tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7264053316477003049..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது-பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27806690827340251962015-01-26T18:02:05.093+05:302015-01-26T18:02:05.093+05:30ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
உண்மையாக ஜாதிப் ப...ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்<br /><br />உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.<br />(குடிஅரசு, 19.1.1936)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94967.html#ixzz3PvhdbOru<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65736994742781054362015-01-26T17:54:59.348+05:302015-01-26T17:54:59.348+05:30காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக ...காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு<br /><br />உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை<br /><br />லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.<br /><br />அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.<br /><br />அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.<br /><br />இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.<br /><br />இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.<br /><br />இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.<br /><br />அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94969.html#ixzz3PvhSGEMk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10994862008304567012015-01-26T17:53:37.063+05:302015-01-26T17:53:37.063+05:30விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?
ஜனவரி 26 - இந்...விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?<br /> <br /><br />ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.<br /><br />அவர்கள்<br /><br />1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு<br />2) சுதா இரகுநாதன்<br />3) எம்.ஆர். சீனுவாசன்<br />4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு<br /><br />அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;<br />தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?<br /><br />யாருக்கு வந்த சுதந்திரம் இது?<br /><br />புரிகிறதா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94984.html#ixzz3PvhFequ3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65095547421927373612015-01-26T17:52:52.475+05:302015-01-26T17:52:52.475+05:30இன்றைய ஆன்மிகம்?
எது உண்மையான இராமாயணம்?
இராமாயண...இன்றைய ஆன்மிகம்?<br /><br />எது உண்மையான இராமாயணம்?<br /><br />இராமாயணம் என் றால் ஒன்றிரண்டு அல்ல; எண்ண முடியாத அள வுக்கு இராமாயணம் பல மொழிகளில் உண்டாம்.<br /><br />உண்மை என்றால் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். இத்தனை இராமாயணங்களில் எது உண்மை என்று ஏற்றுக் கொள்வது? வங்காள இராமாயணத்தில் இரா வணனின் மகள் சீதை! எப்படி இருக்கிறது?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94980.html#ixzz3Pvh8Ub73<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21571518511430553692015-01-26T07:35:03.090+05:302015-01-26T07:35:03.090+05:30உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் காரணம் கண்டுபிட...உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் காரணம் கண்டுபிடிப்பு: ஆய்வுத் தகவல்<br /><br />டொரன்டோ, ஜன.25_ உணவில் அதிக மாக உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.<br /><br />ஆனால் உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பது இதுவரை விஞ் ஞானிகளுக்குக்கூட தெரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் போர்க் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டுள்ளது.<br /><br />அதாவது, அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் உப்பு, மூளையின் செயல் பாட்டில் ஏற்படுத்தும் குறிப்பிட்ட மாற்றமே, ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணம் என எலிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br /><br />இதுகுறித்து சார்லஸ் போர்க் கூறியதாவது:<br /><br />உணவில் அதிக உப்பு சேர்க்கப்படும்போது, "வாஸாபிரெஸ்ஸின்' எனப் படும் ஹார்மோன் களை வெளிப்படுத்தும் நரம் பணுக்களில் அது வேதி யியல் மாற்றத்தை ஏற்படுத் துகிறது.<br /><br />இந்த வேதியியல் மாற்றம் காரணமாக, மூளையில் இயற்கையாக அமைந்துள்ள ரத்த அழுத்தத்தைக் கண் காணிக்கும் அமைப்பால், "வாஸாபிரெஸ்ஸின்' ஹார் மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.<br /><br />"வாஸாபிரெஸ்ஸின்' ஹார்மோன்கள்தான் ரத்த அழுத்தத்தையும், உடலின் நீர் அளவையும் அதிகரிக்கச் செய்கின்றன.<br /><br />இந்த ஹார்மோன்கள் மிக அதிக அளவில் உற் பத்தியாவதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக் கிறது என்றார் அவர்.<br /><br />இந்தக் கண்டுபிடிப்பால் உப்புக்கும், ரத்த அழுத்தத் துக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு மருத் துவத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளை உருவாக்க, இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டி யிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்த னர்.<br /><br />அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூரான்' அறிவியல் இதழில் இந்த ஆய்வின் விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64667172407301002802015-01-26T07:30:17.012+05:302015-01-26T07:30:17.012+05:30சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்
செய்தியாளர் கேள்வி:...சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்<br /><br />செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில் அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே அங்கேதான் இருக்கிறார்களே?<br /><br />தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே. எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத் தெளி வாக தெரியக்கூடிய உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது என்ற கேள்வி கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச் செய்வார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர் இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே, பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?<br /><br />பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள் தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம். அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும் திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.<br /><br />கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?<br /><br />பதில்: தவறியதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.<br /><br />கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?<br /><br />பதில்: நிச்சயமாக மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94959.html#ixzz3PtAHwMGO<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54800280553476377232015-01-26T07:30:10.226+05:302015-01-26T07:30:10.226+05:30பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திர...பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே<br />திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்<br /><br />தமிழர் தலைவர் பேட்டி<br /><br /><br />காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.<br /><br />காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது குறித்து கூறியதாவது:<br /><br />பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார். மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்<br /><br />இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.<br /><br />வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை<br /><br />ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள். எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இந்தப்பணி தொடரும்.<br /><br />அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக் காக்க வேண்டும் என்பதுதான்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com