tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7210228855042006549..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மதம் வீட்டின் பூஜை அறையில் இருக்கட்டும்! தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14360764258609583502014-12-19T20:31:40.748+05:302014-12-19T20:31:40.748+05:30கட்டாயம் நான் புத்தந்தான்”
அய்யாவுக்கு புத்தரை மி...கட்டாயம் நான் புத்தந்தான்”<br /><br />அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.<br /><br />சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.<br /><br />வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.<br /><br />புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:<br /><br />புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும். அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.<br /><br />புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்..... நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ..... அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். ... ... அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். - பெரியார் புத்தநெறி ப.6<br /><br />இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.<br /><br />ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.<br /><br />அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.<br /><br />இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் அய்யா.<br /><br />- பேராசிரியர் முனைவர்<br />இரா.பே.வே.இசையமுதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73430733123744140672014-12-19T20:30:57.816+05:302014-12-19T20:30:57.816+05:30மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!
அண்மையில் இணையதளங்கள...மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!<br /><br /><br />அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய<br /><br />காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில் அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!<br /><br />ம்ம்ம்ம்... அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா - இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் - குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.<br /><br />- இறைவிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12190227933838953572014-12-19T20:30:18.443+05:302014-12-19T20:30:18.443+05:30வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு
- சு.ஒளிச்செங...வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு<br /><br /><br />- சு.ஒளிச்செங்கோ<br /><br />திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.<br /><br />அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.<br /><br />இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.<br /><br /> <br /><br />அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.<br /><br />1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.<br /><br />அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.<br /><br />நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.<br /><br />பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.<br /><br />சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.<br /><br />சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்<br /><br />வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79553897858328554402014-12-19T20:27:21.609+05:302014-12-19T20:27:21.609+05:30சொல்றாங்க
தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் பு...சொல்றாங்க<br /><br /><br />தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.<br /><br />- ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.<br /><br />இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.<br /><br />- வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.<br /><br /> <br /><br />சொல்றேங்க....!<br /><br />நல்லா சொல்லுங்கம்!<br />இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18839427821107762182014-12-19T20:25:50.274+05:302014-12-19T20:25:50.274+05:30மடச்சாம்பிராணி
- வீரன்வயல் வி.உதயக்குமரன்
சதாசி...மடச்சாம்பிராணி<br /><br /><br />- வீரன்வயல் வி.உதயக்குமரன்<br /><br />சதாசிவ குருக்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கவனமாக ஆராய்ந்த டாக்டர் சீனிவாசன் நிதானமாக விளக்கினார்.<br /><br />அய்யரே... உங்க நுரையீரல் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு... பீடி சிகரெட் பழக்கம் இருந்தா விட்டுடுங்க<br />சதாசிவ குருக்களுக்கு, கோபம் குமுறிக் கொண்டு வந்தது.<br /><br />அபச்சாரம்... அபச்சாரம்.. யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க<br /><br /> <br /><br />அய்யரே கோபப்பட்டு பிரயோசனமில்ல... புகைப் பிடிக்கிற பழக்கம் இருந்தாலொழிய இந்த நோய் வர சான்சே இல்லை<br /><br />நான் வேற டாக்டரைப் பாத்துக்கறேன்... எவனாவது பீடி சிகரெட் குடிச்சா பத்து அடி தள்ளியே நிப்பேன்... என்னைப் போயி...<br /><br />அப்படின்னா... உங்களுக்குப் புகைப் பழக்கமே இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே<br /><br />நான் மூனு வேளை செய்யுற அந்தக் கடவுள் மேல சத்தியமா கிடையாதும் ஓய்<br /><br />மூனு வேளை எப்படி பூஜை செய்றீங்க<br /><br />சாம்பிராணி, சூடம், பத்தி, இதெல்லாம் வச்சித்தான்<br /><br />அப்ப பிரச்சினையே அதுலதான். இதையெல்லாம் நிறுத்தினா சரியாயிடும்.<br /><br />பூஜையவா நிறுத்தச் சொல்றேள்? ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி செய்யிற பூஜைன்னால நோய் வரும்னு சொல்றேளா... இது அடுக்குமா உங்களுக்கு? கர்ப்பக் கிரகத்தில இருக்கிற வைப்ரேசனும், கடவுளைச் சுற்றி இருக்கிற தூய்மையும் வேற எங்க வரும்?<br /><br />அய்யரே... வாசனையைக் கூட்ட கண்ட கண்ட கெமிக்கலைச் சேக்குறான்... சிகரெட் பீடி புகையைவிட மோசமாப் போச்சி இந்த சூடம் சாம்பிராணி ஊதுபத்திப் புகை... ஒரு மாதம் கடவுள் பக்கம் போகாம இருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.<br /><br />அதுக்கு என் பிராணனை விட்டுடுவேன். கடவுளுக்கு ஆறது நேக்கு ஆகாதா?<br /><br />இதையே தொடர்ந்து செஞ்சா விடத்தான் வேண்டியிருக்கும். கடவுளுக்கு நுரையீரல் இல்லை... அவர் சுவாசிக்கப் போறதும் இல்லை. பிரச்சினையில்லை. நீங்க கற்சிலை இல்லைல்ல... சுவாசிக்க வேண்டாமா? டாக்டரே... என் பொழப்பே அந்த பெருமானை நம்பித்தானே<br /><br />ஒரு மாசம் மணி ஆட்டுனா... அஞ்சாயிரமோ பத்தாயிரமோ கிடைக்கும்... இந்த வியாதி முத்திப் போனா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ ஆகும். செலவை உங்க பெருமான் கொடுப்பாரா ஓய்?<br /><br />டாக்டரே... நீதான்யா எனக்குக் கடவுள்... இனிமே மணி ஆட்டுற தொழிலே வேண்டாம்.<br /><br />சதாசிவ குருக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்... டாக்டர் சீனிவாசன்.. அறை அதிரச் சிரித்தார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16576819665447211582014-12-19T20:23:27.839+05:302014-12-19T20:23:27.839+05:30பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது
- கோசின்ரா
ஒளிப...பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது<br /><br /><br />- கோசின்ரா<br /><br />ஒளிப்பழம் பறித்து உண்போம்<br />மழைப்பாலை அருந்துவோம்<br />நிலத்திற்கும் அருந்தத் தருவோம்<br />இரவு குளத்தில் இறங்கி<br />நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்<br />நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து<br />நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்<br /><br />நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு<br />சட்டை மாட்டினீர்கள்<br />சமத்துவம் கசியும் நதிகளுக்கு<br />பெண் வேடம் கட்டினீர்கள்...<br />நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு<br />மனித உடல்களை மாட்டினீர்கள்...<br />படைப்பு சக்திகளின் வடிவங்களான<br />ஆணுறுப்பிற்கு சிவனென்றும்<br />பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்<br />பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!<br />வளர் அறிவு<br />உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது<br />அதை இழுத்து வந்து<br />வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்<br /><br />நீங்கள் சிறுபான்மையென்று<br />உங்களுக்குத் தெரியும்<br />உங்களுக்கென்று பூமியில்லை<br />அதுவும் தெரியும்<br />இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது<br />நீங்கள் சில நூற்றாண்டுகளாக<br />எங்களுடன் இருக்கிறீர்கள்<br />இருந்துவிட்டுப் போங்கள்<br />உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து<br />மக்களை அடக்கிவைத்த மன்னர்களை<br />ஜனநாயகம் துரத்திவிட்டது<br /><br />பூர்வீக அடையாளங்களை அழிப்பது<br />கைவந்த கலையாக இருக்கலாம்<br />எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்<br />கடவுளின் உதடுகளில் புரண்டு<br />மந்திரங்களின் ஆடையை அணிந்து<br />மலை முகடுகளில் உங்கள் மொழி<br />ஆடிய ஆட்டங்களை<br />காலப்பருந்து தின்றுவிட்டது<br />முன்னொரு காலத்தில்<br />ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது<br />சாமான்யன் தீண்டக்கூடாதவாறு<br />கொடிய தண்டனைகளால்<br />வேலியிடப்பட்டிருந்தது<br />கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்<br />சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது<br />யார் பேசுவார்கள்<br />தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்<br />புதைந்து போயிருக்கலாம்<br />அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது<br />அதிசயங்கள் நிகழட்டும்<br />அது பிழைக்கட்டும்<br />அதன் வானம் அப்படியே இருக்கிறது<br />சிறகு முளைத்துப் பறக்கட்டும்<br />என் நிலத்தில் அது படரக்கூடாது<br />என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது<br />என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது<br />என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது<br />பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது<br />தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்<br />ஒவ்வொரு நாளும்<br />சூரியனின் ஒளிக்கற்றைகளில்<br />இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு<br />எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55869807072375851632014-12-19T20:22:29.642+05:302014-12-19T20:22:29.642+05:30கருத்து
கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இ...கருத்து<br /><br />கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.<br /><br />இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.<br /><br />- ஒபாமா, அமெரிக்க அதிபர்<br /><br />கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.<br /><br />- லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்<br /><br />நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.<br /><br />- தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத<br /><br />செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.<br /><br />- வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74731133925874784492014-12-19T20:21:43.770+05:302014-12-19T20:21:43.770+05:30கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!
இந்தக் கதை நமக...கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!<br /><br /><br />இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.<br /><br />இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்... ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்... என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.<br /><br />பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.<br /><br />கற்பூர நாயகியே... கனகவல்லி... காளி மகமாயி... ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67347725425183805382014-12-19T20:18:14.720+05:302014-12-19T20:18:14.720+05:30ஏறி வரும் ஏணி!
திராவிட இயக்கச் சித்தாந்தம் காலா...ஏறி வரும் ஏணி!<br /><br /><br /><br />திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.<br /><br />மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.<br /><br />ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!<br /><br />- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36360084759337404012014-12-19T20:17:27.230+05:302014-12-19T20:17:27.230+05:30உங்கள் கங்கை நதிக்கரையில்..
இந்தியைத் தாய்மொழியா...உங்கள் கங்கை நதிக்கரையில்..<br /><br /><br />இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...<br />சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...<br />மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...<br />இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்<br /><br />பேருந்து நிலையம் ரயில் நிலையம்<br /><br />விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்...<br /><br />எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்<br /><br />தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக<br />அலைந்து திரிகிறோம்<br /><br />- கவிஞர் பழநிபாரதிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18046938681435453882014-12-19T20:13:49.739+05:302014-12-19T20:13:49.739+05:30இப்படியும் ஓர் அமைச்சர்?!
நாட்டில் உள்ள குழந்தைக...இப்படியும் ஓர் அமைச்சர்?!<br /><br /><br />நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.<br /><br />ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.<br /><br />இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.<br /><br />மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.<br /><br />சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.<br /><br />விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்<br /><br />ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.<br /><br />ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது<br /><br />ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.<br /><br />நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.<br /><br />- சரவணா ராஜேந்திரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87165968084899737432014-12-19T20:11:34.325+05:302014-12-19T20:11:34.325+05:30இப்படி ஓர் அமைச்சர்!!
கர்நாடக சட்ட மன்றத்தில் மூ...இப்படி ஓர் அமைச்சர்!!<br /><br /><br />கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.<br /><br />இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.<br /><br />என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.<br /><br />நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.<br /><br />பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் "காரியத்தை" வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.<br /><br />ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.<br /><br />- இளங்கோவன் பாலகிருஷ்ணன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59252236228064232552014-12-19T20:02:48.062+05:302014-12-19T20:02:48.062+05:30இந்நாள்... இந்நாள்... 41 ஆண்டுகளுக்குமுன் ஒரு முழக...இந்நாள்... இந்நாள்... 41 ஆண்டுகளுக்குமுன் ஒரு முழக்கம்!<br /><br /><br />பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோவிலுக்குள் வரவேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடை யாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுய ராஜ்ஜியத்திலும் நாம் சூத்திரர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.<br /><br />இந்து என்றால் என்ன?<br /><br />எதன்படி என்றால், சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான்.<br /><br />இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால், 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2, 3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?<br /><br />வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக் கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது;<br /><br />பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக்கப்பட்டான் என்கிறான். சிந்துநதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி இங்கே வந்தது?<br /><br />சிந்திக்க நாதி இல்லை!<br /><br />இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான் மற்றவன் சூத்திரன். பார்ப்பான் என்றால் மேல் ஜாதி, சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி.<br /><br />இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறதுதான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால், ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?<br /><br />நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் எல்லாம் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்பமாட்டானா? உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டி என்று சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!<br /><br />தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய நாள் இந்நாள் (19.12.1973). அந்நாளில் அறிவுலக ஆசான் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் இது.<br />சிந்திப்பீர், செயல்படுவீர்!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/93121.html#ixzz3MM1pp2uu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43288153592249773232014-12-19T20:01:43.128+05:302014-12-19T20:01:43.128+05:30கடவுளை நம்புகிறாயா?
ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேல...கடவுளை நம்புகிறாயா?<br /><br />ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.<br /><br />- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.<br />தகவல்: ந.சுப்ரமணியன், கோவை<br /><br />Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1c2FsH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53414255604978667162014-12-19T20:00:21.906+05:302014-12-19T20:00:21.906+05:30வசம் கெட்டது
குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்...வசம் கெட்டது<br /><br /><br />குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்<br />கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்<br />மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி<br />வசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1FIx5i<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-792669471466764482014-12-19T19:49:46.741+05:302014-12-19T19:49:46.741+05:30கோட்சேக்கு சிலை மட்டும் தானா?
- குடந்தை கருணா
கா...கோட்சேக்கு சிலை மட்டும் தானா?<br /><br />- குடந்தை கருணா<br /><br />காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை புது டில்லியில் உள்ள மந்திர்மார்க் எனும் பகுதியில் நிறுவுவதற்கு அனுமதி கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதப் போவதாக, அகில பாரதிய ஹிந்து மகாசபையின் தேசிய தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />தேசிய அரசியல் தலைவர் நாதுராம் கோட்சே; ஹிந்துயிசத்தின் பரப்புரைக்கு ஓர் அறிவுப்பூர்வமான சொத்து அவர் என்று தெரிவித்த கவுசிக், அக்பர், அவுரங்கசீப், மகாத்மா காந்தி ஆகியோரின் பெயரில் சாலைகள் இருக்கும்போது, தேசிய தலைவர் கோட்சேக்கு சிலை நிறுவுவதில் என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.<br /><br />புதுடில்லி மட்டுமல்லாமல், அய்ந்து அல்லது ஆறு மிகப் பெரிய மெட்ரோ நகரங்களில் உள்ள பூங்கா, சந்தை, முக்கிய சந்திப்புகள் இங்கேயெல்லாம் கோட்சேயின் சிலை நிறுவிட ஏற்பாடு செய் யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.<br /><br />ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர், கோட்சேயை, காந்தியோடு ஒப்பிட்டுப் பேசியது பிரச்சினையை உண்டாக்கியது. இப்போது, வெளியே, ஹிந்து மகாசபை, அதையே இன்னும் வேகமாகச் செய்யத் துவங்கியுள்ளது.<br /><br />போகிற போக்கைப் பார்த்தால், கோட்சேக்கு பாரத ரத்னா வழங்கி, மகாத்மா பட்டம் வழங்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.<br /><br />ஏற்கெனவே, பாஜகவின் சு.சுவாமி, கொலைகாரன் ராஜ பக்சேவுக்கு, இந்தியாவில் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தவனுக்கே, பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிற போது, ஒரே ஒரு கொலையைச் செய்த கோட்சேக்கு, அதுவும் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட கொலை செய்தவனுக்கு, விருது அளித்தால் என்ன தவறு என வாதிடக்கூடும்.<br /><br />காந்தியை கோட்சே கொலை செய்தாரா? என்ற கேள்வியை எழுப்பி, காந்தி, தானே தற்கொலை செய்து கொண்டார்; அந்த நேரத்தில் கோட்சே அதைத் தடுக்கச் சென்றார். ஆனால், ஹிந்து விரோத சக்திகள், கோட்சே என்ற மகா புருஷர் மீது அபாண்டமாக வழக்குப் பதிவு செய்து, அவரைத் தூக்கிலிட்டு விட்டன. ஆகவே, அந்த வழக்கை, மீண்டும் விசாரித்து, கோட்சே நிரபராதி என தீர்ப்பளிக்க வேண் டும் என ஹிந்து மகாசபை, உள் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு அப்படின்னு கேட்கவும் செய்வார்கள்.<br /><br />நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சங்கர ராமன் கொலை வழக்கில், ஓடிப்போன சாமியாருக்கு நிரபராதி என தீர்ப்பு கிடைக்க வில்லையா? அப்ப, யார்தான் சங்கர ராமனை கொலை செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு நம் காலத்தி லேயே விடை கண்டு பிடிக்க முடிய வில்லை.<br /><br />ஹிந்து மகாசபை, கோட்சேக்கு சிலையோடு நின்று விடாமல், பாரத ரத்னா, மகாத்மா என்ற பட்ட்த்தை வழங்கி, நாட்டு மக்களை பெருமைப் படுத்த வேண்டும்.<br /><br />அண்மையில், பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தா.பாண்டியன் சொன்னது போல், பண்டாரங்கள் ஆட்சி செய்தால், மக்களுக்கு சங்கு தான்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93090.html#ixzz3MLyY1d3U<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49547905712350993182014-12-19T19:48:22.190+05:302014-12-19T19:48:22.190+05:30பயத்தால்...
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவரா...பயத்தால்...<br /><br />அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.<br />(விடுதலை, 20.3.1956)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93086.html#ixzz3MLyDlRBI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62557266926039933532014-12-19T19:44:14.226+05:302014-12-19T19:44:14.226+05:30புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை ஆசிரமத்...புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?<br /><br /> புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை<br /><br /> ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?<br /><br /><br />உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை!<br /><br /><br />மக்கள் எழுச்சி கூட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் தயங்காது<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை<br /><br />புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விரும்பத் தகாத போக்குகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.<br /><br />அது ஒரு போட்டி அரசுபோல - புதுவையில் (Parallel Government) நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகி விட்டது.<br /><br />அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவை களைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.<br /><br />எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் - பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின் றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.<br /><br />அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும் கொதி நிலை அதிகமாகி வெடித் துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடி யாமல் அநீதியை அகற்ற முடியாமல், அத னையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக் கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்!<br /><br />புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது.<br /><br />ரவுடிகள் ராஜ்ஜியமா?<br /><br />அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறு கிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத் துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு) கவனத்தில் கொள்ள வில்லை? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.<br /><br />இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடை பெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!<br /><br />விசாரணை ஆணையம் அமைத்திடுக!<br /><br />இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.<br /><br />அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ள வர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது.<br /><br /><br />கி.வீரமணி <br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />திருச்சி<br />19-12-2014<br /><br />Read more: http://viduthalai.in/headline/93080-2014-12-19-09-46-52.html#ixzz3MLxA4UOk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89512449832265831252014-12-19T19:43:33.083+05:302014-12-19T19:43:33.083+05:30தமிழ் ஏடுகளில் இந்தி விளம்பரமா?
டில்லியில் முக்க...தமிழ் ஏடுகளில் இந்தி விளம்பரமா?<br /><br /><br />டில்லியில் முக்கிய சுற்றுலாத்தளமான ரெயில்வே அருங் காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிக் காக 24 டிசம்பர் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் இந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பள்ளிமாணவ\மாணவிகள் டில்லி போன்ற நகரங் களுக்குச் சுற்றுலா செல்வார்கள்.<br /><br />அப்படிச் செல்லும் போது டில்லியில் உள்ள ரெயில்வே அருங் காட்சியகமும் முக்கியமான பார்வை யகமாகும். முக்கியமான ஒரு செய்தியை ரெயில்வே நிர்வாகம் இதுவரையில் செய்திகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே விளம்பரங்களைத் தருவார்கள். ஆனால் தற்போது புதிதாக இந்தியில் கொடுத்திருப்பது யாருக்காக? தெரியாத ஒரு மொழியில் முக்கியமான செய்தியை மத்திய அரசு கொடுப்பதற்கு என்ன காரணம்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93084.html#ixzz3MLx0mbiC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74633529152639115582014-12-19T19:41:02.991+05:302014-12-19T19:41:02.991+05:30தமிழிலிருந்து...
தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும்,...தமிழிலிருந்து...<br /><br />தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும், நீஷ பாஷை தமிழ் என்றும் கூறக் கூடிய மனப் பான்மை கொண்டவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரி யார்கள் இதில் அவாளுக்கு வழி காட்டிகள்!<br /><br />சமஸ்கிருதத்திலிருந்து தான் அதிக சொற்களை தமிழ் கடன் வாங்கிக் கரணம் போட்டது என்று கூறும் குறுமதியினரும் உண்டு.<br />உண்மை என்ன வென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்ற சொற்கள் எண்ணற்றவை.<br /><br />தொல் காப்பியச் சொல் லதிகாரத்துக்கு எழுதியுள்ள ஒரு சூத்திர உரையில் சேனாவரையர் என்ன குறிப்பிடுகிறார் தெரியுமா? தமிழ்ச் சொற்கள் வட மொழியில் சென்று சேர மாட்டா எனக் குறிப்பிட் டுள்ளார். இது ஒரு வகைக் காழ்ப்பால் கதைக்கப் பட்டது - உண்மை என்ன?<br /><br />அப்பா - வடமொழிச் சொல், அம்மா தமிழ்ச் சொல் என்று சிலர் கூறு வதுண்டு உண்மையில் தமிழ் அம்மா அம்மை என்ற வடிவங்கள்தாம் அம்மாள் எனத் திரிந்து, பிறகு வடமொழிக்குச் சென்று அம்பா என்ற வடிவத்தைப் பெற்றிருத் தல் வேண்டும். ஆள் ஈறு திராவிட மொழிகளில் காணப்படுகின்ற பெண்பால் விகுதி என்பது யாவரும் அறிந்ததே! அச்சொல்தான் அம்பா, அம்பாலா, அம் பாலிகை என்று சமஸ் கிருதத்திலும் காணப்படு கிறது என்ற ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பர்ரே காட் டியுள்ளார்.<br /><br />தமிழில் வழங்கப்படும் கலை என்ற சொல் வடமொழியின் திரிபு என சிலர் சொல்லுவதுண்டு. ஆயினும் கல் என்ற அடிப்படையிலிருந்து இச்சொல் பிறந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளெல் லாம் அறிவது என்ற பொருளைத் தருவதற்குக் கல் என்ற அடிவேரே பயன்படுகிறது. இதனடி யாகத்தான் கலை என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனை வடமொழியினர் கலா எனத் திரித்து வழங்க லுற்றார்கள்.<br /><br />குழல் என்ற தமிழ்ச் சொல் குரால என்ற வடமொழியிற் சென்று வழங்குகிறது. கூந்தல் எனும் பொருளைக் குறிக்க மலையாளத்திலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் இதனை யொத்த சொற்கள் உண்டு; குழல்- தமிழும், மலையாள மும்; குருள் - கன்னடம், குருளு - தெலுங்கு; கோட்டை என்ற திராவிட சொல்லிலிருந்துதான் வடமொழி கோடா என்பது எழுந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சொற்கள் தமிழிலிருந்து வட மொழி யால் கடன் வாங்கப்பட் டன என்பதைத் தெரிந்து கொள்வோம்.<br /><br />- மயிலாடன்<br /><br />குறிப்பு: செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பர நாதன் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உரைகள் (தொகுதி - 1) நூலிலிருந்து இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93079.html#ixzz3MLwLk6W5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34344798166391231332014-12-18T17:59:33.887+05:302014-12-18T17:59:33.887+05:30மோடி தான் பதில் சொல்லவேண்டும்
- குடந்தை கருணா
ப...மோடி தான் பதில் சொல்லவேண்டும்<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, தாலிபான் அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டவனும் சரி, இறந்த குழந்தைகளும் சரி, ஒரே மதக் கோட் பாடு கொண்டவர்கள்தான். மதம் மனி தனை வழி நடத்துகிறதா? என்று மத குரு மார்களும், மதக் கோட்பாட்டை நம்பி பின் பற்றுவர்களும் ஆழ யோசிக்கவேண்டும்.<br /><br />இந்த கொடூர சாவிற்கு உலகமே கண்டனம் தெரிவிக்கிறது. நமது பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின் செயலைக் கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார், நல்லது.<br /><br />கடந்த ஒரு மாத காலமாக, மோடியின் கட்சியிலும் அவரது கட்சியை பின்னிருந்து இயக்கும் கூட்டமும், இன்னதான் பேசுவ தென்று இல்லாமல் பேசி வருகிறதே, மோடியின் அமைச்சரவையில் இயங்கும் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்து நவோதயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை, கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளிகளை திறந்து, வாஜ்பாய், மாள வியா ஆகியோரின் பிறந்த நாளை கொண் டாடும் வகையில் நிகழ்ச்சி நடத்திட உத் தரவு இடப்பட்டதே, ஆக்ராவில் இஸ்லாமி யர்களை மிரட்டி மதமாற்றம் நடைபெற் றதே, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, அலிகாரில் அதேபோன்று பெரிய அளவில் மதமாற்றம் செய்வோம் என பாஜக எம்.பி ஒருவரின் தலைமையில் உ.பி.அரசையும் மிரட்டி அறிக்கை வெளியிடப்படுகிறதே, இந்த தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டித்து, பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டாமா? இப்படி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் பேச்சினை, செயலினை செய்யும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை; கட்சி யிலும் இடமில்லை என்று சொல்லி விட்டு, அடுத்த நாட்டில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந் தால் அதில் ஓர் நேர்மை வெளிப்பட்டிருக்கும்.<br /><br />அப்படி இல்லாமல், அண்டை நாடு இஸ்லாமிய நாடு என்பதற்காக ஒரு கண் டனம் தெரிவித்துவிட்டு, உள்நாட்டில் தனது கட்சியினர் செய்யும் அடாவடித் தனத்தை கண்டுகொள்ளாமல் மவுனம் கடைப்பிடித்தால், நாளை இங்கேயும் பாகிஸ்தானில் நடைபெற்றதுபோல், தீவிர வாத நடவடிக்கைகள் வராது என்பதற்கு பிரதமர் என்ன உத்தரவாதம் வைத்துள்ளார்?<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93057.html#ixzz3MFg2CiyU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65410766629888208552014-12-18T17:58:51.513+05:302014-12-18T17:58:51.513+05:30பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 17 இலக்க நுகர...பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 17 இலக்க நுகர்வோர் எண் ணுக்கு பதிலாக 16 தான் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 16 இலக்க எண்ணுடன் பாரத் நிறுவனமாக இருந்தால் முதலில் 1_ம், ஹெச்.பி.யாக இருந்தால் 2_ம், இண்டேனாக இருந் தால் 3_ம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.<br /><br />மானியம் கூடும், குறையும்!<br /><br />தற்போது சந்தை விலையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.749.50. மானியம் போகரூ.404.75. இந்த மாதத்துக்கான மானியம் ரூ.345 ஆகும். இந்த மானியத்தொகை கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப கூடவும், குறையவும் வாய்ப்புள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் தாங்களா கவே முன்வந்து எல்.பி.ஜி. மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.<br /><br />ரூ.133 கூடுதல்<br />மானியம்<br /><br />கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் இணைந்த வாடிக் கையாளர்களுக்கு, அவர்கள் இணைந்த பிறகு, முதல் சிலிண்டருக் குப் பதிவு செய்தவுடன் அறிவித்தப்படி நிரந்தர முன்பணம் என்று ரூ.568 ஒரு முறை மட்டுமே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்த முன்பணமாக ரூ.435 பெற்றுள் ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த ஒரு நிரந்தர முன்பணமும் செலுத்தப் பட மாட்டாது. இது கடந்த முறையை விட தற்போதுரூ.133 கூடுதலாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93056.html#ixzz3MFfu1wbPதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48952070362439359572014-12-18T17:58:46.868+05:302014-12-18T17:58:46.868+05:30எரிவாயு மானியம் பெற ஒரு படிவம் போதும் அய்.ஓ.சி. அத...எரிவாயு மானியம் பெற ஒரு படிவம் போதும் அய்.ஓ.சி. அதிகாரி பேட்டி<br /><br /><br />சென்னை, டிச.18_ சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு பல படிவங் களைக் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் யாரும் அவதிப்பட வேண்டாம். எரிவாயு நிறுவன இணைய தளத்தில் இருந்து ஒரே ஒரு படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென் னையில் நேற்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:<br /><br />மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள் ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு 2015 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத் தப்பட உள்ளது.<br /><br />ஆதார் எண் இல்லாத நுகர் வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியமாகும்.<br />மார்ச் 31 ஆம் தேதிக்குள்<br /><br />வங்கிக் கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படு கிறது. அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மூலம் மானியத்தை பெற்று கொள்ளவேண்டும். இந்தக் கால அவகாசம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.<br /><br />அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஆகும். இந்த 3 மாதத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளவேண்டும். இதற் கான மானியத் தொகை விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும். அதேநேரத்தில் இம் மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய எல்.பி.ஜி. சிலிண்டருக்குரிய மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க் கப்படும்.<br /><br />இத்திட்டத்தில் சேராத நுகர்வோர் களுக்கு 1.7.2015 முதல் சந்தை விலை யில் மட்டும்தான் சிலிண்டர் விநி யோகம் செய்யப்படும். எப்போது அவர்கள் மானிய திட்டத்தில் இணை கிறார்களோ அன்று முதல் மட்டும் தான் மானியம் வழங்கப்படும்.<br /><br />இத்திட்டத்தில் இணைந்தபிறகு, முதன் முதலில் ஒரு சிலிண்டருக்குப் பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கிக் கணக்கில் ரூ.568 நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்தப்படும். நுகர்வோர் தங்களது எல்.பி.ஜி. சிலிண்டரை சந்தைவிலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன்வைப்புத் தொகை உறுதி செய்கிறது.<br /><br />படிவ விவரம்<br /><br />நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு எல்.பி.ஜி. வாடிக்கை யாளர்கள் ஆதார் எண் இருந்தால் படிவம் 1-அய் பூர்த்தி செய்து விநி யோகஸ்தர்களிடமும், படிவம் 2அய் பூர்த்தி செய்து வங்கியிலும் கொடுக்க வேண்டும். ஆதார் எண் இல்லை என் றால் படிவம் 3 அய் விநியோகஸ்தரிட மும், 4அய் வங்கியிலும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைதான் தற்போது உள்ளது.<br /><br />புதிய வழி<br /><br />படிவம் 1, 2 மற்றும் 3, 4 இருப்பது நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனிமேல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு படிவம் வி.1.0 என் பதை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும். இதற்கான படிவங்கள் இல வசமாக எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும்<br /><br />hp:petroleum.nic.in/dbtlform.html<br />www.mylpg.in<br /><br />என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.<br /><br />வாடிக்கையாளர் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு இந் தப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கி யில் அளிக்கலாம் அல்லது எல்.பி.ஜி. விநி யோகஸ்தரிடம் அதற்கென வைக் கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.<br /><br />எந்த நிறுவனத்துக்கு<br />எந்த எண்:<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49683176012278031672014-12-18T17:45:33.087+05:302014-12-18T17:45:33.087+05:30முட்டாளும் - அறிவாளியும்!
முட்டாள்தனம் என்றாலே ச...முட்டாளும் - அறிவாளியும்!<br /><br /><br />முட்டாள்தனம் என்றாலே சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும் வஸ்து என்று சொல்லலாம். அறிவு என்றால், சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்க முடியாத வஸ்து என்பது பொருள்.<br />_ (விடுதலை, 17.5.1961)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93053.html#ixzz3MFcnK0PQ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3007736811751290502014-12-18T17:45:03.994+05:302014-12-18T17:45:03.994+05:3022 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்?
வரும் 22 ஆம் தேதி த...22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்?<br /><br />வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார் (விடுதலை, 16.12.2014).<br /><br />மூன்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.<br /><br />1. கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டுவதை எதிர்த்தும்<br /><br />2. கேரளாவில் புதிய அணை ஒன்று கட்டப்படுவதைக் கண்டித்தும்<br /><br />3. இந்தியாவின் தேசிய புனித நூலாகக் கீதை அறிவிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருப்பதை எதிர்த்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.<br /><br />அணைகளைப் பொறுத்தவரை கருநாடகமும், கேரளமும் திட்டமிட்டே சட்ட விரோதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாகவும் கட்டி வருகின்றன. இதனைத் தடுக்கவேண்டிய மத்திய அரசோ சட்ட விரோதமாகச் செயல்படும் இரு மாநில அரசுகளுக்கும் துணை போகின் றது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானதாகும்.<br /><br />இந்தியத் தேசியத்தையே கேள்விக் குறி ஆக்குவதாகும்.<br /><br />இந்த இரு மாநிலங்களும் இப்படி தான்தோன்றித் தனமாக செயல்படுமேயானால், அதன் பலன் - தமிழ்நாடு பாலைவன மாவதைத் தவிர வேறு வழியே இல்லை.<br /><br />தமிழ்நாடு என்றால், அங்குத் தேசிய நீரோட்டம் இல்லை என்பதால் இந்த நீரோட்டத்தில் கை வைக்கிறார்களா?<br />தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதன்மீது இத்தகைய கண்ணோட்டம் இருக்குமானால், மேலும் மேலும் தேசிய நீரோட்டம் நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்க முடியாத நிலைக்கு ஆளாகாதா? குட்டக் குட்ட எவ்வளவுக் காலத்திற்குத்தான் தமிழர்கள் குனிந்து கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.?<br /><br />நதிநீர்ப் பிரச்சினையானாலும், ஈழத் தமிழர்ப் பிரச் சினையானாலும், தமிழக மீனவர்ப் பிரச்சினையானாலும் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்படவேண்டிய திட்டங் களானாலும் சரி, வஞ்சிக்கப்படுவது என்பது தமிழ்நாடாகவும், தமிழர்களாகவுமே இருக்கிறார்கள்.<br /><br />தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினை களில்கூட பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதும், இதற்கு மிக முக்கிய காரணமாகும். கருநாடகத்திலோ, கேரளாவிலோ அரசியலைத் தாண்டி ஒரே குரலில் பிசிறு சிறிதுமின்றி எழுந்து நின்று குரல் கொடுக்கின்றனர். அந்த மாநிலங்களைக் கண் குளிர பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மாறினால் நல்லது.<br /><br />மூன்றாவது கீதை புனித நூலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் பிரச்சினை.<br /><br />கீதை என்பது பச்சையாக வர்ணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கடைந் தெடுத்த இந்து மத நூலாகும்.<br /><br />குறிப்பிட்ட ஒரு மதத்தின் நூல் எப்படி மதச் சார்பற்ற ஒரு நாட்டின் புனித நூலாகும்? மதச் சார்பின்மையை ஏற்றுக்கொண்டால் மட்டும்தானே இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமர முடியும்? அப்படி ஏற்காது செயல் பட்டால் அது சட்ட விரோத ஆட்சியல்லவா!<br /><br />சுதந்திர நாடு என்றால், அந்நாட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி - கீழ் ஜாதி என்று பிரிப்பது தானா? சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் என்ற பேதமிருந்தால், அதை எப்படி சுதந்திர நாடு என்று கூற முடியும் என்று தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?<br /><br />பெண்களை கீதையைப் போல் இழிவுபடுத்தும் ஒரு நூலைப் பார்க்க முடியுமா? பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று சொல்பவன் ஒரு கடவுளா? சொல்லும் நூல் - புனித நூலா?<br /><br />கிருஷ்ணன்பற்றிய புராணக் கதைகளை அறிந்த வர்கள், கிருஷ்ணன் பெண்களைப்பற்றிக் கீதையில் கூறியதற்கான பொருளை எளிதில் புரிந்துகொள்வார்கள்.<br /><br />சின்ன வயதில் வெண்ணெயைத் திருடியவன், வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் என்று இந்து மதத் தலைவர்களும், பிரமுகர்களும், உபந்நியாசிகளும் சொல்லுகிறார்கள் என்றால், இதன்மூலம் இந்து மதத்தின் யோக்கியதையும், இந்தப் பெரிய மனிதர்களின் யோக்கியதையும் எந்தத் தகுதியில் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.<br /><br />பதினாயிரம் கோபிகாஸ்திரிகளுடன் கிருஷ்ணன் சல்லாப வேட்டை நடத்தினான் என்பதும், குளிக்கச் சென்ற பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் உட்கார்ந்துகொண்டு, குளியலாடும் பெண்களை ரசித்தான் என்பதும்தான் கடவுளின் உயர்நிலைப் பண்பாடா? கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால் தான் ஆடைகளைத் தருவேன் என்று சொல்லுகின்ற அப்பட்டமான மனநோயாளியும் ஒரு கடவுளா?<br /><br />மக்கள் மத்தியில் இவற்றையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம். பெரும்பாலும் பெண்களே தலைமை தாங்குவது பொருத்தமானதாக இருக்கும்.<br /><br />22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அதிகாரவர்க்கத்தின் கண்களைத் திறப்பதாக இருக்கட்டும்; தமிழ் மக்களின் எண்ணங்களிலும் கிளர்ச்சியை ஏற்படுத்தட்டும்.<br /><br />தோழர்களே, செயல்படுவீர்! செயல்படுவீர்!!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93054.html#ixzz3MFceXkBA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com