tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6555522093508347468..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தீண்டாமை Untouchability ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக ஜாதி Caste ஒழிக்கப்பட வேண்டும்! தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71161676309144532792014-11-29T21:01:44.090+05:302014-11-29T21:01:44.090+05:30தன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலிர...தன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலிருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். தப்புத் தவறு செய்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். தவறு செய்வது மனித சுபாவம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ச்சியைக் கெடுக்கக்கூடாது. மன்னித்து வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும் - தந்தை பெரியார் பொன்மொழிகள்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTKAccWl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40507859726149546082014-11-29T21:01:07.924+05:302014-11-29T21:01:07.924+05:30தீண்டாதார் கல்வி
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்த...தீண்டாதார் கல்வி<br /><br />தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதி களும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப் பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளி யிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம்.<br /><br />இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத் தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர்.<br /><br />ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங் களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.11.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTK37yFD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13096073976211162212014-11-29T21:00:19.583+05:302014-11-29T21:00:19.583+05:30அர்ச்சனை பண்ணும் அந்தணனுக்கும்
பஞ்சாங்கப் பார்ப்பா...அர்ச்சனை பண்ணும் அந்தணனுக்கும்<br />பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் சம்பாஷணை<br /><br />வந்ததே மோசம்<br />(உற்றுக்கேட்டவன்)<br /><br />பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊருமொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?<br /><br />அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்துவிடும். நீவண்னா மணக்குறாயோ, நானாவது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத்துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.<br /><br />ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.<br /><br />அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத்திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.<br /><br />ப-பா:- ஆனால் நானும் அங்குவரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?<br />அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக்காரன். கைவீச்சு ஜாதிதான், வாநீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.<br /><br />ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டுவிட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.<br /><br />அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன். அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?<br />ப-பா:- சரி போகலாம்.<br /><br />அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட்டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.<br /><br />ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன? அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக்கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட்டிருக்கு.<br /><br />ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.<br /><br />அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித்தனமாய் பேசி னாரே என்ன சொல்வது?<br /><br />ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித்தனம்?<br /><br />அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப்போவேணும் என்று பேசியிருக்கிறான்.<br /><br />ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண்டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனியாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசியத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதையைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.<br /><br />அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.<br />ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்சமாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.<br /><br />அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிராயத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப்படக்கூடாது.<br /><br />பிறகு இவ்விருவரும் குளித்துக்கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.<br /><br />குடிஅரசு - கற்பனை உரையாடல் - 27.12.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTJnFXdC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9975562692498395962014-11-29T20:58:01.403+05:302014-11-29T20:58:01.403+05:30ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? ...ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? : பாரதிராஜா<br /><br />சென்னை, நவ.29_ நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்?. அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது.<br /><br />சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக் கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க.<br /><br />வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்! நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/92033.html#ixzz3KTJFElxK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78084037538259446772014-11-29T20:53:10.018+05:302014-11-29T20:53:10.018+05:30இன்றைய ஆன்மிகம்? - சனிப்பகவான்
சனிப்பகவான் பெயர...இன்றைய ஆன்மிகம்? - சனிப்பகவான்<br /><br /><br /><br />சனிப்பகவான் பெயர்ச்சியையொட்டி விசேஷ யாகம், ஜெபம், ஹோமம், சிறப்பு முறை யில் பூஜைகள் சென் னையில் நடைபெறும் என்பது ஒரு செய்தி.<br /><br />சனிக்கோளின் ஆரமே 142கோடியே 67 லட்சத்து 25400 கி.மீ. பூமியைவிட 764 மடங்கு பெரியது. இது பெயர் கிறதா? பெயர்ந்து யார் தலையில் விழ வேண் டுமாம்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/92040.html#ixzz3KTI18Kky<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53641496334679404922014-11-28T22:27:24.483+05:302014-11-28T22:27:24.483+05:30இதுவும் செய்யமுடியுமா?
நோயென வந்த போது திருநீறு
க...இதுவும் செய்யமுடியுமா?<br /><br />நோயென வந்த போது திருநீறு<br />கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்<br />மானிடனை வாட வைக்கும்<br />பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?<br />காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு<br />ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்<br />மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNpFPJTj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29635063100765508892014-11-28T22:27:01.316+05:302014-11-28T22:27:01.316+05:30மேயோ கூற்று!
இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேய...மேயோ கூற்று!<br /><br />இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண் டவாறு குறிப்பிடுகின்றார்:<br /><br />புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.<br /><br />புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண் ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp9pI6z<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61116159957986682862014-11-28T22:26:37.898+05:302014-11-28T22:26:37.898+05:30போ நரகத்துக்கு!
பெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான...போ நரகத்துக்கு!<br /><br /><br />பெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களை 10 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காத தந்தை நரகத்துக்குப் போவான் என்று சாஸ்திரம் கூறுகிறது!<br /><br />8 வயது பெண்ணை கன்னி என்றும், 9 வயது பெண்ணை ரோகினி என்றும், 10 வயது பெண்ணை கவுரி என்றும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ராஜஸ்வலை (தீண்டத்தகாதவள்) என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது.<br /><br />பெண்ணுக்கு 10 வயதில் திருமணம் நடத்துபவன் சொர்க்கத்துக்கு போவான். 9 வயதில் திருமணம் செய்பவன் வைகுண்டம் போவான். 8 வயதில் திருமணம் நடத்தினால் பிரம்மலோகம் போவான், 10 வயதுக்கு மேற்பட்டால் நரகம் போவான் என்கிறது, சாஸ்திரம்.<br /><br />கவுரீம் ததந் நாகப்ருஷ்டம் வைகுண்டயாதி ரோகிணீம்<br /><br />காந்யம் ப்ரஹ்ம லோகம் கவுரவம் துரஜ்வலாம்.<br /><br />தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp1lNtQ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82263001646765868322014-11-28T22:25:37.070+05:302014-11-28T22:25:37.070+05:30ஏழு மொழிகள்
1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன...ஏழு மொழிகள்<br /><br /><br />1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்<br /><br />2. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.<br /><br />3. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்<br />- தந்தை பெரியார்<br /><br />2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?<br />- ரட்சார்ட் கிப்லீவ்<br /><br />3. தேசியம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.<br />- ம.சிங்காரவேலர்<br /><br />4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.<br />-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்<br /><br />5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.<br />- பகத்சிங்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNomM5CB<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75690147876640869602014-11-28T22:24:36.702+05:302014-11-28T22:24:36.702+05:30ஒழிக்கப்பட வேண்டியவை
1. மக்களிடம் உள்ள உணர்ச்சி,...ஒழிக்கப்பட வேண்டியவை<br /><br /><br />1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்<br /><br />3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக் கப்பட வேண்டும்.<br /><br />7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.<br />- தந்தை பெரியார்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoWeGN3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16964192198944109522014-11-28T22:21:19.989+05:302014-11-28T22:21:19.989+05:30தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர...தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்பு<br /><br /><br /><br />புதுடில்லி, நவ.28_ தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் மேலும் சில இனங் களைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட் டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக் கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித் இனத் தவர்களையும் தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபால கிருஷ்ணன், ஏஅய்எம் அய்எம் கட்சியின் அசாது தீன் ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91967.html#ixzz3KNnhp8dl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86354085560313156822014-11-28T22:20:36.992+05:302014-11-28T22:20:36.992+05:30சேவை என்பது...
சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, த...சேவை என்பது...<br /><br />சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.<br />(குடிஅரசு, 17.11.1940)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91959.html#ixzz3KNnWbqr6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69874401261077390102014-11-28T22:19:54.222+05:302014-11-28T22:19:54.222+05:30இனி ஜாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடகைக்கு ...இனி ஜாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது மும்பை மாநகராட்சி<br /><br />மும்பை, நவ.28- மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ கூடாது என்று மும்பை மாநக ராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன, விற்பனை செய்யப்படு கிறது. முஸ்லீம்கள், அசைவ பிரியர்களுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பாலிவுட் முஸ்லீம் பிரபலங்களுக்குக் கூட மும்பையில் வீடு கிடைப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.<br /><br />இந்நிலையில் ஜாதி, மத, உணவு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடுவது, விற்பனை செய்வது கூடாது என்று மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கவுன்சிலர் சந்தீப் தேஷன்பாண்டே கொண்டு வந்தார். இதற்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ஆளும் பாஜகவோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் செயல்வடிவம் பெறுவதும், பெறாமல் போவதும் மாநில அரசின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91971.html#ixzz3KNnMAy3p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10370176755400310132014-11-28T07:23:39.654+05:302014-11-28T07:23:39.654+05:30கோள்கள் உண்டாவது எப்படி?
மேலே உள்ள படத்தில் நட்ட...கோள்கள் உண்டாவது எப்படி?<br /><br /><br />மேலே உள்ள படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.<br /><br />பல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கோள்களாக வடிவெடுக்கும்.<br /><br />கோள்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.<br /><br />தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் என்று சுருக்க மாகக் குறிப்பிடப்படும் அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இது வானில் ரிஷப என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது. படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம் ஆண்டுகள். இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள் மட்டுமே உள்ளன.<br /><br />இன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உருவாகி விடும். அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.<br /><br />நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.<br /><br />மைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும் நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.<br /><br />இந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ் கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டு வதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.<br /><br />பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண் டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டெனாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஓரு ஆண்டெனாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டெ னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான படம் கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.<br /><br />நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும். வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டெனாக்கள்<br /><br />ஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.<br /><br />இவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண் டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டெனாக்கள் உள்ளன.<br /><br />ஒரே ஆண்டெனா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் விருப்பப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.<br /><br />இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமையிடத்தில் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.<br /><br />இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக ALMA (Atacama Large Millimeter/submillimeter Array) என்று குறிப்பிடப்படுகிறது. அடகாமா என்பது சிலி நாட்டில் உள்ள கடும் குளிர் வீசுகின்ற பாலைவனத்தின் பெயராகும்.<br /><br />இந்தியாவிலும் லடாக் பகுதியில் சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/91905.html#ixzz3KK9ibIr4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29074753518429517472014-11-28T07:21:57.924+05:302014-11-28T07:21:57.924+05:30சொல்ல வேண்டும்
பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழி...சொல்ல வேண்டும்<br /><br /><br />பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.<br />(குடிஅரசு, 17.8.1930)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91917.html#ixzz3KK9HZlkF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72877788636019030322014-11-28T07:21:11.691+05:302014-11-28T07:21:11.691+05:30
நேரு குடும்பத்துக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!
வ...<br /><br />நேரு குடும்பத்துக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!<br /><br />வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் கூறுகிறார்<br /><br />இலண்டன் தயாசின்கின் அம்மையார் 1962ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகம் CASTE TODAY.<br />. வெளி நாட்டவருக்கு ஜாதி முறை தெரியாது. தொடக் கூடாத வர்கள் என்று உண்டா? எங்கள் நாட்டில் மின்சாரத்தைத் தான் தொடக்கூடாது என்று இருக்கிறது என்பார்கள். பாபாகேப் அம்பேத்கர் ஜாதி பேதம்குறித்துக் கூறும் போது, Graded inequality அடுக்குமுறை ஏணிப் படிக்கட்டு முறைப் பேதம் என்று கூறுவார்கள். அடுக்கு முறைப் பேதத்தில் பெண்கள் எல்லாருக்கும் கீழாக உள்ளார்கள். ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தபோது பெண்களை அழைத்துக்கொண்டு வர வில்லை. ஆகவே, பெண்களை அடிமைகளாகவே கருதி னார்கள்.CASTE TODAY எனும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.<br /><br />Eating meat ia considered polluting, yet all kshatryas-and they come next to the Brahmins-eat meat. There are even Brahmins, the Pandits of Kashmir, who not only eat meat but eat it in the company of Muslims; they continue to be Brahmins and remain entitled to look upon all non-Brahmins as inferior.<br /><br />But Brahmins who observe vegetarianism look on Kashmiri Pandits with a disgust reminiscent of what many Britons would feel if a frog was served on their plate. The late Sir Girija Shankar Bajpai, Secretary General for Foreign Affairs, once told me that it was only because he was truly westenised that he could bring himself to eat at the same table as the Prime Minister. ‘But you are both Brahmins’, I ventured, ‘so what is the difficulty?’ ‘He is a Kashmiri Pandit. I am a Kanya Khubja, I belong to the highest hierarchy of Brahmins, the ones who are Chaturvedis (of the four Vedas), we are strict vegetarians by caste, atleast at home; but Nehru is a Kashmiri Pandit, his ancestors were reared on meat and fish... I would not wish a girl of my family to marry into his although I have the highest regard for him as Prime Minister.’ <br /><br />அதன் தமிழாக்கம் வருமாறு:<br /><br />இறைச்சியை உண்பது இழிவானது. இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள் இறைச்சியை உண்கிறார்கள். பார்ப்பனர்களிலேயேகூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இறைச்சியை உண்பதுமட்டுமன்றி முசுலீம்களுடன் சேர்ந்தே உண்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பார்ப்பனர்களாகவே தொடர்ந்து இருப்பதுடன் பார்ப்பனர் அல்லாதவர்களை இழிவாகவே கருதி வந்துள்ளார்கள்.<br /><br />ஒரு தட்டில் தவளைக்கறியை வைத்திருக்கும்போது பிரிட்டானியர்கள் முன்னிலையில் சைவர்கள்போல் காஷ்மீர் பார்ப்பனர்கள் தோற்றம் அளிப்பார்கள். மேனாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மறைந்த சர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் ஒருமுறை கூறும்போது, பிரதமராக இருந்த நேருவுடன் மேற்கத்திய கலாச்சாரத் தின்படி ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்போம் என்றவரிடம் நீங்கள் இருவரும் பார்ப்பனர்கள்தானே? அதில் என்ன கஷ்டம்? என்று கேட்டபோது, நேரு காஷ்மீர் பண்டிட். நான் கன்யா குப்ஜா, பார்ப்பனர் களிலேயே நான் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் ஆவேன். ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற சதுர் வேதிகள். நாங்கள் ஜாதியால் சைவத்தில் குறைந்தபட்சம் வீட்டிலாவது கடுமையாக இருப்போம். ஆனால், நேரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர் அவர்களின் மூதாதையர் இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுபவர்கள். நேரு பிரத மராக என்னால் அதிக அளவில் மதிக்கப்பட்டாலும், எங்கள் குடும்பத்திலிருந்து பெண்ணை, அவர் குடும் பத்தில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார், பார்ப்பனரான மேனாள் வெளியுறவுச் செயலாளர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய்.<br /><br />தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 26.11.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91943.html#ixzz3KK943j2p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40734143822619192852014-11-26T16:49:09.710+05:302014-11-26T16:49:09.710+05:30கழகக் குடும்ப விழா: பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ப...கழகக் குடும்ப விழா: பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு<br /><br />சென்னை, நவ.26- சென்னை இராஜா அண்ணாமலைபுரம் திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மகேந்திரன்-திவ்யா இணையரின் மகன் பெரியார் இனியன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்விழா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி முன்னிலையில் தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் வரவேற்றார்.<br /><br />இளைஞரணி துணை செயலாளர் சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார்.<br /><br />சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரடீஸ் வாழ்த்துரையைத் தொடர்ந்து, முதல் அகவைக்கான விழாகாணும் பெரியார் பிஞ்சு பெரியார் இனியனுக்கு பொதுச்செயலாளர் கேக் ஊட்டிவிட்டு மழலையை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.<br /><br />அவர் பேசும்போது, பொதுவாக நான் இதுபோன்ற பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்வ தில்லை.<br /><br />எங்கள் இல்லத்திலேயேகூட நடைபெறும் விழாக்களில் மற்ற பணிகள் காரணமாக பங்கேற்ப தில்லை. இங்கே வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தபோது பெரியார் தொண்டர்கள் என்றாலே எளிமைதான் இருக்கும். ஆனால், இங்கு ஆச்சரியப்பட்டேன்.<br /><br />இங்கு நடைபெறும் இந்த விழா பெரிதும் ஆடம்பரமாக எனக்குத் தோன்றியது. இதை நம் தோழர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இந்த விழாவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளை பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தி உள் ளார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.<br /><br />நம்முடைய கொள்கையில் உறுதியாக உள்ள தோழர் மகேந்திரனின் உழைப்பை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். தோழர் மகேந்திரனின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக தமிழர் தலைவர்தம் சீரிய தலைமையில் நடைபெற்றது. அதே பகுத்தறிவு உணர்வுடன் இருப்பதன் மூலம் பகுத்தறிவுப்பிரச்சார விழாவாக நடத்துகிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.<br /><br />மேலை நாடுகளில் குழந்தைகள் வளர்ப்பில் அறிவு, தைரியம் வளர்ச்சியின் தாக்கம் இருக்கும். நம் மக்கள் முதலில் இருந்தே மொட்டை அடிப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது என்று தாங்கள் செய்துவந்ததையே காரணங்களின்றி குழந்தைகளிடமும் செய்து வருகிறார்கள். மேலைநாடுகளில் சிறுவயதுமுதல் தைரியமாக வளர்க்கிறார்கள் பகுத்தறிவாளனாக மட்டுமன்றி சிறந்த பண்பாளனாக, மனித நேயம், சமூகத்தில் தொண்டறத்துடன் நல்ல குடிமகனாக வளர்க்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.<br /><br />இந்நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சுநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், முகிலன், தளபதி பாண்டியன், பகுத்தறிவுப் பாடகர் தாஸ், கோடம்பாக்கம் மாரியப்பன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், மதுரவாயல் சரவணன், பாலமுருகன் மற்றும் கழகக் குடும்பத்தினருடன், மகேந்திரன்-திவ்யா இணையரின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/91865.html#ixzz3KAl39Cgd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82448001534546463852014-11-26T16:47:58.662+05:302014-11-26T16:47:58.662+05:30இரசாயன உரங்கள் எச்சரிக்கை!
சென்னை, நவ.26 மிக அத...இரசாயன உரங்கள் எச்சரிக்கை!<br /><br /><br />சென்னை, நவ.26 மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவ தாக சுற்றுச்சூழல் ஆய் வாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறினார்.<br /><br />சென்னை கோட்டூர் புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் நாடு பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மய்யத்தில் ஆசிரியர் களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பயில ரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.<br /><br />இதில் "அனைவருக்கு மான சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: பூமியின் மேற் பரப்பில் ஓர் அங்குலம் மண் உருவாவதற்கு 250 ஆண்டுகள் ஆகின்றன. மரங்களை வெட்டுவதன் மூலம் மேற்புற மண் கடலுக்கு அடித்துச் செல் லப்படுகிறது. அதனால் மண் வளம் போய் விடு கிறது. மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும். ஏர் உழும் மாடுகளின் சாணமும் நிலத் துக்கு உரமாகும்.<br /><br />டிராக்டர் மூலமாக உழும்போது மண் உள்ளே போகும். அதனால், மண் ணில் உள்ள நுண்ணு யிரிகள் இறந்துவிடும் என்பதால், மண் செழு மையாக இருக்காது.<br /><br />இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லி மருந்து களையும் இறக்குமதி செய் கிறோம்.<br /><br />உர இறக்குமதியில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு ஹெக் டேருக்கு 211 கிலோ ரசாயன உரம் தமிழகத்தில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தேசிய சராசரி ஹெக் டேருக்கு 145 கிலோ மட்டுமே.<br /><br />நம்முடைய விவசாய உற்பத்தி ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், ஏக்கர் அளவில் விவசாய உற்பத்தி குறைந்து வரு கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் அறுவடையான தானி யங்கள் இப்போது 19 மூட்டை என்ற அளவி லேயே அறுவடை செய்யப் படுகின்றன.<br /><br />ரசாயன உரங்கள் உணவுப் பொருள்களில் கலப்பதால் உடல்நலப் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படு கின்றன. பெரியவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br /><br />மரபு ரீதியிலான விவசாய விதைகளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது மர பணு மாற்றப்பட்ட விதை களால் இப்போது அதற் கும் பிரச்சினை வந்து விட்டது.<br /><br />மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விளை பொருள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட் டுள்ளன. இந்த விதை களால் பல்லுயிர்ப் பெருக் கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.<br /><br />ஒரு பக்கம் மண் வளம், இன்னொரு பக்கம் மண் நலம் என இந்த இரண் டையும் நாம் காக்க வேண்டும். மண் நலத் துடன் இருக்க இயற்கை விவசாயம் நீடித்த பலன் தருமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.<br /><br />இலையானது பழுத்த இலையாக மாறி சருகாக உதிரும்போது எருவாகிப் போகிறது.<br /><br />அதில் பயிரிடும்போது அதிக விளைச்சல் தருவ தோடு, மண் நலத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.<br />மண் புழுக்கள் வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. மண் புழுக்கள் உணவை உட்கொண்ட பிறகு, அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் அதன் கழி வில் வெளியேறுகின்றன. எனவே, அது நல்ல உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க் கிறது என்றார் அவர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/91852.html#ixzz3KAkf23kI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78686338839305857012014-11-26T16:47:41.723+05:302014-11-26T16:47:41.723+05:30இரசாயன உரங்கள் எச்சரிக்கை!
சென்னை, நவ.26 மிக அத...இரசாயன உரங்கள் எச்சரிக்கை!<br /><br /><br />சென்னை, நவ.26 மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவ தாக சுற்றுச்சூழல் ஆய் வாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறினார்.<br /><br />சென்னை கோட்டூர் புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் நாடு பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மய்யத்தில் ஆசிரியர் களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பயில ரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.<br /><br />இதில் "அனைவருக்கு மான சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: பூமியின் மேற் பரப்பில் ஓர் அங்குலம் மண் உருவாவதற்கு 250 ஆண்டுகள் ஆகின்றன. மரங்களை வெட்டுவதன் மூலம் மேற்புற மண் கடலுக்கு அடித்துச் செல் லப்படுகிறது. அதனால் மண் வளம் போய் விடு கிறது. மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும். ஏர் உழும் மாடுகளின் சாணமும் நிலத் துக்கு உரமாகும்.<br /><br />டிராக்டர் மூலமாக உழும்போது மண் உள்ளே போகும். அதனால், மண் ணில் உள்ள நுண்ணு யிரிகள் இறந்துவிடும் என்பதால், மண் செழு மையாக இருக்காது.<br /><br />இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லி மருந்து களையும் இறக்குமதி செய் கிறோம்.<br /><br />உர இறக்குமதியில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு ஹெக் டேருக்கு 211 கிலோ ரசாயன உரம் தமிழகத்தில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தேசிய சராசரி ஹெக் டேருக்கு 145 கிலோ மட்டுமே.<br /><br />நம்முடைய விவசாய உற்பத்தி ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், ஏக்கர் அளவில் விவசாய உற்பத்தி குறைந்து வரு கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் அறுவடையான தானி யங்கள் இப்போது 19 மூட்டை என்ற அளவி லேயே அறுவடை செய்யப் படுகின்றன.<br /><br />ரசாயன உரங்கள் உணவுப் பொருள்களில் கலப்பதால் உடல்நலப் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படு கின்றன. பெரியவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br /><br />மரபு ரீதியிலான விவசாய விதைகளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது மர பணு மாற்றப்பட்ட விதை களால் இப்போது அதற் கும் பிரச்சினை வந்து விட்டது.<br /><br />மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விளை பொருள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட் டுள்ளன. இந்த விதை களால் பல்லுயிர்ப் பெருக் கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.<br /><br />ஒரு பக்கம் மண் வளம், இன்னொரு பக்கம் மண் நலம் என இந்த இரண் டையும் நாம் காக்க வேண்டும். மண் நலத் துடன் இருக்க இயற்கை விவசாயம் நீடித்த பலன் தருமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.<br /><br />இலையானது பழுத்த இலையாக மாறி சருகாக உதிரும்போது எருவாகிப் போகிறது.<br /><br />அதில் பயிரிடும்போது அதிக விளைச்சல் தருவ தோடு, மண் நலத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.<br />மண் புழுக்கள் வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. மண் புழுக்கள் உணவை உட்கொண்ட பிறகு, அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் அதன் கழி வில் வெளியேறுகின்றன. எனவே, அது நல்ல உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க் கிறது என்றார் அவர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/91852.html#ixzz3KAkf23kI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12363019337734581112014-11-26T16:44:25.323+05:302014-11-26T16:44:25.323+05:30இந்தி யாவைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்சினையை மற்றும...இந்தி யாவைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்சினையை மற்றும் அணு ஆயுதப் பிரச்சினையைத் தவிர வேறு எந்த ஒரு சிக்கலும் சர்வதேசஅளவில் சென்ற தில்லையாம். ஆனால் மொழி தொடர் பான ஒரு சாதாரண பிரச்சனை ஜி-20 மாநாடு வரை சென்று பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாம். ஆகையால் மோடியும் இவர்மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். இவரை உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்றினால் தேர்தல் நேரத்தில் பிரச்சனை வந்துவிடும் என்பதால் டிசம்பர் டில்லி தேர்தலில் இவரை மாநில பாஜகவிற்குள் அனுப்ப முடிவு செய்துவிட்டாராம். சமீபத்தில் நடந்த இந்து மாநாட் டில் கூட இந்திய கல்வி தொடர்பான உறுதியான எந்த முடிவையும் எடுக்க இயலாத ஸ்மிருதி இராணி அந்தப்பதவிக்கு தகுதியில்லாதவர் என்று முக்கிய இந்துமத தலைவர்கள் நிதின் கட்கரியிடம் கூறினார்கள். இந்தத் தகவல் எப்படியோ ஸ்மிருதி இராணிக்கு தெரிந்துவிட்டதாம், இவ்வளவு பிரச்சினைக்கும் சனியின் பாதிப்புதான் காரணமாம்; சனியின் பாதிப்பு என்று அந்த நிர்வாகி ஆங் கில பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். மேலும் பாஜகவில் உள்ள மற் றொரு கேபினெட் பெண் அமைச்ச ருக்கு ஆரம்பம் முதலே இவர்மீது தீராத கோபமாம்! இன்றுவரை அந்த மூத்த பெண் கேபினெட் மந்திரி நேருக்கு நேர் முகம் கொடுத்து பேச வில்லையாம், இது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஸ்மிருதி இராணி கடந்த மாதம் முதலே பல்வேறு கோவில்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்று கொண் டிருக்கிறாராம்.<br /><br />சமீபத்தில் கூட தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் ஸ்மிருதி இராணி பெயரில் யாகம் ஒன்று நடந்ததாம், இதுநாள் வரை வெளியில் வராத இந்த சனிபிடித்த விவகாரம் ஞாயிற்றுக்கிழமை தனது ஆஸ்தான ஜோதிடரைச் சந்தித்ததும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆனால் இது குறித்து ஸ்மிருதி இராணி கவலைப்படவில்லை. ஜோதி டருடன் இருந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்த பிறகு சில செய்தித் தொலைக்காட்சிகளை அழைத்து என்னுடைய சொந்த விவகாரங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? உங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக என்னை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எனது நம்பிக்கை நான் கடைப்பிடிக்கிறேன் இதனால் எனது பணியில் எதுவும் பாதிப்பு வரவில்லை. இனிமேல் இது போன்று எனது தனிப்பட்ட வாழ்க் கையைப் படம்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91838.html#ixzz3KAjmwk9K<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14476072163050134882014-11-26T16:44:18.706+05:302014-11-26T16:44:18.706+05:30இந்தி யாவைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்சினையை மற்றும...இந்தி யாவைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்சினையை மற்றும் அணு ஆயுதப் பிரச்சினையைத் தவிர வேறு எந்த ஒரு சிக்கலும் சர்வதேசஅளவில் சென்ற தில்லையாம். ஆனால் மொழி தொடர் பான ஒரு சாதாரண பிரச்சனை ஜி-20 மாநாடு வரை சென்று பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாம். ஆகையால் மோடியும் இவர்மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். இவரை உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்றினால் தேர்தல் நேரத்தில் பிரச்சனை வந்துவிடும் என்பதால் டிசம்பர் டில்லி தேர்தலில் இவரை மாநில பாஜகவிற்குள் அனுப்ப முடிவு செய்துவிட்டாராம். சமீபத்தில் நடந்த இந்து மாநாட் டில் கூட இந்திய கல்வி தொடர்பான உறுதியான எந்த முடிவையும் எடுக்க இயலாத ஸ்மிருதி இராணி அந்தப்பதவிக்கு தகுதியில்லாதவர் என்று முக்கிய இந்துமத தலைவர்கள் நிதின் கட்கரியிடம் கூறினார்கள். இந்தத் தகவல் எப்படியோ ஸ்மிருதி இராணிக்கு தெரிந்துவிட்டதாம், இவ்வளவு பிரச்சினைக்கும் சனியின் பாதிப்புதான் காரணமாம்; சனியின் பாதிப்பு என்று அந்த நிர்வாகி ஆங் கில பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். மேலும் பாஜகவில் உள்ள மற் றொரு கேபினெட் பெண் அமைச்ச ருக்கு ஆரம்பம் முதலே இவர்மீது தீராத கோபமாம்! இன்றுவரை அந்த மூத்த பெண் கேபினெட் மந்திரி நேருக்கு நேர் முகம் கொடுத்து பேச வில்லையாம், இது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஸ்மிருதி இராணி கடந்த மாதம் முதலே பல்வேறு கோவில்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்று கொண் டிருக்கிறாராம்.<br /><br />சமீபத்தில் கூட தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் ஸ்மிருதி இராணி பெயரில் யாகம் ஒன்று நடந்ததாம், இதுநாள் வரை வெளியில் வராத இந்த சனிபிடித்த விவகாரம் ஞாயிற்றுக்கிழமை தனது ஆஸ்தான ஜோதிடரைச் சந்தித்ததும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆனால் இது குறித்து ஸ்மிருதி இராணி கவலைப்படவில்லை. ஜோதி டருடன் இருந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்த பிறகு சில செய்தித் தொலைக்காட்சிகளை அழைத்து என்னுடைய சொந்த விவகாரங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? உங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக என்னை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எனது நம்பிக்கை நான் கடைப்பிடிக்கிறேன் இதனால் எனது பணியில் எதுவும் பாதிப்பு வரவில்லை. இனிமேல் இது போன்று எனது தனிப்பட்ட வாழ்க் கையைப் படம்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91838.html#ixzz3KAjmwk9K<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36560641778932567612014-11-26T16:44:12.581+05:302014-11-26T16:44:12.581+05:30சனி(?) பிடித்து ஆட்டுகிறதாம்! மனித வள மேம்பாட்டுத்...சனி(?) பிடித்து ஆட்டுகிறதாம்! மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் யாகமாம்!<br /><br />மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஞாயிறன்று அவரது ஆஸ்தான ஜோதிடரைச் சந்தித்து எதிர்காலம் பற்றிக் கேட்டவிவகாரம் பத்திரிகைகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஸ்மிருதி இராணி லோதிகார்டனில் உள்ள தனது வீட்டில் மிகப்பெரிய யாகம் ஒன்றை கடந்த இரண்டு நாட் களாக நடத்திக்கொண்டு இருக் கிறாராம். ஸ்மிருதி இராணி பிறந்த தேதி 23 மார்ச் 1976. இந்த தேதியில் பிறந்தவர் களுக்கு 2015 வரை அஸ்டமத்தில் சனி பிடித்து ஆட்டுமாம்! இவரது ராசிக்கு மிகவும் எளிதில் உயர் பதவியை அடைந்துவிடுவாராம்.<br /><br />ஆனால் இவர் உயர்பதவிக்குச் சென்றதும் சனியின் பார்வை உக்கிரமாகுமாம், அதுதான் தற்போது இவருக்கு நடந்துகொண்டு இருக் கிறதாம்; இவரது ராசியான தனுசுக்கு தற்போது சனி மிகவும் உச்சத்தில் இருக்கிறதாம். ஆகையால்தான் கடந்த மாதம் வரை மிகவும்எளிதாக கேபினெட் பதவிவரை வந்த ஸ்மிருதி இராணிக்கு திடீரென சிக்கல் துவங்கியுள்ளதாம். இந்த சனியின் காரணமாக இவரது நற்பெயருக்குக் களங்கம் வரப்போகிறதாம்.<br /><br />அது மட்டுமல்லாமல் பதவிக்கும் ஆபத்தும் வரப்போகிறதாம். தற்போது கேபினெட் அமைச்சர் களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வீடு அவருக்கு ராசியில்லாத எண்ணில் அமைந்துள்ளதாம், ஆகையால் அவர் அதே பகுதியில் உள்ள சாதாரண வீட்டில் குடியேறப்போகிறாராம், இதற்காக அவர் தனது குடும்பத்தை கடந்த வாரமே புதுவீட்டிற்கு அனுப்பிவிட்டாராம். கேபினெட் அமைச்சருக்கு என்று ஒதுக்கப்பட்ட வீட்டை விட்டு பதவியில் இருக்கும் ஒருவர் தகுந்த காரணங்கள் இன்றி வெளியேறக்கூடாது. ஆகையால் இவர் முக்கிய சந்திப்பு தொடர்பான அலுவல் பணிமட்டும் நடக்கிறதாம், மேலும்பதவி நீடிக்க இதே வீட்டில் சிறப்பு யாகங்கள், பூசைகள் செய்து வருகிறாராம்.<br /><br />கடந்த வெள்ளிக்கிழமை யாகம் செய்து இரும்பு மற்றும் எண்ணெய் யாகம் நடத்திய பார்ப்பனர்களுக்கு கொடையாக அள்ளி வழங்கியுள்ளா ராம். பெயர்சொல்லவிரும்பாத அவரது வீட்டை நிர்வாகிக்கும் நிர்வாகிகளில் ஒருவர் கூறியதாவது மேடத்திற்கு தற்போது சனி மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் படி ஜெர்மனியை நீக்கிவிட்டு அங்கு சமஸ்கிருதம் கொண்டுவரும் நடை முறையை அவசரத்தில் செய்தது கூட சனியின் பார்வைபட்டதால் தானாம், அவர் இம்முடிவை எடுக்கும் முன்பு அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க வில்லையாம், ஆகையால் சர்வதேசத் தளவில் இந்த மொழிப்பிரச்சினை பற்றிக்கொண்டு விட்டதாம்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61376704961765168682014-11-26T16:42:29.489+05:302014-11-26T16:42:29.489+05:30இன்றைய ஆன்மிகம்?
கூலி
கடமையைச் செய், பலனை எதிர்ப...இன்றைய ஆன்மிகம்?<br /><br />கூலி<br /><br />கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - கீதை கூறுவது சரிதான். கிருஷ்ணரே அர்ஜுன னுக்குத் தேர் ஓட்டினார். அதற்குச் சம்பளம் எதிர் பார்த்தாரா?<br />- விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். இதழ்)<br /><br />இவர்களின் நம்பிக்கைப் படி கிருஷ்ணன் கடவுள்தானே! அவன் எப்படி கூலியை எதிர் பார்ப்பான்? மனிதன் அப்படி இல்லையே, கட மையைச் செய்து விட்டு பலனை எதிர்பார்க்கா விட்டால் அவன் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தூங்குமே!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91846.html#ixzz3KAjN6JyX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89851934294711604922014-11-26T16:42:06.409+05:302014-11-26T16:42:06.409+05:30
அவற்றை நினைவுபடுத்துவதாகவே அசோக் சிங்கால் மற்றும்...<br />அவற்றை நினைவுபடுத்துவதாகவே அசோக் சிங்கால் மற்றும் மோகன் பகவத் ஆகி யோரின் பேச்சுகள் அமைந்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இப்போதைய மத்திய அரசு அனைவருக் குமான அரசு (Inclusive Government) என்று கூறி வரும் நிலையில்; பா.ஜ.க. வின் மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அமைப்புகள் இப்படிப் பேசியிருப்பது, மதச்சார் பின்மை(Secularism)யில் நம்பிக்கை கொண்டுள் ளோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.<br /><br />மேலும், ஆஸ்திரேலியா வில் நடந்த ஜி-20 மாநாட் டின்போது, பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படி மோடி அவர்களைக் கேட் டுக்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய இளை ஞர்கள் மற்ற மொழி களைக் கற்க வேண்டுமென் பதில் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும், இந்திய நிலைமை களுக்கு ஏற்ப இந்தப் பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்திருக் கிறார்.<br /><br />ஜெர்மன் மொழி தொடர்பாகப் பொதுநல வழக்கும் தொடரப்பட் டுள்ளது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்தது முறை யான நடவடிக்கைதான் என்று தெரிவித்திருப்பதும்; மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி சமஸ்கிருதம்தான் உண் மையில் தேசிய மொழி என்று பேசியிருப்பதும்; முரண்பாடாக உள்ளது. 24-.11.-2014 அன்று தி இந்து தமிழ் நாளேடு, சமஸ் கிருதமா, சமஸ்கிருத மய மாக்கலா? என்ற தலைப் பிட்டு வெளியிட்டுள்ள தலையங்கத்தில், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல், தொழில் நுட் பங்கள் போன்றவை மொழியைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்திகளாகி யிருக்கின்றன.<br /><br />இந்தத் துறைகளில் உலகமெல்லாம் ஆங்கி லத்தின் ஏகாதிபத் தியம் நிலவும் சூழலில், இந்திய மொழிகளை அந்தச் சவாலை எதிர்கொள்ளச் செய்வதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ஒரு பக்கம் உலக மயமாக் கலை ஆரத் தழுவிக் கொண்டே இன் னொரு பக்கம் வேத காலத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறது இந்த விசித்திரமான அரசு என்று தெரிவித்திருக்கும் கருத்து அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. இத்தகைய முரண்பாடுகள் ஒவ் வொன்றாக வெளிவந்து குன்றெனக் குவியும் முன்னர், அவ்வப் போது தெளிவுபடுத்தி, முரண் பாடுகளிலிருந்து விடு படுவது பிரதமர் மோடி அவர்களுக்கு நல்லது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91844.html#ixzz3KAjBlDwg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17950398159744735372014-11-26T16:42:01.030+05:302014-11-26T16:42:01.030+05:30
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டெல்லியி...<br />மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இந்திய மொழிகளின் முக் கியத் துவத்தைக் குறைத்து, மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச் சியை ஆதரிப்பது அரசியல் சாசனத் திற்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடி மைப்பட்டவர்களாக இருந்துவிட்டதால் நாம் இதைக் கண்டுகொள்ள வில்லை. ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருதம் அல் லது வேறு இந்திய மொழியைக் கொண்டு வருவது என்பது இந்தி யாவை முழுமையாக அடிமை மனநிலையிலி ருந்து நீக்கும் நடவடிக்கை யில் ஒன்றுதான் என்று குறிப்பிட்டிருக் கிறார். மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி, நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்ற கூட் டத்தில், சமஸ்கிருதம்தான் உண்மையில் தேசிய மொழியாகும் என்பதால், இந்தியாவில் அனைவருக்கு மான இணைப்பு மொழி யாக ஆங்கிலத்திற்கு மாற்றாக, சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவேண்டும். சமஸ்கிருதம் பிரபல மடையும் வரை - சாதாரண மக்களின் பேச்சு மொழி யாக வரும் வரை, நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். இதுவும் குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்ததே ஆகும் என்று பேசியிருக்கிறார். ஆர். எஸ்.எஸ். - சங் பரிவார் இயக்கத்தின் அஜெண்டா எனச் சொல்லப்படுவதே, இந்து ராஷ்டிரம், சமஸ் கிருதம், சரஸ்வதி உள்ளிட் டவை தான்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com