tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6482818556432467770..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: குருக்களின் புரட்டு - பெரியார் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78615286200596925292014-03-07T06:22:28.189+05:302014-03-07T06:22:28.189+05:30
மன்னிப்பா?
நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்...<br />மன்னிப்பா?<br /><br /><br />நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்து இருந்தால், மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என அண்மையில் முஸ்லீம் மக்களி டையே உரையாற்றிய பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். காலையில் பேசிய தனது பேச்சுக்கு, அன்று மாலையே விளக்க மும் அளித்தார். அதாவது, தனது மன் னிப்பு பற்றிய பேச்சு, குஜராத் கலவ ரத்தை ஒட்டி சொல்லப்படவில்லை என்றும், பொதுவாக சொன்னதாகவும் கூறினார். ராமன் அங்கே தான் பிறந் தான் எனக் கூறி, நானூறு ஆண்டுகால பாபர் மஜ்ஜித்தை இடித்துத் தரை மட்டம் ஆக்கிவிட்டு, அதன் தொடர்ச்சி யாக நாடு முழுவதும் அப்பாவி சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத் துகள் சூறையாடப்பட்டன.<br /><br />இத்தகைய கலவரத்தை பாஜகவும், சங் பரிவாரும் செய்தது தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? 2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைச் சாக்காக வைத்து, ஏறத்தாழ இரண்டா யிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற் கும், அந்த மாநிலத்தில் அவர்கள் வாழ்வதற்குப் பயந்து ஓடுவதற்கும், மோடி தலைமையிலான அரசு செய்த அரசு பயங்கரவாதம் தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? பிப்ரவரி 2007-இல் ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த சம்ஜாயுதா விரைவு ரயில், குண்டு வெடிப்புக் குள்ளாகி, நமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 68 பேர் பலி யானார்கள்.<br /><br />அந்த குண்டு வெடிப்புக்கு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனச் சொல்லப்பட்டு, அதில் இராணுவ அதிகாரி பிரசாந்த் சிரீகாந்த் புரோகித் ஈடுபட்டதை, சுவாமி அசீதானந்த் வாக்குமூலமும் அளித்தாரே; இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? செப்டம்பர் 2008-இல், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் எட்டு பேர் இறந்தனர். சாத்விக்கும், ராணுவ வீரர் புரோகித்திற்கும் இதில் தொடர்பு உண்டு என்று வழக்கு நடைபெறு கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆசியுடன் தான் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றதாக சுவாமி அசீதானந்த் பேட்டி அளித்து, அது அண்மையில் கேரவான் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே. இந்த கலவரங்கள் எல்லாம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? குற்றங்களுக்குத் தீர்வு தண் டனையா அல்லது மன்னிப்பா? மன் னிப்பு தருவதற்கு, இந்திய குற்றவியல் சட்டம் தேவாலயம் அல்ல, ராஜ்நாத் சிங். அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் கூட்டணியில் சேர்த்திட நீங்கள் மெனக்கெடும், கேப்டனுக்கு மன் னிப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜ்நாத்சிங்? அவர் காதில் விழுந்தால், உங்களை மன்னிக்கவே மாட்டார்.<br /><br />- - குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76478.html#ixzz2vEZVB8Gt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41544571059602870922014-03-07T06:20:09.695+05:302014-03-07T06:20:09.695+05:30
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும...<br />மனிதன்<br /><br /><br />பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும். - (விடுதலை, 9.6.1962)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76467.html#ixzz2vEYurI3C<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17970352723919477242014-03-07T06:19:03.519+05:302014-03-07T06:19:03.519+05:30ஜெயலலிதா கூட்டத்தில் எழுச்சியில்லை
தினமலர் பார்வ...<br />ஜெயலலிதா கூட்டத்தில் எழுச்சியில்லை<br /><br /><br />தினமலர் பார்வையில்....<br /><br />ஜெயலலிதா கூட்டத்தில் எழுச்சியில்லை<br /><br />கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், உடன்பாடு ஏற்படாததை அடுத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்படுவதற்கான, வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்திருந்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், இதுவரை, தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை.<br /><br />இந்த பிடிவாத நிலைக்கான பின்னணி குறித்து, ஆளுங்கட்சி வட்டாரத்தில், கூறப்படும் தகவல்கள் வருமாறு: பெரும் எதிர்பார்ப்போடு, பிரசாரத்திற்கு கிளம்பிய ஜெயலலிதாவிற்கு, பொது மக்களிடம் போதிய வரவேற்பும், எழுச்சியும் கிடைக்கவில்லை. 2011 சட்டசபை தேர்தலின் போது, தனக்கு, மக்கள் மத்தியில், மிகப்பெரிய எழுச்சி அலை உருவாகி இருந்ததை, ஜெயலலிதா, அனுபவ பூர்வமாக உணர்ந்தார்.<br /><br />தற்போது, அதே போன்ற எழுச்சி, மக்கள் மத்தியில் இல்லாததை கண்கூடாக பார்த்த பிறகு, அவரது நிலையிலும், பேச்சிலும் மாற்றம் தென்படுகிறது. பிராகசாரத்தின் எந்த இடத்திலும்,' என்னை பிரதமராக்க ஆதரியுங்கள்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. '2014இல் அமைய இருக்கும், மத்திய அரசில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் என்ற அளவில் தான் பேசி வருகிறார். முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறியுள்ளதாக, இதைக் கருதலாம். மேலும், தற்போதைய பிரச்சாரத்தில், காங்கிரசையும், தி.மு.க.,வையும் விடாமல் விமர்சிக்கும் ஜெயலலிதா, மறந்தும் பா.ஜ., வை பற்றியோ, அதன் பிரதமர் வேட் பாளர் மோடியைப் பற்றியோ, விமர்சிப்பதில்லை. எனவே, அ.தி.மு.க., அணிக்கு, பா.ஜ., வரும் நிலை ஏற்படலாம். இவ்வாறு, அந்த அ.தி.மு.க.,வின் இந்த போக்கு குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியை முடிவு செய்வதில், தமிழகத்தில், மிகப் பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், தே.மு.தி.க., தான். அந்த கட்சியுடன் நடத்திய, மூன்று மாத பேச்சில், இன்னும் இழுபறி நிலை தான் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க., அணியில் இருந்து, கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பது, எங்களுக்கு சாதகமானது தான். தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, முதலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி சேருவதற்கான முயற்சி தான் மேற்கொள் ளப்பட்டது என்பதை, அனைவரும் அறிவர். அந்த முயற்சிக்கு, மீண்டும் புத்துயிர் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் கூறின. (தினமலர், 6.3.2014)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76466.html#ixzz2vEYdbHLy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78539554259270084562014-03-06T07:11:24.647+05:302014-03-06T07:11:24.647+05:30இதே ஜாதிதான், இந்திய இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன்...இதே ஜாதிதான், இந்திய இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்க ளைக் கேவலப்படுத்தியது. உத்திரப்பிரதேசத்தில் சம்பூர்ணானந்த் சிலையைத் திறக்கக் கூடாது என்றார்கள். திறந்தவுடன் கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள். உத்தரவு ஒன்று இவர் பிறப் பித்தால், முப்படைகளும் குறிப்பிட்ட இடத்தில், உரிய நேரத்தில் போய் நிற்கும். அவ்வளவு வலிமை வாய்ந்த இராணுவ அமைச்சர், ஜாதி யின் முன் சங்கடப்பட்டு நின் றார்.<br /><br />அதே அமைச்சர் தமிழ கம் வந்தபோது மகிழ்ந்து போனார் கள். பெரியார் குறித்துப் பெருமையாய் பேசினார். தமிழ்நாட்டில் மட்டுமா பெரியார் ஜாதியை விரட்டினார்? கேரளா போனார். வைக்கம் மக்களுக் கும் உரிமைப் பெற்றுக் கொடுத்தார். நீங்கள் ஏன் அங்கு போக வேண்டும்? என வர்ணாஸ்ரம எண்ணம் கொண்ட மகாத்மா கேட் டார்.<br /><br />தெருவில் நாய் போக லாம், பன்றி போகலாம், கழுதை போகலாம், மனிதன் மட்டும் போகக் கூடாதா? நாயும், பன்றியும், கழுதை யும் சத்யாகிரகம் செய்தா அந்த உரிமைகளைப் பெற்றது? எனப் பெரியார் கேட்டார்.<br /><br />புதியதோர் உலகம் செய்யுங்கள்!<br /><br />பாதிரியார் பதவிக்கும், முல்லா பதவிக்கும் அந்தந்த மதங்களில் தடைகள் ஏது மில்லை. ஆனால் இந்து மதத்தில் அர்ச்சகருக்கு அந்த வாய்ப்பு உண்டா? வேதம் படிக்கும் எவரும் கர்ப்பக் கிரகம் போய்விட முடியுமா? யாரும் செவ்வாய்க் கிரகம் போகலாம்! கர்ப்பக்கிரகம் போக முடியுமா? ஜாதி நோய் எவ்வளவு கடுமையானது, கொடுமையானது என்பதை மாணவர்கள் அறிய வேண் டும்.<br /><br />அதேநேரம் ஒரு விபத் தில் ஒரு அய்யங்கார் காயம் பட்டார் என வைத்துக் கொள் வோம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இன்ன வகை இரத்தம் வேண்டும் எனக் கேட்பார்களே தவிர, அய்யங்கார் இரத்தமா தேடு வார்கள்? ஒரு ஆதிதிராவிடர் இரத்தம் கிடைத்தாலும், அதை வைத்து உயிரைக் காப்பாற்றுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஜாதிகளால் தாங்கள் வசதி பெற்றுக் கொண்டு, பிறரைப் பிளவு படுத்துவது ஆரியத் தன்மை.<br /><br />இந்த ஜாதி, பாதியில் வந்தது என்றாலும், மூளை யில் அணிவிக்கப்பட்ட விலங் காக இருக்கிறது. இந்த விலங்கை உடைத்தெறியும் வலிமை, ஈரோட்டுச் சம்மட் டிக்கு மட்டுமே உண்டு என் பதை மாணவர்கள் உணர்ந்து, புதியதோர் உலகம் செய்ய வேண்டும்! எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் கேட்டுக் கொண்டார்.<br /><br />நிகழ்ச்சி<br /><br />அய்க்கப், அடிப்படைக் கல்வித்துறை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், மாணவர்கள் குழு ஆகியோர் ஏற்பாட்டில், மாநில அள விலான இளைஞர்கள் மாநாடு, ஜோசப் கல்லூரியின் தேசிய இளைஞர் கட்டடத் தில், 4.3.2014 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.<br /><br />தொடர்ந்து கி.வீரமணி அவர்கள், கல்லூரி யின் செயலர் மற்றும் முதல் வர் ஆகியோர் தமிழ்நாட்டின் கல்வி நிலைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கல்லூரிக் குறிப்பேட் டில் ஆசிரியர் தம் கருத்து களைப் பதிவு செய்தார்.<br /><br />தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் விமல் ஜெரால்டு வரவேற்பு வழங்கி, சிறப்பு விருந்தினர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களையும் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். பின்னர் கல்லூரியின் செயலர் எஸ். செபஸ்தியான், முதல்வர் எப்.ஆண்ட்ரே, துணை முதல்வர் இராஜன் ஆகியோர் பேசினர்.<br /><br />நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் அவர்களுக்கு, கல் லூரிச் செயலர் பயனாடை யும், முதல்வர் அவர்கள் நினைவுப் பரிசையும் வழங் கினர். தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் ஏராளமான பெரியார் நூல்களைக் கல் லூரி நூலகத்திற்கு நன் கொடையாக வழங்கினார்.<br /><br />நிகழ்ச்சியில் பல்வேறு கல் லூரிகளின் துறைத் தலைவர் கள், பேராசிரியர்கள், மாண வர்கள் பங்கேற்றனர். மேலும் திருச்சி பெரியார் கல்வி நிறு வனங்களின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ப.சுப்பிர மணியம், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் மு.சேகர், செயலாளர் கணேசன், கழக மண்டலத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ்,<br /><br />இலால்குடி மாவட்டச் செயலாளர் ப. ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் தி.மகாலிங்கம், வழக்குரைஞர் பூவை.புலி கேசி, சின்னப்பன், செந் தமிழினியன், பெல் இளங் கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.<br /><br />தொகுப்பு: வி.சி.வில்வம்<br /><br />Read more: http://viduthalai.in/page-4/76408.html#ixzz2v8v75Qrdதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10785055342249186872014-03-06T07:11:16.938+05:302014-03-06T07:11:16.938+05:30இறந்த பிறகும் ஜாதி!
இன்றைக்கு இளைஞர் கள் திரளாக இ...இறந்த பிறகும் ஜாதி!<br /><br />இன்றைக்கு இளைஞர் கள் திரளாக இருக்கின்றீர் கள். உங்கள் சக்தி சிறப்பா கப் பயன் தர வேண்டும். இளைஞர்களுக்கு அறிவுரை எனத் திருச்சியில் பெரியார் பேசிய பேச்சுப் புத்தகமாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜாதிக் கொடுமைகள் எப்படி இருந்தன என்பதை நீங்கள் அறிந்தால், கூடவே பெரி யார் ஏன் தேவைப்படுகிறார் என்பதையும் அறிவீர்கள். நாடுகள் அனைத்திலும் பணக்காரர், ஏழை இருக்கி றார்கள்.<br /><br />அது மாறக்கூடியது. இந்தியாவில் மட்டுமே ஜாதி இருக்கிறது. அது மாறா தது. வாழும்போது மட்டு மல்ல, வாழ்ந்த பிறகும் மாறவே மாறாது. மனிதருக் குத் துன்பங்கள் இறப்பு வரை இருக்கும். அதன் பிறகு இருக்காது. ஆனால் மனிதன் இறந்த பிறகும், ஜாதி பிரச்சினை செய்கிறது. சுடுகாட்டில் ஜாதி கேட்கி றார்கள்? பிணத்தை மாற் றிப் புதைத்தால் அது எழுந்தா வந்துவிடும் எனக் கேட் டார் பெரியார்.<br /><br />நமக்குத் தெரிந்ததும், தெரியாததும்!<br /><br />சட்டத்தில் ஜாதி எனும் எழுத்து 18 இடத்தில் இருக்கிறது. ஆனால் தீண் டாமை ஒழிக்கப்பட்டது என்கிறார்கள். ஒழிக்கப் பட வேண்டியது ஜாதியே எனப் பெரியார் கூறினார். தொட்டால் தீட்டு என்கி றார்கள். மின்சாரத்தைத் தொட்டால் ஆபத்து வரும், நமக்கும் தெரியும். மனித னைத் தொட்டால் என்ன ஆபத்து வரும்? நமக்குத் தெரியவில்லை.<br /><br />திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (4.3.2014)<br /><br />'மனிதம்' என்ற சொல்லுக்கு நேரெதிர் சொல் இந்த ஜாதி! ஜாதிகள் குறித்துப் பெரியார் நிறைய கேள்விகள் கேட்டார். ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் பலரும் கிறித்துவம், இசு லாம் போனார்கள்.<br /><br />எப்ப டிப் போகலாம் எனக் கேட் டார்கள்? போகாமல் என்ன செய்வார்கள்? ஒரே மதத் தில் இருந்து கொண்டு பழக மறுத்தாய், தொட மறுத்தாய், அடிமை என்றாய், வேசி மகன் என்றாய்... இவ்வள வுக்குப் பிறகும் யார் இருப் பார்? இறுதியாகக் கிறித்த வனை அந்நியன் என்றார் கள். எங்கள் கைகளைக் குலுக்கியும், எங்களோடு பழகியும் வரும் அவர்களா எங்கள் அந்நியர்? எனத் திருப்பிக் கேட்டார். ஜாதி இந்த மண்ணில் அவ்வளவு கொடுமைகள் செய்திருக் கிறது.<br /><br />சத்யாகிரகம் செய்த நாய், பன்றி, கழுதை!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76718443100630743962014-03-06T07:10:53.326+05:302014-03-06T07:10:53.326+05:30நீங்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும்! திருச்சி ஜ...நீங்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும்! திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்களிடம் தமிழர் தலைவர் வேண்டுகோள்!<br /><br /><br />திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களிடையே தமிழர் தலைவர் உரையாற்றினார்.<br /><br />திருச்சி, மார்ச் 5- மாண வர்கள் புதியதோர் உலகம் செய்ய வேண்டும் என திருச்சி ஜோசப் கல்லூரி மாண வர்களிடம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அய்க்கப், அடிப்ப டைக் கல்வித்துறை, இளை ஞர் செஞ்சிலுவைச் சங்கம், மாணவர்கள் குழு ஆகியோர் ஏற்பாட்டில், மாநில அள விலான இளைஞர்கள் மாநாடு, ஜோசப் கல்லூரி யின் தேசிய இளைஞர் கட் டடத்தில், 4.3.2014 அன்று மாலை 5 மணிக்கு நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சமத்துவச் சமு தாயத்திற்கான பெரியாரின் கருத்துகள் எனும் தலைப் பில் தமிழர் தலைவர் பேசிய தாவது:<br /><br />பெரியாரின் மாணவர்!<br /><br />ஜோசப் கல்லூரியில் பேசு வதில் மகிழ்ச்சி அடைகி றேன். காரணம், கல்வி அறிவு இல்லாத சமூகத்தை மாற்றியதில் இக்கல்லூரிக் குப் பெரும் பங்குண்டு. இதே கல்லூரியின் பொங்கல் விழாவில் (7.1.1981) புதிய தோர் உலகு செய்வோம் எனும் தலைப்பில் நான் பேசியதையும் இங்கே நினைவு கூர்கிறேன். நல்ல சிந்தனைகளுக்கு வகுப் பறைகள் மட்டும் போதாது என, இதுபோன்ற நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்துள்ளார் கள்.<br /><br />திருச்சி ஜோசப் கல்லூரி நூலகத்திற்கு இயக்க நூல்களை தமிழர் தலைவர் வழங்கினார்<br /><br />என்னை அறிமுகம் செய்யும் போது, பல செய்தி கள் கூறப்பட்டாலும், பெரி யாரின் மாணவர் எனச் சொன்னதில் மகிழ்கிறேன். காரணம் அதைவிட வேறொரு சிறப்பு இருக்க முடியாது. அதே நேரத்தில் கல்லூரி முதல்வர் பேசும்போது, என்னை வாழும் பெரியார் என்று கூறினார்கள். முதல் வர் அவர்கள் என்னை மன் னிக்க வேண்டும். காரணம் பணிவோடு அதை நான் மறுக்கிறேன். ஏனெனில் பெரியார் ஒருவர் தான் பெரி யார்! எந்நாளும் பெரியாரி டம் கற்கும் மாணவராகவே நான் இருக்கிறேன்.<br /><br />வரலாற்றுப் பதிவு!<br /><br />திருச்சி ஜோசப் கல்லூரி என்பது மிகப் பெரிய கல்வி நிலையமாகும். ஏராளமான கிராமங்களில் இருந்து இரு பால் செல்வங்கள் பயில் கிறீர்கள். நானும் எளிய குடும்பத்திலிருந்து வந்த வன்தான். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எங் களுக்குக் கல்வி தந்தது. ஆனால் உங்கள் கல்லூரி அதற்கும் முந்தைய சிறப்பு டையது. இந்தக் கல்லூரிக்கு நான் சிறப்பு விருந்தினராக வரவில்லை. மாறாக எனது பழைய பள்ளிக்குச் சென்ற தைப் போல உணர்கிறேன்.<br /><br />நான் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய இசுலாமியப் பள்ளியிலும், 6 முதல் 10 முடிய கிறித்துவப் பள்ளியிலும் பயின்றவன். கிறித்துவம் இந்த நாட்டிற்கு வழங்கிய கல்வித் தொண்டு சிறந்த வரலாற்றுப் பதிவு மற்றும் நன்றிக்குரியது. நான் 11 வயதில் பெரியார் கொள்கை ஏற்றேன். சனி, ஞாயிறுகளில் பிரச்சாரம் செய்வேன்.<br /><br />திங்கள்கிழமை பள்ளிக்கு வரும்போது, எங் கள் பள்ளியின் தலைமை யாசிரியர் (அருட்தந்தை) இந்த வாரம் எந்த ஊரில் பிரச்சாரம் செய்தாய்? எனக் கேட்பார். வேறு பள்ளியாக இருந்தால் இந்தக் கருத்துச் சுதந்திரம் இருந்திருக்காது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15627478673010208962014-03-06T07:09:24.064+05:302014-03-06T07:09:24.064+05:30
மோடி புளுகு-7
- குடந்தை கருணா
குஜராத்தில் அனைத...<br />மோடி புளுகு-7<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />குஜராத்தில் அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி (INCLUSIVE GROWTH) இருப்பது போலவும், அதன் அனுபவம் மூலம் நாட்டிற்கே அந்த அனுபவத்தை தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், மோடி விளம்பரம் தருகிறாரே; அது உண்மையா? கடந்த பத்து ஆண்டுகளில், குஜ ராத்தில், நகர்ப்புற மக்கள் தான், அர சின் திட்டங்களால் பயன் அடைந் துள்ளனர். கிராமப்புற மக்கள் வறு மையில் தான் உள்ளனர். அதனால் தான், மனித வளர்ச்சிக் குறியீட்டில், குஜராத் 11 ஆவது நிலையில் பின் தங்கி உள்ளது. 2011 ஆம் கணக் கெடுப்பின்படி, குஜராத் கிராமங் களில், பதினோரு லட்சம் வீடுகளில், ஒன்பது லட்சம் வீடுகளுக்கு இன்ன மும் மின் வசதி இல்லை; கல்வி வசதியிலும், கிராமங்கள் பின்னோக் கியே இருக்கின்றன.<br /><br />இதில், தலித்துகளும், ஆதிவாசி களுமே, அதிகம் பாதிக்கப்பட்டுள் ளனர். குஜராத்தில் பழங்குடி மக் களில் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 65 விழுக்காடு குழந் தைகள் எடை குறைந்துள்ளனர்.<br /><br />இந்திய நாடு முழுமைக்குமான விகிதம் 54.5 விழுக்காடு என்றால், குஜராத்தில் 65 விழுக்காடு. அதே போன்று, பழங்குடி இன குழந்தை கள் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். நூறு நாள் வேலை திட்டத்தில், இந்தியா முழு மைக்கும், 23 சதவிகிதம் தலித்துகள் பயன் அடைகின்றனர் என்றால், குஜ ராத்தில், வெறும் 8 விழுக்காடுதான், தலித்துகள் பங்கேற்க முடிகிறது. அதனால் தான், மோடியின் வெற்றி, நகர்ப்புறங்களில் அதிகமாகவும் கிரா மங்களில் குறைவாகவும் உள்ளது.<br /><br />குஜராத்தின் முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்குமான முன்னேற் றம் என்பதாக இல்லாத ஒரு விசித்திர வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி, கிரா மங்களைச் சென்றடையவில்லை என்பதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் புறக்கணிக்கக் கூடிய வளர்ச்சி என்பதும் தான், அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டும் உண்மை என்பதை, பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளரும், லண்டனில் உள்ள இந்தியக்கழகத்தில், இந்திய அரசியல், சமூகத்துறையின் பேராசி ரியருமான கிறிஸ்டப் ஜாப்ரிலெட் ஆதாரங்களுடன் கட்டுரை வடித்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என முந் தைய பாஜக ஆட்சியில் சொல்லப் பட்டதற்கும், தற்போது குஜராத் மிளிர்கிறது என மோடி புளுகுவதற் கும் பெரிய வேறுபாடு இருப்ப தாகத் தெரியவில்லை.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76443.html#ixzz2v8unX2jv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18831255698387658412014-03-06T07:08:33.704+05:302014-03-06T07:08:33.704+05:30
மத்திய ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க. என்ன செய்தது?...<br />மத்திய ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க. என்ன செய்தது?<br /><br /><br /><br />காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தி.மு.க.வை நோக்கி சில வினாக்களை முன்வைத்துள்ளார்.<br /><br />மத்திய அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்ததே - தமிழ்நாட்டு மக்களுக்கு எதைச் சாதித்துக் கொடுத்தார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ளார்.<br /><br />எதிர்க்கட்சிகளின்மீது குற்றப்பத்திரிகை படிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அதனைக் குற்றமாகவும் கருத முடியாது.<br /><br />அதேநேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.<br /><br />குறிப்பாக தி.மு.க. மத்தியில் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், 150 ஆண்டுகளுக்குமேலாக எதிர்பார்க்கப்பட்ட அரிய திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.<br /><br />இத்திட்டத்திற்கான செலவு ரூ.2427 கோடி. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று செல்வி ஜெய லலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.<br /><br />பி.ஜே.பி.கூட ராமன் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, இந்தத் திட்டமே கூடாது என்று அடம்பிடிக்கிறார்! உச்ச நீதிமன்றத்திலும் வழக்கைத் தொடுத்துள்ளார். இவ் வளவுக்கும் பல தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதும் இதே ஜெயலலிதா அம்மையார்தான் - அ.இ.அ.தி.மு.க.தான்!<br /><br />இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் அரசியல் பலன் தி.மு.க.விற்குச் சென்றுவிடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது.<br /><br />மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்பும் முதல மைச்சர் தமிழ்நாட்டுக்கு - தி.மு.க. முயற்சியால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையே செயல்படுத்தத் தடையாக இருக்கிறார் என்பதுதானே உண்மை.<br /><br />இந்தக் கேள்வியை எழுப்பும்முன்பாக, சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒன்று அவர் கண் முன்னால் நின்று மிரட்டியே இருக்கும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்கவே முடியாது.<br /><br />இன்னொரு முக்கிய திட்டம் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம்வரையிலான பறக்கும் பாலம் அமைப்பு என்பது.<br /><br />19 கிலோ மீட்டர் நீளம் உடைய இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்துத் திசையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகக் கன ரக வாகனங் களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்ததாக இருக்கும். சென்னை துறைமுகத்திலிருந்து பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். போக்குவரத்துத் துறை மேம்பாட்டால், பொருளாதார வளர்ச்சியும் அதனூடே பயணம் செய்கிறதென்று பொருள்.<br /><br />1500 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இதுவரை 900 கோடி ரூபாய் செல வழிக்கவும்பட்டுள்ளது.<br /><br />இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத் தையும் செயல்படுத்தக்கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இடைக்காலத் தடையும் பெற்றார்.<br /><br />ஒப்பந்தக்காரரோ நான் செலவழித்துள்ள 900 கோடி ரூபாயை நட்ட ஈடாகத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டுள்ளார்.<br /><br />திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் முதல்வர்.<br /><br />முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ் நாட்டுக்குத் திட்டங்கள் வருவதை இருகரம் கூப்பி வரவேற்கவேண்டுமே தவிர, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை முடக்கலாமா? இதனைத்தானே தமிழக முதலமைச்சர் செய்துகொண்டு இருக்கிறார்.<br /><br />நாட்டு நலன் முக்கியமல்ல - அரசியல் இலாபம் இன்னொரு கட்சிக்குப் போய்விடக் கூடாது என்று நினைத்துச் செயல்படுவதற்கா ஒரு முதலமைச்சர்?<br /><br />தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டதற்காக ஒவ் வொன்றையும் உருக்குலைப்பு வேலையில் ஒரு முதலமைச்சர் ஈடுபடலாமா?<br /><br />புதிய சட்டமன்றக் கட்டடமாக இருந்தாலும் சரி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமாக இருந்தாலும் சரி, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டமாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்பதற்காக, அவற்றை உருக்குலைக்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நினைத்தால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது அரசியலில் பாலபாடமாகும்.<br /><br />அதிகாரத்தில் இருக்கும்பொழுது, பல உண்மைகள் கண்களை மறைக்கலாம் - பாடம் படித்ததற்குப் பிறகுதான் காலங்கடந்து ஞானோதயம் பிறக்கும் என்பதைத் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76433.html#ixzz2v8uZaMS2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15121642851894251882014-03-06T07:07:47.789+05:302014-03-06T07:07:47.789+05:30
ஒப்பற்ற ஆயுதம்
உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் ...<br />ஒப்பற்ற ஆயுதம்<br /><br /><br />உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76429.html#ixzz2v8u0Parv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26366921113008855872014-03-06T07:05:42.609+05:302014-03-06T07:05:42.609+05:30
அன்று அரசு விட்ட பிழையை இன்று அனுபவித்துக் கொண்டி...<br />அன்று அரசு விட்ட பிழையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புலம் பெயர் தமிழர்களால் நாட்டுக்கு ஆபத் தென்று புலம்பிக் கொண்டிருக்கிறது.<br /><br />வெளிநாடுகளிலிருந்து இலங்கைக் குத் தமிழர்கள் அனுப்புகின்ற பணம் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.<br /><br />அது இலங்கையின் பொருளாதாரத் தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்து கிறது. இப்போதும்கூட அரசு புலம் பெயர் தமிழர்களை இலங்கையில் முத லீடு செய்யத்தூண்டும் கோரிக்கையை அடிக்கடி வெளிப்படுத்தி வருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பொரு ளாதார ஆற்றல்களைப் புரிந்துகொள்ள லாம்.<br /><br />போய்த் தொலைந்தால் போது மென்று எந்த மக்களை அன்றிருந்த அரசு மகிழ்ச்சியுடன் நாட்டை விட்டுத் துரத் தியதோ அதே தமிழர்கள்தாம் இன்று அரசுக்குத் தலையிடியாக மாறியிருக் கிறார்கள்.<br /><br />அரசின் இராஜதந்திரத்துக்குச் சவால் விட்டுக் கொண்டு வெளிநாடுகளில் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் வடக்கு, கிழக்குத் தமிழர்களும் தனக்குப் பிரச்சி னையாக இருப்பதாக அரசு எண்ணுகிறது.<br />அரசியல் ரீதியாக அவர்கள் செல்வாக் குப் பெற்று விடாதபடி பார்த்துக்கொள் வதில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடிமை அரசியல் செய்யச் சம்மதித்தால் மட்டுமே தமிழர் கள் வாழலாம் என்ற மனோ நிலையைத் தோற்றுவிப்பதற்கு முயன்று வருகிறது.<br /><br />ஆனால், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் அரசு என்ன துன்பம் செய்தாலும் அதனை அசட்டை செய்து தமது கொள்கையில் விடாப் பிடியாக நிற்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு தங்கள் ஆதங்கத்தை அரசுக்கும், உலகுக்கும் முன்வைத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்று சிங்கள மக்களிடம் திரித்துக் கூறியே அரசு காலத்தை ஓட்டி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது தனிநாடல்ல, தனியான ஆட்சி அலகே என்பது அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந் தும் அவ்வாறு ஒன்று உருவாகி விடக் கூடாது என்பதற்காக பிழையான பரப்பு ரைகளைத் தென்னிலங்கையில் மேற் கொண்டு நிலைமையை மேலும் சிக்க லாக்கித் தமிழர்களையும், சிங்களர்களை யும் பிரித்து ஒருவர்மேல் ஒருவர் சந்தே கம் கொள்ளும்படியான ஆட்சியை செய்துவருகிறது. தலைவர் பொன்னம் பலம் சமபலப் பிரதிநிதித்துவம் கேட்ட போது, பத்து லட்சம் தமிழர்களின் பலத்தைக் குறைக்கும் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. தந்தை செல்வா இணைப்பாட்சி கேட்டபோது இனக்கலவரங்களை நடத்தி அதில் மகிழ்ச்சி கொண்டது அரசு.<br /><br />இளைஞர்கள் ஆயுதமேந்தி தமிழர் தாயகம் தமிழருக்கே என்று போராடிய போது உலகஅரசியல் ஒழுங்கைச் சாதக மாக்கிக்கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நடத்தி முடித்தது இன்றைய அரசு. இந்த நிலையிலும் தமிழர்கள் சோரா திருக்கக்கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு என்றும் மீள் கட்டமைப்பு என்றும் அய்ந்து ஆண்டு களாகப் பேசிப்பேசிக் காலத்தை அரசு வீணடித்து வருகின்ற நிலையில், தமி ழர்கள் மூன்றாந்தரப்பொன்றின் மத்தி யஸ்தத்தை நாடுவதில் தவறேதும் இருப்பதாகக் கூறமுடியாது.<br /><br />அறுபத்தைந்து ஆண்டு காலமாக நியாயமான ஒரு கொள்கைக்காகப் போராடிய தமிழர்களைத் தொடர்ந்தும் புறந்தள்ளிய தோடல்லாமல் முள்ளி வாய்க்கால் அவலத்தின்மூலம் தமிழர் களின் வாழ்வைச் சிதறடித்த அரசிடம் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில்தான் தமிழர்கள் சர்வதேச உதவிகளை நாடியிருக்கிறார்கள்.<br /><br />முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழர்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படக் கிடைத்த வாய்ப்பை அரசு தானாகவே தட்டிக்கழித்திருக்கிறது. அய்.நா. பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ- மூனின் ஆலோசனைகளையும், அறிவு ரைகளையும் கேட்டு நடக்க இலங்கை அரசு விரும்பவில்லை.<br /><br />அய்.நா. நிபுணர் குழு அறிக்கை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என்பன அரசால் கவனிக்கப்படாமல் கைவிடப் பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வர வேண்டுமென்றே அரசு காலங்கடத் தியது.<br /><br />இரண்டு தடவைகள் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையால் விடுக்கப் பட்ட நல்எண்ணத்தீர்மானங்களை இறை யாண்மையின் பெயரால் நிராகரித்தது. இவ்வளவுக்கும் பின்னர்தான் வட மாகா ணசபை போர்க்குற்ற விசாரணை ஒன் றைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறது. இது சிலர் வியாக்கியானம் செய்வதுபோல் வெறுமனே வடமாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானமல்ல. வடக்குத் தமிழர்களின் தீர்மானமுமல்ல. வடக்கு,கிழக்குத் தமிழர்கள் அத்தனை பேரினதும் உள்ளக் குமுறல்களை வெளிப் படுத்தி நிற்கின்ற தீர்மானம். இலங்கை அரசை நம்புவதற்கான நியாயங்கள் துளிகூட கிடையாது என்று முடிவெடுத்த தமிழர்களின் தீர்மானம். இந்தத் தீர்மானம் தொடர்பாகக் குறைகூறுவதற்கு எந்தச் சிங்கள அரசியல் வாதிக்கும் தகுதி இல்லை. உதயன் தமிழ்த் தேசிய நாளிதழ்<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76435.html#ixzz2v8tmbQJxதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24373845953614241222014-03-06T07:05:34.178+05:302014-03-06T07:05:34.178+05:30தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி
...தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி<br /><br /><br />பிற இதழிலிருந்து....!<br /><br />தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி<br /><br />இலங்கை சுதந்திரமடைந்த காலந் தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டி ருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பேணத் தெரியாமல் எல்லாம் தமக்கே என்ற இனவாதச் சிந்தனையுடன் ஒரு சிலரும் அவர்தம் குடும்பங்களும் வாழ முற்பட்டதன் விளைவே இப்போது சர்வதேச நெருக்கடியாகச் சூழ்ந்திருக் கிறது.<br /><br />இலங்கை அரசுக்கு வெளியிடங்களி லிருந்து அழுத்தங்கள் வரும்போதெல் லாம் அது தமிழர்களாலேயே நேர்கின்ற தென்று சிங்கள மக்கள் மத்தியில் பரப் புரை செய்து அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கையின் அத்தனை ஆட்சியாளர்களும் ஒரே வகையினராகவே இருந்து வருகிறார்கள்.<br /><br />தமிழர்களின் கோரிக்கைகளை எல் லாம் ஆபத்தானவையாகவே சிங்கள மக்களிடையே திரித்துக்காட்டி அவற்றை முறியடிக்கத் தமக்கே வாக்களியுங்கள் என்று கூறுவது தான் சிங்களத்தின் அரசியலாகிக்கிடக்கிறது. இப்படித்தான் இவர்கள் காலமெல்லாம் செய்து வந்தி ருக்கிறார்கள். ஜெனிவாப் பிரச்சினை களுக்கும், தென், மேல் மாகாணசபை களின் தேர்தல்களுக்கும் எவ்விதத் தொடர் பும் இல்லாதபோதிலும் ஏதோ தொடர் பிருப்பதுபோலச் சிங்கள மக்களை நம்ப வைப்பதில் அரசு ஈடுபட்டு வருகிறது.<br /><br />நாட்டைப் பயங்கரவாதிகளின் பிடி யிலிருந்து மீட்டெடுத்த நாயகரை இழிவுபடுத்த நாம் விடுவோமா என்ற தோரணையில் சாதாரண சிங்கள மக்கள் அரசுக்குச் சார்பாக வாக்களிக்கப் போகி றார்கள். இதனைத் தமது ஆட்சிக்குக் கிடைத்த தொடர் வெற்றி என்றும் அய்க்கியதேசியக் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியென்றும் அரசு தம்பட்டம் அடிக்கப் போகிறது. இன்றும்கூட இலங் கைப் பிரச்சினை ஜெனிவா செல்வதற்குத் தமிழர்களே காரணம் என்றாற்போல்தான் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கெதிராகச் செயற் படுகிறார்கள்; அவதூறு செய்கிறார்கள், வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கிறார்கள்.<br /><br />தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங் கையைப் பிளவுபடுத்த முயல்கிறது, வடக்கு மாகாணசபை போர்க்குற்ற விசா ரணையைக் கோரும் தீர்மானத்தை நிறை வேற்றியதன் மூலம் இலங்கைக்குத் தீங்கு செய்திருக்கிறது; இலங்கையின் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்திருக்கிறது; வடமாகாணசபைத் தேர்தலை நடத்திய அதிபருக்கு எதிராகவே அது செயற்படு கிறது என்றெல்லாம் நியாயங்கள் முன் வைக்கப்படுகின்றன.<br /><br />இலங்கை அரசு நேர்மையாகச் செயற் பட்டிருந்தால் புகலிடக்கோரிக்கையாளர் என்றொருசாரார் இலங்கையை விட்டுச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டி ராது. ஆனால், அப்போதிருந்த அரசு தமி ழர்கள் தொகை இலங்கையில் குறைந் தால்போதும் என்று சந்தோசமடைந்தது.<br /><br />வாக்காளர்களின் எண்ணிக்கை குறை வடைவதன் மூலம் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனப்பட்டுப் போவார்கள் என்று நம்பியிருந்தது. தன்னாட்டு மக் களின் ஒரு பகுதியினர் சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று வெளியேறுவது சர்வதேச அளவில் நாட்டின் கவுரவத் தைப் பாதிக்கும் என்று அரசு எண்ணவே யில்லை.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28035994176483969422014-03-06T07:04:20.465+05:302014-03-06T07:04:20.465+05:30இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழ...இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!<br /><br />வலிமையான தீர்மானத்தை கொண்டு வந்தாவது<br /><br />காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!<br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை<br /><br />இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நமக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கலைஞர் தலைமையில் 'டெசோ' அமைப்பு கேட்டுக்கொண்டபடி, இப்போதாவது (காலந்தாழ்ந்தாவது) இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது கட்சியை காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:<br /><br />இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.<br /><br />அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.<br /><br />உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.<br /><br />இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.<br /><br />விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.<br /><br />இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!<br /><br />குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!<br /><br />சர்வதேச விசாரணை - சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர் மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும்.<br />உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும்.<br /><br />இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.<br /><br />தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக்கொண்டபடி செய்திருக்கவேண்டும்; இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!<br /><br />ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!<br /><br />- கி.வீரமணி,<br />தலைவர்,திராவிடர் கழகம்.<br /><br />சென்னை <br />5.3.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76399.html#ixzz2v8tXS4bT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com