tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6804585098780354284..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது! - கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57205084195136909282011-08-02T18:57:35.631+05:302011-08-02T18:57:35.631+05:30வரவேற்கத்தக்க முடிவு எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்...வரவேற்கத்தக்க முடிவு எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு<br /><br /><br />மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.<br /><br />அக்கடிதத்தில், மருத்துவப் படிப்பில் சேர, நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும், தமிழகத்தில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும்,<br /><br />நுழைவுத் தேர்வு இல்லாததால் கிராமப்புற மாண வர்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், நுழை வுத் தேர்வு நடத்தினால், இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதும் கடினம் என்றும், அக்கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.<br /><br />குறிப்பு: நுழைவுத் தேர்வு பற்றிய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.7.2011 அன்று விடுதலை வாயிலாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<br /> ----"விடுதலை” 2-8-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com