tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7155610651259001678..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50446969358488727222013-09-24T19:37:46.726+05:302013-09-24T19:37:46.726+05:30
கோயில் கருவறையில் தீண்டாமையா? சென்னையில் நடைபெற்ற...<br />கோயில் கருவறையில் தீண்டாமையா? சென்னையில் நடைபெற்ற மாநாடு<br /><br /><br /><br />சென்னை, செப்.24- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கொண்டு வரப்பட்ட அரசாணையையும், சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட் டுள்ள வழக்கை விரைந்து முடித்து நியமன நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. கருவறையில் தமிழ் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சிறப்பு மாநாடு ஒன்று சென்னையில் ஞாயி றன்று (செப். 22) நடைபெற்றது.<br /><br />தீண்டாமை வன்கொடுமை!<br /><br />தமிழ் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டது. நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகும் கோயில் கருவறைகளில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர வேறு சமூகத்தினர் யாரும் நுழையக் கூடாது என்பது வெளிப்படையான தீண்டாமை வன்கொடுமையாகும் என்று மாநாடு சுட்டிக்காட்டியது.<br /><br />அரசாணையையும் சட்டத் திருத் தத்தையும் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழுடன் காத் திருக்கும் பலரை பணியில் அமர்த் தாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமளிக்கும் செயல். எனவே, வழக்கை அரசு விரைந்து முடித்து, அர்ச்சகராக தகுதி பெற்று காத்திருப் போரை வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய வைத்து, பதிவு மூப்பு அடிப்படையில் பாகு பாடு இல்லாமல் அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக நியமிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநாடு கேட்டுக்கொண்டது.<br /><br />கோயில் கருவறையில் தமிழ் ஒலிப்பது சமத்துவ சமூகத்தை கட்ட மைக்க வேண்டும் என்ற அரசமை ப்பு சாசன நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் நீதிபதி கே.சந் துரு நிறைவுரையாற்றினார்.<br /><br />பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்<br /><br />தமிழ்வழி ஆலய நிகழ்வுகளுக்காக போராடிவரும் மு.பெ. சத்திய வேல் முருகனார், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், முனைவர். பொன்ன வைக்கோ ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று அமர்வுகளில் உரை யாற்றியோர் தீர்மானங்களை வழி மொழிந்தனர். காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் பேரா சிரியர் அருணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ் தேசிய பொது வுடமை கட்சியின் தலைவர் பெ.மணி யரசன், வழக்கறிஞர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், க.இராஜசேகரன், வீதி நாடக கலைஞர் பிரளயன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா. தெ. முத்து , பத்திரிகை யாளர் அ. குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.<br /><br />ஊடகவியலாளர் திரு. வீர பாண்டி யன், தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக தமிழ் மறுமலர்ச்சி சங்க தலைவர் சு.கிருபானந்தசாமி வரவேற் றார். கி.கோவிந்தராசன் நன்றி கூறி னார். கோரிக்கைகளை மக்களிடையே விரிவாக எடுத்து செல்ல முடிவு செய் யப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71049438517494540432013-09-24T19:36:57.223+05:302013-09-24T19:36:57.223+05:30
பிரதமரின் வேண்டுகோள்
வெற்றி பெறும் - எப்போது?...<br /><br />பிரதமரின் வேண்டுகோள்<br /><br /><br /><br />வெற்றி பெறும் - எப்போது? வகுப்புக் கலவரம் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. தற்போதைய நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது.<br /><br />வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். நாட்டில் கலவரத்தைத் தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்குப் பொறுப்பாகும்.<br /><br />வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறிய அளவிலான மோதல் பெருங் கலவரமாகி விட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் (23.9.2013). பிரதமர் தமக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு பிரதமர் இப்படித்தான் கூற வேண்டும்; அதனைத்தான் கூறவும் செய்துள்ளார்.<br /><br />காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு இதில் கூடுதல் கடமையும், பொறுப்பும் உள்ளது. அது நுட்பமாகச் செயல்பட்டு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ஜாதி மதக் கலவரங்களை முளையிலேயே கெல்லி எறிந்திட முடியும்.<br /><br />உளவுத் துறை இதில் சரியாகச் செயல்பட வில்லையென்றால், அதனைச் சரிப்படுத்த தேவை யான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.<br /><br />அரசியலில் போதிய தத்துவார்த் தங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் இல்லாத கையறு நிலையில் உள்ளவர்கள், சுலபமாகத் தலைமைப் பீடத்தைப் பிடிப்பதற்கான உபாயம் ஜாதி மதக் கட்சிகளை சடுதியில் தொடங்கி விடுவதுதான்; வெறியூட்டுதல் மூலமாகத்தான் அவர்களை, தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது யதார்த்தம்!<br /><br />ஜாதி, மதத்தின் பெயர்களில் அமைப்புகள் தொடங்கப்படுவதை எப்படி தடுக்கலாம் என்று அரசுகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு அமைப்புகள் பாரம்பரியங்களை மிகப் பெரும் அளவில் பெருமையாகத் தொடை தட்டி, தோள் தட்டி ஆர்ப்பரிப்பு செய்வதைப் பார்த்து இளைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டு விடுகிறார்கள்.<br /><br />இவர்களின் வீரம் என்பதே இன்னொரு அமைப்பின் மீது தசை வலிமையைக் காட்டுவது என்றாகி விட்டது. இது ஜாதியைப் பொறுத்த நிலவரம்.<br /><br />மதவாதிகளே திட்டமிட்டுக் கலவரங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதன் மூலம் குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள்தான் என்று மார்புப் புடைத்துக் காட்டி அப்பாவி மக்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்.<br /><br />ஊர் இரண்டு பட்டால் தங்களுக்குக் கொண் டாட்டம் என்ற மனப்பான்மையில் சங்பரிவார்கள் திட்டமிட்டு கலவர வேலையில் ஈடுபடுவதை தங்களின் அணுகுமுறையாகப் பின்பற்றுகிறார்கள். இது காவல்துறைக்குக் கண்டிப்பாகத் தெரியும்.<br /><br />இந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு மதவெறித்தனம் கொம்பு முளைத்துத் தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மிகப் பெரிய மனிதர்களாக, அரசியல் கட்சித் தலைவர்களாக, ஆட்சி அதிகாரத்தின் லகானைக் கையில் வைத்திருப்பவர் களாக விளங்கினார்கள் என்பது வெட்கக் கேடு!<br /><br />21 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை - இன்னும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்புப் பெற எத்தனை ஆண்டுகள் காத் துக் கொண்டு இருக்க வேண்டுமோ, யாமறியோம்.<br /><br />தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக் காயாகத் தானி ருக்கிறது.<br /><br />குற்றவாளிகள் கால தாமதமின்றித் தண்டிக்கப் படுவார்கள் என்ற நிலை உறுதிப்பட்டால்தான் இதுபோன்ற கலவரங்களின் திமிர் அடங்கும் - ஒடுங்கும்!<br /><br />குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்ப திலும் அரசியல் உள்நோக்கம் இருக்கும் மட்டும் பிரதமரின் வேண்டுகோள் வெற்றி அடையப் போவ தில்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77320195907718761722013-09-24T19:36:14.353+05:302013-09-24T19:36:14.353+05:30
கலாச்சாரப்படி...
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்...<br />கலாச்சாரப்படி...<br /><br /><br />பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.<br />(விடுதலை, 24.2.1954)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66535434584010220852013-09-23T19:04:00.392+05:302013-09-23T19:04:00.392+05:30உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பா...<br />உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் ''பாட்டில்கள்''<br /><br /><br />குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.<br /><br />இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.<br /><br />எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.<br /><br />எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.<br /><br />எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.<br /><br />எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப் பொரு ளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,<br /><br />எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ் டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.<br /><br />இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.<br /><br />இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கெனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br /><br />இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.<br /><br />உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்க ளையும் பாதிக்கும்'' என்றார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64114090813435122342013-09-23T19:01:03.371+05:302013-09-23T19:01:03.371+05:30
தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்
12.9.2013 அன்று...<br />தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்<br /><br /><br />12.9.2013 அன்று கொல்கத்தாவில் தந்தை பெரியாரின் 135ஆவது ஆண்டு விழாவில் தாங்கள் பேசும் பொழுது இந்த விழாவிலே எனக்கு தகுந்த மரியாதையினை அளித்தீர்கள். சிறப்பான செய்திகளை சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் பெரியாரின் எளிமையான தொண்டன் அவரோடு என்னை ஒப்பிடுவது சரியல்ல.<br /><br />ஒரு புத்தர், ஒரு பெரியார், ஒரு அம்பேத்கர்தான். அவர்கள் மாதிரி நாம் குளோனிங் செய்திட இயலாது. ஆனால் அவருடைய சிந்தனைகளை, கருத்துக்களை நாடெங்கும் பரப்பிட நாம் பணியாற்றுகிறோம், என தாங்கள் உரையாற்றியதை விடுதலையில் படித்தேன்.<br /><br />இன்றைய போலித்தனமான தலைவர்களைப் போல இல்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், திறந்த மனதுடன், மனப்பூர்வமாக தாங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் நமது இயக்க இளைஞர்களின் இதயத்தை தொட வேண்டும் என்பது எனது விருப்பம். கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, தாங்கள் வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை கொஞ்சம் தடிப்பான (Bold Type) எழுத்துக்களில் வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />பாராட்டுகள் தெரிவிக்க தகுதியும், வயதும் எனக்கு உள்ளது. தாங்கள் தொடர்ந்து செயல்பட எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />- கபடி. ச. பழநியப்பன், மாவட்ட செயலாளர், நாமக்கல் மாவட்ட தொ.மு.ச.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16398016041901060682013-09-23T18:59:50.530+05:302013-09-23T18:59:50.530+05:30
திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா
மண் குலுங்கி...<br />திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா<br /><br /><br />மண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,<br />திருப்பம் தந்திட்ட திருப்பத்தூர் !<br />இல்லை! இல்லை! திராவிடத்தில் சாதி எல்லை!<br />இல்லை! இல்லை! திராவிடத்தில் மத எல்லை!<br />இல்லை! இல்லை! திராவிடத்தில் மொழி எல்லை!<br />இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை!<br />இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,<br />ஆண் -பெண் எல்லை!<br />இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,<br />பூகோள எல்லை என<br />எல்லை இல்லா அய்யாவின் கொள்கை,<br />எங்கெங்கும் ஒலித்திட்ட திருப்பத்தூர்!<br />யாராலும் முடியாதது,<br />மகளிரால் மட்டுமே முடியும்-என,<br />மனம் திறந்து தமிழர் தலைவர்,<br />மாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,<br />மகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,<br />மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை !<br />மனிதம் பிறந்த நாளாம் ,<br />மாண்புறு செப்டம்பர் பதினேழிலே,<br />புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,<br />புதுமை நிகழ்த்திட்ட திருப்பத்தூர் !<br />உலக எல்லையில் எங்கிருந்த போதும்,<br />கொள்கைக் காதலியை மறக்க முடியுமா? என<br />வழி நடத்திடும் வல்லமை வாய்ந்த<br />இயக்கத்தின் எழிலாம்,<br />அவர்தான் மாவட்டத் தலைவராம் !<br />விவேகமிக்க விஜி இளங்கோவன் !<br />ஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,<br />இந்திராகாந்தி,கவிதா போல்,<br />ஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,<br />அற்புதமாய் அணி வகுத்திட,<br />மகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் !<br />மயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,<br />பார்ப்பன விதவைகள் கூட,<br />விழுகின்ற கொள்கை மழையில்,<br />விளைகின்ற உரிமை பயிர்களாய்,<br />விழித்துக் கொண்டதும்,விடுதலை பெற்றதும்,<br />அய்யாவின் கொள்கையாலே ! என முழங்கிய தமிழர் தலைவர் !<br />அவர், எழில் அரசரைப் பாராட்டினால்,<br />எல்லோரையும் பாராட்டியதாய்,<br />அகிலாவை பாராட்டினால்,<br />அனைவரையும் பாராட்டியதாய்,<br />ஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் !<br />திருப்பத்தூர் ! ஓர் கொள்கை முற்றம் !<br /><br />இதுவே திருப்பத்தூர் வரலாறு ! இதனை<br /><br />போற்றுவோம் ! பின் பற்றுவோம் !தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20460147201939660612013-09-23T18:59:10.594+05:302013-09-23T18:59:10.594+05:30
எத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு....<br />எத்தனை எளிய மனிதருக்கு - இத்தனை பெரிய மனமிருக்கு..!<br /><br /><br />செப்.19ஆம் தேதியன்று, தஞ்சை வல்லத்திலிருக்கும் பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத் தில், தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை புதுமை இலக்கிய விழா வாகக் கொண்டாடினர்.<br /><br />முதுபெரும் பேராசிரியரும் ஆய்வாளருமான திரு. தொ. பரமசிவம் அவர்கள் (நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல ஆண்டு கள் பணியாற்றி, ஓய்வு பெற்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வாளர் - இலக்கியப் படைப்பாளி அவர்) அவருக்கு பகுத்தறிவுப் பேராசிரியர் சி. வெள்ளையன் இலக்கிய விருது அளித்தலும், இணைந்து நடத்தப் பெற்றது.<br /><br />அதனைக் காணவும், பல்கலைக் கழக வளர்ச்சி பற்றி நேரில் அறிய விரும்பியும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும், அவருடன் மதுரைத் தோழர்கள் பொறியாளர் மனோகரன், அழகர்சாமி, எடிசன் ராசா, மதுரை செல்வம் முதலியோரும் வந்திருந்தனர்!<br /><br />காலை முதலே, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்கள், திரு. ராமசாமி அவர்களும் அவரது குழுவினரும்.<br /><br />அதற்குமுன் 1980இல் வல்லத்தில் தொடங்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றிப் பார்த்து விட்டுத்தான் அங்கு சென்றனர்!<br /><br />நிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் ஒரு சிறு துண்டுச் சீட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. இராமசாமி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ரூபாய் முப்பது லட்சத்தை அளிக்க விரும்புகிறார் என்று எழுதி அனுப்பியிருந்தது எங்களை இன்ப அதிர்ச்சி யில் உறைய வைத்தது!<br /><br />எவ்வளவு எளிமையான வாழ்வு வாழும் அடக்கமானவர் என்பதை மதுரையில் அவர் உடல்நலம் விசா ரிக்கச் சென்றபோது நேரில் கண்டு வியந்தேன்.<br /><br />50 ஆண்டுகளுக்கு மேல் அவர் தொடர்ந்து விடுதலையின் வாசக நேயர்!<br /><br />மற்றபடி எங்கும் எதிலும், தன்னை விளம்பரப்படுத்தவோ, அறிமுகப்படுத் திக் கொள்ளவோ விரும்பாத, விளம்பர வெளிச்சம் கண்டு கூச்சப்படுபவர்!<br /><br />குருவி சேர்ப்பதைப் போல, சிக்கன வாழ்வு, எளிமை வாழ்வின் மூலம், சேமித்து வைத்த செல்வம் பொதுப் பணிக்கே பயன்பட வேண்டும் என்ற திடமான கொள்கை முடிவுடன், இதையும் இதற்கு முன் வழங்கிய பல நன்கொடைகளையும் அளித் தோடு தன்னால் சேமித்த செல்வத்தை, நிரந்தரப் பாதுகாப்புக்கான சரியான வழியைக் கண்டறிந்து, பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுக்கே தனது, அச்செல்வமும் அதன் பயனும் என்றும் அழியாததாக ஆக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்!<br /><br />அவர் ஒன்றும் பெரிய கோடீசுவரர் அல்லர்; அப்படிப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மனம் பார்த் தீர்களா?<br /><br />தந்தை பெரியார், முடிச்சுப் போட்டு வைத்த செல்வம் முழுமையும் மக்களுக்கே - பொது அறக்கட்டளை மூலம் ஒப்படைத்து ஒல்காப் புகழின் உச்சியில் இருக்கிறாரே! அதுபோன்றே இதுவும்!<br /><br />இதைவிட பெரும் நன்கொடைகளை நாட்டில் அளிப்பவர்கள் இருக்கிறார்கள்.<br /><br />ஆனால் அந்த நன்கொடையாளர் பயன் கருதி - மோட்சம், விளம்பரம், புகழ், பெருமை, அரசின் லாபம் கருதியே செய்வர்!<br /><br />இதை நமது தமிழ் இலக்கியம் படைத்தோர், பல ஆண்டுகளுக்குமுன்பே அறவிலை வணிகர் என்ற பொருத்தமான சொற்கள் மூலம் சுட்டினர்! வள்ளல் ஆய். அண்டிரன் போன்று இவரும் அறவிலை வணிகன் அல்லர்.<br /><br />கொடுத்தற்காகவே நன்றி தெரிவித்தல் பாராட்டும்போது அவர் படும் கூச்சம் - உண்மையான கூச்சம் - அவர் தந்த நன்கொடையின் மதிப்பை பல மடங்குப் பெருக்கி கூட்டிக் காட்டுகிறது!<br /><br />அவருக்கு ஒரே இன்பம் - இதிலிருந்து தான் பூத்துக் குலுங்குகிறது!<br />அது எல்லோருக்கும் வரும் பண்பல்ல! மிக அரிது! மிக அரிது!!<br /><br />ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை<br />வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)<br /><br />இதன் பொருள்: தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறர்க்கு எந்த வகையிலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண்மை உடையவர்கள், பிறர்க்குக் கொடுத்து, அதனால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியினால், தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந் திருக்க மாட்டார்கள்; அடடா, ஈத்துவக்கும் இன்பத்தின் சிறப்புதான் என்னே!<br />அது மட்டுமா?<br /><br />கொடுப்பவர் தான் உயருகிறார்! இப்படி உயர்ந்தால் மகிழ்ச்சி பெருகுகிறது, மகிழ்ச்சி பெருகினால் வாழ்வும் பெருகுகிறது.<br /><br />எனவே, எளியவர்களும் இராமசாமிகளின் (தந்தை பெரியார் இராமசாமி முதல் மதுரை இராம சாமி வரை) உள்ளத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பெருக்குங்கள்!<br /><br />பொதுத்தொண்டறம் போல மகிழ்ச்சியின் ஊற்று எதுவுமே இல்லை.<br /><br />கொடுக்கப் பணம் தேடாதீர்கள்!<br /><br />கொடுக்க மனம் தேடுங்கள்!!<br /><br />அது, முதலில் உங்களுக்காக - பிறர்க்காக அல்ல; என்பதை மனதில் பதிய வைத்துக் கொள் ளுங்கள்.<br /><br /> <br /><br />- வாழ்வியல் சிந்தனைகள்<br /><br />- கி.வீரமணிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15253724279018108312013-09-23T18:58:20.251+05:302013-09-23T18:58:20.251+05:30
மாற்றுத் திறனாளிகளின் போராட்டம்
மாற்றுத் திறனாள...<br />மாற்றுத் திறனாளிகளின் போராட்டம்<br /><br /><br />மாற்றுத் திறனாளிகள் - பார்வையற்றோரின் போராட்டம் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வு என்பதில் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய அளவுக்கு சமூக நீதிக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்துவருவது அம்பலமாகி விட்டது.<br /><br />இந்தியாவுக்கே சமூக நீதிப்பிரச்சினையில் வழிகாட்டி வந்த தமிழ்நாடு இந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த நற்பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டது.<br /><br />தாழ்த்தப்பட்டவராயினும், பிற்படுத்தப்பட்டவரா யினும், மிகவும் பிற்படுத்தப்பட்டவராயினும் மாற்றுத் திறனாளிகள் ஆயினும் அனைவருக்கும் ஒரே அளவான தகுதி மதிப்பெண் என்பது எந்த வகையில் நியாயம்? இதற்கான நியாயத்தை இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் யாராலும் நிமிர்ந்து நின்று பேச இயலாத பரிதாப நிலை!<br /><br />மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர தனித் தனியே தகுதி மதிப்பெண்கள் இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் ஒரே அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?<br /><br />அதுவும் பிற மாநிலங்களில் தனித்தனி மதிப்பெண்களை வரையறை செய்திருக்கிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் பிடிவாதமான போக்கில் ஒரே அளவு மதிப்பெண் என்பதற்கான பின்னணி என்ன?<br /><br />மாற்றுத் திறனாளிகள் எனில் தனிப் பார்வை இருக்க வேண்டாமா?<br /><br />திறந்த பார்வையில் மனிதாபிமான பார்வையில் பார்வையற்றோரை பார்ப்பதற்குப் பதிலாக கண் மூடித்தனமாகப் பார்க்க ஆசைப்படலாமா?<br /><br />முதல் அமைச்சரை சந்தித்துத் தங்கள் குறை பாடுகளைக் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். பார்வையற்றவர்களைப் பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டில் முதல் அமைச்சர் தயங்குவது ஏன்?<br /><br />சாலை மறியலில் பார்வையற்றோர் ஈடுபடு<br /><br />வதும் அவர்களைக் காவல்துறையினர் முரட்டுத் தனமாக இழுத்துச் செல்லுவதும், தூக்கிச் செல்லுவதும் கண்ணுள்ளவர்களைக் கண் கலங்க வைக்கிறது.<br /><br />மாற்றுத் திறனாளிகள் என்று அவர்களுக்கு அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியதால் பார்வையற்றோர் பிரச்சினையில்கூட அரசியல் பார்வையுடன் பார்க்கிறதா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.<br /><br />தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இடத் திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு ஆவன செய்தவர் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் ஆவார்.<br /><br />அந்த ஆட்சியையும், இந்த ஆட்சியையும் பொது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்!<br /><br />ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் காட்சிக்கு எளியவராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்<br /><br />மீக்கூறும் மன்னன் நிலம் என்றார் திருவள்ளுவர்.<br /><br />மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குச் செல்லு வதில் கூட பல பிரச்சினைகளை உருவாக்கியது இந்த ஆட்சி. தானாக நடமாட முடியாத நிலையில் சில துணை உபகரணங்களையும், பொருள் களையும் பயன்படுத்திதான் அவர்கள் எங்கும் செல்ல முடியும். அந்த உபகரணங்கள் தோலால் ஆனதாக இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.<br /><br />சிவபெருமானே புலித் தோலைத்தான் இடுப்பில் அணிந்து கொண்டு இருப்பதாக புராணங்களே கூறுவதுபற்றி இந்த அறநிலையத் துறைக்குத் தெரியாதா?<br /><br />மக்கள்ஆட்சி மனப்பான்மையும் மனிதநேய மனப்பான்மையும் ஓர் ஆட்சிக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46104553424721224192013-09-23T18:57:46.423+05:302013-09-23T18:57:46.423+05:30
நாத்திகன்
நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவை...<br />நாத்திகன்<br /><br /><br /><br />நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.<br />(விடுதலை, 26.3.1951)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75704513368242757422013-09-23T18:56:56.394+05:302013-09-23T18:56:56.394+05:30
கடவுள் சக்தி இதுதானா?
திருச்சானூர் அருகே பெருமா...<br />கடவுள் சக்தி இதுதானா?<br /><br /><br />திருச்சானூர் அருகே பெருமாள் கோவில் இடிந்தது<br /><br />திருப்பதி, செப்.23- திருச்சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு மாள் கோவில் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம், திருச் சானூர் அருகே சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெரு மாள் கோவில் உள்ளது. அந்த கோவிலை நாடா ளுமன்ற முன்னாள் சபா நாயகர் அனந்தசயன அய்யங்காரின் முன் னோர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தார் சாமிக்கு பூஜை செய்தும், பரா மரித்தும் வந்தனராம்.<br /><br />கோவிலை பரா மரிக்க முடியாத நிலை யில், அவரின் குடும்பத் தார் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திரு மலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். கோவில் பூஜை மற்றும் நிர்வாகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தா னமே ஏற்று நடத்தி வந்தது.<br /><br />இந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சானூர் பகுதியில் பெய்த மழையால் கோவிலின் மேற்கூரை நனைந்து விரிசல் ஏற் பட்டது. அதேபோல், பக்கவாட்டு சுவர்களும் நனைந்து வலுவிழந்தன. நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதி அருகில் உள்ள ஆழ்வார் மண்ட பத்தின் மேற்கூரை மற் றும் பக்கவாட்டு சுவர் கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.<br /><br />அதில் ஆழ்வார், தாயார் சிலைகள் சேதம் அடைந்தன. சீனிவாச பெருமாள் சிலை சேத மின்றி தப்பியது. இரவு நேரத்தில் நடந்த சம்ப வத்தால் யாருக்கும் எந் தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், தகவலை கேள்விப்பட்ட பக்தர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனராம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79765239403909672622013-09-23T18:56:22.142+05:302013-09-23T18:56:22.142+05:30
தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?
- நமத...<br />தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?<br /><br /><br />- நமது செய்தியாளர்<br /><br />வெள்ளக்கோவில் செப்.23- தனியார் பள்ளியில் மதவாதத்தின் மொத்த உருவமான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளக் கோயிலுக்கு அருகில் உள்ள பாப்பம்பாளையத்தில் கொங்கு வேளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் உள்ளது. இங்கு மகாத்மா காந்தியை கொலை செய்வதற்கு காரணமாயிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி வகுப்புகள் 22.9.2013 முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு நடைபெறுவதாக உள்ளது.<br /><br />காந்தி வழி நடவுங்கள் என்று பாடம் போதிக்கும் கல்வி நிறுவனங்களில், காந்தியைக் கொன்ற இயக் கத்தின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது கல்வி சாலை களை மத வாதத்திற்குப் பயன்படுத்தும் செயலாகும்.<br /><br />பள்ளியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதோ கேம்ப் நடத்த வேண்டும் என்று இடம் கேட்டார்கள். கொடுத்தோம் என்று விபரீதத்தை உணராதவர்கள் போல் நடிக்கிறார்கள்.<br /><br />காவல் துறையும் இன்றைய தேதியில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கமல்ல என்ற வகையிலும் அரங்கிற்குள்ளே தானே பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள் என்று அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />ஆனால் நடப்பது என்ன?<br /><br />நாம் அனைவரும் ஹிந்துக்கள்; நம்மிடையே ஹிந்துக்கள் என்ற தேசபக்தி வளர வேண்டும்; ஹிந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்; ஹிந்துத்துவம் எங்கும் பரவ வேண்டும்.<br /><br />இதன் மூலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ஒருவர் கரசேவகர்களாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளே இப்பயிற்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74593962455199466392013-09-23T18:55:20.958+05:302013-09-23T18:55:20.958+05:30
அமெரிக்காவில்!
1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீ...<br />அமெரிக்காவில்!<br /><br /><br /><br />1962ஆம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அருமையான - அதிரடித் தீர்ப்பை வழங்கி பாதிரியார் கள் மத்தியில் பேரிடியை இறக்கியது.<br /><br />எல்லாம் வல்ல இறைவா! நீ இன்றி நாங்கள் இல்லை. உன்னை நம்பித்தான் வாழ் கின்றோம். எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும் அருள்பாலிக்கும்படி இறைஞ் சுகிறோம் என்று அமெரிக் காவில் கல்வி நிறுவனங் களில் இடம் பெற்று வந்த கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்து விட் டது - சட்ட விரோதம் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தீர்ப்புக் கூறி விட்டது.<br /><br />முன்பு பள்ளிகளில் நீக்ரோக்களைச் சேர்க்கச் செய்தார்கள். இப்பொழுது பள்ளிகளிலிருந்து கடவு ளையே விரட்டி விட்டார் களே! என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஆண்ட் ரூஸ் என்பவர் புலம்பியது தான் மிச்சம்! இது நடந்தது 1962 ஜூன் மாதம்.<br /><br />1994இல் வந்த மற்றொரு சேதி - தினமணி கதிரில் (8.5.1994) அதன் ஆசிரியர் மாலன் விரிவாகவே கட் டுரை ஒன்றைத் தீட்டியிருந் தார்.<br /><br />அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் கடவுள் வாழ்த் துப் பாட அனுமதி இல்லை. கடவுள் வாழ்த்துப்பாட அனு மதிகோரி புளோரிடா மாநி லத்தில் அண்மையில் 14ஆவது தடவையாக கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட் டது.<br /><br />....இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றோ எல் லாம் வல்ல பரம்பொருளை வேண்டியோ அல்லது இயற்கையை வழுத்தியோ பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுப் பார்த்தார்கள். நோ, சரி பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம். துதி, வந்தனம் (In Vocation) என்று வைத்துக் கொள்ள லாம். ம் ஹும், பிரார்த்தனை இருக்கட்டும்; ஆனால் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் மறு படியும் நோ. பிரார்த்தனை பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்து வரும், உள்ளூ ராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மா னிக்கட்டும். மன்னிக்கவும், அது முடியாது பெரும் பான்மை மாணவர்கள் விரும் பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா? யோசிக்கலாம் என்று சட்டப் பேரவை (ஹவுஸ்) சொன்னது மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டு விட்டது. தீர்மானம் தோற்றுப் போயிற்று; இப்படி தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தில் சட்டமன்றத் திலேயே இந்த நிலைமை என்று தினமணி கதிர் எழுதியது (8.5.1994).<br /><br />தீயணைப்புப் படை வீரரின் மகளும், செவிலியரு மான ஜெஸ்லிகா அங்கு லிஸ்ட், 49 ஆண்டு காலமாக கிரேன்ஸ்டன் என்பவரால் மேற்கு உயர்நிலைப் பள்ளி யில் பயன்படுத்தி வந்த இறை வணக்கப் பாடலை நீக்கக் கோரி அமெரிக்காவின் கிரேன்ஸ்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.<br /><br />கிறிஸ்தவர்கள் நிறைந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை - இங்கு என்னடா என்றால் மும்பையில் கடவுள் வாழ்த்துப் பாடும்போது கை கூப்பாத சஞ்சய் சால்வ் என்ற ஆசிரியருக்குத் தண்டனையாம்! - மயிலாடன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60633604604799482932013-09-23T07:03:05.493+05:302013-09-23T07:03:05.493+05:30
வாழ்த்து
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள...<br />வாழ்த்து<br /><br /><br />திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெரியார் மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.<br />பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.<br /><br />இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணர்களாக திகழும் தொண்டறச்செம்மல் வள்ளல் வீகேயென்.கண்ணப்பன், திரு.ரவீந்திரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொண்டாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தோழர், தோழியர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!<br /><br />தொண்டு உணர்வு என்பது பெரியாரின் மனிதநேய அருட்கொடை. வாழ்க பெரியார்! வளர்க பெரியார் மருத்துவமனை சேவை!!<br /><br />சென்னை<br />22.09.2013<br /><br />கி.வீரமணி<br />செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70247119928697312122013-09-23T07:02:16.918+05:302013-09-23T07:02:16.918+05:30
இவரிடம் இதைக் கண்டேன்!
திருவெறும்பூரில் பெரியார்...<br />இவரிடம் இதைக் கண்டேன்!<br /><br />திருவெறும்பூரில் பெரியார் மருத்துவமனை என்றதுமே இவர் நினைவில் வருவார். அவர் பெயர் இரவீந்திரன்! நேர்மையான தொழிலதிபர். நிழற்படத்தில் அவரைப் பார்த்தால் திருநீறும், குங்குமமும் பளிச் சென்று தெரியும். அசர வைக்கும் ஆன்மீகவாதி.<br /><br />அளவிட முடியாத மனிதாபிமானி! அதனால்தான் அள்ளிக் கொடுத்தார் ரூ. 12 இலட்சம்! பெரியார் கொள்கை வென்றதா-? என்போருக்கு ஆன்மீகவாதி இரவீந்திரன் அவர்களையே பதிலாகச் சொல்வோம்.<br /><br />மனதில் இருப்பதைப் பளிச்சென்று படபடக்கப் பேசும் தொழிலதிபர் இரவீந்திரன் அவர்களைச் சந்தித்து, பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவைச் சொன்னோம்.<br /><br />ஓராண்டு முடிந்துவிட்டதா? நிரம்ப மகிழ்ச்சி! எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்துவிட்டேன். எதுவும் நிலைக்கவில்லை; பெரியார் மருத்துவமனை மட்டும் என் காலம் சொல்லும். கடவுளை மறுப்பவர்கள் கரடு முரடாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முதல் சந்திப்பிலேயே என் எண்ணங்கள் மாறியது. அவரின் அணுகுமுறையில் கவரப்பட்டு, அன்பால் ஈர்க்கப்பட்டேன்.<br /><br />பெரியார் பெயரிலான மருத்துவமனைக்கு ரூ.6 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்திருந்தேன். அய்யா வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த அக்கணமே முடிவு செய்துவிட்டேன் 6 அல்ல, 12 இலட்சம் கொடுப்பது என்று! நான் அவரின் நல்ல பணிகளுக்குப் பொருளுதவி செய்து, தொடர்ந்து உறுதுணையாய் இருப்பேன்.<br /><br />உண்மையிலேயே நான் அறிந்த வரை இவர் மிகச்சிறந்த நல்லவர், மனிதப் பண்பாளர். சாதாரண மனிதரையும் நெகிழ வைக்கும் குணம் கொண்டவர். இவரின் சமூக எண்ணங்கள் ஈடேற நானும் ஒரு மனிதராய் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்குப் பணம் செலவழித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.<br /><br />மேலும் நான் என் தொழிலில் நேர்மையோடு செயல்பட்டு, இன்று வரை கடுமையாக உழைத்துப் பொருளீட்டுகிறேன். அப்படியிருந்தும் நான் நன்கொடைகள் வழங்கக் காரணம், பெரியாரிடத்தில் எனக்குப் பிடித்த பல கொள்கைகளும், அய்யா வீரமணி அவர்களின் அன்பும்தான்!<br /><br />பெரியார் மருத்துவமனையின் ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில், அம்மருத்துவமனையின் மாடியில் மேலும் பல கட்டமைப்பு வசதிகளை செய்து தர நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறி முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கூறி முடித்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66827313277743186672013-09-23T07:00:54.668+05:302013-09-23T07:00:54.668+05:30
திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு ச...<br />திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை முதலாமாண்டு சிறப்பு மலர்! மருதநாயகம் இரவீந்திரன் மாளிகை<br /><br /><br />17.09.2013 தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, தமிழ் நாடு கடந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடு களில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடி மகிழப் பட்டது.<br /><br />பெரியார் கொள்கை யின் சாதனைகளை, ஆண் டின் 365 நாளும் கொண் டாடி மகிழ காரணங்கள் நிறைய உள்ளன.<br /><br />அப்படி ஒருநாள் தான் 23.09.2013. ஆம்! 2012 ஆம் ஆண்டில் (23.09.2012) திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களால் திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பெரியார் மருத்துவமனை தொடங் கப்பட்டது. ஆடம்பரங்கள் ஏது மின்றி எளிய மக்களுக் காக, எளிய முறையில் தொடங்கப்பட்ட இம் மருத்துவமனைக்கு, மக்கள் ஓரிருவர் வந்து சென்றனர்.<br /><br />மருத்துவ மனையின் நேர்த்தியான வடிவம், மருத்துவர் களின் அன்பு, செவி லியர் களின்கனிவு ஆகியவை மக்களின் 50 விழுக்காட்டு நோயைக் குணப்படுத்த, மீதமிருந்த நோயை மருந்து, மாத்திரைகள் பார்த்துக் கொண்டன.<br /><br />இதற்கான கட்டணமும் மிகக் குறைவு என்ற போது மக்கள்பெரியாரை நிதானமாக நிமிர்ந்துப் பார்த்துச் சென்றனர். அதற்கு வாய்ப்பாக மருத் துவமனையின் முன்பு, முழுவுருவ வெண்கலச் சிலையில் அய்யா அனை வரையும் வரவேற்கிறார்!<br /><br />இப்படியான மக்கள் பெரியார் மருத்துவ மனைக் குறித்து தம் வீட்டில் சென்று நெகிழ, வீதியில் சொல்லி மகிழ, இன்றையத் தேதியில் பயன்பட்ட மக்கள் ஓரா யிரம், ஈராயிரம் அல்ல; அது 10 ஆயிரம் கடந்து போயின!<br /><br />இவ்வாறான தொடர் மக்கள் சேவையுடன் நம் மருத்துவக்குழு நின்றதா? இல்லை!பல்வேறு வாய்ப்புகளை வளர்த் தெடுத்தார்கள். அதன் வழியே 02.12.2012 திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம் பெற் றார்கள்.<br /><br />அன்றைய தினம் மருத்துவமனை வளா கத்தில் செடிகள் நடப் பட்டன. அன்றைய செடி களின் இன்றைய பெயர் மரம்!<br /><br />அதனைத் தொடர்ந்து 24.12.2012 அன்று பெரி யாரின் நினைவு நாளில், பெண்களுக்கான இலவசப் புற்று நோய் கண்டறியும் முகாமில் 80 மகளிர் பங்கேற்றுப் பயன் பெற்றனர். பெரியார் மருத் துவ மனையைக் கடந்து, திருச்சி மாவட்டம் பிச் சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் 04.01.2013 இல் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 70 பொது மக்களும், 04.08.2013 அன்று பெரி யார் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 226 மக்களும் பயன் பெற் றனர்.<br /><br />பொது மருத்துவ முகாம் என்றால் ஏதோ வழக்கமான சம்பிரதாய சோதனைகள் கிடையாது. ஒவ்வொரு பயனாளிக்கும் 8 வகையான சோதனை கள் மேற்கொள்ளப்பட் டன. இவற்றை வெளியில் பரிசோதித்தால் ரூபாய் அய்நூறு பாதிக்கும் என்பது உண்மை.<br /><br />மேலும்புற்று நோயின் அவசியம் கருதி தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22.09.2013 அன்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மீண்டும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.<br /><br />இவ்வாறாகத் தொடர் மருத்துவச் சேவைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுத் துண் டறிக்கைகள் எனத் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை ஓராண்டு சகாப்தம் முடிக்கிறது. தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் உயர் வழிகாட்டுதலில் அம் மருத்துவமனைத் தொ டர்ந்து வெல்லும்! சாத னைகள் பல மெல்லும்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74585280290689345682013-09-23T06:58:21.087+05:302013-09-23T06:58:21.087+05:30பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர...<br />பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்<br /><br /><br />சிவகாசி, செப்.22- பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அதி காரம், ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றுகள், அந்தந்த உள் ளாட்சி அமைப்புகள் மூலம், வழங்கப் படுகிறது.<br /><br />கிராம ஊராட்சிகளில், இச்சான்றிதழ்கள், சுகாதார துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றுகள் வழங்கும் அதி காரம், ஊராட் சிக்கு வேண்டும் என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி இருந்தனர்.<br /><br />இதை தொடந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில்,"" கிராம ஊராட்சிகளின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்க, ஏற்கெனவே வருவாய் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.<br /><br />இது முறையாக நடைமுறைபடுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. அரசாணையில் தெரிவித்துள்ள படி, பிறப்பு, இறப்பு, இருப்பிடம் மற்றும் குடியுரிமை சான்று, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் சான்று களை, ஊராட்சி தலைவர்களே வழங் கலாம். இதை நடைமுறைப்படுத்த, வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, ஊராட்சி தலைவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்,''என, குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23222818901441367382013-09-23T06:56:44.771+05:302013-09-23T06:56:44.771+05:30
கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பிராமணாள் என்...<br />கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்<br /><br /><br />பிராமணாள் என்று விளம்பரப்படுத் தப்பட்டு உணவு விடுதிகள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது தலைமைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய விவரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தலைமைக் கழகத்துக்கு உடனே தெரிவிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.<br /><br />- கலி.பூங்குன்றன்<br />துணைத் தலைவர், திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65238767879841803252013-09-23T06:56:04.943+05:302013-09-23T06:56:04.943+05:30
இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய க...<br />இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டணியினர் வெற்றி வரவேற்கத் தகுந்தது<br /><br /><br />இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளி வந்துவிட்டன.<br /><br />தமிழ்த் தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!<br /><br />யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழ்த் தேசியக் கூட்டணியினர்.<br /><br />சிங்கள இராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்! உணர்வுகள் சாவதில்லை - ஒருபோதும்.<br /><br />இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.<br /><br />முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.<br /><br />எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்!<br /><br />கி.வீரமணி,<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />சென்னை<br /><br />22.9.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42849513666135335372013-09-23T06:55:26.612+05:302013-09-23T06:55:26.612+05:30
திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்...<br />திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக : மத்திய அமைச்சருக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கடிதம்!<br /><br /><br />சென்னை, செப். 22- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெய ரைச் சூட்ட வேண்டு மென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் கிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதி யுள்ளார்.<br /><br />அக்கடித விவரம் வரு மாறு:<br /><br />தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தீண்டாமை மூடநம்பிக்கைக்கு எதி ராக தமிழக மக்களி டையே பகுத்தறிவு எண் ணத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் எழுச்சியுறச் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக் கீடு கிடைக்க போராடி யவர். அரசியலில், விடு தலைக்கு முன்னர் காங் கிரஸ் கட்சியில் ஈடுபட்டு பின்னர் பகுத்தறிவு இயக் கமான திராவிடர் கழ கத்தை தோற்றுவித்தவர். தமிழகம் முழுவதும் பய ணம் செய்தவர். தமிழ கத்தில் ஒவ்வொரு கிரா மத்திற்கும் சென்று தீண் டாமை ஒழிப்புக்கு பாடு பட்டதுடன் பெண் களுக்கான கல்வி, சமூக பொருளாதார மேம் பாட்டுக்கு அக்காலத் திலேயே பாடுபட்டவர்.<br /><br />தந்தை பெரியார் பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததுடன் இந்தியாவில் பல மாநி லங்களிடையே சுற்றுப் பயணம் செய்துள்ளார். பெரும்பாலும் அவர் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்ததுடன் அங்கு பல கல்வி நிறு வனங்களை ஏற்படுத் தினார். அவரது கொள்கை சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலை களில் அங்கு தொண் டாற்றினார். அவர் தம் முடைய வாழ்நாள் முழு வதும் நமது நாட்டில் சமூக இணக்கத்திற்காக வும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.<br /><br />மிகவும் மதிப்பு மிகுந்த தலைவரான தந்தை பெரியாரின் பெயரை திருச்சி பன் னாட்டு விமான நிலை யத்திற்குச் சூட்ட வேண் டும் என பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />எனவே மத்திய அரசு, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சி தந்தை பெரியார் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18949799257815842792013-09-21T18:13:59.290+05:302013-09-21T18:13:59.290+05:30
மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச...<br />மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி<br /><br /><br />புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.<br /><br />பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:<br /><br />நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.<br /><br />மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12842827411657386412013-09-21T18:12:40.696+05:302013-09-21T18:12:40.696+05:30
மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞ...<br />மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி<br /><br /><br />பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.<br /><br />பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.<br /><br />அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.<br /><br />யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.<br /><br />இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.<br /><br />இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:<br /><br />நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.<br /><br />முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.<br />பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?<br /><br />கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45350386162325111302013-09-21T18:11:59.755+05:302013-09-21T18:11:59.755+05:30தொழிலாளர்
சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் த...தொழிலாளர்<br /><br />சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br />- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91614367431882763972013-09-21T18:11:35.692+05:302013-09-21T18:11:35.692+05:30பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்
நம் ந...பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்<br /><br />நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54797918661966207282013-09-21T18:11:09.309+05:302013-09-21T18:11:09.309+05:30சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!...சத்தியாக்கிரகம்<br />ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!<br /><br />நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!<br />- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53323316596876091332013-09-21T18:09:39.497+05:302013-09-21T18:09:39.497+05:30எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி
ஓய்வு...எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி<br /><br />ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.<br /><br />தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.<br /><br />திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:<br /><br />ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.<br /><br />பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.<br /><br />பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com