிமானத்தை விரைவு படுத்தும், உடலை உரம் பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சுவையுணர்வை ஒழுங்குப் படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.<br /><br />துவையல்: இதை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி, உளுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைத்து வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.<br /><br />பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கற்றாழையின் தன்மையை ஆராய்ச்சி செய்து அது உடல் பருமனை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் குணமாக்கும் என்று கண்டுபிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.<br /><br />கற்றாழையின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டு நாள்கள் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் குணமாகும் என்பதை தற்போது அறிந்துள்ளார்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/95916.html#ixzz3RRmLdhdM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46533527608825478472015-02-11T20:02:39.274+05:302015-02-11T20:02:39.274+05:30
உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போ...<br />உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், இது என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.<br /><br />இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எச்.அய்.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும் தேவையில்லை.<br /><br />சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.<br /><br />அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.<br /><br />நோய் எதிர்ப்பு சக்திவேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத நிலையில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரை களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், நமது ஊரில் பழங்கள் சாப்பிட்டாலே போதும் என்றும் நினைப்பார்கள். சரி விகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.<br /><br />தடுப்பூசி நல்லது<br /><br />தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்கவேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை. உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டன்னஸ் ஊசி போட்டிருப்பார்கள்.<br /><br />ஆனால், டெட்டன்னஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஊசி போட் டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால்கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும்.<br /><br />கக்குவான், மஞ்சள்காமாலை என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்!<br /><br />Read more: http://viduthalai.in/page1/95915.html#ixzz3RRmAQdIoதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38337798047938988502015-02-11T20:02:33.365+05:302015-02-11T20:02:33.365+05:30நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?
எல்லையிலிருந்...நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?<br /><br />எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணு வத்தினரைப்போல், ஒவ்வொருவரின் உடலுக் குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்.<br /><br />வெள்ளை அணுக்கள் எனும் போர் வீரர்கள்<br /><br />நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.<br /><br />இன்று சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள் செய்கின்றன.<br /><br />இரண்டு வகை சக்தி<br /><br />நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும்போது, இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று உடல் நம்மை நிர்ப்பந்திக்கிறது.<br /><br />இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.<br /><br />ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்தக் காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல், உடல் எச்சரிக்கையாகிவிடும்.<br /><br />இதற்கு நினைவு செல்கள் என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.<br /><br />எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?<br /><br />ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்தச் சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய், உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com