tag:blogger.com,1999:blog-1474608369333206681.post708096763292286455..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67754762520956498282013-05-01T18:52:07.316+05:302013-05-01T18:52:07.316+05:30கேள்வியும் - பதிலும்
- சித்திரபுத்திரன்
கேள்வி:-...கேள்வியும் - பதிலும்<br /><br />- சித்திரபுத்திரன்<br /><br />கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.<br /><br />பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.<br /><br />இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.<br /><br />ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.<br /><br />குடி அரசு - வினா விடை - 29.10.1933தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58392568943220041892013-05-01T18:42:15.924+05:302013-05-01T18:42:15.924+05:30பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்
எங்களுடை...பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்<br /><br />எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.<br /><br />(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41959448130473711722013-05-01T04:07:02.301+05:302013-05-01T04:07:02.301+05:30
ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!
ஜெயங்கொண்டத்தில் தோ...<br />ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!<br /><br /><br />ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.<br /><br />மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.<br /><br />வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.<br /><br />மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.<br /><br />எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.<br /><br />கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)<br /><br />இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.<br />ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.<br /><br />ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.<br /><br />நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.<br /><br />அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.<br /><br />இனமுரசு இயக்கம் இதுதான்!<br />சமூகநீதி இயக்கம் இதுதான்!<br />பகுத்தறிவு இயக்கம் இதுதான்!<br />பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!<br />ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!<br />சகோதரத்துவம் பேணும்,<br />சமத்துவ இயக்கம் இதுதான்!<br />நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;<br />வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!<br />அறிவை மட்டுமல்ல,<br />ஒழுக்கத்தை உயிரினும் மேலாக<br />ஓம்பும் கொள்கை<br />இதனிடம்தான் உள்ளது.<br /><br />இது ஓர் உலக இயக்கம்;<br /><br />மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!<br /><br />இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!<br /><br />மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!<br /><br />ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!<br /><br />ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!<br /><br />ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!<br /><br />மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;<br /><br />கேட்கட்டும் ஜெயபேரிகை!<br /><br />- மின்சாரம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53562862862529086492013-05-01T04:02:53.777+05:302013-05-01T04:02:53.777+05:30
சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்
ச...<br />சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்<br /><br /><br /><br />சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.<br /><br />அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும்.<br /><br />தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.<br /><br />150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.<br /><br />இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.<br /><br />இவ்வளவுக்கும் 2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.<br /><br />2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?<br /><br />இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.<br /><br />இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..<br /><br />இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?<br /><br />இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?<br /><br />இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும்.<br /><br />தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.<br /><br />நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.<br /><br />முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!<br /><br />தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.<br /><br />அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20409206015636953162013-05-01T04:02:16.037+05:302013-05-01T04:02:16.037+05:30
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு...<br />அவசியம்<br /><br /><br /><br />கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.<br />(விடுதலை, 17.6.1970)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12743470448542473302013-05-01T04:01:28.743+05:302013-05-01T04:01:28.743+05:30திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....
இன்று ந...திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....<br /><br />இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த பொறுக்கு மணிகள்:<br /><br /> தலைமைக் கழகம் தொடர்ந்து கிளைக் கழகம் வரை ஒரு வலைப்பின்னல் (Network).<br /><br /> இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் களுக்குப் பொறுப்பான மாவட்டங்கள் பற்றிய இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட அறிக்கை தாக்கல்.<br /><br /> மாவட்டக் கழகத் தலைவர்கள் ஒன்றிய வாரியாக சுற்றுப் பயணம் மாதம் ஒரு முறை.<br /><br /> பிரச்சார முறையில் புதிய அணுகுமுறைகள், இணைய தளம், கணினி இவற்றையும் பயன்படுத்துதல் அவசியம். கழகச் செயல்பாடுகள், மறுப்புகள், பொதுச் பிரச்சினகளில் நமது செயல்பாடுகள் அவ்வப்போது இணையதளத்தில் இடம் பெற வேண்டும்.<br /><br /> கழகத்தின் செயல்பாடுகள் அதிகம். ஆனால் அவை பற்றிய விளம்பரம் குறைவு; சரி செய்யப்பட வேண்டும்.<br /><br /> சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு; மாநகரங்களில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.<br /><br /> உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய வாரியாக நடைபெற வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சரிவர நிறைவேற்றப் பட உறுதி செய்ய வேண்டும்.<br /><br /> பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் பெண்களைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழிகள் - சிந்தனைகளை விரிவாகப் பரப்புவதற்கு உரிய நேரமாக இக்கால கட்டத்தைக் கருத வேண்டும்.<br /><br /> ராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான போராட்டத் திட்டம் அறிவிப்பு வெளி வரும்.<br /><br /> ராஜபாளையம் மாநாட்டை ஏதோ இளைஞரணி மாநாடாக மட்டும் கருதாமல் அனைத்து அணியினரும் குடும்பம் குடும்ப மாகத் திரள வேண்டும்.<br /><br /> பயிற்சிப் பட்டறை ஆண்டு முழுவதும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட வேண்டும்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-386254058664424492013-05-01T04:00:53.833+05:302013-05-01T04:00:53.833+05:30
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவ...<br />திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்<br /><br /><br />ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது<br /><br />சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை<br /><br />திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்<br /><br /><br />திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்<br /><br />சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.<br /><br />தீர்மான எண் (1)<br />இரங்கல் தீர்மானம்<br /><br />30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:<br /><br />தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).<br /><br />தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.<br /><br />முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மான எண் (2)<br /><br />ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!<br /><br />(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.<br /><br />தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.<br /><br />அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை<br /><br />(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />தீர்மான எண் (3)<br />இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு<br /><br />இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.<br /><br />பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.30-4-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11611974868938703982013-05-01T03:59:43.679+05:302013-05-01T03:59:43.679+05:30
மே தின வாழ்த்துக்கள்
நாளை மே முதல் நாள் - மேதின...<br />மே தின வாழ்த்துக்கள்<br /><br /><br />நாளை மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் உரிமையை மீட்ட உன்னதத் திருநாள்!<br /><br />உழைப்பவரே உயர்வானவர் என்பதனை மறுக்கும் ஜாதி உள்ள சமுதாயத்தில், மீண்டும் ஒரு புதிய புரட்சி பூத்து, சமத்துவ சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் - நம் நாட்டில் உழைப்பே உயர்வுதரும் என்று சொன்னால் மட்டும் போதாது; உழைப்பவரையும் உயர்த்திடும் உரிமை பெற்ற புதியதோர் சமுதாயம் பூக்கட்டும்!<br /><br />தந்தை பெரியார் விரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் உரிமையும், லாபத்தில் பங்கும் தந்து - முதலாளி - தொழிலாளி பேதம் மறைந்து பங்காளிகள் அனைவருமே என்ற சமத்துவம் மலரச் சங்கநாதம் செய்வோம்!<br /><br />அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br /><br /> <br /><br />சென்னை<br />30.4.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27433096203424679852013-04-30T06:07:25.060+05:302013-04-30T06:07:25.060+05:30
இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!
...<br />இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!<br /><br /><br />- மின்சாரம் -<br /><br />உனக்குமா ஓர் இயக்கம்? அதைக்<br />கலைக்க என்ன தயக்கம்?<br />இனக் குறையை நீக்கப் பெரியார்<br />இயக்கம் நாட்டில் இருக்கையிலே<br />- உனக்குமா ஓர் இயக்கம்?<br />என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த பொன்னாள் இந்நாள் (1891).<br /><br />இனக்குறையை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாம் திராவிடர் கழகம் நாட்டில் இருக்கையில், ஏன் உனக்கு இன்னொரு கட்சி என்ற வினாவை எழுப்பியுள்ளார் நம் புரட்சிக் கவிஞர்.<br /><br />உண்மைதானே, இந்த இனத்துக் குள்ள குறை என்ன? இன்றும் சாஸ் திரப்படியும், சட்டப்படியும் நாம் சூத்திரர் கள்தானே - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் தானே!<br /><br />இதனைச் சுட்டிக்காட்டி எம்மின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தித் தன்மானத் தீயை மூட்டும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எது?<br /><br />இந்த இழிவை நீக்க இராமாயணத் தில் தீப்பரவட்டும் என்று எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனை எரித்த தீரர்கள் கொண்ட கோட்டம் திராவிடர் கழகம்தானே!<br />ஜாதியைப் பாதுகாக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை பட்டப் பகலில் பகிரங்கமாக எரித்து, அதன் சாம்பலைப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆற்றல் - சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு காலத் தண்டனை என்று இதற்காகவே சட்டம் கொண்டு வந்தபோதும்கூட அச்சம் இல்லை - அச்சம் இல்லை என்று கூறி பத்தாயிரக் கணக்கில் சட்டத்தை எரித்து மூன் றாண்டுகள் வரை கடும் தண்டனை யைச் சிரித்த முகத்தோடு ஏற்றுச் சிறைக் கோட்டம் ஏகிய இலட்சிய வீரர்களை கொண்ட இவ்வியக்கம் அல்லாமல் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர். எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நம் இனத்திற்கு? ஜாதித் தீயை மூட்டும் பிற்போக்குச் சக்திகள் தலை தூக்கப் பார்க்கின்றன! சவால்களைச் சந்திக்க வேண்டியது நாம்தானே!<br /><br />30 கல் தொலைவில் உள்ள நமது ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறனரே!<br /><br />தமிழின மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டு இருக்கிறதே!<br /><br />அந்த இயக்கத்தின் இளைஞர் சேனை ராஜபாளையத்தில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது வரும் மே 4ஆம் நாள்.<br /><br />சமூகநீதித் துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் - இன்னும் இருக்கிறது.<br /><br />நூற்றண்டுக்கு மேலாக நமது கனவிலே இருந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் - கைக்கு எட்டி வந்த நேரத்திலே அதனைத் தட்டிப் பறிக்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.<br /><br />காவிரி நீர்ப்பிரச்சினையிலும் இன்னும் நாம் கையேந்தும் நிலைதான்!<br /><br />முல்லைப் பெரியாறு பிரச்சினை யிலும் மூக்கு அறுந்துதான் தொங்கு கிறது!<br /><br />நமது ஒகேனக்கல் பகுதிக்கே வந்து கருநாடகத்துக்காரன் கலாட்டா செய்கிறான்.<br /><br />ஆந்திரக்காரனோ பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி, உன்னால் ஆனதைப் பார் என்கிறான்.<br /><br />தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்கு முழு உரிமை கிடையாது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது.<br /><br />இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு தான் என்ன? வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டை மீட்டெடுப்பது யார் பொறுப்பு?<br /><br />பண்பாட்டுத் தளத்தில் படை நடத்துவோர் யார்?<br /><br />புரட்சிக்கவிஞர் இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் குயிலில் (3.3.1959) குரல் கொடுத்தாரே - அடையாளம் காட்டினாரே அந்த இயக்கமான திராவிடர் கழகத்தின். தலையில்தானே தமிழர் பிரச்சினைகள் விடிந்திருக்கின்றன.<br /><br />நம்முன் னிற்கும் இந்தக் கடமை களை ஒரு கணம் நினைத்துப் பார்த் தால், ராஜபாளையத்தில் நமது கழகம் நடத்தும் இளைஞரணி மாநில மாநாட் டின் அருமை என்னவென்று புரியும்.<br /><br />வெறும் பொழுது போக்கு மாநாடல்ல - கேளிக்கைகளுக்கு இடமில்லை.<br /><br />இலட்சிய முழக்கம் இருக்கும், ஈடேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வெடிக்கும்.<br /><br />இளைஞர்களின் அணிவகுப்பு மிக முக்கியமானது. சமூக காப்பணியின் வேழ நடை வீர உணர்வைத் தூண்டக் கூடியது. இயக்க வரலாற்றிலும் ஒரு பொன் னேடு - புகழேடு<br /><br />- புறப்படு தோழா புறப்படு!<br />போர்ப்பாட்டுப் பாடுவோம்<br />புறப்படு தோழா புறப்படு!<br />தனிமனிதனாக அல்ல<br />குடும்பம் குடும்பமாகப் புறப்படுக! புறப்படுக!!<br /><br />பெரியார் இயக்கத்தின் மாட்சியை அது கையில் எடுத்துக் கொண்டிருக் கும் மீட்சியின் பட்டியலைக் காணப் போகிறோம்!<br /><br />வா தோழா வா! தொல்லுலகுக் குள்ளே அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்.<br /><br />வல்லவன் உன்னை வெல்ல நினைப் பவன் தூள் தூள் தூள்! என்று புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்.<br /><br />ராஜபாளையம் - புது ராஜபாட் டையைக் கொடுக்கப் போகிறது புறப்படு! புறப்படு!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44617984219298675082013-04-30T05:49:40.954+05:302013-04-30T05:49:40.954+05:30
முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்
தமிழ்நாடு ...<br />முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்<br /><br /><br />தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.<br /><br />ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.<br /><br />ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.<br /><br />சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.<br /><br />இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.<br /><br />இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?<br /><br />சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.<br /><br />ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.<br /><br />கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.<br /><br />குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?<br />சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.<br /><br />இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே - அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.<br /><br />தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.<br /><br />இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.<br /><br />தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.<br /><br />இது எவ்வளவுப் பெரிய கொடுமை! சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.<br /><br />முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 29-4-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83647636581617518142013-04-30T05:49:01.839+05:302013-04-30T05:49:01.839+05:30
பதவி ஆசை
பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட...<br />பதவி ஆசை<br /><br /><br />பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43157342501827403392013-04-30T05:45:16.945+05:302013-04-30T05:45:16.945+05:30
சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு
ஜாதிய...<br />சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு<br /><br /><br />ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!<br /><br />மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.<br /><br />உற்சாகம் பொங்க வாரீர்!<br /><br />நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).<br /><br />உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!<br /><br />சங்கடமில்லை - சபலமில்லை!<br /><br />நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.<br /><br />சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,<br /><br />இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!<br /><br />குக்கல்கள் குரைக்கட்டும்!<br /><br />குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!<br /><br />அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.<br />அவர் வழியே நம் வழி!<br /><br />எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க, இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!<br /><br />95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்<br /><br />குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!<br /><br />காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!<br /><br />வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!<br /><br />இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!<br /><br />அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!<br /><br />உலகம் வியக்க வேண்டும்!!<br /><br />இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!<br /><br />ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!<br /><br />கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!<br /><br />வாருங்கள், தோழர்களே வாருங்கள்!<br /><br />அன்போடு அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா<br /><br />தொண்டன் தோழன்<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br /><br /> <br /><br />சென்னை, 29.4.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4332027454157480932013-04-30T05:44:03.417+05:302013-04-30T05:44:03.417+05:30
ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர...<br />ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர்மானம்<br /><br /><br />சென்னை, ஏப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (27.4.2013) சென்னை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:<br /><br />மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவுக்கு வாகனங்களில் வந்த பாமகவினர் புதுவையை அடுத்து வழிநெடுகிலும் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.<br /><br />சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஜாதி கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனை வதை அனுமதிக்கக் கூடாது.<br /><br />உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />- இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59303077672244857352013-04-30T05:41:46.851+05:302013-04-30T05:41:46.851+05:30
தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்...<br />தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்லதல்ல! கலைஞர் பேட்டி<br /><br /><br />சென்னை, ஏப். 28 - தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதன் காரணமாக துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்ல அறிகுறியல்ல என்று தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (27.4.2013) செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது தெரிவித்தார்.<br /><br />கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-<br /><br />செய்தியாளர் :- மரக்காணத்தில் நேற்றைய தினம் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? கலைஞர் :- அதைப்பற்றித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ் நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனை யிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன்வர வேண்டும். கட்சித் தலைவர்களும் தங்கள் கடமை யை மறவாமல் பிரச்சினையை அக்கறையோடு அலசி, அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.<br /><br />செய்தியாளர் :- மாமல்லபுரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று கூறி யிருக்கிறார். ஜாதிகளை யெல்லாம் அடையாளப் படுத்திப் பேசியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?<br /><br />கலைஞர் :- ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் எனக்கும்.<br /><br />செய்தியாளர் :- நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.அய். விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.அய். இயக்குநரே உச்ச நீதிமன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?<br /><br />கலைஞர் :- நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.<br /><br />செய்தியாளர் :- தமிழகச் சட்ட சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை யெல்லாம் வெளி யேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்க வில்லையே?<br /><br />கலைஞர் :- உங்கள் முடிவுக்கே விட்டு விடு கிறேன். -இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80188060614610576132013-04-30T05:30:57.541+05:302013-04-30T05:30:57.541+05:30
சமாதி
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசா...<br />சமாதி<br /><br /><br />புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசாயி மஹோத் சவம் எனும் தலைப்பில் தினமலர் (25.4.2013 பக்கம் 3) ஆறு பத்தி தலைப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது.<br /><br />சத்யசாயிபாபாவின் இரண்டாம் ஆண்டு மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சத்ய சாயி மகாசமாதி அமைந்துள்ள, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை மற்றும் மஹோத்சவம் சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்கள் நடை பெற்ற விழாவில் ஏராளமான பண்டிதர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு பாபாவின் அருளாசி பெற்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பாபா செத்துப் போனாலும் அவரின் சமாதி ஆசீர்வாதம் செய்கிறதாம். அவர் ஆசீர்வாதத்துக்கு அவ்வளவு சக்தியிருந்தால் சாய்பாபா ஏன் ஒரு மாத காலம் நோய்த் துன்பத்தில் படாத பாடுபட்டார்? (அதன்மீது நமக்கு அனுதாபம் உண்டு!)<br /><br />எவ்வளவுத் தீவிரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன! மிகப் பெரிய மருத்துவ நிபுணர்கள் எல்லாம் மண் டையைக் கசக்கியும் (கோடிக் கணக்கில் செலவு செய்தும்) நவீன மருத்துவ வசதிகளைக் கையாண்டும் கடைசியில் பயனில்லையே!<br /><br />விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்க வில்லை என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்லு வார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. சாயிபாபா குளியல் அறை யில் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் நடமாடினார். புட்டபர்த்தியில் அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓடிப் போய் அறையைத் தாழிட் டுக் கொண்டதால் உயிர் தப்பினார். இவை எல்லாம் நம் சொந்த சரக்குகள் அல்ல! அப் பொழுதே ஏடுகளில் சாங்கோ பாங்கமாக வெளி வந்தவை தான். பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் நேரிடையாகவே சாயிபாபாவைச் சந்தித்து சாயி பாபாவின் மாயா ஜாலத்தை அவருக்கு எதிரிலேயே செய்து காட்டி அசத்தவில்லையா? (பி.சி. சர்க்கார் பேட்டி (இம்பிரிஸ்ட் ஜூன் 1983).<br /><br />இவற்றிற்கு மேலும் சாயி பாபாவிடம் மனிதனுக்கு மேலாக தெய்வ சக்தி ததும்பி வழிந்தது என்று சொல்ல வருவார்களே யானால் சொல்லுகிறவர்கள் அசல் ஏமாற்றுக்காரர்கள், அவற்றை நம்புபவர்கள் அசல் ஏமாளிகள் - மடையர்கள் என்ப தல்லாமல் வேறு என்னவாம்?<br /><br />பாபா மறைந்த நிலையில் அங்கு சமாதி கட்டி அதற்கு அற்புதங்களை உண்டாக்கி மறுபடியும் பக்தி வியாபாரம் கிளம்பி விடும் என்று புட்ட பர்த்திக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகப் படை எழுதியது. (உண்மை 15.1.2011) அதுதான் இப்பொழுது நடக்கிறது.<br /><br />சமாதி என்று சொன்ன வுடன் நேரில் பார்த்துச் சொன்ன தந்தை பெரியாரின் ருசிய நாடகக் கதைதான் நினைவிற்கு வருகிறது.<br /><br />பாதிரியார் ஒருவர் தன் மகனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று வெளி யூருக்கு அனுப்பி வைத்தார்.<br /><br />அந்தக் கழுதை நடக்க முடியாமல் இடையில் செத்து விட்டது. மகன் என்ன செய் தான்? அந்தக் கழுதையை அதே இடத்தில் புதைத்துவிட்டு மகான் அடக்கமாகி விட்டார் என்று கிளப்பி விட்டான். பக்தர் கள் பணத்தைக் குவித்தனர். பெரிய பணக்காரன் ஆகி விட்டான். இதைக் கேள்வியுற்ற தந்தை பாதிரியார் அங்கு வரு கிறார். மகன் நடந்ததைச் சொன்னான்.<br /><br />மகன் அப்பாவைப் பார்த்துக் கேட்டான் நீங்கள் பணம் சம் பாதித்தது எப்படி? அப்பா பாதிரி யார் சொன்னார் புன்னகையோடு செத்துப் போன குட்டிக் கழுதையின் அம்மாதான் என் றாரே பார்க்கலாம் சமாதியின் லட்சணம் இது தான்!<br /><br />- மயிலாடன் 28-4-2013<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21723661819653331832013-04-30T05:29:16.010+05:302013-04-30T05:29:16.010+05:30தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன்...தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது! என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.<br /><br />மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.<br /><br />சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.<br /><br />18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?<br /><br />ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?<br /><br />விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.<br /><br />இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?<br /><br />தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?<br /><br />இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?<br /><br />அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?<br /><br />இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?<br /><br />தலைவர்கள் என்றால் யார்?<br /><br />தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?<br /><br />பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?<br /><br />அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?<br />அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.<br /><br />அரசு என்ன செய்ய வேண்டும்?<br /><br />தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா? ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.<br /><br />இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.<br /><br />நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!<br /><br />தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.<br /><br />தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.<br /><br />முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.<br />ஒழியட்டும் ஜாதித் தீ!<br /><br />ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!<br /><br />இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!<br /><br />வளர்க பகுத்தறிவு!<br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br /><br /> <br /><br />சென்னை<br />28.4.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37386224511175799532013-04-30T05:29:11.486+05:302013-04-30T05:29:11.486+05:30
ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்க...<br />ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!<br /><br /><br />ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?<br /><br />இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!<br /><br />தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை<br /><br />அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!<br /><br />தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும் தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:<br />தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.<br /><br />தந்தை பெரியாரின் கோட்பாடு<br /><br />ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.<br /><br />பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள்!<br /><br />வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.<br /><br />மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.<br /><br />இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.<br /><br />தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.<br /><br />இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.<br /><br />ஏணிப்படி ஜாதிமுறை<br /><br />வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43689133432369740292013-04-28T06:37:25.409+05:302013-04-28T06:37:25.409+05:30
Pan Card என்பது...
Pan (பேன்) என்று அழைக்கப்படு...<br />Pan Card என்பது...<br /><br />Pan (பேன்) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number)<br />என்பது இந்திய வருமான வரி சட்டம் 1961இன் கீழ் வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டதாகும். இந்திய வரித்துறையின்கீழ் உள்ள Central Board for Direct Taxes (CBDT)-ன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இது தேசிய அடையாள எண்ணிற்கு சமமாக கருதப்படுகிறது. இதனை சிறந்த அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.<br /><br />வங்கிகளில் கணக்கு தொடங்குதல், வரி விதிக்கப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு Pan எண் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பது மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவையே. . Pan கார்டின் பிரதான நோக்கமாகும். தனித்த, தேசிய அளவிலான நிரந்தர ஒன்றாகும். குடியிருக்கும் முகவரி மாற்றத் தின் போதும் பாதிக்கப்படாத ஒன்றாகும். அதாவது மாநில அளவில் இருப்பிடத்தை மாற்றுபவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. . Pan ன் வடிவம் AAAAA9999A என்ற முறையில் அமையும்.<br /><br />முதல் 5-ம் எழுத்துக்களாகவும், அடுத்த 4ம் எண்களாகவும் அடுத்துள்ள கடைசி ஒன்று எழுத்திலும் காணப்படும். ஒவ்வொரு உறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது.<br /><br />C - Company P - Person H - HUF(Hindu Undivided Family) A - Association of Persons (AOP) F - Firm T - AOP (Trust) B - Body of Individuals (BOI) L - Local Authority J - Artificial Juridicial Person G - Government<br /><br />Pan இன் 5ஆவது உள்ள உறுப்பு முதல் உறுப்பாக அமையும். நான்காவது எழுத்து தனி நபரின் பெயர் அதாவது Personal Pan Card எனில் P அல்லது நிறுவனத்தின் பெயர் Company/HUF/Film/AOP/BOI/Local Authority/Artifical Jurdical Person//Govt. இவற்றை பொறுத்து ‘’C, H, F, A,T, B,L, J, G” எனவும் அமையும். தற்போது வெளிவரும் களின் புகைப்படத்தின் வலது புறம் Pan Card வெளியிடப் படும். நாள் DOI-Date of Issue குறிப்பிடப்படுகிறது. Know your PAN என்ற மத்திய அரசின் புதிய ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பழைய மற்றும் புதிய பேன் எண்ணைப்பற்றி அறிந்து கொள்ளலாம். இதற்காக https://incometaxindiaefilling.gov.in/portal/know pan.do என்ற இணையதளத்தை பார்க்கலாம். வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஒவ்வொருவரும் Pan கார்டு வைத்துக் கொள்வது அவசியம். ஆடிட்டர்கள் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20065792414613146072013-04-28T06:29:56.120+05:302013-04-28T06:29:56.120+05:30
தன்னைப் பற்றி பெரியார்
பெரியார் ஒரு முழுப் புரட...<br />தன்னைப் பற்றி பெரியார்<br /><br /><br />பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் (நெ.து. சுந்தரவடிவேலு) நூலில் 10ஆம் பக்கத்தில் இருப்பது:<br /><br />எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன்.<br /><br />அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.<br /><br />இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.<br />சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்!<br /><br />நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்?<br /><br />நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பார்த்தனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.<br /><br />ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்?<br /><br />ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம்.<br /><br />இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது?<br /><br />விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கின்றோமேயல்லாது வேறில்லை.<br /><br />இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கி விட்டோம்.<br /><br />உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.<br /><br />- என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன.<br /><br />சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்து கொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர் அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர்.<br /><br />இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப் புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாகக் குறிக்கலாம்.<br /><br />கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொது நலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர் என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.<br /><br />மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர்.<br /><br />இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.<br /><br />தன்னுடைய கைப்பணத்தைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார்.<br /><br />படித்த இளைஞரில் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர்.<br /><br />- க. பழனிசாமி, தெ. புதுப்பட்டி தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26221659422244609092013-04-28T06:24:59.791+05:302013-04-28T06:24:59.791+05:30வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்ச...வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்சிகளும் உண்டு - அதற்கும் அவாள் ஆத்துப் பெண்கள்தான் ஏற்றுமதி.<br /><br />எங்கே போனாலும் தமிழ்க் குரல்தான், நம்ம சங்கீதம்தான், நம்ம பேச்சுத்தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வே துளியும் உண்டாகவில்லை.<br /><br />அமெரிக்காவிலிருந்து செய்தி படங்கள் யோகா! (ஆகா எப்படி!) _ குமுதம் இவ்வாறு கூறுகிறது.<br /><br />இதெல்லாம் உண்மைதானா? எங்கே போனாலும் தமிழ்க் குரல்தானா? நம்ம சங்கீதம் தானா?<br /><br />இங்கே திருவையாற்றில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையிலேயே தமிழ் கிடையாது; - ஆம், மருந்துக்கும் தமிழ் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அங்கு எங்கு பார்த்தாலும் தமிழ் என்பது யாரை ஏமாற்ற? பெயருக்குத் தமிழ் என்ற நாமகர்ணம் அவ்வளவுதான்; பாடல்கள் எல்லாம் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள்தாம்.<br /><br />திருவையாறு தியாகராஜர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி வினாயகனே! என்ற தமிழ்ப் பாடலை (இவ்வளவுக்கும் அது பக்திப் பரவசப் பாடல்தான்!) பாடியதற்காக சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்த பிறகு தானே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார் திருவாய்த் திறந்து தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார்.<br /><br />அதனைக் கண்டித்து தீட்டா யிடுத்து! என்று தலைப்பிட்டு குடி அரசில் அப்பொழுதே (9.2.1945 பக்கம் 7) கட்டுரை தீட்டியவர்தான் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.<br /><br />சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை விழாவில், முதல் அமைச் சராகக் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் (21.12.1989) செம்மங்குடி சீனி வாசய்யர், அக்கிரகாரத்து அம்மணி யாகவே ஆகிவிட்ட எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோரை அருகில் அமர வைத்தே நினை வூட்டினாரே (இவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது) உள்ளபடியே தமிழிசைமீது தீராத காதல் அமெரிக்கா வாழ் இந்தத் தமிழர்களுக்கு(?) இருந்திருக்குமேயா னால் இந்தத் தியாகராஜருக்கு முன்னோடியான _- காலத்தால் முந்தியவர்களுமான மும்மணிகளான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_-1600), அருணாசலக் கவிராயர் (1711-_1779) தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோருக்கு அல்லவா அமெரிக்காவில் விழா எடுத்திருப்பார்கள்!<br /><br />பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத் துக்களை நம் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ!<br /><br />இந்த நேரத்தில் இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.<br /><br />உண்மையான தமிழிசை மும்மணிகளாகிய சீர்காழி முத்துத் தாண் டவர். அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரி முத்தாபிள்ளை ஆகியோரைச் சிறப்பாக நினைவு கூரும் வண்ணம் சீர்காழியிலேயே மணி மண்டபம் ஒன்றை ரூ.1.51 கோடி செலவில் கடந்த தி.மு.க. ஆட்சியிலே மானமிகு மாண்புமிகு முதல் அமைச் சர் கலைஞர் அவர்கள் உருவாக்கி, நிறைவு பெறும் கால கட்டத்தில் ஆட்சி போயிற்று. அக்கிரகார ஆட்சி அதனைத் திறப்பு விழா செய்யுமா என்பது கேள்விக் குறிதான்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60743905462614488702013-04-28T06:24:55.670+05:302013-04-28T06:24:55.670+05:30செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்...செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்<br /><br /><br />- மின்சாரம்<br /><br />பார்ப்பனர்கள் சந்திர மண்டலத் திற்குச் சென்றாலும் அவாளின் கலாச்சாரத்தைக் கால்கோள் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.<br /><br />பாரதியார் சங்கம் என்று கூறிப் பிள்ளையார் சுழி போடுவார்கள். அதன் மூடு திரையில் அவாள் சமாச்சாரங்கள் ஜாம் ஜாமென்று சலங்கை கட்டி ஆடத் தொடங்கி விடும்.<br /><br />அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனர்களால் அமெரிக்காவின் செனட் சபையில் ரிக்வேதம் உபநிஷத், பகவத் கீதையிலிருந்து சில பாடல்களைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜன்சேட் என்னும் சமஸ்கிருதப் பண்டிதரும் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).<br /><br />அமெரிக்காவில் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துளசி கப்பார்ட் என்ற இந்து மதப் பார்ப்பனப் பெண் நாடாளுமன்றத்தில் கீதையின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.<br /><br />(பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள் -_ கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).<br /><br />ஒரு கால கட்டத்தில் ருசியாவிலும் இந்தக் கேடு கெட்டத்தனம் வாலை நுழைத்து, அதை ஒரு வழியாக்கி விட்டது.<br /><br />இப்பொழுது என்னடா என்றால் அமெரிக்காவில் திருவையாறாம்! திருவையாறில் தொடங்கிய வியாதி இப்பொழுது அமெரிக்காவிலும் குடி யேறி விட்டது. தியாகராஜர் ஆரா தனை விழாவுக்குக் கொடியேற்றி விட்டார்கள். மார்ச்சு 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை பிர்மாண்டமாம்! சூத்திர ஏடான குமுதம் (24.4.2013 பக்கம் 102-_104) குதூகலிக்கிறது. சென்னையி லிருந்து நூறு கலைஞர்கள் இதற்காகப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். (அமெரிக்காவுக்கு நூறு பேர் செல்லுவது என்றால் இதற்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்)<br /><br />சுதா ரகுநாதன், திருச்சூர் ராமச் சந்திரன், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், கே. காயத்ரி எல்லாம் அவாள் பட்டியல்தான்.<br /><br />தவில், நாதஸ்வரம் என்று தவிடு பொடிதான், 500 அமெரிக்கா வாழ் குழந்தைகள் தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஓகோவாம்!<br /><br />36 வருடங்களுக்கு முன்பே சாதா ரணமாகத் தொடங்கியது இப்பொழுது இந்த அளவுக்கு உச்சத்திலாம்!<br /><br />இதில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதர் நிருபமாராவ். இவரும் அவாள் ஆத்துப் பெண்தான்.<br /><br />இந்தியாவின் வெளி நாட்டுச் செய லாளராக இருந்து அவர் பங்குக்கு இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னாலான கைங்கரியத்தைச் செய்தவர்! இல்லாவிட்டால் பதவி ஓய்வுக்குப் பிறகு தனியே அழைத்து அம்மை யாரைக் கவனித்து, உபசரித்து அனுப் புவாரா இலங்கை அதிபர் ராஜபக்சே?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58440413554855880902013-04-28T05:53:08.303+05:302013-04-28T05:53:08.303+05:30புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்
புரட்சிக் கவி...புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்<br /><br />புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29. (1891) இந்நாளில் ஈழத் தமிழர் நிலை குறித்து அப்பொழுதே நேரு பிரதமராக இருந்த போதே நிலைமை என்ன?<br /><br />இதோ புரட்சிக் கவிஞர் பாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள்.<br /><br />நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்<br /><br />இலங்கை அரசினால் எய்தும் இன்னலை<br /><br />ஆதரித்தது நேருவின் ஆட்சி<br /><br />மலையகத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்<br /><br />நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி!<br /><br />அங்குள்ள தமிழர்கள் தொல்லை அடைந்திடில்<br /><br />ஆம் ஆம் என்றது அறமிலான் ஆட்சி!<br /><br />தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி<br /><br />ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி!<br /><br />என்று பாடினாரே புரட்சிக் கவிஞர்! இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையில் நீதிக் கட்சி அக்கறை காட்டியுள்ளது.<br /><br />தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாறு. இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது (விடுதலை 11.8.1939 பக்கம் 3)<br /><br />ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த இயக்கத்துக்குள்ள தொடர்பையும் அக்கறையையும் விமர்சிக்க யாருக்கும் யோக்கியதை போதாது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13249273518880354632013-04-28T05:45:47.001+05:302013-04-28T05:45:47.001+05:30
காந்தியின் மகிமை
இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷண...<br />காந்தியின் மகிமை<br /><br /><br />இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை<br /><br />சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?<br /><br />மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?<br /><br />சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.<br /><br />மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?<br /><br />சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?<br /><br />மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?<br /><br />சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!<br /><br />- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61215954303681090872013-04-28T05:45:01.477+05:302013-04-28T05:45:01.477+05:30
இந்து மகாசபை
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட...<br />இந்து மகாசபை<br /><br /><br />இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான் முடியும் என்பது ஒரு பழமொழி.<br /><br />அப்பழமொழிக் கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அது போலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.<br /><br />அவை களின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணா சிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.இதை மகாத்மா எப்படியா வது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவு டன், நமது பிராமணர்கள் புதுதந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் இந்து மகா சபை. அது இந்துக் களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோ டல்லாமல் இந்து முஸ்ஸீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்குச் செய்த சூழ்ச்சியாகும்.<br /><br />தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ள வரை தேசம் உருப்படப் போவ தில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.<br /><br />- குடிஅரசு துணைத் தலையங்கம் 09.05.1926<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31610481347414023652013-04-28T05:44:28.883+05:302013-04-28T05:44:28.883+05:30
சபர்மதி, ராஜியின் முறிவு
சுயராஜ்யக் கட்சியாருக்க...<br />சபர்மதி, ராஜியின் முறிவு<br /><br />சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.<br /><br />இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.<br /><br />ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.<br /><br />பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.<br /><br />அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.<br /><br />இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.<br /><br />தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.<br /><br />இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.<br /><br />அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.<br /><br />பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;<br /><br />இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.<br /><br />- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com